கோவிஷீல்டு தடுப்பூசியின் ‘அரிதான’ பக்க விளைவுகள்: தேர்தல் காலத்தில், தடுப்பூசியை அரசியலாக்குவதன் அபாயங்கள் -ஷாஹித் ஜமீல்

 இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், AstraZeneca நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கைகள் புதியவையும் அல்ல, கவலைப்பட வேண்டியவையும் அல்ல. மாறாக, அனைவருக்கும், எல்லா இடங்களிலும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு தடுப்பூசிகள் இன்னும் முக்கியமானதாக இருக்கும்.


கோவிட்-19 தடுப்பூசியின் பக்கவிளைவுகளை நீதிமன்றத்தில் "ஒப்புக்கொண்ட" (admitted) மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca), கோவிஷீல்டாக (Covishield) இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டதை அடுத்து, சமூக ஊடகங்கள் மற்றும் சில முக்கிய ஊடகங்களில் உள்ளவர்கள் இந்த வாரம் "நாங்கள் உங்களிடம் இதை முன்பே சொன்னோம்" (we told you so) என்ற நிலைப்பாட்டை எட்டியுள்ளனர்.


ஏப்ரல் 28 அன்று இங்கிலாந்தின் The Telegraph-ல் வெளியான ஒரு அறிக்கையை அடுத்து இந்த தகவல் வந்துள்ளது. இந்த அறிக்கை அஸ்ட்ராஜெனெகாவுக்கு (AstraZeneca) எதிரான வர்த்தக நடவடிக்கை வழக்கு குறித்து விவாதித்தது. இந்த அறிக்கையின்படி, அஸ்ட்ராஜெனெகா தனது கோவிட் தடுப்பூசி அரிதாகவே பக்க விளைவை ஏற்படுத்தும் என்பதை நீதிமன்ற ஆவணங்களில் முதல் முறையாக ஒப்புக் கொண்டது. இந்த நிலை த்ரோம்போசைட்டோபீனியா நோய்க்குறி (Thrombocytopenia Syndrome (TTS)) உடன் இரத்தம் உறைதல் (Thrombosis) என்று அழைக்கப்படுகிறது. த்ரோம்போசைட்டோபீனியா நோய்க்குறி (TTS) இரத்த உறைவு (blood clots) மற்றும் குறைந்த அளவு இரத்த தட்டுகளை (low levels of platelets) உள்ளடக்கியது. இரத்தத் தட்டுகள் (platelet) ஒரு வகை இரத்த அணு ஆகும். இது இரத்தப்போக்கை தடுக்க உதவும்.


அபாயம், அதன் கண்ணோட்டத்தில்


முக்கிய வார்த்தையான "அரிய பக்க விளைவு" (rare side effect) அதற்கு என்ன பொருள்?


அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை (AstraZeneca vaccine) எடுத்துக் கொண்ட பிறகு த்ரோம்போசைட்டோபீனியா நோய்க்குறியானது (TTS) "மிகவும் அரிதானது" (very rare) 1,00,000 பேருக்கு 2 முதல் 3 நோய்க்கான அறிகுறிகள் என்று ஆஸ்திரேலிய சுகாதாரம் மற்றும் முதியோர் பராமரிப்புத் துறை (Australian Department of Health and Aged Care) கண்டறிந்துள்ளது. ஏப்ரல் 2021 இல், உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்கள் தடுப்பூசிக்குப் பிறகு அரிதான இரத்த உறைவு நிலை ஏற்படும் அபாயத்தைக் கணக்கிட்டனர். இங்கிலாந்தில் 250,000 பேரில் ஒருவராகவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் 100,000 பேரில் ஒருவராகவும் இருப்பதாக அவர்கள் கண்டறிந்தனர். துரதிர்ஷ்டவசமாக, இந்தியா சுமார் 1.75 பில்லியன் (175 கோடி) தடுப்பூசிகள் கோவிஷீல்டைப் பயன்படுத்தியிருந்தாலும், இந்தியாவைப் பற்றிய குறிப்பிட்ட தரவு எதுவும் இல்லை. ஆனால், இந்தியர்களுக்கும் இதே ஆபத்துதான்.


இதைக் கருத்தில் கொண்டு, உலகளவில், போக்குவரத்து விபத்தில் இறக்கும் ஆபத்து 100,000 பேருக்கு 17.4% இறப்புகள் ஆகும். மேலும், குறைந்த வருமானம் உள்ள நாடுகளில், 100,000 க்கு 24 பேருக்கு இறப்பு ஆபத்து அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் அதிக வருமானம் கொண்ட நாடுகளில், 100,000க்கு ஒன்பது இறப்புகள் என்ற அளவில் உள்ளன. எனவே, அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பெற்ற பிறகு த்ரோம்போசைட்டோபீனியா நோய்க்குறியின் (TTS) ஆபத்து கார் விபத்தில் இறக்கும் அபாயத்தை விட 5 முதல் 12 மடங்கு குறைவாகும்.


பொதுவாக மருத்துவம் என்பது ஆபத்து மற்றும் நன்மையைப் பற்றியது. ஒரு மருந்தின் நன்மைகள் அபாயங்களை விட அதிகமாக இருந்தால், நாங்கள் அதைப் பயன்படுத்துகிறோம். உதாரணமாக, இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து போலியோவை ஒழிப்பதில் வாய்வழி போலியோ தடுப்பூசி முக்கியமானது. இது 2.7 மில்லியன் மக்களில் ஒருவருக்கு தடுப்பூசி தொடர்பான பக்கவாதத்தை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இந்த ஆபத்து மிக அதிகம். ஆனால், பொது சுகாதாரத்திற்கான நன்மைகள் மிக அதிகம். எனவே, தடுப்பூசியைப் பயன்படுத்துகிறோம்.


பக்க விளைவுகள் எதிர்பார்க்கக் கூடியதா?


தடுப்பூசி அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு இந்த அரிய அபாயங்களை நாம் சோதிக்க முடியுமா? கோவிட் -19 தடுப்பூசிகளுக்கான ஒரு பொதுவான கட்டம் 3 மருத்துவ பரிசோதனையில், சுமார் 30,000 தன்னார்வலர்களைக் கொண்ட சோதனையில் 100,000 பேரில் ஒருவரின் அபாயத்தைக் காண முடியாது. பாதி பேர் தடுப்பூசி போடுகிறார்கள், பாதி பேர் மருந்தற்ற குளிகை (placebo) எடுக்கிறார்கள். மில்லியன் கணக்கான தன்னார்வலர்களுடன் (எங்கிருந்து இவ்வளவு தன்னார்வலர்களைப் பெறுவோம்?) மருத்துவப் பரிசோதனைகள் பல ஆண்டுகளாகப் பரவி, ஒரு தடுப்பூசி அங்கீகரிக்கப்படுவதற்கு முன், ஒரு சிறிய அபாயத்தைத் தெரிவிக்க பெரும் செலவில் வேண்டுமா? அது அதிக அர்த்தமல்ல. மேலும், புதிய கிருமியால் ஏற்படும் தொற்றுநோய்க்கு இதுபோன்ற தடுப்பூசி வேலை செய்யாது.


தடுப்பூசி போடப்பட்டு மில்லியன் கணக்கான தடுப்பூசிகள் கொடுக்கப்பட்ட பின்னரே அரிதான நிகழ்வுகள் தெரியும். Pfizer, Moderna மற்றும் AstraZeneca தடுப்பூசிகள் பற்றிய ஆய்வு ஏப்ரல் 2, 2024 அன்று தடுப்பூசி இதழில் வெளியிடப்பட்டது. இந்த தடுப்பூசிகள் குய்லின்-பாரே நோய்க்குறியின் (Guillain-Barré syndrome)  வாய்ப்பை அதிகரிக்கக்கூடும் என்று கண்டறிந்துள்ளது. இந்த தடுப்பூசிகள் தடுப்பூசி போட்ட 42 நாட்களுக்குள், நரம்பியல் அறிகுறிகள் மற்றும் மூளை உறைவை ஏற்படுத்தும் தன்னுடல் தாக்கக் கோளாறு குய்லின்-பாரே நோய்க்குறியின் அபாயத்தை சற்று அதிகரித்துள்ளன என்று அது கண்டறிந்தது. இந்த ஆய்வில் 99 மில்லியன் மக்களில் சுமார் 200 வழக்குகள் கண்டறியப்பட்டன. இது 500,000 பேரில் ஒருவருக்கு ஆபத்து இருப்பதைக் குறிக்கிறது. ஆஸ்திரேலியாவில் 6.7 மில்லியன் மக்களை உள்ளடக்கிய மற்றொரு ஆய்வில், தடுப்பூசிக்குப் பிறகு மூளை மற்றும் முதுகெலும்பு வீக்கத்திற்கு 500,000 பேரில் ஒருவருக்கும் 1.3 மில்லியனில் ஒருவருக்கும் இதேபோன்ற ஆபத்து இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.


இந்த ஆய்வுகளின் முக்கியத்துவம் இரண்டு வழிகளில் குறிப்பிடத்தக்கது. முதலாவதாக, நிஜ உலக நிலைமைகளின் கீழ் மிகப்பெரிய மக்கள்தொகையில் இந்த தடுப்பூசிகளின் பாதுகாப்பை அவை உறுதிப்படுத்துகின்றன. இரண்டாவதாக, ரிபோநியூக்ளிக் அமிலம் (Ribonucleic acid (RNA)) மற்றும் வைரல் வெக்டர்கள் (viral vector) தடுப்பூசி தளங்களுடன் இணைக்கப்பட்ட அபாயங்கள் குறைவாக இருந்தாலும், விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கின்றன. இந்த தடுப்பூசிக்கான தளங்களை இன்னும் பாதுகாப்பானதாக்குவதை நோக்கமாகக் கொண்ட எதிர்கால ஆராய்ச்சிக்கு இந்த தகவல் வழிகாட்டுகிறது.


தடுப்பூசியை அரசியலாக்க வேண்டாம்


இந்தியாவில் தேர்தல் காலங்களில், கோவிட் -19 தடுப்பூசிகள் பெரும்பாலும் அரசியல் விவாதத்தின் மையமாக மாறும். அரசியல் ஆதாயத்திற்கான கருவிகளாக தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும். தொற்றுநோய்களின் போது அமெரிக்காவில் உள்ள புளோரிடா (Florida) மற்றும் ஓஹியோவில் (Ohio) 500,000 க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பார்க்கும் ஒரு ஆய்வில், கோவிட் -19 தடுப்பூசிகள் அனைத்து பெரியவர்களுக்கும் கிடைத்த பின்னர் ஜனநாயகக் கட்சி வாக்காளர்களை விட குடியரசுக் கட்சி வாக்காளர்களிடையே அதிக இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது. ஆனால் தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைக்கும் முன் இந்த வேறுபாடு இல்லை. அறிவியல் மற்றும் தடுப்பூசிகள் மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அரசியல் சொல்லாட்சி இந்த வேறுபாட்டிற்கு பங்களித்தது என்று ஆய்வு பரிந்துரைத்தது. நம் தவறுகளில் இருந்து பாடம் கற்போம், மீண்டும் செய்யாமல் இருப்போம்.

தடுப்பூசிகள் பொது சுகாதாரத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் (Imperial College) ஆய்வில், தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்ட முதல் ஆண்டில் 14 முதல் 20 மில்லியன் கூடுதல் இறப்புகளைக் காப்பாற்றியது. கூடுதலாக, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் (Stanford University) அமெரிக்க-ஆசிய தொழில்நுட்ப மேலாண்மை மையத்தின் (US-Asia Technology Management Center) ஒரு ஆய்வறிக்கை, இந்தியாவின் கோவிட் -19 தடுப்பூசி திட்டம் சுமார் 3.4 மில்லியன் அதிகப்படியான இறப்புகளைத் தடுத்ததாக மதிப்பிட்டுள்ளது.


இதன் முக்கிய விஷயம் என்னவென்றால், அஸ்ட்ராஜெனெகாவின் சமீபத்திய அறிக்கைகள் உண்மையில் புதியவை அல்ல, அவை கவலைப்பட வேண்டிய ஒன்றும் அல்ல. ஒவ்வொருவருக்கும், எல்லா இடங்களிலும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். இந்த முயற்சிகளில் தடுப்பூசிகள் தொடர்ந்து முக்கியமானதாக இருக்கும்.


எழுத்தாளர் ஒரு வைராலஜிஸ்ட், தற்போது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் OCIS மற்றும் கிரீன் டெம்பிள்டன் கல்லூரியில் சக ஊழியராக உள்ளார்.




Original article:

Share:

சரக்கு & சேவை வரி மற்றும் சீர்திருத்தங்களை புரிந்துகொள்ளுதல்

 சரக்கு மற்றும் சேவை (goods and service tax (GST)) வரியின் வருவாய் அதிகரித்திருப்பதால், அடுத்த அரசாங்கம் சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.


ஏப்ரல் மாதத்தில், சரக்கு மற்றும் சேவை வரி  வருவாய் முதன்முறையாக ₹2 லட்சம் கோடியைத் தாண்டியது. இந்த குறிப்பிடத்தக்க சாதனையானது வலுவான பொருளாதார செயல்பாடு மற்றும் வரி இணக்கத்தை பிரதிபலிக்கிறது. வரலாற்று ரீதியாக, ஏப்ரல் மாதத்தில் அதிக G.S.T. வசூல் ஆகும். வரி செலுத்துவோர் மார்ச் மாதத்தில் நிதியாண்டிற்கான தங்கள் கணக்குகளை இறுதி செய்கிறார்கள், இது ஏப்ரல் மாதத்தில் வரி செலுத்துதல்களை அதிகரிக்க வழிவகுத்தது. ஏப்ரல் 2024 உடன்  ஏப்ரல் 2023ஐ  ஒப்பிடுகையில்: ஏப்ரல் 2024 இன் மொத்த G.S.T.வசூல் ₹2.1 லட்சம் கோடியாக இருந்தது. இது ஏப்ரல் 2023 இல் முந்தைய சாதனையான ₹1.87 லட்சம் கோடியைத் தாண்டியது. இது ஆண்டுக்கு 12.4% வளர்ச்சியைக் குறிக்கிறது.


மாதாந்திர G.S.T. வசூல்களுக்கு ₹2 லட்சம் கோடி புதிய இயல்பானதாக இல்லாவிட்டாலும், நீடித்த பொருளாதார வேகம் அதை அடையக்கூடியதாக இருக்கும். 11%-12% வரம்பில் வளர்ச்சி நீடிக்கிறது என்று வைத்துக் கொண்டால், கடந்த ஏப்ரல் மாத அதிகபட்சமான ₹1.87 லட்சம் கோடி இந்த ஆண்டின் மாத சராசரியாக இருக்கலாம். 2023 ஆம் ஆண்டில், சராசரி மாத G.S.T. வருவாய் ₹1.68 லட்சம் கோடியாக இருந்தது. 2024 ஆம் ஆண்டுக்கு முன் அதிகபட்ச மாத வசூல் ஏப்ரல் 2022 இல் ₹1,67,540 கோடியாக இருந்தது. சுருக்கமாக, ஏப்ரல் 2024 G.S.T வசூலில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. மேலும், பொருளாதார நடவடிக்கைள் சீராக இருந்தால், ஆண்டு முழுவதும் வருவாயில் நிலையான  வளர்ச்சி இருக்கும்.


கடந்த மாதம் G.S.T. வருவாய் ₹2 லட்சம் கோடிக்கு மேல் இருந்தது, இது ஒரு பெரிய சாதனை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். பொருளாதாரம் வலுவாக இருப்பதையும், வரி வசூல் நன்றாக இருப்பதையும் இது காட்டுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, G.S.T வருவாய் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால், அரசாங்கம் கவலையடைந்தது. ஆனால் இப்போது, நிறைய மாற்றங்கள் எற்பட்டுள்ளன. போலி விலைப்பட்டியல் போன்ற மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் வருவாயை அதிகரிக்க உதவியுள்ளது. ஒன்றிய  அரசு இந்த ஆண்டு திட்டமிட்டதை விட கூடுதல் G.S.T. வசூலித்துள்ளது. புதிய அரசாங்கம் முழு பட்ஜெட்டில் அதிக வருவாய் இலக்குகளை எளிதாக நிர்ணயிக்க முடியும். ஆனால், G.S.Tயை சிறப்பாகச் செய்வது தான் சவாலாக உள்ளது. இது அதிக வணிகங்களைச் சேர்த்து அதன் சிக்கலான வரி விகிதங்களை சரிசெய்ய வேண்டும். இதன் மூலம் மக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் எளிதாக புரிந்து கொண்டு வரி  செலுத்துவார்கள். 


தற்போதைய வரி முறை நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு எளிமையாக உள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கையில் G.S.T அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு வணிகங்களுக்கான G.S.T வலைத்தளத்தை எளிமைப்படுத்துவதாக உறுதியளிக்கிறது.


சுருக்கமாக, சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தங்களுடைய திட்டங்களை கூறியுள்ளன. சிறு வணிகங்களுக்கு இணைய வழியில் G.S.T வசூல் முறையை எளிதாக்க பாஜக விரும்புகிறது. சில விதிவிலக்குகளுடன் ஒரு மிதமான விகிதத்தைக் (moderate tax) கொண்டிருப்பதன் மூலம் வரி முறையை எளிமையாக்க காங்கிரஸ் விரும்புகிறது. தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், வரி அமைப்பில் உள்ள சிக்கல்களைச் சரி செய்ய பல்வேறு குழுக்களின் உள்ளீட்டைக் கொண்டு சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துவது முக்கியம். இது செலவினங்களை அதிகரிக்கவும் எதிர்காலத்தில் அதிக முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான களத்தை அமைக்கவும் உதவும்.




Original article:

Share:

‘இந்த விடுப்பை’ பெண்ணின் உரிமையாக அங்கீகரிக்கவும் -ரெஹ்னமோல் ரவீந்திரன்

 மாதவிடாய் விடுப்பில் அரசியல் கட்சிகள் தெளிவான நிலைப்பாட்டை எடுப்பது பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்த உதவும்.


தமிழ்நாட்டில் 2024 பொதுத் தேர்தலின் போது, ஆளும் அரசியல் கட்சியான திமுக, பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்தது. பாலின சமத்துவத்தை ஆதரிக்கும் வகையில் மத்திய அரசு இந்த சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பென்கள் எதிபார்கிறார்கள். 2023 டிசம்பரில் 17வது மக்களவையில் நடந்த விவாதத்திற்குப் பிறகு இந்த வாக்குறுதி வந்தது, ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.


நாடளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மசோதாக்கள்


2021 டிசம்பரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜோதிமணி, 'மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஊதிய விடுப்பு மசோதா, 2019' (Right to Menstrual Hygiene and Paid Leave) என்ற மசோதாவை முன்மொழிந்தார். இந்த மசோதா பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு எடுப்பதற்கான உரிமையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது மற்றும் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும் தீர்வு சட்டம், 2013 இன் (Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013) கீழ் அத்தகைய விடுப்பை மறுப்பது சட்டத்திற்கு எதிரானது. மறுத்தால் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமுண்டு.


பெண்களுக்கான மாதவிடாய் உரிமைகள் தொடர்பான மசோதா, ஒவ்வொரு பெண்ணும் தன் மாதவிடாயைப் பற்றித் தானே புரிந்துகொள்ளும் உரிமையைப் பெற்றிருக்க வேண்டும் என்று முன்மொழிந்தது. இதில் மாதவிடாய் முதல் மாதவிடாய், இறுதி மாதவிடாய், மாதவிடாய் சுழற்சிகள் மற்றும் வலியுடன் கொண்ட மாதவிலக்கு (dysmenorrhea) மாதவிடாய் வலி (menstrual pain) ஆகியவை அடங்கும். இந்த மசோதா பல தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது: மூன்று நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு; எட்டாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை; ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை 30 நிமிட ஓய்வு; மற்றும் அனைத்து பெண்களுக்கும் மாதவிடாய் சுகாதார மேலாண்மை வசதிகள் மற்றும் சமபங்கு அணுகல்.


அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யான நினோங் எரிங், 2017-ஆம் ஆண்டு மாதவிடாய் பலன் மசோதா (Menstruation Benefit Bill in 2017) என்ற தனி நபர் மசோதாவை அறிமுகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யான சஷி தரூர், பெண்கள் பாலியல், இனப்பெருக்கம் மற்றும் மாதவிடாய் உரிமைகள் மசோதாவை (Women’s Sexual, Reproductive and Menstrual Rights Bill in 2018) 2018-ல் அறிமுகப்படுத்தினார். கேரளாவைச் சேர்ந்த மற்றொரு காங்கிரஸ் எம்பியான ஹிபி ஈடன், பெண்களுக்கு மாதவிடாய் விடுப்புக்கான உரிமை மற்றும் மாதவிடாய் சுகாதார தயாரிப்புகளுக்கான இலவச அணுகல் மசோதாவை 2022 (Right to Women to Menstrual Leave and Free Access to Menstrual Health Products Bill in 2022) இல் முன்மொழிந்தார்.


2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்திய அரசுக்கு எதிராக ஷைலேந்திர மணி திரிபாதி தாக்கல் செய்த மாதவிடாய் விடுப்பு தொடர்பான வழக்கை பரிசீலிக்க இந்திய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது அரசின் கொள்கை முடிவு என்று அவர்கள் கூறினர். டிசம்பர் 2023 இல் மத்திய அரசு இந்த யோசனையை நிராகரித்தது. 2024 பொதுத் தேர்தலுக்கான தங்கள் தேர்தல் அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சி மாதவிடாய் விடுப்பு பற்றி குறிப்பிடவில்லை. காங்கிரஸ் கட்சியும் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. இருப்பினும், காங்கிரஸ் கட்சி "சுகாதாரம்" பிரிவின் கீழ் அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கும் என உறுதியளித்தது.


முன்னோக்கிச் சிந்திக்கும் இந்திய மாநிலங்கள், ஆசிய நாடுகள்


சில மாநிலங்கள் மாணவிகளின் தேவைகளை அங்கீகரிப்பதில் முன்னோடியாக உள்ளன. உதாரணமாக, கேரளா, 1912 இல், தேர்வுகளின் போது "பீரியட் லீவ்" (period leave) வழங்கியது. சமீபத்தில், மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதாரப் பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவித்துள்ளது. பீகாரில், 1992 முதல், அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் மாதவிடாய் விடுப்பு அனுமதிக்கப்பட்டது. ஜனவரி 2023 இல், கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதுள்ள சட்டங்கள் அவர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதைத் தடுக்கவில்லை என்பதை மற்ற மாநிலங்கள் அறிந்து கொள்வது அவசியம்.


இதற்கிடையில், பல ஆசிய நாடுகள் மாதவிடாய் தடைகளை சட்டங்கள் மூலம் நிவர்த்தி செய்கின்றது. ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தென் கொரியா 1940 களின் பிற்பகுதியில் மாதவிடாய் விடுப்பை நடைமுறைப்படுத்தியது. தைவான் மற்றும் வியட்நாம் ஆகியவை ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்குகின்றன. இருப்பினும், ஸ்வீடன் மற்றும் ஸ்பெயின் தவிர, மேற்கத்திய நாடுகளில் இந்த நடைமுறை மெதுவாக உள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International organizations) போன்ற சர்வதேச நிறுவனங்கள் 2003 ஆம் ஆண்டு முதல் மாதவிடாய் விடுப்பு பெண்களின் உரிமை என வாதிட்டன. உலக சுகாதார நிறுவனம் 2014 ஆம் ஆண்டு முதல் மே 28 ஆம் தேதி உலக மாதவிடாய் சுகாதார தினத்தை (World Menstrual Hygiene Day) அங்கீகரித்துள்ளது. இந்தியா 2020 இல் ஒரு புதிய சமூகப் பாதுகாப்புக் குறியீட்டை நிறைவேற்றியது. இந்தக் குறியீடு பல தொழிலாளர் சட்டங்களை இணைத்தது. ஆனால், அதில் மாதவிடாய் விடுப்பு இடம்பெறவில்லை.


மகாராஷ்டிராவின் கரும்பு வயல்களில் பணிபுரியும் பெண்களுக்கும், தெலுங்கானாவில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கும் கருப்பை நீக்கம் செய்யப்படுகிறது, ஏனெனில் மாதவிடாய் காரணமாக வேலையைத் தவறவிடுவது அவர்களின் வேலையை பாதிக்கும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் போன்ற பனிகளில் Swiggy மற்றும் Zomato போன்ற நிறுவனங்களைப் பின்பற்றி மாதவிடாய் விடுப்பு அளிக்க வேண்டும்.


பாலின வேறுபாடுகள் குறித்து நாம் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.


பாலின ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட கொள்கைத் தீர்வுகள் சமூக-கலாச்சார மற்றும் உயிரியல் காரணிகளால் பெண்களின் வெவ்வேறு அனுபவங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது சமத்துவத்தை ஊக்குவிக்கும் மற்றும் சமூக மாற்றத்தை வளர்க்கும். மாதவிடாய் குறித்த பொதுக் கொள்கை விவாதங்கள் தடைகளை உடைப்பதிலும், பாலின உணர்திறன் உலகத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்த விவாதங்கள் பாரம்பரியமாக இத்தகைய பிரச்சினைகளை மறைத்து வைத்திருக்கும் பழமைவாத சமூக தரநிலைகளுக்கு சவால் விடுகின்றன.


தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளை ஒப்புக்கொள்வது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். பெண்களின் உரிமைகளை முன்னேற்றுவதற்கும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் இந்த அங்கீகாரம் முக்கியமானது. இத்தகைய அரசியல் ஈடுபாடு, மக்கள்தொகையில் கணிசமான பகுதியைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அதன் மூலம் பாலின சமத்துவத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.


ரெஹ்னமோல் ரவீந்திரன் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியர்.




Original article:

Share:

பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவுக்கு (PMJAY) மறுசீரமைப்பு தேவைப்படுகிறதா? -ஜுபேதா ஹமீத்

 2018 ஆம் ஆண்டில், அரசாங்கம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை (Ayushman Bharat) அறிமுகப்படுத்தியது. இது, அனைவருக்கும் சுகாதார காப்பீடு (universal health coverage (UHC)) இருப்பதை உறுதி செய்வதற்கான முதன்மை திட்டமாக தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஒன்றொடொன்று இணைக்கப்பட்ட இரண்டு கூறுகள் உள்ளன. ஒன்று சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் மற்றும் இரண்டாவது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Pradhan Mantri Jan Arogya Yojana (PMJAY)) ஆகும். பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Pradhan Mantri Jan Arogya Yojana (PMJAY)) திட்டத்தின் கீழ் 12 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு மருத்துவமனை பராமரிப்புக்காக ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வழங்குகிறது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் 34.27 கோடி குடும்பங்களுக்கு அட்டைகள் வழங்கப்பட்டு, அதில் 6.5 கோடி பேர் சிகிச்சைகள் பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 30,000 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன. ஆனால், சில மாநிலங்களில், கடந்த ஆண்டிலிருந்து மருத்துவமனைக்கு நிறைய பணம் பாக்கி இருப்பதாக மருத்துவமனைகள் கூறுகின்றன. மேலும் சில பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு சிகிச்சையை மறுக்கின்றன அல்லது குறைக்கின்றன. PMJAY மறுவடிவமைப்பு தேவையா? இதைப் பற்றி உரையாடல் மூலம், அவனி கபூரும், நச்சிகேத் மோரும் பேசுகிறார்கள். சுபேதா ஹமீத் உரையாடலை நடத்துகிறார்.


திட்டத்தை மேலும் நிலையானதாக மாற்ற பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) திட்டத்தின் வடிவமைப்பை மாற்றப்பட வேண்டுமா?


நச்சிகேட் மோர்: அனைவருக்கும் இலவச சுகாதாரத்தை வழங்க வேண்டிய பொதுத்துறையானது போதுமானதாக இல்லை என்பதால் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) என்ற திட்டம் தேவைப்பட்டது. ஆனால், அது என்ன செய்ய  முடியும் என்பதில் சில குறைபாடுகள் இருந்தன. எனவே, அவர்கள் தனியார் சுகாதாரத்துறையைப் பயன்படுத்த மக்களை அனுமதித்தனர். அதே நேரத்தில்,  பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) அனைத்து சுகாதார செலவுகளையும் ஈடுகட்டாது. இது ஆரோக்கியத்திற்கான மொத்த செலவில் 2.5% க்கும் குறைவாகவே உள்ளது. சுகாதாரத்திற்கான அரசாங்க செலவினங்கள் பல மாநிலங்களில் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) நிதியுடன் இணைந்தால், மருந்துகள் மற்றும் சிகிச்சைக்கான சோதனைகள் உள்ளிட்ட உலகளாவிய சுகாதாரத்திற்கு இது போதுமானதாக இருக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. உதாரணமாக, கேரளாவில், மக்கள் சுகாதாரத்திற்காக நிறைய செலவிடுகிறார்கள். ஏனெனில், அரசாங்கம் போதுமான பணத்தை வழங்கினாலும், அதற்கு ஈடாக அது நல்ல சுகாதாரத்தை வழங்காது. முதன்மை பராமரிப்பு அதிகம் பயன்படுத்தப்படவில்லை. மேலும், அதிகப்படியான கழிவுகள் மற்றும் திறமையின்மை உள்ளது. பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) திட்டத்திற்கு மேல் மேலும் திட்டங்களைச் சேர்ப்பது அரசாங்க பணத்தை இன்னும் வீணடிக்கக்கூடும் என்று நச்சிகேட் மோர் கவலைப்படுகிறார். எடுத்துக்காட்டாக, இப்போது இலவசமாக இருக்க வேண்டிய அரசு மருத்துவமனைகள் கூட, நீங்கள் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறீர்களா என்று முழுமையாக சரிபார்க்கவும். சில சமயங்களில், இது சிக்கல்களை உருவாக்குகிறது. குறிப்பாக தாமதங்கள் அல்லது நிராகரிப்புகளை தாங்க முடியாத ஏழை குடும்பங்களுக்கு, சுகாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் மக்கள் தங்கள் சொந்த பணத்தை செலவழிப்பதை எவ்வாறு தடுக்க முடியும். தேசிய சுகாதார ஆணையம் (National Health Authority (NHA)) மற்றும் மாநில சுகாதார ஆணையம் (State Health Authority (SHA)), ஒழுங்கமைக்கப்பட்ட, உயர் தரமான முறையில் பராமரிப்பை வழங்கும் திறனுடன் உங்களுக்கு எங்கே உதவ முடியும்? நாம் தொடர வேண்டிய கேள்வி இது என்று நான் நினைக்கிறேன்.


அவனி கபூர்: நச்சிகேட் மோர் அவர்கள், விநியோகம் சார்ந்த பக்கத்தைப் பற்றி பேசினார். நான் கோரிக்கையின், அதாவது தேவையின் பக்கத்தைப் பற்றி விவாதிக்க விரும்புகிறேன். பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) திட்டத்தில் வரிசை பட்டியலில் சேர்க்கப்பட்ட மருத்துவமனைகளில் (empanelled hospitals) 43% தனியாருக்கும், மீதமுள்ளவை அரசுக்கு சொந்தமானவை என்று அவர் குறிப்பிட்டார். ஒரு பொது மருத்துவமனை அருகில் இருந்தாலும் கூட, சிறந்த சிகிச்சை சேவைக்காக பலர் தனியார் மருத்துவமனைகளை விரும்புகிறார்கள். இங்கு, தனியார் மருத்துவமனைகள் பெரும்பாலும் உயர்தர கவனிப்பை வழங்குவதால் இந்த விருப்பம் நியாயப்படுத்தப்படலாம். அதேசமயம், பொது சுகாதார அமைப்பில் (public health system) நம்பிக்கையின்மை உள்ளது என்பதே நிதர்சனம்.


தனியார் மருத்துவமனைகள் பல்வேறு காரணங்களால் நோயாளிகளை சில சமயங்களில் மறுக்கலாம்: அதில், 


1. வரையறுக்கப்பட்ட திறன், பல மாநிலங்களில், இந்த திட்டத்தில் வரிசைபட்டியலில் சேர்க்கப்பட்ட மருத்துவ சேவை வழங்குநருக்கு (empanelled healthcare provider (EHCP)) நோயாளியின் எண்ணிக்கை உண்மையில் அதிகமாக உள்ளது. பீகாரில், ஒவ்வொரு வரிசைபட்டியலில் சேர்க்கப்பட்ட மருத்துவ சேவை வழங்குநருக்கு (empanelled healthcare provider (EHCP)) 10,000 குடும்பங்களுக்கும் சேவை செய்தது. ஆனால், இந்த தேவையை பூர்த்தி செய்ய போதுமான படுக்கைகள் மற்றும் வசதிகள் இல்லாதது.


2. இரண்டாவதாக, வழிகாட்டுதல்கள் மூலம் செயலாக்கப்பட வேண்டிய நேரத்தை தெளிவாகக் கூறினாலும், உரிமைகோரல் மூலம் கோரிக்கைப் பணம் (claim payments) பெரும்பாலும் தாமதமாகும்.


3. கோரிக்கை நிராகரிப்புகளும் உள்ளன. அதாவது ஒரு மருத்துவமனை நோயாளியை அழைத்துச் செல்கிறது, அறுவை சிகிச்சை செய்கிறது, பின்னர் காப்பீட்டு நிறுவனம் ஆவணப் பிழைகள் அல்லது தொழில்நுட்பத்தின் காரணமாக அந்தக் கோரிக்கையை நிராகரிக்கிறது.


4. சிகிச்சை கட்டணங்களுக்கு அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட உச்சவரம்புகள், இது தனியார் வழங்குநர்களுக்கு சாதகமாக அமைவதில்லை.


பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த பொதுத்துறையை மேம்படுத்துவது முக்கியம். இல்லையெனில், ஏற்கனவே நிரம்பி வழியும் தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் தொடர்ந்து சுமையை ஏற்ற நேரிடும். இதன் மூலம், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்கலாம் அல்லது தேவையற்ற நடைமுறைகளைச் செய்யலாம் என்றாலும், பொதுத்துறை திறமையின்மை அல்லது அவநம்பிக்கை காரணமாக அவற்றின் மீதான அழுத்தம் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை.


PMJAY இன் கீழ் மாநிலங்களிடையே செயல்திறன் ஏற்றத்தாழ்வு எவ்வளவு பரந்த அளவில் உள்ளது?


அவனி கபூர்: பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகளைப் பற்றி பேசியதில், பல பகுதிகளில், மருத்துவமனைகள் இல்லை. காப்பீடு வழங்கும் மருத்துவமனைகளின் பட்டியலில் கீழ் உள்ள சில மருத்துவமனை போன்றவை கூட செயல்படவில்லை. உதாரணமாக, உத்தரபிரதேசத்தில், இந்த மருத்துவமனைகளில் 39% இந்த திட்டத்தின் கீழ் பட்டியலில் வந்ததிலிருந்து செயல்படவில்லை. கடந்த ஆறு மாதங்களில் 50% மட்டுமே செயல்பட்டு வருகின்றன. வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு சூழ்நிலைகள் உள்ளன. சிலவற்றில் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது குறைவான மருத்துவமனைகள் உள்ளன. மாநிலங்களுக்குள் கூட, மருத்துவமனைகளின் எண்ணிக்கை சீராக இல்லை. அரசாங்கமானது இதற்கான செயல்பாட்டை எவ்வளவு சிறப்பாக நிர்வகிக்கிறது என்பது மிகவும் முக்கியமானது. சில மாநிலங்கள் காப்பீட்டுக்கான உரிமைகோரல்களை செலுத்த 45 நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்டன. மற்றவை விரைவாக கோரிக்கைகளை செலுத்தின. ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக காப்பீட்டுக்கான உரிமைகோரல்கள் உள்ளன என்பது சுவாரஸ்யமானது. இது ஏன் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள எங்களுக்கு கூடுதல் ஆராய்ச்சி தேவை.


நச்சிகேட் மோர்: பணம் செலுத்துவதில் தாமதம் என்பது ஒரு மாநிலம் பணக்கார மாநிலமா அல்லது ஏழையா என்பதைப் பொறுத்தது அல்ல. இது முற்றிலும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றியது. உத்தரப்பிரதேச மாநிலம் ஷ்ராவஸ்தி மாவட்டத்தில் (Shravasti district in U.P) போதிய மருத்துவமனைகள் இல்லாததால் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. உலகளவில் பெரும்பாலான இடங்களில், காப்பீட்டாளர்கள் அருகில் போதுமான மருத்துவமனைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த விதி இந்தியாவில் பொருந்தாது. எனவே, மக்களுக்கு காப்பீட்டு அட்டைகள் இருக்கலாம். ஆனால், அருகில் மருத்துவமனைகள் இல்லை. இது வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதே சமயத்தில், தனியார் துறை அநேகமாக பஸ்தார் (Bastar) போன்ற இடங்களில் மருத்துவமனைகளைக் கட்ட வாய்ப்பில்லை. இந்த சமயத்தில் இப்போதைக்கு, அரசாங்கம் முன்னிலை வகிக்க வேண்டும்.


இந்தியாவின் ஆரோக்கியத்திற்கான செலவு குறைந்துள்ளது. ஆனால், அது இன்னும் 47-50% என்ற மதிப்பில் உள்ளது. இது உலகளாவிய சராசரியை விட மிக அதிகமாகும். இதனால், வெளிநோயாளர் பராமரிப்பு, நோயறிதல் மற்றும் மருந்துகளையும் உள்ளடக்கக்கூடிய ஒரு அமைப்பை நாம் பார்க்க வேண்டுமா?


நச்சிகேட் மோர்: பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) மற்றும் ஆரோக்கிய மையங்களை சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் (health and wellness centres) அரசாங்க முயற்சிகள் என்று நாங்கள் நினைப்பது தவறு என்று கூறுகிறார். பெரும்பாலான சுகாதார செலவினங்கள் மாநில மற்றும் மத்திய அரசுகளிடமிருந்து வருகின்றன. மேலும், இது இந்த இரண்டு திட்டங்களை விட மிக அதிகம். அவை வெளிநோயாளர் (outpatient (OP)) பராமரிப்பை உள்ளடக்குகின்றன. பெரும்பாலும் மருந்துகள் மற்றும் வெளிநோயாளர் பராமரிப்புக்கு (drugs and OP care) செலவிடுகின்றன. எந்த அரசாங்கமாவது அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு தனி பொதுத்துறை வைத்திருக்கிறதா, பின்னர் அதன் மேல் காப்பீட்டுத் திட்டத்தைச் சேர்க்கிறதா என்று மேலும் கேட்கிறார். அவர் இதைப் பார்க்கவில்லை, இது சுகாதார அமைப்பை மேலும் துண்டு துண்டாக ஆக்குகிறது என்று நினைக்கிறார். பொருளாதாரத்தைத் தாண்டி வெளியே செலவழிக்கும் பிரச்சனையைத் தீர்க்க நாம் கவனிக்க வேண்டிய ஒன்று.


அவனி கபூர்: தற்போதைய, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) மாடல் அதன் வடிவமைப்பு மற்றும் செலவு காரணமாக எல்லாவற்றையும் உள்ளடக்காது. தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானில் உள்ளதைப் போன்ற சில மாநில திட்டங்கள், அனைவருக்கும் சுகாதார சேவையை (universal healthcare) நோக்கி நகர்ந்து, இலவச மருந்துகளை வழங்குகின்றன. 189 நாடுகளில் இந்தியா 67-வது இடத்தில் உள்ளது. ஒன்றிய அரசு பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) நிதியில் 60% கொடுக்க வேண்டும். ஆனால், உண்மையில் குறைவாக கொடுக்கிறது. பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) திடீர் சுகாதார செலவுகளுக்கு உதவுவதாகும். இது பெரும்பாலும் உள்நோயாளி சிகிச்சைகளுக்கு (inpatient treatments) அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட பகுதிகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) திட்டத்தில் ஒட்டுமொத்தமாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.


இது அனைவருக்கும் சுகாதார காப்பீடு (universal health coverage (UHC)) வழங்குவதற்கான ஒரு படி என்று அரசாங்கம் கூறியது. அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பை (UHC) அடைவதற்கான இந்தியாவின் பாதைக்கு காப்பீடு திட்டத்தின் மாதிரி சரியானதல்ல என்று நீங்கள் வாதிடுவீர்களா? வேறு எந்த நாடாவது காப்பீடு திட்டத்தின் மாதிரி மூலம் இதை அடைய முடிந்ததா?


நச்சிகேட் மோர்: காப்பீடு திட்ட மாதிரியை வழங்குநரிடமிருந்து வெறுமனே பிரித்து, நிலையான ஒதுக்கீடுகளைக் காட்டிலும் செயல்திறனின் அடிப்படையில் அவர்களுக்கு பணம் செலுத்தினால், அது இந்தியாவில், குறிப்பாக ஏழை மாநிலங்களில் சுகாதாரத்தை பெரிதும் மேம்படுத்த முடியும். தாய்லாந்து, துருக்கி, வியட்நாம், உருகுவே போன்ற நாடுகளில் இந்த அணுகுமுறை வெற்றி பெற்றுள்ளது. தேசிய சுகாதார ஆணையம் (National Health Authority (NHA)) / மாநில சுகாதார ஆணையம் (State Health Authority (SHA)) மூலம் இந்தியாவின் சுகாதார அமைப்புக்கு இணையான ஒன்றை செயல்படுத்தும் திறன் குறித்து அவர் மேற்கொண்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த மாதிரியானது பாரம்பரிய காப்பீட்டைப் போலவே செயல்படாது என்று அவர் வலியுறுத்துகிறார். அங்கு கோரிக்கை மூலம் தாக்கல் செய்து பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள். ஏனெனில், இது பெரும்பாலும் சுகாதார விலை பணவீக்கம் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. இது அமெரிக்காவில் Medicare/Medicaid காணப்படுகிறது. அதற்கு பதிலாக, அவர் வாங்குபவர்-வழங்குநர் (purchaser-provider) பிரிவுக்கான அணுகுமுறையை நம்புகிறார். ஆனால், அது பொதுத்துறைக்கு மட்டுப்படுத்தப்படக்கூடாது மற்றும் பல்வேறு நிதி ஆதாரங்களை ஒருங்கிணைக்க வேண்டும்.


அவனி கபூர்: நச்சிகேத்துடன் நான் ஒப்புக்கொள்கிறேன். தற்போதைய காப்பீட்டு அமைப்பு, பாக்கெட்டுக்கு வெளியே செலவுகளைக் குறைப்பது மற்றும் தரமான கவனிப்பை உறுதி செய்வது என்ற எங்கள் இலக்குகளை அடைய முடியும் என்று அவர் நினைக்கவில்லை. குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் உள்ள சுகாதாரக் காப்பீடு பற்றி சமீபத்திய கட்டுரையில், அரசு மருத்துவக் காப்பீட்டுக்கு பணம் கொடுக்க வேண்டுமா அல்லது நேரடியாக பொது மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டுமா என்பது மட்டும் அல்ல. இங்கு, பணம் செலுத்தும் திட்டங்களை எவ்வாறு அமைப்பது மற்றும் மருத்துவர்கள் எவ்வாறு வேலை செய்கிறார்கள் மற்றும் நோயாளிகள் எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பதை மாற்றக்கூடிய பிற முறைகளைப் பற்றியது. பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) போன்ற தற்போதைய அமைப்பு, பொது மருத்துவமனைகளை நாம் உண்மையில் மேம்படுத்தாவிட்டால் போதுமானதாக இருக்காது.


நச்சிகேட் மோர் விசிட்டிங் சயின்டிஸ்ட், Banyan Academy-ன் சுகாதாரப் பாதுகாப்பின் தலைவர் ஆவார்.

அவனி கபூர், கொள்கை ஆராய்ச்சி மையத்தின் மூத்த வருகை ஆய்வாளர் மற்றும் பொறுப்பு ஆளுமைக்கான அறக்கட்டளையின் நிறுவனர்-இயக்குநர் ஆவார்.




Original article:

Share:

இந்திய மசாலாப் பொருட்கள் ஏன் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன? -சப்தபர்னோ கோஷ்

 சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் மஹாஷியன் டி ஹட்டி பிரைவேட் லிமிடெட் (Mahashian Di Hatti Private Limited (MDH)) மற்றும் எவரெஸ்ட் (Everest) விற்கும் மசாலா கலவைகள் மாசுபடக்கூடும் என்று விசாரணையை அறிவித்தது ஏன்? இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் எவ்வாறு பதிலளித்துள்ளது? அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (Food and Drug Administration (FDA)) கூறியது என்ன?


சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகள், MDH மற்றும் எவரெஸ்ட் போன்ற இந்திய பிராண்டுகளின் மசாலா கலவைகள் எத்திலீன் ஆக்சைடு (ethylene oxide (ETO)) எனப்படும் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருளால் மாசுபடுத்தப்பட்டிருக்குமா என்று ஆராய்ந்து வருகின்றன. இந்த வேதிப்பொருள் உணவை நிலைநிறுத்தப் பயன்படுகிறது. ஆனால், அதிக அளவில் நச்சுத்தன்மை உடையதாக இருக்கிறது. இந்திய மசாலா வாரியம் (Spices Board of India) ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் கட்டாய சோதனையை தொடங்கியுள்ளது. இது மாசுபாட்டிற்கான காரணத்தைக் கண்டறிய ஏற்றுமதியாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது.


இந்திய மசாலாப் பொருட்களின் பாதுகாப்பை எந்த நாடுகள் கொடியிட்டுள்ளன?


ஏப்ரல் 5 ஆம் தேதி, ஹாங்காங்கின் உணவு பாதுகாப்பு மையம் M.D.H நிறுவனத்தின்  மெட்ராஸ் கறி தூள், சாம்பார் மசாலா, கறி தூள் மசாலா மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் கறி மசாலா விற்பனையை நிறுத்தியுள்ளது. அவற்றில் எத்திலீன் ஆக்சைடு அதிகமாக இருந்தது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.  சிங்கப்பூர் அரசாங்கம் இந்த  பொருட்களை வாங்க வேண்டாம் என்று தனது நாட்டு மக்களிடம்  அறிவுறுத்தியுள்ளது.


எத்திலீன் ஆக்சைடு பற்றிய கூற்றுக்கள் பொய்யானவை என்று M.D.H கூறுகிறது. தங்கள் மசாலாப் பொருட்களை தயாரிக்கும் எந்த நிலையிலும் இதைப் பயன்படுத்துவதில்லை என்று கூறுகின்றனர். வாசனைத் திரவியங்கள் வாரியத்துக்கோ (Spices Board) அல்லது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கோ (Food Safety and Standards Authority of India (FSSAI)) சிங்கப்பூர் அல்லது ஹாங்காங்கிலிருந்து எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்று குறிப்பிடுகின்றனர்.

 

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) இந்தியாவில் இருந்து உணவு மற்றும் மசாலா இறக்குமதியை நிராகரித்தது. நிலைமை குறித்த கூடுதல் தகவல்களை சேகரித்து வருவதாக ராய்ட்டர்ஸ் (Reuters) தெரிவித்துள்ளது. மாலத்தீவுகள், நியூசிலாந்து, பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளும் இதேபோன்ற திட்டங்களை அறிவித்துள்ளன.


உடல்நலக் கவலைகள் என்ன?


M.D.H. மற்றும் எவரெஸ்டின் மசாலா கலவைகளில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லியான எத்திலீன் ஆக்சைடு நிறைய இருப்பதாக கூறப்படுகிறது. எத்திலீன் ஆக்சைடு என்பது மருத்துவ கருவிகளை சுத்தம் செய்வதற்கான தெளிவான, எரியக்கூடிய வாயு ஆகும். ஆனால் இது, தொழில்கள், விவசாயம் மற்றும் மசாலா மற்றும் உலர்ந்த காய்கறிகள் போன்ற உணவுகளை சுத்தமாக வைத்திருக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எத்திலீன் ஆக்சைடு கிருமிகள் உருவாக்கத்தை தடுக்க உதவுகிறது.

 

சில நேரங்களில் எத்திலீன் ஆக்சைடு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பொருட்களை முழுமையாக சுத்தம் செய்யாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எச்சங்கள் தங்கி, பொருட்களுடன் கலந்து, அவற்றை ஆபத்தானதாக மாற்றிவிடுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளில் எத்திலீன் கிளைகோல் (ethylene glycol) என்ற கலவை இருந்தது. கேமரூன், காம்பியா, இந்தோனேசியா மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் இந்த சிரப்புகளை பயன்படுத்தியதற்கு பிறகு 300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.  எத்திலீன் ஆக்சைடை நீண்ட நேரம் சுவாசிப்பது லிம்போமா (lymphoma) மற்றும் லுகேமியா (leukaemia) போன்ற புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வு முடிவுகள்  தெரிவிக்கின்றன.


அமெரிக்காவில் நிராகரிக்கப்பட்ட வரலாறு உள்ளதா?


2023 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) இன் இறக்குமதி மறுப்பு அறிக்கை (refusal report) சால்மோனெல்லா (salmonella) சால்மோனெல்லோசிஸ் என்பது பொதுவாக சார்ந்த நோய்களை ஏற்படுத்துகிறது. இதன்  காரணமாக 30 தயாரிப்பு பொருள்களுக்கான அனுமதியை  அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நிராகரித்தது.  தவறானஅச்சடிப்பு, கலப்படம், செயற்கை வண்ணம் அல்லது தவறான பெயரிடல் ஆகியவற்றிற்காக 11 தயாரிப்புகள் நிராகரிக்கப்பட்டன. சில நிராகரிப்புகள் பல காரணங்களுக்காக இருந்தன. ராம்தேவ் உணவுப் பொருட்களை  (Ramdev Food Products) அதிகபட்சமாக 30 பேர் நிராகரித்துள்ளனர். அதைத் தொடர்ந்து MDH 19, MTR 7, எவரெஸ்ட் 5, கேட்ச்: DS குரூப் 2, மற்றும் பாட்ஷா 1 உடன் நிராகரிக்கப்பட்டன.


செப்டம்பர் 2019 இல், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்,  MDH இன் சாம்பார் மசாலா சால்மோனெல்லாவால் மாசுபட்டிருப்பதைக் கண்டறிந்தது. இது அமெரிக்காவில் தயாரிப்பை திரும்பப்பெற வழிவகுத்தது. இதன் மீதான தடை 2021 டிசம்பரில் இல் நீக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இது எவரெஸ்டின் கரம் மசாலா, சாம்பார் மசாலா மற்றும் மேகியின் மசாலா-ஏ-மேஜிக் ஆகியவற்றை உள்ளடக்கியது.


பிப்ரவரி 2022 இல், அமெரிக்க விவசாயத் துறை உணவு (U.S. Dept of Agriculture) இறக்குமதி மறுப்பு குறித்து அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இந்தியாவும் மெக்சிகோவும் மோசமான உணவு இறக்குமதியின் முக்கிய ஆதாரங்கள் என்று கூறியது. 2002 முதல் 2019 வரை, இந்திய இறக்குமதிகளில் மிகவும் மோசமான பொருட்கள் இருந்தன என்று அவர்கள் கண்டறிந்தனர். இந்தியாவில் 5,115 மறுப்புக்கள் இருந்தன, இது அனைத்து மோசமான இறக்குமதிகளில் 22.9% ஆகும்.


இந்தியா எப்படி எதிர்கொண்டது?


ஏப்ரல் 25 அன்று, இந்தியாவில் மசாலா வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்தது. சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கிற்கு மசாலா ஏற்றுமதியில் கட்டாய சோதனை தொடங்கியது. வாரியம் உணவு மற்றும் மருந்து ஏஜென்சிகளிடமிருந்து தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கைகளையும் சேகரித்தது. இது ஏற்றுமதியாளர்களுக்கு சரியான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதை நோக்கமாகக் கொண்டது. கூடுதலாக, ஏற்றுமதியாளர்கள் தரநிலைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வாரியம் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.


ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கை ஏற்றுமதியாளர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியது. இந்த வழிகாட்டுதல்களில் உற்பத்தியின் மூல மற்றும் இறுதி நிலைகளில் சோதனை நடைமுறைகள் அடங்கும். எத்திலீன் ஆக்சைடு  கொண்டு சிகிச்சையளிக்கப்பட்ட தயாரிப்புகளை எவ்வாறு சேமிப்பது என்பதையும் அவை விவரிக்கின்றன மற்றும் இந்த இரசாயனத்தின் பயன்பாட்டைக் குறைக்க மாற்று முறைகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றன.


முன்னதாக, செப்டம்பர் 2021 இல், மசாலா வாரியம் இதேபோன்ற ஆலோசனையை வழங்கியது. சில இந்திய ஏற்றுமதிகளில் எத்திலீன் ஆக்சைடு (Ethylene oxide (EtO))  கலப்படத்தை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்த பிறகு இது நடந்தது. மேலும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மாநில கட்டுப்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அவர்கள் MDH மற்றும் எவரெஸ்ட் போன்ற முக்கிய பிராண்டுகளிலிருந்து மசாலா மாதிரிகளை சேகரிக்க வேண்டும். ETO மாசுபாட்டிற்காக இந்த மாதிரிகளை சோதிப்பதே இதன் நோக்கம்.


உணவில் எத்திலீன் ஆக்சைடு (Ethylene oxide (EtO)) தடுக்க கறிமசாலா பொடிகள் மற்றும் மசாலாப் பொருட்களுக்கு கடுமையான சோதனைகள் தேவை என்று மக்கள் விரும்புகிறார்கள். உலகத் தரங்களுடன் பொருந்தக்கூடிய சிறந்த விதிகளையும், உணவுத் தொழில்கள் அவற்றைப் பின்பற்ற உதவுவதையும் அவர்கள் விரும்புகிறார்கள்.


இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு குறைவானதா?


CUTS இன்டர்நேஷனலுடன் தொடர்புடைய சிமி டி.பி., தி இந்துவிடம் பேசினார். CUTS இன்டர்நேஷனல் என்பது நுகர்வோர் நலனில் கவனம் செலுத்தும் உலகளாவிய வாதிடும் குழுவாகும். கடுமையான உணவுச் சட்டங்கள் இருந்தபோதிலும், சமீபத்திய சர்ச்சைகள் உணவுத் துறையின் பல்வேறு துறைகளில் நிலவும் உணவுப் பாதுகாப்புப் பிரச்சினைகளை எடுத்துக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.


உணவுப் பாதுகாப்பைப் பேணுவதில் பல சவால்கள் உள்ளன. ஒரு முக்கிய சவால் செயல்பாட்டு ஆகும். இந்தியாவின் மாறுபட்ட உணவு நிலப்பரப்பு, பதிவுசெய்தலைத் தரப்படுத்துவதை கடினமாக்குகிறது. கூடுதலாக, வேண்டுமென்றே உணவு மோசடி உற்பத்தியாளர்கள் பொருட்களைக் கண்டுபிடிப்பதில் இருந்து தடுக்கலாம் மற்றும் சாத்தியமான அபாயங்களை மதிப்பிடலாம். இது முழு உணவு விநியோகச் சங்கிலியின் பாதுகாப்பை சமரசம் செய்கிறது. வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கு கண்டறியக்கூடியது மிகவும் கடினம்.


தளவாட தடைகளும் உள்ளன. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 இன் கீழ் கட்டளையிடப்பட்டுள்ளபடி, குறைந்தது 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் அரசு அல்லது தனியார் அறிவிக்கப்பட்ட உணவு சோதனை ஆய்வகங்கள் இல்லை. இந்த ஆய்வகங்கள் பிராந்தியங்களில் சமமற்ற முறையில் விநியோகிக்கப்படுகின்றன. போதுமான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இல்லை, மேலும் வளக் கட்டுப்பாடுகள் காரணமாக பயனற்ற முறையில் செயல்படுகின்றன, இது 2021-22 ஆம் ஆண்டின் FSSAI ஆண்டு அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது. FSSAIயின் செயல்பாடுகள் பெரும்பாலும் வெளிப்படைத்தன்மையில்லை. இது பாதுகாப்புத் தரங்களை பூர்த்தி செய்வதற்கான முயற்சிகள், பொறுப்புக்கூறல் மற்றும் நம்பிக்கையை உருவாக்குவதற்கான முயற்சிகளைத் தடுக்கிறது என்று சிமி (Simi) வெளிப்படைத்தன்மையில்லை  கூறினார்.

அடுத்து என்ன?


இந்தியாவின் மசாலா வர்த்தகம் ஒரு பெரிய சிக்கலை எதிர்கொள்கிறது என்று டெல்லியில் உள்ள ஒரு சிந்தனைக் குழுவான உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முயற்சி (Global Trade Research Initiative (GTRI)) சமீபத்திய குறிப்பில் தெரிவித்துள்ளது. இதற்குக் காரணம் பல நாடுகளில் உள்ள கடுமையான விதிகள். இந்த விதிகள் இந்தியாவின் மசாலா ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதி செலவாகும். இதன் மதிப்பு சுமார் $700 மில்லியன் ஆகும். இது ஒரு தீவிரமான பிரச்சினை என்றும், இந்தியாவின் மசாலா வர்த்தக நற்பெயரைப் பாதுகாக்க விரைவான நடவடிக்கை தேவை என்றும் GRTI கூறுகிறது.


அகில இந்திய விவசாய சபாவின் பொதுச் செயலாளர் விஜூ கிருஷ்ணன் (Vijoo Krishnan), இந்த நிலைமை மற்ற சிறு நிறுவனங்கள் அல்லது கூட்டுறவு நிறுவனங்களின் ஏற்றுமதியில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று கூறினார். விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எடுத்துரைத்தார். நிறுவனங்கள் லாபம் ஈட்டிக் கொண்டிருந்தாலும் விவசாயிகளுக்கு நியாயமான விலையை வழங்காத சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த நிறுவனங்கள் இப்போது நஷ்டத்தை எதிர்கொண்டால், அவர்கள் அதை ஒரு காரணமாக பயன்படுத்தி விலையைக் குறைத்து, விவசாயிகள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.


சீனாவின் கட்டுப்பாட்டாளர்கள் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் போன்ற ஆசிய விதிகளை கடுமையாக்கினால், இந்தியாவின் ஏற்றுமதி குறையக்கூடும் என்று GRTI கூறுகிறது. இது $2.17 பில்லியன் மதிப்புள்ள ஏற்றுமதியை பாதிக்கலாம், இது உலகளவில் இந்தியாவின் மசாலா ஏற்றுமதியில் 51.1% ஆகும். தரமான பிரச்சனைகளுக்காக இந்திய மசாலாப் பொருட்களை நிராகரிப்பதற்காக அறியப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் அதையே செய்தால், இழப்பு இன்னும் பெரியதாக இருக்கும். சுமார் $2.5 பில்லியன் அளவு இழப்பு ஏற்படும். இது இந்தியாவின் உலகளாவிய ஏற்றுமதியில் 58.8% ஆக இருக்கும்.




Original article:

Share:

நிலையான அத்தியாவசிய காப்புரிமைகள் மீதான நீதித்துறையின் தலையீடு -பிரசாந்த் ரெட்டி டி.

 நிலையான அத்தியாவசிய காப்புரிமைகளுக்கான (standard essential patents) விதிமுறைகளை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும். இந்தியாவின் உற்பத்தி இலக்குகளில் நீதித்துறையின் எதிர்மறையான தாக்கம் ஏற்படுத்துவதைத் தடுக்க இது அவசியம்.


சில தொழில்நுட்ப நிறுவனங்கள் தொலைத் தொடர்புத் துறைக்கு எதிராக "நிலையான அத்தியாவசிய காப்புரிமைகளை" (standard essential patents (SEP)) பயன்படுத்துவதால் இந்தியாவில் நெருக்கடி ஏற்படக்கூடும். இந்த பிரச்சினை உள்நாட்டில் செல்போன் தயாரிக்கும் இந்தியாவின் முயற்சிகளைப் பாதிக்கிறது. நிலையான அத்தியாவசிய காப்புரிமைகளை ஒழுங்குபடுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் நீதிமன்றங்களிடம் விடப்பட்டாலும், ஒரு அமைப்பாக அவை அதைச் சிறப்பாகச் செய்யவில்லை.


முதலில், நிலையான அத்தியாவசிய காப்புரிமைகளைப் (SEPs)  பற்றி பார்போம். இவை தொலைத்தொடர்புத் துறையில் CDMA, GSM மற்றும் LTE இவை தொழில்துறையால் "தரங்களாக" (standards) ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய காப்புரிமைகள் இது போன்ற தரநிலைகள் வெவ்வேறு நிறுவனங்களின் தொலைபேசிகள் ஒன்றாக இணைந்து வேலை செய்வதை உறுதி செய்கின்றன. எடுத்துக்காட்டாக, செல்போன் தொடர்புகளுக்கான உலகளாவிய அமைப்பு (Global System for Mobile Communications (GSM)) ஒரு தரநிலையாக மாறியவுடன், அனைத்து தொலைபேசி தயாரிப்பாளர்களும் தங்கள் தொலைபேசிகள் செல்போன் தொடர்புகளுக்கான உலகளாவிய அமைப்புடன் (GSM) வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டியிருந்தது, அல்லது யாரும் அவற்றை வாங்க மாட்டார்கள்.


ஒளிபுகா மாதிரி


தொழில்நுட்பத் துறையில் தரநிலைகளை அமைக்கும் செயல்முறை பெரும்பாலும் தனியார் "தர நிர்ணய அமைப்புகளால்" (standard setting organisations) கையாளப்படுகிறது. இந்த தர நிர்ணய அமைப்புகள் பெரும்பாலும் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. இந்தியா போன்ற நாடுகளில், தொலைத்தொடர்பு துறையில் வரையறுக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் உள்ளன, தரநிலைகளை அமைப்பதில் அல்லது நிலையான அத்தியாவசிய காப்புரிமைகளுக்கு (SEPs) உரிமம் வழங்குவதில் குறைந்த செல்வாக்கையே கொண்டுள்ளன.


இந்த நிலையில், நிலையான அத்தியாவசிய காப்புரிமைகளை (SEP) வைத்திருக்கும் நிறுவனங்கள் பெரிதும் பயனடைகின்றன. ஏனென்றால், ஒவ்வொரு செல்போன் உற்பத்தியாளரும் சந்தையில் போட்டியிட இந்தத் தொழில்நுட்பத் தரங்களுக்கு (technological standards) உரிமம் வழங்க வேண்டும். மாற்று வழிகள் இல்லாததால், நிலையான அத்தியாவசிய காப்புரிமை (SEP) உரிமையாளர்கள் அதிக ராயல்டி அல்லது நியாயமற்ற உரிமத்தொகையை விதிக்க அனுமதிக்கிறது. இந்த நிலைமை போட்டியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் பொருளாதாரத்தில் "காப்புரிமை வைத்திருப்பது" பிரச்சனை என்று அழைக்கப்படுகிறது.


தர நிர்ணய அமைப்புகள் (SSOs) இத்தகைய சிக்கல்களைத் தடுக்க வேண்டும். நிலையான அத்தியாவசிய காப்புரிமை (SEP) உரிமையாளர்கள் தங்கள் தொழில்நுட்பங்களை நியாயமான, மற்றும் பாரபட்சமற்ற (fair, reasonable, and non-discriminatory (FRAND)) விகிதங்களில் உரிமம் பெற வேண்டும்.


காப்புரிமை திருத்த விதிகளில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் மானியத்திற்கு முந்தைய எதிர்ப்பு செயல்முறையை பலவீனப்படுத்துகின்றன.


தொழில்நுட்பத் துறையின் சுய-ஒழுங்குமுறை மாதிரி சரியாக வேலை செய்யவில்லை, ஏனெனில் அது தெளிவாக இல்லை மற்றும் பயனற்றது. உதாரணமாக, Qualcomm போன்ற பெரிய நிறுவனங்கள் நியாயமற்ற நடைமுறைகளுக்காக பெரும் அபராதத்தை கட்டியுள்ளன. சீனா 2015-ல் குவால்காம் நிறுவனத்திற்கு $975 மில்லியன் அபராதம் விதித்தது, தென் கொரியா 2017-ல் $873 மில்லியன் அபராதம் விதித்தது, தைவான் 2017-ல் $774 மில்லியன் அபராதம் விதித்தது, ஐரோப்பிய ஆணையம் 2018-ல் $1.2 பில்லியன் அபராதமும், 2019-ல் $272 மில்லியன் அபராதமும் விதித்தது. சில அபராதங்களுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளன. போட்டிப் பிரச்சினைகளை வெவ்வேறு நாடுகள் எவ்வாறு கையாள்கின்றன என்பதைக் காட்டுகின்றன.


நீதித்துறை மந்தம் மற்றும் செயல்பாட்டின் விளைவு


இப்பிரச்சினையைப் பற்றி இந்தியாவின் பதில் மெதுவான சட்ட நடவடிக்கை மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் சட்ட ஈடுபாடு ஆகியவற்றின் கலவையாகும். இது குழப்பமாகத் தோன்றலாம், ஆனால் அதை தகர்ப்போம்.


2013 ஆம் ஆண்டில், மைக்ரோமேக்ஸின் (Micromax) புகாரை இந்திய போட்டி ஆணையம் (Competition Commission of India (CCI)) விசாரிக்கத் தொடங்கியது. எரிக்சன் (Ericsson) அதன் நிலையான அத்தியாவசிய காப்புரிமையை (SEP) அதிக காப்புரிமைப் பங்கு நியாயமற்ற முறையில் கோருகிறதா என்று அவர்கள் விசாரித்தனர், அவை சில தொழில்நுட்பங்களுக்கு முக்கியமானவை. எரிக்சன் இந்திய போட்டி ஆணையத்தின் (CCI) விசாரணை அதிகாரத்தை ஏற்கவில்லை, காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இதுபோன்ற விஷயங்களை காப்புரிமை அலுவலகம் மட்டுமே கையாள முடியும் என்று வாதிட்டார்.


நீதிமன்றத்தின் முதல் தீர்ப்பு மார்ச் 2016 இல் இந்திய போட்டி ஆணையத்திற்கு சாதகமாக இருந்தது. எரிக்சன் இந்த எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வில் முறையீடு செய்தது. இறுதியாக ஜூலை 2023-ல் இந்திய போட்டி ஆணையத்திற்கு எதிராக ஒரு தீர்ப்பு வரும் வரை இந்த மேல்முறையீடு ஏழு ஆண்டுகள் நீடித்தது. இந்திய போட்டி ஆணையம் இப்போது இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்கிறது. இந்த நீண்ட சட்டப் போராட்டத்தின் காரணமாக, நிலையான அத்தியாவசிய காப்புரிமையை (SEP) வைத்திருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களின் நியாயமற்ற உரிம நடைமுறைகளை விசாரிக்கும் ஒரே பெரிய பொருளாதார நாடு இந்தியா மட்டுமே.

காப்புரிமை மீறல் தொடர்பாக தொலைபேசி உற்பத்தியாளர்களுக்கு எதிராக எரிக்சன் மற்றும் பிற நிலையான அத்தியாவசிய காப்புரிமையை வைத்துள்ள உரிமையாளர்கள் தொடுத்த வழக்குகளை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்தது. தொலைபேசி தயாரிப்பாளர்கள் எரிக்சன் பிறருக்கு சொந்தமான காப்புரிமைகளை மீறியுள்ளார்களா, அவர்கள் இழப்பீடு வழங்க வேண்டுமா என்பதே முக்கிய கேள்விகளாக இருந்தன. வெறுமனே, போட்டிச் சட்ட சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை இந்த வழக்குகள் இடைநிறுத்தப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக, பெரும்பாலான நாடுகளில் உள்ள நீதிமன்றங்கள் காப்புரிமைகளின் செல்லுபடியாகும் தன்மை, மீறல் உள்ளதா மற்றும் செலுத்த வேண்டிய இழப்பீடுகளின் அளவு ஆகியவற்றை தீர்மானிக்க ஒரு விசாரணையை நடத்துகின்றன. இத்தகைய சோதனைகள் சிக்கலானவை மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும். எடுத்துக்காட்டாக, லாவா இன்டர்நேஷனலுக்கு எதிராக எரிக்சன் தாக்கல் செய்த ஒரு ஆரம்ப வழக்கு தீர்ப்பை எட்ட எட்டு ஆண்டுகள் ஆனது, இதில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அமித் பன்சால் சமீபத்தில் 500 பக்கங்கள் கொண்ட விரிவான தீர்ப்பை வழங்கினார்.


எவ்வாறாயினும், இந்த நீண்ட விசாரணைகளின் போது டெல்லி உயர்நீதிமன்றம் "இடைக்கால" தீர்வுகளை எவ்வாறு கையாண்டது என்பதில் குறிப்பிடத்தக்க சிக்கல் எழுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில், நீதிமன்றம் முழு விசாரணை செயல்முறையை அடிக்கடி புறக்கணித்துள்ளது. பல இந்திய நிறுவனங்கள், நீதிமன்றத்தில் பணத்தை "டெபாசிட்" செய்யுமாறு உற்பத்தியாளர்களை கட்டாயப்படுத்தும் தொடர் உத்தரவுகளை அது பிறப்பித்துள்ளது. இது இன்னும் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே உற்பத்தியைத் தொடர அனுமதிக்கிறது


பிணையத்தொகைகள், சில சமயங்களில் கோடிக்கணக்கான ரூபாயை எட்டுவது, வணிகச் சட்ட வரலாற்றில் அரிதாகவே உள்ளது, ஏனெனில் அவற்றை வழங்க நீதிபதிகளுக்கு அதிகாரம் இல்லை. இந்த உத்தரவுகள், எட்டு ஆண்டுகள் வரை நீடிக்கும் நீண்ட வழக்கு விசாரணை காலத்தில், இந்தியாவில் விலை உயர்ந்த பணி மூலதனத்தை எடுத்துக்கொண்டு பிரதிவாதிகளை வருந்தச்செய்கிறது.


தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்வதற்கான அதன் உள்ளார்ந்த அதிகாரத்தை மேற்கோள் காட்டி இந்த நீதித்துறை செயல்பாட்டை நியாயப்படுத்துகிறது. இந்த நியாயமானது, நீதித்துறை பொதுநல வழக்குகள் போன்ற ஆர்வலர் நடவடிக்கைகளைப் பயன்படுத்திய கடந்தகால நிகழ்வுகளை ஒத்திருக்கிறது. இருப்பினும், ஒடுக்கப்பட்ட குழுக்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நன்மை பயக்கும் செயல்களை நியாயப்படுத்த அதே வாதத்தைப் பயன்படுத்துவது அதன் குறைபாடுள்ள தன்மையை வெளிப்படுத்துகிறது.



Original article:

Share: