குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு தடயவியல் நிபுணர்கள் என்ன செய்கிறார்கள்? -ஷமிம் ஹக் மொண்டல்

 குண்டுவெடிப்பு அல்லது வெடிப்புச் சம்பவங்களில் தடயவியல் நிபுணர்களின் முதன்மையான பணி என்ன? ஒரு வெடிப்பு திட்டமிட்டுச் செய்யப்பட்டதா அல்லது விபத்தா என்பதை அவர்கள் எவ்வாறு தீர்மானிக்கிறார்கள்? சம்பவ இடத்திலிருந்து அவர்கள் சேகரிக்கும் மாதிரிகளில் அவர்கள் மேற்கொள்ளும் சில சோதனைகள் யாவை? தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் பல பிரிவுகள் இணைந்து செயல்படுகின்றனவா?


கடந்த நவம்பர் 10-ஆம் தேதி  புது டெல்லியில் உள்ள செங்கோட்டை வளாகம் அருகே ஒரு பெரிய குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. வளாகத்தின் சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு  i20  கார் வெடித்ததில், அருகில் இருந்த பல கார்கள், பேருந்துகள் சேதமடைந்தன. மேலும், தற்போது வரை, 13 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


தடயவியல் நிபுணர்கள் என்ன செய்கிறார்கள்?


டெல்லி தடயவியல் ஆய்வகத்தின் வெடிபொருள் துறையைச் சேர்ந்த நிபுணர்கள், காவல்துறையினருடன் சம்பவ இடத்துக்கு அரை மணி நேரத்திற்குள் வந்தனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் தடயவியல் நிபுணர்களின் முதன்மையான வேலை, அறிவியல் கண்ணோட்டத்தில் காரணத்தை உற்று நோக்கி பகுப்பாய்வு செய்கின்றனர். விபத்துக்கான காரணத்தைக் கண்டறியவும், அல்லது குற்றத்தில் ஈடுபட்டவர்களின் அடையாளத்தை அறிவியல் அடிப்படையில் சரிபார்க்கவும், அவர்கள் தேவையான மாதிரிகளைச் சேகரித்து, விரைவான ஆய்வக சோதனைகளுக்கு ஏற்பாடு செய்கின்றனர்.


தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் இருந்து மாதிரிகளைச் சேகரிப்பதாகப் பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. எந்தவொரு திறமையான தடயவியல் நிபுணருக்கும், அந்த இடம் ஏராளமான தகவல்களை வழங்குகிறது. இருப்பினும், ஒரு வெடிப்பு என்பது மற்ற குற்றங்களிலிருந்து வேறுபட்டது. இங்கு அனைத்தும் ஒரு நொடியில் சிதறுண்டு போகிறது. வெடிப்புகள் தீவிரமான அழுத்தம் மற்றும் வெப்பத்தை உருவாக்குவதால், சம்பவ இடத்தில் உள்ள அனைத்தும் சாம்பலாகிவிடுகின்றன. இதனால், நிபுணர்களின் பணி மேலும் கடினமாகிறது. இந்த சவால்கள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் முயற்சியைத் தொடர்கிறார்கள். லோக்கார்ட்டின் கொள்கை (Locard’s principle) என்ன கூறுகிறது என்றால், ஒரு குற்றவாளி சம்பவ இடத்தில் ஏதோ ஒன்றை விட்டுச் செல்வான், மற்றும் வரும்போது ஏதோ ஒன்றைத் தன்னுடன் எடுத்து வருவான் என்று குறிப்பிடுகிறது. தடயவியலில் இவை இரண்டும் சாட்சியங்களாகச் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே, சந்தேக நபரைச் சம்பவ இடத்துடன் இணைக்கும் ஒரு மாதிரி இருக்க வேண்டும். அதன் மூலம் வெடிப்பின் தீவிரம், ஆதாரம், மற்றும் என்ன வகையான வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன என்பதைக் ஊகிக்க முடியும் என்கின்றனர்


புகைப்படக் கலைஞர்களும் சம்பவ இடத்தில் இருந்து பல்வேறு கோணங்களில் இருந்து தளத்தின் படங்களை எடுக்கிறார்கள். மேலும், நிபுணர்கள் அதற்கான ஒரு வரைபடத்தைத் தயாரிக்கிறார்கள். இவை பல்வேறு பகுப்பாய்வு நிலைகளுக்கு வழிகாட்டியாகச் செயல்படுகின்றன. இவற்றுடன், சம்பவ இடத்தில் இருந்து எரிந்த பல்வேறு துண்டுகள் (இவற்றை நிபுணர்கள் எச்சங்கள் (debris) என்று அழைக்கிறார்கள்), உடைந்த காரின் பாகங்கள், கார்பன் தூள் போன்றவையும் சேகரிக்கப்படுகின்றன. இந்த மாதிரிகள் பின்னர் வெடிபொருள் நிபுணர்களால் ஆய்வகத்தில், பயன்படுத்தப்பட்ட வெடிபொருளுக்கான இரசாயனங்களின் வகையைத் தீர்மானிக்க, ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் (spectroscopic) மற்றும் குரோமடோகிராஃபிக் (chromatographic) நுட்பங்களைப் பயன்படுத்திப் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.


சம்பவம் நிகழந்த இடத்தை ஆய்வு செய்யும்போது, ஏதேனும் மின்னணு சாதனம் கண்டுபிடிக்கப்பட்டதா என்பதைக் கண்டறிவது அவசியமாகிறது.  ஏனெனில், ரிமோட் கண்ட்ரோல் வெடிப்புகளில், பொதுவாகச் சிறந்த செயல்பாட்டு நுட்பமான ஆட்டோ-டைமர் (auto-timer) பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், டெல்லி சம்பவத்தில் டைமர் (timer) அல்லது மின்னணு சுற்றோ (electronic circuit) எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.


என்ன மாதிரியான சோதனைகள் செய்யப்படுகின்றன?


ஆரம்பத் தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்த பிறகு, பின்னர் வெடிப்பு நிகழ்ந்த நேரத்தை நன்கு புரிந்துகொள்ள நிபுணர்கள் குற்றம்  நிகழந்த இடத்தை மீண்டும் கட்டமைக்க முயற்சி செய்கின்றனர். இதற்காக, நிபுணர்கள் Fourier Transform Infrared Spectroscopy (FTIR) ஆய்வு மற்றும் Attenuated Total Reflectance – Fourier Transform Infrared Spectroscopy (ATR-FTIR) ஆய்வு ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். இந்தச் சோதனைகளில், தடயவியல் நிபுணர்கள் (forensic experts) சேகரிக்கப்பட்ட மாதிரிகள் எவ்வாறு அகச்சிவப்பு ஒளியுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதைக் கண்டறிய spectrum of the absorbed light பகுப்பாய்வு செய்கின்றனர்.


வெடிபொருட்களின் இரசாயன கலவை குறிப்பிட்ட துறைக்குரிய ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோப்பியைப் (Raman spectroscopy) பயன்படுத்தி கண்டறியப்படுகிறது. வெடிப்புக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட துண்டுகளின் உருவ அமைப்பைப்  பகுப்பாய்வு செய்ய Advanced Scanning Electron Microscopy SEM பயன்படுத்தப்படுகிறது. அதே சமயம், எச்சங்களின் அடிப்படை பகுப்பாய்விற்காக Energy Dispersive X-ray - EDX நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வெடிபொருட்கள் பற்றிய இரசாயன செயல்பாடு மற்றும் நிலைத்தன்மை போன்ற தகவல்களைத் தீர்மானிக்க விஞ்ஞானிகள் வெப்பப் பகுப்பாய்வையும் (thermal analysis) பயன்படுத்துகின்றனர்.


கூடுதலாக, எந்தவொரு வெடிப்பிலும் தீ ஒரு முக்கிய காரணியாகின்றது. அது எவ்வாறு பரவுகிறது, எவ்வளவு தூரம் பரவுகிறது, மற்றும் தீயினால் ஏற்பட்ட மொத்த இழப்பு ஆகியவை அனைத்தும் புள்ளிவிவரத் தரவுகளைச் சார்ந்துள்ளன. அதனால் தான், தீயின் மூலத்தையும், தீ இவ்வளவு அதிகமாகப் பரவக் காரணமான எந்தவொரு எரியக்கூடிய பொருளின் இருப்பையும் கண்டறிய நிபுணர்கள் லேசர் அடிப்படையிலான நிகழ்விட வரைபடமாக்கம் (laser-based scene mapping), flashpoint testing போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் அது ஒரு விபத்தா அல்லது திட்டமிட்டுச் செய்யப்பட்டதா  என்பதை நிபுணர்கள் தீர்மானிக்கின்றனர்.


வெடிபொருள் நிபுணர்கள் மட்டும்தான் இதில் ஈடுபட்டுள்ளார்களா?


தற்போதைய சம்பவத்தில், வாகனங்களின்  பங்கு மிக முக்கியமானது. எனவே, தாக்குதலில் ஈடுபட்டவரைப் பற்றிய ஒரு முடிவுக்கு வர, காரில் யாரேனும் ஏறியுள்ளார்களா அல்லது இறங்கியுள்ளார்களா என்பதைக் கண்டறிய, காரின் சிசிடிவி காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்ய ஒரு சைபர் தடயவியல் நிபுணரின் பங்கு அவசியாமகிறது.


மீண்டும், ஏதேனும் ஒரு விபத்தில், குறிப்பாக வெடிகுண்டு போன்ற திட்டமிட்ட கொடூரமான குற்றங்களில், குற்றச் செயலுக்காகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் கார்களின் எஞ்சின் எண் மற்றும் சேஸ் (வாகனத்தின் மற்ற பாகங்கள் பொருத்தும் உலோகச் சட்டகம்) எண் மாற்றப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.  எனவே, பொதுவாக எட்சிங் (etching) என்று அழைக்கப்படும் ‘வெப்ப வேதியியல் பரிசோதனையின்’ (‘thermochemical examination,’) உதவியுடன் காரின் உண்மையான எஞ்சின் எண் மற்றும் சேஸ் எண்ணைக் கண்டறிவது அவசியமாகிறது. பொதுவாக, புலனாய்வு நிறுவனம் இதற்காக ஒரு தடயவியல் இயற்பியலாளரைப் பயன்படுத்துகிறது. மேலும், குற்றம் நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உடல் பாகங்களின் டிஎன்ஏ பகுப்பாய்வு கட்டாயமாகின்றது. ஏனெனில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.


எனவே, ஒரு வெடிப்புச் சம்பவம் நடந்தால், புலன்விசாரணையாளர்களுக்குக் குற்றத்தைக் கண்டறிய உதவுவதற்கும் பல்வேறு ஆதாரங்களின் அறிவியல் பகுப்பாய்வு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதை உறுதி செய்யவும், ஒரு தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் பல்வேறு பிரிவுகள் ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகின்றது. 


ஷமீம் ஹக் மொண்டல், கொல்கத்தா மாநில தடய அறிவியல் ஆய்வகத்தின் இயற்பியல் பிரிவில் ஆராய்ச்சியாளர் ஆவார்.



Original article:

Share:

சுரண்டப்படும் தொழிலாளர்கள், தொழிலாளர் கொள்கையின் வெற்று வாக்குறுதிகள் -ரெஜிமோன் குட்டப்பன்

 ஷ்ரம் சக்தி நிதி 2025 வரைவு (draft Shram Shakti Niti) இந்தியாவின் தொழிலாளர் அமைப்பில் உள்ள குறைபாடுகளை மேலும் வெளிப்படுத்துகிறது.


ஜூலை மாதத்தில், இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் கடல் உணவுத் தொழிலில் கட்டாய உழைப்பு தொடர்பான சம்பவங்களை ஆராயும் போது, ​​விவசாயம் தங்கள் குடும்பங்களை நலிவடையச் செய்ததால், மிகக் குறைந்த கூலிக்காக, கையுறைகள் இல்லாமல் குளிர் மேசைகளில் மீன் தலைகளை உரித்து, விரக்தியில் தள்ளப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களை இந்த எழுத்தாளர் சந்தித்தார். பணியாளர்களின் அரசு காப்பீடு (Employees’ State Insurance (ESI)) மற்றும் வருங்கால வைப்பு நிதி சலுகைகள் (Provident Fund benefits) வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட அவர்களுக்கு, எனது வருகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு "தினசரி கூலிகள்" (“daily wagers”) என மறுவகைப்படுத்தப்பட்டனர். ஒரு சிறிய ஊதிய உயர்வு இருந்தது. ஆனால், நிறுவனம் பங்களிப்புகளை நிறுத்தியதால் அவர்கள் இரண்டு சலுகைகளையும் இழந்தனர்.அவர்கள் கடுமையான சூழ்நிலைகளில் நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள், சுரண்டலில் சிக்கிக் கொள்கிறார்கள், இது இந்தியாவின் தொழிலாளர் அமைப்பில் அவர்களின் சட்டப் பாதுகாப்புகள் எவ்வளவு பலவீனமாக உள்ளன என்பதைக் காட்டுகிறது.


உலகின் மிக உயர்ந்த நாடான இந்தியாவில் 11 மில்லியன் மக்கள் நவீன அடிமைத்தனத்தை தாங்கிக் கொண்டிருக்கும் இந்த மோசமான பின்னணியில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம் ஷ்ரம் சக்தி நிதி-2025 வரைவை (draft Shram Shakti Niti) வெளியிட்டது. இது மனுஸ்மிருதி போன்ற நூல்களிலிருந்து "பண்டைய இந்திய அறநெறிகள்" (ancient Indian ethos) மறைக்கப்பட்ட "எதிர்காலத்திற்குத் தயாரான" (future-ready) கொள்கை என்று கூறப்படுகிறது. ஆனால், இன்று தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கொடூரமான யதார்த்தங்களை புறக்கணிக்கிறது.



'முதலாளி எளிமை'க்கான ஒரு வழக்கு


2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து, மேற்கு, வடமேற்கு, கிழக்கு மற்றும் தென்னிந்தியா முழுவதும் எஃகு தொழிற்சாலைகள், மணற்கல் குவாரிகள், கடல் உணவு ஆலைகள் மற்றும் ஜவுளி ஆலைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களிடம் எழுத்தாளர் உரையாடியுள்ளார். இந்தத் தொழிலாளர்கள் முறையான ஒப்பந்தங்கள் இல்லாமல், தினசரி ஊதியத்தில் இடைத்தரகர்களால் பணியமர்த்தப்படுகிறார்கள், அவர்களுக்கு எந்த உரிமைகளும் இல்லை. அவர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது, மேலும் எந்த சட்டப்பூர்வ சலுகைகளும் கிடைக்கவில்லை. இதன் விளைவாக, அவர்கள் இந்தியாவின் முறைசாரா முறையில் பணிபுரியும் 90% தொழிலாளர்களில் ஒரு பகுதியாகவே உள்ளனர் என்று 2024 சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization (ILO)) அறிக்கை தெரிவிக்கிறது.


இந்த அமைப்பு தொழிலாளர் சட்டங்களை மீறுகிறது. இது ஊதியத் திருட்டை செயல்படுத்துகிறது மற்றும் தொழிலாளர் கண்ணியத்தைப் பறிக்கிறது. இது அரசியலமைப்புப் பிரிவுகள் 14, 16 மற்றும் 23 இன் கீழ் அரசியலமைப்பு பாதுகாப்புகளுக்கும் எதிரானது. இந்தக் கொள்கை தொழிலாளர்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக முதலாளியின் ஆறுதலையும் கலாச்சார ஏக்கத்தையும் ஊக்குவிக்கிறது.


இந்தக் கொள்கை ஒரு சிறிய உலகளாவிய சமூகப் பாதுகாப்புக் கணக்கை அறிமுகப்படுத்துகிறது. இது பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ Provident Fund Organisation), பணியாளர்களின் அரசு காப்பீட்டுக் கழகம் (Employees’ State Insurance Corporation), பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (Pradhan Mantri Jan Arogya Yojana), இ-ஷ்ராம் (e-SHRAM) மற்றும் வாழ்நாள் முழுவதும் சுகாதாரம் (State welfare boards), ஓய்வூதியம் (pension), மகப்பேறு (maternity), விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கான (accident and life insurance) மாநில வாரியங்களை இணைக்கிறது. மேலும் வேலை, கல்வி மற்றும் பொது உதவிக்கான உரிமையை உறுதி செய்யும் அரசியலமைப்புப் பிரிவு 41-ஐ நிறைவேற்றுவதற்கான ஒரு படியாக இந்தக் கொள்கை முன்வைக்கப்படுகிறது.


இருப்பினும், இது முறையான நிதியை வழங்குவதைத் தவிர்க்கிறது. கிக் நிறுவன முதலாளிகள் பங்களிக்க எந்த விதிகளும் இல்லை. மேலும், அரசு பங்களிப்புகளுக்கு எந்த விதிகளும் இல்லை. e-SHRAM பணப் பறிமாற்றங்களை மிக குறைந்ததாக மாற்றுகிறது. 38% குடும்பங்கள் மட்டுமே கல்வியறிவு பெற்ற ஒரு நாட்டில் டிஜிட்டல் ஐடிகளைப் பயன்படுத்துவது பெண்கள், முதியவர்கள் மற்றும் குறைந்த கல்வியறிவு உள்ளவர்களை விலக்குவதற்கு வழிவகுக்கிறது. இது பிரிவு 15 மீறுகிறது. மேலும், தொழிற்சங்க பாதுகாப்புகள் இல்லாமல், தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரத்தை இழக்கிறார்கள். எனவே, முதல் கட்டத்தில் இணையவழி அல்லாத அணுகல் மற்றும் தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் அரசால் பகிரப்பட்ட நிதி ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில், அது சுரண்டலுக்கு வழிவகுக்கும்.


இந்தக் கொள்கை 2020ஆம் ஆண்டின் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறியீட்டை கண்டிப்பாக அமல்படுத்துவதாக உறுதியளிக்கிறது. இதில் ஆபத்து தணிக்கைகள் மற்றும் பாலின உணர்திறன் பாதுகாப்பு தரநிலைகள் அடங்கும். இது நியாயமான மற்றும் மனிதாபிமான வேலை நிலைமைகள் மற்றும் மகப்பேறு நிவாரணத்தை உறுதி செய்ய அரசை அனுமதிக்கும் 42வது பிரிவு மற்றும் பெண்களின் பராமரிப்பு தொடர்பான அபாயங்களைக் கையாளும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO)155வது பிரிவை   பின்பற்றுகிறது.


கடுமையான தண்டனைகள் மற்றும் போதுமான ஆய்வாளர்கள் இல்லாமல் 2047ஆம் ஆண்டுக்குள் “near-zero fatalities” அடைவதற்கான இலக்கு சாத்தியமற்றதாகத் தெரிகிறது. டிஜிட்டல் கருவிகள் முறைசாரா தொழிலாளர்களை ஒதுக்கி வைக்கின்றன. இது சமத்துவத்தைக் குறைக்கிறது. கிக் தொழிலாளர்களின் மனநலப் பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுகின்றன. மேலும், தொழிற்சங்க தணிக்கைகள் பிரிவு 19இன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளை பலவீனப்படுத்துகின்றன.


கவலைக்குரிய பகுதிகள்


தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (MoLE) வேலைவாய்ப்பு வசதியளிப்பவராக செயல்பட திட்டமிட்டுள்ளது. இது வேலை பொருத்தம், நற்சான்றிதழ் சரிபார்ப்புகள் மற்றும் திறன் சீரமைப்பு ஆகியவற்றிற்கு செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தேசிய தொழில் சேவையை (National Career Service (NCS)) பயன்படுத்தும். இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிலும் கவனம் செலுத்தப்படும். இந்த அணுகுமுறை திறன் இந்தியா முன்முயற்சிகளை இணைப்பதன் மூலம் 91.75% பட்டதாரி-வேலை பொருத்தமின்மையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், AI சார்புக்கு எதிரான பாதுகாப்புகள் இல்லாமல், சாதி மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாட்டின் ஆபத்து உள்ளது. இது பிரிவு 15 ஐ மீறக்கூடும்.


12 மில்லியன் கிக் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் புறக்கணிக்கப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில், "நெகிழ்வுத்தன்மை" என்பது சுரண்டலுக்கான ஒரு மறைப்பாகும். தெளிவான மாற்ற சலுகைகள் இல்லாதது அவர்களின் பாதுகாப்பின்மையை அதிகரிக்கிறது. இந்த சூழ்நிலையில் தொழில்நுட்பம் சார்ந்த சமத்துவமின்மையைக் குறைக்க அறநெறி தணிக்கைகள் மற்றும் தொழிற்சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகள் தேவை.


இந்தக் கொள்கை 2030-ம் ஆண்டுக்குள் மலிவு விலையில் குழந்தை பராமரிப்பு, நெகிழ்வான நிகழ்ச்சிகள், சம ஊதியம் மற்றும் பயிற்சிகள் மூலம் 35% பெண் தொழிலாளர் பங்களிப்பை (33.7% இலிருந்து) இலக்காகக் கொண்டுள்ளது. இது பிரிவு-15 இன் பாலின சமத்துவம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மாநாடு 195 இன் இயக்கம் இலக்குகளுடன் ஒத்துப்போகிறது. இருப்பினும், முறைசாரா தொழிலாளர்களுக்கு ஒதுக்கீடுகள், அபராதங்கள் அல்லது போதுமான மகப்பேறு ஆதரவு இல்லாமல், வெற்றி பெறுவது அரிது. இளைஞர்களின் மனநலம் மற்றும் சாதி-பாலின தரவு இடைவெளிகளைக் கவனிக்காமல் இருப்பது, தலித் பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களை மறைக்கிறது. எனவே, கண்ணியம், சமத்துவம் மற்றும் உண்மையான முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கு தொழிற்சங்கங்கள் தலைமையிலான தணிக்கைகள் மிக முக்கியமானவை.


இந்தக் கொள்கையின் பசுமை தொழில்நுட்பத் திட்டம், நிலக்கரித் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் மறுதிறன் வழங்குவதற்கும் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதை ஆதரிக்கிறது. இது காலநிலை நடவடிக்கை குறித்த நிலையான வளர்ச்சி இலக்கு 13 மற்றும் வாழ்வாதார உரிமையைப் பாதுகாக்கும் பிரிவு 21 உடன் ஒத்துப்போகிறது. இருப்பினும், வருமான ஆதரவு அல்லது தொழிற்சங்க ஈடுபாடு இல்லாமல் "நியாயமான மாற்றங்கள்" பொருளற்றவை மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மாநாடு 29 ஐ மீறும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. நகரத்தை மையமாகக் கொண்ட பசுமை வேலைகளுடன் சேர்ந்து, செயற்கை நுண்ணறிவு (AI) அணுகலில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையே வளர்ந்து வரும் இடைவெளி, 400 மில்லியன் முறைசாரா தொழிலாளர்களை விலக்குகிறது. இதைத் தடுக்க, முத்தரப்பு நிதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Organisation for Economic Co-operation and Development (OECD)) அளவிலான பாதுகாப்புகள் தேவை. இந்த நடவடிக்கைகள் தொழிலாளர்களின் கண்ணியத்திற்கு தீங்கு விளைவிக்கும் சுரண்டல் பசுமை பொருளாதாரத்தின் எழுச்சியைத் தடுக்கலாம்.


தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு கொள்கை மதிப்பீட்டு குறியீட்டு (Labour and Employment Policy Evaluation Index (LEPEI) தரவுத்தளங்கள் மூலம் ஒன்றிணைவதைக் குறிக்கும் இந்தக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கையை டிஜிட்டல் இந்தியாவுடன் இணைப்பதன் மூலம் பிரிவு 12 இன் தொலைநோக்கு பார்வையை, நியாயமான நிர்வாக இலக்கை அடைய இது முயல்கிறது. இருப்பினும், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் பலவீனமான அமலாக்கம் கண்காணிப்பை செயல்படுத்துவதற்கும் பிரிவு 19 இன் சுதந்திரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும் ஆபத்தை விளைவிக்கிறது.


சுரண்டல் மற்றும் டிஜிட்டல் நம்பிக்கைக்கு மத்தியில், ஷ்ரம் சக்தி நிதி-2025, வளர்ந்த இந்தியாவுக்கான "உரிமைகள் சார்ந்த, எதிர்காலத்திற்குத் தயார்" (rights-driven, future-ready) என்ற தொலைநோக்குப் பார்வையை முன்வைக்கிறது. இருப்பினும், அதன் லட்சிய வார்த்தைகளுக்குக் கீழே பலவீனமான ஒழுங்குமுறை மேற்பார்வை, டிஜிட்டல் விலக்கு, செயல்படுத்தப்படாத தண்டனைகள் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மரபுகளை பலவீனமாகப் பின்பற்றுதல் போன்ற இடைவெளிகள் உள்ளன. இவை அனைத்தும் விரிவடைந்து வரும் கிக் பொருளாதாரத்தில் தொழிற்சங்கங்களின் வீழ்ச்சியை துரிதப்படுத்தும்.


இந்த பிரச்சினை கண்ணியம், உரிமைகள் மற்றும் நீதி பற்றியது


சரியான நிதி மற்றும் வலுவான நிறுவனங்கள் இல்லாமல், உலகளாவிய சமூகப் பாதுகாப்பு என்ற இலக்கு தோல்வியடையக்கூடும். முறைசாரா அல்லது கட்டாய உழைப்பில் சிக்கித் தவிக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கு, கொள்கையின் உண்மையான வெற்றி டிஜிட்டல் அறிக்கைகளைச் சார்ந்தது அல்ல, மாறாக இந்தியாவின் உழைக்கும் ஏழைகளுக்கு கண்ணியம், உரிமைகள் மற்றும் நீதியை எவ்வளவு சிறப்பாக மீட்டெடுக்கிறது என்பதைப் பொறுத்தது.


2025–47 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள இந்த நடைமுறை விரைவாக முன்னோடித் திட்டங்களுடன் தொடங்கப்பட வேண்டும். பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக இந்த முன்னோடித் திட்டங்களில் உரிமைகள் தணிக்கைகளுடன் சேர்க்கப்பட வேண்டும். முத்தரப்பு அமலாக்கம், டிஜிட்டல் விலக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான இணையவழி அணுகல் மற்றும் வெளிப்படையான குறை தீர்க்கும் பணிகள் இருக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் இல்லாமல், இந்தக் கொள்கை இந்தியாவின் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களுக்கு உண்மையான நீதி வழங்குவதற்குப் பதிலாக குறியீட்டு சொல்லாட்சியாக மாறும் அபாயம் உள்ளது.


ரெஜிமோன் குட்டப்பன் ஒரு கட்டாய தொழிலாளர் புலனாய்வாளர்.



Original article:

Share:

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தின் குறைபாடுகள்… -பி.டி.டி. ஆச்சாரி

 வாக்காளர் உரிமையைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால கருத்துகணிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தாலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் பல கேள்விகளை எழுப்புகின்றன


தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், சத்தீஸ்கர், கோவா, குஜராத், புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட சிறப்பு தீவிர திருத்தமானது (Special Intensive Revision (SIR)) சில மாநில அரசுகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது. சிலர் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை இந்திய உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். முன்னதாக, ஜூன் மாதம் தொடங்கி பீகாரில் இதேபோன்ற ஒரு சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) மேற்கொள்ளப்பட்டது. மேலும், அங்கு சட்டமன்றத் தேர்தல் தற்போது தான் நிறைவடைந்துள்ளது.


இவ்வளவு பெரிய அளவிலான தேர்தல் நடவடிக்கையை அவசரமாகச் செய்ய முயன்றது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) எதிர்த்தன. 2024-ம் ஆண்டு சமீபத்தில் செய்யப்பட்ட ஒரு சுருக்கமான திருத்தத்திற்குப் பிறகு, விரைவில் மற்றொரு விரிவான திருத்தத்தை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு (ECI) உள்ள அதிகாரம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். வாக்காளர் உரிமையைப் பாதுகாக்க நீதிமன்றம் சில இடைக்கால கருத்துகணிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தாலும், அரசியலமைப்பு சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை.


பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நியாயப்படுத்தும் அதே வேளையில், கடைசி திருத்தம் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) 2002-03 ஆண்டில் பெரிய அளவிலான நகரமயமாக்கல், இடம்பெயர்வு மற்றும் இறப்பு காரணமாக மக்கள்தொகை மாற்றங்களுடன் நடத்தப்பட்டது. எனவே, மாநிலத்தின் தற்போதைய மக்கள்தொகை விவரக்குறிப்பை துல்லியமாகக் காட்ட ஒரு விரிவான திருத்தம் தேவை என்று இந்திய தேர்தல் ஆணையம் (ECI) கூறியது.


நேரத்தின் பிரச்சினை


வாக்காளர் பட்டியலை விரிவாகத் திருத்துவதற்கான சட்டப்பூர்வ உரிமையை இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு இந்தத் திருத்தம் ஏன் செய்யப்படுகிறது என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. தீவிர திருத்தம் என்பது ஒரு பெரிய அளவிலான கணக்கெடுப்பை உள்ளடக்கியது. இதற்கு கணக்கெடுப்பாளர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தரவுகளைச் சேகரித்து, உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளைக் கையாள்வது மற்றும் மேல்முறையீடுகள் குறித்து முடிவு செய்யும் பணியில் ஈடுபடுகிறார்கள். உண்மையில், 2003 மற்றும் 2024 ஆண்டுக்கு இடையில், மக்களவைக்கு ஐந்து பொதுத் தேர்தல்களும், மாநிலங்கள் மற்றும் ஓன்றியப் பிரதேசங்களில் பல தேர்தல்களும் நடந்துள்ளன. ஆனால், இந்தக் காலகட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் ஒரு சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நடத்தவில்லை. இது விவரிக்க முடியாதது. எனவே, பீகார் தேர்தலுக்கு சற்று முன்பும், இப்போது கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தல்களுக்கு சில மாதங்களுக்கு முன்பும் இந்திய தேர்தல் ஆணையம் ஏன் ஒரு சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நடத்தத் தேர்ந்தெடுத்தது என்பது புதிராக உள்ளது.


நாட்டில் வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் திருத்துதல் ஆகியவை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1950 இன் (Representation of the People (RP) Act) பிரிவு 21 இன் கீழ் கையாளப்படுகின்றன. இந்தப் பிரிவு மக்களவை அல்லது மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத் தேர்தலுக்கு முன் பட்டியலைத் திருத்துவதற்கும், இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் "எந்த வருடத்திலும்" திருத்துவதற்கும் ஆணையை வழங்குகிறது.


திருத்தங்கள் மற்றும் வாக்காளர் குடியுரிமை குறித்து


இந்திய தேர்தல் ஆணையம் (ECI) எந்தத் தொகுதியிலோ அல்லது அதன் ஒரு பகுதியிலோ சிறப்புத் திருத்தத்தை உத்தரவிட சட்டம் அனுமதிக்கிறது. இந்த விதியை கவனமாகப் படித்தால், பொதுத் தேர்தலுக்கு முன் திருத்தம் கட்டாயமாகும் என்பதைக் காட்டுகிறது. தேர்தல் ஆணையம் வழிகாட்டும் போது மட்டுமே மற்ற திருத்தங்கள் செய்யப்படுகின்றன. தேர்தல் ஆணையம் அத்தகைய திருத்தங்களை உத்தரவிடுவதற்கான காரணங்களையும் பதிவு செய்ய வேண்டும்.


மேலும், 1960-ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் (Registration of Electors Rules) விதி 25 ஐ கவனித்தால், பிரிவு 21(2)(a) இன் கீழ் தேர்தலுக்கு முன் செய்யப்பட்ட பட்டியல் திருத்தம் சுருக்கமான தன்மை கொண்டது. ஆனால், பிரிவு 21(2)(b) இன் கீழ் எந்த வருடத்திலும் செய்யப்படும் திருத்தம் ஒரு புதிய பட்டியலைத் தயாரிப்பது போன்ற விரிவான அல்லது தீவிரமான செயல்முறையாகும்.


தீவிர திருத்தம் என்பது ஒரு விரிவான மற்றும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல்முறையாகும். இது பொதுவாக பொதுத் தேர்தல்கள் எதிர்பார்க்கப்படாத ஆண்டுகளில் செய்யப்படுகிறது. ஏனெனில் தேர்தலுக்கு முன் செய்யப்படும் திருத்தம் அந்தத் தேர்தலுடன் தொடர்புடையது. எனவே, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செய்வது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் கீழ் அனுமதிக்கப்படவில்லை.


சிறப்பு தீவிர திருத்த (SIR) சூழலில் எழுந்துள்ள மற்றொரு முக்கியமான பிரச்சினையானது, வாக்காளர்களின் குடியுரிமையை நிரூபிக்க இந்திய தேர்தல் ஆணையம் கோரும் ஆவணங்களின் தன்மையாகும். அரசியலமைப்பின் பிரிவு 326 இன் கீழ், ஒரு வாக்காளர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். எனவே, வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை சேர்க்கும் நேரத்தில் குடியுரிமை பிரச்சினை முக்கியமானது. ஆதார் அட்டை குடியுரிமைக்கான சான்றாக இல்லை என்று ECI கருதுவதால், விண்ணப்பதாரர்களிடமிருந்து இந்திய தேர்தல் ஆணையம் கோரிய ஆவணங்களில் ஆதார் சேர்க்கப்படவில்லை.


இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவின் மூலம், வாக்காளரின் அடையாளத்தை நிறுவுவதற்கான ஆவணமாகவும் ஆதாரை ஏற்றுக்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டதன் மூலம் தீர்த்து வைத்தது. உண்மையில், இங்கு எழும் முக்கிய கேள்வி என்னவென்றால், இந்திய குடியுரிமையை நிரூபிக்க எந்த ஆவணங்கள் செல்லுபடியாகும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் தீர்மானிக்க அவற்றிற்கான அதிகாரங்கள் என்ன என்பதுதான்.


அரசியலமைப்பின் 5 முதல் 11 வரையிலான பிரிவுகள் மற்றும் 1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் (Citizenship Act) ஆகியவற்றால் குடியுரிமை நிர்வகிக்கப்படுகிறது. இவற்றின் கீழ், இந்திய குடியுரிமை பிறப்பு, வம்சாவளி, பதிவு மற்றும் இயற்கைமயமாக்கல் மூலம் பெறப்படுகிறது. சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) சூழலில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், குடியுரிமை தொடர்பான சட்டம் உள்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது, இந்திய தேர்தல் ஆணையத்தால் (ECI) அல்ல. அரசியலமைப்புப் பிரிவு 326, ஒரு குடிமகன் மட்டுமே வாக்காளராக இருக்க முடியும் என்று கூறுகிறது. எனவே சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலுக்கான பட்டியலைத் தயாரிக்க பிரத்யேக அதிகாரம் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும்போது வாக்காளரின் குடியுரிமை பற்றிய கேள்வி மிக முக்கியமானது. ஆனால், தேர்தல் ஆணையம் குடியுரிமையை எவ்வாறு தீர்மானிக்கிறது? மேலும், குடியுரிமையை நிரூபிக்க எந்த ஆவணங்கள் செல்லுபடியாகும் என்பதை தேர்தல் ஆணையம் தீர்மானிக்க முடியுமா?


குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்களைக் குறிப்பிடும் அதிகாரம் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அல்ல. இதை, இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் மட்டுமே மேற்கொள்ள முடியும். உண்மையில், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஆவணங்களை மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்தால்  சரிபார்க்க முடியும். குடியுரிமை தொடர்பான கேள்விகளை தீர்க்கவும் அல்லது இந்த நோக்கத்திற்காக சில ஆவணங்களை நிராகரிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறுவது சட்டப்பூர்வமாக சரியானதல்ல. ஆனால் பிரச்சனை என்னவென்றால், உள்துறை அமைச்சகம் இதுவரை வாக்காளர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கத் தேவையான ஆவணங்களின் விரிவான பட்டியலை அறிவிக்கவில்லை. உண்மையில், அரசியலமைப்புப் பிரிவு 326 மறைமுகமாக அரசாங்கம் அத்தகைய ஆவணங்களைக் குறிப்பிட வேண்டும் என்று கோருகிறது. அத்தகைய பட்டியல் இல்லாத நிலையில், வாக்காளர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க எந்த ஆவணங்களைக் காட்ட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை தேர்தல் ஆணையம் எடுத்துக்கொள்கிறது. உள்துறை அமைச்சகத்திடம் உள்ள அதிகாரத்தை தேர்தல் ஆணையம் எவ்வாறு பயன்படுத்த முடியும்?


ஒரு முக்கிய முடிவு


சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பிறகு (SIR) பீகாரில் எத்தனை வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது இன்னும் தெரியவில்லை. இவர்கள் 2024ஆம் ஆண்டு வரை ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருந்தவர்கள். ஆனால், பின்னர் இந்திய தேர்தல் ஆணையத்தால் தேவைப்படும் ஆவணங்களைக் காட்ட முடியாததால் குடிமக்கள் அல்லாதவர்களாகக் குறிக்கப்பட்டனர். இந்த சூழலில், லால் பாபு ஹுசைன் மற்றும் பிறர் vs தேர்தல் பதிவு அதிகாரி மற்றும் பிறர்-1995 (Lal Babu Hussein and Others vs. Electoral Registration Officer and Others) வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிக முக்கியமானது. ஒரு நபரின் பெயர் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருந்தால், அந்தப் பெயரைச் சேர்ப்பதற்கு முன்பு ஒர் அதிகாரி அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்றியதாகக் கருத வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.


அரசியலமைப்புப் பிரிவு 14, அரசு அல்லது அதன் நிறுவனங்களின் எந்தவொரு தன்னிச்சையான நடவடிக்கையையும் தடை செய்கிறது. பிரிவு 21, எந்தவொரு தனி  நபரின் சுதந்திரத்தையும் பறிப்பதைத் தடை செய்கிறது. எனவே, சட்ட மற்றும் அரசியலமைப்பு அதிகாரிகள் இந்த அரசியலமைப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும்.


P.D.T. ஆச்சாரி, மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆவார்.



Original article:

Share:

தூய எரிசக்தி மாற்றத்திற்கான செலவுகளை அளவிடுதல். -ராகேஷ் மோகன் மற்றும் ஜனக் ராஜ்

 பசுமை உற்பத்தி மற்றும் மின்கலம் (Battery) விலையில் ஏற்பட்ட பெரும் சரிவு காரணமாக, ஜி20-ல் உள்ள வளரும் நாடுகள் அதிக மூலதனத்தை நம்பி இருக்க வேண்டியதில்லை.


காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பெரும்பாலும், ஆற்றல் உற்பத்தியில் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதிலிருந்து மாறுவதிலேயே கவனம் செலுத்தி வருகின்றன. இதன் விளைவாக, பெரும்பாலான காலநிலை நிதி மதிப்பீடுகள் (climate-finance assessments) இத்தகைய மாற்றத்திற்கான செலவுகளை ஆய்வு செய்து, தூய்மையான மின் உற்பத்தி மூலங்களைப் பயன்படுத்த பெரிய முதலீடுகள் தேவை என்று தீர்மானித்துள்ளன.


ஆனால், ஒரு புதிய ஆய்வுக் கட்டுரையில், G20 அமைப்பில் உள்ள வளர்ந்துவரும் சந்தைப் பொருளாதாரங்களுக்கு (EMEs - emerging-market economies) எரிசக்தித் துறையைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற்றுவது ஒப்பீட்டளவில் கட்டுபடியாகக்கூடியது என்று நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்த ஒன்பது வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களில் (அர்ஜென்டினா, பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மெக்சிகோ, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் துருக்கி) உள்ள மின்சாரம், சாலைப் போக்குவரத்து, சிமென்ட் மற்றும் எஃகு (steel) துறைகளில் கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வைக் குறைக்க 2022 முதல் 2030-ஆம் ஆண்டு வரையிலான காலநிலை நிதித் தேவைகள் ஒரு ஆய்வின் மூலம் அளவிடப்படுகிறது. இந்த நான்கு துறைகளும் ஒட்டுமொத்த உமிழ்வுகளில் சுமார் பாதி அளவையே கொண்டுள்ளன.


தொடக்கத்தில், தூய்மையான எரிசக்தி மாற்றம் நிலையான வேகத்தில் முன்னேறி வந்தது. இந்த ஒன்பது வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களிலும்  (EMEs - emerging-market economies) கார்பன்-டை-ஆக்ஸைட் உமிழ்வில் மின் உற்பத்தித் துறை சுமார் 27 சதவீதம் ஆகும். இந்த நாடுகள் உலகளாவிய மின் உற்பத்தித் துறை உமிழ்வில் ஒட்டுமொத்தமாக 44 சதவீதத்தைக் கொண்டுள்ளன. அதிகரித்து வரும் எரிசக்தி தேவை மற்றும் காலநிலை இலக்குகளைப் பூர்த்தி செய்ய, இந்த நாடுகள் மின் உற்பத்தியில் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை படிப்படியாக நிறுத்துவதிலும், அவற்றைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மூலங்கள் மூலம் மாற்றுவதிலும் கவனம் செலுத்தியுள்ளன.


2023 மற்றும் 2030-ஆம் ஆண்டுக்கு இடையில், அவற்றின் மொத்த நிறுவப்பட்ட திறனில் தூய்மையான எரிசக்தியின் பங்கு 54 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அவற்றின் மொத்த நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் இரு மடங்காக, அதாவது,  2,150 ஜிகாவாட்டிலிருந்து (gigawatts) 4,220 ஜிகாவாட்டாக (gigawatts) அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தக் காலகட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் மிகப்பெரிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அங்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கு முறையே 45 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாகவும் 25 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாகவும் உயரும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனாவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் அதன் பங்கு 55 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் (இந்தோனேசியா மற்றும் தென் ஆப்பிரிக்கா தவிர) ஏழு நாடுகளில், 2030-ஆம் ஆண்டுக்குள் மொத்த நிறுவப்பட்ட மின் திறனில் பாதிக்கும் மேலானவை புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களிலிருந்து பெறப்படும் என்கின்றனர். 


சமீபத்திய ஆண்டுகளில் விரைவான தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் பசுமை உற்பத்தியில் சீனாவின் பெரிய அளவிலான முயற்சி ஆகியவை சூரிய மற்றும் காற்றாலைப் பண்ணைகளை நிறுவுவதற்கான செலவைக் கணிசமாகக் குறைத்ததால் இது சாத்தியமானது. உலக அளவில், 2010 மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கு இடையில் நிறுவப்பட்ட சூரிய PV (Photovoltaic) மற்றும் நிலப்பரப்பு காற்றாலைகளின் செலவு முறையே 83 சதவீதம் மற்றும் 42 சதவீதம் குறைந்துள்ளது.


கூடுதலாக, புதுமை மற்றும் குறைந்த மூலப்பொருட்களின் விலையால் உந்தப்பட்டு, மின்கலங்களின் (Battery) விலையும் குறைந்துள்ளது. 2010 மற்றும் 2023-ஆம் ஆண்டுக்கு இடையில் சுமார் 90 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். நீரேற்று சேமிப்பு நீர்மின் திட்டங்களும் இப்போது மிகவும் மலிவாக உள்ளன என்றும் குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவில், இதற்குச்  சாதகமான நிலப்பரப்பு நிலைமைகள், குறைந்த உழைப்பு மற்றும் பொருள் செலவுகள், மற்றும் ஒப்பீட்டளவில் சீராக்கப்பட்ட ஒழுங்குமுறை மற்றும் அனுமதி செயல்முறைகள் ஆகியவை காரணமாகக் கருதப்படுகிறது. 


புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் விலை குறைந்து வருவதால், G20-ன் வளர்ந்துவரும் பொருளாதாரங்களுக்கு மின் உற்பத்திக்கு 2024 மற்றும் 2030-ஆம் ஆண்டுக்கு இடையில் காலநிலை நிதியாக $121 பில்லியன் மட்டுமே தேவைப்படும் என்கின்றனர். இது வழக்கமான வணிகச் சூழ்நிலையில் தேவையான முதலீட்டிற்கு அதிகமானது என்றும் கூறுகின்றனர். குறிப்பிட்ட மதிப்பீடுகளின்படி, புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான மின் நிலையங்களுக்கான மூலதனச் செலவு இந்தக் காலகட்டத்தில் $156 பில்லியன் குறையும் என்றும் அதே சமயம் தூய்மையான மின்சாரத்திற்கான செலவு $277 பில்லியன் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


குறிப்பாக, புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான மின் மூலதனச் செலவினத்தில் இந்தியாவும் சீனாவும் முறையே $43 பில்லியன் மற்றும் $52 பில்லியன் சேமிக்கும். ஆனால், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அத்தகைய செலவினங்களை முறையே $90 பில்லியன் மற்றும் $102 பில்லியன் அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.


சேமிப்புக்கான செலவுகள்


புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான சேமிப்புச் செலவுகள் (மின்கலம் மற்றும் உந்தப்பட்ட சேமிப்பு இரண்டும்) இந்த வளர்ந்துவரும் சந்தை பொருளாதாரங்களுக்குக் கூடுதலாக $28 பில்லியன் மூலதனச் செலவை ஏற்படுத்தும். இதனால் 2024-30-ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த காலநிலை நிதித் தேவை $149 பில்லியனாக, அதாவது ஆண்டுக்கு $21 பில்லியனாக அதிகரிக்கும் என்கின்றனர். சீனாவைத் தவிர்த்து, மீதமுள்ள எட்டு வளர்ந்துவரும் சந்தை பொருளாதாரங்களுக்கு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களுக்கு மாறுவதற்கு ஒட்டுமொத்தமாக (சேமிப்புச் செலவுகள் உட்பட) $94 பில்லியன், அதாவது, ஆண்டுக்கு $13 பில்லியன் காலநிலை நிதி தேவைப்படும் என்று கணக்கிடப்படுகிறது.


இந்த மதிப்பீடுகள், மின்சாரக் கட்டமைப்புகளைத் தூய்மையான எரிசக்தி மூலங்களுக்கு ஏற்ப மாற்றுவதற்கான கூடுதல் செலவுகளைக் கணக்கில் கொள்ளவில்லை. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு மையங்களின் பெரிய அளவிலான வளர்ச்சியும், எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக ஆற்றல் தேவையை அதிகரிக்கக்கூடும் என்கின்றனர். 


வளர்ந்துவரும் ஒன்பது நாடுகளின் சந்தை பொருளாதாரங்களில் (EMEs), மின் துறையைத் தொடர்ந்து கார்பன் அற்றதாக்க அதிகபட்ச காலநிலை நிதி – மொத்த மதிப்பீட்டில் 38 சதவீதம் அல்லது $57 பில்லியன், இந்தியாவுக்குத் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது, அதேநேரத்தில், சீனாவுக்கு இதைவிடச் சற்றுக் குறைவாக, சுமார் $55 பில்லியன் தேவைப்படும் என்கின்றனர். ஏனெனில், நிறுவப்பட்ட கொள்ளளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கு அதிகரிப்பு சீனாவைவிட இந்தியாவில் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் காலநிலை நிதியின் சதவீதமானது தென் ஆப்பிரிக்காவில் 0.25 சதவீதத்துடன் அதிகபட்சமாக இருக்கும், அதைத் தொடர்ந்து இந்தியா (0.13 சதவீதம்) மற்றும் மெக்சிகோ (0.09 சதவீதம்) இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. 


பத்து ஆண்டுகளுக்கு முன்பு, எரிசக்தி மாற்றத்திற்கு நிதியளிக்க அதிக மூலதனம் தேவைப்படும் என்ற ஒருமித்த கருத்து எழுந்தது. ஆனால், இடைப்பட்ட ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விலை வியத்தகு முறையில் குறைந்துள்ளது. ஆய்வு மேற்கொள்ளபட்ட ஒன்பது வளர்ந்துவரும் சந்தை பொருளாதாரங்களில் சாலைப் போக்குவரத்து, சிமென்ட் மற்றும் எஃகு ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், மின் துறையானது, சேமிப்புச் செலவுகள் மற்றும் குறைந்த புதுப்பிக்கத்தக்கச் சுமை காரணிகளைக் கணக்கில் கொண்டபிறகும்கூட, எதிர்காலத்தில் மிகக் குறைந்த அளவு காலநிலை நிதி தேவைப்படும்  என்கின்றனர். இப்போது, வளர்ந்துவரும் சந்தை பொருளாதாரங்களில் ஆற்றல் அமைப்பைக் கார்பன் அற்றதாக்குவது மிகவும் மலிவானதாகிவிட்டதால், அவ்வாறு செய்யாமல் இருக்க எந்த காரணமும் இல்லை என்று ஆய்வின் மூலம் தெரிவிக்கின்றனர்.


மோகன், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தின் கெளரவத் தலைவர் மற்றும் சிறந்த ஆய்வாளர்,.  ராஜ், மூத்த ஆய்வாளராக உள்ளார்.



Original article:

Share:

மலபார் கடற்படைப் பயிற்சி 2025. -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி:


இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படைகள் தங்களுக்குள் குழுப்பணி மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக வடக்கு பசிபிக் பகுதியில் திங்கள்கிழமை வருடாந்திர மலபார் கடற்படைப் பயிற்சி தொடங்கியுள்ளது. இந்த சூழலில், மலபார் கடற்படைப் பயிற்சி மற்றும் குவாட் (QUAD) பற்றி அறிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள் :


1. மலபார் கடற்படைப் பயிற்சி என்பது 1992-ல் தொடங்கப்பட்ட ஒரு பலதரப்பு போர்நடத்தல் கடற்படைப் பயிற்சியாகும் (war-gaming naval exercise). இது இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு இடையேயான இருதரப்புப் பயிற்சியாகத் தொடங்கியது. இந்தப் பயிற்சியின் மேலும் இரண்டு பதிப்புகள் 1995 மற்றும் 1996-ல் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், இந்தியாவின் அணு ஆயுத சோதனைகளுக்குப் பிறகு 2002 வரை நிறுத்தி வைக்கப்பட்டது.


2. 2002 முதல், இந்தப் பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் முதன்முதலில் 2007-ல் பங்கேற்றன. ஜப்பான் 2015-ல் கடற்படைப் பயிற்சியில் நிரந்தர உறுப்பினராக இணைந்தது. மேலும், மலபார் கடற்படைப் பயிற்சி  முத்தரப்புப் பயிற்சியாக மாறியது.


3. 2020ஆம் ஆண்டில், பத்தாண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக, இந்தப் பயிற்சியில் நான்கு (Quad) உறுப்பினர்களும் பங்கேற்றனர். மலபார் கடற்படைப் பயிற்சிகளில் ஆஸ்திரேலியா இரண்டாவது முறையாக பங்கேற்றது.


4. இந்த ஆண்டு, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தகம் மற்றும் கட்டணங்கள் தொடர்பாக சில பதட்டங்கள் இருந்தபோதிலும், வடக்கு பசிபிக் பகுதியில் உள்ள குவாமில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.


குவாட் (QUAD)


1. நாற்கர பாதுகாப்பு உரையாடல் (Quadrilateral Security Dialogue (Quad)) என்பது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முறைசாரா ராஜதந்திர உரையாடலாகும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சுதந்திரமாகவும், திறந்ததாகவும், வளமாகவும் வைத்திருப்பது நான்கு நாடுகளுக்கும் பொதுவான குறிக்கோளாகும்.


2. குறிப்பாக, டிசம்பர் 2004-ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகியவை பேரிடர் நிவாரண முயற்சிகளில் ஒத்துழைக்க ஒரு முறைசாரா கூட்டணியை உருவாக்கின. 2007-ஆம் ஆண்டில், அப்போதைய ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, இந்த கூட்டணியை நாற்கர பாதுகாப்பு உரையாடல் அல்லது Quad என முறைப்படுத்தினார்.


3. இருப்பினும், உறுப்பினர்களிடையே ஒற்றுமையின்மை மற்றும் குவாட் என்பது சீன எதிர்ப்பு கூட்டணி என்பதைத் தவிர வேறில்லை என்ற குற்றச்சாட்டுகளால் இக்குழு தடைபட்டது. இதனால், கடல்சார் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட குவாடின் ஆரம்பகால பதிப்பு இறுதியில் மறைந்துவிட்டது. 2017ஆம் ஆண்டில், சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கால், நான்கு நாடுகளும் குவாடை மீண்டும் புதுப்பித்து அதன் இலக்குகளை விரிவுபடுத்தின.


4. குவாட் ஒரு பொதுவான பலதரப்பு அமைப்பைப் போல கட்டமைக்கப்படவில்லை. மேலும், ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐக்கிய நாடுகள் போன்ற ஒரு செயலகம் மற்றும் நிரந்தர முடிவெடுக்கும் அமைப்பாக குவாட் உருவாக்கப்படவில்லை. கூடுதலாக, வட ஆட்ட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பை (North Atlantic Treaty Organization (NATO)) போல் இல்லாமல், குவாட் கூட்டுப் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை உள்ளடக்குவதில்லை. அதற்கு, பதிலாக ஒற்றுமை மற்றும் இராஜதந்திர ஒற்றுமையின் வெளிப்பாடாக கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தத் தேர்வு செய்கிறது.


5. 2020-ஆம் ஆண்டில், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்ற மலபார் கடற்படைப் பயிற்சிகள், முதன்முறையாக ஆஸ்திரேலியாவையும் சேர்த்தன. இது 2017-க்குப் பிறகு முதல் அதிகாரப்பூர்வ QUAD சந்திப்பு மற்றும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நான்கு நாடுகளுக்கு இடையேயான முதல் கூட்டு இராணுவப் பயிற்சியாகும்.


6. மார்ச் 2021 -ல், QUAD தலைவர்கள் மெய்நிகர் சந்திப்பு செய்து, பின்னர் 'The Spirit of the Quad' என்ற தலைப்பில் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். இது குழுவின் அணுகுமுறை மற்றும் நோக்கங்களை கோடிட்டுக் காட்டியது.


 குவாடின் சமீபத்திய முக்கிய முயற்சிகள்                  

                 

1. குவாட் புற்றுநோய் தடுப்பு முயற்சி : இந்தோ-பசிபிக் பகுதியில் புற்றுநோயிலிருந்து உயிர்களைக் காப்பாற்ற பொது மற்றும் தனியார் வளங்களைப் பயன்படுத்துவதற்காக குவாட் இந்த திட்டத்தைத் தொடங்கியுள்ளது. முதலில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயில் (cervical cancer) கவனம் செலுத்துகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு $7.5 மில்லியன் மதிப்புள்ள மனித பாப்பிலோமா வைரஸ் (Human Papillomavirus (HPV)) சோதனை கருவிகள், கண்டறிதல் கருவிகள் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசிகளை வழங்கும்.


2. குவாட் முக்கியமான தனிமங்கள் முன்முயற்சி : வாஷிங்டனில் நடந்த இரண்டாவது குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, முக்கியமான தனிமங்களுக்கான மாறுபட்ட மற்றும் நம்பகமான உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தனிமங்களுக்கு ஒரு நாட்டைச் சார்ந்திருப்பது பொருளாதார அழுத்தம், விலை மாற்றங்கள் மற்றும் விநியோக சிக்கல்கள் மூலம் தொழில்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், இது பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு இரண்டையும் பாதிக்கும் என்றும் கூட்டு அறிக்கை கூறியது.



Original article:

Share:

அரசியல் கட்சிகளில் பெண்களுக்கு POSH சட்டப் பாதுகாப்பு தேவை. உச்ச நீதிமன்றம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். -ரோஹினி நாராயணன் & சம்ராட் பாஸ்ரிச்சா

 'பணியிடம்' என்ற வரையறையிலிருந்து அரசியல் கட்சிகளை விலக்குவதன் மூலம், நீதித்துறை பெண்களின் அரசியல் பங்கேற்பு ஏற்கனவே முறையான தடைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கான பாதுகாப்புகளைக் குறைத்துவிட்டது.


பீகார் சட்டமன்றத் தேர்தல்களில், 2,357 ஆண்களுக்கு எதிராக 258 பெண்கள் போட்டியிடுகிறார்கள். இந்த எண்ணிக்கைகள் ஒரு கதையைச் சொல்கின்றன. ஜனநாயகம் பிரதிநிதித்துவத்தில் பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், பெண்கள் இந்திய அரசியலில் ஒரு சிறு பகுதியாகவே இருக்கிறார்கள் என்பதே அது. பஞ்சாயத்துகள் முதல் கட்சி அலுவலகங்கள் வரை, அவர்களின் பங்கேற்பு பெரும்பாலும் அடையாளப் பிரதிநிதித்துவத்தின் வடிவத்தை எடுக்கிறது. பலர் சுதந்திரமான மற்றும் செயல்திறனுள்ள அரசியல் செயல்பாட்டாளர்களாக இல்லாமல் ஆண் உறவினர்களுக்கு மாற்றாக நிறுத்தப்படுகிறார்கள்.


இந்தப் பின்னணியில், யோகமாயா எம்ஜி vs கேரளா மாநிலம் மற்றும் பிறர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கவலையை ஏற்படுத்துகிறது. செப்டம்பர் மாதம், அரசியல் கட்சிகளை பணியிடத்தில் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் (Prevention of Sexual Harassment at Workplace (POSH) Act) 2013-ன் கீழ் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பை நாங்கள் மாற்ற மாட்டோம் என்றும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


இந்த வார்த்தைகளுடன், பாலியல் துன்புறுத்தல் புகார்களைக் கையாள அரசியல் கட்சிகளுக்கு உள் குழுக்கள் இருக்க வேண்டுமா என்ற முக்கியமான பிரச்சினையை ஆராய வேண்டாம் என்று நீதிமன்றம் முடிவு செய்தது. இந்த முடிவு, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பணியிடத்தையும் நிர்வகிக்கும் ஒரு கட்டமைப்பிலிருந்து அரசியல் கட்சிகளை  தனிமைப்படுத்தியது.


1997-ல், உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாகா குழு வழிகாட்டுதல்களை (Vishaka guidelines) வகுத்தது. பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கவும் நிவர்த்தி செய்யவும் வழிமுறைகளை கட்டாயமாக்கியது. நாடாளுமன்றம் 2013-ல் பணியிடத்தில் பாலியல் வன்முறை தடுப்புச் (Prevention of Sexual Harassment at Workplace (POSH) Act) சட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தக் கொள்கைகளை சட்டமாக மாற்றியது. இருப்பினும், யோகமாயா வழக்கில், கேரள உயர்நீதிமன்றம், அரசியல் கட்சிகள் சட்டத்தின் கீழ் "பணியிடங்களாக" கருதப்படுவதில்லை என்றும், உள் புகார் குழுக்களை அமைக்க சட்டப்பூர்வமாக கட்டாயமில்லை என்றும் தீர்ப்பளித்தது.


அரசியல் கட்சியில் சேருவது தன்னார்வமானது மற்றும் சம்பளம் இல்லாதது என்றும், எனவே வேலைவாய்ப்புக்கு சமமானது அல்ல என்றும் கூறப்பட்டது. அரசியல் கட்சிகளுக்கு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவது அச்சுறுத்தல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல் போன்ற "பல சிக்கல்களை உருவாக்கக்கூடும்" என்று நீதிமன்றம் கூறியது. ஆனால், இத்தகைய பகுத்தறிவு, வெளிப்படையாக எச்சரிக்கையாக இருந்தாலும், சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்து வருகிறது. இது சட்டப்பூர்வ வாசகத்தையும் சமூக உண்மைகளையும் புறக்கணிக்கிறது. சமூகத்தில் அரசியல் ஈடுபாடு பெரும்பாலும் நீடித்த, கட்டமைக்கப்பட்ட உழைப்பைக் குறிக்கிறது.


POSH சட்டத்தின் பிரிவு 2(f) ஒரு "பணியாளர்" என்பவர் தன்னார்வமாக வேலை செய்யும், ஊதியம் பெறும் அல்லது ஊதியம் பெறாத எவராகவும் இருக்கலாம் என்றும், "பணியிடத்தில்" வேலைக்காகச் செல்லும் எந்த இடமும் அடங்கும் என்றும் கூறுகிறது. சட்டமியற்றும் நோக்கம் தெளிவானதாகவும் எளிமையாகவும் இருந்தது; இருப்பினும், நீதிமன்றம் தனது தீர்ப்பை சட்டத்தின் அடிப்படையில் வழங்கத் தவறியது.


நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்கள் அரசியல் கட்சிகளில் ஆராய்ச்சியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பிரச்சாரப் பணியாளர்களாகப் பணியாற்றுகிறார்கள். சம்பளச் சீட்டு இல்லாததால் அவர்களின் பாதிப்பு அழிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பை மறுப்பது உண்மையான பிரச்சினையைவிட தொழில்நுட்ப விவகாரங்களில் கவனம் செலுத்துகிறது. பணியிடத்தில் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் நெகிழ்வான பணி சூழ்நிலைகளை உள்ளடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால், யோகமாயா வழக்கு நவீன பணியிடங்களுக்கு ஏற்ப மாற்றுவதற்கான ஒரு சட்டத்தை கட்டுப்படுத்துகிறது.


பிரிவு 14 — தவறான நடவடிக்கைகளுக்கு எதிரான உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு (inbuilt protection against abuse)


தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்த நீதிமன்றத்தின் அச்சமும் அதே அளவுக்கு தவறானது. பணியிடத்தில் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் ஏற்கனவே பிரிவு 14-ன் கீழ் பாதுகாப்புகளை வழங்குகிறது. முறையான விசாரணைக்குப் பிறகு தவறான அல்லது தீங்கிழைக்கும் புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதிக்கிறது. பாதுகாப்புக்கும் பொறுப்புணர்வுக்கும் இடையிலான சமநிலை சட்டத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அச்சத்தின் அடிப்படையில் முழு அமைப்பையும் விலக்குவது அவற்றின் இயல்பான கட்டமைப்பைப் பலவீனப்படுத்துகிறது.


வரலாற்றுரீதியாக, ஆழமான அடுக்குகளைக் கொண்ட படிநிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்போதெல்லாம் தவறாகப் பயன்படுத்தப்படும் என்ற அச்சம் உள்ளது. நீதிமன்றங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அமைப்புகள் POSH சட்டத்தின்கீழ் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் விதிவிலக்கான பலவீனத்தை உரிமை கோர முடியாது. தவறான செயல்கள் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம்; நடைமுறை வழிமுறைகள் இல்லாத காரணத்தினால் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


அரசியல் கட்சிகளுக்குள் உள்நிலை புகார் குழுக்கான (Internal Complaints Committee (ICC)) வழக்கு


ஒவ்வொரு குடிமகனும் தலைமைத்துவத்தை எட்டமுடியும் என்ற ஜனநாயக வாக்குறுதி பகுதியளவு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. 18வது மக்களவையில் பெண்கள் 13.6 சதவீதமும், மாநிலங்களவையில் சிறிதளவு அதிகமான பங்களிப்பாராக மட்டுமே உள்ளனர். 2029-ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வரவிருக்கும் ஒரு முன்னோக்கிய நடவடிக்கையாகும். ஆனால், அது போதுமானதாக இருக்காது. பிரதிநிதித்துவம் என்பது பெண்கள் அவையில் 33% இடங்களை வைத்திருப்பது மட்டுமல்ல. இது பெண்கள் பங்கேற்கவும், முடிவுகளில் செல்வாக்கு செலுத்தவும், தலைமைத்துவத்தில் தீவிரமாக இருக்கவும் கட்சிகளுக்குள் அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் வாய்ப்புகளையும் வழங்குவதன் மூலம் தொடங்குகிறது.


சரியான பாதுகாப்பு மற்றும் ஆதரவான சூழ்நிலைகள் இல்லாமல், பெண்கள் அரசியலில் பங்கேற்க போராடுகிறார்கள். இது நமது அரசியல் விவாதங்களை பலவீனப்படுத்துகிறது. முறையான ஆதரவு இல்லாமல், அவர்கள் பெரும்பாலும் அமைதியாக துன்புறுத்தலை எதிர்கொள்கிறார்கள் அல்லது அமைதியாக வெளியேறுகிறார்கள். புகார்கள் எழுப்பப்படும்போது, ​​அவை தொடர்புகள் மற்றும் அதிகாரத்தால் பாதிக்கப்படும் தெளிவற்ற வழிகளில் கையாளப்படுகின்றன.


உள்நிலை பொறுப்புத்தன்மை (Internal accountability) அரசியல் அமைப்புகளுக்கு புதியது அல்ல. தொழிலாளர் மற்றும் பழமைவாத கட்சிகள் விரிவான நடத்தை விதிகளையும் தன்னிச்சையான ஒழுங்குமுறை வழிமுறைகளையும்  வைத்திருக்கின்றன. கனடாவில், பிரச்சாரங்களின்போது துன்புறுத்தல் புகார்களைக் கையாள லிபரல் கட்சிக்கு ஒரு அதிகாரப்பூர்வமான தனி அலுவலகம் (Ombudsman’s) அலுவலகம் உள்ளது. அரசியல் கட்சிகள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் இயங்க முடியும் என்பதை இந்த உதாரணங்கள் காட்டுகின்றன. நீதிமன்றங்கள் வரம்புகளை நிர்ணயித்திருந்தால், அவற்றை சரிசெய்ய சட்டங்களும் அமைப்புகளும் மாற்றப்பட வேண்டும்.




சிந்தனைக்கான தேவை


விசாகா வழிகாட்டுதல்கள் பணியிடத்தில், மரியாதை மற்றும் சமத்துவம் சுதந்திரத்திற்கு அவசியம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. கேரள உயர்நீதிமன்றத்தின் விளக்கமும், அதை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றத்தின் மறுப்பும், அந்தக் கொள்கையின் வரம்பைக் குறைக்கின்றன. விசாகா வழிகாட்டுதல்களைவிட பணியிடத்தில் பாலியல் வன்முறை தடுப்புச் (Prevention of Sexual Harassment at Workplace (POSH) Act) சட்டத்தை மிகவும் கட்டுப்படுத்தி விளக்குவது சட்டப்பூர்வ அர்த்தமுள்ளதாக இருக்காது.


உரிமைகளைப் பறிப்பது அனுமதிக்கப்படாது என்று நீதிமன்றம் மீண்டும் மீண்டும் கூறியுள்ளது. இருந்தபோதிலும், யோகமாயா வழக்கில், பாதுகாப்புகள் அமைதியாக பலவீனப்படுத்தப்பட்டன. இது பரபரப்பான நீதிமன்றம், நேரமின்மை அல்லது நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக நடந்தாலும் பரவாயில்லை.- நீதிமன்றம் அதைப் புறக்கணிக்க முடியாது.


எழுத்தாளர்கள் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள்.



Original article:

Share: