இஸ்ரோ தலைவராக டாக்டர் வி. நாராயணன் நியமனம் - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்


1. திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தின் (Liquid Propulsion Systems Centre (LPSC)) இயக்குநராக தற்போது இருக்கும் டாக்டர் வி. நாராயணனை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (Indian Space Research Organisation (ISRO)) புதிய தலைவராகவும், விண்வெளித் துறையின் செயலாளராகவும் ஒன்றிய அரசு நியமித்துள்ளது.


2. அமைச்சரவையின் நியமனக் குழு செவ்வாய்க்கிழமை ஒரு உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவின்படி, தற்போதைய இஸ்ரோ தலைவர் டாக்டர் எஸ். சோமநாத்துக்குப் பிறகு ஜனவரி 14-ம் தேதி டாக்டர் நாராயணன் பதவியேற்பார்.


3. டாக்டர் நாராயணன் ஆரம்பத்தில் ஆக்மென்டட் செயற்கைகோள் ஏவுதள வாகனத்திற்கான (Augmented Satellite Launch Vehicle (ASLV)) திட உந்துவிசை அடிப்படையிலான இயந்திரங்களில் பணியாற்றினார். தோல்வியுற்ற மேம்பாட்டு விமானங்கள் காரணமாக இந்த வாகனம் ஒருபோதும் இயக்கப்படவில்லை. பின்னர் அவர் ஐஐடி-கரக்பூரில் கிரையோஜெனிக் பொறியியலில் (cryogenic engineering at IIT-Kharagpur) தனது MTech பட்டத்தைப் பெற்றார்.


4. இந்தியா ஆரம்பத்தில் ரஷ்யாவிடமிருந்து தொழில்நுட்பத்தைப் பெற திட்டமிடப்பட்டது. இருப்பினும், புவிசார் அரசியல் பிரச்சினைகள் காரணமாக இது நடக்கவில்லை. இதன் விளைவாக, இந்தியா அதன் சொந்த தொழில்நுட்பத்தை உருவாக்க முடிவு செய்தது.


உங்களுக்குத் தெரியுமா?


1. டாக்டர் வி நாராயணன் 1984-ம் ஆண்டில் இஸ்ரோவில் சேர்ந்தார். இந்தியாவில் கிரையோஜெனிக் இயந்திரங்களை உருவாக்குவதில் அவர் முக்கிய நபராக இருந்து வருகிறார். தொழில்நுட்ப மறுப்பு பிரச்சினைகளை இஸ்ரோ எவ்வாறு சமாளித்தது என்பதற்கான குறிப்பிடத்தக்க கதை இது. இந்த சவால்கள் சமீபத்திய ஆண்டுகள் வரை இந்தியாவில் பொதுவானவை. நவீன விண்வெளித் திட்டத்திற்கு முக்கியமான கட்டுமான அமைப்புகளுக்கு கிரையோஜெனிக் இயந்திரங்களின் வளர்ச்சி அவசியமானது.


2. சந்திரயான்-2-ன் தோல்விக்கு காரணமான சிக்கல்களையும் டாக்டர் நாராயணன் அடையாளம் கண்டார். சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்குவதற்கு தேவையான திருத்தங்களை அவர் பரிந்துரைத்தார்.


3. கிரையோஜெனிக்ஸ் என்பது மிகக் குறைந்த வெப்பநிலையில் உபகரணங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்யும் அறிவியல் ஆகும். கிரையோஜெனிக் என்ஜின்கள் மிகவும் திறமையான ராக்கெட் எரிபொருட்களில் ஒன்றான ஹைட்ரஜனை அதன் திரவ வடிவத்தில் பயன்படுத்த அனுமதிக்கின்றன. ஹைட்ரஜன் மிகக் குறைந்த வெப்பநிலையில் மட்டுமே திரவ வடிவத்தில் இருக்க முடியும்.


4. நாராயணன் கிரையோஜெனிக் திட்டத்தின் திட்ட இயக்குநரானார். அவர் CE 20 கிரையோஜெனிக் எஞ்சினையும் வடிவமைத்தார், இது LVM-3 ராக்கெட்டை (முன்பு GSLV-MkIII என்று அழைக்கப்பட்டது) இயக்குகிறது. இந்த ராக்கெட் சந்திரயான்-2 மற்றும் சந்திரயான்-3 மிஷன்களில் பயன்படுத்தப்பட்டது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின் 2015-ம் ஆண்டில்தான் நிறைவடைந்தது. இப்போது அனைத்து கனரக-தூக்கும் ஏவுதள வாகனங்களின் (heavy-lift launch vehicles) முக்கிய பகுதியாகும். கிரையோஜெனிக் எஞ்சின்களுக்கான கணித மாதிரி மற்றும் உருவகப்படுத்துதல் மென்பொருளை (mathematical modelling and simulation software) உருவாக்கிய பெருமையும் நாராயணனுக்கு உண்டு.


5. நாராயணன் 2018 முதல் திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தின் (LPSC) இயக்குநராக உள்ளார். அவரது தலைமையின் கீழ், LPSC அடுத்த தலைமுறை ஏவுதள வாகனத்தை (Next Generation Launch Vehicle (NGLV)) உருவாக்கி வருகிறது. இந்த ராக்கெட் மிகவும் சக்திவாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைத்து மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் இலக்குகளை அடைய உதவும்.


6. 2019-ம் ஆண்டில் சந்திரயான்-2 பணி கடினமாக தரையிறங்குவதற்கான காரணங்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராகவும் அவர் இருந்தார். அவரது குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், சந்திரயான்-3 பணிக்கான சரியான அளவில் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன.




Original article:

Share:

தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம் - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்

 

1. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு தலைமை தாங்கிய நீதிபதி சூர்யா காந்த், வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கை விசாரணைக்கு, கணிசமான அளவு நேரம் தேவைப்படும் என்று மனுதாரர்களிடம் கூறினார். இந்த வழக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சட்டம், (Chief Election Commissioner and Other Election Commissioners Act) 2023 தொடர்பானது. இந்த வழக்கு இறுதியில் சட்டமன்ற அதிகாரங்களுக்கும், நீதிமன்றத்தின் கருத்துக்கும் இடையிலான மோதலை உள்ளடக்கும் என்று நீதிபதி சூர்யா காந்த் மேலும் கூறினார்.


2. மார்ச் 2023-ம் ஆண்டில், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, அத்தகைய சட்டம் எதுவும் இயற்றப்படவில்லை என்று கூறும் மனுக்களை விசாரித்தது. மனுதாரர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் (Chief Election Commissioner (CEC)) மற்றும் தேர்தல் ஆணையர்களை (Election Commissioners (EC)) நியமிப்பதற்கு கொலீஜியம் அடிப்படையிலான முறையைக் (collegium-style system) கோரினர். பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி (CJI) ஆகியோர் அடங்கிய குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


3. இருப்பினும், அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் தலைமைத் தேர்தல் ஆணையம் மற்றும் பிற தேர்தல் ஆணையங்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், (Chief Election Commission and Other Election Commissions (Appointment, Conditions of Service and Term of Office) Act) 2023 ஐ நிறைவேற்றியது. இந்தச் சட்டம் இந்திய தலைமை நீதிபதியை (CJI) தேர்வுக் குழுவிலிருந்து (selection panel) நீக்கியது. மேலும், இந்த புதிய சட்டத்தின் கீழ், தேர்வுக் குழுவில் பிரதமர் அவர்களும், மத்திய அமைச்சரும் இடம்பெறுவார். கூடுதலாக, எதிர்க்கட்சித் தலைவர் அல்லது மக்களவையில் பலம்வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவரும் இதில் அடங்குவர்.


4. இதை, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அரசு சாரா அமைப்பு (NGO Association) மற்றும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் உச்ச நீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். இருப்பினும், நீதிமன்றம் இதுவரை புதிய சட்டத்தை நிறுத்தி வைக்க மறுத்துவிட்டது.


5. 2023-ம் ஆண்டு இதுபோன்ற ஒரு விசாரணையின் போது, ​​மார்ச் 2023 தீர்ப்பு நாடாளுமன்றம் ஒரு புதிய சட்டத்தை இயற்றும் வரை ஒரு இடைக்கால ஏற்பாடாக மட்டுமே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற அமர்வு சுட்டிக்காட்டியது. அரசியலமைப்பு அமர்வின் தீர்ப்பானது, தேர்வுக் குழுவில் யார் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடவில்லை என்றும் நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது.


உங்களுக்கு தெரியுமா


1. மார்ச் 2, 2023 அன்று, உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்கள் (EC) ஒரு குழுவால் நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்தக் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி (CJI) ஆகியோர் இடம்பெற வேண்டும்.


2. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டம் எந்தவொரு குறிப்பிட்ட சட்டமன்ற செயல்முறையை வழங்கவில்லை. எனவே, இதன் அடிப்படையில் இந்த தேர்தல் அதிகாரிகளை நியமிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உள்ளது. பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நியமனங்களைச் செய்கிறார்.


3. எவ்வாறாயினும், உச்ச நீதிமன்றம் அதன் உத்தரவு "நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் எந்தவொரு சட்டத்திற்கும் உட்பட்டது" என்று தெளிவுபடுத்தியது. 


4. இதன் விளைவாக, அரசாங்கம் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா, (Chief Election Commissioner and Other Election Commissioners (Appointment, Conditions of Service and Term of Office) Bill) 2023-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா, தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு அமைச்சரவையில் அமைச்சரைக் கொண்ட ஒரு குழுவை முன்மொழிந்தது.


5. இந்த மசோதா, தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு (EC) அமைச்சரவை செயலாளருக்குச் சமமான சம்பளம், சலுகைகள் மற்றும் படிகளை வழங்க முன்மொழிந்தது.


6. இந்த மசோதா 1991-ம் ஆண்டு தேர்தல் ஆணையச் சட்டத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், 1991 சட்டத்தின் கீழ், தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்கள் (EC) உச்ச நீதிமன்ற நீதிபதியைப் போலவே சம்பளம் பெறுகிறார்கள்.


தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் தற்போது அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். இது அரசியலமைப்பின் பிரிவு 324(2)-ன் படி செய்யப்படுகிறது. "தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் ஆணையரையும், குடியரசுத் தலைவர் அவ்வப்போது நிர்ணயிக்கும் பிற தேர்தல் ஆணையர்களின் எண்ணிக்கையையும் கொண்டிருக்கும். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் நியமனம், நாடாளுமன்றத்தால் அதற்காக இயற்றப்பட்ட எந்தவொரு சட்டத்தின் விதிகளுக்கும் உட்பட்டு, குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்படும்."




Original article:

Share:

இரட்டைக் குடியுரிமை என்ற கருத்தை இந்தியா ஏற்றுக்கொள்கிறதா? -கல்லோல் பட்டாச்சார்ஜி

 வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதில் நிறைய சவால்கள் உள்ளன என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் டிசம்பரில் ஒரு கருத்தரங்கில் குறிப்பிட்டிருந்தார். இந்திய வெளிநாட்டு குடியுரிமை முயற்சி இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாகும் என்று அவர் குறிப்பிட்டார். இரட்டைக் குடியுரிமை குறித்த விவாதம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா இரட்டை குடியுரிமையை ஏற்றுக்கொள்கிறதா? கல்லோல் பட்டாச்சார்ஜி நடத்தும் உரையாடலில் அமிதாப் மட்டூவும் விவேக் கட்ஜுவும் இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்கின்றனர்.


புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு இரட்டைக் குடியுரிமை ஒரு யதார்த்தமாக மாறக்கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?


விவேக் கட்ஜு : முதலில் வெளிநாட்டில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் (Non-Resident Indian(NRI)) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்களுக்கும் (People of Indian Origin (PIO)) இடையே வேறுபடுத்திப் பார்க்கிறேன். NRI-க்கள் அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்திய குடிமக்கள் ஆவர். அவர்களுக்கு இந்திய குடிமக்களின் அனைத்து உரிமைகளும் உள்ளன. அவர்கள் வெளிநாட்டில் பயன்படுத்த முடியாத ஒரே உரிமை வாக்களிக்கும் உரிமை மட்டுமே. இருப்பினும், ஒரு கட்டத்தில் NRI-க்கள் தங்கள் வசிக்கும் இடத்தில் வாக்களிக்க தூதரகங்களில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நான் நம்புகிறேன். PIO-கள் இந்திய குடிமக்கள் அல்ல. எனவே, அவர்களுக்கு அரசியல் உரிமைகள் இல்லை. 


ஒரு கட்டத்தில், அரசாங்கம் PIO-க்களுக்கு விரிவாக்கப்பட்ட பொருளாதார வசதிகளை வழங்கியது. பின்னர், PIO அட்டை இந்திய வெளிநாட்டு குடிமகன் (Overseas Citizen of India (OCI)) அட்டையாக மாற்றப்பட்டது. இந்த மாற்றத்திற்கான காரணம் எனக்கு ஒருபோதும் புரியவில்லை. PIO அட்டையுடன் ஒப்பிடும்போது OCI அட்டை எந்த கூடுதல் சலுகைகளையும் உரிமைகளையும் வழங்காது. குடியுரிமைக்கு அரசியல் பண்புகள் உள்ளன. நீங்கள் ஒரு குடிமகனாக இருந்தால், நாட்டின் அரசியல் செயல்பாட்டில் முழுமையாக பங்கேற்கலாம். குடிமகன் அல்லாதவருக்கு இந்த உரிமை இல்லை. "குடிமகன்" என்ற வார்த்தை குழப்பமானதாக இருக்கலாம். என் கருத்துப்படி, இது ஒரு தவறான எண்ணத்தை உருவாக்குவதால் அதைத் தவிர்க்க வேண்டும்.


அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கள் இன்னும் தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையை எழுப்பியுள்ளன. பேராசிரியர் மட்டூ, அவர்களே வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்களுக்கு இரட்டைக் குடியுரிமை உரிமைகளை வழங்குவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


அமிதாப் மட்டூ : திரு. ஜெய்சங்கர் ஒரு தவிர்க்க முடியாத கருத்தைச் சொன்னார் என்று நினைக்கிறேன். இனி இந்திய குடிமக்களாக இல்லாதவர்களுக்கு கூடுதல் குடியுரிமை வழங்குவது பற்றி இப்போது பரிசீலிப்பது இந்தியாவில் ஒரு தீவிரமான கேள்வியாக இருக்க முடியாது. இவர்களில் சிலர் தங்கள் இந்தியக் குடியுரிமையை கைவிட்டிருக்கலாம், மற்றவர்கள் அதை ஒருபோதும் பெற்றிருக்க மாட்டார்கள். இந்திய அரசியலமைப்பு, பகுதி II குடியுரிமையைப் பற்றி பேசுகிறது. இதில், பிரிவு 5 ஆனது யார் இந்திய குடிமகன் என்பதை வரையறுக்கிறது. ஒரு நபர் பிறப்பு, பெற்றோர் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்தியாவில் தங்கிய பிறகு விண்ணப்பிப்பதன் மூலம் ஒரு குடிமகனாக முடியும். இந்தியாவில் வசிப்பதற்கும் குடிமகனாக இருப்பதற்கும் இடையே அரசியலமைப்பு வேறுபாட்டைக் காட்டுகிறது. நீங்கள் இந்தியாவில் வசிக்கலாம், ஆனால் குடிமகனாக இருக்க முடியாது. 1955-ம் ஆண்டு டி.பி. ஜோஷி vs மத்திய பாரத மாநிலம் வழக்கில் (D.P. Joshi vs State of Madhya Bharat case) உச்ச நீதிமன்றம் இதை தெளிவுபடுத்தியது. குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amendment Act) 2019-ம் ஆண்டில் குடியுரிமைச் சட்டத்துடன் திருத்தப்பட்டது. 


இது சில அண்டை நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினர் இந்திய குடியுரிமை பெற அனுமதிக்க விரைவான செயல்முறை இருந்தது. இரட்டை குடியுரிமையை அனுமதிப்பது ஒரு தீவிரமான கேள்வி என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில், அது அரசியல் உரிமைகளை வழங்கும். உதாரணமாக, அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவின் குடிமக்கள் அந்த நாடுகளுக்கு அரசியல் விசுவாசத்தையும் இந்தியாவில் வாக்களிக்கும் உரிமையையும் கொண்டிருப்பார்கள். எனக்கு, இது மிகவும் ஆபத்தான யோசனை. ஒரு இந்திய குடிமகனாக, பிளவுபட்ட விசுவாசங்களைக் கொண்ட எவருக்கும் அரசியல் உரிமைகளை வழங்க நான் விரும்பமாட்டேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இரட்டை குடியுரிமை என்பது பிளவுபட்ட விசுவாசங்களைக் குறிக்கிறது.


75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாட்டில் இரட்டைக் குடியுரிமைக்கு நாங்கள் தயாராக இல்லை. இதனால், எனக்கு அந்நிய வெறுப்பு இல்லை. உலகளாவிய குடியுரிமை என்ற பரந்த பொருளில் நான் வளர்ந்தேன். இருப்பினும், இந்தியாவை யார் ஆட்சி செய்வார்கள் என்பதைப் பொறுத்தவரை, அவர்கள் இந்தியாவுக்கு 100% அரசியல் விசுவாசத்தைக் கொண்டிருக்காவிட்டால், அந்த உரிமையை யாருடனும் பகிர்ந்து கொள்ள நான் தயாராக இல்லை. தனிப்பட்ட முறையில், எனக்கு ஆஸ்திரேலிய குடியுரிமையைப் பெற விருப்பம் இருந்தது. நான் அதை எடுத்துக்கொள்ளாத ஒரே காரணம், அது இந்திய குடியுரிமையை விட்டுக்கொடுப்பதைக் குறிக்கும் .


வரவிருக்கும் டிரம்ப், அதிபர் பதவியில் பல இந்திய வம்சாவளியினரும், முதல் தலைமுறை இந்திய குடியேறிகளும் உள்ளனர். அவர்கள் பொதுப் பதவிகளை வகிக்கிறார்கள். உலகளவில் வேலை செய்யக்கூடிய சில சமூகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு, குடியுரிமை என்ற கருத்துக்கு சில நெகிழ்வுத்தன்மை தேவை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?


விவேக் கட்ஜு : இல்லை, நீங்கள் பிரிக்கப்பட்ட விசுவாசங்களைக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் இந்தியாவின் குடிமகனா இல்லையா என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இந்திய குடிமகனாக, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் உட்பட உங்களுக்கு முழு உரிமைகளும் உள்ளன.


அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பதவியில் இருக்கிறார்கள் அல்லது பதவி வகிப்பார்கள் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த முறை பிரதிநிதிகள் சபைக்கு ஆறு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் அமெரிக்க குடிமக்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்திய சட்டத்தின்படி, நீங்கள் வேறொரு நாட்டின் குடியுரிமையைப் பெறும்போது, ​​உங்கள் இந்திய தேசியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும். இதன் பொருள் நீங்கள் இந்தியாவில் உங்கள் அரசியல் உரிமைகளை இழக்கிறீர்கள் என்று அர்த்தம்.


ஒவ்வொரு இந்தியருக்கும் வேறொரு நாட்டின் குடியுரிமையைத் தேர்ந்தெடுத்து இந்திய குடியுரிமையை கைவிட ஜனநாயக உரிமை உள்ளது என்று நான் நம்புகிறேன். இருப்பினும், அவர்களால் வேறொரு நாட்டின் குடியுரிமையைப் பெற முடியாது, அதன் அரசியல் செயல்பாட்டில் பங்கேற்க முடியாது, இன்னும் இந்தியாவில் அரசியல் உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. சில நாடுகள் இதை அனுமதிக்கின்றன. ஆனால், இந்த விஷயத்தில் எனக்கு மிகவும் மரபுவழி கருத்துக்கள் உள்ளன என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். இது சர்வதேச அமைப்பு நாடுகளால் ஆனது.


அமிதாப் மட்டூ : திரு. கட்ஜுவின் கருத்துக்களுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். பிரபலத்தைப் பெறுவதற்கோ அல்லது வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கோ ஒரு "தரகு முதலாளிய" வகுப்பை (comprador) நாம் உருவாக்க முடியாது. இந்த வர்க்கம், மார்க்சிஸ்டுகள் ஒரு காலத்தில் அழைத்தது போல, இந்தியாவில் வெளிநாட்டு முகவர்களாகச் செயல்படும். நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கி, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தால், அது இந்தியாவை மீண்டும் காலனித்துவப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிட்ட வழியாக மாறும் என்று குறிப்பிடுகிறேன்.


ஆனால், வேறொரு நாட்டின் ஒரு குடிமகனைக் கூட இந்தியாவில் இரட்டை குடியுரிமை பெற அனுமதித்தால், அது மிகவும் ஆபத்தானது மற்றும் தீங்கு விளைவிக்கும். இந்தியாவை தங்கள் வீடாக மாற்ற முடிவு செய்த சிலர் இந்திய குடிமக்களாக மாற தங்கள் முந்தைய குடியுரிமையை விட்டுவிட்டார்கள். உதாரணமாக, அன்னை (The Mother) என்று அழைக்கப்படும் மிர்ரா அல்பாசா, புதுச்சேரியில் அரவிந்தோ ஆசிரமத்தை நிறுவினார். அவர் முன்பு இரட்டை குடியுரிமைக்காக பிரச்சாரம் செய்திருந்தாலும், அவர் ஒரு இந்திய குடிமகனானார். இதேபோல், அன்னை தெரசா ஒரு இந்திய குடிமகனானார். 


பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரெஸ் இந்திய குடிமகனாக தனது பெல்ஜிய குடியுரிமையையும் துறந்துவிட்டார். அமெரிக்காவில், இது மிகவும் நெகிழ்வானதாகத் தோன்றலாம். ஆனால், நீங்கள் அங்கு பிறக்காவிட்டால் நீங்கள் அதிபராக முடியாது. டொனால்ட் டிரம்பை கடுமையாக ஆதரிக்கும் எலோன் மஸ்க் கூட தென்னாப்பிரிக்காவில் பிறந்ததால் ஒருபோதும் அதிபராக முடியாது. இது போன்ற சில சட்டங்கள் மிகவும் கடுமையானவையாக உள்ளன.


இந்த விவகாரம் ஜனரஞ்சகவாதத்தால் (populism) முட்டுக் கொடுக்கப்படுகிறதா? 


அமிதாப் மட்டூ : இல்லை என்று நம்புகிறேன். ஏனென்றால் வெளியுறவு அமைச்சர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் இதை மக்கள் நலன் சார்ந்த காரணங்களுக்காகச் செய்யவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். புலம்பெயர்ந்தோர் வகிக்க ஒரு முக்கியப் பங்கு உள்ளது. ஆனால், இரட்டை குடிமக்களாக அல்ல. அமெரிக்காவுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அவர்கள் உதவ முடியும். 


அமெரிக்காவில் வெற்றிகரமான இந்திய புலம்பெயர்ந்தோர் பெரும்பாலும் அங்கு தலைவர்களின் வருகைகளை ஆதரிக்கின்றனர். இது மற்ற நாடுகளிலும் உண்மை. கரீபியனில் ஒப்பந்த தொழிலாளர்களால் ஆன முதல் இந்திய புலம்பெயர்ந்தோர், தற்போதைய புலம்பெயர்ந்தோரைப் போல பொருள் ரீதியாக வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள். இருப்பினும், நான் குறிப்பிட்டது போல், அவர்கள் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும் உதவ முடியும்.


மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் போலவே, செயற்கை நுண்ணறிவிலும் முதலீடு செய்வதாக சத்ய நாதெல்லா உறுதியளித்துள்ளார். அதெல்லாம் தேசத்தின் நன்மைக்காகத்தான். இருப்பினும், உண்மையில் கேள்வி என்னவென்றால், இந்த புலம்பெயர்ந்தோர் ஒரு ஃபிராங்கண்ஸ்டைன் அசுரனாக (Frankenstein monster) மாற முடியுமா என்பதுதான். அதன் பங்கு தீங்கற்றதாகவும், பெரும் நன்மையின் ஆதாரமாகவும் தோன்றினாலும், உங்கள் அடுத்த தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு நீங்கள் திடீரென்று அதற்கு அதிகாரம் அளிக்கலாம். 


இங்குதான் ஒரு எல்லையை வரைய வேண்டும் என்று நினைக்கிறேன். புலம்பெயர்ந்தோரின் உதவிகரமான பாத்திரத்திற்கும் அது அதன் வரம்புகளை மீறுவதற்கும் இடையே தெளிவான வேறுபாட்டை நாம் பராமரிக்க வேண்டும். சத்ய நாதெல்லா அல்லது விவேக் ராமசாமி அல்லது அமெரிக்க அல்லது பிற குடியுரிமைகளைத் தக்க வைத்துக் கொண்டு நடைமுறை காரணங்களுக்காக இந்திய குடியுரிமையைப் பெறக்கூடிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எந்தவொரு நபரும் எனது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க அனுமதிக்க நான் தயாராக இல்லை. நான் ஒரு இந்திய குடிமகன், வேறு எந்த நாட்டிற்கும் விசுவாசமாக இல்லாத மற்ற இந்திய குடிமக்களுடன் சேர்ந்து எனது எதிர்காலத்திற்காக வாக்களிக்கிறேன். 


விவேக் கட்ஜு முன்னாள் அரசாங்க வெளியுறவுத் தூதர். அமிதாப் மட்டூ ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் பள்ளியின் முதல்வராக உள்ளார்.




Original article:

Share:

பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 152 தேசத்துரோகத்திற்கு மாற்றாகக் கூடாது. -புஷ்கர் ஆனந்த், ஷிவாங் திரிபாதி

 குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு முன்பு, அந்தப் பேச்சு நேரடியாகத் தீங்கு விளைவித்தது என்பதற்கான ஆதாரம் பிரிவு 152-ன் கீழ் தேவையில்லை. இது சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது. 

2024 ஆம் ஆண்டு தேஜேந்தர் பால் சிங் VS ராஜஸ்தான் மாநிலம் வழக்கில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், பாரதிய நியாய சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita (BNS)) பிரிவு 152 ஐப் பயன்படுத்தி நியாயமான போராட்டத்தைத் தடுத்ததற்கு எதிராக எச்சரித்தது. 2022ஆம் ஆண்டில், BNS சட்டமாக்கப்படுவதற்கு முன்பு, அரசாங்கம் சட்டத்தை மறுபரிசீலனை செய்யும் வரை, இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code (IPC)) பிரிவு 124A தேசத்துரோகப் பிரிவின் (‘sedition’) கீழ் நடந்து வரும் குற்றவியல் விசாரணைகளை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதைத் தொடர்ந்து “தேசதுரோகம்” ஒரு குற்றமாக ரத்து செய்யப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் என்று அறிவித்தார். 


பிரிவினை, கிளர்ச்சி மற்றும் நாசவேலை நடவடிக்கைகளை ஊக்குவித்தல் போன்ற செயல்களை  பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 152 சட்டவிரோதமாக்குகிறது. பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் அல்லது இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை அச்சுறுத்தும் செயல்களையும் இது குற்றமாக்குகிறது.  பாரதிய நியாய சன்ஹிதா “தேசத்துரோகம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்றாலும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு, தேசதுரோகம் என்ற கருத்து பாரதிய நியாய சன்ஹிதா  சட்டத்தை பெரிய அளவில் பாதிப்பதாக நீதிமன்றம் கூறியது.

 

பிரிவு 152 இல் உள்ள சிக்கல்கள் 


முதலாவதாக, இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களைச் செய்வது குற்றமாக  பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 152 கருதுகிறது. இருப்பினும், "ஆபத்தை ஏற்படுத்துவது" என்று கருதப்படுவதை சட்டம் தெளிவாக வரையறுக்கவில்லை. இது சட்டத்தை தெளிவற்றதாகவும் அதிகாரிகளால் பரந்த விளக்கத்திற்கு வாய்ப்பளிப்பதாகவும் ஆக்குகிறது. இதன் விளைவாக, நன்கு அறியப்பட்ட வரலாற்று அல்லது அரசியல் பிரமுகரை விமர்சிப்பது அல்லது ஒரு சர்ச்சைக்குரிய நபரை ஆதரிப்பது இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடுக்கு (unity and integrity of India) அச்சுறுத்தலாகக் கருதப்படலாம். இது சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கும். இன்றைய பிளவுபட்ட அரசியல் சூழலில், சரியான பாதுகாப்புகள் இல்லாத இந்த கடுமையான சட்டம் விமர்சனங்களையும் எதிர்ப்பையும் அடக்குவதற்குப் பயன்படுத்தப்படலாம்.


இரண்டாவதாக, பிரிவு 152-ல் உள்ள “தெரிந்தே” என்ற சொல், குற்றம் செய்வதற்கான வரம்பைக் கணிசமாகக் குறைக்கிறது. குறிப்பாக சமூக ஊடகங்களில் குற்றம் சாட்டப்படுவதை எளிதாக்குகிறது. பிரிவு 152-ன் கீழ் தடைசெய்யப்பட்ட செயல்பாடுகள் அல்லது உணர்வுகளைத் தூண்டும் அல்லது தீங்கு விளைவிக்கும் உணர்வுகளையோ அல்லது செயல்களையோ தூண்டக்கூடும் என்றும் அறிந்தும் அவர்கள் ஒரு பதிவைப் பகிர்ந்தால் இன்னும் குற்றத்திற்குப் பொறுப்பாகக் கருதப்படலாம். இந்த நடவடிக்கைகள் பிரிவு 152-ன் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடர வழிவகுக்கும். 


பிரிவு 152, இது அறியக்கூடிய (cognisable) மற்றும் பிணையில் வெளிவர முடியாதது என்று கூறுகிறது. குற்றம் சாட்டப்பட்டவரின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிப்பதற்கு முன்பு, ஒரு நபரின் பேச்சு நேரடியாக அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு தீங்கு விளைவிக்கும் விளைவுகளுக்கு வழிவகுத்தது என்பதற்கான ஆதாரம் தேவையில்லை என்று பிரிவு 152 கூறுகிறது. இது தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுத்தது. இது முந்தைய தேசத்துரோகச் சட்டத்தைப் போன்றது. மேலும், இது பேச்சு சுதந்திரத்தை எதிர்மறையாகப் பாதிக்கும். தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (National Crime Records Bureau (NCRB)) தரவுகளால் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் காட்டப்படுகிறது. 2015 முதல் 2020 வரை, IPC பிரிவு 124A-ன் கீழ் 548 பேர் தேசத்துரோகத்திற்காக கைது செய்யப்பட்டனர். 


ஆனால், 12 பேர் மட்டுமே குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டனர். பிரிவு 124A மிகவும் குறிப்பிட்டது. அதே நேரத்தில் BNS-ன் பிரிவு 152 விரிவானது. இருப்பினும், தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் தரவுகளும், பிரிவு 124A-ன் தவறான பயன்பாட்டிலிருந்து பெறப்பட்ட பாடங்கள் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 152ஐ வடிவமைக்கும்போது கருத்தில் கொள்ளப்படவில்லை.


முன்னோக்கி செல்லும் வழி 


கடந்த காலங்களில், நீதித்துறை, தேசிய நலனையும் கருத்து சுதந்திரத்தையும் சமநிலைப்படுத்த, பேச்சுரிமையின் விளைவுகளில் கவனம் செலுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றம், ஒரு குற்றம் நடந்ததா என்பதைத் தீர்மானிக்க, பேச்சை மட்டும் ஆய்வு செய்வதற்குப் பதிலாக, பேச்சுரிமையின் உண்மையான தாக்கத்தை ஆய்வு செய்துள்ளது.


உதாரணமாக, 1995ஆம் ஆண்டு தொடரப்பட்ட பல்வந்த் சிங் மற்றும் பிறர் VS பஞ்சாப் மாநிலம் (Balwant Singh and Anr VS  State of Punjab) வழக்கில், நீதிமன்றம் சாதாரண பேச்சிற்கும் அதன் விளைவுகளுக்கும் இடையே வேறுபாட்டைக் காட்டியது. அது தேசத்துரோகமாகக் கருதப்படுவதற்கு, அந்தச் செயலுக்கும் அதன் தாக்கத்திற்கும் இடையே நேரடி தொடர்பு தேவைப்பட்டது. 


2024ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஜாவேத் அகமது ஹசம் எதிர் மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் மற்றவர்கள் (Javed Ahmad Hazam v. State of Maharashtra and Ors) வழக்கில், வார்த்தைகளின் விளைவை நியாயமான, வலுவான மனப்பான்மை கொண்ட, உறுதியான மற்றும் துணிச்சலான மக்களின் தரங்களால் தீர்மானிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. பலவீனமான அல்லது முடிவெடுக்க முடியாத மனங்களின் தரங்களால் அதை தீர்மானிக்கக்கூடாது. 1962ஆம் ஆண்டு தொடரப்பட்ட கேதர் நாத் சிங் VS  பீகார் மாநிலம்  (Kedar Nath Singh v. State of Bihar) வழக்கில், நீதிமன்றம் “அரசாங்கத்திற்கு விசுவாசமின்மை” மற்றும் “அரசாங்கம் மற்றும் அதன் கொள்கைகள் மீதான கடுமையான வார்த்தை விமர்சனம்” ஆகியவற்றுக்கு இடையே வேறுபாட்டைக் காட்டியது.


  பிரிவு 152 தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க பாதுகாப்புகள் இல்லாததால், இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தும்போது அமலாக்க அதிகாரிகள் நீதிமன்றத்தின் கடந்தகால விளக்கங்களைப் பின்பற்ற வேண்டும். உச்ச நீதிமன்றம், விரைவில், பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 152ஐ அமல்படுத்துவதற்கான தெளிவான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். இது “கைது” என்ற வார்த்தைக்கு D.K. பாசு VS  மேற்கு வங்க மாநிலத்தில் (D.K. Basu v. State of West Bengal) செய்தது போல் பயன்படுத்தப்படும் சொற்களின் எல்லைகளை வரையறுக்கும். தேசத்துரோக குற்றச்சாட்டுகளுக்கு மாற்றாக பிரிவு 152 தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இது உதவும்.

 

எண்ணங்கள், நம்பிக்கைகள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு சுதந்திரம் அளிப்பது முக்கியம். இவை விமர்சனத்திற்கு வாய்ப்பளிக்க வேண்டும், குறிப்பாக சமூக ஊடகங்களின் யுகத்தில். "கருத்துக்களின் சந்தை" ("marketplace of ideas) என்ற கருத்தை நாம் நம்பியிருக்க வேண்டும். இந்த யோசனையை நீதிபதி ஹோம்ஸ் ஆப்ராம்ஸ் VS அமெரிக்கா வழக்கில் (Abrams v. United States) கற்பனை செய்தார். உண்மையைச் சோதிப்பதற்கான சிறந்த வழி, ஒரு ஜனநாயக மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதைப் பார்ப்பதாகும்.


புஷ்கர் ஆனந்த், டெல்லி பல்கலைக்கழக உதவி பேராசிரியர். ஷிவாங் திரிபாதி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட மாணவர்.




Original article:

Share:

கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகல்தன்மை விதிகள் நமக்குத் தேவை - சஷாங்க் பாண்டே, நயன் சந்திர மிஸ்ரா

 புதிய அணுகல்தன்மை விதிகள் வெளிப்படையானதாகவும்  புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும் மற்றும் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இந்த நடைமுறை விதிகள் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய உதவும்.


2024 ஆம் ஆண்டு தொடரப்பட்ட  ராஜீவ் ரதுரி VS இந்திய ஒன்றியம் (Rajive Raturi v. Union of India ) வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் (Rights of Persons with Disabilities (RPwD)) விதிகள், 2017 ஆம் ஆண்டு விதி 15, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகள், 2016 ஐ மீறுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 


விதி 15 சட்டத்தை மீறியதற்கான காரணத்தை நீதிமன்றம் விளக்கியது. விதி விருப்புரிமை தொனியில் (discretionary tone) எழுதப்பட்டுள்ளதாக நீதிமன்றம் விளக்கியது. இருப்பினும், சட்ட பிரிவுகள் 40, 44, 45, 46 மற்றும் 89 அரசாங்கம் செயல்படுவதை கட்டாய கடமையாக்குகிறது (mandatory obligation). விதி 15 ஒரு சட்டப்பூர்வ ஏற்பாடாக (statutory provision) இருந்தது. பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களுக்கான அணுகல் வழிகாட்டுதல்களை அறிவிக்க பயன்படுத்தப்பட்டதால் இந்த விதிகள் முக்கியமானது. முக்கிய எடுத்துக்காட்டுகளில் தடையற்ற சூழல்களை உருவாக்குவதற்கான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் பேருந்து கட்டுமானக் குறியீடு மற்றும் விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகங்களால் நிறுவப்பட்ட பிற அணுகல் தரநிலைகள் ஆகியவை அடங்கும். 


இந்த வழிகாட்டுதல்கள் அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தேர்வுகளைச் செய்ய அனுமதிப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. இது சட்டத்தின் கட்டாய மொழிக்கு விரோதமானது (antithetical).


மேலும், விதி 15ஐ நீக்குவதன் மூலம், விதியின் கீழ் உள்ள அணுகல் வழிகாட்டுதல்கள் சட்டப்பூர்வ அதிகாரத்தை (statutory authority) இழந்துவிட்டதாக நீதிமன்றம் கூறியது. இதன் காரணமாக, நீதிமன்றம் அரசாங்கத்திற்கு மூன்று மாதங்கள் அவகாசம் அளித்தது. இந்த நேரத்தில், அரசாங்கம் அனைத்து துறைகளுக்கும் குறைந்தபட்ச கட்டாய அணுகல் தேவைகளை உருவாக்க வேண்டும்.


அணுகல் வழிகாட்டுதல்கள் உலகளாவியதாகவும் உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான தெளிவான கொள்கைகள் இல்லாமல், அணுகல் வழிகாட்டுதல்கள் எவ்வாறு தனித்தனியாக உருவாக்கப்பட்டன என்பதை நீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது. எனவே, புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கும் போது, மாற்றம் கொள்கை அடிப்படையிலான கட்டமைப்பு (principle-based framework)  விதிகளை நோக்கி இருக்க வேண்டும். 


அணுகல் யோசனை 


அணுகல் மற்றும் நியாயமான தங்குமிடவசதிக்கு (reasonable accommodation) இடையிலான வேறுபாடு குறித்து நீதிமன்றம் விரிவாக ஆலோசனை செய்தது. அணுகல் மற்றும் நியாயமான தங்குமிட வசதி இரண்டும் அரசியலமைப்பில் உள்ள சமத்துவக் கொள்கையிலிருந்து வருகின்றன. அணுகல் இப்போது ஒரு உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் (United Nations Convention on the Rights of Persons with Disabilities) ஒரு பகுதியாகும். மறுபுறம், நியாயமான தங்குமிட வசதி கணிசமான சமத்துவத்தை அடைய உதவுகிறது. இது குறிப்பிட்ட சூழ்நிலைகளில் குறிப்பிட்ட சவால்களை எதிர்கொள்கிறது. இரண்டு கருத்துக்களும் இணைக்கப்பட்டு ஒன்றுக்கொன்று ஆதரவளிப்பதாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அணுகல்  தொடக்கத்திலிருந்தே நிலையான விதிகளுடன் அணுகல்தன்மை அடித்தளத்தை அமைக்கிறது. சில சூழ்நிலைகளில், தடைகளை எதிர்கொள்ளும் தனிநபர்களுக்கு நியாயமான தங்குமிடவசதி தீர்வுகளை வழங்குகிறது.


அணுகல்தன்மை பற்றிய கருத்து நிலையானது அல்ல. இது புதிய கருவிகள் மற்றும் கருத்துகளுடன் தொடர்ந்து உருவாகி வருகிறது. எடுத்துக்காட்டாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைய உலக வருகை ((Internet of Things (IoT) சமூக தொடர்புகளின் ஒரு பகுதியாக மாறிவிட்டதால், டிஜிட்டல் அணுகல் பற்றிய புரிதலும் மாறிவிட்டது. இந்த மாற்றம், அதிக உள்ளடக்கத்தை உறுதி செய்வதற்காக டிஜிட்டல் கருவிகளின் தன்மை, அளவு மற்றும் வகைகளைப் புதுப்பிப்பதை அவசியமாக்குகிறது.


மாறிவரும் அணுகல் தரநிலைகள் படிப்படியான செயல்முறையின் ஒரு பகுதியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ராஜீவ் ரதுரி வழக்கில், தற்போதைய வழிகாட்டுதல்கள் நீண்டகால அணுகல் இலக்குகளை நிர்ணயிக்கின்றன. ஆனால், உடனடி நடவடிக்கைக்கான குறைந்தபட்ச தரநிலைகளை வரையறுக்கவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. எனவே, குறைந்தபட்ச அணுகல் தரநிலைகள் நெகிழ்வானதாகவும் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். 2040ஆம் ஆண்டுக்குள் முழு அணுகலை அடைய கனடா ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது. நாடு முழுவதும் தரநிலைகளை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்துகிறது. மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப சரிசெய்ய ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் அவ்வப்போது மதிப்பாய்வுகள் இதில் அடங்கும்.


RPwD சட்டம் தடைகளை பரந்த அளவில் வரையறுக்கிறது. இது கண்ணுக்கு தெரியாத தடைகள் (intangible barriers) போன்ற மனோபாவ தடைகளையும், உட்கட்டமைப்பு போன்ற உறுதியான தடைகளையும் அங்கீகரிக்கிறது. இது நேரடி மற்றும் டிஜிட்டல் இடங்களில் அணுகல் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதை மாற்றியுள்ளது. கோட்பாடு மற்றும் நடைமுறை இரண்டிலும் அணுகல்தன்மை அளவுருக்களை உருவாக்குவது அவசியம். இது உறுதியான மற்றும் தெளிவற்ற தடைகளை கடக்க அவசியம். எடுத்துக்காட்டாக, இயலாமை பற்றிய மாறிவரும் புரிதல் சமூகத்தின் மனப்பான்மைகளைப் பாதிக்கிறது. இது மனப்பான்மைத் தடையுடன் நேரடியாக தொடர்புடையது. எனவே, இயலாமை பற்றிய இந்த வளர்ந்து வரும் புரிதலுடன் பொருந்தக்கூடிய வகையில் அணுகல் மாற வேண்டும். அது உண்மையிலேயே அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கும்.


உலகளாவிய வடிவமைப்பு பற்றிய புரிதல் காலப்போக்கில் மாறிவிட்டது. இது இப்போது குறைபாடுகள் உள்ளவர்களை மட்டுமல்ல, பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் போன்ற பிற பாதிக்கப்படக்கூடிய குழுக்களையும் உள்ளடக்கியது. இயலாமை என்பது ஒரு நபரின் பணிகளைச் செய்யும் திறனைப் பற்றியது மட்டுமல்ல, அவர்கள் வாழும் சூழலைப் பற்றியது என்பதையும் காட்டுகிறது. அதிக மன அழுத்தம், கைகால்கள் உடைதல், கர்ப்பிணிப் பெண்களுக்கு சரிவுப் பாதைகள் இல்லாதது அல்லது வயது தொடர்பான பிரச்சினைகள் போன்ற காரணங்களால் இயலாமை (Disability)  ஏற்படலாம். எனவே, இந்த விதிகள் அனைத்து குழுக்களுக்கும் பொருந்த வேண்டும். மேலும், அவை பொதுவான அணுகலை வழங்க வேண்டும். இந்த விதிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் பிரத்தியேகமாக இருக்கக்கூடாது.

 

சமூகத் தணிக்கைக்கு இணங்குதல் 


மாற்றுத்திறனாளிகளின் சட்டத்தின் பிரிவு 48, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் அனைத்து பொதுத் திட்டங்கள் மற்றும் திட்டங்களின் சமூகத் தணிக்கைகளை வழக்கமான முறையில் நடத்த வேண்டும் என்று கூறுகிறது. சமூகத் தணிக்கைகள் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை எதிர்மறையாகப் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்வதே இந்த சட்டப் பிரிவின் நோக்கமாகும். அரசாங்கத்தின் பொறுப்புணர்வையும் சேவை வழங்குநர்களின் பொறுப்பையும் மேம்படுத்துவதற்கு சமூக தணிக்கைகள் முக்கியம். எடுத்துக்காட்டாக, உதவி தொழில்நுட்பங்களை வழங்கும் திட்டங்களின் வழக்கமான தணிக்கைகள் சேவை வழங்கல் சிக்கல்களை அடையாளம் காணவும், தனிநபர்களின் மாறிவரும் தேவைகளைப் புரிந்துகொள்ளவும், வழங்கப்படும் சாதனங்களை மேம்படுத்தவும் உதவும். 

 

இருப்பினும், RPwD விதிகளின் கீழ் தரப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் இல்லாததால், சமூக தணிக்கையின் நோக்கம் மற்றும் வழிமுறைகள் பற்றிய தெளிவு இல்லை. இது ஒன்றிய, மாநில அரசுகளுக்கிடையே முரண்பாடுகள், விழிப்புணர்வு இல்லாமை, தணிக்கையாளர்களுக்கு போதிய பயிற்சி இல்லாமை போன்றவற்றுக்கு வழிவகுக்கும். எனவே, தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் சமூக தணிக்கைகளை பெரிய அளவில் செயல்படுத்துவது, மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சவால்களின் மாறிவரும் தன்மையை அடையாளம் காணவும், சம்பந்தப்பட்ட திட்டங்கள் மற்றும் திட்டங்கள் மூலம் சேவை வழங்கலை மேம்படுத்த உதவும். 


விதிகள் புரியும் வகையில் இருக்க வேண்டும் 


துறைகள் மற்றும் அமைச்சகங்கள் முழுவதும் முந்தைய அணுகல் விதிகள் அதிகாரத்துவ சிக்கல்களால் ஆனவை. பல தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் பல அமைச்சகங்களின் அணுகல் ஆணைகள் பெரும்பாலும் முரண்படுகின்றன. இது ஒன்றாக இணைந்து செயல்பட முயற்சிக்கும் நிறுவனங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. எடுத்துக்காட்டாக, ஒரு விளையாட்டு வளாகத்தில் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி, விளையாட்டு, போக்குவரத்து மற்றும் பிற அமைச்சகங்களிலிருந்து பல அணுகல் வழிகாட்டுதல்கள் இருந்தன. இது தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கத் தவறியது மட்டுமல்லாமல், இந்த நிறுவனங்களுக்கான  இணைந்து செயல்பட வேண்டிய செலவுகளையும் அதிகரித்தது. தீர்வு நடவடிக்கைகளின் போது, ​​இந்த சிக்கலான மற்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய வழிகாட்டுதல்கள் மாற்றுத்திறனாளிகள் கோரும் நிவாரணத்தை தாமதப்படுத்தின.


திறம்பட செயல்படுத்துவதை உறுதிசெய்ய புதிய அணுகல் விதிகள் நேரடியானதாகவும், புரிந்துகொள்ளக்கூடியதாகவும், நடைமுறைக்குரியதாகவும் இருக்க வேண்டும். முந்தைய விதிகளில் துறை அல்லது அமைச்சக அதிகார வரம்பில் உள்ள தெளிவற்ற தன்மை தீர்க்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினையைக் கையாள ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். வெறுமனே, துறை ஒழுங்குமுறை அதிகாரிகள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் கிடைக்கவில்லை என்றால், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகவிதிகள் (Ministry of Social Justice and Empowerment) குறித்து முடிவு செய்ய வேண்டும்.


புதிய அணுகல் வழிகாட்டுதல்கள் பிப்ரவரி மாதத்திற்குள் வெளியிடப்பட உள்ளன. மேலும், நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை ஆகிய பல்வேறு துறைகள், குறைந்தபட்ச அணுகல் விதிகளைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதில் நிதி, தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து போன்ற சமூக சேவைகளுக்கு அப்பாற்பட்ட துறைகளும் அடங்கும். இது RPwD சட்டத்தின் சட்டமன்ற ஆணையால் தேவைப்படுகிறது. இது சந்தை ஊக்கத்தையும் வழங்குகிறது. அணுகக்கூடிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலம், வணிகங்கள் ஒரு பெரிய மக்கள் தொகையை அடைய முடியும்.


சஷாங்க் பாண்டே, வழக்கறிஞர் மற்றும் அரசியல் மற்றும் ஊனமுற்றோர் மன்றத்தின் நிறுவனர். நயன் சந்திர மிஸ்ரா, டாக்டர் ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக்கழகம், லக்னோ சட்ட மாணவர். 




Original article:

Share:

காலநிலை நெருக்கடியின் பாலின இரட்டை சுமையை நிவர்த்தி செய்தல் - நித்யா மோகன் கெம்கா, சூர்யபிரபா சதாசிவன்

 COP29 கலவையான முடிவுகளுடன் முடிந்தது. காலநிலை நடவடிக்கைகளில் பாலின-பதிலளிப்பு (gender-responsive) உத்திகளைச் சேர்ப்பது ஒரு பெரிய சவாலாகும். காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெண்கள் "இரட்டைச் சுமையை" எதிர்கொள்கின்றனர். சுற்றுச்சூழல் மாற்றங்களால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், அவர்களின் சமூகங்களில் அதிக சமூக மற்றும் பொருளாதாரக் கடமைகளையும் மேற்கொள்கிறார்கள். பெரும்பாலும் போதுமான வளங்கள் அல்லது முடிவெடுப்பதில் பங்கு இல்லாமல் நிகழ்கிறது.


காலநிலை மற்றும் பாலினத்தின் இந்த சந்திப்புக்குள் ஆரோக்கியம் ஒரு முக்கியமான பரிமாணமாக வெளிப்படுகிறது. COP29 ஆனது, COP28 ஆரோக்கியத்தின் மீதான கவனத்தை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், பெண்களின் உயர்ந்த சுகாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்வதில் முன்னேற்றம் மிகக் குறைவாகவே உள்ளது.  வரவிருக்கும் மாதங்களில், உலகம் COP30-க்குத் தயாராகி வருவதால், காலநிலை நிதி விவாதங்களின் மையத்தில் பாலினத்தை வைப்பது மற்றும் சுகாதாரம் போன்ற அதன் முக்கிய தொடர்புகளிலும் கவனம் செலுத்துவது முன்னெப்போதையும் விட முக்கியமானது.


ஆசியா, காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாகும். அங்கு காலநிலை, சுகாதாரம் மற்றும் பாலின பிரச்சினைகள் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன. ஆசியாவில் பெண்கள் சுற்றுச்சூழல் சேதத்தால் நீர், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கர்ப்பப் பிரச்சினைகளால் பரவும் நோய்களுக்கு அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். காலநிலை நெருக்கடி அவர்களின் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இது அதிக பதட்டம் மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கிறது. முடிவுகளை எடுக்கும் அவர்களின் வரையறுக்கப்பட்ட சக்தி மற்றும் மீள்தன்மையை உருவாக்க வளங்களை அணுகுவதைத் தடுக்கும் சமத்துவமின்மை ஆகியவற்றால் இது மோசமடைகிறது.


தற்போது, ​​பல கட்டமைப்புகள் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் அவசர சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதைவிட பெரிய உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி திட்டங்களில் அதிக கவனம் செலுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, வெள்ளத்தால் பரவும் நோய்களைத் தடுக்கக்கூடிய வெள்ள எதிர்ப்பு நீர் அமைப்புகள் போன்ற திட்டங்கள், சமூக சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கு மிக முக்கியமானவை என்றாலும், அபாயங்களைக் குறைப்பதற்கான முயற்சிகளைவிட பெரும்பாலும் குறைவான கவனத்தைப் பெறுகின்றன.


காலநிலை நெருக்கடியைச் சமாளிப்பதற்கான செலவு மிக அதிகம். வளரும் நாடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் $5.5 டிரில்லியன் தேவைப்படுகிறது என்று UNCTAD தெரிவித்துள்ளது. இருப்பினும், காலநிலை நடவடிக்கைகளுக்கான உலகளாவிய நிதி போதுமானதாக இல்லை. உதாரணமாக, பொது சுகாதாரத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைச் சமாளிக்க சுகாதாரம் தொடர்பான காலநிலை நடவடிக்கைகளுக்கு $3.2 டிரில்லியன் தேவை என்று அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை (Observer Research Foundation (ORF)) கூறுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்தத் தேவைகள் தற்போதைய நிதி அமைப்புகளால் நிவர்த்தி செய்யப்படவில்லை.


சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனம் (Institute for Environment and Development (IIED)) படி, காலநிலை நிதியில் 10% மட்டுமே உள்ளூர் சமூகங்களுக்கு செல்கிறது. இது ஒரு கவலைக்குரிய பிரச்சினையாகும். குறிப்பாக, தெற்காசியா போன்ற பகுதிகளில், கடந்த 20 ஆண்டுகளில் 750 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காலநிலை தொடர்பான பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த முக்கியமான நிதியை அணுகுவது இன்னும் ஒரு பெரிய சவாலாக உள்ளது. வெள்ளத்தைத் தடுக்கும் நீர் அமைப்புகள் போன்ற சுகாதார அபாயங்களுக்கு உதவும் தகவமைப்புத் திட்டங்களை விட, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற பெரிய திட்டங்களை காலநிலை நிதி பெரும்பாலும் ஆதரிக்கிறது. கிராமப்புறங்களில், விழிப்புணர்வு இல்லாமை மற்றும் சிக்கலான செயல்முறைகள் போன்ற கூடுதல் தடைகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர்.  இது நிலைமையை இன்னும் கடினமாக்குகிறது.


காலநிலை மீள்தன்மையில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். இருப்பினும், அவர்களின் ஆற்றல் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. பேரழிவுகளில், வீட்டு வளங்களை நிர்வகிப்பதன் மூலமும், உணவு மற்றும் நீர் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமும் அவர்கள் முதலில் பதிலளிப்பார்கள். பெண்கள் மாற்றத்தை இயக்கும் திறனைக் காட்டியுள்ளனர்.  நேபாளத்தின் பாலினம் மற்றும் காலநிலை மாற்ற செயல் திட்டம் போன்ற வெற்றிகரமான எடுத்துக்காட்டுகள், காலநிலை உத்திகளில் பாலினத்தைச் சேர்ப்பதன் நேர்மறையான விளைவுகளை எடுத்துக்காட்டுகின்றன. இந்தத் திட்டம் உள்ளூர் தழுவலுக்கான பயிற்சியை வழங்குவதன் மூலம் பெண்களுக்கு உதவுகிறது. இதேபோல், 103 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்கு சுத்தமான சமையல் ஆற்றலை வழங்கும் இந்தியாவின் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana), பெண்களின் குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்தி செய்வது ஆரோக்கியத்தையும் காலநிலை மீள்தன்மையையும் மேம்படுத்த முடியும் என்பதைக் காட்டுகிறது.


பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது வலுவான சமூகங்களை உருவாக்க உதவுகிறது மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய முன்னேற்றத்தை விரைவுபடுத்துகிறது என்பதை இந்த வெற்றிகள் காட்டுகின்றன. இருப்பினும், இந்த வெற்றிகள் இன்னும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இவை உலகளவில் விரிவுபடுத்தப்பட வேண்டும். பெண்களை உதவி பெறுபவர்களாக மட்டுமல்லாமல், மாற்றத்தின் செயலில் உள்ள முகவர்களாக மாற்றுவதற்கு பாலினத்தை மையமாகக் கொண்ட ஒரு பரந்த கொள்கை முக்கியமானது. பெண்கள் தலைமையிலான திட்டங்களை ஆதரிப்பது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும், சுத்தமான தண்ணீரை வழங்குதல் மற்றும் காலநிலை தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைத்தல் போன்றவற்றை எவ்வாறு செய்ய முடியும் என்பதை UNDP சிறு மானியத் திட்டம் நிரூபிக்கிறது.


COP30 எதிர்நோக்குகையில், நாம் மூன்று முக்கிய செயல்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: 


பெண்களின் சுகாதாரத் தேவைகளில் கவனம் செலுத்தும் வகையில் காலநிலை நிதியை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும். இதில் மனநல சேவைகளுக்கான நிதி, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் காலநிலைக்கு ஏற்ற சுகாதாரப் பராமரிப்பை உருவாக்குதல் மற்றும் காலநிலை தகவமைப்புத் திட்டங்களில் மனநல ஆதரவைச் சேர்ப்பது ஆகியவை அடங்கும்.


இரண்டாவதாக, அடிமட்டத்தில் உள்ள பெண்கள் நிதி ஆதாரங்களையும் முடிவெடுக்கும் அதிகாரத்தையும் பெறுவதை உறுதிசெய்ய மக்களைப் பொறுப்பேற்க வைக்கும் அமைப்புகளை உருவாக்குங்கள். பாலினத்தின் அடிப்படையில் தகவல்களைப் பிரிக்கும் தரவைப் பயன்படுத்துவதும், சமூகம் முன்னேற்றத்தைக் கண்காணிக்க அனுமதிப்பதும் வெற்றியைக் கண்காணிக்க உதவும். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்த கூட்டாண்மைகளை உருவாக்குவதும் முக்கியம்.

மூன்றாவதாக, காலநிலைப் பேச்சுவார்த்தைகளில் பெண்களின் குரல்களைப் பெருக்கும் தளங்களை உருவாக்கி, தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதாரங்களின் ஆதரவுடன், அவர்களின் அர்த்தமுள்ள பங்கேற்பை உறுதி செய்தல். 


எதிர்கால COP மாநாடுகள் மற்றும் பிற சர்வதேச நிகழ்வுகளை எதிர்நோக்குகையில், காலநிலை நிதி மற்றும் கொள்கையில்  குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் ஒரு முக்கிய மையமாக இருக்க வேண்டும். கூடுதல் நன்மையாக மட்டுமல்லாமல், மீள்தன்மை திட்டமிடலின் முக்கிய பகுதியாக ஆரோக்கியம் இருக்க வேண்டும்.


இந்த நிகழ்ச்சி நிரலை முன்னோக்கி நகர்த்துவதற்கு ஒத்துழைப்பு அவசியம். சுகாதாரத்திற்கான காலநிலை நிதி உள்ளடக்கியதாகவும், அணுகக்கூடியதாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் சமூகங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதன் பொருள் பெண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நிதியை உருவாக்குதல், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்த கூட்டாண்மைகளை உருவாக்குதல் மற்றும் உலகளாவிய காலநிலை பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு வலுவான குரலை வழங்குதல் ஆகியவை அடங்கும். இலக்கு வைக்கப்பட்ட காலநிலை நிதி மூலம் இரட்டைச் சுமையை நிவர்த்தி செய்வது சரியான செயல் மட்டுமல்ல. அது நியாயமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கும் இது அவசியம். யாரும் பின்தங்கியிருக்காமல் இருப்பதை உறுதிசெய்ய ஒருங்கிணைந்த அணுகுமுறைகளுடன் இந்தப் பிரச்சினையை நாம் சமாளிக்க வேண்டும்.


கட்டுரையாளர் டாக்டர் நித்யா மோகன் கெம்கா, PATH அமைப்பின் இயக்குநர் மற்றும் சூர்யபிரபா சதாசிவன், மூத்த துணைத் தலைவர், பொதுக் கொள்கை (public policy), சேஸ் இந்தியா (Chase India), புது தில்லி.




Original article:

Share: