ஜம்மு காஷ்மீரின் சினார் மரங்களின் (Chinar trees) புவிசார் குறியீடு எவ்வாறு முக்கியமானது?. -ரோஷ்னி யாதவ்

 ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசாங்கம் "மர ஆதார்" திட்டத்தைத் (“Tree Aadhaar” mission) தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் இப்பகுதியின் சினார் மரங்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


சமீபத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசாங்கம் சினார் மரங்களைப் பாதுகாக்க "மர ஆதார்" திட்டத்தைத் (“Tree Aadhaar” mission) தொடங்கியது. இந்த மரங்கள் பல ஆண்டுகளாக எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன. இந்த முயற்சியில் அனைத்து சினார் மரங்களையும் எண்ணுவதுடன் ஒவ்வொரு மரத்திற்கும் தனித்துவமான அடையாளத்தை வழங்குவது அடங்கும்.


முக்கிய அம்சங்கள் :


1. ஓரியண்டல் பிளேன் மரம் (பிளாட்டனஸ் ஓரியண்டலிஸ் வர். கேஷ்மெரியானா) என்றும் அழைக்கப்படும் சினார், மேப்பிள் போன்ற ஒரு மரம் ஆகும். இது ஒரு பெரிய விதானத்தைக் (canopy) கொண்டுள்ளது மற்றும் போதுமான நீர்வளம் உள்ள குளிர்ந்த காலநிலை பகுதிகளில் காணப்படுகிறது.


2. கிழக்கு இமயமலையில் இந்த மரம் பொதுவானது. மரம் முதிர்ச்சியடைய 30 முதல் 50 ஆண்டுகள் ஆகும். அதன் முழு அளவை அடைய 150 ஆண்டுகள் ஆகும். மரம் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. அதன் சுற்றளவு 10 முதல் 15 மீட்டர் வரை இருக்கலாம்.


3. சினார் என்பது ஜம்மு & காஷ்மீரின் "மாநில மரம்" (state tree) ஆகும். இப்போது இது ஒரு யூனியன் பிரதேசமாகும். இலையுதிர் காலத்தில் அதன் பசுமை இலைகள் மெதுவாக கருஞ்சிவப்பு சிவப்பு மற்றும் தங்க நிறமாக மாறும் போது இந்த மரம் இப்பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடியதாக மாறும்.


4. காஷ்மீர் கலை, இலக்கியம் மற்றும் கைவினைப் பொருட்களில் இந்த மரம் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. உள்ளூர் பேப்பியர்-மச்சே (local papier-mâché), எம்பிராய்டரி (embroidery), கையால் நெய்யப்பட்ட கம்பளங்கள் (hand-woven carpets) மற்றும் வால்நட் மர வேலைப்பாடுகளில் (walnut wood carvings) சினார் மையக்கருக்கள் பொதுவாகக் காணப்படுகின்றன.


5. முகலாயர்கள் இந்த மரத்திற்கு "சினார்" (chinar) என்ற பெயரை வழங்கினர். இந்த வார்த்தையை உருவாக்கியவர் முகலாய பேரரசர் ஜஹாங்கிர் என்று சிலர் நம்புகிறார்கள்.


6. குறிப்பாக, காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் ஜம்முவில் உள்ள செனாப் பிராந்தியத்தின் சில பகுதிகளில் சினார் தோட்டங்களை விரிவுபடுத்துவதில் முகலாயர்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தனர். முகலாயர்கள் இந்த மரத்தை "அரசுரிமை வாய்ந்த மரம்" (royal tree) என்று கருதினர்.


சினார் பாதுகாப்புத் திட்டம் (Chinar Conservation Project)


1. ஒவ்வொரு சினார் மரத்தின் நிலையையும் அரசாங்கம் கண்காணிக்க உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். தனியார் நிலத்தில் கூட சினார் மரத்தை வெட்டுவதற்கு அரசாங்க அனுமதி தேவை. இருப்பினும், பல மரங்கள் ஒப்புதல் இல்லாமல் வெட்டப்படுகின்றன. இதைத் தடுக்க, சினார் பாதுகாப்புத் திட்டம் (Chinar conservation project) இந்த மரங்களை சிறப்பாக கண்காணிப்பதில் கவனம் செலுத்துகிறது.


2. புதிய முயற்சியில் காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் செனாப் பகுதியில் உள்ள சினார் மரங்களின் கணக்கெடுப்பு அடங்கும். இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக அரசாங்கம் அனைத்து சினார் மரங்களையும் கணக்கெடுத்துள்ளது. ஒவ்வொரு மரத்திற்கும் "மர ஆதார்" (Tree Aadhaar) என்ற தனித்துவமான அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொரு மரமும் புவிசார் குறியீடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.


3. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சினார் மரங்களில் உலோக QR குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குறியீடுகளை ஸ்கேன் செய்வது ஒவ்வொரு மரத்தைப் பற்றிய தகவலையும் தரும். இந்தத் தகவல் 25 கூறுகளை (25 parameters) உள்ளடக்கியது. மரத்தின் தீர்க்கரேகை மற்றும் அட்சரேகை, வயது, உயரம், சுற்றளவு, கிளைகளின் எண்ணிக்கை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகியவை இதில் அடங்கும். மரத்தின் உயரம் பற்றிய விவரங்களும் தரவுகளில் அடங்கும். மரம் எதிர்கொள்ளக்கூடிய எந்தவொரு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களையும் இது குறிப்பிடும்.


கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான சதுப்புநில முன்முயற்சி (Mangrove Initiative for Shoreline Habitats & Tangible Incomes(MISHTI)) மற்றும் கங்கை டால்பினின் செயற்கைக்கோள் குறியீடு (Satellite tagging)


1. ‘காலநிலைக்கான சதுப்புநில கூட்டணியில்’ (Mangrove Alliance for Climate) இந்தியா இணைந்த பிறகு, ஒன்றிய அரசு கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான சதுப்புநில முன்முயற்சி (MISHTI) திட்டத்தைத் தொடங்கியது. காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் 27வது கட்சிகளின் மாநாட்டின் (COP27) போது இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்வு நவம்பர் 2022-ம் ஆண்டில் எகிப்தில் நடந்தது. உலக சுற்றுச்சூழல் தினத்தைக் குறிக்கும் வகையில் MISHTI முன்முயற்சி ஜூன் 5, 2023 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.


2. சதுப்புநிலங்கள் இந்தியாவில் மிகவும் பல்லுயிர் பன்முகத்தன்மை கொண்ட இடங்களில் ஒன்றாகும். அவை, கடற்கரையோரங்களை மோசமான வானிலையிலிருந்து பாதுகாக்கின்றன. காலநிலை மாற்றம் உலகளவில் அதிக தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், சதுப்புநிலத் தோட்டங்கள் கடலோர நிலங்களை மீள்தன்மை கொண்டதாக மாற்ற உதவுகின்றன. அவை, வெள்ளம் மற்றும் நில அரிப்பைத் தடுக்கின்றன. புயல்களின் போது அவை ஒரு இடைநிலையாகவும் (buffer) செயல்படுகின்றன. கூடுதலாக, சதுப்புநிலங்கள் சிறந்த கார்பன் மூழ்கிகளாகும்.


கங்கை டால்பினின் செயற்கைக்கோள் குறியீடு


1. இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ‘திட்டம் டால்பினுக்கு’ (Project Dolphin) ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் வகையில், டிசம்பர் 18, 2024 அன்று அசாமில் முதல் கங்கை நதி டால்பின் (பிளாட்டானிஸ்டா கங்கெடிகா-Platanista gangetica) குறியிடப்பட்டது.


2. பருவகாலங்களில் இனங்கள் எவ்வாறு நகர்கின்றன மற்றும் நடந்துகொள்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள குறியீட்டு பயிற்சி (tagging exercise) உதவுகிறது. இது அவற்றின் இடம்பெயர்வு முறைகள், வரம்பு மற்றும் பரவல் பற்றிய தகவல்களையும் வழங்குகிறது. கூடுதலாக, அவை தங்கள் வாழ்விடத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றன. குறிப்பாக, துண்டாக்கம் அல்லது கலங்கிய ஆறு (fragmented or disturbed river systems) அமைப்புகளில் கவனம் செலுத்துகிறது. இது சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


3. உலகளவில் காணப்படும் ஐந்து நதி டால்பின் இனங்களில் கங்கை டால்பினும் ஒன்றாகும். இது முக்கியமாக இந்திய துணைக் கண்டத்தில் காணப்படுகிறது. இது குறிப்பாக, கங்கை-பிரம்மபுத்ரா-மேக்னா (Ganga-Brahmaputra-Meghna) மற்றும் கர்ணபுலி-சங்கு நதி அமைப்புகளில் (Karnaphuli-Sangu river systems) காணப்படுகிறது.


4. 2009-ம் ஆண்டு, பிரதமர் மன்மோகன் சிங், கங்கை நதி டால்பினை இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்காக (National Aquatic Animal) அறிவித்தார். இது இனங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் பாதுகாப்பில் சமூக பங்களிப்பை ஊக்குவிக்கவும் ஒரு முயற்சியாகும்.


5. 1990-ம் ஆண்டு காலகட்டங்களில் இருந்து சிந்து மற்றும் கங்கை டால்பின்கள் இரண்டும் சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature (IUCN)) சிவப்பு பட்டியலில் 'அழிந்து வரும் இனங்கள்' (Endangered) ஆக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வகைப்பாடு இந்த இனம் "காடுகளில் அழிந்து போகும் அபாயம் மிக அதிகம்" (a very high risk of becoming extinct in the wild) என்பதைக் குறிக்கிறது.




Original article:

Share:

சக்திகாந்த தாஸ் புதிய முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் : இந்தப் பதவியின் பொறுப்புகள் என்ன?

 சக்திகாந்த தாஸ் 1980-ம் ஆண்டு தமிழ்நாடு கேடர் அதிகாரியாக இந்திய நிர்வாகப் பணியில் (Indian Administrative Service) சேர்ந்தார். இவர், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக அவரது பதவிக்காலம் டிசம்பர் 2024-ம் ஆண்டில் முடிந்தது.


இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநரான சக்திகாந்த தாஸ் சனிக்கிழமை (பிப்ரவரி 22) பிரதமரின் முதன்மை செயலாளராக (Principal Secretary) நியமிக்கப்பட்டார். அவர், ஒரு ஓய்வு பெற்ற IAS அதிகாரி ஆவார். வரலாற்றில் மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படும் பணவியல் கொள்கை (monetary policy) மற்றும் அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட நிதிக் கொள்கை (fiscal policy) இரண்டிலும் அனுபவம் கொண்ட ஒரே அதிகாரி சக்திகாந்த தாஸ் தான்.


சக்திகாந்த தாஸுக்கு மற்றொரு தனித்துவமும் உண்டு. அது, பிமல் ஜலானுக்கு (1997-2003) பிறகு, ஆறு ஆண்டுகள் பதவிக்காலத்தில் பணியாற்றும் இரண்டாவது இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் இவர்தான். 


சக்திகாந்த தாஸ் யார்?


சக்திகாந்த தாஸ் 1980-ம் ஆண்டில் தமிழ்நாடு கேடரில் ஒரு அதிகாரியாக இந்திய நிர்வாகப் பணியில் (Indian Administrative Service) சேர்ந்தார். இவர், டெல்லி பல்கலைக்கழகத்தின் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாறு பயின்றார். 2014-ம் ஆண்டில், அவர் உரங்கள் துறைச் செயலாளர் (Fertilisers Secretary) ஆனார்.


விரைவில், ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் நிதி அமைச்சகத்தில் வருவாய் செயலாளராக (Revenue Secretary) நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட் 2015-ம் ஆண்டில், அவர் பொருளாதார விவகார செயலாளராக (Economic Affairs Secretary) நியமிக்கப்பட்டார். மேலும், மே 2017-ம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை இந்தப் பதவியில் இருந்தார். சக்திகாந்த தாஸ் 15-வது நிதி ஆணையத்தின் (15th Finance Commission) உறுப்பினராகவும் இருந்தார்.


அவர் 2018 முதல் டிசம்பர் 2024 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பணியாற்றினார். மேலும், அவர் நியமிக்கப்பட்டபோது ஒரு அதிகாரப்பூர்வமாக வெளியீடு, “இந்திய அரசின் நிதி அமைச்சகத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றிய காலத்தில், அவர் 8 மத்திய பட்ஜெட்டுகளைத் தயாரிப்பதில் நேரடியாக ஈடுபட்டார். உலக வங்கி (World Bank), ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank (ADB)), புதிய வளர்ச்சி வங்கி (New Development Bank (NDB)) மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank (AIIB)) ஆகியவற்றில் இந்தியாவின் மாற்று ஆளுநராகவும் ஸ்ரீ சக்திகாந்த தாஸ் பணியாற்றினார். சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund (IMF)), G20, BRICS மற்றும் SAARC போன்ற சர்வதேச மன்றங்களில் அவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்” என்று குறிப்பிட்டது.


தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னர் தெரிவித்தது போல, இந்தக் காலகட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி பல சவால்களை எதிர்கொண்டது. இவற்றில் உள்நாட்டு மற்றும் வெளிப்புற அதிர்வலைகளும் அடங்கும். உள்கட்டமைப்பு குத்தகை மற்றும் நிதி சேவைகள் (Infrastructure Leasing & Financial Services (IL&FS)) சரிவு ஒரு பெரிய சவாலாக இருந்தது. இது மற்ற வங்கி சாரா நிதி நிறுவனங்களையும் (non-banking financial companies (NBFC)) பாதித்தது. மற்றொரு சவாலாக, இந்த காலகட்டத்தில் கோவிட்-19 தொற்றுநோய் இருந்தது. இது வாழ்நாளில் ஒரு முறை ஏற்படும் நெருக்கடியாகும். கூடுதலாக, ரஷ்யா-உக்ரைன் போர் பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.


மேலும், ₹2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து அகற்றுவதையும் அவர் மேற்பார்வையிட்டார். தேசிய அட்டை கட்டண வலையமைப்பான ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI)) மற்றும் RuPay ஆகியவற்றின் வரம்பை உலக அளவில் விரிவுபடுத்துவதில் சக்திகாந்த தாஸ் பணியாற்றினார். இருப்பினும், கடந்த ஆறு ஆண்டுகளாக அதிக உணவு பணவீக்கம் (high food inflation) ஒரு கடுமையான சவாலாகவே இருந்தது.


முதன்மைச் செயலாளரின் பதவி (Principal Secretary’s post) என்ன?


முதன்மைச் செயலாளர் பிரதமர் அலுவலகத்தின் (Prime Minister’s Office (PMO)) நிர்வாகத் தலைவராக உள்ளார். இந்தப் பதவி பிரதமருக்கு மிக முக்கியமான உறுதுணைப் பதவியாகக் கருதப்படுகிறது. தற்போது, ​​பிரமோத் குமார் மிஸ்ரா இந்தப் பதவியை வகிக்கிறார். அவர் 1972 கேடரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற IAS அதிகாரி ஆவார். சக்திகாந்த தாஸ் முதன்மைச் செயலாளர்-2 ஆக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரதமரின் அலுவலகத்தில் பொதுவாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (National Security Advisor), பிரதமரின் ஆலோசகர் (Advisor to the PM), கூடுதல் செயலாளர்கள் (Additional Secretaries), இணைச் செயலாளர்கள் (Joint Secretaries) மற்றும் பிற மூத்த அதிகாரிகள் அடங்குவர். முதன்மைச் செயலாளருக்கு பல முக்கிய பொறுப்புகள் உள்ளன. பிரதமருக்கும் வெளிநாட்டு பிரமுகர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்களுக்கான குறிப்புகளைத் தயாரிக்கிறார்கள். பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை அவர்கள் உறுதி செய்கிறார்கள். அவர்கள் பிரதமருக்கு முக்கியமான உத்தரவுகளை வழங்குகிறார்கள் மற்றும் பிற தொடர்புடைய பணிகளைக் கையாளுகிறார்கள்.




Original article:

Share:

இந்தியாவில் OTT தளங்கள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


1. சமூகத்தில் வளர்ந்துவரும் கவலை குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நாடாளுமன்றக் குழுவிடம் (parliamentary panel) தெரிவித்தது. இதில், "கருத்துச் சுதந்திரம்" (freedom of expression) என்ற அரசியலமைப்பு உரிமை தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், டிஜிட்டல் தளங்கள் ஆபாச (obscene) மற்றும் வன்முறை உள்ளடக்கத்தைப் (violent content) பிரதிபலிப்பதற்கு இதைப் பயன்படுத்துகின்றன என்று மக்களின் கவலையாக உள்ளது.


2. தற்போதைய சட்டங்களின் கீழ் சில விதிகள் இருந்தாலும், அத்தகைய தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு கடுமையான மற்றும் பயனுள்ள சட்ட கட்டமைப்பிற்கான கோரிக்கை அதிகரித்து வருவதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தலைமையிலான தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நிலைக்குழுவிடம் (Standing Committee) அது தெரிவித்துள்ளது. "இந்த கோரிக்கையின் முன்னேற்றங்கள் அமைச்சகத்தின் கவனத்தில் கொண்டுள்ளது மற்றும் தற்போதைய சட்டப்பூர்வ விதிகள் மற்றும் ஒரு புதிய சட்ட கட்டமைப்பின் அவசியத்தை ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ளது" என்று அது குறிப்பிட்டுள்ளது.


3. 10 நாட்களுக்குள், தற்போதைய சட்டங்களில் தேவையான மாற்றங்கள் குறித்து பிப்ரவரி 13 அன்று நிலைக்குழுவானது, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் கேட்டது. இந்தப் புதிய தொழில்நுட்பம் மற்றும் ஊடகத் தளங்கள் காரணமாக சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்தை அவர்கள் கவனிக்க விரும்பினர்.


4. மூன்று நாட்களுக்கு முன்பு, பிப்ரவரி 19 அன்று, சமூக ஊடக சேனல்கள் (social media channels) மற்றும் OTT தளங்கள் (OTT platforms) தகவல் தொழில்நுட்ப விதிகள் (IT Rules)-2021ஆம் ஆண்டில் உள்ள நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு மத்திய அமைச்சகம் கேட்டுக் கொண்டது. இதில், குழந்தைகள் பொருத்தமற்ற உள்ளடக்கத்தைப் (inappropriate material) பார்ப்பதைத் தடுக்க “A-மதிப்பீடு பெற்ற உள்ளடக்கத்திற்கான அணுகல் கட்டுப்பாட்டை” அமைக்கவும் குழுவினர் அமைச்சகத்திடம் கூறினர்.


5. சட்டமானது, OTT தளங்கள் சில விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கோருகிறது. சட்டத்தால் தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்தை அவை உள்ளீடு செய்யக்கூடாது. மேலும், பயனர்களின் வயதை அடிப்படையாகக் கொண்டே உள்ளடக்கத்தையும் வகைப்படுத்த வேண்டும். இந்தச் சட்டமானது, பெண்களை அநாகரீகமாக பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டம்-1986 (Indecent Representation of Women Act), பாரதிய நியாய சன்ஹிதா-2023 (Bhartiya Nyaya Sanhita (BNS)), பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (Protection of Children from Sexual Offences (POCSO)) மற்றும் தகவல் தொழில்நுட்ப (Information Technology (IT) Act) சட்டம்-2000 உள்ளிட்ட பல செயல்களைக் குறிக்கிறது. தவறான (obscene) அல்லது ஆபாச உள்ளடக்கத்தை (pornographic content) வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று இந்தச் சட்டங்கள் கூறுகின்றன.


6. இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீட்டின்-2021 (Intermediary Guidelines and Digital Media Ethics Code (IT Rules, 2021)) பகுதி III-ன் கீழ், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் (online streaming platforms) மூன்று நிலைகளில் குறை தீர்க்கும் முறையைப் பின்பற்ற வேண்டும். இந்த அமைப்பு நெறிமுறைகளின் மீறல்களை நிவர்த்தி செய்ய உதவுகிறது.


நெறிமுறைகள் குறியீடு (Code of Ethics) சட்டவிரோத உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கானத் தளங்களைத் தடை செய்கிறது. வயதின் அடிப்படையில் உள்ளடக்கத்தை வகைப்படுத்தவும் அவர்களைக் கோருகிறது. கூடுதலாக, இது குழந்தைகள் ‘A’-மதிப்பீடு பெற்ற உள்ளடக்கத்தை (‘A’-rated content) அணுகுவதை கட்டுப்படுத்துகிறது.


உங்களுக்குத் தெரியுமா? :


1. YouTube டிஜிட்டல் மீடியா மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகளின் (IT Rules) நெறிமுறைக் குறியீட்டால் நிர்வகிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த விதிகள் இணையத் தளத்தால் நிர்வகிக்கப்படும் உள்ளடக்கத்திற்கு மட்டுமே பொருந்தும். ஒரு தனிநபரின் சேனலில் பதிவேற்றப்படும் உள்ளடக்கத்திற்கு, YouTube ஒரு வெளியீட்டாளராகக் கருதப்படுவதில்லை. அதற்கு பதிலாக, இது ஒரு சமூக ஊடக இடைத்தரகராகக் கருதப்படுகிறது. ஏனெனில், பதிவிடக்கூடிய உள்ளடக்கம் பயனர் உருவாக்கியது ஆகும். இதனால், உள்ளடக்கத்தைத் தடுப்பது மற்றும் பிற உரிய முயற்சிக்கானத் தேவைகளைப் பூர்த்தி செய்வது போன்ற சில அரசாங்க விதிகளைப் பின்பற்றும் வரை, இந்த உள்ளடக்கத்திற்கு YouTube பொறுப்பேற்க முடியாது.


2. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை (right to freedom of speech and expression) முழுமையானது அல்ல. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19 இந்த உரிமையை உறுதி செய்கிறது. இருப்பினும், இது நற்பண்பு (decency) மற்றும் ஒழுக்கம் (morality) போன்ற சில காரணங்களுக்காக நியாயமான கட்டுப்பாடுகளையும் அனுமதிக்கிறது. இதன் பொருள், ஒரு செயல் அல்லது உள்ளடக்கம் ஆபாசமானதா (Obscenity) என்பதை தீர்மானிக்கும்போது, ​​பேச்சு சுதந்திரம் சமூகத்தின் தார்மீக தரங்களுடன் சமநிலைப்படுத்தப்பட வேண்டும், மேலும் அது தண்டிக்கப்பட வேண்டும்.


இணையவழி ஆபாசமான உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள்


1. பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (Bharatiya Nyaya Sanhita, 2023 (BNS)) : புத்தகங்கள், ஓவியங்கள் மற்றும் உருவங்கள் போன்ற ஆபாசமான பொருட்களை விற்பனை செய்பவர்கள், இறக்குமதி செய்பவர்கள், ஏற்றுமதி செய்பவர்கள், விளம்பரம் செய்பவர்கள் அல்லது லாபம் ஈட்டுபவர்களை BNS பிரிவு 294 தண்டிக்கும். மேலும், "மின்னணு வடிவத்தில் எந்தவொரு உள்ளடக்கத்தையும் காட்சிப்படுத்துபவர்களையும்" இந்த சட்டப்பிரிவு உள்ளடக்கியது. மேலும், சட்டம் அத்தகைய உள்ளடக்கமான அதீத காமம் மிகுந்த (lascivious) அல்லது அதிகப்படியான பாலியல் (overly sexual) என்று விவரிக்கிறது. அதைப் படிக்க, பார்க்க அல்லது கேட்க வாய்ப்புள்ளவர்களுக்கு கேடு விளைவிக்கும் உள்ளடக்கமும் இதில் அடங்கும்.


2. தகவல் தொழில்நுட்ப (Information Technology (IT) Act) சட்டம், 2000-ம் ஆண்டின் பிரிவு 67 : இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் ஆபாசம் தொடர்பான சட்டம் உருவாகியுள்ளது. இது, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67-ன் படி, மின்னணு முறையில் ஆபாசமான விஷயங்களை வெளியிடும் அல்லது அனுப்பும் எவரும் இந்தச் சட்டத்தின் கீழ் தண்டனையை எதிர்கொள்ளலாம்.




Original article:

Share:

டாலர்-ரூபாய் பரிமாற்றம் என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


• மத்திய வங்கியின் இந்த முயற்சி, அமைப்பின் பணப்புழக்கத் தேவைகளுக்கு நீடித்த தீர்வை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே, நேரத்தில் ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்தி நாட்டின் அந்நியச் செலாவணியை வலுப்படுத்துகிறது.


• இந்த பரிமாற்ற வழிமுறை வங்கிகளுக்கு உடனடி பணப்புழக்கத்தை வழங்குவதன் மூலம் ரூபாயை நிலைப்படுத்தி உதவுகிறது. வெளிநாட்டு நிதிகள் நாட்டைவிட்டு வெளியேறும்போது ரூபாயின் மீதான அழுத்தத்தை இது குறைக்கிறது. இது தற்காலிக நிவாரணம் அளிக்கிறது. சந்தை நம்பிக்கையை அதிகரிக்கிறது மற்றும் மாற்று விகிதத்தில் தீவிர ஏற்ற இறக்கங்களைத் தடுக்கும்.


• இந்த பரிமாற்றம் ரிசர்வ் வங்கியின் டாலர் இருப்புகளையும் அதிகரிக்கும். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்க ரிசர்வ் வங்கி அந்நிய செலாவணி சந்தையில் தலையிடுவதால் இது முக்கியமானது. அடுத்த வாரம், ரிசர்வ் வங்கி 3 ஆண்டு காலத்திற்கு $10 பில்லியன் பரிமாற்ற ஏலத்தை நடத்தும்.


• ஜனவரி 2025-ல், இந்திய வங்கி அமைப்பு 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பணப்புழக்க நெருக்கடியை சந்தித்தது. பணப்புழக்க பற்றாக்குறை ஜனவரி 23 அன்று ₹3.15 லட்சம் கோடியை எட்டியது. இது 15 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும்.


• ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்த ரிசர்வ் வங்கி டாலர்களை விற்று வருகிறது. இது வங்கி அமைப்பில் ரூபாய் பணப்புழக்கத்தைக் குறைத்தது.


• இந்த பரிமாற்றம் ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து ஒரு எளிய வாங்கி-விற்கும் அந்நிய செலாவணி பரிவர்த்தனையாகும். ஒரு வங்கி ரிசர்வ் வங்கிக்கு அமெரிக்க டாலர்களை விற்கும். அதே, நேரத்தில் பரிமாற்ற காலத்தின் முடிவில் அதே அளவு அமெரிக்க டாலர்களை வாங்க ஒப்புக்கொள்கிறது.


•கடந்த ஐந்து வாரங்களில் ரிசர்வ்வங்கி, வங்கி அமைப்பில் ₹3.6 லட்சம் கோடியைச் சேர்த்தது. இது கடன் கொள்முதல்கள், அந்நிய செலாவணி பரிமாற்றங்கள் (forex swaps) மற்றும் நீண்டகால மறுசுழற்சிகள் மூலம் செய்யப்பட்டது.


உங்களுக்குத் தெரியுமா?


• சந்தையில் ரூபாய் பணப்புழக்க நிலைமைகளை நீடித்த அடிப்படையில் சரிசெய்ய ரிசர்வ் வங்கி திறந்த சந்தை செயல்பாடுகளை (Open Market Operations (OMOs)) பயன்படுத்துகிறது. திறந்த சந்தை செயல்பாடுகள் நீண்டகால அடிப்படையில் பணப்புழக்கத்தை சரிசெய்ய உதவுகின்றன. அதிகப்படியான பணப்புழக்கம் இருக்கும்போது, ரிசர்வ்வங்கி அரசுப் பத்திரங்களை விற்கிறது. இது சந்தையில் ரூபாய் பணப்புழக்கத்தைக் குறைக்கிறது. பணப்புழக்கப் பற்றாக்குறை இருக்கும்போது, ​​ரிசர்வ்வங்கி அரசுப் பத்திரங்களை வாங்குகிறது. இது சந்தையில் பணப்புழக்கத்தைச் அதிகரிக்கிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அமைப்பில் பண விநியோகத்தை ஒழுங்குபடுத்தவும் திறந்த சந்தை செயல்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன.




Original article:

Share:

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான தமிழ்நாட்டின் சமீபத்திய போராட்டத்திற்கு காரணம் என்ன? - ரோஷ்னி யாதவ்

 நிதிப் பகிர்வு தொடர்பாக தமிழ்நாட்டிற்கும் ஒன்றிய அரசுக்கும் இடையிலான மோதல் தற்போது கல்வி மற்றும் மொழிக் கொள்கைகள் வரை விரிவடைந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) 2020-ஐ ஏற்றுக்கொண்டு மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றாவிட்டால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி கிடைக்காது என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். இது மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக கடுமையான போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. அரசியல் காரணங்களுக்காக திமுக அரசு தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் மும்மொழிக் கொள்கையை நிராகரித்ததாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டினார். அவர்கள் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டவர்கள் போல் நடந்து கொள்ளக்கூடாது என்று கூறினார்.


2. சமக்ர சிக்ஷா நிதியை தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்வதோடு இணைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஸ்டாலின் கூறினார்.


3. குறிப்பாக, தமிழ்நாடு நீண்ட காலமாக மும்மொழிக் கொள்கையை எதிர்த்து வருகிறது. 1960-களில் இருந்து, இந்தி சேர்க்கப்படுவதை நிராகரித்து, தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இருமொழிக் கொள்கையை அரசு பின்பற்றி வருகிறது. இந்தக் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றும் நவோதயா வித்யாலயாக்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படவில்லை.


2020-ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP))


1. நாட்டில் கல்வி வளர்ச்சியை வழிநடத்துவதற்கான ஒரு விரிவான கட்டமைப்பே தேசிய கல்விக் கொள்கை ஆகும். கல்விக்கான தொலைநோக்குப் பார்வை மற்றும் தத்துவம் இல்லாததற்காக அப்போதைய அரசாங்கத்தை காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தேஷ்வர் பிரசாத் விமர்சித்தபோது, ​​1964-ஆம் ஆண்டு ஒரு கொள்கைக்கான தேவை முதன்முதலில் உணரப்பட்டது. அதே ஆண்டில், அப்போதைய பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)) தலைவர் டி.எஸ். கோத்தாரி தலைமையில் 17 உறுப்பினர்களைக் கொண்ட கல்வி ஆணையம், கல்வி குறித்த தேசிய மற்றும் ஒருங்கிணைந்த கொள்கையை வரைவு (draft) செய்வதற்காக அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், நாடாளுமன்றம் 1968-ல் முதல் கல்விக் கொள்கையை (first education policy) நிறைவேற்றியது.


2. தேசிய கல்விக் கொள்கை 2020 என்பது இந்தியாவின் மூன்றாவது தேசிய கல்விக் கொள்கையாகும். முதல் தேசிய கல்விக் கொள்கை 1968-ல் பிரதமர் இந்திரா காந்தியின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாவது தேசிய கல்விக் கொள்கை 1986-ல் பிரதமர் ராஜீவ் காந்தியின் கீழ் வந்தது. 1992-ல், பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது இந்தக் கொள்கை திருத்தப்பட்டது. மூன்றாவது தேசிய கல்விக் கொள்கை, 2020-ல் வெளியிடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.


3. தேசிய கல்விக் கொள்கை ஒரு பரந்த வழிகாட்டுதலை வழங்குகிறது. ஆனால், அதைப் பின்பற்றுவது கட்டாயமில்லை. கல்வி பொதுப்பட்டியலில்  (concurrent subject) இடம் பெற்றுள்ளதால் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இரண்டும் இதில் சட்டங்களை இயற்றலாம். தற்போதைய, அரசாங்கம் 2040ஆம் ஆண்டிற்குள் இந்தக் கொள்கையை முழுமையாக செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.


சமக்ர சிக்ஷா அபியான்

                  பள்ளிக் கல்விக்கான ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டமாக சமக்ர சிக்ஷா அபியான் 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது சர்வ சிக்ஷா அபியான் (Sarva Shiksha Abhiyan (SSA)), ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்ஷா அபியான் (Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA)) மற்றும் ஆசிரியர் கல்வி (TE) ஆகிய திட்டங்களை ஒன்றிணைத்து செயல்படுத்தப்படுகிறது.


மும்மொழிக் கொள்கை என்றால் என்ன?


மும்மொழிக் கொள்கை 1968-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி, இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மாணவர்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர ஒரு இந்திய மொழியையும், இந்தி பேசாத மாநிலங்களில், பிராந்திய மொழி மற்றும் ஆங்கிலத்தையும் கற்க வேண்டும்.


இந்தியாவில் இந்தி எவ்வளவு பரவலாகப் பேசப்படுகிறது?


1. 2011 மொழியியல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகள் உட்பட 121 தாய்மொழிகள் உள்ளன. இந்தி மிகவும் பரவலாகப் பேசப்படுகிறது, 52.8 கோடி தனிநபர்கள், அல்லது மக்கள் தொகையில் 43.6% பேர், அதைத் தங்கள் தாய்மொழியாக அறிவித்தனர். இரண்டாவதாக 9.7 கோடி (8%) பேருக்கு தாய்மொழியாக பெங்காலி உள்ளது.


2. இந்தி தெரிந்தவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, இந்தி தெரிந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமாகும். கிட்டத்தட்ட 13.9 கோடி (11% க்கும் அதிகமானோர்) இந்தியை தங்கள் இரண்டாவது மொழியாக அறிவித்தனர். இது 55% மக்கள்தொகைக்கு தாய்மொழி அல்லது இரண்டாவது மொழி ஆகும்.


இந்தி திவாஸ் (இந்தி தினம்)


1. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ஆம் தேதி இந்தி திவாஸ் அல்லது இந்தி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சபை இந்தியை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக மாற்றியதை இது நினைவுகூரும் நாளை இது குறிக்கிறது. 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலத்திற்கு இணை மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. 


2. மூன்று நாட்கள் விரிவான விவாதங்களுக்குப் பிறகு அரசியலமைப்பு சபை இந்தியை நாட்டின் அலுவல் மொழியாகத் தேர்ந்தெடுத்தது. (குறிப்பு: இந்தி தேசிய மொழியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.)


3. ஒன்றிய அரசு எந்த எழுத்து முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும், எந்த எழுத்து முறையை எண்களில் பயன்படுத்த வேண்டும், ஆங்கிலத்தின் நிலை என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதங்கள் நடந்தன. இந்துஸ்தானி (இது இந்தி மற்றும் உருது கூறுகளின் கலவையாகும்) மற்றும் சமஸ்கிருதமும் அதிகாரப்பூர்வ மொழியாக முன்மொழியப்பட்டது.


4. முன்ஷி-அய்யங்கார் கொள்கை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு வரைவுக் குழு உறுப்பினர்களான கே.எம். முன்ஷி மற்றும் என். கோபாலசாமி அய்யங்கார் ஆகியோரின் பெயர் சூட்டப்பட்டது. முன்ஷி-அய்யங்கார் கொள்கையின் ஒரு பகுதியாக, 1950-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் பிரிவு 343 கூறியது:


முன்ஷி-அய்யங்கார் கொள்கை மற்றும் இந்தி திவாஸ்


(அ) ஒன்றிய அரசின் அலுவல் மொழி தேவநாகரி எழுத்துக்களில் இந்தி மொழியாக இருக்கும்.


(ஆ) ஒன்றிய அரசின் அலுவல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் எண்களின் வடிவம் இந்திய எண்களின் சர்வதேச வடிவமாக இருக்கும்.


(இ) இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 15 ஆண்டுகளுக்கு இந்த விதி அமலில் இருந்தது. அரசியலமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு இருந்ததைப் போலவே, ஒன்றிய அரசின் அனைத்து அலுவல் நோக்கங்களுக்கும் ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.


5. 15 ஆண்டு காலம் முடிவுக்கு வந்தபோது, ​​இந்தி பேசாத பல மாநிலங்கள் தங்கள் மீது இந்தி திணிக்கப்படும் என்று அச்சத்தில் போராட்டங்களை நடத்தின. குறிப்பாக, தமிழ்நாட்டில் போராட்டம் கடுமையாக இருந்தது. இதை சரி செய்ய, ஒன்றிய அரசு அலுவல் மொழிகள் சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டம் இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாகவே இருக்கும் என்பதை உறுதி செய்தது.




Original article:

Share:

UGC-CARE இதழ்களின் பட்டியல் ஏன் நிறுத்தப்பட்டது? -ஏ. எம். ஜிகெய்ஷ்

 கல்வி இதழ்கள் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு அறிமுகப்படுத்தப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட அளவுருக்கள் என்ன? இது தரம் குறைந்த இதழ்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்குமா?


பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)), கல்வி மற்றும் ஆராய்ச்சி நெறிமுறைகளுக்கான பல்கலைக்கழக மானியக் குழு கூட்டமைப்பு (UGC Consortium for Academic and Research Ethics (UGC-CARE)) பட்டியலை நிறுத்த முடிவு செய்துள்ளது. 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்ட UGC-CARE பட்டியல், தரமான கல்வி இதழ்களின் பட்டியலாகும். UGC-CARE பட்டியல், பத்திரிகைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரைக்கும் அளவுருக்களால் மாற்றப்படும். இந்த அளவுருக்கள் 8 அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டவை. பங்குதாரர்கள் பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் தங்கள் பரிந்துரைகளை வழங்கலாம்.


புதிய அளவுருக்கள் என்ன சொல்கின்றன?


"சக மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகைகளுக்கான பரிந்துரை அளவுருக்கள்" (Suggestive Parameters for Peer-Reviewed Journals) என்ற தலைப்பிலான வரைவு அறிவிப்பில் 8 அளவுகோல்களின் கீழ் 36 பரிந்துரைக்கும் அளவுருக்கள் உள்ளன. பத்திரிகையின் ஆரம்ப அளவுகோல்களின் கீழ், வெளியீட்டிற்கு ஒரு கட்டுரையை அனுப்புவதற்கு முன், பத்திரிகை தலைப்பு, சர்வதேச தரநிலை வரிசை எண், கால இடைவெளி, தொடர்ச்சி மற்றும் வெளிப்படைத்தன்மை மதிப்பாய்வு கொள்கை போன்றவற்றைக் கவனிக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு ஆசிரியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. ஆசிரியர் குழு அளவுகோல்களின் கீழ், பத்திரிகையின் ஆசிரியர் குழு விவரங்கள் மற்றும் ஆசிரியர் குழு அமைப்பு கிடைக்கச் செய்யப்படுவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு விரும்புகிறது. இதேபோல், பரிந்துரைக்கும் அளவுகோல்களின் கீழ் உள்ள பிற அளவுகோல்களில் பத்திரிகை தலையங்கக் கொள்கை, பத்திரிகை தரநிலைகள், பத்திரிகை தெரிவுநிலை மற்றும் ஆராய்ச்சி நெறிமுறைகள் ஆகியவை அடங்கும்.


பல்கலைக்கழக மானியக் குழு ஏன் அதைத் திரும்பப் பெற்றது?


UGC-CARE பட்டியலின் நோக்கம், ஆசிரியர் தேர்வுகள், பதவி உயர்வுகள் மற்றும் ஆராய்ச்சி நிதி விண்ணப்பங்களுக்கு "நற்பெயர் பெற்ற" பத்திரிகைகள் மட்டுமே அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்வதாகும். UGC தலைவர் எம். ஜெகதேஷ் குமாரின் கூற்றுப்படி, கல்வி மற்றும் ஆராய்ச்சி நெறிமுறைகளுக்கான பல்கலைக்கழக மானியக் குழு கூட்டமைப்பு பட்டியல் பல விமர்சனங்களை இருந்தன: இதில் உயர்தர ஆராய்ச்சி மற்றும் பத்திரிகைகள் என்ன என்பதை தீர்மானிப்பதில் அதிகப்படியான ஒன்றிய அரசின் ஈடுபாடு மற்றும் பட்டியலில் இருந்து பத்திரிகைகளைச் சேர்ப்பதில் அல்லது நீக்குவதில் ஏற்பட்ட தேவையற்ற தாமதங்கள் ஆகியவை அடங்கும். UGC CARE பட்டியலின்படி, தமிழ் போன்ற சில துறைகளில் ஆராய்ச்சி இதழ்களின் கிடைக்கும் தன்மை குறைவாக இருப்பதாக கல்வியாளர்கள் தங்களது கவலைகளை தெரிவித்தனர். முடிவெடுக்கும் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை தெளிவாக இல்லை என்றும் இந்திய மொழிகளில் மிகவும் மதிக்கப்படும் பல பத்திரிகைகள் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளதாகவும் குமார் கூறினார்.


மேலும், புதிய அணுகுமுறை அதிக பணம் வசூலிக்கும் பத்திரிகைகளுக்கு எதிராக போராடவும், கல்வி இதழ்களைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறையை பரவலாக்கவும் உதவும் என்று பல்கலைக்கழக மானியக் குழு கூறுகிறது. உயர்கல்வி நிறுவனங்கள், "இப்போது பத்திரிகைகளை மதிப்பிடுவதற்கும் அவை உயர் நெறிமுறை மற்றும் அறிவார்ந்த தரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்கும் நம்பகமான வழிமுறைகளை நிறுவுவதற்கான பொறுப்பை பெற்றுள்ளன. வெளியீடுகள் மற்றும் பத்திரிகைகளின் தரத்தை மதிப்பிடுவதற்கு அவர்கள் தங்கள் சொந்த நிறுவன வழிமுறைகளை உருவாக்க முடியும். மதிப்பீட்டு வழிமுறைகள் UGCயின் பரிந்துரைக்கப்பட்ட அளவுருக்கள் மற்றும் கல்வி விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று UGC தலைவர் எம். ஜெகதேஷ் குமார் கூறினார். இந்தப் பரவலாக்கப்பட்ட அணுகுமுறை (decentralised approach) உயர்கல்வி நிறுவனங்களை அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப மதிப்பீட்டு செயல்முறைகளை வடிவமைக்க அனுமதிக்கிறது என்று குமார் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். நிறுவனங்கள் இப்போது பல்வேறு துறைகளின் தனித்துவமான பண்புகளைக் கருத்தில் கொண்டு, புதிய வளர்ந்துவரும் துறைகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் மதிப்பீட்டு மாதிரிகளை உருவாக்கலாம்.


என்ன பதில் கிடைத்தது?


மாணவர்களும் கல்வியாளர்களும் சமீபத்திய நடவடிக்கை குறித்து தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கை தரமில்லாத கல்வி இதழ்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று விமர்சகர்கள் கவலைப்படுகிறார்கள். இந்திய மாணவர் கூட்டமைப்பின் (Students’ Federation of India (SFI)) ஒன்றிய செயற்குழு UGCயின் முடிவை கடுமையாக எதிர்த்தது. மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் கலந்தாலோசிக்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக SFI கண்டித்தது. இந்தியாவில் கல்வி ஒருமைப்பாடு மற்றும் தரமான ஆராய்ச்சிக்கு பின்னடைவு என்று SFI கூறியது. தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) 2020-ன் கீழ் உயர்கல்வியில் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான பரந்த போக்குடன் SFI இந்த முடிவை இணைத்தது. கல்வி சுதந்திரத்திற்கு பரவலாக்கம் முக்கியம் என்பதை SFI ஒப்புக்கொண்டது. ஆனால், ஒன்றிய அரசு மேற்பார்வை இல்லாமல், பத்திரிகை மதிப்பீடுகள் தன்னிச்சையாகவும் நிறுவனங்கள் முழுவதும் சீரற்றதாகவும் மாற்றக்கூடும் என்று எச்சரித்தது.




Original article:

Share:

திறமை பற்றாக்குறை - உலகளாவிய சவால், இந்தியாவின் வாய்ப்பு -ஜோதி விஜ்

 திறமையான தொழிலாளர்களுக்கான தேவை இருப்பைவிட அதிகமாக இருக்கும். முக்கியமான பிராந்தியங்களில் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியா விரைவாகச் செயல்பட வேண்டும்.


உலகளாவிய தொழிலாளர் சந்தை எதிர்காலத்திற்கு இன்னும் தயாராக இல்லை. எந்த ஒரு நபராலும் எதிர்காலத்தை முழுமையான துல்லியத்துடன் கணிக்க முடியாது. இருப்பினும், 2030-ஆம் ஆண்டில் தேவைப்படும் திறன்கள் இன்றைய திறன்களிலிருந்து மிகவும் வேறுபட்டதாக இருக்கும் என்று தெளிவாகத் தெரிகிறது. இந்த சூழ்நிலை முழு உலகிற்கும் ஒரு சவாலை முன்வைக்கிறது. அதே நேரத்தில், இந்தியாவிற்கு இது ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது.


FICCI-KPMG நடத்திய சமீபத்திய ஆய்வான இந்திய தொழிலாளர் படையின் உலகளாவிய இயக்கம் (Global Mobility of Indian Workforce) 2030-ஆம் ஆண்டிற்குள், திறமையான தொழிலாளர்களுக்கான தேவை இருப்பைவிட அதிகமாக இருக்கும் என்றும், இதனால் 85.2 மில்லியனுக்கு  மேல் திறமை பற்றாக்குறை ஏற்படும் என்றும் கணித்துள்ளது. "இந்த உலகளாவிய திறன் பற்றாக்குறை 2030-ஆம் ஆண்டிற்குள் $8.45 டிரில்லியன் வருடாந்திர வருவாயை அடைய முடியாத அளவுக்கு அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஜெர்மனி மற்றும் ஜப்பானின் ஒருங்கிணைந்த மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாக இருக்கும்” என்று ஆய்வு கூறுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த சூழ்நிலை ஒரு சவாலையும் வாய்ப்பையும் உருவாக்குகிறது. $8.45 டிரில்லியனில் ஒரு பெரிய பங்கை விரைவாக அடைவதை இலக்காக வைத்துள்ளது.


இந்த சவாலை எதிர்கொள்ள, குறிப்பிட்ட உத்திகள் தேவைப்படுகிறது. சர்வதேச ஒத்துழைப்பும் முக்கியமானது. முன்னெச்சரிக்கை கொள்கை நடவடிக்கைகள் பணியாளர் இயக்கத்தை மேம்படுத்தவும் பொருளாதார உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவும். தேசிய அளவில், ஒருங்கிணைந்த முயற்சி மிகவும் முக்கியமான நடவடிக்கையாகும். இந்த இலக்கை அடைய அரசு, தனியார் துறை மற்றும் பிற பங்குதாரர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


புவியியல் பகுதிகள் மற்றும் அவற்றின் தேவைகள்


வளைகுடா ஒத்துழைப்பு குழு (Gulf Cooperation Council (GCC)), ஐரோப்பா (ஐக்கிய ராச்சியம் உட்பட) மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை பணியாளர்கள் இயக்கத்திற்கு மூன்று முக்கியமான பகுதிகள் ஆகும். திறமை பற்றாக்குறை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது. இது பிராந்தியத்திற்கு ஏற்ப ஒவ்வொன்றும் தனித்துவமான பணியாளர் தேவைகளைக் கொண்டுள்ளன.


இருப்பினும், இந்த மூன்று பிராந்தியங்களிலும் சுகாதாரப் பராமரிப்பு ஒரு பொதுவான தேவையாக இருக்கும். வயதான மக்கள்தொகை மற்றும் அதிகரித்து வரும் சுகாதாரப் பராமரிப்பு தேவைகள் தேவையை அதிகரிக்கின்றன. பொதுவாக, மூன்று பிராந்தியங்களிலும் சேவைத் துறை முக்கியமானதாக இருக்கும்.


 இருப்பினும், வளைகுடா ஒத்துழைப்பு குழு மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு உற்பத்தி மற்றும் கட்டுமானம் மிக முக்கியமானதாக இருக்கும். தொழில்துறைக்குப் பிந்தைய பழமையான சமூகமாக இருக்கும் ஐரோப்பாவிற்கு சேவைத் துறையில் அதிக தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள். புதிய தொழில்களும் உருவாகி வருகின்றன. இந்த அனைத்து பிராந்தியங்களிலும் தானியங்கி தொழில்நுட்பம் (automation), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)), பெரிய தரவு, முன்கணிப்பு பகுப்பாய்வு, இணையம் (internet of things (IoT)), பிளாக்செயின், மேலாண்மை, வள செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் திறன்களுக்கான தேவை அதிகரித்து வருவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தற்போதுள்ள தடைகள் மற்றும் உத்திகள்


திறமையான தொழிலாளர்கள் எல்லைகளைத் தாண்டிச் செல்வதற்கு பல தடைகள் உள்ளன. ஒரு பெரிய தடையாக ஒழுங்குமுறை மற்றும் குடியேற்ற விதிகள் உள்ளன. சிக்கலான விசா செயல்முறைகள் மற்றும் கடுமையான பணி அனுமதி விதிமுறைகள் திறமையான இடம்பெயர்வை கடினமாக்குகின்றன. மற்றொரு சவால் ஆட்சேர்ப்பு முறைகேடுகள் மற்றும் கடத்தல் ஆகும். நியாயமற்ற பணியமர்த்தல் நடைமுறைகள் மற்றும் மனித கடத்தல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை ஆபத்தில் ஆழ்த்துகின்றன.


பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்காவிற்கு பயணம் செய்தபோது, ​​இந்தப் பிரச்சினை குறித்துப் பேசினார். இதை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஒன்று கொள்கைத் தடைகள் மற்றும் திறன் பொருத்தமின்மை ஆகும். பல இந்திய பட்டங்கள், குறிப்பாக மருத்துவத்தில், ஐரோப்பாவின் சில பகுதிகளில் அங்கீகரிக்கப்படவில்லை. இதன் விளைவாக தகுதிவாய்ந்த நிபுணர்களுக்கு வேலையின்மை ஏற்படுகிறது. மற்றொரு சவால் மொழி மற்றும் கலாச்சாரத் தடைகள் ஆகும். புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதிலும், வெவ்வேறு கலாச்சாரங்களுக்கு ஏற்ப மாற்றுவதிலும் தொழிலாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்தச் சவால்கள் அவர்களின் செயல்திறனையும் உற்பத்தித்திறனையும் பாதிக்கின்றன.


இது போன்ற சவால்களை எதிர்கொள்ள இந்திய அரசு பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (Free Trade Agreements (FTAs)) ஒரு முக்கிய படியாகும். இந்திய தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வளைகுடா ஒத்துழைப்பு குழுவில் உள்ள நாடுகளுடன் இந்தியா பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, கூட்டு இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates (UAE)) தொலைநோக்குப் பார்வை இரு நாடுகளுக்கும் இடையிலான திறன் ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. மற்ற முக்கியமான முயற்சிகளில் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பணியாளர் ஆதரவிற்கான டிஜிட்டல் தளங்கள் அடங்கும். திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் (skill development programmes) தொழிலாளர்கள் உலகளாவிய சந்தைத் தேவைகளுக்கு ஏற்ற திறன்களைப் பெற உதவுகின்றன.  வளைகுடா ஒத்துழைப்பு குழுவில் இடம் பெற்றுள்ள நாடுகளுக்கு டிஜிட்டல் ஆட்சேர்ப்புத் தளங்கள், தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்புகளை உறுதி செய்வதிலும், மோசடி செய்பவர்களிடமிருந்து அவர்களைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகின்றன.


திறமையான தொழிலாளர்களுக்கான உலகளாவிய தேவையைப் பயன்படுத்திக் கொள்ள, துறைசார்ந்த திறன் பயிற்சி (பணியாளர் பயிற்சி) இலக்கு புவியியல் தேவைகளுக்கு ஏற்ப சீரமைக்கப்பட வேண்டும் மற்றும் வளர்ந்து வரும் துறைகளுக்கு ஏற்ப தயாரிப்பு தேவைப்படுகிறது. 


1. துறை சார்ந்த திறன் பயிற்சி - பணியாளர் பயிற்சி இலக்கு பிராந்தியங்களின் தேவைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும். வளர்ந்து வரும் துறைகளுக்கும் தயாரிப்பு தேவைப்படுகிறது.


2. ஆட்சேர்ப்பு நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல் - ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்களில் அதிகாரிகள் கடுமையான விதிகளை செயல்படுத்த வேண்டும். இது சுரண்டல் மற்றும் கடத்தலைத் தடுக்க உதவும்.


3. தகுதிகளை அங்கீகரித்தல் - சர்வதேச ஒத்துழைப்புகள் கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகளை பரஸ்பரம் அங்கீகரிப்பதை உறுதி செய்ய வேண்டும். இது பணியாளர் ஒருங்கிணைப்பை எளிதாக்கும்.


4. பொது-தனியார் கூட்டாண்மைகளை ஊக்குவித்தல் (incentivising public-private partnerships) - ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தனியார் துறையை பயிற்சித் திட்டங்களிலும் உலகளாவிய வேலை வாய்ப்புகளிலும் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும்.


5. வட்ட இடம்பெயர்வு மற்றும் இயக்கத்தை ஊக்குவித்தல் (promoting circular migration and mobility) - தற்காலிக வேலை விசாக்கள் மற்றும் சுழற்சி பணியாளர் மாதிரிகள் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தாமல் தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்க உதவும்.


அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப குடியேற்றக் கொள்கைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஐரோப்பா கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தக்கூடும். இதனால் இடம்பெயர்வு மிகவும் கடினமாகிறது. இருப்பினும், ஆஸ்திரேலியா திறமையான தொழிலாளர்களுக்கு மிகவும் திறந்த நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியாவில் இரண்டாவது பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் புலம்பெயர்ந்தோர் குழுவாக இந்தியர்கள் இருப்பதாக FICCI-KPMG ஆய்வு கூறுகிறது.


இந்தியாவின் நன்மை


கடுமையான குடியேற்றக் கொள்கைகள் முக்கியமாக சட்டவிரோத இடம்பெயர்வைத் தடுப்பதில் கவனம் செலுத்துகின்றன. அரசியல் கருத்துக்கள் மாறிக்கொண்டிருந்தாலும், உலகளவில் அதன் திறமையான பணியாளர்களை ஊக்குவிப்பதில் இந்தியா உறுதியாக இருக்க வேண்டும். இந்தியத் தொழிலாளர்களுக்கு ஒரு பெரிய நன்மை என்னவென்றால், பெரும்பாலான நாடுகளில் அவர்கள் அதிக சட்ட விரோதத்தை எதிர்கொள்ளவில்லை. குடியேற்ற எதிர்ப்பு உணர்வுகள் உள்ள இடங்களில்கூட, திறமையான இந்தியத் தொழிலாளர்கள் இன்னும் வேலை வாய்ப்புகளைக் காண்கிறார்கள். இந்த நன்மையைத் தக்க வைத்துக் கொள்ள, இந்திய அரசாங்கம் சட்டவிரோத இடம்பெயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். இது இந்தியத் தொழிலாளர்களை சுரண்டலில் இருந்து பாதுகாக்கும் மற்றும் திறமையான தொழிலாளர்களின் நம்பகமான வழங்குநராக இந்தியாவின் நற்பெயரை மேம்படுத்தும்.


இது இந்தியா விக்ஸித் பாரத் (வளர்ந்த இந்தியா) இலக்கை அடைய உதவும். 16-வது நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா சமீபத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2030-ஆம் ஆண்டுக்குள் $6.5 டிரில்லியன் முதல் $9 டிரில்லியன் வரை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்தார். இந்தியா $9 பில்லியனை எட்டுவதற்கான வாய்ப்புகள், அது உணரப்படாத $8.45 டிரில்லியன் உலகளாவிய பொருளாதார ஆற்றலில் எவ்வளவு கைப்பற்ற முடியும் என்பதைப் பொறுத்திருக்கும்.


ஜோதி விஜ், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI)) தலைமை இயக்குநராக உள்ளார்.




Original article:

Share: