தீர்ப்பாயங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் இடையேயான முரண்பாடு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? -வினீத் பல்லா

 தொடரும் வழக்கு இந்தியா முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களின் செயல்பாட்டை பாதித்துள்ளது, இதற்கு முன்பு உச்சநீதிமன்றம் நீதித்துறை சார்ந்த அமைப்புகள் (quasi-judicial bodies) “கிட்டத்தட்ட செயலிழந்து” விட்டதாக கருத்து தெரிவித்திருந்தது.


தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டம், 2021-ஐ எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் விசாரணையில், கடந்த வாரம் கடுமையான விவாதங்கள் நடந்தன. தீர்ப்பாயங்களின் கட்டுப்பாடு மற்றும் நிர்வாகம் தொடர்பாக நீதித்துறைக்கும் நிர்வாகத்திற்கும் இடையே நீண்டகாலமாக நீடித்துவரும் மோதலை இந்த விவாதம் மீண்டும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.


கடந்த வியாழக்கிழமை, நவம்பர் 6-ஆம் தேதியன்று  இந்திய தலைமை நீதிபதி (Chief Justice of India (CJI)) பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கைக்கு கடும் அதிருப்தி தெரிவித்தது. இந்த நடவடிக்கையை "நீதிமன்றத்திற்கு மிகவும் நியாயமற்றது" என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மை சட்ட ஆலோசகர் (Attorney General) ஆர். வெங்கடரமணிக்கு இதற்கு முன்பு இரண்டு முறை இடமளிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.


நவம்பர் 23-ஆம் தேதி ஓய்வு பெறவிருந்த தலைமை நீதிபதி, இந்தக் கோரிக்கையின் நேரத்தையும் கேள்வி எழுப்பினார். "(நவம்பர்) 24-ஆம் தேதிக்குப் பிறகு நீங்கள் அதைத் தொடர விரும்பினால், நீங்கள் வெளிப்படையாக எங்களிடம் சொல்லுங்கள்," என்று அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்னர், கடந்த திங்கட்கிழமை நடந்த விசாரணையின்போது, வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று கடைசி நிமிடத்தில் ஒன்றிய அரசு விடுத்த கோரிக்கையை, தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி கே.வி. சந்திரன் அடங்கிய அமர்வைத் தவிர்ப்பதற்கான ஒரு "தந்திரம்" என்று விவரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரு அவசரச் சட்டம், ஒரு சட்டம் மற்றும் ஒரு சவால்


தற்போது நடந்துவரும் வழக்கு, நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களைப் பாதித்துள்ளது. தீர்ப்பாயங்கள் என்பவை வரிவிதிப்பு மற்றும் பெருநிறுவனச் சட்டம் முதல் நிர்வாக விஷயங்கள் வரையிலான பல்வேறு துறைகளில் உள்ள சர்ச்சைகளுக்கு விரைவான மற்றும் சிறப்புத் தீர்வை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நீதித்துறை சார்ந்த (quasi-judicial) அமைப்புகளாகும். இதன் மூலம் மற்ற நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் பணிச்சுமை குறைக்கப்படுகிறது.


செப்டம்பர் மாதம் 2021-ஆம் ஆண்டில், மதராஸ் வழக்கறிஞர் சங்கம் (Madras Bar Association (MBA)), தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை "சட்டமன்ற ரீதியாக மீறுவதற்கான" நேரடி முயற்சி என்றும், அது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் தெரிவித்தது. 


ஒரு முந்தைய அவசரச் சட்டத்தின் அதே விதிகளின் மீது இந்தச் சவால் கவனம் செலுத்தியது. அந்தச் சட்டம் உச்சநீதிமன்றத்தால் ஜூலை 2021-ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டிருந்தது. தீர்ப்பாய உறுப்பினர்களின் பதவிக்காலத்தை நான்கு ஆண்டுகளாக நிர்ணயித்தது மற்றும் அவர்கள் நியமனத்திற்கான குறைந்தபட்ச வயதை 50 ஆண்டுகளாக நிர்ணயித்தது ஆகியவைதான் மிகவும் சர்ச்சைக்குரிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன. 


நீதிமன்றம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கண்டறிந்த அதே சட்டவிதிகளை மீண்டும் அமல்படுத்துவதன் மூலம், நீதிமன்றம் சுட்டிக்காட்டிய சட்ட அடிப்படையையோ அல்லது "குறைபாட்டையோ" நீக்காமல், நாடாளுமன்றம் ஒரு நீதித்துறை தீர்ப்பை ரத்து செய்துள்ளது என்று சங்கம் வாதிட்டது. இது நீதித்துறை சுதந்திரம் மற்றும் அதிகாரப் பிரிவினையின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறுகிறது என்றும்  வலியுறுத்தியுள்ளது


தீர்ப்பாயங்கள் மீதான நீண்டகாலப் போராட்டத்திற்குப் பின்னால்


இந்த வழக்கு, 2017-ஆம் ஆண்டு நிதிச் சட்டத்துடன் தொடங்கிய சட்டமன்ற மற்றும் நீதித்துறை விவாதத்தின் சமீபத்திய அத்தியாயமாகும்.  தீர்ப்பாயங்களுக்கான விதிகளை வகுக்க அந்தச் சட்டம் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளித்தது. அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட விதிகள், நீதித்துறை சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக்கூறி, 2019-ஆம் ஆண்டு ரோஜர் மேத்யூ வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வால் அந்தச் சட்டவிதிகள் ரத்து செய்யப்பட்டன.


2020-ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு புதிய விதிகளை அறிவித்தபோது, அவை மீண்டும் மெட்ராஸ் வழக்கறிஞர் சங்கத்தின்  (Madras Bar Association (MBA)) சார்பில் அதை எதிர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில், தீர்ப்பாய உறுப்பினர்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த ஐந்து ஆண்டு பதவிக்காலம் உட்பட உச்சநீதிமன்றம் பல திருத்தங்களைப் பரிந்துரைத்தது. குறுகிய பதவிக்காலம் தகுதியான வேட்பாளர்களை ஊக்கப்படுத்தாது என்றும் நிர்வாகத் தலையீட்டை அதிகரிக்கும் என்றும் வாதிடப்பட்டது. 


இருப்பினும், ஒன்றிய அரசு ஏப்ரல் மாதம் 2021-ஆம் ஆண்டில் ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. அந்தச் சட்டமானது, பதவிக்காலத்தை நான்கு ஆண்டுகளாக நிர்ணயித்ததுடன், நியமனத்திற்கான குறைந்தபட்ச வயதை 50 ஆண்டுகளாகவும் நிர்ணயித்து சட்டம் இயற்றியது குறிப்பிடத்தக்கது. ஆனால், மூன்று மாதங்களுக்குப் பிறகு, இந்த இரண்டு விதிகளையும் “தன்னிச்சையானவை” மற்றும் அதிகாரப் பிரிவினைக்கு முரணானவை என்று கூறி உச்சநீதிமன்றம் ரத்து செய்ததும் தீர்ப்பாயம் குறித்த விதிமுறைகளில் மோதலுக்கு வழிவகுத்தது.


இதற்குப் பதிலடியாக, நீதிமன்றம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்த அதே விதிகளை மீண்டும் சட்டமாக்கி, நாடாளுமன்றம் ஒரு மாதம் கழித்து தீர்ப்பாயச் சீர்திருத்தச் சட்டத்தை (Tribunals Reforms Act) நிறைவேற்றியது மீண்டும் விவாதத்தைக்  கிளப்பியது.


வாதங்கள்


மெட்ராஸ் வழக்கறிஞர் சங்கம் தலைமையிலான மனுதாரர்கள், நான்கு ஆண்டு பதவிக்காலம் தீர்ப்பாய உறுப்பினர்களை பாதுகாப்பற்றவர்களாகவும், நிர்வாக அழுத்தத்திற்கு ஆளாகக்கூடியவர்களாகவும் ஆக்குகிறது என்று வாதிட்டனர். மேலும், 50 வயது வரம்பு வெற்றிகரமான இளைய வழக்கறிஞர்களை பரிசீலிப்பதில் இருந்து தன்னிச்சையாக விலக்குகிறது என்றும், ஒருவர் குறைந்த வயதில் உயர்நீதிமன்ற நீதிபதியாகிவிட முடியும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.


ஒன்றிய அரசு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியதாவது, வயது வரம்பு வேட்பாளர்களுக்குப் போதுமான அனுபவம் இருப்பதை உறுதி செய்கிறது என்றும், நான்கு வருட பதவிக்காலம், மீண்டும் நியமனம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளுடன் இணைந்து, போதுமான பாதுகாப்பை வழங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. 


மேலும், இந்தச் சட்டம் பாராளுமன்றத்தின் வரம்பிற்கு உட்பட்ட “முழுமையான கொள்கை” விஷயம் என்று ஒன்றிய அரசு தெரிவித்தது. இந்த விதிகளை ரத்து செய்வதன் மூலம், நீதித்துறை அதிகாரப் பிரிவினையை மீறுவதாகக் கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


பின்விளைவு


நியமனங்கள் மற்றும் சேவை நிபந்தனைகள் குறித்த மோதல்கள் தீர்ப்பாயங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதில் நீண்ட தாமதத்தை ஏற்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக, டிசம்பர் மாதம் 2022-ஆம் ஆண்டின் முதல் அரசாங்க தரவு, முக்கிய தீர்ப்பாயங்களில் குறிப்பிடத்தக்க காலியிடங்களைக் காட்டியது: அனுமதிக்கப்பட்ட 32 நபர்களைக் கொண்ட தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திலும், அனுமதிக்கப்பட்ட 34 நபர்களைக் கொண்ட ஆயுதப்படை தீர்ப்பாயத்திலும் தலா 24 காலியிடங்கள் இருந்தன.


வருமான வரி மேல்முறையீட்டுச் சட்டத் தீர்ப்பாயத்தில், 63 நீதித்துறை உறுப்பினர் பதவிகளில் 18 பதவிகள் காலியாக இருந்தன. ரயில்வே உரிமைகோரல் தீர்ப்பாயத்தில், துணைத் தலைவர் (நீதித்துறை) பதவிகள் இரண்டும் நிரப்பப்படவில்லை, அதேபோல் 20 நீதித்துறை உறுப்பினர் பதவிகளில் 16 பதவிகளும் நிரப்பப்படவில்லை. இதேபோல், ஒன்றிய அரசு தொழில் தீர்ப்பாயம், தொழிலாளர் நீதிமன்றங்கள் மற்றும் தேசிய தொழில் தீர்ப்பாயங்களில், அனுமதிக்கப்பட்ட பலமான 22 பதவிகளுக்கு எதிராக 13 தலைமை அலுவலர்கள் மட்டுமே இருந்தனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. 

 

நியமனங்களில் ஏற்படும் தாமதங்கள் தீர்ப்பாயங்களை "நடைமுறையில் செயலற்றதாக" ஆக்கியுள்ளதாக உச்சநீதிமன்றமே முன்பு கருத்து தெரிவித்துள்ளது.



Original article:

Share:

பண்ட வழித்தோன்றல்கள் என்றால் என்ன? -குஷ்பு குமாரி மற்றும் ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


— டிஜிட்டல் தங்க திட்டங்கள் பெரும்பாலும் உண்மையான தங்கத்திற்கு  மாற்றான முதலீடுகளாக விளம்பரப்படுத்தப்படுவதாக ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அவை ஒழுங்குபடுத்தப்படாதவையாகவே இருக்கின்றன. மேலும், எந்தவொரு சட்டப்பூர்வ ஒழுங்குமுறை வரம்பிற்கும் உட்பட்டவை அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அதிக ஆபத்துகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளது.


— டிஜிட்டல் தங்கம் என்பது விலைமதிப்பற்ற உலோகத்தை உண்மையில் உடமையில் கொள்ளாமல் தங்கத்தை வாங்குவதைக் குறிக்கிறது. டிஜிட்டல் தங்கத்தின் விலை உண்மையான தங்கத்தின் விலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தங்கம் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் (blockchain technology) பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. இது முதலீட்டாளர்கள் தங்கத்தை மின்னணு முறையில்  வாங்க, விற்க மற்றும் சேமிக்க அனுமதிக்கிறது.


— டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது எளிதானது மற்றும் அவசர காலங்களில் அதை விரைவாக விற்கவும் முடிகிறது. பெரிய முதலீடுகள் தேவைப்படும் பாரம்பரிய தங்கக் கொள்முதல்களைப் போலன்றி, டிஜிட்டல் தங்கம் அல்லது மின்னணு-தங்க திட்டங்கள் (e-gold products) முதலீட்டாளர்கள் சிறிய அளவுகளில் விலைமதிப்பற்ற உலோகத்தை சொந்தமாக வாங்கிக்கொள்ள அனுமதிக்கின்றன.


—இது சேமிப்பு பிரச்சனையை (storage hassle) நீக்குகிறது. மேலும், உண்மையான தங்கத்துடன் தொடர்புடைய மிகப்பெரிய சவாலாக  உள்ளது. டிஜிட்டல் தங்கம் முதலீட்டாளர்கள் தேவைப்படும்போது தங்கள் முதலீட்டை உண்மையான உலோகத் தங்கமாக மாற்ற அனுமதிக்கிறது. இதை தங்க நாணயங்கள், கட்டிகள் அல்லது நகைகளாக மாற்றிக் கொள்ளலாம். 


— சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (SEBI), பல டிஜிட்டல் மற்றும் இணைய தளங்கள் முதலீட்டாளர்களுக்கு டிஜிட்டல் தங்கம் அல்லது மின்னணு-தங்க திட்டங்களில் முதலீடு செய்யும் வசதியை வழங்குவதைக் கவனித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தச் சலுகைகள் பெரும்பாலும் வசதியானதாகவும், உலோகத் தங்கத்தை வைத்திருப்பதற்கான மாற்று வழிகளாகவும் சந்தைப்படுத்தப்படுகின்றன.

— ஒழுங்குபடுத்தப்படும் தங்கம் தொடர்பான பொருட்களிலிருந்து டிஜிட்டல் தங்கப் பொருட்கள் வேறுபட்டவை என்று சந்தை ஒழுங்குமுறை ஆணையம்  கூறியுள்ளது. இந்தப் பொருட்கள் பத்திரங்களாகவோ அல்லது பண்ட வழித்தோன்றல்களாகவோ, ஒழுங்குபடுத்தப்படுவதாகவோ இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

—  சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் கூற்றுப்படி, டிஜிட்டல் தங்கம் முற்றிலும் ஒழுங்குமுறை வரம்பிற்கு வெளியே செயல்படுகிறது. இந்தப் தங்கப் பொருட்கள் முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்துகளை விளைவிக்கக்கூடும் என்கின்றனர். மேலும், இது எதிர்தரப்பினரின் மற்றும் செயல்பாட்டு அபாயங்களுக்கு முதலீட்டாளர்களை ஆளாக்கக்கூடும் என்றும் அது கூறியுள்ளது.

— எந்தவொரு ஆபத்தையும் தவிர்க்க, முதலீட்டாளர்கள் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தால் கட்டுப்படுத்தப்படும் தங்கப் பொருட்களில் மட்டும் முதலீடு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

— பரிவர்த்தனை வர்த்தகப் பண்டக வழித்தோன்றல் ஒப்பந்தங்கள் (exchange traded commodity derivative contracts), பரஸ்பர நிதிகள் (mutual funds) வழங்கும் தங்க இ.டி.எஃப்-கள் (Gold ETFs), மற்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்யக்கூடிய மின்னணுத் தங்கப் பற்றுச்சீட்டுகள் (Electronic Gold Receipts - EGRs) போன்ற பல்வேறு ஒழுங்குபடுத்தப்பட்ட தங்க திட்டங்கள் மூலம், சந்தை ஒழுங்குமுறை ஆணையமானது, தங்கம் மற்றும் தங்கம் சார்ந்த பொருட்களில் முதலீடுகளைச் சாத்தியமாக்கியுள்ளது.


— இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (Securities and Exchange Board of India (SEBI)) பதிவுசெய்யப்பட்ட இடைத்தரகர்கள் மூலம் இந்தத் தயாரிப்புகளில் முதலீடுகள் செய்யப்படலாம் மற்றும் இவை சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஒழுங்குமுறைக் கட்டமைப்புகளால் நிர்வகிக்கப்படுகின்றன.


— பன்முக பொருட்கள் பரிவர்த்தனை மையம் (Multi Commodity Exchange (MCX)) மற்றும் தேசிய பங்குச் சந்தை (National Stock Exchange (NSE)) போன்ற ஒழுங்குபடுத்தப்பட்ட பரிவர்த்தனைகளில் வர்த்தகம் செய்யப்படும் பண்டங்களின் வழித்தோன்றல்கள் (Commodity derivatives), கடுமையான இடர் மேலாண்மை அமைப்புகள், வரம்பு கட்டமைப்புகள் (margin frameworks), மற்றும் தினசரி சந்தை விலை தீர்வுகளால் நிர்வகிக்கப்படுகின்றன.


உங்களுக்குத் தெரியுமா?


— சவரன் தங்கப் பத்திரங்கள் (Sovereign gold bond (SGBs)) என்பது அரசாங்கத்தின் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கியால்  வழங்கப்படும் கடன் பத்திரங்கள் ஆகும். ஒவ்வொரு அலகும் ஒரு கிராம் தங்கத்தைக் குறிக்கும். இந்தப் பத்திரங்கள் இரண்டாம் நிலை சந்தையில் வர்த்தகம் செய்வதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன. இதனால் முதலீட்டாளர்களுக்கு மூலதன ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.


— இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India (SEBI)) இந்திய அரசாங்கத்தின் தீர்மானத்தின் மூலம் ஏப்ரல் 12-ஆம் தேதி, 1988-ஆம் ஆண்டு  சட்டபூர்வமற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டது. இது 1992-ஆம் ஆண்டில் சட்டபூர்வமான அமைப்பாக நிலைநாட்டப்பட்டது மற்றும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரிய சட்டம், 1992 (1992-ன் 15)-ன் விதிகள் ஜனவரி 30-ஆம் தேதி  1992-ஆம் ஆண்டு  நடைமுறைக்கு வந்தன.


— இந்தியாவில் பண்டப் பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படும் பொருட்களை கடினப் பொருட்கள் (Hard Commodities) மற்றும் மென்மையானப் பொருட்கள் (Soft Commodities) என வகைப்படுத்தலாம். கடினப் பொருட்கள் என்பதில் உலோகங்கள் (metals) மற்றும் ஆற்றல் (energy) ஆகியவை அடங்கும். மென்மையானப் பொருட்கள் என்பவை வேளாண்மை மற்றும் வேளாண் உற்பத்தி பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன.


Original article:

Share:

கே.எஸ். புட்டசாமி வழக்கின் தீர்ப்பு பற்றி . . . -குஷ்பூ குமாரி, ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


— வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) தொடர்பான சவால்களை மறு ஆய்வு செய்யும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வின் ஒரு பகுதியாக இருக்கும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி, இந்த செயல்முறை பரவலாகக் கிடைக்கும் தரவைப் பயன்படுத்துகிறது. தனிநபரைப் பொருட்படுத்தாமல் இந்தத் தரவை எந்த அமைப்பும் அணுகலாம். இது தனிப்பட்ட தனியுரிமை மற்றும் இந்திய குடிமக்களின் தரவுகளைப் பாதுகாப்பது குறித்த கவலைகளை எழுப்புகிறது. இது இரு தரப்பினருக்கும் இடையிலான தகராறு அல்ல, மாறாக பலரை வெவ்வேறு வழிகளில் பாதிக்கிறது என்று கூறினார்.


— 2003-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை இயந்திரம் படிக்கக்கூடிய வடிவத்தில் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்து வருவதாக, தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜனநாயக உரிமைகளுக்கான சங்கம் (Association for Democratic Rights (ADR)) சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் நீதிமன்றத்தில் தெரிவித்தபோது, ​​நீதிபதி பாக்சி இந்தக் கருத்தைத் தெரிவித்தார். இந்த வழியில் பட்டியலை வழங்குவது எந்தத் தீங்கும் விளைவிக்காது என்றும், இயந்திரம் படிக்கக்கூடிய வடிவத்தில் வைத்திருப்பது யாரையும் பட்டியலைத் திருத்த அனுமதிக்காது என்று நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்விடம் வழக்கறிஞர் கூறினார்.

- இல்லையெனில், வாக்காளர்கள் தங்கள் விவரங்களைக் கண்டறிய முழு பட்டியலையும் சரிபார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டபோது, ​​தேர்தல் ஆணையத்தின் பாதுகாப்பான தரவுத்தளத்தில் தங்கள் சொந்த தரவை அணுக ஒவ்வொரு நபருக்கும் கடவுச்சொல்லை வழங்குவது ஒரு எளிய தீர்வாக இருக்கலாம் என்று நீதிபதி பாக்சி கூறினார். இந்த வழியில், தனிநபர்கள் தங்கள் விவரங்களைச் சரிபார்த்து, சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) போது கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். இந்த யோசனையை பரிசீலித்து தங்கள் கருத்தைத் தெரிவிக்குமாறு அவர் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டார். பட்டியலில் இருந்து நகல் பெயர்களை நீக்க மென்பொருளைப் பயன்படுத்த வேண்டும் என்ற பிரசாந்த் பூஷனின் பரிந்துரையையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. நீதிபதி சூர்யா காந்த், "அது ஒரு நல்ல யோசனை, அது ஒரு பிரச்சனையாக இருக்கக்கூடாது" என்று கூறி, தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டார். 


உங்களுக்குத் தெரியுமா?


— அரசியலமைப்பின் பிரிவு 324(1), நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களுக்கான "கண்காணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடு" அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்குகிறது.


— மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் பிரிவு 21(3)-ன் கீழ், தேர்தல் ஆணையம் "எந்த நேரத்திலும்... எந்தவொரு தொகுதிக்கும் அல்லது ஒரு தொகுதியின் ஒரு பகுதிக்கும் அது தேவையாக நினைக்கும் வகையில் வாக்காளர் பட்டியலை சிறப்புத் திருத்த பணிகளை செய்ய உத்தரவிடலாம்".


— 1960ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகள், தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் போது, ​​வாக்காளர் பட்டியலை முழுமையாக, பகுதியளவு அல்லது இரண்டின் கலவையாக மூன்று வழிகளில் புதுப்பிக்க முடியும் என்று கூறுகிறது. தீவிர திருத்தத்தில், வாக்காளர் பட்டியல் புதிதாகத் தயாரிக்கப்படுகிறது. சுருக்க திருத்தத்தில், ஏற்கனவே உள்ள பட்டியலில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் மட்டுமே செய்யப்படுகின்றன.


— ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு சுருக்கத் திருத்தங்கள் (Special summary revisions) நடைபெறுகின்றன. மேலும், ஒவ்வொரு மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கும் முன்பு வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும். 1952-56, 1957, 1961, 1965, 1966, 1983-84, 1987-89, 1992, 1993, 1995, 2002, 2003 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் தீவிர திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


அம்சம்

சுருக்கத் திருத்தம் (Summary Revision)

சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR))

நோக்கம்

தற்போதுள்ள தேர்தல் பட்டியலில் சேர்த்தல், நீக்குதல் அல்லது திருத்தங்கள் போன்ற சிறிய மாற்றங்களை இந்தத் திருத்தத்தில் செய்யலாம்.

துல்லிய தன்மைக்காக தேர்தல் பட்டியலை முழுமையாக மறு ஆய்வு செய்து புதிதாக இந்தத் திருத்தத்தில் சேர்க்கலாம்.

திருத்தம் எப்போது மேற்கொள்ளப்படும்

ஒவ்வொரு ஆண்டும் மற்றும் ஒவ்வொரு மக்களவை அல்லது மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் செய்யப்படும்.

வழக்கமாக அல்ல; தேவைக்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுகள் அல்லது குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் இந்தத் திருத்தம் செய்யப்படும்.

செயல்முறை

விரைவான செயல்முறை; புதுப்பிப்புகள் மட்டும் செய்யப்படும்.

விரிவான மற்றும் முழுமையான செயல்முறை; முழு பட்டியலும் மீண்டும் சரிபார்க்கப்படும்.

வரம்பு

வரையறுக்கப்பட்ட மாற்றங்கள் (புதிய வாக்காளர்கள், திருத்தங்கள், நீக்குதல் போன்ற செயல்முறைகளாகும்.

ஒரு தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர் தரவுகளின் முழு அளவிலான சரிபார்ப்பாகும்.




Original article:

Share:

வெப்பமண்டலப் புயல்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடாக இந்தியா இருப்பதற்கான காரணம் என்ன? -அபினவ் ராய்

 இந்திய துணைக்கண்டம் ஏன் அடிக்கடி வெப்பமண்டல புயல்களை  எதிர்கொள்கிறது? காலநிலை மாற்றம் மற்றும் கடல் மட்ட உயர்வு இந்தியாவின் புயல் பாதிப்பை எவ்வாறு அதிகரிக்கிறது? சமீபத்திய ஆண்டுகளில், மேம்படுத்தப்பட்ட முன்னறிவிப்பு மற்றும் முன்னேற்பாடுகள், புயல் தொடர்பான உயிரிழப்புகளைக் குறைத்துள்ளதா?


கடந்த மாதம் ஆந்திரப் பிரதேசக் கடற்கரையில் மோந்தா புயல் மணிக்கு சுமார் 100 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்ததது. புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக பயிர்கள், மின்சாரம், சாலைகள் மற்றும் போக்குவரத்து கடுமையாகச் சேதமடைந்தன.


ஆந்திரப் பிரதேசத்தில் மட்டும் 87,000 ஹெக்டேருக்கு மேல் பயிர்கள் சேதமடைந்தன.  மேலும், ஒடிசா, தமிழ்நாடு, தெலங்கானா, பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்த சேதம் 6,384 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரப் பிரதேச மாநிலம் ஒன்றிய அரசிடம் இருந்து உடனடி நிவாரணமாக 901.4 கோடி ரூபாயைக் கோரியுள்ளது.


தீவிர வானிலை நிகழ்வுகள் (வெப்ப அலைகள், குளிர் அலைகள், வெப்பமண்டல புயல்கள், வெள்ளம், மின்னல், கனமழை போன்றவை) குறித்த ஆய்வின்படி, 1970–2019 ஆண்டுகளுக்கு இடையில் நிகழ்ந்த உயிரிழப்புகளில் வெப்பமண்டல புயல்கள் மட்டுமே 28.6 சதவிகிதத்திற்குக் காரணமாக இருந்துள்ளன. 'இந்தியாவில் தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் நீண்டகால மாற்றங்கள் குறித்த ஒரு மதிப்பீடு: 1970-2019 என்ற தலைப்பிலான 50 ஆண்டுகால தரவுகளின் ஆய்வு, இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (India Meteorological Department (IMD)) தரவுகளை அடிப்படையாகக் கொண்டது.


புயல் என்றால் என்ன, அதன் பல்வேறு வகைகள், உருவாக்கம் மற்றும் வெப்பமண்டல புயல்களுக்கு இந்தியா ஏன் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது என்பதைப் பற்றிப் புரிந்துகொள்வோம்.


புயல்களும் அவற்றின் வகைகளும்


புயல்கள் என்பவை ஒருவித வளிமண்டல இடையூறுகள் ஆகும். இது குறைந்த காற்று அழுத்த மையத்தைச் சுற்றிச் சுழல்கிறது. வெப்பமண்டலப் புயல்கள் உருவாவதற்கும், அவற்றின் தீவிரம் அதிகரிப்பதற்கும் தேவையான ஆற்றலின் ஆதாரம், வெப்பமான கடல் நீரால் உருவாகும் வெப்பமும் ஈரப்பதமும் ஆகும்.


வட கோளத்தில் (Northern Hemisphere), காற்றின் சுழற்சி திசை எதிர் கடிகார திசையில் இருக்கும், அதேசமயம் தென் கோளத்தில் (Southern Hemisphere), அது கடிகார திசையில் சுழல்கிறது. அவற்றின் இருப்பிடத்தின் அடிப்படையில், புயல்கள் வெப்பமண்டலப் புயல்கள் என்றும் (வெப்பமான வெப்பமண்டலக் கடலில் உருவாகுபவை), வெப்பமண்டலத்திற்கு அப்பாற்பட்ட புயல்கள் என்றும் (மிதவெப்ப மண்டலம் மற்றும் உயர்-அட்சரேகைப் பகுதிகளில் ஏற்படுபவை) வகைப்படுத்தப்படுகின்றன.


வெப்பமண்டலப் புயல்கள் உலகெங்கிலும் வெவ்வேறு பெயர்களில் அறியப்படுகின்றன. அட்லாண்டிக்கில் சூறாவளிகள் (Hurricanes), சீனாவில் டைஃபூன்கள் (Typhoons), மற்றும் ஆஸ்திரேலியாவில் வில்லி-வில்லிஸ் (Willy-willies) என்று அழைக்கப்படுகின்றன. இந்திய நிலப்பரப்பின் பெரும்பகுதி மற்றும் சுற்றியுள்ள வட இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கோடுக்கும் (equator) கடக ரேகைக்கும் (tropic of cancer) இடையில் அமைந்துள்ளதால் மிகவும் பேரழிவு தரும் வெப்பமண்டலப் புயல்களுக்கு ஆளாகிறது.


வெப்பமண்டல புயல் எவ்வாறு உருவாகிறது?


வெப்பமண்டலப் புயல்களானது பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள (5°-20° வடக்கு மற்றும் தெற்கு அட்சரேகைகள்) வெப்பமான கடல்களில் உருவாகின்றன. இவை உருவாகப்  பின்வரும் நிபந்தனைகள் தேவைப்படுகின்றன:


1. கடல் மேற்பரப்பு வெப்பநிலை (Sea Surface Temperature (SST)) சுமார் 27℃ அல்லது அதற்கு மேல் (60–70 மீட்டர் ஆழம் வரை) இருத்தல்.


2. வெப்பமான மற்றும் ஈரப்பதமான காற்றின் போதுமான விநியோகம்.


3. கோரியோலிஸ் விசை (Coriolis force) (வடக்கு அரைக்கோளத்தில் குறைந்த அழுத்த அமைப்புகளில் காற்றின் எதிரெதிர் கடிகார திசைக்கு இதுவே காரணமாகும்).


4. ஏற்கனவே இருக்கும் பலவீனமான குறைந்த அழுத்தப் பகுதி.


மேற்பரப்பு தொந்தரவுக்கு மேலே 9-15 கி.மீ உயரத்தில் எதிர்ச் சுழல் ஓட்டம் (anticyclonic circulation) இருக்கும்போது இந்தப் புயல்கள் மேலும் தீவிரமடைகின்றன. இது காற்றின் மேல்நோக்கிய இயக்கத்தை விரைவுபடுத்துகிறது. மேலும், குறைந்த அழுத்த அமைப்பை ஆழப்படுத்துகிறது.


புயலின் ‘கண்’ என்றால் என்ன?


புயலின் மையம் மிகக் குறைந்த அழுத்தம், அமைதியான மற்றும் கீழ்நோக்கி இறங்கும் காற்று ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இந்த பகுதி புயலின் ‘கண்’  என்றும் அழைக்கப்படுகிறது. இதைச் சுற்றி 'கண் சுவர்' (eye wall) உள்ளது. அங்கு வெப்பமான சுழல் காற்று மேல்நோக்கி நகர்ந்து, வளிமண்டல அடுக்கின் உச்சத்தை (tropopause) அடைகிறது.


புயல்கள் கடல்களின் மீது தோன்றி, பொதுவாக கடற்கரையை அடையும்போது, அது ‘கரையிறங்குதல்’ (landfall) என்று குறிப்பிடப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கரையிறங்குதல் என்பது, நீர்நிலைக்கு மேலே இருந்த வெப்பமண்டல புயல் நிலப்பரப்புக்கு வருவது ஆகும்.


கடல்களின் மீது, இந்தப் புயல்கள் தொடர்ச்சியான ஈரப்பதம் கிடைப்பதால், அதிக வீரியம் பெற்று, மிக அதிவேகத்துடன் மணிக்கு 180-400 கிமீ வேகத்தில்  நகர்கின்றன. இருப்பினும், நிலப்பகுதிக்கு வந்த பிறகு, ஈரப்பதம் விநியோகம் துண்டிக்கப்படுவதால், அவை உள்நாட்டுப் பகுதிகளுக்குள் நகரும்போது படிப்படியாகச் சிதறி மறைகின்றன. இதனால்தான் பெரும்பாலான பேரழிவு தரும் விளைவுகள் பெரும்பாலும் கடலோரப் பகுதிகளில் ஏற்படுகின்றன.


இந்தப் புயல்களின் சராசரி விட்டம் 600 முதல் 1200 கி.மீ. வரை இருக்கும். இந்தப் புயல்கள் தங்கள் வலிமைக்கு ஏற்ப மாறுபட்ட வேகங்களில் முன்னேறுகின்றன. பலவீனமான புயல்கள் சுமார் 32 கி.மீ/மணி வேகத்தில் நகர்கின்றன, அதேசமயம் புயல்கள் 180 கி.மீ/மணி அல்லது அதற்கு மேல் வேகத்தை அடையலாம். தொடர்ச்சியான காற்றின் வேகம் 34 நாட்ஸ் (62 கி.மீ/மணி) அல்லது அதற்கு மேல் இருக்கும்போது, அந்தச் புயலுக்கு ஒரு தனித்துவமான பெயர் வழங்கப்படும்.


வெப்பமண்டல புயல்களின் தாக்கம்


இந்த வளிமண்டலக் குழப்பங்கள் வெவ்வேறு அட்சரேகை மண்டலங்களுக்கு இடையில் வெப்பம், ஈரப்பதம் மற்றும் மழையின் பரிமாற்றத்தில் முக்கியப் பங்கை வகிக்கின்றன. இந்தியாவில், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் இருந்து உருவாகும் சூறாவளிகள் பெரும்பாலும் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் வானிலை நிலைகளை பாதிக்கின்றன.


அவை அதிவேகமான காற்று, மிக அதிக கனமழை மற்றும் கடலில் ஏற்படும் புயல் அலைகள் (கடல் அலைகள்) மூலம் கடுமையான மற்றும் பெரிய அளவிலான அழிவை ஏற்படுத்தலாம். இந்தச் புயல்கள் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தலாம், மேலும் கட்டிடங்கள், போக்குவரத்து அமைப்புகள், நீர் மற்றும் மின்சாரம் வழங்கல் உட்பட அடிப்படை வசதிகளுக்கு கடுமையான சேதத்தை விளைவிக்கிறது.


இந்தக் கடல்-வளிமண்டல இடைவினைகள் இருவழிச் செயல்முறைகளாகும். வெப்பமான கடல்கள் புயல்கள் தோன்றுவதற்கும், தீவிரமாவதற்கும் சாதகமான சூழ்நிலையை வழங்குகின்றன. இந்தச் புயல்கள் பின்னர் ஆழமான அடுக்குகளிலிருந்து குளிர்ச்சியான மற்றும் அதிக உவர்ப்புள்ள நீரை கடலின் மேற்பரப்புக்கு இழுத்து வருகின்றன. புயல்களால் தூண்டப்படும் இந்த குளிர்ச்சியடைதல் புயலின் வேகம், காற்றின் சக்தி, கடல் அடுக்குகளின் அமைப்பு மற்றும் அடித்தள நிலைமைகளைப் பொறுத்து அமைகின்றது.


பெருங்கடல்களுக்கும் வளிமண்டலத்துக்கும் இடையிலான இந்தத் தொடர்பு, சூறாவளிகள் கடல்வாழ் உற்பத்தித்திறனையும் கார்பன் சுழற்சியையும் பாதிப்பதால், கடலில் இருந்து உயிரியல் ரீதியான பதிலாக பெரிய குளோரோபில் பூக்கும் (chlorophyll blooms)  நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது.


குளோரோபில் பூக்கும் நிகழ்வு (chlorophyll blooms) என்பது கடல் நீரில் பைட்டோபிளாங்டன் எனப்படும் நுண்ணிய தாவர உயிரிகள் திடீரென மிக அதிக அளவில் பெருகுவதாகும். இதனால் கடல் நீரின் நிறம் பச்சையாகவோ அல்லது வேறு நிறங்களிலோ (சிவப்பு, பழுப்பு) தெரியும். இதை விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் படங்களிலும் காணலாம்.


இந்தியாவின் அதிகரித்து வரும் பாதிப்புகள்


இந்தியா ஒரு நீண்ட கடற்கரை, ஆழமற்ற கண்டத் திட்டு (continental shelf), அதிக மக்கள் தொகை அடர்த்தி மற்றும் சமதள கடலோரப் பகுதி ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், இது வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவாகும் வெப்பமண்டலப் புயல்களுக்கு ஆளாகிறது. வடக்கு இந்தியப் பெருங்கடல், வெப்பமண்டலச் புயல்களால் பெரும்பாலும் உருவாகும் உலகின் ஆறு முக்கியப் பகுதிகளில் ஒன்றாகும்.


இந்தியாவின் புவியியல் பரப்பளவில் கிட்டத்தட்ட 8 சதவீதமும், அதில் உள்ள 13 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் ஆண்டுதோறும் கடுமையான வெப்பமண்டலப் புயல்களால் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல்மட்ட உயர்வு காரணமாக, கடலோர மக்களுக்குப் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. 


வரலாற்று ரீதியாக, இந்தப் புயல்கள், உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதிப்பதுடன், சொத்துக்களுக்குக் கடுமையான சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சமீபத்திய வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க பேரழிவுகளில் ஒன்று, 1999-ஆம் ஆண்டில்  அக்டோபர் 28-29-ஆம் தேதிகளில் ஒடிசா மாநிலத்தை தாக்கிய  ‘சூப்பர்’ புயலால் ஏற்பட்ட பாதிப்பு ஆகும். இந்தப் புயல் 10,000 உயிர்களைப் பலிகொண்டது. 2,75,000 வீடுகளைச் சேதப்படுத்தியது, 1.67 மில்லியனுக்கும் அதிகமான மக்களை வீடற்றவர்களாக ஆக்கியதுடன், அவர்களின் வாழ்வாதாரங்களாக இருந்த கால்நடைகளையும் பலிகொண்டது.


உலகளாவிய வெப்பமண்டலப் புயல்களில், சுமார் 6-7 சதவீதம் வடக்கு இந்தியப் பெருங்கடலில் ஆண்டுதோறும் ஏற்படுகின்றன. அவற்றில் சில புயல்கள்  மிகவும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியவை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை ஒப்பிடும்போது, அரபிக் கடலின் கடல் மேற்பரப்பு வெப்பநிலையில் 1.2–1.4°C அதிகரிப்பை ஆய்வுகள் குறிக்கின்றன. இந்த வெப்பநிலை உயர்வு சூறாவளிகள் விரைவாகத் தீவிரமடைவதற்குச் சாதகமாக உள்ளது. இந்தத் தீவிரத்தினால், பெரும்பாலும் கரையில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கும் பேரிடர் மேலாண்மைக் குழுவுக்குப்  போதுமான காலஅவாகசம் கிடைப்பதில்லை.


தயார்நிலை மற்றும் தணிப்பு உத்திகள்


2005-ஆம் ஆண்டில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) நிறுவப்படுவதற்கு முன்பே 1999-ஆம் ஆண்டு ஏற்பட்ட ‘சூப்பர்’ புயலின் பாதிப்புக்குப் பிறகு, ஒடிசா மாநிலம், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தை நிறுவியது குறிப்பிடத்தக்கது. கடலோர மக்களின் பாதிப்பைக் குறைக்கும் வகையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (NDMA) 2011-ஆம் ஆண்டு தேசிய புயல் அபாயக் குறைப்புத் திட்டம் (National Cyclone Risk Mitigation Project (NCRMP)) தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேம்பட்ட காலநிலை முன்னறிவிப்பு மற்றும் சிறந்த தயார்நிலை நடவடிக்கைகள் ஆகியவை அண்மைக் காலங்களில் நிகழந்ததைப் போல, உயிரிழப்புகளை திறம்பட குறைக்க உதவியுள்ளன. புயல் பாதை மற்றும் கரையைக் கடக்கும் இடங்களுக்கான முன்னறிவிப்பு திறன்களும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளன. இருப்பினும், புயல்கள் தீவிரமடைவதைத் துல்லியமாக முன்னறிவிப்பது, குறிப்பாக அது தீவிரமாக இருக்கும்போது, போதுமான கால அவகாசத்துடன் முன்னறிவிப்பது இன்னமும் சவாலாக இருந்து வருகிறது. இதற்குக் காரணம் முதன்மையாகக் கடலில் நேரடியாக மேற்கொள்ளப்படும் (in-situ) கண்காணிப்புகளில் உள்ள இடைவெளிகளே ஆகும் என்கின்றனர். 


தயார்நிலை மற்றும் தணிப்பு உத்திகளை மேலும் மேம்படுத்த, வெளியேற்றத்தை மையமாகக் கொண்ட பதிலளிப்புகளில் இருந்து, தாங்கும் திறனை  நோக்கிய அமைப்புகளுக்கு விரைவான மாற்றம் தேவைப்படுகிறது. பேரிடர் காலங்களில் சமூகங்களே முதல் பதிலளிப்பாளர்களாக இருப்பதால், அவர்களுக்கான திறன் மேம்பாடும் மிக முக்கியமாகிறது. முன்கூட்டிய எச்சரிக்கை பரவல் அமைப்பு (Early Warning Dissemination System (EWDS)) மற்றும் சமூக அடிப்படையிலான பேரிடர் ஆபத்து மேலாண்மை (Community Based Disaster Risk Management (CBDRM)) நடைமுறைகளை ஊக்குவிக்கும் கொள்கைகள் புயல் கரையை கடப்பதற்கு முன்பு சரியான நேரத்தில் வெளியேற்றத்திற்கு மேலும் உதவும் என்று கூறப்படுகிறது.


புயல் அபாய குறைப்பு உள்கட்டமைப்பானது (Cyclone Risk Mitigation Infrastructure (CRMI)), பல்நோக்கு புயல் தங்குமிடங்கள் (multi-purpose cyclone shelters (MPCS)), சாலைகள், பாலங்கள், நிலத்தடி மின்சார கேபிள் பதித்தல் மற்றும் உப்புக் காற்றைத் தடுக்கும் தடுப்பணைகள் (saline embankments) ஆகியவற்றைக் கட்டுவதற்கான முதலீடுகள் மூலம் கடலோர சமூகங்களின் தயார் நிலையையும் பாதிப்பைக் குறைக்கும் தன்மையையும் மேம்படுத்துகிறது. ஒரு முழுமையான புயல் பேரிடர் மேலாண்மை அணுகுமுறை, பேரிடர் தயார்நிலை மற்றும் அபாயக் குறைப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் முன்முயற்சியுடன் செயல்படுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. 



Original article:

Share:

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என் முக்கியமானதாகிறது? -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி : 


2025ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை மாலை (நவம்பர் 11) முடிவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகள், 243 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்களை பாஜக மற்றும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும் என்று கணித்துள்ளன. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி 100 இடங்கள் அல்லது அதற்கும் குறைவாகவே பெறும் என்றும் அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.


முக்கிய அம்சங்கள்:


1. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே முக்கிய ஊடக நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் கருத்துக்கணிப்புகள் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆகும். இந்த கருத்துக்கணிப்புகள் வாக்காளர்களின் உணர்வு மற்றும் வளர்ந்துவரும் போக்குகளின் ஆரம்ப அறிகுறியைக் காட்டுகின்றன. இருப்பினும், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் துல்லியமானவை அல்ல. மேலும், அவற்றை இறுதி முடிவுகளாகக் கருதக்கூடாது. கடந்த சில ஆண்டுகளாக, பல வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறாக இருந்துள்ளன.


2. ஆக்சிஸ் மை இந்தியா, சிவோட்டர், ஐபிஎஸ்ஓஎஸ், ஜன் கி பாத் மற்றும் டுடேஸ் சாணக்யா போன்ற பல தனியார் நிறுவனங்கள், தொலைக்காட்சி சேனல்கள், அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் மூலம் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்தி, தங்கள் கணிப்புகளை வெளியிடுகின்றன.


3. இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) வழிகாட்டுதல்களின்படி, வாக்களிப்பு செயல்முறை முழுமையாக முடியும்வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட முடியாது. இதுவரை வாக்களிக்காத மக்களை அவை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இது செய்யப்படுகிறது.


4.வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், கருத்துக்கணிப்புகளிலிருந்து வேறுபட்டவை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். தேர்தலுக்கு முன்பே கருத்துக்கணிப்புகள் நடத்தப்படுகின்றன. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் கருத்துக்கணிப்புகள் வாக்காளர்கள்மீது "தவறான செல்வாக்கை" ஏற்படுத்துவதால் அவற்றைத் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த காலங்களில் எழுந்துள்ளன.


5. 1997 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் தேர்தல் ஆணையத்தால் கூட்டப்பட்ட இரண்டு அனைத்துக் கட்சிக் கூட்டங்களில், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒருமனதாக எழுந்தது. தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதிலிருந்து அல்லது அறிவிப்பு தேதியிலிருந்து தடை பொருந்துமா என்பதில் மட்டுமே கருத்து வேறுபாடு இருந்தது. 1998-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையம் இது குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது. பின்னர், அவை உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டன.


6. ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, முறையான சட்டம் இல்லாமல் இந்த விதிகளை எவ்வாறு அமல்படுத்த முடியும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியது. பலவீனங்களை புரிந்து கொண்ட தேர்தல் ஆணையம் சட்டம் இயற்றப்படும் வரை வழிகாட்டுதல்களை திரும்பப் பெறுவதாக கூறியது. இதனால் விதிகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவையா என்ற கேள்வி இன்னும் தீர்க்கப்படாமல் போனது.


7. 2008ஆம் ஆண்டு பல அரசியல் கட்சிகள் கருத்துக் கணிப்புகள் மற்றும் வாக்கெடுப்புக்கு தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தபோது இந்த விவகாரம் மீண்டும் பேசப்பட்டது. இதற்கு சட்டத் திருத்தம் தேவைப்படுவதால், நாடாளுமன்றத்தில் அதை எழுப்ப வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அவர்களுக்கு அறிவுறுத்தியது. 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் நாடாளுமன்றம் பிரிவு 126A-ஐச் சேர்த்தது. இது வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பற்றிய தெளிவான விதிகளை வழங்குகிறது.


8. 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 126A, முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரம் முதல், அனைத்து தொகுதிகளுக்கான இறுதிக் கட்ட வாக்குப்பதிவு முடிவதற்கு அரை மணி நேரம் வரை, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நடத்துவதையும், அவற்றின் முடிவுகளை அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் மூலம் வெளியிடுவதையும் முழுமையாகத் தடை செய்கிறது.


9. கருத்துக் கணிப்புகளைப் பொறுத்தவரை, 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 126(1)(b)-ன் படி, ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடையும் 48 மணிநேர காலத்திற்குள், எந்தவொரு கருத்துக் கணிப்பு அல்லது வேறு எந்த வாக்கெடுப்பு கணக்கெடுப்பின் முடிவுகள் உட்பட எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும் எந்தவொரு மின்னணு ஊடகத்திலும் வெளியிடுவதைத் தடை செய்கிறது.


10. இந்த விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த விதியை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று பிரிவு 126A(3) கூறுகிறது.


ஏன் வாக்களிக்க வேண்டும்?


2025-ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தல் இரண்டு முக்கிய சாதனைகளைக் கண்டது:


  •  ஒட்டுமொத்தமாக 66.91% வாக்குப்பதிவு; இது 1951ஆம் ஆண்டு முதல் பீகார் தேர்தலுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவாகும்.


  • பீகார் மாநில வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பெண்கள் வாக்களித்தனர்.


ஜனநாயக நாடுகளில், வாக்களிப்பு என்பது மக்களின் அரசியல் ஈடுபாட்டின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் அடிப்படைச் செயல்பாடு ஆகக் கருதப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக, வாக்களிக்கும் உரிமை, நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு பல்வேறு பின்தங்கிய குழுக்களால் பெறப்பட்டது- காலனித்துவ மக்கள், பெண்கள், இன மற்றும் இன சிறுபான்மையினர் - பாதுகாக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பு, ஒவ்வொரு நபருக்கும் தங்கள் சமூகத்தில் ஆட்சி அதிகாரத்தை யார் வகிப்பார்கள் என்பதில் குரல் கொடுக்கிறது. இது குடியுரிமையை நிறைவேற்றுவதில் முக்கியமான பகுதி ஆகும்.


வாக்களிக்கும் உரிமை இருப்பது, ஒருவரை தங்கள் குரல் முக்கியமானது என்று உணரும் பெரிய சமூகத்தின் ஒரு பகுதியாகும். பிரிட்டிஷ் பெண் வாக்குரிமை போராளி Emmeline Pankhurst, பெண்களுக்கு வாக்குரிமை இல்லாத காலத்தில் வாதிட்டார்: அதன் படி, “ஆண்கள் நெறிமுறை விதிகளை உருவாக்குகிறார்கள். பெண்கள் அதை ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தங்கள் சுதந்திரத்துக்கும் உரிமைகளுக்கும் போராடுவது ஆண்களுக்கு முற்றிலும் சரி, நியாயம் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால், பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவது சரியல்ல, நியாயமல்ல என்றும் முடிவு ஆண்கள் செய்துள்ளார்கள். 


அந்த வகையில், பிரதிநிதித்துவ வாக்களிப்பு (representation voting) மக்கள் ஒரு அமைப்பில் பங்குதாரர்களாக உணருவதில் பங்கு வகிக்கிறது.


வாக்களிக்கும் உரிமை இருப்பது ஒருவரைப் பெரிய சமூகத்தின் ஒரு பகுதியாக உணரச் செய்கிறது, அங்கு அவர்களின் குரல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பிரிட்டனை சேர்ந்த ‘பெண் வாக்குரிமை போராளி’ எமிலின் பாங்க்ஹர்ஸ்ட், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைப்பதற்கு முன்பு “ஆண்கள் தார்மீகக் குறியீட்டை உருவாக்குகிறார்கள், பெண்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆண்கள் தங்கள் சுதந்திரங்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுவது முற்றிலும் சரியானது மற்றும் பொருத்தமானது என்றும், ஆனால் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவது சரியானது அல்ல, பொருத்தமானது அல்ல என்றும் முடிவு செய்துள்ளனர்” என வாதிட்டார்.


அந்த அர்த்தத்தில், பிரதிநிதித்துவ வாக்களிப்பு மக்கள் ஒரு அமைப்பில் பங்குதாரர்களைப் போல உணர்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.



Original article:

Share:

வழக்கறிஞர்கள் கட்சிக்காரரின் ரகசியத்தை வெளிப்படுத்த முடியுமா? -கார்த்திகேய் சிங், முகுலா ஷர்மா

 ஒரு வழக்கறிஞருக்கும் கட்சிக்காரருக்கும்  இடையிலான ஆலோசனை ஒரு சிறப்புரிமை பெற்ற தகவல்தொடர்பா? ஒரு வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் கூறியதை வெளியிடக்கூடிய மூன்று சூழ்நிலைகள் எவை? இந்த சாட்சியச் சிறப்புரிமையாகப் பாதுகாப்பது ஏன் முக்கியம்? ஒரு வழக்கறிஞர் அரசியலமைப்புச் செயல்பாட்டாளரா?


தற்போதைய செய்தி: அக்டோபர் 31 அன்று, உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு ஜனநாயகத்தில் வழக்கறிஞர்களின் முக்கிய பங்களிப்பை உறுதிப்படுத்தியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. ஆர். கவாய், மற்றும் நீதிபதிகள் கே. வினோத் சந்திரன் மற்றும் என். வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு வழக்கறிஞர், ஒரு குற்றத்தைச் செய்ய அல்லது மறைக்க சட்ட ஆலோசனை பயன்படுத்தப்படும் சூழல்களைத் தவிர, ஒரு கட்சிக்காரர் என்ன சொன்னார் என்பதை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே அழைக்கப்பட முடியாது என்று கூறியது. அகமதாபாத் உதவி காவல் ஆணையர், ஒரு வழக்கறிஞருக்கு அறிவிப்பாணைஅனுப்பியதை தொடர்ந்து, நீதிமன்றம் தானாக முன்வந்து (suo motu) வழக்குப் பதிவு செய்தது. அவர் வாதிடும் ஒரு குற்றவியல் வழக்கு பற்றிய தகவலை வழங்குமாறு காவல்துறை வழக்கறிஞரைக் கேட்டுக் கொண்டது. இந்த நடவடிக்கை 2023-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பாரதிய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)) சட்டத்தின் பிரிவு 179-ன் கீழ் மேற்கொள்ளப்பட்டது.


சிறப்புரிமை பெற்ற தகவல் தகவல்தொடர்புகள் (privileged communications) என்றால் என்ன?


சிறப்புரிமை பெற்ற தகவல்தொடர்புகள் (Privileged Communications) என்பது, வழக்கறிஞர்-கட்சிக்காரர், கணவன்-மனைவி போன்ற சில பாதுகாக்கப்பட்ட உறவுகளுக்கு இடையிலான ரகசிய பரிமாற்றங்களைக் குறிக்கும். இவை சட்டத்தால் நீதிமன்றத்தில் சாட்சியமாக வெளிப்படுத்தப்படுவதிலிருந்து அல்லது கட்டாயப்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. இதன் அடிப்படைக் கொள்கை, நேர்மையையும் நம்பிக்கையையும் ஊக்குவிப்பதாகும், இதன்மூலம் நீதியையும் நெறிமுறைப் பொறுப்பையும் வலுப்படுத்துகிறது. 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் (Bharatiya Sakshya Adhiniyam (BSA)), இந்த பாதுகாப்புகளை பிரிவு 128 முதல் 134 வரை கோடிட்டுக் காட்டுகிறது.


குறிப்பாக, பிரிவு 128 'திருமண தொடர்புகளை' பாதுகாக்கிறது. திருமண உறவை முறித்துக் கொண்டபிறகும், அதைச் செய்த நபரின் அனுமதியின்றி, 'திருமணத்தின் போது' செய்யப்பட்ட எந்தவொரு தகவல்தொடர்பையும் வெளிப்படுத்தும்படி வாழ்க்கைத் துணைவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதையோ அல்லது அனுமதிக்கப்படுவதையோ தடுக்கிறது. ஒருவர் மீது மற்றொருவருக்கு எதிரான குற்றத்திற்காக வழக்குத் தொடரப்பட்டாலோ அல்லது அவர்களுக்கு இடையேயான வழக்குகளிலோ தவிர, அதைச் செய்த நபரின் அனுமதியின்றி கருத்து கூறுவதை தடுக்கிறது. அதேபோல், தேசிய நலனைப் பாதுகாப்பதற்காக, துறை ஒப்புதல் இல்லாமல் மாநில விவகாரங்கள் தொடர்பான வெளியிடப்படாத அதிகாரப்பூர்வ பதிவுகளை வெளியிடுவதை பிரிவு 129 தடை செய்கிறது. மேலும், பிரிவு 132-ன் கீழ் உள்ள வழக்கறிஞர்-கட்சிக்காரர் சிறப்புரிமை (advocate-client privilege) வழக்கறிஞர்கள் தொழில்முறைத் தகவல்தொடர்புகளை வெளிப்படுத்துவதைத் தடை செய்கிறது.


உச்சநீதிமன்றம் என்ன கூறியது?


மாநிலம் வழக்கறிஞர்-கட்சிக்காரர் உறவில் தலையிடும்போது, அது குடிமகனின் சமமான பிரதிநிதித்துவ உரிமையை (right to equitable representation) ஆபத்தில் ஆழ்த்துகிறது மற்றும் நீதி முறையின் நியாயமான விசாரணை மற்றும் சட்டத்தின் ஆட்சி (rule of law) ஆகியவற்றின் அமைப்பு நேர்மையை பாதிக்கிறது என்று உச்சநீதிமன்றம் கூறியது. பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் சட்டத்தின் பிரிவு 132, ஒரு வழக்கறிஞர் தொழில்முறை பணியின்போது அவருக்கு அளிக்கப்பட்ட எந்தவொரு தகவல்தொடர்பையும், பணி முடிந்த பிறகும், வெளியிடக் கூடாது என்று கூறுகிறது. ஆனால், அதில் மூன்று விதிவிலக்குகள் உள்ளன: (1) வாடிக்கையாளர் அதற்கு ஒப்புதல் அளித்தால்; (2) தகவல்தொடர்பு சட்டவிரோத நோக்கங்களுடன் தொடர்புடையதாக இருந்தால்; (3) வேலைவாய்ப்பின்போது நடத்தப்படும் குற்றச் செயல்பாட்டை வழக்கறிஞர் கவனித்தால் தகவலை வெளிப்படுத்தலாம். இருப்பினும், தகவல்தொடர்புகளை தனிப்பட்டதாக வைத்திருக்கும் உரிமை கட்சிக்காரருக்கு சொந்தமானது என்றாலும், வழக்கறிஞர் அமைதியாக இருந்தால் மட்டுமே அதைப் பாதுகாக்க முடியும். இந்த அமைதி பணக்காரர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்களை மட்டுமல்ல, - பாலியல் வன்முறைக்கு  எதிராக புகாரளிக்கும் பெண்கள், கடுமையான காப்பீட்டு நிறுவனங்களுடன் விபத்துக்குள்ளானவர்கள் மற்றும் காவலில் உள்ள மக்களின் குடும்பங்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய மக்களையும் பாதுகாத்துள்ளது 3.9 லட்சம் குடிமக்கள் விசாரணைக்காகக் காத்திருக்கும் ஒரு நீதி அமைப்பில், தகவல்களைத் தனிப்பட்டதாக வைத்திருக்கும் இந்த உரிமை, அனைவரும் தங்களைத் தற்காத்துக் கொள்ள நியாயமான வாய்ப்பைப் (fair defence alive) பெறுவதை உறுதி செய்ய உதவுகிறது.


ஒரு வழக்கில் பணியாற்றியதற்காகவோ அல்லது ஆலோசனை வழங்கியதற்காகவோ காவல்துறையினரோ அல்லது புலனாய்வாளர்களோ ஒரு வழக்கறிஞரை விசாரணைக்கு அழைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிரிவு 132-ல் உள்ள சிறப்பு விதிகளுக்கு வழக்கு பொருந்துகிறது என்பதற்கான தெளிவான சான்றுகள் இருந்தால் மட்டுமே அவர்கள் இதைச் செய்ய முடியும். இது சில தகவல்களை தனிப்பட்டதாக வைத்திருக்கும் வழக்கறிஞரின் உரிமையைப் பாதுகாக்கிறது.


மேலும், பிரிவு 132-ன் பாதுகாப்பை, பிரிவு 20(3)-ன் சுய குற்றச்சாட்டிற்கு எதிரான உத்தரவாதத்துடன் இணைப்பதன் மூலம், தீர்ப்பு ஒரு வழக்கறிஞரின் செயல்பாட்டின் முக்கிய அங்கமான அரசியலமைப்பின் சிறப்புரிமையை உறுதிப்படுத்துகிறது. ஒரு குடிமகனை வாக்குமூலம் அளிக்க கட்டாயப்படுத்த முடியாவிட்டால், அதே தகவலைப் பெறுவதற்காக அரசாங்கமும் அவரது வழக்கறிஞரை தனிப்பட்ட தகவல்களை வெளியிட கட்டாயப்படுத்த முடியாது.


வழக்கறிஞரின் பங்கு பற்றி?


தீர்ப்பின் மூலம், ஒரு வழக்கறிஞர் ஒரு தனியார் முகவர் மட்டுமல்ல, சட்ட பிரதிநிதித்துவ உரிமையைப் பாதுகாக்க உதவும் ஒரு 'அரசியலமைப்பு பாதுகாவலர்' என்று உச்சநீதிமன்றம் கூறியது. வழக்கறிஞர்-கட்சிக்காரர் சிறப்புரிமை என்பது வழக்கறிஞர்களுக்கு ஒரு நன்மையோ அல்லது சட்டத்திற்கு மேலே அவர்களை வைப்பதற்கான ஒரு வழியோ அல்ல -இது குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ஒரு பாதுகாப்பாகும். நீதிமன்றம் இதை தெளிவுபடுத்தியது: இந்த சிறப்புரிமை "குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது." அரசாங்கம் ஒரு வழக்கறிஞரை கட்சிக்காரர் தகவல்களை வெளியிட கட்டாயப்படுத்தினால், அது அந்த வழக்கறிஞரை விருப்பமில்லாத சாட்சியாக மாற்றுகிறது, தற்காப்பு மற்றும் வழக்குத் தொடர்தலுக்கான இடையிலான பிரிவை நீக்குகிறது. நீதிமன்றம் இதை ரகசிய தகவல்தொடர்புகளைப் பாதுகாக்கும் விதியின் தெளிவான மீறல் என்று கூறியது. இது பிரிவு 21-ன் கீழ் நியாயமான தற்காப்புக்கான உரிமை (fair defence) மற்றும் பிரிவு 14-ன் கீழ் சட்டத்தின் முன் அனைவரும் சமம் (equality before law) என்ற வாக்குறுதி இரண்டையும் பாதிக்கிறது.


தீர்ப்பு ஏன் முக்கியம்?


இந்தத் தீர்ப்பு மறைமுகமாக பயனுள்ள சட்டப் பிரதிநிதித்துவ உரிமையை வலுப்படுத்துகிறது. இது உச்சநீதிமன்றம் நீண்ட காலமாக பிரிவு 21 மற்றும் பிரிவு 22(1)-ல் வாசித்து வரும் உரிமையாகும். எம்.ஹெச். ஹோஸ்கோட் vs மகாராஷ்டிரா மாநிலம் (1978) மற்றும் ஹுசைனாரா கட்டூன் vs பீகார் மாநிலம் (1980) போன்ற வழக்குகளை மேற்கோள் காட்டி, ஆலோசனை இல்லாத சுதந்திரம் பெயர்  அளவிலான சுதந்திரம் என்பதை நினைவூட்டுகிறது. விசாரணை அமைப்புகள் பத்திரிகையாளர்கள், வரி ஆலோசகர்கள், வழக்கறிஞர்களையும் “விசாரணைக்கு உதவ” வழக்கமாக அழைக்கும் காலத்தில், நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசாங்கத்திற்கு அதன் புலனாய்வு அதிகாரத்திற்கு வரம்புகள் உள்ளன என்பதை நினைவுப்படுத்துகிறது. பாரதிய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)) சட்டத்தின் பிரிவு 179, சாட்சிகளை அழைக்க காவல்துறைக்கு அனுமதி அளித்தாலும், கட்சிக்காரரின் ரகசிய தகவல்களை வெளியிட ஒரு வழக்கறிஞரை கட்டாயப்படுத்த முடியாது என்று கூறுகிறது.


கார்த்திகே சிங் மற்றும் முகுலா சர்மா ஆகியோர் புது டெல்லியை தளமாகக் கொண்ட வழக்கறிஞர்கள்.



Original article:

Share: