குழந்தை பருவ உடல்பருமனுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான அவசரத் தேவையை எய்ம்ஸ் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

 குழந்தைகள் ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி வழிநடத்தவும், இந்தப் பிரச்சினையைத் தடுக்கவும், விதிகள், கற்பித்தல் மற்றும் சமூகத்தின் உதவியை உள்ளடக்கிய ஒரு வலுவான பொது சுகாதார முயற்சி முக்கியமானது.


அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (All India Institute of Medical Sciences (AIIMS)) நடத்திய ஆய்வில், டெல்லியில் உள்ள பள்ளிக் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல்நலப் பிரச்சினை குறித்து கவலை எழுந்துள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 19 வயது வரையிலான கிட்டத்தட்ட 4,000 மாணவர்களில், 13.4% பேர் அதிக எடையுடன் இருப்பதும், 7.4% பேர் உயர் இரத்த அழுத்தத்துடன் இருப்பதும் கண்டறியப்பட்டது.


தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே தெளிவான வேறுபாட்டையும் இந்த ஆய்வு காட்டுகிறது. தனியார் பள்ளி மாணவர்களில் சுமார் 24% பேர் அதிக எடையுடன் இருந்தனர். அதே நேரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களில் 4.5% பேர் மட்டுமே அதிக எடையுடன் இருந்தனர். தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உயர் இரத்த சர்க்கரை இரு மடங்கு அதிகமாகவும், உயர் இரத்த அழுத்தம், ஆரோக்கியமற்ற கொழுப்பின் அளவு மற்றும் இரத்த சர்க்கரையை முறையாகக் கட்டுப்படுத்தாதது உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாகவும் உள்ளது.


ஆரம்பத்திலேயே சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இந்தப் பிரச்சினைகள் இதய நோய், மூட்டு வலி, மன அழுத்தம் மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.


விரிவான தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பு (2016-18) இந்தியாவில் பள்ளி வயது குழந்தைகளில் 15.35% பேரும், இளம் வயதினரில் 16.18% பேரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாகக் காட்டுகிறது. AIIMS ஆய்வோடு சேர்த்து, இது ஒரு கவலைக்குரிய போக்கைக் காட்டுகிறது. ஒரு காலத்தில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகப் போராடிய இந்தியா, இப்போது இரட்டைப் பிரச்சினையைக் கொண்டுள்ளது. நகரங்களிலும், பணக்கார குடும்பங்களிலும், சிறந்த வாழ்க்கை நிலைமைகள் விசித்திரமாக அதிக உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளன. 


இந்தியாவில் அதிக எடை கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1990ஆம் ஆண்டில் 0.4 மில்லியனிலிருந்து 2022ஆம் ஆண்டில் 12.5 மில்லியனாக உயர்ந்துள்ளதாக லான்செட்டில் 2024ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. வேகமான நகர வளர்ச்சி, கலோரிகள் அதிகம் உள்ள ஆனால் ஊட்டச்சத்து குறைவாக உள்ள ஆரோக்கியமற்ற உணவை எளிதில் அணுகுதல், அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட சிற்றுண்டிகள் மற்றும் ஆரோக்கியமாகத் தோன்றும் சர்க்கரை பானங்கள்  அதிக நேரம் கணினி திரைகளில் செலவிடுதல் மற்றும் குறைவான உடல் செயல்பாடு ஆகியவை இந்த மிகப்பெரிய உயர்வுக்குக் காரணம்.


பள்ளிப் படிப்பைப் போலவே மாணவர்களின் ஆரோக்கியத்திற்கும் அவசர கவனம் தேவை என்பதை AIIMS அறிக்கை காட்டுகிறது. அதிக சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்க சர்க்கரை வாரியங்களை அமைக்குமாறு CBSE சமீபத்தில் பள்ளிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது ஒரு நல்ல நடவடிக்கை. உடற்கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். மேலும், புகையிலை முன்பு தடைசெய்யப்பட்டது போல பள்ளி உணவகங்களில் இருந்து சத்தற்ற உணவை (junk food) அகற்ற வேண்டும். வீட்டிலேயே ஆரோக்கியமான தேர்வுகளை செய்வது பற்றி பெற்றோர்களும் சிந்திக்க வேண்டும். விதிகள் மற்றும் கொள்கைகளும் முக்கியம். குழந்தை பருவ உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கான தேசியத் திட்டங்கள் வெறும் காகிதத்தில் எழுதப்படாமல், உண்மையான செயல்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டும். குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உதவும் வகையில் விதிகள், கற்பித்தல் மற்றும் சமூகத்தின் ஆதரவை உள்ளடக்கிய ஒரு வலுவான சுகாதாரத் திட்டம் தேவை. இல்லையெனில், எதிர்காலத்தில் இந்தியா கடுமையான மற்றும் விலையுயர்ந்த சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும்.


Original article:
Share:

இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் திரும்பியுள்ளதாக மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. -தர்மகீர்த்தி ஜோஷி

 நாட்டிற்குள் தனியார் முதலீடு பலவீனமாக இருந்தாலும், நிதி சிக்கல்கள் காரணமாக அரசாங்கத்திற்கு செலவு செய்ய குறைந்த பங்கே இருந்தாலும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் மாற்றங்களால் இந்தியா ஆதாயமடைந்து வருகிறது.


தேசிய புள்ளிவிவர அலுவலகம் (National Statistics Office (NSO)) படி, இந்தியாவின் பொருளாதாரம் (GDP) 2024-25-ஆம் ஆண்டில் 6.5% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டின் கடைசி காலாண்டில் 7.4% வலுவான வளர்ச்சி காணப்பட்டது. குறைவான தரவுகளின் அடிப்படையில், முந்தைய கணிப்புகள் 6.4% மற்றும் 6.5% வளர்ச்சியை மதிப்பிட்டிருந்தன.


கடந்த மூன்று ஆண்டுகளில் காணப்பட்ட GDPயில் எதிர்பாராத அதிகரிப்புகள் குறைந்தபட்சம் இப்போதைக்கு தொடராமல் போகலாம். பொருளாதாரம் அதன் வழக்கமான வளர்ச்சி முறைக்குத் திரும்பி வருவதாகத் தெரிகிறது. COVID-19 தொற்றுநோய்க்கு முன்பு, பத்து ஆண்டுகளில் சராசரி வளர்ச்சி 6.6% ஆக இருந்தது.


2023-24-ஆம் ஆண்டில், வளர்ச்சியின் முதல் மதிப்பீடு 7.3%-ஆக இருந்தது. இது பின்னர் 8.2% ஆகவும் பின்னர் மீண்டும் 9.2% ஆகவும் திருத்தப்பட்டது. இந்தியாவில், தற்காலிக மதிப்பீடுகள் முந்தைய மதிப்பீடுகளைவிட மிகவும் துல்லியமானவை மற்றும் நிலையானவை. 2025 நிதியாண்டிற்கான அடுத்த மதிப்பீடு 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும். அதுவரை, உலகளாவிய நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், திட்டமிடலுக்கான நிலையான அடித்தளத்தை இந்த தற்போதைய மதிப்பீடுகள் வழங்குகின்றன.


பணவீக்கத்தையும் சேர்த்து இந்தியாவின் மொத்த பொருளாதாரம் 2025 நிதியாண்டில் 9.8% வளர்ந்தது. இதன் பொருள் பொருளாதாரத்தின் மொத்த அளவு 2024 நிதியாண்டில் $3.6 டிரில்லியனில் இருந்து $3.91 டிரில்லியனாக அதிகரித்துள்ளது.


தனியார் செலவினம் 7.2% வளர்ந்தது, முக்கியமாக வலுவான கிராமப்புற தேவை காரணமாக, நகர்ப்புற செலவினம் குறைவாகவே இருந்தது. இருப்பினும், இந்த செலவின வளர்ச்சி கடந்த காலாண்டில் 6% ஆகக் குறைந்தது. அரசாங்க செலவினமும் குறைவாக இருந்தது, ஆண்டுக்கு 2.3% மட்டுமே வளர்ச்சியடைந்தது மற்றும் கடந்த காலாண்டில் 1.8% சரிந்தது. இருப்பினும், கடந்த காலாண்டில் அரசாங்க முதலீடு கடுமையாக உயர்ந்தது, இது மொத்த முதலீடு பொருளாதாரத்தை விட வேகமாக வளர உதவியது. திருத்தப்பட்ட பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டதை விட மத்திய அரசு திட்டங்களுக்கு அதிகமாக செலவிட்டது.


உற்பத்தி பக்கத்தில், விவசாயம் மற்றும் சேவைகள் சிறப்பாக செயல்பட்டன, ஆனால், உற்பத்தி பலவீனமாக இருந்தது. எனினும் அவை 4.5% மட்டுமே விவசாயத்தை விடக் குறைவாக வளர்ச்சியடைந்தது. முந்தைய ஆண்டு $437.07 பில்லியனாக இருந்த பொருட்களின் ஏற்றுமதி கிட்டத்தட்ட அதே அளவில் 437.41 பில்லியனாக இருந்தது. பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும் கட்டுமானம், முந்தைய ஆண்டு வலுவான இரட்டை இலக்க வளர்ச்சியைத் தொடர்ந்து 9.4% வளர்ச்சியடைந்தது. இது புதிய வேலைவாய்ப்புகளுக்கு ஒரு நல்ல அறிகுறியாகும்.


2026 நிதியாண்டிற்கான பொருளாதாரக் கண்ணோட்டம், உலகளாவிய கட்டண மாற்றங்கள் இந்தியாவை எவ்வாறு பாதிக்கின்றன. இது இந்தியா எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும் என்பதைப் பொறுத்தது. இந்தியாவின் பொருளாதாரம் முக்கியமாக நாட்டிற்குள் செயல்பாடுகளைச் சார்ந்திருந்தாலும், வளர்ந்த நாடுகளுடனான அதன் வளர்ந்து வரும் வர்த்தக மற்றும் நிதி தொடர்புகள், உலகளாவிய பிரச்சினைகளால் இன்னும் பாதிக்கப்படலாம் என்பதாகும்.


இந்த ஆண்டு, அமெரிக்காவும் பிற நாடுகளும் ஒருவருக்கொருவர் பொருட்களின் மீது புதிய வரிகளை அறிமுகப்படுத்திய பிறகு, உலகளாவிய நிலைமை நிறைய மாறிவிட்டது. இந்த மாற்றங்கள் இந்தியாவை இரண்டு வழிகளில் பாதிக்கலாம். முதலாவதாக, அமெரிக்க பொருளாதாரம் மற்றும் அதிக வரிகள் மூலம் நேரடியாக, இது இந்திய பொருட்களை குறைந்த போட்டித்தன்மை கொண்டதாக ஆக்குகிறது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சி 2024 நிதியாண்டில் 2.8%-லிருந்து 2025 நிதியாண்டில் 1.5% ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதிகளுக்கான தேவையும் குறையும். இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பிறகு முழு விளைவும் தெளிவாகத் தெரியும்.


இரண்டாவதாக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசியா போன்ற பிற பிராந்தியங்களில் மெதுவான வளர்ச்சியால் மறைமுக விளைவுகள் ஏற்படும்.  அவை இந்திய ஏற்றுமதிகளுக்கான பெரிய சந்தைகளாகும். உலகப் பொருளாதார வளர்ச்சி 2024 நிதியாண்டில் 3.3% ஆக இருந்து 2025 நிதியாண்டில் 2.7% ஆகக் குறையும் என்று எதிர்பார்க்ப்படுகிறது. சீனப் பொருட்களுக்கான அமெரிக்காவின் அதிக வரிகள் சீனாவின் பிரச்சினைகளை மோசமாக்குகின்றன. அதாவது அதிக உற்பத்தி மற்றும் விலை வீழ்ச்சி போன்றவை காரணமாகும். சீனா இந்தியா உட்பட பிற நாடுகளுக்கு அதிக பொருட்களை விற்க முயற்சிக்கலாம். 90 நாட்களுக்கு வரிகளைக் குறைப்பதற்கான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சமீபத்திய தற்காலிக ஒப்பந்தம் சிறிது நிம்மதியை அளித்தது. ஆனால், அதன் பிறகு என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.


இந்த தொடர்ச்சியான நிச்சயமற்றத் தன்மை தனியார் நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் தாமதங்களை ஏற்படுத்துகிறது மற்றும் நிதிச் சந்தைகள், வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்புக்கு ஆபத்துகளை உருவாக்குகிறது. இருப்பினும், இந்தியாவுக்கு சில பாதுகாப்பு உள்ளது. மேலும், சில நல்ல முன்னேற்றங்கள் இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கு உதவக்கூடும்.


இந்தியாவின் ஏற்றுமதி அமைப்பு சில வலிமையை அளிக்கிறது. ஏனெனில், சேவைகள் இப்போது மொத்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதியை உருவாக்குகின்றன. மேலும், பொருட்களைவிட உலகளாவிய வர்த்தக சிக்கல்களால் குறைவாக பாதிக்கப்படுகின்றன. 2025 நிதியாண்டில் உலகளாவிய பொருட்கள் வர்த்தகம் 0.2% சுருங்கும் என்று உலக வர்த்தக அமைப்பு எதிர்பார்க்கிறது. ஆனால், சேவை வர்த்தகம் 4% வளரும். சேவை ஏற்றுமதிகளும் மெதுவாக இருந்தாலும், அவை பொருட்கள் ஏற்றுமதியைப் போலக் குறையாது. இது தாக்கத்தை சமப்படுத்த உதவுகிறது.


இந்தியாவின் குறைந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை, நியாயமான வெளிநாட்டுக் கடன் மற்றும் வலுவான அந்நியச் செலாவணி இருப்பு (தற்போது $686 பில்லியன்) ஆகியவை உலகளாவிய அதிர்ச்சிகளின் தாக்கத்தைக் குறைக்கின்றன. இருப்பினும், அவை முழுமையான பாதுகாப்பை வழங்கவில்லை.


சாதனை அளவிலான கோதுமை பயிர் மற்றும் வலுவான பருப்பு வகைகள் உற்பத்தி, நல்ல பருவமழை முன்னறிவிப்புடன், விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் உணவு விலைகளைக் கட்டுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு $65 ஆகக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரணிகள் இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்க அதிக சுதந்திரத்தை அளிக்கின்றன. RBI வட்டி விகிதங்களை தலா 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.


குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு, உணவு மற்றும் எரிபொருள் அவர்களின் செலவினத்தில் பெரும் பகுதியை எடுத்துக்கொள்கின்றன. எனவே, குறைந்த உணவு பணவீக்கம் அவர்கள் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மற்ற விஷயங்களுக்கு அதிகமாக செலவிட உதவும். இந்த ஆண்டு நடைமுறைக்கு வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் வருமான வரி குறைப்புகளிலிருந்து நகரச் செலவுகளும் ஊக்கத்தைப் பெறும். இது கிராமப்புற செலவினங்களையும் ஆதரிக்கும்.


கடந்த ஆண்டைப் போலல்லாமல், இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அரசு மூலதனச் செலவினத்தில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. ஏப்ரல் மாதத்தில், மூலதனச் செலவு ரூ.1.59 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது ஆண்டு இலக்கில் 14.3% ஆகும்.


நாட்டில் தனியார் முதலீடு இன்னும் மெதுவாக இருந்தாலும், அரசாங்கத்திடம் முதலீடு செய்ய குறைந்த பணம் இருந்தாலும், உலகளாவிய விநியோகச் சங்கிலி மாற்றங்களால் இந்தியா லாபம் ஈட்டி வருகிறது. ஆப்பிள் நிறுவனம் தனது பெரும்பாலான ஐபோன்களை அமெரிக்காவிற்காக இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. வியட்நாமிய மின்சார வாகன நிறுவனமும் ஜூன் மாதத்தில் இந்தியாவில் ஒரு ஆலையைத் தொடங்கும் என்றும் இந்த ஆண்டு தயாரிப்பு வெளியீடுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. சீனாவிலிருந்து நிறுவனங்கள் விலகிச் செல்லும்போது இதுபோன்ற முதலீடுகள் மேலும் தொடரக்கூடும். இந்திய நிறுவனங்கள், குறிப்பாக பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நல்ல நிதி நிலையில் உள்ளன. மேலும், இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக உள்ளன.


இருப்பினும், நீண்டகால பிரச்சினைகளைச் சரிசெய்து, நாட்டை முதலீட்டிற்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற இந்தியா இன்னும் முக்கியமான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். ஒட்டுமொத்தமாக, இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் 6.5% வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த எண்ணிக்கையைக் குறைக்கக்கூடிய அபாயங்களும் உள்ளன.


எழுத்தாளர் CRISIL-ன் தலைமைப் பொருளாதார நிபுணர்.


Original article:
Share:

அமெரிக்கா-இந்திய கடலடி கேபிள் திட்டத்தை வலுப்படுத்துதல் -வேதிகா பாண்டே, துருவ் சேகர், சம்ரிதி குமார்

 டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பிராந்தியத்தை மேம்படுத்துவதற்கும், டிஜிட்டல் அபாயங்களிலிருந்து பாதுகாக்க உத்தி மற்றும் வணிக இலக்குகளை முன்னேற்றுவதற்கும் இது முக்கியமானது.


இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளில் (Bilateral commercial engagement), உடனடி வர்த்தக உடன்படிக்கைக்கு கட்டுப்படுத்தப்படாமல், பல முனைகளில் துரிதப்படுத்தப்படுகிறது. இரு அரசாங்கங்களும் முக்கியமான இராஜதாந்திரத் துறைகளில் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றன. தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளை மிகவும் மாறுபட்டதாகவும், குறைவான ஆபத்தானதாகவும் மாற்றுவது முக்கியம் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். உலகம் மேலும் நிச்சயமற்றதாகி வருவதால் இது குறிப்பாகத் தேவைப்படுகிறது. இந்தப் பணியின் ஒரு பகுதி TRUST கட்டமைப்பை மேம்படுத்துவதாகும். TRUST என்பது நெகிழ்ச்சி, திறந்த மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்கான தொழில்நுட்பத்தைக் குறிக்கிறது. இது iCET எனப்படும் முந்தைய அமெரிக்க-இந்திய சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்முயற்சியைப் பின்பற்றுகிறது.


இந்த ஆண்டின் பிற்பகுதியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குவாட் உச்சிமாநாட்டிற்காக இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குவாடில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதி இந்த உச்சிமாநாட்டிற்கு முன்னதாக கையெழுத்திடப்படும். இது டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தைகளில் ஆழமான ஒத்துழைப்பின் உறுதியான அடிப்படையை அமைக்கும்.


சமீபத்திய முன்னேற்றங்களுக்கு மத்தியில் கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் ஒரு முக்கிய மையமாக மாறி வருகின்றன. இந்த கேபிள்கள் உலகளாவிய இணையத்தின் இயற்பியல் முதுகெலும்பாகும். அவை சர்வதேச தரவு போக்குவரத்தில் 95%-க்கும் அதிகமானவற்றைக் கொண்டுள்ளன. இதன் பொருள் அவை கிட்டத்தட்ட அனைத்து டிஜிட்டல் தொடர்புகளையும் செயல்படுத்துகின்றன. இந்த கேபிள்கள் நிலத்தை அடையும் போது, ​​அவை பயனர்களுடன் அல்லது தரவு மையங்களுடன் நேரடியாக இணைக்கப்படுகின்றன. இந்த தரவு மையங்கள் கிளவுட் சேவைகள் (cloud services) மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பை (critical infrastructure) இயக்குகின்றன. சீனா இந்தோ-பசிபிக் முழுவதும் கடலுக்கு அடியில் உள்ள உள்கட்டமைப்பை விரைவாக விரிவுபடுத்துகிறது. இது அதன் டிஜிட்டல் சில்க் சாலை முன்முயற்சி (Digital Silk Road Initiative) மூலம் நடக்கிறது. இந்த வளர்ச்சி எதிர்காலத்திற்கு நம்பகமான மாற்றுகள் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறது.


உலகளாவிய பொது நலத்தின் ஒரு பகுதி


பாதுகாப்பான மற்றும் நம்பகமான கடல்சார் அமைப்புகளை உருவாக்குவதற்கான வலுவான இந்தியா-அமெரிக்கா கூட்டாண்மை முழு உலகிற்கும் பயனளிக்கும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு வழங்குநராக இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கை TRUST கட்டமைப்பு ஒப்புக்கொள்கிறது. நம்பகமான விற்பனையாளர்களைப் பயன்படுத்தி இந்தப் பகுதியில் கடல்சார் கேபிள் உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும் திட்டங்களையும் இது ஆதரிக்கிறது. இந்தியாவில் தற்போது சுமார் 17 கடல்சார் கேபிள்கள் உள்ளன. அவற்றில் சில கட்டப்பட்டு வருகின்றன. ஆனால் சிங்கப்பூர் மிகவும் சிறியதாக இருந்தாலும், இது சிங்கப்பூரின் 26 கேபிள்களை விடக் குறைவு. இந்த நிலைமை மாற வேண்டும். ஏனெனில், இந்தியா ஒரு பிராந்திய இணைப்பு மையமாக மாற நல்ல நிலையில் உள்ளது. இந்தியாவுக்குத் தேவையான அனைத்தும் உள்ளன. இது 11,098 கிலோமீட்டர் நீளமான கடற்கரை, இந்தோ-பசிபிக் பகுதியில் ஒரு மைய இடம் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்றவை ஆகும்.


இந்தியாவின் கடற்கரை அதன் மொத்த எல்லையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளது. ஆனால், 17 சர்வதேச கடல்சார் கேபிள்களில் 15, மும்பையில் வெறும் ஆறு கிலோமீட்டர் பரப்பளவில் ஒன்றிணைகின்றன. இந்த கடல்சார் கேபிள்கள் கேபிள் தரையிறங்கும் நிலையங்கள் மூலம் நிலத்துடன் இணைகின்றன. இந்த நிலையங்கள் முக்கியமாக மும்பை, சென்னை, கொச்சி, தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஐந்து நகரங்களில் காணப்படுகின்றன. இந்த நெட்வொர்க் வசதிகளை மேலும் விரிவுபடுத்துவது முக்கியம். ஒரு பகுதி இயற்கைப் பேரழிவுகள், மனித தவறுகள் அல்லது நாசவேலை போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால், அது பெரிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.


பரவலாக அமைந்த நிலையங்களின் வலையமைப்பு, பணிநிறுத்தம் ஏற்படும்போது தரவை மற்ற இணைப்புகளுக்கு மாற்றி அனுப்பும் திறனான - பிணையத்தின் மீள்பயனாக்கத்தை அதிகரிக்கும். 2024ஆம் ஆண்டு, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் உள்ள கடலடி கேபிள்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்திய இயக்குநர்கள், பணிநிறுத்தத்தைத் தவிர்க்க, மற்ற கேபிள் அமைப்புகளுக்கு போக்குவரத்தை மாற்றி அனுப்ப வேண்டியிருந்தது. இதேபோன்று, இந்தியாவுக்கு அருகில் ஏற்படும் பணிநிறுத்தம், உள்நாட்டு மற்றும் சர்வதேச தகவல்தொடர்புகளில் பழுதுகளுக்கு வழிவகுக்கலாம்.


ஒரு போக்குவரத்து மையமாக சாத்தியம்


கடல்சார் கேபிள் வழிகள் (Subsea cable routes) வரலாற்று கடல்சார் வர்த்தக வழிகளை பிரதிபலிக்கின்றன. ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இடையில் அமைந்துள்ள இந்தியா, ஹார்முஸ் ஜலசந்தி, மலாக்கா ஜலசந்தி மற்றும் பாப்-எல்-மண்டேப் ஆகிய முக்கிய கடல்சார் சோக் புள்ளிகளுக்கு அருகில் அமர்ந்திருக்கிறது. இது உலகளாவிய கேபிள் நெட்வொர்க்குகளுக்கு நாட்டை இயற்கையான மையமாக மாற்றுகிறது.


இந்தோனேசியா உட்பட ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் மாறும் பொருளாதாரங்களில் அதிகரித்துவரும் தேவைக்கு சேவை செய்து, வேகமான பிராட்பேண்ட் விரிவாக்கம் (fastest broadband growth) கொண்ட பிராந்தியத்தின் மையத்தில் இந்தியாவும் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட அனைத்து ஆப்பிரிக்கா-ஆசியா மற்றும் ஐரோப்பா-ஆசியா நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்களுக்கான முக்கிய சந்திப்பாக இது செயல்படுகிறது. அதிகரித்து வரும் உள்நாட்டு தேவைக்கு சேவை செய்வதற்கும் மேம்படுத்தப்பட்ட இணைப்பு முக்கியமானது. இந்தியாவின் அலைவரிசை தேவை 2021 மற்றும் 2028-க்கு இடையில் 38%-ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது அதிகரித்து வரும் நுகர்வு மற்றும் தரவு மைய முதலீடுகளால் தூண்டப்படுகிறது.


இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பெய்ஜிங்கின் செல்வாக்கை எதிர்கொள்ள அமெரிக்கா ஒரு நீண்டகால கொள்கையைக் கொண்டுள்ளது. இந்த சூழலில், இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, குறிப்பாக கடல்சார் கேபிள்கள், ஒரு முக்கியமான சொத்து. அதற்கு இன்னும் வலுவான பாதுகாப்பு தேவை.


நடவடிக்கைகள் தேவை


முதலீட்டாளர்கள் சந்தையில் நுழைவதை இந்தியா எளிதாக்க வேண்டும். கடலுக்கடியில் கேபிள்களுக்கு உரிமம் வழங்குவதற்கான விதிகள் மிகவும் சிக்கலானவை மற்றும் மாற்றப்பட வேண்டும். கேபிள்களை அமைப்பதற்கு பல்வேறு அரசாங்க அமைச்சகங்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட ஒப்புதல்கள் தேவை. மேலும், இந்தியா வெளிநாட்டு கேபிள் பழுதுபார்க்கும் கப்பல்களைச் சார்ந்துள்ளது. இந்தக் கப்பல்கள் பெரும்பாலும் சிங்கப்பூர் மற்றும் துபாயில் அமைந்துள்ளன. கேபிள் பிரச்சனை ஏற்படும்போது, ​​இந்தக் கப்பல்கள் அதை சரிசெய்ய மூன்று முதல் ஐந்து மாதங்கள் வரை ஆகும். கப்பல்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால் இந்த தாமதம் ஏற்படுகிறது. அவை மெதுவான சுங்க சோதனைகளையும் எதிர்கொள்கின்றன, கடற்படையின் அனுமதி தேவை, மேலும் அவற்றின் குழுவினருக்கு ஒப்புதல் தேவை. இந்த தாமதங்கள் நிதி சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.


இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் முக்கியமான டிஜிட்டல் உள்கட்டமைப்பில் அமெரிக்கா அதிக முதலீடு செய்ய வேண்டும். இதில் குறைந்த வட்டி கடன்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதும் அடங்கும். கேபிள் பாதை பன்முகத்தன்மையை ஆதரிப்பது மற்றும் சைபர் பாதுகாப்பை மேம்படுத்துவதும் இதன் பொருள். கேபிள் திட்டங்களில் முன்னணியில் இருக்க அமெரிக்கா தனது நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்.


உதாரணமாக, மெட்டா 50,000 கிலோமீட்டர் கடலுக்கு அடியில் கேபிள் திட்டத்தில் முதலீடு செய்கிறது. இந்த திட்டம் இந்தியப் பெருங்கடல் முழுவதும் இணைப்பை மேம்படுத்தும். இது பிப்ரவரி 2025-ல் அமெரிக்கா-இந்தியா கூட்டணித் தலைவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் தொடங்கும் மற்றும் ஐந்து கண்டங்களை இணைக்கும்.


உள்ளூர் நீர்மூழ்கி கேபிள் பழுதுபார்க்கும் அமைப்பை உருவாக்குவதையும் அமெரிக்கா ஆதரிக்க வேண்டும். பழுதுபார்க்கும் கிடங்குகளை உருவாக்குதல் மற்றும் இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்களைப் பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். இந்த முயற்சிகள் TRUST கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.


இறுதியாக, மேம்படுத்தப்பட்ட கடலடி கேபிள் ஒத்துழைப்பு, தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்யும், ஏனெனில் இது மிகவும் ஆற்றல்மிக்க தொழில்நுட்ப ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் துறைகளில் உடனடி நடவடிக்கைகள், பிராந்தியத்தின் டிஜிட்டல் மீள்திறனை மேம்படுத்தி, பகிரப்பட்ட இராஜதந்திர மற்றும் வணிக இலக்குகளை முன்னேற்றும்.


வேதிகா பாண்டே, துருவ் சேகர், சம்ரிதி குமார் ஆகியோர் புது தில்லியில் உள்ள கோன் ஆலோசனைக் குழுவில் தொழில்நுட்பக் கொள்கை ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர்.


Original article:
Share:

நாகரிகமும் அதன் அதிருப்திகளும் -டி. சுரேஷ் குமார்

 நாகரீகத்தை மறுபரிசீலனை செய்வது (Reinterpreting civilisation) மற்றும் கலாச்சாரத்தை ஒழுங்குபடுத்துவது (Regulating culture) அரசியல் விளைவுகளை ஏற்படுத்துகிறது


நாகரிகமும், கலாச்சாரமும் எந்தவொரு சமூகத்தின் அடையாளத்திற்கும் மிகவும் பின்னிப் பிணைந்துள்ளது. மேலும், அவற்றை மறுபரிசீலனை செய்ய அல்லது ஒழுங்குபடுத்த முயற்சிப்பது பெரும்பாலும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரங்களில் இது தெளிவாகியது. அங்குள்ள அரசியல் கட்சிகள் இரண்டு வழிகளில் எதிர்ப்பைக் காட்டின. ஒன்று மாநிலத்தின் பண்டைய நாகரிகம் பற்றியும் மற்றொன்று அதன் நிதி நடைமுறைகள் பற்றியும்.


முதலாவதாக, இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (Archaeological Survey of India (ASI)) தொல்பொருள் ஆய்வாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் கீழடி அகழ்வாராய்ச்சிகள் குறித்த தனது 982 பக்க அறிக்கையைத் திருத்துமாறு கேட்டுக் கொண்டது. ராமகிருஷ்ணா அவர்கள் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு மதுரைக்கு அருகிலுள்ள பண்டைய நகர்ப்புற குடியிருப்பைக் கண்டுபிடித்தார். அவர் ஜனவரி 2023-ல் அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தார். இந்த அறிக்கையானது, சங்க காலத்தில் ஒரு செழிப்பான நாகரிகம் இருந்ததாக அறிக்கை காட்டுகிறது. இந்த நாகரிகம் வேத நாகரிகத்தைப் போலவே அல்லது அதற்கு முந்தைய காலத்தில் இருந்ததாக அது பரிந்துரைத்தது.


திருத்தங்களுக்கான கோரிக்கையானது இரண்டு சுதந்திரமான நிபுணர்களின் உள்ளீடுகளின் அடிப்படையிலானது என்றும் அறிக்கையின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்றும் ASI கூறியது. இருப்பினும், இந்த நடவடிக்கையின் நேரமும் தன்மையும், தமிழ் நாகரிகத்தின் தொன்மையை குறைத்து மதிப்பிட ஒன்றிய அரசு முயல்கிறது என்ற நீண்ட கால அரசியல் சந்தேகங்களை தமிழகத்தில் மீண்டும் கிளப்பியது. ராமகிருஷ்ணா அவர்கள் தனது அறிக்கையை மறுபரிசீலனை (திருத்த) செய்ய மறுத்துவிட்டார். மேலும், தனது கண்டுபிடிப்புகளுக்கு வலுவான ஆதாரங்களும் விரிவான ஆவணங்களும் இருப்பதாக அவர் கூறினார்.


ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான சிபிஐ(எம்) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை ASI-யின் கோரிக்கையை விமர்சித்தன. இந்திய வரலாற்றில் வேத நாகரிகத்தின் முக்கியத்துவத்தை கேள்விக்குள்ளாக்கக்கூடிய ஆதாரங்களை ஒன்றிய அரசு மறைக்க முயற்சிப்பதாக அவர்கள் கூறினர். மேலும், ”ஒரு நாகரிகத்தின் பயணம் : சிந்துவிலிருந்து வைகைக்கு” (Journey of a Civilisation: Indus to Vaigai) என்ற புத்தகத்தை எழுதிய வரலாற்றாசிரியரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஆர். பாலகிருஷ்ணன், ASI-யின் கோரிக்கை "வரலாற்றின் அழுத்தத்திலிருந்து" (the pressure of history) வந்ததாகக் கூறினார். வரலாற்றில், குறிப்பாக இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், பாரபட்சத்திற்கு எதிராக அவர் எச்சரித்தார். வரலாற்றை கவனமாகவும் பொறுப்புடனும் படிப்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.


மத்திய கலாச்சார அமைச்சகம் ASI மூலம் விமர்சனங்களுக்கு பதிலளித்தது. குற்றச்சாட்டுகள் "தவறாக வழிநடத்தும்" (misleading) மற்றும் "உண்மைக்கு முரணானது" (contrary to the truth) என்று அது கூறியது. ஆய்வின் செயல்முறை இயல்பானது மற்றும் நியாயமானது என்று அமைச்சகம் வலியுறுத்தியது. இதில் எந்த சார்பும் இல்லை. இருப்பினும், பிரச்சினை அரசியல் ரீதியாகவே உள்ளது. முன்னதாக, மத்திய நிதி மற்றும் அகழ்வாராய்ச்சிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இது தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறையை பொறுப்பேற்க கட்டாயப்படுத்தியது.


இரண்டாவது சர்ச்சை 2025-ல் இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க பிணையத்திற்கு எதிராக கடன் வழங்குவதற்கான வரைவு வழிமுறைகள் (India’s Draft Directions for Lending against Gold Collateral) பற்றியது. இந்த வரைவு சில புதிய விதிகளை முன்மொழிந்தது. ஒரு விதி கடன்-மதிப்பு விகிதத்தில் 75% வரம்பைக் கொண்டிருந்தது. மற்றொரு விதிக்கு அடமானம் வைக்கப்பட்ட தங்கத்தின் உரிமைச் சான்று தேவைப்பட்டது. ஒருவர் எவ்வளவு தங்கத்தை அடமானம் வைக்கலாம் என்பதற்கும் வரம்புகள் இருந்தன. ஆபரணங்களுக்கு, கடன் வாங்குபவருக்கு வரம்பு 1 கிலோ. நாணயங்களுக்கு, கடன் வாங்குபவருக்கு வரம்பு 50 கிராம் ஆகியவை நிர்ணயித்தது.


இந்த முன்மொழியப்பட்ட கட்டுப்பாடுகள் தமிழ்நாட்டின் நிதி கலாச்சாரத்தின் மையத்தை தாக்கின, அங்கு தங்கக் கடன்கள், குறிப்பாக பெண்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களுக்கு முதன்மையான மற்றும் முக்கியமான பங்கு வகிக்கின்றன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில், தங்கம் ஒரு அலங்காரப் பொருள் மட்டுமல்ல, வீட்டு நிதி நிலைக்கு ஒரு முக்கியமான பாதுகாப்பு என்று விவரித்தார். புதிய விதிமுறைகள் பாதிக்கப்படக்கூடிய கடன் வாங்குபவர்களை கொள்ளையடிக்கும் கடன் வழங்குநர்கள் மற்றும் சுரண்டல் கடன் செயலிகளின் கைகளுக்கு தள்ளிவிடும் என்று அவர் எச்சரித்தார். மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த மசோதா வழிகாட்டுதல்களை "மிகவும் உணர்வற்றவை" என்று விமர்சித்தார் மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கு எதிராக ரிசர்வ் வங்கி "முறையான அநீதியை" நீடிக்கிறது என்று குற்றம்சாட்டினார்.




அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் தோழமைக் கட்சிகளும் ஆதரவாளர்களும் கூட இந்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையை எதிர்த்தனர். புதிய விதிகள் இந்திய மக்கள்தொகையில் பெரும்பகுதியை உள்ளடக்கிய ஏழை மற்றும் நடுத்தர மக்களைப் பாதிக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாதிட்டார்.


சூழ்நிலையின் அரசியல் தாக்கத்தை மத்திய நிதி அமைச்சகம் கவனித்தது. எனவே, சிறிய கடன் வாங்குபவர்களுக்கு கடுமையான விதிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அமைச்சகம் பரிந்துரைத்தது. இந்த கடன் வாங்குபவர்கள் ₹2 லட்சத்திற்கும் குறைவான கடன்களை வாங்குபவர்கள். அவர்கள் இன்னும் சரியான நேரத்தில் கடன் பெறுவதை உறுதி செய்வதே இலக்காக இருந்தது.


கீழடி அகழ்வாராய்ச்சி தகராறு மற்றும் முன்மொழியப்பட்ட தங்கக் கடன் விதிகள் ஆகிய இரண்டு நிகழ்வுகளில் தமிழ்நாடு கடுமையாக எதிர்வினையாற்றியது. இது ஒன்றிய அரசை பதிலளிக்க கட்டாயப்படுத்தியது. இந்த நிகழ்வுகள் மாநிலத்தில் கலாச்சாரம் மற்றும் பணம் பற்றிய பிரச்சினைகள் எவ்வளவு முக்கியமானவை என்பதைக் காட்டுகின்றன. அரசியல் உணர்திறன் இந்த பிரச்சினைகளை எவ்வாறு விரைவாக பெரிய சர்ச்சைகளாக மாற்றும் என்பதையும் அவை காட்டுகின்றன. நடவடிக்கை எடுத்ததன் மூலம், ஒன்றிய அரசு ஒரு கடுமையான மோதலைத் தவிர்த்திருக்கலாம், குறைந்தபட்சம் தங்கக் கடன் விதிகள் பற்றியது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு மாநிலம் தயாராகி வருவதால் இது மிகவும் முக்கியமானது.


Original article:
Share:

தவறான தகவல், COVID-19 அதிகரிப்பைவிட ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல். -சந்திரகாந்த் லஹரியா

 ஆசியாவிலும் இந்தியாவிலும் பரவல் ஒரு புதிய பருவகால முறையைப் பின்பற்றுகிறது. இதற்கான பதில்கள் தர்க்கரீதியானதாகவும் சமநிலையானதாகவும் இருக்க வேண்டும். அவை மக்கள்தொகையில் நோயின் உண்மையான நிலைமையையும் பிரதிபலிக்க வேண்டும்.


மே 2025 நடுப்பகுதியில் இருந்து, இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் ஒரு சில என்பதில் இருந்து சில 100-களாக உயர்ந்துள்ளது. இந்திய நகரங்களில் உள்ள கழிவுநீரில் இருந்து வரும் தரவுகளும் SARS-CoV-2 வைரஸை அதிகமாகக் காட்டுகின்றன. 2020-21-ஆம் ஆண்டில் ஏற்பட்ட COVID-19 பரவல் காரணமாக, ஊடகங்களும் பொதுமக்களும் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து மற்றும் தென் கொரியாவை உள்ளடக்கிய உலகின் வேறு சில நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் COVID-19 வழக்குகளில் இதேபோன்ற அதிகரிப்பு பதிவாகியுள்ளது. ஒரு புதிய மாறுபாடு புழக்கத்தில் உள்ளதா? கவலைப்பட காரணங்கள் உள்ளதா? என்று மக்களின் கேள்வியாக உள்ளது.


வைரஸ் வழக்குகளின் தற்போதைய அதிகரிப்பு, தற்போது புழக்கத்தில் இருக்கும் மிகவும் பொதுவான SARS-CoV-2 மாறுபாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு, Omicron மாறுபாட்டிலிருந்து (BA.1.529) வருகிறது. Omicron கவலைக்குரிய கடைசி முக்கிய மாறுபாடு ஆகும். இது முதலில் நவம்பர் 2021-ல் கண்டறியப்பட்டது. அப்போதிருந்து, Omicron-ன் சில துணை மாறுபாடுகள் தோன்றியுள்ளன. ஆனால், உலகில் எங்கும் இந்த புதிய பெரிய மாறுபாடு எதுவும் கண்டறியப்படவில்லை.


தற்போதைய ஆதிக்க மாறுபாடு JN.1 என்று அழைக்கப்படுகிறது. இது பைரோலா (Pirola) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு புதிய மாறுபாடு அல்ல. இது முதலில் ஆகஸ்ட் 2023-ல் லக்சம்பேர்க்கில் பதிவாகியுள்ளது. இந்தியாவில், இது நவம்பர்-டிசம்பர் 2023 முதல் பதிவாகியுள்ளது. LF.7 மற்றும் NB.1.8 போன்ற JN.1 இன் சில துணை-வம்சாவளிகளும் கண்டறியப்பட்டுள்ளன. இருப்பினும், இதுவரை, அசல் JN.1 மாறுபாட்டுடன் ஒப்பிடும்போது பெரியளவில் மருத்துவ வேறுபாடுகள் எதுவும் இல்லை.


தொற்றுநோயியல் உண்மைகள் (Epidemiological facts)


ஏன் இந்த ஏற்றம் என்ற கேள்விக்கு நோய்கள் பற்றிய மூன்று முக்கியமான உண்மைகளிலிருந்து பதில் வருகிறது. முதலாவதாக, எந்தவொரு புதிய வைரஸும் மக்கள்தொகைக்குள் நுழைந்தவுடன் நீண்ட காலம் நீடிக்கும், ஒருவேளை என்றென்றும் இருக்கும். SARS-CoV-2 இந்தியா மற்றும் பிற நாடுகளில் எல்லா இடங்களிலும் உள்ளது. புதிய தொற்றுகள் எதுவும் பதிவாகாதபோதும் இது நிகழ்கிறது.


செப்டம்பர் 2020-ல், மோரியாமா எம். மற்றும் அவரது சகாக்கள், சுவாச வைரஸ்களின் பருவகாலத்தன்மை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும், ஜலதோஷம் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா நோயின் வருடாந்திர தொற்றுநோய்கள் மிகவும் அறியப்பட்ட ஆதாரம் என்றும் அறிவியல் இதழான வருடாந்திர வைராலஜியில் விவாதித்தனர். பருவகாலத்தன்மைக்கு பங்களிக்கும் காரணிகள் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம், மனித நடத்தை மற்றும் கூட்டம் போன்ற சுற்றுச்சூழல் அளவுருக்கள் மற்றும் வைரஸ் நிலைத்தன்மை மற்றும் பரவல் விகிதங்களை மாற்ற வைரஸ் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.


SARS-CoV-2 என்பது சுவாச மண்டலத்தைப் (respiratory virus) பாதிக்கும் ஒரு வைரஸ். இது பருவகால முறையைப் பின்பற்ற வாய்ப்புள்ளது. இருப்பினும், இதுவரை, COVID-19 வழக்குகளுக்கான இந்த பருவகால முறை தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. சிங்கப்பூரின் சில தரவுகள் COVID-19 வழக்குகள் ஒவ்வொரு ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்கும் அதிகரிப்பதைக் காட்டுகின்றன. ஆனால் இந்த முறை ஒவ்வொரு நாட்டிலும் வேறுபட்டிருக்கலாம்.


இந்தியாவில், ஜனவரி 2022-ல் ஓமிக்ரான் அலைக்குப் பிறகு, 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் கோவிட்-19 வழக்குகளில் அதிகரிப்பு ஏற்பட்டது. இது XBB.1.16 எனப்படும் ஓமிக்ரானின் புதிய பதிப்பின் காரணமாகும். டிசம்பர் 2023 மற்றும் ஜனவரி 2024-ல் வழக்குகளும் அதிகரித்தன. பின்னர், ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2024-ல் மற்றொரு உயர்வு ஏற்பட்டது. இப்போது, ​​மே 2025 முதல் புதிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.


இதன் காரணமாக, இந்தியாவில் COVID-19 வழக்குகள் ஒவ்வொரு எட்டு முதல் பத்து மாதங்களுக்கும் அதிகரித்து வருவது போல் தெரிகிறது. இது ஒரு புதிய பருவகால வடிவமாக இருக்கலாம். இந்த அதிகரிப்புகளின் போது தொற்றுகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நோயின் தாக்கம் லேசானதாகவோ அல்லது மிகவும் லேசானதாகவோ மாறியுள்ளது.


கழிவு நீர் கண்காணிப்பு COVID-19 வைரஸ் அதிகரிப்பதைக் காட்டுகிறது


இரண்டாவதாக, SARS-CoV-2 ஒரு வகை RNA வைரஸாகும், இது மற்ற வகை வைரஸ்களை விட அடிக்கடி மாற்றங்கள் மற்றும் மரபணு மாற்றங்களுக்கு பெயர் பெற்றது. முக்கிய மாறுபாடு JN.1 ஆக இருந்தாலும், சில புதிய துணை-கிளைகள் தோன்றியுள்ளன, இவை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம்.


மூன்றாவதாக, இந்தியாவில் COVID-19 பாதிப்புகளின் உயர்வு உண்மையானது, ஆனால் அண்டை நாடுகளில் COVID-19 பாதிப்புகள் குறித்த அறிக்கைகளைத் தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட COVID-19 பரிசோதனை மற்றும் கண்காணிப்பு காரணமாகவும் உள்ளது. அதிகரித்த பரிசோதனை என்பது அதிகமான மக்கள் பரிசோதிக்கப்படுவதையும், இதனால் அதிக கண்டறிதலையும் குறிக்கிறது.


இந்திய மக்களுக்கு இயற்கை தொற்று மற்றும் தடுப்பூசிகள் மூலம் ‘கலப்பு நோய் எதிர்ப்பு’ இருந்தாலும், இது புதிய மாறுபாடு இல்லை என்றாலும், ஏன் இன்னும் உயர்வு ஏற்படுகிறது? இதற்கு பதில், இயற்கை தொற்று அல்லது தடுப்பூசி மூலம் ஏற்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு ஆகியவை புதிய தொற்றிலிருந்து பாதுகாக்கவில்லை. நோய் எதிர்ப்பு ஆனது மிதமான முதல் கடுமையான நோய்கள் மற்றும் இறப்புகளிலிருந்து பாதுகாக்கிறது. பாதிப்புகள் அல்லது தொற்றுகள் என்பது ஒரு நபரின் மூக்கு மற்றும் தொண்டையில் SARS-CoV-2 வைரஸ் இருப்பதை மட்டுமே குறிக்கிறது. இருப்பினும், நோய் எதிர்ப்பு ஆனது மக்கள் நோய்வாய்ப்படாமல் அல்லது கடுமையான நோய் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும். தற்போது, கடுமையான நோய் பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை.


தற்போதைய எண்ணிகை


தற்போதைய வழக்குகளின் அதிகரிப்பு அதிக கவனத்தைப் பெறுகிறது. இந்த அதிகரிப்புடன் கூட, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 200 முதல் 300 புதிய COVID-19 வழக்குகள் மட்டுமே காணப்படுகின்றன. அதாவது, ஒவ்வொரு 45 லட்சம் முதல் 70 லட்சம் மக்களுக்கும் ஒரு புதிய தொற்று ஏற்படுகிறது. COVID-19 காரணமாக பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைப் பற்றி நாங்கள் கேள்விப்படுவதில்லை. பதிவாகும் இறப்புகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மட்டுமே.


இந்த எண்ணிக்கையை இன்னும் கூர்ந்து கவனிப்போம். ஒவ்வொரு நாளும், ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான மக்கள் பிற நோய்களால் நோய்வாய்ப்படுகிறார்கள். உதாரணமாக, இந்தியா ஒவ்வொரு நாளும் சுமார் 8,000 புதிய காசநோய் (tuberculosis (TB)) வழக்குகள் பதிவாகின்றன. இறப்புகளைக் கருத்தில் கொள்ளும்போது, ​​இந்தியாவில் தினமும் சுமார் 30,000 பேர் முதுமை மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளால் இறக்கின்றனர். ஒவ்வொரு நாளும் சுமார் 900 பேர் காசநோயால் இறக்கின்றனர். இது தடுக்கப்பட்டு சிகிச்சையளிக்கக்கூடிய ஒரு நோயாகும். மேலும் 390 பேர் காய்ச்சலால் ஒவ்வொரு நாளும் இறக்கின்றனர். சுவாச ஒத்திசைவு வைரஸால் (Respiratory Syncytial Virus (RSV)) சுமார் 310 பேர் இறக்கின்றனர், இது பலருக்குத் தெரியாது. ஆனால் தடுப்பூசிகளால் பொதுவானது மற்றும் தடுக்கக்கூடியது.


காற்று மாசுபாடு மற்றும் சுவாச நோய்கள் பல நோய்களையும் இறப்புகளையும் ஏற்படுத்துகின்றன. இந்த சூழ்நிலையில், COVID-19 என்பது மற்றொரு நோயாகும். அதிக கவனம் தேவைப்படும் பல உடல்நலப் பிரச்சினைகளுடன் ஒப்பிடும்போது இது குறைவான கடுமையான மற்றொரு நோயாகும்.


இது கவனத்தை ஈர்ப்பதற்கு ஒரு காரணம் என்னவென்றால், 'நடப்பு தொற்று நிகழ்வுகள்' (active cases) போன்ற பழைய ஆனால் அவ்வளவு பொருத்தமான கண்காணிப்பு அளவுருக்களின் தொடர்ச்சியான பயன்பாடு ஆகும். இது தவறான அதிக எண்ணிக்கையிலான COVID-19 வழக்குகளை வழங்குகிறது. COVID-19 தொற்றுநோய்களின் ஆரம்பத்தில்  'நடப்பு தொற்று நிகழ்வுகள்' என்ற அணுகுமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டது, வைரஸ் புதிதானது மற்றும் மக்களில் வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால், தொற்று ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை நீடித்தது. எனவே, நோய்த்தொற்றுக்குப் பிறகு, நோயெதிர்ப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டு வைரஸை அழிக்க ஒன்று முதல் இரண்டு வாரங்கள் தேவைப்பட்டது. இருப்பினும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, பெரும்பாலான தனிநபர்களுக்கு தடுப்பூசிகள் அல்லது இயற்கை நோய்த்தொற்றுகளிலிருந்து விரைவான மற்றும் பயனுள்ள தற்காப்பை ஏற்றுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இதனால், ஓரிரு நாட்களில் தொற்று ஏற்படாது. எனவே, நேர்மறை சோதனை செய்த அனைவரையும் நடப்பு நோயாளியாகக் கணக்கிடுவது இனி அர்த்தமல்ல.


தடுப்பூசி மீது


கூடுதல் கோவிட்-19 தடுப்பூசி டோஸ் தேவையில்லை. 2020 முதல் 2022 வரை, இந்தியாவில் உள்ள அனைத்து வயது மக்களும் ஓமிக்ரான் மாறுபாடு உட்பட பல்வேறு வகையான கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலான பெரியவர்களும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றனர். எனவே, நம் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் SARS-CoV-2-க்கு எதிராக ‘கலப்பின நோய் எதிர்ப்பு சக்தி’ (hybrid immunity) உள்ளது. டிசம்பர் 2022 மற்றும் ஜனவரி 2023-ல் பெரும்பாலான மக்கள் Omicron மாறுபாட்டிற்கு ஆளாகியுள்ளனர். மேலும் JN.1, புழக்கத்தில் இருக்கும் முக்கிய மாறுபாடு, Omicron குடும்பத்தைச் சேர்ந்தது.


நோய் எதிர்ப்பு அளவுகள் குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தி குறையும் வாய்ப்பு உள்ளது. இதனால் புதிய துணை வகைகளுக்கு சில நோயெதிர்ப்பு தப்பிப்பது சாத்தியமாகும். இருப்பினும், மனித நோயெதிர்ப்பு மண்டலத்தில் 'நினைவக செல்கள்' (memory cells) எனப்படும் சிறப்பு செல்கள் உள்ளன. அவை பெரும்பாலும் கண்டறிய முடியாதவை. ஆனால், எதிர்கால நோய்த்தொற்றுகளுக்கு பதிலளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டவை மற்றும் எதிர்காலத்தில் கடுமையான நோய்களிலிருந்து பாதுகாக்கும். தற்போது, ​​நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கக்கூடிய புதிய ஆபத்தான மாறுபாடு எதுவும் இல்லை. விஞ்ஞானரீதியாக, இந்திய மக்களுக்கான கோவிட்-19 தடுப்பூசியின் கூடுதல் அளவுகள் பெற வேண்டிய அவசியமில்லை. அதனால் எந்தப் பரிந்துரையும் இல்லை. கோவிட்-19 கவலைக்குரியது அல்ல, மேலும் ஏற்கனவே இருக்கும் எந்தவொரு சுகாதார நிலையையும் தடுப்பதும் சிகிச்சையளிப்பதும் ‘கூடுதல் கோவிட்-19’ தடுப்பூசிகளை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, அதிக ஆபத்தில் உள்ளவர்கள் காய்ச்சல் மற்றும் பிற வயதுக்கு ஏற்ற பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகள் மூலம் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க வேண்டும்.


ஆசியாவிலும் இந்தியாவிலும் கோவிட்-19-ன் தற்போதைய அதிகரிப்பு SARS-CoV-2-ன் வளர்ந்து வரும் பருவகால முறையைப் பின்பற்றுகிறது. வலைப்படத் தேவையில்லை. அரசாங்கம் இதற்கான நிலைமையை கவனமாகக் கவனித்து போக்குகளைக் கண்காணிக்க வேண்டும். கோவிட்-19 வழக்குகளின் சிறிய அதிகரிப்பைவிட தவறான தகவல்களும் தவறான செய்திகளும் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கலாம். இந்தியாவில், அரசாங்கமும் குடிமக்களும் சமநிலையான அணுகுமுறையை எடுக்க வேண்டும். அவர்கள் அச்சுறுத்தலைப் புறக்கணிக்கக்கூடாது. ஆனால், பரபரப்பை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதைச் செய்வதற்கான ஒரு முக்கியமான வழி, சரிபார்க்கப்படாத செய்திகள் அல்லது வதந்திகளைப் பரப்பாமல் இருப்பது.


கோவிட்-19-ன் தற்போதைய மற்றும் எதிர்கால பருவகால அதிகரிப்புகளைப் புகாரளிப்பதற்கும் பதிலளிப்பதற்கும் நமக்கு கவனமாகவும் சமநிலையானதாகவும் இருக்கும் வழி தேவை. ஒவ்வொரு எழுச்சியையும் ஒரு புதிய அலையாகவோ அல்லது தவறான எச்சரிக்கையாகவோ நாம் கருதினால், அது சுகாதார அமைப்பையும் ஊழியர்களையும் சோர்வடையச் செய்யும். இது நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையையும் சேதப்படுத்தும்.


COVID-19 தொற்று அதிகரிப்பிற்கான பதில்கள் விவேகமானதாகவும் சமநிலையானதாகவும் இருக்க வேண்டும். அவை நோயின் உண்மையான சூழ்நிலையுடன் பொருந்த வேண்டும். தற்போது, ​​COVID-19-ஐ வேறு எந்த லேசான சுவாச நோயையும் போலவே சிகிச்சையளிக்க முடியும் என்பதற்கான சான்றுகள் காட்டுகின்றன.


டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா ஒரு பயிற்சி மருத்துவர். அவர் தொற்றுநோயியல் மற்றும் உலகளாவிய சுகாதாரத்திலும் ஒரு சிறந்த நிபுணர். உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களுடன் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.


Original article:
Share:

இந்தியாவின் நகரங்கள் அடையாளப் பரவலாக்கத்தைவிட அதிகமாக தகுதியுடையவை. -சந்தோஷ் நர்குண்ட்

 74-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை வலுப்படுத்த ஒன்றிய அரசு இரண்டாவது சுற்று அரசியலமைப்பு மாற்றங்களைத் தொடங்க வேண்டும்.


ஜூன் 1, 1993 அன்று நடைமுறைக்கு வந்த 74-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இந்தியாவின் நகரங்களில் ஜனநாயக அதிகாரப் பரவலை (democratic decentralisation) நிறுவனமயமாக்குவதாக உறுதியளித்தது. 1991-ல் இந்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, நோக்கங்களின் அறிக்கை ஒப்புக் கொண்டது என்னவென்றால், ஒழுங்கற்ற தேர்தல்கள், நீடித்த அதிகாரப் பறிப்பு மற்றும் போதுமற்ற அதிகாரப் பரவல் காரணமாக பல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (Urban Local Governments (ULGs)) பலவீனமாகவும் பயனற்றதாகவும் மாறிவிட்டன.


இந்தியாவின் மாநகராட்சி நிர்வாகப் பயணம் 1687-ஆம் ஆண்டு சென்னையில் முதல் மாநகராட்சி அமைக்கப்பட்டதிலிருந்து தொடங்குகிறது. 74வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், அரசியலமைப்பு அங்கீகாரத்தை வழங்குவதன் மூலமும், தேசிய நிர்வாகத்தை நிறுவுவதன் மூலமும் அதிகாரம் பெற்ற, பொறுப்புணர்வுள்ள மற்றும் பங்கேற்பு நகர அரசாங்கங்களை உறுதியளித்தது. 30-ஆண்டுகளுக்கு மேலாகியும், அந்த வாக்குறுதி உணர்வில் அல்ல, எழுத்தில்தான் அதிகமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.


பின்னோக்கிப் பார்க்கும்போது, ​​74வது திருத்தம் ஒரு எதிர்காலத் திட்டத்தை வழங்குவதைவிட ஒரு வரலாற்றுத் தேக்க நிலையை நிவர்த்தி செய்தது. வளர்ந்து வரும் மற்றும் நவீன பொருளாதாரத்தில் பெரிய நகரங்களுக்கு என்ன தேவை என்பதை அது முழுமையாகப் புரிந்து கொள்ள அது தவறிவிட்டது.


1991-92 முதல் 2024-25 வரை இந்தியா முன்னோடியில்லாத பொருளாதார வளர்ச்சியையும் நகரமயமாக்கலையும் கண்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி $270 பில்லியனில் இருந்து $3.7 ட்ரில்லியனுக்கு மேல் 15 மடங்கு வளர்ந்துள்ளது. ஒன்றிய அரசின் நகர்ப்புற வளர்ச்சி ரூ. 600 கோடியில் இருந்து ரூ. 82,576 கோடியாக உயர்ந்துள்ளது. நகர்ப்புற மக்கள்தொகை 217 மில்லியனில் இருந்து மதிப்பிடப்பட்ட 520 மில்லியனாக பெருகியுள்ளது. நகரமயமாக்கலில் இந்தியா உலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.  அதன் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 37% பேர் 8,500 நகர்ப்புற மையங்களில் வாழ்கின்றனர், இதில் 4,800-க்கும் மேற்பட்ட சட்டப்பூர்வ நகரங்களும் 53 பெருநகரப் பகுதிகளும் அடங்கும். 2030-ஆம் ஆண்டுக்குள், நகர்ப்புறப் பகுதிகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 75% பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் பல மாநிலங்களும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் கணிசமாக முதலீடு செய்துள்ளன. இருப்பினும், உள்ளூர் நிர்வாக சீர்திருத்தங்கள் இந்த வளர்ச்சி முன்னேற்றத்தைவிட பின்தங்கியே உள்ளன. அதிகாரம் பெற்ற, பொறுப்புணர்வுள்ள நகர அரசாங்கங்கள் இல்லாமல், 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பம் எட்டமுடியாமல் போகலாம்.


இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG)) 18 மாநிலங்களில் 74-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை செயல்படுத்துவது குறித்து நடத்திய ஒரு முக்கிய தணிக்கையில், அரசியலமைப்பின் கீழ் கட்டாயப்படுத்தப்பட்ட 18 (<25%) செயல்பாடுகளில் சராசரியாக நான்கு மட்டுமே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு (Urban Local Governments (ULGs)) முழுமையாகப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளது. 60%-க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சபைகள் இல்லை. மாநில நிதி ஆணையங்கள் சராசரியாக 412 நாட்கள் தாமதமாயின. நகர்ப்புற உள்ளூர் அரசுகள் தனிநபர் செலவினத்தில் 65% குறைபாட்டையும், 42% வள-செலவின இடைவெளியையும் எதிர்கொள்கின்றன. திட்டமிடல் மற்றும் பட்ஜெட் தயாரிப்பில் குடிமக்கள் ஈடுபாடு குறைவாக உள்ளது. வார்டு குழுக்கள் பெரும்பாலும் செயலற்றவையாக உள்ளன. இதற்கிடையில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் திட்டங்கள் மற்றும் அரைசார் நிறுவனங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சபைகளை புறக்கணித்து நகர்ப்புற வளர்ச்சியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன; நகர்ப்புற உள்கட்டமைப்பின் 72% ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் நிதியளிக்கப்படுகிறது. திட்டமிடல், நீர் வழங்கல், துப்புரவு வசதி, வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து போன்ற முக்கிய செயல்பாடுகளில் நகர்ப்புற உள்ளூர் அரசுகளுக்கு கட்டுப்பாடு இல்லை. பல நகரங்களில், ‘குரூப் டி’ ஊழியர் நியமனங்களுக்கு கூட உயர்மட்ட அங்கீகாரம் தேவைப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புககள் மாநில அரசுகளின் நீட்டிப்புகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. இது தண்ணீர் பற்றாக்குறை, சேதமடைந்த சாலைகள், வெள்ளம், போக்குவரத்து நெரிசல்கள், நெரிசலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மற்றும் மோசமான சுற்றுச்சூழல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளது.


நகர்ப்புற நிர்வாகத்தில் இந்தியா இனி வழக்கம் போல் வணிக அணுகுமுறையை ஏற்க முடியாது. தற்போதைய நிலையை மாற்ற, 74-வது திருத்தத்தின் வரையறுக்கப்பட்ட சாதனைகளை அடையாளமாக ஒப்புக்கொள்வதைத் தாண்டி நாம் செல்ல வேண்டும். ஒரு சீர்திருத்த உத்தி அளவீடு, வரைபடம் மற்றும் ஆணை ஆகிய மூன்று கூறுகளைச் சுற்றி கட்டமைக்கப்பட வேண்டும்.


நடவடிக்கை: ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (Ministry of Housing and Urban Affairs (MoHUA)) நகர்ப்புற அதிகாரப் பரவலின் விரிவான மதிப்பீட்டை கொண்டிருக்கவில்லை. 2020-ல் கட்டுப்பாட்டாளர் மற்றும் தணிக்கையாளர் தணிக்கைகள் தொடங்கும் வரை, 74-வது திருத்தம் நடைமுறைப்படுத்தல் குறித்த அதிகாரப்பூர்வ தரவு இல்லை. இதற்கு மாறாக, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 73-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்குப் பிறகு 7-மதிப்பீடுகளை நடத்தியுள்ளது மற்றும் பஞ்சாயத் வளர்ச்சி குறியீடு மூலம் பஞ்சாயத்து செயல்திறனை கண்காணிக்கிறது. ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் மாநில நகர்ப்புற வளர்ச்சி துறைகள் (Urban Development Departments (UDDs)) நிகழ் நேரத்தில் அதிகாரப் பரவலை அளவிட்டு கண்காணிக்கும் திறனை உருவாக்க வேண்டும். தரவை சீர்திருத்த அது சார்ந்த மானியங்கள் மற்றும் திட்டங்களுடன் இணைக்க வேண்டும்.


வரைபடமாக்கல் (Map): 74-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை வலுப்படுத்த ஒன்றிய அரசு இரண்டாவது சுற்று அரசியலமைப்பு மாற்றங்களைத் தொடங்க வேண்டும். மாநிலங்கள் அதிகப்படியான கட்டுப்பாட்டை கைவிட்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொள்கை, நிதி, அறிவு மற்றும் மனித வளங்களுடன் அதிகாரம் அளிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட சபைகள் மற்றும் மேயர்கள் தங்கள் நகரங்களில் செயல்படும் அனைத்து நிறுவனங்களின் மீதும் ஜனநாயக மேற்பார்வையைக் கொண்டிருக்க வேண்டும்.


கட்டாயமாக்கல் (Mandate): 74-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை வலுப்படுத்த ஒன்றிய அரசு அரசியலமைப்பு சீர்திருத்தங்களின் இரண்டாவது சுற்று அரசியலமைப்பு மாற்றங்களைத் தொடங்க வேண்டும். தற்போதைய குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதிகாரப் பரவலை எதிர்கால-பாதுகாப்பு செய்ய வேண்டும். இதில் பெருநகரங்கள், வளர்ந்து வரும் மற்றும் சிறிய நகரங்களுக்கான வேறுபட்ட ஆட்சி மாதிரிகள்; செயல்பாடுகளின் உத்தரவாத பரவல்; காலக்கெடுவுடன் கூடிய தேர்தல்கள்; அதிகாரமளிக்கப்பட்ட வார்டு குழுக்கள் மற்றும் பகுதி சபைகள்; மற்றும் நிலையான வருவாய் ஓட்டங்கள் மற்றும் கொள்கை அடிப்படையிலான பரிமாற்றங்கள் மூலம் நிதி அதிகாரப் பரவல் ஆகியவை அடங்கும். திருத்தம் மேயர் பதவிக்காலங்கள், எல்லை நிர்ணயம் மற்றும் இட ஒதுக்கீட்டு காலக்கெடுகள், வருவாய் உரிமைகள் மற்றும் குடிமக்கள் மன்றங்களை திட்டவட்டமாக குறிப்பிட வேண்டும்.


74-வது திருத்தம் ஒரு அரசியலமைப்பு வாக்குறுதியாக இருந்தது. அதை நாம் நிறைவேற்றும் நேரம் இது.


குடியுரிமை மற்றும் ஜனநாயகத்திற்கான ஜனக்ரஹா மையத்தின் பங்கேற்பு நிர்வாகத்தின் தலைவராக சந்தோஷ் நர்குண்ட் உள்ளார்.


Original article:
Share:

இந்தியாவின் புத்தாக்க சூழல் அமைப்பை மாற்றியமைத்தல் -அமிதாப் காந்த்

 பாரம்பரிய வளர்ச்சி மாதிரிகள் (Classical growth models) தொழில்நுட்பத்தை வளர்ச்சியை இயக்கும் வெளிப்புற காரணியாக கருதின. ஆனால், நவீன வளர்ச்சி கோட்பாடு தொழில்நுட்பம் ஒரு உள்ளார்ந்த காரணி (endogenous factor) என்றும் கல்வி, புதுமை மற்றும் கருத்துக்களில் முதலீடுகளின் விளைவு என்றும் கூறுகிறது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு இது முக்கியமானது. ஆனால், புதுமைகளை உருவாக்கி புதிய யோசனைகளை உருவாக்கும் நமது திறனை நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தவில்லை.


இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (research and development (R&D))) செலவினம், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (gross domestic product (GDP)) 0.7%-ஆக உள்ளது — தென் கொரியாவில் 5.2%, சீனாவில் 2.6%, மற்றும் அமெரிக்காவில் 3.6% ஆக உள்ளது. இந்த இடைவெளியைக் குறைக்க, ஜூலை 2024-ல் அறிவிக்கப்பட்ட ₹1 லட்சம் கோடி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதி மற்றும் பிப்ரவரி 2025-ல் அறிவிக்கப்பட்ட ஆழ்ந்த தொழில்நுட்பத்திற்கான (deep tech) நிதி ஆகியவை விரைவில் வழங்கப்பட வேண்டும்.


நாம் முன்னெப்போதையும் விட அதிக காப்புரிமைகளை வழங்கி வருகிறோம். 2023-24-ல் 100,000-க்கும் மேல் வழங்கப்பட்டன — ஆனால், அவற்றில் பெரும்பாலானவை வணிகமயமாக்கப்படாமல் உள்ளன. ஃபிரான்ஹோஃபர் நிறுவனத்தின் ஆய்வு கடந்த பத்தாண்டுகளில், அறிவுசார் சொத்துரிமைகளுக்கான (intellectual property rights (IPR)) பணம் செலுத்துதல் $4.8 பில்லியனில் இருந்து $14 பில்லியனாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கிறது. அறிவுசார் சொத்துரிமை வரவுகளின் எண்ணிக்கை 0.7 பில்லியனில் இருந்து 1.5 பில்லியனாக இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கொடுப்பனவுகளுக்கும் ரசீதுகளுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது.


அதே நேரத்தில், உலகளாவிய இயக்கவியல் மாறி வருகிறது. முன்னேறிய பொருளாதாரங்கள் ஆராய்ச்சி பிரிவுகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான நிதியுதவியை குறைத்து வருகின்றன. அமெரிக்காவில், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. வளர்ந்த நாடுகளில் மாணவர் விசா விதிமுறைகளும் கடுமையாகி வருகின்றன. நமது புதுமை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் இந்தியா ஒரு  ராஜதந்திர முன்னேற்றத்தை ஏற்படுத்த இது ஒரு சரியான நேரம். திறமையானவர்களை நாம் இங்கு கொண்டு வந்து, அவர்களை தக்க வைத்துக் கொண்டு, வலுவான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.


தற்போதுள்ள திட்டங்களான மேம்பட்ட கூட்டு ஆராய்ச்சி ஆசிரியர் திட்டம் (Visiting Advanced Joint Research Faculty (VAJRA))) மற்றும் (கல்வி வலையமைப்புகளுக்கான உலகளாவிய முன்முயற்சி (Global Initiative for Academic Networks (GIAN)) ஆகியவை மிகவும் குறைந்த நோக்கத்தைக் கொண்டுள்ளன. நாம் பெரிதாக சிந்தித்து சிறந்த இந்திய மனங்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும். இரு பாதைகளுடன் கூடிய பிரத்யேக தேசிய திட்டம் இதைச் செய்ய உதவும். பாதை 1-ன் கீழ், உலகின் முதல் 100 பல்கலைக்கழகங்களில் இருந்து 500 சிறந்த கல்வியாளர்களை அழைக்க வேண்டும். இந்த ஆராய்ச்சியாளர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ஆறு மாதங்கள் இந்தியாவில் செலவிட வேண்டும். ஆராய்ச்சி ஆய்வகங்கள் அல்லது திட்டங்களை அமைக்க $1 மில்லியன் தொடக்க மானியம் வழங்கலாம். இலக்கு உள்ளூர் திறனை வளர்ப்பதாக இருக்க வேண்டும். பாதை 2 உலகின் முதல் 200 பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களுக்கு ஓய்வுகால வாய்ப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்தலாம். இந்த ஓய்வுகால வாய்ப்புகள் $100,000 மானியங்களால் வருடாந்திர கூடுதல் தொகையுடன். ஆதரிக்கப்படலாம். இந்த ஆராய்ச்சியாளர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டவும் கற்பிக்கவும் வேண்டும். மேலும், அறிவு பரிமாற்றம் மற்றும் சூழலியல் மேம்பாட்டை உறுதி செய்ய வேண்டும்.


நாம் புதுமை சூழலியலுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் கட்ட வேண்டும். நமக்கு வடிவமைப்புக்கு மட்டுமல்ல, முன்மாதிரி தயாரித்தல் மற்றும் சோதனைக்கும் உலகத்தரம் வாய்ந்த புதுமை அடிப்படை வசதிகள் தேவை — இவை தயாரிப்பு மேம்பாட்டுக்கு முக்கியமானவை. நமது கல்வி நிறுவனங்களில் பொதுவான முன்மாதிரி ஆய்வகங்கள் மற்றும் வடிவமைப்பு படப்பிடிப்புக் கூடங்களைக் கொண்டிருக்கலாம். கல்வி நிறுவனங்களுடன் கூட்டாக, குழுக்களில் மற்றும் அதைச் சுற்றி, துறைகள் முழுவதும் மேம்பட்ட சோதனை வசதிகள் மற்றும் ஆய்வகங்கள் அமைக்கப்பட வேண்டும். டிஜிட்டல் பொது அடிப்படை வசதிகள் (digital public infrastructure (DPI)) மற்றும் திறந்த அணுகல் தரவு ஆகியவற்றில் நமது அனுபவம் உறுதியான அடித்தளத்தை வழங்குகிறது. உதாரணமாக, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (IndiaAI Mission) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கணினி குழுக்களை எடுத்துக்கொள்ளலாம். இதே போன்ற மாதிரிகளை ஆழமான தொழில்நுட்பப் பகுதிகளிலும் ஆராயலாம்.


நாம் ஒரு தயாரிப்பு நாடாக மாற வேண்டுமானால், கல்வி மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக்கு இடையிலான இடைவெளி சரிசெய்யப்பட வேண்டும். உலகம் முழுவதும் பல வெற்றிகரமான மாதிரிகள் உள்ளன. வார்விக் உற்பத்தி குழு ஒரு முன்னோடி உதாரணம். இது வார்விக் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறையை ஒன்றிணைத்து, வாகனம், சுகாதாரம் மற்றும் பேட்டரிகள் போன்ற துறைகளில் புதுமைகளை உருவாக்குகிறது. தொழில்துறை ஆராய்ச்சி மட்டுமல்லாமல், இந்த மையம் அனைத்து நிலைகளிலும் கல்விப் பட்டங்கள், பட்டப் பயிற்சிகள் வழங்குகிறது மற்றும் திறன் மையத்தை நடத்துகிறது. இது முன்னணி நிறுவனங்கள் அல்லது சிறப்பு நிறுவனங்களில் (Institutes of Eminence (IoE)) இந்தியா பின்பற்றக்கூடிய சாத்தியமான மாதிரியாக செயல்படலாம்.



ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான நமது மாணவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் படிக்க வெளிநாடு செல்கின்றனர். மாணவர் விசா விதிமுறைகளை நாடுகள் கடுமையாக்குவதை நாம் காண்கிறோம். கல்விக்குப் பிறகு குடியேற்ற வழிகளும் கடுமையாகி வருகின்றன. நாம் கல்விக்காக நாம் லட்சக்கணக்கான டாலர்களை செலவிடுகையில், ஒரு மாற்றாக இந்த உலகளாவிய பல்கலைக்கழகங்களை இந்தியாவில் வளாகங்களை அமைக்க அழைக்கலாம். உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் மலேசியாவில் வளாகங்களை அமைத்துள்ளன. நியூயார்க் பல்கலைக்கழகம் அபுதாபி மற்றும் ஷாங்காயில் வளாகங்களை அமைத்தது. இந்த பல்கலைக்கழகங்கள் அரசாங்கம், தொழில்துறை மற்றும் ஏற்கனவே உள்ள கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பாடுகளை நிறுவவும் அதிகரிக்கவும் ஒத்துழைத்தன. இது இந்தியா தனது திறமையான மாணவர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், பிற வளரும் நாடுகளிலிருந்து மாணவர்களைக் கொண்டுவரவும் உதவும்.


செயல்படுத்தும் பங்கை வகிப்பதைத் தவிர, உலகம் முழுவதும் அரசுகள் தொழில்நுட்பத்தின் முக்கிய வாங்குபவர்களாக மாறுவதன் மூலம் புத்தாக்க சூழலியலுக்கு ஊக்கம் அளித்துள்ளன. அமெரிக்காவின் பாதுகாப்பு மேம்பட்ட ஆராய்ச்சி திட்ட நிறுவனம் (Defence Advanced Research Projects Agency (DARPA)) இதற்கு சிறந்த உதாரணம். DARPA இணையம் மற்றும் GPS போன்ற முன்னேற்றங்களை ஊக்குவித்தது. ஒன்றிய அரசு இதேபோன்ற பங்கை வகிக்கலாம். குறிப்பாக, சமூக-பொருளாதார துறையில் புதுமைகளை உண்மையான தீர்வுகளாக மாற்றலாம். நமது சமூக-பொருளாதார சவால்களுக்கு பொது நோக்கத்துடன் கூடிய புதுமையான தீர்வுகள் தேவை. இந்தியா எதிர்காலத்தை வரையறுக்கும் தொழில்நுட்பங்களில் — செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், பச்சை ஹைட்ரஜன் (green hydrogen), மற்றும் அரைக்கடத்திகள் (semiconductors) — இந்த அணுகுமுறையின் மூலம் முன்னணி வகிக்க முடியும். பெரிய சவால்கள் இந்த அம்சத்தில் ஊக்க பங்கை வகிக்கலாம். முடிவுகள் அடிப்படையிலான டெண்டர்கள் மற்றும் மீள்வாங்கல் உறுதிமொழிகளுடன் கூடிய கட்டமைக்கப்பட்ட மானியங்களின் மூலம், அரசு வலுவான சந்தை சார்ந்த செய்திகளை அனுப்பலாம் மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதற்கான அபாயத்தைக் குறைக்கலாம்.


ஒரு உண்மையான புதுமைத் தலைவராக உருவெடுக்க, இந்தியா லட்சியத்துடன் செயல்பட வேண்டும். உலகத் தரம் வாய்ந்த திறமை, வலுவான உள்கட்டமைப்பு, வலுவான தொழில்-கல்வி இணைப்புகள் மற்றும் பொது கொள்முதல் ஆகியவை கட்டுமானத் தொகுதிகள் தெளிவாக உள்ளன. இந்த நடவடிக்கைகள் இந்தியா உலகளாவிய தொழில்நுட்பங்களின் நுகர்வோர் என்ற நிலையிலிருந்து எல்லைப்புற தீர்வுகளை உருவாக்குபவராக மாற உதவும். இந்தியாவின் புதுமை சுற்றுச்சூழல் அமைப்பை மாற்றுவதற்கு அரசாங்கக் கொள்கையின் வழிகாட்டுதல் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்கேற்பு இரண்டும் தேவைப்படுகின்றன. இது படிப்படியான மாற்றங்களுக்கான நேரம் அல்ல. நாம் தைரியமாக செயல்பட வேண்டும், மேலும் தனியார் தொழில்முனைவு இந்த மாற்றத்தின் மையத்தில் இருக்க வேண்டும்.


அமிதாப் காந்த் இந்தியாவின் G20 ஷெர்பா மற்றும் நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.



Original article:
Share: