குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) தொடர்பான ஒன்றிய அரசின் திட்டங்கள் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• திங்களன்று வெளியிடப்பட்ட ‘நடுத்தர நிறுவனங்களுக்கான கொள்கையை வடிவமைத்தல்’ என்ற தலைப்பிலான அறிக்கை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (Research and development (R&D)) முயற்சிகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஏற்றுமதி-போட்டித்தன்மையுடன் மாற உதவும் வகையில், தொகுப்பு (cluster-based) அடிப்படையிலான தர சோதனையை விரிவுபடுத்துதல் ஆகியவற்றையும் வலியுறுத்தியது.


• 2025-ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை  ‘நடுத்தரம்’ என்ற வரையறை விரிவுபடுத்தப்பட்ட பிறகு, குறைந்த கடனுடன் நடுத்தர அளவிலான நிறுவனங்களை ஆதரிப்பதற்கான சமீபத்திய நடவடிக்கைகளிலிருந்து வருகிறது. ஏப்ரல் 1 வரை, நடுத்தர நிறுவனங்கள் என்பது ரூ.50-250 கோடி வரை விற்பனை மற்றும் ஆலை மற்றும் இயந்திரங்களில் ரூ.10-50 கோடி வரை முதலீடு உள்ள நிறுவனங்கள் என வரையறுக்கப்பட்டிருந்தன. திருத்தப்பட்ட வரம்புகள்—விற்பனையில் ரூ.100-500 கோடி மற்றும் முதலீட்டில் ரூ.25-125 கோடி அதிக நிறுவனங்களை உள்ளடக்கும் வகையில் இந்த வகையை விரிவாக்கியுள்ளன.


• நடுத்தர நிறுவனங்கள் நுண்ணிய நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவான முன்னுரிமைத் துறை கடன்களை [priority sector loans] பெறுகின்றன. கூடுதலாக, நடுத்தர நிறுவனங்களுக்கான வட்டி விகிதங்கள் பெரிய நிறுவனங்களைக் காட்டிலும் சராசரியாக 4% அதிகமாக உள்ளது. இது மூலதனத்தை அதிக விலையாக்குகிறது" என்று அறிக்கை கூறியது.


• நடுத்தர நிறுவனங்கள் சலுகை விகிதங்களில் கடன்களைப் பெற அனுமதிக்க, குறு, சிறு, நடுத்தர நிறுவன (Ministry of Micro, Small, and Medium Enterprises (MSME)) அமைச்சகத்தின் கீழ் ஒரு பிரத்யேக நிதித் திட்டத்தை அறிக்கை முன்மொழிந்தது. அதிகபட்சமாக ரூ.25 கோடி வரை, ஒரு கோரிக்கைக்கு அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை. சந்தை விகிதங்களுடன் இணைக்கப்பட்ட வட்டி விகிதத்தில் ரூ.5 கோடி வரை முன் அங்கீகரிக்கப்பட்ட வரம்புடன் நடுத்தர நிறுவன கடன் அட்டையை (credit card) அறிமுகப்படுத்தவும் அறிக்கை பரிந்துரைத்தது.


• இந்தியாவில் 6 கோடிக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட MSME-களில், நடுத்தர நிறுவனங்கள் 0.3 சதவீதம் மட்டுமே உள்ளதாக அறிக்கை கூறுகிறது. இருப்பினும், நடுத்தர நிறுவனங்களில் சராசரி வேலைவாய்ப்பு 89 பேர் என அதிகமாக உள்ளது. இது சிறு நிறுவனங்களுக்கு 19 பேரும், நுண் நிறுவனங்களுக்கு 6 பேரும் ஆகும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் உள்ள அனைத்து MSME முதலீட்டிலும் நடுத்தர நிறுவனங்களும் 81 சதவீதத்தைக் கொண்டுள்ளன.


உங்களுக்குத் தெரியுமா?


• ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க, நடுத்தர நிறுவனங்களின் திட்டங்களுக்கு பிரத்யேகமாக நிதியளிப்பதற்காக சுயசார்பு இந்தியா (Self-Reliant India - (SRI)) திட்டத்திற்கு 25-30 சதவீதத்தை ஒதுக்குவதாக அறிக்கை பரிந்துரைத்தது. SRI நிதியத்திற்கு ஒன்றிய அரசிடமிருந்து ரூ.10,000 கோடி மற்றும் தனியார் பங்கிலிருந்து (private equity) ரூ.40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2021-ல் அதன் தொடக்கத்திலிருந்து, மொத்தம் ரூ.4,885 கோடி MSME-களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.


•  அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில், NITI Aayog-ன் துணைத் தலைவர் சுமன் பேரி திறன் மேம்பாடு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஒன்றாக கவனிப்பது முக்கியம் என்றார். "தொழிலாளர் சந்தையின் பக்கத்தில், பொதுவாக சிறு, மற்றும் குறு நிறுவனங்களுடன் தொடர்புடைய முறைசாரா வேலைவாய்ப்பிலிருந்து, நடுத்தர நிறுவனத் துறையுடன் தொடர்புடைய முறையான வேலைவாய்ப்புக்கு மாற்றம் செய்ய வேண்டும். முறையான வேலைவாய்ப்புடன் தான் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் பயிற்சியில் முதலீடு செய்ய ஊக்கம் பெறுகின்றன" என்று பேரி கூறினார்.


•   இந்தியாவின் உச்ச பொதுக் கொள்கை சிந்தனைக் குழுவின் (apex public policy think tank) அறிக்கை இந்தியாவில் திறமையான தொழிலாளர் கிடைக்கும் நிலை 55 சதவீதமாக உள்ளது என்று குறிப்பிட்டது. தென் கொரியாவில் 88 சதவீதம், அமெரிக்காவில் 85 சதவீதம் மற்றும் ஜப்பானில் 81 சதவீதம் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது.


•  குறு, சிறு, நடுத்தர நிறுவனத்தின் சம்பர்க் தரவுத்தளம் (MSME Sampark Portal) மூலம் உண்மையான நேர திறன் வரைவு, தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டம் (Entrepreneurship and Skill Development Programme (ESDP)) போன்ற திறன் மேம்பாட்டுத் திட்டங்களை விரிவாக்குதல், மற்றும் தொழில்நுட்ப போக்குகளுக்கு ஏற்ப மானியம் அளிக்கப்பட்ட, தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றை அறிக்கை பரிந்துரைத்தது.


Original article:
Share:

இராஜதந்திரக் கூட்டாண்மையின் வெள்ளி விழா ஆண்டு -பிலிப் அக்கர்மன்

 ஜெர்மன்-இந்தியா கூட்டாண்மை (German-India partnership) என்பது ஒரு பன்முகத்தன்மை கொண்ட ஒன்றாகும், அது சீராக வளர்ந்துள்ளது. எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது குறித்து மக்கள் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளனர்.


இந்த மாதம், இந்தியாவும் ஜெர்மனியும் ஒரு இராஜதந்திர ரீதியில் நாடுகளின் கூட்டாண்மையின் 25 ஆண்டுகளைக் (வெள்ளி விழா) கொண்டாடுகின்றன. இந்த கூட்டாண்மையானது காலப்போக்கில் சீராக வளர்ந்துள்ளது. இன்றைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் அளவுக்கு அது இப்போது வலுவாக உள்ளது. ஜெர்மனியின் 'இந்தியாவில் கவனம் செலுத்துங்கள்' (Focus on India) உத்தி இந்த கூட்டாண்மையின் எதிர்காலத்திற்கான திட்டத்தைக் காட்டுகிறது. புதிய ஜெர்மன் கூட்டணி ஒப்பந்தம் இந்தத் திட்டத்தை ஆதரிப்பதுடன், ஒரு தெளிவான அறிக்கையை வெளியிடுகின்றன. இதில், ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸும் பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்கனவே ஆரம்பகால தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர். ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுலும் தனது இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேசினார். இந்த பேச்சுவார்த்தைகள் ஜெர்மனியும் இந்தியாவும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்பதைக் காட்டுகின்றன. மேலும், தங்கள் கூட்டாண்மையை உருவாக்கி ஒருவருக்கொருவர் நெருக்கமாக ஒருங்கிணைப்போம் என்பதைக் காட்டுகிறது.


இரு நாடுகளின் உறவில் பல முக்கிய பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது. ஆனால், அது முக்கியமாக நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டது.  அவை, அமைதி (peace), செழிப்பு (prosperity), மக்கள் (people) மற்றும் நமது பூமியின் எதிர்காலம் (future of our planet) ஆகியவை ஆகும்.


பகிரப்பட்ட நோக்கம்


நமது நாடுகளின் வளர்ச்சிக்கு அமைதியும், நிலைத்தன்மையும் அடிப்படையான முன்நிபந்தனைகள் ஆகும். இந்தியாவும் ஜெர்மனியும் அமைதியான, நிலையான மற்றும் விதிகள் அடிப்படையிலான உலகத்தின் பார்வையைப் பகிர்ந்து கொள்கின்றன. பொதுவாக, நம்பகமான அரசியல் உறவின் மையத்தில் ஒரு தனித்துவமான வடிவம் உள்ளது. இது, அரசுகளுக்கிடையேயான அரசாங்க ஆலோசனைகள் அரசாங்கத்திற்கு இடையே ஒரு வலுவான பாலத்தை உருவாக்குகின்றன. இது இருநாடுகளின் உறவுகளை ஒரு விரிவான, உற்பத்தி மற்றும் நோக்கத்துடன் உறுதிப்படுத்துகிறது. கடந்த ஆண்டுகளில் குறிப்பாக செழித்தோங்கியுள்ள ஒரு பகுதி பாதுகாப்புத் துறையில் நமது ஒத்துழைப்பு ஆகும். தரங் சக்தி பயிற்சியின் (Tarang Shakti Exercise) போது (2024) சூலூர் விமானப்படை நிலையத்தில் (கோயம்புத்தூர், தமிழ்நாடு) சூடான தார்ச்சாலையில் (hot tarmac) நின்று, இந்திய மற்றும் ஜெர்மன் விமானிகளின் அபாரமான விமானக் காட்சியை, சிறந்த திறமை, ஒருங்கிணைப்பு மற்றும் குழுப்பணியுடன் காற்றில் விசிட் செய்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஜெர்மன் கடற்படையின் இந்த கூட்டு இராணுவப் பயிற்சிகள் மற்றும் துறைமுக அழைப்புகள் இந்தோ-பசிபிக் பகுதியை ஜெர்மன் புவிசார் இராஜதந்திர ரீதியில் இந்த பகுதி முக்கியமானது என்பதைக் காட்டுகிறது. எதிர்காலத்தில், நமது பாதுகாப்புத் தொழில்களுக்கு இடையே நெருக்கமான இராஜதந்திர ஒத்துழைப்பையும், நெருக்கமான உறவுகளையும் எதிர்பார்க்கலாம்.

செழிப்பு என்பது பொருளாதார வளர்ச்சியைவிட அதிகம். இன்னும் விரிவான அர்த்தத்தில், இது நம் மக்கள் செழிக்க, அர்த்தமுள்ள வேலைகளைக் கண்டறிய மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு சிறந்த எதிர்காலத்திற்கான வழிமுறைகளை வழங்க அனுமதிக்கிறது. சுமார் 2,000 ஜெர்மன் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன, மேலும் அவை இந்தியர்களுக்கு 750,000-க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்குகின்றன.


டெல்லியில் எனது மறக்கமுடியாத தருணங்களில் ஒன்று டெல்லி-மீரட் ரேபிட் இரயிலைப் (Delhi-Meerut Rapid Rail) பார்வையிட்டது. இந்த இரயில்கள் உயர் தொழில்நுட்பம் கொண்டவை மற்றும் சிறந்த உள்கட்டமைப்பில் இயங்குகின்றன. அவை, இளம் மற்றும் திறமையான இந்தியர்களால் இயக்கப்படுகின்றன. இந்த ஆபரேட்டர்கள் தேசிய இரயில்வே நிறுவனமான டாய்ச் பான் (Deutsche Bahn) சீருடைகளை அணிவார்கள். டாய்ச் பான் டெல்லியில் செயல்பாடுகளை நிர்வகிக்கிறது. மேலும், இப்போது அதிகமான இந்திய நிறுவனங்கள் ஜெர்மனியில் உள்ளன. அவை உயர் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளுடன் மேலும் இணைக்கப்படுகின்றன.


இப்போது, ​​உலகளாவிய வர்த்தகம் பெரிய இடையூறுகளை எதிர்கொள்கிறது. இதுபோன்ற போதிலும், நெருக்கமாக இணைக்கப்பட்ட விநியோகக் கோடுகள் நாம் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகின்றன. இது ஒரு தொடக்கமாக மட்டுமே இருக்கலாம். இரண்டு பெரிய பொருளாதார சக்திகளான இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே ஒரு தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (free trade agreement) சாத்தியமாகி வருகிறது. அறிவியலும் தொழில்நுட்பமும் செழிப்பில் பங்கு வகிக்கின்றன. இதில், இருநாடுகளும் ஒன்றாக முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகிறது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் சிறந்த அறிவியல் நிறுவனங்களில் பணியாற்றுவதால், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மூலம், சுற்றுச்சூழல் பிரச்சினைகளை வணிக வாய்ப்புகளாக மாற்ற முடியும்.


மக்களுக்கிடையேயான உறவுகள் (People-to-people ties)


மக்கள் தங்களின் இராஜதந்திரக் கூட்டாண்மையை வாழ்க்கை மற்றும் கதைகளால் நிரப்புகிறார்கள். இப்போது அதிகமான இந்தியர்கள் ஜெர்மனியில் வசிக்கின்றனர். 50,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இங்கு படிக்கின்றனர். அவர்கள் ஜெர்மன் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களின் மிகப்பெரிய குழுவாக உள்ளனர். சிலர் சில ஆண்டுகள் ஜெர்மனியில் தங்குகிறார்கள். அவர்கள் முதல் வேலைகளைப் பெறுகிறார்கள், தொழில்நுட்ப அனுபவத்தைப் பெறுகிறார்கள், நல்ல பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்களில், பலர் பின்னர் தங்கள் குடும்பங்களைத் கட்டியெழுப்ப இந்தியாவுக்குத் திரும்புகிறார்கள். சில இந்தியர்கள் ஜெர்மனியில் தங்கி தங்கள் குழந்தைகளை இங்கே வளர்க்கிறார்கள். இருபது ஆண்டுகளிலும், அவர்கள் இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தி வளப்படுத்துகிறார்கள். பல இளம் இந்தியர்கள் ஜெர்மனியில் தங்கள் வாழ்க்கையை இணையவழியில் பகிர்ந்து கொள்கிறார்கள். நான் (பிலிப் அக்கர்மன்) அவர்களில் பலரைச் சந்தித்து அவர்களின் கதைகளைக் கேட்டிருக்கிறேன்.


 இந்தியர்கள் ஒரு புதிய இடத்தை எப்படி வீடாக உணர வைக்கிறார்கள் என்பதைப் பார்த்து நான் எப்போதும் ஈர்க்கப்படுகிறேன். இளம் இந்தியர்கள் நன்றாக இயைந்து, வெற்றி பெற்று, ஜெர்மன் சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பதை நான் காண்கிறேன். இளம், திறமையான இந்தியர்களுக்கு ஜெர்மனி பல வாய்ப்புகளை வழங்குகிறது. ஆனால் ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்பவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இன்னும் திறக்கப்படும்.


இந்தியா முழுவதும் நம் மொழியில் வலுவான ஆர்வம் இருப்பதை நான் காண்கிறேன். மேலும், ஆர்வமுள்ள ஒவ்வொரு இந்தியருடனும் நன்கு திறமையான ஜெர்மன் ஆசிரியர்களை இணைக்க புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். இரண்டாவது சவால், இந்தியாவில் படிக்கவும் வேலை செய்யவும் அதிகமான ஜெர்மானியர்களை ஊக்குவிப்பதாகும். இந்தியாவின் கதையைப் புரிந்துகொள்பவர்கள், இந்தியாவின் பல சுவாரஸ்யமான மொழிகளில் பேசுபவர்கள் மற்றும் வணிக வளாகம் அமைக்க அதிக மக்கள் அங்கு குடியேற வேண்டும். இளைய ஜெர்மானிய மற்றும் இந்திய தலைமுறையினருக்கான எந்தவொரு முதலீடும், அடுத்த 25 ஆண்டுகளில் நமது இராஜதந்திர கூட்டாண்மையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் மக்களுக்கான முதலீடாக இருக்கும்.


பசுமை வளர்ச்சி


நமது பூமியின் சவால்கள் மற்றும் எதிர்காலம் குறித்த தங்கள் இருநாடுகளின் கூட்டாண்மை மிகவும் முக்கியமானது. பூமி நமது பகிரப்பட்ட பொதுவான சுற்றுச்சூழல் உயிர்நாடியாகும். இது எதிர்காலத்தில் நமது வாழ்க்கை முறைகளைப் பாதுகாக்கிறது. 2022-ஆம் ஆண்டில், ஜெர்மனி இந்தியாவிற்கு €10 பில்லியன் சிறப்பு கடன்கள் மற்றும் மானியங்களை உறுதியளித்தது. இது 10 ஆண்டுகளில் நடக்கும். இதை இந்தோ-ஜெர்மன் பசுமை மற்றும் நிலையான மேம்பாட்டு கூட்டாண்மை (Green and Sustainable Development Partnership (GSDP)) என்று குறிப்பிடுகிறோம்.


புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பல்லுயிர் மற்றும் சிறந்த நகரங்கள் (smart city projects) ஆகியவை பல திட்டங்களில் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறோம். இவற்றில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பல்லுயிர் மற்றும் சிறந்த நகரங்கள் அடங்கும். தனியார் நிறுவனங்களும் இந்தப் பகுதிகளில் ஒத்துழைக்கின்றன, இது முக்கியமானது. சமீபத்தில், குஜராத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களைப் பார்வையிட்டேன். இந்தத் திட்டங்களின் அளவும் லட்சியமும் அற்புதமானவை. எல்லா இடங்களிலும் சூரிய மின் பலகைகள் மற்றும் காற்றாலைகள் உள்ளன.


ரோட்டார் பிளேடுகள் (rotor blades) போன்ற காற்றாலைகளின் சில பகுதிகள் ஒரு ஜெர்மன் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. எங்கள் தொழில்நுட்பத்தின் மூலம், இந்தியாவின் ஆற்றல் மாற்றத்தை ஆதரிக்க விரும்புகிறோம். இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகவும் நாங்கள் இருக்க விரும்புகிறோம்.


இந்தியாவில் இரண்டு முறை பணியாற்றும் பாக்கியத்தை நான் பெற்றுள்ளேன். முதல் முறையாக 2007 மற்றும் 2010 வரை. இரண்டாவது முறையாக இப்போது, ​​2022 முதல் தூதராக இங்கு வந்துள்ளேன். இந்த ஆண்டுகளில், இந்தியா மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் வளர்ந்துள்ளது. எங்கள் இருநாடுகளின் இராஜதந்திர கூட்டாண்மையும் நிறைய வளர்ந்துள்ளது. நாங்கள் ஒன்றாகச் சாதித்ததைத் திரும்பிப் பார்க்கும்போது, ​​நான் பெருமைப்படுகிறேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து நம்பிக்கையுடனும் நேர்மறையுடனும் உணர்கிறேன்.


பிலிப் அக்கர்மேன் இந்தியாவிற்கான ஜெர்மன் தூதர்.


Original article:
Share:

எரிசக்தி மற்றும் செயல்திறன் : இந்தியா மற்றும் அதிக எரிசக்தி திறனுக்கான தேவை பற்றி

 செயல்திறனை அதிகரிப்பதன் (increasing efficiency) மூலம் இந்தியா தனது மின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்


கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியா மின்சார உற்பத்தியில் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் விரைவாக வளர்ந்துள்ளது. ஆனால் இந்தியா இன்னும் அதன் உச்சபட்ச மின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையிலான பற்றாக்குறையான இடைவெளி 2020 நிதியாண்டில் 0.69%-லிருந்து 2024 நிதியாண்டில் சுமார் 5%-ஆக அதிகரித்துள்ளது.


மின்சார விநியோகத்தில் வரம்புகள் இருப்பதை இது காட்டுகிறது. குறிப்பாக புதைபடிவ எரிபொருட்களிலிருந்து வரும்போது, புதிய மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு நிறைய நேரம் எடுக்கும். அதே நேரத்தில், மின் கட்டத்தில் (power grid) அதிக புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் சேர்க்க இந்தியா முயற்சிக்கிறது. இதன் காரணமாக, அனைத்து பகுதிகளிலும் எரிசக்தி செயல்திறனை மேம்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். இது மின் தேவையைக் குறைக்க உதவும். அதிகரித்து வரும் மின் தேவைகளைக் கையாளவும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் எரிசக்தி செயல்திறனை மேம்படுத்துவது வேகமான மற்றும் மலிவான வழியாகும்.


இந்த ஆண்டு இந்தியாவின் முக்கியமான எரிசக்தித் திறன் திட்டமான உஜாலாவின் (efficiency scheme, UJALA) பத்து ஆண்டுகளைக் குறிக்கிறது. எரிசக்தித் திறன் கொண்ட ஒளி உமிழும் டையோடு (light emitting diode (LED)) பல்புகளின் விலையை குறைக்க உஜாலா திட்டம் உதவியது. இது, பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பல்புகளின் விலை சுமார் ₹500 ஆக இருந்தது. இப்போது, ​​அவற்றின் விலை ₹70 மட்டுமே, பல வீடுகளுக்கு மலிவு விலையில் கிடைக்கிறது.


இந்த திட்டத்தில் தெருவிளக்கு தேசிய திட்டம் (Street Lighting National Programme) என்று அழைக்கப்படும் மற்றொரு எரிசக்தி சேமிப்பு நடவடிக்கையும் அடங்கும். இந்த திட்டத்தில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் 1.34 கோடிக்கும் மேற்பட்ட எல்இடி விளக்குகள் நிறுவப்பட்டன. இது உச்சபட்ச மின் தேவையை 1,500 மெகாவாட்டிற்கும் அதிகமாகக் குறைக்க உதவியது. ஜனவரி 2025 நிலவரப்படி, அரசாங்கம் சுமார் 37 கோடி எல்.ஈ.டி பல்புகளை விநியோகித்துள்ளது, மேலும் சுமார் 407 கோடிக்கும் அதிகமான விற்பனையை சாத்தியமாக்கியுள்ளது.


சிறிய ஃப்ளோரசன்ட் விளக்குகளுடன் (compact fluorescent lamps) ஒப்பிடும்போது LED பல்புகள் பாதி அளவே மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. ஒளிரும் பல்புகள் (incandescent light bulbs) LEDகளை விட ஒன்பது மடங்கு அதிக மின்சாரம் தேவைப்படுகின்றன. இதன் பொருள் LEDகளைப் பயன்படுத்துவது இந்திய வீடுகளுக்கு நிறைய பணத்தை மிச்சப்படுத்துகிறது. UJALA திட்டம் மட்டும் இந்தியா $10 பில்லியனுக்கும் அதிகமாக சேமிக்க உதவியுள்ளது. இது 9,500 MW-க்கும் மேற்பட்ட புதிய மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதைத் தவிர்க்கவும் உதவியது. இது ஒவ்வொன்றும் 500 MW திறன் கொண்ட 19 புதிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களைத் தவிர்ப்பதற்கு சமம்.


2001-ஆம் ஆண்டு எரிசக்தி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றிய பிறகு, இந்தியா மற்ற எரிசக்தி திறன் சார்ந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2000 முதல் 2018 வரை, இந்த மேம்பாடுகள் இந்தியாவிற்கு எரிசக்தி தேவையை 15% குறைக்க உதவியது என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் (International Energy Agency) கூறுகிறது. அவை 300 மில்லியன் டன் CO₂ உமிழ்வையும் தவிர்க்க உதவியது.


இருப்பினும், கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியா வேகமாக நகரமயமாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஒரு நபருக்கு எரிசக்தி பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏனென்றால் கோடை காலம் வெப்பமாகி வருவதால் அதிக குளிர்ச்சி தேவைப்படுகிறது. இதன் விளைவாக, கடந்த ஆண்டு உச்சபட்ச மின் தேவை 250 GW-ஐ எட்டியது. இன்று, சீனா மற்றும் அமெரிக்காவிற்குப் பிறகு, உலகின் மூன்றாவது பெரிய மின் நுகர்வோர் இந்தியா.


இந்தியாவின் பெரும்பாலான ஆற்றல் சுமார் 70% இன்னும் நிலக்கரியிலிருந்தே வருகிறது. 2032-ம் ஆண்டுக்குள் மேலும் 90 GW நிலக்கரி மின்சாரத்தை சேர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளது.


இந்தியாவிற்கு இப்போது தேவைப்படுவது வலுவான ஆற்றல் திறன் விதிகள் (energy efficiency mandates) ஆகும். இந்த விதிகள் கட்டிடங்கள், வீட்டு உபகரணங்கள் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர வணிகங்கள் (MSMEகள் என அழைக்கப்படுகின்றன) போன்ற பல பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.


Original article:
Share:

இணையக் குற்றங்களை எதிர்த்துப் போராடுதல் -ஆதித்ய முகர்ஜி, கிருஷ்ணா தங்கிராலா, சங்கல்ப் உத்கட்டா

 இருப்பிடம் இல்லாத e-Zero FIR ஒரு நல்ல முன்னேற்றப் படியாகும்.


மே 19 அன்று, உள்துறை அமைச்சகம் e-Zero FIR என்ற புதிய அமைப்பைத் தொடங்கியது. இந்த அமைப்பு நிதி சைபர் குற்றங்கள் குறித்த புகார்களை முதல் தகவல் அறிக்கையாக (FIR) தானாகவே மாற்றுகிறது.


மக்கள் விரைவாக நீதி பெற உதவும் ஒரு நல்ல நடவடிக்கை இது. உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் காவல்துறைக்கு ஒரு குற்றம் குறித்த அறிக்கை கிடைக்கும்போதெல்லாம் FIR பதிவு செய்யச் சொல்லியிருந்தாலும், தாமதங்கள் இன்னும் நடக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதிகள் மற்றும் மெதுவான நடவடிக்கைகள் பல இணைய மோசடி வழக்குகள் முன்னேறுவதைத் தடுத்து நிறுத்தியுள்ளன. இது நிறுவனங்கள், சிறு வணிகங்கள் மற்றும் தனிநபர்களைப் பாதிக்கிறது.


e-Zero FIR திட்டம் முதலில் டெல்லியில் விசாரிக்கப்படுகிறது. ₹10 லட்சத்திற்கும் அதிகமான நிதி இணையக் குற்றங்கள் குறித்த எந்தவொரு புகாரையும் இது விரைவாக அதிகாரப்பூர்வ FIR ஆக மாற்றும். மக்கள் இந்தக் குற்றங்களை தேசிய இணையக் குற்ற அறிக்கையிடல் தளம் அல்லது 1930 இலவச அழைப்பு மூலம் புகாரளிக்கலாம். இந்த அமைப்பு காவல்துறை முடிவுகளால் ஏற்படும் தாமதங்களை நீக்குகிறது. இது டெல்லி காவல்துறையின் ஆன்லைன் FIR தளத்தை தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் அமைப்புடன் இணைக்கிறது. இதனால் வழக்குப் பதிவு விரைவாகவும் எளிமையாகவும் இருக்கும்.


முன்பு, காவல் நிலையங்கள் தங்கள் பகுதிக்கு வெளியே குற்றம் நடந்தால் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய மறுக்க முடியும். ஆனால் இப்போது, ​​அரசாங்கம் இந்த விதியை மாற்றியுள்ளது. இப்போது, ​​குற்றம் எங்கு நடந்தாலும், சைபர் குற்றத்திற்கான FIR-ஐ உடனடியாக பதிவு செய்யலாம்.


மேலும், தானியங்கி FIR பதிவு என்பது சட்டம் அல்லது நீதிமன்றம் உத்தரவிட்டால், காவல்துறை FIR ஐ பதிவு செய்வதை தாமதப்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ முடியாது என்பதாகும்.


இந்த விரைவான FIR பதிவு பெரிய நிதி இணையக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகள் வழக்கை முறையாகக் கண்காணிக்க உதவுகிறது. இது ஒரு நல்ல விசாரணைக்குத் தேவையான முக்கியமான ஆதாரங்களை விரைவாகச் சேமிக்கவும் உதவுகிறது.


இந்த மாற்றம் பெரிய இணைய மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதாவது திடீரென்று பணத்தை இழக்கும் தொழில் வல்லுநர்கள் அல்லது வணிகங்கள் போன்றவை. அவர்கள் வழக்கமாக பண இழப்பு மற்றும் மெதுவான காவல் துறை வேலை இரண்டையும் சந்திக்கிறார்கள். ஆனால் தானியங்கி FIR பதிவு மற்றும் பணத்தை முன்கூட்டியே தடுக்கும் வாய்ப்புடன், அரசாங்கம் விரைவாக உதவ வேண்டும்.


தற்போது, ​​₹10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட குற்றங்கள் மட்டுமே இந்த தானியங்கி FIR-ஐப் பெறுகின்றன. இந்த வரம்பு அமைப்பைத் தொடங்க உதவுகிறது. ஆனால், சிறிய இழப்புகளுடன் பலரை விட்டுவிடுகிறது. இந்த வரம்பை நீக்குவது அல்லது மாற்றுவது அதிகமானவர்களுக்கு, குறிப்பாக குறைந்த பணம் உள்ளவர்களுக்கு உதவும்.


தவறான முறையில் FIR தொடங்கக்கூடிய போலியான அல்லது மோசமான புகார்களைத் தடுக்க, தானியங்கி அமைப்புக்கு தெளிவான விதிகள் மற்றும் கண்காணிப்புகள் தேவைப்படும்.


இணையக் குற்றங்களைக் கையாள்வதில் உள்ள வழக்கமான சிக்கல்களுடன் ஒப்பிடும்போது, ​​இந்த புதிய e-Zero FIR அமைப்பு ஒரு நல்ல முன்னேற்றமாகும். இது மக்கள் எங்கிருந்தும் குற்றங்களைப் புகாரளிக்க அனுமதிக்கிறது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இணையத்தில் விரைவான மற்றும் நியாயமான நீதியை வழங்க டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துகிறது.


முகர்ஜி ஒரு பங்குதாரர்; தங்கிராலா ஒரு முதன்மை உறுப்பினர்; மற்றும் உத்கதா ஷர்துல் அமர்சந்த் மங்கள்தாஸ் & கோ நிறுவனத்தில் உறுப்பினர் ஆவார்.



Original article:
Share:

புதிய நகரங்களை உருவாக்க இந்தியாவிற்கு ஏன் ஒரு தேசிய திட்டம் தேவை? - ஜெகன் ஷா

 நாடு முழுவதும் நகர்ப்புற வளர்ச்சியை நிர்வகிப்பதற்கான ஒரு தெளிவான திட்டம் என்பது மாநிலங்களின் முழு ஆதரவுடன் ஒரு சக்திவாய்ந்த மற்றும் ஒன்றிணைக்கும் இலக்காக இருக்கலாம்.


ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான அமராவதியை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் ஆதரவு, புதிய நகரங்களை உருவாக்குவதில் மதிப்பைக் காண்கிறது என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், இந்த புதிய (பசுமை) நகரங்கள் தேசிய வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகின்றன என்பது குறித்து பொது விவாதம் அதிகம் இல்லை. தற்போதைய அரசாங்கத் திட்டங்கள் பெரும்பாலும் இருக்கும் நகரங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதால் இது நிகழலாம். இந்தத் திட்டங்கள் நீர், வீட்டுவசதி, போக்குவரத்து, எரிசக்தி, கழிவு மேலாண்மை மற்றும் வேலைவாய்ப்புகள் போன்ற துறைகளில் செயல்படுகின்றன. நகர்ப்புற சவால் நிதி மற்றும் "ஆக்கப்பூர்வமான மறுவளர்ச்சி" (“creative redevelopment”) என்ற யோசனை போன்ற புதிய முயற்சிகள் பழைய நகரங்களை மேம்படுத்துவதற்கான ஆதரவையும் காட்டுகின்றன . எனவே, இந்தியாவின் எதிர்காலத்தில் புதிய நகரங்கள் என்ன பங்கு வகிக்கின்றன?


2024ஆம் ஆண்டில், 12 புதிய தொழில்துறை திறன் நகரங்கள் (smart cities) அறிவிக்கப்பட்டன. ஆனால் நாட்டில் ஏற்கனவே நிலம் வாங்குதல், திட்டங்களை உருவாக்குதல், உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் முதலீடுகளை ஈர்த்தல் போன்ற பல்வேறு கட்டங்களில் பல புதிய நகரங்கள் மற்றும் நகரியங்கள் (townships) உள்ளன. ஆம்பி பள்ளத்தாக்கு, லவாசா மற்றும் நயா ராய்ப்பூர் போன்ற சில இடங்கள் காலியாகி, அவை வளரத் தவறிவிட்டன. மற்றவை நில விலைகளை உயர்த்த மட்டுமே காரணமாகின்றன. ஆனால், வேலைகள் அல்லது வணிகங்களை உருவாக்குவதில்லை. ஸ்ரீ சிட்டி சிறப்பு பொருளாதார மண்டலம் போன்ற சிலவற்றிற்கு இன்னும் நல்ல முதலீடுகள் கிடைக்கின்றன. ஜேவர் மற்றும் நவி மும்பை விமான நிலையங்கள் பெரிய தேசிய திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், அவை வேகமாக வளர வாய்ப்புள்ளது. இந்த புதிய நகரங்கள் அனைத்தும் பழைய நகரங்களுக்கு அருகில் உள்ளன. ஆனால், அவற்றுடன் இணைவதற்கான தெளிவான திட்டங்கள் இல்லை.


ஒரு புதிய நகரம் காலியான நிலத்தில் உருவாக்கப்படுவதில்லை. அது விவசாயிகளிடமிருந்து விவசாய நிலங்களை எடுத்து, அவர்களின் கிராமங்களை உள்ளடக்கியது, மற்றும் அவர்களின் வளங்களைப் பயன்படுத்துகிறது. கிராமங்கள் வளரும் நகரங்களுடன் இணையும்போது, ​​அவை ஒன்றாக வளர முடியும்.  அமராவதி நகரம் அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால், நகரங்கள் ஒரு திட்டம் இல்லாமல் வளரும்போது, ​​மக்கள் அலட்சியமாக செயல்படத் தொடங்குகிறார்கள்: தண்ணீர் எடுக்க ஆழமான கிணறுகள் தோண்டுதல், குப்பைகளை எங்கும் வீசுதல், வரி செலுத்தாமல் அரசாங்க உதவியைப் பெறுதல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். ஒரு நகரத்தின் புதிய பகுதிகள் பழைய பகுதிகளைச் சார்ந்து இருந்தாலும் அவற்றை ஆதரிக்காதபோது, ​​மக்கள் "என் சுற்றுப்புறம் இல்லை" (“not in my neighborhood”) என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்கள். இது நகரங்கள் உயிர்வாழ ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தை பாதிக்கிறது.


நகரங்களை உருவாக்குவதற்கான இரண்டு வழிகளுக்கு இடையே ஒரு பெரிய சிக்கல் உள்ளது. மேலும், இவை இது தொடர முடியாது. புதிய பசுமை நகரங்கள் (புதிய நிலத்தில் கட்டப்பட்டது) மற்றும் வளர்ந்து வரும் பழுப்பு நிலப் பகுதிகள் (பழைய நகரங்கள் பெரிதாக வளர்வது) ஆகியவற்றின் சக்தியை இந்தியா ஒன்றாகப் பயன்படுத்த வேண்டும். நகர வளர்ச்சிக்கு தேசிய திட்டம் இல்லாததற்கு ஒரு காரணம், நகர விஷயங்களைக் கையாளும் மாநில அரசாங்கங்களில் மத்திய அரசு தலையிட விரும்பவில்லை.


ஆனால், இந்தியா இனி காத்திருக்க முடியாது. நாடு முழுவதும் நகர வளர்ச்சியை நிர்வகிப்பதற்கான ஒரு வலுவான, தெளிவான திட்டம், மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருப்பது, உண்மையான முன்னேற்றத்தைக் கொண்டுவரும். எதிர்காலத்திற்காக பெரிய அளவில் திட்டமிட இதுவே சரியான நேரம் என்பதை பல அறிகுறிகள் காட்டுகின்றன.


முதலாவதாக, கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் உருவாக்கிய வெற்றிகரமான மாதிரிகள் மற்றும் நல்ல யோசனைகளைப் பின்பற்ற எங்களுக்கு வாய்ப்பு உள்ளது. இவை நகரங்களை வரவேற்கத்தக்கதாகவும், பாதுகாப்பானதாகவும், வலிமையானதாகவும், பிரச்சினைகளைக் கையாளக்கூடியதாகவும் மாற்ற உதவும் கருவிகள் போன்றவை. இப்போது, ​​இந்த யோசனைகளின் அர்த்தம் அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது.


இரண்டாவதாக, கதி சக்தி தளம் விரைவில் தனியார் வணிகங்களுக்குக் கிடைக்கும். இந்த தளம் கிராமப்புறம் மற்றும் நகரம், வெவ்வேறு தொழில்கள் மற்றும் வெவ்வேறு வருமானம் மற்றும் பின்னணியைக் கொண்ட மக்கள் என அனைத்து பகுதிகளையும் பார்க்கவும் சிறந்த செயல்களைத் திட்டமிடவும் உதவும்.


மூன்றாவதாக, தேசிய கிராம-நகரத் (ரூர்பன்) திட்டம் (National Rurban Mission), நாட்ட மாவட்டத் திட்டம் (Aspirational Districts Programme) மற்றும் பல பிராந்தியத் திட்டங்கள் மூலம் பிராந்திய வளர்ச்சியை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பதற்கான எடுத்துக்காட்டுகளை நாங்கள் ஏற்கனவே காண்கிறோம்.


நான்காவது மற்றும் மிக முக்கியமான காரணம் இதுதான்: நகரத் திட்டமிடல் மற்றும் மேலாண்மை தோல்வியடைவதை செய்திகள் பெரும்பாலும் காட்டுகின்றன. ஒரு நகரத்தை நடத்துவது கடினம் என்பதை பெரும்பாலான மக்கள் உணரவில்லை. மேலும், ஒரு திட்டம் இல்லாமல் நகரங்கள் வளரும்போது அது இன்னும் கடினம். நகர மையத்திற்கு அருகில் இருப்பதால் நன்மைகளைப் பெறுவோம் என்ற நம்பிக்கையில், நகரங்கள் விளிம்புகளில் அதிகமாக வளர அனுமதிக்கிறோம். ஆனால், இது நகரங்களை நிர்வகிப்பதை கடினமாக்குகிறது. ஏனெனில், அவர்களால் தங்கள் பழைய அமைப்புகளைக் கூட கவனித்துக் கொள்ள முடியாது. விதிகளை விரும்பாத குழந்தைகளைப் போல, நகரத்தின் வளர்ச்சியைக் கட்டுக்குள் வைத்திருக்க நாங்கள் விரும்பவில்லை.


நகரங்களுக்கு எட்டு மடங்கு அதிகப் பணத்தை செலவிட வேண்டும். ஆனால், தற்போது ​​நம்மிடம் ஏற்கனவே உள்ள பணத்தைக் கூட சரியாகப் பயன்படுத்த முடியவில்லை. ஒரு காரணம், பழைய நகரப் பகுதிகளில் முதலீடு செய்வதா அல்லது புதியவற்றில் முதலீடு செய்வதா என்பது குறித்து மக்கள் குழப்பமடைகிறார்கள். நகர மேம்பாட்டுக் குழுக்கள் இருக்கும் இடங்களில், அவர்கள் பெரும்பாலும் நகரத் திட்டங்களை பெரிதாக்குகிறார்கள். இது திட்டமிடப்படாத வளர்ச்சியை ஏற்படுத்த அனுமதிக்கிறது. ஆனால், பழைய பகுதிகளை அடர்த்தியாக மாற்றுவதன் மூலமோ அல்லது வளர்ச்சியைக் கையாள அருகிலுள்ள புதிய நகரங்களை உருவாக்குவதன் மூலமோ நகரம் வளர விரும்புகிறதா என்பதை முடிவு செய்ய வேண்டும். சிறியதாகவும் மக்கள் மற்றும் வணிகங்களால் நிரம்பியதாகவும் இருக்கும் நகரங்கள், அதிகமாகப் பரவியுள்ள நகரங்களைவிட சிறப்பாக செயல்படுகின்றன. இடம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த விதிகள் நகரங்களை நிர்வகிப்பதற்கும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் மிகவும் முக்கியம்.


நகரங்களுக்கு சரியான வழியில் பணத்தை செலவிட, பிராந்திய மற்றும் உள்ளூர் திட்டங்களாகப் பிரிக்கக்கூடிய ஒரு தேசிய திட்டம் நமக்குத் தேவை. நல்ல செய்தி என்னவென்றால், இதுபோன்ற ஒன்றை நாம் இதற்கு முன்பு செய்துள்ளோம். ஆனால், வேறு நேரத்தில். 1985-ஆம் ஆண்டு நகரமயமாக்கலுக்கான தேசிய ஆணையம் புதிய யோசனைகளுக்கு ஒரு நல்ல தொடக்கப் புள்ளியாகும். அத்தகைய தேசிய திட்டத்தை உருவாக்க இந்திய அரசியலமைப்பின் பிரிவு 263-ன் கீழ் அமைக்கப்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான குழுவிற்கு இந்தப் பணி வழங்கப்பட வேண்டும். நன்கு திட்டமிடப்பட்ட நகரங்களின் வலையமைப்பு, பழைய நகரங்கள் மற்றும் புதிய நகரங்கள் அல்லது காலியான நிலங்கள் மற்றும் கட்டப்பட்ட நிலங்கள் என்ற அடிப்படையில் சிந்திப்பதை நிறுத்தினால் மட்டுமே வளர்ந்த இந்தியாவை உருவாக்க உதவும்.


ஜெகன் ஷா, The Infravision Foundation அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தேசிய நகர்ப்புற விவகார நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் ஆவார்.



Original article:
Share:

வர்த்தக ஒப்பந்தங்கள் இந்திய விவசாயத்திற்கு வாய்ப்புகளைக் கொண்டுவரும். ஆனால், அதில் சவால்களும் இருக்கும். -அசோக் குலாட்டி, ரித்திகா ஜுனேஜா

 நிலையான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட வர்த்தக உத்திகள், நிலையான வளர்ச்சியில் நீண்டகால முதலீடுகளுடன், இந்தியா தனது உலகளாவிய வர்த்தக திறனை முழுமையாக உணர உதவும்.


டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் மாறிவரும் வரிகள் மற்றும் உலகளாவிய அரசியல் பதட்டங்களால் பாதிக்கப்பட்ட ஒரு ஆண்டில், இந்தியாவின் வர்த்தக செயல்திறன் பல சவால்களை எதிர்கொண்டது. இந்தியா இங்கிலாந்துடன் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்திருந்தாலும், அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் இன்னும் உள்ளது. 2024-25 நிதியாண்டில் (FY25) இந்தியா வர்த்தகத்தில் எவ்வாறு செயல்பட்டது என்பதைப் பார்ப்பதற்கு இது ஒரு நல்ல நேரம்.

இந்தியாவின் மொத்த ஏற்றுமதிகள் பொருட்கள் மற்றும் சேவைகள் உட்பட  2025 நிதியாண்டில் $820.93 பில்லியனாக உயர்ந்தது. இது முந்தைய ஆண்டை (FY24) விட 6.5% அதிகமாகும். பொருட்களின் ஏற்றுமதி $437.42 பில்லியன் (53%) ஆகவும், தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் வணிக சேவைகளில் இந்தியாவின் வலிமையால் இயக்கப்படும் சேவைகள் $383.51 பில்லியனை (47%) சேர்த்தன.


இருப்பினும், இறக்குமதிகள் சற்று வேகமாக, 6.85% அதிகரித்து, மொத்தம் $915.19 பில்லியனை எட்டின. பெரும்பாலான இறக்குமதிகள் பொருட்கள் ($720.24 பில்லியன் அல்லது 79%), மற்றும் சேவைகள் $194.95 பில்லியன் (21%) ஆகும்.


இது அதிக வர்த்தக பற்றாக்குறைக்கு வழிவகுத்தது (இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளி), இது 2024 நிதியாண்டில் $78.39 பில்லியனில் இருந்து $94.26 பில்லியனாக அதிகரித்தது.


2025 நிதியாண்டில் இந்தியாவின் பெயரளவிலான உள்நாட்டு உற்பத்தி, IMF அமைப்பினால் $4.19 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் வர்த்தகம் (ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் சேர்ந்து) உள்நாட்டு உற்பத்தியில் 41.4% ஆகும். இது உலகப் பொருளாதாரத்துடன் இந்தியாவின் வலுவான தொடர்பைக் காட்டுகிறது.


இந்தியாவின் தொழிலாளர்களில் 46%-க்கும் அதிகமானோர் பணிபுரியும் விவசாயத்தில், ஏற்றுமதிகள் சற்று அதிகரித்து 2025 நிதியாண்டில் 52 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 48.9 பில்லியன் டாலராக இருந்தது. எனினும் தற்போதைய அதிகரிப்பு 6.3% ஆகும். இது ஒரு நேர்மறையான அறிகுறியாக இருந்தாலும், 2030-ஆம் ஆண்டில் 100 பில்லியன் டாலர் என்ற இலக்கிலிருந்து இது இன்னும் வெகு தொலைவில் உள்ளது.


ஒப்பிடுகையில், 2005 நிதியாண்டு மற்றும் 2014 நிதியாண்டுக்கு இடையில், விவசாய ஏற்றுமதிகள் ஒவ்வொரு ஆண்டும் 20% அதிகரித்து, $8.7 பில்லியனில் இருந்து $43.3 பில்லியனாக உயர்ந்துள்ளது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் (2015 முதல் 2025 வரை), வளர்ச்சி ஆண்டுக்கு வெறும் 2.3% ஆகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக, விவசாயத்தில் இந்தியாவின் வர்த்தக உபரி (ஏற்றுமதிகளை கழித்தல் இறக்குமதிகள்) 2014 நிதியாண்டில் $27.7 பில்லியனில் இருந்து 2025 நிதியாண்டில் $13.8 பில்லியனாகக் குறைந்தது.


இந்த மந்தநிலைக்கு பல காரணங்கள் உள்ளன. ஒன்று உலகளாவிய விலைகள் மற்றும் சர்வதேச விவசாய விலைகள் உயரும் போது, ​​இந்திய ஏற்றுமதிகள் நன்றாக இருக்கும்; விலைகள் குறையும் போது, ​​ஏற்றுமதிகள் குறையும். இந்தியாவின் உள்நாட்டு வர்த்தகக் கொள்கைகள் மற்றொரு பெரிய காரணமாக உள்ளது. உள்நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் வெங்காயம் போன்ற முக்கியப் பொருட்களின் ஏற்றுமதியை அரசாங்கம் அடிக்கடி தடை செய்கிறது அல்லது கட்டுப்படுத்துகிறது. இந்த அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள் ஏற்றுமதி வளர்ச்சியைப் பாதிக்கின்றன.


2025 நிதியாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய விவசாய ஏற்றுமதி அரிசி. இந்தியா 20.2 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) அரிசியை ஏற்றுமதி செய்து $12.5 பில்லியன் சம்பாதித்தது. இது இந்தியாவின் மொத்த விவசாய ஏற்றுமதியில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு ஆகும். கடல்சார் பொருட்கள் ($7.4 பில்லியன்), மசாலாப் பொருட்கள் ($4.5 பில்லியன்), எருமை இறைச்சி ($4.1 பில்லியன்), பதப்படுத்தப்பட்ட உணவுகள் ($3.5 பில்லியன்), தேநீர் மற்றும் காபி ($2.7 பில்லியன்) மற்றும் சர்க்கரை ($2.2 பில்லியன்) ஆகியவை பிற முக்கிய ஏற்றுமதிகளாகும்.


2022-23-ஆம் ஆண்டில், அரசாங்கம் அரிசி ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியது. இது உடைந்த அரிசி ஏற்றுமதியை மட்டுப்படுத்தியது, புழுங்கல் அரிசிக்கு வரிகளைச் சேர்த்தது மற்றும் பாஸ்மதி அரிசிக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயித்தது. இந்த விதிகள் காரணமாக, உலகளாவிய அரிசி விலைகள் அதிகரித்தன. அரிசி ஏற்றுமதி 27% குறைந்து, நிதியாண்டு 23-ல் 22.3 மில்லியன் மெட்ரிக் டன்களாக (MMT) இருந்தது. நிதியாண்டு 24-ல் 16.3 MMT ஆகக் குறைந்தது. ஆனால், ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்ட பணம் 6% மட்டுமே குறைந்தது.


2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் (உடைந்த அரிசியைத் தவிர) பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டபோது, ​​அரிசி ஏற்றுமதி 20.2 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) உயர்ந்து 2025 நிதியாண்டில் $12.5 பில்லியனை ஈட்டியது. உலகின் அரிசியில் மூன்றில் ஒரு பங்கை (FY25 இல் 61.4 MMT) ஏற்றுமதி செய்வதால், உலக அரிசி விலைகளில் இந்தியா வலுவான செல்வாக்கைக் கொண்டுள்ளது என்பதை இது காட்டுகிறது.


இருப்பினும், அதிகமாக அரிசியை ஏற்றுமதி செய்வது உலகளாவிய விலைகளைக் குறைக்கிறது. அதாவது கூடுதல் ஏற்றுமதிகளுக்கு இந்தியா குறைவான பணத்தை ஈட்டுகிறது. விலைகளைக் குறைக்காமல் ஏற்றுமதியிலிருந்து அதிக வருமானம் ஈட்ட, இந்தியா அரிசிக்கு 10 முதல் 15% வரை ஏற்றுமதி வரி விதிக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


அரிசி ஏற்றுமதியில் உள்ள மற்றொரு சிக்கல் என்னவென்றால், அரிசியில் இந்தியாவின் உலகளாவிய வெற்றிக்கு பெரும்பாலும் தண்ணீர், மின்சாரம் மற்றும் உரங்கள் மீதான அரசாங்க மானியங்கள் அதிகம். ஆனால் அரிசி வளர அவை நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. அதாவது ஒவ்வொரு கிலோகிராமுக்கும் சுமார் 3,000 முதல் 5,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு கிலோவிற்கு சராசரியாக 4,000 லிட்டர்களை எடுத்துக் கொண்டால், அதில் பாதி நிலத்திற்குத் திரும்புகிறது என்று வைத்துக் கொண்டால், 20.2 மில்லியன் மெட்ரிக் டன் அரிசியை ஏற்றுமதி செய்வது என்பது சுமார் 40 பில்லியன் கன மீட்டர் தண்ணீரை அனுப்புவதாகும். அது இந்தியாவின் வரையறுக்கப்பட்ட நீர் விநியோகத்தின் மிகப்பெரிய வீணாகும்.


இந்தியாவின் விவசாய ஏற்றுமதிக் கொள்கை உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதில் ஆராய்ச்சியில் அதிக முதலீடு, சிறந்த தரமான விதைகள், அதிக நீர்ப்பாசனம், உரங்களை கவனமாகப் பயன்படுத்துதல் மற்றும் நவீன, திறமையான விவசாய முறைகளைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும். அத்தகைய ஒரு முறை உரமிடுதல் ஆகும். அங்கு சொட்டு நீர் அல்லது நுண் நீர்ப்பாசன முறைகள் மூலம் உரங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் இந்தியா உற்பத்திச் செலவுகளைக் குறைக்கவும், உலகளவில் சிறப்பாகப் போட்டியிடவும், ஏற்றுமதிகளில் இருந்து அதிகம் சம்பாதிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவும்.


இந்தியாவின் விவசாய இறக்குமதிகள் 2025 நிதியாண்டில் 16.5% அதிகரித்து. 2024 நிதியாண்டில் $32.8 பில்லியனில் இருந்து 2025 நிதியாண்டில் $38.2 பில்லியனாக உயர்ந்தன. இந்த இறக்குமதிகளில் சமையல் எண்ணெய்கள் மிகப்பெரிய பங்கை வகிக்கின்றன. இவை 16.4 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கு (MMT) $17.3 பில்லியன் மதிப்புடையவை. இது அனைத்து விவசாய இறக்குமதிகளிலும் 45.4% ஆகும்.


இந்தியா இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களை பெரிதும் சார்ந்துள்ளது. இறக்குமதி மூலம் அதன் தேவைகளில் 55-60% ஐ பூர்த்தி செய்கிறது. இதில் பெரும்பாலானவை பாமாயிலிலிருந்து வருகின்றன. அதைத் தொடர்ந்து சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் வகைகள் உள்ளன. இந்த அதிக சார்பு ஆபத்தானது மற்றும் நீண்ட காலத்திற்கு தொடர முடியாது.


இந்த சார்புநிலையைக் குறைக்க, எண்ணெய் பனையின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவுக்கு ஒரு நடைமுறை மற்றும் கவனம் செலுத்தும் கொள்கை தேவை. எண்ணெய் பனை ஒரு ஹெக்டேருக்கு 4 டன் எண்ணெய் வரை உற்பத்தி செய்ய முடியும். எனினும் இவை கடுகைவிட 10 மடங்கு அதிகம். இருப்பினும், எண்ணெய் பனை மரங்கள் முதிர்ச்சியடைய 4 முதல் 6 ஆண்டுகள் ஆகும். அந்த நேரத்தில் விவசாயிகள் அந்த நிலத்தில் மற்ற பயிர்களை வளர்க்க முடியாததால் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்.


இந்தக் காலகட்டத்தில் விவசாயிகளுக்கு உதவ, அரசாங்கம் அவர்கள் இழக்கும் வருமானத்திற்கு சமமான நிதி உதவியை வழங்க வேண்டும். மேலும், எண்ணெய் மீட்பு அதிகரிக்க சிறந்த பதப்படுத்தும் நுட்பங்களுக்கு ஊக்கத்தொகைகள் இருக்க வேண்டும்.


இந்தியாவில் நில உரிமை ஒரு முக்கியமான பிரச்சினை என்பதால், கட்டுப்படுத்தப்பட்ட தோட்ட மாதிரி உதவக்கூடும். இந்த மாதிரியில், தனியார் நிறுவனங்கள் அரசாங்க விதிகளின் கீழ் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுடன் (FPOs) இணைந்து பணியாற்றலாம். இது விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் தனியார் முதலீட்டை அனுமதிக்கும்.


இந்தியாவின் பரந்த வர்த்தகக் கதை நம்பிக்கைக்குரியது. இருப்பினும், விவசாயம் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் இரண்டையும் முன்வைக்கிறது. வணிகக் கொள்கைக்கான நிலையான மற்றும் இராஜதந்திர அணுகுமுறை, நிலையான உற்பத்தித்திறனில் நீண்டகால முதலீடுகளுடன் இணைந்து, உலக அரங்கில் இந்தத் துறையின் முழு திறனையும் திறப்பதற்கு முக்கியமாக இருக்கும்.


அசோக் குலாட்டி புகழ்பெற்ற பேராசிரியராகவும், ரித்திகா ஜுனேஜா ICRIER  நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகவும் உள்ளார்.


Original article:
Share:

இந்தியாவின் வளர்ந்த இந்தியா இலக்கை மின் ஆளுகை எவ்வாறு முன்னேற்றுகிறது? -கண்ணன் கே

 இந்தியா 2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியா (Viksit Bharat) இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், மின் ஆளுகை (e-governance) எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒரு முக்கிய அங்கமாக உருவெடுத்துள்ளது. ஆனால், மின் ஆளுமை இந்த பார்வைக்கு எந்த வழிகளில் பங்களிக்கிறது மற்றும் அதன் மாற்றும் திறனை உணர்த்துவதில் அது என்ன சவால்களை எதிர்கொள்கிறது?


இந்தியா 2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியா இலக்கை அடைவதில் உறுதியாக இருக்கும் வேளையில், கூட்டுறவு கூட்டாட்சி (collaborative federalism) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மூலம் நிர்வாகத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் அதிக வேகத்தைப் பெற்றுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர்கள் மாநாட்டின்போது, ​​பயனுள்ள நிர்வாகம் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கான அர்ப்பணிப்பு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இந்த நோக்கத்தில், டிஜிட்டல் கருவிகள் மூலம் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கலை ஊக்குவிக்க உதவுவதால், மின்-ஆளுமை ஒரு பயனுள்ள கருவியாக உருவெடுத்துள்ளது.


மின்-ஆளுகை (E-governance) அல்லது மின்னணு ஆளுகை (electronic governance) என்பது அரசாங்கங்கள் பொது சேவைகளை வழங்க, தகவல் மற்றும் தொடர்பை வழங்க, பரிவர்த்தனைகளை நடத்த மற்றும் ஆட்சியில் செயலூக்கமான குடிமக்கள் பங்கேற்பை ஊக்குவிக்க இணையம் மற்றும் பிற தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (Information and Communication Technology (ICT)) கருவிகள் போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதைக் குறிக்கும். மின்னணு ஆளுகையின் மிக முக்கியமான இலக்கு வெளிப்படைமை, பொறுப்புக்கூறல் மற்றும் பதிலளிக்கும் தன்மையை மேம்படுத்துவதாகும்.


மின்-ஆளுகையின் இறுதி நோக்கம், பயனுள்ள, பங்கேற்பு மற்றும் உள்ளடக்கிய நிர்வாக அமைப்பை உருவாக்குவதன் மூலம் அரசுக்கும் சமூகத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதாகும். சேவைகளுக்கான ஒற்றை சாளர அணுகலை உருவாக்குதல், பல்வேறு துறைகளுக்கு இடையே எளிமைப்படுத்தப்பட்ட தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு, நிகழ்நேர தகவல் பரப்புதல் மற்றும் குடிமக்கள் கருத்து மற்றும் குறை தீர்க்கும் தளங்கள் போன்ற மின்-ஆளுமையின் பல்வேறு அம்சங்கள் மூலம் இந்த இலக்கு செயல்படுத்தப்படுகிறது. இந்த அம்சங்கள் தடையற்ற, திறமையான மற்றும் பயனர் நட்பு நிர்வாக சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகின்றன.


மின்-ஆளுகையின் கோட்பாடுகள்


மின்-ஆளுகையின் கோட்பாடுகள், எளிமையான, அறநெறி நிறைந்த, பொறுப்புக்கூறக்கூடிய, பதிலளிக்கக்கூடிய மற்றும் வெளிப்படையான (Simple, Moral, Accountable, Responsive, and Transparent (SMART)) என்ற கருத்தின் அடிப்படையில், மின்ஆளுமையின்  மக்கள், செயல்முறை, தொழில்நுட்பம் மற்றும் வளங்கள் வெற்றி என்ற நான்கு அடிப்படை தூண்களில் தங்கியுள்ளது. மக்கள் மின்-ஆளுகை முன்முயற்சிகளின் பயனாளிகளாகவும், உந்து சக்தியாகவும் உள்ளனர். டிஜிட்டல் கல்வியறிவு, தகவமைப்புத் திறன் மற்றும் புதிய டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்த பொதுமக்களின் விருப்பம் ஆகியவை அனைத்து மின்-ஆளுகை அமைப்புகளின் அணுகல் மற்றும் தாக்கத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.


செயல்முறைக் கூறு (process component) என்பது அரசாங்க நடைமுறைகளை மிகவும் திறமையான, வெளிப்படையான மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்டதாக மாற்ற மறுவடிவமைப்பு செய்தல் மற்றும் மறுவடிவமைப்பு செய்வதைக் குறிக்கிறது. தொழில்நுட்பம் அனைத்து மின்-ஆளுகை வழிமுறைகளின் அடித்தளமாக செயல்படுகிறது. நிர்வாக செயல்பாடுகளின் டிஜிட்டல் மாற்றத்திற்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் கருவிகளை வழங்குகிறது. வளங்கள் நிதி மூலதனம் மற்றும் மனித நிபுணத்துவம் மற்றும் நுண்ணறிவு இரண்டையும் குறிக்கின்றன. இவை இரண்டும் மின்-ஆளுகை திட்டங்களை செயல்படுத்துவதற்கும் நிலைத்தன்மைக்கும் முக்கியமானவை. 

குறிப்பாக, மின்-ஆளுகையின் நோக்கம் வெறும் சேவை வழங்கலுக்கு அப்பாற்பட்டது. இது பல தொடர்பு வழிகள் மூலம் பல்வேறு நிறுவனங்களுடன் அரசாங்கத்தின் நேரடித் தொடர்பை செயல்படுத்துகிறது:


— அரசாங்கத்திலிருந்து குடிமகனுக்கு (Government-to-Citizen (G2C)) அணுகுமுறை இணையவழி கட்டணம் செலுத்துதல், சான்றிதழ் மற்றும் அனுமதி விண்ணப்பங்கள் போன்ற சேவைகள் வழியாக பொதுமக்களுடன் நேரடித் தொடர்பை செயல்படுத்துகிறது.


— அரசாங்கத்திலிருந்து வணிகத்திற்கு (Government-to-Business (G2B)) இணைப்பு அரசாங்கத்திற்கும் வணிகங்களுக்கும் இடையிலான தொடர்புகள் மற்றும் பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது. உரிமம் வழங்குதல், அனுமதிகள் மற்றும் பிற ஒப்பந்தங்கள் போன்ற செயல்முறைகளை எளிதாக்குகிறது.


— அரசாங்கத்திலிருந்து அரசாங்கத்திற்கு (Government-to-Government (G2G)) என்பது அரசாங்கத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையேயான தகவல், தரவு மற்றும் பிற தகவல்தொடர்புகளின் பரிமாற்றமாகும். G2G தொடர்பு என்பது துறைகளுக்கு இடையேயான செயல்திறனை கணிசமாக மேம்படுத்தியுள்ளது மற்றும் பல அரசு அமைப்புகளின் ஒப்புதல்கள் தேவைப்படும் முயற்சிகளில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்துள்ளது.


— அரசாங்கத்திலிருந்து பணியாளர் வரையிலான (Government-to-Employee (G2E)) தொடர்பு பாதை, அரசு ஊழியர்களுக்கான சேவைகள் மற்றும் தகவல்தொடர்புகளை நிர்வகிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. சம்பளம், இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் மற்றும் விடுப்பு வழங்குதல் போன்ற மனிதவள மேலாண்மை, பயிற்சியை எளிதாக்குதல் போன்றவை அடங்கும். இவ்வாறு, மின்னணு ஆளுகையின் வருகையும், அது உருவாக்கிய பாதைகளும், அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களுடனும் நிர்வாகத்தின் பல்வேறு கிளைகளுடனும் தொடர்பு கொள்ளும் விதத்தை மாற்றியுள்ளன. இருப்பினும், இந்த மாற்றம் பல ஆண்டுகளாக உருவாகியுள்ளது. இது முக்கிய நிறுவன மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் குறிக்கப்படுகிறது.


மின்-ஆளுகை என்ற கருத்தும், அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான தொடர்புகளை மாற்றும் அதன் திறனும் பின்னர் தோன்றினாலும், மின்-ஆளுகை நோக்கிய இந்தியாவின் பயணம் 1970-களில் அரசு அலுவலகங்களின் கணினிமயமாக்கலில் இருந்து காணப்படுகிறது. 1976-ல் தேசிய தகவல் மையம் (National Informatics Centre (NIC)) நிறுவப்பட்டது. பொது நிர்வாகத்தில் ICT-ஐ ஒருங்கிணைப்பதற்கான அடித்தளத்தை அமைத்தது. 1980-கள் மற்றும் 1990-களில், அரசாங்க செயல்முறைகளின் தானியங்கிமயமாக்கல் மற்றும் நிர்வாக அலுவலகங்களின் வலையமைப்பில் இந்தியா நிலையான முன்னேற்றத்தைக் கண்டது.


2006-ஆம் ஆண்டு தேசிய மின்-ஆளுகைத் திட்டம் (National e-Governance Plan (NeGP)) தொடங்கப்பட்டதன் மூலம் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது. இந்த திட்டம் 27 திட்டம் பயன்முறை திட்டங்கள் (Mission Mode Projects (MMPs)) மூலம் அரசாங்க சேவைகளை பொதுமக்களுக்கு மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. இது பரந்த அளவிலான அரசாங்க செயல்பாடுகளை உள்ளடக்கியது. தேசிய மின்-ஆளுகைத் திட்டத்தின் ஒரு முக்கியமான மற்றும் வெற்றிகரமான கூறு பொது சேவை மையங்களை (Common Service Centers (CSCs)) நிறுவுவதாகும். இது இந்த சேவைகளுக்கான பொது அணுகலை மேம்படுத்த உதவியது. 2015-ஆம் ஆண்டில், e-Kranti, அல்லது NeGP 2.0, தொடங்கப்பட்டது. இது டிஜிட்டல் இந்தியா, Mobile First மற்றும் Cloud First போன்ற முயற்சிகளில் கவனம் செலுத்தி மேலும் டிஜிட்டல் மயமாக்கலுக்கான மற்றொரு கட்டமைப்பை வழங்கியது.


குறிப்பாக டிஜிட்டல் இந்தியா திட்டம், நிர்வாகம் மற்றும் அதிகாரமளிப்புக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பல முதன்மை முயற்சிகள் இந்தியாவில் மின்-ஆளுகை சூழ்நிலையை வடிவமைத்துள்ளன. உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்பான ஆதார், நலன்புரி விநியோக செயல்முறையை நெறிப்படுத்தியுள்ளது மற்றும் கசிவுகளைக் குறைத்துள்ளது. புதிய யுக ஆளுமைக்கான ஒருங்கிணைந்த மொபைல் பயன்பாடு (Unified Mobile Application for New-age Governance (UMANG)) தளம் பல்வேறு அரசு சேவைகளை அணுகுவதற்கான ஒற்றை சாளரத்தை வழங்குகிறது.


அனைத்து கிராம பஞ்சாயத்துகளையும் அதிவேக பிராட்பேண்ட் மூலம் இணைப்பதை நோக்கமாகக் கொண்ட பாரத்நெட் முன்முயற்சி, அதன் முழு செயல்படுத்தலுக்குப் பிறகு கிராமப்புற-நகர்ப்புற டிஜிட்டல் இடைவெளியை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்க மின்-சந்தை (Government e-Marketplace (GeM)) பொது கொள்முதலில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளது. அதே நேரத்தில் மின்-நீதிமன்றங்கள் மற்றும் மின்-அலுவலகம் போன்ற முயற்சிகள் பல்வேறு களங்களில் செயல்திறன் மற்றும் பொறுப்புணர்வை அதிகரித்துள்ளன. பல்வேறு மாநில அரசுகளும் உள்ளூர் மட்டத்தில் மின்-ஆளுமை முயற்சிகளை செயல்படுத்தியுள்ளன. இந்த முயற்சிகள் மின்-ஆளுகையின் மாற்றும் திறனை நிரூபித்துள்ளன. சில சவால்கள் இல்லாமல் இல்லை என்றாலும்.


மின்-ஆளுமை அமைப்பை நிறுவுவது பல நன்மைகளைத் தந்துள்ளது. டிஜிட்டல் தளங்கள் அதிகாரிகளிடமிருந்து தன்னிச்சையான நடவடிக்கைகளை கணிசமாகக் குறைத்துள்ளன, அரசாங்க செயல்பாட்டை மிகவும் திறந்த மற்றும் வெளிப்படையானதாக ஆக்குகின்றன. இது குடிமக்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் உரிமங்கள், சான்றிதழ்கள் மற்றும் மானியங்கள் போன்ற முக்கிய சேவைகளைப் பெறவும், நேரத்தையும் வளங்களையும் மிச்சப்படுத்தவும் உதவியுள்ளது. இருப்பினும், சில சவால்கள் இல்லாமல் இல்லை.


நேரடி நன்மை பரிமாற்றம் (Direct Benefit Transfer (DBT)) வழிமுறை, அரசாங்கங்களிலிருந்து மானியங்கள் மற்றும் பிற கொடுப்பனவுகள் நோக்கம் கொண்ட பயனாளிகளைச் சென்றடைவதை உறுதிசெய்துள்ளது. செலவுகளைத் தவிர்க்கிறது மற்றும் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும், மின்னணு ஆளுகை, பெண்கள், ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் கிராமப்புற மக்கள் உட்பட சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு அரசாங்கத் திட்டங்களில் பங்கேற்கவும் பயனடையவும், அதன் மூலம் டிஜிட்டல் உள்ளடக்கம் மூலம் அதிகாரமளிப்பதில் பங்களிக்கவும் புதிய வழிகளை வழங்கியுள்ளது.


அதன் பல நன்மைகள் இருந்தபோதிலும், மின்னணு ஆளுகை சில முக்கியமான சவால்களை எதிர்கொள்கிறது. சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்த இந்திய ஆராய்ச்சி கவுன்சிலால் (Indian Council for Research on International Economic Relations (ICRIER)) வெளியிடப்பட்ட இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார நிலை (India’s Digital Economy (SIDE)) அறிக்கை 2025, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய டிஜிட்டல்மயமாக்கப்பட்ட பொருளாதாரமாக இருந்தாலும், தனிநபர் டிஜிட்டல்மயமாக்கலின் (per capita digitalisation) அடிப்படையில் 28-வது இடத்தில் உள்ளது என்பதைக் குறிக்கிறது. டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கான அணுகல் இல்லாததால் மின்-ஆளுகையின் அணுகல் மற்றும் நேர்மறையான தாக்கங்கள் கட்டுப்படுத்தப்படும் கிராமப்புறங்களில், ஒரு பெரிய டிஜிட்டல் இடைவெளியின் நிலைத்தன்மையை இது எடுத்துக்காட்டுகிறது.


கூடுதலாக, உணர்திறன் வாய்ந்த தரவுகளின் டிஜிட்டல் மயமாக்கல் சைபர் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது. குடிமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் இருவரிடையேயும் குறைந்த அளவிலான டிஜிட்டல் கல்வியறிவு, மின்-ஆளுகை தளங்களின் பயனுள்ள பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் மற்றொரு காரணியாகும். முதன்மையாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் இயங்கும் பெரும்பாலான தளங்கள் இந்தி/ஆங்கிலம் அல்லாதவர்கள் வரையறுக்கப்பட்ட அணுகலைக் கொண்டிருக்க காரணமாகின்றன. மேலும், அதிகாரத்துவத்திற்குள் ஏற்படும் மாற்றத்திற்கான எதிர்ப்பு, குறைக்கப்பட்ட மின்சாரம் மற்றும் மோசமான இணைப்பு போன்ற தொழில்நுட்ப சிக்கல்களுடன், நாடு முழுவதும் மின்-ஆளுகையின்  செயல்படுத்தலையும் பாதிக்கிறது.


முன்னோக்கிய வழி என்ன?


மின்-ஆளுகையின் முழுத் திறனையும் அடைய, பல முனை அணுகுமுறை அவசியமாகத் தெரிகிறது. தொலைதூரப் பகுதிகளில் இணைப்பு மூலம் டிஜிட்டல் பிளவைக் குறைப்பதற்கான முயற்சிகள் மற்றும் இணையம் மற்றும் டிஜிட்டல் சாதனங்களுக்கான மலிவு அணுகலை உறுதி செய்தல் ஆகியவை காலத்தின் தேவையாகும். குடிமக்கள் மற்றும் அதிகாரிகள் இருவருக்கும் இலக்கு பயிற்சித் திட்டங்கள் மூலம் டிஜிட்டல் கல்வியறிவை வளர்ப்பது மின்-ஆளுகைசெயல்முறையை முன்னேற்ற உதவும். BHASHINI மற்றும் பன்மொழி தளங்களின் வளர்ச்சி போன்ற முயற்சிகள் டிஜிட்டல் கல்வியறிவை அதிகரிப்பதற்கும் மொழியியல் தடைகளைத் குறைப்பதற்கும் முக்கியமான படிகளாக இருக்கும்.


மேலும், குடிமக்களின் கருத்துக்களுக்கான வழிகளை நிறுவுவது, நிர்வாக செயல்முறையை ஜனநாயகப்படுத்தவும், அதை மேலும் உள்ளடக்கியதாக மாற்றவும் உதவும். நிலையான மின்-ஆளுகை சுற்றுச்சூழல் அமைப்பை உறுதி செய்வதற்காக தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் வேகத்தில் செல்லும் வழக்கமான திறன் மேம்பாடு மற்றும் கொள்கை சீர்திருத்தங்களுக்கான தேவையும் உள்ளது.


சுருக்கமாக, மின்-ஆளுகையை நோக்கிய இந்தியாவின் இயக்கம், வெளிப்படையான, பொறுப்புணர்வுள்ள மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட நிர்வாக அமைப்புக்கான அதன் உறுதிப்பாட்டிற்கு சான்றாகும். 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா (Viksit Bharat) என்ற இலக்கை நோக்கி நாடு நகரும்போது, ​​இந்திய நிர்வாகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மின்-ஆளுகை ஒரு முக்கிய தூணாக இருக்கும்.



Original article:
Share: