அணுசக்தி சட்டங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் பங்கு -கே.வி.பிரசாத்

 தற்போதைய பிரச்சினைகள் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, நன்கு விரிவான விவாதம் தேவை.


இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள், குறிப்பாக எதிர்க்கட்சிகள், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தைத் தணிக்கும் (energy security and climate change efforts) ஒரு முக்கியமான நிலைப்பாட்டை விரைவில் கருத்தில் கொள்ள வேண்டும். அணுசக்திச் சேதங்களுக்கான சிவில் பொறுப்புச் சட்டம்-2010 (Civil Liability for Nuclear Damages Act (CLNDA)), மற்றும் அணுசக்திச் சட்டம்-1962 (Atomic Energy Act (AEA)), கடந்த காலங்களில் தீவிர விவாதங்களைக் கண்டது. இந்த முன்மொழிவு விரைவில் நாடாளுமன்றத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், மழைக்காலக் கூட்டத்தொடரின் போது இந்தத் திருத்தங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது. மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், நாடாளுமன்றம் மீண்டும் இந்தப் பிரச்சினையை மறுபரிசீலனை செய்யும்.


அணுசக்திச் சேதங்களுக்கான சிவில் பொறுப்புச் சட்டம் (CLNDA) மற்றும் அணுசக்திச் சட்டம் (AEA) ஆகியவற்றில் முறையே உபகரணங்களின் விநியோகர்கள் மீதான பொறுப்புணர்ச்சி மற்றும் அணுசக்தி துறையில் தனியார் அமைப்புகளை அனுமதிப்பது குறித்த கடுமையான சிக்கலைத் தீர்க்கும் வகையில் திருத்தம் மேற்கொள்வது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.


இந்தியா-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் CLNDA அமலாக்கம் ஆகியவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கும், எதிர்க்கட்சிகளான பிஜேபி மற்றும் சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல்களுக்கு வழிவகுத்தது.

வரலாற்று சூழல்


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அணுசக்தி விபத்துகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான சட்டங்களை உருவாக்க அரசாங்கம் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியது. அந்த நேரத்தில் இந்தியா எந்த சர்வதேச மாநாடுகளிலும் பங்கேற்கவில்லை. சர்வதேச உடன்படிக்கைகளின் படி பொறுப்புகளை நிறைவேற்றுவதை அரசாங்கம் விரும்புவதால், நாடாளுமன்றம் நீண்ட விவாதத்தில் ஈடுபட்டது.


மாநிலங்களைவில் தேவையான பலம் இல்லாதது, 1984 போபால் எரிவாயு கசிவு, மெக்சிகோ வளைகுடா எண்ணெய் கசிவு மற்றும் ஜப்பானில் ஒரு பூகம்பத்திற்குப் பிறகு ஏற்பட்ட ஃபுகுஷிமா அணு உலை விபத்து ஆகியவற்றால் மக்கள் படும் துயரங்களின் பயங்கரமான நினைவுகள் விவாதத்தைப் பாதித்தன. 


இந்த சூழ்நிலையில் எதிர்க்கட்சி ஒரு வாய்ப்பை உணர்ந்து, அணு உலை உபகரணங்களை வழங்குபவர்களுக்கு இழப்பீட்டுத் தடையை உயர்த்துவதற்கும், ஆபரேட்டரின் உடனடி இழப்பீட்டுப் பொறுப்பைத் தாண்டியதற்கும் ஒருங்கிணைந்த அழுத்தம் கொடுத்தது. 


இதன் காரணமாக, இந்தப் பிரிவு தொடக்கத்திலிருந்தே சட்டத்தை பயனற்றதாக்கியது. அணுசக்தி உபகரணங்களை வழங்கும் மேற்கத்திய நாடுகள் இதில் பங்கேற்கவில்லை. பத்தாண்டிற்கு முன்பு அதை மாற்றியமைக்கும் முயற்சி சிறிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. மேலும், இதற்கான சர்வதேச பதில் மந்தமாகவே உள்ளது.


2007இல், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தின் போது, ​​தனியார் துறை பங்கேற்பை அனுமதிக்கும் வகையில், அணுசக்திச் சட்டத்தை (AEA) திருத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறதா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. டாக்டர் ராஜா ராமண்ணா கமிட்டியின் 1997 (Dr. Raja Ramanna Committee) அறிக்கை, சட்டத்தின் மறுஆய்வு (review of the Act) பரிசீலனையில் இருப்பதாக அரசாங்கம் அப்போது குறிப்பிட்டது. இப்போது இரண்டு பிரச்சினைகளும் நாடாளுமன்றத்தின் செயல்திட்டத்தில் திரும்பத் திட்டமிடப்பட்டுள்ளன.


கவலைகளை எழுப்புதல்


இந்த ஆண்டு பிப்ரவரியில், சட்டங்களை திருத்துவதற்கான அறிவிப்புக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நடவடிக்கை விநியோகர்களின் பொறுப்புணர்வை நீர்த்துப்போகச் செய்யும் என்று கட்சி கூறியது. இது, உள்நாட்டு ஆபத்தை அதிகரிக்கிறது மற்றும் உபகரண விநியோகர்களைப் பாதுகாக்கிறது. 


காங்கிரஸின் கூற்றுப்படி, இது துணை இழப்பீடு தொடர்பான மாநாட்டைப் பிரதிபலிக்கிறது. இது குடிமக்களின் பாதுகாப்பை சமரசம் செய்து சர்வதேச நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக, வெளிநாட்டு பலன்களை, குறிப்பாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவை திருப்திப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.


கடந்த 2010ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், அணு உலை விபத்துகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை 1999இல் தொடங்கியதாகவும், அத்தகைய சட்டம் தேவை என்றும் கூறினார். அதிபர் பராக் ஒபாமாவின் வருகையுடன் முன்மொழியப்பட்ட சட்டம் சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்டது என்ற கூற்றுக்களை அரசாங்கம் பின்னர் நிராகரித்தது.


இப்போது, ​​முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்ட நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுக்குமா என்பதே முக்கியப் பிரச்சினையாகும். சிறிய மட்டு உலைகளை (small modular reactors) உருவாக்குவதற்கான நடவடிக்கை குறித்து வெளியில் ஒரு தீவிர விவாதம் நடைபெறுகிறது. இதில், பல நாடுகள் இந்த புதிய துறையில் பங்கேற்க போட்டியிடுகின்றன. 

தற்போது, அணுசக்தி நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 3% க்கும் சற்று அதிகமாக பங்களிக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில், அரசாங்கம் பாராளுமன்றத்திற்குத் தெரிவித்தபடி, 8.8 GW நிறுவப்பட்ட திறன் கொண்ட 24 அணு மின் நிலையங்கள் இந்தியாவில் இருந்தன. 


இது 2000ஆம் ஆண்டுக்குள் 10 GW என்ற முந்தைய இலக்கிற்கு குறைவாக இருந்தது. 2031-32ஆம் ஆண்டுக்குள் திறனை 22.48 GW ஆக உயர்த்த அரசாங்கம் இப்போது திட்டமிட்டுள்ளது. இது 2047-ம் ஆண்டுக்குள் 100 GW என்ற லட்சிய இலக்கையும் கொண்டுள்ளது.


கடந்த காலத்தில், எதிர்க்கட்சி மூன்று முக்கிய பிரச்சினைகளில் தனது நிலைப்பாட்டை மாற்றியது. நூற்றாண்டின் தொடக்கத்தில், காப்புரிமைச் சட்டம், 1970இல் திருத்தத்தை மேற்கொள்ள எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த திருத்தத்தை நிறைவேற்றுவதில் தாமதத்தை ஏற்படுத்தியது. பின்னர், எதிர்க்கட்சிகள் திருத்ததை ஆதரித்தன. பின்பு திருத்தத்தை கட்டாயமாக்கியது.


 முன்பு, எதிர்க்கட்சி இரண்டு முக்கியமான சட்டங்களைத் தடுத்தது. ஒன்று அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை உயர்த்துவதற்கான காப்பீட்டுச் சட்டம் மற்றும் நில எல்லை ஒப்பந்தத்தின் கீழ் வங்காளதேசத்துடன் நிலப்பரப்புகளை பரிமாறிக்கொள்வதற்கான ஒப்புதல் ஆகும். 


இறுதியாக, இந்த முன்மொழியப்பட்ட சட்டங்கள் சிறிய அல்லது சலுகைகள் இல்லாமல், அப்போதைய எதிர்க்கட்சி ஆதரவுடன் இயற்றப்பட்டன. அன்றைய அரசாங்கங்கள் தேசிய நலனுக்காகச் செயல்படுவதாக அவர்கள் நம்பியதால், இரு தரப்புத் தலைவர்களும் ஒரு பொதுவான நிலைப்பாட்டை எட்ட ஒன்றிணைந்தனர்.


விவாதம் தேவை


இன்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சியின் ஆதரவு தேவையில்லை.


தற்போதைய சிக்கல்கள் விளைவுகளைக் கொண்டுள்ளன. மேலும், அவற்றுக்கு முழுமையான மற்றும் சமநிலையான விவாதம் தேவை. இந்த விவாதத்தில் அணுசக்தி தொடர்பான அனைத்து காரணிகளும் இருக்க வேண்டும். சிறிய மட்டு அணு உலைகளை நோக்கிய மாற்றம், அணுக்கழிவுகளை அகற்றுவதில் உள்ள சிக்கல் மற்றும் பிற தொடர்புடைய தலைப்புகளையும் இது உள்ளடக்கியிருக்க வேண்டும். இந்த விவாதத்தைத் தொடங்குவதில் எதிர்க்கட்சி முன்னிலை வகிக்க வேண்டும். அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பின்னரே அது தனது முடிவை எடுக்க வேண்டும்.


இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தீவிரமான பிரச்சினை குறித்த விவாதத்தின் போது, ​​கருவூல அமர்வுகளைச் சேர்ந்த ஒருவர் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரிடம், விதிகளை மாற்றுவது என்பது ஒருவரின் நிலைப்பாட்டை மாற்றுவதைக் குறிக்கக் கூடாது என்று கூறினார்.


கே.வி. பிரசாத் டெல்லியைச் சேர்ந்த ஒரு மூத்த பத்திரிகையாளர் மற்றும் *Indian Parliament Shaping Foreign Policy* என்ற புத்தகத்தின் ஆசிரியரும் ஆவார்.



Original article:

Share:

ECI நெருக்கடியில் உள்ள ஒரு ஆணையமாக உள்ளது என்பதே உண்மை. -ரன்தீப் சிங் சுர்ஜேவாலா,முகமது ஏ.கான்

 பொதுமக்கள் மற்றும் வாக்காளர் நம்பிக்கை இழப்பிற்கு இந்திய தேர்தல் ஆணையமே முழு பொறுப்பாகும்.


இந்தியாவின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் (Chief Election Commissioner (CEC)) சுகுமார் சென் (மார்ச் 21, 1950 முதல் டிசம்பர் 19, 1958 வரை) குறைவாகப் பேசியவர். ஆனால், அவர் ஒரு சிறந்த செயல்திறன் கொண்டவர். அவர் எந்த நினைவுக் குறிப்புகளை (memoirs) வெளியிடவில்லை. 


இருப்பினும், உலகின் மிகப்பெரிய மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல்களில் ஒன்றை நடத்திய பெருமை அவருக்கு உண்டு. இப்போது பதவியில் இருப்பவர்களுக்கு அவரது வாழ்க்கை ஒரு பாடத்தைக் கற்பிக்கிறது. வரலாறு உங்கள் வார்த்தைகளையோ அல்லது கூறும் காரணத்தையோ அல்லாமல், உங்கள் பணியை நினைவில் கொள்கிறது.


ஆகஸ்ட் 14, 2025 அன்று உச்ச நீதிமன்றம் பீகாரின் வரைவுப் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கான பெயர்கள் மற்றும் காரணங்களை வெளியிடக் கேட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்த பிறகும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பெரும் அம்பலப்படுத்தலுக்குப் பிறகும், இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) அதன் வரலாற்றில் மிகப்பெரிய நம்பகத்தன்மை நெருக்கடிகளில் ஒன்றை எதிர்கொள்கிறது. ஆகஸ்ட் 17 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பிற்கு வந்த எதிர்வினைகளைப் பார்த்தால், நெருக்கடி மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.


தேர்தல் ஆணையம் இந்த பத்திரிகையாளர் சந்திப்பை ஏன் நடத்தியது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது தன்னைத்தானே தெளிவற்ற முறையில் புகழ்ந்து பேசுவதற்கும், வாக்காளர் பட்டியலைப் பராமரிக்கும் பொறுப்பை அரசியல் கட்சிகள் மீது சுமத்துவதற்கும், எதிர்க்கட்சித் தலைவரை தவறான சட்டக் குறிப்புகள் மூலம் மறைமுகமாக தாக்குவதற்கும் மட்டுமே பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. அதில் தேர்தல் ஆணையம் தான் தெரிவிக்க விரும்பும் செய்தியை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.


நம்பமுடியாத பதில்கள்


பீகாரில் நடந்து வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (Special Intensive Revision (SIR)) குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதே இதன் நோக்கமாக இருந்திருந்தால், அதைச் செய்யத் தவறிவிட்டது. வாக்காளர் பட்டியல்களின் துல்லியம் குறித்து வாக்காளர்களுக்கு உறுதியளிப்பதே இதன் நோக்கமாக இருந்திருந்தால், அதைச் செய்யத் தவறிவிட்டது. எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீன பத்திரிகையாளர்கள் எழுப்பும் வாக்காளர் முறைகேடுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதே இதன் நோக்கமாக இருந்திருந்தால், அதையும் செய்யத் தவறிவிட்டது.


இந்திய தேர்தல் ஆணையம் இறுதியில் பாரபட்சமற்றதாகவும் திறமையற்றதாகவும் இருப்பதாக கூறிய எதிர்க்கட்சியின் கூற்றை நிரூபித்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார், தீவிரமான கேள்விகளுக்கு பலவீனமான மற்றும் நம்பமுடியாத பதில்களை வழங்கியதன் பதிப்புகள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டன.

வீடியோ காட்சிகளைப் பகிராததற்கான தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்த காரணம்  அதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இரட்டை வாக்குரிமையை அடையாளம் காண்பதற்கு இந்தக் காட்சிகள் அவசியமானது. ஆனால், அது பெண்களின் தனியுரிமையை மீறும் என்ற அடிப்படையில் இதைப் பகிர முடியாது என்று தேர்தல் ஆனணயம் கூறியது.


 இது மிகவும் பலவீனமான வாதம். மற்றொரு உதாரணம், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினைகளை ஏன் எழுப்புகிறார்கள் என்றும், தேர்தலுக்கு முன் வாக்குசாவடி நிலை முகவர்களுடன் (Booth Level Agents) வரைவு வாக்காளர் பட்டியல்கள் பகிரப்படும்போது அல்ல என்பதும் தலைமை தேர்தல் ஆணையரின்  கேள்வியாக இருந்தது. 


அதற்கான பதில் என்னவென்றால், வாக்களித்த பின்னரே தேர்தல் மோசடிகள் வெளிப்படுகிறது மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே போலி வாக்காளர் வடிவங்களைக் காண முடியும். இதை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் இதைப் புரிந்து கொள்ளாதது கவலை அளிக்கிறது.


மேலும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு முன்பு வழங்கிய  வாக்காளர் பட்டியல் தரவைப் பகிர்ந்து கொள்ள தொடர்ந்து மறுத்து வருகிறது என்பதை தலைமை ஆணையர் பொதுமக்களுக்குத் தெரிவிக்கவில்லை.


தரவு மறுப்பு


அனுபவத்திலிருந்து இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். இந்தக் கட்டுரையின் முதல் எழுத்தாளர், இந்திய தேசிய காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி, டிசம்பர் 27, 2024 அன்று, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவின் வாக்காளர் பட்டியலைக் கேட்டு ECIக்கு கடிதம் எழுதினார். ஜனவரி 17, 2025 அன்று மற்றொரு கடிதத்தை அனுப்பிய பிறகும், ECI கோரிக்கைகளை ஏற்கவில்லை.


தரவுகளைப் பகிர்ந்து கொள்ள மறுத்ததால், எழுத்தாளர் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. அரசியல் கட்சிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தரவுகளை மறுப்பதற்கு எந்த நியாயமும் இருக்க முடியாது மற்றும் எந்த சட்டத்தின் கீழும் அதை நியாயப்படுத்தப்பட முடியாது. 


இதன் விளைவாக, பிப்ரவரி 25, 2025 அன்று டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதே நாளில், தேர்தல் ஆணையம் அந்தந்த தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு (CEOs) சட்டத்தின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் குறித்து முடிவு செய்ய தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு (CEO) அறிவுறுத்தியதாகக் கூறியது. உயர் நீதிமன்றம் இதை ஏற்றுக்கொண்டு, முடிவெடுக்க மூன்று மாத கால அவகாசத்தை நிர்ணயித்தது.


உத்தரவின்படி, இந்தக் கட்டுரையின் எழுத்தாளர்கள் மகாராஷ்டிராவில் தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) முன் நேரில் ஆஜரானார்கள். அவர்களின் சகாக்கள் ஹரியானாவில் தலைமைத் தேர்தல் அதிகாரி முன் ஆஜரானார்கள். மே 22, 2025 அன்று, மகாராஷ்டிராவின் தலைமைத் தேர்தல் அதிகாரி தனது உத்தரவை பிறப்பித்தார். அதேபோல், ஹரியானாவின் தலைமைத் தேர்தல் அதிகாரியும் மே 24, 2025 அன்று தனது உத்தரவை பிறப்பித்தார்.


இரண்டு உத்தரவுகளும் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்தன. அவர்கள் எந்த வாக்காளர் பட்டியலையும் வழங்கவில்லை. அதற்கு பதிலாக, தேர்தலுக்கு முன்பே தரவு ஏற்கனவே வழங்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர். தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) தனது தனது பாதுகாப்பிற்காக அடிக்கடி மீண்டும் மீண்டும் கூறும் அதே வாதமாகும் இதில், சில தகவல்கள் இணையதளத்தில் இருப்பதாகவும், மேலும் அதே ஆவணங்கள் அல்லது தகவல்களின் கூடுதல் நகல்களைப் பெற, ஒருவர் விதிகளைப் பின்பற்றி அவற்றை முறையான அதிகாரிகளிடமிருந்து கோர வேண்டும் என்ற ஒரு வரியையும் அவர்கள் சேர்த்தனர்.


பதில் தெளிவாக உள்ளது. கோரிக்கை வைக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்குப் பிறகும், டிஜிட்டல் வாக்காளர் பட்டியல்களை வழங்குவதைத் தவிர்ப்பதற்கு ECI ஒவ்வொரு சாத்தியமான காரணங்களைப் பயன்படுத்தியது. இது அதிகாரத்துவ மொழியைப் பயன்படுத்தி சரியான ஆய்வைத். தடுக்கும் முயற்சியாகும்.


பீகார் SIR விஷயத்தில், ECI இதேபோன்ற உத்தியைப் பயன்படுத்தியது. ஆனால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. பெயர்கள் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் பற்றிய தரவைப் பகிர மறுத்ததற்கான காரணத்தை விளக்க வேண்டியிருந்தது மற்றும் ஆதார் உட்பட பல பொதுவான அடையாள ஆவணங்களை விலக்குவதற்கான அதன் முடிவையும் தேர்தல் ஆணையம் நியாயப்படுத்த வேண்டியிருந்தது.


உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 14 அன்று, வாக்காளர் தரவை மறுக்க ECI முன்வைத்த வாதங்களை நிராகரித்தது மற்றும் நீக்கப்பட்ட அனைவரின் பெயர்களையும் காரணங்களுடன் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், இவை அனைத்தும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் (Electors Photo Identification Card (EPIC)) தேடக்கூடிய பயன்முறையில் (searchable mode) இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதாரை செல்லுபடியாகும் அடையாள அட்டையாக ஏற்றுக்கொள்ளவும் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.


வாக்காளர்களின் நம்பிக்கையை இழக்கிறது


செய்தியாளர் சந்திப்பில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளின் வெளிப்படையான தன்மை மற்றும் வாக்காளர்களுக்கு அதன் அர்ப்பணிப்பு பற்றி குறிப்பிட தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) அதிக நேரத்தை செலவிட்டார். இருப்பினும், ECI அதன் அடிப்படைக் கடமையைச் செய்யச் சொல்லப்பட வேண்டியதற்கான எந்த விளக்கத்தையும் அவர் குறிப்பிடவில்லை.


இந்த நெருக்கடிக்கு இந்திய தேர்தல் ஆணையம் தான் பொறுப்பு. அதுவே இந்தப் பிரச்சினையை உருவாக்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் கட்சியைத் தவிர அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் நம்பிக்கையை இழந்துவிட்டது என்பது ஒரு குற்றச்சாட்டாக உள்ளது. தற்போது தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது.


தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் மலைபோல் நிற்கிறது என்று கூறியதன் மூலம், தலைமைத் தேர்தல் ஆணையர் தனது பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தத் தொடர்பைக் காட்டினார்.


ஆனால், ஜனநாயகத்தில், மக்கள்தான் மலை, தேர்தல் ஆணையம் அல்ல என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.


ரந்தீப் சிங் சுர்ஜேவாலா காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆவார். முகமது ஏ. கான் இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞராகவும், ஏஐசிசி சட்டத் துறையின் செயலாளராகவும் உள்ளார்.



Original article:

Share:

பாலின அடையாள அங்கீகாரம் குறித்து . . .

 பாலின அடையாள அங்கீகாரம் (Gender identity recognition) அதிகாரத்துவ தடைகளில் சிக்கக்கூடாது


பியோன்சி லைஷ்ராமுக்கு புதிய கல்விச் சான்றிதழை வழங்குமாறு அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவானது, ஒரே நேரத்தில் தனிமனித நீதி (individual justice) மற்றும் திருநங்கைகளின் உரிமைகள் (transgender rights) குறித்த வெளிப்பாடாகும்.


 இது ஒரு எளிய நிர்வாகத் திருத்தமாக இருந்திருக்க வேண்டியது நிலையில், தற்போது அது சட்டப் போராட்டமாக மாறி உள்ளது. இது சட்டத்தில் வேண்டிய விதிகள் இல்லாததால் நிகழ்ந்தது அல்ல, மாறாக சட்டத்தின்  அமலாக்கம் செயலற்ற தன்மை மற்றும் அதிகாரத்துவம் மூலம் அவை தடுக்கப்பட்டதால் நடந்தது. 


NALSA vs இந்திய ஒன்றியம் (NALSA vs Union of India) வழக்கில், உச்ச நீதிமன்றம் பாலினத்தை தனிப்பட்ட அடையாளம் காணும் உரிமையை அங்கீகரித்ததோடு, மாற்றுத்திறனாளிகளை சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினராகக் கருதி, நலன்சார்ந்த நடவடிக்கைகளுக்குத் தகுதியுடையவராக கருதுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இந்தக் கொள்கையானது திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019-ல் (Transgender Persons (Protection of Rights) Act) குறியிடப்பட்டுள்ளது. 


இது ஒரு நபரின் தனிபட்ட முறையில் அடையாளம் காணப்பட்ட பாலினத்தை (self-identified gender) அங்கீகரிக்கவும், அதிகாரப்பூர்வ ஆவணங்களை வழங்கவும் அதிகாரிகளுக்கு கடமைப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 14 மற்றும் 21வது பிரிவுகளுடன், மாற்றுத்திறனாளிகள் தங்கள் உறுதிப்படுத்தப்பட்ட அடையாளத்தை அனைத்து நிறுவன பதிவுகளிலும் தடையின்றி அங்கீகரிக்க உரிமை உண்டு. 


இருப்பினும், அவர்களின் வாழ்க்கைமுறை மிகவும் யதார்த்தமானதுடன், மிகவும் வேறுபட்டது. தனிபட்ட-அடையாளம் (self-identification) குறித்த சட்டம் தெளிவாக இருந்தாலும், உயர் அதிகாரிகளால் கட்டாயப்படுத்தப்படாவிட்டால், அதிகாரத்துவ அமைப்புகள் பெரும்பாலும் செயல்படாது. டாக்டர். லைஷ்ராமின் வழக்கில், அவரது பல்கலைக்கழகம் அவரது கல்விப் பதிவேடுகளைப் புதுப்பிக்க மறுத்துவிட்டது. இது ஒரு நடைமுறையான தடைகளை மேற்கோள் காட்டியதுடன், தீவிரமான முறையின் சிக்கலை பிரதிபலிக்கிறது. 


நிர்வாகிகள் பெரும்பாலும் சட்டத்தின் உணர்வை மதிப்பதற்குப் பதிலாக நடைமுறையின் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட வாசிப்பைப் (restrictive reading) பின்பற்ற விரும்புகிறார்கள். இந்த விஷயத்தில், பல்கலைக்கழகம் மற்றும் கல்வி வாரியங்கள், அதிகாரத்துவ ஒப்புதல்களின் தொடர்ச்சியில் உள்ள தகுதியான அங்கீகாரத்துடன், ஆரம்பகால சான்றிதழுடன் திருத்தங்கள் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.


திருநங்கைகள் தங்கள் பாலினத்தைத் தாங்களே தேர்வு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் பல அதிகாரிகள் இன்னும் பிறக்கும் போது கொடுக்கப்படும் ஆண்-பெண் என்ற அடையாளத்தை மட்டும் ஏற்றுக்கொள்கிறார்கள். 


இது சட்டத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல்களை உருவாக்குகிறது. அதிகாரிகள் பெரும்பாலும் படிப்படியான மாற்றங்கள் அல்லது நீண்ட விளக்கங்களைக் கோருகிறார்கள். இது பாலின அடையாளம் ஆவணங்களால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது. 


 டாக்டர் லைஷ்ராமின் போராட்டம், கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் இந்தக் கொள்கையைப் பயன்படுத்தத் தயங்குவதைக் காட்டுகிறது. இதனால் வழக்கமான விஷயங்களில் திருநங்கைகள் நீண்ட சட்டப் போராட்டங்களுக்குள் தள்ளப்படுகிறார்கள். இந்த சூழ்நிலைகள் ஒரு கடுமையான யதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றன: ஏற்கனவே களங்கம் மற்றும் பாகுபாட்டை எதிர்கொள்ளும் திருநங்கைகள், சட்டப்பூர்வமாக தங்களுக்குச் சொந்தமான உரிமைகளைப் பெற அதிக நேரத்தையும் வளங்களையும் செலவிட வேண்டும். உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒரு நேர்மறையான படியாகும். 


இது மற்ற திருநங்கைகளுக்கு உதவக்கூடிய ஒரு முன்னுதாரணத்தை உருவாக்குகிறது மற்றும் கடுமையான நடைமுறைகள் அரசியலமைப்பு மற்றும் சட்ட உரிமைகளை மீற முடியாது என்பதை நிர்வாகிகளுக்கு நினைவூட்டுகிறது. சட்ட உரிமைகளுக்கும் அவற்றின் உண்மையான பயன்பாட்டிற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க, பாலினத்தை ஒரு தனிப்பட்ட அனுபவமாகப் புரிந்துகொள்வதன் அடிப்படையில், நிறுவன சீர்திருத்தங்கள் மற்றும் அதிகாரத்துவத்தில் கலாச்சார மாற்றம் இரண்டும் தேவை என்பதை வெளிப்படுத்துகிறது.



Original article:

Share:

சமீபத்திய மேக வெடிப்புகள் இந்தியாவிற்கு முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் தேவை என்பதைக் காட்டுகின்றன

 மேகவெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளின் விரிவான வரைபடங்கள், வரலாற்று தரவுகள் மற்றும் செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி நில பயன்பாட்டுத் திட்டங்களுக்கு வழிகாட்ட முடியும். இது தள்ளிப்போட முடியாத ஒரு அவசியமாகும்.


மாறிவரும் பருவமழையிலிருந்து சமவெளிகள், மலைகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாக்க கொள்கை வகுப்பாளர்கள் அதிகம் முன்னேற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தெளிவாகி வருகிறது. இந்த ஆண்டு, வடகிழக்கு இந்தியா, உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் மேக வெடிப்புகள், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் கடுமையான பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன.


டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பை போன்ற நகரங்களில், நீர் தேங்குதல் மற்றும் பலவீனமான உள்கட்டமைப்பு அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்து, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி, பல உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. கடந்த பத்தாண்டுகளாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு சிறந்த வடிகால் அமைப்புகள் தேவை என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். நகர்ப்புற வடிகால்களை சரிசெய்வது பருவமழை சவாலின் முக்கியமான பகுதியாகும்.


சரியான நேரத்தில் எச்சரிக்கைகள் தீவிர வானிலையின்போது உயிர்களைக் காப்பாற்றவும் சேதத்தைக் குறைக்கவும் உதவும் என்பதும் தெளிவாகிறது. இதைச் செய்ய, துல்லியமான தரவு மற்றும் வலுவான தகவல் தொடர்பு அமைப்புகள் தேவை. இந்தியா சமீபத்தில்தான் இதுபோன்ற அமைப்புகளில் பணியாற்றத் தொடங்கியுள்ளது.


ஒரு வாரத்திற்குள், ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்புகள் மூலம் 60-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இது இந்தியாவின் காலநிலை தகவல் அமைப்பின் பலவீனத்தைக் காட்டுகிறது. சிக்கலான செயல்முறைகள் காரணமாக மேக வெடிப்புகள் ஏற்படுகின்றன. பருவமழைக் காற்று குளிர்ந்த காற்றோடு கலந்து, இமயமலை மலைகள் அவற்றைப் பிடித்து, மிகப் பெரிய மேகங்களை உருவாக்குகின்றன.


இப்பகுதி எப்போதும் மேக வெடிப்புகளுக்கு ஆளாகிறது. ஆனால், புவி வெப்பமடைதல் நிலைமையை மோசமாக்கியுள்ளது. மேகங்கள் அதிக தண்ணீரைத் தக்கவைக்க முடியாதபோது, அவை திடீரென்று ஒரு சிறிய பகுதியில் மிக கனமழையாக அதை வெளியிடுகின்றன. மேக வெடிப்பு என்பது சுமார் 30 சதுர கி.மீ. பரப்பளவில் ஒரு மணி நேரத்தில் 100 மிமீ அல்லது அதற்கு மேற்பட்ட மழைப்பொழிவைக் குறிக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


இந்த சிறிய பகுதிகளில் பெரும்பாலானவற்றில் மழையை அளவிடும் கருவிகள் இல்லை. இருப்பினும், மேக வெடிப்புகளால் ஏற்படும் சேதம் அந்த இடத்திற்கு மட்டும் அல்லாமல், அவை நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம் மற்றும் கீழ்நோக்கி அழிவை ஏற்படுத்துகின்றன.


இதில் மிகச் சிறிய பகுதிகளில் மழைப்பொழிவை கணிக்க முடியும். ஆனால், அதற்கு பல வானிலை கருவிகள் மற்றும் வலுவான கணினிகள் தேவை. இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) இப்போது இந்த தகவல் இடைவெளிகளை நிரப்புவதன் மூலமும், தரவை மிகவும் திறம்படப் பயன்படுத்துவதன் மூலமும் அதன் அமைப்பை மேம்படுத்த முயற்சிக்கிறது.


அதிக மழையிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பணி வானிலை ஆய்வுத் துறைக்கு மட்டும் மிகப் பெரியது. பலவீனமான பகுதிகளில் உயிர்களைக் காப்பாற்ற, வானிலை அலுவலகம், விஞ்ஞானிகள், திட்டமிடுபவர்கள் மற்றும் உள்ளூர், மாநில மற்றும் தேசிய மட்டங்களில் உள்ள அதிகாரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு தேவை. 


முதலாவதாக, கடந்தகாலத் தரவுகள் மற்றும் செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி மேக வெடிப்பு பாதிப்புக்குள்ளான மண்டலங்களின் விரிவான வரைபடங்களை உருவாக்க வேண்டும். இந்த வரைபடங்கள் நில பயன்பாட்டுத் திட்டமிடலுக்கு வழிகாட்டும். கட்டுமானம் மற்றும் மேம்பாடு கண்டிப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டு, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் காலநிலை அபாயங்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தவும் அவை உதவும். இந்தப் பணி அவசரமானது மற்றும் தாமதப்படுத்த முடியாதாக உள்ளது.



Original article:

Share:

இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் ஆலைகள் -ரோஷ்னி யாதவ்

 உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை கோரக்பூரில் மாநிலத்தின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலையைத் திறந்து வைத்து இன்று ஒரு முக்கியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் 72,000 டன் பசுமை எரிபொருளை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில், இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் ஆலைகள் மற்றும் எரிபொருளாக ஹைட்ரஜன் ஏன் முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள் :


1. "இது உத்தரப் பிரதேசத்தின் முதல் ஆலை மற்றும் நாட்டில் இரண்டாவது ஆலை என்றும், இந்த ஆலை பச்சுமை ஹைட்ரஜனை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு  (compressed natural gas (CNG)) மற்றும் குழாய் இயற்கை எரிவாயு (piped natural gas (PNG)) உடன் கலப்பதை உறுதி செய்யும் என்பதால் இன்று ஒரு பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்று முதல்வர் கூறினார்.


2. ஒரு முன்னோடித் திட்டமாக, இந்த ஆலை நகர எரிவாயு விநியோக அமைப்புகளுக்கு இயற்கை எரிவாயுவுடன் (CNG மற்றும் PNG இரண்டும்) 2% பசுமை ஹைட்ரஜன் உடன் சேர்க்கும். 2 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலை மின்னாற்பகுப்பு மூலம் ஹைட்ரஜனை உருவாக்கும் என்றும், கார்பன் வெளியேற்றத்தை சுமார் 500 டன் குறைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


துருப்பிடிக்காத எஃகு துறையில் இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை


1. இந்தியாவின் துருப்பிடிக்காத எஃகு துறையில் முதல் வணிக அளவிலான பசுமை ஹைட்ரஜன் ஆலை மார்ச் 4, 2024 அன்று ஹரியானாவின் ஹிசாரில் உள்ள ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் லிமிடெட் (JSL) உற்பத்தி பிரிவில் மத்திய எஃகு மற்றும் பொது விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு. ஜோதிராதித்ய எம். சிந்தியாவால் மெய்நிகர் முறையில் திறந்து வைக்கப்பட்டது.


2. இது துருப்பிடிக்காத எஃகு துறைக்கான உலகின் முதல் off-grid பசுமை ஹைட்ரஜன் ஆலை மற்றும் கூரை & மிதக்கும் சூரிய சக்தியுடன் கூடிய உலகின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை ஆகும்.


3. இந்தத் திட்டம் ஒரு அதிநவீன பசுமை ஹைட்ரஜன் வசதியாகும். இது அடுத்த இருபது ஆண்டுகளில்  சுமார் 2,700 மெட்ரிக் டன் கார்பன் வெளியேற்றத்தையும் 54,000 டன் கார்பன் வெளியேற்றத்தையும் கணிசமாகக் குறைக்கும் இலக்கைக் கொண்டுள்ளது.


துறைமுகத் துறையில் இந்தியாவின் முதல் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (Make-in-India) பசுமை ஹைட்ரஜன் ஆலை


1. சமீபத்தில், துறைமுகத் துறையில் இந்தியாவின் முதல் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் பசுமை ஹைட்ரஜன் ஆலை, தீன்தயாள் துறைமுக ஆணையத்தால் (Deendayal Port Authority) கண்ட்லாவில் தொடங்கப்பட்டது. இதன் மூலம், மெகாவாட் அளவிலான உள்நாட்டு பசுமை ஹைட்ரஜன் வசதியைக் கொண்ட முதல் இந்திய துறைமுகமாக கண்ட்லா மாறியது.


2. இந்திய பொறியாளர்களால் முழுமையாக உருவாக்கப்பட்ட இந்த ஆலை, மே 2025-ல் பிரதமரால் அறிவிக்கப்பட்ட ஒரு பெரிய 10 மெகாவாட் பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் முதல் தொகுதி ஆகும்.


3. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் 140 மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய முடியும். இந்த திட்டம் தீன்தயாள் துறைமுக ஆணையத்தின் முந்தைய வெற்றிக்குப் பிறகு வருகிறது. அது இந்தியாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மின்சார இழுவைப் படகை (Green Tug)  அறிமுகப்படுத்தியது.


பிரபஞ்சத்தில் ஹைட்ரஜன் மிகவும் மிகுதியாக உள்ள தனிமம் மற்றும் எரிபொருளாக ஹைட்ரஜன்


1. இயற்கையில் மிகவும் பொதுவான தனிமமான ஹைட்ரஜன், மற்ற தனிமங்களுடன் இணைந்து மட்டுமே உள்ளது. மேலும், நீர் போன்ற இயற்கையாக நிகழும் சேர்மங்களிலிருந்து (இது இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் மற்றும் ஒரு ஆக்ஸிஜன் அணுவின் கலவையாகும்) பிரித்தெடுக்கப்பட வேண்டும். இது ஒரு சுத்தமான மூலக்கூறு. ஆனால், அதைப் பிரித்தெடுக்கும் செயல்முறை ஆற்றல் மிகுந்தது.


2. சுத்தமான எரிபொருள் மூலமாக ஹைட்ரஜனின் ஆற்றல் கிட்டத்தட்ட 150 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டிருந்தாலும், 1970-ஆம் ஆண்டுகளின் எண்ணெய் விலை நிகழ்வுகளுக்குப் பிறகுதான், ஹைட்ரஜன் புதைபடிவ எரிபொருட்களை மாற்றுவதற்கான சாத்தியக்கூறு தீவிரமாகக் கருதப்பட்டது.


3. ஹைட்ரஜன் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து வண்ணங்களால் வகைப்படுத்தப்படுகிறது. புதைபடிவ எரிபொருட்களிலிருந்து ஹைட்ரஜன் தயாரிக்கப்படும்போது, அது சாம்பல் ஹைட்ரஜன் என்று அழைக்கப்படுகிறது. தற்போது, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனில் பெரும்பாலானவை சாம்பல் ஹைட்ரஜனாகும்.


ஹைட்ரஜனின் பல நிறங்கள்.


4. கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு விருப்பங்களுடன் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து உருவாக்கப்படும் ஹைட்ரஜன் நீல ஹைட்ரஜன் என்று அழைக்கப்படுகிறது.


5. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் இயங்கும் மின்னாற்பகுப்பிகளைப் பயன்படுத்தி நீர் மின்னாற்பகுப்பிலிருந்து தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜனைக் பசுமை ஹைட்ரஜன் குறிக்கிறது. இது ஹைட்ரஜன் உற்பத்திக்கான கிட்டத்தட்ட உமிழ்வு இல்லாத பாதையாகக் கருதப்படுகிறது.


6. பசுமை ஹைட்ரஜனுக்கு குறிப்பிட்ட நன்மைகள் உள்ளன:


(i) இது ஒரு சுத்தமான எரியும் மூலக்கூறாகும். இது போக்குவரத்து, இரசாயனங்கள் மற்றும் இரும்பு மற்றும் எஃகு போன்ற பல்வேறு தொழில்களை கரிமநீக்க செயல்முறைகளில்  பயன்படுகிறது.


(ii) புனரமைப்பு ஆற்றலை, மின்கட்டமைப்பு சேமிக்கவோ பயன்படுத்தவோ முடியாதபோது, அதைப் பயன்படுத்தி ஹைட்ரஜனை உற்பத்தி செய்யலாம்.


பசுமை ஹைட்ரஜன் சான்றிதழ் திட்டம்


1. இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதியை அதிகரிக்கவும், ஆற்றல் மிகுந்த துறைகள் வளர்ந்துவரும் எரிபொருளை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கவும், ஒன்றிய அரசு தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின்கீழ் ஒரு சான்றிதழ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் Carbon Credit Trading Scheme (CCTS)-ன் கீழ் உமிழ்வு விதிகளை அறிவித்துள்ளது.


2. ஒன்றிய  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஏப்ரல் 29 அன்று அமைச்சகத்தால் 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தரத்தின் அடிப்படையில் பசுமை ஹைட்ரஜனை அளவிடுதல், கண்காணித்தல், அறிக்கையிடுதல், தளத்தில் சரிபார்த்தல் மற்றும் சான்றளிக்கும் திட்டத்தைத் தொடங்கினார்.


3. ஏப்ரல் 27 அன்று, பசுமை ஹைட்ரஜன் சான்றிதழ் திட்டத்தின் நோடல் நிறுவனமான எரிசக்தி திறன் பணியகம் (BEE), CCTS-ன் கீழ் பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்தி கடுமையாகக் குறைக்கும் துறைகளுக்கு கடன்களைப் பெறவும் வர்த்தகம் செய்யவும் அனுமதிக்கும் ஒரு நெறி முறையை அறிவித்தது.


4. குறிப்பாக, 2023-ஆம் ஆண்டில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) ஒரு பசுமை ஹைட்ரஜன் தரநிலையை அறிமுகப்படுத்தியது, உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோ ஹைட்ரஜனுக்கு 2 கிலோ கார்பன் உமிழ்வை இது கட்டுப்படுத்தியது. தரநிலையின் அடிப்படையில் சான்றிதழ் திட்டம், மின்னாற்பகுப்பு அல்லது உயிரி மாற்றத்திலிருந்து பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கு மட்டுமே பொருந்தும்.


01. தேசிய பசுமை ஹைட்ரஜன் பணி என்றால் என்ன?


2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் எரிசக்தி சுதந்திரம் மற்றும் 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியம் என்ற லட்சியங்களில் பசுமை ஹைட்ரஜனின் பங்கை அங்கீகரித்து, 2023-ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவையால் தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன் (National Green Hydrogen Mission (NGHM)) அங்கீகரிக்கப்பட்டது. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (MNRE) ஆதரவுடன், NGHM, பசுமை ஹைட்ரஜனை இந்தியாவிற்கு ஒரு புதிய துறையாகக் கருதுகிறது. பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் வழித்தோன்றல்களின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கு இந்தியாவை உலகளாவிய மையமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.


02. NGHM-ன் கீழ் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திறனுக்கான 2030 இலக்கு என்ன?


NGHM-ன் கீழ் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திறனுக்கான 2030 இலக்கு ஆண்டுக்கு 5 மில்லியன் டன்கள் ஆகும். இது புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க பங்களிக்கிறது. இந்த திட்டம் இலக்குகளை அடைவது 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் புதைபடிவ எரிபொருள் இறக்குமதியை ஒட்டுமொத்தமாக ரூ.1 லட்சம் கோடி குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Original article:

Share:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) என்பவை யாவை? -ரோஷ்னி யாதவ், குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— உச்ச நீதிமன்றம் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு வாக்கு இயந்திரங்களையும் (EVMs) புது தில்லியில் உள்ள அதன் வளாகத்திற்கு வரவழைத்து வாக்குகளை மீண்டும் எண்ணிய பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


— முந்தைய முடிவில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டு, பின்னர் உச்சநீதிமன்றத்தை அணுகிய மோஹித் குமார், முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்பஞ்ச் குல்தீப் சிங்கை 51 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.


— 2022-ல் நவம்பரில் நடந்த தேர்தலின் ஆரம்ப முடிவை மோஹித் சவால் செய்தார். ஒரு வாக்குச் சாவடியில் ஒரு தலைமை அதிகாரி தனக்கும் குல்தீப்புக்கும் இடையில் வாக்குகளை மாற்றியதாகக் குற்றம் சாட்டினார்.


—உச்ச நீதிமன்றம் EVM இயந்திரத்தில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் முதல் நிகழ்வாக இந்த வழக்கு அமைந்ததாக நிபுணர்கள் நம்புகின்றனர்.


— நாடாளுமன்ற, சட்டமன்ற அல்லது மாநில கவுன்சில் தேர்தல்களின் முடிவுகளை, தேர்தல் நடத்தப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்குள் மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல் செய்வதன் மூலம் சவால் செய்யலாம்.


— உள்ளாட்சித் தேர்தல்களுக்கு எதிரான தேர்தல் மனுக்கள் மாவட்ட அளவிலான சிவில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படவேண்டும். இந்த மனுவை, சம்பந்தப்பட்ட தேர்தலுடன் தொடர்புடைய வேட்பாளர் அல்லது வாக்காளர் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். மேலும், முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.


— மனுவில், அனைத்து முக்கிய உண்மைகளின் தெளிவான அறிக்கையும் இருக்க வேண்டும். அது "ஊழல் நடைமுறைகள்" என்று கூறினால், சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்கள், செயலின் தேதி மற்றும் இடம் போன்ற விவரங்களை அது வழங்க வேண்டும்.


—நீதிமன்றங்கள்  கீழ்க்கண்ட காரணங்களுக்காக தேர்தலை ரத்து செய்யலாம். அவை:


• லஞ்சம் அல்லது தேவையற்ற செல்வாக்கு பயன்படுத்தப்படுதல், குற்றப் பதிவுகளை மறைத்தல் அல்லது சமூகக் குழுக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துதல்.


• வெற்றி பெற்ற வேட்பாளர் தகுதியற்றவராகவோ அல்லது தேர்தல் நாளில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவராகவோ இருத்தல்.


• ஒரு வேட்பாளரின் வேட்புமனு தவறாக நிராகரிக்கப்பட்டிருத்தல்.


• ஒரு வேட்புமனு தவறாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருத்தால், அல்லது வாக்குகள் தவறாக எண்ணப்பட்டிருந்தால் அல்லது நிராகரிக்கப்பட்டிருந்தால்.


• அரசியலமைப்பு அல்லது தேர்தல் சட்டங்களை மீறும் செயல் நடந்திருந்தால், அது வேட்பாளாரின் முடிவை தெளிவாக பாதித்திருந்தால்.


—வழக்கமாக, தேர்தல் நடந்த இடத்தில் வாக்குகளை மீண்டும் எண்ண நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன. ஆனால், பானிபட் சர்பஞ்ச் தேர்தல் வழக்கில் (Panipat sarpanch election case), உச்சநீதிமன்றம் அதன் சொந்த வளாகத்தில் மீண்டும் எண்ணும் பணியைச் செய்தது.


—இது அரிதானது. ஆனால், சில நேரங்களில் நீதிமன்றங்கள் ஒரு தேர்தலை ரத்து செய்வது மட்டுமல்லாமல், மற்றொரு வேட்பாளரை வெற்றியாளராக அறிவிக்கவும் செய்கின்றன. இதற்காக, மனுதாரர் அல்லது மற்றொரு வேட்பாளர் பெரும்பான்மை செல்லுபடியாகும் வாக்குகளைப் பெற்றதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.


உங்களுக்குத் தெரியுமா?:


—இந்தியாவில் உள்ளூர் மட்டத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்த சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் அவசியம். 1993ஆம் ஆண்டின் 73வது மற்றும் 74வது அரசியலமைப்பு திருத்தச் சட்டங்கள் நகர்ப்புறங்கள் (நகராட்சிகள்) மற்றும் கிராமப்புறங்கள் (பஞ்சாயத்துக்கள்) இரண்டிலும் உள்ள உள்ளூர் சுய-அரசுகளுக்கு அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கின. இந்த திருத்தங்கள், இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழக்கமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்காக மாநிலத் தேர்தல் ஆணையங்களை (SECs) நிறுவுவதற்கான விதிகளையும் அரசியலமைப்பில் உருவாக்கியது.


—எளிதில் சொன்னால், மாநில தேர்தல் ஆணையங்கள் (SECs) என்பது மூன்றாம் நிலை நிர்வாகத்திற்கான தேர்தல்களை நடத்தும் ஒரு அரசியலமைப்பு அதிகாரமாகும். இதில் கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மற்றும் நகரங்களில் உள்ள நகராட்சிகள் அடங்கும்.


—73வது மற்றும் 74வது திருத்தங்கள் அரசியலமைப்பில் பகுதி IX மற்றும் பகுதி IXA-ஐச் சேர்த்தன. பகுதி IX (பிரிவுகள் 243 முதல் 243O வரை) பஞ்சாயத்துகளின் அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளைக் கையாள்கிறது. அதே நேரத்தில் பகுதி IXA (பிரிவுகள் 243P முதல் 243ZG வரை) நகராட்சிகளைக் கையாள்கிறது.


—பகுதி IX-ல் உள்ள பிரிவு 243K பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்களை வழங்குகிறது. பகுதி IXA-ல் உள்ள பிரிவு 243ZA நகராட்சிகளுக்கான தேர்தல்களை வழங்குகிறது.


—மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMகள்) வாக்களிப்பதையும் எண்ணுவதையும் எளிதாகவும் வேகமாகவும் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு EVM இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை, கட்டுப்பாட்டு அலகு (control unit) மற்றும் வாக்குப்பதிவு அலகு (balloting unit) ஆகும்.


—இந்த இரண்டு பகுதிகளும் ஒரு கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அலகு தலைமை அதிகாரி அல்லது வாக்குப்பதிவு அதிகாரியிடம் வைக்கப்படும். அதே நேரத்தில் வாக்குப்பதிவு அலகு வாக்காளர்கள் வாக்களிக்க வாக்களிக்கும் பெட்டியின் உள்ளே வைக்கப்படும். இந்த அமைப்பு வாக்குப்பதிவு அதிகாரி ஒவ்வொரு வாக்காளரின் அடையாளத்தையும் சரிபார்க்க முடியும் என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது.



Original article:

Share:

காலனித்துவ வேர்களில் இருந்து அரசியலமைப்பு வரை -கண்ணன் கே

 ஆகஸ்ட் 22-ம் தேதி UPSC முதன்மைத் தேர்வுக்குத் தயாராகி வருவதால், அக்டோபர் 1-ம் தேதி அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவும் தயாராகி வருகிறது. இந்த அரசியலமைப்பு அமைப்பு (constitutional body) எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதைத் திரும்பிப் பார்க்க இதுவே சரியான தருணம். அது எவ்வாறு பரிணமித்துள்ளது மற்றும் நியாயமான மற்றும் தகுதி அடிப்படையிலான ஆட்சேர்ப்பு முறையை எவ்வாறு தொடர்ந்து நிலைநிறுத்துகிறது என்பதைத் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் இது.


இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல், அரசு ஊழியர்களை 'இந்தியாவின் எஃகு சட்டகம்' (steel frame of India) என்று குறிப்பிட்டாலும், அவர்கள் 'நிரந்தர நிர்வாகி' (permanent executive) என்றும் அழைக்கப்படுகிறார்கள். அதன் காலனித்துவத்திலிருந்து தற்போதைய வடிவம் வரை, ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) அதன் எஃகு சட்டகம் மற்றும் அதன் நிரந்தர நிர்வாகியை நாட்டிற்கு திறம்பட வழங்கியுள்ளது. மேலும் திறமைவாதத்தின் பாதுகாவலராக அதன் பங்கை நிலைநிறுத்தியுள்ளது.


ஆகஸ்ட் 22-ம் தேதி UPSC முதன்மைத் தேர்வு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் நூற்றாண்டு ஆண்டு விழா அக்டோபர் 1, 2025 அன்று தொடங்கவுள்ள நிலையில், இந்த அரசியலமைப்பு அமைப்பைப் பார்க்க இது ஒரு நல்ல நேரம். அதன் உருவாக்கம், பரிணாமம், ஆணை மற்றும் இன்றைய சவால்களை எதிர்கொள்ள அது அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்களை நாம் அறியலாம்.


இந்திய குடிமைப் பணி : ஆதரவாளரிடமிருந்து தகுதி அடிப்படையிலான அமைப்பு வரை


இந்தியாவின் குடிமைப் பணிகளின் அடிப்படைகள் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்குச் செல்கின்றன. 'இந்தியாவில் குடிமைப் பணியின் தந்தை' என்று பெரும்பாலும் குறிப்பிடப்படும் கவர்னர் ஜெனரல் லார்ட் கார்ன்வாலிஸ், 1793-ம் ஆண்டு கார்ன்வாலிஸ் சட்டம் மூலம் இந்திய குடிமைப் பணியின் (Indian Civil Services (ICS)) அடித்தளத்தை அமைத்தார்.


ஆரம்பத்தில், குடிமைப் பணிகளுக்கான தேர்வு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்களின் (directors of the British East India Company) ஆதரவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், லார்ட் மெக்காலே குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து 1854-ம் ஆண்டில் போட்டித் தேர்வுகள் மூலம் தகுதி அடிப்படையிலான அமைப்புடன் இது மாற்றப்பட்டது. 1853-ம் ஆண்டின் சாசனச் சட்டம், நிறுவனத்தின் ஆதரவை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வந்தது.


லார்ட் மெக்காலே குழுவின் பரிந்துரைகளின் பேரில், 1854-ம் ஆண்டில் லண்டனில் ஒரு குடிமைப் பணி ஆணையம் (CSC) அமைக்கப்பட்டது மற்றும் 1855-ல் போட்டித் தேர்வுகள் தொடங்கப்பட்டன. ஐரோப்பிய பாரம்பரியங்களுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்துடன் CSC ஐசிஎஸ் தேர்வுகளை லண்டனில் நடத்தியதால், இந்தியர்கள் வெற்றி பெறுவது கடினமாகிவிட்டது. இத்தகைய தடைகள் இருந்தபோதிலும், 1864-ம் ஆண்டு சத்யேந்திரநாத் தாகூர் ICS-ல் இணைந்த முதல் இந்தியரானார். அதைத் தொடர்ந்து, ஒரு சில இந்தியர்கள் ICS-ல் இணைந்தனர்.


1919-ம் ஆண்டு மாண்டேகு செல்ம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்களுக்குப் பிறகு, ICS தேர்வுகள் 1922 முதல் இந்தியாவில் நடத்தத் தொடங்கின. இதில், மூன்றில் ஒரு பங்கு பதவிகள் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்டன. லீ ஆணையத்தின் (1924) பரிந்துரைகளின் அடிப்படையில், அக்டோபர் 1, 1926 அன்று ஒரு பொது சேவை ஆணையம் நிறுவப்பட்டது. பின்னர், 1935-ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம், 1937-ம் ஆண்டு முறையாக கூட்டாட்சி பொது சேவை ஆணையத்தை (Federal Public Service Commission (FPSC)) நிறுவியது. 1950-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம் FPSC ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது, இது பிரிவு 315-ன் கீழ் அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கியது.

அதிகாரம் மற்றும் பொறுப்புகள்


UPSC ஆனது, குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஒரு தலைவர் மற்றும் உறுப்பினர் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டம், உறுப்பினர்களில் குறைந்தது பாதிப் பேர் அரசுப் பணியில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது வரை, எது முந்தையதோ அதுவரை நிலையான பதவிக் காலம் பணியாற்றுவார்கள். தேர்வுகள் மற்றும் நேரடி ஆட்சேர்ப்புக்கான அர்ப்பணிப்பு பிரிவுகளை உள்ளடக்கிய அதன் செயலகத்தால் ஆணையத்தின் பணிகள் ஆதரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், புகழ்பெற்ற ஓய்வுபெற்ற IAS அதிகாரியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான டாக்டர் அஜய் குமார் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.


UPSC-ன் அரசியலமைப்பு ஆணை அரசியலமைப்பின் பிரிவுகள் 315-323-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிவு 320 அதன் முக்கிய செயல்பாடுகளை விவரிக்கிறது. UPSC என்பது மூன்று அகில இந்திய சேவைகள் (IAS, IPS, IFS) மற்றும் பல்வேறு முக்கிய அரசு பதவிகளுக்கான நியமனங்களுக்கான தேர்வுகளை நடத்துவதற்கான இந்தியாவின் முதன்மையான அமைப்பாகும். இது பல்வேறு சேவைகள் மற்றும் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு விதிகளையும் உருவாக்கி திருத்துகிறது.


இந்த ஆணையத்தின் மிக முக்கியமான பணி, 24 விதமான வெவ்வேறு மத்திய சேவைகளுக்கு ஆட்களை நியமிக்கும் குடிமைப் பணித் தேர்வை (CSE) நடத்துவதாகும். மேலும், இந்திய பொருளாதார சேவை (Indian Economic Service (IES)) மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (Combined Defence Services (CDS)) உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிற பதவிகளுக்கான தேர்வுகளை இவை நடத்துகிறது.


எனவே, அரசாங்கத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற இளம் மற்றும் தகுதி வாய்ந்த இந்தியர்களை ஆட்சேர்ப்பு செய்வதே ஆணையத்தின் முதன்மை செயல்பாடாகும். அவ்வாறு செய்வதன் மூலம், எந்தவொரு அரசியல் ஆதரவும் இல்லாமல், வேட்பாளரின் திறமை, அறிவு மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவதை உறுதி செய்வதன் மூலம் இந்தியாவின் தகுதி அடிப்படையிலான நிர்வாக அமைப்பை இது நிலைநிறுத்துகிறது.

மேலும், UPSC என்பது ஒரு ஆலோசனைத் தன்மையை வகிக்கிறது. ஒழுங்குமுறை அடிப்படிகளில் அரசாங்கத்தை வழிநடத்துகிறது மற்றும் உரிய செயல்முறை மற்றும் நியாயத்தன்மை பராமரிக்கப்படுவதை உறுதி செய்கிறது. ஆட்சேர்ப்பில் ஆணையத்தின் பங்கு சிறப்பு பதவிகளுக்கும் பொருந்துகிறது. அங்கு எழுத்துத் தேர்வு இல்லாமல், அவர்களின் தகுதிகள் மற்றும் நேர்காணல்களின் அடிப்படையில் நேரடியாக நிபுணர்களைத் தேர்ந்தெடுக்கிறது.


கூடுதலாக, இந்திய குடியரசுத் தலைவர் அதிகாரிகளின் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான விஷயங்களில் UPSC உடன் ஆலோசனை நடத்துகிறார். பிரிவு 323-ன் கீழ், அதன் பணிகள் மற்றும் பரிந்துரைகளை விவரிக்கும் வருடாந்திர அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


அறிக்கையானது கோரப்பட்டால், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் கூட்டு ஆட்சேர்ப்புகளை (joint recruitments) நடத்துவதற்கு உதவுவதும் ஆணையத்தின் பணியாகும். பிரிவு 321-ன் கீழ், UPSC-ன் செயல்பாடுகளை முதலில் ஒதுக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு அப்பால் நீட்டிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. இருப்பினும், அமைப்பானது சில சமகால சவால்களை எதிர்கொள்கிறது.


சவால்கள் மற்றும் சீர்திருத்தங்கள்


UPSC-யின் சவால்களில் ஒன்று, நியாயமான மற்றும் தகுதி அடிப்படையிலான போட்டிக்கான அதன் உறுதியான உறுதிப்பாட்டைப் பராமரிப்பதாகும். ஏனெனில், மில்லியன் கணக்கான இளம் இந்தியர்கள் அதன் தேர்வை அனைவரும் அணுகக்கூடிய பிரகாசமான எதிர்காலத்திற்கான ஒரு வழியாகக் கருதுகின்றனர். எனவே, தேர்வு செயல்முறையின் நேர்மையை உறுதி செய்வது மிக முக்கியம்.


மற்றொரு சவால், தேர்வு செயல்முறை நீண்டகாலம் எடுத்துக்கொள்வது குறிப்பாக CSE விஷயத்தில், இது பெரும்பாலும் முதல்நிலைத் தேர்வுகள் முதல் இறுதி முடிவுகள் வரை ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும். இது நீண்டகாலமாக என்பதால் விமர்சிக்கப்படுகிறது. ஆர்வலர்கள் தங்கள் திறன்களை பல ஆண்டுகள் முயற்சிகளில் செலவிட காரணமாகிறது. இதனால், பலர் இறுதித் தேர்வை அடைய முடியவில்லை.

மேலும், கள நிபுணர்களை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை இப்போது அதிகரித்து வரும் அங்கீகாரம் பெற்றுள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன சவால்களைச் சமாளிக்க இந்த நிபுணர்கள் தேவை. இது UPSC மூலம் பொது ஆட்சேர்ப்பை முக்கியமாக நம்பியிருக்கும் பழைய நடைமுறையிலிருந்து ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.


இந்த சவால்களுக்கு பதிலளிக்கும் விதமாக, UPSC முக்கிய சீர்திருத்தங்களைத் தொடங்கியுள்ளது. ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும், விண்ணப்ப செயல்முறைகளை எளிதாக்கவும், அதன் அனைத்து தேர்வுகளுக்கும் ஒரு முறை பதிவு (One Time Registration (OTR)) தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இடஒதுக்கீடு சலுகைகள் குறித்த மோசடியான கூற்றுகளைத் தடுக்க, ஆரம்ப கட்டத்திலேயே ஆவணங்களைச் சமர்ப்பிப்பது போன்ற விண்ணப்ப விதிகளையும் UPSC கடுமையாக்கியுள்ளது. மகாராஷ்டிரா கேடர் IAS அதிகாரியின் சமீபத்திய வழக்கு, இத்தகைய கடுமையான விதிகள் ஏன் அவசியம் என்பதைக் காட்டுகிறது.


ஆணையம் அதன் தேர்வு முறைகளை தொடர்ந்து மதிப்பாய்வு செய்து வருகிறது. மேலும், நிர்வாகத்தின் வளர்ந்துவரும் தேவைகளுக்கு சிவில் சேவைகள் பொருத்தமானதாக இருப்பதை உறுதி செய்வதற்காக கள நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான புதிய வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது. முழு ஆட்சேர்ப்பு சுழற்சிக்கும் எடுக்கும் நேரத்தைக் குறைப்பது குறித்தும் விவாதங்கள் நடந்துள்ளன. இதற்கு சிறந்த திட்டமிடல் மற்றும் முடிவுகளை விரைவாக செயலாக்குவது தேவைப்படும். இது தாமதங்களை நிவர்த்தி செய்யவும் சிறந்த திறமையாளர்களைத் தக்கவைக்கவும் உதவும்.


சில சவால்கள் இருந்தபோதிலும், UPSC ஒரு துடிப்பான நிறுவனமாகவே உள்ளது. சீர்திருத்தங்கள் மூலம் இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. திறமையான மற்றும் உறுதியான அதிகாரத்துவத்தை உருவாக்குவதற்கு ஒரு வலுவான மற்றும் பயனுள்ள UPSC மிக முக்கியமானது. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் இலக்கை நிறைவேற்ற இதுபோன்ற ஒரு அதிகாரத்துவம் அவசியம்.



Original article:

Share: