சமத்துவத்திற்கான உரிமை என்ன உறுதியளிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுதல் -ஆதித்யா ஃபால்னிகர்

 குடியுரிமை சட்டத்தை பெரிய அளவில் மாற்ற நீதிமன்றத்திற்கு வாய்ப்பு உள்ளது. அரசியலமைப்பில் நமது சமத்துவ வாக்குறுதியை மீறுவதாகக் கூறப்படும் விதத்தையும் அது மாற்றலாம்.


குடியுரிமை திருத்த சட்டம் Citizenship (Amendment) Act (CAA), 2019  ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பின் 14வது பிரிவை மீறுகிறது என்ற வாதத்தின் அடிப்படையில் இந்த சவால் உள்ளது. சட்டத்திற்கான எதிர்ப்பு மற்றும் ஆதரவு இரண்டுமே வழக்கின் முக்கியமான அம்சத்தை மறைத்துவிட்டன. குடியுரிமைச் சட்டத்தை மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சமத்துவ மீறல்களை தீர்ப்பதற்கான அதன் அணுகுமுறையையும் மறுவடிவமைப்பதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது.


வரிசையாக்க சோதனை


சமத்துவ உரிமை மீறல்களை தீர்ப்பதற்கு நீதிமன்றம்  'நியாயமான வகைப்பாடு' (reasonable classification) சோதனையைப் பயன்படுத்துகிறது. இந்தச் சோதனையானது வெவ்வேறு குழுக்களை வகைப்படுத்த தெளிவான வழி உள்ளதா என்பதையும், இந்தப் வகைப்பாடு அரசாங்கத்தின் இலக்கை அடைய உதவுகிறதா என்பதையும் சரிபார்க்கிறது. பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, உள்துறை அமைச்சர், இந்த சட்டம் அண்டை நாடுகளில் இருந்து துன்புறுத்தப்படும் சிறுபான்மையினரை குறிவைத்து, அவர்களுக்கு இந்தியாவில் முழு குடியுரிமை உரிமைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவித்தார். அவரது வாதம் சட்டப்படி சரியானது. இருப்பினும், பாகிஸ்தானில் உள்ள அஹ்மதியா முஸ்லிம்கள் போன்ற துன்புறுத்தப்பட்ட குழுக்களையும் இதில் சேர்க்க வேண்டும் என்று ஒருவர் வாதிடலாம். பொதுவாக, இது உள்துறை அமைச்சரின் வாதத்தை பலவீனப்படுத்தும். ஆயினும்கூட, சமத்துவ சட்டத்தை மீறும் வழக்குகளில் நீதிமன்றம் பெரும்பாலும் அரசாங்கத்திற்கு நிறைய சுதந்திரம் அளிக்கிறது. எடுத்துக்காட்டாக, சரஞ்சித் லால் சௌத்ரி vs யூனியன் ஆஃப் இந்தியா (1950) (Charanjit Lal Chowdhury vs Union of India (1950)) வழக்கில், சட்டமியற்றும் அவை தீங்கு விளைவிக்கும் அளவை முடிவு செய்யலாம் மற்றும் அதன் நடவடிக்கைகளை மிகத் தெளிவான வழக்குகளுக்கு மட்டுப்படுத்தலாம் என்று நீதிமன்றம் கூறியது. இதன் அடிப்படையில், குடியுரிமை திருத்த சட்டம் (CAA) அரசியலமைப்புச் சட்டமாக பார்க்கப்படலாம். ஆனால் இந்த அணுகுமுறை சிக்கலானது.


1950 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வகைப்படுத்தல் சோதனை வந்தது. காலப்போக்கில், அது செம்மைப்படுத்தப்பட்டு விமர்சிக்கப்பட்டது. இப்போது, நமது சமத்துவ உத்தரவாதத்தைப் போலவே, இது சமத்துவச் சட்டத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும்.


பெரும்பாலும் கவனிக்கப்படாத முக்கியமான விஷயம் என்னவென்றால், வகைப்பாடு சோதனை என்பது சமத்துவக் கொள்கையை மாநில நடவடிக்கைகள் உடைக்கும்போது அதை தீர்மானிக்க நீதிமன்றத்தால் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும். அரசியலமைப்பு வழங்கும் உண்மையான பாதுகாப்பு சோதனை அல்ல. ஆனால், அதைப் பயன்படுத்துவதன் நோக்கம்,  சமத்துவம் என்பது மாறிக்கொண்டே இருக்கும் ஒரு இலக்காகும். மேலும், இந்த சவாலை முடிந்தவரை திறம்பட எதிர்கொள்ள நியாயமான வகைப்பாடு சோதனை உருவாக்கப்பட்டது. இருப்பினும், இது எப்போதும் சரியாக வேலை செய்யாது. குடியுரிமை திருத்த சட்டம் (CAA) இந்த தேர்வில் தேர்ச்சி பெறலாம். ஆனால், அரசியலமைப்பு உரிமைகள் பற்றிய நமது ஆழமான புரிதலுடன் இன்னும் இது ஒத்துப்போகவில்லை. ஒரு தெளிவான காரணமின்றி சில துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினரை ஒதுக்கி வைப்பதில் இருந்து சிக்கல் எழுகிறது. இந்த விலக்கு, குறிப்பாக மதத்தை அடிப்படையாகக் கொண்டதால், மதச்சார்பின்மை கொள்கைகளுடன் முரண்படுகிறது மற்றும் குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்புகிறது.


வகைப்பாடு சோதனை, பெரும்பாலும் சில காரணிகளைக் கருத்தில் கொள்ளாது. இது ஒருபோதும் செய்யாது என்று அர்த்தமல்ல. நீதிபதி டி.ஒய். சந்திரசூட், சட்டப்பிரிவு 14 ஆனது குறிப்பிடத்தக்க மதிப்புகளைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். அதை வெறும் வகைப்படுத்தல் பயிற்சியாகக் குறைப்பது அதன் உண்மையான சமத்துவ சாரத்தை கவனிக்காமல் போகலாம் என்று அவர் பரிந்துரைத்தார். சில நீதிபதிகள் வகைப்பாடு தேர்வை வலிமையாக்க முயன்றனர். ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தற்காலிக தீர்வுகள். சிறந்த முடிவுகளுக்காகச் சோதனை சரிசெய்யப்படும் அல்லது புதியது விதிகள் உருவாக்கப்பட்டது. சமீபத்திய நிகழ்வுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட 'வெளிப்படையான தன்னிச்சை' சோதனை, புதியது விதிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆனால், அதில் தெளிவு இல்லை. நியாயமான வகைப்பாடு சோதனையைப் போலன்றி, இது குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கவில்லை. சரியான கொள்கை இல்லாதிருந்தால், "வெளிப்படையாக தன்னிச்சையானது" (manifestly arbitrary) என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த விதிமுறைகளை வெவ்வேறு வழிகளில் புரிந்து கொள்ள முடியும். இது சமத்துவம் போன்ற சிக்கலான கருத்தை வரையறுக்கும் நீதித்துறை சோதனைக்கு உகந்ததல்ல.


சமத்துவத்திற்கான உரிமையின் வாக்குறுதியை ஆழமாக மறுபரிசீலனை செய்வது அவசியம். இது பழைய சோதனையை முற்றிலுமாக அகற்றுவதில்லை. ஆனால், குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தேவை என்று அர்த்தம். நீதிமன்றம் தனது அணுகுமுறையை விரிவுபடுத்த வேண்டும். அது சமத்துவம் என்ற அரசியலமைப்பின் கருத்தை ஆழமாக ஆராய வேண்டும். 'சமமானவர்களை சமமாக நடத்துவது மற்றும் சமமற்றவர்களை சமமாக நடத்துவது' (treating equals equally and unequals unequally) என்ற பாரம்பரிய கருத்து அதன் குறைபாடுகளைக் கொண்டுள்ளது. இதை நிவர்த்தி செய்வதற்கு ஒரு அணுகுமுறை தேவைப்படும். ஆனால், நமது அரசியலமைப்பு கட்டமைப்பை வலுப்படுத்த இது அவசியம்.


அஹ்மதியா முஸ்லிம்கள் ஏன் ஒதுக்கப்பட்டனர் என்பது குறித்து நீதிமன்றம் அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும் மற்றும் அவர்களின் மதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் குடியேறியவர்களின் எண்ணிக்கையை விசாரிக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகள் சமத்துவக் கோட்பாட்டுடன் ஒத்துப்போகின்றனவா என்பதைத் தீர்மானிக்க இந்தக் கேள்விகள் உதவும். இத்தகைய கேள்விகள் வகைப்பாடு சோதனையின் கட்டமைப்பிற்குள் பொருந்தக்கூடும் என்றாலும், அவை அதன் மையக் கவனம் அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவில் கூறப்பட்டுள்ள கொள்கைகளை நீதிபதிகள் கூர்ந்து கவனிக்க வேண்டும். முக்கியமான அரசியலமைப்பு விஷயங்களில் நீதிபதிகளின் விருப்புரிமையை அதிகமாக நம்புவது பிரச்சனைக்குரியது மற்றும் கவனிக்க வேண்டிய முக்கிய பிரச்சினையாகும்.



தெளிவான இடைவெளிக்கான வாய்ப்பு


சட்ட மற்றும் அரசியலமைப்பு அடிப்படையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு (CAA) உள்ள சவால் இந்த சிக்கலைச் சமாளிக்க ஒரு முக்கியமான வாய்ப்பாகும். ஏனென்றால், இந்தச் சட்டம் சமத்துவம் மற்றும் அரசிடம் இருந்து அரசியலமைப்பு என்ன எதிர்பார்க்கிறது என்பது பற்றிய நமது பல கருத்துக்களுடன் முரண்படுகிறது. இது போன்ற பெரிய கேள்விகளுக்கு, உரிமைக்கும் அந்த உரிமையைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் சோதனைக்கும் இடையே தெளிவான வேறுபடுத்தல் தேவை. உரிமை மட்டுமே முற்றிலும் பாதுகாக்கப்படுகிறது.


ஆதித்ய பால்னிகர் சட்டக் கொள்கைக்கான விதி மையத்தில் ஒரு ஆராய்ச்சியாளார்.




Original article:

Share:

வல்லரசாக விரும்பும் சீனா - கபீர் தனேஜா

 பெய்ஜிங் பெரும்பாலும் நிதிச் செல்வாக்கை நம்பியுள்ளது மற்றும் தற்போதைய உலகளாவிய பதட்டங்களுக்கு அதனிடம் தீர்வுகள் இல்லை.


சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையில் சீனாவின் தரகு பிடிவாதத்தின் (China-brokered détente) முதல் ஆண்டு மார்ச் 2023 இல் அதிக ஆரவாரமின்றி முடிந்தது. காசாவில் போர் பாரசீக வளைகுடா முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து பிராந்திய அரசியல் மற்றும் இராஜதந்திர முயற்சிகளை பாதித்துள்ளது. அதே நேரத்தில், இந்த வீழ்ச்சியின் மத்தியில் சர்வதேச தலைவர்கள் மற்றும் அவர்களின் முக்கிய நலன்களை முன்னிலைப்படுத்துகிறது. பாலஸ்தீனத்தை சீனா ஆதரிப்பதால், இஸ்ரேலுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.


சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சீன ஊடகங்கள், அதிபர் ஜி ஜின்பிங்கின் பங்களிப்பை பாராட்டியுள்ளன.  அவர் ரியாத்தையும் (Riyadh), தெஹ்ரானையும் (Tehran) சமாதானத்தை மேம்படுத்துவதற்காக ஒன்றாகக் கொண்டு வந்ததன் அடிப்படையில், அமைதிக்கான சீன முயற்சியைக் காட்டியுள்ளது.    சீன ஊடகமான சின்ஹுவா ஆண்டுவிழா (Xinhua anniversary) குறித்து நேர்மறையான கட்டுரையை எழுதியுள்ளது. மேற்குலகின் 'நிபந்தனை' (conditional) உறவுகளில் ஒரு சோர்வை வலியுறுத்திய பிராந்திய ஆய்வாளர்களை அவர்கள் மேற்கோள் காட்டினர். சின்ஹுவா கூறியது, "இப்போது கூட, அமைதிக்கான சீனாவின் உந்துதலை மத்திய கிழக்கு நாடுகள் இன்னும் பாராட்டுகின்றன."


பெய்ஜிங்கின் நோக்கங்கள்


2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of China (CPC) மத்தியக் குழுவின் வெளியுறவு ஆணையத்தின் அலுவலகத்தின் இயக்குநராக இருக்கும் வாங் யி, ஒரு திட்டத்தை ஆதரித்தார். இந்த திட்டம் ஒரு புதிய சர்வதேச மத்தியஸ்த அமைப்பை (new international mediation organization) நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது. இந்த அமைப்பு, சீனாவின் ஆதரவுடன் ஹாங்காங்கில் செயல்படுவதுடன், அல்ஜீரியா, பெலாரஸ், கம்போடியா, ஜிபூட்டி, இந்தோனேசியா, லாவோஸ், பாகிஸ்தான், செர்பியா மற்றும் சூடான் ஆகியவை ஆரம்ப அறிக்கையில் கையெழுத்திட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மத்தியஸ்த முயற்சியை சீனா தனது விரிவான பொருளாதார திட்டமான பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சி (Belt and Road Initiative (BRI)) உடன் இணைக்க விரும்புகிறது. ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற மேற்கு ஆசிய நாடுகளையும் பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சி (BRI) உள்ளடக்கியது. பாதுகாப்புக்காக அமெரிக்காவை பெரிதும் நம்பியிருந்த இஸ்ரேல் அந்த முன்முயற்சியில் கையெழுத்திடவில்லை. எனினும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கடந்த ஆண்டு சீனா தன்னை அரசுமுறைப் பயணத்திற்கு அழைத்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.


செங்கடல் நெருக்கடியில் சீனா இல்லாதது


காஸா போர் சீனாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமை சவுதி அரேபியாவிற்கும், ஈரானுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் சீனாவின் பங்கு குறித்து கேள்விகளை எழுப்புகிறது. பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்குவதை விட ரியாத் (Riyadh) மற்றும் தெஹ்ரானால் (Tehran) பேச்சுவார்த்தைகளுக்கு சீனா கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால், செங்கடல் நெருக்கடியின் போது, சீனா கலந்து கொள்ளவில்லை. மேற்கத்திய கடற்படைகள் இந்த முக்கியமான பகுதியில் வர்த்தகத்தை தடையின்றி வைத்திருக்க முயன்றன. எனினும், ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சீன மற்றும் ரஷ்ய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில், ஈரான் தங்கள் தாக்குதல்களை நிறுத்துமாறு ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் கேட்டுக் கொண்டாலும், ஈரானுடனான சீனாவின் உறவு இதற்கு காரணமாக இருக்கலாம். நெருக்கடியைத் தீர்க்க உதவுவதை விட தனது சொந்த நலன்களைப் பாதுகாப்பதே சீனாவின் முக்கிய குறிக்கோளாக இருந்தது என்பதை இது காட்டுகிறது. சீனாவின் இராஜதந்திரம் முக்கியமாக நெருக்கடியைத் தீர்ப்பதில் தீவிரமாக ஈடுபடுவதை விட அதன் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது. சமாதானம் அல்லது போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான பொறுப்பு பெரும்பாலும் வெள்ளை மாளிகையின் மீது விழுகிறது.


இது பின்னர் கேள்வியைக் கேட்கிறது. மேற்கு ஆசியா போன்ற மிகவும் சவாலான புவிசார் அரசியல் பிராந்தியங்களில் சீனாவின் உண்மையான பங்கு என்ன? பெய்ஜிங் பாலஸ்தீனியத்தின் காரணத்தை ஆதரிக்கிறது ஆனால், ஹமாஸை விமர்சிக்கவில்லை. இது அரபு நாட்டின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது. இது இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவுடன் முரண்படுகிறது. மேலும், குறிப்பாக காஸாவில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் போது, இது முழுமையானது என்று விமர்சிக்கப்படுகிறது. சீனாவின் மத்தியஸ்த நோக்கங்கள் உயர்-பங்கு மோதல்களில் இல்லை. அதன் குறிக்கோள் முக்கியமாக மேற்கத்திய, குறிப்பாக அமெரிக்க, சக்தி மற்றும் செல்வாக்கு சர்வதேச நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும்.


இரண்டு முக்கிய இலக்குகளை அடைய 'மத்தியஸ்த இராஜதந்திரத்தை' (mediation diplomacy) பயன்படுத்த சீனா நோக்கமாக கொண்டுள்ளது. முதலாவதாக, அது, மேற்கத்திய நாடுகளிலிருந்து வேறுபட்டதாக தன்னைக் காட்டிக் கொள்ள விரும்புகிறது. இந்த நாடுகள் பல ஆண்டுகளாக, குறிப்பாக மேற்கு ஆசியாவில் பல மோதல்களில் தலையிட்டுள்ளன. இந்த நாடுகளின் மோதல்கள் அதன் காலனித்துவ கடந்த காலத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. இரண்டாவதாக, உலக அரங்கில் தனது பங்கை அதிகரிப்பதை சீனா நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஒரு பொறுப்பான மற்றும் சக்திவாய்ந்த சர்வதேச போட்டியாளராக பார்க்கப்பட விரும்புகிறது. ஆனால் இந்த இலக்குகள் காசா நிலைமையால் சவாலுக்கு உட்படுத்தப்படுகின்றன. சீனா, அரபு நாடுகளை நோக்கி ஒரு தெளிவான நிலைப்பாட்டை ஆதரித்துள்ளது மற்றும் குறிப்பாக, அதே சமயம் ஹமாஸை விமர்சிக்கவில்லை. இந்த நிலைப்பாடு நாடுகளுக்கிடையே, அமெரிக்காவின் செல்வாக்கைக் குறைப்பதற்காக ஓரளவு வாய்ப்பாக உள்ளது. நாடுகளின் இராஜதந்திரத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பயன்படுத்திக் கொள்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் தங்கள் வெளியுறவுக் கொள்கைகளில் மிகவும் சுதந்திரமாக இருக்க விரும்புகின்றன. வாஷிங்டன் டி.சி.யுடன் (Washington DC) வலுவான பாதுகாப்பு உறவுகளைக் கொண்டிருந்தாலும், பெய்ஜிங்குடன் இணைந்து செயல்பட அவை தயாராக உள்ளன.




முக்கிய கண்ணோட்டத்தில்


அமெரிக்க ஆதிக்கத்தை முழுமையாக கையகப்படுத்தாமல் அதை மாற்றியமைப்பதில் சீனா மகிழ்ச்சி அடைகிறது. அந்த பகுதியில் அது ஒரு 'மென்மையான மேலாதிக்கம்' (soft hegemon) காணப்பட்டாலும், மேற்கத்திய கொள்கைகளுக்கு எதிரான சீனாவின் வலுவான நிலைப்பாட்டுடன் இது கடுமையாக முரண்படுகிறது. அமெரிக்காவுடனான அதன் உறவை வலுப்படுத்த 'பயங்கரவாதத்தின் மீதான போர்' (war on terror) காலமாகப் பயன்படுத்தினாலும், சின்ஜியாங்கில் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான அதன் பாதுகாப்புக் கவலைகளை நிவர்த்தி செய்தாலும், பெய்ஜிங்கின் இலக்குகள் முதன்மையாக புவிசார் மூலோபாயமாக இருந்தன. இருப்பினும், அறிஞர்கள் ஷீனா செஸ்ட்நட் கிரீடன்ஸ் (Sheena Chestnut Greitens) மற்றும் ஐசக் கார்டன் (Isaac Kardon) கருத்துப்படி, சீனா தனது நட்பு நாடுகளின் உள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துகிறது. மாநிலங்களின் பாதுகாப்பை விட ஆட்சிகளின் அரசியல் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்த அணுகுமுறை சீனா மத்தியஸ்த முயற்சிகளை எவ்வாறு கையாளும் என்பதை வரையறுக்கக்கூடும்.


காசாவில் நடந்த போர் பெய்ஜிங்கை இன்னும் ஒரு 'விருப்பம்' உள்ள வல்லரசாகக் காட்டுகிறது. ஆபத்தை எதிர்கொள்வது மற்றும் வரலாற்று மேற்கு-மைய கொள்கைகளுக்கு (West-centric policies)  மாற்று வழிகள் இல்லாதது (உலகளாவிய பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு இது தீங்கு விளைவிக்கும்) இது பெய்ஜிங்கை வெறுமையாகவோ அல்லது பொருள் இல்லாததாகவோ தோன்ற வைக்கிறது. சீனா நிதி உதவி வழங்குகிறது, ஆனால் முக்கிய புவிசார் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் இல்லை. தற்போது, இது எதிர்காலத்தில் பாரம்பரிய வல்லரசாக இருப்பதைக் காட்டிலும் மற்றவர்கள் சார்ந்திருக்கும் ஒரு நடைமுறை வல்லரசாகவே பார்க்கப்படுகிறது.


கபீர் தனேஜா, அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் உத்தி ஆய்வுகள் திட்டத்தின் உறுப்பினர் ஆவார்.




Original article:

Share:

மிஷன் திவ்யாஸ்திரத்தின் (Mission Divyastra) வெற்றி: கோழிக்கோடு-தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் மாணவர்களின் சாதனை பற்றி . . . -தி ஹிந்து குழுமம்

 கோழிக்கோடு-தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIT-C) 1991 ஆண்டு பிரிவில் மாணவி உஷா வர்மா, அக்னி-5 ஏவுகணையை உருவாக்கிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation (DRDO)) குழுவில் ஒருவராக இருந்தார்.


மிஷன் திவ்யஸ்திரா (Mission Divyastra) அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையாகும். இந்த ஏவுகணை இந்தியாவில் உருவாக்கப்பட்டதுடன், இது பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு ஏவுகணை (Multiple Independently Targetable Reentry Vehicles (MIRVs)) என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. மிஷன் திவ்யஸ்திரா (Mission Divyastra) திட்டத்தின் சோதனையானது வெற்றி பெற்றது. இந்த வெற்றி கோழிக்கோடு-தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தை (NIT-C) பெருமைப்படுத்தியுள்ளது. ஏனென்றால், அதன் முன்னாள் மாணவர்களில் ஒருவர், இந்த ஏவுகணையை உருவாக்கிய விஞ்ஞானி குழுவின் ஒருவராக இருந்தார்.


Dr.ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை வளாகத்தில் (Dr. APJ Abdul Kalam Missile Complex) உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) மேம்பட்ட அமைப்புகள் ஆய்வகத்தில் (Advanced Systems Laboratory (ASL)) இணை இயக்குநராக உஷா வர்மா பணியாற்றுகிறார். மேலும், அக்னி ஏவுகணைகளின் மேம்பட்ட பதிப்புகளை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அவர் 1991 ஆம் ஆண்டு காலிகட் பிராந்திய பொறியியல் கல்லூரியில் (பின்னர் NIT-C ஆக உயர்த்தப்பட்டது) எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவின் முன்னாள் மாணவர் ஆவார்.


திருமதி.வர்மா, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும், இவர் வான் பாதுகாப்பு திட்டத்தில் (Air Defence Programme) பணியாற்றினார். இந்த திட்டத்தில், முதல் உள்நாட்டு கா-பேண்ட் ஆக்டிவ் ரேடார் ஏவுகணை (Ka-Band Active Radar Missile) தேடுதல்  குழுவை வழிநடத்தினார். இந்த தொழில்நுட்பம் நடுவானில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை (ballistic missiles) இடைமறிக்க உதவும். இதன் மூலம், இவர் 2014 ஆம் ஆண்டில், அவர் மேம்பட்ட அமைப்புகள் ஆய்வகத்திற்கு ((Advanced Systems Laboratory (ASL)) சென்றதன் அடிப்படையில், அவர் உத்தியின் அமைப்பு மின்னணு குழுவின் தொழில்நுட்ப இயக்குநரானார். அக்னி ஏவுகணை அமைப்புகளுக்குள் தேசிய பாதுகாப்புக்கு முக்கியமான முக்கிய பகுதிகளில் அவரது கவனம் இருந்தது. அக்னி ஏவுகணைகளின் புதிய பதிப்புகளில் மேம்பட்ட ஏவியோனிக்ஸ் அம்சங்களை (advanced avionics features) திருமதி வர்மா அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த பதிப்புகளில் Agni Prime, அக்னி-V Mk II (Agni-V Mk II) மற்றும் திவ்யஸ்திரம் (Divyastra) ஆகியவை அடங்கும்.


திருமதி. வர்மா, வாய்ப்புகளுக்கான நேரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். REC தனக்கு ஒரு சிறந்த அடித்தளத்தை வழங்கியதற்கு அவர் அதிர்ஷ்டமாக உணர்கிறார். கூடுதலாக, சவாலான திட்டங்களில் பணியாற்றுவதற்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வழங்கிய வாய்ப்பையும் பொறுப்பையும் அவர் பாராட்டுகிறார். தற்போது, திருமதி வர்மாவும் செயல்பாட்டில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்ஸ் (IEEE) உறுப்பினர் ஆவார். இது ஒரு தன்னார்வ அமைப்பு. அவரது ஆராய்ச்சி முக்கியமாக பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர் நாட்டிற்குள் தொழில்நுட்பத்தை வளர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்துகிறார். மேலும், திருமதி வர்மா பணிபுரியும் திட்டங்கள் மிகவும் சிக்கலானவை என்று குறிப்பிட்டார். பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு ஏவுகணை (Multiple Independently Targetable Reentry Vehicles (MIRVs)) திறனை அடைவது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று அவர் எடுத்துரைத்தார். இந்த சாதனை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் மற்றும் உதவி ஊழியர்களின் கடின உழைப்பின் விளைவாகும்.




Original article:

Share:

தேர்தல் பத்திரங்கள் மற்றும் தேர்தல் நிதியுதவி பற்றி . . .

 தேர்தல் பத்திரங்களை (electoral bonds) வாங்குபவர்களுக்கும் அவற்றை நன்கொடை அளிப்பவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டறிவது சாதகம் மற்றும் ஊழலின் அறிகுறிகளைக் காட்டுகிறது.


இறுதி தரவுகளை வெளியிடுமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தரவு தேர்தல் நிதி எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான தெளிவான பார்வையை வழங்குகிறது. முன்பு, இந்த செயல்முறை தெளிவாக இல்லை. பெருநிறுவன மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களால் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் தனிப்பட்ட எண்கள் பற்றிய தரவை பாரத ஸ்டேட் வங்கி பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த தகவலை வெளியிட நீதிமன்றம் இரண்டு முறை பாரத ஸ்டேட் வங்கிக்கு அறிவுறுத்த வேண்டியிருந்தது. ஆரம்பத்தில், தரவில் நன்கொடையாளர்களை கட்சிகளுடன் இணைக்கும் தனிப்பட்ட எண்கள் இல்லை. பொதுத் தேர்தலுக்குப் பிறகு, தகவலை வழங்க, ஜூன் 30, 2024 வரை நீட்டிக்குமாறு உச்சநீதிமன்றத்திடம் பாரத ஸ்டேட் வங்கி கால அவகாசம் கேட்டது.  

செய்தி நிறுவனங்கள் இரண்டு மூலங்களிலிருந்து தரவை விரைவாகப் பொருத்தின. தேர்தல் பத்திரங்களை யார் வாங்கினார்கள், யார் பணமாக்கினார்கள் என்று பார்த்தார்கள். தேர்தல் பத்திரம் நன்கொடையாளர்களை இரகசியமாக வைத்திருப்பதற்கான அரசாங்கத்தின் வாதம் பலவீனமானது என்பதை இது காட்டுகிறது. அரசின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. சில அரசியல் கட்சிகளுக்கு பெரும் நன்கொடைகள் மற்றும் பத்திரங்களை வாங்குபவர்கள் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு இடையே தெளிவான தொடர்பை தரவு காட்டுகிறது. சில நேரங்களில், அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate) மற்றும் வருமான வரித் துறையால் (Income-Tax Department) விசாரணை செய்யப்பட்ட அதே நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன. பல நன்கொடையாளர்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளனர். ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி (Bharatiya Janata Party (BJP)) பெரும்பாலான  தேர்தல் பத்திரங்களை பெற்று  பின்னர் அதனை  பணமாக்கியிருக்கிறது.


முதல் 19 நிறுவனங்கள் ஏராளமான பணத்தை நன்கொடையாக அளித்தன. அவர்களில் பெரும்பாலோர் 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து பிப்ரவரி 2024 வரை பாஜகவை ஆதரித்தனர். 22 நிறுவனங்கள் ₹100 கோடிக்கு மேல்  நன்கொடை அளித்து இருக்கின்றனர். இந்த நன்கொடைகள் அரசாங்கத்தின் ஆதரவைப் பெறுவதற்கான ஒரு வழியாக இருந்திருக்கலாம் என்பதை இது குறிக்கிறது. இந்த பத்திரங்களுக்கு ஒரு சிறப்பு குறியீட்டை  பாரத ஸ்டேட் வங்கி வைத்திருக்கிறது. இது பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க உதவுகிறது. காலாவதியான பத்திரங்களை வாங்கிய 15 நாட்களுக்குள் பணமாக்க நிதி அமைச்சகம் அனுமதிக்கிறது. இந்தத் திட்டம், பிரச்சாரம் மற்றும் கட்சி நிதியுதவியில் ஆளும் கட்சிக்கு பெரிதும் சாதகமாக உள்ளது. கேள்விக்குரிய நன்கொடை நோக்கங்களை மறைக்கிறது. இப்போது, இந்தத் திட்டத்தைப் பற்றி வாக்காளர்களுக்குத் தெரிவிப்பதும் நியாயமற்ற நன்கொடைகள் குறித்து கேள்விகளைக் கேட்பதும் குடிமை சமூகத்தின் வேலை. சமுகத்தில் இருக்கும் அழுக்குகளை சரிசெய்வதற்கான முதல்படி இதுவாகும்.




Original article:


Share:

மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்டம் என்றால் என்ன? - ரவி மிட்டல், ரஜத் பன்சால்

 தேர்தல் நன்றாக நடக்க என்ன காரணம்? வாக்களிக்கும் முன் வாக்குச் சாவடிகள் எவ்வாறு அமைக்கப்படுகின்றன?


தேர்தல்கள் இப்போது மிகவும் சிக்கலானவை, நியாயமானதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க கவனமாக திட்டமிடல் தேவை. இந்த திட்டத்தின் முக்கிய பகுதியாக மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்டம் (District Election Management Plan (DEMP)) உள்ளது. தேர்தல்கள் சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய புள்ளிவிவரங்கள் மற்றும் பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தும் விரிவான ஆவணம் இது.


மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்டம் (District Election Management Plan (DEMP)) எப்போது தயாரிக்கப்படுகிறது?


இந்திய தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, தேர்தல் நடைபெரும் நாளுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்டம் (District Election Management Plan (DEMP))  தயாராக இருக்க வேண்டும். இருப்பினும், தேர்தல் தேதி உறுதிப்படுத்தப்பட்ட பின்பு தான், சில விஷயங்கள் தெளிவாகின்றன. எனவே, இப்போது திட்டத்தைப் புதுப்பிப்பது முக்கியம். மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்டத்தை  உருவாக்குவது தேர்தல் அதிகாரிகள், நிர்வாகிகள், காவல்துறை மற்றும் பிறருடன் குழுப்பணியை உள்ளடக்கியது. தேர்தல் விதிகள் குறித்து விளக்குவதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்களுடன் வழக்கமான சந்திப்புகளையும் திட்டமிடும்.


மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்டத்தின் கூறுகள் என்ன?


திட்டம் மாவட்ட சுயவிவரத்துடன் தொடங்குகிறது. இது ஒரு அரசியல் வரைபடம், முக்கிய மக்கள்தொகை மற்றும் உள்கட்டமைப்பு புள்ளிவிவரங்கள் மற்றும் மாவட்டத்தின் அமைப்பு மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கியது.


வாக்குச் சாவடி இருக்கும் இடத்தின் தன்மை மற்றும் அணுகலை மேம்படுத்துவதிலும் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது. அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் சாய்வுதளம் (ramps), மின்சாரம், தண்ணீர், கழிப்பறைகள் மற்றும் இணையம் போன்ற தேவையான வசதிகள் இருப்பதை இது உறுதி செய்கிறது. மாற்றுத்திறனாளிகள் (voters with disabilities (PwD)) மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவ சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில் உதவி மையங்கள், 24/7 கட்டுப்பாட்டு அறைகள் அமைத்தல், வீட்டில் வாக்களிக்கும் விருப்பங்களை வழங்குதல் மற்றும் அத்தியாவசிய சேவை பணியாளர்களுக்கு மேம்பட்ட தபால் வாக்குகளை வழங்குதல் ஆகியவை அடங்கும்.


மற்றொரு முக்கியமான பகுதி வாக்காளர் பங்கேற்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட  (Systematic Voters’ Education and Electoral Participation (SVEEP)) திட்டம். இது குறைந்த வாக்குப்பதிவு பகுதிகளை கண்டறிந்து வாக்குப்பதிவை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்க்கொள்ளுவதற்க்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துதல், சமூக குழுக்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல் போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கியது.


தேர்தல் பணியாளர்களைத் திட்டமிடுதல், பயிற்சி அளித்தல் மற்றும் பணியமர்த்துவதற்கான உத்திகளையும் மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்டம் உள்ளடக்கியது. இது ஒரு பணியாளர் தரவுத்தளத்தை உருவாக்குதல், ஊழியர்களை வகைப்படுத்துதல் மற்றும் இடைவெளிகளை நிவர்த்தி செய்தல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. பாதிக்கப்படக்கூடிய வாக்குச்சாவடிகளை வரைபடமாக்குவது உட்பட காவல்துறையினருடன் விரிவான ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தவும், தேவையான திறன்களை பணியாளர்களுக்கு வழங்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நிலை என்ன?


பொருள் மேலாண்மை, மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்டத்தின் முக்கிய பகுதியாகும். இது 61 முக்கியமான பொருட்களை வாங்குவதை உள்ளடக்கியது. இந்த பொருட்களில் அழியாத மை, முத்திரைகள், முத்திரைகள், எழுதுபொருட்கள் மற்றும் அதிகாரப்பூர்வ படிவங்கள் ஆகியவை அடங்கும். இந்த பொருட்கள் வகைகளாக வரிசைப்படுத்தப்படுகின்றன. மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் ஆகியவற்றைப் பொறுத்து, மாவட்ட அளவில் இந்த பொருட்களை வாங்குவதற்கான காலம் தேர்தலுக்கு முன் மூன்று வாரங்கள் முதல் நான்கு மாதங்களுக்குள் வாங்கவேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (Electronic Voting Machines (EVMs)) நிர்வகிப்பதும் அவசியம். இது வாக்களிக்கும் செயல்முறையை நேர்மையாக வைத்திருக்க உதவுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை தடங்கள் (Voter Verifiable Paper Audit Trails (VVPATs)) பாதுகாப்பாக சேமிப்பதற்கான திட்டங்கள் அவசியம். மேலும்,அவற்றை எவ்வாறு கொண்டு செல்வது மற்றும் பராமரிப்பது என்பதை இந்தத் திட்டங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.


மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்டம் (DEMP) இது அனைவருக்கும் வாக்களிப்பதை ஒழுங்கமைத்து எளிதாக்குகிறது. கவனமாக திட்டமிடல், குழுப்பணி மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நிர்வாகத்திற்கான மதிப்புமிக்க பாடங்களை இது கற்பிக்கிறது. இந்தப் பாடங்கள் திட்டமிடுதல், முடிவுகளை எடுப்பதற்குத் தரவைப் பயன்படுத்துதல் மற்றும் அனைத்துத் தரப்பினருடனும் ஒத்துழைத்துச் சிக்கல்களைத் தீர்க்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.


ரவி மிட்டல், சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்ட ஆட்சியர். ரஜத் பன்சால் சத்தீஸ்கரில் பணியாற்றி  வரும் ஐஏஎஸ் அதிகாரி  ஆவார்.




Original article:

Share:

உலக வர்த்தக அமைப்பு நெருக்கடியில் உள்ளது -பிரபாஷ் ரஞ்சன்

 உலகளாவிய வர்த்தக ஒப்பந்தங்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றன. இது உலகளவில் அதிகரித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கிறது.


உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organisation (WTO)) 13 வது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அமைச்சர்கள் கூட்டம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தாலும் குறிப்பிடத்தக்க சாதனைகள் ஏதுமின்றி முடிந்தது. சர்வதேச சமூகம் எதிர்கொள்ளும் பல முக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளால் உடன்பட முடியவில்லை. அத்தகைய ஒரு பிரச்சினை என்னவென்றால், நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு தேவையான உணவு வாங்க முடியுமா, சேமிக்க முடியுமா மற்றும் தேவைப்படும் குடிமக்களுக்கு கொடுக்க முடியுமா என்பது.  பொது பங்குத் திட்டம் (public stockholding (PSH)) என்று அழைக்கப்படும் இந்த திட்டம் ஒரு இறையாண்மை உரிமையாகும், ஆனால்  உலக வர்த்தக அமைப்பின் விதிகள் அதை சிக்கலாக்குகின்றன. 


வர்த்தகத்தை சீர்குலைக்கும் உள்நாட்டு மானியங்களை குறைப்பதை உலக வர்த்தக அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை (minimum support price (MSP)) போன்ற ஒரு நாடு எவ்வளவு மானியம் வழங்க முடியும் என்பதற்கு வரம்புகள் உள்ளன. 1986-88 வரையிலான சராசரி விலைகளின் அடிப்படையில் விலை ஆதரவு இருக்கும் என்று உலக வர்த்தக அமைப்பின் விதிகள் கூறுகின்றன. எனவே, இந்தியா போன்ற நாடுகள் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டங்களைப் பயன்படுத்துவது கடினம். பஞ்சாபில் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி போராட்டம் நடத்துவதால் இது முக்கியமானது. 

2013 ஆம் ஆண்டில், இந்தியாவின்  குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்கைக்கு சில சட்டப் பாதுகாப்பை வழங்கும் அமைதி விதிக்கு நாடுகள் ஒப்புக்கொண்டன. ஆனால் அது போதுமானதாக இல்லை. இந்தியா ஒரு நிரந்தர தீர்வுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் சமீபத்திய அமைச்சர்கள் கூட்டம் இதில் முன்னேற்றம் காணவில்லை. கெய்ர்ன்ஸ் குழு (Cairns group) என்று அழைக்கப்படும் அமெரிக்காவும் இதர விவசாய ஏற்றுமதி நாடுகளும் இந்தப் பிரச்சினை குறித்து எந்த அர்த்தமுள்ள விவாதத்தையும் தடுத்து நிறுத்தின. பொது பங்குத்  திட்டத்தில் ஒரு தீர்வை நோக்கி இந்தியா தொடர்ந்து பணியாற்ற வேண்டும். கூடுதலாக, உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு இணங்க தற்போதுள்ள பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi) போன்ற தற்போதுள்ள வருமான ஆதரவு திட்டங்களை மேம்படுத்துவது போன்ற விவசாயிகளை ஆதரிப்பதற்கான பிற வழிகளையும் பரிசீலிக்க வேண்டும். 


கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட மற்றொரு முக்கியமான பிரச்சினை, தொழில்மயமான நாடுகள் தங்கள் தொழில்துறை கடற்படைகளுக்கு அதிக திறன் மற்றும் அதிகப்படியான மீன்பிடித்தல் (overcapacity and over-fishing (OCOF)) ஆகியவற்றில் ஈடுபடும் மானியங்களை ஒழுங்குபடுத்துவதாகும். அதிக திறன் மற்றும் அதிகப்படியான மீன்பிடித்தல் போன்ற காரணிகள்  மீன்பிடி பங்குகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிக்கு   வழிவகுக்குகிறது. இது கடல் வாழ் உயிரினங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த மானியங்களைக் கட்டுப்படுத்த வளரும் நாடுகள் இணங்க வேண்டிய இடைக்கால அவகாசத்துடன், கட்டுப்படுத்தும் விதிகளுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. இருப்பினும், பணக்கார நாடுகள் மீண்டும் எந்த விதிகளையும் ஏற்றுக்கொள்வதைத் தடுக்க முடிந்தது.


உலக வர்த்தக அமைப்பு அதன் தகராறு தீர்ப்பு செயல்முறையுடன் (dispute settlement mechanism (DSM)) நெருக்கடியைத் தீர்ப்பதில் ஒரு பெரிய பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. ஒரு காலத்தில் உலக வர்த்தக அமைப்பின் வெற்றியாகக் கருதப்பட்ட தகராறு தீர்வு செயல்முறையுடன், 2019 முதல் சரியாக வேலை செய்யவில்லை. ஏனென்றால், தகராறு தீர்வு செயல்முறையின் இரண்டாம் மட்டமான மேல்முறையீட்டு அமைப்புக்கு (Appellate Body (AB)) உறுப்பினர்களை நியமிப்பதை அமெரிக்கா தடுத்து வருகிறது.  உலக வர்த்தக அமைப்பு உறுப்பு நாடுகள் 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலக வர்த்தக அமைப்பு சிறப்பாக செயல்பட விரும்புவதாகக் கூறியிருந்தாலும், அது நடக்க வாய்ப்பில்லை. 2019 க்கு முன்பு இருந்ததைப் போல  மேல்முறையீட்டு அமைப்பை மீட்டெடுக்க அமெரிக்கா விரும்பவில்லை. 

கடந்த ஆண்டு, வளர்ந்த நாடுகள் தகராறு தீர்வு குறித்து முறைசாரா மற்றும் ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தின. ஆச்சரியப்படும் விதமாக, இந்த பேச்சுவார்த்தைகள் மேல்முறையீட்டு அமைப்பில் உள்ள சிக்கல்களை சரிசெய்வதில் கவனம் செலுத்தவில்லை. ஆனால், பிற குறைவான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்தினர்.

இந்தியாவும் மற்றவர்களைப் போலவே உலக வர்த்தக விவாதங்களில் தனது செல்வாக்கை மீட்டெடுக்க விரும்புகிறது. வர்த்தக ஒப்பந்தங்களில் சர்வதேச நீதிமன்றங்களின் அதிகாரத்தைக் குறைத்தல் போன்ற அமெரிக்காவின்  ராஜதந்திரத்தை புரிந்துகொள்வது முக்கியம். உலக வணிக விதிகளை பின்பற்றுவதற்கு நாடுகள் அதிக விருப்பத்துடன் இருந்த காலத்தில் உலக வர்த்தக அமைப்பு அமைக்கப்பட்டது. ஆனால் இப்போது அமெரிக்கா போன்ற சில நாடுகள் இந்த நீதிமன்றங்களின் அதிகாரத்தை  குறைக்க விரும்புகின்றன. இதன் பொருள் சர்வதேச நீதிமன்றங்களால் சரிபார்க்கப்படாமல் அவர்கள் முடிவுகளை எடுக்க முடியும். இந்த நடவடிக்கை சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார வலிமையால் ஏற்படும் சவால்களை கையாள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  

உலகளாவிய வர்த்தகத்தை மேற்பார்வையிடும் அமைப்பான உலக வர்த்தக அமைப்பு, கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கிறது என்பதை சமீபத்திய கூட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இது உலகளாவிய வர்த்தக விவாதங்களில் நிச்சயமற்ற தன்மையையும் உறுதியற்ற தன்மையையும் காட்டுகிறது .


கட்டுரையாளர் தெற்காசிய பல்கலைக்கழகத்தின் சட்ட ஆய்வுகள் பீடத்தில் கற்பிக்கிறார்.




Original article:

Share:

'டிஜிட்டல் மினிமலிசம்' (digital minimalism) எப்படி உங்களை தொழில்நுட்ப சுமையிலிருந்து காப்பாற்றும்? -ஸ்வரூபா திரிபாதி

 அதிகபடியான தொழில்நுட்பத்துடன் போராடுகிறீர்களா? கவனத்தை மீண்டும் பெறுவதற்கும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் உங்கள் டிஜிட்டல் வாழ்க்கையை எளிதாக்குவதன் மூலம் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் டிஜிட்டல் மினிமலிசம் எனும் புதிய கருத்தியலை அறிந்துகொள்ளுங்கள். தேவையின் அடிப்படையில் கவனத்துடன் டிஜிட்டலை பயன்படுத்துவதே டிஜிட்டல் மினிமலிசம் ஆகும்.   


கால் நியூபோர்ட் (Cal Newport) எழுதிய ‘Digital Minimalism’ என்ற புத்தகம், டிஜிட்டல் பயன்பாட்டைகுறைத்தல் (Digital Minimalism) டிஜிட்டல் பயன்பாட்டைகுறைத்தல் பற்றி பேசுகிறது. கவனச்சிதறல்கள் நிறைந்த உலகில், பலர் டிஜிட்டல் மினிமலிசத்தின் யோசனையைப் பின்பற்றத் தொடங்குகிறார்கள், அதாவது உண்மையிலேயே முக்கியமானவற்றில் கவனம் செலுத்த தங்கள் டிஜிட்டல் வாழ்க்கையை எளிதாக்குகிறார்கள்.   


டிஜிட்டல் சாதனங்களிலிருந்து ஓய்வு எடுத்து நிகழ்காலத்தை அனுபவிப்பது மிகவும் முக்கியம். செயற்கை நுண்ணறிவின் அபாயங்களைப் பற்றி மக்கள் அறிந்த பிறகு இது தெளிவாகியது. செயற்கை நுண்ணறிவு நம் வாழ்க்கையை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். டிஜிட்டல் பயன்பாட்டைகுறைத்தல் மூலம் நாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைக் குறைக்கலாம். அதன் மோசமான விளைவுகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம். இது சிறந்த மன ஆரோக்கியம், அதிக உற்பத்தித்திறன் மற்றும் அதிக சுய விழிப்புணர்வுக்கு வழிவகுக்கிறது.


நம்ரோவாணி (NumroVani) அமைப்பின் வாழ்க்கை பயிற்சியாளர் சித்தார்த் எஸ் குமார், டிஜிட்டல்  மினிமலிசத்தை ‘மதிப்பு அடிப்படையிலான, நியாயமான மற்றும் தேவைக்கேற்ப’ டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் என்று விவரிக்கிறார்.  இந்த அணுகுமுறை "டிஜிட்டல் படபடப்பை"  (“digital clutter”) அகற்ற உதவுகிறது. இது எண்ணிக்கைக்கு பதிலாக டிஜிட்டல் தொடர்புகளின் தரத்தில் கவனம் செலுத்துகிறது. இந்த கவனம், மனம், உடல் மற்றும் ஆன்மாவில் எந்த மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தாது. 

 

ஆர்ட்டெமிஸ் மருத்துவமனை குருகிராமில் மனநலம் மற்றும் நடத்தை அறிவியலில் முன்னணி ஆலோசகரான டாக்டர். ராகுல் சந்தோக், டிஜிட்டல் மினிமலிசம் என்பது உற்பத்தித்திறன், படைப்பாற்றல் மற்றும் நல்வாழ்வை அதிகரிக்க கவனச்சிதறல்களைக் குறைப்பதாகும் என்று விளக்குகிறார். இதைப் பயிற்சி செய்பவர்கள் தேவையற்ற பயன்பாடுகளைக் குறைத்து, திரை நேரத்தைக் குறைத்து, டிஜிட்டல் பயன்பாட்டில் வரம்புகளை நிர்ணயித்து, புத்தகங்கள் வாசிப்பு, குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவது அல்லது பொழுதுபோக்கைப் பின்பற்றுவது போன்ற டிஜிட்டல் அல்லாத நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபடுவார்கள் என்று கூறுகிறார். 


அதிக திரை நேரம் (screen time) ஆரோக்கியத்திற்கு மோசமானது என்று டாக்டர் அதிதி கோவிட்ரிகர் கூறுகிறார். அதிகப்படியான திரை பயன்பாடு நம் புலன்களை மந்தமாக்கும். திரைகளுக்கான நமது போதை விருப்பங்கள், பின்தொடர்தல்கள் அல்லது செய்திகளைப் பெறும்போது நம் மூளையில் டோபமைன் (dopamine) வெளியீட்டிலிருந்து உருவாகிறது. உளவியலாளர் கரீனா  மேத்தா  கூறுகையில், அதிக திரை நேரம் உலகத் தொடர்பின்மை (disconnection), அதிருப்தி, பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.


டிஜிட்டல் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடானது நல்வாழ்வை கடுமையாக பாதிக்கும் என்று குமார் விளக்குகிறார். பாதிக்கப்படும் தூக்கத்தின் தரம் (impaired quality of sleep), உண்மையான உறவுகளின் பற்றாக்குறை, குறுகிய கவனத்தை செலுத்துதல் மற்றும் தகவல் சுமை போன்ற அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. இந்த வாழ்க்கை முறை செயலற்ற தன்மை காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். 


தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த குறிப்பிட்ட நேரத்தைத் தேர்வுசெய்து, அறிவிப்புகளை முடக்குவதன் மூலம் கவனச்சிதறல்களைக் குறைக்கலாம். தொழில்நுட்பத்திலிருந்து அடிக்கடி ஓய்வெடுக்க திட்டமிட்டு சில நேர டிஜிட்டல் துறத்தலை (digital detox) முயற்சிக்கவும். ஒவ்வொருவரும் தங்கள் டிஜிட்டல் சாதனங்களைத் தவிர்க்க வேண்டிய சில இடங்கள் அல்லது நேரங்களை வீட்டில் முடிவு செய்யுங்கள். இது படுக்கையறைகளில் அல்லது உணவின் போது இருக்கலாம்.


உடற் பயிற்சிகளில் பங்கேற்கவும். யோகா மற்றும் தியானத்தை மேற்கொள்ளவும். ஒவ்வொரு நாளும் எழுந்திருக்கவும் படுக்கைக்குச் செல்லவும் ஒரு வழக்கமான நேரத்தை அமைக்கவும். காலையில் ஒரு நடைப்பயிற்சிக்கு செல்லுங்கள், சிறந்த இயற்கை அமைப்பில், அல்லது யோகா மற்றும் தியானம் செய்யுங்கள். படுக்கைக்கு முன், நன்றியுணர்வு பயிற்சி. நீங்கள் ஒரு பத்திரிகையில் எழுதலாம் அல்லது உங்கள் குடும்பம் அல்லது நண்பருடன் பேசலாம். 


 டிஜிட்டல் பயன்பாட்டைக் குறைத்தல் டிஜிட்டல் கவனச்சிதறல்களைக் குறைப்பதன் மூலம் உற்பத்தித்திறன், கவனம் மற்றும் மன தெளிவை அதிகரிக்கிறது என்று மேத்தா விளக்குகிறார். இது பிரதிபலிப்பை ஊக்குவிக்கிறது, நமது அறிவாற்றல் திறன்களைத் திறக்கிறது. இது படைப்பாற்றல், பின்னடைவு மற்றும் உளவியல் நல்வாழ்வை வளர்க்கிறது என்று மேத்தா நம்புகிறார். டிஜிட்டல் கவனச்சிதறல்களைக் குறைப்பதற்கும் தொழில்நுட்பத்துடன் ஆரோக்கியமான உறவைக் கொண்டிருப்பதற்கும் எளிய நுட்பங்களை குமார் பரிந்துரைக்கிறார்.


தொழில்நுட்பத்துடன் தொடர்புகொள்வதற்கு குறிப்பிட்ட நேரங்களை அமைக்கவும் மற்றும் அறிவிப்புகளை முடக்குவதன் மூலம் கவனச்சிதறல்களைக் குறைக்கவும் தொழில்நுட்பத்திலிருந்து வழக்கமான இடைவெளிகளைத் திட்டமிடுங்கள், டிஜிட்டல் துறத்தலைப் (digital detox) பயிற்சி செய்யுங்கள்.  


வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் டிஜிட்டல் சாதனங்களை ஒதுக்கி வைக்க வேண்டிய சில பகுதிகள் அல்லது நேரத்தை வரையறுக்கவும். உதாரணமாக படுக்கையறை, உணவு உண்ணும் போது போன்றவை.தனிப்பயனாக்கப்பட்ட யோகா மற்றும் தியானப் பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். ஒவ்வொரு நாளும் எழுந்திருக்கவும் தூங்கவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயியுங்கள். 


இயற்கையில் நடைப்பயிற்சி அல்லது யோகா மற்றும் தியானம் செய்வதன் மூலம் ஒரு நாளைத் தொடங்குங்கள். இது புத்துணர்ச்சியாக உணர உதவும். மாலையில், எதற்கு நன்றி செலுத்துகிறீர்கள் என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.  இதை ஒரு பத்திரிகையில் எழுதலாம் அல்லது குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் இதைப் பற்றி பேசலாம்.


டிஜிட்டல் சாதனங்களில் குறைந்த நேரத்தை செலவிட தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தலாம். அதிக கவனத்துடனும் உற்பத்தித்திறனுடனும் இருக்க உதவும் பல மொபைல் செயலிகள் உள்ளன. உங்கள் அலைபேசியில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை இந்த பயன்பாடுகள் கண்காணிக்க முடியும். உங்கள் நேரத்தை சிறப்பாக நிர்வகிக்கவும் அவை உங்களுக்கு உதவக்கூடும். உற்பத்தித்திறன் செயலிகள் (productivity apps) பயனுள்ளதாக இருக்கும் என்று டாக்டர் சந்தோக் (Dr Chandhok) கூறுகிறார். பயனர்கள் தங்கள் டிஜிட்டல் சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணிக்க அவைகள் உதவுகின்றன. நேரத்தைக் கண்காணிப்பது, திட்டமிடல் மற்றும் பணிகளை நிர்வகிப்பதற்கான அம்சங்களும் அவற்றில் உள்ளன. இது உங்கள் டிஜிட்டல் சாதனப் பயன்பாட்டில் தெளிவான வரம்புகளை அமைக்க உதவும். இந்த கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் திரை நேரத்தை வேகமாக குறைக்கலாம். இணைய பழக்கங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்வீர்கள். தொழில்நுட்பத்தை குறைவாக பயன்படுத்த முக்கியமான மாற்றங்களைச் செய்ய இது உதவும்.  


தொழில்நுட்பம் அற்புதமானது மற்றும் நம் வாழ்க்கையை எளிதாக்குகிறது என்பதை மறுக்க இயலாது. நமது டிஜிட்டல் சாதனங்களின் மூலம், மற்றவர்களுடன் எளிதாக இணையலாம், தகவல்களை அணுகலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம். ஆனால் உண்மையான மகிழ்ச்சி திரைகளில் காணப்படவில்லை; அது உலகில் உள்ளது. நமது தொழில்நுட்ப பயன்பாட்டை நாம் கட்டுப்படுத்தவில்லை என்றால், நாம் தொடர்ந்து மன அழுத்தம் மற்றும் மகிழ்ச்சியற்றதாக உணருவோம்.




Original article:

Share:

பாதுகாக்கப்பட்ட இடங்கள் பட்டியலில் இருந்து 18 'கண்டுபிடிக்க முடியாத' நினைவுச்சின்னங்களை நீக்க இந்திய தொல்லியல் துறை முடிவு - திவ்யா ஏ

 தற்போது, இந்திய தொல்லியல் துறை (Archaeological Survey of India (ASI)) அதன் வரம்பின் கீழ் 3,693 நினைவுச்சின்னங்களைக் கொண்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் பட்டியலிடல் முடிவடைந்ததும் இது 3,675 ஆகக் குறையும். 


இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம், தனது பட்டியலிலிருந்து, 18 பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களை அகற்ற முடிவு செய்துள்ளது. ஏனெனில் இந்த தளங்கள் இனி நாட்டிற்கு முக்கியமானவை அல்ல என்று நினைக்கிறது. கடந்த ஆண்டு கலாச்சார அமைச்சகத்தால் கண்டுபிடிக்க முடியாத 24 நினைவுச்சின்னங்களின் (“untraceable” monuments) பட்டியலிலிருந்து இந்த நினைவுச்சின்னங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஹரியானாவில் உள்ள கோஸ் மினார் (Kos Minar) எண் 13, டெல்லியில் உள்ள பாரா கம்பா கல்லறை (Bara Khamba Cemetery), ஜான்சியில் உள்ள கன்னர் பர்கில் கல்லறை (Gunner Burkill’s Tomb), லக்னோவில் உள்ள கவுகாட்டில் உள்ள கல்லறை மற்றும் வாரணாசியில் உள்ள தெலியா நாலா புத்த இடிபாடுகள் (Telia Nala Buddhist ruins) ஆகியவை பட்டியலில் உள்ள சில நினைவுச்சின்னங்கள். 


ஒரு நினைவுச்சின்னம் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், அதைப் பாதுகாப்பதற்கு இந்திய தொல்லியல் துறை இனி பொறுப்பேற்காது, மேலும் வழக்கமான கட்டுமானம் மற்றும் நகரமயமாக்கல் இப்பகுதியில் நிகழலாம். இந்திய தொல்லியல் துறை தற்போது 3,693 நினைவுச்சின்னங்களை மேற்பார்வையிடுகிறது, ஆனால் அவை பட்டியலிடப்படுவதை முடித்தவுடன், அது சில வாரங்களில் 3,675 ஆக குறைக்கப்படும்.


இதற்கான அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்பு கடந்த வாரம் மார்ச் 8இல் வெளியிடப்பட்டது. 1958 ஆம் ஆண்டின் பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டத்தின் பிரிவு 35 ஐ (Section 35 of the Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1958 (AMASR Act)) இந்திய தொல்லியல் துறை பயன்படுத்தியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 18 நினைவுச்சின்னங்களை ஒரு பட்டியலில் இருந்து நீக்குவதைப் பற்றியதாகும். ஏனெனில் அவை இனி தேசத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படவில்லை. இந்த நினைவுச்சின்னங்கள் இனி முக்கியமில்லை என்று அதிகாரப்பூர்வமாக கூற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்குள் மக்கள் தங்கள் கருத்துக்களை அல்லது ஆட்சேபனைகளை தெரிவிக்க வேண்டும் என்று அது கேட்டுக் கொண்டது.


பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் (Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1958 (AMASR Act)) தேசத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படும் நினைவுச்சின்னங்களை இந்திய தொல்லியல் துறை கவனித்துக்கொள்ள வேண்டும். இந்த தளங்கள் வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கு முக்கியமானவை. இந்த பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் எந்த கட்டுமானப் பணிகளும் இருக்கக்கூடாது என்று முந்தைய ஆண்டு டிசம்பர் 8 அன்று, கலாச்சார அமைச்சகம் (Ministry of Culture) நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. அதன் பராமரிப்பில் உள்ள 3,693 நினைவுச்சின்னங்களில் 50 காணாமல் போயுள்ளன. போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு 'இந்தியாவில் கண்டுபிடிக்க முடியாத நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள்' (Issues relating to Untraceable Monuments and Protection of Monuments in India) என்ற தலைப்பில் வழங்கப்பட்ட அறிக்கையின் ஒரு பகுதியாக இந்த தகவல் இருந்தது.  


பல்வேறு மாநிலங்களில் பல நினைவுச் சின்னங்கள் காணாமல் போயுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 11 நினைவுச் சின்னங்கள் காணாமல் போயுள்ளன. டெல்லி மற்றும் ஹரியானா தலா இரண்டு காணாமல் போயுள்ளன. மேலும், அசாம், மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள நினைவுச்சின்னங்களும் காணவில்லை. கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய தொல்லியல் துறையின் கூற்றுப்படி, காணாமல் போன 50 நினைவுச்சின்னங்களில், 14 விரைவான நகரமயமாக்கல் காரணமாக இழந்துவிட்டன, 12 நீர்த்தேக்கங்கள் அல்லது அணைகளால் மூழ்கியுள்ளன, மேலும் 24 இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவற்றில், பட்டியலிடப்பட வேண்டிய 18 நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்படாத 24 நினைவுச்சின்னங்களின் ஒரு பகுதியாகும்.

  

2013 ஆம் ஆண்டில், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG)) 92 நினைவுச்சின்னங்களை நேரடியாக கள ஆய்வு செய்த  பின்னர் காணாமல் போனதைக் கண்டறிந்தார். இது, சுதந்திரத்திற்குப் பிறகு இதுபோன்ற முதல் சோதனை ஆகும். பின்னர், காணாமல் போன இந்த நினைவுச்சின்னங்களில் 42 அடையாளம் காணப்பட்டதை இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது. மீதமுள்ள 50 நினைவுச்சின்னங்கள் பற்றிய விவரங்களை இந்திய தொல்லியல் துறை வழங்கியது, அவை நகரமயமாக்கல், நீர்த்தேக்கங்கள் / அணைகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்து  மற்றும் சிலவற்றை கண்டுபிடிக்க இயலவில்லை.


நகரமயமாக்கல் அல்லது நீர்த்தேக்கங்களால் இழந்த நினைவுச்சின்னங்களுக்கு இடையே அர்த்தமுள்ள வித்தியாசம் உள்ளது என்ற கருத்தை நாடாளுமன்றக் குழு கடுமையாக விமர்சித்தது. இது ஒரு ஆடம்பரமான கல்வி வேறுபாடு என்று அவர்கள் கூறினர், ஏனெனில் இழந்த இரண்டு வகையான நினைவுச்சின்னங்களையும் மீட்டெடுக்க முடியாது.


இந்த விமர்சனம் பட்டியலிலிருந்து 18 நினைவுச்சின்னங்களை நீக்குவதற்கான முடிவோடு ஒத்துப்போகிறது. இந்திய தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட தளங்களில் பல "சிறிய நினைவுச்சின்னங்கள்" சேர்க்கப்படுவதை நாடாளுமன்றக் குழு குறிப்பிட்டு கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவு, பட்டியலை இன்னும் தர்க்கரீதியாகவும் ஒழுங்காகவும் உருவாக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது. தேசத்திற்கான முக்கியத்துவம், தனித்துவமான கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் குறிப்பிட்ட பாரம்பரிய மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நினைவுச்சின்னங்களை வகைப்படுத்த அவர்கள் பரிந்துரைத்தனர்.


திவ்யா, பயணம், சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் பற்றி எழுதும் ஊடகவியலாளர்.    

 




Original article:

Share:

இந்தியாவில் டிஜிட்டல் நிதி மோசடிகள் (Digital financial frauds) : மேம்பட்ட விசாரணை உத்திகளுக்கான ஓர் அழைப்பு - பாரத் ரெட்டி

 இந்திய இணையவழிக் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (Indian Cybercrime Coordination Centre) சமீபத்திய அறிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளில் டிஜிட்டல் நிதி மோசடிகள் (digital financial frauds) மொத்தம் ரூ.1.25 லட்சம் கோடி என்று தெரிவாக்கப்பட்டுள்ளது.  இந்த அறிக்கை இந்தியாவில் இணையவழிக் குற்றங்களின் தீவிர தன்மையைக் காட்டுகிறது. இதுபோன்ற கணினி கட்டமைப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஜாமீன் வழங்குவதை நீதிமன்றங்கள் கடுமையான நிபந்தனைகளை நிர்ணயிக்கலாம்.


இந்தியாவில் இணையவழிக் குற்றம் வளர்ந்து வரும் பிரச்சனையாக உள்ளது. இது மில்லியன் கணக்கான மக்களையும் நிறுவனங்களையும் பாதிக்கிறது. 2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் இணையவழிக் குற்றங்கள் ₹66.66 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau (NCRB))  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 4,850 இணையவழிக் குற்ற  வழக்குகள் பதிவாகி  உள்ளன. இந்திய சைபர்  குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையத்தின் (Indian Cybercrime Coordination Centre ((I4C)) அறிக்கையின் படி, கடந்த மூன்று ஆண்டுகளில், டிஜிட்டல் நிதி மோசடிகளால்  ₹ 1.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. தேசிய இணையவழிக் குற்ற அறிக்கையிடல் இணையதளம் (National Cybercrime Reporting Portal (NCRP)), 2023 ஆம் ஆண்டில், டிஜிட்டல் நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தபட்சம் ₹10,319 கோடியை இழந்துள்ளனர் எனக் குறிப்பிடுகிறது. நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு "சைபர் பாதுகாப்பு (cyber security) மற்றும் அதிகரித்து வரும்  இணையவழிக் குற்றங்கள் குறித்து ஒரு அறிக்கையை எழுதியது. 2023 நிதியாண்டில், மேற்பார்வை நிறுவனங்கள் (Supervising Entities (SE)) புகாரளித்த உள்நாட்டு மோசடி ₹2537.35 கோடி என்று அது கூறுகிறது. 2023ல் 6.94 லட்சம் புகார்கள் வந்தன.


இணையவழி நிதி மோசடிகளைத் தடுப்பதற்கும் கண்டறிவதற்குமான தீர்வுகளுடன், விசாரணைகளின் போது நாம் எதிர்கொள்ளும் சில சிக்கல்கள் இங்கே உள்ளன.


இணைய (digital) மோசடிகள் எவ்வாறு செயல்படுகின்றன ?

மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றனர்


1.வெவ்வேறு வகையான மோசடிகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உள்ளன, ஆனால் மோசடி செய்பவர்கள் பொதுவாக இந்த முறைகளில் ஒன்றைப் பயன்படுத்துகின்றனர்: ஆள்மாறாட்டம் (போலியான WhatsApp/Facebook/Instagram சுயவிவரங்கள்) அல்லது பெரிய வருமானம் முதலீடு, கிரிப்டோகரன்சி, வைத்திருக்கும்- தனிப்பயன் தொகுப்புகள், முதலியன. 


2. மோசடி செய்பவர்கள் உங்களின் யு.பி.ஐ எண் / ஒருங்கிணைந்த கட்டண இடைமுக அடையாளத்தை (Unified Payments Interface ID (UPI)), பேன் எண் / தனிப்பட்ட அடையாள எண்   (Personal Identification Number (PIN)), ஒருமுறை கடவுச்சொல் (One-Time Password (OTP)) அல்லது இணைய வங்கி கடவுச்சொல்லைக் கேட்கலாம். பிற இணையதளங்களில் இந்த விவரங்களைப் பயன்படுத்தி உங்களுக்குத் தெரியாமல் பணத்தைப் பரிமாற்றுவார்கள். யு.பி.ஐ செயலி திரையை (UPI app screen) அல்லது ஆன்லைன் வங்கி இணையதளம் (banking website) போன்று தோற்றமளிக்கும் போலி இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் அவர்கள் உங்களை ஏமாற்றலாம் அல்லது திரை பகிர்வு பயன்பாடு (screen sharing app) நிறுவும்படி உங்களை அவர்கள் தூண்டலாம். இந்த விவரங்களைத் தரும்படி அவர்கள் உங்களைத் தொலைபேசியிலும் சமாதானப்படுத்தலாம். உத்தியோகபூர்வ வங்கிச் செயலிகளில் இந்த விவரங்களைப் பயன்படுத்தும்போது, அவர்கள் நிலையான வைப்புத்தொகை/தொடர் வைப்புத்தொகைகளை அணுகலாம், அவை பெரும்பாலும் வெளியேறும்.


(c) மோசடி செய்பவர்கள் உங்கள் கார்டு விவரங்களைக் கேட்டு, உங்கள் ஒருமுறை கடவுச்சொல்லை  பகிர வற்புறுத்தலாம்.


மோசடிக்குப் பிறகு


ஒரு மோசடி செய்பவர் பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து மூன்று நிலைகளில் நகர்த்துகிறார்.  

1. முதலில், பாதிக்கப்பட்ட மற்றவர்களிடமிருந்து பணம் சேகரிக்க அதை தற்காலிக கணக்கில் வைக்கிறார்கள்.   

2. பின்னர், பணத்தை மாற்ற உதவும் பல இடைத்தரகர்களிடையே பகிரப்பட்ட இரண்டாவது கணக்கிற்கு அதை மாற்றுகிறார்கள்.  

3. இறுதியாக, பணம் மூன்றாவது கணக்கில் முடிவடைகிறது அங்கு திருடப்பட்ட பணம் அனைத்தும் ஏடிஎம்கள், காசோலைகள் அல்லது இ-வாலட் பண விற்பனை நிலையங்களைப் (e-wallet cash outlets) பயன்படுத்தி ஒரு பெரிய தொகையில் திரும்பப் பெறப்படுவதற்கு முன்பு சேகரிக்கப்படுகிறது.  

    

மோசடிகளை எவ்வாறு தடுக்கலாம் 


சில அடிப்படை தொழில்நுட்ப தலையீடுகள் மூலம் பெரும்பாலான மோசடிகளைத் தடுக்கலாம்:


1. முதல் கட்டமாக, புதிய சாதனத்திலிருந்து உள்நுழைவதற்கு Google கணக்குகளுக்கு எப்படி அனுமதி தேவைப்படுகிறதோ, அதேபோன்று நிதி நிறுவனங்களும் தங்கள் செயலியில்  இந்த அம்சத்தைச் சேர்க்க வேண்டும்.


2. அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்க வங்கி மற்றும் நிதி பயன்பாடுகளுக்கான திரை பகிர்வு வசதியை முடக்க வேண்டும்.


3. வங்கி அறிக்கைகள் தெளிவாக இருக்க வேண்டும், பெறுநர் கணக்கு / மொபைல் எண்கள் உட்பட புரிந்துகொள்ளக்கூடிய பரிவர்த்தனை விவரங்களைக் காட்ட வேண்டும்.  


சட்ட அமலாக்க முகமைகள் (Law enforcement agencies) பணப் பாதையைக் கண்காணிக்கப் போராடுகிறார்கள். ஏனெனில் இது கணக்குகளுக்கு இடையில் விரைவாக நகர்கிறது. வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்கள் தேவையான விவரங்களை உடனடியாக வழங்குவதில்லை. இது பெரும்பாலும் குற்றங்கள் மிகவும் தாமதமாக புகாரளிக்க வழிவகுக்கிறது. வழக்கமாக, குற்றங்கள் 24 மணி நேரத்திற்குப் பிறகு புகாரளிக்கப்படுகின்றன. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மன அழுத்தம் காரணமாக ஆதாரங்களை அழிக்கிறார்கள். பணப் பாதை கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், பணம் திரும்பப் பெறப்பட்டு, குற்றவாளியை அடையாளம் காண்பது அல்லது பணத்தை மீட்டெடுப்பது கடினமாகிறது.


தகவல் அணுகலை விரைவுபடுத்துதல்


அமலாக்க முகமைகளுக்கு (enforcement agencies) வழங்கப்படும் தரவு வடிவத்தில் சில அடிப்படை மாற்றங்கள் தாமதங்களைக் குறைக்க உதவும்:


(a) வங்கிகள், தேசிய இணையவழிக் குற்றங்களை புகாரளிப்பதற்கான இணையதளங்கள் மற்றும் மேற்பார்வை நிறுவனங்கள்  ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் தரவை வழங்க வேண்டும். அவர்கள் அனைத்து விதிமுறைகளையும் தெளிவாக விளக்க வேண்டும். தரவு CSV அல்லது XLSX கோப்பு வடிவத்தில் இருக்க வேண்டும். உதாரணமாக, அமலாக்க முகமைகளுக்கு வழங்கப்பட்ட அழைப்பு தரவு பதிவு (Call Data Record (CDR)) எப்போதும் ஒரு குறிப்பிட்ட வடிவத்திலும் கோப்பு வகையிலும்  .CSV அல்லது .XLSX. வடிவிலும் இருக்கும்.  இப்போது, வங்கிகள் வழக்கமாக அறிக்கைகளை அச்சிடப்பட்ட நகலாக (printed hardcopy) அல்லது கையடக்க ஆவண வடிவத்தில் (Portable Document Format (PDF))  வழங்குகின்றன. இது புலனாய்வாளர்களுக்கு விஷயங்களை கடினமாக்குகிறது. எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வடிவத்தில் தரவைப் பெற முடியாத காரணத்தினால், தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற பல அதிகாரிகள் கூட தங்கள் வேலையை விரைவாக செய்ய முடிவதில்லை. 


(ஆ) சர்வதேச மொபைல் உபகரண அடையாள எண்ணை (International Mobile Equipment Identity (IMEI)) பதிவு செய்வது முக்கியம். அனைத்து வங்கி மற்றும் நிதி பயன்பாடுகளும் பயன்படுத்தப்படும் சாதனங்களின் சர்வதேச மொபைல் உபகரண அடையாள விவரங்களை வைத்திருக்க வேண்டும். மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் போலி மொபைல் எண்கள் மற்றும் வங்கி கணக்குகளைப் பயன்படுத்துகின்றனர். இவை பல்வேறு மாநிலங்களில் பரவியுள்ளன. அவர்களின் நோக்கம் தங்கள் அடையாளத்தை மறைத்து,  முகமைகள் அவர்களைப் பிடிப்பதை கடினமாக்குவதாகும். எந்த சாதனம் பயன்படுத்தப்பட்டது, அது எங்கு இருந்தது என்பதைக் கண்டுபிடிப்பதில் சர்வதேச மொபைல் உபகரண அடையாள எண் மிகவும் முக்கியமானது. சர்வதேச மொபைல் உபகரண அடையாள எண்ணைக் கொண்டிருப்பது மிகவும் வலுவான ஆதாரமாக அமைகிறது. இது ஒரு சாதனத்திற்கும் மோசடி செய்பவர்களுக்கும் இடையிலான தொடர்பை நீதிமன்றத்தில் காட்ட உதவுகிறது.


முன்னோக்கி செல்லும் பாதை


பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 (Bharatiya Nagarik Suraksha Sanhita 2023). 1861 இன் இந்திய தண்டனைச் சட்டத்தை (Indian Penal Code of 1861) மாற்றும். இது டிஜிட்டல் நிதி மோசடிகள் உட்பட தொடர்ச்சியான சட்டவிரோத நடவடிக்கையாக (“continuous unlawful activity”) 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தை' (organised crime) வரையறுக்கிறது. பெரிய குழுக்கள் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் தேவை காரணமாக சட்ட அமலாக்க முகமைகள் மாநில எல்லைகளில் சோதனைகள் மற்றும் கைதுகளை செய்யும்போது பல சவால்களை எதிர்கொள்கின்றன. மாநிலங்களுக்கு இடையேயான டிஜிட்டல் நிதி மோசடி  செய்பவர்களுக்கு ஜாமீன் வழங்குவதை நீதிமன்றங்கள் கட்டுப்படுத்தலாம். இணைய மோசடிகளும் கணிசமான அளவில் கறுப்புப் பணத்தை உருவாக்குகின்றன. சைபர் கிரைம், குற்றத்தின் துணைக்குழுவாக, பாரம்பரிய குற்றங்களைப் போலவே கையாள முடியும், ஆனால் வெவ்வேறு கருவிகளைக் கொண்டு. நிதி தொழில்நுட்பம் (fintech) மற்றும் தொலை தொடர்பு (telecom) தொழில்கள் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மற்றும் விரைவான விசாரணைகளுக்கான தரவை வழங்க வேண்டும் என்றால், அது தடுப்பு, கண்டறிதல், மீட்பு மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தும். தரவுகளுக்கான விரைவான அணுகல், அகில இந்திய அளவில் செயல்படும் கும்பல்களை மிக எளிதாக அடையாளம் கண்டு தண்டனை வழங்க உதவும்.  


கட்டுரையாளர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி. தற்போது டெல்லி காவல்துறையின் பணியாற்றுகிறார்.




Original article:

Share: