காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் போக்குவரத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்? - லான்ஸ்லாட் மார்க் பின்டோ, ஸ்ரீபர்ணா சட்டோபாத்யாய்

 இந்தியாவின், சாலை போக்குவரத்தில் கார்பன் டை ஆக்சைடின்  உமிழ்வின் பங்கு என்ன? கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வாகன உடைப்பு கொள்கை (scrappage policy) ஏன் பயனுள்ளதாக இல்லை? 


 உலகின் மிகவும் மாசுபட்ட 100 நகரங்களில் இந்தியாவில் 83 நகரங்கள் உள்ளன என்று சமீபத்திய அறிக்கை கூறுகிறது. பிரிட்டிஷ் மருத்துவ இதழின் மற்றொரு அறிக்கை, காற்று மாசுபாடு இந்தியாவில் 2.1 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்தியது என்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதுவாகும். இந்தியாவில் 99%-க்கும் அதிகமான மக்கள் உலக சுகாதார அமைப்பின் (World Health Organization (WHO)) பரிந்துரைக்கப்பட்ட தரத்தை விட மோசமான காற்றை சுவாசிக்கின்றனர். 


 காற்று மாசுபாடு எவ்வளவு கடுமையானது?


இந்தியாவின் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வில் 12% சாலை போக்குவரத்திலிருந்து வருகிறது என்று சர்வதேச ஆற்றல் கூட்டமைப்பு  (International Energy Associates) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. துகள்கள் (Particulate Matter (PM)) 2.5 உமிழ்வுகளில் பெரும்பகுதி கனரக வாகனங்களிலிருந்து வருகிறது. துகள்கள் 2.5 அதிக மாசுபடுத்திகளைக் கொண்டுள்ளது, அவை நுண்ணிய மற்றும் துகள்கள் 2.5 நுரையீரலுக்குள் ஆழமாகச் செல்லக்கூடிய சிறிய மாசுபாடுகளைக் கொண்டுள்ளது. இந்த மாசுக்கள் இரத்த ஓட்டத்தில் நுழைந்து, சுவாசம் மற்றும் இருதய பிரச்சனைகளை ஏற்படுகின்றது. கனரக வாகனங்களும் நைட்ரஜன் ஆக்சைடு உமிழ்வுக்கு கணிசமாக பங்களிக்கின்றன. இது சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. நைட்ரஜன் ஆக்சைடு தரை மட்ட ஓசோன் உருவாவதற்கு பங்களிக்கிறது. காற்றின் தரம் மற்றும் வெப்பத்தை மோசமாக்குகிறது, இது நகர்ப்புற காற்று மாசுபாட்டை அதிகரிக்கிறது. நகர்ப்புறங்களில் மொத்த வாகன துகள்கள் உமிழ்வுகளில் சுமார் 60-70% மற்றும் மொத்த நைட்ரஜன் ஆக்சைடு உமிழ்வில் சுமார் 40-50% கனரக வாகனங்கள் பொறுப்பு என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? 


போக்குவரத்துத் துறை ஆண்டுக்கு 9.1% வளர்ந்து வருகிறது. இந்தியாவில் கார்களுக்கான தனியார்  சராசரி எரிபொருள் சிக்கன வரைவு (Corporate Average Fuel Economy (CAFE)) விதிமுறைகளை எரிசக்தி திறன் பணியகம் (Bureau of Energy Efficiency’s (BEE)) உருவாக்கியுள்ளது. இது சரியான நேரத்தில்  எடுக்கப்பட்ட முக்கிய முயற்சியாகும். 2027-2032 முதல் தனியார் சராசரி எரிபொருள் சிக்கன வரைவு-III மற்றும் 2032-2037 முதல் தனியார் சராசரி எரிபொருள் சிக்கன வரைவு-IV ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான காலக்கெடு நடைமுறையில் உள்ளது. மாற்றியமைக்கப்பட்ட இந்தியா ஓட்டுநர் சுழற்சியிலிருந்து (India Driving Cycle (MIDC)) மார்ச் 31, 2027-க்குள் உலக இலகுரக கடமை வாகன சோதனை நடைமுறைக்கு (World Light Duty Vehicle Testing Procedure (WLTP)) மாறுவதற்கான அர்ப்பணிப்பு சிறந்தது. உலக இலகுரக கடமை வாகன சோதனை நடைமுறை ஒரு வாகனத்தின் உண்மையான எரிபொருள் நுகர்வு மற்றும் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளின் துல்லியமான அளவை வெளிக்காட்டுகிறது. WLTP அடிப்படையில் CAFE III-க்கான முன்மொழியப்பட்ட உமிழ்வு இலக்கு 91.7g கார்பன் டை ஆக்சைடு ஒரு கிலோ மீட்டருக்கு மற்றும் CAFE IV-க்கு, இது 70g CO2/km ஆகும் இது அடையக்கூடியது. கார்பன்-டை-ஆக்சைடு இலக்குகள் புதுமைகளை இயக்குவதற்கும் தூய்மையான தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்கும் அவசியம். வாகன தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும் சுற்றுச்சூழலையும் பொது சுகாதாரத்தையும் பாதுகாப்பதற்கும் கடுமையான கார்பன்-டை-ஆக்சைடு கட்டுப்பாடு இலக்குகள் முக்கியமானவை. இந்த இலக்குகளை அடைய அதன் செயல்முறை உறுதியானதாக இருக்க வேண்டும். தற்போதைய தனியார்  சராசரி எரிபொருள் சிக்கன விதிமுறைகள் டிரக்குகள், லாரிகள் மற்றும் பிற சரக்கு வாகனங்கள் போன்ற கனரக வாகனங்கள் உமிழ்வை விலக்குகின்றன. 


இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?


கனரக வாகனங்கள் உட்பட பழைய மற்றும் மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக அகற்ற அரசாங்கம் 2022-ல் வாகன உடைப்பு கொள்கையை (scrappage policy) அறிமுகப்படுத்தியது. 20 ஆண்டுக்கு மேற்பட்ட பயணிகள் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வணிக வாகனங்கள் "உறுதித்தன்மை மற்றும் உமிழ்வு சோதனையில்" தேர்ச்சி பெறவேண்டும் என்று இந்தக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சோதனைகளில் வாகனங்கள் தோல்வியுற்றால், அவை ஆயுட்காலம் முடிவடையும் வாகனங்களாக வகைப்படுத்தப்படும், அவற்றின் பதிவு சான்றிதழை ரத்து செய்யப்படும், மேலும் உடைக்க பரிந்துரைக்கப்படும். இருப்பினும், இரண்டு காரணங்களுக்காக கர்நாடகாவில் இந்த கொள்கை இன்னும் தொடங்கப்படவில்லை: முழு மாநிலத்திற்கும் இரண்டு உடைப்பு கொள்கையை மட்டுமே உள்ளன. பெங்களூரில் உள்ள பெரும்பாலான பழைய வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் அல்ல. ஆனால், பழைய BMTC பேருந்துகள், தனியார் வேன்கள் மற்றும் கனரக வாகனங்கள். உடைப்பு கொள்கையை ஊக்குவிப்பதற்காக சாலை வரி தள்ளுபடிகள் அல்லது புதிய தனியார் வாகன கொள்முதல் போன்ற சலுகைகளை அறிவித்த 21 மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்றாகும். ஆனால், இது மாநிலத்தில் காற்று மாசுபாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வழிகாட்டுதல்கள் திறம்பட செயல்படுத்தப்படுவதை கொள்கை வகுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். 


காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான தற்போதுள்ள அரசாங்கக் கொள்கைகள், அவை உமிழ்வு வரம்புகளை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்த வழக்கமான வாகன சோதனை, திறந்த குப்பைகளை எரிப்பதை தடை செய்தல் மற்றும் தொழில்துறை உமிழ்வுகளை சரிபார்த்தல் போன்றவை அதிக கடுமையுடன் செயல்படுத்தப்பட வேண்டும். காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் வரவேற்கத்தக்கவை என்றாலும், இந்தியாவில் காற்று மாசுபாட்டைக் கையாள்வதற்கான ஒரே நிலையான முறையாக பொது போக்குவரத்து மட்டுமே உள்ளது. 


லான்சலோட் மார்க் பின்டோ மும்பையின் பி.டி.இந்துஜா மருத்துவமனையில் நுரையீரல் நிபுணர் மற்றும் பொது சுகாதார கொள்கை வக்கீல் ஆவார். ஸ்ரீபர்ணா சட்டோபாத்யாய் பெங்களூர் மணிப்பாலில் உள்ளார்.



Original article:

Share:

சமூக நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் பிடிவாதமான மறுப்பு -மோஹித் வர்மா, ஷ்ரவன் எம்.கே.

 தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில், முன்பு நிர்ணயித்த போக்கைத் தொடர்வதாகத் தோன்றுகிறது - பொது நலனுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கிறது. 


ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை பல்வேறு காரணங்களுக்காக சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. மக்களின் நலன் சார்ந்து ஆதரவளிக்கும் முக்கியமான நலத்திட்டங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க அரசாங்கம் மீண்டும் தவறிவிட்டது.  சமூக நலன்களுக்கு  முன்னுரிமை அளிக்க மறுப்பது புதிராக உள்ளது. குறிப்பாக அரசாங்கத்தின் தரவுகளின்படி, சுமார் 34% மக்கள் ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர்.  மேலும், 81 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிர்வாழ இலவச உணவு தானியங்கள் தேவைப்படும் ஒரு நாட்டில், தேசிய ஜனநாயக கூட்டணி, இப்போது அதன் மூன்றாவது ஆட்சிக் காலத்தில், சமூக நலன்களுக்கான ஒதுக்கீடுகளைக் குறைக்கும் போக்கைத் தொடர்கிறது. 


முக்கிய நலத்திட்டங்களில் நிதிப் பற்றாக்குறை


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) ) மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் ( National Food Security Act (NFSA)) உணவு மானியம் (Food Subsidy) ஆகிய இரண்டும்  அரசாங்கத்தின் மிகப்பெரிய நலத்திட்டங்கள். கோவிட்-19 தொற்றுநோய்களின்போது ஒரு பெரிய பேரழிவைத் தடுக்க அரசாங்கம் இந்த திட்டங்களை நம்பியிருந்தது. 2014-15-ஆம் ஆண்டு முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பங்காக இந்த திட்டங்களின் பட்ஜெட் ஒதுக்கீடுகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (MGNREGA) ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் 100 நாட்கள் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதே நேரத்தில் உணவு மானியம் (Food Subsidy) மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு இலவச உணவு தானியங்களை வழங்குகிறது. 


கடந்த ஆண்டு, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.72% செலவிட்டது. ஆனால்,  இந்த ஆண்டு அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.63% ஆக குறைந்துள்ளது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆரோக்கியமான உணவைப் பெற முடியாத ஒரு நாட்டில், சுமார் 50% பேர் மட்டுமே ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுகிறார்கள். 


இதேபோல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான (MGNREGA) நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.26% ஆகும். இது கடந்த ஆண்டு 0.29% ஆக இருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பங்காக, இந்த இரண்டு திட்டங்களும் இப்போது ஒருங்கிணைந்த நிதி ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி முதன்முதலில் ஆட்சிக்கு வந்த 2014-15-ஆம் ஆண்டைவிட 25% குறைவாக உள்ளது. கிராமப்புற ஊதியங்கள் தேக்கமடைந்துள்ளதாலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் நிதிப் பற்றாக்குறையில் இருப்பதாலும் கிராமப்புற இடர்பாடுகள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. 


விதவைகள், முதியவர்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மாற்றுத்திறனாளிகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களும் நிதிநிலை அறிக்கையில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இத்தகைய குழுக்களுக்கும், வருமானம் ஈட்டும் நபரை இழந்த குடும்பங்களுக்கும் நிதி உதவி அளிக்கும் தேசிய சமூக உதவித் திட்டத்திற்கு (The National Social Assistance Programme) நிதி ஒதுக்கீட்டில் எந்த அதிகரிப்பையும் காணவில்லை. இந்த ஆண்டு ஒதுக்கீடு பெயரளவில் கடந்த ஆண்டைப் போலவே உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பங்காக, அதன் செலவினம் 2014-15-ஆம் ஆண்டிலிருந்து 0.06% முதல் 0.03% வரை பாதியாக குறைந்துள்ளது. 


இத்திட்டம் முதியவர்களுக்கு மாதத்திற்கு ₹200 ரூபாய் மற்றும் விதவைகளுக்கு மாதத்திற்கு ₹300 ரூபாய் சிறிய ஓய்வூதியத்தை வழங்குகிறது. பல பொருளாதார வல்லுநர்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும், 2006-ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தொகைகள் அதிகரிக்கப்படவில்லை. ஒரு நாளைக்கு ₹30 ரூபாய் என்ற வறுமைக் கோட்டில் இருந்தாலும், இந்த பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் குறைந்தபட்சம் 66% வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர். 


சமூகநலன் மற்றும் ஊட்டச்சத்து திட்டங்கள்


பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் (Women and Child Development Minister) இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50%க்கும் அதிகமானோர் நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் கூறினார். கூடுதலாக, இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே இரத்த சோகை விகிதங்கள் (anaemia rates) உலக சராசரியை விட முறையே 20% மற்றும் 15% அதிகமாக உள்ளன. சாக்ஷம் அங்கன்வாடி (Saksham Anganwadi) மற்றும் போஷன் 2.௦ (Poshan 2.0) என்பது குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பசியை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு நலத்திட்டமாகும். 2021-22 ஆம் ஆண்டில், அங்கன்வாடி திட்டம் முழுமையான ஊட்டச்சத்துக்கான பிரதமரின் போஷன் அபியான் மற்றும் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து திட்டத்துடன் இணைக்கப்பட்டது. இருப்பினும், இந்த சேர்த்தல்களுடன் கூட, இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி 2014-15-ஆம் ஆண்டிலிருந்து முதல் பாதியாக குறைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.13% ஆக இருந்தது, சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.06% ஆக இருந்தது. 


பள்ளி செல்லும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பசியை எதிர்த்துப் போராட, அரசாங்கம் மதிய உணவு (mid-day meal (MDM)) திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்தத் திட்டம் இந்தியாவில் சுமார் 12 கோடி குழந்தைகளை உள்ளடக்கியது. வருகையை அதிகரிப்பதிலும், கல்வி மற்றும் ஊட்டச்சத்து விளைவுகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. அதற்கான நிதி 2014-15-ஆம் ஆண்டு முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்காக பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 2021-ஆம் ஆண்டில்,  தமிழ்நாட்டில் இத்திட்டம் வெற்றிகரமாக இருந்தபோதிலும், நிதி பற்றாக்குறையைக் காரணம் காட்டி, பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை நிதி அமைச்சகம் நிராகரித்தது. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை கருத்தில் கொண்டு, இந்த திட்டங்களை விரிவுபடுத்துவதும், குழந்தைகளுக்கு அதிக சத்தான உணவை வழங்குவதும் முக்கியம். 


மத்திய கல்வி செலவினங்களுக்கு (முதன்மை மற்றும் இடைநிலை) செலவிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கும் இந்த ஆண்டு குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு 0.25% ஆக இருந்தது. தற்போது 0.22% ஆக குறைந்துள்ளது.  தொடக்கக் கல்வி சேர்க்கை விகிதங்கள் அதிகமாக இருந்தாலும், கல்வியின் தரம் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அதிக பணிகள் உள்ளன. எனவே, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்வியின் பங்கு 2014-15-ஆம் ஆண்டில் 0.37% ஆக இருந்து இன்று 0.22% ஆக குறைந்துள்ளது கவலைக்குரியது. 


சுகாதாரத்திற்கான நிதிஒதுக்கீட்டில் சிறிது அதிகரிப்பு மட்டுமே ஒன்றிய அரசு செய்துள்ளது. 2014-15-ஆம் ஆண்டு முதல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதார அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியின் பங்கு 0.25% முதல் 0.28% வரை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. எவ்வாறிருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கானவர்களை வறுமைக்குள் தள்ளுகின்ற ஒரு நாட்டில் இந்த அதிகரிப்பு போதுமானதல்ல. 


குறிப்பிடப்பட்ட திட்டங்கள் மற்றும் துறைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2014-15-ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1% ஆக இருந்தது. இந்த ஆண்டு வெறும் 1.53% ஆக குறைந்துள்ளது. 2020-21-ஆம் ஆண்டில்  கோவிட்-19 தொற்றின் போது இந்த எண்ணிக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.31% ஆக கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.  இது இந்த திட்டங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. 


ஒரு மதிப்பீட்டின்படி, 2019-ஆம் ஆண்டில் கார்ப்பரேட் வரி விகிதங்களைக் குறைத்ததிலிருந்து அரசாங்கம் 8 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரிவருவாயை இழந்துள்ளது.  இந்த வரி குறைப்புகளால் ஏற்பட்ட குறைந்த நிதி இடத்தை ஈடுசெய்ய ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை கருத்தில் கொள்ளவில்லை என்பது தெரிகிறது. 


உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் (World Inequality Lab) புதிய அறிக்கையின்படி, இந்தியா மனித மேம்பாட்டு குறியீட்டு (Human Development Index) தரவரிசையில் 132வது மோசமான நிலையில் இருப்பதில் ஆச்சரியமில்லை. மேலும், ஆங்கில ஆட்சியின் போது இருந்ததைவிட இன்று அது மிகவும் சமத்துவமற்ற நிலையில் உள்ளது. 


இதற்கு மாறாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சகாப்தம்


தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது விக்சித் பாரத் (Viksit  Bharat ) கனவுகள் குறித்து தீவிரமாக இருந்தால், வளர்ந்த சமூகத்திற்கான பாதை ஏழை குடிமக்களுக்கு ஆதரவளிப்பதில் உள்ளது என்பதை அது உணர வேண்டும். எந்த ஒரு நாகரிக சமூகமும் அதன் மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் நலமான வாழ்க்கையை வாழ முடியாதபோது அதை வளர்ந்த சமூகமாக கருத முடியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கங்களின் உதாரணத்தை பின்பற்றுவதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் பயனடைய முடியும். அவை புதிய நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், காலப்போக்கில் அவற்றின்  நிதி ஒதுக்கீடுகளையும் சீராக அதிகரித்தன. 

மோஹித் வர்மா, குட் பிசினஸ் லேப்பில் மூத்த ஆராய்ச்சியாளர் (Senior Research Associate at Good Business Lab). ஷ்ரவன் எம்.கே, ஆராய்ச்சியாளர், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம்.



Original article:

Share:

தமிழ்நாடு அமைச்சரவை ₹44,125 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது

 ஆகஸ்ட் 17ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் நிறுவன ஊழியர்களுக்கான குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 


செவ்வாய்க்கிழமை, 15 நிறுவனங்களிடமிருந்து மொத்தம் ₹44,125 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த முதலீடுகள் 24,700 வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோமொபைல் உற்பத்தி, உணவு பதப்படுத்துதல் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆகிய துறைகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த அறிவிப்பை வெளியிட்டார். கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். முதலீட்டு வாய்ப்புகளைத் பெருக்குவதற்கு அதிகாரப்பூர்வ பயணமாக இந்த மாத இறுதியில் முதல்வர் அமெரிக்கா செல்லவுள்ளார். 18,220 படுக்கைகள் கொண்ட இந்த குடியிருப்பு வசதி ₹206.5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தென்னரசு தெரிவித்தார்.


அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டுத் திட்டங்களில், 1,114 புதிய வேலைகளுடன் தூத்துக்குடியில் உள்ள செம்கார்ப் நிறுவனத்தின் ₹21,340 கோடி திட்டமும் அடங்கும்; காஞ்சிபுரத்தில் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் (₹2,200 கோடி முதலீடு மற்றும் 2,200 வேலைகள்); ஈரோட்டில் மில்கி மிஸ்ட் விரிவாக்கத் திட்டம் (₹1,777 கோடி முதலீடு மற்றும் 2,025 வேலைகள்); மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் LOHUM (₹1,597 கோடி முதலீடு மற்றும் 715 வேலைகள்).


UPS மற்றும் AstraZeneca ஆகியவற்றின் உலகளாவிய திறன் மையங்களின் விரிவாக்கம் மற்றும் பம்ப் செய்யப்பட்ட, சிறிய ஹைடல் திட்டங்கள் மற்றும் காற்றாலை மின் திட்டங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை-2024 ஆகியவற்றிற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


தமிழ்நாடு உந்தப்பட்ட சேமிப்பு  நீர் மின்  திட்ட கொள்கை (Tamil Nadu Pumped Storage Hydro Electric Project Policy), உந்தப்பட்ட சேமிப்பு  நீர் மின்  திட்டங்களை மேற்கொள்ள பொது மற்றும் தனியார் துறையை ஊக்குவிக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் 20,000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. உந்தப்பட்ட நீர்மின் திட்டங்களால் சூரிய மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான பசுமை ஆற்றலை மின்சாரமாக மாற்றுவதன் மூலம் சமநிலைப்படுத்தும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.


நீர் மின் சக்தி கொள்கை  2024 (Small hydel power policy)


சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் தங்கள் சொந்த உபயோகத்திற்காக மின்சாரம் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களை இந்தக் கொள்கை ஊக்குவிக்கிறது.


நீர் மின் திட்டங்களில் இருந்து நிலையான மின்சாரம் சூரிய மின் உற்பத்தியாளர்களுக்கான திறனை மேம்படுத்த  உதவும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. மைக்ரோ நீர் மின் திட்டங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு வழிவகுக்கும். உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 10 சதவீதம் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்திற்கு இலவசமாக வழங்கப்படும்.


காற்றாலை மின் கொள்கை (Wind power policy)


காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க, அரசாங்கம் மூன்று முறைகளை அனுமதித்துள்ளது. 1. புதிய தொழில்நுட்பத்துடன் பழைய காற்றாலைகளை மேம்படுத்துதல். 2. ஏற்கனவே உள்ள காற்றாலைகளை பழுதுபார்த்து மீட்டமைத்தல். 3. காற்றாலை ஆலைகளின் செயல்பாட்டு ஆயுளை நீட்டித்தல். இந்த முறைகளால் தமிழ்நாட்டின் காற்றாலை மின் உற்பத்தி 25 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தக் கொள்கைகள், மாநிலத்தின் தூய்மையான எரிசக்தி திறனை மேம்படுத்துவதையும், 2030ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 50 சதவீத பசுமை மின் உற்பத்தியை எட்ட வேண்டும் என்ற முதலமைச்சரின் இலக்கை அடைய உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.



Original article:

Share:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தென் மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் அதிகம் பங்கேற்பது ஏன்? -ராதேஷ்யாம் ஜாதவ்

 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பெண்களின் ஒட்டுமொத்த பங்கேற்பு பல மாநிலங்களில் நேர்மறையான போக்குகளைக் காட்டுகிறது. இதில் குறிப்பிடத்தக்க பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. 


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பெண்களின் பங்கேற்பு பல மாநிலங்களில் நேர்மறையான போக்கைக் காட்டுகிறது. இருப்பினும், கொள்கைகள் மற்றும் தலையீடுகள் மூலம் தீர்க்கப்பட வேண்டிய - குறிப்பிடத்தக்க  மாநிலங்களுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை காட்டுகிறது. 


கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Rural Development) மாநிலங்களவையில் சமர்ப்பித்த தரவின் அடிப்படையில், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகியவை கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடர்ந்து அதிக பங்கேற்பு விகிதங்களைக் கொண்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. இந்த உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பெண்களின் வலுவான ஈடுபாட்டை இது குறிக்கிறது, இது சாதகமான சமூக-பொருளாதார நிலைமைகள் மற்றும் திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதன் காரணமாக இருக்கலாம். 


உதாரணமாக, கேரளா கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 89% பங்கேற்பு விகிதத்தை பராமரித்து வருகிறது. இது கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டங்களில் பெண்களின் ஈடுபாட்டிற்கு வலுவான ஆதரவை பரிந்துரைக்கிறது. இருப்பினும், கோவா மற்றும் மிசோரம் போன்ற மாநிலங்கள் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களைக் காட்டுகின்றன. கோவாவில் 2021-22-ஆம் ஆண்டில் 78.40% ஆக இருந்த பங்கேற்பு 2023-24-ஆம் ஆண்டில் 72.09% ஆக குறைந்துள்ளது. மிசோரம் 2020-21-ஆம் ஆண்டில் 56.82% ஆக இருந்து 2023-24-ஆம் ஆண்டில் 48.89% ஆக சரிவைக் கண்டது. இந்த மாற்றங்கள் கொள்கை மாற்றங்கள், பொருளாதார நிலைமைகள் அல்லது நிர்வாக செயல்திறன் காரணமாக இருக்கலாம். 


        அசாம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது. அசாமின் பங்களிப்பு 2019-20-ஆம் ஆண்டில் 41.77% ஆக இருந்து 2023-24-ஆம் ஆண்டில் 50.59% ஆக அதிகரித்துள்ளது. ஹரியானா 2019-20-ஆம் ஆண்டில் 50.59% ஆக இருந்து 2023-24-ஆம் ஆண்டில் 61.05% ஆக அதிகரித்துள்ளது. இந்த போக்குகள் இந்த மாநிலங்களில் பெண்களின் ஈடுபாட்டிற்கான நிலைமைகளை மேம்படுத்துவதைக் குறிக்கின்றன, இது சிறந்த அணுகல் மற்றும் ஆதரவான கொள்கைகள் காரணமாக இருக்கலாம். இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் நாகாலாந்து தொடர்ந்து குறைந்த பங்கேற்பு விகிதங்களைக் காட்டுகின்றன.


      ஜம்மு-காஷ்மீர் 30-33% மற்றும் நாகாலாந்து 35-44% ஏற்ற இறக்கத்துடன் உள்ளன. இந்த குறைந்த விகிதங்கள் சமூக-கலாச்சார தடைகள், பாதுகாப்பு சிக்கல்கள் அல்லது திட்டத்தின் செயல்பாட்டில் உள்ள திறமையின்மைகளை பிரதிபலிக்கலாம். 



பிராந்திய நுண்ணறிவு 


தமிழ்நாடு மற்றும் ஆந்திரா அதிக பங்கேற்பு விகிதங்களை பராமரிக்கின்றன. கிராமப்புறங்களில் பெண்களின் வேலைவாய்ப்பை ஆதரிக்க தென் மாநிலங்களில் சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் கொள்கைகள் இருக்கலாம். அருணாச்சல பிரதேசம், அசாம் மற்றும் மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்கள் அதிகரித்து வரும் போக்குகளைக் காட்டுகின்றன. இருப்பினும் அவற்றின் விகிதங்கள் பொதுவாக தென் மாநிலங்களுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளன. இது படிப்படியான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. ஆனால்,  பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க‘ வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது. 



யூனியன் பிரதேசங்களில், பங்கேற்பு விகிதங்கள் கணிசமாக வேறுபடுகின்றன. உதாரணமாக, புதுச்சேரி தொடர்ந்து அதிக பங்களிப்பைக் காட்டுகிறது (சுமார் 87%). இதற்கு மாறாக, லட்சத்தீவு வியத்தகு மாற்றங்களைக் காட்டுகிறது.  2020-2021-ஆம் ஆண்டில் 22% ஆக இருந்து 2023-24-ஆம் ஆண்டில் 40% ஆக உயர்ந்துள்ளது. இந்த முரண்பாடு நிர்வாகம் அல்லது அறிக்கையில் உள்ள சிக்கல்களை அறிவுறுத்துகிறது. தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ விஷயத்தில், 2023-24-ஆம் ஆண்டில் தரவு  49.03% பங்கேற்பைக் காட்டுகிறது. முந்தைய ஆண்டுகள் 0% காட்டுகின்றன. இந்த திடீர் மாற்றத்திற்கு அதன் காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு நிர்வாக சீர்திருத்தங்கள் அல்லது மேம்பட்ட தரவு சேகரிப்பு முறைகள் போன்றவை  காரணமாக இருக்கலாம். 


பாலின விதிமுறைகள் 


பாலின விதிமுறைகள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பெண்களின் பங்கேற்பு விகிதங்களை கணிசமாகப் பாதிக்கின்றன. தலையீடுகள், கல்வி மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் மூலம் இந்த விதிமுறைகளை நிவர்த்தி செய்வது கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டங்களில் பெண்களின் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் முக்கியமானது. 


வரலாற்று காரணிகள், சிறந்த கல்வி நிலைகள் மற்றும் பெண்களை மையமாகக் கொண்ட திட்டங்கள் பாரம்பரிய பாலின விதிமுறைகளை உடைக்க உதவுகின்றன. வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் பாரம்பரிய மற்றும் முற்போக்கான பாலின விதிமுறைகளின் கலவையைக் இவை காட்டுகின்றன. சில பழங்குடியினர் மற்றும் சமூகங்கள் பெண்களின் செயலில் பங்கேற்பை ஆதரிக்கும் அமைப்புகளைக் கொண்டிருக்கலாம். மற்றவர்கள் வேலைவாய்ப்பில் அவர்களின் ஈடுபாட்டைக் கட்டுப்படுத்தும் அதிக ஆணாதிக்க விதிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம்.



Original article:

Share:

மேல்நிலையினர் (creamy layer) தொடர்பான அமைச்சரவையின் முடிவு இடஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கு எதிரானது - சேத்தன் சவுகான்

 இமாச்சல் பிரதேசம், ஜம்மு மற்றும் வடகிழக்கு போன்ற மலை மாநிலங்களில் இருந்து செல்வாக்கு மிக்க பழங்குடியினர் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் இடஒதுக்கீட்டின் (ST reservation) பெரும்பாலான நன்மைகளைப் பெற்றுள்ளனர். இது ஏழை பழங்குடியினருக்கு இழப்பாகும்.


கடந்த வெள்ளி கிழமையன்று, ஒன்றிய அமைச்சரவையில் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (Scheduled Caste (SC)) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (Scheduled Tribe (ST)) பிரிவினருக்கு மேல்நிலையினர் (creamy layer) என்ற இட ஒதுக்கீடு கிடையாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது, எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டிலிருந்து மேல்நிலையினரை (creamy layer) விலக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறிய சில நாட்களுக்குப் பிறகு இந்த முடிவு வந்தது  குறிப்பிடத்தக்கது.


பாஜகவின் எஸ்சி/எஸ்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து சில மணிநேரங்களுக்குப் பிறகு அமைச்சரவை சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இதில், மேல்நிலையினரை (creamy layer) விலக்க உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டது.


ஆகஸ்ட் 1-ம் தேதி அன்று, உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு 6-1 பெரும்பான்மையுடன் ஒரு முக்கிய முடிவை எடுத்தது. பட்டியலிடப்பட்ட வகுப்பினர் சமூக ரீதியாக ஒரே மாதிரியான வகுப்பை உருவாக்கவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, மாநிலங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க பட்டியலிடப்பட்ட வகுப்பினர்களை, துணை வகைப்படுத்துவதற்கு (sub-classify) உட்படுத்தலாம். இதில், நான்கு நீதிபதிகள் எஸ்.சி., எஸ்.டி., இட ஒதுக்கீட்டில் இருந்து மேல்நிலையினரை (creamy layer) நீக்குவதற்கு ஆதரவு தெரிவித்தனர். 


1950-ல் அரசியலமைப்பு SC மற்றும் ST வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியபோது மேல்நிலையினர் (creamy layer) என்ற கருத்து இல்லை. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (Other Backward Classes (OBCs)) இடஒதுக்கீட்டை உறுதி செய்த இந்திரா சாவ்னி வழக்கு 1992-ல் ஒரு முக்கிய உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மேல்நிலையினர் (creamy layer) என்ற பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) இடஒதுக்கீடு அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும் என்று குறிப்பிடப்பட்டது. 


மேல்நிலையினர் (creamy layer) வகுப்பானது, எஸ்சி இடஒதுக்கீட்டிற்கு பொருந்தாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஏனென்றால், எஸ்சி இடஒதுக்கீடு என்பது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) இடஒதுக்கீடு போன்ற சமூக  மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலையில் மட்டும் இல்லாமல், தீண்டாமையின் மூலம் சமூக ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டது.


இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) இடஒதுக்கீடு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி சேர்க்கைக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும், எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு இந்த இரண்டையும் தவிர, தேர்தல்களுக்கும் பொருந்தும். 


ஆகஸ்ட் 1 அன்று, ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர் - ஜி.ஆர்.கவாய், விக்ரம் நாத், பங்கஜ் மிட்டல் மற்றும் சதீஷ் சந்திர சர்மா SC/ST வகுப்பினருக்கு ஒரு மேல்நிலையினர் (creamy layer) வகுப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தனர். 


தற்போதைய இடஒதுக்கீடு முறையானது, இடஒதுக்கீட்டின் நோக்கத்தின் விதிமுறைகளை தோற்கடித்து, இந்த சமூகங்களில் அதிகாரம் பெற்றவர்கள் பயனடைவதால், இடஒதுக்கீடுகளின் பலன் SC/ST வகுப்பினர்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது பின்தங்கிய பிரிவினரை சென்றடைய வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.


பல ஆண்டுகளாக, SC/ST வகுப்பினர்களுக்கு ஒரு மேல்நிலையினர் (creamy layer) எனும் வகைப்பாட்டை அறிமுகப்படுத்துவதற்கான வாதம் வலுப்பெற்றுள்ளது. ஆனால், பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (Dalits) மற்றும் பழங்குடியினரிடையே (tribals) அதிகாரம் பெற்றவர்கள் இடஒதுக்கீட்டின் பெரும்பாலான நன்மைகளைப் பெற்றுள்ளனர் என்பதற்கு போதுமான தரவு கிடைக்கவில்லை. 


2023-ம் ஆண்டில் SC/ST வகுப்பினர்களின் நலனுக்கான நிலைக்குழுவுக்கு (Standing Committee) ஒன்றிய அரசு வழங்கிய தரவுகள், பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (Dalits) மற்றும் பழங்குடியினர் (tribals) குறைந்த அளவிலான சேவை, அவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டின்படி - SC வகுப்பினருக்கு 15% மற்றும் ST வகுப்பினருக்கு 7.5%  குழு C மற்றும் D (Group A and B) மட்டத்தில் மட்டுமே போதுமான வாய்ப்பைப் பெறுகிறார்கள்.


70 ஆண்டுகளுக்கும் மேலாக இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தபோதிலும், இந்த சமூகங்கள் நிர்வாக மற்றும் நீதித்துறையின் உயர் மட்டங்களில் ஊடுருவ முடியவில்லை என்பதை இந்த தரவு காட்டுகிறது. பதவிகளில் இட ஒதுக்கீடு இந்த பதவிகளுக்கு பொருந்தாது. மத்திய அரசுப் பணிகளில் SC/ST சமூகத்தினர் போதுமான பிரதிநிதித்துவம் பெற்றிருப்பதாகத் தோன்றினாலும், அவர்கள் இன்னும் உயர்மட்டத்தில் ஊடுருவ முடியவில்லை.


22.5% இடஒதுக்கீடு இருந்தும் மத்திய அரசின் துறைத் தலைவர்களில் 10%க்கும் குறைவானவர்கள் SC/ST சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உயர் நீதித்துறையில், அவர்களின் பிரதிநிதித்துவம் 5% க்கும் குறைவாக உள்ளது. உயர்மட்ட அரசுப் பணிகளுக்கு SC மற்றும் ST பணியாளர்களின் விகிதம் குறைவதாக வேலைவாய்ப்புத் தரவு காட்டுகிறது.


  2010-ம் ஆண்டில் பல்வேறு சாதிக் குழுக்களின் சமூக-பொருளாதார நிலை குறித்து நடத்தப்பட்ட தேசிய மாதிரி கணக்கெடுப்பு (National Sample Survey (NSS)) (அதன் பிறகு அத்தகைய கணக்கெடுப்பு எதுவும் செய்யப்படவில்லை) எஸ்சி / எஸ்டி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஊதிய வேலைகளில் இடஒதுக்கீடு இருந்தபோதிலும் அவர்களின் மக்கள் தொகையின் விகிதத்தை விட மிகக் குறைவாக உள்ளனர் என்பதைக் காட்டுகிறது. 


தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (NSS)  கணக்கெடுப்பின் அடிப்படையில் வேலை இட ஒதுக்கீட்டின் செயல்திறன்: சாதி, மதம் மற்றும் இந்தியாவில் பொருளாதார நிலை (The Effectiveness of Jobs Reservation: Caste, Religion, and Economic Status in India) என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில், இடஒதுக்கீடு வேலைகளில் SC/ST சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை ஐந்து சதவீத புள்ளிகளால் அதிகரித்துள்ளது என்று ஆய்வு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இடஒதுக்கீடு இல்லாவிட்டால், அவர்களின் பிரதிநிதித்துவம் முஸ்லிம்கள் மற்றும் OBCகளை விட குறைவாக உள்ளது என்றும் கூறியுள்ளது. 


எவ்வாறாயினும், SC/ST இடஒதுக்கீட்டின் பெரும்பாலான நன்மைகளைப் பெறும் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினரிடையே கல்வி மற்றும் சமூக ரீதியாக பெரும்பாலான பலன்களைப் பெறுகிறார்களா என்பது குறித்து எந்த ஆய்வுகளும் இல்லை. இருப்பினும் கோட்பாட்டளவில், அதற்கான நிகழ்தகவு அதிகமாக உள்ளது. கல்வி மற்றும் சமூக ரீதியாக நல்ல நிலையில் உள்ள பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினரின் குழந்தைகள் சாதி மற்றும் சமூக அந்தஸ்தின் காரணமாக எந்த பாகுபாட்டையும் எதிர்கொள்ளவில்லை என்றாலும் இடஒதுக்கீட்டால் பயனடைகிறார்கள் என்று தோன்கிறது. இமாச்சல், ஜம்மு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் போன்ற மலை மாநிலங்களில் இருந்து செல்வாக்கு மிக்க பழங்குடியினர், ஏழை பழங்குடியினரின் இழப்பில் வந்த எஸ்டி இடஒதுக்கீட்டின் பெரும்பாலான பலன்களைப் பெற்றுள்ளனர்.


மேல்நிலையினருக்கான (creamy layer) வழக்கு 


அனுபவ ஆய்வுகள் (Empirical studies) மற்றும் உச்ச நீதிமன்றம் எஸ்சி / எஸ்டி இடஒதுக்கீட்டில் மேல்நிலையினருக்கு (creamy layer)  வலுவான வாதத்தை முன்வைத்துள்ளன. எஸ்சி / எஸ்டி இடஒதுக்கீட்டிற்கான மேல்நிலையினர் (creamy layer) கருத்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) இட ஒதுக்கீட்டு மேல்நிலையினரிலிருந்து (creamy layer) வேறுபடலாம். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு (OBC), விலக்கு அளவுகோலில் ஆண்டு வருமானம் ₹8 லட்சம், உயர் பதவியில் உள்ள அரசு வேலைகள் மற்றும் பெரிய பண்ணை உரிமை ஆகியவை இந்த அளவுகோலில் அடங்கும். மேலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான (OBC) மேல்நிலையினர் (creamy layer) கடந்த ஏழு ஆண்டுகளாக திருத்தப்படவில்லை என்பது உறுதியான உண்மை. 


பட்டியலிடப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீட்டில் துணைப்பிரிவு என்பது மேல்நிலையினரை (creamy layer) அறிமுகப்படுத்தி, அதிகாரம் பெற்ற பட்டியலிடப்பட்ட வகுப்பினர்களுக்கான வேலைகளுக்கான ஒதுக்கீட்டு பங்கைக் குறைக்கும். இதற்கு தீர்வு காண, கூடுதல் நடவடிக்கைகளை அரசு பரிசீலிக்கலாம். உதாரணமாக, ஒரு குடும்பத்தின் இரண்டு தலைமுறைகள் வேலைக்கான ஒதுக்கீட்டில் பலனைப் பெற்றிருந்தால், மூன்றாம் தலைமுறையினர் ஒதுக்கீட்டைப் பெறக்கூடாது. மேலும், ஒரு குடும்பத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், குறிப்பிட்ட சதவீதம் அதிகரித்திருந்தால், அவர்கள் இடஒதுக்கீட்டுப் பலன்களுக்குத் தகுதி இல்லை என்பதை உறுதிபடுத்த வேண்டும்.


துணைப்பிரிவுகளைப் போலவே, எஸ்சி மற்றும் எஸ்டி இடஒதுக்கீட்டில் மேல்நிலையினர் (creamy layer) என்ற கருத்தை அறிமுகப்படுத்துவது பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினரிடையே ஏழைக் குடும்பம் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு பயனளிக்கும் மற்றும் இந்த சமூகங்களில் செல்வாக்கு மிக்கவர்களின் மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும். 


மேல்நிலையினர் (creamy layer) விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்தித்த பாஜக எஸ்சி/எஸ்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேல்நிலையினர் (creamy layer) அறிமுகப்படுத்தப்பட்டால் தங்கள் அரசியல் பதவியை இழக்க நேரிடும் என்று கவலையில் உள்ளனர். பெரும்பாலான எஸ்சி/எஸ்டி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேல்நிலையினர் (creamy layer) அறிமுகப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டாலன்றி, ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட முடியாது.


  இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேல்நிலையினர் (creamy layer) பிரிவை எதிர்ப்பதன் மூலம் தங்கள் சமூகங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பின்தங்கிய நபர்களுக்கு தீங்கு விளைவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அமைச்சரவை தீர்மானம் அரசியலமைப்பில் உள்ள இடஒதுக்கீட்டிற்கு எதிரானது.


சேத்தன் சவுகான், தேசிய விவகாரங்களின் ஆசிரியர். இந்த வாரம் நாட்டின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் செய்திகளை பகுப்பாய்வு செய்கிறார்.



Original article:

Share:

இந்திய ரிசர்வ் வங்கியின் வேலைவாய்ப்பு தரவுகள் எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டும் -அமிதாப் குண்டு, பி.சி.மோகனன்

 தரவுத்தொகுப்பின் வரம்புகளைக் கருத்தில் கொண்டு, விரைவான வேலைவாய்ப்புகளின் வளர்ச்சியின் கூற்றுகளைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.


நாட்டில் மோசமான வேலை உருவாக்கம் குறித்த கூற்றுக்களை எதிர்கொள்ள (K-capital, L-labor, E-energy, M-materials, and S-purchased services (KLEMS)) தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகள் பரவலாக மேற்கோள் காட்டப்படுகின்றன. இந்த தரவுத்தளம் ஒரு சர்வதேச திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது. இது 2009 முதல் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் (Delhi School of Economics) மற்றும் சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆணையம் (ICRIER) அறிஞர்களால் ஆதரிக்கப்பட்டு வருகிறது, இப்போது 2022 முதல் இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ளது. எனவே, துறைசார் விவரங்கள் மற்றும் அசல் ஆதாரங்கள் உட்பட தரவை உருவாக்கப் பயன்படுத்தப்படும் முறையை ஆராய்வது முக்கியம்.


தற்போது 1980 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் கிடைக்கக்கூடிய மூலதனம் (K), உழைப்பு (L), ஆற்றல் (E), பொருள் (M) மற்றும் சேவைகள் (S) பற்றிய தரவுகளைக் கொண்ட KLEMS தரவுத்தளம், "தொழில்துறை மட்டத்திலும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் உற்பத்தித்திறன் வளர்ச்சியைக் கண்காணிக்கவும் மதிப்பிடவும் அளவீட்டு கருவியை" மதிப்பிடுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வேலைவாய்ப்பு-வேலையின்மை ஆய்வுகள் (employment-unemployment surveys (EUS)), காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்புகள் (periodic labor force surveys (PLFS)), தேசிய கணக்கு புள்ளிவிவரம் (National Account Statistics) மற்றும் தொழில்துறைகளின் வருடாந்திர ஆய்வு (Annual Survey of Industries) ஆகியவற்றின் பல்வேறு சுற்றுகளின் தரவைப் பயன்படுத்துகிறது. தேசிய புள்ளியியல் அலுவலகத்திலிருந்து (National Statistical Office) வருடாந்திர தரவு இல்லாத நிலையில், கிடைக்கக்கூடிய தரவு அளவுகோல்களாகப் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் மற்ற ஆண்டுகளுக்கான இடைக்கணிப்பு (interpolated) செய்யப்படுகின்றன. 


முறைப்படி, வேலைவாய்ப்பு-வேலையின்மை கணக்கெடுப்புகள் (employment-unemployment surveys (EUS)) மற்றும் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்புகள் (periodic labor force surveys (PLFS)) தரவு கிராமப்புற ஆண், பெண், நகர்ப்புற ஆண் மற்றும் பெண் ஆகிய நான்கு குழுக்களுக்கான வழக்கமான முதன்மை மற்றும் துணை நிலை (usual principal and subsidiary status (UPSS)) மூலம் தொழிலாளர்களின் துறை விநியோகத்தை தீர்மானிக்க பயன்படுத்தப்படுகிறது. கணக்கெடுப்புகள் தொழிலாளர்களின் முழுமையான எண்ணிக்கையை வழங்காததால், கணக்கெடுப்பிலிருந்து நான்கு குழுக்களுக்கான மதிப்பிடப்பட்ட தொழிலாளர்-மக்கள் தொகை விகிதங்கள் (worker-population ratios (WPR)) மொத்த மக்கள்தொகையால் பெருக்கப்படுகின்றன. கணக்கெடுப்பு ஆண்டுகளுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு எண்களைப் பயன்படுத்தி இடைக்கணிப்பு செய்யப்படலாம் அல்லது சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மக்கள்தொகை ஆணையத்தின் (National Population Commission) மக்கள்தொகை கணிப்புகளிலிருந்து எடுக்கப்படலாம். 


இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கையின் வழிமுறை பிரிவில், 2017-18, 2018-19 மற்றும் 2019-20ஆம் ஆண்டுகளில், பணியமர்த்தப்பட்ட நபர்களுக்கான அகில இந்திய புள்ளிவிவரங்கள் பொருளாதார கணக்கெடுப்பு 2021-22-லிருந்து எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2020-21 முதல், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மக்கள் தொகை கணிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த கணிப்புகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மட்டுமே கிடைக்கின்றன. இதன் விளைவாக, கிராமப்புற மற்றும் நகர்ப்புற பிரிவுகளில் மக்கள்தொகையை திட்டமிடுவதற்கு ஒரு சீரான வளர்ச்சி பயன்படுத்தப்படுகிறது. காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்புகளில் (periodic labor force surveys (PLFS)) காணப்படுவது போல், தொழிலாளர்களின் எண்ணிக்கையானது அவர்களின் வேலையின் பங்கின் அடிப்படையில் தொழில் குழுக்களிடையே விநியோகிக்கப்படுகிறது.


முக்கியமாக, 2010 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் கருவுறுதல் விகிதத்தில் கடுமையான சரிவு காரணமாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கணித்த மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் அதிக அளவில் உள்ளன. இதன் பொருள் என்னவென்றால், திட்டமிடப்பட்ட மக்கள் தொகையை தொழிலாளர்-மக்கள் தொகை விகிதங்களுடன் (worker-population ratios (WPR)) பெருக்குவதன் மூலம் பெறப்பட்ட மொத்த உழைப்பு மற்றும் தொழிலாளர் சக்தி அதிகரிக்கப்படும். மேலும், மதிப்பிடப்பட்ட கிராமப்புற மக்கள்தொகையும் அதிகமாக இருக்கும் அதேவேளையில், நகர்ப்புற மக்கள் தொகையின் அதே விகிதத்தில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. வேலைக்கான அனுபவத்தில் கிராமப்புறங்களில் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. வேலைவாய்ப்பு பங்கேற்பு விகிதம் நகர்ப்புறங்களை விட ஊரகப் பகுதிகளில் அதிகமாக இருப்பதால், 2020-களில் உருவாக்கப்பட்ட மொத்த வேலைவாய்ப்பு உண்மையான புள்ளிவிவரங்களை விட அதிகமாக இருக்கும்.


மேற்கண்ட விளக்கம், இந்திய ரிசர்வ் வங்கி சுதந்திரமான எந்த வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்களையும் வெளியிடவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. வழக்கமான முதன்மை மற்றும் துணை நிலை (UPSS) அடிப்படையிலான தொழிலாளர்-மக்கள் தொகை விகித (WPR) எண்களைப் பெற திட்டமிடப்பட்ட மக்கள்தொகையில் பயன்படுத்தப்படுகிறது. வழக்கமான முதன்மை மற்றும் துணை நிலையின் (UPSS) படி, 2011-12 முதல் 2017-18 வரை தொழிலாளர்-மக்கள் தொகை விகிதத்தில் (WPR) குறிப்பிடத்தக்க வீழ்ச்சி உள்ளது. ஏனெனில், நாம் வேலைவாய்ப்பு-வேலையின்மை ஆய்வுகளிலிருந்து (EUS) காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்புகளுக்கு மாறுகிறோம் மற்றும் தற்காலிக ஒப்பீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை என்று KLEMS கருதுகிறது. இருப்பினும், கிராமப்புற மகளிருக்கான வேலைவாய்ப்பு பங்கேற்பு விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்ற மக்கள் தொகை பிரிவினரிடமும் சில அதிகரிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலே விவாதிக்கப்பட்டபடி, சற்றே உயர்ந்த மக்கள்தொகை மதிப்பீடுகளில் பயன்படுத்தப்படும் இந்த தொழிலாளர்-மக்கள் தொகை விகித (WPR) மதிப்புகள், மிகைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு எண்களை உருவாக்கும். 


KLEMS தரவுத்தளத்தில், விவசாயத்தில் வேலைவாய்ப்பு 2018-19க்கு முன்பு 20 கோடியிலிருந்து 2022-23-ல் 25 கோடியாக அதிகரித்துள்ளது. அதற்கேற்ப, சேவைத் துறையில் வேலைவாய்ப்பு 17.2 கோடியிலிருந்து 20.2 கோடியாக உயர்ந்துள்ளது. உற்பத்தித் துறை வேலைவாய்ப்பு 5.5 கோடியிலிருந்து 6.3 கோடியாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. 


மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் வேலைவாய்ப்பு பங்கேற்பு விகிதம் மாறாமல் இருந்தாலும் தொழிலாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயரும். இதேபோல், உற்பத்தி வேலைவாய்ப்பு அதிகரித்தாலும், மொத்த தொழிலாளர்களின் விகிதம் குறைந்து வருகிறது என்று காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு தரவானது, துணை வேலைவாய்ப்பு உள்ளவர்களை உள்ளடக்கியது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது வேலையுடன் குறைவான தொடர்பைக் கொண்ட நபர்களைச் சேர்ப்பதைக் குறிக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் ஊதியம் பெறாத குடும்பப் பணியாளர்களாக உள்ளனர். EUS/PLFS தரவுகளை திட்டமிடப்பட்ட மக்கள்தொகையுடன் சேர்த்து வேலைவாய்ப்பு உருவாக்கம் என்று கூறுவது தவறாக வழிநடத்துவதாகும். இதனால், வேலையின் தன்மை மற்றும் தரம் பற்றி எந்த குறிப்பும் இல்லை. 


SBI வங்கி பொருளாதார வல்லுநர்களின் ஆய்வில், இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) தரவுகளின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட மொத்த வேலைவாய்ப்பை RBI KLEMS தரவுத்தளத்தில் கிடைக்கும் தரவுகளுடன் ஒப்பிடுகிறது. இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (ASUSE)  அனைத்து அமைப்புசாரா நிறுவனங்களின் துணைக்குழுவை உள்ளடக்கியது மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டவை தவிர, கட்டுமானம், பெருநிறுவனத் துறை மற்றும் அரசு ஆகியவற்றில் உள்ளவற்றை விலக்குகிறது. இத்தகைய நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களின் எண்ணிக்கை 10.96 கோடி மட்டுமே என்று கணக்கெடுப்பு மதிப்பிட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டில் மொத்த வேலைவாய்ப்பு 56.8 கோடி என்று கூறுவதற்கு இந்த எண்ணிக்கை பயன்படுத்தப்படுகிறது. இது KLEMS தரவுகளுக்கு அருகில் உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். 


நிறுவனங்களின் கணக்கெடுப்புகளில் வேலைவாய்ப்பு நிறுவனங்களில் ஒரு நிலையைக் குறிக்கிறது. இந்தத் தரவை வீட்டு வேலைவாய்ப்பு ஆய்வுகளின் தகவலுடன் எளிதாக ஒப்பிட முடியாது. அவை வேலைவாய்ப்பு தரவுகளுக்கு மிகவும் நம்பகமானதாகக் கருதப்படுகிறது. நன்கு அறியப்பட்ட காரணங்களால் இந்த இரண்டு மூலங்களிலிருந்தும் மதிப்பீடுகள் பெரும்பாலும் ஒத்துப்போவதில்லை. இதேபோல், Udyam போர்ட்டலில் உள்ள MSME அமைப்புகளில் உள்ள நிறுவனங்கள் பதிவுகள் பற்றிய தரவு புதிய வேலை உருவாக்கத்தைக் குறிக்க வேண்டிய அவசியமில்லை. EPFO சந்தாக்களில் மாதாந்திர மாற்றங்கள் எப்போதும் புதிய வேலைகள் உருவாக்கப்படுகின்றன என்று அர்த்தமல்ல.


இந்தத் தரவுகளின் வரம்புகளைக் கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பில் விரைவான அதிகரிப்பு பற்றிய கூற்றுகளைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பாக சிறப்பான வேலைகளுக்கு.


அமிதாப் குண்டு அகமதாபாத்தில் உள்ள எல் ஜே பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாண்பமை பேராசிரியர். மோகனன் தேசிய புள்ளியியல் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.


Original article:

Share:

இந்தியாவின் சுதந்திரம் மற்றும் பிரிவினைக்கான முன்நிகழ்வுகள்

 1946-ஆம் ஆண்டில், ஆங்கிலேய அரசாங்கம் சுதந்திரத்திற்கான நிபந்தனைகளைப் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவைத் தூதுக்குழுவை (Cabinet Mission) இந்தியாவுக்கு அனுப்பியது. ஆனால், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கின் முரண்பாடான கோரிக்கைகளை சமரசம் செய்ய தூதுக்குழு தவறிவிட்டது. இந்த தோல்வி இந்தியாவில் பிரிவினையை  தவிர்க்க முடியாததாக ஆக்கியதா? 


இரண்டாம் உலகப் போரின் போது, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஆங்கிலேய பாதுகாப்பு உத்திகளில் இந்தியா முக்கியப் பங்காற்றியது. ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளங்களை போருக்குப் பயன்படுத்த விரும்பினர். ஆனால், இந்திய விவகாரங்களில் கடுமையான கட்டுப்பாட்டை வைத்திருந்தனர். 1940 முதல் ஆங்கிலேய பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு வலுவான ஏகாதிபத்தியவாதி. சுயாட்சிக்கான (self-governance) இந்தியாவின் கோரிக்கைகளுக்கு அவர் செவிசாய்க்கவில்லை. இருப்பினும், அவரது போர் அமைச்சரவையில், ஒரு பிளவு இருந்தது. தொழிலாளர் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் (Sir Stafford Cripps) இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஆதரவான ஒரு முற்போக்கான அணுகுமுறையை ஆதரித்தார்.


1942-ல் கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியாவுக்கு வந்தது. போருக்குப் பிறகு அது இந்தியாவுக்கு சுயநிர்ணய உரிமையை (dominion status) வழங்கியது. ஆனால், நிபந்தனைகளுடன் உரிமை வழங்கப்பட்டது. ஒரு நிபந்தனை என்னவென்றால், எதிர்கால இந்திய ஒன்றியத்திலிருந்து மாகாணங்கள் பிரிந்து செல்லலாம், இது பாகிஸ்தானுக்கான முஸ்லீம் லீக்கின் கோரிக்கையை மறைமுகமாக அங்கீகரித்தது. காங்கிரஸ் இந்த வாய்ப்பை நிராகரித்தது, இது ஆங்கிலேய மற்றும் இந்திய தலைவர்களுக்கு இடையிலான உறவுகளில் முழுமையான முறிவுக்கு வழிவகுத்தது. போர் தொடர்ந்தபோது, தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானின் முன்னேற்றங்களால் ஆங்கிலேய கௌரவம் மேலும் பலவீனமடைந்தது.

 

சர்வதேச அழுத்தம், குறிப்பாக அமெரிக்காவின் அழுத்தமும் பிரிட்டனை காலனித்துவ நீக்கத்தை செய்ய வலியுறுத்தியது. போரின் முடிவில், ஆங்கிலேய அரசு பொருளாதார ரீதியாக பலவீனமடைந்து அரசியல் அழுத்தத்தின் எதிர்கொண்டது. இது அதன் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது. 1945-ல் அதிகாரத்தைக் கைப்பற்றிய தொழிற்கட்சி அரசாங்கம், இந்திய சுதந்திரத்திற்கு அதிக ஆதரவாக இருந்தது. இருப்பினும், கட்டுப்பாட்டை முழுமையாக அளிக்காமல்  அவர்கள்  எச்சரிக்கையாகவே இருந்தனர்.

 

இந்த காலம் இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறுவதற்கான தொடக்கத்தைக் குறித்தது. இது 1947-ல் பிரிவினைத் திட்டத்திற்கு (partition plan) வழிவகுத்தது. இந்தத் திட்டம் இந்தியாவை இரண்டு சுதந்திர நாடுகளாகப் பிரித்தது, இந்தியா மற்றும் பாகிஸ்தான். போர்க்காலத் தேவைகள், சர்வதேச அழுத்தம் மற்றும் சுயராஜ்யத்திற்கான இந்தியாவின் கோரிக்கைகள் ஆகியவற்றின் விளைவாக பிரிவினை ஏற்பட்டது. பிரிவினை பெரும்பாலும் வளர்ந்து வரும் இந்து-முஸ்லிம் பிளவால் ஏற்பட்டது. அதிகாரத்தை மாற்றுவது தொடர்பான பல்வேறு பேச்சுவார்த்தைகளின் போது இந்த பிளவு தெளிவாகியது.


மார்ச் 1940-ல் அகில இந்திய முஸ்லீம் லீக்கால் ஏற்றுக்கொள்ளப்பட்ட லாகூர் தீர்மானம் (Lahore Resolution) ஒரு முக்கிய திருப்புமுனையாகும். இந்தத் தீர்மானம் இந்திய முஸ்லிம்களை சிறுபான்மையினராக இருந்து தனி தேசத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இது முஹம்மது அலி ஜின்னாவை முஸ்லிம்களுக்கான "ஒரே செய்தித் தொடர்பாளர்" ஆக்கியது. மேலும், முஸ்லீம் லீக்கின் கோரிக்கைகள் பேரம் பேச முடியாததாக மாறியது. கிரிப்ஸின் யோசனையை ஜின்னா நிராகரித்தார். மாகாண சுயாட்சி மட்டுமின்றி முஸ்லிம் சுயநிர்ணய உரிமையையும், இந்துக்களுடன் சமத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். 


 வின்ஸ்டன் சர்ச்சில் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியைத் தக்கவைக்க இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒரு காரணமாக பயன்படுத்தினார். இந்த நேரத்தில், ஆங்கிலேயர்கள் பல்வேறு மாகாணங்களில் முஸ்லிம் லீக் அமைச்சகங்களை ஆதரித்தனர். இது பிளவை இன்னும் ஆழமாக்கியது. இந்த பிரிவினைகள் ஏற்பட்ட போதிலும், பாகிஸ்தானுக்கான கோரிக்கை இன்னும் தெளிவாக இல்லை. முழுமையான பிரிவினையை விட ஒரு கூட்டாட்சி கட்டமைப்பிற்குள் சுயாட்சி பெறுவதில் அதிக கவனம் செலுத்தியது.


1940-களில், உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் முஸ்லிம் மக்களின் கோரிக்கைகளை தீர்க்க காங்கிரஸ் பலமுறை முயற்சித்தது. ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி 1944-ல் சி. ராஜகோபாலாச்சாரியால் முன்மொழியப்பட்ட ராஜாஜி  சூத்திரம் (Rajaji Formula) ஆகும். இந்த சூத்திரம் முஸ்லீம் பெரும்பான்மை மாவட்டங்களை வரையறுக்க போருக்குப் பின்னர் ஆணையத்தை உருவாக்க பரிந்துரைத்தது. இந்த பகுதிகள் பாகிஸ்தானுடன் சேர வேண்டுமா என்பதை முஸ்லிம் அல்லாதவர்கள் உட்பட ஒரு பொது வாக்கெடுப்பு முடிவு செய்யும்.


ஜின்னா இந்த முன்மொழிவை நிராகரித்தார். இது செப்டம்பர் 1944-ல் காந்தி-ஜின்னா பேச்சுவார்த்தை தோல்விக்கு வழிவகுத்தது. சில கூட்டாண்மையுடன் ஒருங்கிணைந்த இந்தியா என்ற காந்தியின் பார்வைக்கும் முழு இறையாண்மைக்கான ஜின்னாவின் கோரிக்கைக்கும் இடையே முக்கிய கருத்து வேறுபாடு இருந்தது. இது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியது.


1945-ல் இந்தியாவில் ஆங்கிலேயரின் பிரதிநிதியாக இருந்த லார்ட் ஆர்க்கிபால்ட் வேவல் (Lord Archibald Wavell) காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சித்தபோது மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. 1945-ஆம் ஆண்டு சிம்லா மாநாடு அனைத்திந்திய நிர்வாகக் குழுவை உருவாக்குவது பற்றி விவாதிக்க மாநாடு நடைபெற்றது. முஸ்லிம் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்று ஜின்னா கோரியதால் மாநாடு தோல்வியடைந்தது. சாதி இந்துக்களுக்கு மட்டுமே அவர்களின் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தும் என்பதால், காங்கிரஸ் இதை ஏற்க மறுத்தது. இந்த மறுப்பு பதற்றத்தை மேலும் அதிகரித்தது.


1940-களில் முஸ்லிம் லீக் முஸ்லிம்களிடையே பரவலான ஆதரவைப் பெற்றது. லீக் நிலப்பிரபுத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் இருந்து தொழில் வல்லுநர்கள், வணிகக் குழுக்கள் மற்றும் மதத் தலைவர்களிடமிருந்து ஆதரவைப் பெறுவதற்கு மாறியது. பாகிஸ்தானுக்கான லீக்கின் பிரச்சாரம் அரசியல் மட்டுமல்ல, மத ஆதரவையும் கொண்டிருந்தது. முன்னணி உலமாக்கள், பீர்கள் மற்றும் மௌலவிகள் பிரச்சாரத்தை ஆதரித்தனர், மத சட்டத்தை சேர்த்தனர். ஜின்னாவின் தலைமையின் கீழ், முஸ்லிம் லீக்கின் கட்டுப்பாடு மேலும் அதிகரித்தது. இந்த கட்டுப்பாடு ஏ.கே போன்ற பிராந்திய தலைவர்களை ஓரங்கட்ட வழிவகுத்தது. வங்காளத்தில் ஃபஸ்லுல் ஹக் மற்றும் பஞ்சாபில் சர் சிக்கந்தர் ஹயாத் கான், ஜின்னாவின் ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள். வங்காளம் மற்றும் பஞ்சாப் போன்ற மாகாணங்களில் முஸ்லிம் லீக்கின் பிரச்சாரங்கள், வர்க்க மற்றும் பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து பாகிஸ்தானை முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளமாக மாற உதவியது.


தேர்தல் வெற்றி (electoral victory) மற்றும் பிரிவினைக்கான ஆணை (mandate for partition)


முஸ்லீம்லீக்கின் அணிதிரட்டல் முயற்சிகள் 1946-ல் தேர்தலுக்கு வழிவகுத்தது, இது பாகிஸ்தானுக்கான வாக்குகளாக பார்க்கப்பட்டது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்களில், குறிப்பாக வங்காளம் மற்றும் பஞ்சாபில், முஸ்லிம் லீக் வெற்றிபெற்று, இந்திய முஸ்லிம்களின் முக்கிய பிரதிநிதியாக அதன் நிலையை வலுப்படுத்தியது.  வங்காளத்தில், முஸ்லீம் லீக் 93 சதவீத முஸ்லிம் வாக்குகளைப் பெற்றது. சேகர் பந்தோபாத்யாயாவின் பிளாசி முதல் பிரிவினை வரை (From Plassey To Partition and After) என்ற புத்தகத்தின்படி, பஞ்சாபில், யூனியனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பையும் மீறி முஸ்லீம்லீக் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றது.


வங்காளம், சிந்து மற்றும் பஞ்சாப் தவிர பெரும்பாலான மாகாணங்களில் பெரும்பான்மையைப் பெற்று, காங்கிரஸ் வென்றது. பாகிஸ்தானுக்கான முஸ்லிம் லீக்கின் கோரிக்கைக்கு வலுவான ஆதரவாக தேர்தல் முடிவுகள் காணப்பட்டன. இந்த ஆதரவு இறுதியில் பிரிவினைக்கு வழிவகுத்தது.


1946-ன் பிற்பகுதியில், ஆங்கிலேய பிரதம மந்திரி கிளெமென்ட் அட்லி (Clement Attlee), இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியைத் தொடர்வது இனி சாத்தியமில்லை என்பதை உணர்ந்தார். அவர் பல சிக்கல்களைக் குறிப்பிட்டார்:


1. நிர்வாக இயந்திரங்களின் பற்றாக்குறை: இந்தியாவை திறம்பட நிர்வகிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை.

2. இராணுவ அர்ப்பணிப்புகள்: ஆங்கிலேய துருப்புக்கள் வேறு இடங்களில் தேவைப்பட்டன.

3. தொழிலாளர் கட்சி எதிர்ப்பு: அட்லியின் சொந்த கட்சிக்குள் எதிர்ப்பு இருந்தது.

4. கேள்விக்குரிய விசுவாசம் : இந்திய துருப்புக்கள் முழுமையாக ஆதரவாக இல்லை.

5. தயக்கம் காட்டிய ஆங்கிலேயப் படைகள்: ஆங்கிலேயப் படைகள் இந்தியாவில் பணியாற்ற விரும்பவில்லை.


ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய கருத்து மற்றும் கவலைகள் நிலைமையின் சிக்கலை அதிகரித்தன. இந்தியாவில் ஆங்கிலேய  காலனித்துவ ஆட்சி தொடர முடியாது என்பதை அட்லியின் அரசாங்கம் உணர்ந்தது. இது இந்தியாவிலிருந்து சுமுகமான பின்வாங்கும் கொள்கை மாற்றத்திற்கு வழிவகுத்தது.


1946-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவுக்கான அமைச்சரவைப் பணி அறிவிப்பது போன்ற நடவடிக்கைகளில் இந்த மாற்றம் காணப்பட்டது. அதிகாரத்தை மாற்றுவதற்கான அரசியலமைப்புக் கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. ஒரு கட்டமாக திரும்பப் பெறும் திட்டம் மற்றும் ஆங்கிலேய ஆட்சிக்கான காலக்கெடு முன்மொழியப்பட்டது. ஆனால், முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.  அட்லியின் அணுகுமுறை, ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து பின்வாங்குவது  தவிர்க்க முடியாதது என்பதை எடுத்துக்காட்டியது மற்றும் இந்தியா மீதான ஏகாதிபத்திய கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது 


அமைச்சரவைப் பணி (Cabinet Mission )


1946-ஆம் ஆண்டில், ஆங்கிலேய அரசாங்கம் சுதந்திரம் வழங்குவது பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைச்சரவை குழுவை இந்தியாவிற்கு அனுப்பியது. இந்த பணிக்கு பெதிக்-லாரன்ஸ், ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் மற்றும் ஏ.வி. அலெக்சாண்டர், அப்போதைய ஆங்கிலேய பிரபு வேவல் உடன் இந்தியாவிற்கு வந்தனர். அவர்கள் இறையாண்மை கொண்ட பாகிஸ்தான் என்ற யோசனையை நிராகரித்தனர் மற்றும் மாகாணங்களின் குழுக்களுடன் ஒரு தளர்வான கூட்டாட்சி கட்டமைப்பை முன்மொழிந்தனர். இந்த அமைப்பு 10-ஆண்டுகளுக்குப் பிறகு குழுக்களில் இருந்து வெளியேற மாகாணங்களை அனுமதிக்கும். ஆனால், ஒன்றியத்தை விட்டு வெளியேறாது.


இந்திய மக்கள் தேர்ந்தெடுத்ததன் அடிப்படையில் ஆங்கிலேய காமன்வெல்த் உள்ளேயோ அல்லது வெளியில் சுதந்திரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கின் முரண்பட்ட கோரிக்கைகளை சமரசம் செய்ய இத்திட்டம் தோல்வியடைந்தது. முஸ்லீம் லீக் பாகிஸ்தானை விரும்பியது, காங்கிரஸ் ஒன்றுபட்ட இந்தியாவிற்கு பூரண சுதந்திரத்தை (complete independence ) விரும்பியது.


இறையாண்மை கொண்ட பாகிஸ்தானை நிராகரித்தது பிளவுகளை ஆழமாக்கியது. இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று சகிப்புத்தன்மை இல்லாமல் வளர்ந்து வந்தன. ஒருமித்த கருத்தை எட்டத் தவறியதால், அரசியல் நிலைமை மேலும் நிலையற்றதாக மாறியதால், பிரிவினையை நோக்கிய செயல்முறை அதிகரித்தது. 


லூயிஸ் மவுண்ட்பேட்டன் (Mountbatten) இந்தியாவிற்கு வந்த நேரத்தில், பிரிவினையுடன் கூடிய சுதந்திரம் என்ற கருத்து ஆதரவைப் பெற்றது. வி.பி. மேனன், பிரிந்து செல்லும் உரிமை உட்பட, மேலாதிக்க அந்தஸ்துடன் கூடிய உடனடி அதிகார பரிமாற்றத்தை முன்மொழிந்தார். இந்த அணுகுமுறை ஒரு புதிய அரசியல் கட்டமைப்பிற்கான நீண்ட காத்திருப்பைத் தவிர்க்கிறது.


ஜூன் 3, 1947-ல் அறிவிக்கப்பட்ட மவுண்ட்பேட்டன் திட்டம், முக்கிய குறிப்புகளை உள்ளடக்கியது:


 பஞ்சாப் மற்றும் வங்காளத்தின் சட்டமன்றங்கள் பிரிவினைக்கு வாக்களிக்க இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் குழுக்களாக தனித்தனியாக கூடும். எந்த ஒரு குழுவிலும் ஒரு எளிய பெரும்பான்மை பிரிவினைக்கு வாக்களித்தால், மாகாணங்கள் பிரிக்கப்படும். பிரிவினை ஏற்பட்டால், இரண்டு ஆதிக்கங்கள் மற்றும் இரண்டு தொகுதிக் கூட்டங்கள் உருவாக்கப்படும். சிந்து தனது சொந்த முடிவை எடுக்க முடியும்.  அவர்களின் தலைவிதியை தீர்மானிக்க வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (North-West Frontier Province (NWFP)) மற்றும் வங்காளத்தின் சில்ஹெட் மாவட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.


மவுண்ட்பேட்டன் திட்டம் முஸ்லீம் லீக்கின் பாகிஸ்தானுக்கான கோரிக்கையை நிறைவேற்றியது. அதே நேரத்தில் முடிந்தவரை ஒற்றுமையை வைத்திருக்க முயற்சித்தது. ஜூலை 5, 1947-ல், ஆங்கிலேய பாராளுமன்றம் மவுண்ட்பேட்டன் திட்டத்தின் அடிப்படையில் இந்திய சுதந்திரச் சட்டத்தை (Indian Independence Act) நிறைவேற்றியது. இது ஜூலை 18, 1947-ல் அரச ஒப்புதலைப் பெற்றது மற்றும் ஆகஸ்ட் 15, 1947-ல் செயல்படுத்தப்பட்டது.


இந்திய சுதந்திரச் சட்டம் 1947 (Indian Independence Act 1947) 


இந்திய சுதந்திரச் சட்டம் ஆகஸ்ட் 15, 1947-ல் தொடங்கி இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு சுதந்திர நாடுகளை உருவாக்கியது. ஒவ்வொரு ஆட்சிக்கும் சட்டத்தின் அமலாக்கத்தை மேற்பார்வையிட ஒரு ஆங்கிலேய பிரபு இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆதிக்கத்தின் அரசியலமைப்புச் சபை சட்டமன்ற அதிகாரங்களைக் கையாளும், மேலும் தற்போதுள்ள ஒன்றிய சட்டமன்றம் மற்றும் மாநிலங்கள் ஆணையம் கலைக்கப்பட்டது. புதிய அரசியலமைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரை, அரசாங்கங்கள் இந்திய அரசாங்கச் சட்டம், 1935-ன் கீழ் செயல்படும். சட்டத்தின்படி, பாகிஸ்தான் ஆகஸ்ட் 14, 1947 அன்றும், இந்தியா ஆகஸ்ட் 15, 1947 அன்றும் சுதந்திரமடைந்தது. பாகிஸ்தானின் முதல் ஆங்கிலேய பிரபுவாக முகமது அலி ஜின்னா நியமிக்கப்பட்டார். இந்தியா தனது ஆங்கிலேய பிரபுவாக தொடர்ந்து இருக்கும்படி மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் கேட்டுக்கொண்டது, இது மாற்றத்தின் போது ஆங்கிலேய  மேற்பார்வையைத் தொடர்ந்தது.


பிரிவினை பாரிய மக்கள் பரிமாற்றங்கள், வகுப்புவாத வன்முறை மற்றும் மனிதாபிமான நெருக்கடிக்கு வழிவகுத்தது. கோடிக்கணக்கான இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் புதிதாக வரையப்பட்ட எல்லைகளின் தவறான பக்கத்தில் தங்களைக் சேர்த்து கொண்டனர்.  இராணுவம், குடிமை சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட சொத்துக்களின் பிரிவு, இந்த செயல்முறையை மேலும் சிக்கலாக்கியது.



Original article:

Share: