இந்தியாவின் தூய எரிசக்தி லட்சியங்களில் 'முக்கியக் காரணி' -அல்கேஷ் குமார் ஷர்மா

 புவிசார் அரசியல் பதற்றங்கள், வர்த்தக கட்டுப்பாடுகள் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மை ஆகியவை முக்கியமான தனிமங்களுக்கான தன்னிறைவு வழங்கல் சங்கிலியை உருவாக்குவதன் அவசரத்தை எடுத்துக்காட்டுகின்றன.


லித்தியம், கோபால்ட் மற்றும் அரிய மண் தனிமங்கள் (Rare Earth Elements (REEs)) போன்ற முக்கியமான தனிமங்களைப் பாதுகாப்பதில்தான் இந்தியாவின் தூய்மையான எரிசக்தியில் உலகளாவிய முன்னணியாக இருக்கும் லட்சியமும் நிலையான வளர்ச்சியும் தங்கியுள்ளன. இந்த தனிமங்கள் முக்கிய தொழில்நுட்பங்களை இயக்குகின்றன — மின்சார வாகனங்கள் (electric vehicles (EV)), சூரிய மின்கலன்கள், காற்றாடிகள் (wind turbines) மற்றும் ஆற்றல் சேமிப்பு — இவை இந்தியாவின் பசுமை மாற்றத்திற்கும் நீண்டகால எரிசக்தி இலக்குகளுக்கும் மிகவும் முக்கியமானவை. 2030ஆம் ஆண்டுக்குள் 500 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைவதையும், 2070ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை (net zero emissions) எட்டுவதையும் இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளதால், முக்கியமான தனிமங்கள் மற்றும் அரிய மண் தனிமங்களின் வழங்கலை உறுதி செய்வது முக்கியமானதாகிறது. உலகளாவிய போட்டிக்கு மத்தியில் இந்தியா இறக்குமதி செய்யப்பட்ட முக்கிய தனிமங்களை நம்பியிருப்பதால், வலுவான உள்நாட்டு சுரங்கம், சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகள் தேவைப்படுகின்றன.


சுரங்கங்களிலும் நவீன மறுசுழற்சி தொழில்நுட்பங்களிலும் முதலீடு செய்வது மீள்தன்மை கொண்ட விநியோகச் சங்கிலிகளை உருவாக்கும் மற்றும் தூய்மையான எரிசக்தி போட்டியில் சுயநிறைவை அடைந்த இந்தியா (Atmanirbhar Bharat) தொலைநோக்கை முன்னெடுத்துச் செல்லும்.


இந்தியாவின் பசுமை மாற்றத்தில் முக்கியமான கனிமங்கள்


இந்தியாவின் தூய்மையான எரிசக்தி இலக்குகளுக்கு முக்கியமான தனிமங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. மின்சார வாகன மின்கலன்களுக்கு லித்தியமும் கோபால்ட்டும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவின் மின்சார வாகன சந்தை 2023 முதல் 2030 வரை 49% கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் (compound annual growth rate (CAGR)) வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2024ஆம் ஆண்டு மின்சார இயக்கத்துறை மேம்பாட்டுத் திட்டம் (Electric Mobility Promotion Scheme (EMPS)) போன்ற அரசாங்க முயற்சிகளால் இயக்கப்படும். 2023ஆம் ஆண்டில், இந்தியாவின் மின்கள சேமிப்பு சந்தை $2.8 பில்லியன் மதிப்புடையதாக இருந்தது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாடு அதிகரிக்கும் போது மின்கலன்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இருப்பினும், லித்தியம், கோபால்ட், நிக்கல் ஆகியவற்றிற்கு 100% மற்றும் அரிய பூமி தனிமங்களுக்கு 90%-க்கும் அதிகமான இறக்குமதியை இந்தியா நம்பியிருப்பது, விநியோகச் சங்கிலி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது இந்தியாவின் விநியோகச் சங்கிலியை பலவீனமாகவும் ஆபத்தானதாகவும் ஆக்குகிறது. அரசியல் பதட்டங்கள், வர்த்தக வரம்புகள் மற்றும் கடுமையான போட்டி (குறிப்பாக, அரிய மண் தனிமங்களுக்கு உற்பத்தி மற்றும் செயலாக்கத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் சீனாவிலிருந்து பெறப்படும் தனிமங்கள்) போன்ற உலகளாவிய பிரச்சினைகள், இந்தியா ஏன் அதன் சொந்த வலுவான மற்றும் நம்பகமான விநியோகச் சங்கிலியை உருவாக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன. தூய்மையான எரிசக்தி இலக்குகள், தொழில் வளர்ச்சி மற்றும் தேசிய பாதுகாப்பை அடைய ஒரு சுயசார்பு விநியோகச் சங்கிலியை உருவாக்குவது முக்கியமானது.


இந்தியாவில் பயன்படுத்தப்படாத பரந்த தனிமங்கள் உள்ளன. ஜம்மு காஷ்மீரிலும் ராஜஸ்தானிலும் லித்தியமும், ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் அரிய மண் தனிமங்களும் உள்ளன. 2016-இல் தொடங்கப்பட்ட தேசிய கனிம ஆய்வுக் கொள்கையும் (National Mineral Exploration Policy (NMEP)), 2021-ல் சுரங்கங்கள் மற்றும் தனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் மூலம் அடுத்தடுத்த முன்னேற்றங்களும் தனியார் பங்கேற்பை ஊக்குவிப்பதன் மூலமும் மேம்பட்ட புவி இயற்பியல் ஆய்வுகளைப் பயன்படுத்துவதன் மூலமும் ஆய்வை துரிதப்படுத்தியுள்ளன. 2023-ல், இந்திய புவியியல் ஆய்வுத்துறை (Geological Survey of India) ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் அனுமான லித்தியம் வளங்களை அடையாளம் கண்டது. இது உள்நாட்டு உற்பத்திக்கு ஒரு நம்பிக்கை அளிக்கிறது. கடந்த ஆண்டு மட்டும், லித்தியம், கிராஃபைட் மற்றும் அரிய மண் தனிமங்கள் உள்ள 20 முக்கியமான தனிமப் பகுதிகள் ஏலத்திற்கு வைக்கப்பட்டன. இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் ஏலம் எடுப்பதில் ஆர்வம் காட்டின. இது இந்தத் துறையில் அதிக முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய விரும்புவதைக் காட்டுகிறது.


ஆய்வு என்பது முதல்படி மட்டுமே. உலகளாவிய அரிய மண் தனிமங்கள் உற்பத்தியில் இந்தியா 1%-க்கும் குறைவாக பங்களிப்பதால், அரசு-தனியார் கூட்டுறவு மூலம் செயலாக்கம் மற்றும் சுத்திகரிப்பு திறனை விரைவாக உருவாக்க வேண்டும். தனியார் கூட்டாளர்கள் மேம்பட்ட செயலாக்க தொழில்நுட்பங்களைக் கொண்டு வரலாம் மற்றும் மறுசுழற்சி உள்கட்டமைப்பை ஆதரிக்கலாம். அதே, நேரத்தில் உள்நாட்டு லித்தியம் மற்றும் கோபால்ட் பரிசோதனை திட்டங்களுக்கு மானியங்கள், வரிச் சலுகைகள் மற்றும் ஆராய்ச்சி மானியங்கள் மூலம் அதிக அரசாங்க ஆதரவு தேவைப்படுகிறது.


சுரங்கங்களில் முதலீடு


முக்கியமான தனிமங்களைப் பெறுவதற்கு இந்தியாவிற்குள் இருக்கும் சுரங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் முக்கியம். 2 சுரங்கங்கள் மற்றும் தனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2023 தனியார் ஆய்வுக்கு வழிவகுத்தது. ஆனால், இந்தத் துறை இன்னும் அதிக செலவுகள், ஒழுங்குமுறை தடைகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. 2022ஆம் ஆண்டில், சுரங்கத் துறை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% மட்டுமே பங்களித்தது. ஆஸ்திரேலியாவில் இது 13.6% ஆக இருந்தது. இந்த இடைவெளியைக் குறைக்க, அரசாங்கம் உரிய செயல்முறைகளை நெறிப்படுத்த வேண்டும் மற்றும் தனியார் மூலதனத்தை ஈர்க்க உற்பத்தி தொடர்பான மானியங்கள் போன்ற நிதி சலுகைகளை வழங்க வேண்டும். ஆய்வு, சுரங்கம், பதப்படுத்துதல் மற்றும் இறுதிக்காலப் பொருட்களிலிருந்து மீள்வது ஆகியவற்றில் மதிப்புச் சங்கிலிகளை வலுப்படுத்த இந்திய அரசு ரூ.34,300 கோடி திட்டத்துடன் தேசிய முக்கியமான தனிம திட்டத்தை  (National Critical Mineral Mission (NCMM)) தொடங்கியுள்ளது.


NMDC போன்ற அரசாங்க ஆதரவு பெற்ற நிறுவனங்கள் தங்கள் ஆஸ்திரேலிய கிளை மூலம் விரிவடைந்து முக்கியமான தனிமத்துறையில் நுழையத் திட்டமிட்டுள்ளன. IREL (இந்தியா) லிமிடெட் நியோடைமியம் மற்றும் டிஸ்ப்ரோசியம் போன்ற முக்கியமான கனிமங்களை பிரித்தெடுக்க தயாராகி வருகிறது. ஆனால், இரு நிறுவனங்களுக்கும் புதிய திட்டங்களுக்கு தனியார் நிறுவனங்களுடன் வலுவான கூட்டாண்மைகள் தேவை. வெளிநாடுகளில் கனிம சொத்துக்களை வாங்குவதற்காக 2019-ல் உருவாக்கப்பட்ட கானிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் (KABIL), அதன் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மின்னணு கழிவு மறுசுழற்சி குறித்த புதிய விதிகளைப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டில் கனிம விநியோகத்தையும் அரசாங்கம் மேம்படுத்தி வருகிறது.


சுழற்சி பொருளாதாரத்தை நோக்கி நகர்தல்


இந்தியாவின் சுரங்க மற்றும் செயலாக்க வசதிகளை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது. உள்கட்டமைப்பை நவீனமயமாக்க இயந்திர சுரங்க உபகரணங்கள், தானியங்கி செயலாக்க ஆலைகள் மற்றும் கழிவு மேலாண்மை அமைப்புகளில் முதலீடு தேவைப்படுகிறது. உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மறுசுழற்சி வரை நீட்டிக்கப்படுகின்றன. இந்தியா ஆண்டுக்கு நான்கு மில்லியன் மெட்ரிக் டன் மின்-கழிவுகளை (e-waste) உருவாக்குகிறது. ஆனால், 10% மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. மேம்பட்ட மறுசுழற்சி வசதிகள் முக்கியமான கனிமங்களை மீட்டெடுக்கலாம், சுழற்சி பொருளாதாரத்தை (circular economy) வலுப்படுத்தலாம். 2022-ஆம் ஆண்டு மின்கல கழிவு மேலாண்மை விதிகள் (Battery Waste Management Rules) மறுசுழற்சி இலக்குகளை நிர்ணயிக்கின்றன. ஆனால், பலவீனமான செயல்படுத்தல் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு சவால்களை முன்வைக்கின்றன. அரசு-தனியார் மையங்கள் மறுசுழற்சி தொழில்நுட்பங்களை அதிகரிக்கலாம், செலவுககள் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைக்கலாம்.


இந்தியாவின் சுத்தமான எரிசக்தி மாற்றமும் தொழில்துறை வளர்ச்சியும் சுரங்க மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பொருளாதாரத்தின் மூலம் முக்கியமான கனிமங்களைப் பாதுகாப்பதைப் பொறுத்தது. சுரங்கக் குத்தகைகளை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், சுரங்கங்களில் முதலீடு செய்ய வேண்டும், மறுசுழற்சியை மேம்படுத்த வேண்டும், சத்தீஸ்கரில் ஆய்வுகளை துரிதப்படுத்த வேண்டும், நகர்ப்புற சுரங்கத்தை ஊக்குவிக்க வேண்டும், மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை அதிகரிக்க வேண்டும். இதனால் இறக்குமதி சார்பு குறைக்கப்படுவதோடு, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, புதுமைகள் உந்தப்படும்.


தேசிய முக்கிய தனிம திட்டம் மற்றும் சமீபத்திய ஏலங்கள் நேர்மறையான நடவடிக்கைளாகும். ஆனால், அவற்றின் வெற்றிக்கு வலுவான மாநில ஆதரவு, தெளிவான கொள்கைகள் மற்றும் அரசு-தனியார் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. வலுவான தனிம சுற்றுச்சூழல் அமைப்பு இந்தியாவின் மின்சார வாகனம், சூரிய மற்றும் சேமிப்பு இலக்குகளை இயக்கும் அதே நேரத்தில் அதை பசுமை பொருளாதார முன்னணியாக நிலைநிறுத்தும்.


அல்கேஷ் குமார் சர்மா, பொது நிறுவனங்கள் தேர்வு வாரிய உறுப்பினராகவும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்னாள் செயலாளராகவும் உள்ளார்.



Original article:

Share:

நீதிமன்றங்களில் பாலின சமத்துவத்திற்கான பாதை -அர்ச்சனா ராமசுந்தரம்

 தேசிய அளவிலான போட்டி மூலம் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது உயர்நீதிமன்றங்களில் உள்ள பாலின ஏற்றத்தாழ்வை (gender imbalance) சரி செய்யும்.


குறிப்பாக, இந்தியா உயர்நீதிமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பது தொடர்ந்து கவலைக்குரியதாக உள்ளது. இந்திய நீதி அறிக்கை 2025-ல் எடுத்துக்காட்டப்பட்டுள்ளபடி, உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளில் பெண்கள் 14% மட்டுமே உள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில், ஒரே ஒரு பெண் நீதிபதி மட்டுமே உள்ளார். இந்தியாவின் முதல் பெண் தலைமை நியமிக்கப்படுவது ஒரு நல்ல செய்தியாகும். ஆனால், அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு வேறு எந்தப் பெண்ணும் சேர்க்கப்படாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பெண்களே இல்லாமல் போகலாம். மேலும், 25 உயர் நீதிமன்றங்களில், ஒரே ஒரு நீதிமன்றத்திற்கு மட்டுமே பெண் தலைமை நீதிபதி உள்ளார்.


இந்தக் கடுமையான குறைபாடு கடந்த காலங்களிலும் வெளிப்பட்டது. மேலும், சில நீதிபதிகளும் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால், இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய எந்த வலுவான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், நிலைமை மோசமாகவே உள்ளது.


இந்த பாலின வேறுபாட்டிற்கு முக்கிய காரணம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றங்களுக்கு நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் தற்போதைய கொலீஜியம் அமைப்பு ஆகும். கொலீஜியம் தலைமை நீதிபதி மற்றும் ஒரு சில மூத்த நீதிபதிகளைக் கொண்டது. இந்த அமைப்பு ஒரு நெருக்கமான, உயரடுக்கு குழுவாக (‘elitist club’) செயல்படுகிறது. பெண்கள் மற்றும் சமூகத்தின் பிற பின்தங்கிய பிரிவுகள் அதிக அளவு பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.


சீர்திருத்தம் தேவை


இந்த விவகாரத்தில் கீழ் நீதிமன்றங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன. ஏனெனில், இந்த மட்டத்தில் நீதிபதிகள் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமாக வாய்ப்புகளை வழங்குகிறது. இதன் விளைவாக, கீழ் நீதிமன்றங்களின் ஒட்டுமொத்தமாக பெண்கள் 38% உள்ளனர்.


பதவி உயர்வுக்கான சிறந்த வாய்ப்புகள் மற்றும் பெண்களுக்கு தேவையான வசதிகள் இருந்தால் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். உச்ச நீதிமன்றத்தின் ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் மையம் (Centre for Research and Planning of the Supreme Court) வெளியிட்ட அறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டில் 20% மாவட்ட நீதிமன்ற வளாகங்களில் பெண்களுக்கு தனிக் கழிப்பறைகள் இல்லை.


உயர் நீதித்துறையில் உள்ள இந்த பாலின சமமின்மை, இந்திய ஆட்சிப் பணி (Indian Administrative Service (IAS)), இந்திய காவல் பணி (Indian Police Service (IPS)), மற்றும் இந்திய வெளியுறவு சேவை (Indian Foreign Service (IFS)) போல, திறந்த தேசிய அளவிலான போட்டித் தேர்வுகள் மூலம் நீதிபதிகள் நியமிக்கப்படும் முறையால் சரிசெய்ய முடியும். இந்த பரிந்துரை புதியதல்ல.


கடந்த சில ஆண்டுகளில், இந்த யோசனை அதிக கவனம் பெற்றது. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவின் ஆதரவைப் பெற்றுள்ளது. நவம்பர் 2023-ல் உச்ச நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியலமைப்பு தின விழாவில் அவர் ஆற்றிய உரையில், அகில இந்திய நீதித்துறை சேவையை (All-India Judicial Service) உருவாக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். நியாயமான மற்றும் திறந்த போட்டியின் மூலம் தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அமைப்பாக இது இருக்கும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். அத்தகைய அமைப்பு குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட சமூகக் குழுக்களுக்கும் வாய்ப்புகளை வழங்கும்.


துரதிர்ஷ்டவசமாக, இந்த பரிந்துரை நீதித்துறை மற்றும் வழக்கறிஞர்கள் சங்கம் இரண்டிலிருந்தும் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளது; அவர்களின் பார்வையில், இது நிர்வாகத் தலையீட்டிற்கு வழிவகுக்கும் மற்றும் நீதித்துறை சுயாட்சியை பாதிப்பை ஏற்படுத்தலாம். இருப்பினும், இந்த வாதம் நம்பத்தகுந்ததாக இல்லை. போட்டித் தேர்வுகள் (competitive exams) மூலம் கீழ் நீதிமன்றங்களைத் தேர்ந்தெடுப்பதில் எந்தவொரு நிர்வாகத் தலையீட்டிற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்றால், இதேபோன்ற அமைப்பு உயர் நீதித்துறையின் சுதந்திரத்தை எவ்வாறு பாதிக்கும்? உண்மையில், ஒரு திறந்த போட்டித் தேர்வு நீதிபதிகள் தகுதியின் அடிப்படையில் நியாயமாகத் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்யும். இது வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும், பாரபட்சம் மற்றும் சார்புநிலையைக் குறைக்கும். மேலும், அனைவரையும் உள்ளடக்கிய நீதித்துறையை உருவாக்க உதவும்.


ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission (UPSC)), ஒரு மாதிரியாக 


இந்த கவலைகளை நிவர்த்தி செய்ய, ஒன்றிய அரசுப்பணியாளர் ஆணையத்தின் (UPSC) முக்கியப் பங்கை அங்கீகரிப்பது முக்கியம். ஒவ்வொரு ஆண்டும், ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம், குடிமைப் பணி தேர்வுகளுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்க நாடு தழுவிய போட்டித் தேர்வை நடத்துகிறது.


பல ஆண்டுகளாக, ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணி தேர்வுகளுக்கு வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களின் சுயவிவரங்கள் அவர்களின் சமூக மற்றும் பொருளாதார பின்னணியில் குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மையைக் கண்டன. 2024-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,009 வேட்பாளர்களில், 318 பேர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்தும் 160 பேர் பட்டியல் பிரிவிலிருந்தும், 87 பேர் பட்டியல் பழங்குடியின பிரிவிலிருந்தும், மற்றும் 109 பேர் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவிலிருந்தும் வந்துள்ளனர். பெண்கள் ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளனர்; முதல் 25 வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களில் 11 பேர் பெண்கள் உள்ளனர். உண்மையில், முதல் மற்றும் இரண்டாம் தரவரிசைகள் இரண்டையும் பெண்களே பெற்றுள்ளனர்.


இந்தியா காவல் பணியில் உள்ள சூழ்நிலை இன்னும் மகிழ்ச்சியளிக்கிறது. 2024ஆம் ஆண்டில், 54 பெண்கள் இந்தியா காவல் பணியில் சேர்ந்தனர். இது மொத்த பலத்தில் 28% ஆகும்.


முன்னோக்கிச் செல்லும் வழி


அரசியலமைப்பின் 312வது பிரிவு, சீரான ஆட்சேர்ப்பு, பயிற்சி மற்றும் சேவை தரங்களை உறுதி செய்வதற்காக, அகில இந்திய நீதித்துறை சேவை உட்பட புதிய அகில இந்திய சேவைகளை உருவாக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. அத்தகைய சேவை விரைவில் நடைமுறைக்கு வரும் என்று ஒருவர் நம்புகிறார். இது போன்ற அமைப்புகள் அமைக்கப்பட்டதும், இந்திய நீதித்துறை சேவை மீதான கட்டுப்பாடு உச்சநீதிமன்றத்திடம் இருக்க வேண்டும்.


இருப்பினும், இந்தத் தேர்வு அனைத்து இந்தியர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். மேலும், உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த தகுதித் தரநிலைகள் மற்றும் பிற அளவுகோல்களின் அடிப்படையில் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட வேண்டும். இது நீதித்துறையின் தேர்வு செயல்பாட்டில் மிகவும் தேவையான பாரபட்சமற்ற தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பன்முகத்தன்மையை உருவாக்கும்.


தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், வழக்கு எதுவாக இருந்தாலும், உச்ச நீதிமன்றம் அல்லது சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்ற வேண்டும். நிச்சயமாக, அவர்களின் தேர்வுக்குப் பிறகு ஒரு விரிவான அடிப்படை பயிற்சித் திட்டம் தொடர்பான நடைமுறைகள் உட்பட, இந்த நீதிமன்றங்களால் தீர்மானிக்கப்படும்.


போர் என்பது தளபதிகளிடம் மட்டும் விடப்பட வேண்டிய மிக முக்கியமான விவகாரம் என்று முன்னாள் பிரெஞ்சு பிரதமர் ஜார்ஜஸ் கிளெமென்சியோ கூறியுள்ளார். அதேபோல நீதி என்பது நீதிபதிகளிடம் மட்டும் இருக்க வேண்டிய  முக்கியமான விவகாரம். 


இந்த விவகாரத்தில் இந்த நாட்டின் குடிமக்களுக்கும் பங்கு உண்டு. மேலும், அனைவரையும் உள்ளடக்கிய நீதித்துறையை உறுதி செய்வதற்காக தேர்வு செயல்முறைக்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.


அர்ச்சனா ராமசுந்தரம் ஓய்வு பெற்ற காவல்துறை தலைவர் ஆவார். மேலும், லோக்பால் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.



Original article:
Share:

நகராட்சிகளின் நிதிக் கட்டமைப்பு ஏன் குறைபாடுடையதாக உள்ளது? -திகேந்தர் சிங் பன்வார்

 நகராட்சி பத்திரங்கள் (municipal bonds) உள்ளூர் நிதியின் புதிய எல்லையா? ஒன்றிய அரசு வரிகளை அதிகமாகக் கட்டுப்படுத்துவது ஒரு பிரச்சனையா?


தற்போதைய செய்தி: நகர்ப்புற இந்தியா (Urban India) தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கை உருவாக்குகின்றன. ஆனால், நகராட்சிகள் நாட்டின் வரி வருவாயில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே பெறுகின்றன. இந்திய நகரங்கள் போதுமான நிதியை உருவாக்கவில்லை. அதற்குக் காரணம் நிர்வாக ரீதியான செயல்பாடுகள் அல்ல. மாறாக, நிதி மற்றும் வரிவிதிப்பு முறைகள் அவற்றுக்கு போதுமான ஆதரவு வழங்காதது இதற்கு முக்கிய காரணியாகும். இன்று, நகராட்சி நிதி, அரசுகளுக்கிடையேயான பரிமாற்றங்கள், கடன்கள் மற்றும் திட்டங்களைச் சார்ந்துள்ளது. ஒன்றிய அரசு வரிகளை அதிகமாகக் கட்டுப்படுத்துவது முக்கியப் பிரச்சனையாக உள்ளது.


நகரங்கள் தங்கள் வரி வருவாயை எவ்வாறு இழந்தன?


சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்திய நகரங்கள் தங்கள் சொந்த வருவாய் ஆதாரங்களில் ஏறக்குறைய 19% இழந்தன. நகராட்சி பட்ஜெட்டுகளின் பாரம்பரிய உயிர்நாடிகளான நகராட்சி வரி (Octroi), நுழைவு வரி மற்றும் உள்ளூர் கூடுதல் கட்டணங்கள் சரக்கு மற்றும் சேவை வரி கட்டமைப்பிற்குள் சேர்க்கப்பட்டன. வாக்குறுதியளிக்கப்பட்ட இழப்பீட்டு வழிமுறைகள் (compensatory mechanisms) பெரும்பாலும் நகராட்சிகளைத் தவிர்த்துவிட்டது. இதனால், நகரங்கள் மாநில மற்றும் ஒன்றிய அரசாங்கங்களின் பணத்தை இன்னும் அதிகமாக நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


எனவே, நகராட்சிகளுக்கு நிதி சுயாட்சி மற்றும் கணிக்கக்கூடிய வருவாய் வழிகள் இரண்டும் இல்லை. இது ஜனநாயகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலையை (Peculiar inversion) உருவாக்குகிறது. அதிகாரம் ஒன்றிய அரசிடம் உள்ளது. ஆனால், பொறுப்பு உள்ளூர் அரசாங்கங்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், நகரங்கள் திடக்கழிவு மேலாண்மை, குறைந்த விலை வீடுகள், காலநிலை மீள்தன்மை மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகியவற்றை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அத்தகைய சேவைகளுக்கு நிதியளிக்க போதுமான வளங்கள் இல்லை.


நகராட்சி பத்திரங்கள் என்றால் என்ன?


நிதி ஆயோக்கின் நகர உத்தி மற்றும் புதிய மானியங்கள் போன்ற பல முக்கியமான அரசாங்கத் திட்டங்கள், நகரங்கள் பணம் திரட்டுவதற்கான ஒரு முக்கிய வழியாக பத்திரங்கள் இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் இந்திய நகர பத்திரங்கள் இன்னும் அதிகம் நம்பப்படுவதில்லை. நகரங்கள் தங்கள் பத்திரங்களை ஆதரிக்க போதுமான பணத்தை திரட்ட முடியாது என்பதால் மட்டுமல்ல, இந்தப் பத்திரங்கள் எவ்வளவு நம்பகமானவை என்பதை தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் அமைப்பு நியாயமற்றதாக இருப்பதன் காரணத்தினால் இந்த சூழல் உருவாகிறது.


ஒரு நகரத்தின் கடனளிக்கத் தகுதியான நிலை (Creditworthiness) பெரும்பாலும் அதன் ‘சொந்த வருவாய்’ (own revenue) செயல்திறன் - சொத்து வரிகள், பயனர் கட்டணங்கள் மற்றும் கட்டணங்கள் மூலம் குறுகிய அளவில் தீர்மானிக்கப்படுகிறது. அதே, நேரத்தில் மானியங்கள் மற்றும் இடமாற்றங்கள் மூலம் உயர் அரசாங்க மட்டங்களிலிருந்து பெறும் நிலையான நிதியைப் புறக்கணிக்கிறது. இது வெறும் கணக்கீட்டில் ஏற்பட்ட தவறு மட்டுமல்ல - இது தவறான சிந்தனை முறையைக் காட்டுகிறது. ரிசர்வ் வங்கி அல்லது மதிப்பீட்டு நிறுவனங்கள் அரசாங்க மானியங்கள் வெறும் ‘தொடர்ச்சியற்ற வருமானம்’ என்று கூறும்போது, ​​நகரங்கள் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்துள்ளது என்று தவறாகக் கூறுகின்றன. ஆனால், இந்த மானியங்கள் சட்டபூர்வமான உரிமைகள், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மறுபகிர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.


74வது திருத்தச்சட்டம், நகரங்களை மாநிலம் அல்லது ஒன்றிய அரசிடம் நிதிக்காக காத்திருப்பவர்களாக கருதவில்லை. மாறாக வரித்தொகையில் ஒரு பங்கைப் பெற உரிமையுள்ள சமமான நிர்வாக அடுக்குகளாகவே கருதுகிறது. இதேபோல், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற நிறுவனங்கள், சொத்து வரி வசூல் மற்றும் பயனர் கட்டணங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் நகரங்கள் ‘தன்னிறைவை’ (self-reliant) அடைய வேண்டும் என்று நீண்டகாலமாக வாதிட்டு வருகின்றன.

சொத்துவரி சீர்திருத்தம் முக்கியமானது. ஆனால், அதை மட்டுமே சார்ந்திருப்பது நியாயமானதாக இருக்காது. சொத்து வரி போதாது. ஏனெனில், அது பொதுவாக ஒரு நகரம் ஈட்டக்கூடிய பணத்தில் 20–25% மட்டுமே தருகிறது. மேலும் அதை வசூலிப்பது பெரும்பாலும் அரசியல் மற்றும் நிர்வாகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது நியாயமற்றது. ஏனெனில், இது நகரங்களை நடத்துவதற்கான செலவில் பெரும்பகுதியை மக்கள்மீது, குறிப்பாக ஏற்கனவே மோசமான சேவைகளைப் பெறும் ஏழை சமூகங்கள் மீது சுமத்துகிறது. பயனர்கள் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் (user pays) என்ற எண்ணம் அடிப்படை பொது சேவைகளை வாங்க வேண்டிய பொருட்களாக மாற்றுகிறது. ஆனால், தூய்மையான நீர், கழிப்பறைகள், தெரு விளக்குகள் மற்றும் போக்குவரத்து ஆகியவை பொருட்கள் அல்ல - அவை அனைவரும் பெற வேண்டிய அடிப்படை உரிமையாகும்.


முன்னோக்கி செல்லும் வழி என்ன?


இந்தியா நிதி ஒப்பந்தத்தை (fiscal contract) ஜனநாயகப்படுத்த வேண்டும். டென்மார்க், ஸ்வீடன் மற்றும் நார்வே போன்ற Scandinavian நாடுகளில், உள்ளூர் வரிகள் மிகவும் முக்கியமானவை என்பதால் நகரங்கள் நல்ல நிதி நிர்வாகத்தைக் கொண்டுள்ளன. இந்த நகரங்கள் வருமான வரிகளை நேரடியாக வசூலிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. இது மக்களுக்கும் அவர்களின் உள்ளூர் அரசாங்கங்களுக்கும் இடையே வெளிப்படையான மற்றும் பொறுப்பான தொடர்பை உருவாக்க உதவுகிறது.


Scandinavian  நாடுகள் என்றால் என்ன?


Scandinavian நாடுகள் என்பது வரலாற்று, கலாச்சார மற்றும் மொழியியல் உறவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வடக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளின் குழுவைக் குறிக்கிறது.


இந்தப் பரவலாக்கப்பட்ட மாதிரியானது செயல்திறன் (efficiency) மற்றும் சமத்துவம் (equity) இரண்டையும் உருவாக்கியுள்ளது: குடிமக்கள் தங்கள் பணம் எங்கு செல்கிறது என்பதைப் பார்க்க முடியும். மேலும், நகரங்கள் நீண்ட காலத்திற்குத் திட்டமிட நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளன. முக்கியமாக, அரசாங்கத்தின் உயர் மட்டங்களிலிருந்து வரும் இடமாற்றங்கள் பகிரப்பட்ட நிதி சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன.  அவை விருப்பமான சலுகைகளாக அல்ல. இந்தியாவால் இதிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். நகராட்சிகள் கணிக்கக்கூடிய, போதுமான மற்றும் கட்டப்படாத வருவாயைக் கொண்ட - அவற்றின் சொந்த ஆதாரங்களிலிருந்தும், அரசியலமைப்பு ரீதியாக கட்டாயப்படுத்தப்பட்ட இடமாற்றங்களிலிருந்தும் - மறுவடிவமைக்கப்பட்ட ஒரு நிதி கூட்டாட்சி (fiscal federalism) மாதிரியாகும்.


இதேபோல், நகரப் பத்திரங்கள் நம்பகமானதாக இருக்க வேண்டுமென்றால், முதலில் மானியங்களும் பகிரப்பட்ட வரிகளும் (recognise grants and shared taxes) ஒரு நகரத்தின் வருமானத்தின் உண்மையான பகுதிகள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது நகரங்கள் நம்பகமான நிதிப் பதிவை உருவாக்க உதவுகிறது. இரண்டாவதாக, மதிப்பீட்டு முறை நிதி அளவீடுகளை மட்டுமே நம்புவதற்குப் பதிலாக, ஒரு நகரத்தின் நிர்வாகத் திறனை - வெளிப்படைத்தன்மை, தணிக்கை விதிமுறைகளை பின்பற்றல் (audit compliance), குடிமக்கள் பங்கேற்பு போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, நகரங்கள் தங்கள் சரக்கு மற்றும் சேவை வரி அல்லது மாநில நிதிகளில் சிலவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும். இந்த மாற்றங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் திட்டமிடப்பட்ட அரசாங்கங்களுக்கு இடையிலான குழுப்பணியை மீண்டும் கொண்டு வரும்.


இந்தியாவின் நகர்ப்புற எதிர்காலம் நிதி நீதியைச் (fiscal justice) சார்ந்தது. நகர நிதியை வெறும் கணிதமாக மட்டும் பார்க்காமல், ஒரு தார்மீக மற்றும் அரசியல் பிரச்சினையாக பார்க்க வேண்டும். நகரங்களுக்கு வழங்கப்படும் பணம் ஒரு பரிசு அல்ல; அது ஒரு சமூக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். நகரங்கள் தாங்கள் ஈட்டும் பணம் தொண்டு அல்ல; அது அவர்களின் உரிமை. நகரங்கள் வெறும் செலவுகள் மையங்கள் அல்ல - அவை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் என்பதை இந்தியா ஏற்றுக்கொள்ளும் போதுதான் உண்மையான சீர்திருத்தம் தொடங்கும்.


திகேந்தர் சிங் பன்வார் சிம்லாவின் முன்னாள் துணை மேயர் ஆவார், தற்போது கேரள நகர்ப்புற ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.



Original article:

Share:

அகதிகள் மற்றும் ஊடுருவல்காரர்கள்: இந்தியாவின் அகதி சமூகத்திற்கான வெவ்வேறு அளவுகோல்கள் குறித்து . . .

 இந்தியாவிற்கு பாகுபாடற்ற (non-discriminatory) அகதிகள் கொள்கை ஆவணம் தேவை.


ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அகதிகளுக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் இடையே வேறுபாடு காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இது சரியானதாக இருந்தாலும், அதிகாரத்தில் உள்ளவர்கள் வேறுபாட்டைக் கண்டறிய நடுநிலையான அளவுகோல்களைப் (objective parameters) பயன்படுத்துவதில்தான் பிரச்சனை உள்ளது. சரியான கொள்கையும் சட்ட கட்டமைப்பும் இருக்கும் இடத்தில், சில நேரங்களில் பிரச்சனைகள் எழக்கூடும். அரசாங்க அதிகாரிகளின் புரிதல் நிலையும் இதில் பங்கு வகிக்கிறது. 1951ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளின் நிலை தொடர்பான மாநாட்டிலும் (UN Convention on the Status of Refugees), 1967-ஆம் ஆண்டு நெறிமுறையிலும் இந்தியா கையெழுத்திடவில்லை. இதன் காரணமாக, அகதி யார் என்பதை வரையறுக்கும் ஒரு தெளிவான சட்டம் இந்தியாவில் இல்லை. இது சீரற்ற முடிவுகளுக்கு வழிவகுக்கும். 


மார்ச் 2025 இறுதி வரை, குடியுரிமைச் சட்டம் 1955 (Citizenship Act) மற்றும் கடவுச்சீட்டு சட்டம் 1967 (Passports Act) தவிர, மூன்று சட்டங்கள் 1946-ஆம் ஆண்டு வெளிநாட்டவர் சட்டம் (Foreigners Act), 1939-ஆம் ஆண்டு வெளிநாட்டவர் பதிவு சட்டம் (Registration of Foreigners Act) மற்றும் 1920ஆம் ஆண்டு கடவுச்சீட்டு (இந்தியாவிற்குள் நுழைவு) சட்டம், (Passport (Entry into India) Act)) அகதிகள் உட்பட வெளிநாட்டு குடிமக்களை கையாள பயன்படுத்தப்பட்டன. ஏப்ரல் முதல், குடியேற்ற மற்றும் வெளிநாட்டினர் சட்டம், சுதந்திரத்திற்கு முந்தைய மூன்று சட்டங்களை மாற்றியது மற்றும் 2000 ஆம் ஆண்டின் குடியேற்ற (பயணிகள் பொறுப்பு) (Immigration (Carriers’ Liability) Act, 2000) சட்டத்தை உள்ளடக்கியது. 


இது சட்ட கட்டமைப்பை ஒழுங்குபடுத்திய போதிலும், அகதிகள் கொள்கை ஆவணம் இல்லாதது இந்தியாவில் உள்ள அகதிகள் சமூகத்திற்கு வெவ்வேறு அளவுகோல்களை ஏற்படுத்தியுள்ளது. இது சட்டக் கட்டமைப்பை நெறிப்படுத்தியிருந்தாலும், இந்தியாவிடம் தெளிவான அகதிக் கொள்கை இல்லாததால், வெவ்வேறு அகதிக் குழுக்கள் வித்தியாசமாக நடத்தப்படுகின்றன. 


2014-ஆம் ஆண்டில், 63,000 திபெத்திய அகதிகளுக்கு உதவித் திட்டம் இருந்தது. ஆனால், 90,000 இலங்கைத் தமிழர்களுக்கு அத்தகைய ஆவணம் இல்லை. ஜூன் 2023-ல், மியான்மர், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் உட்பட இந்தியாவில் 2.11 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் இருந்தனர். ஒரு அகதியிடம் முறையான ஆவணங்கள் இல்லையென்றால் அல்லது அதிக காலம் தங்கியிருந்தால், அவர்கள் சட்டத்தின்கீழ் சட்டவிரோத குடியேறிகளாகக் (illegal migrant) கருதப்படுவார்கள். அவர்கள் ஊடுருவல்காரர்கள் (infiltrator) என்றுகூட அழைக்கப்படலாம். இதன் காரணமாக, அப்பாவி மற்றும் அமைதியான அகதிகள் கூட பிரச்சனையை சந்திப்பார்கள்.


2019ஆம் ஆண்டு குடியுரிமை (திருத்த) சட்டம், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆறு மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டியதால் பலர் இந்த சட்டத்தை விமர்சித்தனர். இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்கள் அல்லது ரோஹிங்கியாக்கள் தங்கள் நாடுகளில் சிறுபான்மையினராக இருந்தாலும், இந்த சட்டத்தில் அவர்களை சேர்க்கவில்லை. ஆனால். கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஆவணமற்ற அல்லது காலாவதியாகி தங்கியிருக்கும் தமிழ் அகதிகள், அதிகாரிகளிடம் தங்களைப் பதிவு செய்து கொண்டவர்கள், ஜனவரி 9, 2015 அன்று அல்லது அதற்கு முன்னர் இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்தால், குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் (Immigration and Foreigners Act) தண்டனை விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டனர். மற்ற குழுக்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், மதத்தின் அடிப்படையில் மக்களை ஒதுக்கி வைக்கும் நடவடிக்கைகள் இன்னும் மாறவில்லை. பொதுவாக அகதிகளுக்கு அமைதியாக உதவுவது தவறல்ல. ஆனால், அது அனைவருக்கும் நியாயமான, தெளிவான மற்றும் சமமான முறையில் செய்யப்பட வேண்டும்.


Original article:

Share:

இந்தியா-கனடா உறவின் நிலை என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— ஞாயிற்றுக்கிழமை இரவு புது டெல்லியை அடைந்த கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், திங்கட்கிழமை வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தி, இரவு மும்பைக்குச் செல்வதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.


— புது டெல்லி மற்றும் ஒட்டாவா பல நடவடிக்கைகளில் உடன்பட்டன. இதில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த அமைச்சர்கள் அளவிலான விவாதங்களைத் தொடங்குதல், 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா-கனடா தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தை மீண்டும் தொடங்குதல், எரிசக்தி உரையாடலை மீண்டும் தொடங்குதல், பொது அணுசக்தி ஒத்துழைப்பு குறித்த விவாதங்கள் மற்றும் உயர்கல்வியில் இணைந்து பணியாற்ற ஒரு குழுவை அமைத்தல் போன்ற பணிகள் போன்றவை அடங்கும்.


— இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கனடா வெளியுறவு அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறை. 2023ஆம் ஆண்டில், கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்கள் ஈடுபட்டதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில் இடைவெளி ஏற்பட்டது. இதை இந்தியா கடுமையாக மறுத்தது. இது பொய்யானது மற்றும் அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறியது. இதன் விளைவாக, இரு நாடுகளும் தங்கள் இராஜதந்திர உறவுகளை குறைத்துக் கொண்டன.


— ஒட்டாவாவில் பாதுகாப்பு மாற்றத்தைத் தொடர்ந்து, ஜூன் மாதம் கனனாஸ்கிஸில் நடந்த G7 தலைவர்கள் உச்சிமாநாட்டின் போது பிரதமர் மார்க் கார்னி பிரதமர் மோடியைச் சந்தித்தார். மேலும், இரு தலைவர்களும் தங்கள் அதிகாரிகளிடம் உறவுகளை சரி செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.


— இரு நாடுகளிலிருந்தும் முன்னணி வணிக நிர்வாகிகளை ஒன்றிணைத்து உறுதியான தன்மையை அடையாளம் காணும் கனடா-இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தை மீண்டும் தொடங்குவது குறித்தும் அவர்கள் பேசினார்.


— எரிசக்தியைப் பொறுத்தவரை, கனடா-இந்தியா அமைச்சகத்தின் எரிசக்தி உரையாடலை (Canada-India Ministerial Energy Dialogue (CIMED)) மீண்டும் நிறுவவும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு & திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவையுவிற்கான இருவழி வர்த்தகத்தை ஊக்குவிக்கவும், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தித் துறையில் முதலீடு செய்யவும் அவர்கள் ஒப்புக்கொண்டதாக கூட்டு அறிக்கை தெரிவித்தது.


— கனடாவின் சுரங்க நிபுணத்துவம் இந்தியாவிற்கு எரிசக்தி பாதுகாப்பிற்குத் தேவையான முக்கியமான தனிமங்களை எவ்வாறு வழங்க முடியும் என்பதை அடையாளம் காண அரசாங்கம், தொழில்துறை மற்றும் நிபுணர்களிடையே உரையாடலை ஊக்குவிக்க முடிவு செய்தனர்.


— 2026ஆம் ஆண்டு  மார்ச் மாதத்தில் டொரண்டோவில் நடைபெறும்  Prospectors and Developers Association Conference மாநாட்டின் போது, முதல் முக்கிய தனிமங்கள் ஆண்டு உரையாடலை (Critical Minerals Annual Dialogue) நடத்த இரு நாடுகளும் முடிவுசெய்தன.


— செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய எல்லைகள் குறித்து, கூட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக் குழுவை மீண்டும் தொடங்க அவர்கள் முடிவு செய்தனர்.


உங்களுக்குத் தெரியுமா:


—உலகின் மிகப்பெரிய இந்திய சமூகங்களில் ஒன்றான கனடாவில், 1.6 மில்லியன் இந்திய வம்சாவளி மக்கள் வசிக்கின்றனர். கனடாவின் மக்கள் தொகையில் அவர்கள் 3%-க்கும் அதிகமானோர் உள்ளனர். கனடாவில் 700,000 வெளிநாட்டு இந்தியர்களும் உள்ளனர். 2022ஆம் ஆண்டில் 230,000 இந்திய மாணவர்களுடன், கனடாவிற்கு மாணவர்களை அனுப்பும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.


— 2021-22 ஆம் ஆண்டில் கனடாவுடனான இந்தியாவின் மொத்த வர்த்தகம் $11.68 பில்லியனாக இருந்தது. இது இருக்கக்கூடியதை விட மிகக் குறைவு. இருப்பினும், இந்தியாவின் மொத்த பருப்பு இறக்குமதியில் 30% கனடாவிலிருந்து வருகிறது. இது இந்தப் பிரிவில் குறிப்பிடத்தக்க பங்கைக் காட்டுகிறது.


— 2021 கனடா மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சீக்கியர்கள் கனடாவின் மக்கள்தொகையில் 2.1 சதவீதமாக உள்ளனர். மேலும், அவர்கள் நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் மதக்குழுவினர்களாக உள்ளனர். இந்தியாவிற்குப் பிறகு, உலகிலேயே அதிக சீக்கியர்கள் வசிக்கும் நாடக கனடா உள்ளது.



Original article:

Share:

இந்தியாவின் முன்மொழியப்பட்ட ஆளில்லா விமானச் சட்டம் (Drone Law) தொழில்துறையின் வளர்ச்சியை முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. -அமன் தனேஜா மற்றும் அனிருத் ரஸ்தோகி

 இது 2021ஆம் ஆண்டு ஆளில்லா விமான விதிகளை (Drone Rules) மாற்றியமைக்கிறது. இது அதிகப்படியான அதிகாரத்துவ நடைமுறைகளைக் (red tape) குறைத்தல் மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல் (inviting innovation) போன்றவற்றில் இந்தியாவின் தீவிரத்தன்மையைக் குறிக்கிறது.


இந்தியாவின் ஆளில்லா விமானங்களை ஒழுங்குபடுத்துவது ஒரு கணிக்க முடியாதவையாகும். அவை மிகவும் எச்சரிக்கையாக இருப்பதற்கும் திருத்தங்களைச் செய்வதற்கும் இடையில் மாறிவிட்டன. 2014 ஆம் ஆண்டில், விதிகள் இயற்றப்படும் வரை பொதுமக்கள் ஆளில்லா விமான பயன்பாடு முற்றிலும் தடைசெய்யப்பட்டது. 2018-ல் பின்பற்றப்பட்ட சிவில் விமானப் போக்குவரத்துத் தேவைகள் No Permission, No Takeoff (NPNT) என்ற முறையை அறிமுகப்படுத்தியது. இது நம்பிக்கைக்குரியதாகத் தோன்றியது. ஆனால், தேவையான டிஜிட்டல் உள்கட்டமைப்பு சாத்தியமில்லாததால் தோல்வியடைந்தது. 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஆளில்லா விமான அமைப்பு விதிகளில் சில சிக்கல்கள் இருந்தன. ஆனால், அந்த ஆண்டின் பிற்பகுதியில், அரசாங்கம் ஆளில்லா விமான விதிகளை அறிமுகப்படுத்தியது. இந்த விதிகள் உரிமத்தை எளிதாக்கின, பரிசோதனையை ஊக்குவித்தன, மேலும் துறையை மேம்படுத்தும் ஒரு கட்டமைப்பாக வரவேற்கப்பட்டன. இப்போது, ​​பத்தாண்டுகாலத்திற்குப் பிறகு, வரைவு சிவில் ஆளில்லா விமானம் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) மசோதா-2025 (Draft Civil Drone (Promotion & Regulation) Bill), இந்தப் பயணத்தின் சமீபத்திய கட்டமைப்பாகும். இருப்பினும், கடந்த கால முன்னேற்றத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, அது கடுமையான விதிமுறைகளை மீண்டும் கொண்டு வரக்கூடும்.


பரிந்துரைக்கப்பட்ட விதிகளிலிருந்து தனித்த சட்டத்திற்கு மாறுவது இந்தத் துறைக்கு உறுதிப்பாட்டை அளிக்கும் என்று ஒருவர் எதிர்பார்க்கலாம். அதற்கு பதிலாக, இது கடுமையான தண்டனைகளைக் கொண்டுவருகிறது. இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) விருப்பங்களை நீக்குகிறது. மேலும், பெரும்பாலான விவரங்களை பரிந்துரைக்கப்பட்ட சட்டத்திற்கு உட்படுத்துகிறது. இந்த அணுகுமுறை வளர்ச்சியை விரைவுபடுத்தாது. மாறாக, இது தொழில்துறையை மெதுவாக்கலாம். பிரதமர் மோடியால் ஊக்குவிக்கப்பட்ட இலக்காக, ஆளில்லா விமானத் தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய மையமாக இந்தியா மாற விரும்பினால், இந்த அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


இந்தியாவின் ஆளில்லா விமானச் சுற்றுச்சூழல் அமைப்பு தனித்துவமானது. ஆனால், ஆற்றல் நிறைந்தது. ஆளில்லா வான்வழி வாகனங்கள் உழவர்களுக்கு பயிர் சுழற்சிகளை மேம்படுத்தவும், தொலைதூரப் பகுதிகளுக்கு தடுப்பூசிகளை வழங்கவும், உள்கட்டமைப்பு திட்டங்களை ஆதரிக்கவும் எவ்வாறு உதவும் என்பதை புத்தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளன. SVAMITVA திட்டத்தின் கீழ் வரைபடம் செய்வதற்கும், பேரிடர் மேலாண்மைக்கும் அரசாங்கமே ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தியுள்ளது. 


உலகெங்கிலும் உள்ள நாடுகள், வணிக ரீதியான ஆளில்லா விமானங்கள் பயன்பாட்டிற்கான திறவுகோலாகக் கருதப்படும், beyond-visual-line-of-sight (BVLOS) முறையை செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ளன. இதில் இந்தியா பின்தங்கியிருக்க முடியாது. தெளிவான மற்றும் புதுமைக்கு ஏற்ற விதிகளைக் கொண்டிருப்பது ஒரு கொள்கை இலக்கு மட்டுமல்ல. அது ஒரு பொருளாதார மற்றும் இராஜதந்திர தேவையும் ஏற்பட்டுள்ளது.


இருப்பினும், வரைவு மசோதா மூன்று முக்கிய கவலைகளை எழுப்புகிறது. முதலாவதாக, இது குற்றமயமாக்கலில் அதிக கவனம் செலுத்துகிறது. பல வகையான மீறல்களுக்கு சிறைத்தண்டனைகளை இது முன்மொழிகிறது. தவறுகளைத் தடுக்க தண்டனை முக்கியம் என்றாலும், சிறிய தவறுகளுக்கு குற்றவியல் தண்டனைகளைப் பயன்படுத்துவது விகிதாசாரத்தின் கருத்துக்கு எதிரானது. சிறிய தவறுகளுக்கு வணிக உரிமையாளர்களை சிறைத்தண்டனை விதிப்பதாக அச்சுறுத்துவது வளர்ந்து வரும் துறையில் புதுமைகளைத் தடுக்கலாம்.


ஆளில்லா விமானங்களைத்  தேட, பறிமுதல் செய்ய மற்றும் பறிமுதல் செய்ய இந்த மசோதா காவல்துறைக்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது. ஆளில்லா விமானங்கள் விலை உயர்ந்தவை மற்றும் உருவாகும் தாமதங்கள் சில செயல்பாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், திடீரென பறிமுதல் செய்வதற்கான வாய்ப்பு அதிக ஆபத்தை உருவாக்குகிறது. சிறிய விதி மீறல்களுக்கு தங்கள் ஆளில்லா விமானங்களை எடுத்துச் செல்ல முடியுமா என்று திட்டமிடுவது புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு கடினமாக இருக்கும்.


ஆளில்லா விமானங்கள் தீங்கு விளைவிக்கும் அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும்போது இத்தகைய அதிகாரங்கள் தேவைப்படலாம். ஆனால், அவற்றை எல்லா நிகழ்வுகளிலும் பயன்படுத்துவது அமலாக்கத்தை நிச்சயமற்றதாகவும் நியாயமற்றதாகவும் மாற்றக்கூடும்.


இரண்டாவதாக, இந்த மசோதா அனுமதி வழங்கல், உரிமம் வழங்குதல் மற்றும் தரநிலைகள் போன்ற முக்கியமான விவரங்களை பின்னர் உருவாக்கப்படும் சட்டத்தின் முடிவிற்கு விட்டுவிடுகிறது. முக்கிய விதிகள் இன்னும் முழுமையடையாததால், இது ஆளில்லா விமானத் துறையை நிச்சயமற்றதாக வைத்திருக்கிறது. இதன் மூலம் இந்தச் சட்டம் உண்மையான தெளிவைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை இழக்கிறது.


மூன்றாவதாக, வரைவு முக்கியமாக புதுமைகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக கட்டுப்பாடுகளில் கவனம் செலுத்துகிறது. இது போதுமான ஆதரவான கட்டமைப்புகளை வழங்கவில்லை. ஆளில்லா விமானம் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு அவசியமான சோதனை beyond-visual-line-of-sight (BVLOS) திட்டங்களை உருவாக்குவதற்கான உண்மையான முயற்சியோ அல்லது சிறப்பு அனுமதிகளோ இல்லை.


 பல வருட முன்னோடி திட்டங்கள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகும், ஆளில்லா விமானம் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்குத் தேவையான முக்கிய படியான BVLOS செயல்பாடுகளைத் தொடங்குவதில் இந்தியா இன்னும் உண்மையான முன்னேற்றத்தை அடையவில்லை. நீண்டகால நலனை வழங்க வேண்டிய புதிய சட்டம், இந்தப் பகுதியில் அதிக முன்னேற்றத்தை ஏற்படுத்தத் தவறியது என்பது ஏமாற்றமளிக்கிறது.


இந்த மசோதாவின் ஒட்டுமொத்த விளைவு, ஆளில்லா விமானங்களை இயக்குபவர்களுக்கு குழப்பமானதாகவும், நிச்சயமற்றதாகவும் உள்ளது. சிறிய தவறுகள் கூட குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் தொடக்க நிறுவனங்களுக்கு நிதியளிப்பதைத் தவிர்க்கலாம். ஒழுங்குமுறை ஆணையத்தின் அணுகுமுறைகள் முதலில் தடைசெய்து பின்னர் தெளிவுபடுத்துவதாக இருந்தால், தொழில்முனைவோர் பரிசோதனை செய்யத் தயங்குவார்கள். 


2021ஆம் ஆண்டின் ஆளில்லா விமானங்களின் விதிகளுடன் ஒப்பிடும்போது இது ஒரு பின்தங்கிய படியாகும். இது இந்தியாவின் அதிகாரத்துவ நடைமுறைகளைக் (red tape) ஆதரிப்பதற்கான முயற்சியைக் காட்டியது. இதற்கு நேர்மாறாக, புதிய வரைவு மசோதா, விதிகளைப் பின்பற்றுவது வாய்ப்புகளைக் கண்டறிவதை விட கடினமான இடமாக இந்தியாவின் பழைய பிம்பத்தை மீண்டும் கொண்டுவருகிறது.


இந்த மசோதாவை மேம்படுத்த இன்னும் நேரம் இருக்கிறது. விதிகளை சட்டமாக மாற்றுவது அதிக நிச்சயமற்ற தன்மையை உருவாக்கக்கூடாது. சட்டம் அதன் ஒழுங்குமுறை கட்டமைப்பில் புதுமைகளை தெளிவாக ஆதரிக்க வேண்டும். செயல்பாட்டு விவரங்களை பரிந்துரைக்கப்பட்ட சட்டத்திற்கு விட்டுவிடலாம். ஆனால், அதே நேரத்தில் பங்குதாரர்களிடமிருந்து அர்த்தமுள்ள கருத்துகளை செயல்படுத்த அவை ஒரே நேரத்தில் வெளியிடப்பட வேண்டும். செயல்படுத்துவதற்கான அமைப்பு விகிதாசாரமாக இருக்க வேண்டும். ஆளில்லா விமானங்களின் தீங்கிழைக்கும் பயன்பாடு, மோசமான நோக்கங்களுடன் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துதல், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்லது கவனக்குறைவாகப் பறப்பதன் மூலம் உடல் ரீதியான தீங்கு விளைவித்தல் போன்ற மிகக் கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும். 


மேலும், எதிர்பாராத சிறிய தவறுகளுக்கு, சிவில் நடவடிக்கைகள் மற்றும் பண அபராதங்கள் சிறந்த வழிகள் ஆகும். இந்த அணுகுமுறை, நேர்மையான தவறுகள் நியாயமற்ற தண்டனைக்கு வழிவகுக்காது என்பதை ஆளில்லா விமான இயக்குபவர்களுக்கு உறுதியளிக்கும்.


சட்டம் எதிர்கால நடைமுறைகளையும் மையமாகக் கொண்டிருக்க வேண்டும். ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அவை பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் இடர் மேலாண்மை குறித்த நிஜ உலகத் தரவை வழங்குகின்றன. இந்தத் தரவு கொள்கை வகுப்பாளர்களை, கருத்தாக்கங்களுக்குப் பதிலாக ஆதாரங்களின் அடிப்படையில் விதிகளை உருவாக்க அனுமதிக்கிறது. கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளில் ஆளில்லா விமானங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கவனிப்பதன் மூலம், ஒழுங்குமுறை அதிகாரிகள் சூழ்நிலைக்கு ஏற்ற விதிகளை உருவாக்க முடியும். 


அவர்கள் முழுமையான தடைகளை நம்பியிருக்க வேண்டியதில்லை. சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே Sandboxes கட்டமைப்புகள் எவ்வாறு ஒழுங்குமுறை அதிகாருகளுக்கு அபாயங்களை நிர்வகிக்க அனுமதிக்கும் என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளன. அதிநவீன UAV பயன்பாடுகளுக்கான சோதனைக் களமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் இந்த வாய்ப்பை இந்தியா தவறவிடக் கூடாது.


இந்தியாவிற்கு திறமை, மூலதனம் மற்றும் உலகளாவிய ஆளில்லா விமான தலைவராக மாறுவதற்கான கோரிக்கை உள்ளது. இருப்பினும், தெளிவற்ற விதிமுறைகள் மற்றும் கடுமையான அமலாக்கம் இந்த நோக்கத்தை நிறுத்தக்கூடும்.  சிவில் ஆளில்லா விமான (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) மசோதா-2025 (Civil Drone (Promotion & Regulation) Bill), தற்போது ஆதரவை விட ஒழுங்குமுறையில் அதிக கவனம் செலுத்துகிறது. தெளிவு, சமநிலை மற்றும் புதுமையுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டால், அது ஒரு சிறந்த ஆளில்லா விமான சுற்றுச்சூழல் அமைப்பின் அடித்தளமாக மாறும். கொள்கை வகுப்பாளர்கள் தொழில்துறையை கட்டுப்படுத்துவார்களா அல்லது வளர உதவுவார்களா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.


தனேஜா ஒரு பங்குதாரர், ரஸ்தோகி சட்டம் மற்றும் கொள்கை நிறுவனமான Ikigai Law அமைப்பில் நிர்வாக பங்குதாரர் ஆவார்.



Original article:

Share:

லடாக்கில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலிருந்து ஒரு எச்சரிக்கைக் கதை. - நஜீப் ஜங்

 நாடுகள், அந்நிய ஆக்கிரமிப்பால் மட்டுமே வீழ்ச்சியடைவதில்லை. அதிருப்தி மற்றும் அவநம்பிக்கையின் கீழ் ஒற்றுமையின் பிணைப்புகள் உடைக்கப்படும்போது அவை உள்ளிருந்து சிதைகின்றன. இந்நிலைமையை அமைதிப்படுத்த மத்திய அரசு விரைவாக செயல்பட வேண்டும். மேலும், சோனம் வாங்சுக் விடுவிக்கப்பட வேண்டும். அவருடன் மற்றும் பிற அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.


அந்நிய ஆக்கிரமிப்புகளால் மட்டும் நாடுகள் வீழ்ச்சியடைவதில்லை, ஒற்றுமையின் பிணைப்புகள் அதிருப்தி மற்றும் அவநம்பிக்கையின் கீழ் உடைந்து போகும்போது அவை உள்ளிருந்து சிதைகின்றன. அரசியல் நலன்களாலும் வாக்குரிமையின் ஈர்ப்பால் இயக்கப்படும் தேசிய அரசாங்கங்கள், ஒரு நாட்டை ஒன்றிணைக்கும் முக்கிய முறைகளை அடிக்கடி புறக்கணிக்கின்றன என்பது துயரமானது. இந்தியா இன்று இதுபோன்ற பல சவால்களை எதிர்கொள்கிறது. வெளிப்படையான பெரும்பான்மைவாத செயல்திட்டங்கள் சிறுபான்மையினரின் நம்பிக்கையை அசைக்கத் தொடங்கியுள்ளது. மணிப்பூரில், பல நூற்றாண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த பழங்குடி சமூகங்கள், கட்சி சார்பு மற்றும் மோசமான நிர்வாகத்தின் காரணமாக ஒருவருக்கொருவர் எதிராகத் திரும்பியுள்ளன. காஷ்மீரில் ஏற்பட்ட துயரம் நீண்ட காலமாக நினைவில் இருக்கும். தென்னிந்தியாவின் பல பகுதிகள் வடக்கின் ஆதிக்கம் என்று அவர்கள் நினைப்பதை அவநம்பிக்கையுடன் பார்க்கின்றன.


லடாக் இப்போது இந்தக் கதையின் ஒரு பகுதியாகும். இது கிழக்கில் திபெத்துடனும் மேற்கில் பாகிஸ்தானுடனும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. இது மத்திய ஆசியா, திபெத் மற்றும் இந்திய துணைக் கண்டத்திற்கும் இடையே ஒரு முக்கிய இணைப்பாக அமைகிறது. கடந்த காலத்தில், இது வர்த்தகத்திற்கான ஒரு முக்கிய மையமாக இருந்தது. பல நூற்றாண்டுகளாக, லடாக் மக்கள் கடுமையான துறவற ஒழுக்கத்தை சுற்றுச்சூழல் அறிவுடன் இணைத்து உயிர் பிழைத்தனர். அவர்கள் நல்லிணக்கத்துடன் வாழ்ந்தனர், விவசாயம் செய்தனர், விலங்குகளை வளர்த்தனர், நெசவு மற்றும் தங்கா ஓவியங்கள் போன்ற பாரம்பரிய கைவினைகளை உருவாக்கினர்.


இன்று, அவர்களின் நிலைமை அரசியலமைப்புச் சிக்கலுக்கு அப்பாற்பட்டது. இது உள்ளூர் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆட்சி செய்வது பற்றிய எச்சரிக்கையாகும். லடாக்கில் நிலம், நீர் மின்சாரம் மற்றும் சுரங்கம் பற்றிய முடிவுகள் பெரும்பாலும் உள்ளூர் மக்களிடம் ஆலோசனை கேட்காமல் டெல்லியிலோ அல்லது பிற நிறுவனங்கள் மூலம் எடுக்கப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் ஜார்க்கண்ட், பீகார் மற்றும் சத்தீஸ்கர் போன்ற இந்தியாவின் பிற பகுதிகளில் இயற்கை மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு தீங்கு விளைவிப்பதில் மோசமான பதிவையும் கொண்டுள்ளன.


டாக்கில் ஏற்பட்ட அமைதியின்மை திடீரென ஏற்படவில்லை. ஆகஸ்ட் 2019-ல் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டபோது அது தொடங்கியது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரித்து, 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. பல லடாக்கியர்கள் லடாக் பகுதியை ஸ்ரீநகரின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலிருந்து பிரிக்க நீண்ட காலமாக விரும்பினர். இந்த மாற்றத்திற்கான அவர்களின் ஆரம்ப எதிர்வினை எச்சரிக்கையான நம்பிக்கையாக இருந்தது. ஒன்றியப் பிரதேசங்களின்  தரநிலை என்பது மத்திய அரசை நேரடியாக அணுகுவதையும், நிர்வாகத்தில் தங்களுக்கு அதிக பங்களிப்பை வழங்கும் என்று அவர்கள் நம்பினர். இந்த நடவடிக்கையை ஆதரித்தவர்களில் சோனம் வாங்சும் ஒருவர் ஆவார். அவர் இப்போது மதிப்பிழந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும், லடாக் ஏமாற்றமடைந்துள்ளது. மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது அல்லது குறைந்தபட்சம் பழங்குடிப் பகுதிகளுக்கு தன்னாட்சி அதிகாரங்களை வழங்கும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் அதைச் சேர்ப்பது என்ற வாக்குறுதி இன்னும் தொலைவில் உள்ளது.  இந்த இடைவெளி கோபத்தை உருவாக்குகிறது.


செப்டம்பர் மாத இறுதியில் நடந்த வன்முறையில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து வாங்சுக் கைது செய்யப்பட்டார். இது பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது. அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது. அவரது தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் FCRA கணக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்குச் சென்றதற்காக அவர் "தேச விரோதி" (anti-national) என்று முத்திரை குத்தப்பட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மையை நீதிமன்றங்களே முடிவு செய்ய வேண்டும் என்றாலும், நாட்டில் உள்ள மக்களுக்கு அவை குறித்து சிறிதும் சந்தேகமில்லை. அவரது தன்னார்வ தொண்டு நிறுவனம் பல ஆண்டுகளாக நல்ல பணிகளைச் செய்துள்ளது. அது அவருக்கு மகசேசே விருது உட்பட சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றதுள்ளது. சுற்றுச்சூழல் மாநாட்டிற்காக அவர் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டது, நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.


ஊரடங்கு உத்தரவு, இணையத் தடைகள் மற்றும் தடுப்பு கைதுகள் மூலம் உள்ளூர் அரசாங்கம் போராட்டத்திற்கு பதிலளித்தது. அரசியல் உரையாடல் இல்லாதபோது இந்த நடவடிக்கைகள் வழக்கமானவை. லெப்டினன்ட் கவர்னரின் வெளிப்படையான கருத்துக்கள் குழப்பத்தையும் நிலைமையை மோசமாகக் கையாளுவதையும் காட்டுகின்றன.


லடாக்கில் அமைதியின்மை ஒரு ஆபத்தான புதிய பரிமாணத்தைக் கொண்டுள்ளது. சீனா, 2020-ல் கால்வான் மோதலில் இருந்து, கிழக்கு லடாக்கில் உள்ள எல்லக் கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control) இந்தியாவின் எல்லைகளில் மிகவும் இராணுவமயமாக்கப்பட்ட மண்டலங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியா இராணுவ வீரர்களின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளது. இது, புதிய சாலைகள் மற்றும் விமான ஓடுபாதைகளை அமைத்துள்ளது மற்றும் முன்னோக்கி நிலைகளை (forward positions) வலுப்படுத்தியுள்ளது. இந்திய இராணுவத்தின் தயார்நிலையானது அபாரமானது. இருப்பினும், வழக்கமாக இப்பகுதியில் இந்தியாவுக்கு உதவிய அரசியல் அமைதி பலவீனமடைந்து வருகிறது. சீனா இந்த நிலைமையை கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை, இந்தப் பிராந்தியத்திலோ அல்லது அது உரிமை கோரும் மற்ற எல்லைப் பகுதிகளிலோ இப்போது அது என்ன நகர்வுகளைச் செய்யக்கூடும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. மேலும், இந்த உள்நாட்டு அமைதியின்மை உள்ளூர் மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மேலும் பதற்றத்தை உருவாக்கக்கூடும். நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், தேசிய பாதுகாப்பு வீரர்கள், பதுங்கு குழிகள் அல்லது உள்கட்டமைப்பிற்காக செலவிடப்படும் பணத்தை மட்டும் சார்ந்தது அல்ல. இது மக்களுக்கும் அவர்களின் அரசாங்கத்திற்கும் இடையிலான நம்பிக்கையைப் பொறுத்தது. இந்தியாவின் சில பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகள் நம்பகமான தகவல்களைப் பெறுவது கடினமாக இருப்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.


எனவே, இந்த நிலைமையை தணிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். வாங்சுக் விடுவிக்கப்பட வேண்டும். மேலும் அவருடனும் லே உச்ச அமைப்பு (Leh Apex Body) மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி (Kargil Democratic Alliance) போன்ற பிற அரசியல் தலைவர்களுடனும் உரையாடல் நடத்தப்பட வேண்டும். 6-வது அட்டவணையை அறிமுகப்படுத்த இன்னும் நேரம் வரவில்லை என்று அரசாங்கம் நம்பினால், அது இன்னும் நிலம், வேலைவாய்ப்புகள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்திற்கான சட்டப் பாதுகாப்புகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


தவறான தகவல்களை மறுக்கும் அதே வேளையில், லடாக்கிய அடையாளத்திற்கான (Ladakhi identity) மரியாதை, நியாயமான குறைகளை அங்கீகரித்தல் மற்றும் அரசியல் தீர்வுக்கான தெளிவான வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் ஒரு நிலையை ஒன்றிய அரசு வெளிப்படுத்த வேண்டும். அதே நேரத்தில், நாட்டின் எல்லைகளுக்கு வெளியே இருந்து உள்நாட்டு அமைதியின்மையை சுரண்டுவதை நடுநிலையாக்க சர்வதேச தலைவர்களுக்கு விளக்கமளிக்கப்பட வேண்டும்.


லடாக் மக்கள் கிளர்ச்சியாளர்கள் அல்ல, அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது பலவீனத்தின் அறிகுறியல்ல; அது அரசியல் திறமை. கடுமையான மற்றும் குளிர்ச்சியான உயரமான பகுதிகளில், நமது வீரர்கள் கடுமையான சூழ்நிலைகளில் போராடி நம்மைப் பாதுகாக்கும் இடங்களில், இந்தியா என்ற எண்ணம் மீண்டும் சோதிக்கப்படுகிறது. இங்கு அமைதி நிலவுவது குடியரசின் உணர்வை மீண்டும் உறுதிப்படுத்தும்.


எழுத்தாளர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர், ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் முன்னாள் துணைவேந்தர் மற்றும் டெல்லியின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னர். தற்போது ஆசியாவின் மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.



Original article:

Share: