நாய்களும் சட்டங்களும் : தெரு நாய்கள் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவு பற்றி…

 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விலங்குகளுக்கான தங்குமிடங்கள் மற்றும் கருத்தடை திட்டங்களுக்கு நிதி தேவை


ஆகஸ்ட் 11, 2025 அன்று, உச்ச நீதிமன்றம் தெரு நாய்கள் பிரச்சினையில் இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான உத்தரவை பிறப்பித்தது. டெல்லி மற்றும் அருகிலுள்ள நகரங்கள் அனைத்து தெரு நாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து, நிரந்தரமாக தங்குமிடங்களில் வைத்திருக்கவும், தங்குமிட திறனை விரைவாக அதிகரிக்கவும் அது கூறியது. அரசாங்க நடவடிக்கை மெதுவாக உள்ள இடங்களில் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தயாராக இருப்பதை இது காட்டுகிறது.


டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30,000 நாய் கடி வழக்குகள் பதிவாகின்றன. மேலும், ரேபிஸ்  பாதிப்புகள் பெரும்பாலும் சரியான நேரத்தில் சிகிச்சை பெற முடியாத நிலையில் உள்ளவர்களை பாதிக்கிறது.


இருப்பினும், நீதிமன்றத்தின் உத்தரவு விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ABC) விதிகள், 2023 உடன் முரண்படுகிறது. இந்த விதிகள் நாய்களைப் பிடித்து, கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு, பின்னர் அவை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் விடுவிக்க வேண்டும் என்று கூறுகின்றன. ஆரோக்கியமான நாய்கள் கால்நடை மருத்துவரால் ஆபத்தான முறையில் ஆக்ரோஷமானது என்று அறிவிக்கப்பட்டால் மட்டுமே, அவற்றை நிரந்தரமாக அகற்றவோ அல்லது நீண்டகாலத்திற்கு வைத்திருக்கவோ முடியும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.


ABC விதிகள் சிறப்பாக செயல்படவில்லை. கருத்தடை இயக்கங்கள் ஒழுங்கற்றதாகவும், இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான 70% திட்டங்களை எட்டாததாலும் நகரங்களின் நாய்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது. நாய்களை அவற்றின் பகுதிகளுக்குத் திருப்பி அனுப்புவதால், குழந்தைகள் விளையாடும் நெரிசலான இடங்களிலும், குப்பைகள் குவியும் இடங்களிலும் பெரிய நாய் கூட்டங்கள் தங்கியுள்ளன.


நாய்களை நீண்ட காலத்திற்கு தங்குமிடங்களில் வைத்திருப்பது போன்ற பிற முறைகளை நகரங்கள் முயற்சிப்பதையும் விதிகள் தடுக்கின்றன. இப்போது, விதிகள் அப்படியே இருந்தால், நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றும் அதிகாரிகள் விதிகளை மீறியதற்காக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும். ஆனால் அவர்கள் விதிகளைப் பின்பற்றினால், நீதிமன்றத்தைப் புறக்கணித்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படலாம்.


கொள்கை வகுப்பாளர்கள் இந்த மோதலை காலாவதியான சட்டங்களை சரிசெய்ய ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும். இந்தியாவின் நகரங்கள் சிறியதாக இருந்தபோது விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1960 இயற்றப்பட்டது. இன்றைய பெரிய மற்றும் நெரிசலான நகரங்களால் பெரிய தெருநாய் எண்ணிக்கையைக் கையாள முடியாது. சிலர் இன்னும் தெருவில் உள்ள நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிய வேண்டும் என்று வாதிடுகிறார்கள். ஆனால், இந்தக் கருத்து  நகர்ப்புற வாழ்க்கையின் யதார்த்தத்தை புறக்கணிக்கிறது.


இவற்றை ஒரு புதிய  சட்டம் மூலம் தத்தெடுக்கக்கூடிய நாய்கள், கருணைக்கொலை செய்யப்பட வேண்டிய ஆக்ரோஷமான அல்லது மிகவும் நோய்வாய்ப்பட்ட நாய்கள், முறையான தங்குமிடங்களில் தங்கக்கூடிய நாய்கள் என்று தெளிவாகப் பிரிக்கப்பட வேண்டும்.


நகரங்களில் நாய் கட்டுப்பாட்டிற்கு நகராட்சிகள் பொறுப்பேற்க வேண்டும். தங்குமிடங்களுக்கான குறைந்தபட்ச பணியாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு தரநிலைகளை அமைக்க வேண்டும். மேலும், நோய்களைக் குறைப்பதற்கு நிதியை இணைக்க வேண்டும். உள்ளூர் அமைப்புகள் தங்குமிடங்களை உருவாக்கவும், பெரிய அளவிலான கருத்தடை திட்டங்களை இயக்கவும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நிலையான நிதியைப் பெற வேண்டும். கால்நடை கல்லூரிகள் தங்குமிட மருத்துவத்தை பற்றி புரிதலை வளர்க்க வேண்டும். இதில் போதுமான பயிற்சி பெற்ற ஊழியர்கள் உள்ளனர். இத்தகைய ஆதரவு இல்லாவிட்டால், டெல்லி அதன் நாய் பிரச்சனையை, நகரின் எல்லையில் நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட, புலப்படாத ஆனால் கொடூரமான நாய் தங்குமிடங்களாக மாற்றும் அபாயத்தில் உள்ளது.



Original article:

Share:

வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றிய கட்டுக்கதையை அம்பலப்படுத்துதல் -அரோலிப்சா தாஸ், உபைத் முஷ்டாக்

 வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் (Employment Linked Incentive (ELI)) இந்தியாவின் வேலையின்மை நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான ஒரு முயற்சியாக இருந்தாலும், கொள்கையின் வடிவமைப்பு தொழிலாளர் சந்தையில் கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளை ஆழப்படுத்தலாம்.


ஜூலை 1, 2025 அன்று, அரசாங்கம் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஆதரிக்கும் வகையில் ₹99,446 கோடி செலவில் வேலைவாய்ப்பு இணைப்பு ஊக்கத் திட்டத்தை (ELI) அங்கீகரித்தது. இருப்பினும், இது தொழிலாளர் சந்தையில் மூலதன-தொழிலாளர் சமச்சீரின்மை, முறையான-முறைசாரா துறைப் பிரிவு, மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளுக்கும் வேலைத்திறனுக்கும் இடையேயான தொடர்ச்சியான பொருத்தமின்மை ஆகியவை பெரும்பாலான தொழிலாளர்களை, குறிப்பாக குறைந்த திறன் கொண்டவர்களையும் முறைசாரா தொழிலாளர்களையும் புறக்கணிக்கின்றன என்று கடுமையான கவலைகளை எழுப்புகிறது.


திட்டத்தில் சிக்கல்கள்


வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான ஒரு பெரிய முயற்சியாக இருந்தாலும், வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டம் தொழிலாளர் சந்தைக்கு ஒரு முதலாளி-மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையைப் (employer-centric approach) பிரதிபலிக்கிறது. வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு, குறிப்பாக உற்பத்தித் துறையில், முதலாளிகளுக்கு நிதி ஊக்கத்தை வழங்குவதன் மூலம், இந்தத் திட்டம் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவித்தல் என்பது மானிய மூலதனத்தைப் போலவே தெரிகிறது. இது ஏற்கனவே உள்ள மூலதன-உழைப்பு சமச்சீரற்ற தன்மையை (capital-labour asymmetries) ஊக்குவிக்கக்கூடும். இதன் விளைவாக, இது தொழிலாளர்களைவிட முதலாளிகளின் பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்த வழிவகுக்கும். இது ஏற்கனவே உள்ள அதிக ஊதிய இடைவெளிகளை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, இது திட்டத்தின் நன்மைகளிலிருந்து விலக்கப்பட்டிருக்கும் முறைசாரா மற்றும் குறைந்த திறமையான பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.


இந்தியாவின் தொழிலாளர் சந்தை நெருக்கடியின் மையத்தில் வேலைகள் பற்றாக்குறை மட்டுமல்ல, கடுமையான திறன் பொருந்தாத தன்மையும் உள்ளது. 2024-2025-ஆம் ஆண்டுகளின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, பட்டதாரிகளில் 8.25% பேர் மட்டுமே தங்களின் தகுதிக்கு ஏற்ற பணிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதை காட்டுகிறது. 53% பட்டதாரிகளும், 36% முதுகலைப் பட்டதாரிகளும் குறைந்த திறன் அல்லது தொடக்கத் தொழில்களில் குறைந்த வேலையில் உள்ளனர். இந்த மோசமான சீரமைப்பு ஊதிய விளைவுகளில் மேலும் பிரதிபலிக்கிறது: சிறப்புப் பணிகளில் உள்ள பட்டதாரிகளில் 4.2% பேர் மட்டுமே ஆண்டுக்கு ரூ.4 லட்சம் முதல் 8 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார்கள். அதே சமயம் குறைந்த திறன் வேலைகளில் கிட்டத்தட்ட 46% பேர் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். இந்த புள்ளிவிபரங்கள் இந்தியாவின் கல்வி-வேலைவாய்ப்பு இணைப்புத்திட்டத்தின் (education-to-employment pipeline) திறமையின்மையை மட்டும் வெளிப்படுத்துகிறது. ஆனால், தொழில்துறை கோரும் திறன்கள் தொழிலாளர்களுக்கு இல்லாத ஒரு தொழிலாளர் சந்தையில் முதலாளியை மையமாகக் கொண்ட ஊக்கத்தொகைகளின் பயனற்ற தன்மையும் உள்ளது. இந்திய இளைஞர்களில் 4.9% (15-29 வயது) மட்டுமே முறையான தொழிற்கல்வி பெற்றுள்ளனர். வலுவான திறன் பயிற்சி திட்டங்கள் இல்லாமல், ELI திட்டம் வேலைகளுக்குத் தயாராக இல்லாத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முதலாளிகளுக்கு பணத்தை வழங்குகிறது.


இத்திட்டமானது, ஏற்கனவே முறையான பொருளாதாரத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட துறைகள்/நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க ஆர்வம் காட்டுகிறது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு (Employee’s Provident Fund Organisation (EPFO)) உதவுகிறது. இது திட்டத்தை நிர்வகிப்பதை எளிதாக்குகிறது என்றாலும், சமூகப் பாதுகாப்பு, முறையான ஒப்பந்தங்கள் அல்லது வேலைப் பாதுகாப்பு இல்லாத முறைசாரா வேலைகளில் பணிபுரியும் 90% தொழிலாளர்களை இது விட்டுவிடுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், அவற்றைத் தீர்ப்பதற்குப் பதிலாக கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துவதற்கான ஆபத்தை ஏற்படுத்தும். இந்த வரம்பு மற்றும் விலக்கு முறையான மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கு இடையிலான இடைவெளியை மேலும் மோசமாக்கக்கூடும். முறையான துறை அரசாங்க உதவியையும் பணத்தையும் பெறுகிறது. அதே நேரத்தில் முறைசாரா துறை புறக்கணிக்கப்படுகிறது. இந்தத் திட்டம், குறைந்த ஊதியம் பெறும், பதிவு செய்யப்படாத தொழிலாளர்களைப் புறக்கணித்து, பெரும்பாலும் பெரிய, பணக்கார நிறுவனங்களுக்கு அரசாங்கப் பணத்தை வழங்குவதன் மூலம் சமத்துவமின்மையை அதிகரிக்கக்கூடும். முறைசாரா துறையில் அரசின் கணிசமான முதலீடு, புதிய தொழிலாளர் சந்தையில் நுழைபவர்களில் பெரும்பாலோரை தொடர்ந்து உள்வாங்கிக் கொள்ளும் முறைசாரா பணியாளர்களைத் தவிர்த்து விடுகிறது.


மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்தத் திட்டம் மறைமுக வேலையின்மையை (disguised unemployment) இயல்பாக்கும் - மக்களுக்கு வேலைகள் இருக்கலாம். ஆனால், உண்மையில் பயனுள்ள வேலைகளைச் செய்யாமல் இருக்கலாம். இது விவசாயம் மற்றும் முறைசாரா சேவைகளில் அடிக்கடி நிகழ்கிறது. இது குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் குறைந்த ஊதியத்திற்கு வழிவகுக்கிறது. சில நிறுவனங்கள் மானியப் பணத்தைப் பெறுவதற்காக பழைய வேலைகளை ‘புதிய வேலைகள்’ என்றும் அழைக்கலாம்.


உற்பத்தியில் இந்தத் திட்டத்தின் சிறப்பு கவனம் ஒரு துறைசார்ந்த பார்வையற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. பொருளாதார மாற்றத்திற்கு உற்பத்தி மிகவும் முக்கியமானதாக இருந்தாலும், அதிகரித்த தானியங்கி மற்றும் தீவிர மூலதனத்தின் காரணமாக இந்தியாவில் அதன் வேலைவாய்ப்பு நெகிழ்ச்சித்தன்மை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இன்று, உற்பத்தி மொத்த வேலைவாய்ப்பில் 13%-க்கும் குறைவாகவே பங்களிக்கிறது. அதே, நேரத்தில் விவசாயம் மற்றும் சேவைகள் இணைந்து ஏறக்குறைய 70% பணியாளர்களைப் பயன்படுத்துகின்றன. நீட்டிக்கப்பட்ட ஊக்கத்தொகைகள் மூலம் உற்பத்திக்கு விகிதாசாரமற்ற சலுகைகளை வழங்குவதன் மூலம், இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத்  திட்டம் தொழிலாளர் தொகுப்பின் பெரிய பிரிவுகளை, குறிப்பாக பெண்கள், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்களை ஓரங்கட்டக்கூடும். இதன், காரணமாக அவர்கள் குறைந்த திறன் சேவைகள் அல்லது விவசாயத்தில் பணியமர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக ஏற்படக்கூடும். இந்தத் துறைசார் ஏற்றத்தாழ்வு, உற்பத்தித் துறை வேலைவாய்ப்பு உருவாக்கத்தின் முதன்மை இயந்திரமாக இருக்கும் என்ற காலாவதியான அனுமானத்தைக் குறிக்கிறது.


இதற்கு மாற்று என்னவாக இருக்க முடியும்?


ELI திட்டம் இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டத்தை நிவர்த்தி செய்யும் முயற்சியாக இருந்தாலும், அது தொழிலாளர் சந்தையில் உள்ள கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளை ஆழப்படுத்தும் என்று கொள்கை வடிவமைப்பு சுட்டிக்காட்டுகிறது. முறைசாரா துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாடு, வேலை தரத்தை மேம்படுத்துதல் அல்லது சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் இல்லாததையும் இது எடுத்துக்காட்டுகிறது. திறன் மேம்பாடு மற்றும் கல்வி சீர்திருத்தங்களில் முதலீடு குறைந்த திறமையுள்ள தொழிலாளர்களுக்கு பயனளிக்கும். மேலும், குறுகியகால வேலைவாய்ப்பு உருவாக்கத்திலிருந்து நீண்டகால நிலையான வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் மேம்பட்ட உற்பத்தித்திறனை நோக்கி அதிக முயற்சிகள் மாற்றப்பட வேண்டும். தொழிலாளர் உரிமைகள் மற்றும் பேரம் பேசும் சக்தியில் சமரசம் செய்யாமல் இதைச் செய்ய வேண்டும். இறுதியாக, வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது வேலைகளின் எண்ணிக்கையில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது. மாறாக, அது  அனைவருக்கும் பயனளிக்கும் நியாயமான மற்றும் நீண்டகால வளர்ச்சியை நோக்கமாகக் (sustainable development strategy) கொண்டிருக்க வேண்டும்.


அரோலிப்சா தாஸ் மற்றும் உபைத் முஷ்டாக் ஆகியோர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள SRM-பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் உதவிப் பேராசிரியர்கள்.



Original article:

Share:

நீதி மற்றும் சமத்துவம்: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பாலின பாகுபாடு குறித்து…

 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மிகவும் தேவைப்படும் நபர்களுக்கு அதை மறுக்கக் கூடாது.


இயல்பான நீதியின் கொள்கையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும்போது, அவை ஒரு குறிப்பிட்ட சமூக நோக்கத்தை நிறைவேற்றுகின்றன அல்லது ஒரு குறிப்பிட்ட தவறை சரி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் (National Organ and Tissue Transplant Organization (NOTTO)) சமீபத்திய ஆலோசனை, மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் பெண் நோயாளிகள் மற்றும் இறந்த நன்கொடையாளர்களின் உறவினர்கள் பயனாளிகளாக முன்னுரிமை பெறுவார்கள் என்று கூறுகிறது. இது பாலின வழக்கத்தை மீண்டும் எழுதும் பாதையில் செல்கிறது. NOTTO-வின் 2013-23 வரை பத்தாண்டு கால தரவு குறிப்பிடுவதைப் போல பாலின வேறுபாடு உள்ளது. NOTTO-வின் அறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டில், உறுப்பு தானம் செய்பவர்களில் பெரும்பாலானோர் (63%) பெண்கள் உள்ளனர். இருப்பினும், குறைவான பெண்களே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளைப் பெற்றனர். உதாரணமாக, இதய மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்களில் 24% பேரும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்களில் 47% மட்டுமே பெண்கள் இருந்தனர். 2023-ஆம் ஆண்டில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் பெண்கள் 37% மட்டுமே இருந்தனர். அதே நேரத்தில் கல்லீரலைப் பொறுத்தவரை, பெண்களின் பங்கு 30% ஆகும். கணைய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 26% பேர் மட்டுமே பெண்கள் இருந்தனர். பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் 56,509 உயிருள்ள உறுப்புகளில் 36,038, பெண்கள் தானம் செய்துள்ளனர். ஆனால், 17,041 பெண்கள் மட்டுமே மாற்று அறுவை சிகிச்சை பெற்றனர். இந்த நியாயமற்ற இடைவெளியை சரிசெய்ய, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை யாருக்கு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும்போது பெண்களுக்கு கூடுதல் முன்னுரிமை புள்ளிகளை வழங்க NOTTO பரிந்துரைத்தது.


இந்த நடவடிக்கை நிச்சயமாக பாராட்டத்தக்கது என்றாலும், இது செயல்முறை சிக்கல்களால் பாதிக்கப்படலாம். தற்போது, உறுப்பு ஒதுக்கீட்டு நெறிமுறைகள், ஆரோக்கிய அடிப்படையில் தவிர, ஒரு பெறுநரை மற்றொருவருக்கு முன்னுரிமை அளிக்க அனுமதிக்கவில்லை. எனவே, பெண்கள் மற்றும்/அல்லது முந்தைய உறுப்பு தானம் செய்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு முன்னுரிமை அளிக்க எந்த ஏற்பாடுகளும் இல்லை. NOTTO ஆலோசனைக்குப் பிறகு, 'நெருங்கிய உறவினர்கள்' என்ற வரையறையில் யாரைச் சேர்க்க வேண்டும், மற்றும் 1995 முதல் உடல் உறுப்பு தானம் செய்த அனைத்து குடும்பங்களும் பயனாளிகளாகக் கருதப்படுவார்களா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. 


 முக்கியமாக, இந்தியாவில் உறுப்புதான மோசடிகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படுவதால், இது முறைகேடான ஒதுக்கீடுகளை எளிதாக்கும் மற்றொரு முறைகேடான வழியாக மாறிவிடுமோ என்ற அச்சம் செயல்படுத்துபவர்களிடையே இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், குறிப்பாக ஆணாதிக்க விதிமுறைகளால் வடிவமைக்கப்பட்ட சமூகத்தில் மிகவும் உள்ளடக்கமாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், நல்லதைப் பாதுகாக்காமல், தேவையற்றவற்றுடன் தூக்கி எறிவது பொருத்தமற்றது. NOTTO இதை ஒரு பங்கேற்பு செயல்முறையாக மாற்றுவது, செயல்படுத்தலில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்புகளை உள்ளடக்குவது முக்கியம். மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைச் சட்டத்தின் கீழ் சரியான செயல்படுத்தலை உறுதி செய்வது மற்றும் குறைவாக உள்ள உறுப்பு வளத்திற்கு அணுகலை விரிவாக்குவது முக்கியம் என்றாலும், முதன்மையாக, உடல்நல அளவுருக்களின் அடிப்படையில் உறுப்பு தேவை அதிகமாக உள்ள எவருக்கும் மறுக்கப்படக்கூடாது என்ற கொள்கையை எப்போதும் கடைப்பிடிப்பது அவசியம்.



Original article:

Share:

பீகாரின் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தம் மற்றும் இந்தியா முழுவதும் அதன் அரசியல் தாக்கங்கள்: தரவுகள் -வர்கீஸ் கே. ஜார்ஜ், விக்னேஷ் ராதாகிருஷ்ணன், நிதிகா பிரான்சிஸ்

 பீகாரைச் சேர்ந்த ஒரு குடிமகன் தங்கள் மாநிலத்தில் வாக்களிப்பதும், மகாராஷ்டிரா அல்லது கேரளாவில் வாக்களிப்பதும் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும்.


பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) புலம்பெயர்ந்த வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்படலாம் என்ற கவலைகளை எழுப்பியுள்ளது. பீகார் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய இரண்டு முக்கிய மாநிலங்களில் இருந்து மக்கள் அதிக அளவில் இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்த இடம்பெயர்வு நாடு முழுவதும் தெரியும். கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் இது குறிப்பாகத் தெளிவாகத் தெரிந்தது. இருப்பினும், இந்த இடம்பெயர்வை பதிவு செய்ய அதிக அதிகாரப்பூர்வ தரவு இல்லை. கடைசி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011-ஆம் ஆண்டில்  நடந்தது. 2027-ஆம் ஆண்டு  மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கடந்த 15 ஆண்டுகளின் இந்த இடம்பெயர்வு முறைகளைப் (migration patterns) பதிவு செய்யும். ஆனால், மக்கள் எங்கு செல்கிறார்கள், எங்கிருந்து வருகிறார்கள் என்பது பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும் மாற்றுத் தரவுத் (Proxy data) தொகுப்புகள் மற்றும் சமீபத்திய மாதிரி ஆய்வுகள் உள்ளன.


பீகார் மாநிலத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதே சிறப்பு தீவிர திருத்த நோக்கங்களில் ஒன்றாக இந்திய தேர்தல் ஆணையம் வைத்துள்ளது. இடம்பெயர்ந்தோர் வாக்களிக்கும் உரிமைகள் குறித்த கவலை தவறானது. இடம்பெயர்ந்தோர் எங்கிருந்து வந்தார்கள் என்பதற்கு அல்ல. தற்போது, அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து வாக்களிக்க வேண்டும். பீகாரின் சிறப்பு தீவிர திருத்தம் என்பது குடியுரிமை மற்றும் வசிப்பிடத்தின் அடிப்படையில் யார் எங்கு வாக்களிக்கலாம் என்பதைக் கண்டறியும் ஒரு சோதனையாகும். மக்கள்தொகை கணக்கியல் (demographic accounting) மற்றும் பொறியியல் இரண்டிலும் இந்த சோதனை பீகாரை மாநில தேர்தலைவிட பல்வேறு அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தும்.


தொகுதிகளின் மக்கள்தொகை அமைப்பை மாற்றுவது தேர்தல் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கான ஒரு வழியாகும். பீகாரைச் சேர்ந்த ஒரு குடிமகன் பீகாரில் வாக்களிப்பதும், மகாராஷ்டிரா அல்லது கேரளாவில் வாக்களிப்பதும் தேசிய அரசியலில் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். வசிப்பிடம் மற்றும் வாக்களிப்பு தொடர்பான சட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், மக்கள்தொகை மாற்றங்களின் அரசியல் தாக்கத்தை விரைவுபடுத்த இந்திய தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது.


மக்கள்தொகை அதிகமான இடங்களிலிருந்து குறைவான இடங்களுக்கு நகர்கிறார்கள்; மேலும், அவர்கள் மோசமான பொருளாதார வாய்ப்புள்ள இடங்களிலிருந்து சிறந்த வாய்ப்புள்ள இடங்களை நோக்கி நகர்கிறார்கள். 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை அந்த நேரத்தில் எங்கு, எத்தனை பேர் இடம்பெயர்ந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. சமீபத்திய மாற்றுத் தரவுகளும் (Proxy data) இதை ஆதரிக்கின்றன. சரியான எண்கள் நமக்குத் தெரியாவிட்டாலும், மக்கள் எங்கு செல்கிறார்கள், எங்கிருந்து வருகிறார்கள் என்பதற்கான பொதுவான போக்கைப் புரிந்துகொள்ள இந்தத் தரவு நமக்கு உதவுகிறது.


பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் (Economic Advisory Council to the Prime Minister (EAC-PM)) அறிக்கையின்படி, முன்பதிவு செய்யப்படாத ரயில் பயணத்திலிருந்து முதல் குறிப்பு வருகிறது. இந்த ஆய்வறிக்கையில் ஒரு பின்னடைவு பகுப்பாய்வு, முன்பதிவு செய்யப்படாத ரயில் பயணத்திற்கும் புலம்பெயர்ந்த மக்களுக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பைக் காட்டுகிறது. 2023-ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவிற்கு முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளுடன் வரும் பயணிகளின் எண்ணிக்கையை, அவர்களின் புறப்படும் நிலையங்களின் அடிப்படையில் காட்டுகிறது. மாநிலத்தின் எல்லை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பெரும்பாலும் இந்த முறையைப் பயன்படுத்தி எல்லையைக் கடக்கிறார்கள். அதே, நாளில் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, எல்லையைப் பகிர்ந்துகொள்ளாத மாநிலங்களுக்கு இடையிலான முன்பதிவு செய்யப்படாத ரயில் பயணம் இடம்பெயர்வுக்கு வலுவான மாற்றாக மாறுகிறது. முன்பதிவு செய்யப்படாத பயணசீட்டுகளைக் கொண்ட பயணிகளில் 50% பேர் மகாராஷ்டிராவிலிருந்து வருகிறார்கள். அதைத் தொடர்ந்து 12.3% பேர் குஜராத்திலிருந்தும் 5.4% பேர் கர்நாடகாவிலிருந்தும் வருகிறார்கள் - இரண்டும் (விளக்கப்படம் 1-ல்) தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவிற்கு இடம்பெயர்ந்தோரை அனுப்பும் முதல் ஐந்து மாநிலங்களில் பீகார் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளன. ஒவ்வொன்றும் மொத்த இடம்பெயர்ந்தோரில் 7%-க்கும் அதிகமாக உள்ளனர்.


மற்றொரு அளவீடு சேமிப்புக் கணக்கு இருப்புகளுக்கும் நடப்புக் கணக்கு இருப்புகளுக்கும் உள்ள விகிதமாகும். ஒரு நடப்புக் கணக்கு, பொதுவாக வணிகங்களால் இயக்கப்படுவது, சேமிப்புக் கணக்கு அளிக்காத அம்சங்களை வழங்குகிறது. குறைந்த சேமிப்பு-நடப்புக் கணக்கு விகிதங்களைக் கொண்ட மாவட்டங்கள் பொதுவாக இடம்பெயர்ந்தோரை ஈர்க்கும் உயர் பொருளாதார செயல்பாடுகளைக் கொண்ட நகரங்களாகும். எடுத்துக்காட்டாக, மும்பை (0.56), டெல்லி (2.24) மற்றும் பெங்களூரு (2.21) ஆகியவை தேசிய சராசரியான 3.72-ஐ விட மிகக் குறைந்த விகிதங்களைக் கொண்டுள்ளன.


இதற்கு நேர்மாறாக, ஒப்பீட்டளவில் அதிக சேமிப்பு-நடப்புக் கணக்கு (savings-to-current account) விகிதங்களைக் கொண்ட நகரங்கள் வரையறுக்கப்பட்ட பொருளாதார செயல்பாடுகளைக் கொண்டவையாகக் கருதப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரின் பல மாவட்டங்கள் அதிக விகிதத்தைக் கொண்டுள்ளன. இது சாத்தியமான வெளியேற்ற இடப்பெயர்வைக் குறிக்கிறது. வரைபடம் 2, 2017-18 முதல் 2022-23 வரை சேமிப்புக் கணக்கு வைப்புகளுக்கும் நடப்புக் கணக்கு வைப்புகளுக்கும் உள்ள மாவட்ட அளவிலான சராசரி விகிதத்தைக் காட்டுகிறது. சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற பல தெற்கு தலைநகரங்களும், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் போன்ற தொழில்துறை மையங்களும் நீல நிறத்தில் தனித்து நிற்கின்றன. இது சாத்தியமான உள்நுழைவு இடப்பெயர்வைக் (in-migration)  குறிக்கிறது.


2024ஆம் ஆண்டு  நவம்பர்-டிசம்பர் மாதங்களில்  நடத்தப்பட்ட தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் ஆய்வில், சென்னை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள இடம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பற்றி ஆய்வு செய்தது. இந்த தொழிலாளர்களில் 35% பேர் பீகாரிலிருந்தும், 20% பேர் ஒடிசாவிலிருந்தும், 16% பேர் வடகிழக்கிலிருந்தும் வந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது.(படம் 3).

மற்றொரு தரவுத் தொகுப்பும் இதே போக்கைக் காட்டுகிறது. தொற்றுநோய் ஊரடங்கின்போது, பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு ரயிலில் பயணம் செய்தனர். பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மைக் கழக இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த பகுப்பாய்வு, தமிழ்நாட்டிலிருந்து வெளியேறும் பெரும்பாலான (30%) பயணிகள் பீகார் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டதை காட்டுகிறது.


பீகாரில் நடத்தப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் பயிற்சி பற்றி என்ன தரவு காட்டுகிறது

இந்த இடம்பெயர்ந்த மக்கள் ஒரு படிப்படியான செயல்முறையின் மூலம் தாங்கள் குடியேறும் மாநிலங்களில் (host States) நிரந்தர குடியிருப்பாளர்களாக மாறுகிறார்கள். ஆனால், வசிப்பிட விதி அமலாக்கம் இந்த செயல்முறையை துரிதப்படுத்தக்கூடும். அரசியல் தன்மை மற்றும் தேர்தல் இயக்கவியல் மக்கள்தொகையின் மாறும் அமைப்புக்கு ஏற்ப பதிலளிக்கிறது. டெல்லி மற்றும் மும்பையில், இந்தி பேசும் பகுதியிலிருந்து வரும் இடம்பெயர்ந்தோர் இப்போது ஒரு தீர்மானகரமான அரசியல் தொகுதியாக உள்ளனர். மேலும், கட்சிகள் அதற்கேற்ப பதிலளிக்கின்றன. அமெரிக்கா மற்றும் ஐக்கிய ராச்சியத்திலும், அதிகமான இந்திய மக்கள் அங்கு இடம்பெயர்ந்ததால், இந்திய பின்னணியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் முக்கியத்துவம் பெற்றனர். பீகார் சிறப்பு தீவிர திருத்த அரசியல், பீகார் மாநில எல்லைகளைத் தாண்டி பல்வேறு இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆதாரம்: பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (Economic Advisory Council to the Prime Minister (EAC-PM)) அறிக்கை மற்றும் தமிழ்நாடு மாநில திட்டக்குழு.

Original article:

Share:

ரஷ்ய எண்ணெய்: பொருளாதாரத்திலிருந்து அரசியலைப் பிரித்தல் -ரிச்சா மிஸ்ரா

 ரஷ்ய எரிசக்தியை வாங்கியதற்காக டிரம்ப் அளித்த தண்டனை இந்தியாவிற்கு சிக்கல்களை உருவாக்கியுள்ளது. பொருளாதார நலன்களை மையமாகக் கொண்ட ஒரு நடைமுறைக் கொள்கை இந்தியாவிற்குத் தேவை.


ரஷ்யா மற்றும் அமெரிக்கத் தலைவர்கள் அலாஸ்காவில் சந்திக்கவுள்ளதால், ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் நிகழ்வுகளை அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் எரிசக்தித் துறையினர் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். அங்கு எடுக்கப்படும் எந்த முடிவும் எண்ணெய் சந்தையைப் பாதிக்கலாம்.


இதற்கிடையில், புதைபடிவ எரிபொருளின் மிகப்பெரிய நுகர்வோரில் ஒருவராகவும், ரஷ்யாவுடனான அதன் உறவுகளுக்காகவும் இந்த மோதலில் இந்தியா சிக்கியுள்ளது. அமெரிக்காவின் அபராத அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியா இதுவரை தனது அரசியல் அறிக்கைகளை அதன் பொருளாதார நலன்களிலிருந்து பிரித்து வைத்துள்ளது.


ஆகஸ்ட் 6-ஆம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் காரணமாகவே இந்தியா மீதான வரிகள் விதிக்கப்படுவதாக அவர் கூறினார். ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்யும் பிற நாடுகளுக்கும் இதேபோன்ற வரிகளை விதிக்க இந்த உத்தரவு ஒரு அமைப்பையும் அமைத்தது.


இந்தியா தற்போது ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்து வருவதாக டிரம்ப் கூறினார். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட "தேசிய அவசரநிலை" என்று அவர் அழைத்ததற்கு பதிலளிக்கும் விதமாக, ஆகஸ்ட் 27 முதல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரியை அறிவித்தார்.


வாண்டா இன்சைட்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வந்தனா ஹரி, இந்த அமெரிக்க நடவடிக்கை, நியாயத்தையும் தர்க்கத்தையும் புறக்கணிப்பதாகவும், உலகளாவிய எண்ணெய் சந்தைகளின் சிக்கல்களைப் பற்றிய மோசமான புரிதலைக் காட்டுவதாகவும் கூறினார்.

                     

ரஷ்யாவும் அமெரிக்காவும் மோதலில் ஈடுபட்டுள்ளன. மேலும், இந்தியா நடுவில் சிக்கிக் கொள்ளாமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதிக எண்ணெய் சேமிப்பை உருவாக்குதல், பசுமை எரிசக்திக்கு மாறுதல், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் அதிக நாடுகளிலிருந்து எண்ணெய் வாங்குதல் ஆகியவை இந்தியாவிற்கான பொதுவான இலக்குகளாகும். இருப்பினும், இந்தியா சவால்களை எதிர்கொள்கிறது.


ரஷ்யா, ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, குவைத் மற்றும் நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து இந்தியா எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டு எண்ணெயை வாங்குகிறது. அதன் எண்ணெய் இறக்குமதி ஆதாரங்கள் முன்பு 27 நாடுகளில் இருந்து இப்போது 40 நாடுகளாக வளர்ந்துள்ளன. ரஷ்யாவின் எண்ணெயை வாங்கும் ஒரே நாடு இந்தியா  மட்டும் அல்ல மற்ற நாடுகளும் எண்ணெய் இறக்குமதி செய்கின்றன.


டிசம்பர் 2022ஆம் ஆண்டு முதல் ஜூலை 2025 வரை, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கி ஆகியவை முக்கிய வாங்குபவர்களாக இருந்தன. ரஷ்யா தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 47% சீனாவிற்கும், 38% இந்தியாவிற்கும், தலா 6% ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கிக்கும் அனுப்புகிறது.


LNG  இறக்குமதிகள்


ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஆர்தர் டி. லிட்டில் (ADL) நிறுவனமும், எரிசக்தி மற்றும் பயன்பாட்டுத் தலைவருமான ட்ரங் கி, இன்றைய நிச்சயமற்ற சூழ்நிலையில், நாடுகளும் வணிகங்களும் மிகவும் மீள்தன்மை கொண்டவர்களாகவும், எதிர்காலத் திட்டங்களைப் பயன்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார். குறுகியகால கணிப்புகள் கடினமாக இருந்தாலும், பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக இருப்பது முக்கியம்.


மலிவான ரஷ்ய எண்ணெயை வாங்குவதன் மூலம் இந்தியா அமெரிக்காவிலிருந்து LNG இறக்குமதியை அதிகரிக்கலாம். மேலும், எண்ணெய் இறக்குமதியில் சுமார் 20%-ஆகக் குறைக்கலாம் என்று அவர் பரிந்துரைத்தார். இது இந்தியா அமெரிக்காவின் அழுத்தத்தைக் குறைக்கவும், அதன் எரிசக்தி மாற்ற இலக்குகளை மேம்படுத்தவும், பல நாடுகளுடன் சமநிலையான உறவுகளைப் பேணவும் உதவும்.


தற்போதைய போக்குவரத்து வழிகளுடன் ஒப்பிடும்போது அலாஸ்கா பாதை வழியாக LNG  இறக்குமதியை அதிகரிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.


புவிசார் அரசியல் நிபுணரும் எழுத்தாளருமான ஸ்வஸ்தி ராவ், இந்தியா உத்தி சார்ந்த பெட்ரோலிய இருப்புகளில் (strategic petroleum reserves (SPRs)) கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். அதில் தற்போது, மூன்று செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும், இரண்டு கட்டுமானத்தில் உள்ளன.


இந்தியாவுக்கு ஒரு நாளைக்கு 5.5 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் தேவைப்படுகிறது. அதில் 88% இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி நிறுத்தப்பட்டால் மூன்று SPRகள் 10 நாட்கள் காப்புப்பிரதியை வழங்க முடியும். மேலும் இரண்டு SPRகள் அழுத்தத்தைக் குறைக்க உதவும். ஆனால், பிரச்சினையை முழுமையாகத் தீர்க்காது.


நீண்டகால ஒப்பந்தங்கள் கடைசிநேர அழுத்தங்களைத் தவிர்க்க உதவும் என்றும், இந்தியா குறைந்த ஆபத்துகள் கொண்ட எண்ணெய் ஆதாரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.


இதுபோன்ற சூழ்நிலைகளில், இந்தியாவால் அதிகம் செய்ய முடியாது என்றும், இது டிரம்பின் சமீபத்திய கட்டண முடிவுகளை ஏற்றுக்கொள்வதை கடினமாக்குகிறது என்றும் ஹரி கூறினார். நடைமுறை அணுகுமுறை, இராஜதந்திர தீர்வுகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதும், பல்வேறு வகையான கச்சா எண்ணெய் ஆதாரங்களைப் பராமரிப்பதும் ஆகும்.


நடைமுறை அணுகுமுறை


எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் எரிசக்தித் துறை உலகளாவிய நிச்சயமற்ற தன்மையைக் கையாள்வதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் ட்வீட் செய்துள்ளார்.


உலகின் மூன்றாவது பெரிய எரிசக்தி நுகர்வோர் நாடான இந்தியா, ஒரு நாளைக்கு சுமார் 5.4 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயைப் பயன்படுத்துகிறது. இந்தியாவின் எரிசக்தி உத்தி நடைமுறை, மீள்தன்மை மற்றும் நியாயத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கூறினார்.


கச்சா எண்ணெய் இறக்குமதியை பல்வகைப்படுத்துதல், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல், மாற்று எரிபொருட்களை உருவாக்குதல், எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி நகர்தல், மற்றும் 2028-ஆம் ஆண்டுக்குள் சுத்திகரிப்பு திறனை 310 MMTPA ஆக உயர்த்துவதன் மூலம் உலகளாவிய சுத்திகரிப்பு மையமாக மாறுவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு படிகள் மூலம் புது தில்லி உலகளாவிய எரிசக்தி சவால்களை நிர்வகித்து வருவதாக அவர் விளக்கினார். 2030-ஆம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலர் தொழிலாக மாற்ற பெட்ரோ கெமிக்கல் திறனை விரிவுபடுத்தவும் நாடு திட்டமிட்டுள்ளது.


இருப்பினும், இந்த இலக்குகள் நேரம் எடுக்கும் என்றும், அரசியல் அறிக்கைகளை பொருளாதார முடிவுகளிலிருந்து தனித்தனியாக வைத்திருக்க அரசாங்கம் கோரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Original article:

Share:

பத்தாண்டுகளுக்குப் பிறகு, இந்தியா-வங்காளதேச நில எல்லை ஒப்பந்தம் மற்றும் அது பலருக்கு அளிக்கும் தனித்துவமான குடியுரிமை நிலைகளைப் புரிந்துகொள்வது. -அனிந்திதா கோஷ்

 2015-ம் ஆண்டின் நில எல்லை ஒப்பந்தம் (Land Boundary Agreement (LBA)) ஐம்பதாண்டுகளாக இந்தியா-வங்காளதேச எல்லைப் (India-Bangladesh border) பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருந்தது. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் முழு வரலாறு மற்றும் இந்த எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு அதன் தாக்கம் பற்றி மிகச் சிலரே அறிவார்கள்.


இந்த ஆண்டு ஜூன் மாதம் தேசிய தலைநகரில் "சட்டவிரோத வங்காளதேச குடியேறிகள்" (“illegal Bangladeshi immigrants”) மீது டெல்லி காவல்துறை நடத்திய நடவடிக்கையின் போது நாற்பது வயதான ரெசால் ஹக் கைது செய்யப்பட்டார். வங்காளதேசத்தில் உள்ள தாஷியர்ச்சாராவின் முன்னாள் இந்தியப் பகுதியில் வசிக்கும் ஹக், இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையே நில எல்லை ஒப்பந்தம் (LBA) கையெழுத்தானதைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து டெல்லியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனது இந்திய குடியுரிமையை நிரூபிப்பதற்காக, டாக்காவில் உள்ள இந்திய உயர் ஆணையத்தால் வழங்கப்பட்ட சில ஆவணங்களை அவர் வழங்கினார். ஒரு வருடத்திற்கு முன்பு டெல்லிக்கு இடம் பெயர்வதற்கு முன்பு கூச் பெஹாரில் அரசு நிதியுதவி பெற்ற தற்காலிக குடியேற்றத்தில் தங்கியிருந்ததையும் விவரித்தார். அடுத்தநாள் அவர் விடுவிக்கப்படுவதற்கு முன்பு அவரது குடியுரிமை நிலையின் சிக்கலான தன்மையைப் புரிந்து கொள்ள காவல்துறைக்கு பல மணிநேரம் ஆனது.


இதில் ஹக்கின் வழக்கும் விதிவிலக்கல்ல. இந்தியா-வங்காளதேச எல்லை ஒப்பந்தத்தின் சிக்கலான மரபுரிமையைச் சுற்றி தொடர்ந்துவரும் குழப்பத்தை இது எடுத்துக்காட்டுகிறது.


கடந்த ஐம்பதாண்டுகளாக, இந்தியாவும் வங்காளதேசமும் அண்டை நாடுகளாக இருந்துவரும் நிலையில், அவர்கள் பல சர்வதேச எல்லைப் பிரச்சினைகளை இராஜதந்திரம் மூலம் தீர்த்து வைத்துள்ளனர். இந்த செயல்பாட்டில் ஒரு முக்கிய சாதனையாக நில எல்லை ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டது. இது ஜூன் 6 அன்று அதன் பத்தாவது ஆண்டு நிறைவைக் குறித்தது. இந்த ஒப்பந்தத்தின்கீழ் நிலப்பரப்புகளின் பௌதீக பரிமாற்றம் (physical exchange) ஜூலை 31, 2015 அன்று நடந்தது. இது 6,000 கிமீ நீளமான சர்வதேச எல்லையை, நான்காவது உலக எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இரு நாடுகளுக்கும் ஒரு அரிய மற்றும் வரலாற்று நிகழ்வாகும். இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் வரலாறு மற்றும் இந்த எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களை இது எவ்வாறு பாதித்தது என்பது பற்றியும் அவர்களுக்கு அதிகம் தெரியாது.


நில எல்லை ஒப்பந்தம் (LBA) 2015-ல் என்ன பரிமாறப்பட்டது?


2015ஆம் ஆண்டின் நில எல்லை ஒப்பந்தம் (LBA) நீண்ட தாமதத்திற்குப் பிறகு, 17,160 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட 111 இந்திய நிலப்பகுதிகளை வங்காளதேசத்திற்கு மாற்ற வழிவகுத்தது. இதனுடன் 7,110 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட 51 வங்காளதேச நிலப்பகுதிகளையும் இந்தியாவிற்கு மாற்றியது. கூடுதலாக, அசாம், மேற்கு வங்காளம், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் எல்லைகளில் அமைந்துள்ள 14 பகுதிகளைத் இந்தியா தக்க வைத்துக் கொண்டது. இந்த உடன்படிக்கையானது, இந்த உறைவிடங்களில் வசிக்கும் சுமார் 52,000 பேரின் குடியுரிமை மற்றும் பயன்பாட்டு உரிமைகளை (adverse possessions) தீர்மானித்தது. இந்த குடியிருப்பாளர்கள் தங்களுடைய குடியுரிமையை தேர்வு செய்து, இடமாற்றம் செய்ய அல்லது அதே இடத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டனர்.





Adverse possession : பயன்பாட்டு உரிமை  என்பது ஒரு சட்டக் கொள்கையாகும். இதில் ஒரு நபர் நிலத்தை வெளிப்படையாகவும், தொடர்ச்சியாகவும், உரிமையாளரின் அனுமதியின்றி ஒரு சட்டப்பூர்வ காலத்திற்கு, பெரும்பாலும் 12 ஆண்டுகளுக்கு வைத்திருப்பதன் மூலம் அதன் உரிமையைப் பெறலாம். இந்தக் கோட்பாடு, உண்மையான உரிமையாளரின் ஆட்சேபனை இல்லாமல், நிலத்தை ஆக்கிரமித்து, சொந்தமாகப் பயன்படுத்தும் ஒருவர், இறுதியில் சட்டப்பூர்வ உரிமையைப் பெற அனுமதிக்கிறது.


எதிர் நிலப்பரப்பு (adverse possessions) என்பது ஒரு தேசத்தின் சர்வதேச எல்லைக்கு அருகிலுள்ள சிறிய பிரதேசங்கள் மற்றும் அந்த நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் சட்டப்பூர்வமாக அந்தப் பகுதிகள் எல்லையைத் தாண்டி அண்டை நாட்டிற்குச் சொந்தமான பகுதிகளாகும். இதில் வாழும் மக்கள் சர்வதேச எல்லைக்கு அப்பால் நிலத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவர்கள் குடிமக்களாக இருக்கும் பட்சத்தில் நாட்டின் சட்டங்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்கள் வாக்களிக்கும் உரிமை உட்பட அனைத்து சட்ட உரிமைகளையும் அனுபவிக்கிறார்கள். 


இந்தியாவைப் பொறுத்தவரை, மேகாலயா-வங்காளதேச எல்லையில் உள்ள லோபச்சேரா-நன்செரா (Lobachera-Nuncherra), பிர்த்விஹா (Pyrdwiha), நல்ஜூரி (Naljuri), லிங்காட் (Lyngkhat) மற்றும் டவ்கி-தமாபில் (Dawki-Tamabil) போன்ற பிரதேசங்கள், அஸ்ஸாம்-வங்காளதேச எல்லையில் பல்லத்தல் (Pallathal) மற்றும் போரோய்பாரி (Boroibari), திரிபுரா-வங்காளதேச எல்லையில் சந்தன்நகர் (Chandannagar), தெற்கு பெருபாரி, பத்ரிகாமா, தென் பெருபாரி, பத்ரிஹார் மேற்கு வங்காளம்-வங்காளதேச எல்லையில் உள்ள பகுரியா மற்றும் சார் மஹிஸ்குண்டி ஆகியவை எதிர் நிலப்பபரப்பு பகுதிகளாக இருந்தன. பிராந்திய எல்லையில் தெளிவு இல்லாததால் இந்த பகுதிகள் நீண்ட காலமாக பதற்றம் மற்றும் மோதல்கள் உருவாகின்றன.


ஒரு நாட்டின் பகுதிகள், மற்றொரு நாட்டால் முழுமையாக சூழப்பட்ட பகுதிகள் enclave ஆகும். கூச் பெஹார் சமஸ்தானத்திற்கும் வங்காள மாகாணத்தில் உள்ள ரங்பூர் மாவட்டத்திற்கும் இடையில் இதுபோன்ற 162 பகுதிகள் பகிரப்பட்டன. உள்ளூரில், அவை சிட்மஹால் (நிலத் திட்டுக்கள்) என்று அழைக்கப்பட்டன. பிரெண்டன் வைட்டின் விரிவான ஆய்வின்படி, கூச் பெஹார் 1950 ஆம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தபோது, அந்தப் பகுதியின் சரியான வரைபட அடிப்படையிலான ஆய்வு இல்லாமல் இந்த enclave உருவாக்கப்பட்டன. 1713ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் பதிவுசெய்யப்பட்ட கூச் பெஹாரின் எல்லைகளைப் பயன்படுத்தி ராட்க்ளிஃப் கமிஷன் (Radcliffe Commission) இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வரைந்தது.


இந்தியாவில் உள்ள அனைத்து வங்காளதேச பகுதிகளும் மேற்கு வங்காளத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் அமைந்துள்ளன. அதே சமயம், வங்காளதேசத்தில் உள்ள இந்திய பகுதிகள் ரங்பூர் பிரிவின் நான்கு மாவட்டங்களில் பரவியுள்ளன. அவை லால்மோனிர்ஹாட் (59), பொன்சோகர் (36), குரிகிராம் (12), மற்றும் நில்பமாரி (4) போன்றவை ஆகும். இவற்றில் சில நிலப்பகுதிகளில் சிலவற்றிற்குள், எதிர்-நிலப்பகுதிகளும் (counter-enclaves) இருந்தன.

இந்தப் பகுதிகள் வெளிநாட்டுப் பிரதேசத்திற்குள் அமைந்துள்ளன. மேலும், அவர்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு துண்டிக்கப்பட்டனர். இந்த நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த இடங்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களுடன் வலுவான உறவுகளையும் மதப் பிணைப்புகளையும் கொண்டுள்ளனர்.  இதனால் அவர்கள் தங்கள் சொந்த நாட்டை விட இந்த இடத்தைப் பிடிக்கும் நாட்டுடனேயே அதிகம் தொடர்பு கொண்டனர். நில எல்லை ஒப்பந்தம் (LBA) 2015, 'இந்தப் பகுதிகளின் பரிமாற்றம் என்பது ஒரு கற்பனையான நிலப் பரிமாற்றத்தை மட்டுமே குறிக்கிறது' என்று சரியாகச் சுருக்கமாகக் கூறுகிறது.


இந்தியா மற்றும் வங்காளதேசம் மூன்று இடங்களில் நிலையான எல்லை இல்லாமல் சுமார் 6.1 கி.மீ நிலத்தைக் கொண்டிருந்தன. அவை, மேற்கு வங்காளத்தில் டைகட்டா-56, திரிபுராவில் முஹுரி நதி–பெலோனியா, மற்றும் அசாமில் லதிதிலா–துமாபரி போன்ற பகுதிகளாகும். பருவகாலங்களுக்கு ஏற்ப ஆறுகள் பாதை மாறியதாலும், அடர்ந்த காடுகள் எல்லை நிர்ணயத்தை கடினமாக்கியதாலும் இந்தப் பகுதிகள் சர்ச்சைக்குரியதாகவே இருந்தன.



நில எல்லை ஒப்பந்தம் (LBA) 2015-ன் வரலாறு


1947இல், இந்திய துணைக்கண்டம் இந்தியா மற்றும் பாகிஸ்தானாக பிரிக்கப்பட்டபோது, ராட்கிளிஃப் விருது (Radcliffe Award) புதிய நாடுகளின் எல்லைகளை வரையறுத்தது. வங்காள எல்லை ஆணையம் (Bengal Boundary Commission) இந்தியாவின் வடகிழக்கு எல்லைகளையும், மேற்கு வங்காள மாநிலத்தையும், சமஸ்தானமான கூச் பெஹார் எல்லை வரை வரையறுத்தது. கிழக்கு மற்றும் மேற்கு வங்கம் இடையேயான சில எல்லைப் பிரச்சனைகள் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனை தீர்ப்பாயத்தில் 1948இல் டெல்லியில் நடைபெற்ற தன்னாட்சிகளுக்கு இடையேயான மாநாட்டில் (Inter-Dominion Conference) எழுப்பப்பட்டன. தீர்ப்பாயத்தில் ஸ்வீடிஷ் சட்ட வல்லுநரான அல்கோட் பேக்கே உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் ராட்கிளிஃப் விருது (Radcliffe Award) மற்றும் வங்காள எல்லைக் குழுவின் (Bengal Boundary Commission) எல்லைக்கான வரைபடங்களைப் புதுப்பிக்க ஆய்வு செய்து அதை பேக்கே விருது (Bagge Award) என்று அழைத்தனர்.


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைகளை வரையும்போது நிலப்பகுதிகள் (Enclaves) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. 1950ஆம் ஆண்டில் கூச் பெஹார் சமஸ்தானம் இந்தியாவில் இணைக்கப்பட்டபோது அவை தீர்ப்பாயத்தில் சேர்க்கப்பட்டன. தீர்ப்பாயம் இந்த விஷயத்தை மீண்டும் பரிசீலித்து, இந்த பிரதேசங்களை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தது. எல்லை நிர்ணய பிரச்சினையை இந்திய உச்ச நீதிமன்றம் விசாரித்து, பேக்கே விருதை (Bagge Award) நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் தேவை என்று தீர்ப்பளித்தது.


1958ஆம் ஆண்டில், இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் பிரதமர் பெரோஸ் கான் நூன் ஆகியோர் நேரு-நூன் ஒப்பந்தத்தில் (Nehru-Noon Agreement) கையெழுத்திட்டனர். பெருபாரி யூனியன் எண் 12 ஐ கிழக்கு பாகிஸ்தானுக்கு மாற்றுவதும் இதில் அடங்கும். இருப்பினும், இந்தியாவில் சுமார் 10,000 ஏக்கர் கூடுதல் நிலப்பரப்புக்கான ஒப்பந்தத்திற்கு எதிராக பொது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனால், கூடுதல் பகுதிகளை பாகிஸ்தானுக்கு மாற்ற அரசியலமைப்புத் திருத்தம் தேவை என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


1960இல், இந்திய நாடாளுமன்றம் நிலத்தை மாற்றுவதற்கு அரசியலமைப்பின் 368வது பிரிவைத் திருத்தியது. 1959ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை மற்றும் பேக்கே விருதின் (Bagge Award) தீர்ப்பின் படி எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. இருப்பினும், மேற்கு வங்க மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பு மற்றும் மோசமடைந்து வரும் இந்தியா-பாகிஸ்தான் உறவின் காரணமாக பிரதேசங்கள் பரிமாறப்படவில்லை.


1965ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, நில பரிமாற்றத்திற்கான அதிகாரப்பூர்வ முறை நிறுத்தப்பட்டது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான குடியேற்றமும் நிறுத்தப்பட்டது. ஆனால் எதிர்காலத்தில் இந்தப் பகுதிகள் மாற்றப்படும் என்ற நம்பிக்கையில், பல முஸ்லிம்கள் இன்னும் இந்திய எல்லைக்குள் அமைந்துள்ள கிழக்கு பாகிஸ்தானிய நிலப்பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.


1971இல் வங்காளதேசம் சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்தியாவும் வங்காளதேசமும் மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. 1972இல், ஷேக் முஜிபுர் ரஹ்மானும் இந்திரா காந்தியின் நட்பும், ஒத்துழைப்பு மற்றும் அமைதி ஒப்பந்தத்தில் (Treaty of Friendship, Cooperation and Peace) கையெழுத்திட்டனர். பொதுவாக இந்திரா-முஜிப் ஒப்பந்தம் (Indira-Mujib Treaty) என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம் இந்தியா-வங்காளதேச எல்லைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முதல் படியாகும்.


இரு நாடுகளின் பிரதமர்களும் 1974இல் நில எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் பின்னர், வங்காளதேசம் அதன் அரசியலமைப்பைத் திருத்தியது. இது நிலப்பகுதிகள் (enclaves) மற்றும் எதிர் நிலப்பரப்புகளாக (adverse possessions) மாற்றுவதை சட்டப்பூர்வமாக்கியது. தோஹோகிராம்- அங்கோர்போட்டா பகுதிகளை வங்காளதேசத்துடன் இணைக்க டின் பிகா தளவாடங்களை (Tin Bigha Corridor) குத்தகைக்கு இந்தியா ஒப்புக்கொண்டது. அதே நேரத்தில், வங்காளதேசம் தெற்கு பெருபாரியை இந்தியாவுக்கு மாற்ற ஒப்புக்கொண்டது. இதன் அடிப்படையில், வங்காளதேசம் தெற்கு பெருபாரியை உடனடியாக இந்தியாவிற்கு மாற்றியது. அதே நேரத்தில் இந்தியா LBA 1974யை நிறைவேற்ற அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்ய வேண்டியிருந்தது.


இருப்பினும், 1975இல் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படுகொலை மற்றும் வங்காளதேசத்தின் தலைமைத்துவ மாற்றங்கள் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தியது. இதனால், 10,000 ஏக்கர் நிலப்பற்றாக்குறை காரணமாக இந்தியாவின் தயக்கம், தேக்கநிலைக்குப் பங்களித்தது.


1982இல் இந்திரா-எர்ஷாத் ஒப்பந்தத்தின் (Indira-Ershad Agreement) மூலம், டின் பிகா தளவாடப் பகுதியளவில் அங்கீகரிக்கப்பட்டது. டின் பிகா தளவாடம் (Tin Bigha Corridor) என்பது கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள இந்திய நிலத்தின் ஒரு பகுதி ஆகும். இது தோஹோகிராம்-அங்கோபோர்டா பகுதிகளை வங்காளதேசத்தின் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்க வங்காளதேசத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது. வங்காளதேசத்திற்கு இந்த தளவாடத்தை இந்தியா நிரந்தரமாக குத்தகைக்கு எடுத்தது. இருப்பினும், இந்த தளவாடத்தை பகலில் (12 மணிநேரம்) மட்டுமே பயன்படுத்த முடியும். இது உலகின் ஒரே பகுதிநேர நிலப்பகுதியாக மாறியது.


2000ஆம் ஆண்டு முதல், நிலப்பகுதிகள் (enclaves) மற்றும் எதிர் நிலபப்பரப்புகளில் (adverse possessions) எதிர்ப்புகள் வலுவடைந்தன. வில்லெம் வான் ஷென்டெல் (Willem van Schendel) போன்ற இனவியலாளர்கள் குடியிருப்பாளர்களின் வாழ்க்கையை "காஃப்கேஸ்க்" (Kafkaesque) என்று விவரித்தனர். அவர்கள் ஆட்சியாளர்கள் இல்லாத மற்றும் பிரதிநிதித்துவம் இல்லாத பகுதிகளில் வாழ்ந்தனர். அவர்களுக்கு அடிப்படை சேவைகள் அல்லது அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இதனால், சில நிலப்பகுதிகள் (enclaves) நிர்வாகத்தை நிர்வகிக்க உள்ளூர் கவுன்சில்களை உருவாக்கின. இந்த கவுன்சில்கள் அத்தியாவசிய உள்கட்டமைப்பை உருவாக்க நிதி திரட்டின.


 தாஷியார்ச்சரா நிலப்பகுதிக் குழு (Dashiarchhara Enclave Committee), ஷித்மஹால் ஐக்கியக் குழு (Shitmahal United Council), இந்தியன் நிலப்பகுதிகள் அகதிகள் சங்கம் (Indian Enclaves Refugee Association) மற்றும் சித்மஹால் பினிமய் சமன்ய்யா குழு (Chhitmahal Binimay Samanyay Committee) போன்ற அமைப்புகள் சுதந்திரமான இயக்கம், நிலச் சீர்திருத்தம், குடிமை வசதிகள் மற்றும் LBA 1974-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரின. இவற்றில் சில அமைப்புகளும் அரசாங்கத்தின் கவனத்தையும், அரசாங்கத்தின் நிலப்பரிவர்த்தனையின் கவனத்தையும் ஈர்ப்பதற்காக உருவாகின.


2007ஆம் ஆண்டில், இந்தியா மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழு நடத்திய கூட்டுக் கணக்கெடுப்பில் பெரும்பாலான நிலப்பகுதி குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற விரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது. 2009-ம் ஆண்டில், ஷேக் ஹசீனா வங்காளதேசத்தின் பிரதமரானபோது, நில எல்லை ஒப்பந்தம் (LBA) 1974-ஐச் செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு இந்தியாவை வலியுறுத்தினார். 


2010ஆம் ஆண்டு கூட்டு எல்லைப் பணிக்குழு கணக்கெடுப்பு (Joint Boundary Working Group survey) தொடங்கியது. கணக்கெடுப்பின்படி, இந்தியாவால் சூழப்பட்ட வங்காளதேசப் பகுதிகளிலுள்ள மக்கள் இந்தியாவுடன் சேரத் தேர்வுசெய்தனர். மனித புவியியலாளர்களான அஸ்மேரி ஃபெர்டோஷ் மற்றும் ரீஸ் ஜோன்ஸ் இருவரும் சேர்ந்து, ‘இந்தியாவின் மீள்குடியேற்றத் தொகுப்பு மற்றும் வங்கதேசத்தை விட வலுவான பொருளாதாரம் கொண்ட நாடு என்ற இந்தியாவின் பிம்பம் இந்த முடிவை பாதித்ததாகவும் அவர்கள் கண்டறிந்தனர்.


2011ஆம் ஆண்டில், இரு நாடுகளும் எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க தீவிரமாகச் செயல்பட்டு வந்தன. முதல் படி, டின் பிகா வழித்தடத்தை முழுநேரமாகத் திறப்பது. இந்த வழித்தடம் இந்தியாவால் சூழப்பட்ட டோஹோகிராம்-அங்கோர்போட்டாவை வங்கதேசத்தின் மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது. டோஹோகிராம்-அங்கோர்போட்டா இந்தியாவில் பரிமாறிக்கொள்ளப்படாத ஒரே வங்காளதேசப் பகுதியாக உள்ளது. இருப்பினும், 1974ஆம் ஆண்டின் LBA இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இந்தியா வங்கதேசத்திற்கு 10,000 ஏக்கர் நிலத்தை வழங்கியதால், பாஜக இதை எதிர்த்தது. INC தலைமையிலான UPA அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறிவிட்டது.


2014ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது, அது 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமையை கொள்கை'(‘Neighbourhood First Policy’) அறிமுகப்படுத்தியது. முன்னதாக, வங்காளதேசத்துடனான நிலப்பரிமாற்றத்தை முதலில் எதிர்த்த அரசியல் கட்சி, அரசியலமைப்பு மாற்றங்களுக்கும், அண்டை நாடுகளுடன் நிலப்பரிமாற்றத்திற்கும் விரைவாக ஒப்புக்கொண்டது. வங்காளதேசத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட சர்வதேச எல்லைகளை பாதுகாப்பதற்காக நிலப்பகுதிகள் மற்றும் பாதகமான உடைமைகளின் பரிமாற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இது ஒரு வருடத்திற்குள், நில எல்லை ஒப்பந்தம் (LBA) 2015 நடைமுறைப்படுத்தப்பட்டது.


இந்திய அரசியலமைப்பு "இந்தியா மற்றும் வங்காளதேசத்தின்  அரசாங்கங்களுக்கு இடையில் உள்ள ஒப்பந்தம் மற்றும் அதன் நெறிமுறையின்படி இந்தியா அரசால் பிரதேசங்களை கையகப்படுத்துதல் மற்றும் சில பிரதேசங்களை வங்காளதேசத்திற்கு மாற்றுதல் ஆகியவற்றை அங்கீகரித்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒவ்வொரு நாடும் அதன் பிரதேசத்தில் உள்ள அனைத்து நிலப்பகுதிகள் மற்றும் பாதகமான உடைமைகள் மீது இறையாண்மையை எடுத்துக்கொள்ளும். இந்த பகுதிகளில் வாழும் மக்கள் இந்தியாவிலோ அல்லது வங்காளதேசத்திலோ வாழலாமா என்பதைத் தேர்வு செய்யலாம். அவர்களுக்கு தேர்ந்தெடுத்த நாட்டின் குடியுரிமை வழங்கப்படும். ஜூலை 31, 2015 மற்றும் ஜூன் 30, 2016ஆம் ஆண்டுக்கு இடையில் நிலப்பகுதிகள், பாதகமான உடைமைகள் மற்றும் வரையறுக்கப்படாத நிலங்களின் பரிமாற்றம் முடிக்க திட்டமிடப்பட்டது.


நில எல்லை ஒப்பந்தம் (LBA) 2015-ன் பின்விளைவுகள்


முன்னாள் வங்காளதேச குடியேற்றங்களை மேம்படுத்துவதற்காக ரூ.3,000 கோடி மதிப்புள்ள தொகுப்பை இந்திய அரசாங்கம் அங்கீகரித்தது. முன்னாள் குடியிருப்பாளர்களின் நிலத்தின் பரிமாற்றம் மற்றும் குடியேற்றத்திற்கான வழிகாட்டுதல்களையும் இது உருவாக்கியது. கூடுதலாக, இந்திய குடியேற்றங்களிலிருந்து திரும்பும் மக்களை மறுவாழ்வு செய்வதற்கு அரசாங்கம் ரூ.1,000 கோடியை அங்கீகரித்தது. 


வங்காளதேசத்தில் உள்ள இந்தியப் பகுதிகளிலிருந்து திரும்பிய குறிப்பாக ரெசவுல் ஹக் போன்ற 987 இந்தியர்கள், கூச் பெஹார் மாவட்டத்தின் ஹல்திபாரி, மெக்லிகஞ்ச் மற்றும் தின்ஹாட்டா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மூன்று அரசு நிதியளிக்கப்பட்ட தற்காலிகக் குடியிருப்புகளில் ஒன்றிற்கு அவர்கள் குடிபெயர்ந்தனர். அவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய இரு அரசாங்கங்களும் இணைந்து செயல்பட்டு, அவர்களின் தனிப்பட்ட உடைமைகள் மற்றும் அசையும் சொத்துக்களை கொண்டு வர அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன. அவர்களின் நிலம் போன்ற அசையாச் சொத்துக்கள் விற்பனை மூலம் பணம் அனுப்புவதன் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.


ஆனால், முன்னாள் வங்காளதேச நிலைப்பகுதியில் உள்ள மக்களுக்கும், இந்திய நிலப்பகுதியில் இருந்து திரும்பியவர்களுக்கும் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ”உத்தர பங்கா சங்க்பாத்” (ஆகஸ்ட் 2025) இதழில் பத்திரிகையாளர் தேபப்ரதா சாகி, இந்தப் புதிய குடிமக்களுக்கு இன்னும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கவில்லை என்று எழுதுகிறார். அவர்களின் முக்கிய வருமான ஆதாரமான அவர்களின் நிலம் இன்னும் அவர்களுக்குத் திருப்பித் தரப்படவில்லை. அவர்களுக்கு மாற்று வேலைகளும் கிடைக்கவில்லை.


 பலருக்கு, அவர்களின் குடியுரிமை ஆவணங்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இந்தப் பகுதிகளில் இன்னும் அடிப்படை வசதிகள் இல்லை.  பகலிர்ச்சாரா (Bakalirchhara), கிழக்கு மஷால்தங்கா (Purba Mashaldanga) மற்றும் மத்திய மஷால்தங்கா (Madhya Mashaldanga) போன்ற பகுதிகளில் உள்ள முன்னாள் நிலப்பகுதிக்கான குடியிருப்பாளர்கள் தங்களுக்கு உரிய உரிமைகளை கோரி போராட்டங்களை நடத்தினர். இருப்பினும், அவர்களின் குரல்கள் இன்னும் புறக்கணிக்கப்படுகின்றன. குடியுரிமை மசோதா 2019 ஏற்படுத்திய அச்சம், நில எல்லை ஒப்பந்தம் (LBA) குறித்த குறுகிய புரிதலுடன் சேர்ந்து, அவர்களின் நிலைமையை மோசமாக்கியுள்ளது. வங்காளதேசத்துடனான அவர்களின் விசுவாசம் குறித்த ஊகங்கள் தொடர்கின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க நில மாற்றத்திற்குப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த சந்தேகங்கள் அவர்களை தனிமைப்படுத்தி ஓரங்கட்டியுள்ளன.


சிட் ஃபலானாபூரைச் சேர்ந்த 50 வயதான ஃபஸ்லு மியானின் (Fazlu Mian) வழக்கு, முன்னாள் வங்காளதேச குடியேற்ற நிலப்பகுதிகளின் குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களைக் காட்டுகிறது. 2015இல் நில எல்லை ஒப்பந்தம் (LBA) அங்கீகாரம் பெற்ற சிறிது காலத்திற்குப் பிறகு, மியான் வேலை தேடி டெல்லி சென்றார். அவருக்கு  வேலை கிடைத்தது,. ஆனால் சில மாதங்களில், அவர் கைது செய்யப்பட்டார். அவரது இந்திய குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்களை சமர்ப்பித்த போதிலும், அவர் நகரத்தை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது.


அவர் தனது கிராமத்திற்கு அருகிலுள்ள இரயில் நிலையமான கூச் பெஹாருக்குத் (Cooch Behar) திரும்பியபோது, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த நேரத்தில், மியான் அவரது கிராமமும் இன்னும் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் அவரிடம் தெரிவித்தனர். LBA 2015 இன் கீழ், அவரது கிராமம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்பதை அவர் விளக்க முயன்றார். ஆனால் அவரது வேண்டுகோள் கேட்கப்படாமல் போனது. கூச் பெஹாரில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் இறுதியாக அவரை விடுவிக்க உத்தரவிடுவதற்கு முன்பு அவர் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.



Original article:

Share:

இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :  


  • 2023-ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டில் இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India-Middle-East-Europe-Economic Corridor (IMEC)) அறிவிக்கப்பட்டது. ஆசியா, அரேபிய வளைகுடா மற்றும் ஐரோப்பா இடையே இணைப்பு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். இது இந்தியா-வளைகுடா மற்றும் வளைகுடா-ஐரோப்பா போன்ற இரண்டு முக்கிய வழித்தடங்களைக் கொண்டுள்ளது .


  • கிழக்குப் பாதை இந்தியாவின் மேற்குத் துறைமுகங்களிலிருந்து கொள்கலன்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏற்றுமதி செய்யும். அங்கிருந்து, அதிவேக சரக்கு ரயில்கள் அரேபிய தீபகற்பம் (UAE, சவுதி அரேபியா, ஜோர்டான்) வழியாக இஸ்ரேலில் உள்ள ஹைஃபா துறைமுகத்திற்கு பொருட்களை கொண்டு செல்லும்.


  • இரண்டாவது பாதை ஹைஃபாவிலிருந்து கிரீஸ் மற்றும் இத்தாலியில் உள்ள துறைமுகங்களுக்கு பொருட்களை கொண்டு செல்லும். இந்தத் துறைமுகங்களிலிருந்து, ஐரோப்பாவின் தற்போதைய ரயில் அமைப்பு பல்வேறு பகுதிகளுக்கு பொருட்களை வழங்கும்.


  • செங்கடல் பாதையுடன் ஒப்பிடும்போது IMEC இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு கப்பல் போக்குவரத்து நேரத்தை சுமார் 40% குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதன் அறிவிப்பிலிருந்து முன்னேற்றம் மெதுவாக உள்ளது.


  • சமீபத்திய ஆண்டுகளில், பிராந்தியத்தில் மோதல்கள் (கத்தார் vs GCC, ஈரான் vs சவுதி அரேபியா, அரபு நாடுகள் vs இஸ்ரேல்) குறைந்துள்ளன. உறவுகளை மேம்படுத்தவும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தவும் நாடுகள் ஒப்பந்தங்களைச் செய்யத் தொடங்கின. மேலும், அரபு நாடுகளின் வளர்ந்து வரும் உறவுகள் பொருளாதார நன்மைகளைத் தந்தன. இந்த நன்மைகள் சில அரபு நாடுகளுக்கு பாலஸ்தீனப் பிரச்சினையை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தியாவுடனான I2U2 குழுவைப் போல இஸ்ரேலுடனான சிறிய அளவிலான கூட்டாண்மைகளை பரிசீலிக்க போதுமானதாக இருந்தன.


  • பிராந்திய ஒத்துழைப்பின் இந்த அரிய காலம் இந்தியாவிற்கும் அதன் மத்திய கிழக்கு, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கூட்டாளர்களுக்கும் இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் ஒரு புதிய வர்த்தக வழித்தடத்தை உருவாக்குவதை கற்பனை செய்ய முடிந்தது.


  • இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடமானது (India-Middle-East-Europe-Economic Corridor (IMEC)), நிலையான கட்டணங்கள் தொடர்பான பிரச்சனைகள், கூட்டாளர்களிடையே பலவீனமான நிதி இணைப்புகள், பொதுவான காப்பீட்டு அமைப்பு இல்லாதது மற்றும் மிகவும் மாறுபட்ட துறைமுக திறன்கள் போன்ற தொடர்ச்சியான வர்த்தக மற்றும் அணுகல் சிக்கல்களைத் தீர்க்க உருவாக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் கடல்வழிப் பாதைகளுக்கு இடையே பொருட்களைக் கொண்டு செல்வதற்கான, சவுதி அரேபியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே திட்டமிடப்பட்ட ரயில் பாதை இன்னும் நன்கு வளர்ச்சியடையவில்லை.


  • இந்தப் பிரச்சினைகள் நிர்வகிக்கக்கூடியவை மற்றும் அனைத்துத் தரப்பிலிருந்தும் அர்ப்பணிப்பு மற்றும் முதலீட்டின் மூலம் சரிசெய்யப்படலாம். செப்டம்பர் 2023-ல், தெளிவான காலக்கெடுவுடன் ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி அதில் உறுதியாக இருக்க பங்கேற்பாளர்கள் அறுபது நாட்களுக்குள் தீர்க்க ஒப்புக்கொண்டனர்.


  • ஒரு மாதத்திற்குள், மத்திய கிழக்கில் ஒரு பெரிய மோதல் வெடித்ததால்,  அந்த கூட்டம் இன்னும் நடக்கவில்லை.


  • IMEC-ன் அடிப்படை பொருளாதார யோசனை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. ஆனால், அதன் சவால்கள் மிகவும் தீவிரமானதாகிவிட்டன. இப்போது மிகப்பெரிய பிரச்சனையாக 61,000 பேரை பலி வாங்கிய காசா மீதான இஸ்ரேலின் போர் ஆகும்.


  • இந்தப் போர் முந்தைய வர்த்தக ஒத்துழைப்பு மூலம் தீர்க்கப்பட்டிருக்கக்கூடிய பிரச்சினைகளையும், நிர்வகிக்கக்கூடிய  பிரச்சினைகளையும் மோசமாக்கியுள்ளது.


  • இந்த வழித்தடத்தின் மேற்குப் பகுதி விரைவில் முடிய வாய்ப்பில்லை. ஆனால், அரபு நாடுகளுடனான இந்தியாவின் வலுவான கூட்டாண்மைகளால் கிழக்குப் பகுதி இன்னும் பயனடைகிறது.




உங்களுக்குத் தெரியுமா?:


* IMEC-ன் பொருளாதார அடித்தளம் வலுவாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாகும். 2023-24 ஆம் ஆண்டில் $137.41 பில்லியன் மதிப்புள்ள வர்த்தகத்தைக் கொண்டுள்ளது. இந்தியா, UAE மற்றும் சவுதி அரேபியா இடையேயான எண்ணெய் அல்லாத வர்த்தகமும் சமீபத்திய ஆண்டுகளில் நிறைய வளர்ந்துள்ளது.  IMEC என்பது ஒரு சாதரண வர்த்தகப் பாதையை விட அதிகமாக செயல்பாட்டில் இருக்கும் என்று கருதப்பட்டது. ஏனெனில், அதன் கூட்டு நாடுகள் மின்சாரம் மற்றும் இணையத்திற்கான கேபிள்கள், சுத்தமான ஹைட்ரஜன் ஏற்றுமதிக்கான குழாய்களை அமைப்பார்கள்.  மேலும், செயல்திறனை மேம்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும், பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் பணியாற்றுவார்கள்.



Original article:

Share: