அரசியலமைப்பு தினத்தில், இந்தியாவின் எதிர்காலம் குறித்த அம்பேத்கரின் இன்றும் பொருந்தக்கூடிய 3 எச்சரிக்கைகளை நினைவு கூர்வது. -யாஷி

 அதிகரித்து வரும் கசப்பான அரசியல் விவாதங்களுக்கு மத்தியில் இரு தரப்பினராலும் அரசியலமைப்பு அடிக்கடி பயன்படுத்தப்படுவதால், அம்பேத்கரின் பல அச்சங்களின் எதிரொலிகளைக் கேட்க முடியும். அவற்றில் மூன்றை முன்னிலைப்படுத்துவோம்.


அரசியலமைப்பு தினம்: செவ்வாய்கிழமை (நவம்பர் 26), நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்தன. துணை குடியரசுத் தலைவர் தி ஜக்தீப் தன்கர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை மேற்கோள் காட்டினார். இதில், அரசியல்வாதிகள் "நாட்டை நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு வைத்திருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.


இந்திய அரசியலமைப்பின் தந்தையான அம்பேத்கர், அரசியலமைப்பின் செயல்திறன் மற்றும் தாக்கம் அதை செயல்படுத்துபவர்களைப் பொறுத்தது என்று பல முறை வலியுறுத்தியுள்ளார். “ஒரு அரசியலமைப்பு எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அது மோசமானதாக மாறும் என்பது உறுதியாக, அதைச் செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமாக மாறும்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். 


நவம்பர் 25, 1949 அன்று அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கரின் இறுதிக் குறிப்புகளில் இருந்து தன்கர் மேற்கோள் காட்டிய அறிக்கையில், நாட்டின் எதிர்காலம் குறித்த பல அச்சங்களை அவர் வெளிப்படுத்தினார். இன்று, அரசியல் சாசனம் பற்றி இரு தரப்பும் அடிக்கடி குறிப்பிடும் அரசியல் விவாதத்திற்கு மத்தியில். இது அம்பேத்கரின் பல கவலைகளை நினைவுபடுத்துகிறது. அவற்றில் மூன்றை நாங்கள் முன்னிலைப்படுத்துகிறோம்.



  1. 'இந்தியா மீண்டும் தனது சுதந்திரத்தை இழக்குமா?' 


உள்நாட்டுப் பிரிவுகளால் இந்தியா தனது சுதந்திரத்தை எவ்வாறு இழந்தது என்பதைப் பற்றி அம்பேத்கர் பேசினார். மீண்டும் இப்படி நடக்கலாமா என்று குறிப்பிட்டிருந்தார். 


வரலாறு மீண்டும் நிகழும் சாத்தியம் குறித்து அவர் கவலை தெரிவித்தார். சாதிகள் மற்றும் சமயங்கள் போன்ற பழைய எதிரிகளைத் தவிர, பல்வேறு மற்றும் எதிர் நம்பிக்கைகளைக் கொண்ட பல அரசியல் கட்சிகளையும் இந்தியா எதிர்கொள்ளும் என்று அவர் கவலைப்பட்டார். இந்தியர்கள் தங்கள் சொந்த நம்பிக்கைகளைவிட நாட்டிற்கு முன்னுரிமை கொடுப்பார்களா அல்லது நாட்டிற்கு மேல் தங்கள் நம்பிக்கைகளை வைப்பார்களா என்று அம்பேத்கர் கேள்வி எழுப்பினார். அவர் இதைப் பற்றி நம்பிக்கையற்றவராக இருந்தார். ஆனால், அவர் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தார். அரசியல் கட்சிகள் நாட்டின் மீது மதத்தை முதன்மைப்படுத்தினால், இந்தியாவின் சுதந்திரம் மீண்டும் ஆபத்தில் இருக்கும் மற்றும் என்றென்றும் இழக்கப்படலாம்.


சுதந்திரத்தை இழப்பது என்பது நிலத்தை இழப்பது மட்டுமல்ல. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்காக அந்நாட்டு மக்கள் செயல்படவில்லை என்றால், அந்த நாடு உண்மையிலேயே சுதந்திரமாக இருக்காது. மதம், சமூகம், சாதி மற்றும் பிற காரணிகள் தொடர்பான அச்சங்கள் மற்றும் பாரபட்சத்தால் அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டால், நாட்டை சுதந்திரமானது என்று அழைக்க முடியாது.


  1. 'இந்தியாவிற்கு முன்பே ஜனநாயகம் தெரியும், அது தொடர்ந்து ஜனநாயகமாக இருக்குமா?' 


அம்பேத்கர் தனது உரையில், ஜனநாயகம் என்பது இந்தியாவுக்கு ஒரு புதிய கருத்தாக்கம் அல்ல. ஆனால், பண்டைய காலங்களில் எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். 


இந்தியா ஒரு காலத்தில் குடியரசுகளால் நிரம்பியிருந்தது. நாடாளுமன்றங்களையோ, நாடாளுமன்ற நடைமுறைகளையோ இந்தியா அறிந்திருக்கவில்லை என்பது உண்மையல்ல. பௌத்த பிக்கு சங்கங்கள் (Buddhist Bhikshu Sanghas) பற்றிய ஆய்வு இரண்டு விஷயங்களை வெளிப்படுத்துகிறது. முதலில், நாடாளுமன்றங்கள் இருந்தன. ஏனெனில், சங்கங்கள் அடிப்படையில் நாடாளுமன்றங்களாக இருந்தன. இரண்டாவதாக, இன்று நமக்குத் தெரிந்த அனைத்து நாடாளுமன்ற நடைமுறை விதிகளையும் சங்கத்தினர் அறிந்து பின்பற்றினர்.

அம்பேத்கர் இந்த வகையான செயல்பாட்டை "அவரது காலத்தில் நாட்டில் செயல்பட்ட அரசியல் சபைகளின் விதிகளிலிருந்து" கடன் வாங்கியிருக்க வேண்டும் என்று கூறினார். 


பின்னர் அவர், ஒரு தலைவரிடம் அளவுக்கதிகமான பக்தி காட்டுவது அல்லது நாயக வழிபாட்டிற்கு (hero-worship) எச்சரிக்கை விடுத்தார்.


வாழ்நாள் முழுவதும் நாட்டிற்கு சேவை செய்த பெரிய மனிதர்களுக்கு நன்றி செலுத்துவதில் தவறில்லை. ஆனால், ஒருவர் எவ்வளவு நன்றியைக் காட்ட வேண்டும் என்பதற்கு வரம்புகள் உள்ளன. இந்தியாவில், பக்தி அல்லது நாயக வழிபாட்டின் பாதை என்று அழைக்கப்படுவது, அரசியலில் பெரும் பங்கு வகிக்கிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு பக்தியின் தாக்கம் அரசியலில் இல்லை. மதத்தில் உள்ள பக்தி ஆன்மாவுக்கு முக்திக்கான ஒரு வழியாகும். இருப்பினும், அரசியலில் பக்தி அல்லது நாயக வழிபாடு சீரழிவுக்கும் இறுதியில் சர்வாதிகாரத்துக்கும் இட்டுச் செல்கிறது என்றார்.


  1. அரசியல் ஜனநாயகம் சமூக ஜனநாயகமாக விரிவடையுமானால் 


அம்பேத்கர் அரசியல் ஜனநாயகமானது "அதன் சமூக ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு இல்லாவிட்டால்" நீடிக்காது என்று கூறினார். அதாவது, "சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை வாழ்க்கையின் கொள்கைகளாக அங்கீகரிக்கும் ஒரு வாழ்க்கை முறை" ஆகும். 


பின்னர் அவர் இந்தியாவில் நிலவும் தீவிர சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மையை எடுத்துரைத்தார். 


இந்த நாட்டில் அரசியல் அதிகாரம் நீண்ட காலமாக ஒரு சிலரால் கட்டுப்படுத்தப்பட்டது. பலர் பாரம் சுமக்கும் மிருகங்களாகவும், கொள்ளையடிக்கும் மிருகங்களாகவும் கருதப்படுகிறார்கள். இந்த ஏகபோகம் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வாய்ப்பைப் பறித்தது மட்டுமல்லாமல், வாழ்க்கையின் அர்த்தத்தையும் பறித்துவிட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆளப்படுவதில் சோர்வடைந்துள்ளனர். அவர்கள் தங்களையே ஆளத் துடிக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களிடையே சுய-உணர்தலுக்கான தூண்டுதல் வர்க்கப் போராட்டமாகவோ அல்லது வர்க்கப் போராகவோ மாறக்கூடாது என்று எச்சரித்தார்.


இறுதியாக, நாட்டின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக மாறினால், ஒரே ஒரு முடிவுதான் எடுக்கப்படும் என்றார். அவர் மேலும் கூறுகையில், “புதிய அரசியலமைப்பின் கீழ் விஷயங்கள் தவறாக நடந்தால், அதற்குக் காரணம் நாம் மோசமான அரசியலமைப்பை வைத்திருந்ததாக ஆகாது. நாம் சொல்ல வேண்டியது என்னவென்றால், மனிதன் மோசமானவன்” என்றார்.




Original article:

Share:

இந்திய அரசியலமைப்பு வரைவை உருவாக்க உதவிய பெண்களின் கதைகள். -ரிஷிகா சிங்

 299 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சபையில் சரோஜினி நாயுடு, சுசேதா கிருபளானி மற்றும் விஜயலட்சுமி பண்டிட் போன்ற முக்கிய நபர்கள் உட்பட 15 பெண் உறுப்பினர்கள் இருந்தனர் (அவர்களில் இருவர் பின்னர் ராஜினாமா செய்தனர்). ஆனால், இதில் அதிகம் அறியப்படாத பெண்களும் அடங்குவர். அவர்கள் பல்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெவ்வேறு ஆர்வங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள்.


அரசியலமைப்பு தினத்தன்று (நவம்பர் 26), குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்ட இந்திய அரசியலமைப்பு சபையில் பெண் உறுப்பினர்களின் பங்கை நினைவு கூர்ந்தார். 


299 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பில் சரோஜினி நாயுடு, சுசேதா கிருபளானி மற்றும் விஜயலட்சுமி பண்டிட் போன்ற முக்கிய நபர்கள் உட்பட 15 பெண் உறுப்பினர்கள் இருந்தனர் (அவர்களில் இருவர் பின்னர் ராஜினாமா செய்தனர்). ஆனால், பாலினம், சாதி மற்றும் இடஒதுக்கீடு குறித்த விவாதங்களில் பங்கேற்ற நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அதிகம் அறியப்படாத பெண்களும் இதில் இருந்தனர். அவற்றில் ஐந்து பேரை நினைவுப்படுத்துகிறோம். 


  1. அம்மு சுவாமிநாதன் (1894-1978) 


”The Fifteen: The Lives and Times of the Women in India’s Constituent Assembly” என்ற புத்தகத்தில், எழுத்தாளர்கள் ஏஞ்சலிகா அரிபாம் மற்றும் ஆகாஷ் சத்யவாலி ஆகியோர், சுவாமிநாதன் கேரளாவின் பாலக்காட்டில் இருந்து வந்ததாக குறிப்பிட்டுள்ளனர். தன்னை விட வயதில் மூத்தவரான சுப்பராம சுவாமிநாதனை அவர் இளமைப் பருவத்தில் மணந்தார். திருமணம் செய்து கொள்வதற்கு முன் சில நிபந்தனைகளை விதித்தார். அதில் ஒன்று "அவர் எத்தனை மணிக்கு வீட்டிற்கு வருவார்" என்று கேட்கக்கூடாது என்பது ஒரு நிபந்தனையாகும். சுவாமிநாதனுக்கு நான்கு குழந்தைகள். அவர்களில் ஒருவரான கேப்டன் லட்சுமி சாகல் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தவராவர்.


அரசியலில் ஆர்வம் கொண்ட சுவாமிநாதன், விதவைகள் மீது விதிக்கப்பட்ட விதிகளான தலையை மொட்டையடித்தல், நகைகளை துறத்தல் போன்றவற்றை கடுமையாக எதிர்த்தார். சென்னையில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அரசியலமைப்பு சபையில், இந்து சட்ட மசோதா (Hindu Code Bill) மற்றும் பாலின சமத்துவம் (gender equality) குறித்து அவர் பேசினார். "இந்த மசோதா ஆண்களை விட நாட்டின் பெண்களை அதிகம் பாதிக்கிறது என்று அவர் குறிப்பிட்டபோது, ஆண் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சபையில் அனைவரும் சிரித்தனர்" என்று புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. 


சுதந்திரத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தியாவின் நல்லெண்ண தூதராக பணியாற்றினார். 


  1. அன்னி மஸ்கரேன் (1902-1963) 


மஸ்கரேன் திருவிதாங்கூரில் (இப்போது திருவனந்தபுரம்) ஒரு லத்தீன் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். இது சாதி அமைப்பின் கீழ் மட்டத்தில் இருப்பதாகக் கருதப்பட்டது. அவரது கல்வி புத்திசாலித்தனம் அவரை சட்டம் படிக்கவும் கற்பிக்கவும் வழிவகுத்தது. திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் சாதிக் கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும், அந்தக் காலகட்டத்தில் பெண்களின் கல்விக்காகவும் சில சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தனர். 


திருவிதாங்கூரில் ஏற்பட்ட அரசியல் எழுச்சி இவரை சமுக செயல்பாட்டை நோக்கி இட்டுச் சென்றது. சட்டமன்றத்தில் வாக்களிக்கும் உரிமை கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதில் பிற்படுத்தப்பட்ட சாதி ஈழவர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் போன்றோரைத் தவிர்த்தனர். இது போன்ற சமுகங்களை  ஒன்றிணைந்து அனைத்து திருவிதாங்கூர் கூட்டு அரசியல் காங்கிரசை உருவாக்கி, அதில் அவர் இணைந்தார். மஸ்கரீன் திருவிதாங்கூர் மாநில காங்கிரசின் ஒரு அங்கமாக மாறினார். உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமையின் (universal adult franchise) அடிப்படையில் ஒரு அரசாங்கத்திற்காக வாதிட்டார். அவரது வீடு அவரது எதிரிகளால் கற்களால் வீசப்பட்டது மற்றும் ஊடுருவியவர்கள் அவரது வீட்டில் அவரைத் தாக்கினர். ஆனால், அவர் தனது வேலையில் விடாப்பிடியாக இருந்தார். 


பின்னர் காங்கிரசில் இணைந்தார். அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக, குடியரசின் ஆரம்ப நாட்களில் வலுவான மையத்தின் அவசியம் பற்றி பேசினார். அதே நேரத்தில், உள்ளூர் அரசாங்கங்களின் சுயாட்சியை அவர் வலியுறுத்தினார். மாநிலத்தில் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக காங்கிரஸில் இருந்து விலகினார். 1952-ம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


  1. பேகம் குத்சியா ஐஜாஸ் ரசூல் (1909-2001) 


குத்சியாவின் தந்தை பஞ்சாபில் உள்ள மலேர்கோட்டாவின் அரச குடும்பத்தில் ஒரு திறமையான அரசியல்வாதி ஆவார். அவரது சலுகை பெற்ற பின்னணியில் சில பெண்கள் பின்பற்றக்கூடிய முறையான கல்வியின் பாதைக்கு வழிவகுத்தது. ஆனால், அப்போதும் கூட எதிர்ப்புகள் இருந்தன. ஒரு உலமா தனது கான்வென்ட் பள்ளிப்படிப்பை எதிர்த்து ஃபத்வா (fatwa) பிறப்பித்தார். 


நவாப் ஐசாஸ் ரசூலை மணந்த பிறகு, அவர் பர்தாவை நிராகரிக்கத் தேர்ந்தெடுத்தார். அவரது கணவர் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த முடிவை அவரது கணவர் பின்னர்தான் எடுத்தார். இருவரும் சேர்ந்து 1936-ம் ஆண்டில் அரசியலில் சேரவும் தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்தனர். பழமைவாத குழுக்கள் அவரது வேட்புமனுவை விமர்சித்த போது, அவர் இறுதியில் இட ஒதுக்கீடு இல்லாத இடத்தில் இருந்து வெற்றி பெற்றார்.


குத்ஸியா முஸ்லீம் லீக்கில் சேர்ந்து பெண்களுக்காக பிரச்சாரம் செய்தார். மத அடிப்படையிலான தனித்தொகுதிகளை எதிர்த்த சில உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இருப்பினும், பாகிஸ்தான் பற்றிய யோசனை குறித்த அவரது கருத்துக்கள் மிகவும் சிக்கலானவை. ஒருபுறம், இந்த நடவடிக்கை முஸ்லிம்களை மேம்படுத்த உதவும் என்று அவர் நம்பினார். ஆனால், அத்தகைய பிரிவினையைத் தொடர்ந்து இந்தியாவில் ஏழை முஸ்லிம்களின் அவலநிலை குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். இறுதியில், அவரும் அவரது கணவரும் இந்தியாவிலேயே தங்க முடிவு செய்தனர். 

பின்னர் காங்கிரசில் இணைந்தார். சுதந்திரத்திற்குப் பிறகு, 1952-ம் ஆண்டில் உத்தரபிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், பெண்கள் ஹாக்கியை தேர்ந்தெடுக்க ஊக்குவித்தார். 


  1. தாட்சாயணி வேலாயுதன் (1912-1978) 


தாட்சாயணி வேலாயுதன் பல குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டினார். கொச்சியில் (தற்போது கொச்சி) அறிவியலில் பட்டம் பெற்ற முதல் தலித் பெண் என்ற பெருமையும், மேலும், கொச்சி சட்டசபையில் இணைந்த முதல் தலித் பெண்மணியும் இவராவார்.


”அடிமை" (slave) என்று கருதப்படும் புலயா சமூகத்தைச் (Pulaya community) சேர்ந்தவர். அவர் பிறந்த காலத்திலிருந்து அடக்குமுறை தொடர்பான சாதி அடிப்படையிலான விதிகளுக்கு எதிராக பல சவால்கள் அதிகரித்து வந்தன. கல்லூரிக்குச் செல்ல அவர் எடுத்த முடிவு எப்படி ஒரு "சலசலப்பை" ஏற்படுத்தியது என்பதை அவர் ஒருமுறை நினைவு கூர்ந்தார். இருப்பினும், மக்கள் அவரைப் பார்க்க முயன்றனர். ஆனால், உயர் சாதி ஆசிரியர்கள் அவரது நடைமுறை சோதனைகளைக் காட்ட மறுத்ததால், அவர் தொடர்ந்து பாகுபாட்டை எதிர்கொண்டார். 


ஆசிரியராக பணியாற்றிய பிறகு, வார்தாவில் உள்ள சேவாகிராம் ஆசிரமத்தில் (Sevagram Ashram) ஒரு சமூக சேவகரை மணந்தார். "மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூர்பா முன்னிலையில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரால் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது" என்று புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. பின்னர் கொச்சி சட்ட மேலவைக்கு தாட்சாயணி வேட்புமனு தாக்கல் செய்தார். 1946-ம் ஆண்டில், இவர் தனது 34 வயதில் மலபாரில் இருந்து அரசியலமைப்பு சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கு, தனித்தொகுதிகளின் தேவை குறித்து அம்பேத்கருடன் உடன்படாத அவர், இந்த விதியின் வேறுபாடுகளை முன்னிலைப்படுத்துவதாகவும், தேசியவாதத்திற்கு எதிரானது என்றும் கூறினார். "அவர் (அம்பேத்கர்) ஹரிஜன சமூகத்தின் ஒரே தலைவர். தேசியவாத சக்திகளுடன் அவர் ஒத்துழைக்காதது ஒரு பெரிய சோகம்" என்றார். 


அவரது சகாக்கள் பலரைப் போலல்லாமல், நிதி சிக்கல்கள் காரணமாக அவரால் அரசியலில் தனது வாழ்க்கையைத் தொடர முடியவில்லை. அவர் மீண்டும் 1971-ம் ஆண்டில் அரசியலுக்குத் திரும்பினார். ஆனால், மக்களவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக நான்காவது இடத்தைப் பிடித்தார். அரசியலில் இருந்து விலகிய போதிலும், தலித் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.


  1. ரேணுகா ரே (1904-1997) 


ரேணுகா ரே இன்றைய வங்காளதேசத்தின் பப்னாவில் ஒரு புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை மதிப்புமிக்க இந்திய குடிமை சேவைகளுக்கு தகுதி பெற்றார். அதே நேரத்தில், இவரது தாயார் 1897-ம் ஆண்டில் கொல்கத்தாவின் பிரசிடென்சி கல்லூரியில் முதல் இரண்டு பெண் மாணவர்களில் ஒருவராக இருந்தார். 


1920-ம் ஆண்டில் காந்தியுடனான ஒரு சந்திப்பு காரணமாக கல்லூரியை விட்டு வெளியேறி சுதந்திரப் போராட்டத்தில் சேர வழிவகுத்தது. அங்கு அவர் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிடிகல் சயின்ஸில் (London School of Economics and Political Science) படிப்பதற்கு முன்பு இவர் சபர்மதி ஆசிரமத்தில் சிறிது காலம் தங்கியிருந்தார். லண்டனில், அவர் சத்யேந்திர நாத் ரே என்ற மற்றொரு மாணவரை சந்தித்தார், பின்னர் அவரை மணந்தார். 


இந்தியா திரும்பிய பிறகு, பெண்கள் பிரச்சினைகளில் தீவிரமாக ஈடுபட்டார். விவாகரத்து மற்றும் பரம்பரை தொடர்பான உரிமைகளில் அவர் கவனம் செலுத்தினார். 1943-ல், ரே ஒன்றிய சட்டப் பேரவையில் பெண்களுக்கான அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 


1946-ம் ஆண்டில், அவர் அரசியல் நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்து சட்ட மசோதாவைப் பற்றி விவாதித்தார் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்தார். இது முன்னேற்றத்தைத் தடுக்கும் என்றும் பெண்களின் அறிவுத்திறன் மற்றும் திறனை அவமதிக்கும் என்றும் அவர் வாதிட்டார்.


ரே 1952 பொதுத் தேர்தலில் ஹூக்ளியில் இருந்து தோல்வியடைந்தார். இருப்பினும், அவர் 1957-ம் ஆண்டில் வெற்றி பெற்றார். இதற்கிடையில், அவர் வங்காள அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றினார். பின்னர், சமூகப் பணிக்குத் திரும்பினார்.




Original article:

Share:

2015 முதல் நவம்பர் 26 ஏன் அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது?

 ஜனவரி 26 குடியரசு தினமாக கொண்டாடப்படும் நிலையில், 2015 முதல், நவம்பர் 26 ஆண்டுதோறும் இந்திய அரசியலமைப்பு தினம் (Constitution Day of India) அல்லது சம்விதான் திவாஸாக (Samvidhan Divas) அனுசரிக்கப்படுகிறது.  


ஜனவரி 26 குடியரசு தினமாக கொண்டாடப்படும் நிலையில், 2015 முதல், நவம்பர் 26 ஆண்டுதோறும் இந்திய அரசியலமைப்பு தினம் அல்லது சம்விதான் திவாஸாக அனுசரிக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி X வலைதளத்தில் பதிவிடுகையில், இந்த (நவம்பர் 26) நாளுக்கான தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், அவர் அரசியலமைப்பை இந்தியாவின் "வழிகாட்டும் ஒளி" (guiding light) என்று அழைத்தார். அன்றைய வரலாறு மற்றும் அரசியல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே குறிப்பிடுகிறது.


"குடிமக்களிடையே அரசியலமைப்பு மதிப்புகளை" ஊக்குவிப்பதற்காக நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்றும் மே 2015-ம் ஆண்டில் ஒன்றிய அமைச்சரவை அறிவித்தது. அந்த ஆண்டு அரசியலமைப்பின் வரைவுக் குழுவின் தலைவரான பி.ஆர்.அம்பேத்கரின் 125வது பிறந்த நாளையும் குறித்தது. கே.எம்.முன்ஷி, முஹம்மது சாதுல்லா, அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் ஆகியோரும் குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர். 


இந்த ஆண்டு, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை நாடு கொண்டாடுகிறது. இந்த ஆண்டு முழுவதும் நாடு தழுவிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 'அரசியலமைப்பு தினம்' இருக்கும். அரசியலமைப்பு சபையின் வரைவுக் குழுவின் தலைவராக இந்திய அரசியலமைப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்த டாக்டர் அம்பேத்கரை கெளரவிக்கும் விதமாக இருக்கும்" என்று பத்திரிகை தகவல் அலுவலகம் 2015–ம் ஆண்டில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஒன்றிய அரசின் இந்த முடிவு அம்பேத்கரின் பாரம்பரியத்தை உரிமை கோருவதற்கான ஒரு நடவடிக்கையாகவும், தலித் சமூகத்தை (Dalit community) அணுகும் முயற்சியாகவும் பார்க்கப்பட்டது. 2015-ம் ஆண்டு அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, அப்போதைய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர் சந்த் கெஹ்லோட், "ராகுல் காந்தியும் அவரது கட்சியும் அம்பேத்கரை ஒருபோதும் கௌரவிக்கவில்லை. அவர் ஒருபோதும் பாரத ரத்னாவைப் பெறவில்லை, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அவரது ஆயில் பெயிண்டிங் நாடாளுமன்றத்தில் நிறுவப்படவில்லை.


அந்த நேரத்தில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அம்பேத்கரின் சிந்தனைகள் மற்றும் தத்துவத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்தது. இந்த நடவடிக்கைகளில் ஒன்று புது தில்லியில் உள்ள ஜன்பத் (Janpath) 15-ல் அம்பேத்கர் சர்வதேச மையத்தை அமைப்பதாகும். இந்த திட்டத்திற்கான செலவு 197 கோடி ரூபாய் ஆகும்.


நவம்பர் 19, 2015 அன்று, அரசாங்கம் முறையாக நவம்பர் 26ஆம் நாளை அரசியலமைப்பு தினமாக அறிவித்தது. இதற்கு முன்பு, அம்பேத்கர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் இருந்ததால் இந்த நாள் தேசிய சட்ட தினமாக அனுசரிக்கப்பட்டது. 


இந்த ஆண்டு, எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரங்களிலிருந்து தனது சமீபத்திய அறிக்கைகளின் காணொலி தொகுப்புடன் அன்றைய செய்தியைப் பகிர்ந்து கொண்டார். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, காந்தி அடிக்கடி அரசியலமைப்பின் ஒரு சிறிய நகலை தன்னுடன் எடுத்துச் செல்வதைக் காண முடிந்தது, சிறுPANமை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகக் குழுக்களுக்கு வேண்டுகோள் விடுக்க அதைப் பயன்படுத்தினார். 


X வலைதளத்தில் அவரது பதிவில், "அரசியலமைப்பு என்பது சமூகத்தின் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமுகங்களைப் பாதுகாக்க ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். அது எந்த அளவுக்கு வலிமையானதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நமது நாடு வலிமையாக இருக்கும். இந்த நாளில், அரசியலமைப்பின் நோக்கங்களைப் பாதுகாத்த தியாகிகள் மற்றும் அரசியலமைப்பு சபையின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இன்று நான் அஞ்சலி செலுத்துகிறேன். அதைப் பாதுகாப்பதற்கான எனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.


இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அமைப்பான அரசியலமைப்பு சபை தனது முதல் அமர்வை டிசம்பர் 9, 1946 அன்று நடத்தியது. இதில் 207 உறுப்பினர்களுடன் நடைபெற்றது. ஆரம்பத்தில், சட்டமன்றத்தில் 389 உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால், சுதந்திரம் மற்றும் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, உறுப்பினர்களின் பலம் 299 ஆகக் குறைக்கப்பட்டது. 


அரசியலமைப்பை இயற்றுவதற்கு சட்டமன்றம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துக் கொண்டது. அரசியலமைப்பு வரைவின் உள்ளடக்கத்தை மட்டும் பரிசீலிக்க 114 நாட்களுக்கும் மேலாக செலவிட்டனர். மற்ற நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்கள் உட்பட அரசியலமைப்பு வரைவுக்கான பல்வேறு ஆதாரங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன. மேலும், அந்த நேரத்தில் இந்தியாவுக்குத் தேவைப்பட்டவற்றுக்கு ஏற்ப விதிகளை மாற்றியமைக்க பொருத்தமான திருத்தங்கள் செய்யப்பட்டன. 


மற்றொரு முக்கிய ஆதாரம் 1935-ம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டம் (Government of India Act) ஆகும். இந்தச் சட்டம் இரு அவைகளை அறிமுகப்படுத்தியது. இதன் பொருள் ஒன்றியத்திலும் ஆறு மாகாணங்களிலும் மேல் மற்றும் கீழ் சபைகள் இருந்தன. இந்த சபைகளுக்கு நேரடித் தேர்தலையும் அது நிறுவியது. அந்த நேரத்தில், இது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மிக நீண்ட சட்டங்களில் ஒன்றாகும்.


டிசம்பர் 13, 1946 அன்று, நேரு "குறிக்கோள் தீர்மானத்தை" (Objectives Resolution) முன்மொழிந்தார். இது பின்னர் ஜனவரி 22, 1947 அன்று முகவுரையாக (Preamble) ஏற்றுக்கொள்ளப்பட்டது. 


அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழு அரசியலமைப்பு சபையின் 17-க்கும் மேற்பட்ட குழுக்களில் ஒன்றாகும். இந்தியாவுக்கான வரைவு அரசியலமைப்புச் சட்டத்தைத் தயாரிப்பதே அவர்களின் முக்கியப் பணியாக இருந்தது. முன்வைக்கப்பட்ட 7,600 திருத்தங்களில், இந்த குழு அரசியலமைப்பு குறித்து விவாதிக்கும் போது சுமார் 2,400 திருத்தங்களை நீக்கியது. 

அரசியலமைப்பு சபையின் கடைசி அமர்வு நவம்பர் 26, 1949 அன்று அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டபோது முடிவடைந்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜனவரி 26, 1950 அன்று 284 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பின்னர் அது நடைமுறைக்கு வந்தது. 1930-ம் ஆண்டு இதே நாளில் காங்கிரஸின் முழு சுயராஜ்ஜியம் தீர்மானம் (Poorna Swaraj resolution) அறிவிக்கப்பட்டதால் ஜனவரி 26 தேர்ந்தெடுக்கப்பட்டது. 




Original article:

Share:

தேசிய பால் தினம் : வெண்மைப் புரட்சியில் முன்னோடியாக வர்கீஸ் குரியனின் பங்கை நினைவு கூர்தல்

 டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 2014 முதல் ஆண்டுதோறும் நவம்பர் 26-ம் தேதி தேசிய பால் தினம் (National Milk Day) அனுசரிக்கப்படுகிறது.  


பால் உற்பத்தித் துறையில் இந்தியாவை தன்னம்பிக்கை அடையச் செய்த பெருமைக்குரியவரான 'இந்தியாவின் பால்காரர்' (The Milkman of India) டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்த நாளான நவம்பர் 26 தேசிய பால் தினமாகக் (National Milk Day) கொண்டாடப்படுகிறது. 


இன்று, இந்தியா உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நாடாக உள்ளது. இது, உலகளாவிய பால் விநியோகத்தில் 25% பங்களிக்கிறது.


அந்நாள் இந்தியாவை உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக மாற்றிய வெண்மைப் புரட்சியின் தொலைநோக்குத் தந்தையான டாக்டர் வர்கீஸ் குரியனை கௌரவிக்கிறது. அவரது மரபு மற்றும் தேசத்தை வளர்ப்பதில் பால்வளத்தின் ஆற்றலையும் கொண்டாடுவோம்.


யார் இந்த டாக்டர் வர்கீஸ் குரியன்? 


நவம்பர் 26, 1921 அன்று கேரளாவின் கோழிக்கோட்டில் பிறந்த வர்கீஸ் குரியன், 1940-ம் ஆண்டில் இயற்பியலிலும் (physics), 1943-ம் ஆண்டில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். மேலும், இவர் இராணுவத்தில் பொறியாளராக பணியில் சேர திட்டமிட்டார்.


இருப்பினும், அவர் பால்பண்ணை பொறியியல் (dairy engineering) படிப்பதற்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து உதவித்தொகை பெற்று, பெங்களூருவில் உள்ள இம்பீரியல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அனிமல் ஹஸ்பண்டரியில் (Imperial Institute of Animal Husbandry) பயிற்சி பெற்றார். அது, இப்போது தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனமாக உள்ளது. 1948-ம் ஆண்டில், மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் (Michigan State University) பால்பண்ணை பொறியியலில் இளநிலை படிப்புடன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முதுகலைப் பட்டமும் பெற்றார்.


மே 1949–ம் ஆண்டில், வர்கீஸ் குரியன் குஜராத்தின் ஆனந்த் என்ற இடத்தில் உள்ள ஒரு பரிசோதனை அரசாங்க பாலாடை நிறுவனத்தில் தனது அரசாங்கத்தால் பணிக்கப்பட்ட வேலையைத் தொடங்கினார். பத்திரப்பதிவு காலம் முடிவடைந்த பிறகு அவர் வெளியேறுவார் என்று நம்பினர். அவர் அங்கு இருந்த காலத்தில், கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்த திரிபுவன்தாஸ் படேலுடன் நட்பு கொண்டார். பின்னர், 1945-46 வரை இப்பகுதியில் உள்ள பால் பண்ணையாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு திரிபுவன்தாஸ் பட்டேல் தலைமை தாங்கினார். மேலும், பால் சேகரிப்பில் ஏகபோக உரிமை கொண்டிருந்த பால்சன் நிறுவனத்தால் சுரண்டப்படுவதை எதிர்த்துப் போராடுவதே அவரது முக்கிய குறிக்கோளாக இருந்தது.


படேலின் வேண்டுகோளின்படி, கூட்டுறவுச் சங்கத்தின் செயல்முறைகளைக் கவனிக்க வர்கீஸ் குரியன் ஒரு பொறியாளராக பொறுப்பேற்றார். காலப்போக்கில், அவர் தொழிற்சங்கம் மற்றும் விவசாயிகளின் அன்றாட நடவடிக்கைகளில் தீவிர ஆர்வம் காட்டினார். இறுதியில், அவர் சங்கத்தின் பொது மேலாளராக (general manager) ஆனார். 


வர்கீஸ் குரியனின் தலைமையின் கீழ், கூட்டுறவு அதன் திறனை விரிவுபடுத்தியது மற்றும் பால் பொருட்களை பதப்படுத்தவும் சேமிக்கவும் உபகரணங்களை வாங்கியது. இதன் விளைவாக, முன்பு பற்றாக்குறையாக இருந்த பகுதிகளுக்கு பால் விநியோகிக்க முடிந்தது. இந்தப் பகுதிகள் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவை நம்பியிருந்தன. மிக முக்கியமாக, உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே ஒரு நேரடி இணைப்பை உருவாக்கியது.


கூட்டுறவு ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட் (Anand Milk Union Limited) அல்லது அமுல் (Amul) என மறுபெயரிடப்பட்டது. அமுல் பிராண்டின் கீழ் தனது தயாரிப்புகளை சந்தைப்படுத்தத் தொடங்கியது. பால் கூட்டுறவு சங்கங்களின் மாதிரி மிகவும் வெற்றிகரமாக இருந்தது. விரைவில், மற்றவர்கள் அதே அணுகுமுறையை பின்பற்ற ஆரம்பித்தனர். வர்கீஸ் குரியன், திரிபுவன்தாஸ் படேல் மற்றும் தாரா குரோடி ஆகியோருக்கு 1963-ம் ஆண்டில் சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது (Ramon Magsaysay Award) வழங்கப்பட்டது. தாரா குரோடி பம்பாயில் ஆரே மில்க் காலனியை (Aarey Milk Colony) நிறுவினார். இது ஆனந்த் நிறுவனத்திடமிருந்து பாலை பதப்படுத்துதல் (pasteurization) செய்து விநியோகிக்கும் வசதிகளை வழங்கியது.


அமுல் முதல் Operation Flood வரை (Amul to Operation Flood) 


பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி 1964-ம் ஆண்டு அமுலின் கால்நடை தீவன ஆலையை திறப்பதற்காக ஆனந்த் என்ற இடத்திற்குச் சென்றார். அவரது வருகை அமுல் மாதிரியை ஊக்குவிக்க உதவியது. ஒரு வருடம் கழித்து, வர்கீஸ் குரியன் ஆனந்த் என்ற இடத்தில் அமைந்துள்ள தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் (National Dairy Development Board(NDDB)) தொடக்கத் தலைவராக ஆனார்.


தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் (National Dairy Development Board(NDDB)) தலைவராக, வர்கீஸ் குரியன் ஜனவரி 1970-ம் ஆண்டில் Operation Flood திட்டம் தொடங்குவதை மேற்பார்வையிட்டார். பால் உற்பத்தியை அதிகரித்தல், விலை ஏற்ற இறக்கங்களை குறைத்தல் மற்றும் கூட்டுறவு இயக்கத்தை விரிவுபடுத்துவதன் மூலம் பாற்பண்ணையாளர்களை வலுவூட்டுதல் ஆகியவற்றை இந்த நிகழ்ச்சித்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் மூன்று கட்டங்களாக இதை அடைந்தது மற்றும் இந்தியாவின் பால் உற்பத்தி 1968-69ஆம் ஆண்டில் சுமார் 21.2 மில்லியன் டன்களில் இருந்து 1991-92ஆம் ஆண்டில் 55.6 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்தது. 


1973-ம் ஆண்டில் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் (Milk Marketing Federation Limited) நிறுவப்படுவதையும் குரியன் மேற்பார்வையிட்டார். இந்த கூட்டமைப்பு அமுல் பிராண்டிற்கு சொந்தமானது. மேலும், 1979-ம் ஆண்டில் ஆனந்த் கிராமப்புற மேலாண்மை நிறுவனத்தை (Institute of Rural Management Anand (IRMA)) நிறுவினார். 




Original article:

Share:

அடல் புத்தாக்கத் திட்டம் 2.0 (Atal Innovation Mission(AIM))

 முக்கிய அம்சங்கள் :


1. அடல் புத்தாக்கத் திட்டம் (AIM) 2.0 என்பது வளர்ந்த இந்தியா (Viksit Bharat) நோக்கிய ஒரு படியாகும். இது, இந்தியாவின் புதுமையான கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு சூழலை விரிவுபடுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் தீவிரப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. அடல் புத்தாக்கத் திட்டத்தின் (AIM) தொடர்ச்சியானது சிறந்த வேலைகள், புதுமையான தயாரிப்புகள் மற்றும் துறைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சேவைகளை உருவாக்குவதற்கு நேரடியாக பங்களிக்கும்.


2. அடல் பழுதுநீக்க ஆய்வகம் (Atal Tinkering Labs (ATL)) மற்றும் அடல் புத்தாக்க வளர் மையங்கள் (Atal Incubation Centres (AIC)) போன்ற அடல் புத்தாக்கத் திட்டம்-1.0-ன் சாதனைகளை அடல் புத்தாக்கத் திட்டம்-2.0 உருவாக்குகிறது. இந்த திட்டத்தின் உத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. அடல் புத்தாக்கத் திட்டம்-1.0 இந்தியாவின் வளர்ந்து வரும் கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிக்க புதிய கண்டுபிடிப்பு உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. மாறாக, அடல் புத்தாக்கத் திட்டம்-2.0 சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்ய முன்னோடியான முயற்சிகளை (pilot initiatives) அறிமுகப்படுத்துகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், தொழில்துறை, கல்வியாளர்கள் மற்றும் சமூகத்துடன் ஒத்துழைப்பதன் மூலம் வெற்றிகரமான திட்டங்களை அளவிடுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


3. அடல் புத்தாக்கத் திட்டம்-2.0 மூன்று வழிகளில் இந்தியாவின் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு சூழலை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது: அதில்,

(அ) ​​அதிக கண்டுபிடிப்பாளர்களையும், தொழில்முனைவோரையும் கொண்டு வருவதன் மூலம் உள்ளீட்டை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

(ஆ) அதிக புத்தொழில்கள் வெற்றிபெற உதவுவதன் மூலம் வெற்றி விகிதம் அல்லது 'செயல்திறனை' (throughput) மேம்படுத்த முயல்கிறது.

(இ) சிறந்த வேலைகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவதன் மூலம் 'வெளியீட்டின்' (output) தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.


அடல் புத்தாக்கத் திட்டம் (Atal Innovation Mission (AIM)) பற்றிய தகவல்கள்


அடல் புத்தாக்கத் திட்டம் என்பது இந்திய அரசின் முதன்மையான முயற்சியாகும். இது நாடு முழுவதும் புதுமை மற்றும் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை உருவாக்கி மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அடல் புத்தாக்கத் திட்டத்தின் (AIM) குறிக்கோள், பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் புதுமைகளை ஊக்குவிக்கும் புதிய திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதாகும். இது பல்வேறு பங்குதாரர்களுக்கு தளங்கள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகளை வழங்குகிறது. நாட்டில் புதுமை மற்றும் தொழில் முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பை மேற்பார்வையிடும் கட்டமைப்பை உருவாக்க அடல் புத்தாக்கத் திட்டம் (AIM) செயல்படுகிறது.




Original article:

Share:

சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலம் (Eco-sensitive Zone) என்றால் என்ன?

 • நிலையான வளர்ச்சி பற்றிய விவாதங்களில் மேற்குத் தொடர்ச்சி மலை ஒரு முக்கிய தலைப்பாகும். காட்கில் அறிக்கை மற்றும் கஸ்தூரிரங்கன் அறிக்கை ஆகியவை இப்பகுதியில் பாதுகாப்பு உத்திகளை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளன.


• பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கு சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்கள் (Eco-Sensitive Zones (ESZs)) முக்கியம். ஆனால், அவை பெரும்பாலும் உள்ளூர் சமூகங்களுடன் மோதல்களை சந்தித்து வருகின்றன. சமீபத்திய உதாரணமாக கேரளாவின் முன்மொழிவு, இந்தச் சிக்கல்களை முன்னிலைப்படுத்துகிறது.


முக்கிய அம்சங்கள்:


• வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30 அன்று ஏற்பட்ட நிலச்சரிவு 400க்கும் மேற்பட்ட மக்களின் உயிரைப் பறித்தது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள ஆபத்தான கிராமங்களைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சூரல்மலை, முண்டக்காய், வெள்ளரிமலை போன்ற கிராமங்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டன. மே மாதம், சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்கள் குறித்த மாநிலத்தின் வரைவு முன்மொழிவு, வயநாடு, வெள்ளரிமலை உட்பட 12 கிராமங்களை உள்ளடக்கியது.


• நவம்பர் 2, 2024 அன்று, கேரள அரசு திருத்தப்பட்ட முன்மொழிவை சமர்ப்பித்தது. 12 மாவட்டங்களில் 29 தாலுகாக்கள் முழுவதும் 98 கிராமங்களில் 8,590.69 சதுர கி.மீ நிலத்தை சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்களாக அறிவிக்கக் கோரியது. இந்த முன்மொழிவு உள்ளாட்சித் துறையின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டது. ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் இந்த தகவலை  மக்களவையில் எழுத்துப்பூர்வ அறிக்கையில் பகிர்ந்துள்ளார்.


• ஜூலை மாதம், மேற்கு தொடர்ச்சி மலை தொடர்பான ஆறாவது வரைவு அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பு 56,825 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்களாக அறிவித்தது. இந்தப் பகுதிகள் குஜராத், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ளன.


• சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்கள் என்று குறிப்பிடப்பட்ட பகுதிகளில் காணப்பட்ட கிராமங்கள் சுரங்கம், குவாரிகள், மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் புதிய அனல் மின் நிலையங்கள் கட்டுவதற்கு முழு தடை விதிக்கப்படும். விண்வெளி விஞ்ஞானி கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான உயர்மட்ட பணிக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த வரைவு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


• ஆறாவது வரைவு அறிவிப்பை வெளியிட்ட பிறகு, ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஆட்சேபனைகள் அல்லது பரிந்துரைகளை சமர்ப்பிக்க 60 நாட்கள் அவகாசம் அளித்தது. பல்வேறு மாநில அரசுகளின் பரிந்துரைகளை நிபுணர் குழு இப்போது ஆய்வு செய்து வருகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


• 2013ஆம் ஆண்டில், மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் 9,993.7 சதுர கிமீ பரப்பளவை சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்களாக குறிக்க கேரளா முன்மொழிந்தது. 2019ஆம் ஆண்டில், கேரளா 8,656 சதுர கிமீ பரப்பளவைக் குறைக்க பரிந்துரைத்தது. இருப்பினும், சமீபத்திய வரைவு அறிவிப்பில் 9,993.7 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் நுண்ணுணர்வுகொண்டதாக உள்ளது.


• தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள நிலம் சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்களாக அறிவிக்கப்பட வேண்டும்  என்று  ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் தேசிய வனவிலங்கு செயல் திட்டத்தில் (National Wildlife Action Plan)  2002-2016 குறிப்பிடப்பட்டுள்ளது.


• 10-கிமீ விதி என்பது பொதுவான வழிகாட்டுதல், அதன் பயன்பாடு மாறுபடலாம். 10 கி.மீ. தாண்டி உள்ள பகுதிகள், நுண்ணுணர்வு வழித்தடங்கள் (sensitive corridors) போன்ற சூழலியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால், அவை சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்களாக அறிவிக்கப்படலாம்.


• பிப்ரவரி 9, 2011ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்கள் "அதிர்ச்சித் தாங்கிகளாக" செயல்படுகின்றன என்று விளக்குகிறது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகிலுள்ள பலவீனமான சுற்றுச்சூழல் (fragile ecosystems) அமைப்புகளில் மனித நடவடிக்கைகளின் எதிர்மறையான தாக்கத்தை குறைப்பதே அவர்களின் நோக்கம்.


• இந்த பகுதிகள் ஒரு மாற்று மண்டலமாக (transition zone) செயல்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு அதிக பாதுகாப்பையும், தொலைவில் உள்ள பகுதிகளுக்கு குறைந்த பாதுகாப்பையும் வழங்குகிறது.


• சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்களுக்கு (Eco-Sensitive Zones (ESZs)) அருகில் வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் தலையிடக்கூடாது என்றும் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. மாறாக, பாதுகாக்கப்பட்ட பகுதிகளைப் பாதுகாப்பதும், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதுமே அவர்களின் நோக்கமாகும்.




Original article:

Share:

சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு. -ரங்கராஜன் ஆர்.

 அசல் முகவுரை என்றால் என்ன, அது எவ்வாறு உருவாகியுள்ளது? இதற்கு முன்பு நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்னவாக இருந்தது. தற்போது, அது எவ்வாறு மாறியுள்ளது? தற்போதைய வழக்கு எதைப் பற்றியது? அது சமூகத்தில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்? 


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பகுதி நேர அமர்வு, நமது அரசியலமைப்பின் முகவுரையில் “சமத்துவம்” மற்றும் 'மதச்சார்பற்ற' என்ற சொற்களைச் சேர்ப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது. 


முகவுரையின் வரலாறு என்ன? 


இந்தியாவின் அரசியலமைப்பு அசல் முகவுரை நவம்பர் 26, 1949-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது இந்தியாவை ஒரு இறையாண்மை, ஜனநாயக மற்றும் குடியரசு என்று விவரித்தது. அரசியல் நிர்ணய சபை "சமத்துவம்" (socialist) என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தது. அரசியலமைப்பின் முகப்புரையில் பொருளாதார இலட்சியத்தை சேர்ப்பது பொருத்தமானதாக இருக்காது என்று அவர்கள் நம்பினர். மாறாக, மக்கள் தங்கள் நேரம் மற்றும் சூழ்நிலையின் அடிப்படையில் தங்களுக்கு எது சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் கருதினர்.


இந்தியாவின் மதச்சார்பின்மை என்பது மேற்கத்திய மதச்சார்பின்மையிலிருந்து வேறுபட்டது. மேற்கத்திய மதச்சார்பின்மையில், அரசும் மதமும் முற்றிலும் தனித்தனியாக வைக்கப்படுகின்றன, மதம் சார்ந்த விஷயங்களில் அரசாங்கம் தலையிடுவதில்லை. இந்தியாவில், பொருளாதாரம், நிதி, அரசியல் மற்றும் மதச்சார்பற்ற நடவடிக்கைகள் போன்ற மதத்தின் சில அம்சங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. சமூக நலனுக்காகவும், மத நடைமுறைகளில் சீர்திருத்தத்திற்காகவும் அரசு செயல்பட முடியும். அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமையை வழங்குகிறது. மாநில விவகாரங்களில் மதத்தின் அடிப்படையில் எந்த பாகுபாடும் இல்லை என்பதையும் இது உறுதி செய்கிறது. இந்த விதிகள் அரசியலமைப்பின் மதச்சார்பற்ற மதிப்புகளை பிரதிபலிக்கின்றன. இந்த காரணத்திற்காக, "மதச்சார்பற்ற" (secular) என்ற வார்த்தையை முன்னுரையில் சேர்க்க அரசியலமைப்பு சபை ஒப்புக் கொள்ளவில்லை.


1960ஆம் ஆண்டு பெருபாரி வழக்கில், உச்சநீதிமன்றம் முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல என்றும் எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை என்றும் கூறியது. ஆனால், 1973ஆம் ஆண்டு கேசவானந்த பாரதி வழக்கில், நீதிமன்றம் தனது பார்வையை மாற்றியது. முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும் மற்றும் அது வெளிப்படுத்தும் பார்வையின் அடிப்படையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. அரசியலமைப்பின் மற்ற பகுதிகளைப் போலவே, முகவுரையை நாடாளுமன்றம் மாற்றலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1976இல், 42வது அரசியலமைப்புத் திருத்தம் முகவுரையில் "சமத்துவம்", "மதச்சார்பற்ற" மற்றும் "ஒருமைப்பாடு" ஆகிய வார்த்தைகளைச் சேர்த்தது. 1978ல் 44வது திருத்தம் உட்பட பிற்கால அரசியலமைப்புத் திருத்தங்கள், "சமத்துவம்" மற்றும் "மதச்சார்பற்ற" வார்த்தைகளை ஆதரித்து வைத்திருக்கின்றன என்று சுவாமி நம்பினார். அவசர நிலைக்குப் பிறகு ஜனதா கட்சி ஆட்சியின் போது இந்தத் திருத்தம் செய்யப்பட்டது. இருப்பினும், இந்த வார்த்தைகள் அசல் முன்னுரைக்கு கீழே ஒரு தனி பத்தியில் வைக்கப்பட வேண்டும் என்று அவர் கருதினார். 


தற்போதைய வழக்கு என்ன? 


இந்த வழக்கை மாநிலங்களவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சுப்பிரமணியன் சுவாமி, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உள்ளிட்டோர் தாக்கல் செய்தனர். முகவுரையில் சமத்துவம் மற்றும் மதச்சார்பற்ற என்ற சொற்களைச் சேர்ப்பதை உபாத்யாயாவும் மற்றவர்களும் எதிர்த்தனர். நெருக்கடி நிலையின் போது இவை சேர்க்கப்பட்டவை என்றும், குறிப்பிட்ட சித்தாந்தங்களைப் பின்பற்றுமாறு மக்களைக் கட்டாயப்படுத்தியதாகவும் அவர்கள் வாதிட்டனர். அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேதி முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதால், கூடுதல் சொற்களை நாடாளுமன்றம் பின்னர் சேர்க்க முடியாது என்று அவர்கள் உணர்ந்தனர். 1978ஆம் ஆண்டில் ஜனதா கட்சி ஆட்சியின்போது அவசரநிலைக்குப் பிறகு 44வது திருத்தம் உட்பட அரசியலமைப்பில் அடுத்தடுத்த திருத்தங்கள் இந்த இரண்டு வார்த்தைகளையும் ஆதரித்து தக்க வைத்துக் கொண்டன என்று சுப்பிரமணியன் சுவாமி கருதினார். இருப்பினும், இந்த வார்த்தைகள் அசல் முகவுரைக்கு கீழே ஒரு தனி பத்தியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று அவர் கருதினார். 




நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தது? 


தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவை அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் முக்கிய  பகுதிகள் என்று  நீதிமன்றம் கூறியது. அரசியலமைப்பு ஒரு "வாழும் ஆவணம்" மற்றும் பாராளுமன்றத்தால் மாற்றப்படலாம் என்றும் நீதிமன்றம் கூறியது. அரசியலமைப்பை திருத்துவதற்கான அதிகாரம் முகவுரைக்கும் பொருந்தும் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேதி இந்த அதிகாரத்தை கட்டுப்படுத்தாது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்தியாவில், "சமத்துவம்" என்பது அனைவருக்கும் சம வாய்ப்புகளை உறுதி செய்யும் மற்றும் தனியார் துறையை வளர அனுமதிக்கும் ஒரு பொதுநல அரசு என்று நீதிமன்றம் விளக்கியது. அதேபோன்று இந்தியாவும் "மதச்சார்பின்மை" பற்றிய தனது புரிதலை வளர்த்துக் கொண்டுள்ளது. அரசு எந்த மதத்தையும் ஆதரிப்பதில்லை அல்லது அவர்களின் நம்பிக்கையைப் பின்பற்றுவதற்காக மக்களை தண்டிக்கவில்லை. சமத்துவ உரிமையின் ஒரு பகுதியாக மதச்சார்பின்மை பார்க்கப்படுகிறது. 


அது ஏன் முக்கியமானது? 


சுதந்திரத்திற்குப் பிறகு, ஆரம்ப ஆண்டுகள் “ஜனநாயக சமத்துவத்தின்” மீது கவனம் செலுத்தியது. இது மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் மற்றும் மாநிலம் பல தொழில்களை அமைப்பதன் மூலம் குறிக்கப்பட்டது. 1960கள் மற்றும் 70களில், அரசாங்கம் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை தேசியமயமாக்கியது. வரி விகிதங்களை அதிகரித்தது மற்றும் பல்வேறு விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. பொருளாதாரம் ஒரு கலப்பு பொருளாதாரம் (mixed economy) என்று விவரிக்கப்பட்டது. இதில் பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இரண்டும் இணைந்து செயல்பட்டன. 


இருப்பினும், இது மரபு வழி சமத்துவத்தின் (classical socialism) அம்சங்களை கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டிருந்தது. 1991-ல் தொடங்கி, பொருளாதாரம் இந்த சமத்துவ மாதிரியிலிருந்து மேலும் சந்தை சார்ந்த  (market-oriented model) அணுகுமுறைக்கு மாறியது. கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியானது அதிக மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளது. நீதிமன்றம் சுட்டிக்காட்டியபடி, இந்தியாவில் சமத்துவம் இன்னும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)), மானிய உணவு தானியங்கள் மற்றும் பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கான நேரடி பயன் பரிமாற்றங்கள்  போன்ற திட்டங்கள் மூலம் ஏழைகளுக்கு உதவுகிறது. ஏழைகளின் நலனுக்கான அரசின் நடவடிக்கைகளை சமத்துவம் தொடர்ந்து வழிநடத்துவது முக்கியம். அதே நேரத்தில், தனியார் நிறுவனம் வளர்ச்சியடைய வேண்டும். இது அதிக வேலை வாய்ப்புகள் மற்றும் வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மதச்சார்பின்மையின் விழுமியங்களை நிலைநிறுத்துவதன் மூலம் “வேற்றுமையில் ஒற்றுமை” (unity in diversity) என்ற உணர்வு சமமாகப் பாதுகாக்க வேண்டும்.




Original article:

Share: