இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணை: மொழி சேர்க்கை எவ்வாறு விலக்கை உருவாக்குகிறது -நிகிதா மோஹ்தா

 தற்போதுள்ள மொழியியலாளர்கள் கூறுகையில், அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் 22 மொழிகள் "அதிகாரம், அங்கீகாரம் மற்றும் மதிப்பை" பெற்றுள்ளன. மற்றவை “கிளைமொழிகள்” (dialects) அல்லது “சிறு மொழிகள்” (minor languages) என்று கருதப்பட்டு புறக்கணிக்கப்படுகின்றன.


ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி 21 சர்வதேச தாய்மொழி தினமாக (International Mother Tongue Day) அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் நூற்றுக்கணக்கான தாய்மொழிகள் பேசப்படும் இந்த நாட்டிற்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இருப்பினும், 2025-ஆம் ஆண்டில், இந்த நாள் கொண்டாட்டத்தோடு மட்டுமல்லாமல், போராட்டத்தோடும் குறிக்கப்பட்டது. டெல்லியின் ஜந்தர் மந்தரில், டாக்டர் சந்தோஷ் படேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குழு, இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் போஜ்புரியை (Bhojpuri) சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். பல நாடுகளில் மில்லியன் கணக்கான மக்களால் பேசப்படும் போஜ்புரி, மொரிஷியஸ் மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளிலும் அரசியலமைப்பு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், இந்த போராட்டம் ஒரு கடுமையான உண்மையை வெளிப்படுத்தியது: இந்தியாவில், போஜ்புரி இன்னும் அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை.


ஜந்தர் மந்தர் இடம் ஆர்ப்பாட்டங்களுக்கு புதியதல்ல. 8-வது அட்டவணையில் தங்கள் மொழிகளுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று வாதிடும் சமூகங்களால் இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய சட்டப் பள்ளியின் சட்டப் பேராசிரியை ஐஸ்வர்யா பிர்லா, IndianExpress.com உடனான மின்னஞ்சல் நேர்காணலில் விளக்குவது போல்: “இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணை இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளைப் பட்டியலிடுகிறது. இந்த மொழிகள், அவரது கூற்றுப்படி, குறியீட்டு அங்கீகாரம், நிறுவன ஆதரவு, சமூக அங்கீகாரம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் மற்றவர்களை விட அதிகமாக பயனடைகின்றன. 2024 வரை, அட்டவணையின் கீழ் 22 மொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.


இருப்பினும், ஆரம்பத்தில், 8-வது அட்டவணை 14 மொழிகளை உள்ளடக்கி  இருந்தது. அசாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, மலையாளம், மராத்தி, ஒரியா (2011-ல் ஒடியா என மறுபெயரிடப்பட்டது), பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகும்.  1927-ஆம் ஆண்டிலேயே துணைக் கண்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட மொழியியல் வகைகளை பட்டியலிட்ட ஜார்ஜ் ஏ கிரியர்சன் தனது இந்திய மொழியியல் ஆய்வில் அடையாளம் காணப்பட்ட நூற்றுக்கணக்கான மொழிகளிலிருந்து இந்த 14 மொழிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.


எட்டாவது அட்டவணையில் தங்கள் மொழியைச் சேர்க்க சமூகங்களுக்குள் ஏன் இவ்வளவு ஆர்வம் இருக்கிறது? பட்டியலில் இடம்பெறும் மொழிகளுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் என்ன வழங்குகிறது?. மாறாக அங்கீகரிக்கப்படாத மொழிகள் எதை இழக்கின்றன?


இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணை


8-வது அட்டவணை இந்தியை வளப்படுத்த உதவும் மொழிகளின் பட்டியலாக உருவாக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினரான M சத்தியநாராயணா, ஜவஹர்லால் நேருவின் ஒப்புதலுடன், அட்டவணையில் சேர்ப்பதற்கான 12 மொழிகளின் பட்டியலை ஆரம்பத்தில் தொகுத்தார் என்று பிர்லா விளக்குகிறார். இந்தியாவின் இந்திய-இஸ்லாமிய பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் அதன் பங்கை எடுத்துக்காட்டி, நேரு உருது மொழியைப் பட்டியலில் சேர்த்தார்.


கூடுதலாக, ஒரு குறிப்பிடத்தக்க தேசியவாதியும் அரசியலமைப்பு சபை உறுப்பினருமான கே.எம். முன்ஷி, இந்திய துணைக்கண்டம் முழுவதும் சமஸ்கிருதத்தின் நீடித்த நாகரிக முக்கியத்துவத்தையும் பல முக்கிய இந்திய மொழிகளில் அதன் செல்வாக்கையும் மேற்கோள் காட்டி, சமஸ்கிருதத்தைச் சேர்ப்பதற்காக வாதிட்டார்.


காலப்போக்கில், அட்டவணையானது 14 மொழிகளைத் தாண்டி போடோ, டோக்ரி, கொங்கனி, மைதிலி, மணிப்பூரி, நேபாளி, சந்தாலி மற்றும் சிந்தி ஆகியவற்றை உள்ளடக்கியதாக விரிவடைந்து, மொத்த எண்ணிக்கையை 22- ஆக உயர்ந்தது. 


1967ஆம் ஆண்டு  21-வது திருத்தச் சட்டத்தின் (21st Amendment Act) மூலம் சிந்தி சேர்க்கப்பட்டது. 


கொங்கனி, மணிப்பூரி மற்றும் நேபாளி ஆகியவை 1992ஆம் ஆண்டு 71வது திருத்தச் சட்டம்  (71st Amendment Act) மூலம் சேர்க்கப்பட்டன.


போடோ, டோக்ரி, மைதிலி மற்றும் சந்தாலி ஆகியவை 2003ஆம் ஆண்டு 92வது திருத்தச் சட்டத்தின் (92nd Amendment Act) மூலம் சேர்க்கப்பட்டன.


அரசியலமைப்பு எட்டாவது அட்டவணையில் பிராந்திய மொழிகளை இரண்டு முக்கிய காரணங்களுக்காக உள்ளடக்கியது:


1. இந்த மொழிகளைப் பேசும் மக்களுடன் ஒரு குழுவை அமைத்து, இந்தி எவ்வாறு அதிகாரப்பூர்வ மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை மறுபரிசீலனை செய்வது.


2. இந்த மொழிகளிலிருந்து வரும் சொற்கள் மற்றும் கருத்துக்களைப் பயன்படுத்தி இந்தி வளர உதவுவது.


எட்டாவது அட்டவணையைச் சேர்ப்பதற்கான காரணம், காலனித்துவ ஆட்சிக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் மற்றும் 1800ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பிராந்திய மொழி இயக்கங்களின் எழுச்சியுடன் தொடர்புடையது என்று பிர்லா கூறுகிறார்.


8-வது அட்டவணைக்கு மொழிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றன


இந்தியன் மொழியியலாளர் பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தி, இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணைக்கு சிறப்பு குறிப்புடன் அதிகாரப்பூர்வ மொழிக் கொள்கைகள் (Official Language Policies with Special Reference to the Eighth Schedule of the Constitution of India) என்ற தனது கட்டுரையில் கூறுகையில், அரசியலமைப்பு நிர்ணய சபை 8-வது அட்டவணையில் மொழிகளைச் சேர்ப்பதற்கு எந்த முறையான அளவுகோல்களையும் நிர்ணயிக்கவில்லை. 


மாறாக, பிர்லா குறிப்பிடுவது போல், அவர்களின் விவாதங்கள் மூன்று மைய மொழியியல் பிரச்சினைகளில் கவனம் செலுத்தினர். அவை: 


1. இந்தி அல்லது இந்துஸ்தானி அலுவல் மொழியாக இருக்க வேண்டுமா? மேலும், அந்த முடிவை  எவ்வாறு ஆதரிப்பது.


2. 1965ஆம் ஆண்டில் முடிவடைந்த 15 ஆண்டு காலத்திற்குப் பிறகு ஆங்கிலத்தை அலுவல் மொழியாகப் பயன்படுத்துவதை நிறுத்தும் திட்டம்.


3. அரசியலமைப்பின் மூலம் இந்தியாவின் பல பிராந்திய மற்றும் சிறுபான்மை மொழிகளை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் ஆதரிப்பது போன்றவை இதில் அடங்கும். 


இருப்பினும், எட்டாவது அட்டவணையில் சில மொழிகளைச் சேர்க்கும் முடிவு சில முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டது என்று கிருஷ்ணமூர்த்தி விளக்கினார்: இந்த மொழிக்கு வலுவான இலக்கிய வரலாறு மற்றும் எழுத்து வடிவம் இருந்தது. குறிப்பிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் இதைப் பேசினர். சிந்தி மற்றும் நேபாளி போன்ற அரசியல் காரணங்களுக்காக சில மொழிகள் சேர்க்கப்பட்டன. கொங்கணி மற்றும் மணிப்பூரி போன்ற புதிய மாநிலங்களில் அவை அதிகாரப்பூர்வ மொழிகளாக மாறியதால் மற்றவை சேர்க்கப்பட்டன.


எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள பிற மொழிகளிலிருந்து அம்சங்களை எடுத்துக்கொண்டு இந்தி தேசிய மொழியாக வடிவமைக்கப்படுகிறது என்று பேராசிரியரும் மொழியியலாளருமான டி.பி. பட்டநாயக் கூறுகிறார்.


சுவாரஸ்யமாக, இந்தியாவில் ஆங்கிலம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், அது 8-வது அட்டவணையில் ஒருபோதும் சேர்க்கப்படவில்லை. அதைச் சேர்க்கும் திட்டம் 1959ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது. ஆனால், ஜவஹர்லால் நேரு அதை கடுமையாக எதிர்த்தார். பிரிட்டிஷ் காலனித்துவ ஆதிக்கத்துடன் தொடர்புடைய தேசியவாத உணர்வுகள் காரணமாக ஆங்கிலம் வேண்டுமென்றே அட்டவணையில் இருந்து விலக்கப்பட்டதாக பிர்லா வலியுறுத்துகிறார்.


பிர்லாவின் கூற்றுப்படி, 8-வது அட்டவணையில் எந்த மொழிகளைச் சேர்க்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் போது, ​​அந்த மொழியை அரசு, தகவல் தொடர்பு, கல்வி, கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்குப் பயன்படுத்தலாமா என்பது ஒரு முக்கிய விதி என்று பிர்லா விளக்கினார். இதன் காரணமாக, பல பழங்குடி மொழிகள் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு போதுமான அளவு வளர்ச்சியடையாததால், முதலில் அவை சேர்க்கப்படவில்லை.


மொழிகளைச் சேர்ப்பதற்கான தெளிவான விதிகளை அமைப்பதற்கான முந்தைய குழுக்களின் பணிகளை பிர்லா விளக்குகிறார். அசோக் பஹ்வா குழு (1996) கீழ்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் ஒரு மொழியை எட்டாவது அட்டவணையில் சேர்க்கலாம் என்று பரிந்துரைத்தது. அவை:


- இது குறைந்தபட்சம் ஒரு மாநிலத்தில் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தல்.

- ஒரு மாநிலத்தின் மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் பேச்சு மொழியாகப்  பயன்படுத்துதல்.

- இது ஒரு தனித்துவமான மொழியாக இருத்தல்.

- இது சாகித்ய அகாடமியால் அங்கீகரிக்கப்படுதல்..

- இது ஒரு தெளிவான மற்றும் வளர்ந்த இலக்கிய மரபைக் கொண்டிருத்தல்.


போன்றவை 8வது அட்டவனையில் ஒரு புதிய மொழியை சேர்க்க பரிந்துரைத்தது.


பின்னர், (சிதகாந்த் மோஹபாத்ரா குழு, 2003) குறிப்பிட்ட அளவுகோல்களைச் சேர்த்தது. ஒரு மொழி எட்டாம் அட்டவணையில் இடம்பெற கணிசமான மக்கள்தொகையால் பேசப்படுவதற்கு, கடந்த 30 ஆண்டுகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவின் அடிப்படையில் குறைந்தபட்சம் 5 மில்லியன் பேசுபவர்கள் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.  அந்த மொழி குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளி வரை, விரும்பத்தக்க முறையில் பல்கலைக்கழக அளவு வரை கல்வி கற்பிக்கும் ஊடகமாகவும் செயல்பட வேண்டும். அதோடு, அதன் எழுத்துமுறை உள்நாட்டு எழுத்துமுறை, ஆதிக்கம் செலுத்தும் பிராந்திய மொழியிலிருந்து பெறப்பட்டது‘ அல்லது தேவநாகரி எழுத்துமுறையைப் பயன்படுத்துவது மற்றும் குறைந்தபட்சம் 50 ஆண்டுகளாக நிலைபெற்ற பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டும். சாகித்ய அகாடமி (Sahitya Akademi) அந்த மொழியில் இலக்கிய நடவடிக்கைகளை தீவிரமாக ஆதரிக்க வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது.


இந்த முயற்சிகள் இருந்தாலும், எந்த அதிகாரப்பூர்வ தரநிலையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பிர்லா எழுதுவது போல, "இந்த தருணத்தில் சேர்ப்பதற்கான நிலையான அளவுகோல் எதுவும் இல்லை. உள்துறை அமைச்சகம் இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது: சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களால் மொழிகளும் பேச்சு வழக்குகளும் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே, அவற்றைப் பிரித்தறிய நிலையான விதிகளை அமைப்பது அல்லது இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் எவற்றைச் சேர்க்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது கடினம்.


8-வது அட்டவணையில் பிற மொழிகளைச் சேர்ப்பதற்கான உணர்வுகள் மற்றும் தேவைகள் குறித்து அரசாங்கம் விழிப்புடன் உள்ளது. மேலும், இந்த உணர்வுகளையும், பேச்சுவழக்குகளை மொழியில் பரிணமிப்பது, ஒரு மொழியின் பரவலான பயன்பாடு போன்ற பிற பரிசீலனைகளையும் மனதில் கொண்டு கோரிக்கைகளை ஆராயும்" என்று அமைச்சகம் மேலும் கூறுகிறது.


உணரப்பட்ட நன்மைகள்


8-வது அட்டவணையில் பட்டியலிடப்படுவதால் உணரப்படும் நன்மைகள் அடையாள ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் உள்ளன. 1950ஆம் ஆண்டு முதல் 8-வது அட்டவணை செயல்பாடு குறித்த தனது கண்டறிதல்களிலிருந்து, கிருஷ்ணமூர்த்தி பல உறுதியான நன்மைகளை வெளிக்கொணர்கிறார். எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகள் நாடாளுமன்றத்தில் எந்த உறுப்பினராலும் பேசப்பட்டால் மொழிபெயர்ப்பு சேவைகளுக்குத் தகுதியுடையவை என்றும், அவை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (Union Public Service Commission (UPSC)) தேர்வுகளில் இந்திய மொழித் தாளில் விருப்பங்களாக சேர்க்கப்பட்டுள்ளன என்றும், ஒன்றிய அரசிடமிருந்து வளர்ச்சி நிதியைப் பெறுகின்றன என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஏனெனில், மொழி பொதுப்பட்டியலில் (Concurrent List.) உள்ளது. கூடுதலாக, வெகுஜன ஊடகங்கள் அட்டவணையிடப்பட்ட மொழிகளில் உள்ளடக்கத்தை ஒளிபரப்புவதை எளிதாக்குகின்றன. இது அவற்றின் பொது தோற்றத்தையும் அணுகல் தன்மையையும் மேலும் வலுப்படுத்துகிறது.


இருப்பினும், சில அறிஞர்கள் மிகவும் விமர்சன பார்வையை வழங்குகின்றனர். இந்திய மொழியியலாளர்கள் ஆர் எஸ் குப்தா மற்றும் அன்விதா அப்பி, அவர்களின் கட்டுரையான “8-வது அட்டவணை: ஒரு விமர்சன அறிமுகம்” (The Eighth Schedule: A Critical Introduction) என்பதில், அட்டவணையில் இருப்பதன் மூலம் பெறப்படும் உறுதியான நன்மைகள் ஒப்பீட்டளவில் வரையறுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று வாதிடுகின்றனர். அவற்றை "குறைவான - வளர்ச்சிக்கான மானியங்களாக இங்கும் அங்கும் சில மில்லியன் ரூபாய்கள்" (“marginal—a few million rupees here and there by way of grants of development.”) என்று விவரிக்கின்றனர். இருப்பினும், அவர்கள் மறைமுக மற்றும் அடையாள நன்மைகளை வலியுறுத்துகின்றனர். 8-வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு மொழி மாநில மொழியாகவும் கல்வி மற்றும் தேர்வு ஊடகமாகவும் பயன்படுத்தப்படுவதற்கான மிகவும் தகுதியானது என்று குறிப்பிடுகின்றனர். இத்தகைய உள்ளடக்கம், உண்மையான அதிகாரத்தையும் கௌரவத்தையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல் அதிகாரம் மற்றும் கௌரவத்தின் தோற்றத்தையும் உருவாக்குகிறது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.


இந்தச் சூழலில், பிர்லா குறிப்பிடுவது என்னவென்றால், 8-வது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும் என்ற அழைப்புகள் பெரும்பாலும் புதிதாக முன்மொழியப்பட்ட மொழிகள் போதுமான வளர்ச்சியைக் காட்டுகின்றன மற்றும் கணிசமான பேசுபவர்களைக் கொண்டுள்ளதால், முன்னர் பட்டியலிடப்பட்ட மொழிகளுக்கு வழங்கப்பட்ட அதே அங்கீகாரம் மற்றும் நன்மைகளை நியாயப்படுத்துவதில் வேரூன்றியுள்ளன என்கிறார். "இந்த கோரிக்கைகள் முக்கியமாக பிராந்திய மொழி அடையாளம் அரசியல் அடையாளமாக செயல்படுகிறது என்ற யோசனையிலிருந்து வருகின்றன.  இது மொழி, பிராந்தியம் மற்றும் கலாச்சாரத்தை வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இணைக்கிறது," என்று அவர் கூறுகிறார்.


குறிப்பாக, சாகித்ய அகாடமி (Sahitya Akademi), அரசு ஆதரவுடன் கூடிய ஒரு தன்னாட்சி அமைப்பு, 1950ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் முதல் 14 அட்டவணை மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் இலக்கியத்தை ஊக்குவிக்க நிறுவப்பட்டது. காலப்போக்கில், பல கூடுதல் இலக்கிய மொழிகள் அகாடமியின் கீழ் கொண்டு வரப்பட்டன. அத்தகைய அங்கீகாரம் ஒரு மொழி 8-வது அட்டவணையில் சேர்க்கப்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.


இருப்பினும், அட்டவணையில் உள்ள மொழிகள் அதிகாரம் பெற்றாலும், பட்டியலிடப்படாத மொழிகள் மேலும் ஒதுக்கப்படுகின்றன என்று குப்தா மற்றும் அப்பி எச்சரிக்கின்றனர். தற்போது, அட்டவணையில் உள்ள 22 மொழிகள், "அதிகாரம், அங்கீகாரம் மற்றும் மதிப்பைப் பெற்றுள்ளன. அதே, சமயம் மற்றவை “கிளைமொழிகள்” (‘dialects,’), “சிறு மொழிகள்” (‘minor languages,’) மற்றும் “பழங்குடி மொழி” (‘tribal language.’”) போன்ற பெயர்களின் சுமையின் கீழ் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன என்று அவர்கள் வாதிடுகின்றனர். மேலும், அவர்கள் மொழி விவகாரத்தின் அரசியல்மயமாக்கலை 8-வது அட்டவணையின் நேரடி விளைவாக அடையாளம் காண்கின்றனர்.


8-வது அட்டவணை 1,600-க்கும் மேற்பட்ட பிற மொழிகளை ஆதிக்கம் செலுத்தும், முக்கிய மொழிகளை பாதிக்கும் என்று வாதிடுகின்றனர். பல அறிஞர்கள் இந்தக் கவலையை எதிரொலிக்கின்றனர். பரந்த ஒருங்கிணைப்பு நோக்கம் பாராட்டத்தக்கதாகத் தோன்றினாலும், குப்தாவும் அப்பியும் அட்டவணையை "8-வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழிகளான சிறிய மொழிககளை விழுங்குவதற்கான ஒரு சாதனம்" என்று விவரிக்கின்றனர்.


8-வது அட்டவணையில் சில மொழிகளை குறிப்பாக, பழங்குடி மொழிகளை  சேர்க்காதது கடுமையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிர்லா சுட்டிக்காட்டுகிறார். இந்த மொழிகள் பெரும்பாலும் தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்வதில்லை. எனவே, அரசாங்கத்திடமிருந்து உதவி அல்லது ஆதரவைப் பெறுவதில்லை. எந்த மொழிகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன அல்லது புறக்கணிக்கப்படுகின்றன என்பதை பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் எவ்வளவு ஆழமாக பாதிக்கின்றன என்பதை இது காட்டுகிறது என்று அவர் கூறுகிறார். ஒரு மொழி சேர்க்கப்படாதபோது, ​​மக்கள் பெரும்பாலும் தங்கள் கலாச்சாரம், உரிமைகள் மற்றும் அடையாளம் புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறார்கள் என்று பிர்லா மேலும் கூறுகிறார்.


மேலும், அவர் "8-வது அட்டவணையில் சேர்த்தல் மற்றும் அதிகாரப்பூர்வமாக்குதல் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஒரு சூழலை உருவாக்குகிறதா?" என்ற கேள்வியை எழுப்புகிறார்.


8-வது அட்டவணை தொடர்பற்றதா?


பிர்லாவின் கூற்றுப்படி, இந்தியாவின் ஜனநாயக மற்றும் பன்முகத்தன்மை கொண்ட மதிப்புகளை ஆட்சியில் வைத்திருப்பது மற்றும் மக்களின் மொழி உரிமைகளைப் பாதுகாப்பது ஆகிய இரண்டு இலக்குகளை சமரசம் செய்யும் முயற்சியாகக் காணலாம்.. வெவ்வேறு சமூகங்கள் அதை வித்தியாசமாகப் பார்க்கக்கூடும் என்பதால், அட்டவணை உண்மையிலேயே அதன் நோக்கத்தை அடைந்துவிட்டதா என்று சொல்வது கடினம் என்று அவர் கருதுகிறார். இருப்பினும், அவை பெரும்பாலும் குறியீட்டு அல்லது அரசியல் ரீதியாக இருந்தாலும் கூட, அது சேர்க்கப்படுவது சில நன்மைகளைத் தருகிறது என்பதையும் அவர் ஒப்புக்கொள்கிறார்.


இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியை வலுப்படுத்த 8-வது அட்டவணை முக்கியமாக உதவுகிறது என்று பிர்லா கூறுகிறார். இந்த யோசனை அரசியலமைப்பிலிருந்து, குறிப்பாக பிரிவுகள் 344(1) மற்றும் 351-லிருந்து வருகிறது. அலுவல் மொழிகளைக் கவனிக்க நாடாளுமன்றத்தில் ஒரு குழுவை பிரிவு 344(1) அமைக்கிறது. அதிகாரப்பூர்வ அரசாங்கப் பணிகளுக்கு இந்தி மெதுவாக அதிகமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அது கூறுகிறது.


காலப்போக்கில், 8-வது அட்டவணை ஒரு வகையான மொழி தரவரிசை முறையை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பில் முதலாவதாக ஆங்கிலம் இருப்பதாகவும், மற்ற அனைத்து மொழிகளை விடவும் இது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவதால் அது “மிகை மொழி” (‘supra-language’) என்று அழைக்கப்படுகிறது என்றும் அறிஞர்கள் நம்புகிறார்கள். இந்தி  மொழி மற்ற திட்டமிடப்பட்ட மொழிகளை விட உயர்ந்தது.  இந்த பிராந்திய மொழிகள் அடுத்ததாக வருகின்றன. ஒவ்வொன்றும் அதன் சொந்த செல்வாக்குப் பகுதியைக் கொண்டுள்ளன.  கீழே அட்டவணையில் பட்டியலிடப்படாத மொழிகள் உள்ளன. சில நேரங்களில் “Infra-ES languages” என்று அழைக்கப்படுகின்றன. மேலும், அவை சாகித்ய அகாடமி போன்ற குழுக்களால் கூட அங்கீகரிக்கப்படாமல் இருக்கலாம்.


Infra-ES languages என்பது 8-வது அட்டவணையில் (Eighth Schedule) சேர்க்கப்படாத மொழிகளை குறிக்கின்றது. இவை பொதுவாக அதிகாரபூர்வமாக அறியப்படாத அல்லது 8-வது அட்டவணையில் உள்ள மொழிகளுக்கு கீழேயுள்ள நிலையில் இருக்கும் மொழிகள் ஆகும்.


ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொழியியலாளர் ஆயிஷா கித்வாய் கூறுகையில், இந்தியை ஆதரிப்பதற்காக உருவாக்கப்பட்ட 8-வது அட்டவணை இப்போது பெரியதாகிவிட்டது. அவரது நண்பர் ஹனி பாபு இதை "சதுர்வர்ண அமைப்பு" என்று அழைக்கிறார். பழைய சாதி அமைப்பைப் போன்ற நான்கு நிலை வகைப்பாடாகும். இதில் சமஸ்கிருதம், இந்தி, திட்டமிடப்பட்ட மொழிகள் மற்றும் திட்டமிடப்படாத மொழிகள் அடங்கும். இந்த அமைப்பு மொழிகளுக்கு இடையே போட்டியை உருவாக்கி நாட்டில் கடுமையான மொழி சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.


சமஸ்கிருதம், இந்தி, திட்டமிடப்பட்ட மொழிகள் மற்றும் திட்டமிடப்படாத மொழிகள் என நான்கு அடுக்கு மொழிகள் உள்ளன என்று பாபு விளக்குகிறார். இந்த அமைப்பு மொழிகளுக்கு இடையே போட்டியை உருவாக்கி இந்தியாவில் பன்மொழித் தன்மையை படிநிலைப்படுத்தியுள்ளது என்று அவர் வாதிடுகிறார். உதாரணமாக, வளமான இலக்கிய மரபுகளைக் கொண்ட ராஜஸ்தானி, பிரஜ் மற்றும் அவதி போன்ற மொழிகள் இந்தியின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. அதே, நேரத்தில் கொங்கனி 8-வது அட்டவணையில் மராத்தியிலிருந்து ஒரு தனி மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


இந்த படிநிலை கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று கித்வாய் நம்புகிறார். மொத்தம் 38 மொழிகள் 8-வது அட்டவணையில் சேர்க்கப்படுவதற்காகக் காத்திருக்கின்றன. ஏனெனில், பட்டியலிடப்படுவது பள்ளிகளில் அங்கீகாரத்தையும் கற்பித்தலையும் உறுதி செய்கிறது.


ஆதரவு இல்லாதது, 8-வது அட்டவணையில் பட்டியலிடப்படாத மொழிகள் மறைந்து போகக்கூடும் என்ற அச்சமும் உள்ளது. இந்தியாவின் அழிந்து வரும் மொழிகளில் பெரும்பாலானவை வடகிழக்கு மற்றும் பழங்குடிப் பகுதிகளில் உள்ள சிறிய சமூகங்களில் பேசப்படுகின்றன. மேலும், பல அரசியலமைப்பு அல்லது மாநில அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்படவில்லை.


இருப்பினும், அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கூட உயிர்வாழ்வதற்கு உத்தரவாதம் அளிக்காது என்று பிர்லா எச்சரிக்கிறார். மணிப்பூரி மற்றும் போடோ போன்ற மொழிகள் 8-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டிருந்தாலும், மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பிற மொழிகள் இன்னும் ஆபத்தில் உள்ளன. மொழிகளைப் பாதுகாக்க அரசாங்க அங்கீகாரம் மட்டும் போதாது என்று பிர்லா வலியுறுத்துகிறார். மொழி உயிர்வாழ்வைப் பாதிக்கும் ஆழமான அரசியல் மற்றும் சமூக காரணிகளை இது நிவர்த்தி செய்ய வேண்டும்.



Original article:
Share:

இந்த பூமி தினத்தில் ஒரு நினைவூட்டல்: வாழ்வதற்கு வேறு கிரகம் இல்லை -ராவ் இந்தர்ஜித் சிங்

 இன்றைய நாள் மற்றொரு நாளை விட அதிகமாக இருக்கட்டும். நமது தலைவர்கள், செயல்களிலும், பூமிக்காகவும் உண்மையான மாற்றங்களைச் செய்யத் தொடங்குவதற்கான நேரமாக இது இருக்கட்டும்.


பூமியில் மக்கள் உயிர்வாழ என்ன தேவை? பதில் எளிமையானது: பாதுகாப்பான நீர், ஊட்டமளிக்கும் உணவு மற்றும் கண்ணியத்துடனும் வாழ நமக்கு சுத்தமான காற்று, நல்ல உணவு மற்றும் இயற்கை வளங்கள் தேவை. இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: எதையும் திருப்பித் தராமல் இவற்றை நாம் தொடர்ந்து எடுத்துக்கொள்ள முடியுமா?


ஆச்சரியப்படும் விதமாக, உள்ளது. மேலும் அது இயற்கையே, நம்மில் பலர் பூமித் தாய் என்று அழைக்கிறோம். நாம் பூமித்தாயை ஒரு வழி வங்கிக் கணக்காக (one-way bank) மாற்றியுள்ளோம். சிறிதும் கொடுக்காமல் அல்லது எதுவும் கொடுக்காமல், மனமில்லாமல் பணத்தை மட்டும் எடுக்கிறோம். நமது அதிகப்படியான பயன்பாடு மற்றும் வீணாக்குதலால் போன்றவற்றால் இயற்கை சிக்கலில் உள்ளது. காடுகள் மறைந்து வருகின்றன. நமது பெருங்கடல்கள் நெகிழிகளால் நிரம்பி வருகின்றன. மேலும், பல நகரங்களில் காற்று சுவாசிக்க முடியாத அளவுக்கு அழுக்காக உள்ளது. நமக்கு சுத்தமான தண்ணீர் பற்றாக்குறையாகி வருகிறது. மேலும், நிலத்தின் தன்மையானது உணவு பயிரிடுவதற்கு ஆரோக்கியமற்றதாகி வருகிறது. வானிலை விசித்திரமான முறையில் மாறி வருகிறது. வெள்ளம், காட்டுத்தீ மற்றும் வெப்ப அலைகள் போன்ற தீவிர நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. பூமியால் இனி நம் தொடர்ச்சியான தாக்குதலைத் தாங்க முடியாது.


எதிர்கால சந்ததியினருக்காக பூமியைப் பாதுகாக்க வேண்டும் என்பதை நினைவூட்டுவதற்காக ஏப்ரல் 22-ஆம் தேதி பூமி தினத்தைக் (Earth Day) கொண்டாடுகிறோம். இது பூமியின் ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திக்கவும், சமூகங்களுக்கு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து கல்வி கற்பிக்கவும், நிலையான நடைமுறைகள் குறித்து பேசும் ஒரு நாளாகும்.


1970-ஆம் ஆண்டு பூமி தினம் தொடங்கப்பட்டதிலிருந்து, உலகளாவிய சுற்றுச்சூழல் விதிகளை வடிவமைக்க உதவியது. நாடுகளுக்கு இடையே குழுப்பணியை ஊக்குவித்தது மற்றும் முக்கியமான ஒப்பந்தங்களுக்கு வழிவகுத்தது. இருப்பினும், சில நேரங்களில் இது ஒரு சமூக ஊடக இடுகையாகவோ, மரம் நடும் நிகழ்வாகவோ அல்லது பள்ளி நாடகமாகவோ பார்க்கப்படுகிறது. விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியம் என்றாலும், பூமி தினம் அதை விட அதிகம். ஆழமாக சிந்திக்கவும், நடவடிக்கை எடுக்கவும், வளங்களை கவனக்குறைவாகப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு அவற்றைப் பராமரிக்கவும் இது ஒரு நினைவூட்டலாகும்.


உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியா, நிலைத்தன்மையை நோக்கி ஒரு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. 2021-ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த 26-வது காலநிலை மாநாட்டில் உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி ஐந்து அம்ச கொள்கையை (Panchamrit) அறிவித்தார். 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைதல், 2030-ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து 50 சதவீத எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் பொருளாதாரத்தின் கார்பன் தீவிரத்தை 45 சதவீதம் குறைத்தல் உள்ளிட்ட ஐந்து அம்ச கொள்கை இது. மாற்றத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து உண்மையில் பொறுப்பேற்பதற்கு நாம் நகர்கிறோம் என்பதைக் காட்டும் வலுவான இலக்குகள் இவை.


இந்தியாவின் காலநிலை சவால்களுக்கு சூரிய சக்தி ஒரு முக்கிய தீர்வாக மாறி வருகிறது. சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (International Solar Alliance) மூலம், தூய்மையான எரிசக்தியில் உலகளாவிய முயற்சிகளை இந்தியா முன்னெடுத்து வருகிறது. தேசிய சூரிய சக்தி இயக்கம் மற்றும் (பிரதமர் விவசாயிகள் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு பிரச்சாரம் (Pradhan Mantri Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan (PM-KUSUM)) போன்ற திட்டங்கள் விவசாயிகள் சூரிய சக்தியால் இயங்கும் நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்த உதவுகின்றன. அதே, நேரத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் போன்ற இடங்களில் உள்ள பெரிய சூரிய பூங்காக்கள் இந்தியா வீடுகள் மற்றும் தொழில்களுக்கு எவ்வாறு மின்சாரம் வழங்குகிறது என்பதை மாற்றி வருகின்றன. சூரிய சக்தி இப்போது இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் 15%-க்கும் அதிகமாக உள்ளது மற்றும் வளர்ந்து வருகிறது.


மின்சார வாகனங்கள் மற்றொரு கவனம் செலுத்தும் பகுதியாகும். அரசாங்கத்தின் மின்சார வாகனங்களை விரைவாக ஏற்றுக்கொள்வது மற்றும் உற்பத்தி செய்தல் (Faster Adoption and Manufacturing of Electric Vehicles (FAME)) போன்ற திட்டங்களுடன், அரசாங்கம் மின்சார வாகனங்களை மிகவும் மலிவு விலையிலும், அணுகக்கூடியதாகவும் மாற்றுகிறது. இந்திய ரயில்வே 2030-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியமாக மாற உறுதிபூண்டுள்ளது. இதற்கிடையில், நகரங்கள் பொது போக்குவரத்து வலையமைப்புகளை விரிவுபடுத்தி, சுத்தமான எரிபொருட்களில் முதலீடு செய்கின்றன.


இந்தியாவின் பல்லுயிர் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திட்டங்கள் உறுதியான வெற்றியைக் காட்டியுள்ளன. புலிகள் திட்டம் (Project Tiger) மற்றும் யானைத் திட்டம் (Project Elephant) ஆகியவை மக்கள் தொகை அதிகரிப்புக்கு வழிவகுத்தன. உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் உள்ளன. ராம்சர் முறையின் கீழ் ஈரநிலங்கள் பாதுகாக்கப்படுகின்றன. பசுமை இந்தியா இயக்கம் (Green India Mission) அதிக காடுகளை வளர்ப்பதற்கும், அவற்றை சுற்றுச்சூழலுக்கு ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கும் பாடுபடுகிறது.


நகரங்களில் காற்று மாசுபாடு இன்னும் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. ஆனால், தேசிய தூய்மையான காற்று திட்டம் (National Clean Air Programme (NCAP)) போன்ற திட்டங்கள் உதவத் தொடங்கியுள்ளன. காற்றின் தரத்தை சரிபார்க்கவும், தூய்மையான எரிபொருட்களைப் பயன்படுத்தவும், கழிவுகளை சிறப்பாக நிர்வகிக்கவும் நகரங்கள் பணம் பெறுகின்றன. தூய்மையை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan), இப்போது நெகிழிக் கழிவுகளைப் பிரித்து உரம் தயாரிப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. ஜல் சக்தி அபியான் (Jal Shakti Abhiyan), அடல் பூஜல் யோஜனா (Atal Bhujal Yojana) மற்றும் நமாமி கங்கே (Namami Gange) போன்ற நீர் சேமிப்பு திட்டங்களும் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.


இந்தியாவில் விவசாயமும் மாறி வருகிறது. பரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜனா (Paramparagat Krishi Vikas Yojana) போன்ற திட்டங்கள் மூலம் அரசாங்கம் கரிம வேளாண்மையை ஆதரிக்கிறது. மாறிவரும் வானிலையை கையாளக்கூடிய நீர் சேமிப்பு கருவிகள் மற்றும் விவசாய முறைகளையும் அதிகமான விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.


இந்தியாவின் சுற்றுச்சூழல் சட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் முதல் மின் கழிவுகள், நெகிழிப் பயன்பாடு மற்றும் பசுமை கட்டிடங்கள் குறித்த புதிய விதிகள் வரை, இன்றைய பிரச்சினைகளைச் சமாளிக்க சட்ட அமைப்பு வளர்ந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (Lifestyle for Environment (LIFE)) போன்ற பிரச்சாரங்கள், பூமியைப் பாதுகாப்பது என்பது பெரிய திட்டங்களைப் பற்றியது மட்டுமல்ல, அது நாம் ஒவ்வொரு நாளும் செய்யும் சிறிய தேர்வுகளைப் பற்றியது என்பதையும் நமக்கு நினைவூட்டுகின்றன.


இருப்பினும், சவால்கள் உள்ளன. எல்லா மாநிலங்களும் இந்தத் திட்டங்களை சமமாகப் பின்பற்றுவதில்லை. காலநிலை நடவடிக்கைகளுக்குப் போதுமான பணம் இல்லை. பல இடங்களில், வளர்ச்சி மற்றும் இயற்கையைப் பாதுகாத்தல் ஆகியவை இன்னும் எதிரெதிர் இலக்குகளாகத் தெரிகிறது. சட்டவிரோத கட்டிடங்கள் கட்டுதல், காடுகளை வெட்டுதல் மற்றும் மாசுபாடு ஆகியவை அவற்றுக்கு எதிராகச் சட்டங்கள் இருந்தாலும் தொடர்கின்றன.


ஆனால், நம்பிக்கை உள்ளது. இதில் உண்மையான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. நிலைத்தன்மை என்பது இனி ஒரு முக்கிய பிரச்சினையாக இல்லை. அது பிரதான நிர்வாகம், உட்கட்டமைப்பு திட்டமிடல், வணிக உத்தி மற்றும் குடிமக்கள் விழிப்புணர்வு ஆகியவற்றில் நுழைந்து வருகிறது. பள்ளிகள் முதல் வணிகங்கள் வரை, நாம் இயற்கையுடன் வாழ வேண்டும். மேலும், இயற்கைக்கு எதிராக  செயல்பட கூடாது என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.


Original article:
Share:

மோடி, முகமது பின் சல்மானை (MbS) சந்திக்கிறார் : வளைகுடாவில் பல வாய்ப்புகள் -சி. ராஜா மோகன்

 பிரதமர் மோடி ரியாத்திற்கு வருகை தரும்போது, சவூதி அரேபியாவின் மாற்றம் (Saudi Arabia's transformation) மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கான அதன் நடைமுறை அணுகுமுறையையும் (foreign policy pragmatism) நாம் பார்க்கிறோம்.


பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் சவுதி அரேபியாவுக்குச் செல்கிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் மாற்றம் குறித்து கொண்டாட நிறைய இருக்கிறது. இருப்பினும், ஊடகங்கள் பெரும்பாலும் பிரதமரின் வருகைகளில் அதிக கவனம் செலுத்துகின்றன. இது பெரும்பாலும் இந்த வருகைகளை நடத்தும் நாடுகளில் நிகழும் முக்கிய மாற்றங்களை கவனிக்காமல் இருக்க வழிவகுக்கிறது. சவுதி அரேபியாவைப் பொறுத்தவரை இது குறிப்பாக உண்மை.


ஜெட்டாவிற்கு பிரதமரின் வருகை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமல்லரமல், இது ஒரு முக்கியமான புவிசார் அரசியல் சக்தியாக சவுதி அரேபியாவின் எழுச்சியையும் எடுத்துக்காட்டுகிறது. இது பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மானின் (MbS) தலைமையின் காரணமாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான மாறிவரும் இயக்கவியல் (dynamics between the two nations) பற்றியது இந்த நிலைமை. இது மோடி மற்றும் முகமது பின் சல்மானின் இணையான அரசியல் பயணங்களையும் பிரதிபலிக்கிறது. மோடி 2014 ஆம் ஆண்டில் பிரதமரானார். ஒரு வருடம் கழித்து முகமது பின் சல்மான் ஒரு முக்கியமான தலைவராக ஆனார்.


1947ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் சவுதி அரேபியாவுக்குச் செல்வது  இது ஆறாவது முறையாகும். முந்தைய தலைவர்கள் இந்த உறவில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பதை இது காட்டுகிறது. ஜவஹர்லால் நேரு 1955ஆம் ஆண்டில் பயணம் செய்தார். அதன் பிறகு, 25 ஆண்டுகள் கழித்து இந்திரா காந்தி 1982ஆம் ஆண்டில் பயணம் செய்தார். 28 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மன்மோகன் சிங் 2010ஆம் ஆண்டில் பயணம் செய்தார். ஒப்பிடுகையில், மோடியின் வரவிருக்கும் பயணம் அவரது மூன்றாவது பயணமாகும். அவர் ஏற்கனவே 2016 மற்றும் 2019ஆம் ஆண்டில் பயணம் செய்துள்ளார். இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் சவுதி அரேபியா இப்போது மிகவும் முக்கியமானது என்பதைக் காட்டுகிறது. 


அரேபியாவும் இந்திய துணைக்கண்டமும் நீண்ட காலமாக வரலாற்று, கலாச்சார மற்றும் மத உறவுகளைப் பகிர்ந்து கொண்டாலும், இந்தப் பிராந்தியத்திற்கான இந்தியாவின் அணுகுமுறை நீண்ட காலமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. வலுவான அரசியல் கருத்துக்கள், பாகிஸ்தான் பற்றிய கவலைகள் மற்றும் ஆழமாக ஈடுபட விருப்பமின்மை இதற்குக் காரணம். 1970 மற்றும் 1980ஆம் ஆண்டுகளின் எண்ணெய் நெருக்கடியின் போது மற்றும் இந்தப் பிராந்தியத்தில் இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை (இப்போது சுமார் 10 மில்லியன்) அதிகரித்தது போன்ற வளைகுடாவில் இந்தியாவின் நலன்கள் அதிகரித்தபோதும், குறிப்பாக சவுதி அரேபியாவுடன் வலுவான அரசியல் உறவுகளை உருவாக்குவதில் இந்தியா இன்னும் மெதுவாகவே இருந்தது.


இது 21 ஆம் நூற்றாண்டில் மாறத் தொடங்கியது. 2000ஆம் ஆண்டில், வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ரியாத்திற்கு பயணம் மேற்கொண்டார். 2006ஆம் ஆண்டு, மன்னர் அப்துல்லா இந்தியாவிற்கு வரலாற்று சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டார். 50 ஆண்டுகளில் சவுதி மன்னர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். இந்த பயணங்கள் முக்கியமான திருப்புமுனைகளாக அமைந்தன. மன்னர் அப்துல்லாவின் பயணம் எண்ணெய் வளத்திற்கு அப்பால் உறவை விரிவுபடுத்தியது. இது இராஜதந்திர மற்றும் பொருளாதார ஒத்துழைப்பில், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தியது. இது இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான சவுதி அரேபியாவின் உறவுகளைப் பிரிக்கும் செயல்முறையையும் தொடங்கியது.


 இந்தியா சவுதி அரேபியாவை பாகிஸ்தானின் பார்வையில் மட்டுமே பார்ப்பதை நிறுத்தியது. மன்மோகன் சிங்கின் 2010ஆம் ஆண்டின் பயணம் வலுவான கூட்டாண்மைக்கு அடித்தளமிட்டது. மோடியின் கீழ், இந்த முன்னேற்றம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரபு வளைகுடாவுடனான, குறிப்பாக சவுதி அரேபியாவுடனான இந்தியாவின் உறவுகள் இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய பகுதியாக மாறியுள்ளன. உயர் மட்ட வருகைகள் மற்றும் தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகள் எரிசக்தி, தொழில்நுட்பம், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் இணைப்பு ஆகியவற்றில் இந்த உறவுகளை வலுப்படுத்தியுள்ளன. மோடியின் வருகையின் போது மேலும் முயற்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.


சவுதி அரேபியாவுடனான இந்தியாவின் வளர்ந்து வரும் உறவு பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முகமது பின் சல்மான் கீழ் சவுதி அரேபியாவில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள் இந்தியாவில் குறைவான கவனத்தைப் பெறுகின்றன. பழைய தலைமையைக் கொண்ட பழமைவாத நாடிலிருந்து துடிப்பான, உலகளாவிய நாடாக சவுதி அரேபியாவின் மாற்றம், 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய புவிசார் அரசியல் மாற்றங்களில் ஒன்றாகும்.


2015ஆம் ஆண்டில் மன்னர் சல்மான் மன்னரானபோது, ​​அவர் முகமது பின் சல்மானை பாதுகாப்பு அமைச்சராக்கினார். 2017ஆம் ஆண்டில், முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசராகவும், 2022ஆம் ஆண்டில், பிரதமராகவும் நியமிக்கப்பட்டார். முகமது பின் சல்மான் அதிக அதிகாரத்தைப் பெற்றவுடன், நாட்டின் உள் கொள்கைகள் மற்றும் வெளிநாட்டு உறவுகள் இரண்டையும் மாற்றிய துணிச்சலான சீர்திருத்தங்களைத் தொடங்கினார். ஒரு பெரிய மாற்றம் அரச குடும்பத்தால் முடிவெடுப்பதில் இருந்து முகமது பின் சல்மான் கீழ் அதிகாரத்தை மையப்படுத்துவதற்கு மாறியது. இது அரசாங்கத்தை மிகவும் திறமையானதாக மாற்றியது. ஆனால், அதன் அதிக சர்வாதிகார அணுகுமுறைக்கான விமர்சனத்திற்கும் வழிவகுத்தது.


முகமது பின் சல்மான் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் மையத்தில் இலக்கு 2030 (Vision 2030) உள்ளது. சவுதி அரேபியாவின் எண்ணெய் மீதான சார்பைக் குறைக்க இந்தத் திட்டம் 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது சுற்றுலா, தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்தத் திட்டத்தில் சவுதி அரம்கோவின் (Saudi Aramco) பகுதி தனியார்மயமாக்கல் மற்றும் நியோம் (Neom) போன்ற மெகா திட்டங்கள் அடங்கும். இந்த முயற்சிகள் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் சவுதி அரேபியாவை புதுமைக்கான மையமாக நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


சமூகப் பக்கத்தில், சவுதி அரேபியா குறிப்பிடத்தக்க தாராளமயமாக்கலைக் கண்டுள்ளது. பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பெண்கள் இப்போது வாகனம் ஓட்டலாம் மற்றும் பொது வாழ்க்கையில் பங்கேற்கலாம். சினிமாக்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பொது பொழுதுபோக்கு அதிகரித்துள்ளன. இந்த மாற்றங்கள் நாட்டின் இளம் மக்களை ஈர்க்கின்றன மற்றும் தேசிய அடையாளத்தை நவீனமயமாக்கும் விருப்பத்தை பிரதிபலிக்கின்றன. அவை சவுதி அரேபியாவை உலகளாவிய விதிமுறைகளுடன் நெருக்கமாக இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இஸ்லாமிய உலகில் சவுதி அரேபியாவின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, "மிதமான இஸ்லாத்தை" (moderate Islam) ஊக்குவிப்பதில் முகமது பின் சல்மான் கவனம் செலுத்துவது உலகளவில் குறிப்பிடத்தக்கதாகும். மத தீவிரவாதம், குறிப்பாக துணைக் கண்டத்தில் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியா மிதமான தன்மை மற்றும் சகவாழ்வை நோக்கி நகர்வது ஒரு நேர்மறையான மாற்றமாகும்.


முகமது பின் சல்மான் கீழ், சவுதி அரேபியாவின் வெளியுறவுக் கொள்கை மாறிவிட்டது. இராஜ்ஜியம் இனி எதிர்வினையாற்றுவதில்லை. ஆனால், மிகவும் உறுதியானதாகவும், முன்முயற்சியுடன் செயல்படுவதாகவும் மாறிவிட்டது. சவுதி அரேபியா ஏமனில் இராணுவ நடவடிக்கை எடுத்துள்ளது, கத்தாருக்கு எதிராக முற்றுகையை நடத்தியது மற்றும் ஈரான் மீது வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இருப்பினும், முகமது பின் சல்மான் நெகிழ்வுத்தன்மையையும் காட்டியுள்ளார். மேலும், அவர் கத்தாருடன் உறவுகளை சரிசெய்துள்ளார், துருக்கியுடனான உறவுகளை மீட்டெடுத்துள்ளார், ஈரானை அணுகியுள்ளார். இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவதிலும் அவர் ஆர்வம் காட்டியுள்ளார். ஆனால், இது பாலஸ்தீனத்துடன் இரு-நாடு தீர்வை நோக்கி இஸ்ரேலின் முன்னேற்றத்தைப் பொறுத்தது.


சவுதி அரேபியா அதன் உலகளாவிய உறவுகளையும் மாற்றுகிறது. அமெரிக்காவை மட்டுமே நம்புவதில் இருந்து விலகிச் செல்கிறது. ராஜ்ஜியம் சீனா, ரஷ்யா மற்றும் பிற வளர்ந்து வரும் சக்திகளுடன் வலுவான உறவுகளை உருவாக்கி வருகிறது. விரிவாக்கப்பட்ட பிரிக்ஸ் குழுவில் சேரவும், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவுடன் மேலும் இணைக்கவும் சவுதி அரேபியா முடிவு செய்திருப்பது, பல சக்திவாய்ந்த நாடுகளைக் கொண்ட உலகில் செல்வாக்கை அதிகரிக்க அதன் விருப்பத்தைக் காட்டுகிறது.


சவுதி அரேபியாவை பிராந்தியத்தில் ஒரு முக்கிய இராஜதந்திர மையமாக மாற்ற முகமது பின் சல்மான் விரும்புகிறார். மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் உள்ள நாடுகளுக்கும் நாடுகளுக்கும் இடையிலான மோதல்களுக்கு சமரசம் செய்வதை அவர் நோக்கமாகக் கொண்டுள்ளார். உக்ரைன் போன்ற பிரச்சினைகளில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற உலகளாவிய சக்திகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும் அவர் விரும்புகிறார். அவரது அணுகுமுறை கடுமையான சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல, மாறாக மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டது. இது சவுதி அரேபியாவின் திசையில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது. இது மோடியின் கீழ் இந்தியாவின் மத்திய கிழக்கு (Middle East policy) கொள்கையின் நடைமுறை அணுகுமுறையை பிரதிபலிக்கிறது.


எழுத்தாளர் இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சிலில் ஒரு புகழ்பெற்ற உறுப்பினராகவும், தி இந்தியன் எக்ஸ்பிரஸின் சர்வதேச விவகாரங்களின் ஆசிரியராகவும் உள்ளார்.


Original article:
Share:

வாக்குரிமைக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு நடவடிக்கை - ஜான் சிம்டே

 மக்களின் தனியுரிமைக்கு தீங்கு விளைவிக்கும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, வாக்காளர்களைச் சரிபார்க்கும் நம்பகமான பழைய வழிகளை மேம்படுத்துவதில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும்.


இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதாரை இணைக்க வலியுறுத்துகிறது. வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்யவும், போலி வாக்காளர்களை அகற்றவும், தேர்தல்களை மேம்படுத்தவும் இது ஒரு வழியாக முன்வைக்கப்படுகிறது.  இருப்பினும், அனுபவமும் தரவுகளும் ஆதாரை இணைப்பது பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் காட்டுகின்றன. இதில் ஏராளமான மக்கள் சலுகைகளை இழப்பது, அமைப்பில் உள்ள தவறுகள், மக்கள் நியாயமற்ற முறையில் விடுபட்டது மற்றும் குடிமக்களின் தனியுரிமைக்கான உரிமையின் கடுமையான மீறல்கள் ஆகியவை அடங்கும்.


கேள்விக்குரிய கூற்றுக்கள்


வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது தன்னார்வமானது என்ற கூற்று கேள்விக்குரியது. தற்போது, ​​படிவம் 6B, விலகுவதற்கான உண்மையான விருப்பத்தை வழங்கவில்லை. வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வழங்க வேண்டும் அல்லது தங்களிடம் அது இல்லை என்று கூற வேண்டும்.  இது மக்கள் அதைப் பகிர விரும்பாவிட்டாலும், இணங்கும்படி கட்டாயப்படுத்துகிறது. செப்டம்பர் 2023ஆம் ஆண்டில், 66 கோடிக்கும் மேற்பட்ட ஆதார் எண்கள் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தன. இது ஒரு வலுவான சட்ட கட்டமைப்பு மற்றும் கேள்விக்குரிய தரவு பகிர்வு நடைமுறைகள் காரணமாக நடந்தது. இந்த நடைமுறைகளில் சில சட்டவிரோதமானவை மற்றும் நெறிமுறையற்றவையாக இருக்கலாம். ஒரு உதாரணம் DBT விதைப்பு தரவு பார்வையாளர், இது மூன்றாம் தரப்பினருக்கு UIDAI இலிருந்து பயோமெட்ரிக் அல்லாத அடையாளத் தரவை அணுக அனுமதிக்கிறது.  மற்றொரு பிரச்சினை தேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் பிற அரசுத் துறைகளால் சேகரிக்கப்பட்ட தரவை வெவ்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது ஆகும்.


இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) சமீபத்திய திட்டம் சிக்கலை சரிசெய்யவில்லை. மாறாக, இது செயல்முறையை மேலும் கட்டுப்படுத்துகிறது. ஆதார் வழங்காத குடிமக்கள்-வாக்காளர்கள் தங்கள் விருப்பத்தை விளக்க ஒரு தேர்தல் பதிவு அதிகாரி (Electoral Registration Officer) முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று இது கோருகிறது. 2023ஆம் ஆண்டில், ஜி. நிரஞ்சன் vs இந்திய தேர்தல் ஆணையம் (G. Niranjan vs Election Commission of India) வழக்கின் போது, ​​வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் (ECI) உச்ச நீதிமன்றத்தில் கூறியது. இது குறித்த விளக்கங்களை அறிமுகப்படுத்துவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். இருப்பினும், அவர்களின் சமீபத்திய திட்டம் இந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்குகிறது.


புதிய திட்டம் உலகளாவிய மற்றும் சமமான வாக்களிக்கும் உரிமைகளின் கொள்கையையும் பாதிக்கிறது. ஆதாரை வழங்க முடியாதவர்களுக்கு அல்லது விரும்பாதவர்களுக்கு இது தடைகளை உருவாக்குகிறது. இது முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் குழுக்களுக்கு, தேர்தல் பதிவு அதிகாரியுடன் நேரில் விசாரணையில் கலந்துகொள்வது பெரும்பாலும் நடைமுறைக்கு மாறானது அல்லது நியாயமற்றது. இது தனிப்பட்ட கண்ணியத்தை காயப்படுத்துவது மட்டுமல்லாமல், ஜனநாயக பங்கேற்புக்குத் தேவையான நம்பிக்கையையும் பலவீனப்படுத்துகிறது.


குடிமக்கள் தங்கள் ஆதார் சமர்ப்பிப்பு சரியான காரணமின்றி நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்வதற்கான தெளிவான, பயன்படுத்த எளிதான மற்றும் சரியான நேரத்தில் செயல்முறை இல்லாததால் சிக்கல் மேலும் மோசமடைகிறது. ”லால் பாபு ஹுசைன் மற்றும் பிறர் vs தேர்தல் பதிவு அதிகாரி-1995” (Lal Babu Hussein and Others vs Electoral Registration Officer) வழக்கில், வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு நபரின் பெயரை நீக்குவதற்கான எந்தவொரு முடிவும் நியாயம் மற்றும் நீதியின் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதாரை இணைப்பது நகல் வாக்காளர்கள் மற்றும் தேர்தல் மோசடியை நிறுத்தும் என்று ஒன்றிய அரசும் இந்திய தேர்தல் ஆணையமும் (ECI) கூறுகின்றன. இருப்பினும், இந்தக் கூற்று வலுவானது அல்ல. குடியுரிமையை நிரூபிக்க ஆதார் வடிவமைக்கப்படவில்லை. ஆதார் சட்டம், 2016 இன் பிரிவு 9 இன் படி, ஆதார் என்பது வசிப்பிடத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும். இதன் பொருள் ஆதார் உள்ள ஒருவர் இந்திய குடிமகன் இல்லை. பல உயர் நீதிமன்றங்கள் ஆதார் இந்திய குடியுரிமையை நிரூபிக்கவில்லை என்று தீர்ப்பளித்துள்ளன. இந்தியாவில் 182 நாட்கள் வசிக்கும் குடிமக்கள் அல்லாதவர்களும் ஆதார் பெறலாம் என்பதை UIDAI உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், ”நீதிபதி கே.எஸ். புட்டசாமி (ஓய்வு) vs இந்திய ஒன்றியம்-2018” (Justice K.S. Puttaswamy (Retd.) vs Union of India) வழக்கில் உச்ச நீதிமன்றம், 2016ஆம் ஆண்டு ஆதார் சட்டத்தின் பிரிவு 7 இன் படி, அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் நலத்திட்டங்களுக்கு மட்டுமே ஆதாரைப் பயன்படுத்துவதை உறுதி செய்தது.


வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதன் மூலம், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தேர்தல் செயல்முறைக்கு நம்பமுடியாத வகையில் ஒரு அமைப்பை உருவாக்குகிறது. இது தகுதியான வாக்காளர்களை பெருமளவில் விலக்குவதற்கு வழிவகுக்கும் மற்றும் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வாக்களிக்கும் உரிமைக்கு தீங்கு விளைவிக்கும். இந்த அபாயங்கள் வெறும் தத்துவார்த்தமானவை அல்ல; அவை ஏற்கனவே நடந்துவிட்டன. 2015ஆம் ஆண்டில், தேசிய வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்பு மற்றும் அங்கீகாரத் திட்டத்தின் (National Electoral Roll Purification and Authentication Programme) கீழ் இதேபோன்ற ஆதார்-வாக்காளர் ஐடியை இணைக்க தேர்தல் ஆணையம் முயற்சித்தது. இதன் விளைவாக, தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 55 லட்சம் வாக்காளர்கள் ஆதார் பொருத்தமின்மை காரணமாக வாக்காளர் பட்டியலில் இருந்து தவறாக நீக்கப்பட்டனர். தேர்தல் நாளில் வாக்குச் சாவடிகளுக்கு வந்தபோதுதான் வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் காணாமல் போனதைக் கண்டறிந்தனர். ஆகஸ்ட் 11, 2015 அன்று உச்ச நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்த செயல்முறையை நிறுத்த வேண்டியிருந்தது.


வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதாரை இணைப்பது கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது. இது பரவலான கண்காணிப்பு மற்றும் வாக்காளர் விவரக்குறிப்புக்கு வழிவகுக்கும். டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம் (The Digital Personal Data Protection Act) 2023, அரசாங்க அமைப்புகளுக்கு பரந்த விலக்குகளைக் கொண்டுள்ளது. இதன் பொருள் வாக்காளர் தரவை அணுகலாம் மற்றும் அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தலாம். வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதார் இணைக்கப்பட்டவுடன், தேர்தல் தரவை மற்ற தரவுத்தளங்களுடன் மீண்டும் ஆய்வு (cross-referenced) செய்யலாம். இது ஆளும் கட்சிகள் வாக்காளர் மக்கள்தொகையைக் கண்காணிக்க அனுமதிக்கும். இது கடுமையான கவலைகளை எழுப்புகிறது. அரசியல் குழுக்கள் வாக்காளர்களை மிகவும் துல்லியமாக கண்காணிக்க இந்தத் தரவைப் பயன்படுத்தலாம். அவர்கள் எதிர்க்கட்சியை ஆதரிக்கும் பகுதிகளை பலவீனப்படுத்த முயற்சிக்கலாம் அல்லது தேர்தல் முடிவுகளை பாதிக்க வாக்காளர் பட்டியலை மாற்றலாம்.


வாக்காளர் பட்டியல் தரவுகளுடன் ஆதாரை இணைப்பது அரசியலமைப்பின் முக்கிய கொள்கைகளுக்கு எதிரானது. இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தேர்தல்களை மேற்பார்வையிடும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. இது தன்னாட்சி மிக்கது மற்றும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை. மறுபுறம், UIDAI ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது 2016ஆம் ஆண்டு ஆதார் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் வழிமுறைகளைப் பின்பற்றுகிறது. அதற்கு தேர்தல் தொடர்பான தரவை வழங்குவது அதிகாரப் பிரிவினைக்கு தீங்கு விளைவிக்கும். இது தேர்தல்களின் நியாயத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை பாதிக்கலாம்.


மற்றொரு சிக்கல், ஆதார் தரவுத்தளத்தின் நம்பகத்தன்மையின்மை ஆகும். 2022ஆம் ஆண்டு தலைமை தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG)) செயல்திறன் தணிக்கை அறிக்கை கடுமையான சிக்கல்களைக் கண்டறிந்துள்ளது. நகல் மற்றும் தவறான பயோமெட்ரிக் தரவு காரணமாக 4.75 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆதார் எண்கள் ரத்து செய்யப்பட்டதாக அது வெளிப்படுத்தியது. ஆதார் வைத்திருப்பவர்கள் அனைவரும் இந்தியாவின் உண்மையான குடியிருப்பாளர்களா என்பதை UIDAI சரிபார்க்கவில்லை என்றும் CAG சுட்டிக்காட்டியது. ஒரு விண்ணப்பதாரர் இந்தியாவில் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பதை சரிபார்க்க தெளிவான செயல்முறை இல்லை. வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பு செய்ய இதுபோன்ற நம்பகத்தன்மையற்ற தரவுத்தளத்தைப் பயன்படுத்துவது தவறான நீக்கங்கள் மற்றும் விலக்குகளுக்கு வழிவகுக்கும்.


தேர்தல் சரிபார்ப்பு முறைகள்


குடிமக்களின் தனியுரிமையை மீறக்கூடிய தொழில்நுட்ப ரீதியிலான தீர்வில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ECI வாக்காளர் சரிபார்ப்பின் பாரம்பரிய முறைகளை வலுப்படுத்த வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு வீடாகச் சென்று சோதனை செய்தல், வாக்காளர் பட்டியல்களை முழுமையாகத் தணிக்கை செய்தல் மற்றும் செயல்பாட்டு குறை தீர்க்கும் அமைப்புகள் ஆகியவை இதில் அடங்கும்.  இந்த முறைகள் நகல் அல்லது மோசடி தொடர்பான உள்ளீடுகள் குறித்த கவலைகளைத் தீர்ப்பதற்கு மிகவும் பயனுள்ளதாகவும் அரசியலமைப்பு ரீதியாகவும் சரியானவையாகவும் உள்ளன. சமூக தணிக்கைகள் மூலம் சுதந்திரமான மேற்பார்வையைச் சேர்ப்பது பொறுப்புணர்வை மேம்படுத்தும் மற்றும் வாக்காளர் பட்டியலில் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட மாற்றங்களைத் தடுக்கும்.


வாக்களிக்கும் உரிமை அரசியலமைப்பால் பாதுகாக்கப்படுகிறது. வாக்காளர்களுக்கு நியாயமற்ற சவால்களை உருவாக்கும், நம்பமுடியாத சரிபார்ப்பு முறைகளைப் பயன்படுத்தும் அல்லது அரசியல் விவரக்குறிப்பை அனுமதிக்கும் எந்தவொரு கொள்கையும் நிறுத்தப்பட வேண்டும். ஆதார்-வாக்காளர்   இணைப்பு (Aadhaar-voter ID link) மூன்றையும் செய்கிறது. அரசியலமைப்பு ரீதியாக மிகவும் சிக்கலான இத்தகைய திட்டத்திற்கு அரசியல் ரீதியாக ஆதரவு கிடைத்திருப்பது கவலையளிக்கிறது.


ஜான் சிம்டே, வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆராய்ச்சியாளர் ஆவர்.


Original article:
Share:

கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்: உச்ச நீதிமன்றத்தின் மீதான விமர்சனங்கள் குறித்து . . .

 நீதித்துறையை பயமுறுத்தவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ முயற்சிப்பது ஆபத்தானது. அது ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும்.


இந்திய உச்ச நீதிமன்றம் ஆளும் பாஜக மற்றும் துணை குடியரசுத்தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோரிடமிருந்து நியாயமற்ற விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்த விமர்சனம் அரசாங்கத்தின் பல்வேறு கிளைகளுக்கு இடையேயான அதிகாரப் பிரிப்பு மற்றும் சரிபார்ப்புகள் மற்றும் சமநிலைகளின் கொள்கை பற்றியது. நிர்வாக மற்றும் சட்டமன்ற செயல்பாடுகளில் தலையிடுவதாகக் கூறப்படும் கூற்றுக்களை உச்ச நீதிமன்ற அமர்வு கவனத்தில் கொண்டதில் ஆச்சரியமில்லை.


ஒரு வழக்கில், மேற்கு வங்கத்தில் வன்முறையை நிவர்த்தி செய்ய பிரிவுகள் 355 மற்றும் 356 இன் கீழ் செயல்படுமாறு அரசாங்கத்தை உத்தரவிடுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்பட்டது. மற்றொரு வழக்கில், இணையதளங்களில் பொருத்தமற்ற உள்ளடக்கத்தை மட்டுப்படுத்துமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. முன்னதாக, மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத்தில் வன்முறையைக் கட்டுப்படுத்த மத்தியப் படைகளை அனுப்ப கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


சட்டமன்றம் மற்றும் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட முடிவுகளை நீதித்துறை மறுஆய்வு செய்வது இந்தியாவின் அரசியலமைப்பு ஜனநாயகத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். அரசியலமைப்பின் படி அவை பின்பற்றப்படுகின்றனவா என்பதை சரிபார்க்க நீதித்துறை இந்த முடிவுகளை மறுஆய்வு செய்யலாம். அரசியலமைப்பு திருத்தங்கள் கூட அரசியலமைப்பின் "அடிப்படை கட்டமைப்பிற்கு" (basic structure) எதிராக சரிபார்க்கப்படுகின்றன.


சட்டம் இயற்றுதல் மற்றும் சட்ட அமலாக்கத்தில் நீதித்துறை தலையிட பல அரசியலமைப்பு வழிகள் உள்ளன. பிரிவு 13, அடிப்படை உரிமைகளை மீறும் சட்டங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை நீதித்துறைக்கு வழங்குகிறது. பிரிவுகள் 32 மற்றும் 226, அடிப்படை உரிமைகள் மற்றும் பிற விஷயங்களை அமல்படுத்துவதற்கான  நீதிப்பேரானைகளை (writs) வெளியிடும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது.


நீதித்துறை சட்டமன்றத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது என்ற கருத்து அரசியலமைப்பிற்கு எதிரானது. நீதித்துறை, சட்டத்தின் ஆட்சியை, சட்டமன்றத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் பொதுக் கருத்திலிருந்து பாதுகாக்க வேண்டும். அரசாங்கத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையிலான தொடர்பு மூலம் தான் சமூகம் நிலையான நிர்வாகத்தை அடைய முடியும். பெரும்பான்மை ஆட்சியின் அடிப்படையில் எந்தவொரு சட்டத்தையும் சட்டமன்றம் நிறைவேற்ற முடியும் என்ற வாதம், பெரும்பான்மை வாதமாகும். இந்தியாவில், நிர்வாகத்திற்கும் சட்டமன்றத்திற்கும் இடையிலான குழப்பம், தேசிய மற்றும் மாநில மட்டங்களில் பொறுப்புத்தன்மையின் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 


சட்டமன்ற மேலாதிக்கத்தைக் கூறி நீதித்துறையை மிரட்ட முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகும். சமீபத்தில், உச்ச நீதிமன்றம் ஆளுநரும் குடியரசுத்தலைவரும் சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களின் மீது செயல்படுவதற்கான காலக்கெடுவை நிர்ணயித்தது. தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநராலும் குடியரசுத்தலைவரின் தன்னிச்சையான நடவடிக்கைகளாலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்ட சட்டமன்றங்களின் அதிகாரத்தை இந்த முடிவு மீட்டெடுத்தது. நீதித்துறையை விமர்சிப்பவர்கள் இந்த முக்கியமான விஷயத்தை கவனிக்கவில்லை.


Original article:
Share:

இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மோடி, வான்ஸ் வரவேற்பு -அமிதி சென்

 பரஸ்பர வரிவிதிப்புகளைத் தவிர்ப்பதற்காக அமெரிக்காவுடன் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்ய இந்தியா முயற்சிப்பதால், இந்தப் பயணம் மிகவும் முக்கியமானது.


திங்கள்கிழமை புது தில்லியில் (இந்தியா) நடந்த சந்திப்பில், அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி.வான்ஸ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், இந்தியா-அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் மற்றும் எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் நாடுகளுக்கிடையேயான இராஜதந்திரரீதியில் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து விவாதித்தனர்.


வான்ஸ் தனது குடும்பத்தினர் மற்றும் மூத்த அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். மோடியைச் சந்தித்த பிறகு, வான்ஸ் ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ராவுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை ஒன்றில், "இந்தியா-அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அவர்கள் வரவேற்றனர். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளிலும் உள்ள மக்களின் நலனில் கவனம் செலுத்துகிறது. எரிசக்தி, பாதுகாப்பு, இராஜதந்திர ரீதியில் தொழில்நுட்பங்கள் மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளையும் அவர்கள் குறிப்பிட்டனர்."


இருநாட்டு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். நாட்டு உறவுகளில் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம்தான் முன்னோக்கிச் செல்லும் வழி என்று அவர்கள் ஒப்புக்கொண்டதாக அறிக்கை கூறுகிறது.


இந்தியா தற்போது அமெரிக்காவுடன் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதால் வான்ஸின் வருகை முக்கியமானது. ஜூலை 9-ம் தேதிக்குள் இந்தியா மீது 26 சதவீத வரியை விதிக்க வேண்டாம் என்று டிரம்ப் நிர்வாகத்தை வற்புறுத்துவதற்காக BTA-ன் "ஆரம்ப கட்டத்தை" (early tranche) அடைய அவர்கள் முயற்சிக்கின்றனர்.


ஏப்ரல் 2-ம் தேதி பரஸ்பர வரிகள் அறிவிக்கப்பட்டாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதை 90 நாட்களுக்கு இடைநிறுத்தி, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள நாடுகளுக்கு அவகாசம் அளித்தார்.


இந்தியாவில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று இந்த வாரம் வாஷிங்டன் டிசிக்கு சென்று வர்த்தக உரையாடலுக்கான அமெரிக்க சக அதிகாரிகளை சந்திக்கவுள்ளது. இந்த மாதத்தில் கிட்டத்தட்ட அனைத்து இறக்குமதிகள் மீதும் விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத அடிப்படை வரிகளை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும் என்றும் இந்தியா விரும்புகிறது.


நிதியாண்டு 25-ல் அமெரிக்கா இந்தியாவின் முதன்மையான ஏற்றுமதி இடமாகத் தொடர்ந்தது. இந்தியா அமெரிக்காவிற்கு 86.51 பில்லியன் டாலர்களை ஏற்றுமதி செய்தது, இது அதன் மொத்த ஏற்றுமதியில் 19 சதவீதத்திற்கும் அதிகமாகும். அமெரிக்காவிலிருந்து இந்தியாவின் இறக்குமதிகள் 45.33 பில்லியன் டாலர் மதிப்புடையவை ஆகும்.


ஜனவரி மாதம் வாஷிங்டன் டிசிக்கு மேற்கொண்ட பயணத்தை பிரதமர் அன்புடன் நினைவு கூர்ந்தார். அந்த பயணத்தின்போது, ​​அவர் அதிபர் டிரம்புடன் சாதகமுள்ள கலந்துரையாடல்களை நடத்தினார். இந்த கலந்துரையாடல்கள் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வலுவான ஒத்துழைப்புக்கான திட்டத்தை உருவாக்க உதவியது. "அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்கு (Make America Great Again (MAGA))" மற்றும் "விக்சித் பாரத் 2047" ஆகிய இரண்டின் பலங்களையும் பயன்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


திங்கட்கிழமை, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சமூக ஊடக தளமான X வலைதளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ராவை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ பயணம் (ஏப்ரல் 21-24) உலகளாவிய இராஜதந்திர ரீதியில் இந்தியா-அமெரிக்கா கூட்டாண்மையை வலுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.


திங்கட்கிழமை காலை வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர் அவர்கள் சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயிலுக்குச் சென்று, அரசாங்கத்தால் நடத்தப்படும் காட்டேஜ் எம்போரியத்தில் (Cottage Emporium) ஷாப்பிங் செய்தனர்.


அடுத்து, வான்ஸ் ஜெய்ப்பூருக்குச் செல்வார் எனவும், அவர் ஒரு நிகழ்வில் பேசுவார் மற்றும் சில தனியார் கூட்டங்களில் கலந்து கொள்வார் எனவும் குறிப்பிட்டிருந்தார். புதன்கிழமை, துணைத் தலைவரும் அவரது குடும்பத்தினரும் ஆக்ராவுக்குச் செல்வார்கள். அவர்கள் வியாழக்கிழமை அதிகாலை நாடுதிரும்புவார்கள்.


Original article:
Share:

மின்னணு உற்பத்தியில் உள்ளூர் மதிப்புக் கூட்டலை இந்தியா எவ்வாறு செய்ய முயற்சிக்கிறது? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய நிகழ்வு : ஒரு பெரிய திறமையாளர் குழு, அரசாங்க மானியங்கள் மற்றும் புவிசார் அரசியல் தலையீடுகள் பல நிறுவனங்களை சீனாவிலிருந்து வேறுபடுத்த கட்டாயப்படுத்தியது. இவை இந்தியாவில் உற்பத்தித் தளங்களை அமைக்க ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற உலகளாவிய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தித் தளங்களை அமைக்க ஒன்றிணைந்த சில முக்கியமான கூறுகள் அடங்கும்.





முக்கிய அம்சங்கள் :


1. உள்நாட்டு நுகர்வு மற்றும் சில ஏற்றுமதிகளுக்காக நாட்டில் ஸ்மார்ட்போன் அசெம்பிளியை (smartphone assembly) வெற்றிகரமாக உள்ளூர்மயமாக்க முடிந்த பிறகு, இந்தத் துறையில் உள்ளூர் மதிப்பு கூட்டலை தீவிரப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.


2. விளைவு : தனிப்பட்ட உதிரிப்பாகங்கள் அல்லது கூறுகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் கவனம் செலுத்தும் மானியத் திட்டங்கள் உள்ளன. இதற்கு ஒரு உதாரணம் இந்திய குறைக்கடத்தி திட்டம் (India Semiconductor Mission), இதன் பட்ஜெட் ரூ.76,000 கோடி ஆகும். இந்த திட்டம் மூலம் சில்லு உற்பத்தி மற்றும் பேக்கேஜிங்கை (chip fabrication and packaging) ஆதரிக்கிறது. மற்றொரு உதாரணம் ரூ.23,000 கோடி மதிப்பிலான புதிதாக அறிவிக்கப்பட்ட திட்டம் ஆகும். இது செயலற்ற மின்னணு உதிரிபாகங்களின் உற்பத்தியை ஆதரிக்கிறது.


3. மின்னணு உற்பத்தியின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளுக்கும் அரசாங்கம் ஆதரவைத் தொடங்கியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினி அசெம்பிளிக்கான உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டங்களும் அடங்கும். இந்த முயற்சிகள் மின்னணுத் துறையை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய இயக்கியாக ஆக்குகின்றன.


4. முக்கிய இலக்கு : இந்தத் துறையில் உள்ளூர் மதிப்புக் கூட்டலை அதிகரிப்பதே இதன் முக்கிய இலக்கு ஆகும். இது சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதிகளை இந்தியா சார்ந்திருப்பதைக் குறைக்கும். இது உயர்தர வேலைகளையும் உருவாக்கும். தற்போது, ​​உள்நாட்டு மதிப்பு கூட்டல் சுமார் 15-20 சதவீதம் ஆகும். வரும் ஆண்டுகளில் இதை இரட்டிப்பாக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. மேலும் இதை ஒப்பிடுகையில், இந்தத் துறையில் சீனாவின் மதிப்பு கூட்டல் சுமார் 38 சதவீதமாக உள்ளது. தற்போது, ​​சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது. 2024-25ஆம் ஆண்டில், இது 100 பில்லியன் டாலர்களை நெருங்குகிறது என்ற கணிப்பு உள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


1. இந்த மாத தொடக்கத்தில், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மின்னணு உதிரிபாகங்களுக்கு ரூ.22,919 கோடி ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்தது. இது முந்தைய இரண்டு பிஎல்ஐ திட்டங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த முந்தைய திட்டங்கள் திறன்பேசிகள் (smart phones) மற்றும் கணினிகள் போன்ற மின்னணு பொருட்களை எளிதாக இணைப்பதில் கவனம் செலுத்தின.


2. ஆறு ஆண்டுகள் இயங்கும் இந்த புதிய திட்டம், உதிர்பாகங்களின் உற்பத்தியை உள்ளூர்மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவற்றில் காட்சி தொகுதிகள் (display modules), கேமரா தொகுதிகள் (camera modules), அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டு அசெம்பிளிகள் (printed circuit board assemblies), லித்தியம் செல் உறைகள் (lithium cell enclosures), மின்தடையங்கள் (resistors), மின்தேக்கிகள் (capacitors) மற்றும் இரும்பியங்கள் (ferrites) ஆகியவை அடங்கும். இந்த உதிர்பாகங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற கருவிகளிலும், மைக்ரோவேவ் ஓவன்கள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் டோஸ்டர்கள் போன்ற சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினி அசெம்பிளி வளர்ந்ததால், உள் கூறுகளை (internal components) வாங்குவதற்கு சீனாவை நம்பியிருப்பதும் அதிகரித்தது. இதனால், அரசாங்கம் இப்போது அந்த சார்புநிலையைக் குறைக்க விரும்புகிறது.


3. இந்தத் திட்டம் குறைந்தது 91,600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று நம்புகிறது. மேலும் பங்கேற்கும் நிறுவனங்களின் வருடாந்திர மானியங்களை அவை உருவாக்கும் வேலைகளின் எண்ணிக்கையுடன் இணைத்துள்ளது. இந்தத் திட்டம் உற்பத்தியில் ரூ.4.56 லட்சம் கோடியை உருவாக்கும் என்றும் ரூ.59,350 கோடி முதலீட்டை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


4. ஸ்மார்ட்போன் பிஎல்ஐ திட்டம் பல்வேறு துறைகளுக்கு 2020-ல் தொடங்கப்பட்ட 14 திட்டங்களில் மிகவும் வெற்றிகரமான ஒன்றாகும். மெதுவாகத் தொடங்கிய IT வன்பொருள் PLI, 2023ஆம் ஆண்டில் அரசாங்கத்திடமிருந்து ரூ.17,000 கோடி அதிகரித்த ஒதுக்கீட்டால் ஊக்கத்தைப் பெற்றது. இந்தத் திட்டங்களின் கீழ், அதிகரிக்கும் விற்பனையின் அடிப்படையில் அரசாங்கம் ஒரு ஊக்கத்தை வழங்குகிறது.


Original article:
Share:

இந்தியாவின் இறக்குமதியில் எண்ணெய் இறக்குமதி எத்தனை சதவீதம்? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய நிகழ்வு : 2024-25ல் (FY25) இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இந்தியா சார்ந்திருப்பது மேலும் அதிகரித்துள்ளது. ஏனெனில், நுகர்வு வளர்ச்சிக்கும் மெதுவான உள்நாட்டு ஹைட்ரோகார்பன் உற்பத்திக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.


முக்கிய அம்சங்கள் :


1. இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி சார்பு முழு நிதியாண்டிலும் புதிய சாதனையாக உச்சத்தை எட்டியுள்ளது. அதே நேரத்தில், பெட்ரோலிய அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை எரிவாயுவைச் சார்ந்திருத்தல் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.


2. மார்ச் மாதத்தில் முடிவடைந்த நிதியாண்டில், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி சார்பு 88.2% ஆக இருந்தது. இது முந்தைய நிதியாண்டில் (FY24) 87.8% ஆக இருந்ததைவிட அதிகமாகும் என்று பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு கலத்தின் (Petroleum Planning & Analysis Cell (PPAC)) தற்காலிக தரவுகள் தெரிவிக்கின்றன. இயற்கை எரிவாயுவிற்கான இறக்குமதி சார்பு FY25-ல் 50.8% ஆக இருந்துள்ளது. இது FY24-ல் 47.1% ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


3. இந்தியாவின் எரிசக்தி தேவை வேகமாக வளர்ந்து வருகிறது. இது கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை அதிகமாக இறக்குமதி செய்ய வழிவகுத்தது. இந்த அதிகரிப்புக்கு வளர்ந்து வரும் எரிசக்தி மிகுந்த தொழில்கள், அதிக வாகன விற்பனை, வேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துத் துறை, பெட்ரோ கெமிக்கல்களின் அதிக நுகர்வு மற்றும் அதிகரித்து வரும் மக்கள் தொகை போன்ற காரணிகளால் உந்தப்படுகிறது.


4. இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்யை இந்தியா சமீபத்திய ஆண்டுகளில் நம்பியிருப்பது அதிகரித்து வருகிறது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இதற்கான தேவை நிதியாண்டு-21-ல் மட்டுமே விதிவிலக்காக குறைந்துள்ளது. நிதியாண்டு 24-ல், நாட்டின் எண்ணெய் இறக்குமதி சார்பு 87.8% ஆக இருந்தது. இது நிதியாண்டு 23-ல் 87.4%, நிதியாண்டு 22-ல் 85.5%, நிதியாண்டு 21-ல் 84.4%, நிதியாண்டு 20-ல் 85% மற்றும் நிதியாண்டு 21-ல் 83.8% ஆக இருந்தது.


5. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் நுகர்வோராக உள்ளது. அதிக எண்ணெய் இறக்குமதி சார்பு இந்திய பொருளாதாரத்தை உலகளாவிய எண்ணெய் விலை மாற்றங்களுக்கு ஆளாக்குகிறது. இது நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, அந்நிய செலாவணி இருப்பு, ரூபாயின் மாற்று விகிதம் மற்றும் பணவீக்கத்தையும் பாதிக்கிறது.


6. இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை இந்தியா சார்ந்திருப்பதைக் குறைக்க அரசாங்கம் விரும்புகிறது. இருப்பினும், உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியின் மெதுவான வளர்ச்சி ஒரு பெரிய சவாலாகும். பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துவரும் போதிலும் இது நடக்கிறது.


7. இந்தியாவில் இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்கவும் அரசாங்கம் விரும்புகிறது. 2030-ம் ஆண்டுக்குள் நாட்டின் முதன்மை எரிசக்தி கலவையில் அதன் பங்கை 15 சதவீதமாக உயர்த்த அவர்கள் இலக்கு வைத்துள்ளனர். தற்போது, ​​இது 6 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக உள்ளது. இயற்கை எரிவாயுவில் கவனம் செலுத்துவதற்கான காரணம் எளிது. இது அதிக இறக்குமதிகளுக்கு வழிவகுக்கும் என்றாலும், அது இன்னும் ஒரு விருப்பமான விருப்பமாகும்.


உங்களுக்குத் தெரியுமா? 


1. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி நிதியாண்டு 25-ல் 242.4 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. இது நிதியாண்டு 24-ல் 234.3 மில்லியனாக இருந்தது. மேலும், PPAC தரவுகளின்படி, உள்நாட்டு உற்பத்தி 29.4 மில்லியன் டன்களில் இருந்து 28.7 மில்லியன் டன்களாக சற்றுக் குறைந்துள்ளது. இந்த ஆண்டிற்கான நாட்டின் மொத்த எண்ணெய் இறக்குமதி செலவு கிட்டத்தட்ட 3 சதவீதம் அதிகரித்து $137 பில்லியனாக உயர்ந்துள்ளது.


2. இயற்கை எரிவாயு என்பது கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரியைவிட குறைவான மாசுபடுத்தும் தன்மை கொண்டது. இது பொதுவாக எண்ணெயைவிட மலிவானது மற்றும் ஒரு முக்கிய மாற்ற எரிபொருளாகக் கருதப்படுகிறது. இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைக்க, இயற்கை எரிவாயுவின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களை அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது.


3. இயற்கை எரிவாயு இறக்குமதி ஆண்டுக்கு ஆண்டு 15.4% அதிகரித்து 36.7 பில்லியன் கன மீட்டர் (billion cubic meters (bcm)) ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு $13.4 பில்லியனில் இருந்து $15.2 பில்லியன் அதிகமாகும். 2025 நிதியாண்டில் உள்நாட்டு இயற்கை எரிவாயு உற்பத்தி 35.6 பில்லியன் கன மீட்டர்களாக இருந்தது. இது 2024 நிதியாண்டில் 35.7 பில்லியன் கன மீட்டர்களை விட சற்று குறைவாக இருந்தது.


4. 2025 நிதியாண்டில் பெட்ரோலியப் பொருட்களின் மொத்த உள்நாட்டு நுகர்வு 239.2 மில்லியன் டன்களாக இருந்தது. இதில், 28.2 மில்லியன் டன்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெயிலிருந்து வந்தன. இதன் விளைவாக, PPAC தரவுகளின்படி, 11.8% தன்னிறைவு நிலை ஏற்பட்டது. இயற்கை எரிவாயுவைப் பொறுத்தவரை, 2025 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு நுகர்வு 72.3 பில்லியன் கன மீட்டர்களாக இருந்தது, இறக்குமதி 36.7 பில்லியன் கன மீட்டர்களாக இருந்தது.


5. 2015-ம் ஆண்டின் தொடக்கத்தில், 2022-ம் ஆண்டுக்குள் எண்ணெய் இறக்குமதியை நம்பியிருப்பதை 67% ஆகக் குறைக்க அரசாங்கம் இலக்கை நிர்ணயித்தது. இது 2013-14-ஆம் ஆண்டில் 77% ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அதன் பின்னர் எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருப்பது அதிகரித்துள்ளது. இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தித் துறையில் முதலீட்டை ஊக்குவிக்கும் கொள்கைகளை செயல்படுத்தியுள்ள விலையுயர்ந்த எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பது அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய கவனமாக உள்ளது.


6. எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பது என்பது மின்சார இயக்கம், உயிரி எரிபொருள்கள் மற்றும் பிற மாற்று எரிபொருட்களுக்கான அரசாங்கத்தின் உந்துதலின் முக்கிய இலக்காகும். இந்த உந்துதல் போக்குவரத்து மற்றும் தொழில்கள் இரண்டிற்கும் பொருந்தும். மின்சார இயக்கம் ஏற்றுக்கொள்வதையும், வழக்கமான எரிபொருட்களுடன் உயிரி எரிபொருள் கலப்பதையும் அதிகரித்துள்ளது. இருப்பினும், பெட்ரோலியத்திற்கான வளர்ந்துவரும் தேவையைக் குறைக்க இந்த முன்னேற்றம் போதுமானதாக இல்லை.


Original article:
Share: