சம்பாலில் உள்ள சட்டச் சிக்கல்கள் -அபூர்வா விஸ்வநாத்

 சம்பாலில் உள்ள மனு, வாரணாசியின் ஞானவாபி மசூதி (Varanasi’s Gyanvapi mosque) மற்றும் மதுராவின் ஷாஹி இத்கா (Mathura’s Shahi Idgah) வழக்குகளில் செய்யப்பட்ட மனுக்களைப் போன்றதாகும். இவைகளில், வழிபாட்டுத் தலச் சட்டம், 1991 (Places of Worship Act)-ன் விளக்கம் முக்கிய பிரச்சனையாக உள்ளது.


சம்பாலில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் ஷாஹி ஜமா மசூதியை (Shahi Jama Masjid) ஆய்வு செய்ய உத்தரவிட்டு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள நகரம் கலவர வன்முறையால் அதிர்ந்துள்ளது. இதில், குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.


சம்பாலின் ஜமா மஸ்ஜித் மசூதியானது, இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் நீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி (Gyanvapi mosque), மதுராவில் உள்ள ஷாஹி இத்கா (Shahi Idgah) மற்றும் மத்தியப் பிரதேசத்தின் தாரில் உள்ள கமல்-மௌலா மசூதி (Kamal-Maula mosque) ஆகிய வழக்குகளில் கூறப்பட்ட கூற்றுகளுக்கு ஒத்ததாகும்.


இந்த அனைத்து சர்ச்சைகளிலும் உள்ள உரிமைகோரல்கள் அடிப்படையில் வழிபாட்டுத் தலத்தின் மதத்தின் மீதான தன்மையை மாற்ற முயல்கின்றன. இது வழிபாட்டுத் தலச் சட்டம், 1991 ஆல் (Place of Worship Act) தடைசெய்யப்பட்டுள்ளது.


நவம்பர் 19 அன்று, சந்தௌசியில் உள்ள சம்பலின் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குடிமை நீதிபதி (மூத்த பிரிவு) ஆதித்யா சிங் ஒரு விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளித்தார். வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின் மற்றும் உள்ளூர் மஹந்த் உட்பட பலர் இந்த மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவில், மசூதிக்குள் நுழைவதற்கு உரிமை கோரினர்.


1526-ம் ஆண்டு முகலாய மன்னர் பாபரால் அங்கு இருந்த இந்து கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டது என மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மனுத் தாக்கல் செய்யப்பட்ட சில மணி நேரங்களில், மசூதியில் முதற்கட்ட கணக்கெடுப்பு நடத்த வழக்கறிஞர் ஆணையரை நியமித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதே நாளில் முதல் ஆய்வு நடத்தப்பட்டது. நவம்பர் 29-ம் தேதிக்குள் ஆய்வுக்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நவம்பர் 24 அன்று இரண்டாவது கட்ட ஆய்வு நடந்தது. இது சம்பாலில் போராட்டங்கள் வெடிக்க வழிவகுத்தது. பின்னர், இது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்த வழிவகுத்தது.


ஆய்வுக்காக மசூதி நிர்வாகக் குழுவிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், நவம்பர் 29-ம் தேதிக்குள் ஆய்வுக்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு தரப்பினரையும் கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


சம்பாலின் ஜமா மஸ்ஜித் (Jama Masjid) என்பது ஒரு "பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்" (protected monument) ஆகும். இது, டிசம்பர் 22, 1920 அன்று பண்டைய நினைவுச்சின்னங்கள் பாதுகாப்பு சட்டம், 1904-ன் (Ancient Monuments Preservation Act) கீழ் அறிவிக்கப்பட்டது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய தொல்லியல் துறையின் இணையதளத்தில் (Archaeological Survey of India's website) உள்ள புள்ளிவிவரங்கள் மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பட்டியலில் குறிப்பிட்டுள்ளன.


மனுதாரர்களால் தாக்கல் செய்யும் ஒரு குடிமை வழக்கு, கேள்விக்குரிய சொத்தின் விவரத்தைத் தீர்மானிப்பதற்கு நீதிமன்றத்திற்கான ஒரு வழக்கை குறிப்பிடுகிறது. இது, சிவில் வழக்கில், மனுதாரர்கள் அளிக்கும் குறைகள் முதன்மையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். மேலும், குடிமை நடைமுறைச் சட்டம் ஆரம்ப கட்டத்தில் குடிமை வழக்கில் செய்யப்பட்ட உரிமைகோரல்களை கடுமையான ஆய்வுக்கு தடை செய்கிறது. மனு ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் மட்டுமே ஆதாரங்களை நீதிமன்ற அமர்வுக்கு கொண்டுவர மனுதாரர்கள் அழைக்கப்படுகிறார்கள்.


இருப்பினும், வழிபாட்டுத் தலத்தைப் பொறுத்தவரை, வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991-ன் கீழ் அத்தகைய வழக்கு அனுமதிக்கப்படாது.


ஞானவாபி மற்றும் மதுரா ஆகிய இரண்டு வழக்குகளிலும், மாவட்ட நீதிமன்றங்கள் இந்து மனுதாரர்கள் தாக்கல் செய்த குடிமை வழக்குகளை "பராமரிக்கக்கூடியவை" என்று ஏற்றுக்கொண்டன. அதாவது, 1991ஆம் ஆண்டு சட்டம் இருந்தாலும், வழக்குகள் செல்லுபடியாகும் மற்றும் முடிவு செய்யப்படலாம். இந்த வழக்குகள் 1991 சட்டத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டவை என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. 1947 ஆகஸ்ட் 15 அன்று எந்த வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையும் அப்படியே இருக்க வேண்டும் என்று வழிபாட்டுத் தலங்கள் சட்டம் கூறுகிறது.


இந்தச் சட்டத்தின் நீண்ட தலைப்பு: "எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் மாற்றுவதைத் தடுக்கும் சட்டம். ஆகஸ்ட் 15, 1947-ம் ஆண்டில் இருந்த எந்த வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையைப் பேணுவதையும், அது தொடர்பான விஷயங்களைத் தீர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது."


சட்டத்தின் பிரிவு 3 எந்த ஒரு வழிபாட்டுத் தலத்தையும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒரு மதப் பிரிவிலிருந்து மற்றொரு மதத்திற்கு மாற்றுவதைத் தடை செய்கிறது. வழிபாட்டுத் தலத்தை ஒரே மதப் பிரிவினருக்குள் வேறு பிரிவாக மாற்றுவதையும் இது தடை செய்கிறது.


இந்த சட்டம் காங்கிரஸின் 1991 தேர்தல் அறிக்கையில் ஒரு பகுதியாக இருந்தது. இது ஒரு வழிபாட்டு தலத்தின் வரலாற்று "மாற்றம்" (conversion) பற்றிய சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது. நாடாளுமன்றத்தில் சட்டத்தை அறிமுகப்படுத்தும் போது, ​​அப்போதைய உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவான் இந்த மசோதாவை நிறைவேற்றுவது வகுப்புவாத அமைதியையும் நல்லெண்ணத்தையும் மீட்டெடுக்க உதவும் என்று கூறினார்.


பாபர் மசூதி - ராம ஜென்மபூமி பிரச்சனைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. எவ்வாறாயினும், சட்டம் இயற்றப்பட்டபோது அது ஏற்கனவே சட்டப்பூர்வ பரிசீலனையில் இருந்ததால், சட்டத்தின் வரம்பிலிருந்து சர்ச்சையானது விலக்கப்பட்டது.


வாரணாசி மற்றும் மதுராவில் வழிபாடு செய்வதற்கான அணுகல் அல்லது உரிமை தொடர்பான வழக்குகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 1991-ம் ஆண்டு சட்டத்திற்கு எதிரான அரசியலமைப்பு தொடர்பான சவால்கள் இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தற்போது நான்கு தனித்தனி மனுக்கள் உள்ளன. செப்டம்பர் 2022-ம் ஆண்டில், அப்போதைய இந்திய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு, இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும், ஒன்றிய அரசு இன்னும் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை.


ஆனால், ஞானவாபி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தனி கருத்துகணிப்பு, மாவட்ட நீதிமன்றங்களுக்கு இதுபோன்ற மனுக்களை அனுமதிக்க அதிக இடங்களை அளித்துள்ளது.


மே 2022-ம் ஆண்டில், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், 1991 சட்டத்தின் கீழ் ஒரு மதம் தொடர்பான இடத்தின் தன்மையை மாற்ற அனுமதிக்க முடியாது என்று கூறினார். எவ்வாறாயினும், ஒரு இடத்தின் மதத் தன்மையை தீர்மானிப்பது சட்டத்தின் 3 மற்றும் 4-வது பிரிவுகளை மீறாது என்று அவர் குறிப்பிட்டார்.


அதாவது ஆகஸ்ட் 15, 1947 அன்று ஒரு வழிபாட்டுத் தலத்தின் தன்மை பற்றிய விசாரணையை அனுமதிக்கலாம். பின்னர் அந்த இடத்தின் தன்மையை மாற்ற முடியாது.


மதுரா மற்றும் ஞானவாபி ஆகிய இரண்டு வழக்குகளிலும், மஸ்ஜித் தரப்பு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் இந்த விளக்கத்தை சவால் செய்துள்ளது. 1991-ம் ஆண்டு சட்டம் அத்தகைய மனுவைத் தாக்கல் செய்வதைத் தடுக்கிறதா அல்லது வழிபாட்டுத் தன்மையின் இறுதி மாற்றத்தைக் கூடத் தடுக்கிறதா என்ற இந்த ஆரம்பப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இறுதி வாதங்களை உச்சநீதிமன்றம் இன்னும் கேட்கவில்லை.


சம்பல் வழக்கில், இது தொடர்பான நிகழ்வுகள் விரைவாக முன்னேறியுள்ளன. குடிமை வழக்கு செல்லுபடியாகுமா என்பது குறித்து மாவட்ட நீதிமன்றம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இந்து தரப்புக்கு சரியான உரிமைகோரல் இருப்பதாக பூர்வாங்க கண்டுபிடிப்பு செய்யப்படுவதற்கு முன்பு, கணக்கெடுப்பு உத்தரவு முதலில் வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் முன்பே இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது.




Original article:

Share:

கருத்தொருமித்த குடியரசு : அரசியலமைப்பு சபையில் இருந்து இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு அறிவுரை -சி ராஜ் குமார்

 75-வது ஆண்டு நிறைவை நாம் நினைவுகூரும்போது, ​​அரசியலமைப்புச் சட்டத்தை ஒருமித்த ஆவணமாக உருவாக்குவதில் அரசியல் நிர்ணய சபையின் குறிப்பிடத்தக்க முயற்சிகளைப் பற்றி சிந்திப்பது மிகவும் முக்கியம். இன்றைய கருத்தியல் வேறுபாடுகள் நிறைந்த காலகட்டத்தில் இதேபோன்று உருவாக்க முடியுமா?


இன்று, நவம்பர் 26 அன்று, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். இந்தியாவின் எதிர்காலத்தை கற்பனை செய்து அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர். இதை அவர்கள் ஜனநாயக, ஆலோசனை, உள்ளடக்கம் மற்றும் வாதங்களின் செயல்முறை மூலம் இதை உருவாக்கியுள்ளனர். இந்த 75-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த வேளையில், அவர்களின் பங்களிப்பை நாம் கொண்டாட வேண்டும். ஒருமித்த ஆவணமாக அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதும் முக்கியம். இந்த செயல்முறை அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்வேகம் அளிக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் மக்கள் ஆணையையும், அரசியலமைப்பு கடமைகளையும் நிறைவேற்ற வேலை செய்கிறார்கள். அரசியல் நிர்ணய சபை விவாதங்களில் இருந்து வரும் மிக முக்கியமான பாடம் என்னவென்றால், மக்கள் எப்படி ஒருவரையொருவர் கடுமையாக ஏற்கவில்லை என்பதுதான். அவர்கள் ஒருவரையொருவர் உந்துதல்கள், அர்ப்பணிப்புகள் அல்லது மதிப்புகளை கேள்வி கேட்காமல் இதைச் செய்கிறார்கள்.


பி ஆர் அம்பேத்கர், நவம்பர் 25, 1949 அன்று அரசியலமைப்புச் சபையில் ஆற்றிய தனது கடைசி உரையில், சட்டமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பைப் பாராட்டியுள்ளார். இதில் குறிப்பிட்டதாவது, அரசியல் நிர்ணய சபை வெறும் தற்செயலான குழுவாக இருந்திருந்தால் வரைவுக் குழுவின் பணி மிகவும் கடினமாக இருந்திருக்கும். ஒவ்வொரு உறுப்பினரும் அல்லது குழுவும் சுதந்திரமாக செயல்படும் கருப்பு மற்றும் வெள்ளை கற்களால் ஆன நடைபாதை போல இருந்திருக்கும். இது குழப்பத்திற்கு வழிவகுத்திருக்கும். அனைத்து உறுப்பினர்களும் கடுமையான கட்சி விதிகளைப் பின்பற்றினால், பேரவை நடவடிக்கைகள் மிகவும் மந்தமாக இருந்திருக்கும். கண்டிப்பான கட்சி ஒழுக்கம் சட்டசபையை "ஆம்" என்று சொல்லும் மக்கள் குழுவாக மாற்றியிருக்கும்.


அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் எதிர்ப்புக் குரல்களைப் பாராட்டி கொண்டாடினார். அவர் குறிப்பிட்டதாவது, "... அதிர்ஷ்டவசமாக, கிளர்ச்சியாளர்கள் இருந்தனர். அவர்கள் திரு காமத், டாக்டர் பி எஸ் தேஷ்முக், திரு சித்வா, பேராசிரியர் கே டி ஷா மற்றும் பண்டிட் ஹிர்டே நாத் குன்ஸ்ரு ஆகியோர் ஆவர். அவர்கள் எழுப்பிய கருத்துக்கள் பெரும்பாலும் கருத்தியல் சார்ந்தவை. அவர்களின் ஆலோசனைகளை ஏற்க நான் தயாராக இல்லை என்பது, அவர்களின் ஆலோசனைகளின் மதிப்பைக் குறைக்காது. பேரவையின் நடவடிக்கைகளை உயிர்ப்பிப்பதில் அவர்கள் ஆற்றிய சேவையைக் குறைக்காது. ஆனால், அரசியலமைப்பின் அடிப்படையிலான கொள்கைகளை விளக்குவதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்திருக்காது…” நாடாளுமன்றத்தில் ஜனநாயக ஈடுபாட்டின் கலாச்சாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்வதற்கும் பாராட்டுவதற்கும் இவை கவனமாக ஆராயப்பட்டது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய முக்கியமான தருணம் இது.


நாடாளுமன்றத்தை எவ்வாறு வலுப்படுத்துவது மற்றும் மிகவும் பொருத்தமானதாக மாற்றுவது என்பது குறித்து நாடாளுமன்றம் தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று தரவு காட்டுகிறது. 1990க்கு முன், ஒவ்வொரு மக்களவை கூட்டத்தொடரும் 550 நாட்கள், மொத்தம் 3,500 மணிநேரம் நீடித்தது. 1990 க்குப் பிறகு, இது 345 நாட்கள் மற்றும் 1,800 மணிநேரமாக குறைந்தது. 17-வது மக்களவை, ஐந்து ஆண்டுகளில் 274 நாட்களை மட்டுமே கொண்ட மிகக் குறைந்த அமர்வுகளைக் கொண்டிருந்தது. இதை ஒப்பிடுகையில், 1-வது மக்களவை 1952-1957 வரை 677 நாட்கள் கூடியது. 15-வது மக்களவை 192 மசோதாக்களை நிறைவேற்றியது. 


அதே சமயம், 5-வது மக்களவையில் 487 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்றக் குழுக்களுக்கு (Parliamentary Committees) பரிந்துரைக்கப்பட்ட மசோதாக்களின் சதவீதம் 15-வது மக்களவையில் 71% ஆக இருந்து 17-வது மக்களவையில் 16% ஆக குறைந்தது. 15 மற்றும் 17 வது மக்களவைகள் ஒரு மணி நேரத்திற்குள் 36% மற்றும் 35% மசோதாக்களை நிறைவேற்றின. 15-வது மக்களவை இடையூறுகளால் 37% , 16வது 16% நேரத்தை இழந்தது. ஒன்றிய பட்ஜெட் விவாதத்தில் செலவழித்த சராசரி நேரம் 1990-க்கு முன் 120 மணிநேரத்திலிருந்து 35 மணிநேரமாக குறைந்துள்ளது. 2023, 2018, 2013 ஆகிய ஆண்டுகளில் முழு பட்ஜெட்டும் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது.


இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பு சபையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான மூன்று பாடங்கள் இருப்பதாக நான் நம்புகிறேன்.


அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்கள் மிகவும் மாறுபட்ட நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். அவர்கள், வெவ்வேறு பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவநியாயமான மக்கள் இந்த பிரச்சினைகளில் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கலாம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். சட்டம், கொள்கை மற்றும் நிர்வாகத்தின் சிக்கலான பிரச்சினைகளை ஒன்றிணைத்து விவாதிக்கவும் இந்த திறன் அரசியல் நிர்ணய சபையின் தனிச்சிறப்பாகும்.


அரசியல் நிர்ணய சபையின் குறிப்பிடத்தக்க அம்சம், மாறுபட்ட அரசியல் மற்றும் சித்தாந்த நலன்கள் மேலோங்கி இருப்பது மட்டுமல்லாமல், ஒரே அரசியல் தூண்டுதலுக்குள் கூட வெவ்வேறு கருத்துக்கள் இருந்தன. ஒரு ஜனநாயக கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் பன்மைத்துவ கருத்துக்கள் சட்டப் பேரவையின் சொற்பொழிவின் ஒரு பகுதியாக இருந்தன. நிச்சயமாக, வலுவான அரசியல் கட்சிகள் அவற்றின் சித்தாந்த நலன்களுடன் வேரூன்றவில்லை என்பதையும், பேரவை தற்காலிக நாடாளுமன்றமாக செயல்பட்டாலும், நமது தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் வரலாற்று சுமையை சுமக்கவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். 


ஆயினும்கூட, நம் காலத்தின் குறிப்பிடத்தக்க பிரச்சினைகளான  வறுமை, சமத்துவமின்மை, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பிற மனித மேம்பாட்டு சவால்கள் போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்பும் நேரத்தில், நாடாளுமன்றத்திற்குள் அரசியல் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.


இந்தியாவின் அரசியலமைப்பு உருவான வரலாறு கூட்டு சக்தியைக் காட்டுகிறது. புதிய இந்தியாவுக்கான அடித்தளத்தை உருவாக்க பலதரப்பட்ட மக்கள் ஒன்றிணைந்ததை இது எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய அரசியல் நிர்ணய சபையின் பல உறுப்பினர்கள், பின்னர் மாநில மற்றும் ஒன்றிய அரசாங்களில் பணியாற்றினார்கள். 


அரசியல் சித்தாந்தத்தைப் பொருட்படுத்தாமல் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் உந்துதல்கள் அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களின் பார்வையுடன் ஒன்றிணைகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் இந்த வேளையில், இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவும், மறுபரிசீலனை செய்யவும் இது ஒரு முக்கிய தருணமாகும்.


எழுத்தாளர் ஓபி ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் நிறுவன துணைவேந்தர் ஆவார். எழுத்தாளர் ஜிண்டால் குளோபல் லா ஸ்கூலின் டீனும் ஆவார்.




Original article:

Share:

இந்திய தேர்தல் ஆணையம் அரசியலமைப்பின் மிகப்பெரிய பரிசுகளில் ஒன்றாகும். -எஸ் ஒய் குரேஷி

 இந்த ஆணையம் காலத்தின் சோதனையில் நின்று, சில தற்காலிக இடையூறுகள் இருந்தபோதிலும், ஜனநாயகத்தின் சக்திவாய்ந்த கண்காணிப்பாளராக தேசத்தின் நம்பிக்கைக்கு ஏற்ப அமைந்துள்ளது.


நவம்பர் 26 அன்று, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. 1949-ம் ஆண்டு இதே நாளில், அரசியல் நிர்ணய சபை (Constituent Assembly) உறுப்பினர்கள் 2 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 17 நாட்கள் கடுமையாக உழைத்த பிறகு, இந்தியா தனது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. இந்தியா பற்றிய எண்ணங்களை செயல்படுத்துவதில் அவர்கள் பங்கேற்ற ஆர்வத்தை அரசியலமைப்பு வரைவில் 7,635 திருத்தங்களை முன்மொழிந்ததன் மூலம் பிரதிபலிக்கிறது. இறுதியாக, அரசியலமைப்பின் முக்கிய அங்கமாக 395 விதிகள் மற்றும் 8 அட்டவணைகளை உள்ளடக்கிய அதன் இறையாண்மைக் கொண்ட இந்த அரசியலமைப்புப் புத்தகத்தை தேசத்திற்கு வழங்கினர்.


அரசியல் நிர்ணய சபைக்கு (CA), சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் ஒரு ஜனநாயக நாட்டை அடைவதற்கான வழிமுறையாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் 16 பிரிவுகள், முழுமையாகச் செயல்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே இயற்றப்பட்டது என்பது பலருக்குத் தெரியாது. அனைத்து தேர்தல்களிலும் "கண்காணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடு" ஆகியவற்றுடன் கட்டாயப்படுத்தப்பட்ட தேர்தல் ஆணையத்திற்கான அடித்தளத்தை அமைத்த அரசியலமைப்புப் பிரிவு 324 இதில் அடங்கும். சுவாரஸ்யமாக, இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட ஜனநாயகக் குடியரசாக பிறப்பதற்கு ஒரு நாள் முன்பு, இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஜனவரி 25, 1950-ம் ஆண்டில் நிறுவப்பட்டது.


சட்டமன்ற நடவடிக்கைகளின் போது, ​​அடிப்படை உரிமைகளுக்கான துணைக் குழு, தேர்தலின் சுதந்திரத்தை அடிப்படை உரிமையாக அங்கீகரித்தது. நிர்வாகமும், சட்டமன்றமும் தேர்தல்களில் தலையிடக் கூடாது என்பதையும் ஒப்புக் கொண்டது. அரசியலமைப்புச் சட்டம், 329-வது பிரிவின் மூலம், தேர்தல் செயல்பாட்டில் நீதித்துறை தலையிடுவதைத் தடுக்கிறது. இதனால், தேர்தல் தடைபடாமல் பார்த்துக் கொள்ள முடியும். பல தேர்தல் ஆணையங்கள் இந்த விதியை பாராட்டுகின்றன. 


மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்கள், மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட வேண்டுமா அல்லது ஒன்றிய ஆணையத்திடம் வழங்கப்பட வேண்டுமா என்பது அரசியல் நிர்ணய சபையில் விவாதிக்கப்பட்ட ஒரு முக்கியமான பிரச்சினையாக இருந்தது. இது, தொலைநோக்கு நடவடிக்கை மற்றும் கூட்டாட்சி கொள்கையில் இருந்து தீவிரமான விலகல், அரசியல் நிர்ணய சபை, விதான் சபா தேர்தலை ஒன்றிய தேர்தல் ஆணையத்தின் கீழ் வைத்தது.


B R அம்பேத்கர் இந்த துணிச்சலான நடவடிக்கைக்கான காரணத்தை பின்வரும் வார்த்தைகளில் சுருக்கமாகக் கூறினார். அவை, "உள்ளாட்சி அமைப்புகளின் பாரபட்சம் காரணமாக எந்த ஒரு நபரும் ஒதுக்கப்படக் கூடாது. மாகாணத்தில் இன, மொழி, கலாச்சாரம் இல்லாத மக்களுக்கு மாகாண அரசுகளால் அநீதி இழைக்கப்படுவதைத் தடுக்க, முழுத் தேர்தல் செயல்முறையும் மத்திய தேர்தல் ஆணையத்தால் நிர்வகிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.


அவர் எவ்வளவு தீர்க்கதரிசனமாக இருந்திருக்கிறார்! குடிமக்களில் சில பிரிவினரை தேர்தல் பதிவிலிருந்து விலக்கி வைக்கும் வெளிப்படையான அல்லது மறைமுகமான முயற்சிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாம் அதிகமாகக் காண்கிறோம்.


இந்திய தேர்தல்கள் தேசிய மதிப்பையும், உலகளாவிய பாராட்டையும் பெற்றுள்ளன. அமெரிக்க செனட்டர் ஹிலாரி கிளிண்டன் அதனை ஒரு தங்கத் தரம் (gold standard) என்று கூட அழைத்தார். நியூயார்க் டைம்ஸ் நமது தேர்தலை "புவியின் மிகப் பெரிய நிகழ்ச்சி" என்று விவரித்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனம், தேர்தல் அமைப்புகளின் உயர் நிர்வாகத்தை வரைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில், 130-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆணையர்கள் எங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வந்துள்ளனர்.


இருப்பினும், பெரிய தேர்தல்கள் எப்போதுமே ஒரு சிறந்த ஜனநாயகத்தை குறிக்காது. பல உலக ஜனநாயக குறியீடுகள் இந்தியாவை குறைபாடுள்ள ஜனநாயகம் என்று கூறியுள்ளன. அப்படியானால், நம்மைத் தடுத்து நிறுத்துவது எது? கல்வியறிவின்மை, மோசமான பாலின பங்கேற்பு, ஊழல், குடிமை உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் அரசியல் கலாச்சாரம் போன்ற பல காரணிகள் பங்களிக்கின்றன. இந்த விவகாரங்கள் அவசர ஜனநாயக மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களின் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன.


நமது தேர்தல் முறையின் மிகப்பெரிய பங்களிப்புகளில் ஒன்று உயர் நீதித்துறையின் பங்கு ஆகும். இது ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்குகிறது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான தேர்தல் ஆணையத்தின் (EC) ஆணை முழுமையானது என்று உச்சநீதிமன்றம் அடிக்கடி வலியுறுத்தியுள்ளது. 


"சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் இல்லாமல் ஜனநாயகம் வாழ முடியாது" (இந்திய ஒன்றியம் vs ஏடிஆர், 2003) என்று அது கூறியுள்ளது. "சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு" (PUCL vs இந்திய ஒன்றியம், 2003; நோட்டா தீர்ப்பு, 2013) என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. கூடுதலாக, "நாடாளுமன்ற அமைப்பின் இதயம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள்" (மொஹிந்தர் சிங் கில் மற்றும் இந்தியாவின் CEC, 1977) என்று வலியுறுத்தியுள்ளது.


பிப்ரவரி 2024-ம் ஆண்டில், உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் "அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் வெளிப்படையாக தன்னிச்சையானது" என்று தீர்ப்பளித்தது. இந்தியாவில் க்ரோனி முதலாளித்துவத்தை சட்டப்பூர்வமாக்கிய அனைத்து சட்ட மாற்றங்களையும் இது ரத்து செய்தது. ஜனநாயகத்தை பாதுகாத்த உச்சநீதிமன்றம், தற்போது குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


நமது ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கான முக்கியமான காரணி, தேர்தல்களில் பெண்களின் பங்கேற்பு குறைவாகும். இதில், வாக்காளர் சேர்க்கை மற்றும் வாக்காளர் எண்ணிக்கை ஆகிய இரண்டிலும், அரசியலமைப்பு முதல் நாளிலிருந்தே பிரிவு 326 ஆனது அவர்களுக்கு சமமாக வாக்களிக்கும் உரிமையை வழங்கியிருந்தாலும் அவர்களின் பங்கேற்பு குறைவாகவே உள்ளது. இந்த சிக்கலை சரிசெய்ய இந்திய தேர்தல் ஆணையம் கடுமையாக உழைத்துள்ளது. 

இதனால், வாக்காளர் பட்டியலில் பாலின விகிதம் மேம்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு  பொதுத் தேர்தலில், பதிவு செய்யப்பட்ட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,000 ஆண்களுக்கு 948 பெண்களாக அதிகரித்துள்ளது. இது 2019-ம் ஆண்டில் 928 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு 10 சதவீதமாக இருந்த வாக்காளர்களின் பாலின இடைவெளி குறைந்துவிட்டது. 2024-ம் ஆண்டில், 36 மாநிலங்களில் 19 மாநிலங்களில் ஆண்களை விட பெண்கள் அதிகம் வாக்களித்துள்ளனர்.


பாலின பொறுப்புகளை நிறைவேற்றுவதில் தேர்தல் ஆணையம் (EC) சிறப்பாக செயல்பட்டுள்ளது. இருப்பினும், சட்ட நடவடிக்கைகள் இன்னும் பின்தங்கியுள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 முதல் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியிருப்பது பாராட்டத்தக்க சாதனையாகும். மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவையில் (Vidhan Sabhas) பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தி தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் முன்னேற்றம் கண்டுள்ளது. இது 2029 தேர்தலில் இருந்து அமலுக்கு வரும்.


2019-ம் ஆண்டு தேர்தலில் மம்தா பானர்ஜி பெண்களுக்கு 41 சதவீத இடங்களை வழங்கி வரலாறு படைத்தார். இதன் மூலம் 17 பெண் வேட்பாளர்களில் 9 பேர் வெற்றி பெற்று மக்களவையில் நுழைந்தனர்.


தேர்தல் முறையை மேம்படுத்த பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், புதிய சவால்களும் அச்சுறுத்தல்களும் தோன்றியுள்ளன. இவற்றை விரைந்து தீர்க்காவிட்டால் நமது ஜனநாயகத்திற்கு கேடு விளைவிக்கலாம். அரசியலில் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்துவதும், அதிகரித்து வரும் குற்றச் செயல்களும் கவலையளிக்கின்றன. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், 46% உறுப்பினர்கள் குற்றவியல் வழக்குகளைக் கொண்டிருந்தனர். இதற்கிடையில், 93 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் ஆவார். 


1960-ம் ஆண்டுகளில் இருந்து அரசாங்கங்களை அமைப்பதில் அரசியல் விலகல்கள் ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. 1985-ம் ஆண்டின் கட்சித் தாவல் தடைச் சட்டம் (Anti-Defection Law) அல்லது பத்தாவது அட்டவணை பயனுள்ளதாக இல்லை. குதிரை பேரம், ஒரு காலத்தில் குதிரைகளை வியாபாரம் செய்வதற்கான ஒரு சொல்லாக இருந்தது. இப்போது அரசியல் விவாதங்களில் மிகவும் பொதுவான சொல்லாடலாக பயன்படுத்தப்படுகிறது.


வேட்பாளர்களைப் போலவே அரசியல் கட்சிகளும் செலவிடும் பணத்துக்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டும். மேலும், அரசியல் கட்சிகள் மாநில நிதியைப் பெற வேண்டும். ஆனால் தேர்தலுக்கு அல்ல. இந்த நிதியைச் சுதந்திரமாக தணிக்கை செய்யப்பட வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு தனியார் நன்கொடைகளை முழுமையாக தடை செய்ய வேண்டும். வரியில்லா நன்கொடைகள் அனைத்திற்கும் சுதந்திரமான தேசிய தேர்தல் நிதியம் (National Election Fund) உருவாக்கப்பட வேண்டும். இதிலிருந்து தேர்தல் செயல்பாடுகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.


பிரிவு 324(2) ஏழு தசாப்தங்களாக கவனிக்கப்படாமல் இருந்த தேர்தல் ஆணையர்களின் நடைமுறை மற்றும் சேவை நிபந்தனைகளுக்கு பாராளுமன்றம் சட்டம் இயற்றும் என எதிர்பார்க்கிறது. இந்த சட்டம் இறுதியாக 2023 இல், சில கலவையான அம்சங்களுடன் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் நிறைவேற்றப்பட்டது. ஒரு பாகுபாடான கொலீஜியம் அர்த்தமற்றது. 


அதன் நடுநிலைமை குறித்து ஒரு துளி சந்தேகம் கூட ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. கூடுதலாக, இரண்டு தேர்தல் ஆணையர்களையும் பதவியில் இருந்து நீக்குவதிலிருந்து பாதுகாப்பதைச் சட்டம் தவறவிட்டுள்ளது, இதனால் அவர்கள் தகுதிகாண் நிலையில் இருப்பதாக அவர்கள் உணர மாட்டார்கள் மற்றும் அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி உயர்த்தப்படுவது அரசாங்கத்தின் விருப்பத்தைப் பொறுத்தது.


இந்த குறைபாடுகள் இருந்தபோதிலும், இந்திய தேர்தல் ஆணையம் அரசியலமைப்பின் மிகப்பெரிய அங்கங்களில் ஒன்றாகும். இந்த ஆணையம் காலத்தின் சோதனையில் நின்று, சில தற்காலிக இடையூறுகள் இருந்தபோதிலும்  ஜனநாயகத்தின் சக்திவாய்ந்த கண்காணிப்பாளராக தேசத்தின் நம்பிக்கைக்கு ஏற்ப அமைந்துள்ளது. நமது ஜனநாயகத்தை வலுவாக வைத்திருக்க நிர்வாக, சட்டமன்றம் மற்றும் நீதித்துறையின் ஒத்துழைப்பு அவசியம். அப்போதுதான் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் மிகப்பெரியதாக மாறும் என்று நம்பலாம்.


குரைஷி இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஆவார். அவரும் ஒரு எழுத்தாளர். அவரது சமீபத்திய புத்தகம் ”இந்தியாவின் ஜனநாயகம்: ஒரு தேசத்தின் வாழ்க்கை அதன் தேர்தல்கள் மூலம்” (India’s Experiment with Democracy: The Life of a Nation through its Elections) ஆகும்.




Original article:

Share:

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள் -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


1. 2024-ம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.5% ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒன்றரை ஆண்டுகளில் மிகக் குறைந்த வளர்ச்சி விகிதமாக இருக்கும். உணவுப் பொருட்களின் விலை உயர்வால் வீட்டுச் செலவுகள் குறையும். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 60% இருக்கும் தனியார் நுகர்வை பெரிதும் பாதித்துள்ளது.


2. ஆட்டோமொபைல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் உட்பட பல்வேறு துறைகளில் விற்பனை குறைந்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், பயணிகள் வாகனங்கள் (Passenger vehicle) விற்பனை பத்து காலாண்டுகளில் முதல் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும், உற்பத்தி மற்றும் சுரங்கத் துறைகள் மெதுவான வளர்ச்சியைக் காட்டியுள்ளன. இது ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சிக்கு பங்களித்துள்ளது.


3. நடப்பு காலாண்டில் 7.6% வளர்ச்சியை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) எதிர்பார்க்கிறது. இந்த வளர்ச்சி பண்டிகை-தொடர்பான நுகர்வு (festival-related consumption) மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த முன்னறிவிப்பு மிகவும் நம்பிக்கையானது என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். நிதியாண்டுக்கான வளர்ச்சி கணிப்பை 6.8% ஆக மாற்றியமைத்துள்ளனர். அடுத்த ஆண்டுக்கான கணிப்பு 6.6% ஆக குறைக்கப்பட்டுள்ளது.


4. இந்தியாவின் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு போதுமான வேலைவாய்ப்பை உருவாக்க 8%-க்கும் மேல் நீடித்த பொருளாதார வளர்ச்சி அவசியம் என்று கருதப்படுகிறது. தற்போதைய மந்தநிலை இந்த வேலைவாய்ப்பு தேவையை பூர்த்தி செய்வது குறித்த கவலையை எழுப்புகிறது.


5. இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியில் 6.5% என்று எதிர்பார்க்கப்படும் சரிவு, அதிக உணவுப் பணவீக்கம், குறைக்கப்பட்ட நுகர்வோர் செலவு மற்றும் பலவீனமான தொழில்துறை செயல்பாடு போன்ற சவால்களை பிரதிபலிக்கிறது. பொருளாதார வளர்ச்சியைப் புத்துயிர் பெறவும், வேலை வாய்ப்பு தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது முக்கியமானதாகும்.


இந்திய வளர்ச்சிப் பற்றிய தகவல்கள் பற்றி


1. தேசிய புள்ளியியல் அலுவலகம் (National Statistical Office (NSO)) ஜூலை-செப்டம்பர் மாதத்திற்கான GDP தரவை நவம்பர் 29 அன்று 16:00 IST மணிக்கு வெளியிடும். இது, ஜூலை-செப்டம்பருக்கான ஜிடிபி வளர்ச்சி மதிப்பீடுகள் 6.2 முதல் 6.9 சதவீதம் வரை இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

2. ஒரு முக்கிய கவலையானது. இரு மாநிலங்கள் மற்றும் மையத்தின் மூலதனச் செலவினங்களின் (capex) மெதுவான வேகம் பற்றியது. இருப்பினும், கிராமப்புற தேவை அதிகரிப்பு மற்றும் விவசாய வளர்ச்சி எதிர்காலத்தில் வளர்ச்சியை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


3. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation) 1999-ம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இது புள்ளியியல் துறை மற்றும் திட்ட அமலாக்கத் துறையை இணைத்து உருவாக்கப்பட்டது.


4. அமைச்சகத்திற்கு இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று புள்ளியியல் மற்றும் மற்றொன்று திட்டத்தை செயல்படுத்துதல் ஆகும்.


5. புள்ளியியல் பிரிவு தேசிய புள்ளியியல் அலுவலகம் (National Statistical Office (NSO)) என்று அழைக்கப்படுகிறது. இதில் மத்திய புள்ளியியல் அலுவலகம் (Central Statistical Office (CSO)), கணினி மையம் (Computer Centre) மற்றும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (National Sample Survey Office (NSSO)) ஆகியவை அடங்கும்.


6. திட்ட அமலாக்கப் பிரிவு மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது: (i) இருபது அம்சத் திட்டம், (ii) உள்கட்டமைப்பு கண்காணிப்பு மற்றும் திட்டக் கண்காணிப்பு, மற்றும் (iii) நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை அடங்கும்.


7. இந்த இரண்டு பிரிவுகளுக்கு கூடுதலாக, தேசிய புள்ளியியல் ஆணையம் (National Statistical Commission) உள்ளது. இது இந்திய அரசின் (MOSPI) தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. இந்திய புள்ளியியல் நிறுவனம் என்ற தன்னாட்சி நிறுவனமும் உள்ளது. இது நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.




Original article:

Share:

ஒரு இந்திய மாநிலத்தின் ஆளுநர் -நிதேந்திர பால் சிங்

 1. அரசியலமைப்புச் சட்டத்தின் 153-வது பிரிவு, "ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருக்க வேண்டும்" என்று கூறுகிறது. அரசியலமைப்பு தொடங்கப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1956-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தமானது "ஒரே நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்படலாம்" என்று இந்த திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


2. ஒரு மாநிலத்தின் ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார் என்று அரசியலமைப்புப் பிரிவு 155 கூறுகிறது. மேலும், குடியரசுத் தலைவரால்  கையொப்பமிடப்பட்டு முத்திரையிடப்பட்ட உத்தரவு மூலம் நியமனம் செய்யப்படுகிறது. அரசியலமைப்புப் பிரிவு 156-ன் படி, குடியரசுத் தலைவர் விரும்பும் வரை ஆளுநர் பதவியில் இருப்பார். ஆனால், வழக்கமாக ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் மட்டுமே. ஐந்தாண்டுகள் முடிவதற்குள் குடியரசுத் தலைவர் தங்கள் விருப்பத்தைத் திரும்பப் பெற முடிவு செய்தால், ஆளுநர் பதவி விலக வேண்டும்.


3. பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் செயல்படுவதால், ஆளுநர் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுவதும் மற்றும் நீக்கப்படுவதும் நிகழ்கிறது. ஆளுநரை பதவி நீக்கம் செய்வதற்கான எந்த நடவடிக்கையும் அரசியலைமைப்பில் குறிப்பிடவில்லை.


4. அரசியலமைப்புப் பிரிவு 157 ஆளுநருக்கான தகுதிகளைக் கூறுகிறது. இதில், ஆளுநர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் மற்றும் குறைந்தது 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.


5. அரசியலமைப்புப் பிரிவு 158 ஆனது, ஆளுநரின் அலுவலகத்தின் நிபந்தனைகளை வகுக்கிறது. ஆளுநர் நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடாது. மேலும், லாபம் தரும் வேறு எந்த பதவியையும் வகிக்கக்கூடாது.


6. அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநருக்கு முக்கிய அதிகாரங்கள் உள்ளன. மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது மறுப்பது ஆகியவை இதில் அடங்கும். மாநில சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு கட்சிக்கு எவ்வளவு நேரம் கிடைக்கும் என்பதை ஆளுநர் முடிவு செய்யலாம். தேர்தலுக்குப் பிறகு பெரும்பான்மையானது தொங்கு முடிவாக (hung verdict) இருக்கும் சமயங்களில், பெரும்பான்மையை நிரூபிக்க எந்தக் கட்சியை முதலில் அழைக்க வேண்டும் என்பதை ஆளுநர் முடிவு செய்வார். இந்த அதிகாரங்கள் ஆளுநரின் பங்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகின்றன.


7. ஆளுநரும், அரசும் கருத்து வேறுபாட்டின் போது எப்படி பகிரங்கமாக தொடர்பு கொள்ள வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடவில்லை. மேலும், ஆளுநரை பதவி நீக்கம் செய்வதற்கான எந்த நடைமுறையும் இதில் குறிப்பிடவில்லை.





Original article:

Share:

இந்தியாவில் நாடாளுமன்ற அமர்வுகளின் வரலாற்றுப் பயணம் -நிகிதா மோஹ்தா

 காலப்போக்கில், அரசியல் மற்றும் சட்டமன்றத் தேவைகளில் கவனம் செலுத்துவதற்காக அரசாங்கங்கள் நாடாளுமன்ற அமர்வுகளின் அட்டவணையை மாற்றியுள்ளன.


இந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார். “குளிர்கால கூட்டத்தொடர் என்பதால், வளிமண்டலமும் குளிர்ச்சியாக இருக்கும். 2024-ன் இறுதி கட்டத்தில் நாம் இருக்கிறோம். மேலும், நாடு 2025ஐ ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் வரவேற்க ஆவலுடன் தயாராகி வருகிறது. நாடாளுமன்றத்தின் இந்த கூட்டத்தொடர் பல காரணங்களுக்காக சிறப்பு வாய்ந்தது. நமது அரசியலமைப்புச் சட்டம் 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 75 ஆண்டுகாலப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஜனநாயகத்தின் முக்கிய தருணம்” என்று பிரதமர் கூறினார்.


நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மூன்று நாடாளுமன்றக் கூட்டங்களில் ஒன்றாகும்.


முறையான நாடாளுமன்ற ஆண்டை குடியரசு தலைவர் தனது உரையுடன் தொடங்கி வைக்கிறார். இந்த உரை தேர்தலின் வெற்றிக்குப் பிறகு அரசாங்கத்தின் கொள்கைகளை கோடிட்டுக் காட்டுகிறது. கல்வியாளர்களான வெர்னான் ஹெவிட் மற்றும் ஷிரின் எம். ராய் ஆகியோர் தங்கள் "நாடாளுமன்றம்" என்ற கட்டுரையில் இந்த நடைமுறையைக் குறிப்பிடுகின்றனர். தி ஆக்ஸ்ஃபோர்ட் கம்பேனியன் டு பாலிடிக்ஸ் இன் இந்தியா என்ற கட்டுரையில், இந்த நடைமுறை “ஆங்கிலேய நாடாளுமன்ற திறப்பு விழாவில் மன்னரின் உரையை மாற்றுகிறது” என்று விளக்குகிறார்கள்.


இந்தியாவில் நிலையான நாடாளுமன்ற நாள்காட்டி இல்லை. இருப்பினும், மக்களவை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மூன்று அமர்வுகளாக கூடுகிறது. ஏப்ரல் 22, 1955 அன்று நடந்த கூட்டத்தில், மக்களவையின் பொது நோக்கக் குழு (General Purposes Committee), இந்த அமர்வுகளுக்கான நிலையான தேதிகளை நிர்ணயம் செய்தது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.என்.கவுல் மற்றும் எஸ்.எல். ஷக்தேர் ஆகியோர் தங்கள் புத்தகத்தின் ஆறாவது பதிப்பான பாராளுமன்றத்தின் நடைமுறையில் குறிப்பிட்டுள்ளபடி (Procedure of Parliament) ஒரு கால அட்டவணையை குழு பரிந்துரைத்தது.


முன்மொழியப்பட்ட அட்டவணையின்படி:


1. நிதி நிலை அறிக்கை (Budget Session) கூட்டத்தொடர் பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி மே 7ஆம் தேதி முடிவடையும்.


2. இலையுதிர்கால கூட்டத்தொடர் (Autumn Session) ஜூலை 15 அன்று தொடங்கி செப்டம்பர் 15 அன்று முடிவடையும்.


3. குளிர்கால அமர்வு (Winter Session) நவம்பர் 5 அல்லது தீபாவளிக்குப் பிறகு நான்கு நாட்களுக்குப் பிறகு (எது பின்னர் வந்தாலும்) தொடங்கி டிசம்பர் 22 அன்று முடிவடையும்.


குழுவின் பரிந்துரைகளை அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. ஆனால், கால அட்டவணை அனைத்து அமர்வுகளின் போதும் கண்டிப்பாக பின்பற்றப்படவில்லை. அமர்வுகள் வழக்கமாக நிர்ணயிக்கப்பட்ட மாதங்களில் தொடங்கும். ஆனால், அவற்றின் சரியான தேதிகள் மற்றும் கூட்டம் எவ்வளவு நாள் நடைபெறும் என்பது நாடாளுமன்றத்தின் பணிச்சுமையைப் பொறுத்தது.


பிப்ரவரி முதல் மே மாதம் வரை நடைபெறும் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் முக்கியமானதாக கருதப்படுகிறது. இது நாடாளுமன்ற ஆண்டு தொடக்கத்தை குறிக்கிறது. இந்த அமர்வின் போது, ​​குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். இது ஆண்டின் சட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கான செயல்திட்டத்தை அமைக்கிறது. இந்த அமர்வில் ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் பற்றிய விவாதங்களும் அடங்கும். அதனால்தான் இது நிதி நிலை அறிக்கை (Budget Session) என்று அழைக்கப்படுகிறது.


மழைக்கால கூட்டத்தொடர் பொதுவாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரம் வரை நீடிக்கும். இது கூட்டத்தொடர் குறைவான நாட்களே நடக்கும் மற்றும் சட்டங்கள், இயக்கங்கள் மற்றும் அவசர பொதுப் பிரச்சனைகளின் மீது கவனம் செலுத்துகிறது.


குளிர்கால கூட்டத்தொடர் நவம்பரில் துவங்கி டிசம்பர் மூன்றாவது வாரம் வரை நடைபெறும். இது முக்கியமாக சட்டமன்ற வணிகத்தில் கவனம் செலுத்துகிறது. சுமார் 30 அமர்வுகள் நடைபெறும். இது உறுப்பினர்களுக்கு பிரேரணைகள் மற்றும் அவசர பொது பிரச்சனைகளை பற்றி விவாதிக்க கூடுதல் வாய்ப்புகளை வழங்குகிறது.


விதிவிலக்காக, 1957 மற்றும் 1962 பொதுத் தேர்தல்களின் போது, ​​புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவையின் மூன்று அமர்வுகளுடன், வெளியேறும் மக்களவையின் ஒரு அமர்வும் நடத்தப்பட்டது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, புதிய மக்களவை அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்படுவதற்கு முன்பு இந்த அமர்வு நடைபெற்றது. மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினர்கள் "முட வாத்துகள்" (lame ducks) என்று அழைக்கப்பட்டனர், மேலும் அமர்வுக்கு அவ்வாறே பெயரிடப்பட்டது.


அரசியலமைப்பின் 85(1)வது பிரிவு இரண்டு நாடாளுமன்ற அமர்வுகளுக்கு இடையில் ஆறு மாதங்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று கூறுகிறது. இதன் மூலம் நாடாளுமன்றம் வருடத்திற்கு இரண்டு முறை கூடுவது உறுதி செய்யப்படும். இந்த விதி இந்திய அரசு சட்டம், 1935ல் இருந்து வருகிறது. இந்த விதியை உருவாக்க உதவிய டாக்டர். பி.ஆர். அம்பேத்கர், நாடாளுமன்றத்தை அடிக்கடி கூடுவதை இந்த விதி தடுக்கவில்லை என்றாலும், அதிக அமர்வுகள் உறுப்பினர்களை சோர்வடையச் செய்யலாம் என்று அவர் கவலைப்பட்டார்.


அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்களின் போது, ​​உறுப்பினர்கள் மூன்று முக்கிய கருத்துக்களை விவாதித்தனர்: ஒவ்வொரு ஆண்டும் எத்தனை அமர்வுகள் நாடாளுமன்றம் நடத்த வேண்டும், அமர்வுகள் எவ்வளவு காலம் நீடிக்க வேண்டும், நாடாளுமன்றத்தை கூட்டும் அதிகாரம் யாருக்கு இருக்க வேண்டும். பேராசிரியர் கே.டி. பீகாரைச் சேர்ந்த ஷா, நாடாளுமன்றத்தை ஆண்டு முழுவதும் இடைவேளையில் குறிப்பிட்ட கூட்டவேண்டும் என்று பரிந்துரைத்தார். ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்களுக்கு மேல் கூடும் ஆங்கிலேய மற்றும் அமெரிக்க  நாடாளுமன்றங்களின் உதாரணங்களை அவர் வழங்கினார். மேலும், நீண்ட அமர்வுகளை ஆதரித்தார். இருப்பினும், டாக்டர் அம்பேத்கர் இந்த பரிந்துரைகளை ஏற்கவில்லை.


காலப்போக்கில், அரசியல் மற்றும் சட்டமன்றத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கங்கள் அமர்வுகளின் அட்டவணையை மாற்றியுள்ளன. இருப்பினும், இந்த நெகிழ்வுத்தன்மை இருந்தபோதிலும், பல ஆண்டுகளாக  நாடாளுமன்றம் கூடும் நாட்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.




Original article:

Share:

அரசியலமைப்பு இன்னும் தழைத்தோங்குகிறது. அது இந்தியாவிற்கு வழிகாட்டட்டும். - சசி தரூர் எஸ்

 அனைத்து இந்தியர்களுடனும் இருக்க வேண்டிய அரசியலமைப்பின் முக்கிய வரைவாளரின் ஒரு பேச்சு, அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு சற்று முன்பு, மக்களும் அரசியல் கட்சிகளும் அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி விவாதிக்கும் முக்கிய வரைவு.


இந்த மாதம் இந்திய அரசியலமைப்பு வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த வரலாற்று நிகழ்வு நவம்பர் 26, 1949 அன்று அரசியல் நிர்ணய சபையில் நடந்தது. இந்தியாவின் பிளவுபட்ட அரசியலின் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பல சுய வாழ்த்து உரைகள் இருக்கும். ஆனால், நாம் அனைவரும் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய பேச்சு பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பேச்சு. அவர் அரசியலமைப்பின் முதன்மை வரைவாளராக இருந்தார். இந்த உரை நவம்பர் 25, 1949 அன்று அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதற்கு சிறிது நேரத்திற்கு  முன்பு இந்த உரை நிகழ்த்தப்பட்டது. நவம்பர் 25, 1949 அன்று பி.ஆர். அம்பேத்கர் தாம் தலைமை தாங்கிய வரைவுக் குழுவின் முக்கிய பணிகள் பற்றி விளக்கினார். பேரவையில் குழுவின் பணிகளைப் பாராட்டுவதற்கு முன், அவர் ஒரு கருத்தை தெளிவாகக் குறிப்பிட்டார்: “எவ்வளவு சிறந்த அரசியலமைப்பாக இருந்தாலும், அதனுடன் பணியாற்றுபவர்கள் மோசமாக இருந்தால் அது தோல்வியடையும். அதே நேரத்தில், ஒரு மோசமான அரசியலமைப்புச் சட்டத்துடன் செயல்படுபவர்கள் நல்லவர்களாக இருந்தால் அது வெற்றிபெற முடியும்”.


அரசியலமைப்புச் சட்டத்தின் செயல்பாடு, மக்களும் அரசியல் கட்சிகளும் அதை எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதைப் பொறுத்தே அதன் வெற்றி இருக்கும் என்று டாக்டர் அம்பேத்கர் சுட்டிக்காட்டினார். காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப ஆவணத்தை மாற்றியமைக்கும் வகையில் வரைவாளர்கள் அரசியலமைப்பை திருத்துவதை எளிதாக்கினர். இருப்பினும், வருங்கால சந்ததியினர் அரசியலமைப்பை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து அதன் வெற்றி இருக்கும்.


பி.ஆர். அம்பேத்கர் அடையாளம் காட்டினார்


இந்திய சமுதாயத்தில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய இரண்டு சொற்தொடர்கள் இல்லை என்று டாக்டர் அம்பேத்கர் சுட்டிக்காட்டினார். “ஜனவரி 26, 1950-ல், நாம் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கையில் நுழைவோம்” என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார். அரசியலில் சமத்துவம் இருக்கும். ஆனால், சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் ஏற்றத்தாழ்வு இருக்கும் என்று விளக்கினார். அரசியலில், “ஒரு மனிதன், ஒரு வாக்கு”, “ஒரு வாக்கு, ஒரு மதிப்பு” என்ற கொள்கையைப் பின்பற்றுவோம். ஆனால், நமது சமூக மற்றும் பொருளாதார வாழ்வில், தற்போதுள்ள கட்டமைப்பின் காரணமாக, "ஒரு மனிதன், ஒரு மதிப்பு" என்ற கொள்கையை நாம் தொடர்ந்து மறுப்போம். "இந்த முரண்பாடுகளுடன் எவ்வளவு காலம் வாழ்வோம்? நமது சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் எவ்வளவு காலம் சமத்துவத்தை மறுப்போம்?" என்று டாக்டர் அம்பேத்கர் தனது தனது கவலைகளை தெரிவித்தார்.

அரசியல் சாசனத்தில் இருந்து சமூக ஜனநாயகம் மட்டுமல்ல, அரசியல் ஜனநாயகம் உருவாக வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். சகோதரத்துவம் என்பது இந்தியாவில் காணாமல் போன இரண்டாவது முக்கிய கூறு என்று குறிப்பிட்டார். டாக்டர் அம்பேத்கர், "சகோதரத்துவம் என்பது அனைத்து இந்தியர்களிடையேயும் சகோதரத்துவ உணர்வைக் குறிக்கிறது. இந்தியர்கள் ஒரே மக்கள் என்று அர்த்தம்" என்று விளக்கினார். சகோதரத்துவமே சமூக வாழ்வில் ஒற்றுமையையும் கொண்டுவரும் கொள்கையாகும் என்று குறிப்பிட்டார். இருப்பினும், "தேச விரோத", மதப் பிளவுகள் என்று அவர் விவரித்த சாதி அமைப்பு மற்றும் சில இந்தியர்களிடையே தேசியம் பற்றிய பொதுவான உணர்வு இல்லாததால், சகோதரத்துவம் இன்னும் முழுமையாக ஏற்படவில்லை. இருந்த போதிலும், டாக்டர் அம்பேத்கர் சகோதரத்துவம் அவசியம் என்று வலியுறுத்தினார். சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று வலுவாக தொடர்புடையது. தனித்தனியாக இவை வளர முடியாது என்று அவர் நம்பினார். "சமத்துவம் இல்லாமல், சுதந்திரம் பலரைவிட ஒரு சிலரின் மேலாதிக்கத்திற்கு வழிவகுக்கும்" என்று டாக்டர் அம்பேத்கர் சுட்டிக்காட்டினார். 


என்ன மாறிவிட்டது


இன்று, 75 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குபவர்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைவதில், குறிப்பாக டாக்டர் அம்பேத்கர் சுட்டிக்காட்டிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நாம் எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்பதை பார்ப்பது முக்கியம். குறிப்பாக, தீண்டாமை ஒழிப்பு மூலம் சமத்துவத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உலகின் மிகப் பழமையான மற்றும் மிக விரிவான உறுதியான செயல் திட்டம், இது பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட்டு பின்னர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (OBC) உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது. தற்காலிகமாக இருக்க வேண்டிய இடஒதுக்கீடுகள், இப்போது நமது அமைப்பின் நிரந்தர அங்கமாகிவிட்டதால், அரசியல் ரீதியாக சவால் செய்வது கடினமானதாகி விட்டது. இருப்பினும், டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்திய சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்தை அடைவதற்கான இலக்கு எட்டப்படாமல் வெகு தொலைவில் உள்ளது. இந்திய சமூகம் தங்களுக்குத் தகுதியான சமத்துவத்தை மறுக்கிறது என்று பலர் இன்னும் நினைக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்ந்து அரசியல் விவாதங்களை கிளப்பி வருகிறது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வளர்ந்து வரும் கோரிக்கை, இந்தியாவின் அரசியலமைப்பு நடைமுறைகளின் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.


சகோதரத்துவம் குறித்து, நமது பிளவுபட்ட ஜனநாயகத்தில் வாக்குகளைத் திரட்ட ஜாதி, மதம், பிராந்தியம் மற்றும் மொழியைப் பயன்படுத்துவது, டாக்டர் அம்பேத்கர் பேசிய ஒற்றுமை உணர்வு இன்னும் செயல்பாட்டில் உள்ளது. எனினும், அவர் காணாமல் போனதாக உணர்ந்த தேசிய உணர்வு தற்போது நாடு முழுவதும் வேரூன்றியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்திய அணி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளில் அதிக திரளான கூட்டத்தைப் பார்ப்பதன் மூலம் தேசத்தின் வலுவான உணர்வைக் காணலாம். 1999ஆம் ஆண்டு ஏற்பட்ட கார்கில் போர் அல்லது 2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட கால்வான் சம்பவம் போன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து தேசிய சீற்றம் மற்றும் துக்கம் ஆகியவற்றில் இதைக் காணலாம். உள்ளூர் அல்லது குறுங்குழுவாத அடையாளங்கள் நீடித்தாலும், நாடு முழுவதும் ஒரு வலுவான தேசிய ஒற்றுமை உணர்வு இருப்பதைக் காட்டுகின்றன.


ஆயினும் கூட, சாதி இட ஒதுக்கீட்டில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்தியா சமத்துவத்தை ஊக்குவித்துள்ளது. ஆனால், சகோதரத்துவத்தை பலவீனப்படுத்தியிருக்கலாம். டாக்டர் அம்பேத்கரின் பார்வையில் சகோதரத்துவம் மிகவும் முக்கியமானது. இந்த வார்த்தையே இந்தியாவின் அரசியலமைப்பு விவாதத்தில் அவரது முக்கிய பங்களிப்புகளில் ஒன்றாகும். சகோதரத்துவம் பொருளாதார அம்சத்தையும் கொண்டிருந்தது. நல்ல நிலையில் உள்ளவர்களின் செல்வம் தீண்டத்தகாதவர்கள் மற்றும் பிற பின்தங்கிய குழுக்களை மேம்படுத்த உதவும் என்று பரிந்துரைக்கிறது. சமூக மற்றும் சாதிய படிநிலைகளை குறைக்க சகோதரத்துவம் உதவும். 


இருப்பினும், சமூகவியலாளர் தீபங்கர் குப்தா, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு நீட்டிக்கப்பட்டபோது, ​​சாதி என்பது எப்போதும் பயன்படுத்தப்படும் ஒரு அரசியல் கருவியாக மாறியது என்று வாதிடுகிறார். இது இந்திய சமூகத்தில் இருந்து சாதியை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட டாக்டர் அம்பேத்கரின் பார்வைக்கு எதிரானது என்று பேராசிரியர் குப்தா நம்புகிறார். அம்பேத்கர் இந்திய சமுதாயத்தில் இருந்து சாதியை அகற்ற விரும்பினார். ஆனால், மண்டல் குழு சாதியை "பிரதிநிதித்துவம்" செய்ய வேண்டிய ஒன்றாகக் கண்டது. அதை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் பற்றி குறிப்பிடவில்லை. இந்த அணுகுமுறை பொது வாழ்விலிருந்து சாதியை அகற்றுவதற்குப் பதிலாக அதை மேலும் வலுப்படுத்தியது.

உயர்வும் கவலை தரும் தாழ்வும்


இந்த விவாதம் தொடரலாம். ஆனால், ஒரு காலத்தில் அரசியலமைப்பை நிராகரித்த குழுக்களின் அதிகார எழுச்சி அதை கைவிடுவதற்கு வழிவகுக்கவில்லை என்பதற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம். ஒரு பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் மற்றும் ஜனசங்கத்தில் அதன் முன்னோடிகளை ஒரு காலத்தில் "இந்தியன் அல்ல" என்றும் ஆன்மா அற்றது என்றும் ஒரு ஆவணத்தை இப்போது கொண்டாடுவது நகைப்புக்குரியது. 75 ஆண்டுகள் மற்றும் 106 திருத்தங்கள் மூலம் அரசியலமைப்பு பலம் பெற்றுள்ளது. 


இருப்பினும், அது உருவாக்கிய பல அமைப்புகள் பலவீனமடைந்துள்ளன. பாராளுமன்றத்தின் பங்கு குறைந்துள்ளது, நீதித்துறை அழுத்தங்களை எதிர்கொள்கிறது. ஜனநாயக உணர்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. V-Dem நிறுவனம் இந்தியாவை "தேர்தல் எதேச்சதிகாரம்" (electoral autocracy) என்று முத்திரை குத்தியுள்ளது. இந்த நிலை "பாதுகாவலர்" என்று டாக்டர் அம்பேத்கர் எச்சரித்ததைப் போன்றது. அரசியலமைப்பை நிலை நிறுத்த பொறுப்பானவர்களுக்கு இன்னும் நிறைய வேலைகள் உள்ளன என்பதை இது சுட்டிக் காட்டுகிறது.


டாக்டர் அம்பேத்கர், “சுதந்திரம் நிச்சயமாக மகிழ்ச்சிக்கு ஒரு காரணம். ஆனால், அது பெரிய பொறுப்புகளையும் தருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சுதந்திரம் கிடைத்தவுடன், எந்த தவறும் நடந்தாலும் ஆங்கிலேயர்களை குறை சொல்ல முடியாது. இனிமேலாவது தவறு நடந்தால் நம்மை நாமே குற்றம் சொல்ல வேண்டும்” என்று மறக்கமுடியாத தனது இறுதி உரையை முடித்தார். அவர்காட்டிய வழியின் படி, எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நம்மை நாமே குற்றம் சாட்ட வேண்டிய விஷயங்களைக் குறைப்பதாக உறுதி ஏற்போம். இந்த முயற்சியில் அரசியலமைப்பு நம்மை வழி நடத்தட்டும்.


சசி தரூர் நான்காவது முறையாக திருவநாதபுரத்தின் மக்களவை உறுப்பினராக உள்ளார்.




Original article:

Share: