சாம் பிட்ரோடா பேச்சின் சர்ச்சை : வாரிசுரிமை வரி (inheritance tax) என்றால் என்ன ? -Aanchal Magazine

 செல்வத்தை சமமாகப் பகிர்ந்து கொள்ளவும், வருமான இடைவெளியைக் குறைக்கவும் வாரிசுரிமை வரியைப் (inheritance tax) பயன்படுத்துவதைப் பற்றி மக்கள் அதிகம் பேசினர். இந்தியாவில், காலப்போக்கில் எஸ்டேட் வரி (estate duty), செல்வ வரி (wealth tax) மற்றும் பரிசு வரியை (gift tax) அகற்றினர்.


ராஜீவ் காந்தியின் முன்னாள் ஆலோசகரும், ராகுல் காந்தியின் கூட்டாளியுமான சாம் பிட்ரோடா, அமெரிக்காவில் பரம்பரை வரி ஒரு "சுவாரஸ்யமான சட்டம்"  என்று கூறினார். குழந்தைகள் உயிருடன் இருக்கும்போதும், இறந்த பிறகும் கொள்ளையடிக்க விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.


பிட்ரோடாவின் அறிக்கைக்கு பாஜக எதிர்வினையாற்றியது. அதே நேரத்தில், காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், வாரிசுரிமை வரியை அறிமுகப்படுத்தும் எந்த திட்டமும் இல்லை என்று மறுத்தார். உண்மையில் மோடி அரசாங்கம்தான் அவ்வாறு செய்ய விரும்பியது என்று கூறினார்.


வாரிசுரிமை வரி என்பது செல்வத்தை மறுபங்கீடு செய்வதற்கும் வருமான சமத்துவமின்மையை குறைப்பதற்கும் ஒரு வழியாக அடிக்கடி பேசப்படுகிறது. இந்தியாவில் ஒரு காலத்தில் எஸ்டேட் வரி (estate duty) என்ற வரி இருந்தது. இது 1953ல் அறிமுகப்படுத்தப்பட்டு 1985ல் ராஜீவ் காந்தியின் அரசால் ஒழிக்கப்பட்டது. கூடுதலாக, இந்தியாவில் செல்வம் தொடர்பான பிற வரிகள் இருந்தன. இவற்றில் செல்வ வரி (wealth tax) மற்றும் பரிசு வரி (gift tax) ஆகியவை அடங்கும். செல்வ வரி (wealth tax) 2015 இல் ரத்து செய்யப்பட்டது, மற்றும் பரிசு வரி 1998 இல் ரத்து செய்யப்பட்டது.


வாரிசுரிமை வரியை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான யோசனை 2019மக்களவைத் தேர்தலின் போதும், ஜூலை பட்ஜெட் தயாரிப்புகளின் போதும் பேசப்பட்டது.

சமத்துவமான சமூகங்களை உருவாக்க கோடீஸ்வரர்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில்  அதிகரித்து வருகிறது. உலகளாவிய குறைந்தபட்ச தனியார் நிறுவனங்கள் விகிதத்தை (corporate tax rate) அறிமுகப்படுத்துவது பற்றி விவாதங்கள் நடந்து வருகின்றது. அமெரிக்காவில், $100 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்ட தனிநபர்களுக்கு குறைந்தபட்சம் 25% வரி விதிக்கும் திட்டம் உள்ளது. பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஜி20 பிரகடனத்தில்  வாதிடுகின்றன. ஜூலை மாதத்திற்குள் பெரும் பணக்காரர்களுக்கு வரி விதிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.


செல்வத்திற்கு வரி விதிக்கும் வழிகள்


சம்பாதித்த பணம், சொந்தமான பணம் அல்லது சொந்தமானவற்றின் அடிப்படையில் பணம் அனுப்பப்படும் அல்லது மாற்றப்படும் போது வரி விதிக்கப்படுகிறது. இது ஒரு முறை அல்லது மீண்டும் மீண்டும் நிகழலாம். உதாரணத்துக்கு, சொந்தமானதிலிருந்து பணம் சம்பாதிக்கும்போது அல்லது சொந்தமானதை வேறொருவருக்கு மாற்றும்போது வரி செலுத்தலாம். இந்த வரிகளில் சொத்துக்களிலிருந்து வரும் லாபங்கள் மீதான மூலதன ஆதாய வரி, அத்துடன் செல்வம் அல்லது சொத்துக்களை கடந்து செல்லும்போது செல்வ வரி, வாரிசுரிமை வரி, எஸ்டேட் வரி அல்லது பரிசு வரி போன்ற பரிமாற்ற வரிகளும் அடங்கும்.


சில நேரங்களில், வரிகள்,  நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் மற்றும் உங்களுக்கு சொந்தமானது இரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. பைடன் நிர்வாகம் 'பில்லியனர்களுக்கான குறைந்தபட்ச வருமான வரி' ( ‘Billionaire Minimum Income Tax’) என்று அழைக்கப்படும் ஒரு சட்டத்தை பரிந்துரைத்தது. இது கோடீஸ்வரர்கள் தங்கள் அனைத்து வருமானத்திற்கும் குறைந்தது 25% வரி செலுத்த வேண்டும். இந்த வரிவிதிப்பு வெளியில் தெரியாத லாபங்களை உள்ளடக்கும். 


இந்தியாவில் வரிகள்


வாரிசுரிமை வரியாக இருந்த செலவ வரி ஆரம்பத்தில் ரூ. 1 லட்சமாக இருந்தது. மேலும் ரூ. 20 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள  சொத்துகளுக்கு 5% முதல் 40% வரை வரி விகிதங்கள் உயர்த்தப்பட்டன. 1953 இன் எஸ்டேட்  வரி  சட்டம் (Estate Duty Act, 1953) 1958 இல் மாற்றப்பட்டது, அதன்படி, பொறுப்புள்ள நபரின் (accountable person) வரையறை மாற்றப்பட்டது, பொருந்தக்கூடிய வரம்பு குறைக்கப்பட்டது மற்றும் அடுக்குகள் மறுவரையறை (redefine slabs) செய்யப்பட்டன.


செல்வ வரி இப்போது இல்லை என்றாலும், மக்கள் இன்னும் வாரிசுரிமை வரி பற்றி பேசுகிறார்கள். டிசம்பர் 2018 இல், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வளர்ந்த நாடுகளில், மருத்துவமனைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற இடங்கள் வாரிசுரிமை வரியின் காரணமாக பெரிய நன்கொடைகளைப் பெறுகின்றன. ஆனால் இந்தியாவில் பெரிதாக பேசப்படுவதில்லை என்று ஒரு நிகழ்வில் குறிப்பிட்டார்.


2015-16 ரேந்திர மோடி தலைமையிலான அரசு பட்ஜெட்டில் செல்வ வரியை ரத்து செய்தது. இது பெரும் பணக்காரர்களுக்கு மாற்றாக கூடுதல் (super rich) கட்டணத்தை அறிமுகப்படுத்தியது. 30 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட சொத்துகளுக்கு சொத்து வரி 1% என்று அருண் ஜெட்லி விளக்கினார். இதில் பங்குகள், பத்திரங்கள் மற்றும் முதல் வீடு ஆகியவை சேர்க்கப்படவில்லை. 2013-14ஆம் ஆண்டில் சொத்துவரி மூலம் வசூலான வரி ரூ.1,008 கோடி மட்டுமே. அதற்கு பதிலாக, அரசாங்கம் 2% கூடுதல் கட்டணத்தை சேர்த்தது. வரி விதிக்கக்கூடிய வருமானம் ரூ. 1 கோடி அல்லது அதற்கு மேல் உள்ள தனிநபர்களுக்கு இந்த கூடுதல் கட்டணம் பொருந்தும். இந்த கூடுதல் கட்டணத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருவாய் சுமார் ரூ.9,000 கோடியை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செலவு மற்றும் வருவாய்


செல்வ வரி செலுத்துவோர் அதிக வரி விதிப்புகளை  விரும்புவதில்லை. அவர்கள் தங்கள் பணத்தை குறைந்த வரி  விகிதங்களைக் கொண்ட நாடுகளுக்கு செல்கிறார்கள். அதிக வரிகள் அவற்றை சேகரிக்க நிறைய செலவாகும், ஆனால் அதிக பணத்தை கொண்டு வரவில்லை என்றால் அர்த்தமில்லை.


செல்வ வரி (wealth tax) தொடங்கியபோது, அது எதிர்பார்த்த அளவுக்கு வரி  பணம் கிடைக்கவில்லை. 1954-55 ஆம் ஆண்டில், அரசாங்கம் தங்களுக்கு ரூ.25 லட்சம் கிடைக்கும் என்று நினைத்தது. ஆனால் அவர்களுக்கு ரூ.8 லட்சம் மட்டுமே கிடைத்தது. அடுத்த ஆண்டு, ரூ.21 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று நினைத்தனர். ஆனால் ரூ.13 லட்சம் மட்டுமே கிடைத்தது. வரி வசூலிப்பதற்கான செலவு, சொத்துக்கு இரண்டு முறை வரி விதிப்பது ஆகியவை செல்வ வரியிலிருந்து (wealth tax) விடுபடுவதற்கான காரணங்களாக இருந்தன.


1985-86 ஆம் ஆண்டில், நிதியமைச்சர் வி.பி.சிங் (V P Singh), சொத்துக்களுக்கு வரி விதிக்க இரண்டு வெவ்வேறு சட்டங்களைக் கொண்டிருப்பது வரி செலுத்துவோருக்கு மிகவும் தொந்தரவாக இருந்தது என்று கூறினார். செல்வ வரி செல்வத்தை சமமாக பரப்பவோ அல்லது மாநிலங்களின் திட்டங்களுக்கு உதவவோ உதவாது என்றும் அவர் கூறினார்.


செல்வ வரி (wealth tax) சுமார் 20 கோடி ரூபாய் மட்டுமே கொண்டு வந்தாலும், அதன் நிர்வாகத்திற்கு நிறைய செலவாகும் என்று சிங் கூறினார். எனவே, 1985 மார்ச் 16 அல்லது அதற்குப் பிறகு நடந்த மரணங்களை சொத்துவரியிலிருந்து விடுவிக்க அவர் விரும்பினார்.    


செல்வ வரி குறித்து அருண் ஜெட்லி பேசினார். வசூலிக்க நிறைய செலவாகும். ஆனால் அதிக பணம் கொண்டு வராத ஒரு வரியை நாம் வைத்திருக்க வேண்டுமா என்று அவர் கேள்வி எழுப்பினார். செல்வ வரியை நீக்கிவிட்டு, ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் பெரும் பணக்காரர்களுக்கு 2%   வரி விதிக்க முடிவு செய்தார்.


யஷ்வந்த் சின்ஹா 1998 ஆம் ஆண்டில் பரிசு வரி (Gift tax) ரத்து செய்யப்பட்டதைக் குறிப்பிட்டார். இதன் மூலம் கிடைத்த வருவாய் மிகவும் குறைவு, கடந்த ஆண்டு ரூ.9 கோடி மட்டுமே கிடைத்தது என்று அவர் கூறினார். வரி ஏய்ப்பைத் தடுப்பதில் பரிசு வரிச் சட்டம் பயனுள்ளதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, 1998-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி முதல் பரிசு வரி வசூலிப்பதை நிறுத்த முடிவு செய்தார்.


பின்னர், பரிசு வரி வேறு வழியில் திரும்ப வந்தது. 2004 ஜூலையில் அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் (P Chidambaram) அதை மீண்டும் கொண்டு வந்தார். பணமோசடியைத் தடுக்க (prevent money laundering) ஒரு ஓட்டை சரிசெய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார். எனவே, தொடர்பில்லாதவர்களிடமிருந்து ரூ.25,000 (பின்னர் ரூ.50,000) க்கு மேல் பரிசுகள் வருமானமாக வரி விதிக்கப்படும். இருப்பினும், குடும்பத்தினரிடமிருந்து பரிசுகள் மற்றும் திருமணங்கள் போன்ற சந்தர்ப்பங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டது.


வேறு இடங்களில் அனுபவம்


மார்ச் 2024 இல் சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund (IMF)) ஒரு குறிப்பு, சமீபத்திய பத்தாண்டுகளில் செல்வ                                                                                                                                                                                                 வரி விகிதங்கள் பொதுவாக உலகளவில் குறைந்துள்ளன என்று குறிப்பிட்டது. பல்வேறு நாடுகளில் வெவ்வேறு வருமான நிலைகளில் சராசரி பெருநிறுவன வருமான வரி விகிதங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இதில் அடங்கும்.


1990 ஆம் ஆண்டில், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (Organisation of Economic Co-operation and Development (OECD)) உள்ள 12 நாடுகளில் செல்வ வரிகள் இருந்ததாகவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. இப்போது, ​​சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வே ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே பரந்த அடிப்படையிலான செல்வ வரியை (wealth tax) தொடர்ந்து விதிக்கின்றன.


செல்வந்தர்கள் பெரும்பாலும் குறைந்த வரி விகிதங்களை செலுத்துகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பாரிஸ் பொருளியல் பள்ளி  (Paris School of Economics) ஆராய்ச்சி ஆய்வகமான ஐரோப்பிய ஒன்றிய வரி ஆய்வகம் (EU Tax Observatory), உலகளாவிய பில்லியனர்கள் பொதுவாக தங்கள் செல்வத்தில் 0 முதல் 0.5% பயனுள்ள வரி விகிதங்களை செலுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிந்தது. ஏனென்றால், அவர்கள் பெரும்பாலும் வருமான வரிகளைத் தவிர்க்க போலி நிறுவனங்களைப் (shell companies) பயன்படுத்துகிறார்கள். ஆய்வகத்தின் உலகளாவிய வரி ஏய்ப்பு அறிக்கை 2024 (Global Tax Evasion Report), பில்லியனர்களுக்கு உலகளாவிய குறைந்தபட்ச 2% வரி விதிப்பது 3,000 க்கும் குறைவான தனிநபர்களிடமிருந்து ஆண்டுதோறும் கிட்டத்தட்ட $250 பில்லியனை உருவாக்கக்கூடும் என்று கூறுகிறது.


செல்வம் படைத்த வரி செலுத்துவோர் பல நேரமும் தங்கள் சராசரி வரி விகிதங்களை  சட்டத்தில் ஓட்டைகளை பயன்படுத்தி சில வகையான வருமானங்களுக்கான சிறப்பு சலுகைகளையும் பயன்படுத்தி குறைக்கின்றனர் என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள 25 பணக்காரர்களின் சராசரி வரி விகிதம் 3.25% மட்டுமே என்பதைக் காட்டும் ஆய்வுகள்   மேற்கோள் காட்டுகிறது. முதல் 400 குடும்பங்களுக்கு, வரி விதிப்பு விகிதம் வெறும்  9.4% மட்டுமே.  




Original article:

Share:

காசா மீதான போரும் அமெரிக்காவின் முரண்பாடான பங்கும் -சேத்தன் ராணா

 புவிசார் அரசியல் சூழ்ச்சிகளின் அதிக செலவுகள் மற்றும் நெறிமுறையற்ற சர்வதேச இராஜதந்திரத்தின் நிஜ உலக தாக்கத்தை காசா நினைவூட்டுகிறது


34,000 க்கும் மேற்பட்டவர்கள், அதாவது, கிட்டத்தட்ட 33,000 பாலஸ்தீனியர்கள், 1,200 இஸ்ரேலியர்கள், 97 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலான இஸ்ரேலியரின் உயிரிழப்புகள் அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலின் விளைவாக நடந்தவையாகும். மேலும், 100க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அந்த பயங்கரவாத தாக்குதலின் நாளுக்குப் பிறகு நடந்த இஸ்ரேல் தாக்குதல், மனிதகுலத்திலேயே மிக மோசமான தாக்குதலில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த துயர சம்பவம் நேரடி ஒளிபரப்பில் அரங்கேறி வருகிறது. இதில், மக்களின் அறியாமையை காரணம் காட்ட முடியாது. இந்த மோதல் அக்டோபர் 7 அன்று தொடங்கவில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம்.


இந்தப் படுகொலைக்காக இஸ்ரேல் மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும், குறிப்பாக அமெரிக்காவும் இதேபோன்ற பொறுப்பைக் கொண்டுள்ளன.  


நடுநிலையின் போலித்தனம்


வரலாற்று ரீதியாக, அமெரிக்கா இஸ்ரேலிய அரசை முதன்மையானதாக ஆதரித்து வருகிறது. அதை அங்கீகரித்த முதல் நாடு அமெரிக்காதான். மிகவும் விரோதமான அண்டை நாட்டில் இஸ்ரேல் உயிர்வாழ அமெரிக்கா உதவியுள்ளது. மேலோட்டமாக, 1973 அரபு-இஸ்ரேல் போரைத் (Arab-Israel war) தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரின் கேம்ப் டேவிட் (Jimmy Carter’s Camp David) பேச்சுவார்த்தைகள், பில் கிளிண்டனின் (Bill Clinton) இரு நாடுகளின் தீர்வுக்கான மதிப்பீடுகள், ஜார்ஜ் புஷ்ஷின் அமைதிக்கான சாலை வரைபடம் (Road Map to Peace) மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரியின் ஆறு கோட்பாடுகள் (Six Principles) உட்பட பல்வேறு வடிவங்களில் இரு-நாடுகளின் தீர்வுக்கான முயற்சிகளை வழிநடத்தியது.

அமெரிக்கா ஒரு நடுநிலையான நடுவராக செயல்படலாம். ஆனால், இஸ்ரேலின் குடியேற்ற காலனித்துவத்தின் பின்னணியில் சக்தியாக இருந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் வடிவமைக்கப்பட்டு ஆதிக்கம் செலுத்தும் அமைப்பான ஐக்கிய நாடு யூத அரசுக்கு எதிராக பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று கூறி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் (United Nations Security Council (UNSC)) தீர்மானங்களில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க அது தொடர்ந்து வீட்டோ (veto) அதிகாரத்தை பயன்படுத்தி வருகிறது. அமெரிக்கா இஸ்ரேலின் மிகப்பெரிய வர்த்தக நட்புநாடாகவும் மற்றும் அதன் உதவி இஸ்ரேலின் இராணுவ செலவினங்களில் 16% பங்களிக்கிறது. அரபு-இஸ்ரேல் உறவுகளை இயல்பாக்கும் உந்துதல், பெரும்பாலும் அமெரிக்காவால் தலைமைதன்மையை உறுதிசெய்யப்பட்டது. பாலஸ்தீனிய நோக்கத்தை அரபுநாடுகளின் அரசியலில் இருந்து படிப்படியாக அகற்றியுள்ளது. இஸ்ரேலிய குடியேறிய காலனித்துவம் ஒரு ’மான்ஸ்டரைப்’ (monster) போன்றது என்றால், அமெரிக்கா அதை உருவாக்கிய டாக்டர் ஃபிராங்கண்ஸ்டைனைப் (Dr. Frankenstein) போன்றது. 

 

அதிபர் டொனால்ட் ட்ரம்பின் "செழிப்புக்கான சமாதானம்" (Peace to Prosperity) திட்டத்தில் நடுநிலை குறித்த அமெரிக்க போலித்தனம் மிகவும் வெளிப்படையாகத் தெரிந்தது. இது, ஜாரெட் குஷ்னரின் மூளையில் உருவானது. இது பாலஸ்தீனியர்களிடமிருந்து நிலத்தை மேலும் பறிக்கவும், ஜெருசலேமை இஸ்ரேலிடம் ஒப்படைக்கவும் முன்மொழிந்தது. மேலும், பாலஸ்தீனியர்களுக்கு நாடு உருவான பின்னர், திரும்புவதற்கான உரிமையை அல்லது இராணுவ பாதுகாப்பை வழங்கத் தவறியது. இது முற்றிலும் இஸ்ரேலுக்கு ஆதரவான திட்டம் மற்றும் பாலஸ்தீனிய அதிகாரத்தால் சரியாக நிராகரிக்கப்பட்டது.


ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ்


ஜோ பிடென் நிர்வாகத்தின் கீழ், நீதித்துறையின் மீதான பெஞ்சமின் நெதன்யாகுவின் தாக்குதல், தீவிர வலதுசாரிகளுடன் கூட்டணி (coalition with the far right) மற்றும் அல் அக்ஸா மசூதி (Al Aqsa mosque) மீதான தாக்குதல் ஆகியவற்றின் காரணமாக அமெரிக்க-இஸ்ரேல் உறவுகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன. ஆனால், ஆபிரகாம் உடன்படிக்கையின் (Abraham Accords) பணிகள் தொடர்ந்தன மற்றும் இஸ்ரேல்-அமெரிக்காவின் அடிப்படையில் உறவுகள் வலுவாக இருந்தன. எனவே, ஜோ பிடன் தனது அக்டோபர் 10, 2023 உரையில், இஸ்ரேலில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து அதிபர் ஜோ பிடனின் குறிப்புகளில், ‘அமெரிக்கா இஸ்ரேலின் ஆதாரவில் உள்ளது’ என்று கூறியதில் ஆச்சரியமில்லை.


உள்நாட்டு நிதியின் அழுத்தம் இருந்தபோதிலும், திரு ஜோ பைடன் காசா மீதான இஸ்ரேலின் போருக்கு நிதியுதவி செய்துள்ளார். அமெரிக்கா, கனடா மற்றும் பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நட்பு நாடுகளை ஒரு நேரடி இனப்படுகொலையைத் தூண்டும் அதே வேளையில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமைக்குப் பின்னால் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. நெருக்கடியின் ஆரம்பத்தில் மனிதாபிமான இடைநிறுத்தத்திற்கான தீர்மானத்தை இது தடுத்தது. நாடுகளின் நிர்வாகம் இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை அனுமதிக்க காங்கிரஸை புறக்கணித்தது. ஆனால் இஸ்ரேலின் காசாவின் முழுமையான அழிவு மற்றும் ரஃபாவின் முழு அளவிலான படையெடுப்பு ஆகியவை அமெரிக்காவானது வரம்புகளையும் சோதிக்கின்றன.


போர் நிறுத்தம், பாலஸ்தீனர்களுக்கு உதவி, இஸ்ரேலுக்கு ஆதரவு என ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே இருந்து திரு ஜோ பைடன் அழுத்தத்தை எதிர்கொள்கிறார். வரவிருக்கும் வாரங்களில் நடவடிக்கை என்று வரும்போது திரு நெதன்யாகுவுக்கும், திரு ஜோ பைடனுக்கும் இடையே பிளவு அதிகரித்து வருகிறது. போர் நிறுத்தம் கோரும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் (United Nations Security Council (UNSC)) தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அமெரிக்கா கலந்து கொள்ளவில்லை.


பாப் எல்-மண்டேப் (Bab el-Mandeb) மீதான ஹவுதிகளின் இடையூறு மற்றும் டமாஸ்கஸில் (Damascus) உள்ள அதன் தூதரகத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு ஈரானின் பதிலடி ஆகியவை ஒரு டோமினோ விளைவை (domino effect) ஏற்படுத்தும். இஸ்ரேல் மீது செல்வாக்கு செலுத்த மேற்கத்திய நாடுகளின் விருப்பமின்மை, நாடுகளை பிராந்திய அளவிலான வன்முறை மோதலுக்கு இட்டுச் செல்லக்கூடும்.


திரு ஜோ பைடனின் கொள்கையைப் புரிந்துகொள்வதில் உள்நாட்டு காரணிகளும் சமமாக முக்கியமானவை. வரவிருக்கும் தேர்தலுடன், டிரம்ப்பின் பிரச்சாரம் அமெரிக்க யூத சமூகம் (American Jewish community) மற்றும் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவர்களைக் (Evangelical Christians) கருத்தில் கொண்டு பிரம்மாண்டமாகத் தொடரும். பரந்த வாக்காளர் தளத்தை உருவாக்க ஆர்வமுள்ள திரு பைடன், திரு டிரம்புடன் போட்டியில் உள்ளனர். அந்த போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் மட்டுமே உள்ளார்கள் என்பதே நிதர்சனம்.  


உண்மையான தலைமைத்துவம் குறித்து


கொலம்பியா மற்றும் பிற மாணவர்கள் அமெரிக்க தலைவர்களை விட அதிக தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சிலர் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக ஜோ பிடன் நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர். தென்னாப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் ஆகியவை உலகளாவிய தெற்கிலிருந்து உண்மையான தலைமையை காட்டியுள்ளனர். 25,000 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் படுகொலையை விட 7 உலக மத்திய சமையலறை ஊழியர்களின் (World Central Kitchen workers) மரணம் அமெரிக்க தலைவர்களை வருத்தமடையச் செய்தது வருத்தமளிக்கிறது. சில உயிர்கள் மற்றவர்களை விட முக்கியம் என்பதை இது காட்டுகிறது.


அமைதியை ஊக்குவிப்பதில் அமெரிக்கா ஒரு சக்திவாய்ந்த பங்கைக் கொண்டுள்ளது, ஆனால் அது பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதில் வீட்டோ செய்தது போன்ற மோதல்களைத் தடுப்பது மற்றும் நீடிப்பதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள், நிச்சயமற்ற இராஜதந்திரம் காரணமாக உலகளாவிய அரசியல் எவ்வாறு சோகமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதைக் காட்டுகிறது.


சேத்தன் ராணா 9DASHLINE இல் இணை ஆசிரியராகவும், புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் PhD ஆய்வராகவும் உள்ளார்.




Original article:

Share:

பசுமைக் கடன்கள் திட்டம் (Green Credit Programme) இந்தியாவின் காடுகளுக்கு பயனளிக்குமா? -ஜேக்கப் கோஷி

 சுற்றுச்சூழல் அமைச்சகம் (Environment Ministry), அக்டோபர் 2023 இல் பசுமை கடன் திட்டத்தை (Green Credit Programme) அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் சந்தை அடிப்படையிலான (market-based) அமைப்பாகும். சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் மறுசீரமைப்புக்கு (environmental and ecological restoration) உதவுவதற்காக தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் சேர்ந்து 'பசுமை கடன்கள்' (green credits) எனப்படும் சலுகைகளைப் பெற இது அனுமதிக்கிறது. இருப்பினும், காடுகளைப் பாதுகாப்பது தொடர்பான சட்டங்களைப் பின்பற்றுவதைத் தவிர்க்க பசுமைக் கடன்கள் திட்டம் பயன்படுத்தப்படலாம் என்று சிலர் கூறுகிறார்கள். பசுமைக் கடன்கள் இந்தியாவின் காடுகளுக்கு உதவுமா? வைபவ் சதுர்வேதி மற்றும் தேபாடித்யோ சின்ஹா ஆகியோர் ஜேக்கப் கோஷியால் நடத்தப்பட்ட உரையாடலில் இதைப் பற்றி விவாதிக்கின்றனர்.


வைபவ், பசுமை கடன் திட்டத்தை இன்றைய நிலையில் நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறீர்கள்?


வைபவ் சதுர்வேதி: பசுமையான மற்றும் நிலையான நடவடிக்கைகளை இணைந்து செயல்படுத்த மக்களையும் நிறுவனங்களையும் ஊக்குவிப்பதே பசுமைக் கடன் திட்டத்தின் முக்கிய யோசனையாகப் பார்க்கப்படுகிறது. இதன் ஒரே வழி, எல்லோரும் பசுமையான கண்ணோட்டத்தில் செயல்பட வேண்டும். மேலும், அதைத் பின்பற்றவில்லை என்றால் அவற்றிற்கு கடுமையான கொள்கையின் மூலம் அபராதங்கள் விதிக்கப்பட வேண்டும். இருப்பினும், கொள்கை வகுப்பதில், ஊக்கத்தொகைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. பசுமைக் கடன்கள் என்பது தண்ணீரைச் சேமிப்பது மற்றும் மரங்களை நடுவது போன்றவற்றில் உதவுவதற்கு மக்களையும் நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் வெகுமதிகளைப் போன்றது.


தேபாடித்யோ சின்ஹா: இது சந்தை அடிப்படையிலான ஊக்கமளிக்கும் ஓர் அமைப்பாகும். மேலும், இந்த பசுமை கடன் திட்டம்,   காடுகள் (forests) மற்றும் கழிவு மேலாண்மை (waste management) உட்பட ஆறு அல்லது ஏழு துறைகளின் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது. ஆனால்,  அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதுதான் முக்கியம். அதைச் செயல்படுத்துபவர்கள் அடி மட்ட சவால்களை (ground-level challenges) அறிந்திருக்கிறார்களா? அதை செயல்படுத்தும் மக்களின் நிபுணத்துவம் என்ன? இந்தத் திட்டம் மோசமானதல்ல. ஆனால், இந்த வழிகாட்டுதல்களின்படி மட்டுமே சென்றால், அது சிறப்பாக இருந்திருக்கும். கடன்களைப் பெற மரங்களை நடுவதை மட்டுமே இது மிகவும் குறுகிய பார்வையாகக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழலின் பல அம்சங்களை இது தவறவிட்டது.


சேதமடைந்த காடுகளின் நிலப்பகுதிகளைச் சரிசெய்வதை ஊக்குவிக்க விதிகளை கட்டமைக்க வேண்டும். இயற்கை பேரழிவுகள் அல்லது மனித நடவடிக்கைகள் (natural and man-made) போன்ற பல்வேறு காரணங்களால் காடுகள் சிதைந்துவிடலாம். காடுகள் வளர்ப்பது ஒரு நேர்மறையான முடிவாகத் தோன்றலாம், ஆதே நேரத்தில் எதிர்மறையான விளைவுகளும் இருக்க முடியாதா? ஒற்றைப் பயிர்கள் (monocultures) பயன்படுத்தப்படுகிறதா? தாவரங்கள் அங்கு பொருந்தவில்லை என்றாலும் ஊக்குவிக்கப்படுகிறதா?


வைபவ் சதுர்வேதி: அது ஒரு சரியான கவலை. ஆனால், இது பசுமைக் கடன் திட்டத்தைப் (green credits programme) பற்றியது மட்டுமல்ல. இந்தியா பெரும்பாலும் தோட்டங்களை ஊக்குவித்துள்ளது. இந்தியா மரங்களை நடுவதை ஊக்குவிக்கிறது. ஆனால், பெரும்பாலும் அது பல பகுதிகளில் ஒரே வகை மரங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. பசுமைக் கடன் திட்டமும் (green credit program) இதே பிரச்சனையை ஏற்படுத்தலாம். எனவே, இந்த ஒற்றை இனத் தோட்டங்களை (single-species plantations) ஊக்குவிக்கவில்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.


இது சந்தை அடிப்படையிலான ஊக்குவிப்பு திட்டம் என்று டிபாடியோ (Debadityo) விளக்கினார். உதாரணமாக, நடவு செய்பவர்களுக்கு ஒரு மரத்திற்கு ₹100 ஊக்கத்தொகையாக அரசாங்கம் வழங்கலாம். சூரிய ஆலைகளுக்கு (solar plants) மானியங்களைப் பெறுவதைப் போலவே, இந்த அணுகுமுறையும் தேவை மற்றும் விநியோகம் இரண்டையும் உள்ளடக்கியது. கார்பன் சந்தைகளில், கார்பன் வரவுகள் மூலம் பொருட்களை வர்த்தகம் செய்யப்படுகின்றன. இந்த விஷயத்தில், அவை பசுமைக் கடன்கள் (green credits) என்று அழைக்கப்படுகின்றன.


ஆனால், பெருந்தோட்டங்களும், ஒற்றைப் பயிர் சாகுபடிகளும் ஊக்கத்தொகைகளால் இயக்கப்பட்டன. பல்லுயிர் பெருக்கத்தில் சமரசம் செய்யாமல் ஒரு சந்தை அமைப்பில் ஒரு வன சுற்றுச்சூழல் அமைப்பை மீண்டும் உருவாக்க முடியுமா?


பாடித்யோ சின்ஹா: இதில், கருத்தில் கொள்ள வேண்டிய இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. அதில், விவசாயம் செய்யும் நிலம் மற்றும் அதை எவ்வாறு செய்வீர்கள் என்பவைகளாகும். வழிகாட்டுதல்களின்படி மாநிலங்கள் தங்கள் அதிகார எல்லைக்குள் அழிக்கப்பட்ட காடுகளை அடையாளம் காண வேண்டும். இப்போது, காடு என்பது மரங்கள் மட்டுமல்ல, அதில் திறந்த திட்டுகள் (open patches) இருக்கலாம். தற்போது, நம்மிடம் 200க்கும் மேற்பட்ட வனக்காடுகள் உள்ளன. இது, மத்திய இந்திய நிலப்பரப்பின் காடுகள் (Central Indian landscape), முழு தக்காண தீபகற்பம் (whole Deccan Peninsula) மற்றும் லே-லடாக் (Leh-Ladakh) ஆகியவை மரங்களால் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதில்லை. அதில், புதர்கள் மற்றும் பல விஷயங்களும் உள்ளன. மேலும், இந்தப் பகுதிகளில் தோட்டங்கள் வந்தால் என்ன நடக்கும்? இப்போது ஒரு பெரிய விழிப்புணர்வு உள்ளது. இது இழப்பீடுகளால் சரிசெய்துகொள்ளும் காடு வளர்ப்பு திட்டங்களைப் போல சிறியதல்ல. இந்தத் திட்டங்களால், எங்கெல்லாம் தோட்டங்களை ஊக்குவிக்கப்பட்டனவோ, அங்கெல்லாம் நாம் பேரழிவைக் கண்டிருக்கிறோம். வனத்துறையினர் இங்குள்ள  செடிகளை அகற்றி, உள்ளூர் மரங்களை வேரோடு பிடுங்கி, ஜேசிபி மற்றும் டிராக்டர்களை பயன்படுத்தி தோட்டங்களை மேம்படுத்துவதை நாம் பார்த்திருக்கிறோம். இத்தகைய அணுகுமுறைகள் உள்ளூர் பல்லுயிர், மண்ணின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். இதை, மீளுருவாக்கம் செய்ய, நாம் எந்த பெரிய தலையீடும் செய்ய வேண்டியதில்லை. தற்போது, நாம் எந்தவொரு இடையூறுகளிலிருந்து அந்தப் பகுதியைப் பாதுகாக்க வேண்டும். மேலும் 10-15 ஆண்டுகளில், பல்லுயிர் பெருக்கத்தை ஆதரிக்கும் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு பயனளிக்கும் நல்ல இயற்கை காடுகளை நாம் உருவாக்க முடியும்.

 

1,000 மரங்கள் நடப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு சுதந்திரமான தனிக்குழு இதை சரிபார்க்கிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் 1,000 மரங்களை வளர்த்தால் ஒரு மரத்திற்கு ஒரு பசுமைக் கடன் கிடைக்கும் என்று வைத்துக்கொள்வோம். இப்போது, சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இது தன்னார்வ கார்பன் சந்தைகளுடன் (voluntary carbon markets) இணைக்கப்படலாம். இது, சந்தை அடிப்படையிலான வழிமுறைகளின் அனுபவத்தில், கார்பனை ஈடுசெய்கிற அளவிடக்கூடிய அளவுகளாக இருப்பதால், அவற்றை நாம் நன்கு அறிந்திருக்கிறோம். பசுமைக் கடன் (green credit) மற்றும் கார்பன் (carbon) போன்ற தத்துவத்தைச் சுற்றி ஒரு தர்க்கரீதியான வர்த்தக அமைப்பை உண்மையில் உருவாக்க முடியுமா?


வைபவ் சதுர்வேதி:  தனித்துவமான காடுகளைப் பாதுகாப்பதை ஊக்குவிப்பதும் உள்ளூர் உயிரினங்களை ஊக்குவிப்பதும் நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். இருப்பினும், பல்லுயிர் பெருக்கத்தை அளவிடுவது சவாலானதான உள்ளது. எடுத்துக்காட்டாக, 200 மீட்டர் இடைவெளியில் உள்ள இரண்டு மரங்களின் பல்லுயிர் தாக்கத்தை தீர்மானிப்பது நிச்சயமாக, இது குழப்பமானதாக இருக்கலாம், மேலும் அறிவியல் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் சரியான அறிவியல் அளவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம். அதற்கு சமூக அறிவியல் உதவுகிறது. நம்மிடம் போதுமான அளவு இருக்கிறதா? இது சரியானதாக இல்லாவிட்டாலும், பங்குதாரர்கள், சிவில் சமூகம் மற்றும் ஊடகங்கள் உட்பட பெரும்பாலான மக்கள் அதை ஒப்புக் கொள்ளும் வரை, அது நன்றாக இருக்கும். சில  சமயங்களில், நாம் பெரும்பாலும் சரியான அளவீட்டைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறோம். ஆனால், அது எப்போதும் தேவையில்லை. வெறுமனே, கூடுதல் நிதி வழிமுறைகள் தேவையில்லாமல் இந்த திட்டங்களை ஆதரிக்க அரசாங்கத்திடம் போதுமான நிதி இருக்கும். இருப்பினும், வளரும் பொருளாதாரத்தில், அரசாங்க நிதி குறைவாகவே உள்ளது. எனவே, தனியார் துறை முதலீட்டை ஈர்க்க நிதிக் கருவிகளைப் பயன்படுத்துவது ஒரு நன்மை பயக்கும் அணுகுமுறையாகும்.


எனவே, கார்பனைப் பிரிப்பதற்காக சில காடுகளை வளர்க்கிறோம் என்று வைத்துக்கொள்வோம், என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு பாலைவனத்தில் அல்லது வேறு சில சுற்றுச்சூழல் மரங்கள் வேலை செய்யாது மற்றும் உங்களுக்கு புதர்கள் தேவை என்று வைத்துக்கொள்வோம். இப்போது, இந்த இடத்தின் சுற்றுச்சூழல் அமைப்பை புதுப்பிக்கும் இலக்கை அமைக்கலாம். சுற்றுச்சூழல் அமைப்பு மறுமலர்ச்சியின் எத்தனை அலகுகள் கைப்பற்றப்பட்ட கார்பனின் அலகுகளுக்கு சமம் என்று உங்களால் கூற முடியுமா? மேலும், நிலத்தடி நீர் ரீசார்ஜ் செய்வதற்கும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கும் அவை உதவுமா? இந்த அளவுகோல்கள் அனைத்தும் பொருந்தக்கூடியவை என்று நினைக்கிறீர்களா?


வைபவ் சதுர்வேதி: இந்த சந்தையின் பெரிய பிரச்சினை பூஞ்சைத்தன்மை (fungibility) ஆகும். தற்போது, கார்பன் சந்தை பற்றி பேசலாம். சோலார் (solar project), சமையல் அடுப்பு (cookstove project), காடு வளர்ப்பு (forestation project) போன்ற பல்வேறு திட்டங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அளவிடக்கூடிய ஒரு அலகு கார்பனை சேமிக்கிறது. பசுமைக் கடன்களில், பல்லுயிர் மற்றும் நீர் பாதுகாப்பு கடன்கள் (biodiversity credit) உள்ளன. இதில், பிரச்சனை என்னவென்றால், ஒரே தளத்தில் ஒரு சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு கடனுடன் ஒரு நீர் பாதுகாப்பு கடனை எவ்வாறு ஒப்பிடுவது? ஆம், பூஞ்சைத்தன்மை ஒரு சவாலாக உள்ளது. பல விநியோகர்கள் பலர் வாங்க விரும்பும் அதே விஷயத்தை வழங்கும்போது சந்தைகள் செயல்படுகின்றன. இந்த வழக்கில், ஐந்து நீர் பாதுகாப்பு திட்டங்கள் (five water conservation projects) மற்றும் நீர் பாதுகாப்பில் ஆர்வமுள்ள ஐந்து நபர்கள் ஆதரவளிக்க உள்ளனர் என்று சொல்லலாம். அவர்கள் வர்த்தகம் செய்வார்கள், ஆனால் இந்த விஷயங்களை எளிதில் பரிமாறிக்கொள்ள முடியாது.


எபாததியோ சின்ஹா: பசுமைக் கடன்கள் (green credits) கட்டாய இணக்கங்களை பாதிக்கும். எடுத்துக்காட்டாக, வன அனுமதிகளைப் பெறும்போது, சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் சம்பாதித்த பசுமைக் கடன்களைப் பயன்படுத்தலாம். இருப்பினும், ஒரு இதில் சவால் மீண்டும் எழுகிறது: அது காடு, நீர், பல்லுயிர் மற்றும் வாழ்வாதாரத்தை சமமாக நடத்த முடியுமா? அவற்றை ஒரே மாதிரியாக மாற்ற முடியுமா? ஒவ்வொரு இடமும் வித்தியாசமானது மற்றும் தனித்துவமானது. இது முன்னுரிமையான தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியை தியாகம் செய்ய மாட்டோம் என்று கருதுகிறது. இந்த சட்டம் அச்சுறுத்தலை ஏற்படுத்தாமல் தொழில்துறையை ஆதரிக்க வேண்டும். அதே வேளையில், அடிப்படையில், இது வணிகத்தை எளிதாக்குவது பற்றி தெளிவுபடுத்த வேண்டும்.


அதை உருவாக்க, இது கட்டமைக்கப்பட்ட விதம், இது நமது மற்ற சுற்றுச்சூழல் சட்டங்களுடன் மோதுகிறது என்று நினைக்கிறீர்களா?


தேபாடித்யோ சின்ஹா: நிச்சயமாக. இந்த வழிகாட்டுதலில், வனப் பாதுகாப்புச் சட்டத்துடனான (Forest Conservation Act) முரண்பாடுகளை என்னால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. முதலில், காடு அல்லது சீரழிந்த காடு என்பதற்கு தெளிவான வரையறை இல்லை. எனவே, திறந்த இயற்கை சுற்றுச்சூழல் (open natural ecosystems) அமைப்புகளை காடுகள் என்று தவறாக முத்திரை குத்துகிறோம். இரண்டாவதாக, இந்தத் திட்டம் தொழிற்சாலைகளுக்கு பசுமைக் கடன்களை வழங்குவதற்கான வன அழிப்பு செயல்முறையைத் தவிர்க்கிறது. "எனக்கு ஏற்கனவே பசுமைக் கடன்கள் உள்ளன, எனவே எனக்கு விரைவாக அனுமதி கொடுங்கள்" என்று அவர்கள் கூறலாம். பொதுவாக, ஒரு படிப்படியான அனுமதிக்கான செயல்முறை உள்ளது. ஆனால் இந்த குறுக்குவழி பொதுவானது. இருப்பினும், சுற்றுச்சூழல் சட்டங்கள் நம் நாட்டில் அடிக்கடி சமரசம் செய்யப்பட்டாலும், அவற்றை சரியாகப் பின்பற்றுவது முக்கியம். இந்த சட்டங்களை நாம் வலுப்படுத்த வேண்டும்.   

 

வைபவ் சதுர்வேதி எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலில் உறுப்பினராவர். தீபாதித்யோ சின்ஹா, சட்டக் கொள்கைக்கான விதி மையத்தின் மூத்த குடியுரிமை ஆய்வாளராவர்.           




Original article:

Share:

மாலத்தீவில் உறுதித்தன்மை: தேர்தல் முடிவுகள் மற்றும் இந்திய உறவுகள்

 மியூசுவின் வெற்றி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை பாதிக்க இந்தியா அனுமதிக்கக் கூடாது 


மாலத்தீவில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்கள் அதிபர் முகமது முய்சுவின் கட்சியான மக்கள் தேசிய காங்கிரஸ் (People's National Congress (PNC’s)) கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவரது கட்சி, கூட்டணிக் கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுடன் சேர்ந்து, இப்போது மக்கள் மஜ்லிஸில் உள்ள 93 இடங்களில் 70 க்கும் மேற்பட்ட இடங்களைக் கொண்டுள்ளது. இந்த "சூப்பர் மெஜாரிட்டி" ஜனாதிபதி முய்சுவுக்கு சட்டங்களை இயற்றுவதற்கும் அரசியலமைப்பைத் திருத்துவதற்கும் எளிதாக்குகிறது.


இந்தியாவுக்கு ஆதரவானதாக கருதப்படும் மாலத்தீவு ஜனநாயக கட்சி 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. முன்னாள் அதிபர்கள் அப்துல்லா யாமீன், முகமது நஷீத் தலைமையிலான கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. சர்வாதிகார ஆட்சி வரலாற்றைக் கொண்ட ஒரு நாட்டில் இந்த தேர்தல் முடிவு ஜனாதிபதி முய்சுவுக்கு கணிசமான அதிகாரத்தை வழங்கியுள்ளது.


நவம்பர் 2023 இல் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, ஜனாதிபதி முய்சுவின் முடிவுகள் மாலத்தீவு மக்களால் பரவலாக ஆதரிக்கப்பட்டுள்ளன. அவரது சர்வதேச நடவடிக்கைகளில் சீனா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்க்கு பயணம் செய்வது மற்றும் மூத்த அமெரிக்க அதிகாரிகளுக்கு விருந்தளிப்பது ஆகியவையும் அடங்கும். அவர் இந்தியா எதிர்ப்பு அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறார். டிசம்பரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான ஒரு சந்திப்பில், மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக மாலத்தீவில் உள்ள இந்திய துருப்புகளை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கோரினார். இது அமல்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, அவர் இந்தியாவுடனான நீர்வரைவியல் (hydrography) ஒப்பந்தத்தை முடித்து, எந்தவொரு வெளிநாட்டு சக்தியையும் சார்ந்திருப்பதைக் குறைக்க சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்தினார்.


இந்தியாவின் பெரும்பான்மைவாதம் தலைதூக்குவது குறித்து மாலத்தீவு தலைவர்களும், விமர்சகர்களும் கவலையடைந்துள்ளனர். மாலத்தீவு அமைச்சர்கள், திரு மோடி பற்றி எதிர்மறையான கருத்துக்களைக் கூறியது, இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. மேலும், மாலத்தீவுக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.


மாலத்தீவில் சமீபத்திய தேர்தல் முடிவுகள் மற்றும் ஜூன் மாதம் இந்தியாவில் நடைபெறவிருக்கும் தேர்தல்கள் மூலம், புது டெல்லிக்கும் மாலேக்கும் தங்களின் விரிசல் உறவுகளை சரிசெய்ய வாய்ப்பு உள்ளது. வரலாற்று ரீதியாக, இரு நாடுகளும் ஒரு நல்ல உறவை கொண்டுள்ளன. இது அரசாங்கத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் ஏற்ற இறக்கமாக இருக்கக்கூடாது. இருப்பினும், கடந்த பத்தாண்டுகளாக இது இல்லை. திரு. முய்ஸு, இந்தியா அல்லது சீனாவுடன் வெளிப்படையாகச் ஆதரவளிப்பதைக் காட்டிலும், "மாலத்தீவுகளுக்கு ஆதரவான" கொள்கையைத் தொடரும் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். அவரது நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்பு அல்லது பிராந்திய அமைதிக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில் இதை நிரூபிக்க அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும்.


மாலத்தீவின் பொருளாதாரச் சிக்கல்கள், வளர்ச்சித் தேவைகள் மற்றும் காலநிலை மாற்றத்தின் சவால்கள், அமெரிக்கா மற்றும் சீனாவுடனான அதன் இராஜதந்திர முக்கியத்துவத்துடன், இந்தியாவுடன் வலுவான உறவைப் பேணுவதன் நன்மைகள் விரைவில் தெளிவாகத் தெரியும். இந்தியா நிலையான நிதியுதவி மற்றும் ஆதரவை வழங்குகிறது. ஒரு உண்மையான வெற்றிகரமான உறவுக்கு, "அருகில் இருப்பவருக்கு முன்னுரிமை" (Neighbourhood first) என்ற பரஸ்பர கொள்கையானது தன்னார்வமாகவும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் நலன்களின் அடிப்படையிலும் இருக்க வேண்டும்.




Original article:

Share:

அதிகம் விற்பனையாகும் நுகர்வுப் பொருட்களின் சந்தைப்படுத்துதல் மற்றும் விளம்பரத்தின் மீது நீதிமன்றத்தின் நடவடிக்கை தேவை

 தற்போதுள்ள உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நீதிமன்றங்கள் உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.    


பதஞ்சலி ஆயுர்வேத் மற்றும் அதன் தலைவர்களான ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோருக்கு எதிரான வழக்கில் நீதிபதி ஹிமா கோஹ்லி தலைமையில் நடைபெற்ற உச்ச நீதிமன்ற அமர்வில் ஏப்ரல் 23 அன்று, ”நிறுவனத்திற்கு எதிராக அரசாங்கம் செயல்படவில்லை” என்று அவர் சுட்டிக்காட்டினார். பதஞ்சலி ஆயுர்வேதா, கோவிட்-19, நீரிழிவு நோய் மற்றும் பிற நோய்களுக்கு நிரூபிக்கப்படாத சிகிச்சைகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களை வெளியிட்டது.


இந்தியாவில் நெஸ்லேவின் (Nestlé's) குழந்தைகளுக்கான ஃபார்முலா பற்றிய அறிக்கையை பெஞ்ச் கவனித்தது. ஐரோப்பாவில் உள்ள அதே தயாரிப்பில் உள்ள சர்க்கரையின் அளவை விட இந்த ஃபார்முலாவில் அதிக சர்க்கரை உள்ளது. இதன் காரணமாக, பதஞ்சலி ஆயுர்வேத வழக்கின் நோக்கத்தை நீதிமன்றம் விரிவுபடுத்தியது. இப்போது, ​​தவறான விளம்பரங்களை வெளியிடும் அனைத்து அதிகம் விற்பனையாகும் நுகர்வுப் பொருட்களின் (Fast-moving consumer goods (FMCG)) தயாரிப்பு நிறுவனங்களும் இதில் அடங்கும்.


இந்தியாவில் தொற்றாத நோய்கள் (non-communicable diseases (NCDs)) அதிகரித்து வருகின்றன. இந்த அதிகரிப்பு தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறைகளினால் ஏற்படுகிறது. தங்கள் தயாரிப்புகளில் சில வைட்டமின்களைச் சேர்த்தாலும், உற்பத்தியாளர்கள் இன்னும் முக்கியமாக சத்தற்ற உணவுகளை (junk Food) விற்கிறார்கள்.


கடந்த மாதத்தில், தவறான வாக்குறுதிகளுடன் (misleading claims) தொடர்ந்து விளம்பரப்படுத்தியதற்காக பதஞ்சலி ஆயுர்வேத்  நிறுவனம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கோரியது. நீதிமன்றம் முன்பு அவர்கள் ஆஜராக உத்தரவிட்ட பின்னரும் இந்த கோரிக்கை எழுந்தது. வெளியிடப்பட்ட மன்னிப்பு விளம்பரம் சிறிய அளவாக இருந்தது என பிரதிவாதிகளை நீதிமன்றம் விமர்சித்தது. இப்போது, ​​அவர்களின் சமீபத்திய மன்னிப்பை நீதிமன்றம் ஏற்குமா என்பது நிச்சயமற்றது. 


முறையான சிக்கல்கள் காரணமாக நீதிமன்றம் இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்ப்பது கவலை அளிக்கிறது. தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், புகாரளிப்பதற்கும், அனுமதிப்பதற்கும் தற்போதுள்ள அமைப்பு புகார்களை நம்பி செயல்படாமல் உள்ளது. இந்திய விளம்பரத் தர நிர்ணயக் கவுன்சிலால் முத்திரையிடப்பட்ட பிரச்சனைக்குரிய விளம்பரங்கள் தொடர்பாக ஆயுஷ் அமைச்சகத்தின் செயலற்ற தன்மை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சபைக்கு இணக்கத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகள் இல்லை. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India), பல்வேறு உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்பட்ட மூலப்பொருள் வரம்புகளை நிர்ணயித்திருந்தாலும், இணங்காத உற்பத்தியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் சரியாக செயல்படவில்லை. இதற்க்கு காரனம் குறைவான பணியாளர்கள், போதிய வசதிகள் மற்றும் நிதியின்மை ஆகியவையாகும்.


அறிவியல்பூர்வமற்ற கூற்றுக்களை அடையாளம் காணும் பொறுப்பு சமூகத்திலுள்ள பல்வேறு உறுப்பினர்களின் பொருப்பாகும். இதில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சரியான தகுதிகள் இல்லை. அறிவியல்பூர்வமற்ற மற்றும் மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிடும் தனிநபர்கள் சட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்கப்படுவதில்லை. அவை பெரும்பாலும் செலவு மிகுந்தது மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும். எனவே,  அதிகம் விற்பனையாகும் நுகர்வுப்  பொருட்களைச் (FMCG) சந்தைப்படுத்துதலில் உடனடி மற்றும் பயனுள்ள ஒழுங்குமுறை தேவை. அத்தகைய கட்டுப்பாடு இல்லாததால், தயாரிப்புகள் பற்றிய நிரூபிக்கப்படாத சுகாதார உரிமைகோரல்கள் பரவுவதற்கு அனுமதித்துள்ளது. இது தொற்றாத நோய்கள் பற்றிய இந்தியாவின் கவலைகளுக்கும் பொதுமக்களுக்குக் கிடைக்கும் உணவுகளுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. 


நீதிமன்றங்களின் பணி சட்டங்களை மறுபரிசீலனை செய்வதாக இருக்க வேண்டுமே தவிர அவற்றை உருவாக்குவது அல்ல. தங்கள் முன் வரும் வழக்குகளில் சட்டத்தை மீறுபவர்கள் மீது விரைவான மற்றும் வலுவான நடவடிக்கை எடுப்பதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். நீதித்துறையானது சட்டமியற்றும் மற்றும் நிர்வாகப் பிரிவுகளின் பாத்திரங்களுக்குள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும்.




Original article:

Share:

மழையால் வாக்கெடுப்பு பாதிப்பிற்குள்ளாவது பற்றி . . . -அசோக் லவாசா

 சூரத் மற்றும் அருணாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் வாக்களிக்காத போது தேர்தல் உண்மையிலேயே நியாயமானதா (free and fair) என்ற கேள்வியை எழுப்புகிறது.  


தற்போதைய தேர்தல் சட்டங்கள், தேர்தலில் வேட்பாளர்கள்  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதை அனுமதிக்கிறது. வாக்குச்சீட்டு   முறையில் பங்கேற்காமல்  மக்களின் பிரதிநிதியாக  போட்டியின்றி  தேர்வு செய்யப்படுகிறார்கள். தேவையான முயற்சி இல்லாமல் எதையோ சாதித்ததைப் போன்ற எண்ணம் வேட்பாளர் மனதில்  தோன்றுகிறது. 


அருணாச்சல பிரதேசத்தில் நடந்த 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் வேட்பாளர்கள் இதேமுறையில் போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்டனர். 


தேர்தல் நடத்தை விதிகள் 1961 (Conduct of Election Rules 1961) இன் விதி 11 , (1) தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலின் நகலைக் காட்ட வேண்டும். அவர் இந்தப் பட்டியலைத் தனது அலுவலகத்தில் கவனிக்கத்தக்க இடத்தில் வைப்பார். வேட்பாளர்களின் எண்ணிக்கை ஒரே மாதிரியாகவோ அல்லது அதற்குக் குறைவாகவோ இருந்தால், அவர் தேர்தல் முடிவுகளை அறிவிப்பார். பட்டியலை இடுகையிட்ட பிறகு, அவர் 53 இன் துணைப் பிரிவு (2) அல்லது துணைப் பிரிவு (3) இன் படி முடிவுகளை அறிவிப்பார். Forms 21 to 21B, பிரிவு இதற்கு பொருத்தமானது என்று கூறுகிறது. 


ஜனநாயக உரிமைகள் (Democratic rights), செயல்முறை


இந்த சூழ்நிலையில், ஒரு தரப்பு வெற்றி பெறுகிறது. ஆனால் தெளிவான தோல்வியாளர் இல்லை. சிலர் விதிகளின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள். மற்றவர்கள் திரும்பப் பெறத் தேர்வு செய்கிறார்கள். சூரத் மக்களவைத் தொகுதியின் சமீபத்திய விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்: இரண்டு வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். எட்டு பேர் தானாக முன்வந்து தங்களின் வேட்புமனுவை திரும்பப் பெற்றனர். 


அருணாச்சல பிரதேசத்தில் மேலும் 10 சட்டசபை தொகுதிகள் இதே முறையில் கைப்பற்றப்பட்டன. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 53 (Section 53 of Representation of the People Act, 1951) தேர்தல் செயல்முறையை விளக்குகிறது:


1. நிரப்பப்படும் இடங்களை விட அதிக வேட்பாளர்கள் இருந்தால், வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.


2. வேட்பாளர்களின் எண்ணிக்கை, இடங்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருந்தால், தேர்தல் நடத்தும் அலுவலர் உடனடியாக அனைத்து வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பார்.


இந்த செயல்முறை வாக்காளர்களை ’மேலுள்ள எதுவும் இல்லை’ (None of the Above (NOTA)) என்ற விருப்பத்தினைத் தேர்வு செய்ய அனுமதிக்கிறதா என்று சிலர் கேட்கிறார்கள். முதலில், நோட்டா சட்டத்தில் இல்லை. மக்களின் கருத்துக்களை அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தெரிவிக்க நீதிமன்றங்கள் இதைச் சேர்த்தன.


NOTA தேர்தலைப் பாதிக்காது என்பது சிலரின் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தலாம். இது அரசியல் கட்சிகளை பாதிக்கவே இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. NOTA ஒரு நேர்மறையான மாற்றமாக இருக்க வேண்டும். ஆனால் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதது, ஒரு தேவதை எந்த விளைவும் இல்லாமல் பறக்க முயற்சிப்பது போன்றது.


ஆனால் யாரும் தேர்தலில் போட்டியிடவில்லை அல்லது எல்லோரும் வாக்களிக்க மறுத்து, அந்த இடத்தை நிரப்பாமல் விட்டால் என்ன செய்வது?


அரசாங்க கொள்முதலில் பதிலளிக்கப்படாத ஏலங்கள் அல்லது ஏலம் பெறப்படவில்லை என்று கூறும்போது, இந்தியத் தேர்தல் ஆணையம் மீண்டும் ஒரு நபரைத் தேர்ந்தெடுக்க தொகுதிக்கு அழைப்பு விடுக்க வேண்டுமா?  


நிதி விதிகள் இணையாக உள்ளன


பொது நிதியைக் கையாளும் போது அனைவரும் பின்பற்ற வேண்டிய விதிகளான இந்திய அரசின் பொது நிதி விதிகள் (General Financial Rules (GFRs)) நான் ஒன்றிய நிதி மற்றும் செலவினச் செயலாளராக இருந்தபோது புதுப்பிக்கப்பட்டது. பொது கொள்முதலில் நியாயமான மற்றும் வெளிப்படையான நடைமுறைகளின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.


விதி 166 'ஒற்றை டெண்டர் விசாரணையை' ('Single Tender Enquiry') அனுமதிக்கிறது. விநியோகஸ்தர் அசல் உற்பத்தியாளராக இருந்தாலோ, அவசரநிலை ஏற்பட்டாலோ அல்லது தரநிலைப்படுத்துதலுக்கான தொழில்நுட்பத் தேவை இருந்தாலோ இது நிகழலாம்.


மற்றொரு விதி, விதி 173(xx), போட்டியின் பற்றாக்குறையை ஏலதாரர்களின் எண்ணிக்கையால் மட்டுமே மதிப்பிடக்கூடாது என்று குறிப்பிடுகிறது. ஒரே ஒரு ஏலம் மட்டுமே பெறப்பட்டாலும், கொள்முதல் சரியாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தால், ஏலதாரர்களுக்கு போதுமான நேரம் இருந்தால், தகுதி அளவுகோல்கள் மிகவும் கண்டிப்பானதாக இல்லை மற்றும் சந்தை மதிப்புகளுடன் ஒப்பிடும்போது விலைகள் நியாயமானதாக இருந்தால், செயல்முறை செல்லுபடியாகும்.


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ( Representation of the People Act (RPA)) சில விதிகளைப் பின்பற்றுகிறது. இந்த விதிகள் இணைக்கப்படவில்லை. இரண்டும் ஒரே மாதிரியாகத் தோன்றலாம். ஏனெனில், இரண்டுமே விருப்பத்தேர்வுகளில் இருந்து தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களை உள்ளடக்கியது. ஒருவர் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்றால், வாக்காளர்கள் முடிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (Representation of the People Act (RPA)) படி, ஒரு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு நபர் "தேர்ந்தெடுப்பவர்" என வரையறுக்கப்படுகிறார். எவ்வாறாயினும், இந்த வாக்காளர் தங்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையிலிருந்து முற்றிலும் விலக்கி வைக்கப்படுகிறார். ஒரு வாக்கு கூட பெறாத ஒருவர் பாராளுமன்ற நடைமுறைகளில் பங்கேற்க முடியும். அவர் தனது தொகுதியின் கோரிக்கைகளை பாராளுமன்றத்தில் முன்வைக்கலாம். 


இந்த நிலை தற்போதைய தேர்தல் நடைமுறையில் உள்ள முரண்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. செயல்முறை நடைமுறைக்குரியது ஆனால் முற்றிலும் நியாயமானதாகத் தெரியவில்லை. உண்மையான விருப்பங்கள் இல்லாதபோதும் வாக்காளர்கள் தேர்வு செய்ததாகக் கருதப்படுகிறது. இது ஒரு கேள்வியை எழுப்புகிறது: தேர்தல் செயல்முறையை ஒரு சில வேட்பாளர்களால் கட்டுப்படுத்த முடியுமா அல்லது கையாள முடியுமா? இந்த வேட்பாளர்கள் மில்லியன் கணக்கான வாக்காளர்களின் உரிமைகளை மீறலாம்.


ஒரு மோசமான சூழ்நிலையில், 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் (அவர்களில் 10,000 பேர் வெவ்வேறு கட்சிகள் அல்லது சுயேச்சைகள் இருந்தாலும்) அமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது ஒரு பில்லியன் வாக்காளர்கள் தங்கள் சட்டப்பூர்வ உரிமையைப் பயன்படுத்துவதைத் தடுக்கும்.  ஜனநாயகத்தின் நடைமுறையை இது கடுமையாக பாதிக்கும்.

 

இந்த  பிரச்சனையைச் சரிசெய்ய என்ன செய்ய முடியும்?


தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்கள் இல்லை என்றால், வாக்காளர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த முடியாது. ஜனநாயக நடைமுறை செயல்பட வேண்டுமானால், மக்கள் தேர்தலில் போட்டியிடுவதிலும், வாக்களிப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். யாராவது ஓட்டு கேட்டால் மட்டுமே வாக்களிக்க கூடாது.

 

முன்னணியில் வேட்பாளர் 


இந்த அமைப்பு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சாதகமாக உள்ளது. ஏனென்றால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி, முழுமையான புறக்கணிப்பு இருந்தால், அது ஒவ்வொரு வேட்பாளரும் பூஜ்ஜிய வாக்குகளைப் (zero vote) பெற்றது போல் கருதப்படுகிறது. இந்த நிலைமை சட்டத்தின் பிரிவு 65 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. "வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றால், ஒரு வாக்கைச் சேர்ப்பது அவர்களில் ஒருவரை வெற்றி பெறச் செய்யும் என்றால், தேர்தல் அதிகாரி உடனடியாக சீட்டுக் குலுக்கல் முறை (Method of Lottery)  மூலம் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது அந்த அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிப்பார். ஜனநாயகம் என்பது "மக்களால், மக்களால் மற்றும் மக்களுக்கான அரசாங்கம்" (“government of the people, by the people and for the people”) என்று வரையறுக்கப்படுவதால் இந்த தேர்தல் முறை அதற்கு எதிராக உள்ளது.  


முதல் முறை வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால், புதிய அறிவிக்கை வெளியிட வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் குறிப்பிடுகிறது. இருப்பினும், எந்தவொரு வேட்பாளரும் இரண்டாவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்பதை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் குறிப்பிடவில்லை. கூடுதலாக, தேர்தல் செயல்பாட்டில் NOTA விருப்பத்தை முக்கியமற்றதாக ஆக்குவதன் மூலம் வாக்களிப்பதைத் தவிர்ப்பவர்களை இந்த சட்டம் விலக்குகிறது. NOTA மூலம் மக்கள் கூட்டாக தேர்தலை ரத்து செய்ய முடியாது. 


இந்த நிலைமை ஒரு கேள்வியை எழுப்புகிறது: ஒரு வேட்பாளர் வெற்றி பெற குறைந்தபட்ச சதவீத வாக்குகளைக் கோரும் வகையில் ஃபர்ஸ்ட்-பாஸ்ட்-தி-போஸ்ட் (first-past-the-post) (பெரும்பான்மையை பொருட்படுத்தாமல், அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் வெற்றி பெறுவது) முறையை மாற்றுவது குறித்து நாம் பரிசீலிக்க வேண்டுமா? அத்துடன், இரண்டாவது வேட்புமனுவில் எந்தவொரு வேட்பாளரும் முன்வரவில்லை என்றால், அந்த இடத்தை ஜனாதிபதி நியமனம் மூலம் நிரப்ப வேண்டுமா? இந்த வழக்கில், இந்திய ஜனாதிபதி அரசாங்கத்தை கலந்தாலோசிக்காமல் குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் ஒருவரை நியமிக்க முடியும்.


இவ்விடயங்கள் தொடர்பில் நாம் பரந்துபட்ட கலந்துரையாடலை நடத்த வேண்டும். தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடக்காத சூழ்நிலைகளைத் தடுக்க இது உதவும். உதாரணமாக, மழை மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்கும் சூழ்நிலைகளை நாம் தவிர்க்க வேண்டும். கட்சிகள் நியாயமற்ற முறையில் செயல்படும் சூழ்நிலைகளை நாம் தடுக்க வேண்டும். மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வாய்ப்பளிக்க வேண்டும். 


அசோக் லவாசா முன்னாள் தேர்தல் ஆணையர் (Election Commissioner) மற்றும் இந்தியாவின் முன்னாள் நிதிச் செயலாளர் (former Finance Secretary) ஆவார்.




Original article:

Share:

காலநிலை மாற்றம் குறித்த செய்தி அறிக்கையில் உள்ள சவால்கள் -வாசுதேவன் முகுந்த்

 காலநிலை மாற்றம் என்பது பல நகரும் பகுதிகளைக் கொண்ட சிக்கலான நிகழ்வுகளின் தொகுப்பாகும்.


இந்தியத் தேர்தல்களில் காலநிலை மாற்றம் முக்கியமா என்று நிறைய பேர் ஆச்சரியப்படுகிறார்கள். மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. காலநிலை மாற்றம் குறித்து வாக்காளர்கள் அக்கறை காட்டுகிறார்களா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள்.


பத்திரிகையாளர்கள் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை மக்கள் உடனடியாக மாற்றியமைக்கத் தொடங்குவது முக்கியம். இந்தத் தழுவல்களுக்கு கொள்கை மற்றும் நடத்தை இரண்டிலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இந்த மாற்றங்களுக்கு அரசு ஆதரவு அளிக்க  வேண்டும்.


ஒரு பத்திரிக்கையாளராக, எனது பணி பெரும்பாலும் மக்களை அவர்களின் மனதை மாற்றும்படி சமாதானப்படுத்துகிறது. இந்த பணி சவாலானது மற்றும் பெரும்பாலும் தோல்வியுறுகிறது. சில நேரங்களில், காலநிலை செய்தி அறிக்கையில் சில அம்சங்கள் எவ்வளவு எளிதாக இருக்கும் என்று கற்பனை செய்யலாம். காலநிலை பிரச்சினைகளின் அடிப்படையில் மக்கள் திடீரென்று வாக்களிக்க முடிவு செய்வதைப் பற்றி நான் கனவு காண்கிறேன். 


காலநிலை மாற்றம் சிக்கலானது மற்றும் பல கூறுகளை உள்ளடக்கியது. இது காலப்போக்கில் மற்றும் வெவ்வேறு இடங்களில் நிகழ்கிறது. செய்தி ஊடகவியலாளர்கள் இந்த மாற்றங்களைப் பின்பற்ற முயற்சிக்கின்றனர். அவர்கள் ஒரு நேரத்தில் ஒரு நிகழ்வையும் ஒரு நாளையும் அறிக்கை செய்கிறார்கள். 


பத்திரிக்கையாளர்களுக்கு செய்தி சேகரித்தல் மற்றும் வெளியிடுதல் போன்ற வழக்கமான பணிகள் உள்ளன. இந்த பணிகள் மற்றும் காலநிலை மாற்றத்தின் சிக்கலான தன்மை காரணமாக, ஒவ்வொரு நிகழ்வையும் எல்லா நேரத்திலும் உள்ளடக்குவது அவர்களுக்கு கடினமாக உள்ளது. காலநிலை மாற்றம் பல விஷயங்களை பாதிக்கிறது. இது நீர், காற்று, நிலம் மற்றும் ஊட்டச்சத்துக்கான மக்களின் அணுகலை மாற்றுகிறது. இது பாலினம், சாதி, வர்க்கம் மற்றும் இருப்பிடம் போன்ற பிரச்சனைகளுடனும் கலந்துவிடுகிறது. இந்த கலவையானது அதன் விளைவுகளை அடையாளம் காண்பதை கடினமாக்குகிறது.


பெரும்பாலும், இந்த விளைவுகளில் பலவற்றை நாம் இழக்கிறோம். பின்னர், அதைப் பெற முயற்சிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மத்தியில், காலநிலை மாற்றம் ஒரு செயலில் உள்ள சக்தி என்பதை மறந்துவிடுவது எளிது.


கடந்த பத்தாண்டுகளில் சுந்தரவன டெல்டா பகுதியில் குழந்தைக் கடத்தல் அதிகரித்துள்ளது. இது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை சுட்டிக்காட்டுகிறது. ஒரு பத்திரிகையாளரின் விசாரணையில் காலநிலை மாற்றம் மற்றும் பலவீனமான அரசு ஆகியவை முக்கிய காரணங்களாக கண்டறியப்பட்டது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஆம்பன் மற்றும் யாஸ் புயல்கள் 2009 இல் ஆலியா சூறாவளியால் இந்த பகுதிகளின் நிலைமைகளை மோசமாக்கின. உள்ளூர் வருமானத்தை ஆதரிப்பதற்குப் பதிலாக, அரசு பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தது. இது தன்னிறைவு பெற்ற சமூகங்கள், ஒவ்வொரு புயலுக்குப் பிறகும் தங்களை குறைவாக நம்புவதற்கு வழிவகுத்தது மற்றும் கடினமான மாற்றங்களை எதிர்கொண்டது.


பருவநிலை மாற்றம் வாக்காளர்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் கவலையாக உள்ளதா என்பதை நாங்கள் மதிப்பிடுகிறோம். இந்த மதிப்பீடு வாக்காளர்கள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் மற்றும் எங்கள் செயல்திறனை மதிப்பீடு செய்வதை பாதிக்கிறது. இருப்பினும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நிஜ வாழ்க்கை அனுபவங்களை நாம் அடிக்கடி இழக்கிறோம். இதன் விளைவாக, வாக்களிப்பதில் அதன் தாக்கத்தை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். 


சுந்தரவனக் காடுகளில் வசிக்கும் ஒருவர், குறைந்த ஊதியம், ஆனால் நிலையான வேலைகளை வழங்கும் வேட்பாளரை விரும்பலாம். ஆற்றின் குறுக்கே கரை கட்டுவதற்கு நிதி உள்ள ஒரு வேட்பாளரை அவர் தேர்ந்தெடுக்காமல் இருக்கலாம். இதேப்போல், ஒரு கிராமத்துப் பெண், வீட்டிற்க்கு கழிப்பறை அமைத்து கொடுக்கும் வேட்பாளரை ஆதரிக்கலாம். அதிக வெப்பம் காரணமாக அவள் அதிக தண்ணீர் குடிக்க விரும்புவதால் இந்த விருப்பம் இருக்கலாம். வெளிப்புற கழிப்பறைகளைப் பயன்படுத்துவதையும் உள்ளூர் ஆண்களிடமிருந்து ஏற்படும் துன்புறுத்தலில் இருந்து தம்மை பாதுகாப்பதற்க்காகவும்  கூட இந்த விருப்பம் இருக்கலாம்.


காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொள்ளாமல் இந்தத் தேர்வுகளைப் புரிந்துகொள்வது முழுமையடையாது. குறுகிய காலத்தில் அல்லது சிறிய பகுதியில் ஏற்படும் அசாதாரண வானிலையுடன் காலநிலை மாற்றத்தை நேரடியாக இணைப்பது கடினம். இருப்பினும், காலநிலை மாற்றம் புதிய பகுதிகளில் மற்றும் நீண்ட காலத்திற்கு இத்தகைய அசாதாரண வானிலையை ஏற்படுத்துகிறது. எதிர்பாராத விதத்தில் அது நம்மையும் பாதிக்கிறது. முடிவுகளை எடுக்கும்போது இந்த பரந்த தாக்கங்களை நினைவில் வைப்பதே சிறந்த அணுகுமுறை.




Original article:

Share: