இந்தியாவின் பாரம்பரியத்தை மதிக்கவும்; அதன் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும். -பினராயி விஜயன்

 இந்த ஆண்டு சுதந்திர தினம் இந்தியாவின் தற்போதைய சூழ்நிலையை நமக்கு நினைவூட்டுகிறது. நாட்டின் அரசியலமைப்பு கொள்கைகளை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் இந்தியர்கள் எதிர்க்க வேண்டும் என்பதையும் இது நமக்கு நினைவூட்டுகிறது.


ஒவ்வொரு ஆண்டும், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்றதைக் கொண்டாடுகிறோம், மேலும் நமது தலைவர்கள் போராடிய கொள்கைகளுக்கான நமது உறுதிப்பாட்டைப் புதுப்பிக்கிறோம். ஆகஸ்ட் 15, நமது தேசத்தைக் கட்டியெழுப்பிய நீண்ட போராட்டத்தை நமக்கு நினைவூட்டுகிறது. நமது சுதந்திர போராட்டம் என்பது ஜனநாயகம், மதச்சார்பின்மை, ஒற்றுமை மற்றும் சமூக முன்னேற்றம் போன்ற மதிப்புகளுக்காக பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மில்லியன் கணக்கான மக்கள் ஒன்றிணைந்த போராட்டம் ஆகும். சுதந்திர தினம் என்பது ஒரு நாடாக நாம் எவ்வளவு தூரம் வந்துள்ளோம், இந்த கொள்கைகளை எவ்வளவு சிறப்பாக நிலைநிறுத்தியுள்ளோம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரமாகும்.



தேசியவாதத்தின் சாராம்சம், அதன் கையாளுதல்கள்


தேசியவாதப் போராட்டத்தின் வேர்களை நினைவில் கொள்வதன் மூலம் நாம் தொடங்க வேண்டும். சுதந்திரம் என்பது கொடியை மாற்றுவது மட்டுமல்ல, சட்டத்தின் முன் அனைவரும் சமம், வளங்களை சமமாக அணுகக்கூடிய ஒரு வளமான தேசத்தை உருவாக்குவது என்று நமது தலைவர்கள் நம்பினர். அவர்கள் மக்களுக்கு கண்ணியத்தை வழங்க விரும்பினர், இதனால் அவர்கள் நன்றாக வாழவும், உலகின் முன் நம்பிக்கையுடன் நிற்கவும் முடியும். ஒரு உண்மையான தேசியவாதி, இந்த அர்த்தத்தில், ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபடுகிறார்.


எனவே கேள்வி என்னவென்றால், ஒரு தேசமாக, நாம் செழிப்பை அடைவதன் மூலமும், வறியவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதன் மூலமும் நமது நிறுவனர்களின் கனவுகளை நிறைவேற்றியிருக்கிறோமா? என்பதுதான். ஆம், பல பொருளாதார மற்றும் சமூகத் துறைகளில் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம். ஆனால் ஏழைகளின் வாழ்க்கை உண்மையில் மேம்பட்டுள்ளதா?


நிலைமை அவ்வளவு சிறப்பாக இல்லை. நாட்டின் பெரும்பாலான செல்வம் அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் பாதிக்கும் மிகச் சிறிய அளவிலான பணக்காரர்களின் கைகளுக்குச் செல்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.


இதற்கிடையில், விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஒரு பெரிய பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொள்கைகள் பெரும்பாலும் அதி-பணக்காரர்களை ஆதரிப்பதால் இது நடக்கிறது. சந்தைப் போட்டி முக்கிய விதியாக இருக்கும் ஒரு புதிய பொருளாதார அமைப்பு உருவாகியுள்ளது. போட்டியிடத் தேவையான திறன்கள் இல்லாதவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.


மகாத்மா காந்தி 'தேசத்தின் ஆன்மா' என்று அழைத்த உழவர்கள், வேளாண்மையைத் தொடர போராடி வருகின்றனர். மேலும், பலர் விரக்தியில் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். புதிய தாராளமயக் கொள்கைகள் காரணமாக பொருளாதாரமும் மந்தமாகி வருகிறது. இந்த சோகமான சூழ்நிலை, தேசியவாத இயக்கத்தின் தலைவர்கள் காட்டிய பாதையை மீண்டும் கொண்டுவர அனைவரும் செயல்பட வேண்டிய அவசரத் தேவையைக் காட்டுகிறது.


சாதாரண மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை எழுப்புவது என்பது கொள்கை வகுப்பாளர்களுக்கு அவர்களின் தவறுகளைப் பற்றித் தெரிவிப்பதற்கும், கருத்து வேறுபாடுகளைக் காட்டுவதற்கும் ஆகும். குடிமக்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி, பொதுக் கருத்தை வன்முறையில் இல்லாமல் அறபோராட்ட முறையில் தெரிவிப்பது பொறுப்புள்ள குடிமக்களின் கடமையாகும். இருப்பினும், அத்தகைய விமர்சனங்களை தேசிய ஒற்றுமைக்கு தீங்கு விளைவிப்பதாக சித்தரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


சில குழுக்கள் தேசியவாதம் என்ற கருத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றன. மேலும், அவர்களைக் கேள்வி கேட்பவர்களை 'தேச விரோதிகள்' என்று முத்திரை குத்துகின்றன. பெரும்பான்மை மத அடையாளத்தை தேசத்தின் உண்மையான அடிப்படையாக முன்வைப்பதன் மூலம் மக்களின் விரக்தியை வெறுப்பாகவும் பிரிவினையாகவும் மாற்றுகின்றன. இந்த வகையான அரசியல் சமூகத்தில் பிளவுகளை ஆழப்படுத்துகிறது மற்றும் சிறுபான்மை சமூகங்களிடமிருந்து எதிர் எதிர்வினைகளுக்கு வழிவகுக்கிறது.


இத்தகைய பிளவுபடுத்தும் அரசியல், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அரசியலமைப்பு குடியரசை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் உணர்விற்கு எதிரானது. இன்று, பெரும்பான்மை வகுப்புவாத அரசியல் நாட்டில் ஆதிக்கம் செலுத்துகிறது. இது நமது தேசியவாதத் தலைவர்கள் ஒருபோதும் கற்பனை செய்யாத ஒன்று. மக்கள் தங்கள் வாழ்க்கை முறைகள், உணவுத் தேர்வுகள் மற்றும் அடையாளங்களுக்காகத் தாக்கப்படுகிறார்கள். சிறுபான்மையினர் நியாயமற்ற முறையில் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். மேலும், கருத்து வேறுபாடு கொண்டவர்கள் அச்சுறுத்தல்கள் அல்லது வன்முறை மூலம் மௌனமாக்கப்படுகிறார்கள்.


இந்த சுதந்திர தினம் நமது தற்போதைய யதார்த்தத்தையும், அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாக்க ஒற்றுமையாக நிற்க வேண்டியதன் அவசியத்தையும் நினைவூட்டுகிறது.


அரசியலமைப்பு கட்டமைப்பு, கூட்டாட்சி


அரசியலமைப்பின் ஒரு முக்கிய அம்சம் மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான கூட்டாட்சி கடமைகளைப் பிரிப்பதாகும். அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்த அமைப்பு கூட்டுறவு கூட்டாட்சியாக செயல்பட வேண்டும் என்று விரும்பினர். அங்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் ஆக்கபூர்வமான பரிமாற்றங்கள் மூலம் ஒன்றையொன்று ஆதரிக்கின்றன. பாதுகாப்பு மற்றும் வெளியுறவு போன்ற துறைகளில் மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் உள்ளது. மறுபுறம், பொது ஒழுங்கு, விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற விஷயங்களில் மாநிலங்களுக்கு சுயாட்சி உள்ளது. மாநில சட்டமன்றங்கள், ஆளுநர் மற்றும் நிதிப் பகிர்வு போன்ற நிறுவனங்கள் மாநிலங்களை பலவீனப்படுத்துவதற்காக அல்ல, கூட்டுறவு நிர்வாகத்தை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.


பி.ஆர். அம்பேத்கர் பிரபலமாகக் கூறியது போல, ஒன்றியம் வெறுமனே மாநிலங்களின் கூட்டமைப்பு அல்ல — அதற்கு அதன் சொந்த இறையாண்மை உள்ளது; ஆனால் மாநிலங்கள் வெறும் பின்னிணைப்புகள் அல்ல. அந்த சமநிலையின் புனிதத்தன்மைதான் நமது ஜனநாயகத்தின் அடித்தளமாக இருந்தது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், அந்த அரசியலமைப்பு சமநிலையிலிருந்து முறையான மற்றும் முன்னெப்போதும் இல்லாத வகையில் விலகுவதை நாம் கண்டோம். மத்திய அரசு, மாநிலங்களின் தன்னாட்சியைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்தியுள்ளது — ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை முன்னெடுப்பது முதல் மாநில ஆளுகையில் மத்திய அமைப்புகளின் பரப்பை விரிவாக்குவது வரை.


‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது தேர்தல் சீர்திருத்தம் மட்டுமல்ல. இது மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலத்தை மக்களவையுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களின் பதவிக்காலத்தைக் குறைக்கக்கூடும். இது மாநிலங்களில் உள்ள மக்கள் தங்கள் பிரதிநிதிகளை ஐந்து ஆண்டுகளுக்கு முழுமையாகத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பறிக்கிறது என்று விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய மாற்றங்கள் மாநிலங்களை கூட்டாட்சி அமைப்பில் சம பங்காளிகளாக இருப்பதற்குப் பதிலாக, மத்திய அரசின் நிர்வாகிகளாக மட்டுமே குறைக்கக்கூடும்.

அதே நேரத்தில், எதிர்க்கட்சிகளால் நடத்தப்படும் மாநிலங்களில் செல்வாக்கு செலுத்த மத்திய நிறுவனங்களும் நிர்வாக அதிகாரங்களும் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் ஆணையம், அமலாக்க இயக்குநரகம் மற்றும் ஆளுநர் அலுவலகம் போன்ற நிறுவனங்களின் சுதந்திரம் இப்போது கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது.


ஆளுநரின் அதிகாரங்களை கையாளுதல்


இந்த மையமயமாக்கல் கட்டத்தில் மிகவும் வெளிப்படையான பிரச்சனைகளில் ஒன்று, ஆளுநர் அலுவலகத்தை அரசியல் நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்துவது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டிய ஆளுநர்கள், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தடைகள், தாமதங்கள் மற்றும் தலையிடுவதற்கு மத்திய அரசால் பயன்படுத்தப்படுகிறார்கள்.


சில நேரங்களில் பல மாதங்களாக, சரியான அரசியலமைப்பு காரணங்களை வழங்காமல் கேரளா மற்றும் வேறு சில மாநிலங்களில், ஆளுநர்கள் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை அங்கீகரிக்க மறுத்து வருகின்றனர். இது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முடிவுகளைத் தடுக்கிறது மற்றும் கொள்கைகள் செயல்படுத்தப்படுவதைத் தடுக்கிறது.


இந்தப் பிரச்சினை உயர்கல்வியில் மிகவும் தீவிரமானது. சுதந்திரத்திற்குப் பெயர் பெற்ற கேரளப் பல்கலைக்கழகங்கள், நியமனங்களில் முடக்கத்தை எதிர்கொள்கின்றன. வேந்தராகச் செயல்படும் ஆளுநர் ரத்து செய்துள்ளார் மற்றும் அதிகாரப்பூர்வ அமைப்புகளால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை அங்கீகரிக்க மறுத்துள்ளார். இது பல்கலைக்கழகங்களை முடக்கியுள்ளது, சீர்திருத்தங்களை தாமதப்படுத்தியுள்ளது மற்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.


ஆளுநர் அலுவலகத்தை நடுநிலையான பாதுகாப்பிற்குப் பதிலாக அரசியல் கட்டுப்பாட்டு கருவியாக மாற்றுவதன் மூலம், மத்திய அரசு மாநில அரசுகளை பலவீனப்படுத்துகிறது மற்றும் இந்தியாவின் கல்வி முறைக்கு தீங்கு விளைவிக்கிறது. மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே இணைப்பாக இருப்பதற்குப் பதிலாக, ஆளுநர் அலுவலகம் ஒரு தடையாக மாறிவிட்டது.

இந்த சுதந்திர தினத்தில், கூட்டாட்சி, ஜனநாயகப் பன்மைத்துவம் மற்றும் பிரபலமான அரசியலமைப்பு ஆகியவற்றைப் போற்றும் அரசியலமைப்பு ஒழுங்குமுறைக்கு மீண்டும் உறுதியளிப்பதன் மூலம் நமது தேசிய பாரம்பரியத்தை மதிப்போம். மாநில சுயாட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும், அரசியலமைப்பு அலுவலகங்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் அரசியலின் மதச்சார்பற்ற ஆன்மாவை பலவீனப்படுத்தும் போக்குகளை எதிர்ப்போம்.


காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவது மட்டுமல்ல, அனைவருக்கும் கண்ணியமும் குரலும் உள்ள சுதந்திரமான மக்களின் ஒன்றியத்தை உருவாக்குவதும் எங்கள் போராட்டமாகும். இந்த ஒன்றியம் பலத்தால் அல்ல, அரசியலமைப்பு ஜனநாயகத்தின் பொதுவான கொள்கைகளால் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. அதுதான் இன்று நாம் தெளிவு, தைரியம் மற்றும் உறுதியுடன் பாதுகாக்க வேண்டிய மரபு ஆகும்.


இந்த உறுதிமொழியைக் கடைப்பிடிப்போம், இதனால் நாம் பெற்ற குடியரசு எதிர்கால சந்ததியினருக்கு வலுவாகவும் துடிப்பாகவும் இருக்கும்.


பினராயி விஜயன், கேரளாவின் முதலமைச்சர்.




Original article:

Share:

கூட்டாட்சி சமநிலை ஒரு செழிப்பான ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அடையாளம் -மு.க. ஸ்டாலின்

 இந்தியா பல தேசிய இனங்களின் தாயகமாகும். மேலும் அவர்களுக்கிடையே நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்காக, மொழிவாரியாக மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டன. இந்த மொழியியல் பன்முகத்தன்மை இந்தியாவின் வரையறுக்கும் அம்சங்களில் ஒன்றாக மாறிவிட்டது.


ஒரு உண்மையான கூட்டாட்சி அமைப்பில் (true federal system), மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவோ, நீதிமன்றத்திற்குச் செல்லவோ அல்லது வருவாயில் தங்களுக்கு உரிய பங்கிற்காக வாதிடவோ தேவையில்லை. இத்தகைய நிலை எழும்போது, அவை ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமல்ல, நாட்டின் ஒற்றுமையையும் பாதிக்கின்றன.


இந்தியா தனது அரசியல் சுதந்திரத்தை 1947-ல் அடைந்தது. ஆனால் இது சாதாரணமாக அடையப்படவில்லை. மூன்று நூற்றாண்டுகளாக நீடித்த நீண்ட மற்றும் உச்சகட்டப் போராட்டத்தின் விளைவாக இது கிடைத்தது.


ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் முதல் அகிம்சை வழியைத் தேர்ந்தெடுத்து உயிர்நீத்தவர்கள் வரை எண்ணற்ற தியாகிகள் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள். நமது தேசத்தின் சுதந்திரம் பரிசளிக்கப்படவில்லை. இது இரத்தம், வியர்வை, உறுதிப்பாடு மற்றும் தியாகத்தால் பெறப்பட்டது.


78 ஆண்டுகால சுதந்திரம் : தேசத்தின் முன்னேற்றத்தை நினைவுகூரும் கதைகளின் தொகுப்பு


இந்த வரலாற்று ரீதியிலான சுதந்திரப் போராட்டம் எந்த ஒரு பிராந்தியத்திலோ, சமூகத்திலோ அல்லது மொழிவாரியான குழுவிலோ மட்டும் நின்றுவிடவில்லை. கன்னியாகுமரி முதல் இமயமலை வரை அனைத்து மாநிலங்களிலும் மொழி, மதம், இனம், கலாசாரம் என்ற வேறுபாடின்றி மக்கள் சுதந்திர இந்தியா (Independent India) என்ற எண்ணத்தின் அடிப்படையில் பின்னால் ஓரணியில் திரண்டனர். அது உண்மையிலேயே நாடு தழுவிய இயக்கமாக இருந்தது. அதில் பெற்ற அரசியல் சுதந்திரம், நமது தலைவர்கள் கூட்டாக, அனைவருக்கும் சொந்தமான இந்தியாவாக இருக்க வேண்டும் என்று எண்ணியதன் அடிப்படியில் இது சாத்தியமானது.


இந்த உணர்வு நமது நீடித்த இலட்சியங்களில் ஒன்றான "வேற்றுமையில் ஒற்றுமை" (Unity in Diversity) என்ற கொள்கையை உருவாக்க வழிவகுத்தது. இனம், மொழி, மாநிலம் மற்றும் நம்பிக்கையின் வேறுபாடுகள் இருந்தபோதிலும், தலைவர்கள் ஒரு பொதுவான தேசிய அடையாளத்தின் பார்வையை வளர்த்தனர். வெளிநாட்டு ஆட்சியாளர்கள் இந்த ஒற்றுமையை சந்தேகிக்கித்தனர். இதன் அடிப்படையில், புதிதாக விடுதலை பெற்ற இந்தியா சில வருடங்களில் பிரிந்துவிடும் என்று கணித்தனர். ஆனால் இந்தியா 75 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களின் எண்ணம் தவறு என்று நிரூபித்துள்ளது. அதாவது, வேற்றுமையில் ஒற்றுமைக்கான (unity in diversity) நமது உறுதியான உறுதிப்பாட்டால் இது சாத்தியமானது.


இந்தியா பல தேசிய இனங்களின் தாயகமாகும். அவர்களிடையே நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்காக, நமது மாநிலங்கள் மொழிவாரியாக மறுசீரமைக்கப்பட்டன. இந்திய அரசியலமைப்பு நாட்டை "மாநிலங்களின் ஒன்றியம்" (Union of States) என்று வரையறுக்கிறது. இந்த சொற்றொடர் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டது மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது, தேசிய முன்னேற்றத்திற்காக ஐந்தாண்டுத் திட்டங்களுடன் அனைத்துப் பிராந்தியங்களிலும் சமமான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக திட்டக் குழு நிறுவப்பட்டது.


இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மை அதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தி திணிக்கப்படாது என்று நமது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார். மத்திய அரசின் முடிவுகள், மற்ற மொழிகளை விலையாகக் கொடுத்து இந்தியை ஊக்குவிக்க முயற்சிக்கும்போதெல்லாம், கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதுபோன்ற பல முடிவுகள் திரும்பப் பெறப்பட்டன. முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்றம், தமிழும் ஆங்கிலமும் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு போதுமானது என்று கூறும் தீர்மானத்தை நிறைவேற்றியது. மத்திய அரசு இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது.


இந்தியா பல மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஒரே மாதிரியாக உறைவிடமாக உள்ளது, ஆயினும், நாம் ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்திய அரசியலமைப்பு மதச்சார்பின்மையை வெறும் கொள்கையாக மட்டுமல்ல, நமது குடியரசை வடிவமைக்கும் முகவுரையிலேயே உறுதிப்படுத்துகிறது. இந்த இலட்சியங்கள் ஒன்றிணைந்து, இந்தியாவின் அரசியல் சுதந்திரத்தை அனைவருக்கும் பொதுவான சுதந்திரமாக மாற்றியுள்ளன.


இருப்பினும்கூட, கூட்டுறவு கூட்டாட்சி, மாநில சுயாட்சி, சமூக நீதி, மத நல்லிணக்கம் மற்றும் மொழியியல் உரிமைகள் போன்ற விடுதலைக் கருத்துக்களை வெளிப்படுத்தும் போது நாம் எதை விரும்புகிறோம் என்பதை முழுமையாக புரிந்து கொள்ளத் தவறிய ஒரு பிரிவு உள்ளது. இந்தியா ஒரு உண்மையான கூட்டாட்சி ஒன்றியமாக செயல்பட, அதன் மாநிலங்கள் உண்மையான தன்னாட்சியுடன் அதிகாரம் பெற்றிருக்க வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் தொடர்ந்து இருக்கிறோம். அதிகாரப் பகிர்வின் அவசியத்தைக் காட்ட போதுமான ஆதாரங்களையும் நாங்கள் வழங்கியுள்ளோம்.


அதனால்தான், மாநில தன்னாட்சியை (State autonomy) வலியுறுத்திய தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் தலைவர்கள், பாதுகாப்பு, வெளிவிவகாரம் மற்றும் நாணயம் போன்ற துறைகளைத் தவிர்த்து, மற்ற அனைத்து உரிமைகளும், பொறுப்புகளும் மாநிலங்களிடமே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கவனமாகக் கட்டமைக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு, ஒன்றியப் பட்டியல் (Union List), மாநிலப் பட்டியல் (State List) மற்றும் பொதுப் பட்டியல் (Concurrent List) ஆகியவையும் படிப்படியாக சேர்க்கப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த பட்டியலில் உள்ள விஷயங்கள் ஒன்றியப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. மாநிலப் பட்டியல் உள்ள துறைகள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுகின்றன. ஒன்றியப் பட்டியலின் கீழ் உள்ள மாநிலங்களுக்கான ஒன்றிய கடமைகள்கூட முறையாக நிறைவேற்றப்படவில்லை. இது பல இந்திய மாநிலங்களுக்கு கடுமையான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தப் பிரச்சினை கடுமையாகிவிட்டது.


எங்கள் கட்சி முதல்முறையாக ஆட்சிக்கு வந்தபோது, இராஜமன்னார் குழுவை உருவாக்குவதன் மூலம் மாநிலங்களுக்கும் யூனியனுக்கும் இடையிலான விரும்பத்தக்க மற்றும் நீடித்த உறவை வடிவமைக்க உயர்மட்டக் குழுவை உருவாக்குவது முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும். இந்த குழுவின் பரிந்துரைகள் 1974-ல் ஒரு சட்டமன்றத் தீர்மானமாக மாறியது. கூட்டுறவு கூட்டாட்சியின் உணர்வை முன்னிறுத்தும் முன்னோடியாக இருந்தபோதிலும், செயல்திறனுக்காக அது தண்டிக்கப்பட்டது, ஏனெனில் அதிகாரப் பகிர்வு தோல்வியடைந்தது.


2021-ல் நாங்கள் பதவியேற்றதில் இருந்து தமிழகத்தின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. 2024-25 நிதியாண்டில், மாநிலத்தின் பொருளாதாரம் 11.19% வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. இது 14 ஆண்டுகளில் முதல் முறையாக இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டியுள்ளது.


தமிழ்நாடு இப்போது இந்தியாவிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. வேறு எந்த பெரிய மாநிலமும், இந்த சிறப்பை கோர முடியாது. பல சவால்கள் இருந்தபோதிலும் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நாட்டின் மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பிரதிபலிக்கிறது. ஆனால் ஒன்றிய அரசு அதன் விதிவிலக்கான செயல்திறனுக்காக மாநிலத்திற்கு அபராதம் விதிக்கிறது.


சமீபத்திய ஆண்டுகளில், தமிழ்நாட்டின் ஏற்றுமதிகள் வேகமாக வளர்ந்துள்ளன, குறிப்பாக மின்னணு சாதனங்களில், ஏற்றுமதி நான்கு ஆண்டுகளில் ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளது. EPFO தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு கோடி அதிகரித்துள்ளது. இந்த முன்னேற்றத்தின் அடிப்படையில், 2047-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது என்ற துணிச்சலான ஆனால் யதார்த்தமான அடையக்கூடிய இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம்.


ஆனால், தனிமைப்படுத்தப்பட்ட வளர்ச்சியில் (isolated development) நாங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இந்தியாவின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு தமிழகத்தின் வளர்ச்சி ஒரு முக்கிய தூணாகும். இதை நான், இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் முன்னிலையில், தெளிவாகவும் பதிவாகவும் "தமிழ்நாட்டின் செயல்பாடு, 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற லட்சியத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும்" என்று கூறியுள்ளேன். அப்படியிருக்க, மத்திய அரசு ஏன் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை இந்தியாவின் வெற்றிக் கதையின் ஒரு பகுதியாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள தயங்குகிறது? தற்போதைய பிரதமர், குஜராத் முதலமைச்சராக 12 ஆண்டுகள் பணியாற்றினார். அவர் அடிக்கடி மாநில உரிமைகள் குறித்து ஆர்வத்துடன் பேசினார். ஆனால், மாநில அதிகாரங்கள் என்ற முக்கியமான கேள்வி வரும்போது, பிரதமரின் குரலிலும் அணுகுமுறையிலும் ஏன் மாற்றம் ஏற்படுகிறது?


2015-ல் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்தார். 2019 தேர்தலுக்கு முன், பிரதமர் மதுரையில் அதன் அடிக்கல் நாட்டினார். ஆனாலும், ஆறு ஆண்டுகளாகியும் கட்டடம் கட்டப்படாமல் உள்ளது. இத்தகைய புறக்கணிப்பை நாம் கேள்வி கேட்க வேண்டாமா?


Samagra Shiksha Abhiyan (SSA) : சமக்ர சிக்ஷா அபியான் - பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டம்


முற்றிலும் தனித்தனியான 'PM SHRI' திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்ற காரணத்தால், 2024-25-ஆம் ஆண்டுக்கான சமக்ர சிக்ஷா அபியான் (Samagra Shiksha Abhiyan (SSA))-ன் கீழ் தமிழகத்திற்கு கிட்டத்தட்ட ₹2,200 கோடி நிதி மறுக்கப்பட்டுள்ளது. அவை இரண்டும் முற்றிலும் வேறுபட்ட திட்டங்கள் ஆகும். பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை ஏன் மாநில மொழிக் கொள்கையுடன் இணைக்க வேண்டும்? இதன் விளைவாக கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட குழந்தைகள் உட்பட பின்தங்கிய குழந்தைகள் முக்கியமான கல்வி ஆதரவை இழக்கின்றனர். இது ஒரு பாசிச அணுகுமுறையை பிரதிபலிப்பதாக மக்கள் பார்த்தால் அது தவறா?


ஒன்றிய அரசு வழக்கமாக ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டங்களை அறிவிக்கிறது. ஆனால், நிதியில் அதன் பங்கை ஒதுக்கத் தவறுகிறது. பின்னர் தமிழ்நாடு அரசு தனது சொந்த பங்களிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஒன்றிய அரசின் கடனை ஈடுகட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் மாநில பங்களிப்புகள் அதிகரித்து வருவதால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதிநிலை தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. "எங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது" என்று நம்பும் ஒரு சர்வாதிகார மனநிலையின் தெளிவான வெளிப்பாடல்லவா இது?


மத்திய அரசின் வரி வருவாயில் 41% மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று 15-வது நிதிக்குழு பரிந்துரைத்தது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் 33.16% மட்டுமே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இது மாநிலங்களுக்கு செய்யும் துரோகமாகும். நியாயமான ஒதுக்கீடு 50%-ஆக உயர்த்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.


ஒரு உண்மையான கூட்டாட்சி அமைப்பில், மாநிலங்கள் தங்கள் வருவாயில் நியாயமான பங்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ, வழக்குத் தொடரவோ அல்லது வாதிடவோ கூடாது. இத்தகைய சூழ்நிலை மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமல்ல, இந்தியாவின் ஒற்றுமையையும் பாதிக்கிறது.


தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள், வளர்ச்சிக்கு தடையாக இருந்து, வளர்ச்சிக்கான வசதிகளை ஏற்படுத்தாமல், தடைகளாக செயல்படுகின்றனர். மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தெளிவான மற்றும் தொடர்ச்சியான தீர்ப்புகள் இருந்தபோதிலும், இந்த ஆளுநரின் அதிகார வரம்புகள் தொடர்கின்றன. ஒவ்வொரு முறையும் ஒரு மசோதாவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பும்போது, உச்சநீதிமன்றத்தையும் நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த மீண்டும் மீண்டும் செய்யப்படும் கட்டாயம், சட்டமன்ற அதிகாரத்திற்கு அவமதிப்பு மட்டுமல்ல — இது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு துரோகமாகும்.


எனவே, மாநிலங்களுக்கான நியாயமான உரிமைகளைப் பெற, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான நீதிபதி குரியன் ஜோசப் (Justice Kurian Joseph) போன்றோர் தலைமையில் மத்திய-மாநில உறவுகளுக்கான உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளோம். குறைந்தபட்சம் இந்தக் குழுவின் பரிந்துரையானது தேசிய விதிமுறையாக மாறி, ஒன்றிய மற்றும் மாநிலங்களுக்கு இடையே உள்ள தற்போதைய அதிகாரச்-சார்பு இடையே (dominance–dependence relationship) மாற்றங்களைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன். மாநிலங்களின் பிரிக்க முடியாத உரிமைகள் நசுக்கப்படாத ஒரு உண்மையான கூட்டாட்சி உணர்வை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.


மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டின் முதலமைச்சர்.



Original article:

Share:

இந்தியாவில் பாலின சமத்துவத்திற்கான முடிவடையாத போராட்டம் -இன்சியா வாகன்வதி, ஆஷிஷ் பரத்வாஜ்

 1980 மற்றும் 1990-ஆம் ஆண்டுகளில், இந்தியாவில் வரதட்சணை மரணங்கள், மணமகள் கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான பரவலான பாகுபாட்டை எதிர்கொண்டனர். நாடு முழுவதும் பெண்கள் தெருக்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.


1992-ஆம் ஆண்டு பன்வாரி தேவி மீதான கொடூரமான தாக்குதலை 2012-ஆம் ஆண்டு டெல்லி கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையுடன் இணைக்காமல் இந்தியாவில் பாலின நீதிச் சட்டங்களின் வரலாற்றைக் கூற முடியாது. இவை தனித்தனி குற்றங்கள் மட்டுமல்ல, பெண்களின் நீண்டகால வலி பொதுமக்களின் கவனத்திற்கு வந்து சட்ட நடவடிக்கைக்கு வழிவகுத்த தருணங்கள்.


விசாகா எதிர் ராஜஸ்தான் மாநிலம் (Vishakha vs. State of Rajasthan (1997)) வழக்கு, ராஜஸ்தானில் ஒரு கிராமத்தில் தொடங்கியது. மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் அடிமட்ட ஊழியரான பன்வாரி தேவி, ஒரு சிறுமியின் குழந்தை திருமணத்தை நிறுத்த முயன்றார். இந்தச் செயல் பழைய ஆணாதிக்க மரபுகளை மீறுவதாக இருந்தது. இதனால் அவர் நில உரிமையாளர்களால் அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.


அடுத்து நடந்தது அக்கறையின்மை மற்றும் அமைப்பின் தோல்வியைக் காட்டியது. காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய மறுத்துவிட்டனர். பன்வாரி தேவியின் மருத்துவ அறிக்கையும் முழுமையடையவில்லை. மேலும், நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்தது. அவரது கணவரின் சாட்சியத்தையும் நீதிமன்றம் சந்தேகித்தது, மேலும் உயர் சாதி ஆண்கள் தாழ்த்தப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய மாட்டார்கள் என்று கூறியது.


1980 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில், இந்தியா வரதட்சணை மரணங்கள், மணமகள் கொலைகள் மற்றும் பரவலான பெண் வெறுப்பை எதிர்கொண்டது. நாடு முழுவதும் பெண்கள் பேரணிகள், போராட்டங்கள் மற்றும் மறியல்கள் மூலம் எதிர்த்துப் போராடினர். பன்வாரி தேவி வேலை செய்யும்போது தாக்கப்பட்டார். அவருக்கு அரசாங்கம் எந்தப் பாதுகாப்பையோ ஆதரவையோ வழங்கவில்லை. இதனால் மகளிர் குழுக்கள் மற்றும் தலித் அமைப்புகளை கோபப்படுத்தியது. அதனால் இவ்வழக்கு வரலாற்று சிறப்புமிக்க தீப்பொறியாக மாறியது.


கீழ் நீதிமன்றம் செய்யாததை உச்சநீதிமன்றம் இப்போது செய்ய வேண்டியிருந்தது. பணியிடப் பாதுகாப்பு என்பது அரசியலமைப்பு உரிமை என்று அறிவிக்க வேண்டும். 1997-ஆம் ஆண்டில், ராஜஸ்தான் மற்றும் மத்திய அரசுகளுக்கு எதிராக "விஷாகா" என்ற பெயரில் பல அமைப்புகளால் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொது நல வழக்கு (PIL) தாக்கல் செய்யப்பட்டது.


பாலின சமத்துவம் என்பது பிரிவுகள் 14 (சட்டத்தின் முன் சமத்துவம்), 19(1)(g) (தொழில் செய்யும் உரிமை) மற்றும் 21 (கண்ணியத்துடன் வாழும் உரிமை) ஆகியவற்றின் கீழ் உள்ள உரிமைகளின் ஒரு பகுதியாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் இந்த உரிமைகளை மீறுவதாகவும், இது ஒரு அரசியலமைப்புச் சிக்கலாக மாறுவதாகவும் அது கூறியது.


அப்போது எந்தச் சட்டமும் இல்லாததால், நீதிமன்றம் விசாகா வழிகாட்டுதல்களை உருவாக்கியது. பாதுகாப்பான மற்றும் பாகுபாடற்ற பணியிடங்களை வழங்குவதற்கு முதலாளிகளை பொறுப்பேற்க வைக்கும் விதிகள் உருவாக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகள், பெண்கள் பேசத் தேவையான தைரியம் மற்றும் காவல்துறை மற்றும் நீதித்துறையால் பெரும்பாலும் காட்டப்படும் அலட்சியம் ஆகியவற்றையும் நீதிமன்றம் அங்கீகரித்தது.


முக்கியமான தீர்ப்பு இருந்தபோதிலும், செயல்படுத்தல் பலவீனமாக இருந்தது. ஒரு சில முதலாளிகள் மட்டுமே விதிகளைப் பின்பற்றினர். மிகக் குறைந்த பெண்களே புகார்களைப் பதிவு செய்தனர். வழிகாட்டுதல்களை சட்டமாக மாற்றுவதில் அரசாங்கம் மெதுவாக இருந்தது. சமூகத்தின் மனப்பான்மையும் டிசம்பர் 2012 வரை பெரும்பாலும் அப்படியே இருந்தது.


2012-ஆம் ஆண்டு, டெல்லியில் ஒரு பேருந்தில் 23 வயது பெண் ஒருவர் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஆறு ஆண்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். இந்த சம்பவம் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், பொது இடங்களில் பெண்களைப் பாதுகாக்க அரசு தவறியதை மீண்டும் காட்டியது. விசாகா வழக்கில் தொடங்கிய அவசரத்தை மீண்டும் கொண்டு வந்தது. நாடு பெரும் கோபத்துடன் எதிர்வினையாற்றியது. அரசு விரைவாக செயல்பட்டு, அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஒரு குற்றவாளி போலீஸ் காவலில் இறந்தார். மற்ற நான்கு ஆண்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிறார் நீதிச்  சட்டத்தின் (Juvenile Justice Act) கீழ் சிறார் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைத்தது.


மிக முக்கியமாக, பல வருட தாமதத்திற்குப் பிறகு பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்கும் நிலை உருவானது. அரசாங்கம் முக்கிய சட்டங்களை அறிமுகப்படுத்தியது. பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவாரணம்) சட்டம் (The Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act), 2013, விசாகா வழிகாட்டுதல்களுக்கு சட்டப்பூர்வ சக்தியை அளித்தது மற்றும் முதலாளியின் செயலற்றத் தன்மையை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றியது.


குற்றவியல் (திருத்த) சட்டம், 2013, பாலியல் வன்முறையின் வரையறையை விரிவுபடுத்தியது, பின்தொடர்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்களைச் சேர்த்தது, தண்டனைகளை அதிகரித்தது மற்றும் விரைவான விசாரணைகளை கோரியது.


பன்வாரி தேவியின் தாக்குதலிலிருந்து டெல்லி பாலியல் வன்கொடுமை வரையிலான பயணம், இந்தியாவில் நீதி பெரும்பாலும் பெரும் துன்பங்களுக்குப் பிறகுதான் கிடைக்கிறது என்பதைக் காட்டுகிறது. சட்டப் புறக்கணிப்பின் அதிக விலையை விசாகா வழக்கு வெளிப்படுத்தியது. மேலும், டெல்லி வழக்கு சட்டங்களுக்கும் அவற்றின் அமலாக்கத்திற்கும் இடையிலான பரந்த இடைவெளியைக் காட்டியது. இன்றும் பல சட்டங்கள் நடைமுறையில் உள்ளன, ஆனால், பெண்கள் இன்னும் வீட்டைவிட்டு தனியாக செயல்பட பயப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அவமானத்தையும் அவநம்பிக்கையையும் எதிர்கொள்கின்றனர், நீதிமன்ற வழக்குகள் மெதுவாக நடக்கிறது. மேலும், பல குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் உள்ளனர். உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சட்டம் பதிலளிக்கும்வரை பெண்கள் துன்பப்பட வேண்டியிருப்பது துயரமான ஒன்றாக உள்ளது. பன்வாரி வன்கொடுமை வழக்கின் குற்றவாளி இன்னும் சுதந்திரமாக இருக்கிறார். ஆனாலும் அவரது போராட்டம் ஒரு நீடித்த அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளது. பாலின நீதிக்கான போராட்டம் முடிவடையவில்லை. ஆனால், முன்னோக்கி செல்லும் பாதை இப்போது தெளிவாக உள்ளது.


இன்சியா வாகன்வதி ஒரு சமூக-அரசியல் விமர்சகர் மற்றும் The Fearless Judge என்ற புத்தகத்தின் ஆசிரியர். ஆஷிஷ் பரத்வாஜ் மும்பையில் உள்ள பிட்ஸ் பிலானி சட்டப் பள்ளியின் பேராசிரியர் மற்றும் தலைவர்.



Original article:

Share:

மாசுபாடு குறித்த பாதையை மாற்றுதல்

 தகுதியான வாகனங்கள் அதன் உமிழ்வைக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும். இருப்பினும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முழுமையான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது.


பழைய வாகன உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதை நிறுத்துமாறு செவ்வாயன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வெறும் தற்காலிக நிவாரணம் மட்டுமல்ல. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக வாகன உரிமையாளர்களை தொந்தரவு செய்துவந்த அறிவியல் பூர்வமற்ற மற்றும் கடுமையான அணுகுமுறையிலிருந்து இது ஒரு முக்கியமான மாற்றத்தைக் குறிக்கிறது. 


தேசிய தலைநகர் பிராந்தியத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களையும் 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களையும் தடை செய்யும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் 2014 விதியை ஆதரித்த அதன் 2018 உத்தரவை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த மதிப்பாய்வு ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிய விவாதத்தை அனுமதிக்கிறது. தகுதியான வாகனங்கள் அதன் பயன்பாட்டு ஆண்டைவிட அதன் உமிழ்வைக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும்.


தொடக்கத்தில் வாகனங்கள் மீதான தடையானது எளிமையானதாகத் தோன்றியது. பழைய வாகனங்கள் அதிக மாசுபடுத்தும் என்று கருதப்படுகிறது. ஆனால், இந்த அனுமானத்திற்கு உறுதியான அறிவியல் ஆதாரம் இல்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலான அனைத்து டீசல் வாகனங்களும் புதிய வாகனங்களை விட அதிகமாக மாசுபடுத்துகின்றன என்பதைக் காட்டும் தரவு எதுவும் இல்லை.


உண்மையில், பல பழைய வாகனங்கள் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன மற்றும் அவை  நன்கு பராமரிக்கப்படுகின்றன. மேலும், மாசுக் கட்டுப்பாட்டு (Pollution Under Control (PUC)) தரநிலைகளை பூர்த்தி செய்கின்றன. எடுத்துக்காட்டாக, வருடத்திற்கு சில முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு விண்டேஜ் கார், டெல்லியின் போக்குவரத்தில் தினமும் இயக்கப்படும் ஒரு நவீன SUV-ஐ விட அதன் வாழ்நாளில் குறைவான மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடும். வாகனத்தை பயன்பாட்டு ஆண்டின் அடிப்படையிலான தடை  செய்வது எளிது. ஆனால், அது அறிவியல் பூர்வமாக துல்லியமானது அல்ல.


முக்கிய விஷயம் என்னவென்றால், டெல்லியின் மாசுபாடு பிரச்சனையை சிறிய, தனித்தனி நடவடிக்கைகளால் தீர்க்க முடியாது. தொழில்துறை உமிழ்வு, கட்டுமான தூசி மற்றும் உயிரிப் பொருள்கள் போன்ற பெரிய ஆதாரங்களைப் புறக்கணித்துவிட்டு வாகன ஓட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது நியாயமற்றது. இந்தத் தடைகள் பெரும்பாலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்களைப் பாதிக்கின்றன. ஏனெனில், புதிய வாகனம் வாங்குவது அவர்களுக்கு கடினமான ஒன்று.  மேலும், வாகனங்களை அகற்றுவது மற்றும் உற்பத்தி செய்வது போன்ற செயல்முறைகள் பெரும் ஆற்றல் வளங்களை உட்கொள்கின்றன என்ற சுற்றுச்சூழல் செலவை இவை புறக்கணிக்கின்றன.


காற்றை சுத்தமாக்குவதே இலக்காக இருந்தால், அதற்கான தீர்வு தொழில்நுட்பத்தையும் கொள்கையையும் இணைக்கும் ஒரு முழுமையான துறை அளவிலான திட்டமாக இருக்க வேண்டும். இதில் உண்மையான உமிழ்வைக் கண்காணித்தல், சுத்தமான பொது போக்குவரத்தை விரிவுபடுத்துதல், அதிக அளவில் மாசுபடுத்தும் வாகனங்களை மேம்படுத்துவதை கட்டாயமாக்குதல் மற்றும் நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் உள்கட்டமைப்பில் முதலீடு செய்தல் ஆகியவை அடங்கும். அரசின் நடவடிக்கைகள் நிலையான மற்றும் அறிவியலை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகளை உருவாக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் இப்போது ஒரு நியாயமான அமைப்பை உருவாக்கும் வாய்ப்பை அனுமதித்துள்ளது. அரசாங்கம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பரந்த அளவிலான, ஆதார அடிப்படையிலான திட்டத்தை உருவாக்கினால், டெல்லி இறுதியாக அதன் காற்று மாசுபாடு பிரச்சனையைத் தீர்ப்பதை நோக்கி நகர முடியும்.



Original article:

Share:

இந்தியா, பிரிட்டன் மற்றும் மத்திய புலனாய்வு முகமை இணைந்து கேரளாவின் கம்யூனிஸ்டுகளை உளவு பார்த்த போது… -பால் மெக்கார்

 புதிதாக வெளியிடப்பட்ட பிரிட்டிஷ் அரசாங்க ஆவணங்கள், பனிப்போரின் போது மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகள் இந்தியாவுடன் எவ்வாறு இணைந்து செயல்பட்டன மற்றும் போட்டியிட்டன என்பதைக் காட்டுகின்றன.


ஜூன் மாதத்தில், பிரிட்டிஷ் F-35B லைட்னிங் II ஸ்டெல்த் போர் விமானம் எதிர்பாராத விதமாக கேரளாவை வந்தடைந்தது. இந்திய கடற்படையுடனான கூட்டுப் பயிற்சிகளின்போது மோசமான வானிலை காரணமாக, அந்த விமானம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க வேண்டியிருந்தது. இது பிரிட்டிஷ் விமான நிறுவனமான HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸில் இருந்து இயக்கப்பட்டது.


இந்த போர் விமானம் ஒரே இரவில் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொழில்நுட்ப  சிக்கல்கள் காரணமாக, அது பல வாரங்களாக தரையிறங்காமல் இருந்தது. இது ஒரு சிறந்த விளம்பர வாய்ப்பாக மாறியது. கேரள சுற்றுலா சமூக ஊடகங்களில்கூட இதைப் பற்றி கேலி செய்து, "நீங்கள் ஒருபோதும் விட்டுச் செல்ல விரும்பாத இடம் கேரளா" என்று கூறியது.


இந்தியாவில் 115 மில்லியன் டாலர் மதிப்புள்ள நவீன வெளிநாட்டு ஸ்டெல்த் போர் விமானம் இருப்பது பெரும் கவனத்தை ஈர்த்தது. புது தில்லியில் உள்ள பிரிட்டனின் உயர் தூதரக அமைப்பும் இந்திய பாதுகாப்பு அமைச்சகமும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன. கேரளாவில் இங்கிலாந்து படைகள் இருப்பதை மறைக்க இந்தியாவும் பிரிட்டனும் அமைதியாக இணைந்து பணியாற்றியது இது முதல் முறை அல்ல.


1957-ஆம் ஆண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கேரள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது பிரிட்டனும் அமெரிக்காவும் அதிர்ச்சியடைந்தன. இது பனிப்போர் காலத்தில் நடந்தது. தென்னிந்தியாவில் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தது உலகில் இதுவே முதல் முறை. இந்தச் செய்தி வாஷிங்டன் மற்றும் லண்டன் இரண்டையும் கவலையடையச் செய்தது.


இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கத்துடன் சேர்ந்து, மத்திய புலனாய்வு அமைப்பு (CIA), கேரளாவில் CPI-ன் கட்டுப்பாட்டை பலவீனப்படுத்த இரகசியமாக செயல்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் காட்டியுள்ளனர். ஆயுதப் போராட்டத்திற்குப் பதிலாக தேர்தல்கள் மூலம் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தைப் பெற்றதைக் கண்டு அமெரிக்க வெளியுறவுத்துறை ஆச்சரியப்பட்டதாக வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. CPI அமைப்பின் வெற்றி நீடிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை.


கேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது புது தில்லியில் உள்ள மத்திய காங்கிரஸ் அரசாங்கத்திற்கோ CPI-ஐ அகற்றுவதற்கான உறுதியான திட்டம் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்ததும், ஜனாதிபதி ஐசன்ஹோவரின் கீழ் உள்ள அமெரிக்க அரசாங்கம், கேரளாவில் கம்யூனிச ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர ஒரு ரகசிய நடவடிக்கையைத் தொடங்குமாறு மத்திய புலனாய்வு அமைப்பிடம் கூறியது.


1957 முதல் 1959-ஆம் ஆண்டு வரை, மத்திய புலனாய்வு அமைப்பு (CIA), மகாராஷ்டிராவில் உள்ள S. K. பாட்டீல் போன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தொழிலாளர் தலைவர்கள் மூலம் ரகசியமாக பணத்தை அனுப்பி, கேரளாவில் தொழில்துறை வேலைநிறுத்தங்கள் மற்றும் அரசியல் அமைதியின்மையை ஏற்படுத்தியது.


ஜூலை 1959-ல், வன்முறை மற்றும் ஒழுங்கின்மை அதிகரித்ததால், கேரளாவில் உள்ள CPI அரசாங்கம் இந்திய குடியரசுத்தலைவரின் நிர்வாக உத்தரவின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்டது.


இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எல்ஸ்வொர்த் பங்கர், மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) நடவடிக்கைகளை ஆதரித்தார். சோவியத் யூனியன் கேரளாவில் உள்ள உள்ளூர் கம்யூனிஸ்ட் குழுக்களுக்கு நிதியளித்ததற்கான தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறினார். மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) பங்கை அவர் வரையறுக்கப்பட்டதாகவும் தற்காப்பு ரீதியாகவும் விவரித்தார். 1945-ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா மற்ற நாடுகளில் செய்ததைப் போலவே, கம்யூனிஸ்டுகள் ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயன்றபோது அமெரிக்கா அதன் நண்பர்களுக்கு மட்டுமே உதவியது என்று கூறினார்.


அந்த நேரத்தில், இந்தியாவில் பலர் மத்திய புலனாய்வு அமைப்பின் செயல்பாடுகளை சந்தேகித்தனர். இருப்பினும், காங்கிரஸ் கட்சி மத்திய புலனாய்வு அமைப்புடன் ரகசியமாக இணைந்து பணியாற்றியது. ஏனெனில் கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஒரு சோவியத் கைப்பாவை போல செயல்படும் என்று அது அஞ்சியது.


ஏப்ரல் 1957-ல், புலனாய்வுப் பிரிவின் தலைவரான B. N. முல்லிக், பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் ஒரு அறிக்கையை வழங்கினார். கேரளாவில் ஒரு கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை எவ்வாறு நடத்துவது என்று சோவியத்துகளிடம் கேட்க மூத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) உறுப்பினர்கள் மாஸ்கோவிற்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக அது கூறியது. இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து கவலைப்பட்ட நேரு, சோவியத் தூதர் மிகைல் மென்ஷிகோவை வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைத்து, கேரளாவில் தலையிட வேண்டாம் என்று சோவியத் யூனியனை எச்சரித்தார்.


கேரளாவில் பிரிட்டனின் ரகசியப் பங்கு குறைவாகவே அறியப்பட்டது. பிரிட்டிஷ் உயர் அதிகாரி பிமால்கம் மெக்டொனால்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) பற்றிய அமெரிக்க அச்சங்களைப் பகிர்ந்து கொண்டார். அந்த நேரத்தில், சிலர் கேரளாவை "இந்திய யெனான்" (சீனாவில் யெனான் ஒரு கம்யூனிச கோட்டை) என்று அழைத்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) நிறுத்தப்படாவிட்டால், அது கேரளாவைப் பயன்படுத்தி கம்யூனிசத்தின் நன்மைகளை உலகிற்குக் காட்டவும், காங்கிரஸ் கட்சியால் கட்டுப்படுத்த முடியாத அரசியல் உந்துதலை உருவாக்கவும் வழிவகுக்கும் என்று மெக்டொனால்ட் எச்சரித்தார்.


மெக்டொனால்டின் கருத்துக்களால் வற்புறுத்தப்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம், அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சியைப் போலவே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை (CPI) பலவீனப்படுத்த அதன் சொந்த ரகசிய அரசியல் நடவடிக்கையைத் தொடங்கியது. UK தேசிய ஆவணக் காப்பகத்திலிருந்து புதிதாக வெளியிடப்பட்ட ஆவணங்கள், ஹரோல்ட் மேக்மில்லனின் பழமைவாத அரசாங்கம் இந்தியாவின் அரசியலில் ரகசியமாகத் தலையிட்டதைக் காட்டுகின்றன.


 இந்தத் திட்டத்தில் பிரிட்டனின் MI6, MI5 மற்றும் இந்தியாவின் புலனாய்வுப் பணியகம் (IB) ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பு இருந்தது. அவர்களின் முக்கிய யோசனை மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவர்களையும் இந்திய தொழிற்சங்கத் தலைவர்களையும் இங்கிலாந்துக்குக் கொண்டுவருவதாகும். அங்கு, அவர்களுக்கு கம்யூனிசத்தின் ஆபத்துகள் பற்றி கற்பிக்கப்படும். மேலும், தேர்தல்களில் போராடுவதற்கும் கம்யூனிஸ்ட் போட்டியாளர்களுக்கு எதிராக தொழிற்சங்கங்களை நடத்துவதற்கும் ரகசிய முறைகளில் பயிற்சி அளிக்கப்படும்.


1958-ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் அதிகாரிகள் பி.என். முல்லிக்கிடமிருந்து ஒரு கூட்டு நடவடிக்கைக்கு ஒப்புதல் பெற்றனர். ஆனால், இந்தியாவின் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடமிருந்து அரசியல் ஒப்புதல் பெறுவது கடினமாக இருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் நேருவை அவரது தனிச் செயலாளர் எம்.ஓ. மத்தாய் மூலம் நேரடியாக அணுக நினைத்தது. ஆனால், அது மிகவும் ஆபத்தானது என்று முடிவு செய்தது.



அதற்குப் பதிலாக, காமன்வெல்த் செயலாளர் லார்ட் ஹோம், கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஐ) எதிரான ஒரு ரகசிய நடவடிக்கைக்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காக ஒரு ரகசியப் பணியில் புது தில்லிக்குச் சென்றார். அவர் உள்துறை அமைச்சர் கோவிந்த் பல்லப் பந்த், நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாய் மற்றும் நேருவை சந்தித்தார்.

பந்த் மற்றும் தேசாய் இந்த யோசனையை முழுமையாக ஆதரித்ததாக லார்ட் ஹோம் லண்டனிடம் கூறினார். நேருவுக்கு ஆர்வம் குறைவாக இருந்தது. ஆனால், சில சூழ்நிலைகளில் இங்கிலாந்து உளவுத்துறையின் உதவியைப் பெறுவது இந்திய அரசாங்கத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஒப்புக்கொண்டார்.


பிரிட்டனின் அமைச்சரவைச் செயலாளர் சர் நார்மன் புரூக் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் லார்ட் ஹோமின் ரகசியப் பணியை ஒரு வெற்றியாகக் கருதியது. மேலும், அவர்கள் இதைவிட சிறந்த முடிவைக் கேட்டிருக்க முடியாது என்று நம்பியது.


பிரிட்டிஷ் தலையீட்டிற்குப் பிறகு கம்யூனிஸ்ட் எதிர்ப்பு உளவுத்துறைப் பணிகளில் பந்த் தனது முயற்சிகளை அதிகரித்ததாக MI5-ன் தலைவரான ரோஜர் ஹோலிஸிடம் பி.என். முல்லிக் பின்னர் கூறினார். உள்துறை அமைச்சர் பாதுகாப்பு முகவர்களை இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸில் ரகசியமாக சேர அனுமதித்தார். 

பந்தின் நடவடிக்கைகள் காரணமாக, ஹோலிஸ் மற்றும் முல்லிக் ஒரு திட்டத்தை அமைத்தனர். அங்கு இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசியல் அமைப்பாளர்கள் MI5-ன் கீழ் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு பயிற்சிக்காக லண்டனுக்குச் சென்றனர். பயிற்சியை முடித்த பிறகு, அவர்கள் தங்கள் புதிய திறன்களைப் பயன்படுத்த தென்னிந்தியாவுக்குத் திரும்பினர்.


சமீபத்தில் வெளியிடப்பட்ட பிரிட்டிஷ் அரசாங்க ஆவணங்கள், நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் வைட்ஹால் இந்தியாவில் ரகசிய நடவடிக்கைகளில் எவ்வாறு ரகசியமாக பங்கேற்றார் என்பதைக் காட்டுகின்றன. பனிப்போரின்போது மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகள் இந்தியாவுடன் எவ்வாறு பணியாற்றின என்பதில் ஒத்துழைப்பு மற்றும் போட்டியின் கலவையை இந்தப் பதிவுகள் வெளிப்படுத்துகின்றன. 

இந்தியா, அமெரிக்கா மற்றும் கனடா சம்பந்தப்பட்ட சமீபத்திய உளவுத்துறை வழக்குகளைப் போலவே, நடைமுறை பாதுகாப்புத் தேவைகளும் சில நேரங்களில் உள்நாட்டு அரசியலுடன் ஆச்சரியமான வழிகளில் மோதக்கூடும் என்பதையும் அவை காட்டுகின்றன.


எழுத்தாளர் லண்டனின் கிங்ஸ் கல்லூரியில் உளவுத்துறை படிப்புகளை கற்பிக்கிறார் மற்றும் The Cold War in South Asia: Britain, the United States and the Indian Subcontinent, 1945-1965 (2013) மற்றும் Spying in South Asia: Britain, the United States and India’s Secret Cold War (2024) புத்தகங்களின் ஆசிரியர் ஆவார். இரண்டு புத்தகங்களும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகத்தால் வெளியிடப்பட்டது.



Original article:

Share:

உலக உறுப்பு தான தினம் : இந்தியாவின் உறுப்பு மாற்று கொள்கையிலிருந்து வளரும் நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டியவை. - பிரதாப் சி ரெட்டி

 மற்ற வளரும் நாடுகள் இந்தியாவின் நிறுவன அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு மாற்றியமைத்தால், அவர்கள் ஆயிரக்கணக்கான உயிர்களையும் காப்பாற்ற முடியும்.


நவீன மருத்துவம் கொண்டு வந்துள்ள முன்னேற்றங்களில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (Organ transplantation) மனிதகுலத்தின் உண்மையான உணர்வை பிரதிபலிக்கிறது. இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, ஒரு வலுவான, நெறிமுறை மற்றும் அளவிடக்கூடிய உறுப்பு மாற்று சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது ஒரு தேவை மட்டுமல்ல, ஒரு தார்மீக கட்டாயமாகும். 


இந்தியா 1994-ல் மனித உறுப்புகள் மற்றும் திசுக்களின் மாற்றுச் சட்டத்தை இயற்றியபோது, அது சில வளரும் நாடுகளுக்கு மட்டுமே இருந்த ஒரு அடித்தளத்தை உருவாக்கியது. இது மூளை இறப்பை சட்டப்பூர்வமாக அங்கீகரித்தது, உறுப்புகளின் வணிக வர்த்தகத்தை தடை செய்தது, மருத்துவமனைகள் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது, மேலும் மாற்று ஒருங்கிணைப்பாளர்களை கட்டாயமாக்கியது.


இன்று, முப்பதாண்டுகளுக்குப் பிறகு, அந்த தொலைநோக்குப் பார்வையின் முடிவுகளை நாம் காண்கிறோம். உலகளாவிய தெற்கில் மிகவும் முழுமையான மற்றும் இணைக்கப்பட்ட உறுப்பு மாற்று அமைப்புகளில் ஒன்றை இந்தியா உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பிலிருந்து (National Organ and Tissue Transplant Organisation (NOTTO)) தொடங்கி பிராந்திய மற்றும் மாநில அலகுகள் வரை விரிவடையும் ஒரு கட்டமைக்கப்பட்ட வலையமைப்பாகும். இது நன்கொடையாளர்களை பெறுநர்களுடன், நெறிமுறை, வெளிப்படையான மற்றும் அளவிடக்கூடிய வழிகளில் திறம்பட இணைக்கிறது. இன்றைய இந்தியாவின் கொள்கைகள் வளரும் நாடுகளில் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டவை மற்றும் மற்றவர்கள் பின்பற்றக்கூடிய ஒரு மாதிரியை வழங்குகின்றன.


இந்த அமைப்பை சிறப்பானதாக்குவது என்னவென்றால், அது நம்பிக்கையையும் ஒருமைப்பாட்டையும் எவ்வாறு உருவாக்குகிறது என்பதுதான். மருத்துவமனை உரிமம் (hospital licensing) முதல் மூளை இறப்பு சான்றிதழுக்கான (brain death certification) கடுமையான நெறிமுறைகள் வரை, அமைப்பின் ஒவ்வொரு பகுதியும் குடும்பங்களின் நம்பிக்கையை பலப்படுத்துகிறது. ஆழமான தருணத்தில் தனிப்பட்ட இழப்பின்போது, அந்நியருக்கு வாழ்க்கையின் பரிசை வழங்கும் போது, குடும்பங்கள் ஒரு அன்புக்குரியவரின் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்யும்போது இந்த நம்பிக்கை மிக முக்கியமானது.


சட்டத்தில் மூளைச் சாவு அடங்கும். இது மரணத்திற்குப் பிறகு உறுப்பு தானத்திற்கு சட்டப்பூர்வ அடிப்படையை வழங்குகிறது. நரம்பியல் நிபுணர் அல்லது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் உட்பட நான்கு மருத்துவர்கள் கொண்ட குழுவின் கடுமையான நெறிமுறைகளைப் பின்பற்றி மூளைச் சாவு அறிவிக்கப்பட வேண்டும். இந்த செயல்முறைக்கு மருத்துவமனைகள் பதிவு செய்யப்பட வேண்டும். பயிற்சி பெற்ற மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர்கள் மட்டுமே துக்கப்படுகிற குடும்பங்களுக்கு ஆலோசனை வழங்கவும், தானம் செய்யும் செயல்முறையின் மூலம் அவர்களை வழிநடத்தவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.


உயிருள்ள உறுப்பு தானத்திற்கு, இந்த செயல்முறை மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழுக்கள் எனப்படும் நெறிமுறை அமைப்புகளால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இந்தக் குழுக்கள் நன்கொடையாளர்கள் மற்றும் பெறுநர்கள் இருவரையும் நேர்காணல் செய்கின்றன. இந்த மதிப்பாய்வு சுரண்டல் மற்றும் உறுப்பு கடத்தலைத் தடுக்க உதவுகிறது.


இந்தச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான நிறுவன அமைப்பு மிகவும் வலுவானது. NOTTO மூலம் செயல்படும் தேசிய உறுப்பு மாற்றுத் திட்டம் (National Organ Transplant Programme (NOTP)), பல பொறுப்புகளைக் கொண்டுள்ளது. இது ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் மற்றும் உறுப்பு செயலிழப்பைத் தடுப்பது பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது. இறந்த நன்கொடையாளர்களிடமிருந்து உறுப்பு மற்றும் திசு தானம் செய்வது குறித்து மக்களுக்கு கல்வி கற்பிக்கிறது. கூடுதலாக, இது மாற்று உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், ஊழியர்கள் மற்றும் ஆராய்ச்சிக்கு பயிற்சி அளிக்கவும் செயல்படுகிறது. 

NOTTO ஐந்து பிராந்திய உறுப்பு மற்றும் திசு மாற்று நிறுவனங்கள் (Regional Organ and Tissue Transplant Organisations (ROTTO)) மற்றும் 21 மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று நிறுவனங்கள் (State Organ and Tissue Transplant Organisations (SOTTO)) மூலம் செயல்படுகிறது. இந்த அமைப்புகள் 966 மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களை ஒருங்கிணைக்கின்றன. இதில் 702 உறுப்பு மாற்று மையங்கள், 142 உறுப்பு மீட்பு மையங்கள் மற்றும் மீதமுள்ளவை இந்தியா முழுவதும் திசு மையங்களாக உள்ளன. 


இந்த கட்டமைக்கப்பட்ட வலையமைப்பு நியாயமான நன்கொடையாளர் ஒதுக்கீட்டை உறுதி செய்கிறது. இது நிலையான இயக்க நடைமுறைகளை செயல்படுத்துகிறது மற்றும் மாநில மற்றும் தேசிய அளவில் நன்கொடையாளர் பதிவேடுகளை பராமரிக்கிறது. இந்த அமைப்பு வீணாவதைக் குறைக்க உதவுகிறது மற்றும் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு நியாயமான பொருத்தத்தை உறுதி செய்கிறது.


ஒருங்கிணைப்பு மற்றும் பொது-தனியார் கூட்டாண்மை சமமாக முக்கியப் பங்கு வகித்துள்ளன. இந்தியாவின் கொள்கை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சிவில் சமூகம் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அரசு அதிகாரிகளுடன் ஒத்துழைக்க அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக, மோகன் அறக்கட்டளை மருத்துவ அதிகாரிகளுடன் இணைந்து உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளர் பயிற்சித் திட்டங்களை உருவாக்கி நடத்துகிறது.


 நன்கு பயிற்சி பெற்ற ஒருங்கிணைப்பாளர்கள் இறந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான ஒப்புதல்களை கணிசமாக அதிகரிக்கின்றனர். இந்த நிபுணர்கள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிகின்றனர். அவர்கள் சாத்தியமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழுக்கள் மற்றும் தளவாடங்களை நிர்வகிக்க உதவுகிறார்கள். பொது-தனியார் கூட்டாண்மைகள் நன்கொடையாளர் அடையாளம், ஒப்புதல், போக்குவரத்து மற்றும் ஒதுக்கீடு ஆகியவற்றிற்கான நெறிமுறைகளை உருவாக்குவதிலும் உதவுகின்றன.

ஒரு பிரதிபலிக்கக்கூடிய அமைப்பு



முடிவுகள் தெளிவாக உள்ளன. இந்தியாவில் வருடாந்திர உறுப்பு தானங்கள் 2013-ல் 5,000-க்கும் குறைவாக இருந்து 2022-ம் ஆண்டில் 15,000-க்கும் அதிகமாக அதிகரித்தன. இந்தியாவின் கொள்கையின் சாதனைக்கு தமிழ்நாடு தெளிவான உதாரணத்தை வழங்குகிறது. 2008-ம் ஆண்டில், மாநிலம் மூளை இறப்பு சான்றிதழை கட்டாயமாக்கியது. 2015-ம் ஆண்டில், இது TRANSTAN என்ற மாநில மாற்று ஆணையத்தை நிறுவியது. 


நியாயமான ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்காக இது ஒரு மாநில பதிவேட்டையும் இயக்குகிறது. இந்த நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் இறந்தோர் நன்கொடை விகிதத்தை ஒரு மில்லியனுக்கு 1.8 ஆக உயர்த்தின, இது தேசிய சராசரியான ஒரு மில்லியனுக்கு 0.65-ஐ விட அதிகமாகும். ஆந்திரப் பிரதேசம் தனது ஜீவந்தன் திட்டத்தின் (Jeevandan programme) மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மருத்துவமனைகளுக்கு இடையே நடமாடும் மாற்று ஒருங்கிணைப்பாளர் குழுக்களை அரசு நியமித்தது. நன்கொடையாளர் குடும்பங்களுக்கு நிதி மற்றும் இறுதிச் சடங்கு ஆதரவை அறிமுகப்படுத்தியது மற்றும் மாநில மரியாதை அங்கீகாரத்தை வழங்கியது. இந்த நடவடிக்கைகள் ஆந்திரப் பிரதேசம் 2024-ம் ஆண்டில் இறந்த உறுப்பு தானங்களை 200-ஐ விட அதிகமாக உதவியது.


இந்தியாவின் பயணம் பல்வேறு பிராந்தியங்களில் ஒப்புதல் விகிதங்கள் மாறுபடுவது போன்ற சவால்களை எதிர்கொண்டுள்ளது. இருப்பினும், நடைமுறையில் உள்ள கொள்கை வழிமுறைகள் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் இந்தியாவின் அமைப்பைப் பிரதிபலிக்கவும் உதவுகின்றன. தொலைநோக்குப் பார்வை எல்லைகளுக்கு அப்பால் செல்ல வேண்டும். இந்தியா இப்போது அதன் கொள்கை கட்டமைப்பை மற்ற வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பையும் பொறுப்பையும் கொண்டுள்ளது.


பிற வளரும் நாடுகள் இந்தியாவின் உறுப்பு மாற்று கொள்கைகளிலிருந்து கற்றுக்கொள்ளலாம். முதல் படி மூளை இறப்பை வரையறுக்கும் மற்றும் உறுப்பு வர்த்தகத்தை தடை செய்யும் ஒரு மைய சட்டத்தை உருவாக்குவதாகும். அடுத்து, பொறுப்புத் தன்மைக்கான கட்டமைப்புகள் நிறுவப்பட வேண்டும். இவற்றில் கட்டாய உறுப்பு மாற்று அங்கீகாரக் குழுக்கள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான மருத்துவமனை உரிமங்கள் அடங்கும். 

இத்தகைய நடவடிக்கைகள் சட்ட மற்றும் நெறிமுறை இணக்கத்தை உறுதி செய்கின்றன. கூடுதலாக, நன்கொடையாளர் குடும்பங்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவையும் அங்கீகாரத்தையும் வழங்குவது பொதுமக்களின் நம்பிக்கையை உருவாக்குகிறது மற்றும் எதிர்காலத்தில் அதிக நன்கொடைகளை ஊக்குவிக்கிறது.


வளரும் நாடுகள் சில முக்கிய மருத்துவமனைகளில் பரிசோதனைத் திட்டங்களைத் தொடங்கலாம், திறமையான ஒருங்கிணைப்பாளர்களை அடையாளம் காணலாம், மற்றும் படிப்படியாக விரிவாக்கம் செய்யலாம். சட்டமன்ற மற்றும் நிர்வாக கட்டமைப்பு ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு, தகவமைப்புக்கு தயாராக உள்ளது. இந்தியாவின் எடுத்துக்காட்டு, கவனமாக வடிவமைக்கப்பட்ட கொள்கை கட்டமைப்பு எவ்வாறு முடிவுகளை மாற்றியமைக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. மற்ற வளரும் நாடுகள் இந்த நிறுவனப் பாடங்களை ஏற்று, தகவமைத்தால், அவர்களும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு உயிர் கொடுக்கும் பரிசை விரிவாக்க முடியும்.


எழுத்தாளர் அப்பல்லோ மருத்துவமனைகள் குழுவின் நிறுவனர்-தலைவர் ஆவர்.



Original article:

Share: