வாக்காளர் பட்டியல் மறுசீரமைப்பு: டிஜிட்டல் மாற்றத்திற்கு ஆதரவான வாதம். - ராஜீவ் குமார்

 தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர திருத்த (Special Intensive Revision) பணியை பீகாரிலிருந்து தொடங்கி உள்ளது. இருப்பினும், காலாவதியான சரிபார்ப்பு முறைகள் மற்றும் டிஜிட்டல் கருவிகள் இல்லாதது, தொழில்நுட்பம் சார்ந்த மாற்றங்கள் முக்கியமானது என்பதைக் காட்டுகிறது.


இந்தியாவின் மிக முக்கியமான ஜனநாயக செயல்முறைகளில் ஒன்றாக உள்ள சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்முறை குறித்து 20ஆண்டுகளாக எந்த பணியையும் மேற்கொள்ளாமல் இருந்த பிறகு, தேர்தல் ஆணையம் (Election Commission (EC)), இறுதியாக பீகாரில் தொடங்கி, அதைத் தொடர்ந்து மேற்கு வங்கம், பின்னர் நாட்டின் பிற பகுதிகளில், வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) மீண்டும் செய்ய தொடங்கியுள்ளது.


வாக்காளர் பட்டியல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும் - இறந்தவர்களை அல்லது குடியுரிமையை விட்டுக்கொடுத்தவர்களை நீக்குதல் மற்றும் வேறு தொகுதியில் வசிக்கும் நபர்களுக்கான உள்ளீடுகளை மாற்றுவது ஆகும். பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு ஒருவர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமகனாகவும், இந்தியாவில் சாதாரணமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும். இருப்பினும், தகுதியற்ற நபர்களை, குறிப்பாக அண்டை நாடுகளிலிருந்து வந்தவர்களைச் சேர்ப்பது குறித்த கவலைகள் நீடிக்கின்றன. இது வெளிப்படையான சரிபார்ப்பின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த சிறப்பு தீவிர திருத்த பணி வாக்காளர் தரவுத்தளத்தைப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், நடைமுறை தெளிவின்மைகள் மற்றும் நவீன டிஜிட்டல் கருவிகளுக்குப் பதிலாக காலாவதியான மற்றும் சிக்கலான வழிகாட்டு நெறிமுறைகளை (Standard Operating Procedures (SoPs)) நம்பியிருப்பதால் இது சர்ச்சைக்குரியதாக மாறியது.


காலாவதியான முறைகளை நம்பியிருத்தல்


பெரும்பாலான இந்திய மாநிலங்களில் கடைசியாக முழுமையான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision) 2002 மற்றும் 2004-ஆம் ஆண்டிற்கு இடையில் நடத்தப்பட்டது. அப்போது வாக்காளர் தரவு முற்றிலும் காகித அடிப்படையில் இருந்தது. பகுதி-பகுதியாக பிரிக்கப்பட்டது மற்றும் தரவு நேரடியாக சரிபார்க்கப்பட்டது. 20-ஆண்டுகளுக்குப் பிறகும், ஆதார் ஒருங்கிணைப்பிலிருந்து டிஜிட்டல் இந்தியா திட்டம் வரை இந்தியாவின் பரந்த டிஜிட்டல் மாற்றம் இருந்தபோதிலும், 2025ஆம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்த கட்டமைப்பு காலாவதியான, காகிதங்களைப் பயன்படுத்தும் பழைய நடைமுறைகளில் (paper-era procedures)  வேரூன்றியுள்ளது.


2002-2004ஆம் ஆண்டு மாதிரியைப் பிரதிபலிக்கும் வகையில், பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், இருப்பிட சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் குடும்பப் பதிவேடு உள்ளிட்ட 11 ஆவணங்கள் வாக்காளர் சரிபார்ப்புக்கு கட்டாயமாக்கப்பட்டன. இருப்பினும், இந்தியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மற்றும் டிஜிட்டல் முறையில் சரிபார்க்கக்கூடிய அடையாள ஆவணமான ஆதார் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டது. ஆதார் முழுமையாக நம்பகமானதல்ல மற்றும் திருடப்படலாம் என்று கூறுவது பகுதியளவில் மட்டுமே சரியான கூற்றாகும். ஏனெனில், பெரும்பாலான பிற ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்களுக்கும் இதே மாதிரியான பிரச்சனைகள் உள்ளன. கடவுச்சீட்டுகள் மற்றும் அரசாங்க அடையாள அட்டைகள் போன்ற நம்பகமான ஆவணங்கள் சிறிய எண்ணிக்கையிலான மக்களிடம் மட்டுமே உள்ளன.


வரையறுக்கப்பட்ட மற்றும் பெரும்பாலும் அணுக முடியாத சான்றுகளை நம்பியிருப்பது இந்தியா யோசனைக்கு எதிரானது - நவீன வெளிப்படைத்தன்மை சீர்திருத்தமாக இருக்க வேண்டியதை ஒரு அதிகாரத்துவ தடையாக (bureaucratic bottleneck) மாற்றுகிறது. ஆதார் விலக்கு சரிபார்ப்பை சிக்கலாக்கியது மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை பாதித்தது. குறிப்பாக, இடம்பெயர்ந்தோர், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் ஒன்றோடொன்று இணைந்து செயல்படக்கூடிய, தொழில்நுட்ப அடிப்படையிலான அமைப்புகளை ஏற்றுக்கொள்ளத் தவறியதில் ஆழமான பிரச்சினை உள்ளது. பெரும்பாலான அங்கீகரிக்கப்பட்ட தரவுத்தளங்கள் தனிமைப்படுத்தப்பட்டு அணுக முடியாதவையாகவே உள்ளன. இதனால் கொள்கை சரிபார்ப்பு மற்றும் தானியங்கி நிலைத்தன்மை சோதனைகள் தடுக்கப்படுகின்றன. இதன் காரணமாக, 2025-ஆம் ஆண்டின் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை கைமுறை (manual) பிழைகள், தாமதங்கள் மற்றும் முரண்பாடுகளின் பழைய சுழற்சியை மீண்டும் செய்தது.


மதிப்பு வாய்ந்த மற்றும் நம்பத்தகுந்த SIR-க்கு, இந்தியாவின் பில்லியனுக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு துல்லியம், பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் தேசிய அளவில் ஒருங்கிணைந்த, 2025-ஆம் ஆண்டின் டிஜிட்டல் யுகத்தில் 2000-ஆம் ஆண்டுகளின் காலாவதியான முறைகளைப் பிரதிபலிக்காமல் தொழில்நுட்பம் சார்ந்த கட்டமைப்பு தேவைப்படுகிறது.


ஆதார்: ஒரு தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை


விரிவான விசாரணைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு, தேர்தல் நிர்வாக செயல்முறைகளுக்கு ஆதார் ஒரு செல்லுபடியாகும் மற்றும் சட்டபூர்வமான டிஜிட்டல் அடையாள அட்டையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தனியுரிமை மற்றும் தவறான பயன்பாடு குறித்த முந்தைய கால கவலைகள் இருந்தபோதிலும், இந்த முடிவு ஆதாரின் செயல்பாட்டு சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்தியது, இது இந்தியாவின் டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பின் அடித்தளமாக நிறுவப்பட்டது.


இந்தியாவில் ஒப்பிடத்தக்க அடையாள அமைப்பு (comparable identity system) எதுவும் இல்லை. ஆதார் தனிப்பயனாக்கப்பட்ட விவரங்களை பயோமெட்ரிக் தரவுகளுடன் தனித்துவமாக இணைத்து, நம்பகமான தனிப்பட்ட சரிபார்ப்பை செயல்படுத்துகிறது. ஆதார் பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் அங்கீகாரத்திற்காக அணுகக்கூடிய ஒரே மையப்படுத்தப்பட்ட அடையாள தரவுத்தளமாகும். காலப்போக்கில், வருகைப் பதிவு, உதவித்தொகை வழங்குதல், நலத்திட்டங்களை பகிர்தல், பணப் பரிவர்த்தனைகள், ஒருவர் உயிருடன் இருப்பதை நிரூபிப்பது மற்றும் பள்ளிகளில் ஆதார் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, இது இந்தியாவின் முக்கிய டிஜிட்டல் அடையாள அமைப்பாக மாறியுள்ளது.

எனவே, அதை தள்ளிவைப்பதற்குப் பதிலாக, இந்தியாவின் தொழில்நுட்பத் தலைமை ஆதார் சுற்றுச்சூழல் அமைப்பை வலுவானதாகவும், பாதிப்பை ஏற்படுத்த முடியாததாகவும், வெளிப்படையானதாகவும் மாற்ற வேண்டும். பிறப்பு, இறப்பு மற்றும் இடம்பெயர்வு பதிவுகளை பொருத்தமான பாதுகாப்புகளுடன் பாதுகாப்பாக ஒருங்கிணைக்க முடியும். தனியுரிமையை (privacy) சமரசம் செய்யாமல் வாக்காளர் பட்டியல்கள் மாறும் வகையில் புதுப்பிக்கப்படுவதை உறுதிசெய்ய முடியும். கடுமையான தரவு பாதுகாப்பு விதிமுறைகளின்கீழ் சரிபார்க்கப்பட்ட ஆதார் தரவை வாக்காளர் பட்டியல் நிர்வாகத்தில் ஒருங்கிணைப்பது நகல் எடுப்பதை நீக்கலாம். இறந்த வாக்காளர்களை தானாகவே அகற்றலாம், குடியிருப்பு மாற்றங்களைப் புதுப்பிக்கலாம் மற்றும் போலி அல்லது பல பதிவுகளைத் தடுக்கலாம். தகவல்களைச் சேர்ப்பது, நீக்குவது அல்லது சரி செய்வது போன்ற ஒவ்வொரு மாற்றத்திற்கும் டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட அங்கீகாரத்தைக் (digitally signed authorisation) கொண்டிருக்கும். இது உடைக்க முடியாத ஒரு தெளிவான பதிவை உருவாக்குகிறது. இது வாக்காளர் பட்டியலைத் வெளிப்படையானதாகவும், சரிபார்க்க எளிதாகவும், நம்பகமானதாகவும் ஆக்குகிறது.


தரவு முரண்பாடுகள்


பீகாரின் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெரிய சிக்கல்களைக் காட்டியது. தெளிவான காரணங்கள் இல்லாமல் அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சொல்லாமல் 3.66 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. மாநிலத்தின் மதிப்பிடப்பட்ட வயது வந்தோர் மக்கள்தொகையைவிட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 80 லட்சம் (கிட்டத்தட்ட 10%) குறைவாக இருந்தது. அத்தகைய பெயர்கள் ஏன் நீக்கப்பட்டன என்பதைக் காட்டும் தெளிவான பதிவுகளோ அல்லது அது குறித்து மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டதற்கான ஆதாரமோ இல்லை.


மேலும், ஆய்வு செய்ததில் வாக்காளர் பட்டியலில் பல சிக்கல்கள் கண்டறியப்பட்டன. 100 வயதுக்கு மேற்பட்ட சிலர் புதிய வாக்காளர்களாக தவறாக சேர்க்கப்பட்டனர். வாக்காளர் எண்ணிக்கையை அதிகமாக வைத்திருக்க சில பெயர்கள் சரியான ஆவணங்கள் இல்லாமல் மீண்டும் சேர்க்கப்பட்டன. செப்டம்பர் 2025-ல் 934-ஆக இருந்த பாலின விகிதம் (gender ratio) இறுதிப் பட்டியலில் 892-ஆகக் குறைந்தது. மக்கள்தொகைப் போக்குகளுடன் பொருந்தாத புள்ளிவிவர ரீதியாக நம்பமுடியாத மாற்றம் போன்ற மக்கள்தொகை புள்ளிவிவரங்களிலும் மொத்த மாறுபாடுகள் இருந்தன. இந்த முரண்பாடுகள் தரவு உள்ளீட்டுப் பிழைகள் அல்லது சரிபார்க்கப்படாத வெகுஜன திருத்தங்களைக் குறிக்கின்றன. இது தரவுத்தளத்தின் ஒருமைப்பாடு (integrity) குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.


மேலும், தரவு வெளிப்படைத்தன்மை இல்லாதது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. சேர்க்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட பெயர்களின் பட்டியல்கள் டிஜிட்டல் வடிவத்தில் பகிரப்படவில்லை. எந்த ஒரு நபரும் அவற்றை எளிதாக சரிபார்க்கவோ அல்லது மதிப்பாய்வு செய்யவோ முடியாது.


ஒட்டுமொத்தமாக, இந்த சிக்கல்கள் — மக்கள் தொகை தொடர்பான தவறுகள், கைமுறையிலான பிழைகள் மற்றும் தெளிவில்லாத தரவு பராமரிப்பு — எல்லாம் சேர்ந்து, வாக்காளர் பட்டியல் மேலாண்மை அமைப்பின் (electoral roll management) பலவீனங்களை வெளிக்காட்டுகின்றன. இது பட்டியல்களில் திருத்தம் செய்யும் செயல்முறையில் தொழில்நுட்ப அடிப்படையிலான சரிபார்ப்பு மற்றும் திறந்தவையாக உள்ள தரவுக் கண்காணிப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது.


இந்திய தேர்தல் ஆணையத்தின் வலையமைப்பு குறித்து


இந்திய தேர்தல் ஆணையத்தின் வலையமைப்பு (Election Commission of India Network (ECI-Net)) உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆற்றல்மிக்க டிஜிட்டல் தரவுத்தளங்களில் ஒன்றாகும். இது ஏறக்குறைய ஒரு பில்லியன் வாக்காளர்களைக் கொண்ட பதிவாகும். பெயர் சேர்த்தல்கள், முகவரி மாற்றங்கள் மற்றும் சுயவிவர மாற்றங்கள் மூலம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. இது தேர்தல் புகைப்பட அடையாள அட்டை (Electoral Photo Identity Card (EPIC)) அடையாள ஆவணம் மற்றும் வாக்காளர் பெயர் மூலம் தேடக்கூடியது மற்றும் இந்தியாவின் முதன்மையான கணினி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான புனேவில் உள்ள மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தால் (Centre for Development of Advanced Computing (C-DAC)) நிர்வகிக்கப்படுகிறது. உலகளவில், இந்த முக்கியமான தரவுத்தளத்தின் அளவு, செயல்பாடு மற்றும் ஜனநாயக முக்கியத்துவத்துடன் பொருந்தக்கூடிய சில அமைப்புகள் மட்டுமே உள்ளன.


வடிவமைப்பின் மூலம், இந்திய தேர்தல் ஆணைய வலையமைப்பானது நகல் பதிவுகளைக் கண்டறியவும், பிழைகளை அடையாளம் காணவும், அங்கீகரிக்கப்பட்ட சரிபார்ப்பு மூலம் திருத்தங்களை எளிதாக்கவும் முடியும். இதன் கட்டமைப்பு உடனடியாக நிகழ்நேர மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் அறிக்கைகளை வெளிப்படையாகவும் துல்லியமாகவும் உருவாக்க முடியும். தரவு பகுப்பாய்வு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்களைப் (Application Programming Interface (API)) பயன்படுத்துவதன்மூலம், சமீபத்திய வாக்காளர் பட்டியல் புதுப்பிப்புகளின்போது கண்டறியப்பட்ட பெரும்பாலான தவறுகள் மற்றும் மக்கள்தொகை தொடர்பான சிக்கல்களை இந்த அமைப்பு தானாகவே கண்டறிந்து சரிசெய்ய முடியும்.


இருப்பினும், வெளிப்படைத்தன்மையின்மையும், அமைப்பு மட்டத்தில் பகுப்பாய்வு இல்லாமையும் கடுமையான கவலைகளை எழுப்புகின்றன. இந்த அளவிலான தரவுத்தளத்தில் எதிர்பார்க்கப்படுவது போல, தானியங்கி தணிக்கை மற்றும் பகுப்பாய்வு கருவிகள் ஏற்கனவே இருந்தால், அவை பெரிய அளவிலான கைமுறை தலையீடு இல்லாமல் நகல், மக்கள்தொகைப் பிறழ்வுகள் மற்றும் தரவு ஒழுங்கின்மைகளை எளிதாகக் கண்டறிந்திருக்க முடியும். இந்த டிஜிட்டல் திறன்களைப் பயன்படுத்தத் தவறியது, நிறுவன மந்தநிலையையோ அல்லது தொழில்நுட்ப அடிப்படையிலான வெளிப்படைத்தன்மையை வேண்டுமென்றே தவிர்ப்பதையோ குறிக்கிறது. இத்தகைய நடைமுறைகள், தற்போதைய நிலையான செயல்பாட்டு முறைகளின் (SoPs) ஒருமைப்பாட்டில் நம்பிக்கையை பலவீனப்படுத்துகின்றன. அதன் தலைமையில் வலுவான தொழில்நுட்ப நிபுணத்துவம் இருந்தபோதிலும், சரிபார்க்கக்கூடிய மென்பொருள் அடிப்படையிலான நெறிமுறைகளுக்கு பதிலாக கைமுறை சரிபார்ப்பை நம்புவது விளக்க முடியாததாகவே உள்ளது. தரவு அடிப்படையிலான தணிக்கைகளும், அமைப்பு மட்டத்தில் வெளிப்படைத்தன்மையும் முன்னுரிமை அளிக்கப்படும் வரை, வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கூற்றுகள் பொதுமக்களின் சந்தேகத்தையும், நிறுவன உள்நோக்கத்தையும் தொடர்ந்து வலுப்படுத்தும்.


முன்னோக்கி செல்லும் வழி


இன்று, இந்தியா உலகின் மிகவும் மேம்பட்ட டிஜிட்டல் சூழல் அமைப்புகளில் ஒன்றைக் கொண்டுள்ளது. இது ஆதார்-இணைக்கப்பட்ட தரவுத்தளங்கள் (Aadhaar-linked databases) மற்றும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI)) முதல் தரவு பகுப்பாய்வு மற்றும் மின்-ஆளுகை வரை நீண்டுள்ளது. இருப்பினும், 2025ஆம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்தத்தை (Special Intensive Revision) வழி நடத்தும் நடைமுறைகள் இந்த முன்னேற்றத்தின் சிறிய பிரதிபலிப்பைக் காட்டுகின்றன. பலவீனங்கள் நிர்வாக ரீதியாக மட்டுமல்ல, கட்டமைப்பு ரீதியாகவும் உள்ளன. அவை கண்டறியும் தன்மை மற்றும் தரவுத்தள ஒருங்கிணைப்பு இல்லாததால் உருவாகின்றன. எனவே வழிகாட்டும் நெறிமுறைகளை சீர்திருத்துவது விருப்பமானது அல்ல; ஜனநாயக நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்கு இது மிகவும் முக்கியமானது.


வாக்காளர் பட்டியல், நிலையான, மாநில எல்லைக்குட்பட்ட பதிவாக இல்லாமல், உயிருள்ள, முக்கியமான தேசிய சொத்தாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன் துல்லியம் தேர்தல்களின் நேர்மையையும், தேர்தல் நிர்வாகத்தில் பொதுமக்களின் நம்பிக்கையையும் நேரடியாக வடிவமைக்கிறது.


நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிக்கத் தயாராகும் போது, ​​பீகாரில் நடந்தவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை சமீபத்திய நீதிமன்றக் கருத்துக்கள் காட்டுகின்றன. எதிர்கால புதுப்பிப்புகள் சரியாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும், பொறுப்புடனும் செய்யப்பட வேண்டும். செயல்முறை தரவைச் சரிபார்க்க மென்பொருளைப் பயன்படுத்த வேண்டும். தெளிவான டிஜிட்டல் பதிவுகளை வைத்திருக்க வேண்டும் மற்றும் தவறுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் வலையமைப்பு (Election Commission of India Network (ECI-Net)) அமைப்பு பயன்படுத்த எளிதாக இருக்க வேண்டும். தொழில்நுட்ப சிக்கல்கள் விரைவாக சரிசெய்யப்பட வேண்டும். மேலும், புகார்களைக் கையாள விரைவான மற்றும் பயனுள்ள வழி இருக்க வேண்டும்.


2025ஆம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்தத்தை வெறும் வழக்கமான சரிபார்ப்பாக இருக்கக்கூடாது; அது திறந்த, துல்லியமான மற்றும் நேர்மையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நம்பகமான செயல்முறையாக மாற வேண்டும்.


ராஜீவ் குமார் ஐஐடி கரக்பூர், ஐஐடி கான்பூர், பிட்ஸ் பிலானி மற்றும் ஜேஎன்யு ஆகியவற்றில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் முன்னாள் பேராசிரியர், டிஆர்டிஓ மற்றும் டிஎஸ்டியில் முன்னாள் விஞ்ஞானி.



Original article:

Share:

வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களைப் பாதுகாக்க ஒரு சட்டம் தேவை -பிரிதி நாராயணன், கீதா ஆர்.

 வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கான பாதுகாப்புகள் மற்றும் நலன்களை கண்காணிக்க தேசிய அளவிலான தனி சட்டம் இல்லாதது பணியாளர்களை பல வழிகளில் பாதிக்கிறது.


ஜனவரி மாதத்தில், உச்ச நீதிமன்றம் வீட்டு வேலை செய்யும் பணியாளர்களின் உரிமைகளை நிர்ணயிப்பதற்காக விரிவான ஒரு சட்டத்தை இயற்றுமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், அதற்கான கட்டமைப்பை அமைப்பதற்காக ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறியது. ஆறு மாதங்களில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அந்த குழுவுக்கு உத்தரவிட்டது. இது குழு அமைக்கப்பட்டதா இல்லையா என்பது இன்னும் தெளிவாக இல்லை.


வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களின் நிலை


இந்தியாவில் 4 கோடி முதல் 90 கோடி வரை வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறுமிகள், அவர்களில் பெரும்பாலோர் பட்டியல் சாதி (Scheduled Caste) மற்றும் பட்டியல் பழங்குடி (Scheduled Tribe) சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இது அவர்களை கட்டமைப்பு அதிகார வேறுபாடுகளுக்கு பாதிக்கப்படக்கூடியவர்களாக ஆக்குகிறது.

சத்தீஸ்கரில் இருந்து டெல்லிக்கு கடத்தப்பட்ட ஒரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண் வீட்டுப் பணியாளரின் சிறைவைப்பு மற்றும் மனித கடத்தல் சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்கின் ஒரு பகுதியாக, நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்புகளை வகுப்பதில் முக்கியமான பல பரிசீலனைகளுக்கு இந்த வழக்கு கவனம் செலுத்துகிறது. பணியாளர்கள் மற்றவர்களின் வீடுகள் மற்றும் பணியிடங்களில் உழைக்கின்றனர். இது அவர்களை தனிமைப்படுத்துகிறது. பணியிட சூழ்நிலைகளை ஆய்வு செய்வது சாத்தியமற்றதாகிறது. இந்த பணியாளர்கள் துன்புறுத்தல், வன்முறை (abuse) மற்றும் பிரிவினைவாத நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படலாம். குழந்தைத் தொழிலாளர் முறை இந்த துறையில் அதிகமாக உள்ளது. இடைத்தரகர்களும் வேலை நிறுவனங்களும் பெரும்பாலும் வீட்டு வேலை செய்பவர்களை முதலாளிகளுடன் இணைக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலர் தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சில தொழிலாளர்கள் ஒரு வீட்டில் முழுநேர வேலை செய்கிறார்கள். மற்றவர்கள் ஒவ்வொரு நாளும் சில மணிநேரங்கள் பல வீடுகளில் வேலை செய்கிறார்கள். இது குறைந்தபட்ச ஊதியம், வேலை நேரம் மற்றும் விடுப்பு உரிமைகள் ஆகியவற்றின் விதிமுறைகளையும் செய்யலாக்கத்தையும் சிக்கலாக்கும்.


பல பணியாளர்கள் மாநில எல்லைகளைத் தாண்டி பாதுகாப்பு தேவைப்படும் இடம்பெயர்ந்த தொழிலார்களாக உள்ளனர். தொழிலாளர்கள் அண்டை நாடுகளிலிருந்தும் வழக்கமாக வருகிறார்கள். பாதுகாப்புகள் மற்றும் சலுகைகளை ஆராய தேசிய அளவிலான ஒரு தனி சட்டம் இல்லாதது பணியாளர்களை பல வழிகளில் பாதிக்கிறது.


உலகப் பொருளாதாரத்திற்கு அவர்கள் ஆற்றும் பங்களிப்புகளை அங்கீகரித்து, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization) 2011-ல் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புகளை உறுதிசெய்ய ஒரு மாநாடு தீர்மானம் (எண். 189) நிறைவேற்றியது. இந்தியா அந்த மாநாட்டிற்கு ஆதரவாக வாக்களித்தாலும், இன்னும் அதை அங்கீகரிக்கவில்லை. நீதிமன்றம் குறிப்பிட்டது போல், 1950-களில் இருந்து தேசிய அளவில் சட்டம் இயற்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீட்டு வேலை செய்பவர்களைப் பாதுகாக்க வலுவான ஒன்றிய சட்டத்தை வலியுறுத்துவதற்காக 2012-ஆம் ஆண்டு வீட்டு வேலை செய்பவர்களுக்கான தேசிய வீட்டுப் பணியாளர் தளம் (National Platform for Domestic Workers (NPDW)) உருவாக்கப்பட்டது. 2017-ஆம் ஆண்டில், வீட்டு வேலை பணியாளர்கள் (வேலை ஒழுங்குமுறை மற்றும் சமூகப் பாதுகாப்பு) மசோதா என்ற வரைவுச் சட்டத்தை அவர்கள் தயாரித்தனர். ஆனால், அது ஒருபோதும் அதிகாரப்பூர்வ சட்டமாக மாற்றப்படவில்லை. நீதிமன்றம் பல்வேறு அமைச்சகங்களுக்கு ‘துறை சார்ந்த நிபுணர்களை’ (subject experts) கொண்ட ஒரு குழுவை அமைக்க உத்தரவிட்டது. இருப்பினும், அந்தக் குழுவில் வீட்டுப் பணியாளர்களின் பிரதிநிதிகள் யாரும் இல்லாதது கவலைக்குரியதாக உள்ளது.



மாநில அளவில் ஏற்பட்ட முன்னேற்றங்கள்


தமிழ்நாட்டில், சுமார் 2 கோடி வீட்டுப் பணியாளர்கள் இருக்கும் இடத்தில், 1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு கைமுறைத் தொழிலாளர் சட்டம், (Tamil Nadu Manual Worker Act, 1982) கீழ் ஒரு நலவாரிய வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம், பதிவு செய்யப்பட்ட பணியாளர்கள் ஓய்வூதியம், மகப்பேறு நலன்கள், குழந்தைகளுக்கு கல்வி உதவி மற்றும் விபத்து நிவாரணம் உள்ளிட்ட நலன்களைப் பெறுகின்றனர். இருப்பினும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் மட்டுமே உண்மையில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். குறைந்தபட்ச ஊதியம் மணிக்கு ரூ.37-39 என குறிப்பிடப்பட்டிருந்தாலும், பணியாளர்கள் மிகக் குறைவாகவே வருவாய் ஈட்டுகின்றனர். அவர்கள் ஒரே வீட்டில் முழுநேரமாக வேலை செய்ய முடியாததால், அவர்கள் ‘பகுதிநேர’ தொழிலாளர்களாகக் கருதப்படுகிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு வீட்டுப் பணியாளர் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்கும் விதமாக, உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு வீட்டுப் பணியாளர்களைப் பாதுகாக்க சிறப்பு சட்டத்தை இயற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.


இதற்கிடையில், கர்நாடக அரசு வீட்டுப் பணியாளர்களின் வேலை நிலைமைகளை ஒழுங்குபடுத்த வீட்டுப் பணியாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலன் மசோதாவை (Domestic Workers (Social Security and Welfare) Bill, 2025) அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. இது வீட்டு வேலை செய்பவர்களை அரசாங்கத்தில் கட்டாயமாகப் பதிவுசெய்து, ஊதியம் மற்றும் வேலை நேரம் குறித்த ஒப்பந்தத்தை உள்ளடக்கிய எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்துடன் வேலையைத் தொடங்க முதலாளிகளை கட்டாயப்படுத்துகிறது. இது பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், கூடுதல் நேர ஊதியம் மற்றும் வாராந்திர விடுமுறைகளுக்கான உரிமையை வழங்குகிறது. முக்கியமாக, வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் ஒரு நலத்திட்ட நிதிக்கு முதலாளிகள் ஊதியத்தில் 5% வழங்க வேண்டும் என்று இந்த சட்டம் கோருகிறது.


என்ன செய்ய வேண்டும்


இந்தியாவில் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மட்டுமே வீட்டுல் வேலை செய்யும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கின்றன. இந்த ஊதியங்கள் புதுப்பிக்கப்பட்டு அதிகரிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் அனைத்து மாநிலங்களும் வீட்டுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை குறிப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட வேண்டும். தேசிய வீட்டுப் பணியாளர் தள (National Platform for Domestic Workers (NPDW)) வரைவு மசோதா மற்றும் கர்நாடக சட்டத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட விதிகளுக்கு கூடுதலாக, அனைத்து முதலாளிகள், வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் மாநில அரசாங்கத்தில் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று  பரிந்துரைக்கிறது. 


முதலாளிகள், ஊழியர்கள் மற்றும் மாநிலத்தை உள்ளடக்கிய முத்தரப்பு வாரியம் (tripartite board) மூலம் ஒவ்வொரு முதலாளிக்கும் ஒரு பணிப்புத்தகம் வழங்கப்பட வேண்டும். இது ஒவ்வொரு முதலாளி மற்றும் அவரிடம் வேலை செய்யும் பணியாளரால் பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் ஒவ்வொரு மாதமும் அங்கீகரிக்கப்பட வேண்டும். பணியிடத்தில் பெண்களின் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும் தீர்வு சட்டத்தின் (Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act) கீழ் மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட உள்ளூர் புகார் குழுக்களை அணுக முடியவில்லை என்று பெண் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புகார் குழுக்களை கிராம பஞ்சாயத்துகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் தொடங்க வேண்டும். 


வீட்டுல் வேலை செய்யும் பணியாளர்களுக்கு வீட்டுவசதி மற்றொரு முக்கியமான பரிசீலனையாகும். 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் தொற்றுநோயால் விதிக்கப்பட்ட ஊரடங்குகளின் போது தமிழ்நாட்டில் பணியாளர்கள் சில உதவிகளைப் பெற்றாலும், அவர்களில் பலரால் வாடகை செலுத்த முடியவில்லை. அவசர காலங்களில் மட்டும் உதவி செய்வதற்குப் பதிலாக, இந்த முக்கியமான பணியில் பணிபுரியும் பெண்களைப் பாதுகாக்க நிரந்தர தீர்வுகள் மிகவும் அவசியமானது.


ஆர். கீதா, அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பின் ஆலோசகர்; பிரிதி நாராயண், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் உதவிப் பேராசிரியர்.



Original article:

Share:

உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்தில் (UCC) திருத்தங்களை முன்மொழிந்துள்ளது : என்ன மாறக்கூடும்? ஏன்? -ஐஸ்வர்யா ராஜ்

 முன்மொழியப்பட்ட மாற்றங்களில், ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தையும், 21 வயதுக்குட்பட்ட நேரடி பதிவுதாரர்களின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்களுக்குத் தெரிவிக்கும் பதிவாளரின் அதிகாரத்தையும் நீக்குவதன் மூலம் தனியுரிமையைச் சுற்றியுள்ள கவலைகளை அரசாங்கம் நிவர்த்தி செய்துள்ளது.


பொது சிவில் சட்டம்-2023 மற்றும் பொது சிவில் சட்டம் (UCC) விதிகள்-2024 ஆகியவற்றை எதிர்த்து தொடரப்பட்ட ஏராளமான மனுக்களைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் அரசின் உள்துறை அமைச்சகம் புதன்கிழமை உயர்நீதிமன்றத்தில் இந்த விதிகள் மசோதாக்களில் திருத்தங்களை முன்மொழிந்து ஒரு பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்தது.


முன்மொழியப்பட்ட மாற்றங்களில், ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தை நீக்குதல், நேரடி உறவில் பிறந்த குழந்தைகளின் தகவல்களை வெளியிடுதல், 21 வயதுக்குட்பட்ட பதிவுதாரர்களின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்களுக்குத் தெரிவிக்கும் பதிவாளரின் அதிகாரம் மற்றும் நேரடி உறவைப் பதிவு செய்யும்போது துணை ஆவணங்களை வழங்குவதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றின் மூலம் தனியுரிமையைச் சுற்றியுள்ள கவலைகளை அரசாங்கம் நிவர்த்தி செய்துள்ளது.


நேரடிப் பதிவு (live-in registration) என்பது நேரடி பாலின உறவுகளுக்கு (heterosexual relationships) மட்டுமே பொருந்தும். திருமணத்தில் உள்ள கட்டுப்பாடுகளைப் போலவே, அத்தகைய உறவில் நுழைய அனுமதிக்கப்படாத சில குழுக்களையும் இது பட்டியலிடுகிறது. உத்தரகண்ட் பொது சிவில் சட்டம் (UCC) திருமணத்திற்கான 74 தடைசெய்யப்பட்ட உறவுகளைக் குறிப்பிடுகிறது, இதில் முதல் உறவினர்கள் (first cousins) அடங்கும். கூடுதலாக, ஏற்கனவே திருமணமான ஒருவருடன் அல்லது மற்றொரு நேரடி உறவில் இருப்பவர்களுடன் நேரடி உறவில் ஈடுபட முடியாது என்று சட்டம் கூறுகிறது.


இந்த ஆண்டு ஜனவரியில் அமல்படுத்தப்பட்ட பொது சிவில் சட்டம் (UCC) விதிகளின் சில பிரிவுகள், குறிப்பாக உயர்நீதிமன்றத்தில் மனுதாரர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மாற்றப்பட்டுள்ளன. மூத்த வழக்கறிஞர் விருந்தா குரோவர், பொது சிவில் சட்டம் (UCC), விதிகள் மற்றும் படிவங்கள் கண்காணிப்பு மற்றும் காவல் மூலம் தனிப்பட்ட வாழ்க்கையில் ஊடுருவும் ஒரு சட்ட அமைப்பை உருவாக்குகின்றன என்று அவர் கூறினார். "ஒவ்வொரு தகவலும்... உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்த நாட்டில், எனது தகவல் ஏன் உள்ளூர் காவல்துறையிடம் இருக்க வேண்டும்?" என்று அவர் கூறினார்.


இது திருத்தத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாநில அரசு அதன் மாற்றப்பட்ட குறிபேட்டில், "அதில் உள்ள தகவல்களின் தனியுரிமையை உறுதி செய்வது பதிவாளர், உள்ளூர் காவல் நிலையத்தின் பொறுப்பாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பொறுப்பாகும்" என்று கூறுகிறது.


உண்மையான விதிகளில், பதிவுசெய்யப்பட்ட தம்பதியினரின் விவரங்களை உள்ளூர் காவல் நிலையத்தில் "பதிவுப் பராமரிப்புக்காக" (record keeping) வைத்திருக்க வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்தியிருந்தது.


நேரடி உறவுகளில் பிறந்த குழந்தைகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவது தொடர்பாக மற்றொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் சட்டபூர்வமான தன்மையை உறுதி செய்வதே நோக்கம் என்றாலும், அந்தத் தகவல் தனிப்பட்டது என்றும், பொது அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் கைகளுக்குச் செல்ல முடியாது என்றும் குரோவர் இதை எழுப்பியிருந்தார். "பெண்கள் மோசமாக இருக்கும் சூழ்நிலையை நாங்கள் உருவாக்கப் போகிறோம். அவர்கள் ஒவ்வொரு நாளும் சமூக அவமானத்திற்கு ஆளாக நேரிடும்" என்று அவர் கூறினார்.


இதற்கு, நீதிபதிகள் மனோஜ் திவாரி மற்றும் ஆஷிஷ் நைதானி ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, "சட்டம் உருவாக்கப்படும்போது உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்பட்டதா? சொலிசிட்டர் ஜெனரல் அவர்கள், புதிதாக பரிந்துரைகளை அழைக்க முடியுமா? மாற்றங்கள் தேவைப்படும் இடங்களில் நீங்கள் பரிசீலிக்கலாம், அதை நாங்கள் இணைக்க முடியுமா? தேவையான (மாற்றங்களை) கொண்டுவர மாநில சட்டமன்றத்தையும் நீங்கள் வலியுறுத்தலாம்," என்று அது கூறியது.


தற்போது இந்த நிபந்தனையை விதிகளில் இருந்து அரசு நீக்கியுள்ளது. ஒரு நேரடி உறவை முடிக்கும்போது, ​​எதிர்பார்க்கப்படும் அல்லது ஏற்கனவே பிறந்த எந்தவொரு குழந்தையின் விவரங்களையும் இனி குறிப்பிட வேண்டியதில்லை. உண்மையான விதிகளின்கீழ், "நேரடி உறவை முடிக்கும் பெண் துணை" கர்ப்பமாக இருந்ததாகத் தெரிந்தால், பதிவாளருக்குத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும். மேலும், விவாகரத்துக்குப் பிறகு ஒரு குழந்தை அல்லது குழந்தைகள் பிறந்திருந்தால், பிறப்புச் சான்றிதழிலிருந்து முப்பது நாட்களுக்குள் பிறப்பு விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும். முன்மொழியப்பட்ட திருத்தம் இந்தத் தேவைகளை நீக்கியுள்ளது.


இருப்பினும், ஏற்கனவே உள்ள சட்டங்கள் இந்தப் பிரச்சினையை உள்ளடக்கியுள்ளன. இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 16(1), ஒரு திருமணம் செல்லாதது என்றாலும், என்றும் அறிவிக்கப்பட்டாலும், அந்த திருமணத்திலிருந்து வரும் எந்தவொரு குழந்தையும் சட்டப்பூர்வமானதாகக் கருதப்படுகிறது என்று கூறுகிறது.


திருமணங்கள் மற்றும் வாரிசுரிமைச் சான்றுகளில் சாட்சிகள் உட்பட ஒவ்வொரு பதிவுக்கும் ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தை கட்டாயமாக்கும் விதிகளை மனுக்கள் சவால் செய்திருந்தன. இது கே.எஸ். புட்டசாமி தீர்ப்பை மீறுவதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிட்டனர்.


உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் வாதிட்ட மற்றொரு மனுவில், சில விதிகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆதார் மூலம் கட்டாய பதிவு, பதிவாளர்களுக்கு அதிகாரம் அளித்தல், நேரடி உறவுகளைப் பதிவு செய்யாததற்கான அறிவிப்புகளை வெளியிடுதல் மற்றும் பதிவு செய்யாததற்கான குற்றங்கள் ஆகியவை இதில் அடங்கும்.


இந்த அம்சத்தை நீக்குவதற்காக ஒவ்வொரு பிரிவிலும் உண்மையான குறிப்பேடு மாற்றப்பட்டுள்ளது. ஆதாருடன், பிற அடையாளச் சான்றுகளும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை. உண்மையில், திருத்தப்பட்ட பிரிவுகள், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் மூலம் பதிவு செய்ய வேண்டிய முந்தைய பிரிவுகளை நீக்கியுள்ளன.


முன்னதாக, இந்த குறிப்பேடு குறிப்பிட்டதாவது, “திருமணத்தை இணையவழியில் பதிவு செய்வதற்கு அல்லது நேரடி உறவை ஒப்புக்கொள்வதற்கு முதல்படி, அவரது/தனது ஆதார் எண்ணை உள்ளிட்டு, ஆதார்-இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணில் ஒருமுறை கடவுச்சொல் (OTP) மூலம் சரிபார்க்க வேண்டும். எதிர்காலத்தில் அனைத்து செயல்முறைகளுக்கும், பதிவு செய்பவரின் பயனர் அடையாள எண்ணாக ஆதார் எண் இருக்கும்.” இந்தத் தேவையை இப்போது ரத்து செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. எங்கு தொலைபேசி எண் கேட்கப்பட்டாலும், அதை ஆதாருடன் இணைப்பது இனி கட்டாயமில்லை.


பதிவாளரின் அதிகாரம் தளர்த்தப்பட்டது.


பதிவாளரின் கடமைகள் திருத்தப்பட்டு, அவருக்கு இருந்த அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது, இதில் "செயல்படாமை" காரணமாக துணைப் பதிவாளர்களுக்கு எதிராக சுருக்கமான விசாரணைகள் செய்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் அடங்கும். பதிவு செய்பவர்கள் 21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்களின் விவரங்களை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டாலும், முன்பு பதிவு குறித்து பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டியிருந்த பதிவாளருக்கு இப்போது அந்த அதிகாரம் இல்லை.


விண்ணப்பங்களில் வழங்கப்பட்ட விவரங்களின் உண்மைத்தன்மை குறித்து தன்னிச்சையான விசாரணையைத் தவிர்ப்பதற்காக, சுருக்கமான விசாரணையைத் தொடங்க துணைப் பதிவாளரின் அதிகாரமும் நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தடைசெய்யப்பட்ட உறவுகள் ஏற்பட்டால் மதத் தலைவர்களிடமிருந்து ஆவணங்களை வழங்குவது அவசியம். ஆனால் பதிவாளர்கள் சமர்ப்பித்தபடி, இந்த மதத் தலைவர்களைத் தொடர்புகொண்டு பதிவாளர் சுருக்கமான விசாரணையை நடத்த முடியாது.


தடைசெய்யப்பட்ட வகைகளின்கீழ் வரக்கூடிய ஒத்த உறவுகள் அனுமதிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த, அடையாளத்தை வெளியிடாமல் மதத் தலைவர்களுடன் சரிபார்த்து, தனது சொந்த மதிப்பீட்டை நடத்துவதற்கு உண்மையான விதிகள் பதிவாளருக்கு அதிகாரம் அளித்திருந்தன. ஆனால், இந்த அதிகாரம் இப்போது அகற்றப்பட்டுள்ளது.


30 நாட்களுக்கு செல்லுபடியாகும் தற்காலிக சான்றிதழ்களை வழங்குவதற்கான மற்றொரு விருப்பம் நீக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட திருத்தம், விண்ணப்பத்திற்கு பதிவுச் சான்றிதழ் அல்லது நிராகரிப்பு கடிதம் மூலம் பதிலளிக்கப்படும் என்று கூறுகிறது. பதிவுசெய்தவர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கையில் பதிவுசெய்தவர்கள் அல்லது பெற்றோர்கள் அல்லது மதத் தலைவர்கள்/சமூகத் தலைவர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள்/மின்னஞ்சல் முகவரிகள்/முகவரிகளின் உண்மைத்தன்மையை பதிவாளரால் சரிபார்க்க முடியாது.


நேரடி உறவுகளுக்கான பதிவுச் சான்றிதழை வழங்குவதற்குமுன், வீட்டு உரிமையாளரின் விவரங்கள், வாடகை ஒப்பந்தத்தின் நகல் அல்லது குத்தகைதாரர் சரிபார்ப்பு எண்ணையும் பதிவாளரால் சரிபார்க்க முடியாது.


துணை ஆவணங்கள் விருப்பத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளன


முன்மொழியப்பட்ட விதிகள், நேரடி உறவுகளைப் பதிவு செய்யும்போது துணை ஆவணங்களை "சமர்ப்பிக்கப்படலாம்" என்று கூறுகின்றன. விதிகள் குழந்தையின் சான்று, முந்தைய உறவு (விவாகரத்து ஆணை, நிறுத்தப்பட்ட நேரடி உறவின் செல்லாத தன்மை போன்றவை) மற்றும் பதிவுசெய்தவர்கள் தடைசெய்யப்பட்ட உறவுகளின் வகைகளுக்குள் இருந்தால் மதத் தலைவர்களிடமிருந்து திருமணத்தை அனுமதிக்கும் சான்று ஆகியவற்றை கட்டாயமாக்கினாலும், குத்தகைதாரருக்கும் உரிமையாளருக்கும் இடையிலான உறவின் விவரங்களுடன், சொந்த சொத்தில் வசிப்பவராக இருந்தால், உரிமையாளரின் பெயர் மற்றும் விவரங்களை முன்னர் கேட்ட பகிரப்பட்ட குடும்பத்தின் விவரங்கள் விருப்பப்படி செய்யப்பட்டுள்ளன.


பதிவு செய்தவர்களின் சாதி விவரங்கள் நீக்கப்பட்டுள்ளன. முன்மொழியப்பட்ட இந்த வரைவு மாநில/மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் முன்னர் இருந்த மாநில/மத்திய திட்டங்களின் பயனாளிகளின் சான்றுகளின் தேவையையும் நீக்குகிறது. "தவறான புகார்களை" தாக்கல் செய்வதற்கான தண்டனையும் நீக்கப்பட்டுள்ளது.

முந்தைய திருத்தங்கள்


முன்னதாக, மாநில அரசு சட்டமன்றத்தில் ஒரு திருத்தத்தை நிறைவேற்றியது., இதன் மூலம் பாரதிய நியாய சன்ஹிதா (BNS)-ன் கீழ் உள்ள விதிகளை பொது சிவில் சட்டத்தின் (UCC) விதிகளுடன் இணைக்க முடிந்தது. சட்டத்தின் பிரிவு 17-ன் கீழ், பதிவு செய்யாதது அல்லது தவறான குறிப்பாணையை சமர்ப்பித்தல் போன்ற விதிமீறல்களுக்கு மூன்று மாதங்கள் வரை தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இது இப்போது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) விதிகளுக்கு இணங்க மாற்றப்பட்டுள்ளது.


நேரடி உறவில் உள்ள, துணைவர்களில் ஒருவர் 18 வயதிற்கும் இளையோராக இருந்தால், அது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.50,000 வரை அபராதத்துடன் தண்டிக்கப்படும். திருமணச் சட்டம் அமலுக்கு வந்தபிறகு, ஏற்கனவே ஒரு துணை இருக்கும் போது வேறொருவரை மணப்பவர்கள், BNS, 2023-ன் கீழ் தண்டிக்கப்படுவார்கள். மற்றொருவரை திருமணம் செய்து கொண்டிருக்கும்போது நேரடி உறவில் (live-in relationship) இருப்பவர்கள் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையையும் அனுபவிக்கலாம். திருமணத்திற்கு ஒரு நபரின் ஒப்புதல் வலுக்கட்டாயமாகவோ, வற்புறுத்தலாகவோ அல்லது மோசடியாகவோ இருந்தால், அது ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படும், மேலும் அபராதமும் விதிக்கப்படும்.



Original article:

Share:

‘டிஜிட்டல் கைதுகள்’ வழக்கில் பதிலளிக்குமாறு ஒன்றிய அரசு, சிபிஐ, ஹரியானா அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு : பிரச்சினை மற்றும் கடந்த கால நீதிமன்ற தீர்ப்புகள் -அமல் ஷேக்

 2025-ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும், 17,718 டிஜிட்டல் கைது (digital arrest) வழக்குகள் பதிவாகியுள்ளன. 'டிஜிட்டல் கைது' மோசடி என்பது பொதுவாக அரசாங்க அதிகாரியாகக் காட்டிக் கொள்ளும் ஒருவரின் தொலைபேசி அல்லது வீடியோ அழைப்பில் தொடங்குகிறது. அழைப்பின்போது, ​​மோசடி செய்பவர் பாதிக்கப்பட்டவருடன் நம்பகத்தன்மையை உருவாக்குகிறார்.


அக்டோபர் 17 அன்று உச்சநீதிமன்றம் இதை "கடுமையான கவலைக்குரிய விஷயம்" என்று அழைத்தது மற்றும் டிஜிட்டல் கைதுகள் தொடர்பான பிரச்சினைகளை தானாக முன்வந்து விசாரித்தது. ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள ஒரு மூத்த தம்பதியினரின் வழக்கால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகத்தால் விசாரிக்கப்படுவதாக அவர்களை நம்பவைத்த ஒரு குழுவிடம் அவர்கள் ரூ. 1 கோடிக்கு மேல் இழந்தனர். மோசடி செய்பவர்கள் உண்மையானதாகத் தோன்றும் போலி நீதிமன்ற உத்தரவுகளை அனுப்பினர். இந்த உத்தரவுகளில் உச்சநீதிமன்றத்திலிருந்து வந்ததாகத் தோன்றும் முத்திரைகள் மற்றும் கையொப்பங்கள் கூட இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, நீதிபதிகளின் போலி கையொப்பங்களுடன் நீதித்துறை உத்தரவுகளை போலியாக உருவாக்குவது நீதித்துறை அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதிக்கிறது என்றும் கூறியது. மேலும், இது சட்டத்தின் ஆட்சியையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறதுடன், இது நிர்வாகத்தின் கண்ணியம் மற்றும் அதிகாரத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்று நீதிமன்றம் கூறியது. இதுபோன்ற கடுமையான குற்றங்களை சாதாரண மோசடி அல்லது இணைய குற்றம் என்று கருத முடியாது.


நீதிமன்றம் மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய புலனாய்வுப் பணியகம் (Central Bureau of Investigation (CBI)), ஹரியானா உள்துறை மற்றும் அம்பாலா குற்றவியல் காவல்துறையிடம் பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டது. மேலும் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணியிடம் உதவி கோரியது.


‘டிஜிட்டல் கைது’ (digital arrest) என்றால் என்ன?


இந்தச் சொல்லுக்கு சட்டப்பூர்வ வரையறை இல்லை என்றாலும், பரவலாகிவிட்ட இந்த இணைய மோசடியின் (cyber fraud) ஒரு வடிவத்தை விவரிக்க இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது வழக்கமாக ஒரு அரசாங்க அதிகாரியாகக் காட்டிக் கொள்ளும் ஒருவரிடமிருந்து வரும் தொலைபேசி அல்லது வீடியோ அழைப்பில் தொடங்குகிறது. அழைப்பாளர் காவல்துறை, சிபிஐ, அமலாக்கத் துறை அல்லது வேறு ஏதேனும் சட்ட அமலாக்க நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்று கூறி, மறுமுனையில் உள்ள நபரிடம் அவர்களின் கணக்கு, சிம் கார்டு அல்லது அடையாள அட்டை (ID) ஒரு குற்றச் செயலில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.


உரையாடல் தொடங்கியவுடன், அழைப்பாளர் பாதிக்கப்பட்டவரின் நம்பகத்தன்மையை வளர்த்துக் கொள்கிறார். அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தோன்றும் ஆவணங்களை அனுப்புகிறார்கள். சில சமயங்களில், போலி முத்திரைகள் அல்லது நீதிமன்ற வில்லைகளைப் பயன்படுத்துகிறார்கள். மேலும், பாதிக்கப்பட்டவரை கைது செய்யப்படுவதை எதிர்கொள்ள நேரிடும் என்று நம்ப வைக்கிறார்கள். பின்னர், போலி அதிகாரிகள் இணையவழி விசாரணையை நடத்துகிறார்கள். அவர்கள் வீடியோ அழைப்புகளில் காவல் சீருடைகளைக் காட்டுகிறார்கள், போலி முதல் தகவல் அறிக்கைகளின் (FIR) காட்சி படங்களைக் (screenshots) காட்டுகிறார்கள். பின்னர் வழக்கு சரிபார்க்கப்படும் வரை "மேற்பார்வை" (supervision) அல்லது "பாதுகாப்பான" (safe) கணக்கிற்கு பணத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வருகிறது. தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாதிக்கப்பட்ட நபர், கொள்ளையடிக்கப்படுவதை அவர்கள் உணரவில்லை, மாறாக விசாரணைக்கு ஒத்துழைப்பதாக நம்புகிறார்.


பெரும்பாலான மோசடி அழைப்புகள் இதேபோன்ற முறையைப் பின்பற்றுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியே வரவோ அல்லது யாருடனும் பேசவோ கூடாது என்று கூறப்படுகிறது. இது அவர்களை ஒருவித உளவியல் ரீதியில் காவலில் வைக்கிறது. மோசடி செய்பவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டவரின் தனிப்பட்ட விவரங்கள், வங்கிக் கணக்குகள், ஆதார் மற்றும் பழைய பரிவர்த்தனை அடையாளங்களைக்கூட அணுகலாம். அவர்கள் அழைப்பதற்கு முன்பு அந்த நபரின் வழக்கத்தை ஆய்வு செய்கிறார்கள். இதனால், இந்த பின்னணித் தகவல் அவர்களின் கதையை நம்ப வைக்கிறது.


பிரச்சனை எவ்வளவு பெரியது?


டிஜிட்டல் கைது மோசடிகள் குறித்த தனி தரவுகளை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau (NCRB)) பராமரிப்பதில்லை என்று உள்துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் மார்ச் மாதம் மாநிலங்களவையில் தெரிவித்தார். அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் டிஜிட்டல் கைது மோசடிகள் மற்றும் தேசிய சைபர் குற்ற அறிக்கையிடல் தரவுத்தளத்தில் (National Cyber Crime Reporting Portal (NCRP)) பதிவாகியுள்ள தொடர்புடைய இணைய குற்றங்களின் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை.


டிஜிட்டல் கைது மோசடிகளுடன் தொடர்புடைய பதிவான சம்பவங்கள் மற்றும் நிதி இழப்புகளில் தொடர்ச்சியான அதிகரிப்பை தேசிய சைபர் குற்ற அறிக்கையிடல் தரவுத்தளம் (NCRP) காட்டுகிறது. இதில், பதிவான வழக்குகள் 2022-ல் 39,925-ல் இருந்து 2024-ல் 123,672 ஆக அதிகரித்துள்ளன. அதே காலகட்டத்தில், மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.91.14 கோடியிலிருந்து ரூ.1935.51 கோடியாக அதிகரித்துள்ளது. 2025-ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும், 17,718 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் ரூ. 210.21 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.


அனைத்து புள்ளிவிவரங்களும் இணையக் குற்றங்களின் பரந்த பிரிவுகளின் கீழ் தேசிய சைபர் குற்ற அறிக்கையிடல் தரவுத்தளத்திற்கு (NCRP) சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இந்திய குற்ற ஒருங்கிணைப்பு மையம் (Indian Crime Coordination Centre) பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதுபோன்ற மோசடிகளில் பயன்படுத்தப்படும் 3,962 ஸ்கைப் ஐடிகள் (Skype ID) மற்றும் 83,668 வாட்சாப் கணக்குகளைத் (WhatsApp accounts) தடுக்க இது உதவியுள்ளது. காவல்துறை அறிக்கைகளின் அடிப்படையில் அதிகாரிகள் 7.81 லட்சம் சிம் கார்டுகள் மற்றும் 2,08,469 IMEI-களையும் முடக்கியுள்ளனர். இந்திய எண்களிலிருந்து வருவதுபோல் தோன்றும் ஏமாற்றப்பட்ட சர்வதேச அழைப்புகளைக் கண்டறிந்து தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


நீதிமன்றங்கள் இதுவரை என்ன கூறியுள்ளன?


கடந்த ஒரு வருடமாக பல உயர்நீதிமன்றங்கள் இந்த மோசடிகளைக் முன்னிலைப்படுத்தியுள்ளன. ஜனவரி மாதம் இராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இந்தப் போக்கை தானாக முன்வந்து கவனத்தில் எடுத்துக் கொண்டது. 'டிஜிட்டல் கைது' என்பது இந்தியாவில் சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாத "ஒரு அதிநவீன மற்றும் ஏமாற்றும் இணைய மோசடி மாதிரி" என்று குறிப்பிட்ட நீதிமன்ற அமர்வு, இந்த மோசடிகள் "சூழ்ச்சியான உளவியல் ரீதியாக உத்திகள் காரணமாக பயனுள்ளதாக இருக்கும், பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக நம்ப வைக்கின்றன” என்று நீதிமன்றம் கூறியது.


செப்டம்பர் மாதம், டெல்லி உயர்நீதிமன்றம் ரூ.1.75 கோடி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. நீதிபதி அமித் மகாஜன், "இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், குற்றவாளிகள் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி சேதத்தை ஏற்படுத்தவும் சட்ட அமலாக்கத்தைத் தவிர்க்கவும் பயன்படுத்துவதால் இதுபோன்ற வழக்குகளைத் தீர்ப்பது கடினம்” என்று கூறினார்.


மும்பையில், மார்ச் மாதம் மும்பை உயர்நீதிமன்றம், ஓய்வுபெற்ற ஆசிரியை லீலா பார்த்தசாரதி, அமலாக்க இயக்குநரக (ED) அதிகாரிகள் என்று கூறி மோசடி செய்பவர்களுக்கு ரூ.32 லட்சத்தை மாற்றிய வழக்கை விசாரித்தது. மோசடி செய்பவர்கள் தனது அடையாள ஆவணங்களையும், உண்மையானதாகத் தோன்றும் நீதிமன்றக் கடிதங்களையும் காட்டியதால், அந்த அழைப்புகள் உண்மையானவை என்று அவர் நம்பினார். அவர் காவல்துறையை அணுகியபோது, ​​இரண்டு மாதங்களாக அவரது புகார் பதிவு செய்யப்படவில்லை.


நீதிபதிகள் ரேவதி மோஹிதே-தேரே மற்றும் நீலா கோகலே ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, காவல்துறையின் தாமதத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், மூத்த குடிமக்கள் உதவி இல்லாமல் இத்தகைய அழுத்தத்தை எவ்வாறு கையாள்வார்கள் என்று கேட்டனர். 

அவர்கள் மேலும் இணைய குற்றவியல் உதவி எண்ணான 1930-ஐ கேள்வி எழுப்பினர், இந்த வழக்கில் அது தொடர்பு கொள்ள முடியாததாக இருந்தது. நீதிமன்றம், உடனடி புகாரளிப்பு மற்றும் நிதி தடமறிதலுக்காக தேசிய இணைய தரவுத்தளத்தைப் பயன்படுத்த காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.



Original article:

Share:

2023-2024-ஆம் ஆண்டுகளில் கார்பன்-டை-ஆக்சைடின் (CO2) செறிவு முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரிக்கக் காரணம் என்ன? -அஞ்சலி மாரர், அமிதாப் சின்ஹா

 2023 மற்றும் 2024 க்கு இடையில் CO2 செறிவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்தன. புதைபடிவ எரிபொருட்களை எரிப்பது போன்ற மனித நடவடிக்கைகள் மற்றும் CO2 சுழற்சியில் ஏற்படும் இயற்கை மாற்றங்கள் இந்த உயர்வுக்கு காரணமாக அமைந்தன.


உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization (WMO)) வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, காலநிலை மாற்றத்தின் முதன்மை காரணியான கார்பன்-டை-ஆக்சைடின் (CO2) வளிமண்டல செறிவு, 2023 மற்றும் 2024-க்கு இடையில் அதிகபட்ச அளவைவிட அதிகரித்துள்ளது. பூமியின் மேற்பரப்புக்கு அருகில் உலகளவில் சராசரியாக CO2 செறிவு 2024-ல் 423.9 பாகங்களுக்கு ஒரு மில்லியனை எட்டியது. இது 2023-ஐ விட ஒரு மில்லியனுக்கு 3.5 பாகம் (parts per million(ppm)) அதிகமாகும். இந்த காலகட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு 2011-2020 காலகட்டத்தில் ஆண்டு சராசரியைவிட கணிசமாக அதிகமாகும்.


2024-ம் ஆண்டு இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகவும் வெப்பமான ஆண்டாகும். இது, உலக சராசரி வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய காலங்களைவிட 1.55 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. முதல் முறையாக, உலகளாவிய ஆண்டு வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பை தாண்டியது. நீண்டகாலத்திற்கு இந்த வரம்பைக் கடப்பது கடுமையான மற்றும் மீளமுடியாத தாக்கங்களை ஏற்படுத்தும்.


வேகமாக அதிகரித்துவரும் CO2 செறிவுகள், பாரிஸ் ஒப்பந்தத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் சர்வதேச காலநிலை கட்டமைப்பின் தோல்வியை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இது உலகளாவிய உமிழ்வுகளில் அர்த்தமுள்ள குறைப்பை அடைவதில் தோல்வியடைந்துள்ளது.



CO2 செறிவுகளில் அதிகரிப்பு


பல ஆண்டுகளாக CO2 செறிவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறைந்தபட்சம் கடந்த 40 ஆண்டுகளில் எந்த சரிவும் ஏற்படவில்லை. இந்தத் தரவுகளின்படி, 1957-ம் ஆண்டு இந்த வகையான அளவீடுகள் தொடங்கியதிலிருந்து, 2023 மற்றும் 2024-க்கு இடையிலான ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு மிக அதிகமாகும். CO2 வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த உலகளவில் ஒரு பெரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நேரத்தில் இது நிகழ்ந்துள்ளது.


1960-களில் ஆண்டுக்கு சராசரியாக 0.8 ppm ஆக இருந்த CO2 செறிவு அதிகரிப்பு விகிதம் ஏற்கனவே மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 2011 மற்றும் 2020-க்கு இடையில் ஆண்டுக்கு 2.4 ppm ஆக அதிகரித்துள்ளது. ஆனால், ஒரு வருடத்தில் 3.5 ppm அதிகரிப்பு என்பது முன்னெப்போதும் இல்லாத அளவாகும். வளிமண்டலத்தில் தற்போதைய CO2 செறிவு, 423.9 ppm, ஆனது தொழில்துறைக்கு முந்தைய 278.3 ppm அளவை விட இப்போது 152% அதிகமாக பதிவாகியது.

CO2 

CO2 என்பது பொதுவாக, பசுமை இல்ல வாயுக்களில் (GHG) மிகவும் பரவலாக உள்ளது. மேலும் இது, பல்வேறு இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட செயல்முறைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. சுவாசம், கடல் வெளியீடுகள், எரிமலை வெடிப்புகள், காட்டுத்தீ அல்லது கரிமப் பொருட்களின் சிதைவு போன்ற இயற்கை செயல்முறைகளிலிருந்து வெளியேறும் உமிழ்வுகள் கிட்டத்தட்ட அனைத்தும் ஒளிச்சேர்க்கை, கடல் மற்றும் நில உள்வாங்குதல்கள் (land sinks) போன்ற பிற இயற்கை செயல்முறைகளில் மீண்டும் உறிஞ்சப்படுகின்றன. இதனால் சமநிலை பராமரிக்கப்படுகிறது. புதைபடிவ எரிபொருட்களை எரிப்பது போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட செயல்முறைகளிலிருந்து வெளியேறும் CO2 உமிழ்வுகளில் கிட்டத்தட்ட பாதி, இந்த இயற்கை உள்வாங்குதல்களால் உறிஞ்சப்படுகிறது. இது வளிமண்டலத்தில் குவிந்து, வெப்பமயமாதல் விளைவை ஏற்படுத்துகிறது.

வளிமண்டலத்தில் குவிந்துள்ள அனைத்து பசுமை இல்ல வாயுக்களிலும் CO2 90%-க்கும் அதிகமாக இருந்தாலும், வெப்பத்தைப் பிடிக்கும் அதன் திறன் மீத்தேன் (methane (CH4)) மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு (nitrous oxide (N2O)) போன்ற பிற பசுமை இல்ல வாயுக்களைவிட கணிசமாகக் குறைவாகும். மீத்தேன் (CH4) அதன் வெப்பத்தைப் பிடிக்கும் திறனில் CO2-ஐ விட குறைந்தது 25% அதிக சக்தி வாய்ந்தது. அதே நேரத்தில் நைட்ரஸ் ஆக்சைடு (N2O) சுமார் 270 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.


இருப்பினும், CO2 வளிமண்டலத்தில் மிக நீண்டகாலம், சுமார் நூற்றுக்கணக்கான முதல் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரை நீடிக்கும். இதன் விளைவாக, இது புவி வெப்பமடைதலில் ஒட்டுமொத்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தொழில்துறைக்கு முந்தைய காலங்களிலிருந்து ஏற்பட்ட வெப்பமயமாதலில் CO2 அளவு சுமார் 66% பங்களித்ததாகவும், கடந்த பத்தாண்டுகளில் சுமார் 79% பங்களித்ததாகவும் அறியப்படுகிறது.


மீத்தேன் (CH4) ஒப்பீட்டளவில் குறுகிய காலம் நீடிக்கும் மற்றும் வளிமண்டலத்தில் சுமார் 12 முதல் 14 ஆண்டுகள் மட்டுமே இருக்கும். நைட்ரஸ் ஆக்சைடு (N2O) சுமார் 100 முதல் 120 ஆண்டுகளுக்குப் பிறகு சிதைகிறது.


இந்த அதிகரிப்புக்கான காரணங்கள்


2023 மற்றும் 2024-க்கு இடையில் வழக்கத்திற்கு மாறாக 3.5 ppm அதிகரிப்புக்கு, மனிதனால் உருவாக்கப்பட்ட செயல்பாடுகளில் இருந்து தொடர்ந்து கார்பன்-டை-ஆக்சைடு (CO2) வெளியேற்றம் ஏற்பட்டதால் மட்டுமே காரணம் என்று உலக வானிலை அமைப்பு (WMO) அறிக்கை கூறியது. இயற்கையான CO2 சுழற்சியில் உள்ள மாறுபாடுகளும் ஒரு பங்கைக் கொண்டிருந்தன.


குறிப்பாக, 2024-ம் ஆண்டில் பெருங்கடல்கள் மற்றும் நிலச்சரிவுகள் குறைந்த அளவு CO2-ஐ உறிஞ்சியதாகத் தெரிகிறது. இந்த ஆண்டில் விதிவிலக்காக அதிக எண்ணிக்கையிலான காட்டுத் தீ சம்பவங்கள் கூடுதல் கார்பன் உமிழ்வுகளுக்கு வழிவகுத்தன.


கடல்கள் மற்றும் நிலங்களில் உள்ள இயற்கை உள்வாங்குதல்கள் CO2-ஐ உறிஞ்சும் திறன் குறைவதற்கு புவி வெப்பமடைதல் ஒரு காரணமாகும். அதிக வெப்பநிலையில், கரைதிறன் குறைவதால் கடல்கள் குறைவான CO2-ஐ உறிஞ்சுகின்றன. அதேபோல், காடுகள் மற்றும் தாவரங்கள் வறண்டு போகும் கடுமையான வறட்சி, மரங்கள் மற்றும் புல்வெளிகளின் உறிஞ்சுதல் திறனைக் குறைக்கிறது. இந்த செயல்முறைகள் ஒன்றுக்கொன்று ஊட்டமளிப்பதுடன், கார்பன்-டை-ஆக்சைடு (CO2) சமநிலையின்மையை மோசமாக்கி, வளிமண்டலத்தில் அதிக கார்பன்-டை-ஆக்சைடு (CO2) வெளியிடப்படுவதற்கு வழிவகுக்கிறது.


பிற பசுமை இல்ல வாயுக்கள்


2024-ம் ஆண்டில் மீத்தேன் (CH4) மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு (N2O)-ன் செறிவும் அதிகரித்தது. ஆனால், இந்த உயர்வு கடந்த பத்தாண்டுகளில் காணப்பட்ட ஆண்டு சராசரியைவிடக் குறைவாக இருந்தது. இரண்டாவது, அதிகமாக உமிழப்படும் பசுமை இல்ல வாயுக்களான (GHG) மீத்தேன் (CH4)-ன் செறிவுகள் ஒரு பில்லியனுக்கு 8 பாகங்கள் அதிகரித்து வளிமண்டலத்தில் 1,942 ppb அளவை எட்டின. அதேநேரத்தில் நைட்ரஸ் ஆக்சைடு (N2O) செறிவுகள் 1 ppb அதிகரித்து 338 ppb-ஐ எட்டின.


கடந்த பத்தாண்டுகாலத்தில், மீத்தேன் (CH4) செறிவுகள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10.6 ppb அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், நைட்ரஸ் ஆக்சைடு (N2O) செறிவுகள் ஆண்டுக்கு 1.07 ppb என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளன.


தொழில்துறைக்கு முந்தைய காலத்திலிருந்து ஏற்பட்ட வெப்பமயமாதலில் CH4 செறிவுகள் 16% ஆகும். அதே நேரத்தில் நைட்ரஸ் ஆக்சைடு (N2O) செறிவுகள் சுமார் 6% பங்களித்தன. மீதமுள்ளவை பிற வாயுக்கள் மற்றும் செயல்முறைகளிலிருந்து வருகின்றன.



சவால்


வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களின் (GHGs) விரைவான உயர்வை தடுப்பதில் உள்ள சவால்கள் எவ்வளவு அதிகம் என்பதை உலக வானிலை அமைப்பு (WMO) பசுமை இல்ல வாயு புல்லட்டின் புதிய தரவு காட்டுகிறது. மனிதர்கள் சில கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட நடவடிக்கைகள் மட்டுமல்ல, இந்தப் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்துகின்றன. புவி வெப்பமடைதலின் செல்வாக்கின்கீழ் இயற்கை செயல்முறைகளும் நிலைத்தன்மையின்மைக்கு ஆளாகின்றன. இதன் விளைவாக, இந்த வாயுக்கள் அதிக அளவில் குவிகின்றன.


இருப்பினும், மனிதர்கள் ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில்கூட, பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது. உலகளாவிய உமிழ்வுகள் இன்னும் அதிகரித்து வருகின்றன. பாரிஸ் ஒப்பந்தத்தின் பத்து ஆண்டுகள் இந்த அதிகரித்துவரும் போக்கில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்த முடியவில்லை. 2030-ம் ஆண்டிற்கான கார்பன் உமிழ்வு குறைப்பு இலக்குகள் கிட்டத்தட்ட தவறவிடப்பட வாய்ப்புள்ளது. இது, 2024-ம் ஆண்டில் உலக வெப்பநிலை ஏற்கனவே 1.5°C ஐத் தாண்டியுள்ளது.


Original article:


Share: