மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தாமதப்படுத்துவது ஆபத்தானது. -என். ராமராவ்

2011-ஆம் ஆண்டுக்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாதது, அரசின் திட்டங்களை மக்கள் பெற இயலாத சூழலை உருவாக்குகிறது. 


நிர்வாக எல்லைகளை (administrative boundaries) இறுதி செய்வதற்கு ஜூன் 30, 2024 வரையிலான காலக்கெடுவை ஒன்றிய அரசு நீடிக்காததால்,  2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்னோட்டமாக 2020-ல் தொடங்க திட்டமிடப்பட்ட பத்தாண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் குறைந்தபட்சம் தொடங்கும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தனர். ஆனால், அந்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு 2024-அக்டோபரில் தொடங்கலாம் என்று மக்கள் நம்புகின்றனர். எல்லைப் பகுதிகளை உறுதிசெய்த பிறகு, மக்கள்தொகை கணக்கெடுப்பு களப்பணிக்குத் தயாராக மூன்று மாதங்கள் ஆகும்.


எவ்வாறாயினும், 2024-25 பட்ஜெட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ₹1,309.46 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டதால் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போனது. இது 2021-22 மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக வழங்கப்பட்ட ₹3,768 கோடியை விட மிகக் குறைவானத் தொகையாகும். இது போன்ற நடவடிக்கைகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடக்காது என்று மறைமுகமாக தெரிவிக்கிறது. அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்னும் தாமதமாகிறது. மேலும், அரசாங்கம் மக்கள்தொகை கணக்கெடுப்பை பற்றி எந்த ஒரு தகவலையும் முழுமையாக வெளியிடவில்லை. 


ஒரு முழுமையான தேவை


மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைவாக நடத்துவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. ஏனெனில், 2011-ஆம் ஆண்டிற்கு  பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறாதது, பெரும்பாலான மக்கள் பல்வேறு திட்டங்கள் மற்றும் பலன்களை பெற இயலாத சூழலை உருவாக்குகிறது. மேலும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை மக்கள் தொகை கணக்கெடுப்பு முடியும் வரை செயல்படுத்த முடியாது.


22025-26-ல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்காக பட்ஜெட்டில் போதுமான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும். 2021-மக்கள்தொகை கணக்கெடுப்பை 2026-ல்  நடத்த முடியும் என்பதை இது போன்ற நடவடிக்கைகளே உறுதி செயயும். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதமாகி வருகிறது. எனவே, 2025-ல் முதல் கட்டமாக வீடுகளின் பட்டியல், வீட்டுக் கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (National Population Register (NPR)) புதுப்பித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். 

 

கடந்த சில ஆண்டுகளாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தயாராகி வருகின்றன.  புதுப்பிக்கப்பட்ட வரைபடங்கள் மற்றும் நிர்வாகப் பகுதிகளின் பட்டியல்கள். பரிசோதிக்கப்பட்ட வரைவு மக்கள் தொகை கணக்கெடுப்பு கேள்வித்தாள்கள். பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் முக்கிய ஊழியர்கள்  மொபைல் செயலியை பயன்படுத்தி தரவுகளை சேகரிக்கவும் மற்றும் கள ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் தயாராக உள்ளனர்.


சென்னையில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகத்திற்கு (Census Directorate) நான் சென்றபோது, ​​புதிய தேதி நிர்ணயம் செய்யப்பட்டவுடன் மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடங்க அதிகாரிகள் தயாராக இருப்பதைக் கண்டேன். அவர்களுக்கு விரைவான பயிற்சி மட்டுமே தேவை. 2024-25 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ₹1,309.46 கோடியை  கணக்கெடுப்பு பகுதிகளை இறுதி செய்தல், மக்கள் தொகை கணக்கெடுப்பு கேள்வித்தாளை இறுதி செய்தல், முன்மொழியப்பட்ட டிஜிட்டல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் முக்கியப் பணியாளர்களின் புத்தாக்கப் பயிற்சி போன்ற ஆரம்ப கால நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பயன்படுத்தப்படலாம்.


2001-ஆம் ஆண்டில்  கொண்டுவரப்பட்ட எண்பத்து நான்காவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 2026-ஆம் ஆண்டு முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் வரை தொகுதிகளை வரையறுப்பதைத் தடுக்கிறது. 2027-ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன் முடிவுகளை எல்லை நிர்ணயத்திற்கு பயன்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டால், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான குறிப்பு தேதி அறிவிக்கப்பட வேண்டும். விரைவில்,  நிர்வாக அலகுகளின் எல்லைகளை தீர்மானிப்பதற்கான புதிய காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த காலக்கெடுவை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.


தெளிவுப்படுத்தல்கள் 


நாட்டில் வாழும் மக்களின் முழுமையான தரவுத்தளத்தை உருவாக்க, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (National Population Register (NPR)) முதன்முதலில் 2010-ல் உருவாக்கப்பட்டது. இதில் கிராமங்கள், பிற கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டு  மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது  வீட்டுக் கணக்கெடுப்புக் கட்டம்  போன்ற விவரங்களை சேகரித்து, பிறப்பு, இறப்பு மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றிலிருந்து மாற்றங்களைச் சேர்க்க 2015-ல்  தேசிய மக்கள்தொகைப் பதிவேடு  புதுப்பிக்கப்பட்டது. இந்த புதுப்பிப்பு 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தைப் (Citizenship Act) பின்பற்றியது. வரவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் (கட்டம் 1) போது தேசிய மக்கள்தொகைப் பதிவேடு மீண்டும் புதுப்பிக்கப்படும்.


அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தேசிய மக்கள்தொகைப் பதிவேடு வரைவில் "தாய்மொழி", "தந்தை மற்றும் தாய் பிறந்த இடம்" மற்றும் "கடைசியாக வசிக்கும் இடம்" போன்ற புதிய கேள்விகள் கேட்கப்பட உள்ளது. இந்தக் கேள்விகள் 2011-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட  தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் இடம் பெறவில்லை. சில மாநிலங்கள் மற்றும் குடிமக்கள் குழுக்கள் இந்தப் புதிய கேள்விகளை எதிர்க்கின்றன. ஏனெனில் குடியுரிமை விதிகள் 2003 (Citizenship Rules 2003)-இன் படி தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேட்டை (National Register of Citizens (NRC)) உருவாக்குவதற்கான முதல் படி என்று அவர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை  உருவாக்க தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) தரவு பயன்படுத்தப்படாது என்று ஒன்றிய  அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய கேள்விகளை வரவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து நீக்க வேண்டுமா என்பதை ஒன்றிய  முடிவு செய்ய வேண்டும். புதிய அறிவிப்பு காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அக்டோபர் 2024 வரை தாமதமாகும்.


சாதிகள் பற்றிய தகவல் 


சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பொருளாதார நிலைமைகளை நன்கு புரிந்து கொள்ள ஜாதிவாரி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான கோரிக்கை அதிகரித்து வருகிறது. செப்டம்பர் 23, 2021 அன்று, ஜாதி வாரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில் (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான வழக்கமான தரவுகளுக்கு அப்பாற்பட்டது) திட்டங்களை செயல்படுத்துவது கடினம் மற்றும் நிர்வாக ரீதியாக சவாலானது என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய  அரசு கூறியது. அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிகள் குறித்த தகவல்களைச் சேர்ப்பதா என்பதை ஒன்றிய  அரசு முடிவு செய்ய வேண்டும்.


என். ராமராவ் ஓய்வு பெற்ற துணைப் பதிவாளர் (மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அட்டவணை) ஆவார்.



Original article:

Share:

இந்தியாவின் 69 பள்ளி வாரியங்களில் சமத்துவத்திற்கான பரிந்துரைகள் -அபிநயா ஹரிகோவிந்த்

 தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) 2020-க்கு இணங்க, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (National Council of Educational Research and Training (NCERT)) கீழ் தரநிலை நிர்ணய அமைப்பான பராக் (PARAKH -  Performance Assessment, Review, and Analysis of Knowledge for Holistic Development), கல்வி அமைச்சகத்திடம் ஒரு ‘சமநிலை’ அறிக்கையைச் (‘equivalence’ report) சமர்ப்பித்துள்ளது.   


பராக் (PARAKH) என்பது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) கீழ் உள்ள ஒரு தரநிலை அமைப்பாகும். பராக் சமீபத்தில் கல்வி அமைச்சகத்திடம் 'சமநிலை' அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அவ்வறிக்கையில், நாட்டில் உள்ள பல்வேறு பள்ளி வாரியங்களில் சமத்துவத்தை எவ்வாறு அடைவது என்பது குறித்த பரிந்துரைகளை வழங்குகிறது. இது தேசிய கல்விக் கொள்கை 2020-இல் உள்ள சமத்துவம் பற்றிய குறிப்புடன் ஒத்துப்போகிறது. 


பராக் (PARAKH) போன்ற ஒரு அமைப்பை உருவாக்குவதற்கு தேசிய கல்விக் கொள்கை அதிகாரம் வழங்குகிறது. மேலும், பராக் (PARAKH) "பள்ளி வாரியங்களுக்கிடையில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், அனைத்துப் பள்ளி வாரியங்களில் உள்ள மாணவர்களிடையே கல்வித் தரங்களின் சமநிலையை உறுதி செய்வதற்கும் ஒரு கருவியாக மாறும்" என்று கூறுகிறது. 


வாரியங்களுக்கிடையேயான  சமநிலை  (equivalence across boards) என்றால் என்ன ?


பாடத்திட்டம், தேர்வுகள் மற்றும் வாரியத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் பள்ளி வாரியங்கள் இப்போது ஒன்றுக்கொன்று வேறுபட்டவை என்று ஒரு அரசாங்க அதிகாரி சுட்டிக்காட்டினார். இதன் விளைவாக, சில வாரியங்களை மற்ற வாரியங்களை விட "சிறந்ததாக" காணப்படுகின்றன.


இந்தியாவில் 69 பள்ளி வாரியங்கள் உள்ளன. இதில் மாநில வாரியங்கள், சிபிஎஸ்இ (CBSE), ஐசிஎஸ்இ (ICSE), தேசிய திறந்தநிலைப் பள்ளி (National Institute of Open School (NIOS)) மற்றும் பிற திறந்தநிலை பள்ளி வாரியங்கள் அடங்கும். கூடுதலாக, தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி வாரியங்கள், சமஸ்கிருத வாரியங்கள் மற்றும் மதரஸா வாரியங்களும் உள்ளன. சில மாநில வாரியங்கள் இடைநிலைக் கல்விக்கு மட்டுமே உள்ளது. மற்றவை உயர்நிலைப் படிப்புக்கானவை. சில மாநில வாரியங்கள் இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வி இரண்டையும் உள்ளடக்கியது.


'சமநிலை' அறிக்கை ஐந்து வகைகளில் வாரியங்களுக்கான தரநிலைகளை அமைக்கிறது. நிர்வாகம் (administration), பாடத்திட்டம் (curriculum), மதிப்பீடு (assessment), உள்ளடக்கிய தன்மை (inclusiveness) மற்றும் உள்கட்டமைப்பு (infrastructure) ஆகியவை இந்த வகைகளாகும். ஒரு அதிகாரி சமத்துவத்தைப் பின்தொடர்வதன் பின்னணியில் உள்ள நோக்கத்தை விளக்கினார். இது வாரியங்கள் முழுவதும் "ஒற்றுமையை" நிறுவுவது அல்ல. அதற்கு பதிலாக,எந்தவொரு குழுவுடன் இணைந்த பள்ளியில் சேரும் ஒவ்வொரு கற்பவரும் சில வசதிகளைப் பெறுவதை இந்தக் கொள்கை உறுதி செய்கிறது. இந்த வசதிகள் தரப்படுத்தப்பட்டவை மற்றும் செயல்திறனுக்கான தரப்படுத்தப்பட்டவை.  


பராக் என்ன பரிந்துரைகளை செய்துள்ளது?


ஒரு முக்கிய பரிந்துரை மதிப்பீட்டைப் பற்றியது. 9ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் செயல்திறன் 12ஆம் வகுப்புக்கான இறுதி மதிப்பீட்டில் கணக்கிடப்படும்.  12 ஆம் வகுப்பு அறிக்கை அட்டை முந்தைய ஆண்டுகளின் கிரேடுகளின் கலவையாக இருக்கும், ஒவ்வொரு வகுப்பிற்கும் வெவ்வேறு மதிப்புகள் (weightage) வழங்கப்படும். குறிப்பாக, இறுதி முடிவுகளில் பின்வருவன அடங்கும்:

- 9 ஆம் வகுப்பிற்கு 15%,

- 10 ஆம் வகுப்பிற்கு 20%,

- 11 ஆம் வகுப்பிற்கு25%,

- மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு 40%.


மற்றொரு பரிந்துரை மதிப்பீடுகளுக்கான கிரெடிட்டுகள் (credits) பற்றியது. முழுமையான முன்னேற்ற நிலையின் ஒரு பகுதியாக இருக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும், ஆன்லைன் படிப்புகளுக்கும், செயல்பாடுகளுக்கும் மாணவர்கள் கிரெடிட்டுகளைப்  பெறுவார்கள். முன்னேற்ற அட்டையில் 'நேர மேலாண்மை' (time management) மற்றும் 'பள்ளிக்குப் பிந்தைய திட்டங்கள்' (plans after school) போன்ற அம்சங்களில் சுய மதிப்பீடு இருக்கும். குழு திட்டப்பணி மற்றும் சக கருத்துகளில் ஆசிரியரின் மதிப்பீடும் இதில் அடங்கும். 


பராக் (PARAKH), வாரியங்கள் 'தொழில்முறை தேர்வுத்தாள்கள் உருவாக்குபவை' (professional paper setters) - அதாவது ஆசிரியர்கள் தேர்வுக்கான வினாத்தாள்களை உருவாக்கும் திறனுடையவர்களாக பயிற்றுவிக்கப்பட்டவர்கள் எனும் நிலையை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.  இவர்களின் பயிற்சியானது வினாத்தாள் தயாரிப்பதில் கவனம் செலுத்தும். 9, 10, 11, மற்றும் 12 வகுப்புகளுக்கான மதிப்பீடுகளில் தரப்படுத்தலை உறுதி செய்வதே இவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். 


9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு, வழங்கப்படும் அனைத்து பாடங்களுக்கும் ஒரு கேள்வி வங்கியை வாரியங்கள் உருவாக்க வேண்டும் என்று PARAKH பரிந்துரைக்கிறது. கூடுதலாக, வினாத்தாளை உருவாக்குவதற்கான புளூ பிரிண்ட்டும் தயாரிக்கப்பட வேண்டும். இணைப்புப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் வினாத்தாள்களைத் தயாரிக்க வினா வங்கி மற்றும் புளூ பிரிண்ட்டை பயன்படுத்தலாம். 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வினாத்தாள் புளூ பிரிண்ட்டை உருவாக்கவும் பராக் பரிந்துரைக்கிறது.


வினாத்தாள்களின் தரப்படுத்தலுக்கு, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு, வழங்கப்படும் அனைத்து பாடங்களுக்கும் ஒரு கேள்வி வங்கியை வாரியங்கள் உருவாக்க வேண்டும் என்று PARAKH பரிந்துரைக்கிறது. வினாத்தாளை உருவாக்குவதற்கான புளூ பிரிண்ட்டும் தயாரிக்கப்பட உள்ளது மற்றும் இணைக்கப்பட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் வினா வங்கி மற்றும் புளூ பிரிண்ட்டின் அடிப்படையில் வினாத்தாளைத் தயாரிக்கலாம். 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு வினாத்தாள் புளூ பிரிண்ட்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.


நிர்வாகத்தைப் பொறுத்தவரை, வாரியங்களால் குறிப்பிடப்பட்ட பள்ளி இணைப்புக்கான வழிகாட்டுதல்கள் அதன் பரிந்துரைகளின்படி இறுதி செய்யப்பட வேண்டும் என்று PARAKH பரிந்துரைத்துள்ளது. ஒரு பள்ளி அதனுடன் இணைக்கப்பட வேண்டிய குறிப்பிட்ட நிபந்தனைகளை வாரியங்கள் வகுக்கின்றன - உதாரணமாக, சிபிஎஸ்இ, பள்ளியானது ஒரேயொரு, தொடர்ச்சியான நிலத்தில் அமைந்திருக்க வேண்டும், சரியான விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும் என்று கூறும் நிபந்தனைகள் உள்ளன. பொருத்தமான கட்டிடமும் இதில் அடங்கும்.


PARAKHஇன் பரிந்துரையில் வாரியங்கள் தங்களுடன் இணைந்த பள்ளிகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறது. பள்ளிகள் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே இணைப்புகளைப் பெற வேண்டும்.


சில மாநிலங்களில், கல்வி இயக்குநரகம் பள்ளிகளை அங்கீகரித்து இணைக்கிறது. பள்ளிகளை அங்கீகரித்து இணைக்கும் அதிகாரத்தை வாரியங்களுக்கு வழங்க வேண்டும் என்று பராக் பரிந்துரைத்துள்ளது. மேலும், அங்கீகாரம் பெறாத நிறுவனங்களை வாரியங்கள் கண்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் நெறிமுறையை வாரியங்கள் உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைகள் கூறுகின்றன. தேர்வுத் தாள்களைக் கையாள்வதற்கான நெறிமுறைகளை அவர்கள் செயல்படுத்த வேண்டும். வாரியங்கள் தேவையான இடங்களில் டிஜிட்டல் மதிப்பீடுகளையும் நடத்த வேண்டும்.


பாடத்திட்டத்தின் அடிப்படையில், வாரியங்களில் இணைந்த பள்ளிகளில் டிஜிட்டல் கல்வியறிவை இணைக்க வேண்டும், இதில் குறியீட்டு முறை மற்றும் இணையப் பாதுகாப்பில் பயிற்சி மற்றும் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பைக் கடைப்பிடிக்க வேண்டும்.

வாரியங்கள், அவற்றுடன் இணைந்த பள்ளிகளின் உள்கட்டமைப்பின் அடிப்படையில்,  அடிப்படைக் கட்டமைப்புகள் - பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான கழிப்பறைகள், இணைய இணைப்பு, நூலகம், வினாத்தாள்களுக்கான ஸ்ட்ராங்ரூம், ஆய்வகங்கள், சாய்வுதளங்கள் அல்லது மின்தூக்கிகள் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.


இந்தப் பரிந்துரைகள் எப்படி வந்தன?


சமஸ்கிருத வாரியங்கள், மதரஸாக்கள் மற்றும் தொழில்நுட்ப வாரியங்களைத் தவிர்த்து, மொத்தம் 32 வாரியங்கள், நிர்வாகம், பாடத்திட்டம், மதிப்பீடு, உள்ளடக்கம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய ஐந்து அளவுருக்களின்படி அவற்றின் தற்போதைய நிலையை தீர்மானிக்க மதிப்பீடு செய்யப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்கான வாரியங்களின் வினாத்தாள்களின் பகுப்பாய்வு மற்றும் ஐந்து அளவுருக்கள் குறித்த கேள்விகள் கொண்ட வினாத்தாள் இதற்குப் பயன்படுத்தப்பட்டது. பராக் பள்ளி வாரியங்களுடன் ஆலோசனைகளை நடத்துவதற்காக பல கூட்டங்களை நடத்தியது.

  

அடுத்து என்ன நடக்கும்?


பராக் கடந்த வாரம் ஏழு மாநில வாரியங்களின் பிரதிநிதிகளுடன் 'சமநிலை' அறிக்கையில் உள்ள பரிந்துரைகளைப் பற்றி விவாதிக்க ஒரு மாநாட்டை நடத்தியது. 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களில் 9 ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் 40% மற்றும் 10 ஆம் வகுப்பில் 60% அடங்கும் என்று மாநிலங்கள் பரிந்துரைத்துள்ளன, அதே நேரத்தில் 12 ஆம் வகுப்பில் 11 ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் 40% மற்றும் 12 ஆம் வகுப்பில் 60% ஆகியவை அடங்கும். 


பராக் வாரியங்களின் வினாத்தாள்கள் மற்றும் கேள்வித்தாள்களை ஆய்வு செய்துள்ளது. இந்த பகுப்பாய்வு வாரியங்களுக்கு அவற்றின் தற்போதைய நிலையை வழங்கியுள்ளது. ஒரு அதிகாரியின் கூற்றுப்படி, வாரியங்கள் இப்போது ஒரு புளூ பிரிண்டை உருவாக்க வேண்டும். 'சமநிலை' அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களை அவர்கள் எவ்வாறு சந்திக்க திட்டமிட்டுள்ளனர் என்பதை இந்த புளூ பிரிண்ட் கோடிட்டுக் காட்டும். இந்தச் புளூ பிரிண்டை உருவாக்குவதற்கும் வேலை செய்வதற்கும் வாரியங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.


கல்வி அமைச்சகத்தின் மற்றொரு அதிகாரி, 'சமநிலை' அம்சம் தேசிய கல்விக் கொள்கையின் சவாலான பகுதியாகும் என்று கூறினார். அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களைச் செய்வதற்கு வாரியங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதால், அதைச் செயல்படுத்துவது மெதுவாக இருக்கும். அவர்கள் தேர்வுகளை நடத்துவதை விட அதிகம் செயல்பட வேண்டும்; அறிக்கையில் உள்ள மாற்றங்களை அவர்கள் செயல்படுத்த வேண்டும். இந்த பரிந்துரைகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதை பராக் கண்காணிக்கும். 



Original article:

Share:

நிதிநிலை அறிக்கை 2024 : தெளிவற்ற திட்டங்களுடனான ஒரு தெளிவான இலக்கு -சி.ரங்கராஜன், டி.கே.ஸ்ரீவஸ்தவா

 நிதிநிலை அறிக்கை  2024 ஒருங்கிணைப்பை வெற்றிகரமாக வலியுறுத்தியது மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய பகுதிகளை முன்னிலைப்படுத்தியுள்ளது. திட்டங்கள் எவ்வளவு திறம்பட செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அதன் தாக்கம் இருக்கும்.


நிதிநிலை அறிக்கை அதன் நோக்கங்களையும், அவற்றை அடைவதற்கான செயல் திட்டங்களையும் விரிவாக வகுத்துள்ளது. பரந்த நோக்கங்கள் மற்றும் தெளிவான நோக்கங்களுடன் இருந்தாலும், நிதியமைச்சரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை அடைவதற்கான பாதை சற்று சவாலாகவே உள்ளது.  இது , செலவினங்களுக்கான முக்கியத்துவம்  பட்ஜெட்டின் தாக்கம் மற்றும் அதன்  திட்டங்கள் எவ்வளவு திறம்பட செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தது. 


வருவாய் மற்றும் செலவுகளின் அடிப்படையில் இடைக்கால பட்ஜெட்டில் இருந்து இறுதி பட்ஜெட் எவ்வளவு வேறுபடுகிறது? செலவினத்தில் சிறிய வேறுபாடுகள் மட்டுமே உள்ளன. இருப்பினும், வருவாய், ரிசர்வ் வங்கியின் அதிகரித்த ஈவுத்தொகை ஒப்பீட்டளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசாங்கத்தின் மொத்த மற்றும் நிகர வரி வருவாயைப் பொறுத்த வரையில், வரையறுக்கப்பட்ட மாற்றங்கள் மட்டுமே உள்ளன. மொத்த வரி மிதப்பு 1.03 மற்றும் GDP வளர்ச்சி 10.5 சதவிகிதம் என்று கருதி, பட்ஜெட் மொத்த வரி வருவாய்  38.4 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையில் 6.5 முதல் 7 சதவீத வரம்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை உண்மையான ஜிடிபி வளர்ச்சியானது, முந்தைய ஆண்டு 8.2 சதவீதமான உண்மையான ஜிடிபி வளர்ச்சியின் அடிப்படையில் சாதாரணமாகத் தெரிகிறது.


இடைக்கால பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில், மாநிலங்களுக்கான வரி பகிர்வு ஒதுக்கீடு 27,428 ரூபாய் கோடி அதிகரித்துள்ளது.  நிகர வரி வருவாய் ரூ.25.83 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. 5.46 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்ட வரி அல்லாத வருவாய்களுடன் சேர்த்து, மொத்த நிகர வருவாய் வரவுகள் 31.29 லட்சம் கோடி ரூபாய். கடன் அல்லாத மூலதன வரவுகளுக்கான சிறிய ஒதுக்கீடு மற்றும் 16.13 லட்சம் கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறையுடன், அரசாங்கத்தின் மொத்த செலவினம் ரூ. 48.20 லட்சம் கோடி ரூபாயாக பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் கூடுதல் செலவு 54,744 கோடி ரூபாய் ஆகும். 


இவை அனைத்தும் இடைக்கால வரவு செலவுத் திட்டத்துடன் ஒப்பிடும் போது வருவாய் செலவினங்களை அதிகரிப்பதற்காக ஒதுக்கப்பட்டது. வருவாய் மற்றும் மூலதனச் செலவுகளுக்கு இடையே 77:23 என்ற விகிதத்தில் ஒட்டுமொத்த செலவினம் பிரிக்கப்பட்டுள்ளது. 2023-24-ஆம் ஆண்டில் இடைக்கால பட்ஜெட்டில் வருவாய் செலவின வளர்ச்சி 4.6 சதவீதத்தில் இருந்து இறுதி பட்ஜெட்டில் 6.2 சதவீதமாக குறைந்துள்ளது என்பதே இந்த எண்களின் பொருள்.


இடைக்கால பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் மொத்த கூடுதல் கடன் அல்லாத வரவுகள் ரூ.1.27 லட்சம் கோடி ரூபாய் ஆகும். ரிசர்வ் வங்கியின் பணப்பரிமாற்றங்களில் கூர்மையான அதிகரிப்பால் இது எளிதாக்கப்பட்டது. கூடுதல் வருவாய் வரவுகளில், சுமார் ரூ.72,000 கோடி  ரூபாய் நிதிப்பற்றாக்குறையைக் குறைக்கப் பயன்படுத்தப்பட்டது. இது இடைக்கால பட்ஜெட்டில் இலக்காகக் கொண்ட 5.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. நிதி ஒருங்கிணைப்பு செயல்முறை தொடர வேண்டும். மேலும், ஜிடிபியில் 3 சதவீதத்தை கூடிய விரைவில் பெறுவதே இலக்காக இருக்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதாச்சாரமாக நிதிச் சொத்துக்களில் குடும்ப சேமிப்பு குறைந்து வருவதால் இது முக்கியமானது. 2022-23 ஆம் ஆண்டில், குடும்ப நிதிச் சேமிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3 சதவீதமாக மதிப்பிடப்பட்டது. இது வரலாற்றுக் குறைவாகும் தனியார் முதலீடு அதிகரிக்க வேண்டும் என்றால், அரசாங்கத்தின் நிதிச் சேமிப்பில் குறைப்பு இருக்க வேண்டும். தனியாருக்குச் சேமிப்பில் அதிக இடம் இருக்க வேண்டும்.


பல வருவாய் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் தற்காலிகமானதாகவேத் தெரிகின்றன. பட்ஜெட் உரையில் வருமான வரிச் சட்டம் 1961 (The Income-tax Act 1961) மறுஆய்வு  பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு ஆறு மாதங்களில் முடிக்கப்படும். நேரடி வரித்துறையில் பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. இது மூலதன ஆதாய வரிக்கான விகிதங்களை அதிகரிப்பதை உள்ளடக்கியது. ரியல் எஸ்டேட் சொத்துகள் குறித்து சில விவாதங்கள் உள்ளன.  இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்வது நல்லது. மற்ற நடவடிக்கைகள் சரியான திசையில் இருப்பதாகத் தெரிகிறது. தனிநபர் வருமான வரி விஷயத்தில், நாம் "புதிய" மாதிரியை நோக்கி மட்டுமே செல்ல வேண்டும். இரண்டு மாற்று வழிகளில் நீண்ட காலம் தொடர்வது விரும்பத்தகாதது. புத்தொழில் நிறுவனங்களுக்கான ஏஞ்சல் வரியை (angel tax) நீக்குவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும், ஏனெனில் இது புத்தொழில்களின் (startups) வளர்ச்சியை எளிதாக்கும்.  


முன்பு காட்டப்பட்டதைப் போல, இடைக்கால பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில், செலவினங்களைப் பொறுத்தவரை, வருவாய் செலவினங்களில் ஒரு சிறிய அதிகரிப்பு மட்டுமே உள்ளது மற்றும் 11.11 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் மூலதன செலவினங்களின் பட்ஜெட் தொகையில் எந்த மாற்றமும் இல்லை. உண்மையில், பாதுகாப்பு அல்லாத மூலதனச் செலவு கிட்டத்தட்ட ரூ.21,000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இது கடன்கள் மற்றும் முன்பணங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு வட்டியில்லாக் கடன் வழங்க வழிவகை உள்ளது. 2020-21-ஆம் ஆண்டில் கோவிட் ஆண்டிலிருந்து இந்தத் திட்டம் தொடர்கிறது. மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த ஒதுக்கீட்டின் விலக்கு மிகவும் குறைவாகவே உள்ளது மற்றும் முழுத் தொகையும் மாநிலங்களால் எந்த ஆண்டும் பயன்படுத்தப்படவில்லை என்று கிடைக்கும் தரவு காட்டுகிறது. பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற வளர்ச்சியடையாத சில மாநிலங்கள் அதிக சதவீத பயன்பாட்டில் இருப்பதைக் காட்டுகின்றன.


வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான செலவினத் திட்டங்கள், ஒப்பீட்டளவில் எதிர்கால ஆண்டுகளுடன் தொடர்புடையதாகத் தெரிகிறது. கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட இதுபோன்ற திட்டங்களின் வெற்றியை கணக்கிட வேண்டிய அவசியம் உள்ளது. உதாரணமாக, எண்ணெய் வித்துக்களில் தன்னிறைவு என்பது நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றம் குறித்த மதிப்பீடு பகிரப்படவில்லை. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, "வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகள்" (Employment Linked Incentives) என்ற தலைப்பில் ஒரு புதிய முயற்சி இப்போது மூன்று கூறுகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முன்மொழியப்பட்ட திட்டங்கள் முறையான, நிலையான மற்றும் நீண்ட கால இயல்புடையவை மேலும் விரும்பத்தக்க வேலைவாய்ப்பை அதிகரிக்க வழிவகுக்கும் என்பதில் சில சந்தேகங்கள் உள்ளன. இந்தத் திட்டங்களில் பெரும்பாலானவை சில ஆண்டுகளுக்கு தற்காலிக வேலைவாய்ப்பை மட்டுமே சேர்க்கலாம். எவ்வாறாயினும், இந்த வரையறுக்கப்பட்ட காலத்தில், சாத்தியமான தொழிலாளர்களுக்கு தேவையான பயிற்சி மற்றும் அனுபவத்தை வழங்கினால், பொருளாதாரத்தின் முறையான பண்ணை அல்லாத துறைகளில் அவர்களின் பொருளாதார நிலை மேம்படும். விவசாயம் அல்லாத துறைகளின் வளர்ச்சி மட்டுமே அடிப்படை பிரச்சனை. இங்கே, தொழில்நுட்பத்தின் தேர்வுடன் உற்பத்தி வளர்ச்சியின் இணைப்பு மிகவும் முக்கியமானது. செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence (AI)) போன்ற புதிய தொழில்நுட்பங்கள் நிலைமையை மேலும் கடினமாக்கும். ஒரு யூனிட் உற்பத்தி குறைந்தால், அதிக வேலைவாய்ப்புக்கு அதிக வளர்ச்சி தேவைப்படும்.


வளர்ச்சியை எளிதாக்குவதற்கான முக்கியமான பகுதிகளை முன்னிலைப்படுத்த பட்ஜெட் சிறப்பாகச் செய்துள்ளது. நிதி ஒருங்கிணைப்பை வலியுறுத்துவது சிறப்பாக செயல்பட்டது. ஆனால் இந்த முறையில் பயணிக்க இன்னும் சிறிது தூரம் உள்ளது. உண்மையான செலவினங்கள் திட்டமிடப்பட்ட செலவினங்களுடன் பொருந்துவதை உறுதிப்படுத்த செயல்திறன் வரவு செலவுத் திட்டம் முக்கியமானது.


ரங்கராஜன் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவர், ரிசர்வ் வங்கியின்  முன்னாள் கவர்னர். ஸ்ரீவஸ்தவா, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் முன்னாள் இயக்குநர் மற்றும் பதினாறாவது நிதிக் குழுவின் ஆலோசனைக் குழு உறுப்பினர்.



Original article:

Share:

9ஆம் வகுப்பு தேர்ச்சி பெறுவது டெல்லி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பெரும் தடையாக உள்ளது ஏன் ? -விதீஷா குந்தமல்லா

 023-24 கல்வியாண்டில், டெல்லி அரசுப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு மாணவர்களில் சுமார் 36% பேர் சிறப்புத்தேர்வில் (remedial or compartment exam) தேர்வில்  தேர்ச்சி பெறத் தவறியதால் அவர்கள் அடுத்த வகுப்பிற்க்கு தேர்வாகவில்லை.


டெல்லி அரசாங்கத்தின் பள்ளிக் கல்வி முறை பல ஆண்டுகளாக கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி அதன் சாதனைகளில் இதை அடிக்கடி கூறுகிறது. ஆனால்  9ஆம் வகுப்பில் மாணவர்களின் அதிக தோல்வி விகிதம் என்ற சிக்கலை எதிர்கொண்டுள்ளது.


இந்தியன் எக்ஸ்பிரஸ் சமீபத்தில் இது தொடர்பான ஒரு செய்தியை வெளியிட்டது. சிறப்புத்தேர்வு உட்பட 9ஆம் வகுப்பில் இரண்டு முறை தோல்வியடைந்த மூன்று மாணவர்களில் கிட்டத்தட்ட இருவர் டெல்லியில் உள்ள தேசிய திறந்தநிலைப் பள்ளியில் (National Institute of Open School (NIOS)) சேரவில்லை. இதனால், இம்மாணவர்கள் பள்ளிக் கல்வியை முற்றிலுமாக கைவிடும் அபாயம் உள்ளது. 


9 ஆம் வகுப்பு ஏன் கடினமான தடையாக உள்ளது? 


தில்லி அரசின் கல்வித் துறையின் சமீபத்திய தரவுகள், அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் தோல்வி விகிதம் அதிகம் என்பதைக் காட்டுகிறது. 9 ஆம் வகுப்பு தொடர்ந்து அனைத்து தரங்களிலும் அதிக தோல்வி விகிதத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சரியான புள்ளிவிவரங்கள் மாறுபடலாம். சராசரியாக, 9 ஆம் வகுப்பு மாணவர்களில் 30-40% வரை தோல்வியடைகிறார்கள். 


2023-24 ஆம் கல்வியாண்டில், 9 ஆம் வகுப்பு மாணவர்களில் சுமார் 36% பேர் தேர்வாகவில்லை. அவர்கள் சிறப்புத்தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிவிட்டனர்.


9-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் சமீபத்தில் தொற்றுநோய்க்கு முந்தைய அளவை விடக் குறைந்துள்ளது. 2019ல் தேர்ச்சி விகிதம் 84.72% ஆக இருந்தது. 2020ல் இது 87.13% ஆக இருந்தது. 2021ல் இது 88.49% ஆக இருந்தது. இருப்பினும், 2022 ஆம் ஆண்டில், தேர்ச்சி சதவீதம் சுமார் 65.52% ஆக குறைந்தது.


2022-இல் தோல்வியடைந்த மாணவர்களில் சுமார் 40% பேர் பள்ளியை விட்டு வெளியேறினர்.

 

9 ஆம் வகுப்பில் தோல்வி விகிதம் அதிகமாக இருப்பது ஏன்?


இதில் பல காரணிகள் உள்ளன. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் தடுப்புக் கட்டுப்பாடு இல்லாத கொள்கையானது (no-detention policy) 8-ஆம் வகுப்பு வரை பொருந்தும். இந்தக் கொள்கையின் படி, மாணவர்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி பெறவேண்டும். இதன் விளைவாக, 9-ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக ஒரு வகுப்பில் தோல்வியடையும் வாய்ப்பு உள்ளது.


இந்த ஆண்டு டில்லி அரசு தடுப்புக் காவல் கொள்கையை நீக்கியது. இப்போது 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளிலும் மாணவர்களும் தேர்வில் தோல்வியடையலாம். 2022-ஆம் ஆண்டில், அப்போதைய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ’இந்த மாற்றம்  10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு இருக்கும் அதே அளவு தீவிரத்தன்மையை தொடக்க வகுப்புகளிலும் கொண்டு வர வேண்டும்’ என்று கூறினார்.


தில்லி பல்கலைக்கழகத்தின் கல்வித் துறையின் உதவிப் பேராசிரியை லத்திகா குப்தா, 9ஆம் வகுப்பு நிலை நிலவரம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். மாணவர்கள் அடுத்த ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இது கல்வி அழுத்தத்தை சேர்க்கிறது. கூடுதலாக, தேர்வு முறைகளில் இப்போது கொள்குறி கேள்விகள் (MCQகள்) அடங்கும். குப்தா, இந்த மாற்றம்,  கற்றலுக்கு வழிவகுக்கிறது. ஆனால், இது மாணவர்களிடையே தோல்வி விகிதத்தை அதிகரிக்கிறது என்றார்.


மாணவர்கள் ஏன், எப்போது திறந்தவெளிப் பள்ளிக்கு தள்ளப்படுகிறார்கள்?


டெல்லியில், 9 ஆம் வகுப்பில் இரண்டு முறை தோல்வியுற்ற மாணவர்கள் தேசிய திறந்தநிலைப் பள்ளி (National Institute of Open School (NIOS)) அல்லது Patrachar பள்ளிகளில் சேரலாம், அவை வார இறுதி வகுப்புகள் மற்றும் தொலைதூர கல்வி முறையில் வகுப்புகளை நடத்துகின்றன. பல டெல்லி அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ஒன்பதாம் வகுப்பில் தோல்வியடையாத ஆனால் பலவீனமான கல்வி செயல்திறனைக் கொண்ட மாணவர்களும் திறந்தவெளி பள்ளியில் சேர பள்ளி நிர்வாகத்தால் நிர்பந்திக்கப்படுகிறார்கள். 

 

குப்தா கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சி, டெல்லியில் ஆட்சியமைத்த போது, மாநிலத்தின் கல்வி முறையை மாற்றம் செய்தது. இது ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ முடிவுகளில் சரியான தேர்சி சதவீதத்தை உருவாக்க அரசாங்கம் பள்ளிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது. நல்ல மதிப்பெண் பெறாத பல மாணவர்கள் திறந்தவெளி பள்ளியை நோக்கி தள்ளப்படுகிறார்கள்” என்று கூறினார். 


மாணவர்கள் சிறப்பாக செயல்படவும், பள்ளிக் கல்வி முறையிலிருந்து வெளியேறாமல் இருக்கவும் டெல்லி அரசு சோதனை முயற்சியாக தேசிய திறந்தநிலைப் பள்ளியைத் (National Institute of Open School (NIOS)) தொடங்கியது. ஆனால் பல மாணவர்களும் பெற்றோர்களும் கல்வியின் தரம் தரமாக இல்லை என்று கூறி வருகின்றனர்.


இந்த ஆண்டு 903 அரசுப் பள்ளிகளில் 17,308 மாணவர்கள் 9ஆம் வகுப்பில் தோல்வியடைந்துள்ளனர். இதில், 6,200 மாணவர்கள் (சுமார் 36%) NIOS இல் பதிவுசெய்துள்ளனர். 2021 ஆம் ஆண்டில், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 9 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களில் 10% NIOS மூலம் திறந்தவெளிப் பள்ளியில் சேர்ந்ததாக அறிவித்தது. அவர்களில், 38% பேர் அடுத்த ஆண்டு 9 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர், 12% பேர் மீண்டும் தோல்வியடைந்தனர்.


இந்த சவாலை சமாளிக்க என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன?


டெல்லி அரசு பல ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக்கிய பாடங்களில் சிரமப்படும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த வகுப்புகளில் உள்ள முக்கிய பாடங்களில் ஒன்று கணிதம்.

ஆசிரியர் பயிற்சி திட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

 

கல்வித் துறையின் மிஷன் புனியாத் (Mission Buniyaad) திட்டத்தின் கீழ், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் திறன்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உள்ளன. இந்த திட்டம் 3 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை மையமாகக் கொண்டது.

 

மணீஷ் சிசோடியா இரு மடங்கு உத்தியை அறிமுகப்படுத்தினார். முதலில், படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள் கண்டறியப்படுவார்கள். இரண்டாவதாக, இந்த மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும். பள்ளிக்கு வெளியே இருக்கும் போது அவர்கள் செய்த வேலைகள் அடையாளம் காணப்படும். இந்த வேலையின் அடிப்படையில் அவர்களின் திறன்களை வளர்க்க அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும்.



Original article:

Share:

படித்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் கற்றலை வலுப்படுத்த எவ்வாறு உதவ முடியும் ? -சஞ்சய் குமார், ருக்மிணி பானர்ஜி

 உத்தரகண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில், இளம் குழந்தைகளின் தாய்மார்களில் 30-40% பேர் 10 ஆம் வகுப்புக்கு மேல் பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர். தமிழ்நாட்டில், இந்த எண்ணிக்கை 43% க்கு அருகில் உள்ளது, இமாச்சலப் பிரதேசத்தில் இது 54% க்கும் அதிகமாக உள்ளது. இந்த பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது, இந்த தாய்மார்களில் கிட்டத்தட்ட 72% பேர் உயர்நிலைப் பள்ளிக் கல்வியைப் பெற்றுள்ளனர்.


புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 (National Education Policy  2020) நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 29 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை 2020-இன் முக்கிய பரிந்துரைகளில் ஒன்று, குழந்தைகள் 3 ஆம் வகுப்பை நிறைவு செய்யும்  நேரத்தில், அவர்கள் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண் திறன்களைப் பெற்றிருப்பதை உறுதி செய்வதாகும்.


இந்த நோக்கத்திற்காக, மத்திய அரசு, புரிந்துணர்வு மற்றும் எண்ணறிவுடன் படித்தலில் தேர்ச்சிக்கான தேசிய முன்முயற்சி (National Initiative for Proficiency in Reading with Understanding and Numeracy (NIPUN)) பாரத் மிஷனை (Bharat Mission) ஜூலை 5, 2021 அன்று தொடங்கியது. இந்த இயக்கம் பல மாநிலங்களில் தீவிரமாக செயல்படுத்தப்படுத்தப்பட்டது. கல்வியின் அடித்தள நிலைக்கான புதிய கட்டமைப்பை உருவாக்கியது.


புதிய இலக்குகளை கொண்ட ஆசிரியர் பயிற்சி, ஆரம்ப வகுப்பு வகுப்பறைகளில் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்துவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கற்பித்தல்-கற்றல் பொருட்கள் போன்றவை இந்த கட்டமைப்பில் அடங்கும். பள்ளிகளில் உள்ள முயற்சிகளுக்கு கூடுதலாக, சமூக மற்றும் மக்கள்தொகை போக்குகள் உள்ளன, அவை திறம்பட பயன்படுத்தினால், NIPUN பாரத் திட்டத்தை வலுப்படுத்த உதவும். 


குழந்தைகளின் கற்றல் பயணத்தை வலுப்படுத்த அவர்களின் பங்களிப்பு எவ்வாறு உதவும் என்பதைப் பார்க்க, பெற்றோர்கள், குறிப்பாக இளம் குழந்தைகளின் தாய்மார்கள் (4 முதல் 8 வயது வரை) மீது இங்கு கவனம் செலுத்தப்படுகிறது.


இரண்டு முக்கிய மக்கள்தொகைப் போக்குகள்


பள்ளி சேர்க்கை நிலைகள் (6-14 வயதுக்கு இடையில்) கடந்த சில பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க உயர்வைக் காட்டியுள்ளன. 2001-ஆம் ஆண்டில் சர்வ சிக்ஷா அபியான் (Sarva Shiksha Abhiyan) தொடங்கப்பட்டதன் மூலம், 2000-ஆம் ஆண்டின் முற்பகுதியில் கிராமப்புற இந்தியாவில் பள்ளி சேர்க்கை அளவு 90% க்கும் அதிகமாக எட்டியது. அனைவருக்கும் தொடக்கக் கல்விக்கான உந்துதல் என்பது அதிகமான குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்கள் அதிக விகிதத்தில் தொடக்கக் கல்வியை நிறைவு செய்வது அதிகரித்து வருகிறது.

 

4 முதல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்களின் கல்வி நிலைகள் குறித்த தரவு - நிபுன் பாரத் மிஷனின் (NIPUN Bharat mission) இலக்கு வயது - கடந்த பத்தாண்டில் செங்குத்தான உயர்வைக் காட்டுகிறது. வருடாந்திர கல்வி நிலை அறிக்கை (Annual Status of Education Report (ASER)) கணக்கெடுப்பின்படி, 2010 மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கு இடையில், 5 ஆம் வகுப்புக்கு மேல் படித்த தாய்மார்களின் எண்ணிக்கை 35% முதல் கிட்டத்தட்ட 60% வரை உயர்ந்துள்ளது. உண்மையில், 2010-ஆம் ஆண்டில், 10% க்கும் குறைவான இளம் கிராமப்புற தாய்மார்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிப்படிப்பை முடித்திருந்தனர். 2022-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 20% க்கும் அதிகமாக இருந்தது.


உத்தரகண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில், இளம் குழந்தைகளின் தாய்மார்களில் 30-40% பேர் 10 ஆம் வகுப்புக்கு மேல் பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர். தமிழ்நாட்டில், இந்த எண்ணிக்கை 43% க்கு அருகில் உள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் இது 54% க்கும் அதிகமாக உள்ளது. இந்த பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது. அங்கு, தாய்மார்களில் கிட்டத்தட்ட 72% பேர் உயர்நிலைப் பள்ளி கல்வியைப் பெற்றுள்ளனர்.

இருப்பினும், இந்தியாவில் உள்ள இளம் பெண்கள் மற்ற படித்த நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய விகிதத்தில் தொழிலாளர் சக்தியில் சேரவில்லை. காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு( Periodic Labour Force Survey (PLFS)) 2022 - 23-ஆம் ஆண்டின் சமீபத்திய தரவுகளின்படி, ஒட்டுமொத்த பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் வேலை தேடும் மக்கள்தொகையின் சதவீதத்தைக் காட்டுகிறது. இந்தியாவில் 37% மட்டுமே (கிராமப்புறத்தில் 41.5%, நகர்ப்புற இந்தியாவில் 25.4%). 15-29 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு, (கிராமப்புறங்களில் 25.8%, நகர்ப்புற இந்தியாவில் 20.8%) ஆக குறைவாக உள்ளது. 

 

படித்த தாய்மார்களை ஊக்குவித்தல்


இந்தியாவின் குறைந்த தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தின் (Labor Force Participation Rate) பொருளாதார தாக்கங்கள் இந்தியாவின் பொதுக் கொள்கை வட்டாரங்களில் விவாதிக்கப்படுகின்றன. இந்த விஷயத்தில் அதிக முன்னேற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது என்பதில் சந்தேகமில்லை.


ஆனால் படித்த தாய்மார்கள் இளம் குழந்தைகளின் கற்றலை ஆதரிப்பதற்கான தனித்துவமான முறையை வழங்குகிறார்கள்.  தந்தையின் கல்வியும் முக்கியமானது என்றாலும், அவர்களால் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியாத சூழ்நிலை உள்ளது. கிராமப்புற இந்தியாவில் 65.5% இளைஞர்கள் (15-29 வயதுக்குட்பட்டவர்கள்) பணியாளர்களின் ஒரு பகுதியாக உள்ளனர். அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணறிவைப் பெறுவதற்கான குழந்தைகளின் பயணத்தில் இளம் தாய்மார்களின் பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதற்கான தனித்துவமான நிலையில் இந்தியா இன்று உள்ளது என்று மேலே கோடிட்டுக் காட்டப்பட்ட தரவு தெரிவிக்கிறது. 


கொரோனா போன்ற கடினமான சூழ்நிலைகளில், இந்த ஈடுபாட்டிற்கான அடித்தளத்தை ஏற்கனவே அமைத்துள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டதால், பெற்றோர்கள் தங்கள் சொந்த கல்வி நிலைகளைப் பொருட்படுத்தாமல்  தங்கள் குழந்தைகளின் கல்வியில் ஈடுபட வேண்டியிருந்தது. தொற்றுநோய்க்கு முன்பு, பெற்றோர்கள் பெரும்பாலும் கற்றல் செயலை பள்ளிகளுக்கு விட்டுவிட்டனர்.


நிபுன் பாரத் மிஷனின் (NIPUN Bharat Mission) இலக்குகளை அடைய குடும்பங்களின், குறிப்பாக தாய்மார்களின் தீவிர பங்கேற்பு மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். சிறு குழந்தைகள் வளரவும், செழிக்கவும், ஆசிரியர்களும் தாய்மார்களும் கைகோர்ப்பதை விட சக்தி வாய்ந்தது எதுவும் இருக்க முடியாது. 


சஞ்சய் குமார், இந்திய அரசின்  பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின்  செயலர்.   ருக்மிணி பானர்ஜி, பிரதம் கல்வி அறக்கட்டளையின் ( Pratham Education Foundation)தலைமை நிர்வாக அதிகாரி.



Original article:

Share:

கப்பல் போக்குவரத்து அதன் கனவு பட்ஜெட்டுக்காகக் காத்திருக்கிறது - சஞ்சய் பிரஷர்

 வ.உ.சிதம்பரம் பிள்ளையின் சுதேசி கப்பல் திட்டத்தை ஆங்கிலேயர்கள் முறியடித்து 100 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் இன்னும் வலுவான  சொந்த, கப்பல் கட்டும் சூழல் அமைப்பு இல்லை.


கப்பல் என்பது அதிக அளவு, பணம் மற்றும் கனரகம் சார்ந்த வணிகமாகும், இது கிட்டத்தட்ட அந்நிய செலாவணியில் முக்கியமானவற்றை கையாள்கிறது. சில நேரங்களில் அந்நிய செலாவணின் சதவீதங்கள் பெரும்பாலும் குறைவாக இருக்கும், ஆனால் சில நேரங்களில் வியக்கத்தக்க வகையில் அதிகமாக இருக்கும். இந்தியாவின் உயர்மட்ட கட்டுப்பாட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் வரி அதிகாரிகள் அதன் விவரங்களை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.


ஆங்கிலேயர்கள் நாட்டைக் கைப்பற்றியபோதே கப்பல் கட்டுததில் இந்தியாவுக்கு ஒரு புகழ்பெற்ற வரலாறு உள்ளது. பின்னர் அவர்கள் உள்நாட்டு கப்பல் தொழிலை 20 ஆம் நூற்றாண்டில் மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளை நசுக்கினர். வ.உ.சிதம்பரம் பிள்ளையின் சுதேசி கப்பல் திட்டத்தை ஆங்கிலேயர்கள் முறியடித்து 100 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் இன்னும் வலுவான சொந்த, கப்பல் கட்டும் சுற்றுச்சூழல் அமைப்பு இல்லை.


கடந்த காலத்தில், இந்தியாவில் சிலர் கப்பல் போக்குவரத்தை தேசிய இறையாண்மையின் முக்கிய அங்கமாகக் கருதினர். இந்த கருத்தை ஆதரிக்க குறிப்பிடத்தக்க முயற்சிகள் இருந்தன. இருப்பினும், இன்று, இந்தியாவில் கப்பல் போக்குவரத்து முக்கியமாக உலகளாவிய கப்பல் போக்குவரத்தால் பாதிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் இந்தியாவிற்கு வெளியே எடுக்கப்பட்ட முடிவுகளால் நிர்வகிக்கப்படுகிறது.


கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவின் மொத்த வணிகக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இன்று, கிட்டத்தட்ட எந்த வணிகக் கப்பல்களும் இந்தியாவில் உருவாக்கப்படவில்லை. சீனா உலகின் தலைசிறந்த கப்பல் கட்டும் நிறுவனமாக மாறியுள்ளது. அதே நேரத்தில், இந்தியா இப்போது மிகப்பெரிய கப்பல் கட்டும் தளங்களைக் (shipyard) கொண்டுள்ளது.


  பல சாதகமான அம்சங்களில் இந்திய கப்பல் மேலாண்மை நிறுவனங்களின் எழுச்சியும் இதில் அடங்கும். இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் இந்தியாவிற்கு வெளியே பதிவு செய்யப்பட்டு செயல்படுகின்றன. கூடுதலாக, இந்திய கடற்படையினர் முக்கியமான அந்நிய செலாவணியைக் கொண்டு வருகிறார்கள்.


2024-25ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்திய கப்பல் போக்குவரத்தை ஆதரிப்பதற்கான பல நடவடிக்கைகள் இருந்தன. குஜராத்தின் கிப்ட் சிட்டியில் (Gift City) கப்பல் குத்தகை கட்டமைப்புகள் குறித்தும், அது எவ்வாறு ஒரு முன்மாதிரியாக உள்ளது என்பது குறித்தும் பொருளாதார ஆய்வறிக்கை கூறியது. கப்பல் போக்குவரத்து பற்றி பேசப்படுவது ஒரு வரவேற்கத்தக்க முயற்சி மற்றும் அரசாங்கத்தில் முடிவெடுப்பவர்கள் உண்மையில் அதன் வளர்ச்சியில் ஆர்வமாக உள்ளனர் என்பதற்கான அறிகுறியாகும்.


பட்ஜெட்டில் உள்ள விவரங்களில் இறக்குமதி செய்யப்பட்ட கப்பல் உதிரி பாகங்கள் மீதான சுங்க வரி நீக்கப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கது. முந்தைய சட்டங்கள் சுங்கத்தில் தன்னிச்சையான கோரிக்கைகளுக்கு வழிவகுத்தன. இதன் விளைவாக பல கப்பல் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் கப்பல் போக்குவரத்தில் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை என்பதற்கு அந்தச் சட்டங்களே காரணமாக இருந்தன.


கடந்த கால கொள்கைகள் பெரும்பாலும் அரசாங்கத்திற்கு சொந்தமான தேசிய நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவை (The Shipping Corporation of India) ஆதரித்தன. முன்பு பல பெரிய தனியார் கப்பல் உரிமையாளர்கள் இருந்தனர்.  ஆனால், அவர்கள் யாரும் இப்போது இல்லை. கடுமையான வரி அதிகாரிகளால் சிலர் வணிகத்தை விட்டு வெளியேறினர். ஒவ்வொரு நாளும் கப்பல் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் மில்லியன் கணக்கான டாலர்கள் பரிவர்த்தனைகள் காணப்படுவது இந்த அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன்று, கப்பல் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் அதிகம் வர்த்தகம் செய்யப்படுவதில்லை. மேலும், கப்பல் நிறுவனங்கள் இந்தியாவின் கார்ப்பரேட் துறையில் குறைவாகவே காணப்படுகின்றன.


இந்தியா மத்திய கிழக்கு ஐரோப்பா பொருளாதார முகமை (East Europe Economic Corridor) போன்ற இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட நாடுகளுடன் வர்த்தக தொடர்புகளை அரசாங்கம் வலியுறுத்தினாலும், இந்தியாவிற்குள் கொள்கலன்களின் உற்பத்தியை ஆதரிப்பதற்கான கொள்கைகளை கொண்டு வர வேண்டும். இந்தியாவில் கொள்கலன் உற்பத்தியில் பின்தங்கிய நிலை ஏற்பட்டுள்ளது, இது ஒரு முக்கிய வர்த்தகத் தடையாக உள்ளது.


தற்போதைய பா.ஜ.க அரசு பல ஆண்டுகளாக சரியான குரல்களை எழுப்பி வருகிறது. ஆனால் உறுதியான முடிவுகளின் அடிப்படையில் செயல்படுத்த திட்டம் குறைவாகவே உள்ளது. 2016-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் உள்ள வாதவன் திட்டம் (Vadhavan project) அதன் முக்கிய துறைமுகத் திட்டமாகும். 2021 -ஆம் ஆண்டில், கப்பல் போக்குவரத்துக்கான ₹1 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீட்டில் சுமார் ₹51,000 கோடி ஒதுக்கப்பட்டது. 2024-ஆம் ஆண்டில், ₹76,000 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. அதை முடிப்பதற்கான காலக்கெடுவை அரசாங்கம் இதுவரை குறிப்பிடவில்லை.


ஏற்கனவே பல வாய்ப்புகள் கடந்துவிட்ட நிலையில் கிஃப்ட் சிட்டி (Gift City) குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. கிடைக்கக்கூடிய பணப்புழக்கம், நியாயமான மற்றும் வெளிப்படையான நடுவர் அமைப்பு மற்றும் வரவேற்கத்தக்க ஒழுங்குமுறை சூழல் ஆகியவற்றின் காரணமாக பல இந்தியர்கள் துபாயில் வெற்றிகரமான கப்பல் உரிமையாளர்களாக மாறியுள்ளனர். அவர்களை மீண்டும் கொண்டுவர, கிஃப்ட் சிட்டி (Gift City) குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் கவர்ச்சிகரமான கொள்கைகளை வழங்க வேண்டும்.


2022-ஆம் ஆண்டில், ஒரு புதிய வணிகக் கப்பல் சட்டம்  (Merchant Shipping Act) கொண்டுவரப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டது. ஆனால் அது நாடாளுமன்றத்தில் இன்னும் இயற்றப்படவில்லை. இந்த ஆண்டாவது இச்சட்டம் இயற்றப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. புதிய குத்தகை உரிமை முறையும், புதிய கொள்கையும் இச்சட்டத்தில் இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டு உள்ளது.


இந்தியர்களால் நிர்வகிக்கப்படும் கப்பல் நிறுவனங்களில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டாலும், இந்திய தனியார் பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களை அரசாங்கம் அனுமதிக்காதது அந்த கப்பல்களை ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் ஆளில்லா படகுகளுக்கு பாதிக்கப்படக்கூடியதாக மாற்றியுள்ளது. மற்ற நாடுகள் இதை முன்னெடுத்துச் சென்று, தங்கள் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். 


உலகெங்கிலும் கப்பல்களில் பயணம் செய்யும் மூன்று லட்சம் இந்திய மாலுமிகள், அனைத்து நாட்டினரையும் விட தங்கள் தாய் நாட்டால் மிகக் குறைவாக கவனிக்கப்படுபவர்களில் ஒருவராக உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் மோசமான மனித உரிமை மீறல்களை அனுபவிக்கிறார்கள். மேலும் அவர்களை அரசாங்கம் வெறும் வரி வாய்ப்பாகப் பார்க்கிறது.


இந்தியாவின் தீவுகளில் ஒன்றை திறந்த கப்பல் பதிவேட்டில் (open ship registry) உருவாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம். இது வெளிநாட்டு நிறுவனங்களை அந்த தீவில் கப்பல்களை பதிவு செய்ய அனுமதிக்கும். இத்தீவு இலவச நங்கூரம் மற்றும் எரிபொருள் வசதிகளை அனுமதிக்கலாம்.  


இதன் மூலம் இது மிகவும் கவர்ச்சிகரமான இடமாக மாறும். ஹாங்காங் ஒரு முக்கிய சர்வதேச நிதி மற்றும் வர்த்தக மையமாக மாறியதற்கு காரணம் அதன் கப்பல் தொழிலுக்கு உகந்த கொள்கைகளாகும். இந்த யோசனைக்கு இது ஒரு முன்மாதிரியாக இருக்கலாம்.

நாட்டை வளமாக்க இந்தியாவின் கப்பல் போக்குவரத்தின் திறனை உண்மையிலேயே பயன்படுத்த தைரியமான மற்றும் பெரிய முயற்சிகள் தேவை. கப்பல் போக்குவரத்து அதன் கனவு பட்ஜெட்டுக்காக காத்திருக்கிறது.


  சஞ்சய் பிரஷர், எழுத்தாளர், கப்பல் தொழில் நிபுணர் மற்றும் கடல்சார் இலக்கு 2030 (Maritime Vision 2030) உருவாக்குவதில் பங்களித்த தேசிய கப்பல் வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் .


Original article:

Share: