சிந்து நதி அமைப்பு மற்றும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் பற்றிய விவாதம். -அபினவ் ராய்

 சிந்து மற்றும் அதன் துணை நதிகளின் நீரின் விநியோகத்தை நிர்ணயிப்பதற்காக 1960 செப்டம்பர் 19 அன்று சிந்து நதிநீர் ஒப்பந்தம் (Indus Water Treaty) இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளால் கையெழுத்தானது. ஆனால், நதி அமைப்பு என்றால் என்ன?, எந்த நதிகள் சிந்து நதி அமைப்பை உருவாக்குகின்றன?


64 ஆண்டுகள் பழமையான சிந்து நதிநீர் ஒப்பந்தம் (Indus Water Treaty) மீண்டும் செய்திகளில் வந்துள்ளது. ஏனெனில், இந்தியா இந்த ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது. மறுபுறம், ஜம்மு & காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் இரண்டு நீர்மின் திட்டங்களின் (hydroelectric projects (HEP)) வடிவமைப்பு அம்சங்கள் குறித்து பாகிஸ்தான் ஆட்சேபனைகளை எழுப்புகிறது. இந்த திட்டங்கள் ஜீலத்தின் துணை நதியான கிஷெங்கங்கா நதியில் அமைந்துள்ள கிஷெங்கங்கா நீர்மின் திட்டங்கள் (HEP) மற்றும் செனாப் நதியில் அமைந்துள்ள Ratle நீர்மின் திட்டங்கள் (HEP) ஆகும்.


சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைப் புரிந்து கொள்ள, சிந்து நதி அமைப்பைப் புரிந்துகொள்வது முக்கியம். இதில், அதன் தோற்றம், பாதை, துணை நதிகள் மற்றும் பல அடங்கும். முதலில், தற்போது இருநாடுகளின் ஒப்பந்தத்தின் சுருக்கமான கண்ணோட்டத்தை பார்ப்போம்.


சிந்து நதிநீர் ஒப்பந்தம் (Indus Water Treaty)


சிந்து மற்றும் அதன் துணை நதிகளின் நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்தியாவும் பாகிஸ்தானும் செப்டம்பர் 19, 1960 அன்று சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் (Indus Water Treaty) கையெழுத்திட்டன. இதில், கராச்சியில் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், அப்போதைய பாகிஸ்தான் அதிபர் அயூப் கானும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தான் கீழ் கரையோர நாடாக மாறியது. இதன் பொருள் சிந்து நதியானது பாகிஸ்தானில் முடிகிறது. இந்தியாவது, மேல் கரையோர நாடாக மாறியது. இதன் பொருள், இந்த நதி இந்தியாவில் உற்பத்தியாகிறது. இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு மூன்று கிழக்கு ஆறுகள் மீது பிரத்யேக உரிமைகளை வழங்கியது. அவை ரவி, சட்லஜ் மற்றும் பியாஸ் போன்றவை ஆகும். இந்த ஆறுகள் சுமார் 33 மில்லியன் ஏக்கர் அடி (MAF) தண்ணீரை வழங்குகின்றன. இது மொத்த சிந்து நதி அமைப்பில் சுமார் 20% ஆகும். சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய மூன்று மேற்கு நதிகளின் மீது பாகிஸ்தானுக்கு கட்டுப்பாடு கிடைத்தது. இந்த ஆறுகள் சுமார் 135 MAF தண்ணீரை வழங்குகின்றன. இது மொத்தத்தில் 80% ஆகும்.


இருப்பினும், குறிப்பிட்ட உள்நாட்டு, நுகர்வு அல்லாத மற்றும் விவசாய நோக்கங்களுக்காக மேற்கில் ஓடும் நதிகளின் நீரை இந்தியா பயன்படுத்தலாம். இதன் தொடர்ச்சியாக வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டிற்கான குறிப்பிட்ட அளவுகோல்களுக்கு உட்பட்டு, நதியின் ரன்-ஆஃப்-தி-ரிவர் (run-of-the-river (RoR)) திட்டங்களின் மூலம் நீர்மின்சாரத்தை உருவாக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது.


இந்த ஒப்பந்தத்தின் பிரிவு IX தகராறு தீர்க்கும் செயல்முறையை கோடிட்டுக் காட்டுகிறது. இது மூன்று அடுக்கு அமைப்பாக உள்ளது. முதலாவதாக, இரு நாடுகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய நிரந்தர சிந்து ஆணையம் (Permanent Indus Commission (PIC)) மூலம் சர்ச்சைகள் தீர்க்கப்படுகின்றன. மேலும் இதற்கு பிரச்சனைத் தீர்க்கப்படாவிட்டால், இந்த விஷயம் உலக வங்கியால் நியமிக்கப்பட்ட நடுநிலை நிபுணரிடம் பரிந்துரைக்கப்படும். கடைசி முயற்சியாக, தகராறுகளை நிரந்தர நடுவர் நீதிமன்றத்திற்கு (Permanent Court of Arbitration) எடுத்துச் செல்லலாம்.


சிந்து நதி அமைப்பு (Indus River system)


ஒரு நதியும் அதன் துணை நதிகளும் சேர்ந்து ஒரு நதி அமைப்பை உருவாக்குகின்றன. அதேபோல், சிந்து நதி அமைப்பு ஆறு ஆறுகளைக் கொண்டுள்ளது. அவை சிந்து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் ஆகியவை அடங்கும். சிந்து மற்றும் சட்லஜ் ஆகியவை முன்னோடி ஆறுகள் ஆகும். அதாவது, அவை இமயமலை உருவாகுவதற்கு முன்பே இருந்துள்ளன. இந்த ஆறுகள் திபெத்தில் உருவாகி ஆழமான பள்ளத்தாக்குகளை குறுக்கே வெட்டுகின்றன. மற்ற நான்கு ஆறுகளான ஜீலம், செனாப், ரவி மற்றும் பியாஸ் போன்றவை இந்தியாவில் உருவாகின்றன. 


சிந்து நதி நான்கு நாடுகளை உள்ளடக்கியது. அவை சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்றவை ஆகும். இந்தியாவில், சிந்து நதி படுகை லடாக் மற்றும் ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள், சண்டிகர் மற்றும் இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் வழியாக பரவியுள்ளது. படுகையின் மொத்த வடிகால் பரப்பளவு சுமார் 3,21,289 சதுர கி.மீ ஆகும். இது இந்தியாவின் மொத்த புவியியல் பரப்பளவில் கிட்டத்தட்ட 9.8% ஆகும்.


சிந்து நதி திபெத்தில் உள்ள கைலாஷ் என்ற டிரான்ஸ்-இமயமலைத் தொடரில், மானசரோவர் ஏரிக்கு அருகில் தொடங்குகிறது. இது 'சிங்கி காம்பன்' (Singi Khamban) அல்லது அங்கு சிங்கத்தின் வாய் என்று அழைக்கப்படுகிறது. இந்த நதி மேற்கு நோக்கி பாய்ந்து லடாக்கில் உள்ள டெம்சோக்கில் (Demchok) இந்தியாவுக்குள் நுழைகிறது. இந்தியாவில், சிந்து நதி சுமார் 1,114 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இது லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லடாக் மற்றும் காரகோரம் மலைத்தொடர்களுக்கு இடையே பாய்கிறது.


சிந்து நதியின் முக்கிய வலது கரை துணை நதிகள் ஷியோக், ஷிகார் மற்றும் கில்கிட் ஆகும். ஷியோக் நதி ரிமோ பனிப்பாறையிலிருந்து உருவாகிறது. சிந்து நதியின் இடது கரை துணை நதிகள் ஜஸ்கர் மற்றும் ஹன்லே ஆகும். இந்த நதி மொத்தம் 2,880 கிலோமீட்டர் தூரம் பாய்கிறது. இது இறுதியில் பாகிஸ்தானின் கராச்சிக்கு அருகில் அரேபிய கடலில் கலக்கிறது. சிந்து நதி டால்பின் ஒரு அழிந்து வரும் இனமாகும். சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (International Union for Conservation of Nature (IUCN)) சிவப்பு பட்டியலின் படி, இந்த இனம் முக்கியமாக சிந்து நதியில் காணப்படுகிறது.


ஜீலம் நதி 252 கி.மீ நீளம் கொண்டது. இது பிர் பாஞ்சல் எல்லைக்கு அருகிலுள்ள வெரினாக்கில் உள்ள ஒரு நீரூற்றில் இருந்து உருவாகிறது. இந்த நதி பாகிஸ்தானுக்குள் நுழைவதற்கு முன்பு ஸ்ரீநகரில் உள்ள வுலர் ஏரி வழியாக பாய்கிறது. பாகிஸ்தானில், இது ஜாங் என்ற இடத்திற்கு அருகில் செனாப் நதியில் இணைகிறது. செனாப் நதி சிந்து நதியின் மிகப்பெரிய துணை நதியாகும். இந்தியாவில், இது 1,180 கி.மீ நீளம் கொண்டது. இது இமாச்சலப் பிரதேசத்தின் கீலாங்கில் உள்ள தண்டியில் சந்திரா மற்றும் பாகா என்ற இரண்டு நதிகளின் சங்கமத்தால் உருவாகிறது.


கிழக்கு ஆறுகள் 


ரவி நதி 95 கி.மீ நீளம் கொண்டது. இது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ரோஹ்தாங் கணவாய்க்கு (Rohtang Pass) அருகிலுள்ள குலு மலைகளிலிருந்து உருவாகிறது. இது பாகிஸ்தானில் உள்ள சராய் சித்துவில் செனாப் நதி இணைகிறது.


பியாஸ் நதி 354 கி.மீ நீளம் கொண்டது. இது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ரோஹ்தாங் கணவாய்க்கு அருகில் கடல் மட்டத்திலிருந்து 4,000 மீட்டர் உயரத்தில் உள்ள பியாஸ் குண்டிலிருந்து உருவாகிறது. இது குலு பள்ளத்தாக்கு வழியாக பாய்கிறது. இந்த நதி இந்தியாவின் பஞ்சாபில் உள்ள ஹரிகே அருகே சட்லெஜை சந்திக்கிறது. ஹரிகே அணை 1952-ம் ஆண்டில் கட்டப்பட்டது. இது இந்திரா காந்தி கால்வாய் அமைப்புக்கு தண்ணீரைத் திருப்பி விடுகிறது.


சட்லெஜ் நதி 676 கி.மீ நீளம் கொண்டது. இது ஒரு முன்னோடி நதியாகும். அதாவது, அதைச் சுற்றியுள்ள நிலப்பரப்புகளுக்கு முந்தையது. இந்த நதி திபெத்தில் உள்ள மானசரோவர் அருகே கடல் மட்டத்திலிருந்து 4,555 மீட்டர் உயரத்தில் உள்ள ரகஸ் தால் (Rakas Tal) என்ற இடத்திலிருந்து உருவாகிறது. திபெத்தில், இது லாங்சென் கம்பாப் (Langchen Khambab) என்று அழைக்கப்படுகிறது. இந்த நதி ரோபருக்கு அருகில் இந்தியாவுக்குள் நுழைகிறது.


கிழக்கு நதிகளின் நீரைப் பயன்படுத்த, இந்தியா பல அணைகளைக் கட்டியுள்ளது. இவற்றில் ரவி நதியின் மீது ரஞ்சித் சாகர் அணை, சட்லஜின் மீது பக்ரா அணை, பியாஸின் மீது பாங் மற்றும் பண்டோ அணைகள் ஆகியவை அடங்கும். பியாஸ்-சட்லஜ் இணைப்பு (Beas-Sutlej Link), மாதோபூர்-பியாஸ் இணைப்பு (Madhopur-Beas Link) மற்றும் இந்திரா காந்தி கால்வாய் திட்டம் (Indira Gandhi Canal Project) ஆகியவை பிற முக்கியத் திட்டங்களில் அடங்கும். இந்தத் திட்டங்களுடன், கிழக்கு ஆறுகளின் நீரில் கிட்டத்தட்ட 95% இந்தியா பயன்படுத்துகிறது.


இருப்பினும், மேற்கு நதிகள் மீதான இந்தியாவின் சில திட்டங்கள் காலப்போக்கில் பாகிஸ்தானிடமிருந்து ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளன. மேற்கு நதிகள் மீதான இந்தியாவின் முக்கிய திட்டங்களில் சலால் அணை, பாக்லிஹார் நீர்மின் திட்டம், பகால் துல் திட்டம் மற்றும் கிரு திட்டம் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் செனாப் நதியில் அமைந்துள்ளன. துல்புல் திட்டம் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஜீலம் நதியில் அமைந்துள்ளது.


ஜூலை 2022-ம் ஆண்டில், வெள்ள மேலாண்மை மற்றும் சர்வதேச நீர் ஒப்பந்தங்களுக்கான (Flood Management and International Water Treaties) நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. 1960-ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம், அந்தக் காலத்தின் அறிவு மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் அமைந்தது என்று அது குறிப்பிட்டது. இந்த ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசாங்கம் ராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைத்தது. புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம், நீர் கிடைக்கும் தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற இன்றைய சவால்கள் காரணமாக இது அவசியமாகப் பார்க்கப்படுகிறது.


ஆகஸ்ட் 2024-ம் ஆண்டில், ஒப்பந்தத்தின் பிரிவு XII (3)-ன் கீழ் இந்தியா பாகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முயன்றது. மக்கள்தொகை வளர்ச்சி, காலநிலை மாற்றம் மற்றும் பாகிஸ்தானால் சர்ச்சைக்கான வழிமுறைகளை தவறாகப் பயன்படுத்துவது போன்ற தற்போதைய சவால்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.


கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதி அமைப்புகளுடன் ஒப்பிடும்போது சிந்து நதி அமைப்பு மிகப்பெரிய பனிப்பாறைப் பகுதியைக் கொண்டுள்ளது. இது முக்கியமாக திட மழைப்பொழிவு மற்றும் பனிப்பாறை உருகும் நீரை நம்பியுள்ளது. இருப்பினும், காலநிலை மாற்றம் படுகையில் நீர் கிடைக்கும் தன்மை மற்றும் விநியோகத்திற்கு சவால்களை உருவாக்குகிறது. புவி வெப்பமடைதலின் அபாயங்கள் காரணமாக, இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த மாற்றங்களுக்கு பாதிக்கப்படக்கூடியவை.


எனவே, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஒரு இராஜதந்திர வெற்றியாகும். இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்த பதட்டங்களின் காலகட்டங்களிலும்கூட இது தப்பிப்பிழைத்துள்ளது. இருப்பினும், இந்தியாவின் செப்டம்பர் 2024 அறிவிப்பு "சூழ்நிலைகளில், அடிப்படை மற்றும் எதிர்பாராத மாற்றங்களை" எடுத்துக்காட்டுகிறது. இது ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கிறது.




Original article:

Share:

இடைக்கால விடுப்பு (furloughs) வழங்க யாருக்கு அதிகாரம் உள்ளது? இது தொடர்பான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஏன் விசாரிக்கிறது? - சோஹினி கோஷ்

 பொதுவாக, இடைக்கால விடுப்பு வழங்குவதற்கான அதிகாரம் நிர்வாகத்தால் பயன்படுத்தப்படுகிறது. டெல்லியில் ஏன் வேறு விதிகள்? இடைக்கால விடுப்பு  என்றால் என்ன? அது நிபந்தனை பிணையில் விடுவித்தலில் (பரோலில்) இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? 


ஹாஷிம்புரா படுகொலை குற்றவாளிகள், சிறை இடைக்கால விடுப்பு தொடர்பான சிறை விதியை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு நடந்து கொண்டிருக்கும் போது, ​​விடுப்புகளை அங்கீகரிக்கும் அதிகாரத்தை இந்த விதி நீதிமன்றத்திற்கு வழங்குகிறது.


இடைக்கால விடுப்பு வழங்கும் அதிகாரம் பொதுவாக நிர்வாகியிடமே இருக்கும். ஆனால், டெல்லியின் விதி ஏன் வேறுபட்டது? இடைக்கால விடுப்பு என்றால் என்ன? அது நிபந்தனை பிணையில் விடுவித்தலில் (பரோலில்) இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?


பரோலுக்கும் இடைக்கால விடுப்புக்கும் என்ன வித்தியாசம்?


இடைக்கால விடுப்பு மற்றும் நிபந்தனை பிணையில் விடுவித்தல் (பரோல்) இரண்டும் சிறை கையேடுகள் மற்றும் சிறை விதிகளிலிருந்து உருவாகின்றன மற்றும் அவை நிர்வாகத்தின் களத்தில் உள்ளன. இரண்டும் நிபந்தனைக்குட்பட்ட விடுதலைகள், சிறையில் நல்ல நடத்தைக்கு உட்பட்டவை மற்றும் குறிப்பிட்ட குற்றங்களைச் செய்யக்கூடாது.


ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குற்றவாளி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும், தண்டனைக் காலம் தொடர்கிறது. உதாரணமாக, ஒரு நபர் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, 30 நாட்களுக்கு விடுப்பில் விடுவிக்கப்பட்டால், அவர் 9 ஆண்டுகள் 11 மாதங்கள் சிறையில் இருப்பார். மேலும், அவர் இன்னும் தண்டனையை முடித்ததாகக் கருதப்படுவார்.


குற்றவாளி பரோலில் விடுவிக்கப்பட்டால், தண்டனை இடைநிறுத்தப்பட்டு, தண்டனையின் அளவு அப்படியே இருக்கும்.


நோய், விதைப்பு மற்றும் பயிர்களை அறுவடை செய்தல் போன்ற சில குறிப்பிட்ட தேவைகளில் கைதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், உச்சநீதி மன்றத்தில் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கும் குறுகிய கால சிறைவாசத்தில் நிபந்தனை பிணையில் விடுவித்தல் (பரோல்) வழங்கப்படுகின்றன.


நீண்டகால சிறைத்தண்டனை மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்தை சிறையில் கழித்த பிறகு பொதுவாக இடைக்கால விடுப்பு வழங்கப்படுகிறது. இது கைதிகள் தனிமையில் இருப்பதைத் தடுப்பது, அவர்கள் குடும்பம் மற்றும் சமூக உறவுகளை ஏற்படுத்த அனுமதிப்பது, நல்ல நடத்தையைப் பேணுவதற்கான உந்துதலின் வழி, சிறையில் ஒழுக்கமாக இருத்தல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்த நிபந்தனை பிணையில் விடுவித்தல் (பரோல்), பிரிவு ஆணையரால் வழங்கப்படுகிறது. மேலும், சிறைச்சாலை துணை ஆய்வாளர் ஜெனரலால் இடைக்கால விடுப்பு வழங்கப்படுகிறது. பரோலுக்கு, ஒரு குறிப்பிட்ட காரணம் தேவைப்படுகிறது. அதேசமயம் சிறைவாசத்தின் ஏகபோகத்தை உடைப்பதற்காகவே இடைக்கால விடுப்பு மற்றும் நிபந்தனை பிணையில் விடுவித்தல் (பரோல்) பல முறை வழங்கப்படலாம். அதேசமயம் இடைக்கால விடுப்பு விஷயத்தில் வரம்பு உள்ளது. எந்தவொரு குறிப்பிட்ட காரணத்திற்காகவும் இடைக்கால விடுப்பு வழங்கப்படாததால், சமூகத்தின் நலன் கருதி அது மறுக்கப்படலாம். விதிகளின் 21வது அத்தியாயம் இடைக்கால விடுப்பு  மற்றும் பரோலைப் பற்றியது. விதிகளின் விதி 1224-ன் குறிப்பு 2, குற்றவாளியின் மேல்முறையீடு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால் அல்லது உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் முடிவடையவில்லை என்றால், நிர்வாகத்தால் "இடைக்கால விடுப்பு வழங்கப்படாது" மேலும் நீதிமன்றத்திடம் தகுந்த வழிகாட்டுதல்களைப் பெற குற்றவாளிக்கு திறந்திருக்கும் என்று கூறுகிறது.


இந்த விதி 1224 படி, 2022 முதல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுக்களில் முறையீடு செய்யப்படுகிறது.


ஜனவரி 22 அன்று, டெல்லி சிறை நிர்வாகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில், 2010ஆம் ஆண்டு நிபந்தனை பிணையில் விடுவித்தல் (பரோல்)/இடைக்கால விடுப்பு  வழிகாட்டுதல்களின் அடிப்படையில் "டெல்லி NCT அரசாங்கத்தால் வேண்டுமென்றே" இந்தக் குறிப்பு சேர்க்கப்பட்டதாகக் கூறியது. இந்த வழிகாட்டுதல்கள் பிப்ரவரி 17, 2010 அன்று ஒரு உத்தரவில் அப்போதைய துணைத் தலைவர் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டன. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், குறிப்பில் உள்ள "உயர் நீதிமன்றம்" என்ற சொல் டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் இரண்டையும் உள்ளடக்கிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தைக் குறிக்கிறது என்று ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளார். ஒரு குற்றவாளியின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால், உச்சநீதிமன்றம் மட்டுமே இடைக்கால விடுப்பு வழங்கப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்ய முடியும்.


உச்சநீதிமன்றத்தின் தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு நிலுவையில் இருக்கும்போது, ​​உயர்நீதிமன்றத்தில் இடைக்கால விடுப்பு கோரும் விண்ணப்பம் பராமரிக்கப்படுமா அல்லது ஏதேனும் நிவாரணத்திற்காக குற்றவாளி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டுமா என்பதை டெல்லி உயர்நீதிமன்றத்தின் அமர்வு இப்போது ஆய்வு செய்து வருகிறது. இந்த சிறை விதியின் அரசியலமைப்பு செல்லுபடியை இந்த அமர்வு சோதித்து வருகிறது.


இந்திய அரசியலமைப்பின் 14 (சமத்துவத்திற்கான உரிமை) மற்றும் 21 (உயிர் மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை) ஆகியவற்றை மீறுகிறதா என்பதை நீதிமன்றம் சோதிக்கும்.


இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் இருப்பதால், குற்றவாளி நல்ல நடத்தையைப் பெற்றிருந்தாலும், சீர்திருத்த அணுகுமுறையின் கோட்பாட்டிற்கு முரணாக நடக்குமா என்பது குறித்த விதியின் அரசியலமைப்புச் செல்லுபடியை நீதிமன்றம் சோதிக்கும்.


விடுப்பு விதிகள் நிபந்தனை பிணையில் விடுவித்தல் (பரோல்) தண்டனையை நிறுத்த முடியாது என்பதால், நிபந்தனை பிணையில் விடுவித்தல் (பரோல்) விதிகளை நீதிமன்றம் ஆராயும். இந்த பிரச்சினை இந்திய கடற்படை தளபதியான கே.எம். நானாவதியின் வழக்கு வரை செல்கிறது. 1959ஆம் ஆண்டில், அவர் தனது மனைவியின் காதலனைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். ஒரு நடுவர் மன்றத்தால் குற்றவாளி அல்ல என்று கண்டறியப்பட்ட பின்னர், மும்பை உயர் நீதிமன்றம் பின்னர் மறு விசாரணையில் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு முன்பு, ஆளுநர் விஜயலட்சுமி பண்டிட், இந்திய அரசியலமைப்பின் 161-வது பிரிவின் கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரது தண்டனையை நிறுத்தி வைத்தார்.


1960ஆம் ஆண்டு ஒரு தீர்ப்பில், உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் கொண்ட அமர்வு, வழக்கு உச்சநீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படும்போது ஆளுநர் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. இது மேல்முறையீடுகள் மீது முடிவெடுக்கும் நீதிமன்றத்தின் அதிகாரத்தில் தலையிடும் என்று அவர்கள் கூறினர்.


ஆம். வரதட்சணைக் கொலைக் குற்றவாளியின் மேல்முறையீடு குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த வழக்கறிஞர் கௌரவ் அகர்வால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், "சில மாநிலங்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போது, ​​குற்றவாளிக்கு நிபந்தனை பிணையில் விடுவித்தல் (பரோல்) அல்லது இடைக்கால விடுப்பு வழங்குவதில்லை" என்று குறிப்பிட்டார்.


"குற்றவாளி உயர் நீதிமன்றத்திடம் முடிவைக் கேட்கலாம் என்பதால் நிபந்தனை பிணையில் விடுவித்தலும் (பரோல்) இடைக்கால விடுப்பும் மறுக்கப்படுகிறது" என்று NALSA கூறியது.


நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய நீதிமன்றத்தில், நிபந்தனை பிணையில் விடுவித்தல் (பரோல்) மற்றும் இடைக்கால விடுப்பு என்பது தண்டனையை நிறுத்தி வைப்பது அல்லது பிணை வழங்குவதிலிருந்து வேறுபட்டது என்று அகர்வால் கூறினார்.  உயர்நீதிமன்றம் பிணை வழங்கவோ அல்லது தண்டனையை நிறுத்தி வைப்பதோ சாத்தியம் என்றாலும், மாநில அரசு மட்டுமே அதன் விதிகளின்படி நிபந்தனை பிணையில் விடுவித்தல் (பரோல்) அல்லது இடைக்கால விடுப்பு செய்ய முடியும்.


இந்த விவகாரத்தில் இந்திய ஒன்றியம் மற்றும் மாநில அரசுகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.  உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய எட்டு மாநிலங்களையும் வழக்கில் சேர்த்தது. இந்த மனு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.




Original article:

Share:

NAAC லஞ்ச வழக்கு: NAAC என்றால் என்ன? அங்கீகார செயல்முறையை மாற்றுவதற்கான முன்மொழிவுகள் ஏன் வந்துள்ளன? -அபிநயா ஹரிகோவிந்த்

 சிறந்த தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (National Assessment and Accreditation Council (NAAC)) மதிப்பீட்டிற்காக லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் வழக்கில் NAAC ஆய்வுக் குழு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழக அதிகாரிகள் உட்பட பத்து பேர் ஈடுபட்டுள்ளனர்.


ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமான கோனேரு லக்ஷ்மய்யா கல்வி அறக்கட்டளையின் (Koneru Lakshmaiah Education Foundation (KLEF)) அதிகாரிகள் மற்றும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) ஆய்வுக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் உட்பட பத்து பேரை சிபிஐ கடந்த வாரம் கைது செய்தது.


கைது செய்யப்பட்டவர்களில் NAAC ஆய்வுக் குழுவில் உறுப்பினராக இருந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ராஜீவ் சிஜாரியா மற்றும் KLEF துணைவேந்தர் GP சாரதி வர்மா ஆகியோர் அடங்குவர். இந்த வழக்கில் சிபிஐ எஃப்ஐஆர், ஆய்வுக் குழுவிடம் ரூ. 1.80 கோடி கோரப்பட்டது. ஆனால், சிஜாரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ. 3 லட்சம் மற்றும் லேப்டாப் மற்றும் ரூ.10 லட்சத்துடன் குழுவின் தலைவருக்கு ரூ.10 லட்சம் வழங்க KLEF ஒப்புக்கொண்டது.   


NAAC-ன் முன்னாள் துணை ஆலோசகர், பெங்களூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் NAAC-ன் ஆலோசகர் மூலம், KLEF அலுவலகப் பணியாளர்கள் NAAC ஆய்வுக் குழுவில் தெரிந்த உறுப்பினர்களை சேர்க்க முயன்றனர். மேலும், குழு உறுப்பினர்களின் பெயர்கள் NAAC-ஆல் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படுவதற்கு முன்பே நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்பட்டது என  FIR குற்றம் சாட்டுகிறது.


எவ்வாறாயினும், NAAC தர நிர்ணய செயல்பாட்டில் முறைகேடுகள் குறித்து கேள்விகள் எழுவது இது முதல் முறை அல்ல. NAAC தலைவர் 2023ஆம் ஆண்டில் இதுபோன்ற பிரச்சினைகளை காரணம் காட்டி விலகினார்.


NAAC 1994ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) உருவாக்கப்பட்டது. UGC தலைவர் அதன் கவுன்சிலை வழிநடத்துகிறார். NAAC உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்து அங்கீகாரம் அளிக்கிறது. அதன் தரங்கள் தரத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. மேலும், நிறுவனங்கள் இதை பெரும்பாலும் அவற்றைக் காட்டுகின்றன. UGC விதிகளின்படி, இது மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.


2012ஆம் ஆண்டின் UGC விதிமுறைகளின்படி, உயர்கல்வி நிறுவனங்கள் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது இரண்டு தொகுதிகள் பட்டம் பெற்ற பிறகு அங்கீகாரம் பெற வேண்டும். UGCயிடமிருந்து நிதி பெற இந்த அங்கீகாரம் தேவை. ஒரு கல்லூரி தன்னாட்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவது போன்ற சில சந்தர்ப்பங்களில் அங்கீகார தரங்களும் முக்கியம். அவ்வாறு செய்ய, கல்லூரி குறைந்தபட்சம் 'A' NAAC தரத்தைப் பெற்றிருக்க வேண்டும்.


உள்கட்டமைப்பு, கற்பித்தல், மதிப்பீடு, நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சி போன்ற காரணிகளின் அடிப்படையில் நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. மதிப்பீட்டுச் செயல்பாட்டில் நிறுவனம் சுய ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பித்தல், NAACஆல் மாணவர் நிறைவாக்க கணக்கெடுப்பு (‘student satisfaction survey’) மற்றும் ஒரு சக குழுவின் வருகை ஆகியவை அடங்கும்.


இந்த சக குழுக்களை உருவாக்க, NAAC பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறது. ஒரு கணினி அமைப்பு நாடு முழுவதிலுமிருந்து நிபுணர்களை அவர்களின் நிபுணத்துவப் பகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறது என்று NAAC அதிகாரிகள் விளக்கினர். இந்த நிபுணர்கள் நிறுவனத்தைப் பார்வையிடும், அதை ஆய்வு செய்யும் மற்றும் ஒரு அறிக்கையை எழுதும் குழுவை உருவாக்குகிறார்கள். ஆய்வு செய்யப்படும் நிறுவனத்தின் அதே மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எந்தக் குழுவிலும் இல்லை என்பதை இந்த அமைப்பு உறுதி செய்கிறது.


இது NAAC தரச்சான்றிதழ் மற்றும் அங்கீகாரத்துடன் முடிவடைகிறது. இது NAACஆல் ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும் தரச் சான்றிதழாகும். ஒரு நிறுவனம் முன்பு 'A' கிரேடு அல்லது அதற்கு மேல் பெற்றிருந்தால், அதன் அங்கீகாரம் ஏழு ஆண்டுகள் நீடிக்கும். அதன் பிறகு, அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.


KLEF முதன்முதலில் 2013 ஆம் ஆண்டு A கிரேடு மற்றும் 2018ஆம் ஆண்டில் A++ ஐப் பெற்றது. இது பிப்ரவரி 2024ஆம் ஆண்டில் மீண்டும் விண்ணப்பித்தது. மேலும், இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சக குழு வருகைக்கு திட்டமிடப்பட்டது.


குறிப்பிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் நிறுவனத்திற்கு கிரேடு புள்ளி சராசரி (CGPA) வழங்கப்படுகிறது. இந்த CGPA எட்டு-புள்ளி முறையைப் பயன்படுத்துகிறது.  இதில் A++ (அதிகபட்சம்) முதல் D (குறைந்தபட்சம்) வரையிலான தரங்கள் உள்ளன.  A++ முதல் C வரையிலான தரம் நிறுவனம் அங்கீகாரம் பெற்றது என்பதைக் குறிக்கிறது. அதேநேரத்தில் D என்பது நிறுவனம் அங்கீகாரம் பெறவில்லை என்பதைக் குறிக்கிறது.


CBI FIR இன் படி, KLEF A++ கிரேடு பெற முயன்றதாகக் கூறப்படுகிறது.


KLEF அலுவலக பொறுப்பாளர்கள் இந்தக் குழுவில் "தெரிந்த உறுப்பினர்களை" சேர்க்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.


NAAC இன் நிர்வாகக் குழுவின் முன்னாள் தலைவரான பூஷன் பட்வர்தன், அங்கீகார செயல்முறையை கேள்விக்குட்படுத்தி UGC தலைவருக்கு கடிதம் எழுதிய பிறகு 2023ஆம் ஆண்டில் ராஜினாமா செய்தார்.


"எனது அனுபவம், பங்குதாரர்களிடமிருந்து வந்த புகார்கள் மற்றும் மறுஆய்வுக் குழு அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில், மறைக்கப்பட்ட தகவல்கள், தவறுகள் மற்றும் தொடர்புகள் உள்ளவர்கள் செயல்முறைகளை கையாள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நான் முன்பு கவலைகளை எழுப்பியிருந்தேன். இது சில உயர்கல்வி நிறுவனங்கள் நியாயமற்ற மதிப்பெண்களைப் பெற வழிவகுத்திருக்கலாம்." என்று குறிப்பிட்டு இருந்தார்.


2022ஆம் ஆண்டில், பேராசிரியர் ஜே பி சிங் ஜூரல் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு, பட்வர்தனால் அமைக்கப்பட்டது. NAAC மதிப்பீட்டு செயல்முறையை ஆய்வு செய்தது. வருகை தரும் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு NAAC ஒரு சிறிய நிபுணர் குழுவைப் பயன்படுத்துகிறது என்றும், இந்தக் குழுவிலிருந்து 20-30% மதிப்பீட்டாளர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும் குழுவின் அறிக்கை கூறியது. அமைப்பால் உருவாக்கப்பட்ட நிபுணர்களின் பட்டியல் உறுப்பினர்களை இறுதி செய்ய வேறு தேர்வுக் குழு'வுக்கு அனுப்பப்படுகிறது என்றும் அறிக்கை விளக்கியது. மேலும், "தரவு ஒருமைப்பாட்டிற்கான சவால்கள்" பற்றிய கவலைகளை எடுத்துரைத்து, ஆன்லைன் செயல்முறை மற்றும் IT உள்கட்டமைப்பில் மேம்பாடுகளையும் அது பரிந்துரைத்தது.


NAAC தர நிர்ணய அமைப்பில் என்ன மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன?


தேசிய கல்விக் கொள்கை 2020, உலகளாவிய தரநிலைகளைப் பின்பற்றி, ஒரு பைனரி செயல்முறையாக அங்கீகாரம் பெற திட்டமிட்டுள்ளது.


இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு, அங்கீகார முறையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க, கல்வி அமைச்சகத்தால் நவம்பர் 2022ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. தற்போதைய எட்டு-புள்ளி தர நிர்ணய முறை பைனரி அங்கீகார அமைப்பாக மாற வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதில், நிறுவனம் 'அங்கீகாரம் பெற்றது', 'அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறது' அல்லது 'அங்கீகாரம் பெறவில்லை' என்று குறிக்கப்படும்.


அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள், "தங்கள் தடையை உயர்த்தி...' நிலை 1'லிருந்து 'நிலை 4'க்கு தேசிய சிறப்புமிக்க நிறுவனங்களாகவும், பின்னர் 'நிலை-5'க்கு, அதாவது பல துறைசார் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான உலகளாவிய சிறந்த நிறுவனங்களாகவும் "ஊக்குவிக்கப்பட வேண்டும்" என்றும் அது பரிந்துரைக்கிறது.


தற்போதைய செயல்முறை குறித்து கவலைகள் இருந்ததால் இந்தக் குழு உருவாக்கப்பட்டதாக NAAC அதிகாரி கூறினார். 2024ஆம் ஆண்டில், குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அங்கீகாரச் செயல்பாட்டில் NAAC மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. தரங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நிறுவனங்கள் இப்போது பைனரி அங்கீகாரத்தைப் பெறும். தரத்தை மேம்படுத்த உதவும் வகையில், அவை "முதிர்ச்சி அடிப்படையிலான தரப்படுத்தப்பட்ட அங்கீகாரத்தையும்" (நிலைகள் 1 முதல் 5 வரை) கொண்டிருக்கும். நிறுவனங்கள் நிலை 1 முதல் நிலை 4 வரை "தேசிய சிறந்த நிறுவனங்களாக" முன்னேறி, "பல-ஒழுங்கு ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான உலகளாவிய சிறந்த நிறுவனங்களாக" நிலை 5-ஐ அடையலாம்.




Original article:

Share:

அணுசக்திச் சட்டம் (1962) மற்றும் 2010ஆம் ஆண்டின் அணுசக்திச் சேதத்திற்கான சிவில் பொறுப்புச் சட்டம் (CLNDA), சுருக்கமாக. -சி ராஜ மோகன்

 முக்கிய அம்சங்கள்:


• சனிக்கிழமையன்று தனது பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் (Finance Minister (FM)) நிர்மலா சீதாராமன், இந்தியாவில் அணுசக்தியின் வாய்ப்புகளை முடக்கிய இரண்டு அணுச் சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான முடிவை அறிவித்தார். இந்த முடிவு காலதாமதமானது. ஆனால், உலகம் அணுசக்தித் துறையை மீண்டும் உயிர்ப்பித்து வரும் நேரத்தில் சரியான நேரத்தில் வந்தது.


• இந்தியாவின் அணுசக்தி வீழ்ச்சி ஒரு சோகக் கதை. 1969ஆம் ஆண்டில், ஜப்பானுக்குப் பிறகும், சீனாவுக்கு முன்பே தாராப்பூரில் அணு மின் நிலையத்தைக் கட்டிய இரண்டாவது ஆசிய நாடாக இந்தியா ஆனது என்பதை நம்புவது கடினம்.


• கடந்த பத்தாண்டு காலத்தில், தில்லி அணுசக்தித் திறனுக்கான இலக்குகளை மீண்டும் மீண்டும் திருத்தியும் அவற்றை அடைய முடியவில்லை. நிதி அமைச்சகம் இப்போது 2047ஆம் ஆண்டுக்குள் 1,00,000 MW என்ற புதிய இலக்கை நிர்ணயித்துள்ளது.


• 1970ஆம் ஆண்டில் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் (Nuclear Non-Proliferation Treaty) அமலுக்கு வந்தபோது அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பான உலகளாவிய ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றம் பிரச்சனையின் ஒரு பகுதியாகும்.


• இந்தியா தனது கருத்துக்கள் மற்றும் கொள்கைகளில் குழப்பத்தை எதிர்கொண்டது. அது ஒரு கடினமான நிலையில் சிக்கிக் கொண்டது. இது முழுமையாக "அணுசக்தி" அல்லது முழுமையாக "அணுசக்தி அல்லாதது" அல்ல. இந்த சூழ்நிலையிலிருந்து முன்னேற இந்தியாவுக்கு 25 ஆண்டுகள் ஆனது.


• இந்தியா இறுதியாக மே 1998ஆம் ஆண்டில் ஐந்து அணுகுண்டு சோதனைகளை நடத்தி தன்னை அணு ஆயுத சக்தியாக அறிவித்தது. அவர்கள் புதிய தடைகளை கொண்டு வந்தாலும், சோதனைகள் அமெரிக்காவுடனும் உலகளாவிய அணுசக்தி ஒழுங்குடனும் ஒரு நல்லிணக்கத்திற்கான கதவைத் திறந்தன.


• சிவில் பொறுப்புச் சட்டத்திற்கு அப்பால், இந்திய அணுசக்தி திட்டத்தில் ஒரு ஆழமான கட்டமைப்பு சிக்கல் உள்ளது. 1962ஆம் ஆண்டின் அணுசக்திச் சட்டத்தின் கீழ் அணு ஆற்றல் செயல்பாடு அரசாங்கத்தின் ஏகபோக உரிமையாகும்.


உங்களுக்குத் தெரியுமா?:


• இந்தியா 1969ஆம் ஆண்டு தாராப்பூரில் தனது முதல் அணு மின் நிலையத்தைக் கட்டியது, ஜப்பானுக்குப் பிறகு அவ்வாறு செய்த இரண்டாவது ஆசிய நாடாக மாறியது. இது சீனாவைவிட மிகவும் முந்தையது. 1950 மற்றும் 1960ஆம் ஆண்டுகளில், மேற்கத்திய நாடுகளின் பெரும் உதவியுடன் இந்தியா ஒரு வலுவான அணு ஆராய்ச்சித் திட்டத்தை உருவாக்கியது.


• 1970ஆம் ஆண்டு அணுசக்தி நம்பிக்கையின் உச்சத்தில், 2000ஆம் ஆண்டுக்குள் 10,000 மெகாவாட் அணுசக்தியை உற்பத்தி செய்யும் என்று இந்தியா நம்பியது. அந்த காலக்கெடுவிற்குப் பிறகு இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் அணுசக்தித் துறை சுமார் 8,200 மெகாவாட்டாகத் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இன்று சீனாவின் நிறுவப்பட்ட அணுசக்தி திறன் சுமார் 58,000 மெகாவாட் ஆகும். தென் கொரியாவில் 32,000 மெகாவாட் உள்ளது. சீனாவும் தென் கொரியாவும் இப்போது அணு உலைகளின் முக்கிய ஏற்றுமதியாளர்கள். ஒரு பத்தாண்டு காலத்திற்கு முன்னர் தனது அணுசக்தி திட்டத்தை அறிமுகப்படுத்திய UAE, தென் கொரிய உலைகளை மையமாகக் கொண்ட 5,200 GW அணுசக்தி திறனைக் கொண்டுள்ளது.


• NPT ஆனது அணு ஆயுத நாடுகளின் எண்ணிக்கையை ஐந்தாக நிறுத்தியது (ஏற்கனவே 1967 க்கு முன் அணு ஆயுதங்களை சோதனை செய்தவர்கள்) மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கு அணுசக்தி தொழில்நுட்பங்களை மாற்றுவதில் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியது.


• அணு சர்வதேசவாதத்தின் காலத்தில் இந்தியாவின் அணுசக்தி சாகசம் செழித்திருந்தால், அது 1970ஆம் ஆண்டுகளில் இருந்து வெளிப்புற அழுத்தங்களின் கீழ் வாடத் தொடங்கியது. 1967ஆம் ஆண்டு ஜனவரிக்கு முன் இந்தியா அணுகுண்டு சோதனை செய்திருந்தால், அது அணுசக்தி பிரிவின் வலது பக்கத்தில் இருந்திருக்கும். ஆனால், அணு ஆயுத சக்தியாக மாற இயலாமை அல்லது விருப்பமின்மை அதை தவறான பக்கத்தில் வைத்தது. (அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி 1963ஆம் ஆண்டில் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்த உதவ முன்வந்ததாக செய்திகள் உள்ளன. ஆனால், நேரு அதை நிராகரித்தார்.)




Original article:

Share:

ஆயுஷ்மான் பாரத் -பிரியா குமாரி சுக்லா

 ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Pradhan Mantri Jan Arogya Yojana (AB-PMJAY)) என்றால் என்ன?


முக்கிய அம்சங்கள்:


• அறிக்கையின்படி, சரியான நேரத்தில் புற்றுநோய் சிகிச்சையைத் தொடங்குவது மக்கள் தொகையில் 36% அதிகரித்துள்ளது. இருப்பினும், 2018-க்குப் பிறகு ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களில் 90%  அதிகரித்துள்ளது.


• 2018- ஆம் ஆண்டில், தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம் (Ayushman Bharat scheme), மக்கள்தொகையில் 40% ஏழைகளுக்கு சுகாதாரப் பாதுகாப்பை வழங்குகிறது.


• 6,700 புற்றுநோய் நோயாளிகளிடமிருந்து தரவை சேகரித்த ஆய்வு, அரசாங்கத்தின் சுகாதாரப் பாதுகாப்பு வலையத்தைப் பாராட்டுகிறது. இருப்பினும், கதிரியக்க சிகிச்சை இயந்திரங்கள் (radiotherapy machines) போன்ற புற்றுநோய் பராமரிப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியது. சிகிச்சையைத் தொடங்குவதில் அதிக தாமதம் கதிரியக்க சிகிச்சைக்காகவும், அதைத் தொடர்ந்து கீமோதெரபி மற்றும் அறுவை சிகிச்சைக்காகவும் இருந்தது என்று அது கூறியது. "இந்தியாவில் புற்றுநோய் நோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சையை வழங்குவதற்கான பொது சுகாதார உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், ஆயுஷ்மான் பாரத்தில் செலவு குறைந்த கீமோதெரபி முகவர்களைச் சேர்ப்பதற்கும் இது ஒரு முக்கியமான வாதமாகும்" என்று ஆய்வு தெரிவித்துள்ளது.


• இந்தியாவில் 779 கதிரியக்க சிகிச்சை இயந்திரங்கள்மட்டுமே இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது, இது போதாது. அதிக வருமானம் உள்ள நாடுகளில் 10 லட்சம் பேருக்கு 4 இயந்திரங்கள் உள்ளன. மேலும், உலக சுகாதார நிறுவனம் 10 லட்சம் பேருக்கு குறைந்தது 1 இயந்திரம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. இந்த தரத்தின்படி, இந்தியாவிற்கு 1,350 முதல் 5,000 வரை ரேடியோதெரபி இயந்திரங்கள் தேவைப்படுகிறது.


• ஆய்வுக்காக, சரியான நேரத்தில் சிகிச்சையைத் தொடங்கியவர்களை (30 நாட்களுக்குள்) செய்யாதவர்களுடன் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டனர். 30 வயதிற்குட்பட்ட நோயாளிகள் (77%), அதிக படித்தவர்கள் (70.2%), மற்றும் சில திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் (69%) ஆகியோருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை தொடங்கப்பட்டது. ஆய்வில் பங்கேற்பாளர்களில் கிட்டத்தட்ட 40% எந்த திட்டத்திலும் இல்லை. அதிக வருமானம் உள்ளவர்களும் சிகிச்சையை தாமதப்படுத்துவது குறைவு என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


• ஆயுஷ்மான் பாரத் - பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (Pradhan Mantri Jan Arogya Yojana (AB-PMJAY)) செப்டம்பர் 2018-ல் தொடங்கப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய அரசாங்க நிதியுதவி சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட வறுமை மற்றும் தொழில் அளவுகோல்களின் அடிப்படையில் 2011 சமூக-பொருளாதார சாதி கணக்கெடுப்பை (Socio-Economic Caste Census (SECC)) பயன்படுத்தி பயனாளிகள் அடையாளம் காணப்படுகிறார்கள். ஆரம்பத்தில், இந்தத் திட்டம் 10.74 கோடி குடும்பங்களை உள்ளடக்கியது. மாநிலங்கள் இப்போது காப்பீட்டை 13.44 கோடி குடும்பங்களுக்கு (65 கோடி மக்கள்)  உள்ளடக்கும் வகையில் தங்கள் வரம்பை விரிவுபடுத்தியுள்ளன.


• இந்தத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு மற்றும் மாநிலங்கள் இணைந்து 60:40 விகிதத்தில் நிதியளிக்கின்றன. வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான மாநிலங்களில், விகிதம் 90:10. திட்டத்தில் உள்ள வசதிகளில் 58% அரசு மருத்துவமனைகள் உள்ளன.


• செப்டம்பர் 11, 2024 அன்று, ஒன்றியஅமைச்சரவை திட்டத்தின் விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் இப்போது விரிவான சுகாதார காப்பீட்டைப் பெறுவார்கள்.


• 70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவருக்கும் ரூ.5 லட்சம் வருடாந்திர காப்பீடு கிடைக்கும். இது குடும்பத்திற்குள் பகிர்ந்து கொள்ளப்படும். உதாரணமாக, குடும்பத்தில் இரண்டு முதியோர் உறுப்பினர்கள் இருந்தால், காப்பீடு அவர்களுக்கு இடையே பிரிக்கப்படும்.

• 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் பொருளாதார நிலையின் அடிப்படையில் ஏற்கனவே காப்பீடு செய்யப்பட்டிருந்தால், அவர்களுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீடு கிடைக்கும். இந்த நிரப்புத் தொகையைப் பெற அவர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.


• இந்தத் திட்டம் 4.5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 6 கோடி மக்களை உள்ளடக்கும். இவர்களில் 1.78 கோடி பேர் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய காப்பீட்டுக்கான கூடுதல் செலவு மிகக் குறைவு என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஏற்கனவே 26 சிறப்பு மருத்துவமனைகளில் 1,670 சிகிச்சைகள் உள்ளன, இதில் முதியோர் பராமரிப்புக்கான 25 தொகுப்புகள் அடங்கும்.


லாங்கிடியூடினல் ஏஜிங் ஸ்டடி ஆஃப் இந்தியா (Longitudinal Ageing Study of India (LASI)) 2021 அறிக்கையில், 75% முதியவர்களுக்கு குறைந்தது ஒரு நாள்பட்ட நோய் இருப்பதாகக் காட்டுகிறது. சுமார் 40% பேருக்கு ஏதேனும் குறைபாடு உள்ளது என்றும், மேலும் 4 பேரில் ஒருவர் பல உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார் என்றும் வெளிப்படுத்தியது. முதியோர் மக்கள் தொகையில் 58% பெண்கள் மற்றும்  54% விதவைகள் உள்ளனர்.


பல தனியார் காப்பீட்டுத் திட்டங்களைப் போலல்லாமல், PMJAY அனைவருக்கும் காப்பீடு அளிக்கிறது. ஏற்கனவே நோய்கள் உள்ளவர்கள் உட்பட, மேலும் சலுகைகளுக்காக ஒரு வருட காத்திருப்பு காலம் தேவையில்லை. இந்தத் திட்டம் முதியவர்கள் ஆரோக்கியமாகவும் கண்ணியமாகவும் வாழ உதவுகிறது.




Original article:

Share:

பெரும்பாலும் நல்ல, ஆனால் ஒரு தவறான நடவடிக்கை கொண்ட வரவு செலவு அறிக்கை -சி. ரங்கராஜன், டி.கே. ஸ்ரீவஸ்தவா

 வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில நடவடிக்கைகள் முன்னரே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கலாம். இது ஒரு குறிகாட்டியாக நிதிப் பற்றாக்குறையிலிருந்து (‘fiscal deficit’) விலகிச் செல்வது தவறான படியாகும்.


ஒன்றிய பட்ஜெட்டில் பல விஷயங்கள் சரியாக உள்ளன. 2025-26ஆம் ஆண்டில் 10.1% என்ற பெயரளவிலான GDP வளர்ச்சியின் கணிப்பு நியாயமானது மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. 2024-25 பொருளாதார ஆய்வு 2025-26ஆம் ஆண்டில் 6.3% - 6.8% வரம்பில் உண்மையான GDP வளர்ச்சியைக் குறிக்கிறது. வளர்ச்சி அதிகமாக இருந்தால் இது சில சிக்கல்களை வழங்குகிறது. 2024-25ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளைவிட 2025-26ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மூலதனச் செலவு அதிகரிப்பு ₹1.03 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 2025-26ல் ₹11.2 லட்சம் கோடியாக இருந்த மூலதனச் செலவுகள், 2024-25ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ₹11.1 லட்சம் கோடி என்று குறிப்பிடப்பட்டதைப் போலவே உள்ளது.


பட்ஜெட்டின் முக்கிய நோக்கம், வளர்ச்சியை விரைவுபடுத்துவதும், வளர்ந்த நாடு என்ற நிலையை நோக்கி இந்தியாவை தள்ளுவதும் ஆகும். 2024-25 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் 8% உட்பட இதை அடைய உண்மையான வளர்ச்சியின் தேவையான விகிதம் வித்தியாசமாக மதிப்பிடப்பட்டுள்ளது. எப்படியிருந்தாலும், நாட்டின் வளர்ச்சி விகிதத்தில் ஒரு திட்டவட்டமான தொடக்கம் தேவை. பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. உண்மையில், இவற்றில் சிலவற்றை முன்பே செயல்படுத்தியிருக்கலாம். ‘நடுத்தர வகுப்பினருக்கு’ வருமான வரியில் சலுகை அளிக்கப்பட்டிருப்பது ஒரு நிவாரணமாக வரவேற்கத்தக்கது. ஆனால் தேவையின் மீதான விளைவு, இந்த சலுகைகளால் பெரிதும் பயனடையும் குடும்பங்கள் எவ்வளவு செலவழிக்கும் போக்கைக் கொண்டுள்ளன மற்றும் அவர்கள் வழக்கமாக என்ன வாங்குகிறார்கள் என்பதைப் பொறுத்தது.


மொத்த வரி வருவாய்


இந்திய அரசாங்கத்தின் மொத்த வரி வருவாயின் (gross tax revenues (GTR)) வளர்ச்சி சமீபத்திய ஆண்டுகளில் கீழ்நோக்கிச் சென்றுள்ளது. GTR-ன் மிதப்பு மூன்று ஆண்டுகளாக 2023-24-ல் 1.4 ஆக இருந்து 2024-25-ல் 1.15 ஆகவும் (RE) 2025-26-ல் 1.07 ஆகவும் (பட்ஜெட் மதிப்பீடுகள் (Budget Estimates (BE)) குறைந்துள்ளது.  இதன் விளைவாக, இந்திய அரசாங்கத்தின் GTR-ன் வளர்ச்சி 2023-24-ல் 13.5% ஆக இருந்து 2024-25-ல் 11.2% ஆகவும் (திருத்தப்பட்ட மதிப்பீடுகள் (Revised Estimates (RE))), 2025-26-ல் 10.8% ஆகவும் (BE) வீழ்ச்சியடைந்துள்ளது. அரசாங்கத்தின் வரி வருவாயில், சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) வளர்ச்சி விகிதம் 2023-24-ல் 12.7% ஆக இருந்து 2025-26-ல் (BE) 10.9% ஆக குறைந்துள்ளது.


உண்மையில், அரசாங்கத்தின் வரிவிதிப்பு அமைப்பு மறைமுக வரியிலிருந்து விலகி நேரடி வரிகளுக்கு மாறிவிட்டது. அரசாங்கத்தின் GTR-ல் நேரடி வரிகளின் பங்கு 2021-22-ல் 52% ஆக இருந்து 2025-26 (BE)-ல் 59% ஆக அதிகரித்துள்ளது. இது வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும். இருப்பினும், நேரடி வரிகளுக்குள், தனிப்பட்ட வருமான வரி, வளர்ச்சி மற்றும் மிதப்பு அடிப்படையில் பெருநிறுவன வருமான வரியைவிட சிறப்பாக செயல்படுகிறது.


இருப்பினும், தனிநபர் வருமான வரி விஷயத்தில்கூட 2023-24ல் 25.4% ஆக இருந்த வளர்ச்சி 2024-25-ல் 20.3% ஆகவும் (RE) 2025-26ல் 14.4% ஆகவும் (BE) குறைந்துள்ளது. 2025-26-ல் (BE) வளர்ச்சியில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சி, அறிவிக்கப்பட்ட வருமான வரிச் சலுகைகள் காரணமாகும். பெறுநிறுவன வருமான வரியைப் பொறுத்தவரை, 2024-25-ல் (RE) வளர்ச்சி மிகவும் குறைவாக 7.6% ஆக உள்ளது. இந்த வளர்ச்சி 2025-26-ல் (BE) 10.4% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தத்தில், 2025-26-ல் (BE) அரசாங்கத்தின் வரி வருவாய் வளர்ச்சி தொடர்பான அனுமானங்கள் யதார்த்தமானதாகத் தெரிகிறது.


வரி அல்லாத வருவாயைப் பொறுத்தவரை, முக்கியப் பங்களிப்பு இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஈவுத்தொகை வடிவில் உள்ளது.  இது 2025-26-ல் சுமார் ₹3.25 லட்சம் கோடியாக இருந்தது. இது திருத்தப்பட்ட மதிப்பீடுகளைவிட ₹35,715 கோடி அதிகரித்துள்ளது.  இதனால், 2025-26-ல் (BE) வரி அல்லாத வருவாய் ₹5.3 லட்சம் கோடியில் (RE) ₹5.8 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.


அரசாங்க செலவினங்களின் நிலை


வரி மற்றும் வரி அல்லாத வருவாய்கள், கடன் அல்லாத மூலதன வருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறை ஆகியவை அரசாங்க செலவினங்களின் அளவை தீர்மானிக்கின்றன.  விவாதிக்கப்பட்டபடி, 10.8% என்ற குறைந்த அளவில் மொத்த வரி வருவாய் வளர்ச்சி யதார்த்தமானதாகத் தோன்றுகிறது. நிதி ஒருங்கிணைப்புக்கான உறுதிப்பாட்டின் அடிப்படையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அரசாங்க செலவினங்களின் அளவை 2024-25-ல் 14.6%-லிருந்து (RE) 2025-26-ல் 14.2% ஆகக் குறைக்க வேண்டும் (BE). மொத்த செலவினங்களின் வளர்ச்சி, 2025-26-ல் (BE) 7.6%-ல், பட்ஜெட் பெயரளவிலான GDP வளர்ச்சியைவிட 10.1% குறைவாக உள்ளது.


உண்மையில், 2024-25ல் (RE), அரசாங்கத்தின் மொத்த செலவின வளர்ச்சி 6.1% ஆக இருந்தது. முதல் மேம்பட்ட மதிப்பீடுகளின்படி பெயரளவு GDP வளர்ச்சியான 9.7% ஆக இருந்தது. எவ்வாறாயினும், மொத்த செலவினங்களில் மூலதன செலவினத்தின் பங்கு மேம்பட்டு வருவதால், அரசாங்க செலவினங்களின் தரத்தில் நிலையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 


உண்மையில், இந்தப் பங்கு 2020-21 முதல் 2025-26 (BE) வரையிலான காலகட்டத்தில் 10% புள்ளிகளால் மேம்பட்டுள்ளது. சமகாலச் சூழலைக் கருத்தில் கொண்டு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு வசதியாக, இந்திய அரசு பெரிய அளவிலான செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். 


இந்த சூழலில், சீனா தெளிவான முன்னிலையில் உள்ளது. AI உள்கட்டமைப்புக்காக 500 பில்லியன் டாலர் முதலீட்டை அமெரிக்கா சமீபத்தில் அறிவித்துள்ளது. AI துறையில், இந்தியாவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்னேற்றங்களை எதிர்பார்க்கத் தவறிவிட்டன. சீனா செய்ததை இந்தியா செய்திருக்க வேண்டும். தேவைப்பட்டால், சில வரிச் சலுகைகளை வழங்குவதன் மூலம், இந்த நிறுவனங்களை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு இந்தியா தள்ள வேண்டும்.


குறைவான வெளிப்படையான நிதி சுகாதாரக் குறியீடு


பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தவறான நடவடிக்கை, நிதிப் பற்றாக்குறையிலிருந்து விலகி செல்லுவது உள்ளது. பட்ஜெட் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளதற்கு மாறாக, நாம் வெளிப்படைத்தன்மையில் இருந்து குறைவான வெளிப்படையான அளவீடுகளுக்கு நகர்கிறோம். 2024-25 பட்ஜெட்டின் நடுத்தர கால நிதிக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கை அறிக்கையின்படி, 2025-26ஆம் ஆண்டிற்குள் நிதிப் பற்றாக்குறை 4.5%-க்கும் கீழே கொண்டு வரப்பட வேண்டும்.


இருப்பினும், 2025-26 பட்ஜெட்டில், நிதிப் பற்றாக்குறையின் அடிப்படையில் சறுக்கல் பாதையை வழங்கும் நடைமுறை நிறுத்தப்படுகிறது. இனிமேல், ஆண்டுதோறும் கடன்-GDP விகிதத்தை (debt-GDP ratio) குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (Fiscal Responsibility and Budget Management (FRBM)) சட்டம், 2003-ன் கீழ் தேவைப்படும் நிதிக் கொள்கை அறிக்கைகள்' (Statements of Fiscal Policy) என்ற தலைப்பிலான இணைப்பு அறிக்கையில், 10.0%, 10.5% மற்றும் 11 என்ற பெயரளவு GDP வளர்ச்சி அனுமானங்களுடன் கடன்-GDP விகிதத்தின் மாற்று வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.


மிதமான மற்றும் அதிக அளவிலான நிதி ஒருங்கிணைப்பு தொடர்பான மாற்று வளர்ச்சி அனுமானங்கள் மற்றும் மாற்று அனுமானங்களின் அடிப்படையில் சறுக்கு பாதைகள் குறிக்கப்படுகின்றன. இந்த அணுகுமுறை தெளிவற்றது மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாதது. வெவ்வேறு ஆண்டுகளுக்கான குறிப்பிட்ட நிதிப் பற்றாக்குறை இலக்கையும் அந்த ஆண்டுகளுக்கான கடன்-GDP விகிதங்களையும் குறிப்பிடுவது நிதி அமைப்புக்கு நல்லது. FRBM சட்டத்தின் இலக்குகள் எந்த ஆண்டில் அடையப்பட வேண்டும் என்பது தெளிவாகக் காட்டப்பட வேண்டும். அரசாங்கம் அதிக முதலீடு செய்யக்கூடிய வளங்களைப் பயன்படுத்தினால், தனியார் முதலீடுகள் பாதிக்கப்படக்கூடும்.


சி. ரங்கராஜன், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் (Madras School of Economics) தலைவர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர். டி.கே. ஸ்ரீவஸ்தவா, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கவுரவப் பேராசிரியராகவும், பதினாறாவது நிதிக் குழுவின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.




Original article:

Share:

வரவு செலவு அறிக்கையில் பள்ளிகளுக்கான ஒதுக்கீடு ₹5,074 கோடி அதிகரித்துள்ளது. ஆனால் UDISE+ தரவு, தக்கவைப்பு மற்றும் உள்கட்டமைப்பில் இடைவெளிகளைக் காட்டுகிறது -ரேணு சிங்

 கல்வி அமைச்சகத்தின் கூடுதல் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பின் (Unified District Information System for Education Plus (UDISE+)) 2023-24ஆம் ஆண்டு தரவு, முந்தைய ஆண்டைவிட 2023-24ஆம் ஆண்டில் அரசுப் பள்ளி சேர்க்கை 88 லட்சம் குறைந்துள்ளதாகக் காட்டுகிறது. இந்தப் பற்றாக்குறைக்கு, பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பான சிறந்த தரவு சேகரிப்பு காரணமாக இருக்கலாம்.


UDISE+ தரவு சேகரிப்பு முன்பைவிட சிறப்பாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஒவ்வொரு மாணவருக்கும் தரவு சேகரிக்கப்பட்டுள்ளது. 19.7 கோடி மாணவர்கள் தங்கள் ஆதார் எண்களை வழங்கினர். மேலும், ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான கல்வி  அடையாள எண் (educational id (EID)) கிடைத்தது. இது பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களைக் கண்காணிக்கவும், மாணவர்களை துல்லியமாக எண்ணவும் உதவுகிறது. இது பள்ளித் தரவு சேகரிப்பை மேம்படுத்துதல் மற்றும் அதன் பரிந்துரைகளைக் கண்காணித்தல் என்ற தேசிய கல்விக் கொள்கை இலக்கை பின்பற்றுகிறது.


தரவு சார்ந்த முடிவுகள்


இந்தியாவின் கல்விக் கொள்கை இப்போது வளங்களை திறம்பட மற்றும் திறமையாகப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது. கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். நிதி அழுத்தங்கள் அதிகரித்து வரும் நேரத்தில் இது வருகிறது. மக்கள்தொகை மாற்றங்கள் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வகையையும் பாதிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில், தரவுகளின் அடிப்படையில் சீர்திருத்தங்கள் ஏற்பட்டுள்ளது. கல்வி முறையில் பொறுப்புக்கூறலுக்கான அதிக தேவையும் உள்ளது.


இருப்பினும், நிலைநிறுத்துவதில் இன்னும் சவால்கள் உள்ளன. பொருளாதார கணக்கெடுப்பு 2024-25, தக்கவைப்பு விகிதங்கள் தொடக்கப்பள்ளியில் (வகுப்பு 1 முதல் 5 வரை), தொடக்கப்பள்ளியில் 78 சதவீதம் (வகுப்புகள் 1 முதல் 8 வரை), இடைநிலைப்பள்ளியில் 63.8 சதவீதம் (வகுப்புகள் 1 முதல் 10 வரை) மற்றும் உயர்நிலைப்பள்ளியில் 45.6 சதவீதம் (வகுப்புகள் 1 முதல் 12 வரை) என தொடர்ந்து இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது. தற்போதைய, அணுகுமுறை தேவையான மாற்றத்தைக் கொண்டுவர போதுமானதாக இல்லை. எந்தக் குழந்தையும் பின்தங்கியிருக்காமல் இருப்பதை உறுதி செய்ய ஒரு புதிய மற்றும் பயனுள்ள உத்தி தேவை.


கல்வியில் நிதி முடிவுகள், கிடைக்கக்கூடிய அனைத்து தரவுகளின் அடிப்படையிலும் எடுக்கப்படுகிறதா என்பது ஒரு முக்கிய கேள்வி. UDISE+ தரவுகள் இந்தியாவில் 14,71,891 பள்ளிகள் உள்ளன. மொத்தம் 24.8 கோடி மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், UDISE+ 2023-24-ன் படி 22,298 அங்கீகரிக்கப்படாத பள்ளிகள் 24,34,238 மாணவர்களையும் 1,58,990 ஆசிரியர்களை கொண்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் (Right to Education Act, 2009) அமல்படுத்தப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மூடப்பட்டன. இருப்பினும், அந்த பள்ளிகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன. இந்த பள்ளிகள் விதிமுறைகளைப் பின்பற்றாததால், அவற்றைக் கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லாததால் இது அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது.


அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் 80% ஜார்க்கண்ட் (5879), பீகார் (4915), அசாம் (3630) மற்றும் மேற்கு வங்கம் (3380) ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டுமே இருப்பதாக தரவு காட்டுகிறது. மேலும், நாடு முழுவதும் 31,981 ஆசிரியர்களைக் கொண்ட 12,954 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக உள்ளது. அதே நேரத்தில் 1,10,971 பள்ளிகளில் ஒற்றை ஆசிரியர்களே உள்ளனர் மற்றும் 39,94,097 மாணவர்கள் படிக்கின்றனர்.


மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான ஒற்றை ஆசிரியர் பள்ளிகள் (13,198), அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (8,866), ஜார்க்கண்ட் (8,353), மகாராஷ்டிரா (8196) மற்றும் ராஜஸ்தான் (7688) உள்ளன. பள்ளிகளை மறுசீரமைத்து, தேவைக்கேற்ப ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் தெளிவாக உள்ளது. சிறிய பள்ளிகள் இன்னும் பெரும்பான்மையாக உள்ளன. 14,71,891 பள்ளிகளில் 20.6% பள்ளிகள் 30-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் 13.8% பள்ளிகள் மட்டுமே 300-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ளன. இந்தத் தரவை கவனமாக பகுப்பாய்வு செய்ய வேண்டும். லடாக் (34.4%) மற்றும் அருணாச்சலப் பிரதேசம் (24.7%) போன்ற சில மாநிலங்களில் 10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பல பள்ளிகள் உள்ளன. இதற்கு கடினமான நிலப்பரப்பு காரணமாகும். போதுமான ஆசிரியர்கள் மற்றும் சரியான உட்கட்டமைப்புடன் கூடிய பள்ளிகளை மாணவர்கள் அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்த GPS மேப்பிங் தேவைப்படும்.

UDISE+, 2023-24 தரவு ஒரு தீவிரமான சிக்கலைக் காட்டுகிறது. கல்வி உரிமை சட்டம், 2009 அனைத்துப் பள்ளிகளும் மூன்று ஆண்டுகளுக்குள் அங்கீகாரம் பெற வேண்டும் அல்லது மூடப்பட வேண்டும் என்று கூறியது. இருப்பினும், 22,298 அங்கீகாரம் பெறாத பள்ளிகள் இன்னும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 24,34,238 மாணவர்கள் மற்றும் 1,58,990 ஆசிரியர்கள் உள்ளனர். UDISE+-ல் பட்டியலிடப்பட்டுள்ள இந்த அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பெரும்பாலானவை ஜார்க்கண்ட் (5,879), பீகார் (4,915), அசாம் (3,630) மற்றும் மேற்கு வங்கம் (3,380) ஆகிய நான்கு மாநிலங்களில் அமைந்துள்ளதால், இதற்கு உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது.


UDISE+ தரவுகளின்படி, கிரேடு 1 உள்ள 8,73,841 அரசுப் பள்ளிகளில், 77,714 8.9% பள்ளிக்குள் அங்கன்வாடி மற்றும் முன் தொடக்கப் பிரிவு இரண்டும் இருப்பதையும் வெளிப்படுத்துகிறது. இந்தப் பள்ளிகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வளங்கள் திறம்படப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைச் சரிபார்க்க ஒரு ஆய்வு நடத்துவது பயனுள்ளதாக இருக்கும். இது பொது நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதையும் வீணாக்கப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்ய உதவும்.


தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ஐ சிறப்பாக நிர்வகிப்பதையும் செயல்படுத்துவதையும் உறுதி செய்வதற்கு வரவு செலவு அறிக்கைகளை விவரங்களைத் தாண்டிப் பார்ப்பது முக்கியம். ஒன்றிய அரசு, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தேர்வு வாரியங்கள் போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு இடையே ஒத்துழைப்பு மூலம் இதை அடைய முடியும். ஆசிரியர் பகுத்தறிவு போன்ற செலவுகளைக் குறைப்பதன் மூலமும் வளங்களை மிகவும் திறமையாகப் பயன்படுத்துவதன் மூலமும், கல்வி முறை மிகவும் பாதிக்கப்படக்கூடிய மாணவர்கள் மீது கவனம் செலுத்த முடியும். இது வாழ்நாள் முழுவதும் கற்றலுக்குத் தேவையான ஆதரவை அவர்களுக்கு வழங்க உதவும்.




Original article:

Share:

அமெரிக்கா, இந்தியா மற்றும் சட்டவிரோத குடியேற்றம் பற்றி . . . - தலையங்கம்

 சட்டவிரோத குடியேற்றத்தை இந்தியா கவனமாகவும் விரைவாகவும் கையாள வேண்டும்.


அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பல இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது ஆச்சரியமானதோ அல்லது முன்நிகழ்ந்திடாததோ அல்ல. கடந்த சில ஆண்டுகளாக, முறையான ஆவணங்கள் இல்லாத நபர்களை அடையாளம் காணவும், தடுத்துவைக்கவும், நாடு கடத்தவும் அமெரிக்க அரசாங்கம் அதன் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (Immigration and Customs Enforcement (ICE)) நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. உதாரணமாக, ஜூன் மற்றும் அக்டோபர் 2024-க்கு இடையில், இந்தியா உட்பட 145-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 495 சர்வதேச விமானங்களில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் 1,60,000 மேற்பட்ட நபர்கள் நாடு கடத்தப்பட்டதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு, இந்த நாடுகடத்தல்களின் நேரம் மற்றும் முறை கவலையை ஏற்படுத்தும். ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றத்திலிருந்தது  ICE மேற்கொண்ட பெரிய அளவிலான ஒடுக்குமுறையுடன் நாடுகடத்தல்கள் ஒத்துப்போகின்றன. அவர் சட்டவிரோத குடியேற்றத்தை தனது முதன்மையான முன்னுரிமையாகக் (number one priority) குறிப்பிட்டார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிகளின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா, 7,25,000 ஆவணமற்ற தனிநபர்கள் அங்கு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. திரும்பி வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு இந்தியா தயாராக வேண்டும். இரண்டாவதாக, முதல்முறையாக, அமெரிக்கா நாடுகடத்தலுக்கு இராணுவ விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. நாடுகடத்தலின் போது புலம்பெயர்ந்தோர் விலக்கிவைக்கப்பட்டதை அறிந்த கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தனது கண்டங்களை தெரிவித்தார். இந்த நடவடிக்கை அமெரிக்கா தனது உறுதியான நிலைப்பாட்டைத் தொடர விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தங்கள் நிலைப்பாட்டை விளக்கியுள்ளது. இந்த நாடுகடத்தல் அவர்களின் கடுமையான குடியேற்ற அமலாக்கத்தின் ஒரு பகுதி மட்டுமே என்று அவர்கள் கூறினர். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த நாடுகடத்தல் ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். குடியேற்றச் சட்டங்களையும் அமலாக்கத்தையும் கடுமையாக்குவதே இதன் நோக்கம். சட்டவிரோத இடம்பெயர்வு ஆபத்துக்கு மதிப்பு இல்லை என்ற செய்தியை இது அனுப்புகிறது. நேரம் மிகவும் முக்கியமானது. ஏனெனில், பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாக இது நடந்துள்ளளது. இது ராஜதந்திர முயற்சிகள் மட்டும் போதுமானதாக இருக்காது என்பதைக் குறிக்கிறது. டிரம்ப் நிர்வாகம் இன்னும் இந்த நடவடிக்கைகளைத் தொடரலாம். இந்த நடவடிக்கை இந்தியா-அமெரிக்க இருதரப்பு உறவுகளில் மோதல் புள்ளியாக மாறும் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய குடிமக்கள் என்பது உறுதி செய்து, அவர்கள் சட்டவிரோதமாக மற்ற நாடுகளுக்குள் நுழைந்திருந்தால், அவர்களை ஏற்றுக்கொள்வது இந்திய அரசாங்கத்தின் பொறுப்பாகும். இருப்பினும், மெக்சிகோ மற்றும் கனடா வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முற்படும் இந்தியர்களின் ஆபத்தான பயணங்களை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அதிக நாடுகடத்தல் விகிதங்களைக் கொண்ட மாநிலங்களில் (குஜராத், பஞ்சாப் மற்றும் ஹரியானா) இளைஞர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் வேலை செய்வது சரியான பாதை அல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்ள அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கல்வி பிரச்சாரங்கள் சட்டவிரோத குடியேற்றத்தினால் ஏற்படும் ஆபத்துகளை சுட்டிக்காட்ட வேண்டும். முக்கியமாக, மூல காரணங்களை புறக்கணிக்கக்கூடாது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் அடிப்படை பொருளாதார நெருக்கடி, ஆழமடைந்து வரும் விவசாய நெருக்கடிகள், சமூகத்தில் ஏற்படும் பதற்றங்கள் மற்றும் வேலைவாய்ப்பு பற்றாக்குறை ஆகியவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். அதிகரித்து வரும் விவசாய நெருக்கடிகளை சமாளிக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகள் மக்களை இதுபோன்ற ஆபத்தான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தூண்டுகின்றன. வாய்ப்புகளைத் தேடி பதற்றங்கள் ஏற்படும் மண்டலங்களுக்கு வேண்டுமென்றே பயணிப்பவர்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும். அமெரிக்க குடியேற்றக் கொள்கைகளை மாற்றுவது கடினமாக இருக்கலாம். ஆனால், இந்தப் பெரிய அளவிலான இடம்பெயர்வுக்குப் பின்னால் உள்ள காரணங்களை இந்திய அரசாங்கம் கவனமாகவும் விரைவாகவும் கையாள வேண்டும்.




Original article:

Share: