வேளாண்மையை பெண்கள்மயமாக்குவது எவ்வாறு பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும்? -ரித்விகா பத்கிரி

 வேளாண்மையை பெண்கள்மயமயமாக்கல் என்பது விவசாய நடவடிக்கைகளில் பெண்களின் அதிகரித்து வரும் பங்கேற்பைக் குறிக்கிறது. ஆனால் இந்த மாற்றம் பெண்கள் முடிவெடுப்பதில் அதிக அதிகாரத்தைப் பெறவும் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக மாறவும் எவ்வாறு உதவும்?


இந்தியாவில் விவசாயத் தொழிலாளர்களில் 63% பெண்கள் பங்களிக்கின்றனர். இருப்பினும், அவர்களுக்கு நில உடைமை, நிதி மற்றும் மேம்பட்ட விவசாயத்  தொழில்நுட்பங்கள் போன்ற முக்கிய ஆதாரங்களுக்கான அணுகல் இல்லை. இந்த சூழ்நிலையில், விவசாயத்தில் பெண்மையாக்கம் என்றால் என்ன? ஆண்கள் விவசாயத்திலிருந்து வெளியேறுவதால் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிகாரமளிப்புக்கு வழிவகுக்குமா? அல்லது நில உரிமைகள் மற்றும் முடிவெடுப்பதில் பாலின சமத்துவமின்மையை மோசமாக்குகிறதா?


இந்தியாவில், பெண் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 2004-05 ஆம் ஆண்டில் 40.8% ஆக உயர்ந்தது. ஆனால், அதன் பின்னர் குறைந்துள்ளது. இருப்பினும், 2017 முதல் பெண் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் (female labour force participation rate (FLPR)) பல வருட சரிவுக்குப் பிறகு அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்குப் பிந்தைய ஆண்டுகளில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில், FLPR 2022-23-ல் 41.5%-லிருந்து 2023-24-ல் 47.6% ஆக உயர்ந்தது. நகர்ப்புறங்களில், அதே காலகட்டத்தில் FLPR 25.4%-லிருந்து 28% ஆக அதிகரித்துள்ளது. 


ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் பெண் தொழிலாளர் படை பங்கேற்பு விகிதத்தில் (FLPR) வளர்ச்சிக்குக் காரணமாகியது. இது போன்ற மாற்றங்கள் முன்பு வேலை செய்யாத பல பெண்களை வேலை தேட ஆர்வத்தை தூண்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (FLPR) திடீரென அதிகரிப்பதற்கு பொருளாதார சிக்கல்களும் காரணமாகும். இந்தச் சவால்கள் அதிகமான பெண்கள் வருமானம் ஈட்டுவதற்கு  வேறு வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது.


இந்திய தொழிலாளர் படையின் பெண்ணியமயமாக்கல் என்பது அதிகமான பெண்கள் ஊதியம் பெறும் வேலைகளில் சேர்வதைக் குறிக்கிறது. இருப்பினும், இந்தப் போக்கை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். குறிப்பாக, பெண் தொழிலாளர் படை பங்கேற்பு விகிதம் (FLPR) விவசாயத்தில் அதிகரிப்பதற்கு, அதிகமான பெண்கள் சுயதொழில் செய்பவர்களாக மாறுவதே காரணமாகும். மாநில வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு (state-wise census data), பெண்களின் தொழிலாளர் படை பங்கேற்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், விவசாயத்தில் அதிக பெண்கள் பணிபுரிவதே இதற்குக் காரணம் என்பதைக் காட்டுகிறது.


இந்தப் போக்கு, பெண்களுக்கு பண்ணை அல்லாத (non-farm) வேலை வாய்ப்புகள் குறைவாக இருப்பதைக் காட்டுகிறது. பெரும்பாலான கிராமப்புற பெண்கள் இன்னும் விவசாயத்தில் வேலை செய்கிறார்கள். இது விவசாயத்தின் பெண்ணியமயமாக்கலுக்கு வழிவகுக்கிறது. பொருளாதார இலக்கியங்கள் விவசாயத்தின் பெண்கள்மயமாக்கலை இரண்டு வழிகளில் விளக்குகின்றன. முதலாவதாக, விவசாயம் தொடர்பான வேலைகள் பெண்களால் அதிகமாக செய்யப்படுகின்றன. இதில் சிறு விவசாயிகள் அல்லது சாதாரண விவசாய கூலித் தொழிலாளர்கள் என்ற அவர்களின் வளர்ந்து வரும் பொறுப்புகளும் அடங்கும்.


இரண்டாவதாக, விவசாயத்தை பெண்ணியமாக்குவது என்பது விவசாயத்தில் பெண்களின் கட்டுப்பாடு உரிமை மற்றும் பங்கேற்பு பற்றிய புரிதலையும் குறிக்கும். இதில் பெண்கள் விவசாய நிலங்களை சொந்தமாக வைத்திருப்பது, நில உரிமைகளைக் கொண்டிருப்பது மற்றும் பயிர்கள் மற்றும் உர பயன்பாடு போன்ற விஷயங்களைப் பற்றி முடிவெடுப்பது ஆகியவை அடங்கும்.


விவசாயத்தின் பெண்ணியமயமாக்கலுக்கு பல காரணிகள் பங்களிக்கின்றன. முதலாவதாக, இந்தியப் பொருளாதாரம் மாறிவிட்டது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு குறைவாகவும் சேவைத் துறையை நோக்கி மாறவும் வழிவகுத்தது. இரண்டாவதாக, கிராமப்புற சிரமங்கள் ஆண்கள் விவசாயத்திற்கு வெளியே வேலை தேடவேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் பெரும்பாலும் விவசாயம் அல்லாத துறைகளுக்கு இடம்பெயர வழிவகுத்துள்ளது.


கிராமப்புறங்களை விட்டு வேலைக்குச் செல்லும் ஆண்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பல காரணிகள் உள்ளன. விவசாய உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் குறைதல், விவசாய உள்ளீடுகளின் விலை உயர்வு, காலநிலை மாற்றத்தால் பயிர் சேதத்தால் ஏற்படும் அபாயம், குறைந்த வேலை வாய்ப்புகள் மற்றும் கிராமப்புறங்களில் இளம், புதிதாகப் படித்த மக்களின் வளர்ந்து வரும் ஆசைகள் ஆகியவை இதில் அடங்கும். இதன் விளைவாக, வேலையில் பின்தங்கிய பெண்கள் பல பணிகளை மேற்கொள்கின்றனர்.


 குறிப்பாக, விவசாய வேலைகள் நிலத்தைப் பராமரித்தல் மற்றும் வேலைக்கு உதவுதல் போன்ற விவசாயப் பணிகளை அதிகமான பெண்கள் செய்வதாக தேசிய விவசாயிகள் ஆணையத்தின் 2005 அறிக்கை கண்டறிந்துள்ளது. இந்தியாவின் விவசாயப் பணிகளில் 80% பெண்கள் பணி செய்கிறார்கள் என்றும், விவசாயப் பணியாளர்களில் 42%-க்கும் அதிகமானோர் உள்ளனர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2023-24 காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) தரவுகளின்படி, கிராமப்புற பெண்களில் முக்கால்வாசிக்கும் மேற்பட்டோர் 76.95% விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


பெண் விவசாயிகளின் பங்களிப்பு அதிகமாக இருந்தாலும், அவர்கள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. 2015-16ஆம் ஆண்டு வேளாண் கணக்கெடுப்பின்படி, கிராமப்புறப் பெண்களில் 73% பேர் விவசாயத்தில் ஈடுபட்டாலும், இந்தியாவில் மொத்த விவசாய நிலங்களில் சுமார் 11.72% மட்டுமே பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது. இது நில உரிமை மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள பாலின இடைவெளியைக் காட்டுகிறது. மேலும், நீண்டகாலமாக நில விநியோகத்தில் நிலவும் சமமற்ற தன்மை காரணமாக, பெண்களின் நில உடைமைகள் பெரும்பாலும் சிறிய மற்றும் குறு நிலங்களை வைத்திருக்கின்றனர்.


இந்தியாவில், பெண்கள் பரம்பரை சொத்து, பரிசுகள், கொள்முதல் அல்லது அரசாங்க பரிமாற்றங்கள் மூலம் நிலத்தைப் பெறலாம். இருப்பினும், இந்த அமைப்புகள் பெரும்பாலும் பெண்கள் சமமாக பங்கேற்பதை கடினமாக்குகின்றன. உதாரணமாக, நிலம் வாங்கும் போது ஆண்களை விட பெண்கள் நிதி சவால்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, பரம்பரை சொத்து அவர்கள் நிலத்தை சொந்தமாக்குவதற்கான ஒரு முக்கிய வழியாகிறது. ஆனால், சமூக சார்புகள் மற்றும் விதிமுறைகள் பெண்கள் நிலத்தை மரபுரிமையாகப் பெறுவதையும் கட்டுப்படுத்துவதையும் கடினமாக்குகின்றன.


2017 ஆம் ஆண்டு உத்தரபிரதேச நில விநியோகத் திட்டத்தில், மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சிர்சி மற்றும் கர்காட் ஆகிய இரண்டு கிராமங்களில் 331 நிலமற்ற குடும்பங்களுக்கு நிலப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. சிர்சியில், 80 நிலப் பட்டாக்கள் வழங்கப்பட்டன, 8 ஒற்றைப் பெண்களுக்குச் சென்றன. கர்காட்டில், 251 பட்டாக்கள் வழங்கப்பட்டன, 16 ஒற்றைப் பெண்களுக்குச் சென்றன. இதன் பொருள் 7% நிலப் பட்டாக்கள் மட்டுமே ஒற்றைப் பெண்களுக்குச் சென்றன. பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் முடிவெடுக்கும் அதிகாரத்திற்கு நில உரிமைகள் முக்கியம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.


ஊதியம் பெறும் வேலைகளில் பெண்கள் பங்கேற்பது எப்போதும் அவர்கள் அதிகாரம் பெற்றவர்கள் என்பதற்கு அர்த்தமல்ல என்று அடிக்கடி கூறப்படுகிறது. பெண்கள் பெரும்பாலும் "இரட்டை வேலைச் சுமையை" எதிர்கொள்கிறார்கள். அவர்கள் ஊதியம் பெறாத வீட்டு வேலைகள் மற்றும் பராமரிப்பு கடமைகளுடன் சமநிலைப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதேபோல், விவசாயத்தில் பெண்கள் ஈடுபடுவது எப்போதும் அதிகாரமளிப்புக்கு  வழிவகுக்காது.


இந்தியாவின் விவசாயப் பொருளாதாரம் (agrarian economy) குறைந்த வருமானத்துடன் போராடி வருகிறது. இதன் காரணமாக, விவசாயிகளாக வேலை செய்யும் பெண்கள் பொருளாதார அதிகாரம் பெறாமல் போகலாம். குறிப்பாக, போதுமான பண்ணை அல்லாத வேலை வாய்ப்புகள் இல்லாதபோது உரங்கள், வீட்டுச் சொத்துக்கள் அல்லது பணம் சம்பாதிப்பதற்கான பிற வழிகள் பற்றிய முடிவுகளில் பெண்களுக்கு அதிக கட்டுப்பாடு இல்லை என்பதையும் ஆராய்ச்சி காட்டுகிறது.


விவசாயத்தின் பெண்ணியமயமாக்கல் பெரும்பாலும் வறுமை அல்லது விவசாய துயரத்தின் பெண்ணியமயமாக்கலுடன் தொடர்புடையது. ஆண் குடும்ப உறுப்பினர்கள் சிறந்த வேலை வாய்ப்புகளுக்காக இடம்பெயரும்போது, ​​பின்தங்கிய பெண்கள் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது பெரும்பாலும் குறைந்த லாபகரமான வாழ்வாதார விருப்பமாகக் கருதப்படுகிறது.


கூடுதலாக, சமமற்ற நில விநியோகம் மற்றும் பெண் விவசாயிகளிடையே நில உரிமை இல்லாதது கடன் மற்றும் நிதி ஆதாரங்களை அணுகுவதை கடினமாக்குகிறது. இது சில அரசாங்கத் திட்டங்களிலிருந்து பயனடையும் திறனையும் கட்டுப்படுத்துகிறது. கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card) போன்ற திட்டங்களிலிருந்து பெண்கள் கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) போன்ற திட்டங்களிலிருந்து உதவி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.


விவசாயி என்ற பிம்பம் பெரும்பாலும் ஆண்களுடன் தொடர்புடையது. இது மாறாவிட்டால், பெண் விவசாயிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவார்கள். வேளாண்மை என்பது நடவு மற்றும் அறுவடை செய்வதை விட அதிகமானவற்றை உள்ளடக்கியது. நிலத்தில் முதலீடு செய்வது மற்றும் முக்கியமான முடிவுகளை எடுப்பதும் இதில் அடங்கும். விவசாயத்தில் பாலின சமத்துவத்தை அடையவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், பெண்களை மையமாகக் கொண்ட கொள்கைகள், சமமான நில விநியோகம், விவசாய இயந்திரங்களுக்கு சமமான அணுகல் மற்றும் பாலினத்தைக் கருத்தில் கொண்ட காலநிலைக்கு ஏற்ற கொள்கை நமக்குத் தேவைப்படுகிறது.




Original article:

Share:

இந்தியாவின் கல்வி உட்கட்டமைப்பு பற்றி...

 இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தரமான கல்வி உட்கட்டமைப்பு தேவைப்படுகிறது.


உச்சநீதிமன்றம், முதுகலை மருத்துவ சேர்க்கையில் வசிப்பிடத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. இது சட்டத்தின் முன் அனைவரும் சமம் (equality before law) என்ற அரசியலமைப்பு விதியைப் பின்பற்றுகிறது. இருப்பினும், இந்த முடிவு மாநில முன்னுரிமைகள் மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பாதிக்கலாம். உச்சநீதிமன்றம் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே ஒரு “வீடு” மட்டுமே உள்ளது என்று கூறியது. எந்தவொரு மாநிலத்திலும் வசிப்பவர்கள் நாட்டில் எங்கும் சேர்க்கை கோர உரிமை இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. நிறுவன விருப்பம் அல்லது குடியிருப்புத் தேவைகளின் அடிப்படையில் சேர்க்கை குறித்த கடந்த கால தீர்ப்புகளைப் பின்பற்றுகிறது. 


நீதிமன்றம் நிறுவன விருப்பத்தை அனுமதிக்கிறது. அதாவது ஒரு நிறுவனத்தில் படித்த மாணவர்கள் அதே நிறுவனத்தில் முதுகலை படிப்புகளுக்கு முன்னுரிமை பெறலாம். இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கு, குடியிருப்புத் தேவை இருக்கலாம். அதிக உள்ளூர் மாணவர்களை அனுமதிப்பதன் மூலம் ஒரு பிராந்தியத்தின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். இந்த மாணவர்கள் தங்கள் சொந்த சமூகங்களில் மருத்துவர்களாகப் பணியாற்ற அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், உயர் தகுதிகள் அடிப்படையில் இருக்க வேண்டும். முதுகலை படிப்புகளுக்கு குடியிருப்பு விருப்பம் இருக்கக்கூடாது என்பது பொதுவான கருத்து. ஏனெனில், மேம்பட்ட மருத்துவப் பயிற்சிக்கு சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பது மிகவும் முக்கியமானது.


பல மாநிலங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளிலும் உள்ள முதுகலை இடங்களை தங்கள் சொந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டு நிரப்புகின்றன. இருப்பினும், அகில இந்திய அடிப்படையில் நிரப்பப்படும் இடங்களைத் தவிர. பிற மாநிலங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தேசிய ஒதுக்கீட்டின் மூலம் மட்டுமே முதுகலை படிப்புகளில் சேர முடியும். இந்த முறைக்கு இப்போது அனுமதி இல்லை என்றாலும், அதற்கு காரணங்கள் உள்ளன. 


அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகளுக்கு முதுகலை மாணவர்கள் அவசியம். இந்த மாணவர்கள் அரசுப் பணியில் சேரவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இது அவர்களை “சேவை விண்ணப்பதாரராக” முதுகலை படிப்புகளுக்குத் தகுதி பெறச் செய்கிறது. தென் மாநிலங்கள் மருத்துவக் கல்வியில் நிறைய முதலீடு செய்துள்ளன. அவர்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்லூரிகளை அமைத்துள்ளனர். இந்த மாநிலங்கள் தங்கள் மருத்துவ சேவைகள் மற்றும் எதிர்கால பணியாளர் தேவைகளை ஆதரிக்க அதிக உள்ளூர் மாணவர்களை அனுமதிக்க விரும்புகின்றன. பாதிக்கப்பட்ட மாநிலங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தத் தீர்ப்பு ஒன்றிய அரசை மருத்துவ சேர்க்கையில் மாநிலங்களின் பங்கைக் கட்டுப்படுத்த வழிவகுக்கும். குறிப்பாக, முதுகலை மற்றும் இளங்கலை படிப்புகளுக்கு இடையிலான நீதிமன்றத்தின் வேறுபாடு, உள்ளூர் தேவைகளின் அடிப்படையில் முதுகலை மற்றும் இளங்கலை படிப்புகளை வித்தியாசமாக நடத்துவதற்கான நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு நல்ல கேள்வியை எழுப்புகிறது. இளங்கலை சேர்க்கைகளைக் கூட மையப்படுத்துவதற்கான தற்போதைய போக்கை இது சவால் செய்கிறது. சமமான தரத்தை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும்.




Original article:

Share:

ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2025 : வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையுடன் நிதி முன்னுரிமைகளை சீரமைத்தல் -வைபவ் பிரதாப் சிங், ஹனி கருண்

 ஒவ்வொரு ஆண்டும், ஒன்றிய நிதிநிலை அறிக்கையால் அரசாங்கம் அதன் முன்னுரிமைகளை அமைக்க அனுமதிக்கிறது. இது வளர்ச்சிக்கான திட்டமிடல் மற்றும் முக்கிய துறைகளில் வருவாய் மற்றும் செலவினங்களை நிர்வகிக்க உதவுகிறது. வரவிருக்கும் பட்ஜெட்டில், கோவிட்-க்குப் பிறகு நிதி ஒருங்கிணைப்பில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்கட்டமைப்பில் முக்கியத்துவம் கொடுத்து நாட்டின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை சமநிலைப்படுத்துவதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். அதேநேரத்தில், அரசாங்கம் பசுமை மாற்றத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தும். இந்த சீரமைப்பு மிக முக்கியமானது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது போன்ற நிலையான முயற்சிகள், காலநிலை இலக்குகளை அடைய உதவுகின்றன. அவை, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுகின்றன மற்றும் வேலைகளை உருவாக்குகின்றன. இது நிதிப் பொறுப்பு மற்றும் சுற்றுச்சூழல் இலக்குகள் ஒன்றையொன்று ஆதரிக்கும் ஒரு சுழற்சியை உருவாக்குகிறது.


தற்போதைய நிதி மேலாண்மை உத்தியை மறு மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் : கோவிட்-19க்குப் பிறகு, அரசாங்கம் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்திற்குள் பட்ஜெட் செய்யப்பட்ட மூலதனச் செலவினத்தில் (மூலதனம்) சுமார் 60% ஐப் பயன்படுத்துகிறது. இருப்பினும், இந்த ஆண்டு, பட்ஜெட் செய்யப்பட்ட மூலதனத்தில் 46.2% மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. கூடுதலாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக மூலதன இலக்குகள் குறைக்கப்பட்டுள்ளன. உண்மையான செலவு, திருத்தப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் பட்ஜெட் செய்யப்பட்ட மதிப்பீடுகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.


வரவுகள் பக்கத்தில், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ஈவுத்தொகை மற்றும் இலாபங்களில் 97% ஏற்கனவே அடையப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மேல்நோக்கிய சரிசெய்தலுடன் ஒப்பிடும்போது இது 144% உடன் குறைவாக உள்ளது. வருவாய் ரசீதுகள் தொடர்ந்து வருவாய் செலவினங்களை ஈடுகட்டியுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் நவம்பர் மாதத்திற்குள் செலவினங்களில் சுமார் 60% அடையப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட சந்தை கடன்களில் 29% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு நேர்மாறாக, நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்திற்குள் கடன் வாங்கப்படுகின்றன.


இந்தப் போக்குகளின் விளைவாக, நிதித் திட்டங்களில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட்டாலும், பற்றாக்குறையான இலக்குகளை அடைய அரசாங்கம் போதுமான நிதிக்கான இடத்தைப் பராமரித்து வருகிறது. எதிர்காலத்தில், ​​அரசாங்கம் அதன் நிதிக்கான உத்தியை மறுபரிசீலனை செய்யலாம், மூலதனத்தை முன்கூட்டியே பயன்படுத்துவதில் கவனம் செலுத்தலாம். இது ஆண்டின் முதல் காலாண்டுகளில் சிறந்தது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்தகாலப் போக்குகள் மற்றும் மூலதனச் செலவினங்களில் கவனம் செலுத்துவதன் அடிப்படையில், அரசாங்கம் முக்கியமான துறைகளில் முன்னேற்றத்தைத் தக்கவைத்துக் கொள்ளும். இதனால், இதன் அணுகுமுறையையும் செம்மைப்படுத்தும். உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Production-Linked Incentive (PLI)) திட்டம் போன்ற சில திட்டங்கள், அவற்றின் இலக்குகள் அடையப்பட்டால் முடிவடையக்கூடும். தற்போது, ​​இந்தியா நிலையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளது. இந்த உறுதிப்பாடு அதன் தற்போதைய நிதி மற்றும் பசுமை முயற்சிகளிலும், பிற பகுதிகளிலும் பிரதிபலிக்கிறது.


தேசிய மின்சாரத் திட்டம் (National Electricity Plan (NEP)) 2023, 2032ஆம் ஆண்டுக்குள் 570 GW புதுப்பிக்கத்தக்க திறனை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. இது தற்போதைய 200 GW இலிருந்து அதிகமாகும். இது சுத்தமான எரிசக்திக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. புதிய திறன் வளர்ந்து வரும் உள்நாட்டு எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய முடியும் மற்றும் புதுப்பிக்கத்தக்க தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தியில் இந்தியாவை ஒரு தலைமைத்துவமாக மாற்ற முடியும். இருப்பினும், இந்த மாற்றத்தை ஆதரிக்க நிதி திரட்டுவது ஒரு பெரிய சவாலாக இருக்கும். இந்திய வங்கி அமைப்பு மின் துறைக்கு 200 பில்லியன் டாலர் வெளிப்பாட்டைக் கொண்டுள்ளது. அதன் இலக்குகளை அடைய இந்தத் துறைக்கு ஆண்டுதோறும் $50-60 பில்லியன் தேவைப்படுகிறது. இந்த முதலீடுகளின் நீண்டகால தன்மையைக் கருத்தில் கொண்டு, நிதி கோரிக்கைகளை பூர்த்தி செய்ய வங்கிகள் போராடக்கூடும். NaBFID போன்ற ஒரு சிறப்பு நிதி நிறுவனத்தை உருவாக்குவது இந்த சவால்களை எதிர்கொள்ள உதவும். பசுமை எரிசக்திக்கான வழித்தடங்கள் போன்ற முயற்சிகளுக்கான நிதியையும் பட்ஜெட் சரிசெய்யக்கூடும்.


பிரதமர் ஆவாஸ் யோஜனா (PM Awas Yojana) திட்டத்தின் மூலம் கணிசமான ஒன்றிய அரசு உதவியுடன் மூன்று கோடிக்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வீட்டுவசதி இலக்கு, நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க உந்துதலாக செயல்படக்கூடும். இந்த வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், வெப்ப மேலாண்மை மற்றும் ஆற்றல் திறன் கொண்ட அம்சங்கள் இருக்கும். வளத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் சுழற்சியை ஊக்குவிப்பதற்கும் காலநிலை-எதிர்ப்பு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் அவை முக்கியம். வீட்டுவசதியில் இந்த நிலைத்தன்மை இலக்குகளை அடைய, பெரியளவிலான பட்ஜெட் ஒதுக்கீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.


போக்குவரத்து மற்றும் மின்சார வாகனத் (EV) துறை : பாரத்மாலா (Bharatmala) மற்றும் PM கிராம் சதக் யோஜனா திட்டங்கள் (PM Gram Sadak Yojana programs)  உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்க வலையமைப்புகளை விரிவுபடுத்துகின்றன. பசுமை பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் நிலையான உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் இவற்றை இன்னும் வலுப்படுத்த முடியும். பசுமை எஃகு வகைபிரித்தல் அறிமுகம் ஒரு நேர்மறையான முன்னேற்றமாகும்.


PM-EDRIVE திட்டம் மற்றும் GST தொடர்பான நன்மைகள் போன்ற முன்முயற்சிகள் காரணமாக இந்தியாவின் மின்சார வாகன (EV) துறை குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டுள்ளது. மின்கல (பேட்டரி) செலவுகள் குறைந்து வருகின்றன. மேலும், அசல் உபகரண உற்பத்தியாளர்கள் (original equipment manufacturers (OEM)) போட்டித்தன்மை வாய்ந்த வாகனங்களை வழங்குகிறார்கள். இதன் விளைவாக, மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த உந்துதலைத் தக்கவைக்க, ஊக்கத்தொகைகளை வழங்குவது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் மின்சார வாகனங்களுக்கு (EVகள்) பிரத்யேக நிதி விருப்பங்களை வழங்குவது முக்கியம். பொதுப் போக்குவரத்தின் மின்மயமாக்கலை விரைவுபடுத்துவதற்கும் சரக்கு தளவாடங்களில் உமிழ்வைக் குறைப்பதற்கும் இது மிகவும் அவசியம். இத்தகைய ஆதரவை வழங்குவது நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை பெரிதும் அதிகரிக்கும்.


இந்த ஆண்டு பட்ஜெட்டில் பசுமைப் பத்திர வெளியீட்டு இலக்குகளில் (green bond issuance targets) குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படலாம். இது சந்தை வளர்ச்சியை ஆதரிக்கவும் பல்வேறு துறைகளில் பசுமை முயற்சிகளுக்கு நிதியளிக்கவும் உதவும். இதில் திடக்கழிவு மேலாண்மை, நிலையான வீட்டுவசதி மற்றும் பிற அடங்கும். காலநிலை நிதி வகைப்பாடு பற்றிய கூடுதல் விவரங்களையும் பட்ஜெட் வழங்கக்கூடும். இது காலநிலை தழுவல் மற்றும் தணிப்புக்கான நேரடி முதலீடுகளுக்கு உதவும். இது நாட்டின் நிகர பூஜ்ஜிய இலக்குகளுடன் நிதி ஓட்டங்களை சீரமைப்பதற்கும் உதவும்.


2025-ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை இலக்குகளுடன் நிதி முன்னுரிமைகளை இணைப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இது மின்சாரம், வீட்டுவசதி, மின்சார வாகனங்கள் மற்றும் MSME-களில் உள்ள முக்கிய சவால்களை எதிர்கொள்ள முடியும். அவ்வாறு செய்வதன் மூலம், அரசாங்கம் பசுமையான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்க முடியும்.


இந்தக் கட்டுரையை, நிர்வாக இயக்குநர் வைபவ் பிரதாப் சிங் மற்றும் காலநிலை மற்றும் நிலைத்தன்மை முன்முயற்சியின் பொருளாதார நிபுணர் ஹனி கருண் ஆகியோர் எழுதியுள்ளனர்.




Original article:

Share:

யுஜிசி (UGC) பல்கலைக்கழகங்களை பலவீனப்படுத்துகிறது -மனோஜ் குமார் ஜா

 2025 வரைவு ஒழுங்குமுறை (Draft regulation) தரநிலைகளை மீண்டும் மாற்றுகிறது. அரசாங்கம் குறைந்தபட்சம் அரசியலமைப்பு தரநிலைகளின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட வரைவு விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பான வரைவு பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission(UGC)) விதிமுறைகள் 2025 சரியாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் பல்கலைக்கழகங்களின் சுயாட்சி, மாநிலங்களின் அதிகாரங்கள் மற்றும் கூட்டாட்சி கொள்கையை பலவீனப்படுத்துவதாகக் காணப்படுகின்றன. இந்த வரைவை வெளியிடுவதன் மூலம், அதிகாரிகள் முக்கியமான இலக்குகளை கவனிக்கவில்லை என்று தெரிகிறது. உயர் கல்வி நிறுவனங்களை (higher education institutions (HEI)) ஒழுங்குபடுத்தும் போது இந்த இலக்குகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.


அமைப்பு ரீதியான சவால்களை எதிர்கொள்ள சில சீர்திருத்தங்கள் தேவை. எவ்வாறாயினும், ஒரு மத்திய பல்கலைக்கழகத்தின் ஆசிரியராக, ஆசிரியர்களின் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளுக்கான நிபந்தனைகளில் வரைவு விதிமுறைகளால் முன்மொழியப்பட்ட பரந்த மாற்றங்களின் தொகுப்பை முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். தெளிவான, வெளிப்படையான மற்றும் நிலையான அளவுகோல்களை வகுத்ததன் மூலம், அரசியல் தலையீடுகளிலிருந்து பல்கலைக்கழகங்களைப் பாதுகாப்பதற்கும், நிர்வாகப் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கும், கல்வி நிறுவனங்களின் சுயாட்சியை நிலைநிறுத்துவதற்கும் விதிமுறைகள் உள்ளன. அவை, தற்போதைய வடிவத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டால், 2025 விதிமுறைகள் இந்தியாவில் உயர்கல்விக்கு அமைப்பு ரீதியாக கடுமையாக பாதிக்கும்.


பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission(UGC)) ஆணையில் பாடத்திட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரல்களை அமைப்பதற்கு நீட்டிக்கப்படவில்லை. இருப்பினும், வரைவு விதிமுறைகளின் பிரிவு 3.8 குறிப்பிட்ட கருத்தியல் மற்றும் சந்தை சார்ந்த இலக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க பரிந்துரைக்கிறது. "இந்திய அறிவு அமைப்புகளில் கற்பித்தல்-கற்றல் மற்றும் ஆராய்ச்சி" மற்றும் "தொடக்க நிறுவனங்கள்" போன்ற பகுதிகளுக்கான பங்களிப்புகள் இதில் அடங்கும். பிரிவு 4.1 (iii)-ல் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள உதவிப் பேராசிரியர்கள் நேரடியாகப் பேராசிரியர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் முதலில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இணைப் பேராசிரியர்களாகப் பணியாற்ற வேண்டும்.


இந்த விதி, பேராசிரியர் பதவிகளுக்கு தகுதி வாய்ந்த உதவிப் பேராசிரியர்களை அவர்களின் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கு பங்களிப்புகளின் தகுதியின் அடிப்படையில் தண்டிக்கிறது. இது தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் தடையை அறிமுகப்படுத்துகிறது. மேலும், அறிஞர்களை அவர்களின் பணிக்காக திறம்பட தண்டனை அளிக்கிறது. நிலை 14-ல் உள்ள பேராசிரியர்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே நிலை 15-க்கு பதவி உயர்வு பெற முடியும். இந்த விதி ஒரு செயற்கை ஒதுக்கீட்டை உருவாக்கி தன்னிச்சையைச் சேர்க்கிறது. இது பேராசிரியர்களிடையே தேவையற்ற படிநிலைக்கு வழிவகுக்கும் மற்றும் கூட்டுறவை பாதிக்கலாம். இது ஆசிரியர்களின் மன உறுதியைக் குறைக்க வாய்ப்புள்ளது.


தற்போதைய விதிமுறைகள் தொழில் முன்னேற்றத் திட்ட (Career Advancement Scheme (CAS)) விண்ணப்பங்களை ஆறு மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும். மதிப்பீடு வெற்றிகரமாக முடிந்தவுடன் பதவி உயர்வுகள் குறைந்தபட்ச தகுதி தேதிக்கு பின் தேதியிடப்படுகின்றன. இது நியாயத்தை உறுதி செய்கிறது மற்றும் நிறுவனத்தால் ஏற்படும் தாமதங்களிலிருந்து ஆசிரியர்களைப் பாதுகாக்கிறது. இருப்பினும், பிரிவு 5.6 பின் தேதியிடும் விதியை நீக்குகிறது. இந்த மாற்றம் பல்கலைக்கழகங்கள் பொறுப்புணர்வை எதிர்கொள்ளாமல் பதவி உயர்வுகளை தாமதப்படுத்த அனுமதிக்கிறது. இது ஆசிரியர்களுக்கு நியாயமற்ற முறையில் தண்டனை அளிக்கிறது. நிர்வாக தாமதங்கள் தொழில் மூப்பு, ஊதியம் மற்றும் தொழில்முறை அங்கீகாரத்தில் பின்னடைவுகளை ஏற்படுத்தும்.


2018 விதிமுறைகள் பதவி உயர்வுகளுக்கான தகுதியான புத்தகங்கள் மற்றும் அத்தியாயங்களை விலக்கின. இருப்பினும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சம எண்ணிக்கையிலான பத்திரிகைக் கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்று அவை தேவைப்படுத்தின. 2025 வரைவு விதிமுறைகள் முந்தைய அளவுகோல்களை மீண்டும் கொண்டு வந்துள்ளன. இந்த விதிமுறைகள் கல்லூரி ஆசிரியர்களை நிலை 14-க்கு பதவி உயர்வுகளுக்கான வெளியீட்டுத் தேவையிலிருந்து விலக்கு அளித்தன. விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும் UGC 2018 கொள்கையை நிறைவேற்றியது. இந்த சமீபத்திய மாற்றங்கள், கல்வி இதழ்களின் கல்வி ஆராய்ச்சி மற்றும் நெறிமுறைகளுக்கான கூட்டமைப்பு (Consortium for Academic Research and Ethics(CARE)) பட்டியலை கலைப்பதோடு, அறிமுறை சார்ந்த வெளியீட்டு தரநிலைகளுக்கு சீரற்ற மற்றும் கவனக்குறைவான அணுகுமுறையைக் காட்டுகின்றன.


அளவுகோல்களின் நிலையில் ஏற்படும் இந்த ஒழுங்கற்ற மற்றும் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள் கல்வித் தொழில் திட்டங்களை சீர்குலைத்து, கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் நீண்டகால முதலீட்டை ஊக்கப்படுத்துகின்றன. நியாயமான சிகிச்சையின் உத்தரவாதம் இல்லாமல், ஆசிரியர்கள் நிர்வாகிகளின் விருப்பத்திற்கு ஆளாக நேரிடும். மேலும், ஒழுங்குமுறை தடைகள் தண்டனை மற்றும் ஒரு வகையான தணிக்கைக்கு ஒத்ததாகத் தெரிகிறது. ஒரு ஒழுங்குமுறை அமைப்பு நியாயத்தன்மை, உறுதிப்பாடு, தொலைநோக்குப் பார்வை மற்றும் முன்கணிப்பு ஆகியவற்றின் கொள்கைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.


தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) 2020 உயர்கல்வி ஒழுங்குமுறையில் ஒரு பெரிய மாற்றத்தை முன்மொழிந்தது. UGC-ஐ கலைத்துவிட்டு அதை இந்திய உயர்கல்வி ஆணையத்துடன் (Higher Education Commission of India (HECI)) மாற்ற பரிந்துரைத்தது.


தேசிய கல்விக் கொள்கை (NEP) உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்தது. ஆனால், தேவையான சட்டங்களை இயற்றுவதிலும் தேவையான மாற்றங்களைச் செய்வதிலும் தாமதம் காரணமாக இவை அடையப்படவில்லை. இதற்கிடையில், UGC இன்னும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை ஆதரிக்க எந்த சட்ட கட்டமைப்பும் இல்லாவிட்டாலும், அது புதிய வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு (higher education institutions (HEIs)) சீர்திருத்தங்களை மேற்கொள்கிறது.


உயர்கல்வி நிறுவனங்களில் (Higher Education Institutions (HEI)) ஆசிரியர்களின் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வுகள் மற்றும் சேவை நிலைமைகளுக்கான விதிமுறைகள் பொதுவாக மத்திய ஊதியக் குழுக்களின் (Central Pay Commissions) பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதிய அமைப்பு திருத்தங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. 2025 வரைவு விதிமுறைகளின் பிரிவு 1.3, "இவை அறிவிப்பு தேதியிலிருந்து அமலுக்கு வரும். இருப்பினும், ஊதிய திருத்தம் செயல்படுத்தப்படும் தேதி ஜனவரி 1, 2016 ஆகும்" என்று கூறுகிறது. குறிப்பிடப்பட்ட தேதி ஏழாவது ஊதியக் குழுவைக் (7th Pay Commission) குறிக்கிறது. ஏழாவது ஊதியக் குழுவின் அமலாக்கத் தேதி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது, இது நகலெடுக்கப்பட்டதை வெளிப்படுத்துகிறது.


உயர் கல்வி நிறுவனங்களில் (HEIs) ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை உள்ளது. இருப்பினும், பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஆட்சேர்ப்புகள், இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் சிறப்பின் முக்கிய இயக்கமாக கல்வியை நம்புபவர்களிடையே கவலையை ஏற்படுத்துகின்றன. கூடுதலாக, "Not Found Suitable" (NFS), குறிப்பாக SC, ST மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு அடிக்கடி பயன்படுத்துவது, பிரதிநிதித்துவம் மற்றும் உறுதியான நடவடிக்கை என்ற கருத்துக்கு தீங்கு விளைவிக்கிறது. உயர்நிலை உயர் கல்விக் குழுக்கள் குறைந்து வருவதையும், அவற்றின் முந்தைய தரத்தை இழப்பதையும் பார்ப்பது கவலையளிக்கிறது. இதில், வளாக கலாச்சாரங்கள் பெருகிய முறையில் கடுமையாகவும் சட்ட விரோதமாகவும் மாறி வருகின்றன.


தற்போதைய ஆட்சி, உயர்கல்வி நிறுவனங்களில் (HEIs) சித்தாந்த ரீதியான நியமனங்களைச் செய்து வருகிறது என்பது பரவலாக அறியப்படுகிறது. தகுதியான விண்ணப்பதாரர்களின் பற்றாக்குறை குறித்த கூற்றுக்கள் தவறாக வழிநடத்துகின்றன. ஆட்சியின் சித்தாந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் வேட்பாளர்களின் உண்மையான பற்றாக்குறை உள்ளது. தகுதியற்ற நபர்களின் சிறிய குழுக்கள் பல உயர்கல்வி நிறுவனங்களில் பல நிர்வாகப் பதவிகளை வகிக்கின்றன என்பதால் இது தெளிவாகிறது. சில சந்தர்ப்பங்களில், தனிநபர்கள் பல நிறுவனங்களின் பொறுப்பாளர்களாகவும் உள்ளனர். ஆட்சியில் வேட்பாளர்கள் இல்லாதபோதெல்லாம் அது பொருத்தமானதாகக் கருதும் விதிகள் மாறும். 2025 வரைவு ஒழுங்குமுறை இந்த மாற்றத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு ஆகும். அரசியலமைப்பு தரநிலைகளின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட விதிமுறைகளை மதிப்பீடு செய்வதே அரசாங்கத்திடமிருந்து நாம் எதிர்பார்க்கக்கூடிய குறைந்தபட்சமாகும்.


எழுத்தாளர் மாநிலங்களவையில் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்.




Original article:

Share:

சமமான வளர்ச்சிக்கு, இந்தியா நிறுவனம் (India Inc) நடவடிக்கை எடுக்க வேண்டும் -அஜய் பிரமல், டெபோபம் சவுத்ரி

 இந்தியாவின் அனைத்துப் பகுதிகளும் சமமாகவும் விரைவாகவும் வளர்ச்சியடையவில்லை என்றால், நமது இளம் பணியாளர்களை வீணடித்து, "சீனா பிளஸ்" உத்தியின் பொருளாதாரப் பலன்களை இழக்க நேரிடும்.


பேரியல் பொருளாதார வளர்ச்சி என்பது உண்மையான தேசிய வருமானத்தின் அதிகரிப்பு (real national income) என வரையறுக்கிறது, அதே சமயம், பொருளாதார மேம்பாடு (Economic development) என்பது வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்க்கைத் தரங்களில் முன்னேற்றம் ஆகும். ஒரு கல்வியியல் உலகில் (pedagogic universe), இரண்டும் வளர்ச்சியின் நேர்மறையான சுழற்சியில் இணைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், உண்மையான உலகில், கசிவுகள் (leakages) பெரும்பாலும் இந்த தொடர்பை பலவீனப்படுத்துகின்றன. இது சமத்துவமின்மையை அதிகரிக்கிறது மற்றும் தேசிய செல்வத்தின் நியாயமான விநியோகத்தைத் தடுக்கிறது.


கடந்த பத்தாண்டுகாலத்தில், இந்தியாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. வலுவான அரசியல் விருப்பமும் இராஜதந்திர பொருளாதார சீர்திருத்தங்களும் நாட்டை உயர் வளர்ச்சியின் காலகட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளன. ஒரு காலத்தில் பலவீனமான பொருளாதாரமாக காணப்பட்ட இந்தியா, இப்போது வளர்ச்சியின் அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு, நிலம் மற்றும் தொழிலாளர் சீர்திருத்தங்கள், அரசியலமைப்பு திருத்தங்கள், வரி மறுசீரமைப்பு மற்றும் திவால்நிலை குறியீடுகளில் பெரும் முதலீடுகள் வணிக நிலைமைகளை மேம்படுத்தியுள்ளன. தற்போதைய அரசாங்கம் இந்தியாவின் பொருளாதார சூழ்நிலையாக மாற்றியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு சோசலிச மனநிலையிலிருந்து விலகி, செல்வத்தை உருவாக்குபவர்களை நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமாகக் கருதுகிறது. இந்தியா இளம் மற்றும் லட்சியம் கொண்ட மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இது ஒரு ஆதரவான கொள்கை சூழலையும் கொண்டுள்ளது. இது இந்தியாவை ஒரு மாற்றங்களுக்கான பத்தாண்டுகளுக்கு வலுவான நிலையில் வைக்கிறது. சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி மற்றும் மோர்கன் ஸ்டான்லி போன்ற உலகளாவிய நிறுவனங்கள் வலுவான பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கின்றன. இந்த வளர்ச்சி கடந்த காலகட்டத்தில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் மூலதனச் செலவினங்களால் இயக்கப்படுகிறது.


இருப்பினும், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் அவசரமாக கவனிக்கப்பட வேண்டிய சில சிக்கல்கள் உள்ளன. இந்தப் பிரச்சினைகள் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா (விக்சித் பாரத்) என்ற இலக்கை அடைவதைத் தடுக்கக்கூடும். இந்த இலக்கை அடைய, தனிநபர் வருமானம் $2,700 இலிருந்து $15,000 ஆக உயர வேண்டும். இந்தியாவின் முழுப் பொருளாதார ஆற்றலையும் திறப்பதற்கு தொடர்ச்சியான சமத்துவமின்மை ஒரு பெரிய தடையாக உள்ளது.


வெவ்வேறு பகுதிகளைப் பார்க்கும்போது இந்த சமத்துவமின்மை தெளிவாகத் தெரியும். இந்தியாவின் வரைபடத்தில், புதுடெல்லியிலிருந்து ஹைதராபாத் வரையிலான ஒரு கோடு நாட்டை இரண்டு வெவ்வேறு யதார்த்தங்களாகப் பிரிக்கிறது. ஒரு பக்கம் இந்தியாவின் உலகளாவிய பொருளாதார இருப்பை (global economic presence) இயக்கும் குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற உயர் வருமானம் கொண்ட மாநிலங்கள் உள்ளன. மறுபுறம் பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் அசாம் போன்ற மாநிலங்கள் மெதுவான வளர்ச்சி மற்றும் வளர்ச்சியின்மையை எதிர்கொள்கின்றன. அதிகாரப்பூர்வ மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின்படி, இந்தியாவின் மற்ற பகுதிகளின் தனிநபர் வருமானம் இந்த ஐந்து மாநிலங்களின் சராசரியைவிட 2.2 மடங்கு அதிகமாகும். இந்த இடைவெளி காலப்போக்கில் 2011-12ஆம் ஆண்டில் 1.6 மடங்கு முதல் 2021-22ஆம் ஆண்டில் 2.2 மடங்கு வரை அதிகரித்துள்ளது என்பது கவலையளிக்கிறது.


குறைந்த வருமான நிலைகள் இந்த மாநிலங்களில் உள்ள பிற பொருளாதார குறிகாட்டிகளில் பிரதிபலிக்கின்றன. உதாரணமாக, இந்த ஐந்து மாநிலங்களும் இந்தியாவின் தொழிலாளர் தொகுப்பில் 26 சதவீதத்தை உருவாக்குகின்றன. இருப்பினும், குறைந்த உற்பத்தித்திறன் காரணமாக, அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீதம் மட்டுமே பங்களிக்கின்றன. இந்த மாநிலங்களில் தாய்வழி இறப்பு விகிதம் (maternal mortality rate) 165 ஆகவும், தேசிய சராசரி 75 ஆகவும், நிலையான வளர்ச்சி இலக்கு 70 ஆகவும் உள்ளது. இந்த மாநிலங்களில் வறுமை விகிதம் 23 சதவீதமாகவும், இது தேசிய சராசரியான 10 சதவீதத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாகவும் உள்ளது. இது நிலையான வளர்ச்சி இலக்கான (SDG) 0-லிருந்து அதிக தொலைவில் உள்ளது.


பெரும்பாலும் இந்த மாநிலங்களில் அமைந்துள்ள 112 ஆர்வமுள்ள மாவட்டங்களின் நிலைமைகள் இன்னும் மிகவும் மோசமாக உள்ளன. துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள சில ஏழ்மையான நாடுகளைப் போலவே இந்த மாவட்டங்களும் மனித மேம்பாட்டு குறியீட்டு மதிப்பெண்களைக் கொண்டுள்ளன. பிரமல் அறக்கட்டளையின் (Piramal Foundation) பணி இந்த பிராந்தியங்களில் பல கடுமையான யதார்த்தங்களை எடுத்துக்காட்டுகிறது. உதாரணமாக, அசாமில், மழைக்காலத்தின் போது, ​​"சார்ஸ்" (Chars) என்று அழைக்கப்படும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட தீவுகளாக மாறுகின்றன. இது பள்ளிகள் மற்றும் பொது சேவைகளுக்கான அணுகலைத் துண்டிக்கிறது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மூன்று முதல் நான்கு மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. பயிர்கள் அழிக்கப்படுகின்றன, வறுமை மிகவும் மோசமாகிறது.


உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில், பள்ளிக்குச் செல்லும் வழியில் குழந்தைகள் சிறுத்தை தாக்குதலால் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். நாகாலாந்தின் கிஃபைர் மாவட்டத்தில், வரையறுக்கப்பட்ட இணைப்பு வசதிகள், அருகிலுள்ள மருத்துவமனையை அடைய எட்டு முதல் ஒன்பது மணி நேரம் வரை கடினமான நிலப்பரப்பு வழியாக பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் குடியிருப்பாளர்கள் உள்ளனர்.


இந்த சவால்கள் இருந்தபோதிலும், இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. அரசாங்க முயற்சிகள் பல பரிமாண வறுமையைக் (multidimensional poverty) குறைக்க உதவியுள்ளன. இது 2013-14ஆம் ஆண்டில் 29.2%-லிருந்து 2022-23ஆம் ஆண்டில் 11.3% ஆகக் குறைந்தது. இந்த மாற்றம் 250 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து சுகாதாரம், நலம், கல்வி மற்றும் போக்குவரத்து ஆகியவற்றில் கவனம் செலுத்தும் சமூகத் துறை திட்டங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.48 லட்சம் கோடியை செலவிடுகின்றன.


இருப்பினும்கூட, இந்த ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதில் தனியார் துறையின் பங்கு இன்னும் குறைவாகவே உள்ளது. பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (Corporate Social Responsibility (CSR)) நிதியில் தெளிவான இடைவெளி உள்ளது. உதாரணமாக, ஒரு கோடிக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட புனேவில், ஒவ்வொரு ஆண்டும் ரூ.257 கோடி பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) நிதியைப் பெறுகிறது. இது ஒரு நபருக்கு ரூ.375 ஆகும். இதை ஒப்பிடுகையில், 25 கோடி மக்கள்தொகை கொண்ட 112 விருப்பமுள்ள மாவட்டங்கள் ரூ.472 கோடியை மட்டுமே பெறுகின்றன. இது ஒரு நபருக்கு ரூ.19 மட்டுமே ஆகும். இந்த சமத்துவமின்மை, நிறுவனங்கள் தங்கள் CSR முயற்சிகளை பின்தங்கிய பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.


இந்தியா மூன்று தனித்துவமான மக்கள்தொகைப் பிரிவுகளைக் கொண்டதாகக் காணலாம். முதலாவது சுமார் 5.6 கோடி மக்களைக் கொண்ட ஆடம்பரமானப் பிரிவு. இரண்டாவது நடுத்தர வருமானம் மற்றும் ஆர்வமுள்ள பிரிவு, இதில் 110 கோடி மக்கள் அடங்குவர். மூன்றாவது பிரிவு பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு ஆகும். இதில் 20 கோடி மக்கள் உள்ளனர். தனியார் மற்றும் பொது பங்குதாரர்கள் இருவரும் இந்த அனைத்து பிரிவுகளும் சமமான வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஏழ்மையான மாவட்டங்களில் தங்கள் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) திட்டங்கள் மூலம் பெருநிறுவன நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் இதை அடைய முடியும். கூடுதலாக, சிறந்த பொது சேவைகளை வழங்க அரசாங்கம் நடுத்தர அளவிலான அமைப்புகளை மேம்படுத்த வேண்டும். இந்தியாவின் அனைத்து பகுதிகளும் சமமாகவும் விரைவாகவும் வளர்ச்சியடையவில்லை என்றால், நமது மக்கள்தொகையை நாம் குறைவாகப் பயன்படுத்தி, சீனா பிளஸ் உத்தியால் (China plus strategy) வழங்கப்படும் பொருளாதார வாய்ப்பை இழக்க நேரிடும்.




Original article:

Share:

பன்னாட்டு நீதிமன்றத்தின் (ICJ) ஆலோசனைக் கருத்து உலகளாவிய காலநிலை நிர்வாகத்தை எவ்வாறு பாதிக்கலாம்? -ஐஸ்வர்யா சனாஸ்

 காலநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு நீதிமன்றத்தின் (International Court of Justice (ICJ)) ஆலோசனைக் கருத்து ஏன் கட்டுப்பாடற்றதாக இருந்தாலும் காலநிலை மாற்ற உரையாடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?


காலநிலை தொடர்பான சிக்கல்கள் மற்றும் காலநிலை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான, நாடுகளின் சட்டப்பூர்வ பொறுப்புகள் ஆகியவை உலகெங்கிலும் உள்ள தேசிய நீதிமன்றங்களில் அதிகளவில் தீர்க்கப்படுகின்றன. உதாரணமாக, இந்திய உச்சநீதிமன்றம் சுத்தமான சூழலுக்கான உரிமையையும், காலநிலை மாற்றத்தின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து பாதுகாப்பையும் அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளது. 


இதைக் கருத்தில் கொண்டு, உலகின் உச்ச நீதிமன்றமான, சர்வதேச நீதிமன்றம் , தற்போதுள்ள சர்வதேச சட்டங்கள் மற்றும் காலநிலை நடவடிக்கை தொடர்பான நாடுகளின் கடமைகளை தெளிவுபடுத்துவது முக்கியம். காலநிலை மாற்றம் தொடர்பாக மாநிலங்களின் சட்டப்பூர்வ கடமைகள் மற்றும் இந்த கடமைகளின் விளைவுகள் குறித்து விவாதிக்க சர்வதேச நீதிமன்றம் (ICJ) டிசம்பர் 2-13, 2024 வரை பொது விசாரணைகளை நடத்தியது.


இந்த ஆண்டு நீதிமன்றம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படும் ஆலோசனைக் கருத்து நாடுகளைக் கட்டுப்படுத்தாது என்றாலும், இந்த வழக்கின் முடிவு காலநிலை மாற்ற விவாதத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், உலக நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட பல காலநிலை வழக்குகளுக்கும் இது ஒரு முன்னுதாரணமாக அமையக்கூடும். இந்த வழக்குகள் அரசாங்கங்களையும் நிறுவனங்களையும் அதிக பொறுப்புணர்வுடன் வைத்திருக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளன.


சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) ஆலோசனைக் கருத்து, கட்டுப்பாடற்றதாக இருந்தாலும், உலகளாவிய காலநிலை நிர்வாகத்தை எவ்வாறு பாதிக்கலாம் என்பதைப் புரிந்துகொள்வோம். சமீபத்திய ஆண்டுகளில், அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிரான காலநிலை வழக்குகள் எவ்வாறு உருவாகியுள்ளன? 


1970 காலகட்டங்களில் இருந்து, காலநிலை மாற்றம் கூட்டு நடவடிக்கை தேவைப்படும் ஒரு பிரச்சனையாகக் கருதப்படுகிறது. பல உலகளாவிய முயற்சிகள் மூலம் காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச சட்டம் உருவாகியுள்ளது. முக்கியமாக,  சர்வதேச சட்டங்களில் காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கட்டமைப்பு மாநாடு (UN Framework Convention on Climate Change (UNFCCC)) மற்றும் அதன் இரண்டு முக்கிய கருவிகளான, 2020-ம் ஆண்டில் முடிவடைந்த கியோட்டோ நெறிமுறை (Kyoto Protocol) மற்றும் 2015 பாரிஸ் ஒப்பந்தம் (Paris Agreement) ஆகியவை அடங்கும். இந்த ஒப்பந்தங்கள், அவற்றின் கொள்கைகளை செயல்படுத்த எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளுடன், சர்வதேச ஒத்துழைப்புக்கான வழிகாட்டுதல்களையும் காலநிலை மாற்றத்திற்கு ஒருங்கிணைந்த பதிலையும் வழங்குகின்றன.


இருப்பினும், கடந்த பத்தாண்டு காலத்தில், காலநிலை சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன. உலகளாவிய நிகழ்வுகளான, காலநிலை மாற்றம் என்பது ஒரு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, சமூக-பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனையும்தான் என்பதைக் காட்டுகிறது. இது, அரசியல் பொருளாதாரத்துடன்  ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி பயன்பாடு, இயற்கை வளங்கள், உற்பத்தி, நுகர்வு மற்றும் குடிமை மற்றும் மனித உரிமைகளை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதில் பயனுள்ள காலநிலை நடவடிக்கைக்கு மாற்றம் தேவை என்று நிபுணர்கள் வாதிடுகின்றனர்.


இதன் விளைவாக, காலநிலை நடவடிக்கையின் நோக்கம் காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) கட்டமைப்பிற்கு அப்பால் சர்வதேச வர்த்தகம், புதைபடிவ எரிபொருட்களின் அரசியல் பொருளாதாரம், விவசாயம் மற்றும் நாடுகளுக்கிடையேயான இடம்பெயர்வு போன்ற பகுதிகள் அடங்கும். இது சர்வதேச சட்டத்தின் பல பகுதிகளை விவாதத்தின் ஒரு பகுதியாக மாற்றும். ஆயினும்கூட, சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) உள்ள நடவடிக்கைகளில் பல விமர்சிப்பவர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். ஏனெனில், அவர்கள் காலநிலை விவாதத்தை வர்த்தகம், ஆற்றல், இடம்பெயர்வு, உரிமைகள் மற்றும் நுகர்வு ஆகியவற்றை உள்ளடக்கியதாக விரிவுபடுத்துவது உலகளாவிய காலநிலை நடவடிக்கைக்கு உதவுவதற்குப் பதிலாக தடையாக இருக்கும் என்று நம்புகிறார்கள். இந்த விரிவாக்கம் சர்வதேச சட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே மோதல்களுக்கு வழிவகுக்கும்.


நீதிபதி கிளீவ்லேண்டால் எழுப்பப்பட்ட ஒரு கேள்வியானது, சர்வதேச காலநிலைச் சட்டம் (international climate law) படிம எரிபொருள் உற்பத்தி, விநியோகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான கடமைகளை விதிக்கிறதா என்பதைப் பரிசீலிக்க மாநிலங்களைத் தூண்டியது. இதற்கு, மாநிலங்கள் மாறுபட்ட கருத்துகளுடன் பதிலளித்தன. இதற்கு சிலர் எரிபொருட்களை படிப்படியாகக் குறைப்பது ஒரு கடமையாக இருக்க வேண்டும் என்று வாதிட்டனர். மற்றவர்கள் தங்கள் இயற்கை வளங்களை வளர்ச்சிக்குப் பயன்படுத்த நாடுகளுக்கு உரிமை உண்டு என்று கூறினர். சர்வதேச காலநிலை சட்டத்தை பொது சர்வதேச சட்டங்களுடன் இணைப்பதால் சர்வதேச நீதிமன்றம் (ICJ) நடவடிக்கைகள் முக்கியமானவை. இந்த நடவடிக்கைகளின் போது, ​​நீதிபதி ஆரெஸ்கு, சுத்தமான, ஆரோக்கியமான மற்றும் நிலையான சூழலுக்கான உரிமை வழக்கமான சட்டங்களின் கீழ் உள்ள பிற மனித உரிமைகளுடன் எவ்வாறு தொடர்புடையது என்று மாநிலங்களின் கருத்துகளைக் கேட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, கானாவின் பிரதிநிதி, "ஆரோக்கியமான சூழல் இல்லாமல், பிற உரிமைகளை அனுபவிக்க இயலாது. மேலும், மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களின் உயிர்வாழ்வது ஆபத்தில் இருக்கும்" என்று கூறினார்.


இதேபோல், ஓசியானியாவில் உள்ள ஒரு சிறிய தீவு நாடான வனுவாட்டு குடியரசு (Republic of Vanuatu), சுயநிர்ணய உரிமை (right to self-determination) மற்றும் அவர்களின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான உரிமையை உள்ளடக்கிய சுத்தமான சூழலுக்கான உரிமையை விரிவுபடுத்த முயற்சித்தது. தூய்மையான சுற்றுச்சூழலுக்கான உரிமையின் இத்தகைய பரந்த விளக்கம், காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) கீழ் உள்ள கொள்கைகளின் சட்ட நிலை பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. அவை, சட்டப்பூர்வமாக பிணைக்கப்படவில்லை. 


காலநிலை மாற்றத்திற்கு 'எல்லை தாண்டிய தீங்குகளைத் தடுப்பது' (prevention of transboundary harm) மற்றும் 'மாசுபடுத்துபவர் அபராதம்' (polluter pays) போன்ற வழக்கமான சட்டங்களைப் பயன்படுத்தினால், பல முரண்பாடுகள் வெளிப்படும். ஏனென்றால், 'எந்த எல்லைக்கும் அப்பாற்பட்ட தீங்கும் இல்லை' (no transboundary harm) கோட்பாடு பாரம்பரியமாக தீங்கு விளைவிக்கும் மாசுபடுத்திகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. அதன் மூலத்தை தெளிவாக நிறுவ முடியும். இருப்பினும், காலநிலை மாற்றத்தின் விஷயத்தில், ஒரு குறிப்பிட்ட மூலத்திற்கு உமிழ்வைக் குறிப்பிடுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இது சட்டப் பொறுப்பை நிறுவுவதை கடினமாக்குகிறது. எனவே, காலநிலை மாற்றம் விஷயத்தில் தற்போதுள்ள வழக்கமான சட்டங்களை விமர்சனமின்றி பயன்படுத்த முடியாது.


காலநிலை மாற்றம் என்பது சமூகங்கள், அரசியல் மற்றும் பொருளாதாரங்களைப் பாதிக்கும் ஒரு சிக்கலான பிரச்சினை ஆகும். இந்தப் பிரச்சினையில் சட்டப்பூர்வ விசாரணை உண்மையான நடவடிக்கைக்கு பதிலாக சட்டப்பூர்வ தீர்வுகளுக்கு வழிவகுக்கும். பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (Organisation of the Petroleum Exporting Countries(OPEC)) அதன் எழுத்துப்பூர்வ அறிக்கையில், காலநிலை நெருக்கடியைத் தீர்க்க ஒரு கூட்டு அணுகுமுறை தேவை. இதற்கு ஒரு பரிந்துரைக்கப்பட்ட அணுகுமுறை அல்ல என்று வலியுறுத்தியது.


மேலும், பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் தற்போதைய காலநிலை நடவடிக்கை கட்டமைப்பு தன்னார்வ உறுதிமொழிகளை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட கடமைகள் தேவையில்லை. இந்த அணுகுமுறை நாடுகள் தங்கள் இயற்கை வளங்களை பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்த அனுமதிக்கிறது. அதே நேரத்தில், அவர்கள் தங்கள் திறன்கள் மற்றும் தன்னார்வ உறுதிமொழிகளின் அடிப்படையில் காலநிலை நடவடிக்கை எடுக்க அனுமதிக்கிறது. பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ்மட்ட காலநிலை நிர்வாக அமைப்பு சட்ட விசாரணையிலிருந்து வேறுபட்டது. சட்ட விசாரணைகள் பொதுவாக மேலிருந்து கீழ் அணுகுமுறையைப் (top-down approach) பின்பற்றுகின்றன.


இதன் விளைவாக, சர்வதேச நீதிமன்றம் (ICJ) தனது தீர்ப்பை தேசிய அதிகார வரம்புகளுக்குள் செயல்படுத்த முடியாததால், யதார்த்தமாக எதை அடைய முடியும் என்பது நீடித்த கேள்வியாகவே உள்ளது. எனவே, காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு இந்த நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க வெற்றியைக் குறிக்கும் அதே வேளையில், அதிக உமிழ்வு நாடுகளை பொறுப்பேற்க அனுமதிப்பதன் மூலம் சக்திவாய்ந்த நாடுகள் உண்மையிலேயே பொறுப்பு வகிக்குமா என்ற கேள்வி உள்ளது.




Original article:

Share:

ஆண்டு கல்வி நிலை அறிக்கை (ASER) என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


1. செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட, ஆண்டு கல்வி நிலை அறிக்கை ((Annual Status of Education Report (ASER))) 2024-ன் படி, 20 ஆண்டுகளுக்கு முன்பு கணக்கெடுப்பு தொடங்கியதில் இருந்து, அரசுப் பள்ளிகளில் சேரும் 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கான அடிப்படை வாசிப்பு நிலைகள் (basic reading levels) மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளன என்பதைக் காட்டுகிறது.


2. அரசுப் பள்ளிகளில், 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளில் 23.4% பேர் 2-ம் வகுப்பு பாடப்புத்தகத்தைப் படிக்க முடிகிறது. இது, 2022-ம் ஆண்டில் 16.3% ஆகவும், தொற்றுநோய்க்கு முன்பு 2018-ம் ஆண்டில் 20.9% ஆகவும் இருந்தது.


3. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒட்டுமொத்த வாசிப்பு நிலைகளும் (Overall reading levels) 2022-ம் ஆண்டில் 20.5%-ல் இருந்து 2024-ம் ஆண்டில் 27.1% ஆக உயர்ந்துள்ளது. இது, தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை 27.3% ஐ கிட்டத்தட்ட எட்டியுள்ளது.


4. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எண்கணித அளவுகள் (Arithmetic levels) மேம்பட்டுள்ளன. 2018-ம் ஆண்டில், 3ஆம் வகுப்பு குழந்தைகளில் 28.2% பேர் குறைந்தபட்சம் கழித்தல் (subtraction) முறையை செய்ய முடிந்தது. இது, 2024-ம் ஆண்டில் 33.7% ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 2022-ம் ஆண்டில் 25.9% சரிவிலிருந்து தீவிரமான அளவில் மீண்டுள்ளது.


5. ஜம்மு & காஷ்மீர் மற்றும் நாகாலாந்து தவிர, பெரும்பாலான மாநிலங்கள், 3-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலைகள் (learning levels) 2022 உடன் ஒப்பிடும்போது மீட்சியைக் (recover) காட்டியுள்ளன என்பதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. அதேநேரத்தில், தொற்றுநோய்க்குப் பிறகு குழந்தைகள் பள்ளிக்குத் திரும்பிய ஆண்டிலும், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் 2022 உடன் ஒப்பிடும்போது 2024-ம் ஆண்டில் வாசிப்பு அளவுகளில் (reading levels) 10 சதவீத புள்ளிகள் அதிகரிப்பைக் காட்டியுள்ளன.


6. மற்ற மாநிலங்களும் 2018 உடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காட்டியுள்ளன. பீகாரில், 3-ம் வகுப்பு வாசிப்பு அளவுகள் கிட்டத்தட்ட 8 சதவீத புள்ளிகள் அதிகரித்து, 2024-ம் ஆண்டில் 20.1%-ஐ எட்டியுள்ளன. உத்தரகாண்டில், 3-ம் வகுப்பு வாசிப்பு அளவுகளில் கடுமையான உயர்வு ஏற்பட்டுள்ளது. இது, 2018-ம் ஆண்டில் 24.7% இலிருந்து 2024-ம் ஆண்டில் 35.6% ஆக உயர்ந்துள்ளது. 3-ம் வகுப்பு எண்கணிதத்திலும் பீகார் மாநிலம் முன்னேற்றங்களைக் கண்டது. இந்த சதவீதம் 2018-ம் ஆண்டில் 18%-லிருந்து 2024-ம் ஆண்டில் 28.2% ஆக உயர்ந்துள்ளது.


7. இந்தக் குழு அறிக்கையில், ஆச்சரியப்படத்தக்க வகையில் முன்னணியில் இருப்பது உத்தரபிரதேசத்தின் அரசுப் பள்ளிகள் ஆகும். இந்தப் பள்ளிகளில் வாசிப்பு அளவு 15 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது. இது, 2018-ம் ஆண்டில், வாசிப்பு அளவு 12.3% ஆக இருந்தது. மேலும், அது 27.9% ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளைக் கருத்தில் கொண்டால், வாசிப்பு அளவு 2018-ம் ஆண்டில் 28.3%-லிருந்து 2024-ம் ஆண்டில் 34.4% ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் அடிப்படை எண்கணித அளவுகளும் மேம்பட்டுள்ளன. 2018-ம் ஆண்டில், அவை 26.9% ஆக இருந்து, 2024-ம் ஆண்டில், அவை 40.7% ஆக உயர்ந்துள்ளன.


8. அனைத்து வயதினரிடையேயும் கற்றல் நிலைகள் (Learning levels) மேம்பட்டுள்ளன. இருப்பினும், மிகப்பெரிய முன்னேற்றங்கள் தொடக்க வகுப்புகளில் உள்ளன. ஏனெனில், மாநில அரசுகளும் ஒன்றிய கல்வி அமைச்சகமும் ஆரம்பக் கல்வியில் கவனம் செலுத்துகின்றன. அவர்களின் நிபுன் பாரத் மிஷன் (Nipun Bharat Mission) அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை (foundational literacy and numeracy (FLN)) மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


9. 2022-ம் ஆண்டில், 5ஆம் வகுப்பு மாணவர்களில் 42.8% பேர் 2ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தைப் படிக்கத் தெரிந்தனர். இது, 2024-ம் ஆண்டில் 48.7% ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், இது 2018-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 50.4%-ஐ விட இன்னும் குறைவாகவே உள்ளது.


10. தொற்றுநோய்க்குப் பிறகு இந்தக் குழுவின் கணிதத் திறன்களும் மேம்பட்டுள்ளன. 2022-ம் ஆண்டில், 25.6% பேர் மட்டுமே தேவையான கற்றல் திறன்களைக் கொண்டிருந்தனர். இது, 2024-ம் ஆண்டில் 30.7% ஆக உயர்ந்தது. இது, தொற்றுநோய்க்கு முந்தைய அளவை விட 27.8% அதிகமாகும்.


உங்களுக்குத் தெரியுமா?


1. 2005-ம் ஆண்டு முதல், பிரதம் (Pratham) என்ற அரசு சாரா நிறுவனம் வருடாந்திர கல்வி நிலை அறிக்கையை (கிராமப்புறம்) வெளியிட்டு வருகிறது. இந்த அறிக்கை, பள்ளி குழந்தைகளிடையே அடிப்படை வாசிப்பு மற்றும் எண்கணித நிலைகள் (basic reading and arithmetic levels), பள்ளி வருகை மற்றும் பிற குறிகாட்டிகளை அளவிடுவதற்காக வெளிப்படுத்தியுள்ளது. இந்தத் தரவுகள் பல ஆண்டுகளாக கற்றலில் பரந்த போக்குகளைக் காட்டுகிறது.


2. 2024-ம் ஆண்டு கணக்கெடுப்பு 605 கிராமப்புற மாவட்டங்களில் 17,997 கிராமங்களில் 6,49,491 குழந்தைகளை சென்றடைந்தது. எல்.கே.ஜி, யு.கே.ஜி, அங்கன்வாடி அல்லது பிற நிறுவனங்களில் சேரும் முன் தொடக்க வயது (3 முதல் 5 வயது வரை) குழந்தைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியது. வாசிப்பு மற்றும் எண்கணிதத் திறன்களிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்பட்டன. கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட கற்றல் இழப்புகளுக்குப் பிறகு இது ஒரு நேர்மறையான அறிகுறியாகும். கூடுதலாக, பருவக் குழந்தைகளிடையே (15 மற்றும் 16 வயது) டிஜிட்டல் எழுத்தறிவை அளவிடுவதற்கான முதல் அதிக நேர, ஆண்டு கல்வி நிலை அறிக்கையின் (ASER) கணக்கெடுப்பு இதுவாகும்.


3. 2023-ம் ஆண்டு நடத்தப்பட்ட சிறியளவிலான Beyond Basics கணக்கெடுப்பைத் தொடர்ந்து சமீபத்திய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது, 605 கிராமப்புற மாவட்டங்களில் 6,49,491 குழந்தைகளை மதிப்பீடு செய்தது. இது, அடிப்படை வாசிப்பு நிலைகள் (basic reading levels) மற்றும் எண்கணிதத்தில் (arithmetic) கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பு மூன்று வயது பிரிவுகளில் உள்ள குழந்தைகளுக்கு கவனம் செலுத்தியது. அவை, முன்-தொடக்க (வயது 3 முதல் 5 வரை), தொடக்க (வயது 6 முதல் 14 வரை) மற்றும் பருவக் குழந்தைகள் (வயது 15 முதல் 16 வரை) ஆகும்.


4. தனியார் பள்ளிகளில் இருந்து குழந்தைகள் வெளியேறியபோது பெருந்தொற்று காலத்தில் அதிகரித்த அரசுப் பள்ளி சேர்க்கையானது, தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு கிட்டத்தட்ட மீண்டும் திரும்பியுள்ளதாக அறிக்கை காட்டுகிறது. 2018-ம் ஆண்டில், 6-14 வயதுடையவர்களில் 65.6% பேர் அரசுப் பள்ளிகளில் சேர்ந்தனர். இது, 2022-ம் ஆண்டில் 72.9% ஆக உயர்ந்து, தற்போது 66.8% ஆகக் குறைந்துள்ளது. 6-14 வயதுடையவர்களின் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதம் 98.1% ஆகும். இது, 2022-ம் ஆண்டில் 98.4% ஆக இருந்தது.


5. தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)), 1-ம் வகுப்புக்கு முந்தைய அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பகால குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. 2024-ம் ஆண்டில், 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளின் பாலர் பள்ளியில் (pre-school) சேரும் சதவீதம் 2018 மற்றும் 2022 உடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது. 5 வயது குழந்தைகளிடையே மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டது. அவர்களின் சேர்க்கை 2018-ம் ஆண்டில் 58.5% -லிருந்து 2024-ம் ஆண்டில் 71.4% ஆக உயர்ந்துள்ளது.


6. முதன்முறையாக, ஆண்டு கல்வி நிலை அறிக்கை (ASER) டிஜிட்டல் கல்வியறிவு பற்றிய ஒரு பகுதியை உள்ளடக்கியது. இந்தப் பிரிவு 14-16 வயதுடையவர்களிடையே ஸ்மார்ட்போன்களை அணுகுதல், சொந்தமாக்குதல் மற்றும் பயன்படுத்துதல் மற்றும் அடிப்படை டிஜிட்டல் திறன்களைப் பற்றியும் ஆய்வு செய்தது. சிறுமிகளைவிட அதிகமாக சிறுவர்கள் ஸ்மார்ட்போனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது அறிந்திருப்பதாக அறிக்கை கண்டறிந்துள்ளது. 79.4% சிறுமிகளுடன் ஒப்பிடும்போது 85.5% சிறுவர்கள் இதைப் பற்றி அறிந்துள்ளனர்.




Original article:

Share: