சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கணிப்புப்படி, 2028-29 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் அளவை எட்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund (IMF)) வெளியிட்ட 'உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம்' (World Economic Outlook) என்ற தரவுத்தளத்தின்படி, 2028-29-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தற்போதைய விலையில்  $5.1 டிரில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.


சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கணிப்பின்படி, 2029-ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் $5 டிரில்லியன் என்ற இலக்கைக் கடக்க உள்ளது என்றும், இந்த சாதனையை எட்டுவதற்காக அரசாங்கம் ஒரு பரந்த அடிப்படையிலான வளர்ச்சி உத்தியைக் கையாண்டுள்ளது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் தெரிவித்தார்.


"வேளாண் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், உற்பத்தியை ஊக்குவித்தல், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (Micro, Small and Medium Enterprises (MSMEs)) ஆதரவளித்தல், உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல், தளவாடங்களை மேம்படுத்துதல் மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்குதல், வருமான வரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தங்கள் மூலம் திறமையான மற்றும் ஒழுங்கமைப்பாக்கப்பட்ட வரி முறையை உருவாக்குதல், புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல்மயமாக்கலை ஊக்குவித்தல், மனித மூலதனத்தை வலுப்படுத்துதல் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தும் ஒரு பரந்த அடிப்படையிலான வளர்ச்சி உத்தியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது என்று நிதியமைச்சர் கூறினார்.




இந்த உத்தியானது, பொது மூலதனச் செலவினங்களுக்குத் தொடர்ச்சியான முக்கியத்துவம் அளித்தல், அந்நிய நேரடி முதலீட்டு (FDI) முறையைத் தாராளமயமாக்குதல், ஏற்றுமதியை அதிகரித்தல் மற்றும் வேகமான நிதி மேலாண்மை மற்றும் விலை நிலைத்தன்மை மூலம் பேரியல் பொருளாதார (macroeconomic) அடிப்படைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றால் பூர்த்தி செய்யப்படுகிறது.


மேலும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (Free Trade Agreements  (FTA)) மற்றும் விரிவான பொருளாதார கூட்டாண்மை/ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் (Comprehensive Economic Partnership/Cooperation Agreements (CEPA/CECA)) ஆகியவற்றின் வலையமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம், நாட்டின் வர்த்தகத் மீள்திறனை (Trade Resilience) அரசு வலுப்படுத்தி வருகிறது என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.


உற்பத்தித்துறையை மேம்படுத்துவதற்காக, உற்பத்தி சார்ந்த ஊக்கத்திட்டம், மேக் இன் இந்தியா, தேசிய தளவாடக்கொள்கை, தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு மற்றும் பிரதமர் கதிசக்தி திட்டம் போன்ற முயற்சிகள் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல், முதலீடுகளை ஈர்த்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் நிதியமைச்சர் கூறினார்.


பிரதமரின் கதிசக்தி திட்டம் (PM GatiShakti scheme) என்றால் என்ன?


பிரதமரின் கதிசக்தி திட்டம் என்பது இந்தியாவில் அடிப்படை உள்கட்டமைப்பு, வளர்ச்சியை ஒருங்கிணைத்து, அதை வேகமாக செயல்படுத்துவதற்காக 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய அளவிலான திட்டமாகும்.


இந்த முயற்சிகளுக்குத் துணையாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (Micro, Small and Medium Enterprises (MSME)) துறையை வலுப்படுத்தும் வகையில், கடன் உத்தரவாத வரம்புகளை உயர்த்துதல், அவசரகால கடன் உத்தரவாதத் திட்டம் (Emergency Credit Guarantee Scheme (ECGS)), சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வகைப்பாடு விதிமுறைகளை மறு ஆய்வு செய்தல், வர்த்தகப் பெறுதல்களுக்கான தள்ளுபடி அமைப்பு (Trade Receivables Discounting System (TReDS)) சூழலை வலுப்படுத்துதல், எளிமைப்படுத்தப்பட்ட உத்யம் (Udyam) பதிவு, அரசின் மின்னணு சந்தைத் தளம் (Government e-Marketplace  (GeM)) மூலம் அதிக அணுகல் வழங்குதல் மற்றும் பிரதமர் விஸ்வகர்மா (PM Vishwakarma) திட்டத்தின்கீழ் ஆதரவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு இலக்கு நோக்கிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று நிதியமைச்சர் கூறினார்.


டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்கி நிறுவுதல், உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres (GCCs)) ஊக்குவித்தல், மருத்துவ மதிப்புப்பயணம் மற்றும் ஆரஞ்சுப் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் சூழலமைப்பை வலுப்படுத்துதல், திறன் மேம்பாடு மற்றும் பணியாளர்களின் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான இலக்கு சார்ந்த முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் சேவைத்துறை வலுப்படுத்தப்பட்டு வருகிறது என்று நிதியமைச்சர் கூறினார்.


ஆரஞ்சு பொருளாதாரம் (Orange Economy) என்றால் என்ன?


 ஆரஞ்சு பொருளாதாரம் என்பது படைப்பாற்றல், கலை, கலாச்சாரம் மற்றும் அறிவுசார் சொத்துகளை அடிப்படையாகக்கொண்டு வருமானம், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு பொருளாதார அமைப்பாகும்.


2026–27-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் வரவு செலவு அறிக்கையில், சேவைத்துறையின் வளர்ச்சித் திறனை முழுமையாக வெளிக்கொண்டு வரும்  வகியில், தேசிய விருந்தோம்பல் நிறுவனத்தை (National Institute of Hospitality) அமைத்தல், பிராந்திய மருத்துவ மையங்களை (Regional Medical Hubs) உருவாக்குதல், துணை மருத்துவப் பணியாளர் கல்வி நிறுவனங்களை விரிவுபடுத்துதல், அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (Animation, Visual Effects, Gaming and Comics) உள்ளடக்க உருவாக்குநர் ஆய்வகங்களை நிறுவுதல் மற்றும் பல்கலைக்கழக நகரங்களுக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை 2026-27-ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் வரவு செலவு அறிக்கையில் அறிவித்துள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.


வேளாண்மைத்துறையில், பாசன வசதிகளில் முதலீட்டை ஊக்குவித்தல், புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளுதல், டிஜிட்டல் வேளாண்மையை மேம்படுத்துதல், பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவித்தல், அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் வேளாண் பொருட்களுக்கு சிறந்த சந்தை சேவைகளை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலம் உற்பத்தித்திறனை உயர்த்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.


கடந்த சில ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் வரவு செலவு அறிக்கைகள், வளர்ச்சிக்கு முக்கியக் காரணிகளாக இருந்து வரும் குறைமின்கடத்திகள், மின்னணுவியல், உயிரி-மருந்துகள், அரிய வகை கனிமங்கள், ரசாயனங்கள், மூலதனப்பொருட்கள், தூய எரிசக்தி மற்றும் மேம்பட்ட உற்பத்தி போன்ற முக்கியத்துறைகளை அடையாளம் கண்டு, அவற்றிற்கு முன்னுரிமை அளித்துள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.


தொழில்துறைத் தேவைகளுக்கு ஏற்ற திறன் மேம்பாட்டை வலுப்படுத்துவதையும், வளர்ந்து வரும் இந்தத் துறைகளுக்குத் தேவையான எதிர்காலத் தயார்நிலை கொண்ட பணியாளர்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட பிரதமர் திறன் மற்றும் வேலைவாய்ப்புத் திறன் மாற்றுத் (Pradhan Mantri Skilling and Employability Transformation through Upgraded ITIs (PM-SETU)) திட்டம், இந்த முயற்சிகளுக்கு வலுசேர்க்கிறது என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார்.


ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த அனைத்து நடவடிக்கைகளும் இந்தியாவின் நடுத்தர கால பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளை வலுப்படுத்தும் என்றும், 2047-ஆம் ஆண்டுக்குள் “வளர்ந்த இந்தியா” (Viksit Bharat) என்ற நீண்டகால தேசிய இலக்கை அடைவதற்கு உதவியாக இருக்கும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.


மற்றொரு கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024–25-ஆம்  நிதியாண்டில், நிதிச் சொத்துகளின் பத்திரப்படுத்தல் மற்றும் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு உரிமைகளை அமல்படுத்தும் சட்டம், 2002 (Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act  (SARFAESI Act)) கீழ் வங்கிகள் மொத்தம் 2,15,709 வழக்குகளை பதிவு செய்துள்ளன. அவற்றில் தொடர்புடைய மொத்தத் தொகை ₹1,03,180 கோடி ஆகும் நிதியமைச்சர் தெரிவித்தார்.


இதன் மூலம் வங்கிகளால் ₹32,466 கோடியை மீட்க முடிந்தது என்று நிதியமைச்சர் கூறினார்.


Original articles: Indian economy to hit $5-trillion mark in FY29 as per IMF: Finance Minister Nirmala Sitharaman.

Share: