இந்திய ஹாக்கியின் 100 ஆண்டுகள். -குஷ்பூ குமாரி

 இந்தியா ஹாக்கியின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் வேளையில், அதன் வரலாற்றையும் இந்தியாவின் ஒலிம்பிக் செயல்திறனையும் சுருக்கமாகக் காணலாம்.


நவம்பர் 7-ஆம் தேதி, இந்திய ஹாக்கி கூட்டமைப்பு நிறுவப்பட்டதன் 100வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இது நாட்டின் முதல் விளையாட்டு நிர்வாக அமைப்பாகும். இந்த நாளானது, இந்தியாவில் ஹாக்கி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியதைக் குறிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், 550 மாவட்டங்களில் 1400-க்கும் மேற்பட்ட போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


முக்கிய அம்சங்கள்:


1. ஒலிம்பிக்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, "நவீன கால ஹாக்கி விளையாட்டின் முதல் வடிவம் ஆங்கிலேயர்களால் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டது. இது அப்போது பிரபலமான பள்ளி விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்டு, 1850-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்திய இராணுவத்தில் இடம்பிடித்தது."


2.  1876-ஆம் ஆண்டில், முதல் அதிகாரப்பூர்வ விதிகளின் தொகுப்பை வழங்கிய முதல் ஹாக்கி சங்கம் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. இந்தச் சங்கம் ஆறு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது என்றாலும் பின்னர் ஒன்பது நிறுவன உறுப்பினர் அடங்கிய சங்கங்களால்  மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.



3. இந்தியர்கள், சுதந்திர நாடு உருவாகும் முன்பே ஹாக்கி விளையாட ஆரம்பித்து வெற்றியும் பெற்று வந்துள்ளனர். 1885-ஆம் ஆண்டு முதல் சங்கம் உருவாக்கப்பட்டதன் மூலம் கல்கத்தா முன்னிலை வகித்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, பம்பாய் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் வந்தன. அங்கு 'கிடோ குந்தி ' (‘Khido Khundi’)  (பருத்தி பந்து மற்றும் முறுக்கப்பட்ட குச்சி) வடிவத்தில் இந்த விளையாட்டு விளையாடப்பட்டது.  


4. நவம்பர் 7-ஆம் தேதி 1925-ஆம் ஆண்டு தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் மூலம் இந்தியாவில் ஹாக்கி ஒரு முறையான கட்டமைப்பைப் பெற்றது. 2009-ஆம் ஆண்டில், அது 'ஹாக்கி இந்தியா' என்று மாற்றப்பட்டது.  நாடு முழுவதும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு ஹாக்கி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வையிடும் அதிகாரப்பூர்வ நிர்வாகக் குழுவாக உள்ளது. இந்த அமைப்பானது, சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (International Hockey Federation (FIH)), இந்திய ஒலிம்பிக் சங்கம் (Indian Olympic Association (IOA)) மற்றும் ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு (Asian Hockey Federation (AHF)) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.



5. சுதந்திரத்திற்கு முன்பும் அதற்குப் பிறகும் சில ஆண்டுகள், சர்வதேச மற்றும் ஒலிம்பிக் அரங்கில் இந்தியா தொடர்ந்து சிறந்து விளங்கிய ஒரே விளையாட்டு ஹாக்கி மட்டுமே. உண்மையில், 1928-ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் (Amsterdam) தொடங்கி, இந்தியா அந்த விளையாட்டுப் போட்டிகளில் எட்டு ஹாக்கி தங்கப் பதக்கங்களில் ஏழு பதக்கங்களைக் கைப்பற்றியது. 1952-ஆம் ஆண்டு ஹெல்சின்கியில் (Helsinki) ஒலிம்பிக்கில் கே.டி. ஜாதவ் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். பிறகு, இந்தியா ஹாக்கி அல்லாத வேறு விளையாட்டுகளில் பதக்கம் வெல்ல 1996-ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பதக்கம் வெல்லும் வரை  காத்திருக்க வேண்டியிருந்தது.


ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி


6. ஒலிம்பிக்கில் ஹாக்கி தொடர்ந்து விளையாடப்படவில்லை. இது 1908 மற்றும் 1920-ஆம் ஆண்டுகளில் மட்டுமே விளையாடப்பட்டது. மற்ற ஆண்டுகளில் இந்த விளையாட்டு கைவிடப்பட்டது. 1924-ஆம் ஆண்டில், பால் லியூட்டி உலக நிர்வாக அமைப்பான சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பை  (International Hockey Federation (FIH))  நிறுவினார். இதன் மூலம், 1928-ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக்ஸ் முதல் ஹாக்கி நிரந்தரமாக இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டது.


— இந்திய ஹாக்கி கூட்டமைப்பு 1927-ஆம் ஆண்டு விண்ணப்பித்து சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் உறுப்பினராகச் சேர்ந்தது, இதனால் இந்திய ஹாக்கி அணி 1928-ஆம் ஆண்டில் தனது முதல் ஒலிம்பிக் போட்டி பங்கேற்பை உறுதி செய்தது.


7. 1928-ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணி தனது முதல் முயற்சியிலேயே ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றது. இதுவரை, இந்திய அணி 8 தங்கம், 1 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட 13 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளது. 2024-ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. 


தியான் சந்த் - ஹாக்கியின் மாயாஜாலக்காரர்.


8. தியான் சந்த் ஹாக்கியின் முதல் சூப்பர் ஸ்டார் ஆவார், அவர் ஹாக்கியின் சூத்திரதாரி அல்லது மந்திரவாதி என்று அழைக்கப்படுகிறார். இந்தியா தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் ஹாக்கி தங்கப் பதக்கங்களை (ஆம்ஸ்டர்டாம் 1928, லாஸ் ஏஞ்சல்ஸ் 1932, மற்றும் பெர்லின் 1936) வென்றதற்கு அவரே முக்கியக் காரணமாக இருந்தார். அவரது நுட்பமான திறமைகள், சிக்கலான பந்துச் சறுக்கு (dribbling) மற்றும்  கோல் அடிக்கும் திறன் ஆகியவற்றால் அவர் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியதாகக் கூறப்படுகிறது.


9. இந்தியாவின் சுதந்திரத்திற்கு முந்தைய ஆண்டுகளில், உள்ளூர் மக்களை ஆளும் ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி வைத்த காலத்தில் தியான் சந்த் விளையாடினார். ஐரோப்பியர்கள் கண்டுபிடித்த விளையாட்டில் ஒரு இந்தியர் ஆதிக்கம் செலுத்துவதைப் பார்த்தது அவர்களிடம் மிகுந்த பெருமையைத் தூண்டியது.


கே.டி. சிங் 'பாபு', ரூப் சிங், பல்பீர் சிங் போன்ற சிறந்த சமகால வீரர்களும் இருந்தனர். ஆனால், தியான் சந்தின் பெயர் எப்போதும் முதலில் கூறப்பட்டது.


10. தியான் சந்த் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ஆம் தேதி, தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. தற்போது அர்ஜுனா விருதுகள் மற்றும் பிற மரியாதைகளுடன் சேர்த்து தியான் சந்த் பெயரிடப்பட்ட விருதுகளும் குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது.


ஹாக்கியை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள்


1. ஒலிம்பிக் வெற்றி மேடையை இலக்காகக் கொண்ட திட்டம் (Target Olympic Podium Scheme (TOPS)): ஒலிம்பிக் வெற்றி மேடையை இலக்காகக் கொண்ட திட்டம் என்பது இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஒரு முதன்மைத் திட்டமாகும். இது இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவி வழங்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் செயல்திறனை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் சிறந்த ஹாக்கி விளையாட்டு வீரர்கள் மற்றும் அணிகளுக்கான நிதி, சர்வதேச அனுபவம், பயிற்சி மற்றும் போட்டி சார்ந்த அனைத்து  ஆதரவையும்  வழங்கி வருகிறது.


2. அஸ்மிதா ஹாக்கி லீக்: பெண்களிடையே ஹாக்கி விளையாட்டைப்  பரப்புவதற்காக விளையாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் இளம் வயதினர் (ஜூனியர்) மற்றும் மிக இளம் வயதினர் (சப்-ஜூனியர்) மட்டங்களில் அஸ்மிதா ஹாக்கி லீக்கை ஏற்பாடு செய்கிறது.


3. கேலோ இந்தியா திட்டம் (Khelo India Scheme): இந்தத் திட்டம் ஹாக்கி வீரர்கள் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு விரிவான ஆதரவை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், வீரர்களுக்கு உதவித்தொகை, சிறப்புப் பயிற்சி மற்றும் பயிற்சியாளர் வசதிகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த பயிற்சி வசதிகள் வழங்கப்படுகின்றன. திருத்தப்பட்ட இந்தத் திட்டம் விளையாட்டு உள்கட்டமைப்பு, கேலோ இந்தியா மையங்கள் மற்றும் விளையாட்டுக் கூடங்களை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல், மற்றும் விளையாட்டு மூலம் அனைவரையும் உள்ளடக்கிய பகிர்வுத்தன்மையை ஊக்குவித்தல் ஆகியவற்றில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது.


4. இந்திய விளையாட்டு ஆணையம் | விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்கள்: இந்தத் திட்டங்களில் தேசிய சிறப்பு மையங்கள் (National Centres of Excellence (NCOEs)) நிறுவுதல், பயிற்சி மையங்கள் மற்றும் விளையாட்டுத் திறன் போட்டிகளை நடத்துதல் ஆகியவை அடங்கும். அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வசதிகள், பயிற்சி பெற்ற ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட தனிப்பட்ட உணவு மற்றும் சிறந்த பயிற்சியாளர்கள், தகுதிவாய்ந்த துணை ஊழியர்கள் மற்றும் உயர் செயல்திறன் இயக்குநர்களின் மேற்பார்வையின்கீழ் ஹாக்கி வீரர்கள் உட்பட நம்பிக்கைக்குரிய விளையாட்டு வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதை இந்த ஆணையத்தின் திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. 


மொத்தத்தில், தியான் சந்த் 12 ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி 33 கோல்களை அடித்தார்.



Original article:

Share:

வெளிநபர்களுடனான தொடர்பை நிராகரிக்கும் உரிமை பழங்குடி மக்களுக்கு உண்டு. நாம் அவர்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும். -அஜய் சைனி

 தன்னார்வமாக தனிமையில் வாழும் பழங்குடி மக்கள், தொந்தரவு இல்லாமல் வாழவும், தங்கள் மூதாதையர் நிலங்களை நிர்வகிக்கவும், தொடர்பைத் தவிர்க்கவும், சுதந்திரமான, முன்கூட்டிய, மற்றும் தகவலறிந்த சம்மதத்தைப் (Free, Prior, and Informed Consent (FPIC)) பயன்படுத்தவும் உரிமை உண்டு.


ஜனவரி மாதம் 1778-ஆம் ஆண்டு, கவுவாய் (Kaua‘i), ஹவாய் தீவுகள். மாலுமி கேப்டன் ஜேம்ஸ் குக்கின் கப்பல்கள் அடிவானத்தில் தோன்றியபோது, ஹவாய் தீவுவாசிகள் வியப்பிலும் பயத்திலும் உறைந்தனர். அவர்கள் கற்பனைக்கு எட்டாத விஷயங்களைக் கண்டனர். உள்ளூர் பூசாரி ஒருவர் அந்தக் கப்பல்களை 'கடவுள்களின் மிதக்கும் கோவில்கள்'—அதாவது ஹெயாஸ்—என்று அறிவித்தார். கப்பலில் இருந்த அந்நியர்கள் அதேபோல் வேற்று உலகத்தவர்களாகத் தெரிந்தனர். ஹவாய் மக்கள் அவர்களின் முக்கோண வடிவ தொப்பிகளை சிதைந்த மண்டை ஓடுகளாகவும், சீருடைகளைத் தொய்வான சருமமாகவும், சட்டைப் பைகளைத் தங்கள் உடலுக்குள் திறக்கும் சிறு கதவுகளாகவும், அவற்றில் புதையல்கள் இருப்பதாகவும் புரிந்து கொண்டனர். "வெளியுலகத் தொடர்பு இல்லாத" பழங்குடி மக்கள் ஐரோப்பியர்களுடனான தங்கள் முதல் தொடர்பை எவ்வாறு புரிந்து கொண்டார்கள் என்பதற்கான சில பதிவுகளில் இதுவும் ஒன்றாகும்.


குக் “கண்டுபிடித்தார்” என்று கூறப்படும் ஹவாய் தீவுகளுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அந்தமான் தீவுகள் ஏற்கனவே புராணக்கதைகளுக்கும் பயத்திற்கும் உரியவையாக மாறியிருந்தன. இரண்டாம் நூற்றாண்டு கி.பி.யிலேயே, பயணிகள் அதன் குடியிருப்பாளர்கள் பற்றி பயங்கரமான கதைகளை உருவாக்கினர் — மார்கோ போலோ அவர்களை “பெரிய மாஸ்டிஃப் இன நாய்கள்” என்று அழைத்தார், பிரியர் ஒடோரிக் “நாய் முகம் கொண்ட மனித உண்ணிகள்” என்றார், மற்றும் சர் ஜான் மாண, “ஒரு கண் கொண்ட ராட்சதர்கள்” என்றார். பிரிட்டிஷ் ஆய்வாளர் ஜான் ரிச்சி இறுதியாக 1771இல் தீவுக்கூட்டத்தை வரைபடமாக்கியபோது, புராணம் “நாகரிகம்” என்று அழைக்கப்படும் புதிய வன்முறைக்கு வழிவகுத்தது.


நீண்ட கால இனப்படுகொலை


ஐரோப்பியர்களுக்கும் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களின் "தொடர்பு இல்லாத" பழங்குடி சமூகங்களுக்கும் இடையிலான சந்திப்புகள் காலனித்துவம், நோய், மதமாற்றம் மற்றும் நிர்மூலமாக்கல் போன்ற பேரழிவைக் கட்டவிழ்த்துவிட்டன. ஐரோப்பாவின் "ஆராய்ச்சி யுகம்" என்று அழைக்கப்பட்ட  காலத்தில், கிறிஸ்டோபர் கொலம்பஸ் மற்றும் அமெரிகோ வெஸ்பூசி ஆகியோரின் பயணங்கள் இதேபோன்ற பேரழிவைத் தூண்டின. இது "கண்டுபிடிப்பு" என்ற போர்வையில் வெற்றி பெற்றது. மேலும் வலிமைமிக்க ஆஸ்டெக் மற்றும் இன்கா நாகரிகங்கள் உட்பட கோடிக்கணக்கான பழங்குடி மக்கள் அழிக்கப்பட்டனர்.


ஆனாலும், இந்த இனப்படுகொலை வரலாற்றின் ஒரு மூடிய அத்தியாயம் அல்ல. அது நம் காலத்தில் அமைதியாக நீடிக்கிறது. சர்வைவல் இன்டர்நேஷனல் (Survival International)  "தொடர்பு கொள்ளப்படாத பழங்குடியினர் : உயிர் வாழ்வின் விளிம்பில்" (Uncontacted Indigenous Peoples: At the Edge of Survival) என்ற தலைப்பிடப்பட்டு வெளியான அறிக்கையில், குறைந்தபட்சம் "வெளியுலகத் தொடர்பில்லாத" 196 பழங்குடி குழுக்கள் இன்னும் இருப்பதாகவும் ஆனால், அவற்றில் பாதி குழுக்கள் உலகம் அவர்களின் பெயர்களைக்கூட அறிந்து கொள்வதற்கு முன்பே, இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் மறைந்து போகக்கூடும் என்று கருத்து தெரிவித்துள்ளது.


"சுதந்திரமான," "கண்ணுக்குத் தெரியாத," அல்லது "மறைக்கப்பட்ட" சமூகங்கள் என்றும் அழைக்கப்படும் இந்த "தொடர்பு இல்லாத" மக்கள், நவீன அரசுகள் தோன்றுவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பே, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர்கள் வாழ்ந்த தங்கள் மூதாதையர் நிலங்களில் தாங்களாகவே விரும்பித் தனிமையில் வாழ்கின்றனர். ஏறக்குறைய 95 சதவீதம் பேர் அமேசானில் வாழ்கின்றனர். 124 குழுக்கள் பிரேசிலிலும், 64 குழுக்கள் கொலம்பியா, பெரு, வெனிசுலா, பராகுவே, பொலிவியா மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளில் பரவியும் உள்ளனர். நான்கு குழுக்கள் இந்தோனேசியாவிலும், ஆப்பிரிக்கா தீவுகள் மற்றும் நிகோபார் தீவுகள் மற்றும் மேற்கு பப்புவாவில் தலா இரண்டு குழுக்களும் பிழைத்து வாழ்கின்றன என்று கூறப்படுகிறது.


அவர்கள் தங்கள் காடுகளுக்கு அப்பாற்பட்ட உலகத்தைப் பற்றி அறியாதவர்கள் அல்ல. ஆனாலும், அவர்கள் அதை வெறுமனே நிராகரித்துள்ளனர். நோய், அடிமைத்தனம் மற்றும் மரணத்தை மட்டுமே கொண்டு வந்த சந்திப்புகளின் நினைவிலிருந்து அவர்களின் இந்த மறுப்பு மனப்பான்மை  பிறந்தது. வெளிப்புற நோய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால், ஒரு புதிய தொடர்பும்கூட முழு மக்களையும் அழித்துவிடும் என்கிற அச்சத்தின் காரணமாகவே வெளியுலகத்தொடர்பைத் தவிர்த்து வருகின்றனர். பிரேசிலிய அமேசானில், புதிதாகத் தொடர்பு கொண்ட பழங்குடியினரில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் நோயால் இறக்கின்றனர். "என் குழந்தைகள் இறந்தனர், என் அம்மா இறந்தார். என் கணவர் இறந்தார். என் சகோதரர்கள், என் சகோதரிகள், என் அத்தைகள் மற்றும் மாமாக்கள்," என்று தொடர் உயிர் இழப்புகளை ஒரு மாடிஸ் இனப்பெண் நினைவு கூர்ந்தார். நீண்ட வீட்டிற்குள் அழுகிய சடலங்களிலிருந்து எலும்புகள் வெளியே ஒட்டிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்களை அடக்கம் செய்ய முடியாத அளவிற்கு மிகவும் பலவீனமாக இருந்தோம் என்றும் தான் இரண்டு குழந்தைகளுடன் தனித்து விடப்பட்டேன் என்றும் என் குடும்பத்தினர் அனைவரும் இறந்தனர் என்றும் அந்தப் பெண் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியாதாகக்  கூறுகின்றனர்.


வன்முறையின் புதிய எல்லைகள்


தாமாக முன்வந்து பொதுச் சமூகத்தில் இருந்து விலகி தனிமையில் வாழும் அனைத்துப் பழங்குடி மக்களும் இப்போது அரசாங்கங்கள், பெருநிறுவனங்கள் அல்லது குற்றவியல் அமைப்புகளிடமிருந்து தங்கள் நிலங்கள் மற்றும் வளங்களுக்கு கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். "முன்னேற்றம்", "தேசிய நலன்" அல்லது "வளர்ச்சி" என்ற பதாகைகளின் கீழ், காடுகள் அழிக்கப்படுகின்றன, ஆறுகள் நஞ்சாக்கப்படுகின்றன, மக்கள் கட்டாயாமாக  இடம்பெயர்க்கப்படுகிறார்கள், உலகின் பாரம்பரியங்கள் அழிக்கப்படுகின்றன. இந்தியாவில், கிரேட் நிக்கோபாரில் 92,000 கோடி ரூபாய் மதிப்பிலான மெகா திட்டம், ஷோம்பென் (Shompen) மக்களை அச்சுறுத்துகிறது.


சமயப் பிரச்சார நடவடிக்கைகள் இந்த வன்முறையை அதிகரிக்கிறது. “இன்று தொடர்பு கொள்ளப்படாத மக்களில் ஆறில் ஒரு பகுதியினர், கிறிஸ்தவத்திற்கு, சில இடங்களில் இஸ்லாமிற்கு மாற்றவும், அவர்களைத் தொடர்பு கொள்ளவும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் மத போதாகர்களால்  அச்சுறுத்தப்படுகின்றனர். 

"ஜான் ஆலன் சாவ் 2018-ஆம் ஆண்டில் வடக்கு சென்டினல் (Sentinel) தீவில் அத்துமீறி நுழைந்ததற்கு உத்வேகம் அளித்த ஜோசுவா திட்டம் (Joshua Project) மற்றும் அனைத்து நாடுகள் சர்வதேச அமைப்பு போன்ற அமைப்புகள், இரட்சிப்பு (salvation) குறித்த ஆழமான இனவெறி மற்றும் காலனித்துவ தர்க்கங்களின் அடிப்படையில் செயல்படுகின்றன. அவை பழங்குடி உலகங்களை தங்கள் சொந்த பிம்பத்தில் மாற்றியமைக்க முயல்கின்றன. ஆல் நேஷன்ஸ் அமைப்பின் தலைவரான மேரி ஹோ “ஒரு நாள், ஒவ்வொரு நாவும், ஒவ்வொரு கோத்திரமும், ஒவ்வொரு தேசமும் கடவுளை அவரது சிம்மாசனத்தைச் சுற்றி வணங்கும்.” என்று கூறினார்.


மதப் பிரச்சாரங்களைத் தாண்டி, டிஜிட்டல் யுகத்தின் சாகச விரும்பிகள் ஒரு புதிய வகையினர், பழங்குடி சமூகங்களின் பரபரப்பான சித்தரிப்புகளால் தூண்டப்பட்டு, புகழுக்காகத் தொடர்பைத் தேடுகிறார்கள். அமெரிக்க எழுத்தாளர்களான ஆடம் குட்ஹார்ட், ரேச்சல் குஷ்னர் மற்றும் சுஜித் சரஃப் ஆகியோரின் தி லாஸ்ட் ஐலேண்ட் ஆஃப் தி சாவேஜஸ் (2000)  (The Last Island of the Savages - 2000), தி பாம் அட் தி எண்ட் ஆஃப் தி மைண்ட் (2024) (The Palm at the End of the Mind - 2024), மற்றும் ஐலேண்ட்-2024 (Island - 2024) போன்ற இலக்கியப் படைப்புகள் சென்டினிலீஸ் மீதான இந்த ஈர்ப்பை சுவாரசியமாக  வெளிப்படுத்தியுள்ளன. இதுபோன்ற விவரிப்புகள், அறிவுசார் வன்முறை செயல்கள் (acts of epistemic violence). கடந்த மார்ச் மாதம் சென்டினல் மக்களுடன் சட்டவிரோதமாகத் தொடர்பு கொள்ள முயன்ற நான்காவது அமெரிக்க குடிமகனான உக்ரைனிய அமெரிக்க யூடியூபர் மைக்கைலோ போலியாகோவ் போன்றவர்களின் பொறுப்பற்ற முயற்சிகளை ஊக்குவிப்பதாக அமைகின்றன..


அறியப்படாமல் இருப்பதற்கான உரிமை


பழங்குடி இனத்தொடர்பு என்பது இதுவரை சந்திப்பு, சுரண்டல் மற்றும் இறுதியில் அழித்தல் என்கிற வரலாற்றையே சொல்கிறது. 2009-ஆம் ஆண்டு பிரேசிலில் முதன்முதலில் தொடர்பு கொள்ளப்பட்ட அவா (Awá) இனமக்களில் ஒருவரான வாமாக்சுவா அவா கூறியாதவது, “நான் காட்டில் வாழ்ந்தபோது, ​​எனக்கு நல்ல வாழ்க்கை இருந்தது... இப்போது காட்டில் தொடர்பு கொள்ளப்படாத அவாக்களில் ஒருவரைச்  சந்தித்தால்,  ‘வெளியேறாதே! காட்டிலேயே இரு. வெளியுலகில் உனக்கு எதுவும் இல்லை.’ என்று தன் இனமக்களிடம் கூறுவேன் என்று தன் மனவேதனையை வெளிப்படுத்தினார்.


தன்னார்வமாக தனிமையில் வாழும் பழங்குடி மக்கள், தொந்தரவு இல்லாமல் வாழவும், தங்கள் மூதாதையர் நிலங்களை நிர்வகிக்கவும், தொடர்பை மறுக்கவும், சுதந்திரமான, முன்கூட்டிய மற்றும் தகவலறிந்த ஒப்புதலைப் பயன்படுத்தவும் உரிமை உண்டு. இந்த பாதுகாப்பு உரிமைகள் சர்வதேச குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (1966), சர்வதேச பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் உடன்படிக்கை (1966), சர்வதேச தொழிலாளர் அமைப்பின்  மாநாடு எண். 169 (1989), மற்றும் பழங்குடிகளின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் அமைப்பின்  பிரகடனம் (2007) ஆகியவற்றில் பொறிக்கப்பட்டுள்ளன.


ஆனாலும், இந்த உறுதிமொழிகள் நடவடிக்கை இல்லாமல் வெற்றுத்தனமானதாக இருக்கின்றன. சென்டினிலீஸ் (Sentinelese) மீதான இந்தியாவின் "கண்காணி, கை வைக்காதே" (“eyes-on, hands-off”) கொள்கை, அவர்களின் தொடர்பை நிராகரிப்பதற்கான உரிமையை மதித்து, அவர்களின் உலகின் மீதான இறையாண்மையைப் பாதுகாக்கும் கொள்கை ஒரு அரிய கட்டுப்பாட்டுச் செயலாக உள்ளது. ஆனால், ஷோம்பன் மக்கள் மீது திணிக்கப்பட்ட கிரேட் நிக்கோபாரில் ஒரு மெகா திட்டத்திற்கான ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சி, இந்த மிக முக்கியமான கொள்கைமீறலுக்கு வழிவகுக்கிறது. இது அவர்களின் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, இப்போது அவர்களைப் பற்றிக்கொள்ளத் துடிக்கும் பேராசையால் இதுவரையில் வெளியுலகத் தொடர்பில்லாத,  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் பழங்குடிகளின் வாழ்வுலகையும் அச்சுறுத்துகிறது.


அரசாங்கங்கள் சொல்லாட்சியைக் கடந்து செயல்படவில்லை என்றால், சட்டங்கள் வெறும் காகித மையாகவே இருந்தால், இந்த உலகம் அதன் கடைசி சுதந்திரமான மக்கள் -  அதாவது தனியாக விடப்பட வேண்டும் என்று மட்டுமே கேட்டவர்கள் விரைவில் அழிவதைக் காணும் என்கின்றனர். அவர்களின் மறைவு கலாச்சாரங்களை மட்டும் அழிக்காது. அது மற்றொரு வாழ்க்கை முறையின் கடைசி உயிருள்ள நினைவை அழித்துவிடும். கண்காணிப்பு, முதலாளித்துவம், பேராசை மற்றும் கண்மூடித்தனமான நுகர்வு ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்பட்ட உலகம் அது அல்ல. மாறாக, சுயாட்சி, சமநிலை, தன்னிறைவு மற்றும் ஆழமான சொந்தம் ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்பட்டது அவர்களின் உலகம். அது போன்ற ஒரு இனங்களை இழப்பது என்பது ஒரு காலத்தில் சுதந்திரம் என்றால் என்ன என்பதை மறந்துவிடும் அளவிற்கான துயர நிலைக்கு  வழிவகுக்கும் என்று எச்சரிக்கின்றனர்.


சைனி, IIT டெல்லியின் ஊரக மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப மையத்தில் பணியாற்றி வருகிறார். அவர் தொலைதூர பழங்குடி சமூகங்களுடன் பணிபுரிகிறார். நான்சி தற்போது IIT டெல்லியின் மக்கள் ஆய்வகத்தில் (People's Lab) ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.



Original article:

Share:

ASEAN என்பது அதன் முரண்பாடுகளைத் தீர்க்க வேண்டிய ஒரு பொருளாதார சக்தியாகும். -சுசித்ரா துரை

 இதன் ஒட்டுமொத்த மக்கள்தொகை ஏறக்குறைய 700 மில்லியன் ஆகும். $4 டிரில்லியன்களுக்கும் மேலான கூட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)) கொண்ட ஒரு குழுவாக, இது உலக சராசரி வளர்ச்சி விகிதத்தைவிட 25 சதவீதம் சதவீதத்திற்கு அதிகமாக வளர்ச்சியடைகிறது.


அக்டோபர் 26 அன்று கோலாலம்பூரில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் (Association of Southeast Asian Nations (ASEAN)) 47-வது உச்சிமாநாடு மற்றும் உச்சிமாநாட்டின் தொடக்க நாளில், இரண்டு முக்கிய முன்னேற்றங்கள் நடந்தன - தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே "அமைதி ஒப்பந்தம்" கையெழுத்தானது மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் 11-வது உறுப்பினராக இணைந்தது.


இதில் பெரும்பாலானவை தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் தோற்றத்தையே நினைவூட்டுகின்றன. இந்தக் குழு 1967-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இரண்டு தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளான இந்தோனேசியா மற்றும் மலேசியா இடையேயான மூன்று ஆண்டுகால மோதல் அமைதி ஒப்பந்தம் மூலம் 1966-ஆம் ஆண்டில் முடிவடைந்தது. இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகியவை ஆகஸ்ட் 8, 1967 அன்று பாங்காக் பிரகடனத்தில் (Bangkok Declaration) கையெழுத்திட்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களாக இணைந்தன. ஆண்டுகள் செல்லச் செல்ல, மேலும் ஐந்து நாடுகள் உறுப்பினர்களாக இணைந்தன. திமோர்-லெஸ்டே, 2002ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது. அதன் நிறுவன அமைப்புகள் தயார் ஆகியுள்ளனவா என்பது குறித்து சந்தேகங்கள் இருந்ததால் மிகவும் நீண்டகாலமாக நடைபெற்ற சரியான உறுப்பினர் சேர்க்கை செயல்முறை முடிந்த பிறகு, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தில் முழு நேர உறுப்பினராக சேர்ந்தது.


ASEAN உருவாக்கப்பட்டபோது, ​​சிலர் அதை தென்கிழக்கு ஆசியாவின் காலனித்துவ நீக்கத்தின் இறுதிப் படியாகக் கண்டனர். மேலும், இந்தப் பகுதியில் கம்யூனிசம் பரவுவதற்கு எதிரான ஒரு கோட்டையாகவும் இது பார்க்கப்பட்டது. நீண்ட காலமாக, தென்கிழக்கு ஆசியா புவிசார் அரசியல் போட்டிக்கான களமாக இருந்தது. 19-ஆம் நூற்றாண்டு மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில், தென்கிழக்கு ஆசியாவின் பிரதான நிலப்பகுதியில் பிரான்சும் பிரிட்டனும் போட்டி காலனித்துவ சக்திகளாக இருந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில், அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக மாறியது. கடந்த காலங்களில், ஒரு உறுதியான சீனாவின் எழுச்சியை எதிர்கொண்ட ASEAN நாடுகள் அமெரிக்கா மற்றும் சீனா இரண்டிற்கும் எதிராகப் போராடி வருகின்றன.


தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (Association of Southeast Asian Nations (ASEAN)) ஏன் முக்கியமானது? அதன் ஒருங்கிணைந்த மக்கள் தொகை ஏறக்குறைய  700 மில்லியன் ஆகும். $4 டிரில்லியனுக்கும் அதிகமான கூட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட ஒரு கூட்டமாக, இது உலக சராசரி விகிதத்தைவிட 25 சதவீதம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வலுவான வளர்ச்சி சிறந்த கொள்கைகள், ஒரு துடிப்பான தனியார் துறை மற்றும் எதிர்கால வர்த்தகம், நிதி மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்கான சாத்தியக்கூறுகள் ஆகியவற்றிலிருந்து வருகிறது. ASEAN பல கண்டங்களை உள்ளடக்கிய ஒரு தனித்துவமான கூட்டத் திறனையும் கொண்டுள்ளது - உதாரணமாக, ஆசியான் பிராந்திய மன்றம் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். 2017-ஆம் ஆண்டில் இந்தோ-பசிபிக் கருத்து முக்கியத்துவம் பெறத் தொடங்கியபோது, இந்தியா உள்ளிட்ட அனைத்து முக்கிய நட்பு நாடுகளும் ASEAN என்ற கருத்தில் தங்கள் நம்பிக்கையை வலியுறுத்தினர்.


15 ஆண்டுகளுக்கும் மேலாக, சீனா ASEAN மிகப்பெரிய வர்த்தக நட்பு நாடக இருந்து வருகிறது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளன. ASEAN அமைப்பில் அமெரிக்கா மிகப்பெரிய முதலீட்டாளராக உள்ளது. 2023ஆம் ஆண்டில் $74.4 பில்லியன் அந்நிய நேரடி முதலீட்டை வழங்குகிறது.  அதைத் தொடர்ந்து EU ($24.9 பில்லியன்) மற்றும் சீனா ($17.3 பில்லியன்) உள்ளன. 6,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் ASEAN அமைப்பின் கீழ் செயல்படுகின்றன. ASEAN-னின் ஏற்றுமதிக்கான மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா உள்ளது. அதே, நேரத்தில் ASEAN முக்கியமாக சீனாவிலிருந்து அதன் தொழிற்சாலைகளுக்கான பாகங்கள் மற்றும் பொருட்களை வாங்குகிறது.


அதன் பெரும்பாலான உறுப்பினர்கள் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரங்களைக் கொண்டிருப்பதால், புதிய அமெரிக்க வரிகள், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளையும் மற்ற நாடுகளையும் பாதித்து. இது ASEAN உறுப்பினர்களுக்கு கடுமையாக இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (United States Agency for International Development (USAID)) நிதி குறைப்புக்கள் பொது சுகாதாரத் திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டையும் பாதித்துள்ளன. இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் பொருளாதார செல்வாக்கு வளர்ந்து வருகிறது. (புதிய ASEAN-சீனா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.) ஆனால், அமெரிக்காவுடனான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகள் முக்கியமானதாகவே உள்ளன.


ASEAN-னின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தின் மறுபக்கம் அதன் சீரற்ற பொருளாதார வளர்ச்சியாகும். இதில் பணக்கார நாடுகள் புதிய உறுப்பு நாடுகளைவிட மிக அதிகமாக உள்ளன. மேலும், 2021ஆம் ஆண்டு முதல் மியான்மரில் உள்நாட்டு நெருக்கடி உள்ளது. அதை ASEAN முயற்சிகளால் தீர்க்க முடியவில்லை.


இதன் பின்னணியில் கம்போடியா-தாய்லாந்து எல்லை மோதலை நாம் பார்க்க வேண்டும். நூற்றாண்டு பழமையான இந்த மோதல் பிரெஞ்சுக் காலனித்துவ விரிவாக்கத்தாலும் தன்னிச்சையான வரைபட வரைவாலும் ஏற்பட்டது. 817 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லையில், தாய்லாந்து உரிமை கொண்டாடும் 11-ஆம் நூற்றாண்டு ப்ரியா விஹியர் கெமர் சைவக் கோயிலையும் சர்வதேச நீதிமன்றம் கம்போடியாவுக்குத் தீர்ப்பளித்ததையும், வேறு சில எல்லை நிர்ணயம் செய்யப்படாத பகுதிகளையும் மையப்படுத்தி அவ்வப்போது ராணுவ மோதல்கள் வெடித்துள்ளன. 2011 முதல் அமைதியும் நல்லுறவும் நிலவிய நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டது.


2025 ஜூலை மாதத்தில் ஐந்து நாட்கள் நீடித்த தீவிர எல்லை மோதல் 40க்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்தியது, சுமார் 3,00,000 பொதுமக்கள் இடம்பெயர்ந்தனர், ராக்கெட் தாக்குதல்கள் மற்றும் வான்வழி தாக்குதல்கள் பரிமாற்றம் நடைபெற்றன, இதற்கு முன்பு கம்போடியாவின் உயர்மட்டத்தில் கசிந்த தொலைபேசி உரையாடல் ஒரு இளம் தாய்லாந்து பிரதமரை அவரது பதவியை இழக்கச் செய்தது. இருப்பினும், அமெரிக்காவின் அழுத்தத்தின்கீழ் ஆசியான் தலைவர் மலேசியாவின் தீவிரமான ஊக்குவிப்புடன், சீனா பார்வையாளராக இருந்த நிலையில், இரு தரப்புகளும் ஜூலை 28 அன்று முதல்கட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தில் நுழைந்தன, அது அக்டோபர் 26 அன்று மேலும் விரிவாக்கப்பட்டது.


தாய்லாந்தின் "பிரகடனம்" என்று அழைக்கப்படும் இரண்டு பக்க "அமைதி ஒப்பந்தம்", கனரக ஆயுதங்களை திரும்பப் பெறுவதை சிறப்பாக சரிபார்க்க ASEAN  கண்காணிப்புக் குழுக்களை (ASEAN Observation Teams (AOT)) அமைப்பது, கண்ணிவெடி அகற்றுதல், ஊழல் தொடர்பான குற்றங்களை அடக்குதல் மற்றும் கூட்டு எல்லைப் பகுதி மேலாண்மைக்கான கட்டமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட இரு தரப்பினரும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பட்டியலிடுகிறது. திங்களன்று, கனரக ஆயுதங்களை திரும்பப் பெறுவதற்கான உண்மையான செயல்முறை தொடங்கியது. இரு தரப்பினரும் "தீவிர தேசியவாதிகளை" (ultranationalists) சமாளிக்க வேண்டும். அவர்கள் கடுமையான நடவடிக்கைகளைக் கோரும் தன்மை கொண்டவர்கள். அதே நேரத்தில் அவர்களின் பொருளாதாரங்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். ஆயுதங்களை முழுமையாக திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு இந்த ஆண்டு இறுதி வரை உள்ளது.


உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, கம்போடிய பிரதமர் அமெரிக்க அதிபர் டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தார். அதே நேரத்தில் தாய்லாந்து அமெரிக்காவுடன் அரிய மண் தாது (rare earths) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.


இந்தியாவுக்கு, ASEAN அதன் “கிழக்கே செயல்படும் (Act East)” கொள்கையின் நோக்கங்களை தொடர்ந்து இருக்கிறது — இந்தோ-பசிபிக் பார்வையின் மையமாகவும், பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் அரசியல் ஒத்திசைவுக்கான வளமான சாத்தியங்களுடனும் உள்ளது.


எழுத்தாளர் தாய்லாந்திற்கான முன்னாள் இந்திய தூதர் ஆவார்.



Original article:

Share:

காடுகள் (பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு) சட்டம், 1980 என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


- காடுகள் (பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு) சட்டம், 1980-ஆம் ஆண்டு சட்டத்தின்கீழ் ஒன்றிய அரசின் முன் அனுமதி இன்றி வனநிலத்தை “மறு-ஒதுக்கீடு நீக்கம், வனம் அல்லாத பயன்பாடு, குத்தகை அல்லது மரத்தை முழுமையாக வெட்டுதல்” ஆகியவற்றுக்கு அனுமதிப்பது இச்சட்டத்தை மீறுவதாகக் கருதப்படுகிறது.


— காடுகள் ஆலோசனைக் குழு (Forest Advisory Committee (FAC)), பாதுகாப்பு மற்றும் பெருக்க விதிகள், 2023-ன் கீழ் அக்டோபர் 28 கூட்டத்தில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அபராதங்களுடன் கூடுதலாக தண்டனை ஈடுசெய்யும் காடுகள் வளர்ப்பை பரிந்துரைத்தது.


— தண்டனை இழப்பீட்டு வனவளர்ப்பு (Penal compensatory afforestation) என்பது, உள்கட்டமைப்புத் திட்டங்கள், தொழிற்சாலைகளுக்கான வனம் அல்லாத பயன்பாட்டுக்கான சட்டப்படி கட்டாயமாக்கப்பட்ட இழப்பீட்டு வனவளர்ப்புக்கு மேல் அதிகமாக உத்தரவிடப்படும் மறுசீரமைப்பு முயற்சிகளைக் குறிக்கும்.


- விதிகளின்படி, சட்டத்திற்கு முரணாகப் பயன்படுத்தப்படும் காட்டுப் பரப்புக்கு ஏற்ப, ஐந்து மடங்கு வரை தண்டனை நிகர தற்போதைய மதிப்பு (NPV) விதிக்கப்படுகிறது. NPV என்பது, வனம் அல்லாத நோக்கங்களுக்காகத் மாற்றப்படும் காட்டுப் பரப்பிற்காக வழங்கப்படும் சுற்றுச்சூழல் சேவைகளின் அளவீடாகும்.


நாணயத் தண்டனைகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், தண்டனை இழப்பீட்டு காடழிப்பு நிபந்தனைப்படுத்தும் நடைமுறை பெரும்பாலும் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், அது இன்னும் வழக்குகளின் அடிப்படையில் உத்தரவிடப்பட்டது என்று காடுகள் ஆலோசனைக் குழு குறிப்பிட்டது.


— மாநில அரசு சட்ட விதிகள் மீறப்பட்டதாக உறுதியாக நம்பினால், குற்றம் ஏற்பட அனுமதித்த நபர்களின் விவரங்கள் மற்றும் சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் விரிவான அறிக்கை பிராந்திய அலுவலகம் அல்லது அமைச்சக தலைமையகத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என்று வன ஆலோசனைக் குழு பரிந்துரைத்தது.


உங்களுக்குத் தெரியுமா?


 — ஈடுசெய்யும் வன வளர்ப்பில் செயல்படும் எளிய கொள்கை என்பது வனங்கள் ஒரு முக்கியமான இயற்கை வளமாகவும், பல்வேறு சுற்றுச்சூழல் சேவைகளை வழங்குவதாலும், அவை அழிக்கப்படக்கூடாது. இருப்பினும், வளர்ச்சி அல்லது தொழில்துறை தேவைகள் காரணமாக, வனங்கள் வழக்கமாக அழிக்கப்படுகின்றன அல்லது அதிகாரப்பூர்வ மொழியில் கூறப்படுவது போல், "வனமற்ற நோக்கங்களுக்காக மாற்றிவிடப்படுகின்றன".


— ஆனால், வனங்கள் வளர்க்கப்பட்ட நிலம் ஒரே இரவில் காடாக மாறாது என்பதால், மாற்றிவிடப்பட்ட வனங்கள் இடைக்காலத்தில் வழங்கியிருக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் இழப்பு இன்னும் உள்ளது. இந்த பொருட்கள் மற்றும் சேவைகளில் மரம், மூங்கில், எரிபொருள், கார்பன் பிரித்தெடுத்தல், மண் பாதுகாப்பு, நீர் மறுசுழற்சி மற்றும் விதை பரவல் ஆகியவை அடங்கும்.


— வனவளர்ப்பு செய்யப்பட்ட நிலம் ஒப்பிடத்தக்க பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கத் தொடங்க குறைந்தது 50 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைக்கால இழப்பை ஈடுசெய்ய, சட்டம் திருப்பிவிடப்பட்ட காட்டின் தற்போதைய நிகர மதிப்பு (Net Present Value (NPV)) 50 ஆண்டுகளுக்கு கணக்கிடப்பட்டு, வனங்களை “மாற்றிவிடும்” (diverting) “பயன்படுத்தும் நிறுவனத்திடமிருந்து” (user agency) வசூலிக்கப்பட வேண்டும் என்று கோருகிறது.



Original article:

Share:

பொது இடங்களிலிருந்து தெருநாய்களை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு : நீதிமன்றம் இதற்கு முன்பு கூறியது என்ன?

 டெல்லி மற்றும் தேசியத் தலைநகர் பகுதியில் (National Capital Region (NCR)) உள்ள தெரு நாய்கள் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த தனது முந்தைய உத்தரவை உச்சநீதிமன்றம் மாற்றியமைத்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை இங்கே பார்க்கலாம்.


கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் டிப்போக்கள் மற்றும் ரயில் நிலையங்களின் வளாகங்களில் இருந்து தெருநாய்களை "விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாடு விதிகளின்படி கருத்தடை மற்றும் தடுப்பூசிக்குப் பிறகு, நியமிக்கப்பட்ட காப்பகத்திற்கு" மாற்றும்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வெள்ளிக்கிழமை நவம்பர் 7-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, "அவ்வாறு பிடிக்கப்பட்ட தெருநாய்களை, அவை எந்த இடத்திலிருந்து பிடிக்கப்பட்டதோ அதே இடத்திற்கு மீண்டும் விடக்கூடாது" என்றும் கூறியது.


உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, தெருநாய்கள் அந்தந்த அதிகார எல்லைக்குட்பட்ட நகராட்சி அமைப்பால் அகற்றப்படும். ஒவ்வொரு கல்வி நிறுவனம், மருத்துவமனை, விளையாட்டு வளாகம், பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களின் நிர்வாகத்தையும், "வழிகாட்டுதலின்கீழ் அடையாளம் காணப்பட்டபடி," வளாகத்தின் பராமரிப்பு மற்றும் தூய்மைக்கு பொறுப்பான ஒரு முக்கிய அதிகாரியை நியமிக்கவும், மற்றும் தெருநாய்கள் வளாகத்திற்குள் நுழையாமல் அல்லது வசிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளது.


இந்தத் தீர்ப்பு, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் (NCR) தெரு நாய்கள் குறித்த தனது உத்தரவை உச்சநீதிமன்றம் மாற்றியமைத்துள்ளது. தெரு நாய்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை இங்கே காணலாம்.


நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, "தெருநாய்களால் நகரம் துன்புறுத்தப்படுகிறது, குழந்தைகள் பலியாகின்றனர்" என்ற தலைப்பிலான செய்தியைப் படித்த பிறகு, ஜூலை 28-ஆம் தேதி நீதிமன்றம் தாமாக வழக்கைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்த அமர்வு தெருநாய் பிரச்சினை குறித்து பல உத்தரவுகளைப் பிறப்பித்தது. டெல்லி, நொய்டா, காஜியாபாத், குர்கான் மற்றும் ஃபரிதாபாத்தில் உள்ள நகராட்சி அதிகாரிகளுக்கு "அனைத்து பகுதிகளிலிருந்தும் தெருநாய்களை விரைவில் பிடிக்கத் தொடங்கி" அவற்றைக் குறிக்கப்பட்ட தங்குமிடங்கள் அல்லது அடைப்பிடங்களில் வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.


முக்கியமாக, "எந்தவொரு பகுதியிலிருந்தும் பிடிக்கப்பட்ட ஒரு நாய்கூட தெருக்களில் அல்லது பொது இடங்களில் மீண்டும் விடப்படக்கூடாது" என்று இந்த அமர்வு உத்தரவிட்டது.


இது நடைமுறையில் உள்ள விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகள், 2023 (Animal Birth Control (ABC)) விதிகளிலிருந்து (''பிடித்தல்-கருத்தடை-தடுப்பூசி போடுதல்-திருப்பி அனுப்புதல்') தெளிவாக வேறுபடுகிறது.


'பொது நலன்' என்கிற அடிப்படையில் உயர்நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை நியாயப்படுத்தியது. இனி, கைக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெறிநாய்க்கடி நோயால்  பாதிக்கப்படக்கூடாது என்றும் கூறியது.


"இந்த முழு நடவடிக்கையிலும் எந்தவிதமான உணர்வுகளும் சம்பந்தப்படக்கூடாது," என்று உத்தரவு கூறியதுடன், அதிகாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் தனிநபர் அல்லது அமைப்பு "கடுமையான நடவடிக்கையை" எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்தது.


ஆறு முதல் எட்டு வாரங்களில் 5,000 எண்ணிக்கையிலான நாய்களை வைத்திருக்கும் அளவிற்கான தங்குமிடங்களை உடனடியாக உருவாக்கவும், அவற்றில் உயிர்நேய நிலைமைகளை உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டது.


ஆகஸ்ட் 22: ஒழுங்குபடுத்தப்பட்ட நிர்வாகத்திற்கான  மாறுதல்.


ஆகஸ்ட் 22-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இடைக்கால உத்தரவில், நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்தப் பிரச்சினை தொடர்பான நீதிமன்றத்தின் அணுகுமுறையில் ஒரு பெரிய மாற்றத்தைச் சுட்டிக்காட்டியது. 


நாய்களை அவற்றின் பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் : முந்தைய உத்தரவின் 'விடுவிக்கக் கூடாது' என்கிற கொள்கையை நிறுத்தி வைத்த நீதிபதிகள், அதிகாரிகள் நிறுவப்பட்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று தெளிவுபடுத்தினர். பிடித்துச் செல்லப்படும் நாய்களுக்கு "கருத்தடை செய்யப்பட்டு, குடற்புழு நீக்கம் செய்யப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டு, அவை பிடிக்கப்பட்ட அதே பகுதியில்  மீண்டும் விடுவிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்திருந்தது. 


வெறிநாய்க்கடி நோய் உள்ள நாய்களை விடுவிக்கக் கூடாது : இருப்பினும், நீதிமன்றம் ஒரு முக்கியமான விதிவிலக்கை உத்தரவிட்டது. "வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்ட அல்லது வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நாய்களுக்கும், ஆக்ரோஷமான நடத்தையை வெளிப்படுத்தும் நாய்களுக்கும்" இந்தக் கொள்கை பொருந்தாது என்றும் கூறியது.


அத்தகைய தெருநாய்கள் தனித்தனி இடங்களில் வைக்கப்பட வேண்டும் என்றும், எந்த சூழ்நிலையிலும் தெருக்களில் விடுவிக்கப்படக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியது.


தெருக்களிலும் பொது இடங்களிலும் தெருநாய்களுக்கு உணவளிப்பதையும்  நீதிமன்றம் தடை செய்தது. ஒவ்வொரு நகராட்சி வார்டிலும் தெருநாய்களுக்கு உணவளிப்பதற்கென்று சில இடங்களை உருவாக்குமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அதற்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே நாய்களுக்கு உணவளிக்கும் நபர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று எச்சரித்தது.


"கட்டுப்பாடற்ற முறையில் தெருநாய்களுக்கு உணவளிப்பதால் ஏற்படும் விரும்பத்தகாத சம்பவங்களைத்" தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. குடியிருப்போர் நலச் சங்கங்கள் (Resident Welfare Association (RWAs)) நாய்களுக்கு உணவளிக்கும் இடங்களை தெருநாய்களுக்கு உணவளிப்பவர்களுடன் கலந்தாலோசித்து குறிப்பிட வேண்டும் என்று ஏற்கனவே விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாடு விதிகள் (Animal Birth Control (ABC)) பரிந்துரைக்கின்றன.


தேசிய தலைநகர் (டெல்லி) பகுதிக்கு மட்டுமல்ல, அகில இந்தியாவிற்கும் பொருந்தும்: நீதிபதிகள் குழு இந்த வழக்கின் எல்லையை டெல்லி-தேசிய தலைநகர் பகுதியைத் தாண்டி விரிவுபடுத்தியுள்ளனர்.


இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் வழக்கில் சேர்த்ததுடன், பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள இதேபோன்ற அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றும்படி உத்தரவிட்டது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள நகராட்சி அதிகாரிகளால் விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாடு விதிகளின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்துவருகிறது. 





ஆகஸ்ட் 11-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மாற்றப்படாதவை என்னென்ன?


மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை முழுமையாக ரத்து செய்யவில்லை.


* நாய்களுக்கான காப்பகங்கள் மற்றும் அடைக்கும் இடங்களை நகராட்சி அதிகாரிகள் உருவாக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் நடைமுறையில் உள்ளது. இந்த உள்கட்டமைப்பு தெருக்களில் விடமுடியாத ஆக்ரோஷமான அல்லது வெறி பிடித்த நாய்களைப் பராமரிக்கப் பயன்படுத்தப்படும்.


* நீதிமன்றத்தின் புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதற்கு எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்போ எந்தவிதமான இடையூறுகளையும்  ஏற்படுத்தக்கூடாது என்கிற தனது எச்சரிக்கையை நீதிமன்றம் மீண்டும் உறுதிபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.



Original article:

Share:

ஒரு விரிவான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) வேகம் பெற்றுள்ளது. ஆனால் அது இன்னும் ஒரு சோதனை நிகழ்வுதான் -அக்ஷய் ரௌட்

 தீவிரமாக திருத்தப்பட்ட தேர்தல் பட்டியல் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்,. அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையமும் இந்திய வாக்காளரின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.


பீகாரில் புதிய வாக்காளர் பட்டியலை உருவாக்கிய பிறகு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) இப்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மற்றொரு குழு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, ஒரு மாநிலம் தற்போது தேர்தல்களின் மத்தியில் உள்ளது.


சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) மூலம் பீகாரில் புதிய வாக்காளர் பட்டியலை உருவாக்கிய பிறகு, மற்றொரு குழுக்கள் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விரிவடைந்துள்ளது. பீகாரில் தற்போது தேர்தல் நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் (ECI), நவம்பர் 4, 2025 அன்று ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) தொடங்கியது. இது நாடு தழுவிய செயல்முறையின் (pan-India exercise) ஒரு பகுதியாகும். இது படிப்படியாக செய்யப்படுகிறது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கோவா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்கள் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் இந்தக் கட்டத்தில், அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் சில மாநிலங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால், குடியுரிமை பிரச்சினைகள் மற்றும் பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக அசாம் மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலிலும் அந்த மாநிலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் சேர்க்கப்படவில்லை.


வாக்காளர் கணக்கெடுப்புக்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9, 2025 அன்று வெளியிடப்படும். மேலும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும். இந்தியாவின் 75 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் இது 9-வது சிறப்பு தீவிர திருத்தம் (SIR) ஆகும். மேலும், 21 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும் முதல்  சிறப்பு தீவிர திருத்தம் ஆகும். ஜூன் 2025-ல், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்க முடிவு செய்தது. பீகாரில் பணிகள் முடிந்ததும் ஒவ்வொரு மாநிலத்தின் அட்டவணையும் தனித்தனியாக அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியது. சிறப்பு தீவிர திருத்த செயல்முறைக்கு போதுமான பணியாளர்களை வழங்கவும், இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள எந்த அலுவலர்களையும் மாற்ற வேண்டாம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.


ஒரே அளவு அனைவருக்கும் பொருந்தாது.


வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ், 51 கோடி வாக்காளர்கள் தீவிர மதிப்பாய்வின்கீழ் கொண்டு வரப்படுவார்கள் - நாட்டின் மொத்த வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், 321 மாவட்டங்கள் மற்றும் 1,843 சட்டமன்றத் தொகுதிகளில் பரவியுள்ளனர். இதில் 5.33 லட்சம் வாக்குச் சாவடிகள், அதே எண்ணிக்கையிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் (Booth Level Officers (BLOs)) மற்றும் அரசியல் கட்சிகளின் 7.64 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் இருப்பார்கள் - கட்சிகள் தங்கள் நலன்களைப் பாதுகாக்க ஆர்வமாக இருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிப்பைக் காண வேண்டும்.


18 தேசிய தேர்தல்கள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தேர்தல்களைக் கொண்ட இந்தியாவின் நீண்ட வரலாற்றில் இரண்டு தேர்தல்கள் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. வரவிருக்கும் சவால்களைப் பொறுத்தவரை இது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கும் சமமாகப் பொருந்தும். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தற்போது ஆளும் அமைப்புகள் SIR-ஐ மோசமான கண்ணோட்டத்தில் பார்க்கின்றன. 7.7 கோடி வாக்காளர்களைக் கொண்ட மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியல் புதுப்பிப்புக்கான எதிர்வினை மிகவும் கடுமையாக உள்ளது. மாநிலம் வங்கதேசத்துடன் பல எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. எனவே சட்டவிரோத நுழைவு மற்றும் குடியுரிமை போன்ற பிரச்சினைகள் முக்கிய கவலைகளாக உள்ளன. 15.44 கோடி வாக்காளர்கள் மற்றும் சிக்கலான சமூக நிலைமைகளைக் கொண்ட உத்தரபிரதேசத்தில், இந்த செயல்முறையும் கடினமாக இருக்கும். பீகாரில் வாக்காளர் பட்டியல் பணியைப் பாதித்த இடம்பெயர்வு சிக்கல்கள் மற்ற மாநிலங்களில் காணப்படவில்லை. முந்தைய வாக்காளர் பட்டியல் திருத்தங்களின் செயல்திறன் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடலாம், இது பணியின் அளவை தீர்மானிக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கடுமையான தேசிய விதிகளைப் பின்பற்றினாலும், ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவமான சூழ்நிலையைக் கையாள உள்ளூர் தேவைக்கேற்ப மாற்றங்கள் (Local customisation) தேவைப்படலாம்.


எளிதாக அணுகக்கூடிய வடிவம்


20-ஆண்டுகளுக்குப் பிறகு பீகார் முதல் மாநிலத்தில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பயிற்சி கடினமான பணியாக இருந்தது. மேலும், இந்த பயிற்சி எதிர்ப்புகளையும் சந்தேகங்களையும் எதிர்கொண்டது. இப்போது அடித்தளக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. யார் வாக்களிக்கலாம் என்பதை வரையறுக்கும் அரசியலமைப்பின் பிரிவு 326, தேர்தல்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதைக் கையாளும் பிரிவு 324 போலவே முக்கியமானதாகி வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்பது ஒரு சட்டப்பூர்வமான மற்றும் செல்லுபடியாகும் செயல்முறையாகும். ஆனால் அது உண்மையான வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எளிதாக முடிக்க போதுமான நேரத்தை வழங்க வேண்டும்.


இந்த செயல்முறை குடிமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இருவரையும் திருப்திப்படுத்தும் அளவுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தெளிவாகக் கூறியுள்ளது. கணக்கெடுப்பின்போது வாக்காளர்களிடமிருந்து எந்த ஆவணங்களும் சேகரிக்கப்படாது. இது ஆவணங்களைக் கேட்கும்போது கவலைப்படும் மில்லியன் கணக்கான சாதாரண வாக்காளர்களுக்கு உறுதியளிக்கும். கையொப்பமிட்ட கணக்கெடுப்பு படிவங்கள் பெறப்பட்ட அனைவரின் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, சில பகுதிகள் முன்னதாக நிரப்பப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.


முந்தைய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பதிவுகளுடன் பொருந்தாத பெயர்கள் உள்ள வாக்காளர்களுக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டு, பட்டியலில் இருந்து அவர்களைச் சேர்க்கலாமா அல்லது நீக்கலாமா என்பதை முடிவு செய்யும் பதிவு அதிகாரியைச் சந்திக்க வாய்ப்பு வழங்கப்படும். வாக்குச்சாவடி அலுவலர்கள் ஒவ்வொரு வாக்காளரின் வீட்டிற்கும் மூன்று முறை வருகை தருவார். இது நம்பிக்கையளிக்கிறது. வழக்கமான படிவங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் : புதிய சேர்க்கைக்கான பழக்கமான படிவம் 6, நீக்கத்திற்கான படிவம் 7 மற்றும் திருத்தத்திற்கான படிவம் 8 ஆகியவை நடைமுறையில் இருக்கும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை விமர்சிப்பவர்கள் தாங்கள் செய்யக்கூடிய மாற்றங்களில் திருப்தி அடைய காரணங்கள் உள்ளன; அவர்கள் வெறுப்பு அல்லது கற்பனை பயம் இல்லாமல் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


வாக்காளர் பட்டியல் மேலாண்மை, பெரும்பாலும் ஒரு தொழில்நுட்பப் பணியாகும். ஆனால், சட்டவிரோத வாக்களிப்பு அல்லது வாக்குகளை மறுப்பது போன்ற விஷயங்களில் மக்கள் அதிகமாக கவனம் செலுத்தும்போது அது சிக்கலாகிவிடும். அவை பெரும்பாலும் மிகைப்படுத்தப்படுகின்றன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம். அடிப்படையில் இது ஒரு தூய்மைப்படுத்தும் பயிற்சியாகும். இந்த முறை, இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த வாக்காளர் பட்டியல் சீராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எந்த ஆச்சரியமும் இல்லை. பெரும்பாலான பெயர்கள் இறப்பு, இடம்பெயர்வு, இல்லாமை அல்லது நகல் காரணமாக நீக்கப்படும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை வேறுபட்டது. ஆனால், பீகார் தேர்தலின் முதல் கட்டத்தில் காணப்பட்டபடி, வாக்காளர் பதிவு மற்றும் வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளுடன் இணைந்து செயல்படுகிறது. பட்டியலை புதுப்பிக்கும்போது தகுதியுள்ள எந்த வாக்காளரும் வாக்களிக்கும் உரிமையை இழக்காமல் இருப்பதை உறுதிசெய்ய உச்சநீதிமன்றமும் பிற அலுவலர்களும் விரும்புகின்றனர். புதிய வாக்காளர்களை எளிதாக பதிவு செய்ய உதவும் வகையில் குறைந்தது 30 வெற்றுப் படிவங்களை (blank forms) வைத்திருக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


விவாதத்திற்கு முந்தைய ஒரு பிரச்சினை


வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது ஒரு நடைமுறைக்கு மாறானது மற்றும் விவாதத்திற்கு அப்பாற்பட்டது. தீவிரமாக திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் இப்போது வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்குப்பதிவு பெட்டி வரை ஒரு யதார்த்தமாகிவிட்டது. அரசியல் கட்சிகள் தங்கள் அணுகுமுறையை மாற்றியுள்ளன. அதை முழுமையாக எதிர்ப்பதற்குப் பதிலாக, அவர்கள் இப்போது அதை ஏற்கவில்லை என்றாலும், சட்டப்பூர்வ விருப்பங்களை ஆராய்ந்தாலும், செயல்முறையைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், தகுதியான வாக்காளர்கள் விடுபடுவது குறித்து கட்சிகள் உண்மையிலேயே கவலைப்பட்டால், அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த  செயல்முறையில் அவர்கள் பங்கேற்க வேண்டும். காசோலைகள், இருப்புக்கள் மற்றும் குறைகளைத் தீர்த்தல் (grievance mitigation) ஆகியவற்றின் பரவலாக்கப்பட்ட கட்டமைப்பைப் பயன்படுத்த வேண்டும்.


உச்ச நீதிமன்றத்தின் SIR செயல்முறையின் சட்டபூர்வத்தன்மைக்கான அங்கீகாரத்தை விட, பீகார் செயல்முறையில் ‘மேல்முறையீடுகள் இல்லாநிலை’ மற்றும் கட்சி நிர்வாகிகளால் காணப்பட்ட தளமட்ட ஒத்துழைப்பு (மேல்தட்ட அரசியல் அறிக்கைகள் இருந்தபோதிலும்) ஆகியவை தேர்தல் நிர்வாகிகளை சிறப்பு தீவிர திருத்தத்தை முன்னெடுப்பதில் மேலும் நம்பிக்கையுடன் உணரச் செய்யும். மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலிருந்து சாத்தியமான எதிர்ப்பு குறித்து கேட்கப்பட்டபோது, தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார், அரசியலமைப்பு பாத்திரங்களும் கடமைகளும் கொண்ட கட்டமைப்பைச் சுட்டிக்காட்டி, அதன் தடையற்ற செயல்பாட்டிற்கு நம்பிக்கை தெரிவித்தார்.


வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்ததின் அடிப்படைகள் சரிபார்க்கப்பட்டிருந்தாலும், அதை செயல்படுத்துவதில் தடைகள் இருக்கும். இங்கு, இந்திய தேர்தல் ஆணையம் (ECI) கவனமாகவும் சிந்தனையுடனும் செயல்பட வேண்டும். அதன் நீண்டகால திறமைக்கான நற்பெயர், அது வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறுவதைத் தொடர வேண்டும் என்பதாகும். இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் வெற்றி பெற்றது. மேலும், நாடு முழுவதும் (pan-India) நடைபெற இருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்  அதன் திறனுக்கான மற்றொரு சோதனையாக இருக்கும்.


அக்‌ஷய் ரௌத் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் ஆவார்.



Original article:

Share: