ஏமாறாதீர்கள் - 'மும்மொழிக் கொள்கையானது' இந்தியைத் திணிப்பது -பழனிவேல் தியாகராஜன்

 தமிழர்கள் போன்ற பண்டைய கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது அவர்களின் அடையாளத்தை மாற்றவோ முடியாது. அவர்களின் மொழிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், ஒன்றிய அரசு தனது அரசியல் நோக்கத்திற்காக எந்தவொரு சாத்தியமான வழியையும் பயன்படுத்தும் அணுகுமுறையுடன் ஒத்துப்போகிறது.


கல்வி என்பது திராவிட அரசியல் தத்துவத்தின் முக்கிய மையப் பகுதியாகும். இதில் சுயமரியாதை, சமூக நீதி மற்றும் சம வாய்ப்புகளை மேம்படுத்துவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. முன்னதாக, கல்வி ஒரு சிலருக்கு மட்டுமே அணுகக்கூடியதாக இருந்தது. சென்னை மாகாணத்தின் நீதிக் கட்சியின் முதல்  அரசாங்கம் 1920-ம் ஆண்டில் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் தொடக்கக் கல்வியை கட்டாயமாக்க ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நடவடிக்கை உலகளாவிய கல்விக்கு அடித்தளமிட்டது எனலாம்.


இருமொழிக் கொள்கைக்கான விதிமுறை பல ஆண்டுகாலமாக கட்டாயமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் நம் தாய்மொழியான தமிழ் மற்றும் உலகளாவிய இணைப்பு மொழியான ஆங்கிலம் ஆகியவை அடங்கும். இந்த விதிமுறை நம் மதிப்புகளை பிரதிபலிக்கிறது. இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இதை வலுவாக ஆதரித்து வருகின்றன. மேலும், இது சிறந்த பலன்களைத் தந்துள்ளது. அதிக எழுத்தறிவு விகிதங்கள் மற்றும் 47% உயர் கல்வி சேர்க்கை விகிதத்துடன் தமிழ்நாடு இந்தியாவில் தனித்து நிற்கிறது. இது தேசிய சராசரியான 28.4%-ஐ விட மிக அதிகம். நம்முடைய கல்வி மற்றும் பொருளாதார முறையின் வெற்றிகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டு அளவிடக்கூடியவை ஆகும். இந்த கட்டாய மொழி விதிமுறையானது மாநில கல்வி வாரியத்தால் (State Board of Education) நிர்ணயிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு மட்டுமே பொருந்தும். இது மாநில அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது. கல்வித் தேர்வுக்கான தமிழகத்தின் அர்ப்பணிப்பு தெளிவாகத் தெரிகிறது. தக்ஷின் பாரத் இந்தி பிரச்சார சபை (Dakshin Bharat Hindi Prachar Sabha) கூட அதன் தலைமையகத்தை சென்னையில் பராமரிக்கிறது.

இந்த சூழ்நிலையில், 2024-2025 நிதியாண்டில், நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமக்ர சிக்ஷா அபியான் நிதியில் (Samagra Shiksha Abhiyan funds) தமிழ்நாடு தனது பங்கைப் (சுமார் தோரயமாக ரூ.2,152 கோடி) பெறுவதற்கு ஒன்றிய அரசு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகள் பின்னாளில் சேர்க்கப்பட்ட, அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட நிபந்தனைகளாகப் பார்க்க வேண்டும். 


‘கட்டாய மும்மொழி விதிமுறை (three-language formula) உட்பட, தமிழ்நாடு அதன் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றுவதன் மூலம் புதிய கல்விக் கொள்கையை (NEP) முழுமையாக செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மற்றும் முன்பே ஒதுக்கப்பட்ட நிதியை ஒன்றியம் நிறுத்தி வைக்கும்’ எனும் அச்சுறுத்தலை ஒன்றிய கல்வி அமைச்சர் பகிரங்கமாகக் கூறினார்.


இது பயன் விளைவுகளை எவ்வாறு மேம்படுத்தும் என்பதைக் காட்ட எந்த உதாரணமும் இல்லை. இதன் காரணமாக, அச்சுறுத்தலை அரசியல் ரீதியாக மிரட்டி பணம் பறிப்பதாக நாம் பார்க்கிறோம். இந்த முயற்சி தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் மீது ஒன்றிய அரசின் விருப்பத்தை கட்டாயப்படுத்துகிறது. இது அரசியலமைப்பை மீறுவதாகும்.


உண்மையில், ஒரு மூன்றாம் மொழியைச் சேர்ப்பது பணியாளர்கள் மற்றும் தளவாடங்களில் மட்டுமல்ல, மாணவர்களின் கற்றல் திறனை அதிகமாகச் சுமத்துவதன் மூலமும், அத்தகைய பாடத்திட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதை நியாயப்படுத்த எந்த ஆதார அடிப்படையிலான நன்மைகளும் இல்லை. நாட்டின் பெரும்பகுதிகளில், இரண்டு மொழிகள்கூட போதுமான அளவு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஏனெனில், அவை இருந்திருந்தால், ஏற்கனவே ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருந்திருக்கும். மேலும், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விவாதம் நடைபெற்றிருக்காது.


மூன்றாம் மொழியின் அறிமுகம் தாய்மொழியின் பயன்பாட்டை பலவீனப்படுத்தும். சில சமயங்களில், அது நடைமுறையில் இருந்து அழிந்துவிடும் என்ற நியாயமான அச்சமும் உள்ளது. இதில், முன்வைக்கப்படும் மூன்றாவது மொழி இந்தி அல்ல என்று கூறுவது யாரையும் நம்ப வைக்காது. ஒவ்வொரு இந்தி தினத்தன்றும் உள்துறை அமைச்சரின் அறிக்கைகளும், பிற பிராந்திய மொழிகளுடன் ஒப்பிடும்போது இந்தியை ஊக்குவிப்பதற்காக பல மடங்கு செலவிடப்படுவதும் உண்மையான நோக்கத்தை தெளிவாகக் காட்டுகின்றன.


தமிழ்நாட்டில் இதேபோன்ற மொழிக்காக ஏற்படும் அச்சுறுத்தல் நம்மை ஆழமாக காயப்படுத்துகிறது. இது தமிழர்கள் என்ற நமது அடையாளத்தின் மீது தாக்குதல் செய்கிறது. தமிழ் நமது தாய்மொழி, அது நமது வளமான கலாச்சாரத்தையும், வரலாற்றையும் பிரதிபலிக்கிறது. உலகின் பழமையான வாழும் மொழியைப் பாதுகாப்பதற்கான நமது விருப்பத்தில் மட்டுமல்ல, மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அதைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதற்கான நமது அவசர காலத்திலும் நம்முடைய அன்பு வெளிப்படுகிறது. நமது மொழியை துடிப்பாகவும் இளமையாகவும் வைத்திருக்க நாம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். 1999-ம் ஆண்டு, நாம் கணித்தமிழ் மாநாடு - (KaniTamil Manaadu) (தமிழ் கணினி மாநாடு) நடத்தினோம். அதன் இரண்டாவது பதிப்பை 2024-ம் ஆண்டில் நடத்தினோம். பண்டைய நூல்களையும் டிஜிட்டல் மயமாக்கி தமிழ் மொழி மாதிரி (Tamil Language Model (LLM)) உருவாக்கியுள்ளோம். இந்த முயற்சிகளில் பலவற்றை தமிழ் இணையக் கல்விக்கழகம் (Tamil Virtual Academy) மேற்கொள்கிறது. இந்த கல்விக்கழகம் நம் தலைவர் கலைஞர் (எம். கருணாநிதி) முதலமைச்சராக இருந்தபோது நிறுவியது. இது இப்போது எனது தற்போதைய தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் ஒரு பகுதியாகும்.


இந்த அச்சுறுத்தல் ஒன்றிய அரசின் அரசியலமைப்புக்கு முரணான அணுகுமுறையுடன் பொருந்துகிறது. மேலும், அதன் அரசியல் நிலைப்பாட்டை முன்னெடுத்துச் செல்கிறது. இது நிதி ஒதுக்கீட்டை அரசியலாக்குவதற்கும், நிதி வழங்கலுக்கான கடைசி நிமிட நிபந்தனைகளைச் சேர்ப்பதற்கும் அப்பாற்பட்டது. இதில் குறிப்பிடவேண்டிய மிகவும் பாதிப்பான உதாரணங்கள்:


“293(B) பிரிவின் முன்னோடியில்லாத வகையில், அவர்களின் சட்டங்களுக்கு அப்பால் மாநிலக் கடன் வாங்குவதைக் கட்டுப்படுத்துவது, பாஜக அல்லாத மாநிலங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க கடன் வழங்குபவர்கள் மீது சட்டவிரோத அழுத்தம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு இடையூறாக பிடிவாதமான ஆளுநர்களை நியமித்தல்” ஆகியவை.


நமது முதலமைச்சர் கூறியது போல், தமிழ் மக்கள் இதுபோன்ற அச்சுறுத்தல்களால் பயப்பட மாட்டார்கள். வரலாறு நமக்கு பல பாடங்களைக் கற்பிக்கிறது. சமூகக் கட்டமைப்புகள் இந்த முன்னேற்றங்களை ஆதரிக்காவிட்டால், பணத்தால் மட்டுமே வேலைவாய்ப்பையோ அல்லது வளர்ச்சி விகிதங்களையோ கணிசமாக மாற்ற முடியாது. உதாரணமாக, GIFT City போன்ற தடையில்லா வர்த்தக மண்டலங்களை (Free Trade Zones) உருவாக்குவதன் மூலமும், மெகா திட்டங்களை ஒதுக்குவதன் மூலமும் குஜராத்தை நோக்கி தற்போதைய அரசாங்கம் காட்டும் பாரபட்சம், குஜராத்தில் சராசரி நபரின் வேலைவாய்ப்பு அல்லது வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கவில்லை.


தமிழர்களைப் போலவே பண்டைய கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களையும் கட்டுப்படுத்த முடியாது. அவர்களின் அடையாளத்தை மாற்ற முடியாது. இந்தி திணிப்புக்கான கடந்த கால முயற்சிகள் பெரும் தோல்விகளாக இருந்தன. தமிழ்நாட்டில், ஜனவரி 25-ம் தேதி மொழி தியாகிகள் தினமாகக் (Language Martyr’s Day) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில், தமிழைப் பாதுகாக்கவும், மொழி திணிப்பை எதிர்த்தும் போராடி இறந்தவர்களை நாம் மதிக்கிறோம். இப்போதோ அல்லது எதிர்காலத்திலோ நமது மொழியியல் உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம். அவர்களின் தியாகங்களை வீணாக விடமாட்டோம்.


கட்டுரையாளர் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்.



Original article:

Share:

மாவட்ட அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மதிப்பிடுவது முக்கியம். - சம்ரித்தி பிரகாஷ், பாயல் சேத், ஆஷிஷ் குமார்

 உள்ளூர் பொருளாதாரங்களை வளர்ப்பதற்கும், ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும் தீர்வுகளை உருவாக்க கொள்கை வகுப்பாளர்களுக்கு விரிவான தரவு உதவும்.


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, பொதுவாக சர்வதேச தரநிலைகளைப் பின்பற்றி தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் மூலம் அளவிடப்படுகிறது. இருப்பினும், நாட்டின் வளர்ச்சியின் மிக முக்கியமான அலகுகளான மாவட்டங்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. இதனால், உள்ளூர்மயமாக்கப்பட்ட வளர்ச்சியின் உத்திகளை ஊக்குவிப்பதன் மூலம், பொருளாதார முன்னேற்றத்தில் மாவட்டங்களின் முக்கியத்துவத்தை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார். இருப்பினும், துல்லியமான மாவட்ட உள்நாட்டு உற்பத்தி (District Domestic Product (DDP)) மதிப்பீடுகள் இல்லாமல், கொள்கை வகுப்பாளர்கள், வணிகர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இதில் முடிவெடுப்பதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனால், தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டு முறையானது, மேலிருந்து கீழ்நோக்கிய அணுகுமுறையைப் (top-down approach) பின்பற்றுகிறது. இது, முதலில் தேசிய அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடுகிறது. பின்னர் மாவட்ட அளவில் பொருளாதார நடவடிக்கைகளை நேரடியாக அளவிடுவதற்குப் பதிலாக, கிடைக்கக்கூடிய குறிகாட்டிகளின் (available indicators) அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு விநியோகிக்கிறது.


இது குறிப்பாக, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை துறைகளில் தெளிவாகத் தெரிகிறது. இது உள்ளூர் மட்டத்தில் பொருளாதார நடவடிக்கைகள் குறித்த தெளிவற்ற புரிதலை ஏற்படுத்துகிறது. இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற விரும்பினால், ஒவ்வொரு மாவட்டமும் எவ்வளவு பங்களிக்க வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். பின்னர், ஒவ்வொரு மாவட்டத்தின் தனித்துவமான பலங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் கொள்கைகளை அது உருவாக்க வேண்டும்.


தற்போதைய முறைமை (Current methodology)


இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு பொருளாதார நடவடிக்கைகளை மூன்று துறைகளாக பரவலாக வகைப்படுத்துகிறது. அவை, (i) முதன்மைத் துறை : விவசாயம், வனவியல், மீன்பிடித்தல் மற்றும் சுரங்கம் ஆகியவை அடங்கும்; (ii) இரண்டாம் நிலைத் துறை : உற்பத்தி, கட்டுமானம், மின்சாரம், எரிவாயு மற்றும் நீர் வழங்கல் ஆகியவற்றை உள்ளடக்கியது, மற்றும் (iii) மூன்றாம் நிலைத் துறை : வர்த்தகம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற சேவைகளை உள்ளடக்கியது.


இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, துறையைப் பொறுத்து, மேல்-கீழ் (top-down) மற்றும் கீழ்-மேல் அணுகுமுறைகளின் (bottom-up methods) கலவையைப் பயன்படுத்தி மதிப்பிடப்படுகிறது. முதன்மைத் துறையின் பங்களிப்பின் மதிப்பீடு கீழ்-மேல் அணுகுமுறையைப் (bottom-up approach) பின்பற்றுகிறது. மாவட்ட அளவில் தரவு சேகரிக்கப்பட்டு, பின்னர் மாநில மற்றும் தேசிய மட்டங்களில் ஒன்றிணைக்கப்படுகிறது. இருப்பினும், முதன்மைத் துறையில் தரவு சேகரிப்பு முறைகள் பெரும்பாலும் பழமையானவை மற்றும் சீரற்றவையாகும். இது துல்லியமின்மையை (inaccuracies) ஏற்படுத்துகிறது.

மறுபுறம், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை துறைகளுக்கு, மேலிருந்து கீழ்நோக்கிய அணுகுமுறை (top-down approach) பயன்படுத்தப்படுகிறது. இதன் பொருள், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (national GDP) மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையில் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு வேலைவாய்ப்பு நிலைகள், ஊதியங்கள் அல்லது கிடைக்கக்கூடிய உள்கட்டமைப்பு போன்ற துறைசார்ந்த குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது. இது உண்மையான பொருளாதார வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது அல்ல. புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) இந்த செயல்முறையை மேற்கொள்கிறது.


இது மாவட்ட அளவிலான பிரிவினையின் சில நிலைகளை அனுமதிக்கும் அதே வேளையில், மாவட்ட அளவில் பொருளாதார யதார்த்தத்தை குறிகாட்டிகள் முழுமையாகப் பிரதிபலிக்காததால், நிகழ்நேர பொருளாதார செயல்பாடு அல்லது துறைசார் பங்களிப்புகளை இது துல்லியமாகக் காட்டாது. அமைப்புசாரா துறையில் தரவு இடைவெளிகள் மற்றும் கணக்கெடுப்பு முறைகளில் உள்ள வேறுபாடுகள் மாவட்ட அளவிலான மதிப்பீடுகளை மேல்-கீழ் அணுகுமுறையில் (top-down approach) குறைந்த நம்பகத்தன்மையுடையதாக ஆக்குகின்றன.


இந்த முறை பயன்படுத்த எளிதானது. இருப்பினும், இது கடுமையான வரம்புகளைக் கொண்டுள்ளது. இது ஒரு மாவட்டத்தின் பொருளாதார பலங்கள் பற்றிய விரிவான தகவல்களை வழங்காது. இது ஒரு நிர்வாகப் பணியாக மட்டுமே செயல்படுகிறது.


இது அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு அணுகுமுறையை உருவாக்குகிறது. இது உள்ளூர் பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாது. இந்தக் கருத்தை விளக்க ஒரு எடுத்துக்காட்டு இங்கே குறிப்பிட்டுள்ளது.


குறிப்பாக, கோவிட்-19 காலகட்டத்தில் முறைமையில் உள்ள இடைவெளி மிகவும் தெளிவாகியது. 2020-21ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவை விநியோகிக்க புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) அதன் வழக்கமான முறையைப் பயன்படுத்தியது. இது மாநிலங்களுக்கு இடையே மொத்த உள்நாட்டு உற்பத்தியை விகிதாசாரமாகப் பிரித்தது. உத்தரப் பிரதேசம் இந்த முறையை எதிர்த்தது. மாநிலத்தின் மொத்த மதிப்புக் கூட்டலில் (Gross State Value Added (GSVA)) ​​விவசாயம் 25% என்று உத்திரப் பிரதேசம் வாதிட்டது. மேலும், 65% மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தைச் சார்ந்துள்ளனர்.


இந்தத் துறை, தொழில்துறைவிட குறைவாக பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் ஏற்படும் சரிவு, உற்பத்தித் துறையிலிருந்து மாநிலத்தின் மொத்த மதிப்பு கூட்டலின் (GSVA) அதிக பங்கைக் கொண்ட மாநிலங்களைவிட குறைவாக இருக்க வேண்டும். எனவே, மொத்த உள்நாட்டு உற்பத்தியை மதிப்பிடுவதற்கு கீழ்மட்ட அணுகுமுறையைப் பயன்படுத்துவதை ஆதரித்த முதல் அரசாங்கங்களில் உத்திரப் பிரதேச அரசும் ஒன்றாகும். இந்த அணுகுமுறை மாவட்ட அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடுகிறது.


மாவட்ட உள்நாட்டு உற்பத்தி (District Domestic Product (DDP)) மதிப்பீட்டின் விரிவான தரவு, கொள்கை வகுப்பாளர்கள் சிறந்த திட்டங்களை உருவாக்க உதவும். அவர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் உள்ளூர் பொருளாதாரங்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தலாம். எடுத்துக்காட்டாக, மாவட்ட அளவிலான GDP மதிப்பீடுகள் வெவ்வேறு பிராந்தியங்களில் எந்தத் துறைகள் பலவீனமாக உள்ளன என்பதைக் காட்டலாம். அது ஒரு மாவட்டத்தில் விவசாயமாகவோ அல்லது மற்றொரு மாவட்டத்தில் உற்பத்தியாகவோ இருக்கலாம். இந்தத் தகவல் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய துறைகளில் இலக்குக்காக முதலீடுகளைச் செய்ய உதவும்.


தேசிய அல்லது மாநில அளவிலான கொள்கைகள் வெவ்வேறு பகுதிகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும் இது உதவும். இது மிகவும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அந்தக் கொள்கைகளை சரிசெய்வதை எளிதாக்கும். இந்த அணுகுமுறை நிதி கூட்டாட்சியை (fiscal federalism) வலுப்படுத்தும். மாநில அல்லது மத்திய அரசாங்கங்கள் தங்கள் வளர்ச்சிப் பாதையை அமைக்க சார்ந்திருப்பதற்குப் பதிலாக, மாவட்டங்கள் தங்கள் சொந்த பொருளாதார உத்திகளை உருவாக்க முடியும். இந்த உத்திகள் இன்னும் தேசிய மற்றும் மாநில இலக்குகளுடன் ஒத்துப்போகும்.


கணிசமான முதலீடுகள் (Substantial investments)


வலுவான மாவட்ட அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி அமைப்புக்கு மாறுவது தெளிவான நன்மைகளைக் கொண்டுள்ளது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். இருப்பினும், புள்ளிவிவரங்கள் மற்றும் தரவு சேகரிப்பை மேம்படுத்துவதற்கு நிறைய பணமும் முயற்சியும் தேவைப்படும். இதற்கு ஒன்றிய மற்றும் மாநில புள்ளிவிவர நிறுவனங்களுக்கு இடையே தீவிர அர்ப்பணிப்பு மற்றும் குழுப்பணியும் தேவை. புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகளில் $1 முதலீடு செய்வது வளர்ச்சியில் $32 திரும்பக் கொடுக்கும் என்பதை கொள்கை வகுப்பாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.


பொருளாதாரக் கொள்கை வகுப்பில், நாடு அல்லது மாநிலங்களிலிருந்து ஒட்டுமொத்த தரவைப் பார்ப்பது பொதுவான முறையாகும். இது அனைத்து மக்களுக்கும் பரந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது. இருப்பினும், இந்த உயர்மட்ட அணுகுமுறை பெரும்பாலும் பிராந்தியங்களுக்கு இடையிலான முக்கியமான வேறுபாடுகளை புறக்கணிக்கிறது. குறிப்பாக, கிராமப்புற மற்றும் வளர்ச்சியடையாத மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. எனவே, ”வளர்ந்த இந்தியா-2047” (Viksit Bharat 2047)-க்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை அதன் மாவட்டங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.


இந்தச் சூழலில், மாவட்ட உள்நாட்டு உற்பத்தி (District Domestic Product (DDP)) மதிப்பீடு ஒவ்வொரு பிராந்தியத்தின் தனித்துவமான பொருளாதார இயக்கவியலை தக்கவைக்க ஒரு சக்திவாய்ந்த கருவியை வழங்குகிறது. இது கொள்கை வகுப்பாளர்கள் உள்ளூர் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை நிவர்த்தி செய்யும் இலக்குக்கான தலையீடுகளை வடிவமைக்க உதவுகிறது. இது பொருளாதார வளர்ச்சி சமமாக இருப்பதையும், மிகவும் பின்தங்கிய பகுதிகளை அடைவதையும், அதேநேரத்தில் பின்தங்கியிருக்காமல் இருப்பதையும் உறுதி செய்யும்.


சம்ரிதி ஒரு ஆராய்ச்சியாளராகவும், பாயல் ஒரு இணை ஆய்வாளராகவும், MoSPI இன் முன்னாள் DG ஆஷிஷ், பஹ்லே இந்தியா அறக்கட்டளையின் ஒரு சிறப்பு ஆய்வாளராகவும் உள்ளனர்.                     

Original article:

Share:

விலங்குக் கழிவுகளில் செல்வம். -அனில் குமார், பிரதாப் எஸ் பர்தல்

 இது அதிக ஆற்றல் திறன் கொண்ட ஒரு பசுமையான ஆற்றல் மூலமாகும்.


இந்தியா இறக்குமதி செய்யப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (liquefied natural gas (LNG)) மற்றும் உரங்களையே அதிகம் சார்ந்துள்ளது. 2022 முதல் 2024 வரை, அது ஒவ்வொரு ஆண்டும் 22 மில்லியன் டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் 8 மில்லியன் டன் உரங்களை இறக்குமதி செய்தது. இது அதன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு தேவைகளில் 46% மற்றும் அதன் உர தேவையில் 31%-ஐ பூர்த்தி செய்கிறது.


வெளிநாட்டு ஆதாரங்களை அதிகமாகச் சார்ந்திருப்பது நாட்டின் அந்நியச் செலாவணி இருப்புக்களை மோசமாக்குவது மட்டுமல்லாமல், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் உணவு உற்பத்தி, விவசாய லாபம் மற்றும் உணவு விலைகளைப் பாதிக்கும் ஏற்ற இறக்கமான உலகளாவிய விலைகளுக்கு நாடு ஆளாகிறது. மேலும், அதிகரித்து வரும் புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் இரசாயன உரங்களின் பயன்பாடு இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் சேதப்படுத்துகிறது. இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது.


விவசாயம் இந்தப் பிரச்சினைகளுக்கு பங்களிப்பதோடு தீர்வுகளையும் வழங்குகிறது. இந்தியாவில் 303 மில்லியன் கால்நடைகள் மற்றும் எருமைகள் உள்ளன. இந்த கால்நடைகளின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 1,271 மில்லியன் டன்களுக்கு மேல் சாணத்தை உற்பத்தி செய்கின்றன. பெரும்பாலும் கழிவுகளாகக் காணப்படும் இந்த சாணத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றலாகவும் இயற்கை உரமாகவும் மாற்றலாம்.


புதிய தொழில்நுட்பம் இப்போது விவசாயத்தை ஆதரிக்கும் அதே வேளையில் வீடுகள் மற்றும் வணிகங்களுக்கு சாணத்தை சுத்தமான எரிபொருளாக மாற்ற உதவியுள்ளன.


சாணப் பொருளாதாரம்


இந்தியாவில், மொத்த சாணத்தில் 35 சதவீதம் கிராமப்புற வீடுகளால் பாரம்பரிய வீட்டு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 65 சதவீதம் உரமாக்குவதற்குக் கிடைக்கிறது.


இந்தப் பயன்பாட்டு முறையைக் கருத்தில் கொண்டு, சாணம் 2.64 மில்லியன் டன் நைட்ரஜன், 1.16 மில்லியன் டன் பாஸ்பரஸ் மற்றும் 2.48 மில்லியன் டன் பொட்டாசியத்தை மண்ணில் சேர்க்கிறது. இருப்பினும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வணிக ஆதாரமாக சாணத்தின் திறன் பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.


நிலவும் பயன்பாட்டு முறையைக் கருத்தில் கொண்டு, விவசாயத்திற்கு அதன் ஊட்டச்சத்து பங்களிப்பை சமரசம் செய்யாமல் ஆற்றல் உற்பத்திக்காக உரமாக தற்போது பயன்படுத்தப்படும் சாணத்தை பதப்படுத்துவதன் மூலம் 13.4 மில்லியன் டன் உயிர் - அழுத்த இயற்கை எரிவாயுவை (compressed natural gas (CNG)) உருவாக்க முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 1,270 மில்லியன் டன் சாணம் முழுவதும் பதப்படுத்தப்பட்டால், அது 21.8 மில்லியன் டன் உயிர் - அழுத்த இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்ய முடியும்.  இது நாட்டின் lNG இறக்குமதிக்கு சமமானதாகும். மேலும், இந்த செயல்முறை கூடுதலாக 3.4 மில்லியன் டன் கரிம உரத்தை உருவாக்குகிறது. இது உர இறக்குமதியை 43 சதவீதம் குறைக்கும்.


சாண உரத்தை பதப்படுத்துவது, நிர்வகிக்கப்படாத கழிவுகளிலிருந்து சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்படும் மீத்தேன் வெளியேற்றத்தை கணிசமாகக் குறைக்கும். மேலும், சாணத்தை பதப்படுத்துவதில் இருந்து மீதமுள்ள மண்ணின் அமைப்பு மற்றும் நீர் தக்கவைப்பை மேம்படுத்தி, நீண்டகால வளத்தை அதிகரிக்கும் உரமாக செயல்படுகிறது. அரசாங்கம் இயற்கை மற்றும் கரிம விவசாயத்தை ஊக்குவிப்பதால், சாணம் சார்ந்த உரங்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சாணத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் சாத்தியமான உயிரி-LNG 31.9 பில்லியன் லிட்டர் பெட்ரோலுக்கு சமம். இது எரிபொருள் மாற்றாகப் பயன்படுத்தப்படும்போது 60 சதவீதம் வரை கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும்.


தீவனப் பிரச்சினைகள்


சுத்தமான சமையல் எரிபொருளை வழங்குவதற்கும், புதைபடிவ எரிபொருள் சார்புநிலையைக் குறைப்பதற்கும் சாணத்திலிருந்து உயிரிவாயு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான அரசாங்கங்களின் திட்டங்கள், வீட்டு மட்டத்தில் போதுமான தீவனப் பொருட்கள் கிடைப்பதால், குறைந்த அளவிலான வெற்றியை அடைந்துள்ளன.


இருப்பினும், வணிக அளவில் உயிரிவாயு மற்றும் உயிரி-LNG உற்பத்திக்கு சாணத்தைப் பயன்படுத்துவதை நோக்கி கொள்கை முக்கியத்துவம் இப்போது மாறி வருகிறது.


இந்த மாற்றத்தை ஆதரிக்க, விவசாயிகளுக்கு திறமையான சாண சேகரிப்பு மாதிரிகள் மற்றும் சலுகைகளை உருவாக்குவது அவசியம். குறிப்பாக, புதிய உயிரி ஆற்றல் வசதிகளுக்கு நிதி உதவி வழங்குதல் மற்றும் உயிரிவாயு மற்றும் உயிரி-LNG திட்டங்களில் முதலீட்டை ஊக்குவிக்க கார்பன் கடன் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.


குமார் முதன்மை விஞ்ஞானி மற்றும் பிரதாப் எஸ் பிர்தல், புது தில்லியில் உள்ள ICAR-தேசிய வேளாண் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர்.


Original article:
Share:

வளர்ந்த இந்தியாவை நோக்கி டிஜிட்டல் பாதையை அமைத்தல் -அஸ்வினி வைஷ்ணவ்

 செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் ஒரு தொழில்நுட்ப மறுமலர்ச்சி வளர்ந்த இந்தியா (Viksit Bharat) பயணத்தை தூண்டுகிறது.


மகாராஷ்டிராவின் பாராமதியில் ஒரு சிறு விவசாயி, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் விவசாயம் தொடர்பான தொழில்நுட்பத்தை மாற்றுகிறார். இதற்கான, முடிவுகள் சுவாரஸ்யமாக உள்ளன. அதாவது, விவசாயி குறைந்த உரத்தைப் பயன்படுத்தி, அதிக தண்ணீரைச் சேமிக்கிறார். மேலும், அதிக பயிர் விளைச்சலைப் பெறுகிறார். இவை அனைத்தும் AI காரணமாக சாத்தியமாகும்.


இது இந்தியாவின் AI-யால் நிகழும் புரட்சியின் (AI-driven revolution) ஒரு பார்வை மட்டுமே. இதில், தொழில்நுட்பமும் புதுமையும் இனி ஆய்வகங்களில் மட்டும் இல்லை. அவை, சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துகின்றன. இந்த விவசாயியின் கதை ஒரு பெரிய மாற்றத்திற்கான ஒரு சிறிய எடுத்துக்காட்டு ஆகும். இது 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக (developed nation) மாறுவதற்கான இந்தியாவின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

டிஜிட்டல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் : டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)), செயற்கை நுண்ணறிவு (AI), குறைக்கடத்தி (semiconductor) மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி (electronics manufacturing) ஆகியவற்றில் வலுவாக கவனம் செலுத்துவதன் மூலம் இந்தியா தனது டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைத்து வருகிறது. பத்தாண்டுகாலமாக, இந்தியா மென்பொருளில் (software) உலகளாவிய முன்னணியில் உள்ளது. ஆனால், இப்போது அது வன்பொருள் உற்பத்தியிலும் (hardware manufacturing) பெரிய முன்னேற்றங்களைச் செய்து வருகிறது.


தற்போது, ஐந்து குறைக்கடத்தி ஆலைகள் (semiconductor plants) கட்டப்பட்டு வருகின்றன. இது உலகளாவிய மின்னணு சந்தையில் இந்தியாவின் பங்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​​மின்னணுப் பொருட்கள் இந்தியாவின் முதல் மூன்று ஏற்றுமதி பொருட்களில் இதுவும் ஒன்றாகும். விரைவில், இந்தியா ஒரு பெரிய மைல்கல்லை எட்டும். இந்த ஆண்டு முதல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட (Make-in-India) சில்லு (chip) அறிமுகப்படுத்தப்படும்.


கணினி சக்தி, தரவு மற்றும் புதுமை ஆகிய மூன்று முக்கிய பகுதிகளில் செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி வளர்ந்து வருகிறது. குறைக்கடத்திகள் (Semiconductors) மற்றும் மின்னணுவியல் (electronics) இந்த வளர்ச்சியின் அடித்தளமாகும். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) இந்தியாவின் தொழில்நுட்ப புரட்சிக்கு உந்து சக்தியாக செயல்படுகிறது. இந்தியா ஒரு தனித்துவமான AI கட்டமைப்புடன் AI-ஐ அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுகிறது.


இந்த முயற்சியில் ஒரு முக்கிய அணுகுமுறையானது, இந்தியாவின் பகிரப்பட்ட கணினி வசதியாகும். இது 18,000க்கும் மேற்பட்ட கிராபிக்ஸ் செயலாக்க அலகுகளைக் (Graphics Processing Units (GPU)) கொண்டுள்ளது. இது ஒரு மணி நேரத்திற்கு ₹100-க்கும் குறைவான மானிய விலையில் கிடைக்கிறது. இது ஆராய்ச்சியாளர்கள், தொடக்க நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு மேம்பட்ட ஆராய்ச்சியை மலிவு விலையில் வழங்குகிறது. இந்த வசதி AI-அடிப்படையிலான அமைப்புகள், அடிப்படை மாதிரிகள் மற்றும் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான GPU-களை எளிதாக அணுக அனுமதிக்கிறது.


AI மாதிரிகளைப் பயிற்றுவிக்க இந்தியா பெரிய, தனிப்பட்ட முறையில் அல்லாத குறிப்பிடப்படாத தரவுத்தொகுப்புகளை உருவாக்கி வருகிறது. இந்த தரவுத்தொகுப்புகள் மாறுபட்டதாகவும் உயர் தரமாகவும் இருக்கும். இந்த முயற்சி பாதகமான நிலையைக் குறைக்கவும், துல்லியத்தை மேம்படுத்தவும் உதவும். இதன் விளைவாக, AI அமைப்புகள் மிகவும் நம்பகமானதாகவும் உள்ளடக்கியதாகவும் இருக்கும். இந்த தரவுத்தொகுப்புகள் விவசாயம், வானிலை முன்னறிவிப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தீர்வுகளை ஆதரிக்கும்.


இந்தியாவின் சொந்த அடிப்படை மாதிரிகளை உருவாக்கவும் அரசாங்கம் உதவுகிறது. இதில், பெரிய மொழி மாதிரிகள் (Large Language Models (LLM)) மற்றும் குறிப்பிட்ட இந்தியத் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்ட AI தீர்வுகள் ஆகியவை அடங்கும். AI ஆராய்ச்சியை ஊக்குவிக்க, பல சிறப்பு மையங்களும் நிறுவப்பட்டுள்ளன.


டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்கான ஒரு முன்மாதிரியான இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) : டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் (DPI) இந்தியாவின் புரட்சிகரமான பணிகள் உலகளாவிய டிஜிட்டல் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நிறுவனங்கள் அல்லது அரசாங்கங்களால் கட்டுப்படுத்தப்படும் மாதிரிகளைப் போலன்றி, இந்தியா ஒரு தனித்துவமான பொது-தனியார் அணுகுமுறையைப் (public-private approach) பின்பற்றுகிறது. ஆதார், UPI மற்றும் DigiLocker போன்ற தளங்களை உருவாக்க அரசாங்கம் பொது நிதியைப் பயன்படுத்துகிறது. பின்னர், தனியார் நிறுவனங்கள் இந்த தளங்களின் அடிப்படையில் பயன்படுத்த எளிதான பயன்பாடுகளை உருவாக்குவதன் மூலம் புதுமைகளை உருவாக்குகின்றன.


இந்த மாதிரி இப்போது AI உடன் மேம்படுத்தப்படுகிறது. UPI மற்றும் DigiLocker போன்ற நிதி மற்றும் நிர்வாகத் தளங்கள் அறிவுசார்ந்த தீர்வுகளை (intelligent solutions) ஒருங்கிணைக்கின்றன. G20 உச்சிமாநாட்டில், நாடுகள் இந்தியாவின் DPI கட்டமைப்பில் ஆர்வம் காட்டின. அவர்கள் இதற்கான மாதிரியை நகலெடுக்க விருப்பம் தெரிவித்தன. இந்தியாவின் UPI கட்டண முறைக்கு ஜப்பான் காப்புரிமையை வழங்கியுள்ளது. இது அதன் அளவிடக்கூடிய தன்மைக்கு ஒரு சான்றாகும்.


மகா கும்பம் என்பது பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவை : இதுவரை இல்லாத மிகப்பெரிய மனிதக் கூட்டமான மகா கும்பம் 2025-ம் ஆண்டின் சீரான செயல்பாடுகளை உறுதிசெய்ய இந்தியா அதன் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) மற்றும் AI-அடிப்படையிலான நிர்வாகத்தைப் பயன்படுத்தியது. AI கருவிகள் தற்போது இரயில் பயணிகள் இயக்கத்தைக் கண்காணித்தன. இது பிரயாக்ராஜில் உள்ள இரயில் நிலையங்களில் கூட்டத்தை சிறப்பாக நிர்வகிக்க உதவியது.


கும்ப சாஹியாக் சாட்பாட்டின் (Kumbh Sah’AI’yak Chatbot) ஒரு பகுதியான பாஷினி திட்டம், பல அம்சங்களை வழங்கியுள்ளார். இது குரல் அடிப்படையிலான தொலைந்து போன மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட சேவைகளை செயல்படுத்தியது. இது அனைவருக்கும் நிகழ்நேர மொழிபெயர்ப்பு மற்றும் பன்மொழி உதவியையும் வழங்கியது. தகவல்தொடர்புகளை மேம்படுத்தவும் சிக்கல்களை விரைவாக தீர்க்கவும் பாஷினி திட்டம் இந்திய இரயில்வே மற்றும் உத்திர பிரதேச காவல்துறை போன்ற துறைகளுடன் இணைந்து பணியாற்றியது.


டிபிஐயை மேம்படுத்துவதன் மூலம், மஹாகும்ப் தொழில்நுட்பத்தால் இயங்கும் நிர்வாகத்திற்கான உலகளாவிய அளவுகோலை அமைத்துள்ளது, மேலும் அதை உள்ளடக்கிய ஒன்றாகவும், திறமையாகவும், பாதுகாப்பாகவும் செய்கிறது.


எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் பணியாளர்களை உருவாக்குதல் : இந்தியாவின் பணியாளர்கள் அதன் டிஜிட்டல் புரட்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். நாடு ஒவ்வொரு வாரமும் ஒரு உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre (GCC)) அமைக்கிறது. இது உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான சிறந்த தேர்வாக அமைகிறது.


இந்த வளர்ச்சியைப் பராமரிக்க, இந்தியா கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) 2020-ன் கீழ் AI, 5G மற்றும் குறைக்கடத்தி வடிவமைப்பை உள்ளடக்கிய பல்கலைக்கழகப் படிப்புகளை புதுப்பிப்பதன் மூலம் அரசாங்கம் இதைச் சமாளிக்கிறது. இந்தப் புதுப்பிப்பு பட்டதாரிகள் வேலைக்குத் தயாராகும் திறன்களைப் பெற உதவும். இதனால், அவர்கள் கல்வியிலிருந்து வேலைவாய்ப்புக்குச் செல்வதை எளிதாக்கும்.


AI ஒழுங்குமுறைக்கான நடைமுறை அணுகுமுறை : இந்தியா எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் பணியாளர்களை உருவாக்குவதால், அதன் AI ஒழுங்குமுறை கட்டமைப்பானது பொறுப்பான வரிசைப்படுத்தலை உறுதி செய்யும் போது புதுமைகளை வளர்க்க வேண்டும். "கடுமையான ஒழுங்குமுறை கட்டமைப்பைப் போலல்லாமல், இது புதுமைகளைத் தடுக்கும் அபாயம் அல்லது "சந்தையால் இயக்கப்படும் ஆளுகை" (market-driven governance), இது பெரும்பாலும் ஒரு சிலரின் கைகளில் அதிகாரத்தைக் குவிக்கும், இந்தியா ஒரு நடைமுறை, தொழில்நுட்ப-சட்ட அணுகுமுறையைப் பின்பற்றுகிறது.


AI தொடர்பான அபாயங்களை நிர்வகிக்க சட்டங்களை மட்டும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவற்றிலிருந்து பாதுகாக்க அரசாங்கம் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்கிறது. இது சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் IIT-களில் AI திட்டங்களுக்கு நிதியளிக்கிறது. இந்த திட்டங்கள் டீப்ஃபேக்குகள் (deepfakes), அந்தரங்க சிக்கல்கள் (privacy issues) மற்றும் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் (cybersecurity threats) கையாளக்கூடிய கருவிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


AI உலகளவில் தொழில்களை மாற்றுவதால், இந்தியாவின் இலக்கு தெளிவாக உள்ளது. நாடு உள்ளடக்கிய வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விரும்புகிறது. அதே நேரத்தில், புதுமைகளை ஊக்குவிக்கும் விதிகளைக் கொண்டிருக்கவும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், கொள்கைகள் மற்றும் உள்கட்டமைப்பைவிட, இந்த மாற்றம் நமது மக்களை மையமாகக் கொண்டது.


கட்டுரை ஆசிரியர் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், இரயில்வே மற்றும் தகவல் & ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஆவார்.


Original article:

Share:

இந்தியா உயர்-வருமான பொருளாதாரமாக மாறுவதற்கு என்ன தேவை?

 இந்தியா போன்ற நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு பரந்த மற்றும் ஆழமான சீர்திருத்தங்கள் தேவை.


2007-08ஆம் ஆண்டில், இந்தியா குறைந்த நடுத்தர வருமான நாடாக வகைப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில், இந்தியாவின் தனிநபர் வருமானம் $1,022 ஆக இருந்ததாக சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund (IMF)) தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்குள், சராசரி வருமானம் $2,697 ஆக அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த நடுத்தர வருமானத்திலிருந்து உயர் நடுத்தர வருமானத்திற்கு மாற, உலக வங்கி 2024-25ஆம் ஆண்டிற்கு தேவையான தனிநபர் வருமானத்தை $4,516 ஆக நிர்ணயித்துள்ளது. 2029ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் தனிநபர் வருமானம் $4,195-ஐ எட்டும் என்று IMF எதிர்பார்க்கிறது. இதன் பொருள் பத்தாண்டுகளின் இறுதிக்குள் இந்தியா உயர் நடுத்தர வருமான நிலையை அடையாது. உலக வங்கியின் கூற்றுப்படி, 2032-ம் ஆண்டுக்குள் இந்தியா உயர் நடுத்தர வருமானப் பொருளாதாரமாக (upper middle-income economy) மாற வாய்ப்புள்ளது. இருப்பினும், 2047-ம் ஆண்டுக்குள் உயர் வருமானம் கொண்ட வளர்ந்த நாடாக மாறுவதே மிகப்பெரிய சவாலாகும்.


இது ஒரு கடினமான பணியாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில், தென் கொரியா, செக் குடியரசு மற்றும் ருமேனியா போன்ற ஒரு சில நாடுகள் மட்டுமே நடுத்தர வருமான நிலையிலிருந்து உயர் வருமான நிலைக்கு மாறியுள்ளன. பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் மலேசியா போன்ற பல நாடுகளால் இந்த மாற்றத்தை அடைய முடியவில்லை. இந்த நாடுகள் "நடுத்தர-வருமான வலையில்" (middle-income trap) சிக்கித் தவிக்கின்றன. இதற்கான கேள்வி என்னவென்றால்: இந்தியாவும் இதே விதியைத் தவிர்க்க முடியுமா? 'ஒரு தலைமுறையில் அதிக வருமானம் ஈட்டும் பொருளாதாரமாக மாறுதல்' (Becoming a high-income economy in a generation) என்ற தலைப்பில் சமீபத்திய பொருளாதார அறிக்கையில், 2047-ல் அதிக வருமானம் ஈட்டும் நாடாக இந்தியா அடுத்த பத்தாண்டுகளில் 7.8 சதவீத வளர்ச்சியை அடைய வேண்டும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. எனவே, தற்போதைய அணுகுமுறையைத் தொடர்வது "உறுதியான நலன்சார்ந்த ஆதாயங்களுக்கு" (tangible welfare gains) வழிவகுக்கும். ஆனால், நீண்ட காலத்திற்கு இதுபோன்ற உயர் வளர்ச்சியை தொடர்ந்து பராமரிக்க இது போதுமானதாக இருக்காது.


இந்த இலக்கை அடைய வங்கியானது, ஒரு கொள்கைக்கான செயல்திட்டத்தை செயல்படுத்தக் கோடிட்டுக் காட்டியுள்ளது. மேலும், இதற்கான கட்டமைப்பு மாற்றத்தை ஊக்குவிப்பதிலும், முதலீடுகளை அதிகரிப்பதிலும் இது கவனம் செலுத்துகிறது. மேலும், உற்பத்தித் திறன் மிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, நாட்டில் உள்ள மாநிலங்கள் வேகமாக வளர்ச்சிக்கு உதவவும் இது முயல்கிறது. "துரிதப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள்" (accelerated reforms) சூழ்நிலை 2035-ம் ஆண்டுக்குள் முதலீடு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 40% ஐ எட்டும் என்று எதிர்பார்க்கிறது. 2050-ம் ஆண்டுக்குள் பெண் தொழிலாளர் பங்களிப்பு (female labour force participation) விகிதம் 55% ஆக உயரும் என்றும் எதிர்பார்க்கிறது. இது அதிக உற்பத்தித் திறனுக்கு வழிவகுக்கும். முதலீடு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் தற்போது 33 சதவீதமாக உள்ளது. மேலும், தனியார் முதலீடுகள் குறைக்கப்பட்டுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில், பெண் தொழிலாளர் பங்களிப்பு (female labour force participation) கடுமையாக அதிகரித்துள்ளது. 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களில் இது இப்போது 41.7 சதவீதமாக உள்ளது. விவசாயத் துறையை விட்டு வெளியேறுவதற்குப் பதிலாக அதிகமான பெண்கள் விவசாயத்தில் வேலை செய்கிறார்கள். விவசாயத்தில் தொழிலாளர்களின் பங்கு 2017-18ஆம் ஆண்டில் 44.1 சதவீதத்திலிருந்து 2023-24ஆம் ஆண்டில் 46.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவை நீண்டகால உயர்வளர்ச்சிப் பாதையில் வைத்திருக்க, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஆழமான மற்றும் பரந்த சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.


Original article:

Share:

அருமண் தனிமங்கள் (Rare Earth Elements) என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

 உக்ரைன் மற்றும் அமெரிக்க போர்க்கால உதவிக்கான இழப்பீடாக உக்ரைனின் அரிய மண் தாதுக்களிலிருந்து $500 பில்லியன் மதிப்புள்ள லாபத்தைப் பெறுவதற்கான டிரம்ப் நிர்வாகத்தின் திட்டம், இந்த வளங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை  அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோருக்கு இடையேயான சமீபத்திய சந்திப்பைத் தொடர்ந்து, அருமண் தனிமங்கள் (Rare Earth Elements) ஒப்பந்தத்தை புதுப்பிக்க ஜெலென்ஸ்கி அழுத்தத்தை எதிர்கொள்ளக்கூடும் என்ற யுகம் அதிகரித்து வருகிறது. இந்த முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, இந்த தனிமங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.


முக்கிய அம்சங்கள்:


1. உலகின் முக்கியமான மூலப்பொருட்களில் 5% உக்ரைனில் உள்ளது. இது 19 மில்லியன் டன் கிராஃபைட் இருப்புக்களைக் கொண்டுள்ளது. இவை மின்சார வாகன பேட்டரிகளில் பயன்படுத்தப்படுகின்றன. பேட்டரிகளை தயாரிப்பதற்கான முக்கியப் பொருளான ஐரோப்பாவின் லித்தியம் வைப்புகளில் மூன்றில் ஒரு பங்கையும் அந்நாடு கொண்டுள்ளது.


2. பிப்ரவரி 2021-ல் ரஷ்ய போருக்கு முன்பு உக்ரைன் உலகின் டைட்டானியத்தில் 7%-ஐ உற்பத்தி செய்தது. விமானங்கள் மற்றும் மின் நிலையங்களில் டைட்டானியம் பயன்படுத்தப்படுகிறது. பிபிசி அறிக்கைகளின்படி, உக்ரைனில் அருமண் தனிமங்கள் (Rare Earth Elements) அதிகமாக உள்ளன.


அருமண் தனிமங்கள் (Rare Earth Elements) என்றால் என்ன?


1. அருமண் தனிமங்கள் (Rare Earth Elements (REEs)) என்பது கால அட்டவணையில் காணப்படும் 17 வேதியியல் தனிமங்களின் குழுவாகும். அவற்றில் 15 லாந்தனைடுகள், ஸ்காண்டியம் (Sc) மற்றும் யட்ரியம் (Y) ஆகியவை உள்ளன. இவை பெரும்பாலும் லாந்தனைடுகளுடன் காணப்படுகின்றன மற்றும் ஒத்த பண்புகளைக் கொண்டுள்ளன. லேசான அருமண் தனிமங்கள் (light RE elements (LREE)) மற்றும் கன அருமண் தனிமங்கள் (heavy RE elements (HREE)) என பிரிக்கப்படுகின்றன.


2. சீரியம், டிஸ்ப்ரோசியம், எர்பியம், யூரோபியம், கேடோலினியம், ஹோல்மியம், லாந்தானம், லுடேசியம், நீயோடிமியம், பிராசியோடிமியம், புரோமெதியம், சமாரியம், ஸ்காண்டியம், டெர்பியம், துலியம், இத்டர்பியம், இத்டிரியம் ஆகியவை புவியின் 17 அரிய தனிமங்கள் ஆகும்.


அருமண் தனிமங்கள் ஏன் முக்கியம்?


1. மொபைல் போன்கள், கணினி ஹார்டு டிரைவ்கள், மின்சார மற்றும் கலப்பின வாகனங்கள், குறைக்கடத்திகள், பிளாட்ஸ்கிரீன் டிவிகள் மற்றும் மானிட்டர்கள் மற்றும் உயர்நிலை மின்னணுவியல் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நுகர்வோர் தயாரிப்புகளில் REE-கள் ஒரு அத்தியாவசியமான - பெரும்பாலும் சிறியதாக இருந்தாலும் முக்கியமான கூறுகளாகும். அருமண் தனிமங்கள் விண்வெளி விண்கல கூறுகள், ஜெட் என்ஜின் டர்பைன்கள் மற்றும் ட்ரோன்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.


2. ஸ்காண்டியம் (Scandium) தொலைக்காட்சிகள் மற்றும் ஃப்ளோரசன்ட் விளக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், யட்ரியம் (yttrium) முடக்கு வாதம் மற்றும் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.


இந்தியாவில் உள்ள அருமண் தனிமங்கள் பற்றி


இந்தியாவில் லாந்தனம், சீரியம், நியோடைமியம், பிரசியோடைமியம் மற்றும் சமாரியம் போன்ற சில அருமண் தனிமங்கள் உள்ளன. இருப்பினும், டிஸ்ப்ரோசியம், டெர்பியம் மற்றும் யூரோபியம் போன்ற சில கனரக அருமண் தனிமங்கள் இந்தியாவில் பிரித்தெடுக்கக்கூடிய அளவில் இல்லை. எனவே, கனரக அருமண் தனிமங்களுக்கு (heavy RE elements (HREE)) சீனா போன்ற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலை உள்ளது. இது அருமண் தனிமங்களின் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இது உலகளாவிய உற்பத்தியில் 70% பங்கைக் கொண்டுள்ளது.


தேசிய முக்கியமான கனிமங்கள் திட்டம் (National Critical Minerals Mission (NCMM))


1. ஜனவரி 29, 2025 அன்று, ₹16,300 கோடி பட்ஜெட்டில் தேசிய முக்கியமான கனிமங்கள் திட்டத்தை  அரசாங்கம் அங்கீகரித்தது. இந்தப் பணி இந்தியாவிற்குள்ளும், கடல்கடந்த இடங்களிலும் முக்கியமான கனிமங்களை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட பொருட்களிலிருந்து கனிமங்களை ஆராய்தல், சுரங்கப்படுத்துதல், பதப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட அனைத்து நிலைகளையும் NCMM உள்ளடக்கும்.


2. இந்த பணி நிலத்திலும் கடலோரத்திலும் முக்கியமான கனிமங்களைத் தேடுவதை அதிகரிக்கும். இந்த கனிமங்களைச் சுரங்கப்படுத்துவதற்கான ஒப்புதல் செயல்முறையையும் இது துரிதப்படுத்தும்.


முக்கியமான கனிமங்கள் என்றால் என்ன?


பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு கனிமங்கள் முக்கியமானவை. இந்த கனிமங்கள் கிடைப்பது கடினமாக இருந்தால் அல்லது ஒரு சில இடங்களில் பெரும்பாலும் உற்பத்தி செய்யப்பட்டால், அது விநியோக சிக்கல்களை ஏற்படுத்தும். லித்தியம், கிராஃபைட், கோபால்ட், டைட்டானியம் மற்றும் புவியின் அறிய தனிமங்கள் அடங்கும். உயர் தொழில்நுட்ப மின்னணுவியல், தொலைத்தொடர்பு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு போன்ற தொழில்களுக்கு இந்த கனிமங்கள் தேவைப்படுகின்றன.


3. இந்த பணிக்கு தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளைக்கு (National Mineral Exploration Trust (NMET)) அரசு கூடுதலாக ₹5,600 கோடியை வழங்கும். இந்த பணம் மற்ற நாடுகளிலிருந்து கனிமங்களை வாங்குவதில் உள்ள அபாயங்களை சரிசெய்யவும், இந்தியாவிற்கு வெளியே ஆய்வுகளை ஆதரிக்கவும் உதவும்.


4. அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (Anusandhan National Research Foundation (ANRF)) மற்றும் பிற ஆராய்ச்சி திட்டங்களிலிருந்து ₹1,000 கோடியை தேசிய கனிமப் பொருட்கள் மையம் பெறும். இது அரசாங்க பட்ஜெட்டில் இருந்து ₹2,600 கோடியையும் பெறும். உலக வங்கியின் நெகிழ்ச்சி மற்றும் உள்ளடக்கிய விநியோகச் சங்கிலி மேம்பாடு (Resilient and Inclusive Supply-Chain Enhancement (RISE)) முன்முயற்சியின் மூலம் NCMM-க்கு வெளிப்புற நிதியுதவியை சுரங்க அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.


5. அரசாங்கம் நான்கு கனிம பதப்படுத்தும் பூங்காக்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் பெரிய முறைசாரா மறுசுழற்சி துறையை மேம்படுத்த, முக்கியமான கனிமங்களை மறுசுழற்சி செய்வதற்கு தனி விதிகளையும் உருவாக்கும். கனிம வளம் மிக்க நாடுகளுடன் கூட்டாண்மைகளை உருவாக்கி, வர்த்தக ஒப்பந்தங்களில் முக்கியமான கனிமங்களைச் சேர்ப்பதை NCMM நோக்கமாகக் கொண்டுள்ளது.


6. 2023-ஆம் ஆண்டில், லித்தியம், கோபால்ட், நிக்கல், கிராஃபைட், தகரம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட 30 முக்கியமான கனிமங்களை ஒன்றிய அரசு பட்டியலிட்டது. இந்த கனிமங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியமானவை.


Original article:

Share:

பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, தொகுதி மறுவரையறை ஏன் தேவைப்படுகிறது? -குஷ்பூ ஸ்ரீவஸ்தவா, அஸ்வனி குமார்

 ஜெர்ரிமாண்டரிங் குறித்த கவலைகள் இருந்தாலும், இந்த செயல்முறை அதிகாரத்தை விளிம்பு நிலைவரை கொண்டுசெல்ல உதவும்.


ஜெரிமாண்டரிங் (Gerrymandering) : ஜெர்ரிமாண்டரிங் என்பது தேர்தல் மாவட்டங்களை\தொகுதிகளை பிரிக்கும் போது குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு அல்லது குழுவுக்கு ஏற்றவாறு எல்லைகளை வகுப்பது ஆகும். இவ்வாறு பிரிக்கப்படும் தேர்தல் மாவட்டங்கள்\தொகுதிகள் ஜெர்ரிமாண்டர் எனப்படும்.


இந்தியா "இரண்டாவது குடியரசு" என்ற புதிய கட்டத்தில் நுழைகிறது. முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை, ஜனநாயகத்தில் மக்கள்தொகைக்கும் பிரதிநிதித்துவத்திற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு குறித்த விவாதத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. எல்லை நிர்ணயம் அரசியல் சமத்துவத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், இந்தியா போன்ற பெரிய குடியரசுகள் சவால்களை எதிர்கொள்கின்றன. அவை மக்கள்தொகை அளவு, பிராந்தியங்கள், இனக்குழுக்கள் மற்றும் அரசியல் நலன்கள் போன்ற பல்வேறு காரணிகளை சமநிலைப்படுத்த வேண்டும்.


தொகுதி மறுவரையறை மக்கள்தொகை மாற்றங்களின் அடிப்படையில் தொகுதி எல்லைகளை சீர்படுத்த உதவுகிறது. இது நாடாளுமன்றத்தில் நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்கிறது. இருப்பினும், 1976 முதல், இந்த செயல்முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் தென் மாநிலங்களை பாதுகாக்க இது செய்யப்பட்டது. இதன் காரணமாக, அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் குறைவான பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.  இதற்கு நேர்மாறாக, தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற தென் மாநிலங்களில் குறைவான மக்கள் தொகை இருந்தாலும் அதிக இடங்கள் உள்ளன. தவறானப் பகிர்வு என்று அழைக்கப்படும் இந்த ஏற்றத்தாழ்வு அரசியல் பதட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. 2029-ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை ஏற்கனவே அரசியல் ரீதியாக மேலாதிக்கம் செலுத்தும் (politically hegemonic) வட மாநிலங்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் என்று பலர் கவலை கொள்கிறார்கள்.


அரசியலமைப்புச் சட்டத்தின் 82-வது பிரிவு தொகுதி மறுவரையறையை கட்டாயமாக்குகிறது. அதை ஒரு தன்னாட்சி தொகுதி மறுவரையறை ஆணையம் இந்த செயல்முறையை மேற்கொள்கிறது. 1952, 1962 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. இருப்பினும், 1976ஆம் ஆண்டில், 42-வது அரசியலமைப்பு திருத்தம் அதை நிறுத்தியது. 2001-ஆம் ஆண்டில், அது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. 2026 வரை தொகுதி மறுவரையறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தாமதம் மக்கள்தொகை வளர்ச்சியை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தங்களது நாடாளுமன்ற தொகுதிகளை இழக்க நேரிடும். அதே, நேரத்தில் அதிக பிறப்பு விகிதங்களைக் கொண்ட மாநிலங்கள் அதிக பிரதிநிதித்துவத்தைப் பெறும் ஒரு முரண்பாடான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.


முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை எதிர்ப்பவர்கள் தென் மாநிலங்கள் வட மாநிலங்களை விட பல துறைகளில் சிறப்பாக செயல்படுவதாகக் கூறுகின்றனர். தனிநபர் வருமானம், வரி பங்களிப்புகள், உட்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவை இதில் அடங்கும். தெற்கில் அதிக நகர்ப்புறங்கள், குறைந்த குழந்தை இறப்புகள் மற்றும் நீண்ட ஆயுட்காலம் ஆகியவை உள்ளன. இந்த வேறுபாடுகள், தெற்கு வடக்கிற்கு நிதி உதவி செய்வதாகக் கூறுவதற்கு வழிவகுத்துள்ளன. வட மாநிலங்கள் அதிக மக்கள்தொகை வளர்ச்சி, வேலையின்மை, வறுமை மற்றும் பலவீனமான உட்கட்டமைப்பு ஆகியவற்றின் சுமையை தென் மாநிலங்கள் சுமக்கின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் தொகுதி மறுவரையறை செய்வது மாநிலங்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும் என்று தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். வட மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவில்லை அல்லது தெற்கின் பொருளாதார முன்னேற்றத்துடன் பொருந்தவில்லை என்றால், தொகுதி மறுவரையறை ஒரு "ரெட் குயின் விளைவை" உருவாக்கக்கூடும்.


Red Queen Effect (ரெட் குயின் விளைவை) என்பது ஒரு பகுதி முன்னேறினாலும், மற்றொரு பகுதி பின் தங்கியிருந்தால், அது முழு அமைப்பும் முன்னேற்றமடையாத நிலையை குறிக்கிறது. 


தொகுதி மறுவரையறையை வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு வழிகளில் கையாளுகின்றன. நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா தங்கள் அரசியலமைப்பில் தெளிவான விதிகளைப் பின்பற்றுகின்றன. இந்தியாவும் ஜப்பானும் வழக்கமான சட்டங்கள் மூலம் தொகுதி மறுவரையறையை கைளாளுகின்றன. தொகுதி மறுவரையறை முடிவுகளை நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டுமா என்பது பற்றிய விவாதமும் நடந்து வருகிறது. மேகராஜ் கோத்தாரி VS தொகுதி மறுவரையறை ஆணையம் 1966-ஆம் ஆண்டு வழக்கில், தொகுதி மறுவரையறை முடிவுகள் இறுதியானவை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றத் தலையீடு நீண்ட காலத்திற்கு தேர்தலை தாமதப்படுத்தக்கூடும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. சமீபத்தில், ஜம்மு-காஷ்மீர் தொகுதி மறுவரையறை சிறுபான்மை சமூகங்களை ஓரங்கட்டுவதாகக் கூறப்பட்ட போதிலும், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றொரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது. 2023-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், இது அடுத்த தொகுதி மறுவரையறைக்குப் பிறகுதான் மசோதா செயல்படுத்தப்படும். உண்மையான பாலின பிரதிநிதித்துவம் 2029 வரை தாமதமாகும்.


தொகுதி மறுவரையறை, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர், புலம்பெயர்ந்தோர் மற்றும் பிற சமூக-மத சிறுபான்மையினரையும் பாதிக்கிறது. அரசியலமைப்பின் பிரிவு 330(2)-ன் படி, பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களின் மக்கள்தொகைக்கு விகிதாசாரமாக இருக்க வேண்டும். இருப்பினும், இட ஒதுக்கீடு இன்னும் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பை நம்பியிருப்பதால், அதன் பின்னர் கணிசமாக வளர்ந்த சமூகங்கள் குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, பீகார் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு (2023), பட்டியல் சாதி மக்கள் தொகை 15.9 சதவீதத்திலிருந்து 19.65 சதவீதமாகவும், பட்டியல் பழங்குடியின மக்கள் தொகை 1.2 சதவீதத்திலிருந்து 1.68 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாகக் கண்டறிந்துள்ளது. இருப்பினும், இட ஒதுக்கீடு இந்த மக்கள்தொகை மாற்றங்களை பிரதிபலிக்கவில்லை, இதனால் பல பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் சமூகங்கள் குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன.


குறிப்பாக, முற்றிலும் மக்கள்தொகை அடிப்படையிலான இட ஒதுக்கீடு, அதிகமாக இந்தி பேசும் பகுதிகளை அதிகாரத்தை நோக்கி கடுமையாக மாற்றக்கூடும். இதனால் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் குறையும். எந்த மாநிலத்திற்கும் பிரதிநிதித்துவத்தைக் குறைக்காமல் மக்கள்தொகை மாற்றங்களுக்கு ஏற்ப மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அரசியல் விஞ்ஞானி அலிஸ்டர் மெக்மில்லன் பரிந்துரைக்கிறார். மக்களவையில் வடக்கத்திய ஆதிக்கத்திற்கு எதிரான சமநிலையை வழங்குவதற்காக, மாநிலங்களவையை சீர்திருத்த வேண்டும் என்று மிலன் வைஷ்ணவ் பரிந்துரைக்கிறார்.


தொகுதி மறுவரையறை பெரும்பாலும் அதிகாரப் பகிர்வு மற்றும் நிரந்தர அரசியல் பெரும்பான்மையை உருவாக்குவது குறித்த கவலைகளை எழுப்புகிறது. இருப்பினும், சிறிய பிராந்திய அலகுகளுக்கு அதிக அதிகாரம் வழங்குவதோடு, நாடாளுமன்ற இடங்களை விரிவுபடுத்துவதும் ஒரு நேர்மறையான அணுகுமுறையாகும். இது ஜனநாயகத்தில் பிரதிநிதித்துவத்தையும் பொதுப் பங்கேற்பையும் வலுப்படுத்தும். பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினரை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் படிப்படியாக சமத்துவத்தை அடைவது (equality of conditions) என்ற அலெக்சிஸ் டி டோக்வில்லின் தொலைநோக்குப் பார்வையுடன் இந்தக் கருத்து ஒத்துப்போகிறது.


இறுதியில், இந்தியாவில் தொகுதி மறுவரையறை பயிற்சி என்பது மக்கள்தொகை தரவு, அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அரசியல் நலன்களை உள்ளடக்கிய ஒரு சிக்கலான செயல்முறையாகும். தேர்தல்களில் நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக இது கவனமாகக் கையாளப்பட வேண்டும். இந்தியாவின் ஜனநாயகத்தை வலுவாக வைத்திருக்க, தேசிய மற்றும் பிராந்திய அரசியல் கட்சிகள் நாட்டின் தேர்தல் முறையைப் புதுப்பிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 127-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவைச் சுற்றியுள்ள முன்னெப்போதும் இல்லாத அரசியல் ஒருமித்த கருத்து, டச்சு அரசியல் விஞ்ஞானி அரெண்ட் லிஜ்பார்ட் விவரித்தபடி, பெரும்பான்மை ஆட்சி முறைக்குள் இந்தியா அதிகாரப் பகிர்வு ஜனநாயகமாக மாறி வருவதை இது குறிக்கிறது. தொகுதி மறுவரையறை இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தை மேம்படுத்தவும், எதிர்காலத்தில் அதன் ஜனநாயக அமைப்பை வலுப்படுத்தவும் உதவும்.


எழுத்தாளர்கள் மும்பையில் உள்ள TISS, தேர்தல் ஆய்வுகள் மையத்தில் கற்பிக்கின்றனர்.


Original article:
Share: