ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, AI 171 விமான விபத்து அறிக்கையை வெளியிடுங்கள். -கேப்டன் ஏ. ரங்கநாதன்

 ஜூன் மாதம் 2025-ஆம் ஆண்டு நிகழந்த ஏர் இந்தியா AI 171 விமான விபத்தின் உண்மையான விவரங்களை இந்தியா தெரிந்து கொள்ள வேண்டும்.


 2025ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்த 241 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா AI 171 விமானமானது சிறிது நேரத்திலேயே விபத்து ஏற்பட்டதில் 240 பயணிகள் உயிரிழந்தனர். ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்தார். விமானம் விழுந்த கட்டிடப் பகுதிகளில் இருந்த பத்தொன்பது நபர்கள் உயிரிழந்தனர். வணிக விமானப் போக்குவரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு போயிங் 787 ட்ரீம்லைனர் (Boeing 787 Dreamliner)   விமானம் விபத்துக்குள்ளானது இதுவே முதல் முறை. பல்வேறு விமான நிறுவனங்களுடன் 1,175-க்கும் மேற்பட்ட மேற்பட்ட ட்ரீம்லைனர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 12 மணி நேரம் இயக்கப்படுகின்றன. இந்த விபத்துக்குப் பிறகு, ட்ரீம்லைனர்கள் புறப்படும் போது ஒரு இயந்திரம் கூட பழுதடையாமல் இரண்டு மில்லியன் மணிநேரங்களுக்கும் அதிகமான மணிநேரம் பறந்துள்ளன. விமானப் போக்குவரத்து வரலாற்றில், விமானம் புறப்படும் போது இரண்டு இயந்திரங்களும் பழுதடைவது மிகவும் அரிதான நிகழ்வாகும். நவம்பர் 4-ஆம் தேதி 2025-ஆம் ஆண்டு UPS MD-11 விபத்து, இயந்திரப் பிரிப்பு காரணமாக ஏற்பட்ட ஒரு நிகழ்வாகும். இந்த விபத்துக்குப் பிறகு, அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (National Transportation Safety Board (NTSB)) விளக்கங்களுடன் தொடர்புடைய தகவல்களை தினசரி வெளியிட்டது. ஆனால், இந்தியாவில் இதுபோன்ற நடவடிக்கைகள் ஒருபோதும் மேற்கொள்ளப்படாது என்று விமர்சிக்கின்றனர்.


விபத்துக்குப் பிறகு, மின்னணு ஊடகங்கள் மற்றும் யூடியூபர்கள் ஒருவித அச்சத்தை உருவாக்கவும், போயிங் 787 ரக விமானத்தின் பாதுகாப்புத் தரங்களை கேள்விக்குள்ளாக்கவும் தவறான கோட்பாடுகளைப் பரப்பி வருகின்றனர். உண்மையிலிருந்து திசைதிருப்பும் ஒரு பிரச்சாரமே பரப்பப்படுகிறது. மேலும், இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (Ministry of Civil Aviation (MoCA)), இறுதி விசாரணை அறிக்கையை வெளியிடுவதை தாமதப்படுத்துவதன் மூலம் அவர்களின் கைகளில் ஒரு ஆயுதத்தை கொடுத்துவிட்டது. விபத்து நடந்த மறுநாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் கூறியாதவது, விரைவில் ஒரு “வெளிப்படையான” அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார். ஆனால், இந்தியாவில் உள்ள அனைத்து விமான விபத்து அறிக்கைகளைப் போலவே இந்த விபத்து குறித்த அறிக்கையும் நடைமுறையில் காணாமல் போனதுபோல ஆகிவிட்டது என்கின்றனர்.


காலவரிசை: விபத்து 2025-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி பிற்பகலில் நடந்தது. ஆசிய செய்தி சர்வதேச நிறுவனம் வெளியிட்ட (Asian News International (ANI)) அறிக்கையின்படி, விமான பதிவிகளில் (flight recorders) ஒன்று ஜூன் 13-ஆம் தேதி விமானம் மோதிய கட்டிடத்தின் மாடியில் இருந்து மீட்கப்பட்டது. இரண்டாவது விமான பதிவி ஜூன் 16-ஆம் தேதி கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது. டெல்லியில் உள்ள விமான விபத்து புலனாய்வுப் பிரிவு ஆய்வகம் (Aircraft Accident Investigation Bureau (AAIB)) ஆய்வகம் ஜூன் 25-ஆம் தேதிக்குள் தரவைப் பதிவிறக்கம் செய்து விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையை ஜூலை 12-ஆம் தேதி வெளியிட்டது. ஆனால், இந்த அறிக்கை தெளிவற்றதாகதாகவும், தரப்பட்ட பதில்களைவிட அதிக கேள்விகளை உருவாக்கியதாகவும் இருந்தது என்று கருத்து தெரிவிக்கின்றனர்.


'அச்சுறுத்தல் உணர்வு', ஒரு மர்மமான உத்தரவு


உளவுத்துறையால் அடையாளம் காணப்பட்ட அச்சுறுத்தல் குறித்த தகவலின் அடிப்படையில், இந்திய விமான விபத்து விசாரணைப் பிரிவின் தலைவருக்கு 24 மணி நேரமும், வாரத்தின் ஏழு நாட்களும் ‘X வகை கமாண்டோ பாதுகாப்பை’ வழங்குவதற்கான உள்துறை அமைச்சகத்தின் (Ministry of Home Affairs (MHA)) உத்தரவு பலரின் கவனத்தை ஈர்க்காத  ஒன்றாகும். இந்தக் கட்டுரையின் எழுத்தாளர் 1973-ஆம் ஆண்டு முதல் அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் விமான விபத்துகள் புலனாய்வுப் பிரிவு (Air Accidents Investigation Branch (AAIB)), இங்கிலாந்தின் விமான விபத்து விசாரணைகளை தொடர்ந்து கவனித்து வருகிறார். ஆனால், ஒரு விபத்து புலனாய்வாளருக்குக் கமாண்டோ பாதுகாப்பு தேவைப்படுவதை இப்போது தான் முதல்முறை கேள்விப்படுவதாகத் தெரிவித்தார். இந்த உத்தரவு, முதல் விமானப் பதிவுக்கருவி மீட்கப்பட்ட வெறும் மூன்று நாட்களுக்குப் பிறகு, ஜூன் 16-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. பொதுமக்களுக்கு வெளியிடப்படாத சில உண்மைகள் உள்துறை அமைச்சகத்திற்கும்  விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கும் தெரிந்திருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.




விமான விபத்து குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளிப்படையாகத் தகவல்களை வெளியிட்டிருந்தால், சுற்றித் திரியும் விசித்திரமான கோட்பாடுகள் மற்றும் ஊகங்களைத் தவிர்த்திருக்கலாம். புறப்படுவதற்கான ஓடுதளத்தில் விமானம் ஓடத் தொடங்கியதில் இருந்து விபத்து நடக்கும் நேரம் வரை, நடந்த வெறும் ஒரு நிமிடம் 40 விநாடிகள் ஓடிய ஏஐ 171 விமானத்தின் காக்பிட் குரல் பதிவுக் கருவியின் (Cockpit Voice Recorder (CVR)) பதிவுகளை நேரடியாக வெளியிட்டிருந்தால் போதுமானதாக இருந்திருக்கும் என்கின்றனர். விபத்து குறித்து வெளியான முதற்கட்ட அறிக்கையில் உள்ள, விமானிகளுக்கு இடையேயான உரையாடலில் இருந்து எடுக்கப்பட்ட, “நீ ஏன் அதைச் செய்தாய்... நான் அதைச் செய்யவில்லை” என்ற ஒரு மர்மமான வாக்கியம், அத்தனை ஊகங்களுக்கும் வழிவகுத்தது.


தரவு என்ன காண்பிக்கும்?


முதற்கட்ட அறிக்கையிலிருந்து, துணை விமானி (Copilot) விமானத்தை இயக்கும் விமானியாகவும் (Pilot Flying) தலைமை விமானி (Captain) விமானத்தைக் கண்காணிக்கும் விமானியாகவும் இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஏர் இந்தியா நடைமுறையின்படி, விமானம் புறப்படும் முடிவு வேகம் அடையும் வரை கேப்டன் உந்துதல் நெம்புகோல்களைக் (thrust levers) கையாள வேண்டும். துணை விமானி கட்டுப்பாடுகளைக் கையாளுகிறார். இந்த வேகத்தின் அழைப்பில் (தானியங்கி அழைப்பு), கேப்டன் தனது கைகளை உந்துதல் நெம்புகோல்களிலிருந்து எடுத்துவிடுவார். முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில், காக்பிட் குரல் பதிவுக் கருவியில் பின்வரும் அழைப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்: 155 kts சுழற்சி வேகத்தில் (அறிக்கையில் 08:08:35), அழைப்பு 'சுழற்று' என்று இருந்திருக்க வேண்டும். விமானம் தரையிலிருந்து கிளம்பியது (lift-off) என்று 08:08:39 மணிக்கு இருந்ததாகவும், உயரமானி (altimeter) உயரத்தில் அதிகரிப்பைக் காட்டும்போது 'நேர்மறை விகித அழைப்பு' இருந்திருக்க வேண்டும் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த அழைப்பு கண்காணிக்கும் விமானியான, கேப்டனால் செய்யப்படும். முதற்கட்ட அறிக்கை, எண்.1 எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் மற்றும் எண்.2 எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் இரண்டு வினாடிகளில் ஒன்றன் பின் ஒன்றாக கட்-ஆஃப் (‘Cut-off) நிலைக்கு மாற்றப்பட்டன என்று கூறுகிறது. இது விமான இயந்திரங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்துகிறது - எரிபொருள் நிறுத்தும் குழாய்கள் (fuel shut off valves)) மூடப்படும் மற்றும் எரிபொருள் கிடைக்காமல் போயிருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றன.

விமானப் பயணத்தில் ஒரு முக்கியமான விதி என்னவென்றால், ஒரு பெரிய அவசரநிலை ஏற்பட்டால், துணை விமானியிடமிருந்து கட்டுப்பாட்டை கேப்டன்தான் ஏற்க வேண்டும், துணை விமானி மீண்டும் விமான கண்காணிப்புப் பணிகளுக்குத் திரும்பி, கேப்டன் அழைக்கும் வழக்கத்திற்கு மாறான சரிபார்ப்புப் பட்டியலைச் செயல்படுத்த வேண்டும். AI 171 விபத்தில், 08:08:44 மணிக்கு கேப்டனின் உடனடி அழைப்பு - இரண்டு இயந்திரங்களும் நிறுத்தப்பட்டபோது - "கட்டுப்பாடுகள் என்னுடையவை" என்றும், துணை விமானியின் உடனடி பதில் "கட்டுப்பாடுகள் உங்களுடையவை" என்றும் இருந்திருக்க வேண்டும். ஆனால், இந்த அழைப்புகள் காக்பிட் குரல் பதிவுக் கருவியில் பதிவு செய்யப்பட்டதா என்கிற கேள்வி எழுகிறது. விமான விபத்துகள் புலனாய்வுப் பிரிவு (Air Accidents Investigation Branch (AAIB)) தனது குழுவில் அனுபவம் வாய்ந்த போயிங் 787 பரிசோதகர் விமானியைக் கொண்டுள்ளது. கட்டாய அழைப்புகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால், அனுபவம் வாய்ந்த போயிங் 787 தேர்வாளர் விமானி (examiner pilot) இதை அடையாளம் கண்டிருப்பார். அப்படியானால், 'மின்சார செயலிழப்பு' அல்லது 'மென்பொருள் செயலிழப்பு' (சமூக ஊடகங்களில் கோட்பாடுகள் மற்றும் ஊகங்கள்) காரணமாக இயந்திரங்கள் பழுதடைந்தன என்ற ஊகங்கள் விபத்துக்கான ஒரு காரணியாகக் கருதப்படலாம். போயிங் 787-விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் மென்பொருள் அல்லது மின்சக்தி கோளாறு காரணமாக நகர முடியாது. அவை ஸ்பிரிங்-லோடட் சுவிட்சுகள், அவற்றை 'ரன் (Run)' கேட்டிலிருந்து உயர்த்தி, பின்னோக்கி நகர்த்திவிட வேண்டும்.  'கட்-ஆஃப்' கேட்டில் விட வேண்டும். இயந்திரங்களை மீண்டும் இயக்க 'ரன்' நோக்கி நகரும் போது, ​​'கட்-ஆஃப்' கேட்டை, முன்னோக்கி நகர்த்தி, 'ரன்' கேட்டில் விடுவது போன்ற அதே நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். டிஜிட்டல் விமான தரவுப் பதிவி (Digital Flight Data Recorder (DFDR)), அதே போல் காக்பிட் குரல் பதிவுக் கருவியின் ஒலிவாங்கி (இது காக்பிட்டில் உள்ள அனைத்து சுற்றுப்புற ஒலிகளையும் பதிவு செய்யும்) இதை தெளிவாகப் பதிவு செய்யும் என்கின்றனர். போயிங் 787 பரிசோதகர் இதை அறிந்திருப்பார், காக்பிட் குரல் பதிவுக் கருவியின் பதிவுகளைக் கேட்டிருப்பார்.


டிஜிட்டல் விமான தரவுப் பதிவி (Digital Flight Data Recorder (DFDR)) ஒவ்வொரு கட்டுப்பாட்டுக் காலத்தின் இயக்கத்தையும் கட்டுப்பாட்டு விலகல்களையும் பதிவு செய்திருக்கும். புறப்படும்போது மற்றும் இயந்திர செயலிழப்புகளுக்குப் பிறகு கட்டுப்பாடுகளை யார் கையாண்டார்கள் என்பதை எளிதில் அடையாளம் காண முடியும். வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், காக்பிட் கருவிப்  பலகையில்  எந்த அமைப்புகள் வேலை செய்யும் மற்றும் எந்த அமைப்புகள் வேலை செய்யாது என்பதுதான். மின்கலன் மற்றும் ராம் ஏர் டர்பைன் ((Ram Air Turbine - (RAT)) ஆகியவற்றிலிருந்து வரும் குறைந்த அளவிலான மின்சாரம், கேப்டனின் கருவிகள் பலகம் மற்றும் இயந்திர தீ பாதுகாப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே விநியோகத்தை கட்டுப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, துணை விமானியின் முன் உள்ள கருவி பலகை செயலிழந்து (blank) போகிறது. துணை விமானியின் முன் தகவல் எதுவும் இல்லாததால், கேப்டன் உடனடியாக கட்டுப்பாடுகளை எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும். கேப்டன் கட்டுப்பாடுகளை எடுத்துக்கொண்டார் என்பதை காக்பிட் குரல் பதிவுக்கருவி (Cockpit Voice Recorder - CVR) உறுதிப்படுத்தாவிட்டால், உண்மை நிலை மிகவும் தெளிவாகத் தெரிந்துவிடும். விமான விபத்துகள் புலனாய்வுப் பிரிவின் (Air Accidents Investigation Branch (AAIB)) தலைவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உள்துறை புலனாய்வு அமைச்சகம் கருதியதற்கான காரணம் இதுதானா என்கிற கேள்வி எழுகிறது. 


ஏற்படும் சேதம்


உண்மைகளை அடையாளம் கண்டு வெளிப்படையான அறிக்கையை வெளியிட 100 நாட்களுக்கு மேல் ஆகாது. இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் நம்பகத்தன்மை ஏற்கனவே சந்தேகத்திற்குரியதாக உள்ளது. ஒரு விபத்து அறிக்கையை மறைப்பதன் மூலம், அது இந்தக் கருத்திற்கு மேலும் வலுசேர்ப்பதாக அமையும் என்கின்றனர். அமெரிகவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு (National Transportation Safety Board (NTSB)), இங்கலாந்தின் விமான விபத்து விசாரணை பிரிவு (Air Accidents Investigation Branch (AAIB) -U.K. மற்றும் போயிங் ஆகியவை DFDR மற்றும் CVR பதிவுகளைப் பற்றி அறிந்திருக்கின்றன. அமெரிக்க மத்திய விமான நிர்வாகம் (U.S Federal Aviation Administration) மற்றும் மற்றும் போயிங் 787 விமானம் இயக்கப்படும் நாடுகளில் உள்ள விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்புகள் அனைத்தும் விமானத்தை அங்கீகரித்துள்ளன. விபத்துக்குக் காரணம் 'மின்னியல்/மென்பொருள் பிரச்சினை' என்ற எண்ணத்தை மாதிரி விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிட சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும். அமைச்சகம் இதை எவ்வளவு காலம் தாமதப்படுத்துகிறதோ, அந்த அளவுக்கு விமானிகள் மன அழுத்தத்திற்கு ஆளாகி, விமானி அறையில் முழுமையாகப் பணியில் ஈடுபாட முடியாமல் இந்தக் கோளாறுகளால் ஏற்படும்  ஆபத்துகளை எதிர்பார்த்து மனதில் மூழ்கி இருப்பதற்கான அபாயம் இருக்கிறது என்கின்றனர். 


கேப்டன் ஏ. (மோகன்) ரங்கநாதன் ஒரு முன்னாள் விமானப் பயிற்சியாளர் விமானி மற்றும் விமானப் பாதுகாப்பு ஆலோசகர் ஆவார். அவர் இந்தியாவின் சிவில் விமானப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் (Civil Aviation Safety Advisory Council (CASAC)) முன்னாள் உறுப்பினரும் ஆவார்.



Original article:

Share:

அதிக வெளிப்படைத்தன்மை : இந்தியா மற்றும் வனவிலங்கு மேலாண்மை பற்றி. . .

 வனவிலங்கு மேலாண்மையில் (management of wildlife) உலகளாவிய நம்பிக்கையை இந்தியா வீணாக்கக்கூடாது.


செப்டம்பரில், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (Special Investigation Team (SIT)) குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வனதாரா திட்டம் (Vantara project) குறித்து ஒரு அறிக்கையை வழங்கியது. இந்தத் திட்டம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் உயிரியல் பூங்காவாகும். மற்ற நாடுகளிலிருந்து வனவிலங்குகளை வாங்கும்போது மிருகக்காட்சிசாலை அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் பின்பற்றியதாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கூறியது. 30,000-க்கும் மேற்பட்ட விலங்குகளைப் பராமரிக்க தேவையான அனுமதிகள் மற்றும் சரியான வசதிகள் அதற்கு இருந்தன. எனவே, அதன் செயல்பாடுகள் குறித்த எந்தவொரு விமர்சனமும் அல்லது சந்தேகமும் முற்றிலும் "நியாயமற்றது" என்றும் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்தது. இதற்கான முழு அறிக்கையையும் மக்களுக்கு வெளியிடவேண்டாம் என்று நீதிமன்றம் முடிவு செய்து, அதன் உத்தரவில் முக்கிய கருத்துகணிப்புகளுடன் ஒரு சுருக்கத்தை மட்டுமே உள்ளடக்கியது. ஒரு உலகளாவிய அமைப்பு சில கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு, ஆபத்தான விலங்குகளை இறக்குமதி செய்ய உயிரியல் பூங்காக்களை அனுமதிக்கும் அனுமதிகளை தற்காலிகமாக நிறுத்துமாறு இந்தியாவின் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச வனவிலங்கு இயக்கம் குறித்த மிகவும் செல்வாக்கு மிக்க ஒப்பந்தமான அழிந்து வரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் குறித்த மாநாடு (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora (CITES)) குழு ஜாம்நகருக்குச் சென்ற பிறகு இது நிகழ்ந்தது. சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த உடனேயே இந்த வருகை நடைபெற்றது. அதன் விரிவான, பொதுவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரியவரும் தகவல்களின்படி, அனுமதிகள், விலங்குகளின் கொள்முதல், ஜாம்நகரில் உள்ள வசதிகள் ஆகிய அதே பிரச்சினைகளையே விசாரணை செய்தது. CITES குழுவும் வனதாராவின் உள்கட்டமைப்பு மற்றும் விலங்கு பராமரிப்புக்கான நிபுணத்துவத்தைப் பாராட்டியது. அனுமதிகள் தொடர்பான அதன் கருத்துகள் இந்தியாவின் வனவிலங்கு மேலாண்மை முறைமைமீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன, வனதாரா மீது அல்ல.

பல விலங்கு பரிமாற்றங்களுடன் கூடிய அனுமதி குறியீடுகள் ஏற்றுமதி செய்யும் நாட்டிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான ஏற்பாட்டை எப்போதும் துல்லியமாக பிரதிபலிக்கவில்லை என்ற கருத்துகணிப்புகளிலிருந்து குழுவின் சந்தேகங்கள் எழுந்தன. எடுத்துக்காட்டாக, செக் குடியரசு பல விலங்குகளை வனதாராவின் கொள்முதல் பிரிவுகளுக்கு "விற்றதாக" கூறியது. ஆனால் வனதாரா இது ஒரு விற்பனை அல்ல என்று மறுத்து, காப்பீடு மற்றும் போக்குவரத்து போன்ற தொடர்புடைய செலவுகளுக்கு மட்டுமே பணம் செலுத்துவதாகக் கூறியது. இந்திய சட்டங்கள் அதன் உயிரியல் பூங்காக்கள் வணிக ரீதியாக விலங்குகளை வாங்க அனுமதிக்காததால் இந்த வேறுபாடு முக்கியமானது. சர்வதேச மாநாடான CITES -ன் முதன்மை நோக்கம் விலங்கு கடத்தலைத் தடுப்பதாகும், மேலும் அமலாக்க அதிகாரங்கள் இல்லாத நிலையில், நாடுகள் தங்கள் வனவிலங்கு சட்டங்களில் காசோலைகளைச் செயல்படுத்தி இணைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. சைட்ஸ் (CITES) எல்லை தாண்டிய வணிக பரிவர்த்தனைகளைத் தடுக்காது, மாறாக அவை சரியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் நகர்த்தப்படும் விலங்குகளின் சரியான தடமறியலுடன் இருக்க வேண்டும் என்று மட்டுமே வலியுறுத்துகிறது. பல சந்தர்ப்பங்களில், குழு இந்தியாவின் அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான தடமறிதலை விசாரிக்க மற்ற நாடுகளின் சக அதிகாரிகளுடன் மேலும் தீவிரமாக பணியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவும் இதே போன்ற கவனிப்புகளைச் செய்திருக்கிறதா என்பது ஊகத்திற்குரிய விஷயம். வெளிப்படைத்தன்மை இல்லாமை மட்டுமே இந்தியாவின் வனவிலங்கு மேலாண்மையில் உலகளாவிய நம்பிக்கையைக் குறைக்கிறது மற்றும் மிக முக்கியமான உயிர்க்கோளங்களுக்கு தாயகமாக இருப்பதால், அது தவிர்க்க முடியாத புகழ் இழப்பாகும்.



Original article:

Share:

நிரூபிக்கும் சுமை : இந்தியா மற்றும் தேர்தல் நேர்மை குறித்து . . .

 வாக்காளர்களின் தேர்வு மட்டுமே இரகசியமானது, அவர்கள் வாக்களித்தார்களா இல்லையா என்பது அல்ல.


மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் தேர்தல் நேர்மை குறித்து அவரது கருத்துக்கள் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன. குறைந்தபட்சம், இந்தியாவின் வாக்காளர் பட்டியல்கள் ஒரு குழப்பத்தில் உள்ளன என்பதை அவரது பகுப்பாய்வு நிரூபித்துள்ளது. இதை, இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஒரு சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) மூலம் மட்டுமே சரிசெய்ய முடியும் என்று கூறுகிறது. அதில் ஒரு தொழில்முறை ஆய்வாளர்கள் குழுவின் ஆதரவுடன் ராகுல் காந்தி, ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் "போலி" (fake) என்று கூறினார். அதாவது, இந்த வாக்குகள் ‘இல்லாதவை’ அல்லது ‘நகல் வாக்குகள்’ என்று அவர் கூறினார். 2024 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த ஹரியானாவில் ஒவ்வொரு 8 வாக்காளர்களில் ஒருவர் போலியானவர் என்று கூறினார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியின் கணக்கீடுகளின்படி, மாநிலத்தில் 5.21 லட்சம் போலி வாக்காளர்களும் 93,174 செல்லாத வாக்காளர்களும் இருந்தனர். மேலும் வாக்காளர் பட்டியலில் மங்கலான அல்லது போலி புகைப்படங்களைக் கொண்ட 1,24,177 வாக்காளர்கள் இருப்பதாக அவர் கூறினார். இந்த கூற்றை நிரூபிக்க, பிற உண்மைகளுடன், ஹரியானாவில் உள்ள பல்வேறு வாக்குச் சாவடிகளில் 22 முறை இடம்பெற்ற பிரேசிலிய மாடல் ஒருவரின் புகைப்படத்தை அவர் மேற்கோள் காட்டினார். முன்னதாக, மொத்தமாக வாக்காளர்களை நீக்குதல் மற்றும் சேர்த்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளும் இருந்தன. இது பாரதிய ஜனதா கட்சியின் (BJP) வாய்ப்புகளை அதிகரித்ததாகவும், எதிர்க்கட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாகவும் காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார். இதில், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


தனது தற்காப்பு எதிர்வினையில், ECI சில தொழில்நுட்ப வாதங்களை வைத்தது, ஆனால் அவை காங்கிரஸ் குற்றச்சாட்டுகளின் தகுதி எதுவாக இருந்தாலும் சரி, சந்தேகங்களைத் தெளிவுபடுத்தவில்லை. வாக்காளர் பட்டியல்கள் தொடர்பான புகார்கள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்றும், மற்ற புகார்கள் தேர்தல் மனுக்கள் மூலம் வழக்குத் தொடரப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட இந்த வாதம் நடைமுறை ரீதியாக சரியாகத் தோன்றலாம். ஆனால், அத்தகைய நிலைப்பாடு இந்திய தேர்தல் ஆணையம் (ECI) எதிர்கொள்ளும் கடுமையான நம்பிக்கையின்மையைக் குறைக்காது. காங்கிரஸின் குற்றச்சாட்டுகள் மோசடிக்கான உறுதியான ஆதாரங்கள் அல்ல, இருப்பினும் அவை நிச்சயமாக முறையான தோல்வியை நிரூபிக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் தற்காப்பு எதிர்வினையும், தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் காங்கிரஸின் கூற்றுகளை பொதுமக்களுக்கு மிகவும் நம்பக்கூடியதாகத் தோன்றச் செய்கிறது. வாக்காளர் பட்டியலில் பல முறை இடம்பெறும் நபர்கள் உண்மையில் பல முறை வாக்களிக்கவில்லை என்பதை நிரூபிக்க சிறந்த வழி, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் செய்யப்பட்ட பதிவை ஒளிபரப்புவதாகும். வாக்காளர் தனியுரிமை மற்றும் இரகசியத்தை மேற்கோள் காட்டி இதை நியாயப்படுத்துகிறது. இருப்பினும், தேர்தல் ஆணையம் காணொலி காட்சிகள், வாக்காளர் பட்டியல்கள் மற்றும் பிற தேர்தல் விவரங்களை அணுகுவதில் கட்டுப்படுத்தப்பட்ட அனுமதியை மட்டுமே கொண்டுள்ளது. வாக்காளர் தனியுரிமை மற்றும் ரகசியத்தை மேற்கோள் காட்டி இதை நியாயப்படுத்துகிறது. உண்மையில், வாக்கு மட்டுமே ரகசியமாக இருக்க வேண்டும். வாக்காளர்களின் அடையாளங்களும் உண்மையில் யார் வாக்களித்தார்கள் என்ற பதிவும் பொதுமக்களுக்குத் வெளிப்படையாக தெரிந்திருக்க வேண்டும். தேர்தல் செயல்பாட்டில் நம்பிக்கையை வளர்ப்பதற்கான சிறந்த வழி, வாக்காளரின் தேர்வை மட்டும் ரகசியமாக வைத்துக்கொண்டு அனைத்து தகவல்களையும் பொதுவில் வெளியிடுவதாகும்.



Original article:

Share:

விளையாட்டுகளில் திராவிட நெறிமுறையை செயல்படுத்துதல் -உதயநிதி ஸ்டாலின்

 தமிழ்நாடு அரசு விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதால், விளையாட்டு வீரர்கள் (athletes) மற்றும் இணை-தடகள விளையாட்டு வீரர்களுக்கு (para-athletes) மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அதிக பதக்கங்களும் ஆதரவும் கிடைத்துள்ளன.


தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையுடனான (Tamil Nadu Champions Foundation) எனது பயணத்தில், எண்ணற்ற மற்றும் ஊக்கமளிக்கும் விளையாட்டு வீரர்களை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால், தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளம் பாரா விளையாட்டு வீரரான மனோஜின் கதை எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. அவர் தமிழ்நாடு சிறுதொழில் கழக லிமிடெட் (Tamil Nadu Small Industries Corporation Limited (TANSI)) நிறுவனத்தில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். அவரிடம் அபரிமிதமான திறமை இருந்தது. ஆனால், சரியான தளம் இல்லாததால் அவர் கவனிக்கப்படாமல் போனார்.



அப்போதுதான், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அத்தகைய திறமையாளர்களை அடையாளம் காண முதல்வர் அளித்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, அறக்கட்டளை மூலம் மனோஜுக்கு நிதி உதவி வழங்கினோம். இன்று, அந்த இளைஞர் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்து வருகிறார். வாக்குறுதியளித்தபடி, விளையாட்டு வீரர்களின் வெற்றிகளுக்குப் பிறகும் நாங்கள் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறோம். இப்போது, அவருக்கு 3 சதவீத விளையாட்டுத்துறை இடஒதுக்கீட்டின் கீழ் ஒரு பாதுகாப்பான அரசு வேலை கிடைத்துள்ளது.


கொள்கை மற்றும் நடைமுறையில்


திராவிட ஆட்சி மாதிரியை உருவாக்கிய சித்தாந்த தலைவர்கள், பொது வளங்கள் அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற ஒரு சமூகத்தை கற்பனை செய்தனர். விளையாட்டுகளில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களுக்கு வசதிகள் மற்றும் ஆதரவைப் பெறுவதைத் தடுக்கும் தடைகளை நீக்குவதே இதன் பொருள். நமது ஆட்சி "எல்லாருக்கும் எல்லாம்" (Ellarukkum Ellam) என்ற பழமொழியைப் பிரதிபலிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியபோது, ​​விளையாட்டுக்கான ஒரு தெளிவான திட்டத்தை அவர் எங்களுக்கு வழங்கினார். திறமையை முன்கூட்டியே கண்டறிதல், மாநிலம் முழுவதும் விளையாட்டு வசதிகளை உருவாக்குதல், விளையாட்டு வீரர்களுக்கு அறிவியல் பூர்வமான ஆதரவை வழங்குதல் மற்றும் தாமதமின்றி அவர்களின் வெற்றிக்கு வெகுமதி அளித்தல் போன்றவை இந்த திட்டத்தில் அடங்கும். தமிழ்நாட்டில், இந்தத் தொலைநோக்குப் பார்வை, முன்னெப்போதும் இல்லாத வகையில் உண்மையான விளையாட்டுக் கொள்கைகளாகவும், செயல்களாகவும் மாற்றப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்களும் மற்றும் அதன் விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்பும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளன. இந்தியாவின் 89 செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் 34 பேரையும், 2 உலக செஸ் சாம்பியன்களையும் தமிழ்நாடு உருவாக்கியுள்ளது. உலகளவில், இது பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளில் 4 இணை ஒலிம்பிக் (பாராலிம்பிக்) பதக்கம் வென்றவர்களையும், 12 ஒலிம்பிக் வீரர்களையும் கொண்டாடியுள்ளது. இதில் 6 பேர் தடகள மற்றும் களப் போட்டிகளில் அடங்குவர். ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (Hangzhou Asian Games), தமிழ்நாட்டைச் சேர்ந்த 46 விளையாட்டு வீரர்கள் இந்தியா 28 பதக்கங்களை வெல்ல உதவினார்கள். அதே நேரத்தில், ஹாங்சோ இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (Hangzhou Para Asian Games), அதன் 18 விளையாட்டு வீரர்கள் 15 பதக்கங்களை வென்றனர். கேலோ இணை விளையாட்டுப் போட்டிகளில் (Khelo Para Games), தமிழ்நாட்டின் பதக்கங்களின் எண்ணிக்கை 2023-ல் 42-ல் இருந்து 2025-ல் 74 ஆக அதிகரித்தது. அதே நேரத்தில், தேசிய விளையாட்டுப் போட்டிகளில், பதக்கங்களின் எண்ணிக்கை 2023-ல் 77 ஆக இருந்தது 2025-ல் 92 ஆக உயர்ந்தது. இது 20% உயர்வைக் காட்டுகிறது. 2016 முதல் 2021 வரை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Development Authority of Tamil Nadu) சுமார் ₹800 கோடியை முதலீடு செய்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில், தற்போதைய நிர்வாகம் இதை ₹1,945 கோடியாக முதல்லீட்டை உயர்த்தியுள்ளது. இது முதலீட்டில் 143% அதிகரிப்பைக் காட்டுகிறது.


2021 முதல், பல்வகை-விளையாட்டு மாவட்ட மையங்கள் (multi-sport district centres), ஒலிம்பிக் நிறுவனங்கள் (Olympic academies), உயரமான விளையாட்டுப் பயிற்சி மையம் (high-altitude training facilities), ஆறு நகரங்களில் செயற்கை தடங்கள் (synthetic tracks in six towns), சர்வதேச தரத்திலான ஹாக்கி புல்வெளிகள் (international-standard hockey turfs), மிதிவண்டி ஓட்டுவதற்கான அரங்கு (a velodrom) மற்றும் நவீன உட்புற அரங்கங்கள் (modern indoor arenas) உட்பட 28 புதிய விளையாட்டு வளாகங்களை நாங்கள் கட்டியுள்ளோம். சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சியில் உள்ள பழைய மைதானங்களை நாங்கள் மேம்படுத்தினோம். படிப்படியாகத் திட்டமிடப்பட்ட திட்டங்களின்கீழ், மாநிலம் முழுவதும் 75 தொகுதிகளில் சிறிய விளையாட்டு அரங்கங்கள் (mini stadia) மற்றும் உடற்தகுதி கொண்ட தமிழ்நாட்டை ஊக்குவிக்க நவீன உடற்பயிற்சிக் கூடங்கள் (modern gyms) இருக்கும். கிட்டத்தட்ட 60% திட்டங்கள் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ளன. கலைஞர் விளையாட்டு கருவிகள் திட்டம் (Kalaignar Sports Kit Scheme) ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் அனைத்து நகர்ப்புறங்களுக்கும் கிரிக்கெட் மட்டை, கைப்பந்து வலைகள், கபடி பாய்கள் மற்றும் உடற்பயிற்சிக்கான கருவிகள் (gym gear) உள்ளிட்ட 33 வகையான விளையாட்டு கருவிகளை வழங்குகிறது. எங்கள் உள்கட்டமைப்பு திட்டத்தில் துணை-விளையாட்டுகளையும் ஆதரிக்கிறோம். 11 மாவட்டங்களில் அணுகக்கூடிய அரங்கங்களை உருவாக்கி வருகிறோம். மேலும், புதிய மைதானங்களில் தடையற்ற அம்சங்களைச் சேர்க்கிறோம்.

தரவு சார்ந்ததாகவும், வெளிப்படையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவதற்காக தடகள ஆதரவுத் திட்டங்களை (athlete support programmes) நாங்கள் புதுப்பித்துள்ளோம். நாங்கள் பதவியேற்றபோது, ​​ELITE திட்டத்தின் மூலம் 12 விளையாட்டு வீரர்கள் மட்டுமே ஆண்டுக்கு நிதியுதவி பெற்றனர். இன்று, சதுரங்க வல்லுநர்களான ஆர். பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் உட்பட 50 சிறந்த விளையாட்டு வீரர்கள் பயிற்சி மற்றும் போட்டிக்காக ஆண்டுக்கு ₹30 லட்சம் பெறுகின்றனர். மிஷன் சர்வதேச பதக்கங்கள் திட்டத்தின் (Mission International Medal Scheme) கீழ், ஆதரிக்கப்படும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 48-லிருந்து 125-ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொருவருக்கும் சர்வதேச தகுதி பெற ஆண்டுதோறும் ₹12 லட்சம் வழங்கப்படுகிறது. சாம்பியன்ஸ் மேம்பாட்டுத் திட்டம் (Champions Development Scheme) 20 வயதுக்குட்பட்ட 200 விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுக்கு ₹4 லட்சம் உதவித்தொகையுடன் ஆதரவளிக்கிறது.


பொறுப்புடைமைக்கான ஒரு அமைப்பு


ஒலிம்பிக் வீரர்கள் (Olympians) மற்றும் முன்னனி விளையாட்டு வீரர்களின் (sports scientists) உயர்மட்டக் குழுவானது, விளையாட்டு வீரர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதைக் கண்காணிக்கிறது. அவர்கள் தெளிவான செயல்திறன் தரநிலைகளை அமைத்து அவற்றை முன்கூட்டியே பகிர்ந்து கொள்கிறார்கள். இணை-தடகள வீரர்களும் அதே அளவிலான ஆதரவையும் ஊக்கத்தொகையையும் பெறுகிறார்கள். 2021 முதல், 4,617 விளையாட்டு வீரர்களுக்கு ₹152 கோடி மதிப்புள்ள ரொக்க ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இது, முந்தைய பத்தாண்டுகாலத்தில் வழங்கப்பட்ட ₹38 கோடியைவிட நான்கு மடங்கு அதிகமாகும். ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை தங்கத்திற்கு ₹3 கோடியாகவும், வெள்ளிக்கு ₹2 கோடியாகவும், வெண்கலத்திற்கு ₹1 கோடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் விளையாட்டு நிகழ்வுக்குப் பிறகு உடனடியாக வழங்கப்படுகிறது. மின்-விளையாட்டு (e-sports) மற்றும் சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் (traditional games) உட்பட அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுகளை (Chief Minister’s Trophy games) அறிமுகப்படுத்தினோம். 2023-ல் 4.57 லட்சமாக இருந்த பதிவுகள் 2025-ல் 16.28 லட்சமாக அதிகரித்துள்ளன. இது, ஒவ்வொரு விளையாட்டு வீரரின் சுயவிவரத்தையும் கண்காணிக்கும் ஒரு பிரத்யேக விளையாட்டு மேலாண்மை அமைப்பால் (Games Management System) ஆதரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், போட்டிகள் மூலம் சுமார் 4,000 இளைஞர்களை நாங்கள் அடையாளம் கண்டு, அவர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Development Authority of Tamil Nadu (SDAT)) விளையாட்டு விடுதிகள், சிறப்பு மையங்கள் மற்றும் STAR நிறுவனங்களில் (STAR academies) சேர்க்கிறோம். வெளிப்படையான இணையவழிப் பதிவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான திறமையை தேடுதல் ஆகியவை பின்னணி அல்லது இருப்பிடம் காரணமாக எந்த தகுதியான விளையாட்டு வீரரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்கின்றன.


எங்கள் ஆட்சியின் கீழ், விளையாட்டு வீரர்களுக்கு உயிர்நாடியாக இருந்த அரசு வேலைகளுக்கான 3% விளையாட்டுத்துறை சார்பாக இடஒதுக்கீடு புத்துயிர் பெற்றுள்ளது. முந்தைய அரசாங்கத்தின் கீழ் மூன்று விளையாட்டு வீரர்கள் மட்டுமே வேலை வாய்ப்பினைப் பெற்றிருந்தாலும், எங்கள் ஆட்சியின் கீழ், 109 விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகளை செய்துள்ளோம்.


முன்னர் பிரதான விளையாட்டுகளில் இருந்து விலக்கப்பட்டிருந்த சமூகங்கள் இப்போது தமிழ்நாட்டின் வெற்றிக் கதையின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன. நுங்கம்பாக்கத்தில் உள்ள உயர் செயல்திறன் டென்னிஸ் (high-performance tennis facility) வசதியில், கிராமப்புற பெண்கள் பயிற்சி மற்றும் போட்டியிட புதிய வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். எனவே, 2023-ஆம் ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டுகளில் (Khelo India Games) தமிழ்நாட்டுப் பெண்கள் டென்னிஸில் மொத்தமுள்ள நான்கு தங்கப் பதக்கங்களையும் கைப்பற்றினர்.


முக்கியப் போட்டிகளை நடத்துவது தமிழ்நாட்டை விளையாட்டு சுற்றுலாவின் மையமாக நிலைநிறுத்துகிறது. 2022-ம் ஆண்டில், மதிப்புமிக்க 44-வது செஸ் ஒலிம்பியாட் (Chess Olympiad) போட்டியை நடத்திய முதல் இந்திய நகரமாக சென்னை ஆனது. இந்தப் போட்டி 186 நாடுகளைச் சேர்ந்த 188 அணிகள் ஒன்றுகூடி, சுமார் ₹110 கோடி பட்ஜெட்டில் நடத்தப்பட்டன. அதன் பிறகு, மாநிலம் ஸ்குவாஷ் உலகக் கோப்பை (Squash World Cup), ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை (Asian Hockey Champions Trophy), உலக சர்ஃப் லீக் (World Surf League), ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் (Asian Junior Athletics Championships), பெண்கள் டென்னிஸ் சங்கம் (WTA) மற்றும் டென்னிஸ் நிபுணர்கள் சங்கம் (ATP) டென்னிஸ் போட்டிகள் மற்றும் இந்தியாவின் முதல் ஃபார்முலா-4 தெரு இரவுப் பந்தயம் (Formula-4 street night race) போன்ற பல நிகழ்வுகளை நடத்தியது.


எதிர்காலத்தை நோக்கி


நாங்கள் தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையத்தையும் (Tamil Nadu Centre for Sports Science) அமைத்துள்ளோம், தடகள மேலாண்மைக்கான டிஜிட்டல் தளங்களில் முதலீடு செய்துள்ளோம். மேலும், பயோமெக்கானிக்ஸ், ஊட்டச்சத்து மற்றும் உளவியல் போன்ற துறைகளில் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். அடுத்த கட்டத்தில், சென்னையில் ஒரு உலகளாவிய விளையாட்டு நகரத்தை உருவாக்குவோம். நமது விளையாட்டு அறிவியல் வசதிகளை விரிவுபடுத்துவோம், நமது துணை-விளையாட்டு திட்டங்களை வலுப்படுத்துவோம்.


விளையாட்டுகள் வெறும் ஆட்டங்கள் மட்டுமல்ல; அவை சமூகப் பொறியியலின் கருவிகளும் கூட. பகுத்தறிவுவாத மற்றும் சமூக நீதி இயக்கங்களை உருவாக்கிய மாநிலத்தில், விளையாட்டுக்கான திராவிட மாதிரியை உருவாக்குவது மட்டுமே பொருத்தமானது. நமது வெற்றி பதக்கங்களில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள குழந்தைகளின் விரிந்த புன்னகைகளிலும் அளவிடப்படுகிறது.


உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை முதல்வர்.



Original article:

Share:

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) தொழிலாளர் சட்டங்களை மறுவடிவமைத்தல். -உத்தம் பிரகாஷ், ரோஹித் மணி திவாரி

 வடிவமைக்கப்பட்ட வேலைவாய்ப்பு உறவுகள் சட்டம் (Employment Relations Code), சிறிய நிறுவனங்களை அதிக இணக்க விதிகளால் சுமைப்படுத்தாமல் சட்டப் பாதுகாப்பின் கீழ் கொண்டு வர முடியும்.


Shram Shakti Niti : ஷ்ரம் சக்தி நிதி 2025 என்பது 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை (Viksit Bharat) உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்திய அரசின் வரைவு தேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு கொள்கையாகும். இந்த கொள்கை, தொழிலாளர் துறையில் சமூகப் பாதுகாப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பெண்களின் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.


புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஷ்ரம் சக்தி நிதி-2025 (Shram Shakti Niti), இந்தியாவின் வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி அமைப்பின் முக்கிய மையமாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த நிறுவனங்கள் விநியோகச் சங்கிலிகளை நகர்த்தி, உள்ளூர் திறன்களை வளர்த்து, நாட்டின் 70 சதவீதத்திற்கும் அதிகமான பணியாளர்களைப் பணியமர்த்துகின்றன. அவற்றின் முக்கியப் பலம், அவற்றின் நெகிழ்வுத்தன்மை, விரைவான முடிவுகளை எடுப்பது மற்றும் நெருக்கமாக இணைந்து செயல்படும் குழுக்களை உருவாக்குவது ஆகியவற்றின் திறனில் உள்ளது.


ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழில்துறை உறவுகள் மற்றும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் (Occupational Safety and Health (OSH)) ஆகிய நான்கு தொழிலாளர் குறியீடுகளாக கிட்டத்தட்ட 50 சட்டங்களை ஒருங்கிணைப்பது ஒரு முக்கியமான சீர்திருத்தமாகும். அடுத்தபடியாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) தன்மை, இயல்பு மற்றும் கட்டுப்பாடுகள் பெரிய நிறுவனங்களிலிருந்து வேறுபட்டவை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். MSME-கள் நம்பிக்கை அடிப்படையிலான உறவுகளைச் சார்ந்து வரையறுக்கப்பட்ட நிர்வாகத் திறனைக் கொண்டுள்ளன. அவை விதிகளிலிருந்து விலக்கு அளிக்கத் தேடுவதில்லை, ஆனால் விகிதாச்சார விதிகளை விரும்புகின்றன. வணிகங்கள் உயிர்வாழவும், வளரவும் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும் அதே வேளையில் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் விதிகள் தேவை.


தனிப்பட்ட ஈடுபாடு, குறுகியகால உற்பத்தி சுழற்சிகள் மற்றும் கடுமையான போட்டி ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் அமைப்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) செயல்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில், உரிமையாளர் HR தலைவர் பதவி, கணக்காளர் மற்றும் இணக்க அதிகாரியாகவும் உள்ளார். 10 பேர் மற்றும் ஆயிரம் பேர் கொண்ட நிறுவனத்திற்கு ஒரே மாதிரியான இணக்க நடைமுறை விதிகளைப் பயன்படுத்துவது கட்டமைப்பு பொருத்தமின்மையை உருவாக்குகிறது.


வணிக வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்காமல் வேலைகளை முறைப்படுத்த ஒரு தனி அணுகுமுறை உதவும். முறைசாரா வேலை பொதுவாக இருக்கும் துறைகளில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இது உதவும். MSME-களை வலுப்படுத்துவது, உண்மையில், தொழிலாளர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு வழியாகும்.


இந்தியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்களில் அடுத்த தர்க்கரீதியான படி, 50 தொழிலாளர்கள் வரை பணிபுரியும் நிறுவனங்களுக்கான ஒரு தனித்துவமான கட்டமைப்பான வேலைவாய்ப்பு உறவுகள் (Employment Relations (ER)) சட்டமாக இருக்கலாம். இது ஏற்கனவே உள்ள சட்டங்களை மாற்றாது. ஆனால், சிறிய நிறுவனங்களின் அளவு மற்றும் திறனுக்கு ஏற்ப நடைமுறைகளை மாற்றியமைக்கும்.


வேலைவாய்ப்பு உறவுகள் (ER) குறியீடு ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும். இது முதலாளிகளும் ஊழியர்களும் ஊதியம், பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை ஒரு பொறுப்புணர்வின் கட்டமைப்பிற்குள் ஒன்றாக முடிவு செய்ய ஊக்குவிக்கும்.


அது எவ்வாறு செயல்பட முடியும்?

வேலைவாய்ப்பு உறவுகள் (ER) சட்டத்தின்கீழ், சிறிய நிறுவனங்கள் முறையான அமைப்பில் சேர பதிவு செய்யும். ஒவ்வொரு நிறுவனமும் முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் இருவரின் பிரதிநிதிகளையும் கொண்ட ஒரு பணிக்குழுவை உருவாக்கும். இந்தக் குழுக்கள் வேலை நேரம், பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் பணியாளர் சலுகைகள் குறித்த பரஸ்பர ஒப்பந்தங்களை வேண்டுமென்றே செய்து பதிவு செய்யும். தொழிலாளர் துறை (Labour Department) கடுமையான அமலாக்கமாக செயல்படாது, மாறாக ஒரு ஆலோசகராக செயல்படும். வழிகாட்டுதல்கள், கருத்து மற்றும் கண்காணிப்பு ஆதரவில் கவனம் செலுத்தும்.


EPFO : Employees' Provident Fund Organisation - பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 


ESIC   :  Employees' State Insurance Corporation - பணியாளர் மாநில காப்பீட்டுக் கழகம்


DGFASLI :  Directorate General of Factory Advice Service & Labour Institutes -  தொழிற்சாலை

                ஆலோசனை சேவை மற்றும் தொழிலாளர் நிறுவனங்களின் இயக்குநரகம்


டிஜிட்டல் ஒருங்கிணைப்பு இந்த செயல்முறையை வெளிப்படையானதாகவும், திறமையானதாகவும் மாற்றும். ஒவ்வொரு நிறுவனமும் அதன் பணிக்குழுவும் EPFO, ESIC மற்றும் DGFASLI தரவுத்தளங்களுடன் இணைக்கப்படலாம். ஒவ்வொரு தொழிலாளரும் ஏற்கனவே ஒரு பொதுக் கணக்கு எண் (Universal Account Number (UAN)) வைத்திருப்பதால், வேலைவாய்ப்பு பதிவுகள் மற்றும் சலுகைகள் தொழிலாளர்கள் வேலைகளை மாற்றும்போது அவர்களுடன் பயணிக்க முடியும். பின்னர் நிறுவனங்கள் ஆய்வாளர்களிடமிருந்து வழிகாட்டிகளாக பரிணமித்து, நிறுவனங்கள் விதிகளைப் பின்பற்றவும், சர்ச்சைகளை மத்தியஸ்தம் செய்யவும், நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பணியிடங்களை உருவாக்கவும் உதவும்.


இந்த மாதிரியில், அமலாக்கம் தொழில்நுட்பத்தால் ஆதரிக்கப்படும் சுய ஒழுங்குமுறையை நம்பியிருக்கும். பணிக்குழு ஒப்பந்தங்களின் (WorkCouncil agreements) சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பதிவுகள் இணக்கத்திற்கான சான்றாகவும், வலுவான வேலைவாய்ப்பு நடைமுறைகளைப் பராமரிக்கும் நிறுவனங்களுக்கு எளிதான கடன் அல்லது வரிச் சலுகைகள் போன்ற சலுகைகளுக்கான அடிப்படையாகவும் செயல்படும். சலுகைகளை இணக்கத்துடன் இணைப்பது நல்ல நடத்தைக்கு வெகுமதி அளிக்கும் மற்றும் படிப்படியான முறைப்படுத்தலை ஊக்குவிக்கும்.


சிறிய அலகுகளுக்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், வேலைவாய்ப்பு உறவுகள் (ER) அணுகுமுறை இறுதியில் பெரிய நிறுவனங்களையும் பாதிக்கக்கூடும். காலப்போக்கில், தொழிலாளர் நிர்வாகம் கட்டாயத்திலிருந்து ஒத்துழைப்புக்கு மாறக்கூடும். சீரான விதிகளிலிருந்து அதிக பங்கேற்புடன் அதே இலக்குகளை அடையக்கூடிய நெகிழ்வான அமைப்புகளுக்கு மாறக்கூடும்.


மேம்படுத்தத் தக்க ஒரு சீர்திருத்த உணர்வு


ஸ்ரம் ஷக்தி நிதி 2025 ஏற்கனவே இந்த சிந்தனைப் பரிணாமத்தை பிரதிபலிக்கிறது. இது தொழிலாளர் அமைச்சகத்தை வெறும் ஒழுங்குமுறை அமைப்பாக அல்லாமல் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பாளராக நிலைநிறுத்துகிறது, மேலும் டிஜிட்டல் ஒருங்கிணைப்பையும் சிக்கல் அடிப்படையிலான ஆய்வையும் ஊக்குவிக்கிறது.


இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) வளர்ச்சிக்கான அடுத்த படி, அளவிடக்கூடிய கொள்கைகளைப் பொறுத்தது. சிறு வணிகங்களை நம்பிக்கையுடனும் மரியாதையுடனும் நடத்த வலுவான நிறுவனங்கள் கட்டமைக்கப்பட வேண்டும். அதுதான் சீர்திருத்தத்திற்கான உண்மையான அளவுகோலாக இருக்கும். முன்மொழியப்பட்ட வேலைவாய்ப்பு உறவுகள் சட்டம் (Employment Relations Code) ஒரு பாலமாகச் செயல்படும். இது தன்னம்பிக்கை என்ற கருத்தை ஒரு உண்மையான கட்டமைப்பாக மாற்றும், அங்கு நிறுவனம் மற்றும் நியாயம் இரண்டும் ஒன்றாக வளர முடியும்.


பிரகாஷ் கொச்சியில் பிராந்திய வருங்கால வைப்பு நிதி ஆணையராகவும் (Regional Provident Fund Commissioner), திவாரி திருவனந்தபுரத்தில் பிராந்திய தொழிலாளர் ஆணையராகவும் (Regional Labour Commissioner) பணியாற்றுகிறார்.


Original article:

Share:

பீகாரின் வளர்ச்சி இந்தியாவின் பிற பகுதிகளுடனான இடைவெளியைக் குறைத்துள்ளதா? -உதித் மிஸ்ரா

 பீகாரின் உற்பத்தி வளர்ச்சி மற்றும் வளர்ச்சி விகித பகுப்பாய்வு : பீகாரின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகள் அடிப்படையில் சிறியது. இதன் வளர்ச்சி விகிதங்கள், சுவாரஸ்யத்தைக் காட்டி ஏமாற்றத்தை அளிக்கலாம். தேர்தல்கள் நெருங்கி வருவதால், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கேரளா போன்ற பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நாம் பீகார் மாநிலத்தின் செயல்திறனைப் பார்க்கிறோம்.


கடந்த 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது, ​​இந்தியாவின் 3-வது அதிக மக்கள் தொகைக் கொண்ட மாநிலமாக இருந்த பீகார், மீண்டும் ஒரு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், ஒரு பெரிய பொருளாதார கேள்வி என்னவென்றால், பீகார் மாநிலத்தின் வளர்ச்சி தனக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்துள்ளதா?


குறிப்பிடும்படி, எந்த அரசியல் கூட்டணி ஆட்சி செய்தாலும் அல்லது எந்தக் கொள்கைகளை செயல்படுத்தத் தேர்ந்தெடுத்தாலும், பீகாரின் வளர்ச்சி, அதன் மக்கள் பொதுவாக இடம்பெயரும் மாநிலங்களுடன் (மகாராஷ்டிரா அல்லது பஞ்சாப் போன்றவை) பொருளாதார ஒருங்கிணைப்பைக் காட்டியுள்ளதா? அதேபோல், உத்தரபிரதேசம் போன்ற பலவீனமான பொருளாதாரங்களைக் கொண்ட அருகிலுள்ள பிற மாநிலங்களைவிட பீகார் சிறப்பாக செயல்பட முடிந்ததா?


பீகார் பற்றி இரண்டு முற்றிலும் எதிரான கருத்துக்கள் உள்ளன. ஒன்று, பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை அது ஒரு முன்னேற்றமில்லா நிலையாக  (basket case) இருந்தது. இரண்டு, பீகாரின் பிம்பம் சமீப காலங்களில் அது நடத்திய பொருளாதார மறுமலர்ச்சிக்கு நியாயமற்றதாக உள்ளது.


basket case : மிகவும் மோசமான நிலை, முன்னேற்றமில்லாத மாநிலம் அல்லது பொருளாதார ரீதியாக முற்றிலும் பலவீனமான மாநிலம் என்பதைக் குறிக்கிறது.

எனவே உண்மை எங்கே இருக்கிறது? தரவைப் பார்ப்பது சில தெளிவை அளிக்கலாம், ஆனால் எந்த பகுப்பாய்வும் அதில் உள்ள எந்தவித மாறிகள் (variables) பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தது. இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க இந்திய ரிசர்வ் வங்கியின் வருடாந்திர "இந்திய மாநிலங்கள் குறித்த புள்ளிவிவரக் கையேட்டில்" (Handbook of Statistics on Indian States) இருந்து தரவைப் பயன்படுத்தி இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கிறது.


பீகாரின் செயல்திறனைப் புரிந்து கொள்ள, நாம் இரண்டு விஷயங்களைப் பார்க்க வேண்டும். ஒன்று, பொருளாதார உற்பத்தி அல்லது பிற நடவடிக்கைகளின் அடிப்படையில் பீகார் இன்று எந்த நிலையில் உள்ளது எனபது. மற்றொன்று, மாநிலம் எவ்வளவு வேகமாக முன்னேறி வருகிறது என்பதைக் கண்டுபிடிப்பது. உதாரணமாக, இது மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத் போன்ற மாநிலங்களை பீகார் எட்டுகிறதா அல்லது உத்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களைவிட பின்தங்கியிருக்கிறதா என்பதை நாம் பார்க்க வேண்டும்.


இந்த பகுப்பாய்வின் நோக்கங்களுக்காக, பீகார் மாநிலத்தை மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, குஜராத், உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய ஆறு மாநிலங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. புவியியல் பன்முகத்தன்மையைக் காட்ட இந்த மாநிலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சிறந்த வாய்ப்புகளுக்காக பீகாரிலிருந்து பலர் இடம்பெயரும் மாநிலங்களும், பீகாரில் பின்தங்கிய பகுதிகளாகக் கருதப்படும் மாநிலங்களும் இவற்றில் அடங்கும்.


மேலும், கணக்கீடுகளின் அடிப்படை ஆண்டை மாற்றாமல் முடிந்தவரை முந்தைய தரவுகளையும் பகுப்பாய்வு பயன்படுத்துவதே இதன் முயற்சி.

1 : மொத்த பொருளாதார வெளியீடு

இது பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த அளவைக் குறிக்கிறது. இதை அளவிடப் பயன்படுத்தப்படும் மாறி "உண்மையான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி" (real GSDP) ஆகும். அட்டவணை 1 சுருக்கமாக மாற்றங்களைக் காட்டுகிறது.

அட்டவணை 1 : TABLE 1.

பீகாரின் உண்மையான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (Gross State Domestic Product(GSDP)), அதாவது பணவீக்கத்தை நீக்கிய பிறகு அதன் மொத்த பொருளாதார உற்பத்தி, 2011-12-ஆம் ஆண்டில் ₹2.47 லட்சம் கோடியிலிருந்து 2023-24-ஆம் ஆண்டில் ₹4.64 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது பீகாரின் பொருளாதாரம் 12 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது.


இருப்பினும் மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது பீகாரின் பொருளாதார உற்பத்தி எவ்வாறு மாறியது? மற்ற மாநிலங்கள் தங்கள் மொத்த உற்பத்தியை வேகமான விகிதத்தில் வளர்த்தால், பீகார், அதிகரித்த பொருளாதாரம் இருந்த போதிலும், தன்னை பின்தங்கியதாகக் காணும். 


அட்டவணை-1-ல் உள்ள முதல் பத்தி, 2011-12 ஆம் ஆண்டில் பீகாரின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியை (GSDP) விட ஆறு மாநிலங்களின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி எத்தனை மடங்கு அதிகமாக இருந்தது என்பதைக் காட்டுகிறது.


உதாரணமாக, மகாராஷ்டிராவின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) பீகாரைவிட 5.18 மடங்கு அதிகமாக இருந்தது. இரண்டாவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த விகிதம் குறைந்துவிட்டால், பீகார் மாநிலம் வளர்ந்தது மட்டுமல்லாமல், இந்த மாநிலங்களுடனான இடைவெளியைக் குறைத்துள்ளது என்பதையும் இது குறிக்கிறது.


மொத்த பொருளாதார உற்பத்தியின் அடிப்படையில் பீகார் சில மாநிலங்களுடனான இடைவெளியைக் குறைத்ததாக கணக்கீடுகள் காட்டுகின்றன. மிகப்பெரிய முன்னேற்றம் (பச்சை நிறத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது) மேற்கு வங்காளத்திலும், அதைத் தொடர்ந்து கேரளாவிலும் இருந்தது.


பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவுடன், பீகார் மாநிலத்தின் வேறுபாடு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருந்தது (விகிதம் தேக்க நிலையில் இருந்தது; மஞ்சள் நிறத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது). அதே நேரத்தில், உத்திரப் பிரதேசம் மற்றும் குஜராத்துடனான இடைவெளி அதிகரித்தது (சிவப்பு நிறத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது). ஏனெனில் இந்த காலகட்டத்தில் இந்த மாநிலங்கள் பீகாருடன் ஒப்பிடும்போது அவற்றின் மொத்த உற்பத்தியை இன்னும் அதிகளவில் அதிகரித்துள்ளன. இந்த விகிதம் அதிகரிப்பதன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, 2011-12-ஆம் ஆண்டில், குஜராத்தின் மொத்த பொருளாதார உற்பத்தி பீகாரைவிட 2.5 மடங்கு குறைவாக இருந்தது. ஆனால், அடுத்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அது பீகாரின் உற்பத்தியைவிட 3 மடங்கு அதிகமாக மாறியது.

2. தனிநபர் பொருளாதார வெளியீடு


கருத்தில் கொள்ள வேண்டிய அடுத்த முக்கியமான காரணி, இந்த மாநிலங்களின் சராசரி பொருளாதார உற்பத்தி மற்றும் அவற்றுடன் ஒப்பிடும்போது பீகாரின் நிலை மற்றும் வளர்ச்சி எவ்வாறு ஒப்பிடப்படுகிறது என்பதையும் பார்ப்பது முக்கியம்.


அதைத் தொடர்ந்து, முக்கியமானது என்னவென்றால், தனிநபர் உண்மையான நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியின் (Net State Domestic Product (NSDP)) முழுமையான நிலை (இதை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படும் சரியான மாறி) மட்டுமல்ல, பீகார் மற்ற மாநிலங்களின் வளர்ச்சி நிலைக்கு நெருங்கி சென்றுவிட்டதா என்பதும் ஆகும்.


தனிநபர் உற்பத்தி முழுமையான அடிப்படையில் அதிகரித்துள்ளதாக அட்டவணை-2 காட்டுகிறது. இது ரூ.21,750-லிருந்து ரூ.32,174-ஆக அதிகரித்துள்ளது.

அட்டவணை 2.

ஆனால் இந்த அதிகரிப்பு மற்ற மாநிலங்களுடனான இடைவெளியைக் குறைத்ததா? இல்லை,


தனிநபர் உற்பத்தியைப் பொறுத்தவரை, பீகாரின் வளர்ச்சி போதுமான அளவு வேகமாக வளரவில்லை என்றும், பீகாருக்கும் பிற மாநிலங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வரும் விகிதங்களில் காணப்படுகிறது என்றும் கணக்கீடுகள் காட்டுகின்றன. இதற்கு ஒரு நல்ல உதாரணமாக, இந்தியாவில் முதல் மாநிலமாக தன்னை சமீபத்தில் அறிவித்துக் கொண்ட கேரளா, தீவிர வறுமை இல்லாத, மாநிலமாக நிலைநிறுத்தியுள்ளது. இருப்பினும், அட்டவணை-1-ல் காட்டப்பட்டுள்ளபடி, பீகாரின் மொத்த பொருளாதார உற்பத்தி ஓரளவு கேரளாவின் மக்கள்தொகையைப் பிடித்தது. இருப்பினும், தனிநபர் உற்பத்தியால் அளவிடப்படும்போது, ​​இரு மாநிலங்களுக்கும் இடையிலான வேறுபாடு அதிகரித்துள்ளது.TABLE 2.


2011-12-ஆம் ஆண்டில், கேரளாவின் தனிநபர் பொருளாதார வெளியீடு (per capita economic output) பீகாரை விட 4.5 மடங்கு அதிகமாக இருந்தது. ஆனால், 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அது பீகாரைவிட 5 மடங்கு அதிகமாகும்.


இதன் பொருள், 2011-12 ஆம் ஆண்டில் ஒரு சாராசரி நபர் இருந்த நிலையைவிட 2023-24-ஆம் ஆண்டில் சராசரி பீகார் குடிமக்கள் (இந்த மாநிலங்களில் வசிப்பவர்களுடன் ஒப்பிடும்போது) மோசமான நிலையில் உள்ளனர்.


பொருளாதார உற்பத்தியின் ஒட்டுமொத்த அதிகரிப்பைத் தவிர, தனிநபர் தரவுகளைப் பாதிக்கும் ஒரு முக்கியக் காரணி மக்கள்தொகை அதிகரிப்பு ஆகும். 2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள்தொகை கணிப்புகளைப் பயன்படுத்தி, அவற்றை 2011 தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த பத்தாண்டுகாலத்தில் கேரளாவின் மக்கள்தொகை 6.2% மட்டுமே வளர்ந்திருக்கலாம். ஆனால், பீகாரின் மக்கள்தொகை 18.2% அதிகரித்துள்ளது என்பது தெளிவாகிறது.


பீகாரைவிட அதிக மக்கள்தொகைக் கொண்ட உத்தரபிரதேசம், இந்தப் போக்கை எவ்வாறு முறியடித்து, தனிநபர் வருமானத்தில் பீகாரை முந்தியது? ஏனெனில், இந்தப் பத்தாண்டுகளில் உத்திரப் பிரதேசத்தின் மக்கள்தொகைக் கூட 15.6% அதிகரித்திருக்கலாம்.

3. உற்பத்தித் துறையின் பங்களிப்பு


ஒரு பிராந்தியத்தின் பொருளாதாரத்தில் உற்பத்தித் துறையின் பங்கை அதிகரிப்பது கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒரு முக்கிய இலக்காகும். ஏனென்றால், வேகமாக வளர்ந்துவரும் உற்பத்தித் துறை உள்ளூர் மக்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்க சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.


அட்டவணை-3 மாநிலத்தின் பொருளாதாரத்தில் உற்பத்தித் துறையால் சேர்க்கப்பட்ட உண்மையான (அதாவது, பணவீக்கத்தின் விளைவை நீக்கிய பிறகு) மதிப்பைக் காட்டுகிறது. பயன்படுத்தப்படும் மாறி உண்மையான நிகர மாநில மதிப்பு கூட்டல் (real Net State Value) ஆகும். இது பொருளாதாரத்தில் உற்பத்தித் துறையின் பங்களிப்பின் பண மதிப்பைக் காட்டுகிறது.

அட்டவணை-3

2011-12-ஆம் ஆண்டில், பீகாரின் உற்பத்தித் துறை மதிப்பு கூட்டப்பட்ட தொகை ரூ.12,681 கோடியாகவும், 2023-24-ஆம் ஆண்டில் இந்தப் பங்களிப்பு ரூ.31,110 கோடியாகவும் அதிகரித்தது.

பீகார் முழுமையான அடிப்படையில் தெளிவாக முன்னேறியுள்ள நிலையில், இந்த புள்ளிவிவரங்கள், சில வளர்ந்த மாநிலங்களைவிட மிகக் குறைவு. உதாரணமாக, மகாராஷ்டிராவில், 2011-12-ஆம் ஆண்டில் உற்பத்தி மதிப்பு ரூ.2.06 லட்சம் கோடியாக இருந்தது.TABLE 3.

இது ஒரு முக்கிய கேள்வியை எழுப்புகிறது, பீகார் மற்ற மாநிலங்களுடன் உள்ள இடைவெளியைக் குறைத்ததா? ஆச்சரியப்படும் விதமாக, இந்த அளவீட்டில், பீகார் வழக்கத்திற்கு மாறாக எதிர்பார்த்ததைவிட சிறப்பாகச் செயல்பட்டது.


அட்டவணை-3-ல் காட்டப்பட்டுள்ளபடி, குஜராத்தைத் தவிர, இந்த பட்டியலில் உள்ள மற்ற மாநிலங்களுடனான இடைவெளியை பீகார் குறைத்துள்ளதாகத் தெரிகிறது. உதாரணமாக, 2011-12-ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவின் உற்பத்தி மதிப்பு கூட்டல் பீகாரைவிட 16.3 மடங்கு அதிகமாக இருந்தது. இது 2023-24-ஆம் ஆண்டில், இது வெறும் 10.32 மடங்கு மட்டுமே.


உண்மையில், குஜராத்தைத் தவிர, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மூன்று பெரிய மாநிலங்கள் மட்டுமே பீகாரைவிட தங்கள் முன்னிலையை அதிகரித்துள்ளன. மீதமுள்ள அனைத்து மாநிலங்களும் உற்பத்தி மதிப்பு கூட்டலில் மிதமான அதிகரிப்பைக் கண்டன.


அப்படியென்றால் பீகாரின் உற்பத்தித் துறை குறைந்த அளவிலேயே வளர்ச்சியடைந்து வருகிறது என்று அர்த்தமா? அப்படியானால், இந்த என்ன எதிர்மறையான முடிவை விளக்குகிறது?


உண்மை என்னவென்றால், இந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான மாநிலங்களில் உற்பத்தி மதிப்பு கூட்டல் (Manufacturing value-added) வளர்ச்சி பலவீனமாக உள்ளது. உதாரணமாக, மகாராஷ்டிராவில், உற்பத்தித் துறையின் மதிப்புக் கூட்டல் 2017-18-ஆம் ஆண்டில் ரூ.3.28 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், அதன் பின்னர் அது குறிப்பிடத்தக்க சரிவைப் பதிவு செய்துள்ளது. மேலும், 2023-24 ஆம் ஆண்டின் இறுதியில், அதன் மதிப்பு கூட்டல் ரூ.3.21 லட்சம் கோடியாக இருந்தது. இது 2016-17-ஆம் ஆண்டில் முதன்முதலில் எட்டிய அதே நிலையாகும்.


விளைவு


பீகாரின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகள் அடிப்படையில் சிறியது., எனவே, இதன் வளர்ச்சி விகிதங்கள் சுவாரஸ்யத்தைக் காட்டி ஏமாற்றத்தை அளிக்கலாம். தனிப்பட்ட முறையில் பார்க்கும்போது பீகார் மாநிலம் வேகமான பொருளாதார வளர்ச்சி விகிதங்களைப் பதிவு செய்கிறது என்ற தோற்றத்தை அளிக்கலாம். ஆனால், இந்த பகுப்பாய்வில் காட்டப்பட்டுள்ளபடி, பீகார் மற்ற மாநிலங்களுடனான இடைவெளியைக் குறைக்கத் தவறிவிடுவது இன்னும் சாத்தியமாகும்.


உற்பத்தி மதிப்பு கூட்டல் (manufacturing value added) பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பீகார் மிகச் சிறப்பாகச் செயல்படுவதாகத் தோன்றினாலும், தரவுகள் தவறாக வழிநடத்தும். பீகாரின் வளர்ச்சியில் உண்மையான முன்னேற்றத்தைவிட, மற்ற மாநிலங்களில் வேகம் கடுமையாகக் குறைந்து வருவதையே இது சுட்டிக்காட்டுகிறது.


Original article:

Share: