இந்தியாவின் வாழ்க்கை முறை நோய்களின் சுமை அதிகரித்து வருகிறது. நமக்கு பன்முக அணுகுமுறை தேவை.

 உதாரணமாக, சுற்றுச்சூழலை இலக்காகக் கொண்ட திட்டங்கள், தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் (National Clean Air Programme) மற்றும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதை திட்டங்களுடன் இணைப்பது மிகவும் முக்கியம். இது தாமதமின்றி நடக்க வேண்டும்.


2017-ஆம் ஆண்டில், தேசிய சுகாதாரக் கொள்கை (National Health Policy), இதய நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்ற தொற்றா நோய்கள் (non-communicable diseases (NCDs)) மீது கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நோய் முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டது. இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய உலகளாவிய நோய் சுமை ஆய்வின் அறிக்கை, இந்தக் கொள்கை செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து 8 ஆண்டுகளில் இந்த மாற்றம் மிகவும் தெளிவாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது. 


சுற்றுச்சூழல் மாசுபாடு, ஆரோக்கியமற்ற உணவுமுறைகள் மற்றும் அமர்ந்து பணி செய்யும் வாழ்க்கை முறைகளின் பாதகமான விளைவுகளை அங்கீகரிக்கும் ஒரு சுகாதார உத்திக்கு இது ஒரு வலுவான வாதத்தை உருவாக்குகிறது. அறிக்கையின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இந்தியர்கள் நீண்டகாலம் வாழ்ந்தாலும், நாள்பட்ட நோய்கள் மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கின்றன.

இந்தியாவில் தொற்றா நோய்கள் குறித்த சமீபத்திய ஆய்வுகளுடன் சேர்த்து, உலகளாவிய நோய் சுமை ஆய்வையும் படிக்க வேண்டும். உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, இந்தியாவில் ஏற்படும் இறப்புகளில் ஏறக்குறைய 65 சதவீதத்திற்கும், தொற்றா நோய்களால் பாதிக்கப்படுபவர்களில் நான்கில் ஒரு பங்கு பேர் 70 வயதுக்குட்பட்டவர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை அமெரிக்காவிற்கு தோராயமாக 12 சதவீதமாகவும், சீனாவிற்கு 17 சதவீதமாகவும் உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இருதய நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் நுரையீரல் நோய்கள் இந்தியர்களில் பெரும் பகுதியினரின் வாழ்க்கையைக் குறைத்து, அவர்களின் குடும்பங்கள், சமூகம் மற்றும் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது. 


இந்த நோய்களில் சில நோய்களை பற்றி நன்கு புரிந்து கொள்ளப்படவில்லை என்பது ஒரு முக்கியப் பிரச்சனையாக உள்ளது. உலகளாவிய நோய் பாதிப்பு ஆய்வு, அத்தகைய ஒரு நோயான நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease (COPD)) மீது கவனத்தை ஈர்க்கிறது - இது நாட்டின் சுவாச நோய்களின் சுமையில் 75 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் குணப்படுத்த முடியாதது. ஆனால், சிகிச்சையளிக்க முடியாதது அல்ல. மேலும், ஆரம்பகால நோயறிதல் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். இருப்பினும், அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் இருப்பதால் மருத்துவர்கள் முறையாக நெறிமுறைகளைப் பின்பற்றாததால் இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதால் பல நோயாளிகள் சரியாகக் கண்டறியப்படுவதில்லை. 


கடந்த சில ஆண்டுகளில், கிராமப்புறங்களில் சமூக சுகாதார மையங்கள் (community health centres (CHCs)) மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களை (primary health centres (PHCs)) அரசாங்கம் வலுப்படுத்தியுள்ளது. உலகளாவிய நோய் சுமை ஆய்வு, தேசிய சுகாதாரக் கொள்கையில் உள்ள அடுத்தகட்ட சவாலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது - சமூக சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் உள்ள மருத்துவர்களின் நோயறிதல் நுண்ணறிவை வலுப்படுத்துவது.


மருத்துவ ஆராய்ச்சி, ஊட்டச்சத்து மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலின் புரிதலை இணைக்கும் அணுகுமுறை நமது நாட்டிற்குத் தேவைப்படுகிறது. மக்கள் ஆரோக்கியமான தேர்வுகளை மேற்கொள்வதை உறுதிசெய்வதற்கு, சிறு வயதிலிருந்தே பள்ளிகள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் மூலம் உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் செயல்பாடுகள், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவது மிகவும் முக்கியம். சுற்றுச்சூழலை இலக்காகக் கொண்ட திட்டங்கள், எடுத்துக்காட்டாக, தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் மற்றும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவது அவசியம். இதை யாரும் தாமதப்படுத்த முடியாது.



Original article:

Share:

நகர்ப்புற நிலத்தை விடுவித்தல்: இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் தவறவிடப்பட்ட சீர்திருத்தம். -அவ்னி லவாசா

 கட்டுப்பாடு நிறைந்த சட்டங்கள், பிரிக்கப்பட்ட பதிவுகள் மற்றும் மோசமான நில பயன்பாடு ஆகியவை நகர்ப்புற வளர்ச்சியை தடுக்கின்றன (choking).


நகரங்கள் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கான, புதுமைக்கும் வேலைவாய்ப்புகளுக்கான முக்கிய இயக்கிகள் என்று நாம் அதிகமாகக் கேட்கிறோம். சில நாட்களுக்கு முன்னர், வெளிவந்த ஒரு கட்டுரை ('இந்த 15 நகரங்கள் இந்தியாவின் வளர்ச்சியை வேகப்படுத்தலாம். அதற்கான வழிகள் இங்கே,'- இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜூலை 5) பல நகரங்களின் பிரச்சனைகளையும், அவற்றை தீர்க்க வேண்டிய தேவையை வெளிப்படுத்தியது. தேவையான பணம் மற்றும் கொள்கை பரிந்துரைகள் நன்கு அறியப்பட்டவை. இருப்பினும், கேள்வி என்னவெனில்: ஏன் தீர்வுகள் இன்னும் கிடைக்காமல் உள்ளன? பரந்த கொள்கை பரிந்துரைகளைத் தவிர, மாநில மற்றும் உள்ளூர் மட்டங்களில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் செயல்படுத்துபவர்கள் இவற்றை கற்பனை செய்து செயல்படுத்த முடியுமா?


மேற்கோள் காட்டப்பட்ட இந்தக் கட்டுரை காற்று மாசுபாடு, குப்பை, நீர் மற்றும் போக்குவரத்து போன்ற சரிசெய்ய வேண்டிய பெரிய பிரச்சனைகளைப் பற்றிப் பேசுகிறது. மலிவு விலையில் வீடுகளைக் கட்ட உதவுவதற்கு அதிக அளவிலான ஊக்கத்தொகைகள் என்று அழைக்கப்படும் ஒன்றைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறது. அதிக அளவிலான என்பது நகரங்களால் கட்டிட நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், ஒரு நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் கட்டமைக்கப்பட்ட சூழல் மற்றும் ரியல் எஸ்டேட் சந்தையை பாதிக்கவும் பயன்படுத்தப்படும் மேம்பாடு கட்டுப்பாட்டு விதிமுறைகளின் (development control regulations (DCRs)) ஒரு பகுதியாகும். தீர்வு DCR-களை குறைவான கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தி அதிக அடர்த்தியை அனுமதிப்பது எளிமையானதா?


மேம்பாடு கட்டுப்பாட்டு விதிமுறைகள் மட்டும் இந்திய நகரங்களின் வீட்டுவசதி, நிலம் மற்றும் இடப் பற்றாக்குறை பிரச்சினையை தீர்க்க முடியாது. இது நிலப் பயன்பாட்டு விதிமுறைகளுடன் இணைந்து பார்க்கப்பட வேண்டும். அவை இந்திய நில அமைப்பில் உள்ள சிக்கலுக்கு முக்கியக் காரணியாக உள்ளன. இது நமது நகரங்களில் சீர்திருத்தம் மற்றும் முன்னேற்றத்தை மெதுவாக்குகிறது. இதனால் நகர்ப்புற நிலம் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக உற்பத்தி திறன் மற்றும் மதிப்பு முழுமையாக வெளிப்படவில்லை. மேலும், நிலம் மாநிலப் பட்டியலில் (state subject) உள்ளது என்பதால், மாநிலங்களுக்கு இடையில் நில பயன்பாட்டு சட்டங்களில் வித்தியாசங்கள் இருக்கிறது.


நிலத்தின் வளர்ச்சித் திறனைத் அதிகரிக்க சீர்திருத்தத்திற்கான தேவையான பகுதிகளாக மாநிலங்கள் மற்றும் நகரங்கள் (பொருந்தக்கூடிய இடங்களில்) பரிசீலிக்க வேண்டிய சில பகுதிகளை இந்தக் கட்டுரை பரிந்துரைக்கிறது.


செயல்பாடுகள் மற்றும் நடைமுறை அடிப்படையிலான பிரச்சினைகளை முதலில் கருப்பொருள்களாக வகைப்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும். உலகளாவிய நில கருவி வலைப்பின்னல் (Global Land Tool Network) நில நிர்வாகம் மற்றும் மேலாண்மைக்கான முக்கியப் பணிகளை அடையாளம் கண்டு அவற்றை நில உரிமை (land tenure), நில மதிப்பு (land value), நிலப் பயன்பாடு (land use) மற்றும் நில மேம்பாடு (land development) என வகைப்படுத்துகிறது. இந்தியாவில், செயல்முறை சார்ந்த சிக்கல்களும் உள்ளன.


நில உரிமை (Land tenure)


நில உரிமை மற்றும் பாதுகாப்பு என்பது நிலம் மற்றும் இயற்கை வளங்களில் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மாற்றுதல் ஆகியவற்றின் அம்சங்களை உள்ளடக்கியது. இது பட்டா வழங்குதல், நிலப் பிரச்சனைகள், நிலங்களை கையகப்படுத்துதல் மற்றும் முறைசாரா குடியிருப்புகளை நிர்வகித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. நில மேலாண்மைக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தாலும், இதற்கு ஒரு இணையான மற்றும் தன்னிச்சையான பகுப்பாய்வு தேவைப்படுகிறது. இந்தக் கட்டுரையில் இது குறிப்பிடப்படவில்லை. நகர்ப்புற வாழ்விடங்களின் தேசிய புவியியல் அறிவு சார்ந்த நில ஆய்வு (NAtional geospatial Knowledge-based land Survey of urban HAbitations (NAKSHA)) எனப்படும் திட்டத்தின்மூலம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நகர்ப்புற நில பட்டா வழங்குதல், சொத்து அட்டைகள் வழங்கப்படும். இது பட்டாக்கள் மற்றும் உரிமைகோரல்கள் குறித்து அதிகம் தெரிந்து கொள்வதற்கு வழிவகுக்கும். ஆனால் மாநிலங்களுக்கு இடையே வேறுபடும் நிலத்தின் உரிமையை நிர்வகிக்கும் சட்டங்களில் மாற்றம் தேவைப்படும்.


நிலப் பயன்பாடு (Land use)


நிலப் பயன்பாடு என்பது நிலம் மற்றும் இயற்கை வளங்களின் பயன்பாட்டின் திட்டமிடல் மற்றும் கட்டுப்பாட்டை உள்ளடக்கியது. விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத நிலமாக மாற்றுவது தொடர்பான சட்டங்களில் உள்ள குறைபாடுகள் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில், உணவு உற்பத்திக்கு வளமான நிலத்தைப் பாதுகாக்கவும் நகரமயமாக்கலுக்கு தேவையற்ற ‘வேளாண் நிலத்தை’ மட்டும் மாற்ற அனுமதிக்கவும் சமநிலையான அணுகுமுறை தேவைப்படுகிறது. நில மாற்றத்திற்கான தெளிவான சட்டங்கள் நில மதிப்பின் முழு திறனையும் பற்றிய அறிய முக்கிய காரணியாக இருக்கும்.


மேலும், தனியார் தலைமையிலான முயற்சிகளில் திறமையான நிலப் பயன்பாட்டை ஒழுங்குமுறை கட்டமைப்பு உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், நில ஒருங்கிணைப்பு (land pooling) மற்றும் துணைப்பிரிவு சட்டங்களால் செயல்படுத்தப்படும் அளவு தேவை. துணைப்பிரிவைத் தடுக்கும் சட்டங்கள் மற்றும் அளவின் பொருளாதாரத்தைச் சுருக்கும் நில உச்சவரம்பு சட்டங்கள் (land ceiling laws) ஊகங்களைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில் முழுமையான நில மதிப்பின் உணர்வை ஊக்குவிக்க கவனமாக மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். குறிப்பாக, மக்கள்தொகையின் ஏழை பிரிவுகளின் தேவைகளுக்கு நில வங்கிகள் விலைகளை நியாயமான வரம்புகளுக்குள் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும். இந்த நிலைமையை மேலும் சிக்கலாக்குவது என்னவென்றால், நிலப் பதிவுகளில் குடியிருப்பு நில வகைகள் முழுவதும் உடைமை அடிப்படையிலான பயன்பாட்டு உரிமைகள் (usufructuary rights) இருந்தாலும், அத்தகைய சூழல்களில் பட்டா வழங்குவது சமமான கொள்கையாக இருக்காது. இந்த பிரச்சனைகள் அரசியல் மற்றும் குழப்பமான நிர்வாக நடைமுறைகளில் சிக்கியுள்ளதால், நிலங்கள் செயலிழந்த வகையில் பயன்படுத்தப்படுகின்றன.





நில மதிப்பீடு


நில மதிப்பீடு மற்றும் வரி கொள்கைகள் நகர்ப்புறப் பகுதிகளில் நில சந்தையை கணிசமாக பாதிக்கின்றன. நிலத்திற்கான சந்தையாக செயல்படுவதைத் தவிர, நகர்ப்புற நில சந்தை ஒரு பெரிய முதலீட்டு சந்தையாகவும் செயல்படுகிறது. இந்தச் செயல்பாட்டில், நில ஊக வணிகம் சந்தையிலிருந்து கணிசமான அளவு நிலத்தை எடுத்துச் செல்கிறது. காலியாக உள்ள நிலங்களுக்கு வரி விதிக்காதது நிலப் பயன்பாட்டு திறனை திறமையற்ற முறையில் பயன்படுத்தும் சூழலை உருவாக்குகிறது.


நில மேம்பாடு


நகர்ப்புற வளர்ச்சியின் முக்கிய அங்கமாக நில மேம்பாடு உள்ளது. உள்ளூர் கட்டிட விதிமுறைகள் அதிகபட்ச தள பரப்பு விகிதம் (Floor Area Ratio (FAR)), கட்டிட உயரம், தரைப் பரப்பு, ஓரங்கள் மற்றும் இடைவெளிகளை ஆகியவற்றை நிர்ணயிப்பதன் மூலம் அதிகபட்ச கட்டுமான இடத்தைக் கட்டுப்படுத்துகின்றன. உயர கட்டுப்பாடுகள் மேம்பாடு செய்யக்கூடிய இடத்தை இழக்க வழிவகுக்கின்றன. இதன் விளைவாக புறநகர் விரிவடைதல் (suburban sprawl) மற்றும் செயற்கை பற்றாக்குறையால் சமூக செலவுகளை சுமத்துகிறது. ஒருங்கிணைந்த போக்குவரத்து-நில பயன்பாட்டுத் திட்டமிடல் மூலம் கட்டிட விதிமுறைகளைத் தளர்த்தலாம். போக்குவரத்து சார்ந்த மேம்பட்டு கொள்கைகள் (Transit-oriented development policies) ஒருங்கிணைப்பை அதிகரிக்கும், நெரிசலைக் குறைக்கும் மற்றும் வளங்களை உருவாக்கும் நகரங்களை உருவாக்குவதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.



சவால்கள்


இந்திய நகரங்களில் அதிகரித்துவரும் அடர்த்தியைத் தக்கவைக்க போதுமான உள்கட்டமைப்பை வழங்குவதில் உள்ள சவாலை அங்கீகரிக்கும் அதே வேளையில், நகர்ப்புற விரிவாக்கம் ஒரு பெரிய சவாலாக இருக்கலாம் என்று கொள்கை வகுப்பாளர்களிடையே ஒருமித்தக் கருத்து உள்ளது. கட்டுப்பாடு நிறைந்த கட்டிட விதிமுறைகள் அதிகமான விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத பயன்பாடுகளுக்கு மாற்ற வழிவகுக்கின்றன. தள பரப்பு விகித அதிகரிப்பதற்கு ஒருவர் வாதிடலாம். ஆனால், விதிமுறைகளை அமல்படுத்துவதில் அரசியல் விருப்பம் மற்றும் நிர்வாகத் திறன் இல்லாதது வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிமுறை சீர்திருத்தங்களை வடிவமைக்கும் போது கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.


தற்போதைய இந்திய நகர்ப்புற திட்டமிடல் வரைபடங்கள், முக்கிய நகரமைப்பு திட்டங்கள் மற்றும் மண்டல விதிமுறைகள் பெரிய முறைசாரா துறைக்கு வழங்கவில்லை. ‘முறைசாரா தன்மை’ (Informality) அது உண்மையான சந்தை இயக்கவியலைக் குறிக்கும் என்றாலும் அது அங்கீகரிக்கப்படவில்லை. இந்த இயக்கவியலை ஒருங்கிணைக்காமல் சீர்திருத்தம் செய்வது சந்தை நடவடிக்கைகளில் ஒரு செயற்கையான தடையை உருவாக்கும். முறை மற்றும் முறைசாரா தன்மை, நவீன திட்டமிடல் மற்றும் உள்ளூர் நிலைமைகள், சந்தை இயக்கவியல், சட்ட மற்றும் அரசாங்க விதிகளுக்கு இடையில் ஒரு சமநிலையைக் கண்டறிய வேண்டும்..


முக்கிய பிரச்சினைகளைத் தவிர, நில உடைமையின் மாற்றம், பதிவு மற்றும் கட்டிட அனுமதிகளைப் பெறுவது தொடர்பான தாமதமான மற்றும் சிக்கலான நடைமுறைகள், சட்டங்களில் ஒருமைப்பாடு இல்லாமை மற்றும் முரண்பட்ட விதிமுறைகளுடன் ஒரே மாதிரியான பாத்திரங்களை நிறைவேற்றும் பல நிறுவனங்கள்மீது முழுமையான மறுஆய்வு தேவை. பல மாநிலங்களில், நில பரிவர்த்தனைகளுக்கான நிலப் பதிவு செயல்முறை, சொத்து வரி முறை மற்றும் வருவாய் துறையால் பராமரிக்கப்படும் உரிமைப் பதிவு ஆகியவற்றிற்கு இடையே அதிக ஒருங்கிணைப்பை நாம் கொண்டு வரவேண்டும். சில நகரங்கள் நில வருவாய் மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு இடையே பதிவுகளின் மாற்றத்தை ஒப்பீட்டளவில் நன்றாக நிர்வகித்திருந்தாலும், மற்றவை அவ்வாறு செய்யவில்லை. டிஜிட்டல் நகர நிலப் பதிவுகளை நிர்வகிக்க ஒரு துறை இருப்பது நிலத்தை சிறப்பாகப் பயன்படுத்த உதவும்.

இந்திய நகரங்கள் வளர்ச்சியடைந்து வருவதால், அவை நிலப் பயன்பாட்டுத் திறனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். பிரச்சினைகளை அடையாளம் காண, குறிப்பிட்ட அடிப்படை காரணங்கள் மற்றும் சீர்திருத்த உத்திகளை வகுக்க ஆழமாக ஆராய்வதன் மூலம் உயர்தர யோசனைகளிலிருந்து (higher-level ideas) குறிப்பிட்ட சீர்திருத்த நடவடிக்கைக்கு நாம் செல்ல வேண்டும்.


எழுத்தாளர் ஒரு அரசு ஊழியர்.



Original article:

Share:

மின்-ஆளுகையை திறம்பட செயல்படுத்துவதில் எந்த கட்டமைப்பு காரணிகள் தடையாக இருக்கின்றன? -ஷாம்னா தச்சம் போயில்

 டிஜிட்டல் மயமாக்கல் மூலம் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றம், ஊழல் மற்றும் விருப்புரிமை மூலம் பாரம்பரிய முறைகளை அகற்ற உதவியுள்ளது. இருப்பினும், மின்-ஆளுகையில் தொழில்நுட்பத்தை (techno-centrism) அதிகமாக நம்பியிருப்பது மக்களை விலக்கிவைப்பதற்கான அபாயத்தை ஏற்படுத்துகிறதா?


20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 2019-ஆம் ஆண்டு வரையிலான இந்தியாவின் மின்-ஆளுகைப் பயணம் பல்வேறு கட்டங்களாக வளர்ச்சியடைந்தது. இதில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு பின்புல கருவியாக (back-end tool) இருந்து சில காலகட்டத்திற்கு பின்னர் ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் சூழல் அமைப்பாக மாறியது.


COVID-19 தொற்றுநோய் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் நான்காவது கட்டம் தொடங்கியது. இதில் தொழில்நுட்பம் ஒரு சேவை-விநியோக கருவியாக (service-delivery tool) இருந்து கொள்கை நோக்கங்கள் மற்றும் செயல்படுத்தல் முறைகள் இரண்டையும் வடிவமைக்கும் அறிவாற்றல் கட்டமைப்பை உருவாக்குகிறது. இந்த மாற்றம் மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பரிமாணங்களில் வெளிப்படுகிறது. அவற்றைப் பார்ப்போம்.


முதலாவதாக, தொழில்நுட்பத்தின் பங்கு சுகாதார கண்காணிப்பு மற்றும் பொது பாதுகாப்பு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில் விரிவடைந்தது. ஆரோக்ய சேது (Aarogya Setu) மற்றும் கோ-வின் (CoWIN) போன்ற தளங்கள் பெரிய அளவிலான டிஜிட்டல் பொது சுகாதார உள்கட்டமைப்பாக மாறியதை காட்டுகின்றன. அதே நேரத்தில், பொலிவுறு நகர (Smart City) கட்டுப்பாட்டு மையங்கள் இப்போது போக்குவரத்து மேம்பாடு (traffic optimisation) மற்றும் வள ஒதுக்கீடு போன்றவவற்றிற்காக செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence (AI)) பயன்படுத்தி பகுப்பாய்வுகளை ஒருங்கிணைக்கின்றன.


இரண்டாவதாக, நலத்திட்டங்களை சரியாக வழங்க தொழில்நுட்பம் கடந்த காலங்களைவிட முக்கியமானதாக மாறியுள்ளது. ஆதார் சார்ந்த பொது விநியோக முறை (Aadhaar enabled Public Distribution System (AePDS)) போன்ற அமைப்புகள் பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்துகின்றன. மேலும், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம் (Ayushman Bharat Digital Mission) ஒரு விரிவான டிஜிட்டல் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளது.


மூன்றாவதாக, தரவுத் பகுப்பாய்வின் (data analytics) மூலம் எதிர்பார்ப்புத்தன்மையுள்ள ஆட்சி நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்டது. தேசிய தரவு பகுப்பாய்வுத் தளம் (National Data Analytics Platform) போன்ற தளங்கள், நிகழ்நேர கண்காணிப்பு எவ்வாறு கொள்கை தேர்வுகளை முன்கூட்டியே வடிவமைக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.


உள்கட்டமைப்பை உருவாக்கிய முந்தைய கட்டங்களைப் போல் இல்லாமல், தற்போதைய கட்டம், சட்டபூர்வமான நிர்வாகத்தின் கட்டமைப்பையே உருவாக்கி வருவதால், தொழில்நுட்பத்தின் வளர்ந்துவரும் பங்கைக் காணமுடிகிறது. கொள்கை உருவாக்கம் மற்றும் செயல்படுத்தலுக்கு டிஜிட்டல் மயமாக்கல் ஒரு முன்நிபந்தனையாக (precondition) மாறியுள்ளது. இந்த பரிணாம வளர்ச்சி மூலம் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றம், ஊழல் மற்றும் விருப்புரிமை மூலம் பாரம்பரிய முறைகளை அகற்ற உதவியுள்ளது. அதே நேரத்தில் புதிய வகையான புறக்கணிப்பு அமைப்புகளை உருவாக்கியுள்ளது.


இந்த நான்காம் கட்ட மின்-ஆளுகை தொலைநோக்குப் பார்வையை திறம்பட செயல்படுத்துவதில், மூன்று கட்டமைப்புகளில் உள்ள தடையாக உள்ளன.


உள்ளடக்கிய மின்-ஆளுகை (inclusive e-governance) குறிப்பிடத்தக்க தடைகளில் ஒன்று டிஜிட்டல் எழுத்தறிவு ஆகும். ஏனெனில், பல தனிநபர்கள், கிராமப்புற பகுதிகளிலும் வயதான மக்களிடமும், மின்-ஆளுகை சேவைகளை திறம்பட பயன்படுத்தும் திறன் இன்னும் ஏற்படவில்லை. இந்திய குடும்பங்களில் 38 சதவீதம் மட்டுமே டிஜிட்டல் எழுத்தறிவு உடையவர்கள், கிராமப்புற பகுதிகளில் 25 சதவீதம், நகர்ப்புற பகுதிகளில் 61 சதவீதம் உள்ளது. முறைசாரா தொழிலாளர்களின் மிகப்பெரிய பிரிவை உருவாக்கும் விவசாய சாதாரண தொழிலாளர்களிடம் டிஜிட்டல் எழுத்தறிவு 13 சதவீதமாக உள்ளது. வேளாண்மை அல்லாத தொழிலாளர்களில் 53% பேருக்கு டிஜிட்டல் திறன்கள் உள்ளன.


இந்தியாவின் மொழி பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, பல மாநில மொழிகளில் மின்னணு ஆளுமை சேவைகளை வழங்குவது வள-நிறைவானதாகவும் (resource-intensive), தொழில்நுட்பரீதியாக சவாலானதாகவும் உள்ளது, ஆயினும் 98 சதவீத இணைய பயனர்கள் மாநில மொழிகளில் உள்ளடக்கத்தை அணுகுகின்றனர். பல பகுதிகளில் இன்னும் நம்பகமான இணைய அணுகலும், நிலையான மின்சார விநியோகமும் இல்லை, இவை மின்னணு ஆளுமை தளங்கள் சீராக இயங்குவதற்கு அவசியமானவை.


உலகின் மிகப்பெரிய முறைசாரா தொழிலாளர் தரவுத் தளமான இ-ஷ்ரம் தளம் (e-Shram portal), பயனர் அனுபவத்தைவிட பின்தள தரவு திரட்டலுக்கு முன்னுரிமை அளிக்கும் தொழில்நுட்ப, மேலிருந்து கீழ் வடிவமைப்பு செயல்முறைகள் சில நேரங்களில் அணுகல் சவால்களை எவ்வாறு கவனிக்காமல் போகலாம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.


30.48 கோடி முறைசாரா தொழிலாளர்கள் (informal workers) பதிவு செய்யப்பட்டிருந்தாலும், 13.5 கோடி பேர் இன்னும் தளத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த தளத்திற்கு ஸ்மார்ட்போன்கள், நிலையான இணையம், செயல்படும் வங்கிக் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் திறன்களைக் தேவைப்பட்டன. ஆனால், பயனர்களின் வாழ்க்கை சூழல்களைப் புரிந்துகொள்ள அல்லது வடிவமைப்பின்போது கருத்துக்களைச் சேகரிக்க சில பங்கேற்பு வழிமுறைகள் இருந்தன.


அரசு ஊழியர்களின் எதிர்ப்பு, வேலை இழப்பு பயம் மற்றும் விழிப்புணர்வு இல்லாமை காரணமாக பல்வேறு மின்-ஆளுகை திட்டங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இந்த சவால்கள் நல்ல நோக்கத்துடன் கொண்ட மின்-ஆளுகை திட்டங்கள்கூட எவ்வாறு அடிமட்ட அளவில் (grassroot level) கட்டமைப்புத் தடைகளை கவனிக்காமல் விடுகின்றன என்பதை காட்டுகின்றன.


இந்தியாவின் மின்-ஆளுகை முயற்சிகள் லட்சிய இலக்குகளை பின்பற்றியுள்ளன - தொழில்நுட்ப அங்கீகாரம் மூலம் முறைகேடுகளை குறைத்தல் மற்றும் திட்டங்கள் பயனாளிகளை திறம்பட சென்றடைவதை உறுதி செய்தல்,  நலத்திட்டங்களில் மோசடிகளைத் தடுக்க பயோமெட்ரிக் அமைப்புகளை பயன்படுத்துதல் மற்றும் தடையற்ற சேவை அணுகலுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் தளங்களை உருவாக்குதல் ஆகியவை ஆட்சி நிர்வாகத்தை நவீனமயமாக்குவதற்கான நல்ல நோக்கமுடைய முயற்சிகளாக உள்ளன. இருப்பினும், இந்த திட்டங்களை நடைமுறையில் செயல்படுத்தும் அனுபவங்கள், முழுமையான வெற்றியை அடைய சில அடிப்படைக் கட்டமைப்பு குறைகள் உள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றன.


நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும் மோசடியைத் தடுப்பதற்கும் வடிவமைக்கப்பட்ட பயோமெட்ரிக் அங்கீகார அமைப்புகள், இந்தியா போன்ற அதிக  மக்கள்தொகையும், பல்வேறு வகையான நுட்பமான பாதிப்புகளை உள்ள நாட்டில் பரந்த அளவில் செயல்படுத்தப்படும்போது பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றன. உதாரணமாக, தொழிலாளர்களிடையே தேய்மானம் அடைந்த கைரேகைகள் அல்லது வயதான குடிமக்களிடையே கருவிழி வடிவங்கள் மாற்றப்பட்டதால், ஜார்க்கண்டில் 49 சதவீதமும், ராஜஸ்தானில் 37 சதவீதமும் போன்ற மாநிலங்களில் சரிபார்ப்பு தோல்வியின் அதிக விகிதங்கள் பதிவாகியுள்ளன.


இந்த அங்கீகார சவால்கள் தொழில்நுட்ப வடிவமைப்பு அனுமானங்கள் மற்றும் நிலைமை உண்மைகளுக்கு இடையிலான இடைவெளிகளிலிருந்து எழுகின்றன மற்றும் தகுதியான பயனாளிகளின் சமூக நலத்திட்டங்களுக்கான அணுகலை பாதிக்கின்றன.


மேலும், அங்கீகார தோல்விகளை எதிர்கொள்ளும் குடிமக்கள் பெரும்பாலும் தங்கள் தரவை சரிசெய்ய மையங்களுக்கு பல முறை வருகை தருகிறார்கள். அதே நேரத்தில் இந்த அங்கீகார தளங்களில் குறைபாடுள்ள பயோமெட்ரிக் பதிவுக்கான உள்ளமைக்கப்பட்ட பொறுப்பான அமைப்புகள் அல்லது குறைதீர்ப்பு வழிமுறைகள் இல்லை. எனவே, மாற்று அங்கீகார வழிமுறைகளை உறுதிப்படுத்துவது தொழில்நுட்பத் திறனை மனித மாற்றத்துடன் சமநிலைப்படுத்த உதவும். அதனால், அமைப்பு அதிக அளவு பயனருக்கு-ஏற்றதாக (user-centric) மாறும்.


எல்லாவற்றையும் டிஜிட்டல் முறையில் ஒன்றிணைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், 31-க்கும் மேற்பட்ட மத்திய மின்-ஆளுகைத் திட்டங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதால், ஒருங்கிணைப்பது இன்னும் கடினமாக உள்ளது. அவை நன்றாக இணைக்கப்படுவதில்லை. சில சமயங்களில் ஒரே மாதிரியான வேலைகளைச் செய்கின்றன.


இதன் காரணமாக, மக்கள் பெரும்பாலும் வித்தியாசமாகத் தோற்றமளிக்கும் மற்றும் செயல்படும் பல வேறுபட்ட பயன்பாடுகள் அல்லது வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். அவர்களின் அடையாளச் சரிபார்ப்பு தோல்வியுற்றால், அதற்கான காரணம் அவர்களுக்கு எப்போதும் சொல்லப்படுவதில்லை. இது போன்ற சூழலைக் கருத்தில்கொண்டு மாற்று வழிகளை வலுப்படுத்த வேண்டியிருக்கலாம்.


இங்கு மின்-ஆளுகையில், தொழில்நுட்ப மையப்படுத்தல், மனித மாறுபாடுகளை விட இயந்திர துல்லியத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் சில மக்களை விலக்கி வைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. வலுவான மாற்று வழிமுறைகளை உருவாக்குவது, தொழில்நுட்ப தேவைகள் தற்செயலாக உரிமையுள்ள நலன்புரி பயன்களைப் பெறுவதற்கு தடைகளை உருவாக்காமல் இருப்பதை உறுதி செய்யும், குறிப்பாக உயிரியல் முறைகளில் இயல்பாக மாறுபாடு கொண்டிருக்கும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு அல்லது இந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள குறைந்த திறனும் விழிப்புணர்வும் உள்ளவர்களுக்கு இது மிகவும் முக்கியமானது.



Original article:

Share:

ஏன் தங்கத்தின் விலை உயர்வு இந்தியக் குடும்பங்களை பணக்காரர்களாக ஆக்குகிறது மற்றும் ஏன் சச்சின் டெண்டுல்கர் இப்போது பொருளாதார ஆசிரியராக இருக்கிறார்? -சித்தார்த் உபாசனி

 இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வு, இந்தியா 2025 தங்க முதலீடு : மோர்கன் ஸ்டான்லியின் கூற்றுப்படி, இந்திய குடும்பங்கள் 34,600 டன் தங்கத்தை வைத்திருக்கின்றன. இது தோராயமாக $3.8 டிரில்லியன் மதிப்புடையது அல்லது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 89 சதவீதமாகும்.


இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வு : 


சச்சின் டெண்டுல்கர் இப்போது இந்தியாவின் பெரிய பொருளாதார நிலைத்தன்மையை ஊக்குவிக்கிறார். அதாவது, டாடாவுக்குச் சொந்தமான நகை பிராண்டான தனிஷ்க்கின் விளம்பரத்தில் அவர் தோன்றுவதுடன் அதில், இந்தியர்கள் தங்கள் பழைய தங்கத்தை ஏன் புதிய நகைகளுக்கு மாற்ற வேண்டும் என்பதை விளக்குகிறார். இது இந்தியப் பொருளாதாரம் பிரகாசிக்க உதவும் என்று அவர் கூறுகிறார்.


"இந்தியா கிட்டத்தட்ட எல்லா தங்கத்தையும் இறக்குமதி செய்கிறது. ஆனால் உங்கள் பழைய தங்கத்தை புதிய நகைகளுக்கு மாற்றினால், தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை. இது நம் நாட்டை வலிமையாக்கும்,” என்று டெண்டுல்கர் கூறினார். அவரது செய்தியானது, கிரிக்கெட்டைப் பின்பற்றுபவர்கள், தங்கம் வாங்குபவர்கள் மற்றும் பொருளாதாரம் மற்றும் நிதி சமூகத்தில் உள்ளவர்கள் என மூன்று வேறுபட்ட பார்வையாளர்களை ஒன்றிணைக்கிறது.


தனிஷ்க் மற்றும் சச்சின் தவறாக இருக்க வாய்ப்பில்லை. அதிக தங்க இறக்குமதிகள் இந்தியாவின் வணிகப் பற்றாக்குறையை அதிகரிக்கின்றன. இதன் பொருள், ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட, இந்தியா வெளிநாட்டு நாணயங்களில் அதிகமாகச் செலுத்த வேண்டியுள்ளது. ஒரு பெரிய பற்றாக்குறை இந்திய ரூபாயின் மதிப்பை பலவீனப்படுத்த அழுத்தம் கொடுக்கிறது. ரூபாய் மதிப்பு பலவீனமடையும் போது, ​​வெளிநாட்டுப் பொருட்கள் மற்றும் சேவைகள் இந்தியர்களுக்கு அதிக விலை கொண்டதாக மாறும். இந்தியாவின் வர்த்தக சூழ்நிலையில் தங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது.


இந்தியர்கள் தங்கத்தை விரும்புகிறார்கள்.


தங்கத்திற்கான தேவையில் இந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக தங்க கவுன்சிலின் (World Gold Council (WGC)) கூற்றுப்படி, 2024-ம் ஆண்டில் சீன நுகர்வோர் 857 டன்) தங்கத்தை வாங்கிய நிலையில், இந்தியர்கள் 803 டன் தங்கத்தை வாங்கியுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளில், இரு நாடுகளும் தங்கத்திற்கான உலகளாவிய நுகர்வோர் தேவையில் பாதிக்கும் சற்று அதிகமாகவே உள்ளன.



ஆனால் இது தங்கத்திற்கான வருடாந்திர தேவை மட்டுமே. மோர்கன் ஸ்டான்லி பொருளாதார வல்லுநர்களான உபஸ்னா சச்ரா மற்றும் பானி கம்பீர் ஆகியோரின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் இந்திய குடும்பங்கள் 34,600 டன் தங்கத்தை வைத்திருந்தன. மேலும், விலைகள் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், இந்த தங்கம் தோராயமாக $3.8 டிரில்லியன் மதிப்புடையது அல்லது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 89 சதவீதத்தை உள்ளடக்கியது.


கடந்த வாரம் ஒரு குறிப்பில் சச்ராவும் கம்பீரும் குறிப்பிட்டது என்னவென்றால், தங்கம் கையிருப்பில் இருப்பது வீடுகளுக்கு நேர்மறையான செல்வ விளைவை அளிக்கிறது. பணவியல் கொள்கை தளர்வு காரணமாக குறைந்த வட்டி செலுத்துதலும் இந்த நன்மைக்கு துணைபுரிகிறது. கூடுதலாக, நேரடி மற்றும் மறைமுக வரி குறைப்புக்கள் மூலம் செலவழிப்புக்கான வருமானம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


சேமிப்புப் பிரிவு


தொடர்ந்து தங்கத்தை இறக்குமதி செய்வதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து குறித்து ஒரு உலகளாவிய நிபுணர் கடைசியாக ஒரு பத்தாண்டிற்கு முன்பு இந்தியர்களை எச்சரித்தார். இது ரகுராம் ராஜன் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநராக இருந்தபோது நடந்தது. அந்த நேரத்தில், வேகமாக உயர்ந்துவரும் விலைகளால் தங்கள் சேமிப்பு குறைக்கப்படுவதைத் தடுக்க வீடுகள் தீவிரமாக தங்கத்தை வாங்கின. உண்மையில், உலக தங்க கவுன்சில் (WGC) தரவுகள், இந்தியர்களின் தங்கத்திற்கான நுகர்வு தேவை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட கிட்டத்தட்ட 20 சதவீதம் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இது ஓரளவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி நெகிழ்வான பணவீக்க இலக்கு கட்டமைப்பை ஏற்றுக்கொண்டதன் காரணமாகும். இது 2012-13-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 10 சதவீதமாக இருந்த சராசரி சில்லறை பணவீக்கம் நடப்பு நிதியாண்டில் எதிர்பார்க்கப்படும் 2.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளது.


தங்கத்திற்கான தேவை குறைவதற்கு பணவீக்கம் வீழ்ச்சியடைவது மட்டுமே காரணம் அல்ல. இந்தியர்களும் இப்போது பல்வேறு வகையான சொத்துக்களில் முதலீடு செய்கிறார்கள்.



சமீபத்திய இந்திய ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, 2024-25-ஆம் ஆண்டில் வீடுகளின் பரஸ்பர நிதி மற்றும் பங்கு முதலீடுகள் அவர்களின் மொத்த நிதி சேமிப்பில் 15.2% ஆக இரட்டிப்பாகின. பங்குச் சந்தைக்கு ஏற்பட்ட பெரிய மாற்றத்தால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டது. 2024-ஆம் ஆண்டில் தனிநபர்கள் இந்தியப் பங்குகளில் நிகர அடிப்படையில் ரூ.1.66 லட்சம் கோடி முதலீடு செய்ததாக NSE தரவு காட்டுகிறது. இது முந்தைய 10 ஆண்டுகளில் முதலீடு செய்யப்பட்ட ரூ.1.53 லட்சம் கோடியைவிட அதிகம்.


ஆனால் நிதி சார்ந்த சொத்துக்களை வாங்குவதற்கு அல்ல, நேரடி சொத்துக்களை (physical assets) வாங்கப் பயன்படுத்தப்படும் பணத்தைப் பற்றி என்ன?


புள்ளியியல் அமைச்சகத்தின் தரவுகளின்படி, குடும்ப சேமிப்பு உருவில் உள்ள நேரடி சொத்துக்கள், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டுகளில் குறைந்து, 2011-12ல் 45.9 சதவீதமாக இருந்தது 2020-21ல் 36.9 சதவீதமாக குறைந்தது. இருப்பினும், பின்னர் அது 2022-23ல் 43.8 சதவீதமாக உயர்ந்தது — இது பொதுவாக குறைந்த வட்டி விகிதங்களைப் பயன்படுத்தி மக்கள் வீடுகள் மற்றும் வாகனங்கள் வாங்கியதால் என்று கருதப்படுகிறது — பின்னர் 2023-24ல் மீண்டும் 41.5 சதவீதமாக சற்று குறைந்தது. 2024-25-க்கான தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை.


தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களில் சேமிப்பதற்கான போக்கு ஒத்திருக்கிறது. இது 2011-12 ஆம் ஆண்டில் மொத்த சேமிப்பில் 1.1%-லிருந்து 2020-21-ஆம் ஆண்டில் 0.7% ஆக உயர்ந்தது. பின்னர் அது 2022-23-ல் 0.8% ஆக சற்று உயர்ந்து 2023-24-ல் 0.7% ஆகத் திரும்பியது.


டெண்டுல்கரின் பொருளாதார சிறப்பு வகுப்பு


இந்தியர்கள் முன்பைவிட குறைவாக தங்கம் வாங்குகிறார்கள் என்றால், தனிஷ்க் ஏன் டெண்டுல்கரை வேலைக்கு அமர்த்தியது? தங்க இறக்குமதியைக் குறைப்பது ஏன் இந்தியப் பொருளாதாரத்திற்கு உதவுகிறது என்பதை பொதுமக்களுக்கு விளக்க அவர் பணியமர்த்தப்பட்டார். ஏனெனில், அதிகரித்து வரும் தங்க விலைகள் ஏற்கனவே தங்கத்தை வைத்திருப்பவர்களை மிகவும் பணக்காரர்களாக ஆக்குகின்றன.


அமெரிக்காவின் வரிப் போரால் ஏற்பட்ட நிச்சயமற்றத் தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தில் அதன் சாத்தியமான தாக்கம், புவிசார் அரசியல் அபாயங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளின் கொள்முதல்கள் போன்ற பல காரணிகள், ஆய்வாளர்கள் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக தங்கத்தின் விலை உயர வழிவகுத்தன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தங்கம் 10 கிராமுக்கு ரூ.1 லட்சத்தைத் தாண்டியது. இப்போது, ​​அது ரூ.1.3 லட்சத்தை நோக்கி நகர்கிறது. ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டைவிட விலை 50%-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.


இந்த உயர்வு இந்தியர்கள் தங்கம் வாங்கும் திறனைப் பாதித்துள்ளதுடன், நகைக்கடைக்காரர்களைப் பாதிக்கிறது. குறிப்பாக, பண்டிகைக் காலத்தில் பழைய தங்கத்தை புதிய நகைகளுக்கு மாற்றுவது ஒரு கவர்ச்சிகரமான வணிக யோசனையாக மாறியுள்ளது.


இந்தியாவின் வர்த்தகத் தரவுகளில் அதிக விலைகளின் விளைவு தெரியும். புதன்கிழமை வெளியிடப்பட்ட தரவு, செப்டம்பரில் தங்க இறக்குமதி $9.62 பில்லியனாக உயர்ந்ததாகக் காட்டுகிறது. கடந்த ஆண்டு, அதே மாதத்தில், இறக்குமதி $4.65 பில்லியனாக இருந்தது. இந்த ஏற்றம் இருந்தபோதிலும், 2025-26-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இறக்குமதிகள் இன்னும் 9% குறைந்துள்ளன.


பரிவர்த்தனை-வர்த்தக நிதி (exchange-traded fund (ETF)) விருப்பம்


ஒரு முதலீடாக, இந்த விலைமதிப்பற்ற உலோகத்திற்கான தேவை இன்னும் நீடிக்கிறது.


"தங்க இறக்குமதி அதிகரிப்பின் ஒரு பகுதி, தங்கத்தின் விலைகள் உயர்ந்து வருவதால் முதலீட்டு தேவை அதிகரிப்பதாலும் ஏற்படலாம். வெள்ளி இறக்குமதியிலும் ஒரு உயர்வு காணப்படுகிறது (செப்டம்பரில் $1.3 பில்லியன் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் $452 மில்லியன்), இது ஒரு முதலீட்டு விருப்பமாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது," என்று IDFC FIRST வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் கவுரா சென் குப்தா வியாழக்கிழமை தெரிவித்தார்.


தங்கம் மற்றும் வெள்ளி பரிவர்த்தனை-வர்த்தக நிதிகளில் (ETF) முதலீடுகள் இந்தப் பொருட்களில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகள் உண்மையில் அதிகரித்து வருகின்றன. செப்டம்பர் மாதத்தில் தங்க பரிவர்த்தனை-வர்த்தக நிதிகளில் (ETF) முதலீடு கடந்த ஆண்டைவிட கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகரித்து ரூ.8,363 கோடியாக இருந்தது. இந்த தங்கம் மற்றும் வெள்ளி நிதிகளில் முதலீடு செய்வதற்கான விருப்பம் அதிக அளவுக்கு இருந்ததால், சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து அதிக பணம் எடுப்பதை நிறுத்திவிட்டன.


"நேரடி வெள்ளியின் கடுமையான பற்றாக்குறை காரணமாக, உள்நாட்டு விலைகள் இப்போது சர்வதேச அளவுகோல்களைவிட 5–12 சதவீத கூடுதல் விலையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இதன் விளைவாக, உள்ளூர் சந்தையில் விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்திய முதலீட்டாளர்கள் தற்போது உலகளாவிய நியாய விலையைவிட கணிசமாக அதிகமாக செலுத்துகின்றனர்," என்று Groww மியூச்சுவல் ஃபண்டின் தலைமை நிர்வாக அதிகாரி வருண் குப்தா இந்த வாரம் LinkedIn-ல் குறிப்பிட்டிருந்தார்.


"புதிய பரிவர்த்தனை-வர்த்தக நிதி (ETF) அலகுகளை உருவாக்கும்போது, ​​நிதி நிறுவனங்கள் வெள்ளியை வாங்க வேண்டும். இந்த கட்டத்தில் புதிய மொத்த முதலீடுகளை தொடர்ந்து ஏற்றுக்கொள்வது என்பது தற்காலிகமாக உயர்த்தப்பட்ட விலைகளில் புதிய முதலீடுகளைப் பயன்படுத்துவதைக் குறிக்கும். இது பிரீமியம் இயல்பு நிலைக்கு வந்தவுடன் சரிசெய்யப்படலாம்," என்று குப்தா மேலும் கூறினார்.


Original article:

Share:

இந்திய வருகைக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் -தாரா கர்த்தா

 இந்தியா ஆப்கானிஸ்தானுடன் படிப்படியாக ஈடுபாட்டை உறுதிசெய்ய வேண்டும். மேலும், அது ஒரு வலுவான மனிதாபிமான சக்தியாக வெளிப்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும்.


ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகியின் வருகையும், முக்கிய கட்டத்திலும் சமூக ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த உற்சாகம் இப்போது முடிந்துவிட்டது. ஆனால் இது ஆரம்பம் மட்டுமே. தொடர்ந்து செய்ய வேண்டியது, மோதலால் சீரழிந்த ஒரு நாட்டை நிலைப்படுத்துவதே முக்கிய குறிக்கோள். அந்தச் செயல்பாட்டில், இந்தியா ஒரு நம்பகமான மனிதாபிமான சக்தியாக வெளிப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். பரவலான போர் மற்றும் கடுமையான போர் மோதல் கொண்ட இந்த நாட்களில், அது முக்கியமானது. கூடுதலாக, வலுவான பாதுகாப்பு நலன்களின் பிரச்சினைகள் உள்ளன. உண்மையில், அவை பாகிஸ்தானுடனான ஒரு தரப்புக்கு வெற்றி ஒரு தரப்புக்கு தோல்வி நிலையில் (a zero sum game) இருக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையில், அது பாகிஸ்தானுக்கும் ஒரு குறிப்பிட்ட நிலைத்தன்மையை வழங்கக்கூடும். அது அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தால்.


பயங்கரவாதமும் களத்தில் உள்ள யதார்த்தங்களும்


இஸ்லாமாபாத்தை கோபப்படுத்திய இரு தரப்பினருக்கும் இடையிலான கூட்டு அறிக்கை, பஹல்காம் தாக்குதலுக்கு (ஏப்ரல் 2025) தலிபான்களின் உடனடி கண்டனத்தை மீண்டும் வலியுறுத்தியது. அதேபோல், காபூல் தனது பிரதேசத்தை இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது என்ற வாக்குறுதிகளை மீண்டும் வலியுறுத்தியது. இந்த வாக்குறுதி சர்வதேச சமூகத்திற்கு பல முறை வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய அரசு-கோராசனுக்கு (IS-K) எதிரான தலிபான்களின் நடவடிக்கைகளைப் பாராட்டிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தடைகள் கண்காணிப்புக் குழு அறிக்கையால் இது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இஸ்லாமிய அரசு-கோராசனை (Islamic State-Khorasan (IS-K)) எதிர்ப்பதற்கான காபூலின் உண்மையான திறனை இது கேள்விக்குள்ளாக்குகிறது. ஏனெனில், தனிமைப்படுத்தப்பட்ட முல்லா ஹைபதுல்லா காந்தஹாரிலிருந்து ஒரு இணையான ஆட்சியை நடத்துகிறார்.


தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (Tehreek-e-Taliban Pakistan (TTP)) தலைவர் நூர் வாலி மெஹ்சுத், தாலிபானிடமிருந்து நிதி பெற்றாலும், காபூல் இஸ்லாமிய அரசு-கோராசன் (IS-K) உடன் கூட்டணி சேரும் என்ற அச்சத்தில் அதற்கு எதிராக செயல்பட தயங்கியதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.


சுருக்கமாக, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் (TTP)-க்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அப்பாவியானவை அல்ல, மாறாக வேண்டுமென்றே பரப்பப்படும் பிரச்சாரமாகும். ராவல்பிண்டிக்கு ஆப்கானிஸ்தான் நன்கு தெரியும். தாலிபான்கள் புனிதர்கள் இல்லை என்றாலும், ராவல்பிண்டி அனைவரையும் நம்பவைக்க முயலும் அளவு தந்திரமான பயங்கரவாத ஆதரவாளர்களும் அல்ல. 


இருப்பினும், இந்த கதையை அகற்றுவதற்கு நடைமுறையில் செயல்கள் தேவை, இதில் இந்தியா பங்காற்றலாம். ஒரு செயல்பாடாக, தாலிபான்களின் பெரும்பாலும் வெற்றிகரமான போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தை பயிர் மாற்று திட்டங்களுடன் இணைப்பது மற்றும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதியை உறுதி செய்யும் முழுமையான செயல்முறையை உருவாக்குவது உள்ளது. இது அவசரமானது, ஏனெனில் நம்பகமான அறிக்கைகள் பயிரிடுதல் அதிகரிப்பதையும், நாடு முழுவதும் மெத் ஆய்வகங்கள்  (meth labs) தோன்றுவதையும் குறிக்கின்றன. இந்தியாவின் எல்லைகளில் பெருமளவு போதைப்பொருள் பறிமுதல்கள் நடைபெறுவதால், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் விரிவான பயிற்சி திட்டம் மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கும். தற்போது போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் முரட்டுத்தனமான வலிமை தாலிபான்களுக்கு உதவியாக இல்லை.


காபூல் 'இயல்பான நிலைக்கு' திரும்ப வர, அது எந்த நகரத்தின் அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். 2030-ம் ஆண்டுக்குள் உலகின் முதல் முற்றிலுமாக வறண்டு போகும் நகரமாக காபூல் இருக்கலாம் என்று சமீபத்திய அறிக்கை குறிப்பிடுகிறது. பல வருட போர்கள் திட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. காபூல் நதியில் ஷாதூத் அணை கட்டுவதற்கான முந்தைய வாய்ப்பை இந்தியா மீண்டும் வழங்கியுள்ளது. இது பாகிஸ்தானை எச்சரிக்கக்கூடும். ஏனெனில், நதி ஓட்டம் 16% வீழ்ச்சி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. காபூல் நதி சிந்து நதி அமைப்பின் ஒரு பகுதியாகும். மேலும், தர்க்கரீதியாக அனைத்து வேறுபாடுகளும் தீர்க்கப்படும் வகையில் ஒரு புதிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட வேண்டும். அதாவது, அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்க வேண்டும். அத்தகைய ஒப்பந்தத்தை இஸ்லாமாபாத் மறுப்பது கடினம். தண்ணீர் பற்றாக்குறை உள்ள நாடு மிகவும் விரும்பத்தக்க அண்டை நாடு அல்ல.


அனைவருக்கும் கல்வி


பெண்கள் கல்வி ஒரு முக்கியமான பிரச்சினையாகும். அப்துல் பாக்கி ஹக்கானி போன்ற பெண் கல்விக்கு ஆதரவாக இருந்த சில தாலிபான் தலைவர்கள், மவ்லவி ஹபிபுல்லா ஆகா போன்ற கடுமையானவர்களால் விரைவாக மாற்றப்பட்டனர்.


இந்தக் கொடூரமான நடைமுறையை மாற்றுவது தாலிபான்களை மறுவடிவமைப்பதில் மட்டுமல்லாமல், இந்தியாவின் வெளிப்பாட்டை மேம்படுத்தலும் ஆகும். தற்போது, ​​இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் மூலம் மாணவர்களுக்கு 1,000 மின்-உதவித்தொகைகளை (e-scholarships) இந்தியா அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அந்நிய செலாவணி விதிமுறைகளின் அடிப்படையில் அவர்களுக்கு சிறப்பு சலுகையை வழங்கும் வகையில், இணையவழி விருப்பத்தை அனைத்து முக்கிய கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.


இந்த முயற்சி இந்தியா முதலீடு செய்யத் திட்டமிடும் பகுதிகளில் கவனம் செலுத்தலாம். உதாரணமாக, கூட்டு அறிக்கையில், சுரங்கத் தொழில் ஒரு முக்கிய ஆர்வமுள்ள துறையாகும். எனவே, நாட்டில் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால், குறைந்தபட்ச இந்திய இருப்பு அவசியம். மேலும், இது நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குகிறது.




நிலையான நாட்டின் இலக்கு


இறுதியாக, ‘முழு அரசாங்க’ அணுகுமுறை பற்றிப் பேசுவது பொதுவானது என்றாலும், அது உண்மையில் அரிதாகவே நிகழ்கிறது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் (National Security Council Secretariat) இதை ஒருங்கிணைப்பதுடன், பலப்படுத்தப்படவும் வேண்டும். நிதி, நீர் மற்றும் மின்சாரம் உட்பட அரசாங்கத்தின் அனைத்து பகுதிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆப்கானிஸ்தான் நட்பாகவும் நிலையானதாகவும் இருப்பதை உறுதி செய்வதே குறிப்பிட்ட குறிக்கோள் ஆகும்.


வெவ்வேறு அரசாங்கங்களுக்கு இடையில் குறிக்கோள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இது 'இலக்கைத் தேர்ந்தெடுத்து பராமரித்தல்' என்ற அடிப்படைக் கொள்கை பின்பற்றப்படுவதை உறுதி செய்யும். இந்தியாவின் பொருத்தத்தை நிரந்தரமாக வைத்திருப்பதும், மாறிவரும் கொள்கைகளுடன் அதை மாற்ற விடாமல் இருப்பதும் இதன் குறிக்கோள். இருப்பினும், ஒரு பெரிய சிக்கல் உள்ளது. ஆப்கானிஸ்தானை நிலைப்படுத்துவதில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு எந்த ஆர்வமும் இல்லை. அது இன்னும் தாலிபான்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறது. சாதாரண பாகிஸ்தானியர்கள் நிலைத்தன்மையைப் பற்றி அக்கறை கொள்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் பஷ்டூன்கள் (Pashtuns). அவர்களுக்கு எல்லையைத் தாண்டி வணிக மற்றும் குடும்பத் தொடர்புகள் உள்ளன.


ஆப்கானிஸ்தான் வர்த்தகம் மற்றும் போக்குவரத்திலிருந்து கிடைக்கும் வருவாய் 10 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஒரு பாதுகாப்பு நாடாக இருக்கும்வரை இந்த வருவாய்கள் ஒரு பொருட்டல்ல. பயங்கரவாதத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் ஒரு நாடு மாற வேண்டுமானால், சர்வதேச சமூகம் பாகிஸ்தானில் முறையான சீர்திருத்தங்களில் ஈடுபட வேண்டும். ஜனநாயகம் என்பது ஒரு இலட்சியம் மட்டுமல்ல. அது நடைமுறையில், கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும் செயல்படுகிறது.


தாரா கர்த்தா, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் முன்னாள் இயக்குநர் ஆவார்.



Original article:

Share:

சீனா மற்றும் இந்தியா தலைமையிலான சிறந்த உலகளாவிய நிர்வாகம் -கின் ஜீ

 சீனா-இந்தியா ஒத்துழைப்பு சர்வதேச விவகாரங்களில் பன்முகத்தன்மையின் வலிமையை அதிகரிக்கும்.


2025-ம் ஆண்டு சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இரு பெரிய நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றங்கள் ஏப்ரல் 1, 1950 இல் தொடங்கியது. அப்போதிருந்து, இரு நாடுகளும் தங்கள் உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன. இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான உயர்மட்ட இராஜதந்திரம் பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. 


சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இரு தலைவர்களுக்கும் இடையிலான தொடர்புகள் மற்றும் நட்பு சமீபத்திய சாதனைகளை எடுத்துக்காட்டுகிறது. 2014 முதல் 2024 வரை, அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி 18 முறை சந்தித்துள்ளனர். 2014-ம் ஆண்டு சீன-இந்தியா நட்பு பரிமாற்ற ஆண்டாக (Year of China-India Friendly Exchanges) அறிவிக்கப்பட்டபோது, அதிபர் ஜி ஜின்பிங் செப்டம்பரில் இந்தியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார் மற்றும் இவர் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான அகமதாபாத்திற்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணத்தின்போது, ​​இரு நாடுகளும் வளர்ச்சிக்கான நெருக்கமான கூட்டாண்மையை உருவாக்குவது குறித்த கூட்டு அறிக்கையை வெளியிட்டன. மே 2015-ல், பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் சீன பயணத்தை மேற்கொண்டார். அப்போது, அதிபர் ஜி ஜின்பிங், தனது சொந்த ஊரான ஷியானில் அவரை வரவேற்றார். இது பரஸ்பர மரியாதை மற்றும் நட்பின் மற்றொரு அடையாளமாகும்.


2016 முதல் 2019 வரை, இருநாட்டு தலைவர்களும் ஒவ்வொரு ஆண்டும் பிரிக்ஸ் உச்சி மாநாடு, ஜி-20 உச்சி மாநாடு மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாடு ஆகியவற்றின் போது பல முறை சந்தித்துள்ளனர். கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அடுத்த சில ஆண்டுகளில், இருநாட்டு தலைவர்களும் கடிதங்கள் மூலமாகவும் தொலைபேசி உரையாடல்கள் மூலமாகவும் வாழ்த்துக்களையும் செய்திகளையும் பரிமாறிக் கொண்டனர். இருதலைவர்களும் நேரில் சந்திப்புகள் மீண்டும் தொடங்கியவுடன், ஆகஸ்ட் 2023-ல் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின்போது அதிபர் ஜின்பிங் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் 2024 அக்டோபரில், கசானில் நடந்த 16-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது இருதரப்பு சந்திப்பை இரு தலைவர்களும் நடத்தினர். இந்த சந்திப்பில், சீன-இந்திய உறவுகளை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் முக்கியமான ஒப்பந்தங்களை அவர்கள் எட்டினர்.


ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு மைல்கல்


உலக பாசிச எதிர்ப்புப் போரின் வெற்றியைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட 80-வது ஆண்டு நிறைவையும் இந்த ஆண்டு குறிக்கிறது. 80 ஆண்டுகளுக்கு முன்பு, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் வேதனையான பாடங்களை ஆழமாகப் புரிந்துகொண்டு, ஐ.நா.வை உருவாக்குவதற்கும் உலகளாவிய நிர்வாகத்தில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்திற்கும் வழிவகுத்தது. கடந்த 80 ஆண்டுகளில், உலகளாவிய நிர்வாகம் குறித்த ஐ.நா.வின் கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகள் உலக அமைதியைப் பேணுவதிலும் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் வரலாற்றுப் பங்களிப்பைச் செய்துள்ளன. இருப்பினும், 21 ஆம் நூற்றாண்டின் முதல் சில பத்தாண்டுகளில் உலகம் வளர்ந்து வரும் உறுதியற்ற தன்மை, பாதிப்பு, நிச்சயமற்ற தன்மை மற்றும் கணிக்க முடியாத தன்மையை எதிர்கொண்டது.


ஒருதலைப்பட்சம், பாதுகாப்புவாதம், தனிமைப்படுத்தல், பிரிவினைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் மேலாதிக்கவாதம் போன்ற தீங்கு விளைவிக்கும் "இயங்களை" (isms) எதிர்கொள்ளும் மனிதகுலம், நமது காலத்தின் ஒரு முக்கிய விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது, உலகம் காட்டுச் சட்டத்திற்குள் விழுவதைத் தடுக்க என்ன வகையான உலகளாவிய நிர்வாக அமைப்பு (global governance system) இருக்க வேண்டும். இந்த அமைப்பை எவ்வாறு சீர்திருத்துவது மற்றும் மேம்படுத்துவது என்பதையும் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, இந்த முக்கியமான தருணத்தில், தியான்ஜினில் நடைபெறும் 25-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டின் போது நடைபெறும் 19-வது நேரடி ஜின்பிங்-மோடி சந்திப்பு ஆகியவை சீனா மற்றும் இந்தியாவில் உள்ள 2.8 பில்லியனுக்கும் அதிகமான மக்களால் மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு எதிர்பார்க்கப்படுகின்றன. இருதரப்பு உறவுகள், உலகளாவிய நிர்வாகம் மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலம் போன்ற விஷயங்களில் சிறிது வெளிச்சம் போட இது உதவும்.


போட்டியாளர்கள் அல்ல, கூட்டமைப்புகள்


உண்மையில், 2025 தியான்ஜின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாடு அமைப்பின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ஒன்றாக மாறக்கூடும் என்று அரசியல் ஆலோசகரும் அறிஞருமான சுதீந்திர குல்கர்னி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வெற்றி மாறிவரும் உலக ஒழுங்கிலிருந்து, பலதரப்பட்ட மற்றும் பன்முகத்தன்மையின் மீளமுடியாத நிலையில் உலகளாவிய விவகாரங்களில் மேற்கத்திய நாடுகள் விரைவாக அதன் ஆதிக்கத்தை இழந்து வருகிறது. மேலும் குறிப்பாக, ஆசியா மற்றும் யூரேசியாவின் வளர்ந்துவரும் முக்கியத்துவம் காரணமாக இது நிகழலாம். சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி இருவரும் தங்கள் நட்பு தொடர்புகளில் தொலைநோக்கு மற்றும் ஞானத்தைக் காட்டியுள்ளனர், இது இந்த நேர்மறையான போக்கை வலுப்படுத்துகிறது.


சீனாவும் இந்தியாவும் இரு மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துதல், வளரும் நாடுகளின் ஒற்றுமை மற்றும் புத்துணர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் மனித சமூகத்தின் முன்னேற்றத்தை ஆதரித்தல் ஆகிய முக்கியப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று சீன அதிபர் ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். சீனாவும் இந்தியாவும் ஒருவருக்கொருவர் வளரவும் வெற்றிபெறவும் உதவும் நல்ல அண்டை நாடுகளாகவும் கூட்டணி நாடுகளாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும், அவர் நான்கு பரிந்துரைகளை வழங்கினார். அவை, 


1. இராஜதந்திர ரீதியில் தகவல்தொடர்புகளை வலுப்படுத்துதல் மற்றும் இருதரப்பு நம்பிக்கையை வலுப்படுத்துதல்.


2. இருதரப்பு நன்மைக்காகவும் இருதரப்புக்கும் பயனளிக்கும் முடிவுகளுக்காகவும் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்.


3. ஒருவருக்கொருவர் கவலைகளை ஏற்றுக்கொள்வது மற்றும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் இணைந்து செயல்படுவது,


4. பகிரப்பட்ட நலன்களைப் பாதுகாக்க உலகளாவிய தளங்களில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் 


 இந்தியா-சீனா உறவு மீண்டும் ஒரு நேர்மறையான பாதையில் மேம்பட்டு வருவதாகவும், எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் நிலைத்தன்மை பராமரிக்கப்பட்டுள்ளது என்றும், நேரடி விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன என்றும் பிரதமர் மோடி இதில் அதிபர் ஜின்பிங்கை குறிப்பிட்டார்.


இத்தகைய முன்னேற்றம் இந்தியா மற்றும் சீன மக்களுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் பயனளிக்கிறது. இந்தியாவும் சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டமைப்பு நாடுகள். அவர்களின் ஒருமித்த கருத்து அவர்களின் கருத்து வேறுபாட்டைவிட மிக அதிகம். இந்தியா-சீனா ஒத்துழைப்பு 21-ஆம் நூற்றாண்டை உண்மையான ஆசிய நூற்றாண்டாக மாற்றும். மேலும், இருநாட்டு தரப்பினரும் கைகோர்ப்பது சர்வதேச விவகாரங்களில் பன்முகத்தன்மையின் வலிமையை அதிகரிக்கும். தியான்ஜின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டின் சிறப்பம்சமாக அதிபர் ஜின்பிங் எழுப்பிய உலகளாவிய நிர்வாக முன்முயற்சி (Global Governance Initiative (GGI)) ஐந்து அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையாகக் கொண்டது. முதல் கொள்கை: இறையாண்மை சமத்துவத்திற்கான உறுதியாகும். அனைத்து நாடுகளும், தன்மை, வலிமை அல்லது செல்வத்தைப் பொருட்படுத்தாமல், அவற்றின் இறையாண்மை மற்றும் கண்ணியத்தை மதிக்க வேண்டும். 


அவற்றின் உள்நாட்டு விவகாரங்கள் வெளிப்புற தலையீடுகளிலிருந்து விடுபட வேண்டும். அவற்றின் சமூக அமைப்பு மற்றும் வளர்ச்சிப் பாதையை சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை, மற்றும் உலகளாவிய நிர்வாகச் செயல்பாட்டில் பங்கேற்கவும், முடிவெடுக்கவும், சமமாக பயனடையவும் உரிமை இருக்க வேண்டும். உலகளாவிய நிர்வாக அமைப்பு பெரும்பான்மையான நாடுகளின், குறிப்பாக வளரும் நாடுகளின் நலன்களையும் விருப்பங்களையும் சிறப்பாக பிரதிபலிக்கும் வகையில் சர்வதேச உறவுகளில் சிறந்த ஜனநாயகம் ஊக்குவிக்கப்பட வேண்டும்.


இரண்டாவது கொள்கை : சர்வதேச சட்ட ஆட்சிக்கான உறுதியாகும். ஐ.நா. சாசனத்தின் நோக்கங்களும் கொள்கைகளும் சர்வதேச உறவுகளின் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை விதிமுறைகளாகும். மேலும், அவை எப்போதும் நிலைநிறுத்தப்பட வேண்டும். சர்வதேச சட்டம் மற்றும் விதிகள் எந்த இரட்டை தரநிலைகள் அல்லது திணிப்பும் இல்லாமல், சமமாகவும் சீராகவும் பயன்படுத்தப்பட வேண்டும். சர்வதேச சட்ட ஆட்சியை ஆதரிப்பதிலும் பாதுகாப்பதிலும் முக்கிய நாடுகள் முன்னணியில் இருக்க வேண்டும்.


மூன்றாவதாக, பன்முகத்தன்மைக்கு உறுதியுடன் இருங்கள். உலகளாவிய பிரச்சினைகளை அனைத்து நாடுகளும் ஒன்றாக முடிவு செய்ய வேண்டும். உலகளாவிய நிர்வாக அமைப்பு அனைவராலும் கட்டமைக்கப்பட வேண்டும், அதன் நன்மைகள் அனைவருக்கும் பகிரப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கும் உலகளாவிய நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் முக்கியத் தளமாகும். அதன் பங்கு பலவீனப்படுத்தப்படாமல் வலுப்படுத்தப்பட வேண்டும்.


நான்காவதாக, மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையில் உறுதியாக இருங்கள். ஒவ்வொரு நாட்டின் மக்களும் உலகளாவிய நிர்வாகத்தில் முக்கிய பங்கேற்பாளர்கள். அவர்களின் நல்வாழ்வே முக்கிய குறிக்கோள். சீர்திருத்தங்கள் மூலம் உலகளாவிய நிர்வாகம் மேம்பட வேண்டும். இந்த சீர்திருத்தங்கள் வேகமான மற்றும் பகிரப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் மக்களின் நிறைவேற்ற உணர்வை அதிகரிக்க வேண்டும். பொதுவான உலகளாவிய சவால்களை திறம்பட நிவர்த்தி செய்வதன் மூலம் அவை அதிக பாதுகாப்பு உணர்வை உறுதி செய்ய வேண்டும். இறுதியாக, அனைத்து நாடுகள் மற்றும் சமூகங்களின் பகிரப்பட்ட நலன்களை முன்னேற்றுவதன் மூலம் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்த வேண்டும்.


ஐந்தாவது, உண்மையான முடிவுகளுக்கு உறுதியுடன் இருங்கள். பயனுள்ள உலகளாவிய நிர்வாகம் என்பது அடிப்படையில் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒன்றாகும். நிலையான தீர்வுகளைக் கண்டறிய அது மூல காரணங்கள் மற்றும் அறிகுறிகள் இரண்டையும் நிவர்த்தி செய்ய வேண்டும். வளர்ந்த நாடுகள் தங்கள் பொறுப்புகளை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டு அதிக வளங்களையும் பொதுப் பொருட்களையும் வழங்க வேண்டும். அதே நேரத்தில், வளரும் நாடுகள் வலிமைக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அவர்கள் உலகிற்காகவும் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும்.

முன்னிருக்கும் பணி


உலகளாவிய நிர்வாக முன்முயற்சி (GGI) என்பது சீனாவால் வழங்கப்படும் மற்றொரு முக்கிய முயற்சி மற்றும் பொது நன்மையாகும். உலகளாவிய நிர்வாகத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன், உலகளாவிய நிர்வாக முன்முயற்சி (GGI) ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளிலிருந்து உருவாகிறது. மேலும், பெரும்பாலான நாடுகளின் பகிரப்பட்ட விருப்பத்திற்கு பதிலளிக்கிறது. உலகளாவிய நிர்வாகத்தை சீர்திருத்துவது மற்றும் மேம்படுத்துவது என்பது தற்போதுள்ள சர்வதேச ஒழுங்கை தலைகீழாக மாற்றுவது அல்லது தற்போதைய சர்வதேச அமைப்புக்கு வெளியே மற்றொரு கட்டமைப்பை உருவாக்குவது என்று அர்த்தமல்ல. மாறாக, தற்போதுள்ள சர்வதேச அமைப்பு மற்றும் நிறுவனங்களை நடவடிக்கை எடுப்பதில், திறம்பட செயல்படுவதில், மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றுவதில், பல்வேறு உலகளாவிய சவால்களுக்கு உடனடியாகவும் திறம்படவும் பதிலளிப்பதில் மற்றும் அனைத்து நாடுகளின் நலன்களுக்கும் சேவை செய்வதில் சிறந்ததாக்குவதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும்.


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மற்றும் BRICS-ன் முக்கிய உறுப்பினர்களாக, சீனாவும் இந்தியாவும் உலகளாவிய நிர்வாகத்தை மேம்படுத்துதல், பன்முகத்தன்மையை நிலைநிறுத்துதல், முக்கிய சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகளில் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் மற்றும் சர்வதேச நியாயம் மற்றும் நீதியைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் தங்கள் பொறுப்பை ஏற்க முன்வர வேண்டும். அவர்கள் தங்கள் இரு தலைவர்களின் இராஜதந்திர ரீதியில் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும். பெரியளவில் திட்டம் மற்றும் நீண்டகால இலக்குகளின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, தங்கள் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் பொறுப்பை ஏற்க வேண்டும். வளரும் நாடுகளின் ஒற்றுமை மற்றும் புத்துணர்ச்சியை மேம்படுத்த வேண்டும்.


சின் ஜீ மும்பையில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரக அதிகாரியாக உள்ளார்.


Original article:

Share: