உலக சுகாதார அமைப்பு (WHO) -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் தனது முதல் நாளில் அதிபர் டொனால்ட் டிரம்பின் கீழ் அமெரிக்காவின் இதேபோன்ற நடவடிக்கையைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பில் (WHO) இருந்து விலகுவதாக அர்ஜென்டினா புதன்கிழமை அறிவித்தது.


• "உலக சுகாதார அமைப்பில் அர்ஜென்டினாவின் பங்கேற்பைத் திரும்பப் பெறுமாறு அதிபர் (ஜேவியர்) மிலே (வெளிநாட்டு அமைச்சர்) ஜெரார்டோ வெர்தீனுக்கு அறிவுறுத்தினார்," என்று அதிபரின் செய்தித் தொடர்பாளர் மானுவல் அடோர்னி ஒரு செய்தி மாநாட்டில் கூறினார். இது CNN-ஆல்  மேற்கோள் காட்டியது.


• அர்ஜென்டினாவின் சுதந்திரவாத அதிபர் மிலே, WHO-வை விட்டு வெளியேற உத்தரவிட்டார். அந்த அமைப்பு சுகாதார பிரச்சினைகளை எவ்வாறு நிர்வகிக்கிறது என்பதில் "ஆழ்ந்த வேறுபாடுகள்" (“deep differences”) இருப்பதால் இது நடந்ததாக அவர் கூறினார். COVID-19 தொற்றுநோய்க்கு அதன் பிரதிபலிப்பை மிலே குறிப்பாக விமர்சித்தார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை மிலே தனது நெருங்கிய கூட்டாளியாகக் கருதுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


• அடோர்னி, முந்தைய இடதுசாரி அரசாங்கத்தின் கீழ் அர்ஜென்டினாவின் நீட்டிக்கப்பட்ட முடிவின் முக்கிய காரணியாகக் குறிப்பிட்டார். மற்ற நாடுகளில் அரசியல் செல்வாக்கிலிருந்து WHO-ன் சுதந்திரம் இல்லாதது பற்றிய கவலைகளையும் அவர் எடுத்துரைத்தார்.


• COVID-19 நெருக்கடி மற்றும் பிற உலகளாவிய சுகாதார பிரச்சினைகளை தவறாகக் கையாண்டதற்காக டிரம்பின் விமர்சனத்தை இது பிரதிபலிக்கிறது, அதே நேரத்தில் அதன் மிகப்பெரிய நிதி ஆதரவாளரான அமெரிக்காவிடமிருந்து "நியாயமற்ற கணிசமான" கொடுப்பனவுகளைக் கோரியது.


உங்களுக்குத் தெரியுமா?:


• 1948-ல் நிறுவப்பட்டது, உலக சுகாதார அமைப்பு (WHO) என்பது உலகளாவிய சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் நிறுவனமாகும். ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு சேவை செய்வதற்கும் இந்த அமைப்பு நாடுகள், கூட்டாளர்கள் மற்றும் சமூகங்களை இணைக்கிறது. உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பைப் பின்பற்றுவதன் மூலம் அனைத்து மக்களுக்கும் மிக உயர்ந்த ஆரோக்கியத்தை அடைய WHO அதன் உறுப்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது.


• WHO தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. WHO 194 உறுப்பு நாடுகளால் 6 பிராந்தியங்களாக தொகுக்கப்பட்டுள்ளது.


• WHO உறுப்பு நாடுகளால் செலுத்தப்படும் உறுப்பினர் நிலுவைத் தொகை மற்றும் உறுப்பு நாடுகள் மற்றும் பிற கூட்டாளிகளிடமிருந்து தன்னார்வ பங்களிப்புகள் மூலம் நிதியுதவி பெறுகிறது. ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக கணக்கிடப்படும், உலக சுகாதார சபையில் ஒவ்வொரு 2 வருடங்களுக்கும் உறுப்பினர் நிலுவைத் தொகை மதிப்பிடப்படுகிறது. WHO-ன் மொத்த பட்ஜெட்டில் 20%-க்கும் குறைவானது உறுப்பினர் நிலுவைத் தொகையிலிருந்து வருகிறது. மீதமுள்ளவை தன்னார்வ பங்களிப்புகளிலிருந்து வருகிறது. பெரும்பாலும் உறுப்பு நாடுகள் மற்றும் பிற ஆதாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை அமைப்புகள், அரசுகளுக்கிடையேயான நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் பிற அடங்கும்.


• WHO-லிருந்து விலகுவதற்கான அர்ஜென்டினாவின் முடிவால் எழுப்பப்பட்ட மிக முக்கியமான கவலை, இது நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் நிதி நிலைத்தன்மையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கமாகும்.


• 2024ஆம் ஆண்டில் சுமார் $950 மில்லியன் (£760 மில்லியன்) வழங்கும், மொத்த பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 15% வரை, WHO-க்கு அமெரிக்கா மிகப்பெரிய பங்களிப்பாளராக உள்ளது.


• அமெரிக்கா வெளியேறுவது உலகளாவிய சுகாதார அமைப்பிற்கு கடினமான நிதி கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக, உலகளவில் வளர்ந்துவரும் சுகாதார நெருக்கடிகளின் நேரத்தில் இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.


• மறுபுறம், அர்ஜென்டினாவின் வருடாந்த பங்களிப்பு சுமார் $8 மில்லியனாக உள்ளது. மேலும், அதன் வெளியேற்றம் WHO-ன் நிதி நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. இருப்பினும், அதிபரின் உலகக் கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொள்ளும் தலைவர்களைக் கொண்ட பிற நாடுகளும் இதைப் பின்பற்றுமா என்பது பெரிய கவலை.


• அதிகமான நாடுகள், குறிப்பாக ஒரே மாதிரியான அரசியல் சித்தாந்தங்களைக் கொண்ட நாடுகள், WHO-வில் இருந்து வெளியேறத் தேர்வுசெய்தால், முதன்மை உலகளாவிய சுகாதார அமைப்பின் நம்பகத்தன்மையைத் தீவிரமான குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படலாம்.

 




Original article:

Share:

பிரதம மந்திரி வேலைவாய்ப்புப் பயிற்சித் திட்டம் பற்றிய முக்கிய விவரங்கள். -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• முதற்கட்டத்தில், 280 நிறுவனங்கள் 1.27 லட்சம் வேலைவாய்ப்புப் பயிற்சிகளை பட்டியலிட்டன. இந்த நிறுவனங்கள் 60,866 நபர்களுக்கு 82,077 வாய்ப்புகளை வழங்கின. ஜனவரி 29, 2025 நிலவரப்படி, 28,141 நபர்கள் வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டதாக பிப்ரவரி 3 அன்று பெருநிறுவன விவகார அமைச்சகம் (Ministry of Corporate Affairs) மக்களவையில் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


• முதல் கட்டத்தில் சுமார் 8,000 விண்ணப்பதாரர்கள் மட்டுமே வேலைவாய்ப்புப் பயிற்சித் திட்டத்தில் சேர்ந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் ஆதாரங்கள் தெரிவித்தன.


• இந்தத் திட்டத்தின் இரண்டாம் சுற்று ஜனவரி 9ஆம் தேதி தொடங்கியது. ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்கு முன்பு, கூட்டாளர் நிறுவனங்கள் புதிய பயிற்சி வாய்ப்புகளைச் சேர்த்தது. இது இன்னும் நிரப்பப்படாதவற்றைப் புதுப்பித்து வருகின்றன.


• இந்தத் திட்டத்தை மேலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக மாற்ற, அரசாங்கம் தெளிவான விவரங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் நிறுவனம், பயிற்சி மற்றும் சரியான இடம் பற்றிய தகவல்கள் அடங்கும். விண்ணப்பத்தாரர்கள் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் வகையில், இடம் நிகழ்நேர புவிக்கண்காணிப்பு (geotagging) முறையை கொண்டிருக்கும்.


• முன்னதாக, விண்ணப்பத்தாரர்களிடம் இந்த விவரங்கள் முன்கூட்டியே பெறவில்லை. திட்டத்தின் அடுத்த கட்டத்தில், இது மாறக்கூடும். முன்னதாக, விண்ணப்பத்தாரர்களுக்கு பயிற்சி விளக்கம் மட்டுமே காட்டப்பட்டது. விண்ணப்பச் செயல்பாட்டின் போது நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.


• மேலும், இரு முனைகளிலும் வயது வரம்பு தளர்த்தப்படும் (தற்போது, ​​21-24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தகுதியுடையவர்கள்). மேலும், விருந்தோம்பல், சுற்றுலா, சுகாதாரம் போன்ற துறைகளைச் சேர்ந்த சுமார் 49 நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.


உங்களுக்குத் தெரியுமா?


• ஐந்தாண்டுகளில் சிறந்த 500 நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சி வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், நிறுவனத்தின் CSR (கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு) நிதி மூலம் வழங்கப்படும் கூடுதல் ரூ. 500 தொகையுடன், நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) மூலம் இந்திய அரசாங்கத்தால் மாதத்திற்கு ரூ.4,500 வழங்கப்படும்.


• வேலைவாய்ப்புப் பயிற்சி போது தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு ஏற்படும் இதர செலவுகளை ஈடுகட்ட, நிகழ்வுகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 ஒரு முறை மானியமாக அரசாங்கம் வழங்கும்.


• 2 லட்சம் கோடி ரூபாய் ஒட்டுமொத்த செலவில் 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் திறமைக்கான பிரதமரின் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த வேலைவாய்ப்புப் பயிற்சி திட்டம் இருந்தது.


• இந்த நிதியாண்டிற்கான தொகுப்பு ரூ.12,000 கோடி ஒதுக்கப்பட்டது, இதில் ரூ.10,000 கோடி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திற்கு மூன்று வேலைவாய்ப்பு-ஊக்குவிப்பு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டது மற்றும் ரூ.2,000 கோடி வேலைவாய்ப்புப் பயிற்சித் திட்டத்திற்காக பெருநிறுவன விவகார அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டது.


• 2024-25ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில், வேலைவாய்ப்பு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.380 கோடியாக குறைக்கப்பட்டது. 2025-26ஆம் ஆண்டிற்கான, 59.77 கோடி மூலதனச் செலவு உட்பட, பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு திட்டத்திற்காக ரூ.10,831 கோடி வழங்கப்பட்டுள்ளது.




Original article:

Share:

தாய்மொழி தாழ்வு மனப்பான்மையில் நாம் ஏன் பெருமை கொள்கிறோம்? -ஷ்ரத்தா உபாத்யாய்

 மெக்காலேயின் மொழிபெயர்ப்பாளர் வகுப்பைச் சேர்ந்த குடிமக்கள் அல்லாத ஒரு புதிய குடிமக்கள் குழு இப்போது உருவாகியுள்ளது. இருப்பினும், அவர்கள் தங்கள் சொந்த அடையாளத்தை விளக்க அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும்.


ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ஆம் தேதி மொழியியல் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும், தாய்மொழிகளை ஊக்குவிக்கும் தினமாக அனுசரிக்கப்படுகிறது. என் மொழி செம்மையாக ஒலிப்பதை உறுதி செய்வதற்காக, என் அம்மா தனது பேச்சிலிருந்து கிராமப்புற உச்சரிப்பையும் நீக்கிவிட்டார். இதன் விளைவாக, நான் வளரும்போது, ​​நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இயற்கைக்கு மாறானதாக உணர்ந்தேன். பள்ளியில் நான் எழுதிய இந்தி முறையானது மற்றும் இயற்கைக்கு மாறானது. வாழ்க்கையில் வெற்றிபெற நான் ஆங்கிலம் கற்றுக்கொண்டேன். இதற்கிடையில், என் பாட்டியின் பேச்சுவழக்கு எனக்குள் பேசப்படாமல், என் உதடுகளுக்குள் ஊடுருவ முடியவில்லை. "ஆங்கிலப் பேச்சு" வகுப்புகளை விளம்பரப்படுத்தும் பதாகைகளால் எங்கள் நகரங்கள் நிரம்பியிருந்தன. ஆங்கில வழிப் பள்ளிகள் எங்கள் தாய்மொழிகளில் பேசுவதற்காக எங்களைத் தண்டித்தன. எனவே, நாங்கள் ஆங்கிலத்தின் சக்திக்கு அடிபணிந்தோம். வெற்றி மற்றும் லட்சியத்தின் மொழி அது என்று நம்பி, அதில் தேர்ச்சி பெற நாங்கள் கடுமையாக உழைத்தோம். அதன் இலக்கணத்தைக் கற்றுக்கொண்டு அதை எங்கள் ஒரு பகுதியாக மாற்றினோம்.


1835ஆம் ஆண்டில், “கல்வி குறித்த குறிப்புகள்” (Minute on Education) தனது அறிக்கையில் லார்ட் மெக்காலே, பிறப்பால் இந்தியர்கள் ஆனால் அவர்களின் ரசனை, கருத்துகள், ஒழுக்கம் மற்றும் அறிவு ஆகியவற்றில் ஆங்கிலேயர்களாக இருக்கும் ஒரு வகை மக்களை உருவாக்குவதற்காக அவர் வாதிட்டார். நாங்கள் அவர் நினைத்தது போலவே ஆனோம். மேற்கத்திய உலகிற்கு தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோராக சேவை செய்ய எங்கள் சுய அடையாளத்தையும் பாரம்பரிய அறிவையும் வர்த்தகம் செய்தோம். எங்கள் தாய்மொழிகள் தாழ்ந்ததாகக் கருதப்பட்டன. பேசப்பட்டால், அவை எழுதப்படாமல் இருந்தன. மேலும், தீவிரமான கற்றல் அல்லது அறிவுப் பகிர்விலிருந்து விலக்கப்பட்டன. ஆங்கிலம் நவீனத்துவத்தின் திறவுகோலாக மாறியது. நாங்கள் அதை நம்பியிருந்தோம்.


1968ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை "மும்மொழி கொள்கையை"  (three-language formula) அறிமுகப்படுத்தியது. முதல் மொழி, அல்லது முக்கிய பயிற்றுவிப்பு மொழி, தாய்மொழி அல்லது ஒரு பிராந்திய மொழியாக இருக்க வேண்டும் என்று கூறியது. இந்தக் கொள்கை இந்திய மொழிகளையும் இலக்கியங்களையும் தீவிரமாக வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. 1968-ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கை "இந்திய மொழிகள் மற்றும் இலக்கியங்களின் வளர்ச்சிக்கு" (energetic development of Indian languages and literature) அழைப்பு விடுத்தது. 2005-ஆம் ஆண்டின் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (National Curriculum Framework) மும்மொழி கொள்கையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்தது. தாய் மொழிகளில் கல்வி மற்றும் வளங்களுக்கான அணுகலை விரிவுபடுத்துவதன் அவசியத்தைப் பற்றி விவாதித்தது. 2020-ஆம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழி கொள்கையின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. இருப்பினும், இந்தக் கொள்கை செயல்படுத்தப்படும் விதம் மாநிலங்கள் மற்றும் கல்வி வாரியங்களுக்கு இடையில் வேறுபடுகிறது. பிராந்திய மொழிகளில் அறிவைப் பெறுவதற்கான தேடல் இன்னும் குறைவாகவே உள்ளது. இது நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு இடையே தொடர்ச்சியான இடைவெளியை உருவாக்கியுள்ளது. இது பிராந்திய மொழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் ஆங்கில வழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளியை விரிவுபடுத்துகிறது.


மொழிக் கொள்கை விவாதங்களைத் தவிர, சர்வதேச இளங்கலை (International Baccalaureate (IB)) மற்றும் கேம்பிரிட்ஜ் சர்வதேச இடைநிலைக் கல்வி பொதுச் சான்றிதழ் (Cambridge International General Certificate of Secondary Education (IGCSE)) உடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் வேறுபட்ட அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன. பெரும்பாலும் உயர் அடுக்குகளின் அடையாளங்களாகக் காணப்படும் இந்த சர்வதேச பள்ளிகள், உள்ளூர் மொழிகளின் கற்பிக்கும் தேவையைக் குறைத்துள்ளன. அந்தஸ்தின் அடையாளங்களாகக் கருதப்படும் சில சர்வதேசப் பள்ளிகள், மாணவர்கள் உள்ளூர் மொழியைக் கற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை நிறுத்திவிட்டன. இதன் விளைவாக, பல குழந்தைகள் எந்த இந்திய மொழியையும் அறியாமல் வளர்கிறார்கள். உதாரணமாக, குஜராத்தி பேசும் நகரத்தில் இந்தி பேசும் பெற்றோரைக் கொண்ட நான்கு வயது குழந்தைக்கு ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் மட்டுமே கற்பிக்கப்படலாம். இந்தக் குழந்தைகள் ஐரோப்பிய மொழிகளில் சரளமாகப் பேசுகிறார்கள். ஆனால், அவர்கள் அவற்றை எங்கே பயன்படுத்துவார்கள் என்று ஒருவர் யோசிக்கிறார். இதற்கிடையில், அவர்களின் பெற்றோர் இதைப் பற்றி பெருமைப்படுகிறார்கள், "என் குழந்தை ஆங்கிலம் பேச முடியும்" என்று பெருமையாகச் சொல்வதிலிருந்து, "என் குழந்தையால் எங்கள் தாய்மொழியைக் கூடப் பேச முடியாது" என்று கூறத் தொடங்குகிறார்கள். உள்ளூர் மொழிகளுக்கு வேலைகள் அல்லது சமூக அந்தஸ்து அடிப்படையில் எந்த மதிப்பும் இல்லை என்று அவர்கள் நம்புகிறார்கள். எனவே, அவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள்.


இது மெக்காலே விவரித்தது போல, வெறும் மொழிபெயர்ப்பாளர்கள் அல்லாத ஒரு புதிய மக்கள் குழுவை உருவாக்குகிறது. அதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் சொந்த அடையாளத்தைப் புரிந்துகொள்ள அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்களின் உலகளாவிய தன்மை அவர்களை உள்ளூர் கலாச்சாரத்திலிருந்து பிரித்து, அவர்களைச் சொந்தமற்றவர்களாக மாற்றுகிறது. சர்வதேசப் பள்ளிகளில் படிக்கும் நகரக் குழந்தைகளும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புறக் குழந்தைகளும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள மாட்டார்கள். ஏனெனில், அவர்களுக்கு இடையே எந்த இணைப்பு மொழிகளும் இல்லை. தாய்மொழிகளில் இலக்கியம் மற்றும் அறிவு பற்றிப் பேசுவது சாத்தியமற்றதாகத் தெரிகிறது. தாய்மொழி வெளிப்பாடுகள் அன்றாடப் பேச்சிலிருந்து மறைந்து வருகின்றன. அவை ஆங்கில வார்த்தைகளால் மாற்றப்படுகின்றன. தாய்மொழிகளில் உள்ள புத்தகங்கள் முக்கியமானவையாகவோ அல்லது லட்சியமாகவோ பார்க்கப்படுவதில்லை.


1999ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு பொது மாநாட்டில் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) வங்கதேசம் சர்வதேச தாய்மொழி தினத்தை (International Mother Language Day) முன்மொழிந்தது, 2002-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொது சபை அதை ஏற்றுக்கொண்டது. இந்த நாள் மொழி பன்முகத்தன்மையை ஊக்குவிக்கிறது மற்றும் சிறந்த புரிதல், ஈடுபாடு மற்றும் சிந்தனை திறன்களுக்காக குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் கற்கும் உரிமையை ஆதரிக்கிறது. முறையான கல்வியில் சேர்க்கப்படாதபோது எத்தனை மொழிகள் அடக்குமுறையை எதிர்கொள்கின்றன என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது. நவீன கல்வி, தாய்மார்களையும் தாய்மொழிகளையும் குழந்தைகளுக்கு முறையாக கல்வி கற்பிக்க இயலாதவர்களாக கருதி, அவர்களை ஓரங்கட்டுகிறது.


பன்னிரண்டாம் வகுப்பு NCERT ஆங்கில பாடப்புத்தகத்தில் அல்போன்ஸ் டாடெட் எழுதிய The Last Lesson என்ற கதை ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பிக்கிறது. இது பிராங்கோ-பிரஷியன் போரின் போது அமைக்கப்பட்ட கதை, தாய்மொழியின் முக்கியத்துவத்தைப் பற்றி கதாநாயகனின் சக்திவாய்ந்த உரையைக் கொண்டுள்ளது. அது "...ஒரு மக்கள் அடிமைப்படுத்தப்பட்டால், அவர்கள் தங்கள் மொழியை உறுதியாகப் பிடித்திருக்கும் வரை, அது அவர்களின் சிறைச்சாலையின் திறவுகோலைப் போல" என்பது. நமது திறவுகோலை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.


உபாத்யாய் டெல்லியைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்




Original article:

Share:

இந்தியாவின் அனல் மின் உமிழ்வை ஒழுங்குபடுத்தும் பயணம் -அசோக் ஸ்ரீனிவாஸ்,மரியா சிராயில்

 அனல்மின் நிலையங்களுக்கு அருகில் உள்ள மக்கள் இன்னும் மாசுபட்ட காற்றை சுவாசிக்கும் வேளையில், மின் நுகர்வோர் பயன்படுத்தாத உபகரணங்களுக்கு பணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


டிசம்பர் 30, 2024 அன்று, இந்தியாவின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (Environment Ministry (MoEFCC)) சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளைத் திருத்துவதற்கான ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அனல் மின் நிலையங்கள் சல்பர்-டை-ஆக்சைடு (SO2) உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்தது. எந்த விளக்கமும் இல்லாமல் காலக்கெடு மூன்று ஆண்டுகள் தள்ளி வைக்கப்பட்டது. முன்னதாக, 20 ஜிகாவாட் (gigawatts (GW)) அனல் மின் நிலையங்களுக்கான காலக்கெடு டிசம்பர் 31, 2024 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த ஆலைகள் அடர்த்தியான மக்கள்தொகைக் கொண்ட பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளன. 


டிசம்பர் 2015-ல், பொது ஆலோசனைகளுக்குப் பிறகு, இந்திய அனல் மின் நிலையங்களுக்கான புதிய உமிழ்வு விதிமுறைகளை வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அமைத்தது. காலக்கெடு இருந்தபோதிலும், அனைத்து அனல் மின் நிலையங்களும் டிசம்பர் 2017-க்குள் அவற்றைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


இந்த அறிவிப்பு துகள்கள் உமிழ்வுகளுக்கான நடைமுறை விதிமுறைகளை கடுமையாக்கியது மற்றும் பிற உமிழ்வுகளுக்கான விதிமுறைகளையும் அறிமுகப்படுத்தியது. மேலும், முதல் முறையாக SO2 உள்ளிட்ட பிற உமிழ்வுகளுக்கான விதிகளையும் அமைத்தது. இந்த விதிமுறைகள் ஆஸ்திரேலியா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளதைப் போல இருந்தன.




ஒரு விவாதத்தின் உருமாற்றம்


இந்திய நிலக்கரியை மற்ற வகை நிலக்கரிகளுடன் ஒப்பிடும்போது குறைந்த சல்பர் உள்ளடக்கம் உள்ளது. இது இந்திய அனல் மின் நிலையங்கள் சல்பர்-டை-ஆக்சைடு (sulphur dioxide (SO2)) உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்வதை எளிதாக்கியிருக்க வேண்டும். இருப்பினும், இந்திய நிலக்கரியைப் பயன்படுத்தி இந்த விதிமுறைகளை பூர்த்தி செய்வதற்கான சிறந்த வழிகளைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தவில்லை. அதற்குப் பதிலாக, விவாதம் ஃப்ளூ கேஸ் டெசல்பூரைசேஷன் (flue gas desulphurisation (FGD)) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உள்ள சவால்களுக்கு மாறியது. முக்கியமாக, இந்த தொழில்நுட்பம் அதிக நிலக்கரியிலிருந்து சல்பரை அகற்றப் பயன்படுகிறது. அதே நேரத்தில், மற்றொரு விவாதம் சல்பர்-டை-ஆக்சைடு உமிழ்வு விதிமுறைகளை கேள்விக்குள்ளாக்கத் தொடங்கியது. அரசாங்கத்தின் பல்வேறு பகுதிகள் இந்த விவாதத்தை வழிநடத்தின. ஒன்றிய மின்சார ஆணையம் (Central Electricity Authority (CEA)) 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கட்டுரைகளை வெளியிட்டது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகளின் அவசியத்தை இந்தக் கட்டுரைகள் கேள்வி எழுப்பின. மேலும், 2035 வரை அவற்றை முழுமையாக செயல்படுத்துவதை தாமதப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தன. 2022ஆம் ஆண்டில், ஒன்றிய மின்சார ஆணையம் IIT டெல்லியை FGD-களை ஆய்வு செய்யக் கேட்டது. FGD-கள் காற்றின் தரத்தை மேம்படுத்த உதவுகின்றன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், FGD-கள் விலை உயர்ந்தவை, விநியோகச் சங்கிலி சிக்கல்கள் மற்றும் நிலக்கரி பயன்பாட்டை அதிகரிப்பதால் நிறுவலை தாமதப்படுத்த பரிந்துரைத்தது. இது அதிக பசுமை இல்ல வாயு (greenhouse gas emissions) வெளியேற்றத்திற்கு வழிவகுக்கிறது.


2024-ஆம் ஆண்டில், நிதி ஆயோக், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழு (Council of Scientific & Industrial Research (CSIR)) தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் இந்தப் பிரச்சினையை ஆய்வு செய்யக் கேட்டுக் கொண்டது. இந்தியாவில் நல்ல காற்றின் தரத்தை அடைவதற்கு சல்பர்-டை-ஆக்சைடு (SO2) உமிழ்வு விதிமுறைகள் முக்கியமில்லை என்று ஆய்வு முடிவு செய்துள்ளது. அதற்குப் பதிலாக, துகள் உமிழ்வைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. SO2 உமிழ்வுகளிலிருந்து இரண்டாம் நிலை வளிமக்கரைசல் (ஏரோசல்) உருவாக்கம் பற்றிய விவாதமும் இருந்தது. இந்திய நிலக்கரி ஒப்பீட்டளவில் குறைந்த சல்பரை கொண்டிருந்தாலும், சல்பர்-டை-ஆக்சைடு உமிழ்வுகளிலிருந்து இரண்டாம் நிலை வளிமக்கரைசல்  உருவாவதற்கான விதிமுறைகளைக் கொண்டிருப்பதற்கான ஒரு காரணமாக விவாதத்தின் ஒரு பகுதி கவனம் செலுத்தியது. இந்தப் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்து, முதல் விதிமுறைகளை அறிவிப்பதற்கு முன் ஒரு உடன்பாட்டை உருவாக்குவதற்குப் பதிலாக, பத்தாண்டுகளுக்கு மேலாக பிறகும் விவாதம் வலுவாகத் தொடர்கிறது.


வெவ்வேறு காலக்கெடு


இந்த விவாதங்களின்போது, வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (Environment Ministry (MoEFCC)) சில விதிகளை பலவீனப்படுத்தி, காலக்கெடுவை பல முறை நீட்டித்தது. டிசம்பர் 2024 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு நான்காவது நீட்டிப்பாகும். இதன் விளைவாக, வெவ்வேறு இடங்களில் உள்ள வெப்ப மின் நிலையங்களுக்கும் வெவ்வேறு வகையான உமிழ்வுகளுக்கும் வெவ்வேறு காலக்கெடு உள்ளன. சல்பர்-டை-ஆக்சைடு உமிழ்வு காலக்கெடு மற்ற உமிழ்வுகளுக்கான காலக்கெடுவை விட மிகவும் தாமதமானது.


உண்மையில், துகள் உமிழ்வுகள் உட்பட பிற உமிழ்வு தரநிலைகளுக்கான இறுதி காலக்கெடு டிசம்பர் 31, 2024 வரை இருந்தது. இந்த உமிழ்வுகள் அனைத்து அரசு நிறுவனங்களாலும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. பல ஆலைகள் டிசம்பர் 31, 2022 அல்லது 2023-க்குள் இணைந்து செயல்பட வேண்டியிருந்தது. இருப்பினும், இந்த விதிகளை ஆலைகள் பின்பற்றுகின்றனவா என்பதை சரிபார்க்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் அதை செய்கின்றனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்தத் தகவலை வழங்கும் எந்தவொரு பொது ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.


நுகர்வோர் செலுத்துகிறார்


MoEFCC-ன் அறிவிப்புகளில் மாறிவரும் காலக்கெடு காரணமாக, பல அனல் மின் நிலையங்கள் ஏற்கனவே ஃப்ளூ கேஸ் டெசல்பூரைசேஷன்களை (flue gas desulphurisation (FGD)) நிறுவ ஒப்பந்தம் செய்யத் தொடங்கியுள்ளன. இருப்பினும், சமீபத்திய அறிவிப்புக்கு முன்னர் அசல் காலக்கெடுவை பூர்த்தி செய்யும் அளவுக்கு இது விரைவாக நடக்கவில்லை. FGD-கள் மற்றும் பிற மாசுக் கட்டுப்பாட்டு உபகரணங்களை நிறுவுவதற்கான செலவுகளை மின்சார நுகர்வோருக்கு வழங்க அனுமதிக்கும் விதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மின்சார ஒழுங்குமுறை அதிகாரிகள் இதைச் சாத்தியமாக்கினர். உமிழ்வு விதிமுறைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டாலும் இது நடக்கும். எனவே, செலவு அனல் மின் நிலையங்களுக்கு ஒரு சுமையாக இருக்காது.


இதன் விளைவாக, SO2 உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்வதற்கான ஆரம்ப காலக்கெடு இப்போது டிசம்பர் 31, 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 22 GW வெப்ப மின் நிலையங்கள் ஏற்கனவே ஃப்ளூ கேஸ் டெசல்பூரைசேஷன்களை நிறுவியுள்ளன. கூடுதலாக, 102 GW வெப்ப திறன், மொத்தத்தில் இது 50% ஆகும். FGD-களை அமைப்பதற்கான மேம்பட்ட நிலைகளில் உள்ளது.


புதிய காலக்கெடுவைக் கருத்தில் கொண்டு, ஃப்ளூ கேஸ் டெசல்பூரைசேஷன்களைக் கொண்ட ஆலைகள் அவற்றை இயக்காமல் போக வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், இது உற்பத்தி செலவை அதிகரிக்கும். எனவே அவற்றை விருப்பமான ஜெனரேட்டர்களின் பட்டியலில் இருந்து வெளியேற்ற வாய்ப்புள்ளது. இதன் விளைவாக, மின்சார நுகர்வோர் பயன்படுத்தப்படாத உபகரணங்களுக்கு பணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும். இதற்கிடையில், அனல் மின் நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கும் அல்லது அதற்கு மேலும் சுத்தமான காற்றை அனுபவிக்க இயலாது.


ஒருவேளை இந்த நிலைமை ஒரு நாள் தீர்க்கப்படலாம். ஆனால் செலவுகள் அதிகமாக இருக்கும். இந்த செலவுகளில் நிறுவன, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் நிதி தாக்கங்களும் அடங்கும். பீர்பாலின் கட்டுக்கதையைப்  போல் இல்லாமல், இந்த அனுபவத்திலிருந்து ஏதேனும் பயனுள்ள பாடங்கள் கற்றுக்கொள்ளப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.


அசோக் ஸ்ரீனிவாஸ் மற்றும் மரியா சிராயில் பிரயாஸ் (எனர்ஜி குரூப்) உடன் உள்ளனர்




Original article:

Share:

மதிப்பீட்டை எளிதாக்குங்கள். -கௌரவ் மெஹந்திரட்டா

 வருமான வரி முறையீடுகளை சரியான நேரத்தில் தீர்ப்பது ஒரு முக்கியமான கோரிக்கையாகும்.


நிதியமைச்சர், தனது 2025-26 பட்ஜெட் உரையில், புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவித்தார். பட்ஜெட் உரையானது தெளிவாகவும் நேரடியாகவும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். எளிமைப்படுத்தல் பயிற்சியிலிருந்து தொழில்துறையின் கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்ள KPMG நிறுவனம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது .


கணக்கெடுப்பு முடிவுகள் வரி செலுத்துவோரின் சில சுவாரஸ்யமான எதிர்பார்ப்புகளை எடுத்துக்காட்டுகின்றன. கவனம் செலுத்த வேண்டிய முதல் மூன்று பகுதிகள் பற்றி கேட்டபோது, ​​பதிலளித்தவர்களில் 84 சதவீதம் பேர் மதிப்பீடுகள் (assessments) மற்றும் சிக்கல்களின் (disputes) பகுதியில் எளிமைப்படுத்தலை தங்கள் சிறந்த தேர்வுகளில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளனர்.


பிரதிவாதிகளில் கிட்டத்தட்ட 99% பேர், மேல்முறையீட்டு ஆணையர் நிலையில் (Appellate Commissioner level (CIT(A))) நிலுவையில் உள்ள மேல்முறையீடுகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் ஒரு கட்டாய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று விரும்புவதாக கணக்கெடுப்பு காட்டுகிறது.


CIT(A) மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை காரணமாக இந்தக் கருத்து தோன்றியதாகத் தெரிகிறது. நிதிக்கான நிலைக்குழுவின் (டிசம்பர் 2024) சமீபத்திய அறிக்கையின்படி, சர்ச்சைக்குரிய கோரிக்கைகள் ₹31.36 லட்சம் கோடி ($385 பில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வழக்குகளைத் தீர்த்து குறைப்பதற்கான எந்தவொரு அமைப்பும் அரசாங்கத்திற்கும் வரி செலுத்துவோருக்கும் பயனளிக்கும்.


கூடுதலாக, வரி செலுத்துவோருக்கு முன்கூட்டியே தெளிவுபடுத்துவது நிச்சயமாக பிழைகள் மற்றும் வழக்குகளைக் குறைக்க உதவும். பதிலளித்தவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD) போன்ற கருத்துரைகள் நிலைகள் பற்றிய தெளிவை வழங்குவதில் பயனளிக்கும் என்று நம்புகின்றனர்.


வழக்கின் முக்கியப் பகுதியான பரிமாற்ற விலை நிர்ணயம் குறித்து, பதிலளித்தவர்கள், பரிமாற்ற விலை நிர்ணயம் (transfer pricing) பாதுகாப்பான துறைமுக விதிகளை மிகவும் பயனுள்ளதாக மாற்றுவதற்கு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கருதினர். பாதுகாப்பான துறைமுக விதிகளின் நோக்கத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை நிதி அமைச்சர் அறிவித்தார். இது பதிலளித்தவர்களின் இந்த கோரிக்கையை நிவர்த்தி செய்யலாம்.


சேவைகளின் டிஜிட்டல்மயமாக்கல் (Digitisation of services)


அதிக வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பொறுப்புத் தன்மை வழங்கும் நோக்கத்துடன், அரசாங்கம் முகமற்ற மதிப்பீடு மற்றும் மேல்முறையீட்டு செயல்முறையை அறிமுகப்படுத்தியது. கருத்துக்கணிப்பு முடிவுகள், பதிலளித்தவர்கள் இந்த தொடர்பு முறைக்கு ஆதரவாக இருப்பதாகவும், 5 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே ஆஃப்லைன் பயன்முறைக்கு திரும்ப விரும்புகின்றனர். இது அரசாங்கத்திற்கு ஒரு சிறந்த செய்தியாகும். இருப்பினும், பதிலளித்தவர்களில் 60 சதவீதம் பேர் முகமற்ற செயல்பாட்டில் மேலும் முன்னேற்றங்களைக் காண விரும்புவதாக உணர்கிறார்கள்.


மேல்முறையீடுகளைப் பொறுத்தவரை, பதிலளித்தவர்களில் 61 சதவீதம் பேர் முதல் மேல்முறையீட்டு செயல்முறை (CIT(A)) முகமற்ற பயன்முறையிலிருந்து நகர்த்தப்பட வேண்டும் என்று கருதுகின்றனர்.


2024-25 பட்ஜெட்டில் சில TDS விதிகளை அரசாங்கம் பகுப்பாய்வு செய்திருந்தாலும், பதிலளித்தவர்களில் சுமார் 64 சதவீதம் பேர் TDS விதிகளை மேலும் எளிமைப்படுத்த வேண்டும் என்று நம்புகின்றனர். TDS கிரெடிட்களை அனுமதிப்பது மற்றும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் TDS சான்றிதழ்களை வழங்குவதற்கான கட்டாயத் தேவையை நிவர்த்தி செய்வது குறித்தும் எளிமைப்படுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.


இந்த முறை, நிதியமைச்சர் TDS மற்றும் TCS விதிகளுக்கான சில இணக்கங்களைத் தளர்த்தியுள்ளார்.


சுவாரஸ்யமாக, பதிலளித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் தற்போதைய நிறுவன வரி விகிதங்களில் திருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும், அவர்களில் 58% பேர் மேலும் குறைப்புகளை விரும்புகிறார்கள்.


தாமதமான/திருத்தப்பட்ட வருமானங்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவும் கவலைக்குரிய பகுதியாகும். குறிப்பிட்ட காலகட்டத்தில், அரசாங்கம் வரி செலுத்துவதற்கான காலக்கெடுவைக் குறைத்துள்ளது. மேலும், தற்போது அதைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவானது ஆண்டு முடிவிற்குப் பிறகு டிசம்பர் 31-ல் உள்ளது. இது, குறிப்பாக பெருநிறுவனங்கள் மற்றும் பரிமாற்ற விலைத் தேவைகளுக்கு இணங்க வேண்டியவர்களுக்கு, ஏதேனும் பிழைகளை நிவர்த்தி செய்வதற்கு அல்லது தாமதமான இணக்கங்களைச் செய்வதற்கு மிகக் குறைந்த நேரத்தையே மிச்சப்படுத்துகிறது. இந்த விஷயத்தில், பதிலளித்தவர்களில் 82 சதவீதம் பேர் காலக்கெடுவை தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டின் மார்ச் 31 வரை நீட்டிக்க வேண்டும் என்று நம்புகிறார்கள்.


முந்தைய மற்றும் தற்போதைய பட்ஜெட்டுகளில் சில விதிகளை பகுத்தறிவு செய்வதன் மூலம் அரசாங்கம் முதல் படியை எடுத்துள்ளது. இருப்பினும், சட்டத்தை எளிமைப்படுத்துவதற்கான அனைத்து எதிர்பார்ப்புகளையும் உடனடியாக நிவர்த்தி செய்ய முடியாது என்பதை வரி செலுத்துவோர் புரிந்து கொள்ள வேண்டும். வரி வருவாயைத் திரட்டுவதையும் சட்டத்தை எளிமைப்படுத்துவதையும் அரசாங்கம் சமநிலைப்படுத்த வேண்டும்.


மெஹந்திரட்டா இந்தியாவில் KPMG-ல் ஒரு கூட்டாளர் மற்றும் தலைவர் (விண்வெளி மற்றும் பாதுகாப்பு). இந்தத் தகவலில் பட்டயக் கணக்காளர்கள் மனன் அஸ்ரி மற்றும் சித்தாந்த் கோயல் ஆகியோரின் உள்ளீடுகள் அடங்கும்.




Original article:

Share:

ஏன் வட துருவத்தில் வெப்பநிலை சராசரியைவிட 20°C அதிகரித்துள்ளது? -அலிந்த் சவுகான்

 1979 முதல், ஆர்க்டிக் உலக சராசரியைவிட நான்கு மடங்கு வேகமாக வெப்பமடைந்துள்ளது. இது ஒரு பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இப்பகுதி உலகின் பிற பகுதிகளுக்கு குளிர்சாதன பெட்டியாக செயல்படுகிறது. இது பூமியை குளிர்விக்க உதவுகிறது.


வட துருவத்தில் வெப்பநிலையானது சராசரியைவிட 20 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக உயர்ந்துள்ள்ளது. பிப்ரவரி 2 அன்று பனி உருகுவதற்கான வரம்பைக் கடந்துள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி, நார்வேயின் ஸ்வால்பார்டின் வடக்கில் வெப்பநிலையானது 1991–2020 ஆண்டின் சராசரியை விட 18 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. அடுத்த நாள், வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரித்தது.


பின்லாந்து வானிலை ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானி மிகா ரண்டனென், தி கார்டியனிடம், "இது மிகவும் தீவிரமான குளிர்கால வெப்பமயமாதல் நிகழ்வாகும். இது இதுவரை காணப்பட்ட வெப்பநிலையைவிட மிகக் கடுமையானதாக இருக்காது. ஆனால், இது இன்னும் ஆர்க்டிக்கில் நடக்கக்கூடியவற்றின் மேல் விளிம்பில் உள்ளது" என்று கூறினார்.


1979 முதல், ஆர்க்டிக் உலக சராசரியைவிட நான்கு மடங்கு வேகமாக வெப்பமடைந்துள்ளது. இது ஒரு கவலைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்தப் பகுதி பூமிக்கு குளிர்சாதன பெட்டியாக செயல்படுவதுடன், பூமியை குளிர்விக்க உதவுகிறது. இந்த விகிதத்தில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்தால், அது கடுமையான உலகளாவிய தாக்கங்களை ஏற்படுத்தும். இந்த தாக்கங்களில் கடல் மட்ட உயர்வு மற்றும் வானிலை முறைகளில் இடையூறுகள் ஆகியவை அடங்கும்.


வட துருவம் ஏன் அதிக வெப்பநிலையை அனுபவித்தது?


நவம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும் துருவ குளிர்காலத்தின் (polar winter) ஆழத்தில் இப்பகுதி வழக்கத்திற்கு மாறாக லேசான வெப்பநிலையை அனுபவிக்கிறது. இது ஐஸ்லாந்தில் உள்ள ஆழமான குறைந்த அழுத்த அமைப்பு காரணமாகும். குறைந்த அழுத்த அமைப்பு என்பது அருகிலுள்ள பகுதிகளைவிட வளிமண்டல அழுத்தம் குறைவாக இருக்கும் ஒரு பகுதியாகும். இந்த அமைப்பு குறைந்த அட்சரேகைகளிலிருந்து வெப்பமான காற்றை இப்பகுதிக்குள் நுழைய அனுமதித்து, இப்பகுதிக்கு வெப்பத்தைக் கொண்டு வந்தது.


வடகிழக்கு அட்லாண்டிக்கில் மிகவும் வெப்பமான கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றொரு காரணியாகும். இது காற்றினால் இயக்கப்படும் வெப்பமயமாதலை தீவிரப்படுத்தியது. இதன் விளைவாக, பிப்ரவரி 2 அன்று வட துருவத்தில் தினசரி சராசரி வெப்பநிலை சராசரியை விட 20 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தது. முழுமையான வெப்பநிலை -1 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தது.


ஆர்க்டிக் ஏன் உலக சராசரியை விட வேகமாக வெப்பமடைந்தது?


உலக வெப்பநிலை 1850-1900 ஆண்டின் அடிப்படையுடன் ஒப்பிடுகையில் சுமார் 1.3 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த வெப்பநிலை உயர்வு பூமி முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை. உதாரணமாக, ஆர்க்டிக் 1970-ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இருந்து உலகளாவிய சராசரியைவிட 3.8 மடங்கு வேகமாக வெப்பமடைந்துள்ளது, என்று 2022 ஆய்வின்படி குறிப்பிட்டுள்ளது.


ஆர்க்டிக்கின் விரைவான வெப்பமயமாதலுக்குப் பின்னால் பல காரணிகள் உள்ளன. ஒரு முக்கிய காரணி ஆல்பிடோ விளைவு (albedo effect), இது ஒரு மேற்பரப்பு எவ்வளவு சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது என்பதைக் குறிக்கிறது. கடல் பனி துருவப் பகுதிகளில் வெப்பநிலையைக் குறைவாக வைத்திருக்க உதவுகிறது. அதன் பிரகாசமான, வெள்ளை மேற்பரப்பு திரவ நீரை விட அதிக சூரிய ஒளியை விண்வெளியில் பிரதிபலிக்கிறது. ஆர்க்டிக்கில் உள்ள பனி உருகும்போது, ​​அதிக நிலம் அல்லது நீர் சூரியனுக்கு வெளிப்படும். இது அதிக வெப்பத்தை உறிஞ்சுவதற்கு வழிவகுக்கிறது. இதனால், அதிக வெப்பநிலைக்கு வழிவகுக்கிறது.


ஆர்க்டிக் போன்ற உயர் அட்சரேகைகளில் வெப்பச்சலனம் இல்லாதது மற்றொரு காரணமாகும். பூமியின் சூடான மேற்பரப்பு தரைக்கு அருகில் உள்ள காற்றுக்கு வெப்பம் கிடைக்கும் போது வெப்பச்சலனம் ஏற்படுகிறது. வெப்பச்சலனத்தில், ஆர்க்டிக்கைவிட அதிக சூரிய ஒளி பூமியின் மேற்பரப்பை அடைகிறது. இது வலுவான வெப்பச்சலனத்திற்கு வழிவகுக்கிறது. இது சூடான காற்று உயர காரணமாகிறது. உயரும் காற்று வளிமண்டலம் முழுவதும் வெப்பத்தை விநியோகிக்க உதவுகிறது.


இருப்பினும், ஆர்க்டிக்கில், வெப்பச்சலனம் பலவீனமாக உள்ளது. இதன் விளைவாக, பசுமை இல்ல வாயுக்களிலிருந்து வரும் கூடுதல் வெப்பச்சலனம் செங்குத்தாக கலக்க முடியாது. இதனால், வெப்பம் மேற்பரப்புக்கு அருகில் குவிந்துள்ளது.




Original article:

Share:

சிந்து நதி அமைப்பு மற்றும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் பற்றிய விவாதம். -அபினவ் ராய்

 சிந்து மற்றும் அதன் துணை நதிகளின் நீரின் விநியோகத்தை நிர்ணயிப்பதற்காக 1960 செப்டம்பர் 19 அன்று சிந்து நதிநீர் ஒப்பந்தம் (Indus Water Treaty) இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளால் கையெழுத்தானது. ஆனால், நதி அமைப்பு என்றால் என்ன?, எந்த நதிகள் சிந்து நதி அமைப்பை உருவாக்குகின்றன?


64 ஆண்டுகள் பழமையான சிந்து நதிநீர் ஒப்பந்தம் (Indus Water Treaty) மீண்டும் செய்திகளில் வந்துள்ளது. ஏனெனில், இந்தியா இந்த ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது. மறுபுறம், ஜம்மு & காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் இரண்டு நீர்மின் திட்டங்களின் (hydroelectric projects (HEP)) வடிவமைப்பு அம்சங்கள் குறித்து பாகிஸ்தான் ஆட்சேபனைகளை எழுப்புகிறது. இந்த திட்டங்கள் ஜீலத்தின் துணை நதியான கிஷெங்கங்கா நதியில் அமைந்துள்ள கிஷெங்கங்கா நீர்மின் திட்டங்கள் (HEP) மற்றும் செனாப் நதியில் அமைந்துள்ள Ratle நீர்மின் திட்டங்கள் (HEP) ஆகும்.


சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைப் புரிந்து கொள்ள, சிந்து நதி அமைப்பைப் புரிந்துகொள்வது முக்கியம். இதில், அதன் தோற்றம், பாதை, துணை நதிகள் மற்றும் பல அடங்கும். முதலில், தற்போது இருநாடுகளின் ஒப்பந்தத்தின் சுருக்கமான கண்ணோட்டத்தை பார்ப்போம்.


சிந்து நதிநீர் ஒப்பந்தம் (Indus Water Treaty)


சிந்து மற்றும் அதன் துணை நதிகளின் நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்தியாவும் பாகிஸ்தானும் செப்டம்பர் 19, 1960 அன்று சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் (Indus Water Treaty) கையெழுத்திட்டன. இதில், கராச்சியில் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், அப்போதைய பாகிஸ்தான் அதிபர் அயூப் கானும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தான் கீழ் கரையோர நாடாக மாறியது. இதன் பொருள் சிந்து நதியானது பாகிஸ்தானில் முடிகிறது. இந்தியாவது, மேல் கரையோர நாடாக மாறியது. இதன் பொருள், இந்த நதி இந்தியாவில் உற்பத்தியாகிறது. இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு மூன்று கிழக்கு ஆறுகள் மீது பிரத்யேக உரிமைகளை வழங்கியது. அவை ரவி, சட்லஜ் மற்றும் பியாஸ் போன்றவை ஆகும். இந்த ஆறுகள் சுமார் 33 மில்லியன் ஏக்கர் அடி (MAF) தண்ணீரை வழங்குகின்றன. இது மொத்த சிந்து நதி அமைப்பில் சுமார் 20% ஆகும். சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய மூன்று மேற்கு நதிகளின் மீது பாகிஸ்தானுக்கு கட்டுப்பாடு கிடைத்தது. இந்த ஆறுகள் சுமார் 135 MAF தண்ணீரை வழங்குகின்றன. இது மொத்தத்தில் 80% ஆகும்.


இருப்பினும், குறிப்பிட்ட உள்நாட்டு, நுகர்வு அல்லாத மற்றும் விவசாய நோக்கங்களுக்காக மேற்கில் ஓடும் நதிகளின் நீரை இந்தியா பயன்படுத்தலாம். இதன் தொடர்ச்சியாக வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டிற்கான குறிப்பிட்ட அளவுகோல்களுக்கு உட்பட்டு, நதியின் ரன்-ஆஃப்-தி-ரிவர் (run-of-the-river (RoR)) திட்டங்களின் மூலம் நீர்மின்சாரத்தை உருவாக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது.


இந்த ஒப்பந்தத்தின் பிரிவு IX தகராறு தீர்க்கும் செயல்முறையை கோடிட்டுக் காட்டுகிறது. இது மூன்று அடுக்கு அமைப்பாக உள்ளது. முதலாவதாக, இரு நாடுகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய நிரந்தர சிந்து ஆணையம் (Permanent Indus Commission (PIC)) மூலம் சர்ச்சைகள் தீர்க்கப்படுகின்றன. மேலும் இதற்கு பிரச்சனைத் தீர்க்கப்படாவிட்டால், இந்த விஷயம் உலக வங்கியால் நியமிக்கப்பட்ட நடுநிலை நிபுணரிடம் பரிந்துரைக்கப்படும். கடைசி முயற்சியாக, தகராறுகளை நிரந்தர நடுவர் நீதிமன்றத்திற்கு (Permanent Court of Arbitration) எடுத்துச் செல்லலாம்.


சிந்து நதி அமைப்பு (Indus River system)


ஒரு நதியும் அதன் துணை நதிகளும் சேர்ந்து ஒரு நதி அமைப்பை உருவாக்குகின்றன. அதேபோல், சிந்து நதி அமைப்பு ஆறு ஆறுகளைக் கொண்டுள்ளது. அவை சிந்து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் ஆகியவை அடங்கும். சிந்து மற்றும் சட்லஜ் ஆகியவை முன்னோடி ஆறுகள் ஆகும். அதாவது, அவை இமயமலை உருவாகுவதற்கு முன்பே இருந்துள்ளன. இந்த ஆறுகள் திபெத்தில் உருவாகி ஆழமான பள்ளத்தாக்குகளை குறுக்கே வெட்டுகின்றன. மற்ற நான்கு ஆறுகளான ஜீலம், செனாப், ரவி மற்றும் பியாஸ் போன்றவை இந்தியாவில் உருவாகின்றன. 


சிந்து நதி நான்கு நாடுகளை உள்ளடக்கியது. அவை சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்றவை ஆகும். இந்தியாவில், சிந்து நதி படுகை லடாக் மற்றும் ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள், சண்டிகர் மற்றும் இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் வழியாக பரவியுள்ளது. படுகையின் மொத்த வடிகால் பரப்பளவு சுமார் 3,21,289 சதுர கி.மீ ஆகும். இது இந்தியாவின் மொத்த புவியியல் பரப்பளவில் கிட்டத்தட்ட 9.8% ஆகும்.


சிந்து நதி திபெத்தில் உள்ள கைலாஷ் என்ற டிரான்ஸ்-இமயமலைத் தொடரில், மானசரோவர் ஏரிக்கு அருகில் தொடங்குகிறது. இது 'சிங்கி காம்பன்' (Singi Khamban) அல்லது அங்கு சிங்கத்தின் வாய் என்று அழைக்கப்படுகிறது. இந்த நதி மேற்கு நோக்கி பாய்ந்து லடாக்கில் உள்ள டெம்சோக்கில் (Demchok) இந்தியாவுக்குள் நுழைகிறது. இந்தியாவில், சிந்து நதி சுமார் 1,114 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இது லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லடாக் மற்றும் காரகோரம் மலைத்தொடர்களுக்கு இடையே பாய்கிறது.


சிந்து நதியின் முக்கிய வலது கரை துணை நதிகள் ஷியோக், ஷிகார் மற்றும் கில்கிட் ஆகும். ஷியோக் நதி ரிமோ பனிப்பாறையிலிருந்து உருவாகிறது. சிந்து நதியின் இடது கரை துணை நதிகள் ஜஸ்கர் மற்றும் ஹன்லே ஆகும். இந்த நதி மொத்தம் 2,880 கிலோமீட்டர் தூரம் பாய்கிறது. இது இறுதியில் பாகிஸ்தானின் கராச்சிக்கு அருகில் அரேபிய கடலில் கலக்கிறது. சிந்து நதி டால்பின் ஒரு அழிந்து வரும் இனமாகும். சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (International Union for Conservation of Nature (IUCN)) சிவப்பு பட்டியலின் படி, இந்த இனம் முக்கியமாக சிந்து நதியில் காணப்படுகிறது.


ஜீலம் நதி 252 கி.மீ நீளம் கொண்டது. இது பிர் பாஞ்சல் எல்லைக்கு அருகிலுள்ள வெரினாக்கில் உள்ள ஒரு நீரூற்றில் இருந்து உருவாகிறது. இந்த நதி பாகிஸ்தானுக்குள் நுழைவதற்கு முன்பு ஸ்ரீநகரில் உள்ள வுலர் ஏரி வழியாக பாய்கிறது. பாகிஸ்தானில், இது ஜாங் என்ற இடத்திற்கு அருகில் செனாப் நதியில் இணைகிறது. செனாப் நதி சிந்து நதியின் மிகப்பெரிய துணை நதியாகும். இந்தியாவில், இது 1,180 கி.மீ நீளம் கொண்டது. இது இமாச்சலப் பிரதேசத்தின் கீலாங்கில் உள்ள தண்டியில் சந்திரா மற்றும் பாகா என்ற இரண்டு நதிகளின் சங்கமத்தால் உருவாகிறது.


கிழக்கு ஆறுகள் 


ரவி நதி 95 கி.மீ நீளம் கொண்டது. இது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ரோஹ்தாங் கணவாய்க்கு (Rohtang Pass) அருகிலுள்ள குலு மலைகளிலிருந்து உருவாகிறது. இது பாகிஸ்தானில் உள்ள சராய் சித்துவில் செனாப் நதி இணைகிறது.


பியாஸ் நதி 354 கி.மீ நீளம் கொண்டது. இது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ரோஹ்தாங் கணவாய்க்கு அருகில் கடல் மட்டத்திலிருந்து 4,000 மீட்டர் உயரத்தில் உள்ள பியாஸ் குண்டிலிருந்து உருவாகிறது. இது குலு பள்ளத்தாக்கு வழியாக பாய்கிறது. இந்த நதி இந்தியாவின் பஞ்சாபில் உள்ள ஹரிகே அருகே சட்லெஜை சந்திக்கிறது. ஹரிகே அணை 1952-ம் ஆண்டில் கட்டப்பட்டது. இது இந்திரா காந்தி கால்வாய் அமைப்புக்கு தண்ணீரைத் திருப்பி விடுகிறது.


சட்லெஜ் நதி 676 கி.மீ நீளம் கொண்டது. இது ஒரு முன்னோடி நதியாகும். அதாவது, அதைச் சுற்றியுள்ள நிலப்பரப்புகளுக்கு முந்தையது. இந்த நதி திபெத்தில் உள்ள மானசரோவர் அருகே கடல் மட்டத்திலிருந்து 4,555 மீட்டர் உயரத்தில் உள்ள ரகஸ் தால் (Rakas Tal) என்ற இடத்திலிருந்து உருவாகிறது. திபெத்தில், இது லாங்சென் கம்பாப் (Langchen Khambab) என்று அழைக்கப்படுகிறது. இந்த நதி ரோபருக்கு அருகில் இந்தியாவுக்குள் நுழைகிறது.


கிழக்கு நதிகளின் நீரைப் பயன்படுத்த, இந்தியா பல அணைகளைக் கட்டியுள்ளது. இவற்றில் ரவி நதியின் மீது ரஞ்சித் சாகர் அணை, சட்லஜின் மீது பக்ரா அணை, பியாஸின் மீது பாங் மற்றும் பண்டோ அணைகள் ஆகியவை அடங்கும். பியாஸ்-சட்லஜ் இணைப்பு (Beas-Sutlej Link), மாதோபூர்-பியாஸ் இணைப்பு (Madhopur-Beas Link) மற்றும் இந்திரா காந்தி கால்வாய் திட்டம் (Indira Gandhi Canal Project) ஆகியவை பிற முக்கியத் திட்டங்களில் அடங்கும். இந்தத் திட்டங்களுடன், கிழக்கு ஆறுகளின் நீரில் கிட்டத்தட்ட 95% இந்தியா பயன்படுத்துகிறது.


இருப்பினும், மேற்கு நதிகள் மீதான இந்தியாவின் சில திட்டங்கள் காலப்போக்கில் பாகிஸ்தானிடமிருந்து ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளன. மேற்கு நதிகள் மீதான இந்தியாவின் முக்கிய திட்டங்களில் சலால் அணை, பாக்லிஹார் நீர்மின் திட்டம், பகால் துல் திட்டம் மற்றும் கிரு திட்டம் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் செனாப் நதியில் அமைந்துள்ளன. துல்புல் திட்டம் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஜீலம் நதியில் அமைந்துள்ளது.


ஜூலை 2022-ம் ஆண்டில், வெள்ள மேலாண்மை மற்றும் சர்வதேச நீர் ஒப்பந்தங்களுக்கான (Flood Management and International Water Treaties) நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. 1960-ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம், அந்தக் காலத்தின் அறிவு மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் அமைந்தது என்று அது குறிப்பிட்டது. இந்த ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசாங்கம் ராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைத்தது. புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம், நீர் கிடைக்கும் தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற இன்றைய சவால்கள் காரணமாக இது அவசியமாகப் பார்க்கப்படுகிறது.


ஆகஸ்ட் 2024-ம் ஆண்டில், ஒப்பந்தத்தின் பிரிவு XII (3)-ன் கீழ் இந்தியா பாகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முயன்றது. மக்கள்தொகை வளர்ச்சி, காலநிலை மாற்றம் மற்றும் பாகிஸ்தானால் சர்ச்சைக்கான வழிமுறைகளை தவறாகப் பயன்படுத்துவது போன்ற தற்போதைய சவால்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.


கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதி அமைப்புகளுடன் ஒப்பிடும்போது சிந்து நதி அமைப்பு மிகப்பெரிய பனிப்பாறைப் பகுதியைக் கொண்டுள்ளது. இது முக்கியமாக திட மழைப்பொழிவு மற்றும் பனிப்பாறை உருகும் நீரை நம்பியுள்ளது. இருப்பினும், காலநிலை மாற்றம் படுகையில் நீர் கிடைக்கும் தன்மை மற்றும் விநியோகத்திற்கு சவால்களை உருவாக்குகிறது. புவி வெப்பமடைதலின் அபாயங்கள் காரணமாக, இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த மாற்றங்களுக்கு பாதிக்கப்படக்கூடியவை.


எனவே, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஒரு இராஜதந்திர வெற்றியாகும். இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்த பதட்டங்களின் காலகட்டங்களிலும்கூட இது தப்பிப்பிழைத்துள்ளது. இருப்பினும், இந்தியாவின் செப்டம்பர் 2024 அறிவிப்பு "சூழ்நிலைகளில், அடிப்படை மற்றும் எதிர்பாராத மாற்றங்களை" எடுத்துக்காட்டுகிறது. இது ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கிறது.




Original article:

Share:

இடைக்கால விடுப்பு (furloughs) வழங்க யாருக்கு அதிகாரம் உள்ளது? இது தொடர்பான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஏன் விசாரிக்கிறது? - சோஹினி கோஷ்

 பொதுவாக, இடைக்கால விடுப்பு வழங்குவதற்கான அதிகாரம் நிர்வாகத்தால் பயன்படுத்தப்படுகிறது. டெல்லியில் ஏன் வேறு விதிகள்? இடைக்கால விடுப்பு  என்றால் என்ன? அது நிபந்தனை பிணையில் விடுவித்தலில் (பரோலில்) இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? 


ஹாஷிம்புரா படுகொலை குற்றவாளிகள், சிறை இடைக்கால விடுப்பு தொடர்பான சிறை விதியை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு நடந்து கொண்டிருக்கும் போது, ​​விடுப்புகளை அங்கீகரிக்கும் அதிகாரத்தை இந்த விதி நீதிமன்றத்திற்கு வழங்குகிறது.


இடைக்கால விடுப்பு வழங்கும் அதிகாரம் பொதுவாக நிர்வாகியிடமே இருக்கும். ஆனால், டெல்லியின் விதி ஏன் வேறுபட்டது? இடைக்கால விடுப்பு என்றால் என்ன? அது நிபந்தனை பிணையில் விடுவித்தலில் (பரோலில்) இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?


பரோலுக்கும் இடைக்கால விடுப்புக்கும் என்ன வித்தியாசம்?


இடைக்கால விடுப்பு மற்றும் நிபந்தனை பிணையில் விடுவித்தல் (பரோல்) இரண்டும் சிறை கையேடுகள் மற்றும் சிறை விதிகளிலிருந்து உருவாகின்றன மற்றும் அவை நிர்வாகத்தின் களத்தில் உள்ளன. இரண்டும் நிபந்தனைக்குட்பட்ட விடுதலைகள், சிறையில் நல்ல நடத்தைக்கு உட்பட்டவை மற்றும் குறிப்பிட்ட குற்றங்களைச் செய்யக்கூடாது.


ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குற்றவாளி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும், தண்டனைக் காலம் தொடர்கிறது. உதாரணமாக, ஒரு நபர் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, 30 நாட்களுக்கு விடுப்பில் விடுவிக்கப்பட்டால், அவர் 9 ஆண்டுகள் 11 மாதங்கள் சிறையில் இருப்பார். மேலும், அவர் இன்னும் தண்டனையை முடித்ததாகக் கருதப்படுவார்.


குற்றவாளி பரோலில் விடுவிக்கப்பட்டால், தண்டனை இடைநிறுத்தப்பட்டு, தண்டனையின் அளவு அப்படியே இருக்கும்.


நோய், விதைப்பு மற்றும் பயிர்களை அறுவடை செய்தல் போன்ற சில குறிப்பிட்ட தேவைகளில் கைதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், உச்சநீதி மன்றத்தில் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கும் குறுகிய கால சிறைவாசத்தில் நிபந்தனை பிணையில் விடுவித்தல் (பரோல்) வழங்கப்படுகின்றன.


நீண்டகால சிறைத்தண்டனை மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்தை சிறையில் கழித்த பிறகு பொதுவாக இடைக்கால விடுப்பு வழங்கப்படுகிறது. இது கைதிகள் தனிமையில் இருப்பதைத் தடுப்பது, அவர்கள் குடும்பம் மற்றும் சமூக உறவுகளை ஏற்படுத்த அனுமதிப்பது, நல்ல நடத்தையைப் பேணுவதற்கான உந்துதலின் வழி, சிறையில் ஒழுக்கமாக இருத்தல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்த நிபந்தனை பிணையில் விடுவித்தல் (பரோல்), பிரிவு ஆணையரால் வழங்கப்படுகிறது. மேலும், சிறைச்சாலை துணை ஆய்வாளர் ஜெனரலால் இடைக்கால விடுப்பு வழங்கப்படுகிறது. பரோலுக்கு, ஒரு குறிப்பிட்ட காரணம் தேவைப்படுகிறது. அதேசமயம் சிறைவாசத்தின் ஏகபோகத்தை உடைப்பதற்காகவே இடைக்கால விடுப்பு மற்றும் நிபந்தனை பிணையில் விடுவித்தல் (பரோல்) பல முறை வழங்கப்படலாம். அதேசமயம் இடைக்கால விடுப்பு விஷயத்தில் வரம்பு உள்ளது. எந்தவொரு குறிப்பிட்ட காரணத்திற்காகவும் இடைக்கால விடுப்பு வழங்கப்படாததால், சமூகத்தின் நலன் கருதி அது மறுக்கப்படலாம். விதிகளின் 21வது அத்தியாயம் இடைக்கால விடுப்பு  மற்றும் பரோலைப் பற்றியது. விதிகளின் விதி 1224-ன் குறிப்பு 2, குற்றவாளியின் மேல்முறையீடு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால் அல்லது உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் முடிவடையவில்லை என்றால், நிர்வாகத்தால் "இடைக்கால விடுப்பு வழங்கப்படாது" மேலும் நீதிமன்றத்திடம் தகுந்த வழிகாட்டுதல்களைப் பெற குற்றவாளிக்கு திறந்திருக்கும் என்று கூறுகிறது.


இந்த விதி 1224 படி, 2022 முதல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுக்களில் முறையீடு செய்யப்படுகிறது.


ஜனவரி 22 அன்று, டெல்லி சிறை நிர்வாகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில், 2010ஆம் ஆண்டு நிபந்தனை பிணையில் விடுவித்தல் (பரோல்)/இடைக்கால விடுப்பு  வழிகாட்டுதல்களின் அடிப்படையில் "டெல்லி NCT அரசாங்கத்தால் வேண்டுமென்றே" இந்தக் குறிப்பு சேர்க்கப்பட்டதாகக் கூறியது. இந்த வழிகாட்டுதல்கள் பிப்ரவரி 17, 2010 அன்று ஒரு உத்தரவில் அப்போதைய துணைத் தலைவர் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டன. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், குறிப்பில் உள்ள "உயர் நீதிமன்றம்" என்ற சொல் டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் இரண்டையும் உள்ளடக்கிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தைக் குறிக்கிறது என்று ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளார். ஒரு குற்றவாளியின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால், உச்சநீதிமன்றம் மட்டுமே இடைக்கால விடுப்பு வழங்கப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்ய முடியும்.


உச்சநீதிமன்றத்தின் தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு நிலுவையில் இருக்கும்போது, ​​உயர்நீதிமன்றத்தில் இடைக்கால விடுப்பு கோரும் விண்ணப்பம் பராமரிக்கப்படுமா அல்லது ஏதேனும் நிவாரணத்திற்காக குற்றவாளி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டுமா என்பதை டெல்லி உயர்நீதிமன்றத்தின் அமர்வு இப்போது ஆய்வு செய்து வருகிறது. இந்த சிறை விதியின் அரசியலமைப்பு செல்லுபடியை இந்த அமர்வு சோதித்து வருகிறது.


இந்திய அரசியலமைப்பின் 14 (சமத்துவத்திற்கான உரிமை) மற்றும் 21 (உயிர் மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை) ஆகியவற்றை மீறுகிறதா என்பதை நீதிமன்றம் சோதிக்கும்.


இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் இருப்பதால், குற்றவாளி நல்ல நடத்தையைப் பெற்றிருந்தாலும், சீர்திருத்த அணுகுமுறையின் கோட்பாட்டிற்கு முரணாக நடக்குமா என்பது குறித்த விதியின் அரசியலமைப்புச் செல்லுபடியை நீதிமன்றம் சோதிக்கும்.


விடுப்பு விதிகள் நிபந்தனை பிணையில் விடுவித்தல் (பரோல்) தண்டனையை நிறுத்த முடியாது என்பதால், நிபந்தனை பிணையில் விடுவித்தல் (பரோல்) விதிகளை நீதிமன்றம் ஆராயும். இந்த பிரச்சினை இந்திய கடற்படை தளபதியான கே.எம். நானாவதியின் வழக்கு வரை செல்கிறது. 1959ஆம் ஆண்டில், அவர் தனது மனைவியின் காதலனைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். ஒரு நடுவர் மன்றத்தால் குற்றவாளி அல்ல என்று கண்டறியப்பட்ட பின்னர், மும்பை உயர் நீதிமன்றம் பின்னர் மறு விசாரணையில் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு முன்பு, ஆளுநர் விஜயலட்சுமி பண்டிட், இந்திய அரசியலமைப்பின் 161-வது பிரிவின் கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரது தண்டனையை நிறுத்தி வைத்தார்.


1960ஆம் ஆண்டு ஒரு தீர்ப்பில், உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் கொண்ட அமர்வு, வழக்கு உச்சநீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படும்போது ஆளுநர் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. இது மேல்முறையீடுகள் மீது முடிவெடுக்கும் நீதிமன்றத்தின் அதிகாரத்தில் தலையிடும் என்று அவர்கள் கூறினர்.


ஆம். வரதட்சணைக் கொலைக் குற்றவாளியின் மேல்முறையீடு குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த வழக்கறிஞர் கௌரவ் அகர்வால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், "சில மாநிலங்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போது, ​​குற்றவாளிக்கு நிபந்தனை பிணையில் விடுவித்தல் (பரோல்) அல்லது இடைக்கால விடுப்பு வழங்குவதில்லை" என்று குறிப்பிட்டார்.


"குற்றவாளி உயர் நீதிமன்றத்திடம் முடிவைக் கேட்கலாம் என்பதால் நிபந்தனை பிணையில் விடுவித்தலும் (பரோல்) இடைக்கால விடுப்பும் மறுக்கப்படுகிறது" என்று NALSA கூறியது.


நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய நீதிமன்றத்தில், நிபந்தனை பிணையில் விடுவித்தல் (பரோல்) மற்றும் இடைக்கால விடுப்பு என்பது தண்டனையை நிறுத்தி வைப்பது அல்லது பிணை வழங்குவதிலிருந்து வேறுபட்டது என்று அகர்வால் கூறினார்.  உயர்நீதிமன்றம் பிணை வழங்கவோ அல்லது தண்டனையை நிறுத்தி வைப்பதோ சாத்தியம் என்றாலும், மாநில அரசு மட்டுமே அதன் விதிகளின்படி நிபந்தனை பிணையில் விடுவித்தல் (பரோல்) அல்லது இடைக்கால விடுப்பு செய்ய முடியும்.


இந்த விவகாரத்தில் இந்திய ஒன்றியம் மற்றும் மாநில அரசுகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.  உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய எட்டு மாநிலங்களையும் வழக்கில் சேர்த்தது. இந்த மனு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.




Original article:

Share: