சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) அடுத்த கட்டம் தொடங்குகையில், ​​அசாம் விவகாரம் குறித்து… -ஃபுசைல் அகமது அய்யூபி

 சிறப்பு தீவிர திருத்தத்திற்காக (Special Intensive Revision (SIR)) அசாமைத் தவிர்ப்பதன் மூலம், இந்திய தேர்தல் ஆணையமானது குடியுரிமை சரிபார்ப்பு ஆணையமாக அதன் அதிகார வரம்பு குறித்த கேள்விகளைத் தவிர்க்கிறது.


பீகார் முன்னோடித் திட்டத்திற்குப் (Bihar pilot project) பிறகு, இந்திய தேர்தல் ஆணையம் தற்போது பல மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) புதிய கட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியானது இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மீது சுமத்தியுள்ள முக்கிய குற்றச்சாட்டு, தேர்தல் ஆணையம் ஒரு "பின்கதவு NRC" (backdoor NRC) நடத்த முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளது. இது அசாமில் தயாரிக்கப்பட்டு மற்ற மாநிலங்களிலும் சில குழுக்களால் கோரப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை (National Register of Citizens (NRC)) குறிக்கிறது.


அக்டோபர் 27, 2025 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், நாடு தழுவிய சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) இரண்டாம் கட்டம் அசாம் மாநிலத்திற்கு நீட்டிக்கப்படாது என்றும் இதில் அடுத்த ஆண்டு தேர்தல்கள் நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியது. 1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் அசாம் மாநிலத்திற்கு தனித்தனி விதிகளை வழங்கினாலும், இந்திய உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் குடியுரிமை சரிபார்ப்பு செயல்முறை "முடிவடைய உள்ளது" என்று தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) கூறினார். இது கூற்றுக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டிய சரியான சூழ்நிலை தேவை மற்றும் இது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பு பற்றிய ஒரு முக்கியமான கேள்வியையும் எழுப்புகிறது.

அதிகார வரம்பு பிரச்சினை


பீகார் சிறப்பு தீவிர திருத்தத்தைப் (SIR) பற்றிய ஒரு முக்கிய விமர்சனம் என்னவென்றால், 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியலில் இல்லாத எந்தவொரு நபருக்கும் வரையறுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் குடியுரிமைக்கான ஆதாரத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் கேட்டது. ஏனெனில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சொந்த வழிகாட்டுதல்கள் குடியுரிமை தொடர்பாக சந்தேகத்திற்குரியது என்று கண்டறியப்பட்ட எவரையும், குடியுரிமைச் சட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரியிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று கோருகின்றன.


இருப்பினும், அசாம் விதிவிலக்கு மற்றும் அதன் நுட்பமான விளக்கத்தில், குடியுரிமையை நிர்ணயிப்பதற்கான அதன் அதிகார வரம்பு குறித்த அதன் மிகப்பெரிய சந்தேகங்களை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) நிவர்த்தி செய்வதைத் தவிர்த்தது. ஏனெனில், அசாமில் அத்தகைய எந்தவொரு நடைமுறையையும் மேற்கொள்வது ஒரு புதிய சட்ட சிக்கலை உருவாக்கியிருக்கும். நீதிமன்றத்தின் தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ் அசாமில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) மற்றும் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் அதிகாரம் பெற்ற அதிகாரியாக இல்லாவிட்டாலும், மாநில குடியிருப்பாளர்களை அவர்களின் குடியுரிமை தொடர்பாக மற்றொரு கடுமையான குடியுரிமை சரிபார்ப்புக்கு உட்படுத்துவது சட்டப்பூர்வமாக சிக்கலானதாக இருந்திருக்கும்.


அசாமில் குடியுரிமை உறுதிப்பாடு (citizenship ascertainment) முடிக்கப்பட உள்ளது என்ற இந்திய தேர்தல் அதிகாரியின் (CEC) விளக்கம் ஏன் ஒரு தெளிவற்றதாக இருக்கிறது. ஏனெனில், அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஏற்கனவே ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் தயாரிக்கப்பட்டது. ஆகஸ்ட் 31, 2019 அன்று, அஸ்ஸாமின் தேசிய குடிமக்கள் பதிவேடு மாநில ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் “ஆகஸ்ட் 31, 2019 அன்று இறுதி தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) வெளியீடு” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதன்மூலம், அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் (NRC) புதுப்பிக்கும் செயல்முறை முடிவடைந்ததாக அறிவித்தது. இது அசாம் மற்றும் இந்தியாவிற்கு ஒரு திருப்புமுனை தருணமாக அமைந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இவ்வளவு பெரிய அளவிலான பயிற்சியை முடித்த ஒரே மாநிலமாக அசாம் திகழ்கிறது.


மாநில ஒருங்கிணைப்பாளரின் அறிக்கையின்படி, 68.38 லட்சம் விண்ணப்பங்கள் மூலம் மொத்தம் 3.30 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். பல ஆண்டுகளாக பங்குதாரர்களுடன் கலந்துரையாடி ஆலோசனை நடத்திய பிறகு, குடியுரிமை ஆவணங்களை ஆய்வு செய்து சரிபார்க்க ஒரு விரிவான சட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 52,000 மாநில அதிகாரிகளின் ஈடுபாட்டுடனும், நீதிமன்றத்தின் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த மிகப்பெரிய பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த செயல்முறை முடிவடைந்து 3,11,21,004 பேர் இறுதி தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) சேர்க்க தகுதியுடையவர்களாகக் கண்டறியப்பட்டனர். இருப்பினும், 19,06,657 பேர் விலக்கப்பட்டனர். இந்த மிகப்பெரிய முழுப்பயிற்சி ₹1,600 கோடிக்கும் அதிகமான செலவில் மேற்கொள்ளப்பட்டது.


அரசியலமைப்பு ரீதியாகவும், சட்டரீதியாகவும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) நிலைத்திருக்க அனுமதிக்கப்பட்டால், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஒரு இணையான குடியுரிமை தீர்ப்பாயம் போல செயல்படாமல், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதில் அதன் முதன்மைப் பங்கில் கவனம் செலுத்த வேண்டும். உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் முழு அளவிலான குடியுரிமை சரிபார்ப்பு நடத்தப்பட்ட ஒரே மாநிலம் என்ற நிலைமையை அசாம் ஏற்கனவே சுமந்து வருகிறது. மேலும், இந்த மாநிலத்தின் குடியிருப்பாளர்கள் மற்றொரு சுற்றானது நிச்சயமற்றத் தன்மை மற்றும் அதிகாரத்துவ ஆய்வுகளிலிருந்து விடுபட தகுதியுடையவர்கள் ஆவர். இதைத் தடுக்கத் தவறினால், மாநிலத்தின் நுட்பமான சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து, இந்திய அமைப்புகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தலாம்.


பிரிவு 6A, அசாம் மாநிலத்திற்கு ஒரு தனித்துவமான விதி


அசாமில் குடியுரிமை பற்றிய விவாதத்திற்கு, தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஒரு முக்கியப் பிரச்சினையாக இருந்தது. குடியுரிமைச் சட்டம்-1955-ன் பிரிவு 6A ஆனது 1985-ல் அசாம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விதி, அசாமுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஒரு தனித்துவமான குடியுரிமை விதியை உருவாக்கியது. இந்தியாவின் பிற பகுதிகளில் பின்பற்றப்படும் விதிகளைப் போலல்லாமல், வெளிநாட்டினரை அடையாளம் கண்டு நாடு கடத்துவதற்கு வரம்பு தேதிகளையும் நிர்ணயித்தது.


அக்டோபர் 2024-ல், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, 1955 குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6A-ன் படி, பிரிவு 6A-ன் அரசியலமைப்பு செல்லுபடியை உறுதிசெய்தது. அசாமிற்கான ஒரு சிறப்பு நடவடிக்கையாக கட்டமைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது மற்றும் சகோதரத்துவத்தின் அரசியலமைப்பு மதிப்புடன் அதன் இணக்கத்தை வலியுறுத்தியது. இந்தத் தீர்ப்பு, அசாமின் குடியுரிமைப் பிரச்சினை மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபட்டது என்பதை இந்தத் தீர்ப்பு வலியுறுத்தியது. மேலும், அதன் வரலாற்று, அரசியல் மற்றும் சட்ட தனித்துவம் பாதுகாக்கப்பட்டு மதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலுப்படுத்தியது.


தொலைநோக்கு பார்வையில்


மற்ற மாநிலங்களைப் போலல்லாமல், கடந்த ஐம்பது ஆண்டுகளாக அஸ்ஸாம் குடியுரிமை மற்றும் இடம்பெயர்வு தொடர்பான தனித்துவமான சட்ட சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. அசாமில் குடியுரிமை குறித்த பல நீதிமன்ற தீர்ப்புகள் இந்த தனித்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. எனவே, குடியுரிமை விசாரணையைப் போலவே அசாமில் ஒரு சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நடத்த இந்திய தேர்தல் ஆணையம் (ECI) முயற்சித்தால், அது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். ஏனென்றால், அசாமில் சட்ட நிலைமை தனித்துவமானது மற்றும் சிக்கலானது.


தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) குறித்து அசாம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்தால், அந்தத் தரவைப் பயன்படுத்துவதிலிருந்தும், மற்ற மாநிலங்களைவிட அசாமில் நடைமுறையை நியாயமாக விரைவாக முடிப்பதிலிருந்தும் இந்திய தேர்தல் ஆணையத்தை (ECI) தடுப்பது எது என்றும் ஒருவர் வாதிடலாம்.


தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC), அசாம் தேர்தல் காலக்கெடுவை சந்திக்கத் தயாராக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் பரந்த மற்றும் உள்ளடக்கிய ஆலோசனைகளுக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டது. எனவே, ஆகஸ்ட் 31, 2019 அன்று தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (NRC) இறுதிப் பட்டியல், உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வால் ஒவ்வொரு கட்டத்திலும் கண்காணிக்கப்பட்ட ஒரு பரந்த ஆலோசனை செயல்முறை மூலம் நிறைவடைந்தது. அந்த நடைமுறையையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) சேர்க்கப்பட்ட மக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்கப்படுவதற்கான வாய்ப்பையும் இந்திய தேர்தல் ஆணையம் புறக்கணிப்பது நிச்சயமாக கடினமாக இருக்கும். இது இந்திய தேர்தல் ஆணையத்தை கடினமான சூழ்நிலையில் தள்ளக்கூடும்.


ஃபுசைல் அகமது அய்யூபி இந்திய உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர்-ஆன்-ரெக்கார்டு ஆவார்.



Original article:

Share:

உணவில் நீதி : புதிய EAT-Lancet ஆணைய அறிக்கை பற்றி . . .

 

EAT-Lancet :  EAT -Lancet குழு என்பது EAT-Lancet அறிக்கையை (2019) உருவாக்கிய 37 முன்னணி உலகளாவிய விஞ்ஞானிகள் குழுவைக் குறிக்கிறது. இது "புவி சுகாதார உணவுமுறை" மனிதர்களுக்கு ஊட்டமளிக்கும் மற்றும் புவியை ஆதரிக்கும் ஆரோக்கியமான, நிலையான உணவு முறைக்கான அறிவியல், சான்றுகள் அடிப்படையிலான கட்டமைப்பை வரையறுக்கிறது


உணவு முறைகளில் (food systems) நீதி என்பது ஆரோக்கியமான, மலிவு விலையில் உணவுகள் கிடைப்பதை உறுதி செய்வதாகும்.


புதிய 'ஆரோக்கியமான, நிலையான மற்றும் நியாயமான உணவு அமைப்புகள் குறித்த EAT-Lancet ஆணையம்' அறிக்கை, இன்றைய உலகளாவிய நெருக்கடிகளில் உணவு அமைப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதைக் காட்டுகிறது. மீறப்பட்ட ஆறு புவி எல்லைகளில் ஐந்துக்கு உணவு மட்டுமே காரணம் என்பதை இது வெளிப்படுத்துகிறது. இது உலகளவில் சுமார் 30% பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கும் பங்களிக்கிறது. உணவு அமைப்புகள் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று ஏற்படும் காலநிலை, பல்லுயிர், நீர் மற்றும் மாசுபாடு நெருக்கடிகளின் முக்கிய கட்டத்தில் உள்ளன என்பதைக் காட்டுகிறது. விலங்குகளின் உணவுகள் பெரும்பாலான விவசாய உமிழ்வுகளுக்குக் காரணமாகின்றன. அதே நேரத்தில் தானியங்கள் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் நீர் பயன்பாட்டில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதை சரிசெய்ய, பல நடவடிக்கைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உணவு இழப்பைக் குறைத்தல், உற்பத்தித்திறனை நிலையான முறையில் மேம்படுத்துதல் மற்றும் உணவுப் பழக்கங்களை மாற்றுதல் ஆகியவை இதில் அடங்கும். உயிர் புவி வேதியியல் ஓட்டங்கள் குறித்த நிலைமை தீவிரமானது. தற்போதைய விவசாய நடைமுறைகள் பாதுகாப்பான உலகளாவிய வரம்பைவிட இரண்டு மடங்கு அதிகமான நைட்ரஜன் உபரியை உருவாக்குகின்றன. வலுவான கொள்கையால் சரிசெய்யப்படாத செயல்திறன் ஆதாயங்கள் அதிக உற்பத்திக்கு வழிவகுக்கும். மேலும், இது சுற்றுச்சூழல் நன்மைகளை ரத்து செய்கிறது. குழுவானது ஒரு யதார்த்தமான அணுகுமுறையை எடுக்கிறது. உணவுமுறைகளை மாற்றுவது முதல் உமிழ்வைக் குறைப்பது வரை பெரிய முயற்சிகள் எடுத்தாலும், உலகின் உணவு முறைகள் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காலநிலை மற்றும் நன்னீர் ஆகியவற்றிற்கு பாதுகாப்பானதாக மாறும் என்பதை அது ஒப்புக்கொள்கிறது. இருப்பினும், ஊட்டச்சத்து பாதுகாப்பில் சிக்கல்கள் இன்னும் தொடரும். இந்தக் குழுவின் அறிக்கையானது ஒரு சந்தேகத்திற்குரிய அனுமானத்தை உருவாக்குகிறது. 30 ஆண்டுகளில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 127% வளரும் என்று அது எதிர்பார்க்கிறது. அதற்குப் பதிலாக, மெதுவான வளர்ச்சி மற்றும் கடுமையான காலநிலை தாக்கங்களுக்கு கொள்கை தயாராக வேண்டும்.


அறிக்கையின்படி, இந்தியா அதிக தானிய உணவு முறையைப் பின்பற்றுகிறது. அதேநேரத்தில், 2050-ம் ஆண்டுக்குள் அளவுகோல்களை பூர்த்தி செய்வதற்கு மக்களின் உணவுமுறைகளில் அதிக காய்கறிகள், பழங்கள், விதை வகைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை தேவை. இந்த மாற்றம் சராசரி நுகர்வோர் விலைகளை அதிகரிக்கக்கூடும். இந்த உணவுகளில் பலவற்றை இறக்குமதி செய்யும் பகுதிகளில் மலிவு விலை ஏற்கனவே குறைவாக உள்ளது. இதனால் நுகர்வோர் விலை அதிர்ச்சிகளுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே, நீதி என்பது விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அதே வேளையில் ஆரோக்கியமான, மிகவும் மாறுபட்ட உணவு முறைகளை நோக்கி நகர்வதைக் குறிக்கிறது. ஆனால், உணவு முறைகளை மாற்றுவது எப்போதும் விரும்பத்தக்கதாக இருக்காது. உணவு விருப்பத்தேர்வுகள் மதம், சாதி மற்றும் இடவசதி மற்றும் மதிய உணவு மற்றும் கொள்முதல் விதிகள் போன்ற தேவைகளால் வடிவமைக்கப்படுகின்றன. மாறும் உணவுமுறைகளில் மட்டும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அறிக்கை பிற உத்திகளை பரிந்துரைக்கிறது. புதிய தரநிலைகள் தீங்கு விளைவிக்கும் உள்ளீடுகளைக் குறைக்கலாம். நிதி கொள்கைகள் குறைந்தபட்ச பதப்படுத்தப்பட்ட உணவுகளை மலிவானதாக மாற்றலாம். மேலும், கொள்முதல் பிராந்திய ரீதியாக நன்கு அறியப்பட்ட, மிகவும் மலிவு விலையில் உணவுகளை ஊக்குவிக்க முடியும். அப்படியிருந்தும், நீர் பற்றாக்குறை, மண் சரிவு மற்றும் குளிர்ப்பதன சேமிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதலில் புதைபடிவ எரிபொருட்களின் அதிகப் பயன்பாடு ஆகியவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். நிலத்தடி நீர் உறிஞ்சுதலை மறைமுகமாக ஊக்குவிக்கும், திறந்த-முடிவு (open-ended) ஊக்கத்தொகைகளிலிருந்து இந்தியா விலகிச் செல்ல வேண்டும். இறுதியாக, சந்தையின் செறிவு, தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் தீங்குகளைத் தடுப்பதற்கான பலவீனமான ஊக்கத்தொகைகள் மற்றும் தேவையற்ற நிறுவன செல்வாக்கு மாற்றத்தைத் தடுக்கக்கூடிய காரணிகளாக இந்தக் குழு அடையாளம் காட்டுகிறது. மறுபுறம், உண்மையான நீதிக்கு, தொழிலாளர்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களுக்கு வலுவான கூட்டுப் பேரம் பேசுதல் தேவை (collective bargaining) என்று அது கூறுகிறது. ஒழுங்குமுறை செயல்முறைகளில் நுகர்வோர் குரல்களும் இதற்குத் தேவை. தற்போது, ​​இந்தப் பாதுகாப்புகள் குறைவாகவே உள்ளன. மேலும் அவை உண்மையானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றப்பட வேண்டும்.



Original article:

Share:

இரண்டாவது குழந்தைக்கு வாடகைத் தாய்மை பிரச்சனை குறித்து . . .

 வாடகைத் தாய்மை சட்டத்தை (surrogacy law) விரிவாகப் படிப்பது அதிக தம்பதிகளுக்கு உதவும்.


இரண்டாவது குழந்தைக்கு மாற்றுத்தாய்மை முறையைப் பயன்படுத்துவதன் சட்டப்பூர்வத்தன்மை குறித்த உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய கருத்துகள், ஒரு சட்டம் என்பது எதை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டது எனும் அடிப்படைப் பிரச்சினையை எழுப்பியுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில், இரண்டாம் நிலை மலட்டுத்தன்மையை எதிர்கொள்ளும் ஒரு தம்பதி, வாடகைத்தாய்மை முறையைப் பயன்படுத்த அனுமதி கோரினர், ஏனெனில் வாடகைத்தாய்மை சட்டத்தின்படி இரண்டாவது குழந்தைக்கு வாடகைத்தாய்மை முறையை நாட முடியாது. அவர்களது வழக்கறிஞர், அரசு குடிமக்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இனப்பெருக்கத் தேர்வுகளில் தலையிட முடியாது என்று வாதிட்டார். ஒரு தம்பதியினர் முன்பு இயற்கையாகவே குழந்தை பெற்றிருந்தாலும், கருத்தரிக்கவோ அல்லது கர்ப்பத்தை காலவரையின்றி சுமக்கவோ முடியாதபோது இரண்டாம் நிலை மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. இதற்கான காரணங்கள் முதன்மை மலட்டுத்தன்மையைப் போலவே இருக்கின்றன. இவற்றில் பல நீர்க்கட்டி கருப்பை நோய்க்குறி (Polycystic Ovary Syndrome (PCOS)), கருப்பை அகப்படல புறவளர்க் கட்டி (endometriosis) மற்றும் சில வாழ்க்கை முறை காரணிகள் அடங்கும். வாடகைத்தாய் மூலம் இரண்டாவது குழந்தையைப் பெறுவதற்கு விலக்கு அளிக்க மனுதாரர்கள் கோரினர். உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் (Assisted Reproductive Technology (ART)) மற்றும் வாடகைத்தாய்மை சட்டங்கள் (Surrogacy Acts) இரண்டிலும் 'மலட்டுத்தன்மை' (infertility) என்பதன் வரையறை முதன்மை மலட்டுத்தன்மைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை என்று அவர்கள் வாதிட்டனர். இந்தியாவின் வாடகைத்தாய்மை (ஒழுங்குமுறை) சட்டம் (India’s Surrogacy (Regulation) Act) 2021-ன் பிரிவு 4(iii)(C)(II)-ன் கீழ், ஒரு தம்பதியினர் வாடகைத் தாய்மைக்கு தகுதியுடையவர்களாக இருக்க வேண்டுமானால், அவர்களுக்கு எந்த உயிருள்ள குழந்தையும் (உயிரியல், தத்தெடுக்கப்பட்ட, அல்லது கருவுறு மாற்று மூலம்) இருக்கக் கூடாது. ஏற்கனவே உள்ள குழந்தை மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது உயிருக்கு ஆபத்தான முறையில் சிக்கல் இருந்தால் மட்டுமே விதிவிலக்குகள் அளிக்கப்படுகின்றன. வாடகைத்தாய் முறையை அடிப்படை உரிமையாகக் கருத முடியாது. மேலும், அது மற்றொரு பெண்ணின் உடலைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது என்பதையும் சுட்டிக்காட்டியது. இந்த விதியின் கீழ் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு "நியாயமானது" (reasonable) என்று நீதிபதி வாய்மொழியாகக் குறிப்பிட்டாலும், இரண்டாம் நிலை மலட்டுத்தன்மையை எதிர்கொள்ளும் திருமணமான தம்பதிகள் இரண்டாவது குழந்தையைப் பெற வாடகைத்தாய் முறையைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டம் குடிமக்களின் இனப்பெருக்கத் தேர்வுகளை கட்டுப்படுத்துவதற்குச் சமமா என்பதை ஆராய நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.


வாடகைத்தாய் முறைக்கான வயது வரம்பை நீதிமன்றம் சமீபத்தில் தளர்த்தியது. இந்த மாற்றம் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு உறைந்த கருக்களை (frozen embryos) வைத்திருந்த தம்பதிகள் அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. விவாதத்தின் போது விவாதிக்கப்பட்ட இந்தச் சட்டத்தின்படி, வணிக ரீதியான வாடகைத்தாய் முறை அல்லது பாதிக்கப்படக்கூடிய பெண்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதே சட்டத்தின் அறிவிக்கப்பட்ட நோக்கமாக இருந்தால், காளான்கள் போல பெருகிவரும் கருவுறுதல் மையங்களை (ART சட்டத்துடன் இணைந்து) ஒழுங்குபடுத்துவதோடு, முதன்மை அல்லது இரண்டாம் நிலை மலட்டுத்தன்மையின் அடிப்படையில் தம்பதிகளைக் கட்டுப்படுத்துவது தேவையற்றதாகவும், மிகைப்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. தற்போது, இந்தியாவில் ஒரு நபர் எத்தனை குழந்தைகளைப் பெறலாம் என்பதை கட்டுப்படுத்தும் எந்தச் சட்டமும் இல்லை, இருப்பினும் பல மாநிலங்கள் அரசு சலுகைகள், வேலைகள் அல்லது அரசியல் பதவிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இரு குழந்தைகள் கொள்கையை ஊக்குவித்துள்ளன. சட்டத்தின் மிகவும் விரிவான விளக்கம், தேவைப்படும் அனைவருக்கும் தொழில்நுட்பத்தின் நன்மைகளை அணுகுவதை எளிதாக்குவது, குழந்தை பெற விரும்பும் பெற்றோருக்கு உதவுவது மற்றும் வணிக ரீதியிலான வாடகைத் தாய்மை முறையைத் தடுப்பது ஆகிய இரண்டு தேவைகளைப் பூர்த்தி செய்யும்.



Original article:

Share:

பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுத்தல். -நிஜாரா தேகா

 பெண்கள் குரல் கொடுக்காவிட்டால் சட்டம் அதிகாரமற்றதாகவே இருக்கும்.


அரசியலமைப்புச் சட்டம் சமத்துவம், கண்ணியம் மற்றும் வன்முறையிலிருந்து பாதுகாப்பை உறுதியளிக்கிறது. மேலும், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம்-2005 (Protection of Women from Domestic Violence Act) ஒரு சட்டக் கட்டமைப்பை வழங்குகிறது. இருப்பினும், பெண்கள் தங்கள் துன்பங்களுக்குப் குரல் கொடுக்காதபோது, ​​இந்த உரிமைகளின் அர்த்தத்தை இழக்கின்றனர். பெண்கள் வீடுகளிலும், பணியிடங்களிலும், பொது இடங்களிலும் அச்சமின்றிப் பேசும் வரை, சட்டங்களும் கொள்கைகளும் தார்மீகப் பெருமை நிறைந்த வெற்று வார்த்தைகளாகவே இருக்கும்.


பல இந்திய வீடுகளில், மௌனமானது வார்த்தைகளைவிட சத்தமாகப் பேசுகிறது. அமைதியின் வெளிப்பாடு மௌனம் அல்ல, மாறாக வலிக்குப் பிறகு வரும் மௌனத்தின் நிலையாகும். கீழ்ப்படிதல் என்பது நல்லொழுக்கம் என்றும், சகிப்புத்தன்மை என்பது வலிமை என்றும், கணவரின் கோபம் அக்கறையின் வெளிப்பாடு என்றும் கற்பிக்கப்பட்ட பெண்களின் மௌனமாகப் பார்க்கப்படுகிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (National Family Health Survey (NFHS-5)) இந்த மனநிலை எவ்வளவு ஆழமாக செல்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்தியப் பெண்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (45 சதவீதம்) மற்றும் ஆண்கள் (44 சதவீதம்) ஒரு கணவன் தனது மனைவியை சில சூழ்நிலைகளில் அடிப்பது நியாயமானது என்று நம்புகிறார்கள். மனைவி வாதிட்டால், தனது பொறுப்புகளை புறக்கணித்தால் அல்லது பெரியவர்களுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தால் அது நியாயமானது என்று அவர்கள் நம்புகிறார்கள்.


இவை வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல, கலாச்சாரம் மக்களின் சரி மற்றும் தவறு உணர்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காட்டுகிறது. வன்முறை பொதுவானதாக மாறும்போது, ​​சட்டம் அதன் அதிகாரத்தை இழக்கிறது. பல இந்திய வீடுகளில், வன்முறை மிகவும் பொதுவானது, பெண்கள் பெரும்பாலும் அதை அத்துமீறல் என்று அங்கீகரிக்கவில்லை. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS), என்பது ஒரு விரிவான மற்றும் கடுமையான கணக்கெடுப்பாகும். இது, பெண்கள் எதை வெளிப்படுத்த உணர்கிறார்கள் என்பதை அளவிடுகிறது. அவர்கள் அமைதியாக எதைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை அல்ல.


கலாச்சாரம் சட்டத்தை மீறும் போது


2023-24-ஆம் ஆண்டு அஸ்ஸாம் முழுவதும் எனது களப்பணியின் போது, வன்முறையை ஒரு மீறல் அல்ல, வழக்கமானது என்று பேசிய பல பெண்களை நான் சந்தித்தேன். வற்புறுத்தல் அல்லது கட்டுப்பாடு பற்றி கேட்டபோது, ​​சிலர் பதட்டமான புன்னகையுடன், அதை "திருமண வாழ்க்கையின் ஒரு பகுதி" என்று கூறினர். அதை வன்முறை என்று பெயரிடுவது, உணர்ச்சி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஆபத்தானது என்று அவர்கள் கூறினர். "அவர் கோபமாக இருக்கும்போது மட்டுமே அடிப்பார்," என்று ஒரு பெண் என்னிடம் கூறினார், அது ஒரு வகையான கட்டுப்பாடு போல என்று நினைக்கிறேன்.


உலகம் முழுவதும், பெண்கள் பெரும்பாலும் துஷ்பிரயோகத்தை ஏற்றுக்கொள்வதால் அல்ல, மாறாக அவமானம், நிதி நெருக்கடி அல்லது சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவார்கள் என்ற பயத்தில் அமைதியாக இருக்கிறார்கள். இந்த மௌனம் உயிர்வாழ்வதற்கான ஒரு வழியாகிறது. அரசியலமைப்பு சமத்துவம், கண்ணியம் மற்றும் வன்முறையிலிருந்து பாதுகாப்பை உறுதியளிக்கிறது. மேலும், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம்-2005 (Protection of Women from Domestic Violence Act) ஒரு சட்டக் கட்டமைப்பை வழங்குகிறது. இருப்பினும், கலாச்சாரம் பெரும்பாலும் நடைமுறையில் இந்த உரிமைகளை பலவீனப்படுத்துகிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (NFHS) தரவுகளின்படி, 18-49 வயதுடைய திருமணமான பெண்களில் 32 சதவீதம் பேர் தங்கள் கணவர்களிடமிருந்து உடல், பாலியல் அல்லது உணர்ச்சிரீதியான வன்முறையை எதிர்கொண்டுள்ளனர். 14 சதவீதம் பேர் மட்டுமே உதவியை நாடியுள்ளனர். ஆணாதிக்கம் நேரடிக் கட்டுப்பாடு மூலம் மட்டுமல்ல, அன்றாட பழக்கவழக்கங்கள் மூலம் தொடர்கிறது. இதில் நகைச்சுவைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் மௌனம் மூலம் நகர்கிறது.


இந்தியாவில், பொதுவாக மற்றவர்கள்-குறிப்பாக பிரபலமானவர்கள் பேசத் தொடங்கிய பின்னரே பெண்கள் பேசத் தொடங்குகிறார்கள். ஒரு பொது நபர் வன்முறையைப் பற்றிப் பேசும்போது, ​​ஆயிரக்கணக்கான சாதாரண பெண்கள் நீண்டகாலமாக உணர்ந்ததற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறார்கள். சக்திவாய்ந்த ஒருவர் முதலில் பேசுவதற்காக பெண்கள் ஏன் காத்திருக்க வேண்டும்? வலுவான மாற்றம், ஒவ்வொரு பெண்ணும், நகர அலுவலகத்திலோ அல்லது கிராமப்புற முற்றத்திலோ, தயக்கமின்றி, 'இது ஏற்றுக்கொள்ள முடியாதது' (This is not acceptable) என்று சொல்ல அனுமதிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்.


கல்வியும் பொருளாதார சுதந்திரமும் அவசியம், ஆனால் அவை போதுமானவை அல்ல. படித்த பெண்கள் இன்னும் மௌனமாக இருக்கலாம், பொருளாதார ரீதியாக சுதந்திரமான பெண்கள் இன்னும் கட்டுப்படுத்தப்படலாம். உண்மையான மாற்றம் பொருள் சார்ந்த அதிகாரமயமாக்கலைத் (material empowerment) தாண்டி சமூக தைரியத்தை வளர்க்க வேண்டும் — பெண்களின் சகிப்புத்தன்மையை போற்றும் மற்றும் எதிர்ப்பை கிளர்ச்சியாக கண்டிக்கும் விதிமுறைகளை சவால் செய்யும் தைரியம்.


இந்த தைரியத்தை குடும்பத்திலிருந்து வெளிப்புறமாக வளர்க்க வேண்டும். வீடுகளில் ஆண் குழந்தைகளுக்கு மரியாதை என்பது பலவீனம் அல்ல, வலிமை என்று கற்பிக்க வேண்டும். பள்ளிகளில் பச்சாதாபம், சம்மதம் மற்றும் சமத்துவத்தை குடிமக்கள் கல்வியின் ஒரு பகுதியாக சேர்க்க வேண்டும். ஊடகங்கள், எதிர்க்கும் பெண்களை இகழ்ந்து சித்தரிக்காமல், மரியாதை அளிக்கக்கூடிய ஆண்களை ஏளனம் செய்யாமல் காட்ட வேண்டும். நிறுவனங்கள் பெண்களின் சாட்சியங்களை சந்தேகத்துடன் அல்ல, ஒற்றுமையுடன் நடத்த வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, பெண்கள் பேசும்போது சமூகம் கேட்கக் கற்றுக்கொள்ள வேண்டும் — அவர்களின் நோக்கங்களை கேள்வி கேட்காமல், அவர்களின் வலியை சந்தேகிக்காமல், அவர்களின் வார்த்தைகளை அதிகப்படுத்தல் என்று நிராகரிக்காமல். உண்மையான சுதந்திரம் சட்டத்தின் எழுத்தில் இருந்து அல்ல, மௌனத்தை எதிர்க்கும் பெண்களின் குரலில் இருந்து பாயும்.




எழுத்தாளர் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் (NCAER) உறுப்பினர்.



Original article:

Share:

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் எவ்வாறு நுகர்வு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன? -மீரா மல்ஹான்

 வருமானக் குழுக்களிடையே செலவினங்களை ஊக்குவிப்பதன் மூலம் ஜிஎஸ்டி-2.0 பரந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதன் வெற்றி, அதிகரித்த நுகர்வு அல்லது சேமிப்பில், கூடுதல் வருமானத்தை நுகர்வோர் எவ்வாறு பயன்படுத்தத் தேர்வு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமைகிறது.


செப்டம்பர் 22-ம் தேதி அமலுக்கு வந்த அடுத்த தலைமுறை பொருட்கள் மற்றும் சேவை வரி (Next-Gen Goods and Services Tax (GST)) சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, மின்னணு சாதனங்கள் முதல் நுகர்வோர் பொருட்கள்வரை நுகர்வு தேவையில் கடுமையான உயர்வு ஏற்பட்டது. மேலும், வங்கிக் கடனில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டது.


செப்டம்பர்-அக்டோபர் 2025 காலகட்டத்தில், வங்கி முன்பணங்கள் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 100 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன. இந்த உயர்வுக்கு காரணம் குறைந்த ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் பண்டிகை காலத்தால் செயல்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.


ஜிஎஸ்டி திறம்பட செயல்பட வேண்டுமென்றால், அது முதலில் இருந்ததைவிட குறைவான வரி அடுக்குகளைக் (tax slabs) கொண்டிருக்க வேண்டும் என்று வாதிட்ட வணிகங்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களின் நீண்டகால கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக ஜிஎஸ்டி-2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்று, பொதுமக்களின் கைகளில் அதிக பணத்தை வைத்து தேவையைத் தூண்டுவதாகும்.


ஆனால் ஜிஎஸ்டி பொதுவாக எவ்வாறு செயல்படுகிறது? அதன் முக்கிய பகுதிகள் யாவை? இந்தியாவின் வரி முறையில் இது ஏன் ஒரு பெரிய மாற்றமாகக் கருதப்பட்டது? இதைப் புரிந்து கொள்ள, ஜிஎஸ்டி-இன் அடிப்படைகளைப் பார்ப்போம்.


சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்றால் என்ன?


ஜிஎஸ்டி என்பது ஒரு மறைமுக வரி ஆகும். அதே சமயம், இதற்கு நேர்மாறாக, வருமான வரி என்பது நேரடி வரியாகும். இது முதன்முதலில் 2017-ம் ஆண்டில் 2016-ம் ஆண்டின் 101-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மீது முன்னர் விதிக்கப்பட்ட பல மத்திய மற்றும் மாநில வரிகளை GST மாற்றியது. GST-ன் கீழ் பின்வரும் வரிகள் மாற்றப்பட்டன:


ஜிஎஸ்டியால் மாற்றப்பட்ட மத்திய கலால் வரிகள் (Central Excise Taxe) : 


1. மருத்துவ மற்றும் கழிப்பறை தயாரிப்புச் சட்டத்தின் கீழ் கலால் வரிகள் நீக்கப்பட்டன.


2. சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் மற்றும் ஜவுளிப் பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரிகள் மாற்றப்பட்டன.


3. கூடுதல் சுங்க வரிகள், எதிர் வரி (Countervailing Duty (CVD)) மற்றும் சிறப்பு கூடுதல் வரி (Special Additional Duty (SAD)) உள்ளிட்டவை நீக்கப்பட்டன.


4. சேவை வரி ஜிஎஸ்டி-ஆல் மாற்றப்பட்டது.


5. மத்திய விற்பனை வரியும் (Central Sales Tax (CST)) மாற்றப்பட்டது.


6. பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகம் தொடர்பான அனைத்து கூடுதல் கட்டணங்கள் மற்றும் கூடுதல் வரிகள் நீக்கப்பட்டன.


ஜிஎஸ்டியால் மாற்றப்பட்ட மாநில வரிகள்


1. மாநில மதிப்பு கூட்டப்பட்ட வரி (Value Added Tax (VAT)) மாற்றப்பட்டது.


2. ஆடம்பர வரி நீக்கப்பட்டது.


3. உள்ளூர் சுங்க வரி (Octroi) உள்ளிட்ட நுழைவு வரி மாற்றப்பட்டது.


4. விளம்பரங்கள் மீதான வரிகள் நீக்கப்பட்டன.


5. சில பொருட்களின் மீதான கொள்முதல் வரி மாற்றப்பட்டது.


6. பொழுதுபோக்கு வரியும் நீக்கப்பட்டது.


இருப்பினும், மேல் வரிகள் (cesses) மற்றும் கூடுதல் வரிகள் (surcharges) போன்ற சில வரிகள் இன்னும் ஜிஎஸ்டியின் கட்டமைப்பின்கீழ் சேர்க்கப்படவில்லை. இவை குறிப்பிட்ட நிதி அல்லது கொள்கை நோக்கங்களுக்காக பொருட்களில் சேர்க்கப்படும் கூடுதல் வரிகள் ஆகும். குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க ஒரு மேல் வரி வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, நிலநடுக்கங்கள் அல்லது வெள்ளம் போன்ற போது பேரிடர் நிவாரணத்திற்காக இதைப் பயன்படுத்தலாம். மேலும், கல்வி வரி (education cess) அல்லது தூய்மை இந்தியா வரி (Swachh Bharat cess) போன்ற திட்டங்களையும் இது ஆதரிக்கலாம். மேல் வரிகள் மற்றும் கூடுதல் வரிகள் மத்திய அல்லது மாநிலங்களால் விதிக்கப்படும் வரிகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.



மறைமுக வரியின் ஒரு வடிவமான மற்றும் குறிப்பிட்ட நோக்கங்களுக்காகவும் கால அளவிற்காகவும் விதிக்கப்படும் மேல் வரிகளுடன் ஒப்பிடும்போது, ​​கூடுதல் வரிகள் நேரடி வரியின் ஒரு வடிவமாகும். மேலும், அவை பொதுவாக அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு விதிக்கப்படுகின்றன. இரண்டிற்கும் இடையிலான முக்கிய வேறுபாடு அவற்றின் பயன்பாட்டில் உள்ளது. ஒரு மேல் வரியிலிருந்து பெறப்பட்ட வருவாய் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக, அதேசமயம் கூடுதல் வரியிலிருந்து கிடைக்கும் வருவாய் அரசாங்கம் அவசியமாகக் கருதும் எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தப்படலாம்.


ஜிஎஸ்டி போன்ற ஒருங்கிணைந்த வரி முறைக்கான (unified tax system) தேவை எவ்வாறு தோன்றியது?


ஆனால், ஜிஎஸ்டி போன்ற ஒருங்கிணைந்த மறைமுக வரி முறையின் தேவை ஏன் ஏற்பட்டது? இந்தியாவில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டும் தங்கள் செலவினங்களுக்கு நிதியளிக்க வரிகளிலிருந்து கிடைக்கும் வருவாயைப் பெருமளவில் சார்ந்துள்ளன. இந்தச் சார்பு மறைமுக வரிகளைச் சார்ந்தே உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் நேரடி வரி வசூல் அதிகரித்துள்ளபோதிலும், மறைமுக வரிகள் இன்னும் அரசாங்கத்தின் மொத்த வருவாயில் பெரும் பங்கை வகிக்கின்றன.


2023 நிதியாண்டின் பட்ஜெட் மதிப்பீடுகளில், நேரடி வரி வசூல் 16.42 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கிடப்பட்டது. அதே நேரத்தில், மறைமுக வரி வசூல் 29.08 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது (RBI தரவு). GST 1.0 செயல்படுத்தப்பட்ட பிறகு, மறைமுக வரிகளை ஒரே கட்டமைப்பில் நெறிப்படுத்தி ஒருங்கிணைத்ததால் இது முதன்மையானதாக அடையப்பட்டது.


ஜிஎஸ்டிக்கு முன்பு, இந்தியாவின் வரி முறையானது பல பிரிவாக இருந்தது. இது ஒரு 'அடுக்கு விளைவாக' அதாவது மக்கள், வரி மீது வரி செலுத்தியிருந்தனர். இது நியாயமான மற்றும் திறமையான மறைமுக வரி முறையின் யோசனைக்கு எதிரானது. இதன் காரணமாக, குறைந்த வருமானக் குழுக்கள் அதிகம் பாதிக்கப்பட்டன, மேலும் பல மறைமுக வரிகள் பின்னடைவைச் சந்தித்தன. இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய, நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் கீழ் அரசாங்கம் 2017-ல் ஜிஎஸ்டி 1.0 ஐ அறிமுகப்படுத்தியது.


ஜிஎஸ்டி 1.0 : முக்கிய நன்மைகள் மற்றும் சவால்கள்


ஜிஎஸ்டி 1.0-ஐ அமல்படுத்தியதன் பின்னணியில் உள்ள முதன்மையான நோக்கங்களில் ஒன்று, முந்தைய மறைமுக வரி முறையின் 'அடுக்கு விளைவு' (cascading effect) மற்றும் குறைந்த வருமானக் குழுக்கள் (lower-income groups) மீதான அதன் தாக்கத்தை நிவர்த்தி செய்வதாகும். அவ்வாறு செய்வதன் மூலம், அரசாங்கம் நான்கு வரி அடுக்குகளை அறிமுகப்படுத்தியது. அவை 5%, 12%, 18% மற்றும் 28% ஆகும்.


ஜிஎஸ்டி 1.0-ன் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், பெட்ரோலியம் மற்றும் மனித நுகர்வுக்கான மதுபானம் போன்ற பொருட்கள் பழைய கலால் வரி முறையின் கீழ் தொடர்ந்து இருந்தன. புகையிலை, சிகரெட், பான் மசாலா, மெல்லும் புகையிலை போன்ற பொருட்கள் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்பட்டு 28% ஜிஎஸ்டி விகிதத்திற்கும் கூடுதல் இழப்பீட்டு செஸ் வரிக்கும் உட்படுத்தப்பட்டன. ஜிஎஸ்டிக்கு மாற்றப்படுவதால் மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்புகளை ஈடுசெய்ய இந்த மேல் வரி வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஜிஎஸ்டி 1.0 ஒரு முக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தமாகும். இருப்பினும், அதன் செயல்படுத்தல் பல சிக்கல்களை எதிர்கொண்டது. அவற்றுள்,


1. GST வலைதளத் தரவுத்தளத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள்.


2. அதிக இணக்கச் செலவுகள்


3. ஆரம்ப கட்டத்தில் அடிக்கடி கொள்கை மாற்றங்கள்


4. இறுதிப் பொருளின் விலையை விட உள்ளீடுகளின் விலை அதிகமாக இருந்த ஒரு தலைகீழ் வரி அமைப்பு (Inverted duty structure) ஆகும். இது பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரி வரவுக்கு வழிவகுத்தது. இது சிறு நிறுவனங்கள் மற்றும் வணிகங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது.


5. நிதி வெளியிடுவதில் தாமதம்


6. விநியோகச் சங்கிலி இடையூறுகள்


7. பங்குதாரர்களிடையே சரியான தகவல் மற்றும் தயார்நிலை இல்லாமை.


இந்தச் சிக்கல்கள் இருந்தபோதிலும், 2017 முதல், தொற்றுநோய் ஆண்டுகளில் (2020-2021) தவிர, ஜிஎஸ்டி வசூல் சீராக அதிகரித்தது. கட்டாய மின்-விலைப்பட்டியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மோசடி கண்டறிதல் போன்ற டிஜிட்டல் கருவிகளை ஏற்றுக்கொண்டதன் காரணமாக வரி வசூல் மேம்பட்டது. 2024-25 நிதியாண்டின் நிலவரப்படி, ஜிஎஸ்டி வசூல் 22.08 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 9.4% அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்த முன்னேற்றம் ஜிஎஸ்டி 2.0-ஐ அறிமுகப்படுத்த வழிவகுத்தது.


ஜிஎஸ்டி 2.0-ன் எதிர்பார்க்கப்படும் தாக்கம்


வரி முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்ற வணிகங்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களின் நீண்டகால கோரிக்கையை பூர்த்தி செய்வதற்காக ஜிஎஸ்டி 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வரி அடுக்குகள் (tax slabs) குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் விருப்பமான விளக்கத்திற்கு இடமளிப்பதாகவும் அடிக்கடி கேள்விக்குள்ளாக்கப்பட்டன. ஜிஎஸ்டி 2.0 செப்டம்பர் 3, 2025 அன்று அறிவிக்கப்பட்டது. மேலும், செப்டம்பர் 22, 2025 அன்று செயல்படுத்தப்பட்டது. இதன் முக்கிய அம்சங்கள்:


1. வரி அடுக்குகளைக் குறைத்தல் - நான்கு விகிதங்களிலிருந்து இரண்டாக (5% மற்றும் 18%) குறைத்தல்.


2. உயர் ரக கார்கள் மற்றும் காற்றூட்ட பானங்களுக்கு 40% புதிய வரி அறிமுகப்படுத்தப்பட்டது.


3. எளிமைப்படுத்தப்பட்ட இணக்க அம்சங்கள் (compliance procedures)


4. காப்பீட்டில் விலக்கு - தனிநபர் ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டுக் கொள்கைகள்


இந்த சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம், குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீட்டைப் பாதிக்கும் உலகளாவிய தடைகளைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் கைகளில் அதிக பணத்தை வைப்பதும், தேவையை அதிகரிப்பதும் ஆகும். நேரடி வரி குறைப்புகளைப் போலன்றி, இது ஒரு சிறிய பிரிவினரை மட்டுமே உள்ளடக்கியது. ஜிஎஸ்டி போன்ற மறைமுக வரி முறையை சீர்திருத்துவது, ஒரு பெரிய தளத்தை அடைவதன் மூலமும், வருமானக் குழுக்களிடையே செலவினங்களை ஊக்குவிப்பதன் மூலமும் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


யார் ஆதாயம் அடைகிறார்கள்?, யார் சரிசெய்கிறார்கள்?


குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களின் முதன்மை பயனாளிகள் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களின் (Fast-Moving Consumer Goods (FMCG)) நுகர்வோர் ஆவர். அதே நேரத்தில், ஒப்பீட்டளவில் நஷ்டமடைபவர்கள் 'தீவினை' பொருட்களின் (sin goods) நுகர்வோர் ஆவர். இருப்பினும், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) நுகர்வோர் தளம் கணிசமாக அதிகமாக இருப்பதால், ஒட்டுமொத்த தாக்கம் நேர்மறையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வணிகங்கள் தங்கள் அமைப்புகளை புதிய வரி விகிதங்களுக்கு ஏற்ப மறுசீரமைக்க நேரம் தேவைப்படும். அதே நேரத்தில், இந்த மாற்றம் சிறிய நிறுவனங்களுக்கு விலை உயர்ந்ததாக இருக்கலாம். குறைந்த விகிதங்கள் காரணமாக அரசாங்கம் ஆரம்பத்தில் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும். இருப்பினும், இந்த இழப்பை பின்னர் அதிக பொருளாதார வளர்ச்சி, சிறந்த வரி இணக்கம் மற்றும் அதிக நுகர்வோர் செலவு மூலம் மீட்டெடுக்க முடியும். வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) உற்பத்தி நிறுவனங்களைத் தவிர, காப்பீட்டு கொள்கைதாரர்களும் ஜிஎஸ்டி 2.0 இலிருந்து பயனடைவார்கள். முன்னதாக, காப்பீட்டில் 18% வரி விதிக்கப்பட்டது, ஆனால் GST 2.0-ன் கீழ், அது இப்போது 0% ஆக உள்ளது.


இருப்பினும், காப்பீட்டு நிறுவனங்கள் இனி தரகு (brokerage), பங்குகள் (commissions) மற்றும் சந்தைப்படுத்தல் (marketing) போன்ற செலவுகளுக்கு உள்ளீட்டு வரி வரவைப் பெற முடியாது. இதன் விளைவாக, நிறுவனங்கள் சேவை செலவுகளை இன்னும் ஈடுகட்ட வேண்டியிருப்பதால், முழு பலனையும் நுகர்வோருக்கு வழங்காமல் போக வாய்ப்புள்ளது. இந்த விலக்கு அளிப்பதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்று, குறிப்பாக அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகள் மற்றும் வயதான மக்கள்தொகையைக் கருத்தில்கொண்டு, ஆயுள் மற்றும் சுகாதாரக் காப்பீட்டை பரவலாக ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதாகும்.


ஏழைகளுக்கான பல சுகாதார காப்பீட்டுத் திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், மருத்துவ சிகிச்சை மிகவும் விலை உயர்ந்ததாகி வருவதால் இந்தத் திட்டங்கள் போதுமானதாக இல்லை. எதிர்காலத்தில், காப்பீட்டு நிறுவனங்கள் நுகர்வோருக்கு அனைத்து நன்மைகளையும் வழங்க முடியும். இந்த யோசனை நடத்தை பொருளாதாரத்திலிருந்து (behavioural economics) வருகிறது, இது உந்துதல் கோட்பாடு (Nudge Theory) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பொருள் மக்கள் சிறந்த தேர்வுகளைச் செய்ய வழிகாட்டும் கொள்கைகளை உருவாக்குவதாகும். இது நுகர்வோர் காப்பீட்டை வாங்க ஊக்குவிக்கிறது மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை கொள்கைதாரர்களுக்கு நன்மைகளை வழங்கத் தூண்டுகிறது.


எனவே, ஜிஎஸ்டி 2.0-ன் எதிர்கால நன்மைகள் அனைத்து பங்குதாரர்களும் இந்த நன்மைகளை எவ்வளவு சிறப்பாகப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. மேலும், நுகர்வோர் தங்கள் கூடுதல் வருமானத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இது சார்ந்துள்ளது. இது அவர்கள் அதிகமாகச் செலவிட விரும்புகிறார்களா அல்லது அதிகமாகச் சேமிக்கிறார்களா என்பதைப் பொறுத்தது.



Original article:

Share:

அழிந்து வரும் காட்டு உயிரினங்கள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தக மாநாடு (CITES) என்பது என்ன? -ரோஷ்ணி யாதவ்

 

CITES : Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora -  அழிந்து வரும் காட்டு உயிரினங்கள் மற்றும் தாவர இனங்களின் சர்வதேச வர்த்தக மாநாடு


முக்கிய அம்சங்கள் :


அழிந்து வரும் காட்டு உயிரினங்கள் மற்றும் தாவர இனங்களின் சர்வதேச வர்த்தக மாநாடு (CITES) என்பது 185 உறுப்பு நாடுகள் கையொப்பமிட்ட ஒரு உலகளாவிய ஒப்பந்தமாகும். இந்தியா 1976-ல் CITES-ல் இணைந்தது. இதில், ஒவ்வொரு உறுப்பு நாடும் அதன் சொந்த CITES அதிகாரிகளை நியமிக்கிறது. சம்பந்தப்பட்ட இரு நாடுகளின் CITES அதிகாரிகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பாக அனுமதிகள் இல்லாமல் அழிந்துவரும் உயிரினங்களை சர்வதேச அளவில் வர்த்தகம் செய்ய முடியாது.


பிப்ரவரி மாதம், ஜெனீவாவில் நடந்த கடைசிக் கூட்டத்தில், குஜராத்தில் உள்ள "பசுமை விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தின் (Greens Zoological Rescue & Rehabilitation Center (GZRRC)) வசதிக்கு ஏற்ப நோக்கக் குறியீடு Z (விலங்கியல் பூங்கா) கொண்ட உயிருள்ள விலங்குகளின் வர்த்தகம்" தொடர்பாக பல நாடுகள் வழங்கிய தகவல்களைக் கொண்டு அழிந்துவரும் காட்டு உயிரினங்கள் மற்றும் தாவர இனங்களின் சர்வதேச வர்த்தக மாநாடு (CITES) நிலைக்குழுவானது கவனத்தில் கொண்டது. மேலும், "உயிருள்ள வனவிலங்குகள் சட்டப்பூர்வமாக கையகப்படுத்தப்பட்டு இறக்குமதி செய்யப்படுவதை இந்திய அதிகாரிகள் எவ்வாறு உறுதிசெய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள" ஒரு சரிபார்ப்பு பணியை மேற்கொள்ளுமாறு CITES செயலகத்தைக் கேட்டுக் கொண்டது.


இந்த ஆய்வுக் குழு செப்டம்பர் 15 முதல் 20 வரை இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டது. இந்த பயணத்தின்போது, ​​வந்தாராவில் உள்ள பசுமை விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் (GZRRC) மற்றும் ஜாம்நகரில் உள்ள ராதா கிருஷ்ணா கோயில் யானை நல அறக்கட்டளையின் (Radha Krishna Temple Elephant Welfare Trust (RKTEWT)) வசதிகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.


அதன் 14 பக்க அறிக்கையில், இந்தியாவிற்கு CITES ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அனுமதிகள் இல்லாமல் எந்த இறக்குமதியும் நடைபெறவில்லை என்பதை அந்தக் குழு குறிப்பிட்டது, ஆனால் “பல இறக்குமதிகள் இன்னும் மாதிரிகளின் தோற்றம் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன”, “மூலம் மற்றும் பரிவர்த்தனை நோக்கக் குறியீடுகளின் பயன்பாடு, மற்றும் இந்தியாவால் உரிய விடாமுயற்சியின் பயிற்சி” ஆகியவை கோரப்பட்ட விலக்குகள்.


அழிந்து வரும் காட்டு உயிரினங்கள் மற்றும் தாவர இனங்களின் சர்வதேச வர்த்தக மாநாடு (CITES) சில நிபந்தனைகளின் கீழ் வனவிலங்கு வர்த்தகத்தை அனுமதிக்கிறது என்று அறிக்கை குறிப்பிட்டது. ஆனால், இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் கடுமையான விதிகளைக் கொண்டுள்ளது. ஒரு மிருகக்காட்சிசாலையானது அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு மிருகக்காட்சிசாலையிலிருந்து அல்லது அதற்கு மட்டுமே விலங்குகளை வாங்க, விற்க அல்லது மாற்ற முடியும் என்று அது கூறுகிறது. இந்த விதியின் காரணமாக, இந்தியாவால் இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான வனவிலங்குகள் மூலக் குறியீடு C (captive bred-சிறைபிடிக்கப்பட்ட இனத்திற்கானது) மற்றும் நோக்கக் குறியீடு Z (zoo-மிருகக்காட்சிசாலைக்கானது) ஆகியவற்றால் குறிக்கப்பட்டுள்ளன.


பல விலங்குகள் நிறுவப்பட்ட வணிக இனப்பெருக்க வசதிகளிலிருந்து வந்ததாக அறிக்கை குறிப்பிட்டது. இந்த வசதிகள் பொதுவாக விலங்குகளை விற்கின்றன. ஏற்றுமதி வசதிகள் தங்கள் சொந்த நாடுகளில் உயிரியல் பூங்காக்களாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம் என்றும் அது கூறியது. பசுமை விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் (GZRRC) மற்றும் ராதா கிருஷ்ணா கோயில் யானை நல அறக்கட்டளையின் (RKTEWT) செயல்பாடுகள் தற்செயலாக காட்டு விலங்குகளை சட்டவிரோதமாக பிடிப்பதை ஊக்குவிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த இது உதவும், அவை பின்னர் சிறைபிடிக்கப்பட்டவையாக அறிவிக்கப்படுகின்றன.


பசுமை விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் (GZRRC) மற்றும் ராதா கிருஷ்ணா கோயில் யானை நல அறக்கட்டளை (RKTEWT) ஆகியவற்றால் இறக்குமதி செய்யப்படும் மாதிரிகளின் அளவைக் கருத்தில் கொண்டு, இந்தியா ”அதன் இறக்குமதி நடைமுறைகளை அவசரமாக மறுபரிசீலனை செய்து, காடுகளில் இருந்து பெறப்பட்ட விலங்குகள் சிறைபிடிக்கப்பட்ட இனமாக இறக்குமதி செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த, வலுவான சோதனைகளை செயல்படுத்த வேண்டும்" என்று அறிக்கை பரிந்துரைத்தது.


அழிந்துவரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவர இனங்களின் சர்வதேச வர்த்தக மாநாட்டு (CITES) செயலகம், தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இறக்குமதிகளையும், இதே போன்ற கவலைகளை எழுப்பும் பிற நிகழ்வுகளையும், காங்கோ, ஜெர்மனி, கயானா, ஈராக், மெக்சிகோ, சிரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மூல அல்லது போக்குவரத்து நாடுகளுடன் சரிபார்த்து, இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகள் உண்மையில் சிறைபிடிக்கப்பட்டவையா என்பதைச் சரிபார்க்கவும், இல்லையென்றால், பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவும் பரிந்துரைத்தது.


நவம்பர் 23 அன்று உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் கூடவுள்ள CITES நிலைக்குழு, இந்தியாவிடம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து 90 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டும் என்று CITES செயலகம் பரிந்துரைத்தது.



உங்களுக்குத் தெரியுமா?


ஒவ்வொரு இனத்திற்கும் எவ்வளவு பாதுகாப்புத் தேவை என்பதை அடிப்படையாகக் கொண்டு அழிந்து வரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவர இனங்களின் சர்வதேச வர்த்தக மாநாடு (CITES) மூன்று பிற்சேர்க்கைகளில் இனங்களை பட்டியலிடப்பட்டுள்ளன.


பின்இணைப்பு-I அழிவின் அபாயத்தை எதிர்கொள்ளும் உயிரினங்களை பட்டியலிடுகிறது. இந்த இனங்களின் மாதிரிகளின் வர்த்தகம் அரிதாகவே அனுமதிக்கப்படுகிறது. கொரில்லாக்கள் மற்றும் இந்தியாவிலிருந்து வரும் சிங்கங்கள் போன்ற "விதிவிலக்கான சூழ்நிலைகளில்" (exceptional circumstances) மட்டுமே அனுபதிக்கப்படுகிறது.


பின்இணைப்பு-II, தற்போது அழிவை எதிர்கொள்ளாத ஆனால் எதிர்கால அபாயங்களைத் தடுக்க கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தகம் தேவைப்படும் இனங்களை பட்டியலிடுகிறது. எடுத்துக்காட்டுகளில் சில வகையான நரிகள் மற்றும் நீர்யானைகள் அடங்கும்.


பின்இணைப்பு-III, குறைந்தது ஒரு நாட்டில் பாதுகாக்கப்படும் இனங்களை பட்டியலிடுகிறது. அந்த நாடு தங்கள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த மற்ற CITES உறுப்பினர்களிடம் உதவி கோரியுள்ளது. உதாரணங்களில் இந்தியாவைச் சேர்ந்த வங்காள நரி (Bengal fox) மற்றும் பொன்னிறக் குள்ளநரி (Golden Jackal) ஆகியவை அடங்கும். ஒவ்வொரு வகைக்கும் வர்த்தகத்திற்கான அதன் சொந்த விதிகள் மற்றும் நடைமுறைகள் உள்ளன.



Original article:

Share:

திரிசூல் மற்றும் BRASS TACKS-ன் மரபு -ரோஷ்ணி யாதவ்

 ஏன் செய்திகளில்?


முப்படையின் பாதுகாப்புச் சேவைகளும் குஜராத்தில் உள்ள சதுப்பு நிலமான சர் க்ரீக் பகுதியையும் (Sir Creek sector), சௌராஷ்டிரா கடற்கரையையும், கட்ச் பாலைவனத்தையும் (Rann of Kutch), இராஜஸ்தானின் பாலைவனப் பகுதிகளையும் உள்ளடக்கிய ‘திரிஷூல்’ (Trishul) என்ற பெயரிடப்பட்ட ஒரு முக்கியமான பயிற்சியில் பங்கேற்கத் தொடங்கியுள்ளன. ஆப்பரேஷன் சிந்தூரைத் (Operation Sindoor) தொடர்ந்து நடைபெறும் இந்த 'திரிஷூல்' பயிற்சி, பாகிஸ்தான் இராணுவத்தினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள்  முப்படைப் பிரிவினருக்கு தொடர்ச்சியான எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்னர் 1987-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 'ஆப்பரேஷன் பிராஸ் டாக்ஸ் IV' (Exercise BRASS TACKS IV) என்ற பெயரில் ஒரு இராணுவப் பயிற்சியை நடத்தியபோதும் இதேபோன்ற ஒரு நிகழ்வு நடந்தது. இதன் பின்னணியில், நாம் 'திரிஷூல்' பயிற்சி பற்றி அறிந்துகொள்வோம் 'பிராஸ் டாக்ஸ் IV' பயிற்சியை பற்றிய செய்தியை மறுபரிசீலனை செய்வோம்.


முக்கிய   அம்சங்கள்:


1. இந்த பயிற்சியானது மேற்கு கடற்கரை மற்றும் கழிமுகப் பகுதிகளில் (creek sectors) தரைவழி நகர்வுகள், விமான நடவடிக்கைகள் மற்றும் கடற்படைச் சொத்துக்களை ஒருங்கிணைத்து, அதன் மூலம் ஒரு பல-கள செயல்பாட்டு கட்டளையை (multi-domain theatre of operations) திட்ட வரைபடமாக்குகிறது.


2. குஜராத் கடற்கரை மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதியை உள்ளடக்கி - தரைப்படையின் தெற்குப் பிரிவு கட்டளை (Army Southern Command), மேற்குக் கடற்படை கட்டளை (Western Naval Command), மற்றும் தென்மேற்கு விமானப்படை கட்டளை (South Western Air Command) ஆகியவை பயிற்சியில் பங்கேற்கும் முக்கிய அமைப்புகளாகும்.


3. ஆயுதப்படைகளின் மூன்று பிரிவுகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு மற்றும் இயங்குதிறனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்கள், இந்திய விமானப்படையின் போர் மற்றும் ஆதரவு விமானங்கள் ஆகியவற்றின் பெரிய அளவிலான நிலைநிறுத்தல்களைக் கொண்டுள்ளது. அத்துடன் இந்தியத் தரைப்படை மற்றும் இந்தியக் கடற்படையின் நீர்நிலப் பிரிவுகளை (amphibious component) உள்ளடக்கிய நீர்நிலச் செயல்பாடுகளை உள்ளடக்கியது. இதில் ஐஎன்எஸ் ஜலாஷ்வா (INS Jalashwa)  தரையிறங்கு தளக் கப்பல் (Landing Platform Dock) மற்றும் தரையிறங்குதளப் பயன்பாட்டு கப்பல்கள் (Landing Craft Utility vessels - LCUs) ஆகியவை அடங்கும். இது போன்ற பலதரப்பட்ட நிலப்பரப்பு மற்றும் பணி வரம்புகளில் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை அடைவதே இதன் நோக்கமாகும்.


4. மூன்று படைகளும் T-90 மற்றும் அர்ஜுன் டாங்கிகள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள், ஏவுகணை அமைப்புகள், ரஃபேல் மற்றும் சுகோய்-30MKI போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் பல்வேறு போர்க்கப்பல்கள் உள்ளிட்ட முழு வளங்களையும் திறன் மற்றும் ஆற்றலுக்காக செயல்பாட்டு ரீதியாக சோதனை செய்கின்றனர். பயிற்சிகளில் சேர்க்கப்பட்ட அல்லது சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட உள்நாட்டு தளங்கள் மற்றும் கருவிகளும் பங்கேற்கக்கூடும். 


5. முப்படைகளின் சொத்துக்கள் மின்காந்த நிறமாலையிலும் (electromagnetic spectrum), மின்னணு மற்றும் தகவல் போர்க்களத்திலும் சோதிக்கப்படும்.


6. "திரிசூல் பயிற்சி, 'ஒருங்கிணைப்பு (Jointness), ஆத்மநிர்பரதா (தன்னம்பிக்கை) (Atmanirbharta) மற்றும் புதுமை (Innovation)' என்பதைக் குறிப்பிடும்விதமாக 'JAI’ என்ற உணர்வின் மூலம் இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்கும் உறுதியை வெளிப்படுத்துகிறது என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.


பிராஸ் டாக்ஸ் (BRASS TACKS) பயிற்சிகள்


1. 1987-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் பிராஸ் டாக்ஸ் IV (Exercise BRASS TACKS IV) எனப் பெயரிடப்பட்ட ஒரு இராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.


2. பிராஸ் டாக்ஸ் IV என்பது 1986-ஆம் ஆண்டு கோடையில் தொடங்கிய நான்கு பயிற்சிகளின் வரிசையில் இறுதிக் கட்ட பயிற்சியாகும். பிராஸ் டாக்ஸ் I மற்றும் II ஆகியவை ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில், இந்திய இராணுவத்தின் மூத்த தளபதிகளின் நிர்வாகம், தகவல் தொடர்பு மற்றும் தளவாடத் திறன்களைச் சோதிக்கும் நோக்குடன் பயிற்சிகள் நடத்தப்பட்டன. ஜெனரல் கே. சுந்தர்ஜி அப்போது இராணுவப் படைத் தலைவராக இருந்தார். மேலும், இந்தப் பயிற்சிக்கு அவரே பிரதான சக்தியாக இருந்தார்.


3. இந்தப் பயிற்சியின் பின்னணியில் உள்ள இந்தியாவின் நோக்கங்களைப் பகுப்பாய்வு செய்த அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பானது, பிராஸ் டாக்ஸ் IV இந்திய இராணுவத்தின் வழக்கமான வருடாந்திர பயிற்சி சுழற்சியைப் பொருந்துவதாக நம்பியது. இந்திய இராணுவம் வழக்கமாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ராஜஸ்தானில் படைப்பிரிவின் அல்லது பல படைப்பிரிவுகளின் பயிற்சிகளுடன் அதன் பயிற்சி சுழற்சியை நிறைவு செய்யும் என்று கூறியது.


4. பிராஸ் டாக்ஸ் பயிற்சிகள் போருக்கான முன்னோடியாக இல்லை என்பதை சான்றுகள் சுட்டிக்காட்டுவதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் பகுப்பாய்வு கூறியது.


5. திரிசூல் பயிற்சிக்கு எதிர்வினையாக பாகிஸ்தான் தனது படைகளை நிலைநிறுத்தியது போலவே, பிராஸ் டாக்ஸ் IV பயிற்சியின்போதும் செய்தது. அப்போது, அந்த நகர்வுகள் குறித்து இந்திய தரப்பிலிருந்து எந்தவிதமான தகவல்களும் அறிவிக்கப்படாததால், இந்தியப் படைகளின் நோக்கம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசியல் தலைமைகளிடையே ஒருவிதமான அச்சம் நிலவியது.


இந்தியாவின் சமீபத்திய கூட்டுப் பாதுகாப்புப் பயிற்சிகள்


1. யுத் அப்யாஸ் (Yudh Abhyas): அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வருடாந்திர கூட்டு இராணுவப் பயிற்சியான 'யுத் அப்யாஸ்'-ன் 21வது பயிற்சி செப்டம்பர் 1 முதல் 14 ஆம் தேதி வரை அலாஸ்காவில் உள்ள ஃபோர்ட் வெயின்ரைட்டில் (Fort Wainwright) நடைபெற்றது. சுங்க வரி (tariffs) விவகாரம் மற்றும் இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவது தொடர்பாக டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையேயான உறவுகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கமான சூழ்நிலை இருந்தபோதிலும், இந்த இராணுவப் பயிற்சி இரு நாடுகளுக்கும் இடையேயான நிலையான இராஜதந்திர மற்றும் தற்காப்பு உறவுகளின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.


2. மித்ர சக்தி (Mitra Shakti): இந்தியா - இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியான 'மித்ரா சக்தி'யின் 10வது பயிற்சி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 முதல் 25 ஆம் தேதிவரை, மதுரு ஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றது. மித்ரா சக்தி என்பது இந்தியா மற்றும் இலங்கையில் மாறி மாறி நடத்தப்படும் ஒரு வருடாந்திரப் பயிற்சி நிகழ்வு ஆகும். அதன் கடைசி பயிற்சி நடைமுறை புனேவில் நவம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.


3. கடற்படைக் கூட்டுப் பயிற்சி (Passage Exercise): இந்திய கடற்படையின் மறைமுகத் தாக்குதல் போர்க்கப்பலான INS தபார், ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பி-8 கடல்சார் ரோந்து விமானம் ஆகியவை இங்கிலாந்தின்  ஏர்போர்ன் ஸ்ட்ரைக் குழுமத்துடன் (Carrier Strike Group) இணைந்து, வடக்கு அரபிக் கடலில் ஜூன் 9 மற்றும் 10, 2025 ஆம் நாளன்று கடற்படை கூட்டுப்பயிற்சியில் (PASSEX) பங்கேற்றன. இந்தக் கூட்டுப் பயிற்சியானது இந்திய கடற்படைக்கும், ராயல் கடற்படைக்கும் இடையிலான ஆழமான ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதுடன், கடல்சார் பாதுகாப்பு மற்றும் வலுவான இருதரப்பு உறவுகளுக்கான ஆழமான உறவைப் பறைசாற்றுகிறது.


4. நாடோடி யானை (Nomadic Elephant): இந்தியா-மங்கோலியா கூட்டு இராணுவப் பயிற்சியின் 17வது பயிற்சி நடைமுறை, மங்கோலியாவின் உலான்பாதரில் (Ulaanbaatar) 2025-ஆம் ஆண்டு மே 31 முதல் ஜூன் 13 வரை நடத்தப்பட்டது. இது இந்தியாவிலும் மங்கோலியாவிலும் மாறி மாறி நடத்தப்படும் வருடாந்திர பயிற்சி நிகழ்வாகும். 2024-ஆம் ஆண்டில் மேகாலயா மாநிலத்தில் உள்ள உம்ரோயில் (Umroi) நடத்தப்பட்டது.


5. டஸ்ட்லிக் (Dustlik): இந்தியாவிற்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியின் ஆறாவது பயிற்சி 'டஸ்ட்லிக்' புனேவின் ஔந்த்தில் (Aundh) உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையில் (Foreign Training Node (FTN)) 2025-ஆம் ஆண்டு, ஏப்ரல் 16 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்றது. டஸ்ட்லிக் பயிற்சி என்பது இந்தியாவிலும் உஸ்பெகிஸ்தானிலும் மாறி மாறி நடத்தப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும். கடைசி பதிப்பு 2023-ஆம் ஆண்டு உஸ்பெகிஸ்தானில் உள்ள டெர்மெஸிலும் (Termez) உத்தரகண்டில் உள்ள பித்தோராகரிலும் (Pithoragarh) நடத்தப்பட்டது. பல்வேறு சூழல்களிலும் நிலப்பரப்புகளிலும் இருநாடுகளின் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இராணுவ ஒத்துழைப்பை வளர்ப்பதும் ஒருங்கிணைந்த திறன்களை மேம்படுத்துவதுமே  இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.


Original article:

Share: