இந்திய நகரங்களுக்கு பிரத்யேகமான நகர போக்குவரத்துக் குழு தேவையா? -ஜேக்கப் பேபி

 நகர்ப்புற போக்குவரத்து என்பது ஒரு தொழில்நுட்ப சவாலாக மட்டுமல்லாமல் அதில் ஒரு சமூக, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் கவலையாகவும் உள்ளது. ஆனால், ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையங்கள் (Unified Metropolitan Transport Authorities) மற்றும் அகில இந்திய நகர மற்றும் பிராந்திய திட்டமிடல் சேவை (All India Urban and Regional Planning Service) போன்ற முயற்சிகள் நகர்ப்புற போக்குவரத்து நிர்வாகத்தை சீர்திருத்துவதை எவ்வாறு நோக்கமாகக் கொண்டுள்ளன?


பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மக்களவையில் நகர்ப்புற இயக்கம் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பி, நகர்ப்புற போக்குவரத்துத் துறைக்கான சிறப்பு அகில இந்திய சேவை பணியாளர்களை உருவாக்க வேண்டும் என்று முன்மொழிந்தார். இந்த யோசனை முதல் பார்வையில் அதிகாரத்துவமாகத் தோன்றலாம். ஆனால், இது இந்திய நகரங்களில் நகர்ப்புற போக்குவரத்தை நிர்வகிப்பதற்கு யார் பொறுப்பு? என்ற ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது.


நகர்ப்புற போக்குவரத்து நிர்வாகம்


இந்திய நகரங்களில் உள்ள நகர போக்குவரத்தை அரசியல் ஆதரவற்ற அமைப்பு என்று கூறலாம். இது இந்திய அரசியல் அமைப்பில் உள்ள மூன்று பட்டியல்களில் (ஒன்றிய, மாநில மற்றும் பொதுப்பட்டியல்) எங்கும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. நகர்ப்புற திட்டமிடல் (urban planning) என்பது மாநிலப் பட்டியலில் உள்ளது. "நெடுஞ்சாலைகள்" மற்றும் "ரயில்வேகள்" ஒன்றியப் பட்டியலில் உள்ளது. நகர்ப்புற போக்குவரத்து இரண்டிலும் இடம்பெற்றுள்ளது.


1986ஆம் ஆண்டில், நகர்ப்புற போக்குவரத்துக்கான பொறுப்பு முறையாக நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது. இப்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திடம் (Ministry of Housing and Urban Affairs (MoHUA)) பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புற போக்குவரத்துக்கான முக்கிய அமைச்சகமாக, வரவிருக்கும் மெட்ரோ ரயில் திட்டங்களை மேற்பார்வையிட, வெகுஜன விரைவு போக்குவரத்து அமைப்புகளுக்கு (Mass Rapid Transit Systems (MRTS) சிறப்பு அதிகாரியை (Officer on Special Duty (OSD)) அமைச்சகம் நியமித்தது. 


இவர்கள் பொதுவாக மெட்ரோ அமைப்புகளில் ஆழமான திட்ட நிறைவேற்ற அனுபவம் கொண்ட மூத்த ரயில்வே பொறியாளர்கள் ஆவர். காலப்போக்கில், இது நகர போக்குவரத்தாக வளர்ந்தது. இந்தப் பதவியை பல அதிகாரிகள் வகித்தனர். இவர்கள் தேசிய நகர போக்குவரத்துக் கொள்கை (National Urban Transport Policy (2006)), மெட்ரோ கொள்கை (Metro Policy (2017) போன்ற கொள்கைகளை வழிநடத்துவதிலும், பல நகரங்களில் ஒன்றிய அரசு நிதியளித்த நகர போக்குவரத்து திட்டங்களை நிர்வகிப்பதிலும் முக்கியப் பங்கு வகித்தனர்.


நிலையான நகர்ப்புற போக்குவரத்துத் திட்டம் (Sustainable Urban Transport Project (GEF-SUTP)) போன்ற திட்டங்களின் மூலம் நகர திட்டமிடுபவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களிலும் அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.


இருப்பினும், இந்த தலையீடுகள் இருந்தபோதிலும், இந்திய நகரங்கள் இன்று நகராட்சி நிறுவனங்கள், மெட்ரோ ரயில் நிறுவனங்கள், மாநிலப் போக்குவரத்து நிறுவனங்கள் (State Transport Undertakings (STUs)), பிராந்திய போக்குவரத்து அலுவலகங்கள் (Regional Transport Offices (RTOs)) மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் என ஒவ்வொன்றும் வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் அதன் சொந்த தர்க்கம், தரவு மற்றும் முன்னுரிமைகளுடன் பகிரப்பட்ட பார்வை இல்லாமல் செயல்படுகின்றன.


நகர்ப்புற போக்குவரத்து பொறியியல், திட்டமிடல் அல்லது கொள்கை பின்னணியில் பயிற்சி பெற்ற வல்லுநர்கள் ஆலோசனைகள், கல்வியாளர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சிந்தனைக் குழுக்கள் என பல்வேறு துறைகளில் பரவியுள்ளனர். இவர்கள் மதிப்புமிக்க பங்களிப்புகளைச் செய்திருந்தாலும், ஒரு ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டமைப்பு இல்லாதது, நகரங்களில் நீண்டகால உத்திகளை தொகுத்து, பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பை எளிதாக்கும் மற்றும் கொள்கை கட்டமைப்பிற்கு தொடர்ச்சியைக் கொடுக்கக்கூடிய அர்ப்பணிப்புள்ள அதிகாரிகள் இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது.


இங்குதான் அர்ப்பணிப்புள்ள அகில இந்திய நகர்ப்புற போக்குவரத்து சேவை என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. இந்திய வனச் சேவை (Indian Forest Service) அல்லது இந்தியப் புள்ளியியல் சேவையைப் (Indian Statistical Service) போலவே, அத்தகைய பணியாளர்கள் போக்குவரத்துக் கொள்கை, திட்டமிடல், நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேலாண்மை ஆகியவற்றில் பயிற்சி பெற்ற நிபுணர்களைக் கொண்டுள்ளனர்.


ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகாரிகளின் (Unified Metropolitan Transport Authorities (UMTAs)) யோசனை தேசிய நகர்ப்புற போக்குவரத்துக் கொள்கை (2006), 12வது ஐந்தாண்டுத் திட்டத்தின் நகர்ப்புற போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் கொள்கை (2017) ஆகியவற்றால் நீண்டகாலமாக பரிந்துரைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த போக்குவரத்து நிர்வாகத்திற்கு முக்கிய நிறுவனங்களாக செயல்பட UMTAவின் தேவையை அவை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.


UMTA-களில் உள்ள சிக்கல்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் உதாரணங்கள்


தடையற்ற ஒருங்கிணைப்பு மற்றும் திறமையான நகர இயக்கத்தை உறுதி செய்ய டெல்லி அரசு ஒரு UMTA அமைக்க திட்டமிட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, போக்குவரத்துத் துறை ஒரு நகர போக்குவரத்துக் கொள்கையில் பணியாற்றுகிறது. இதன் கீழ், டெல்லி போக்குவரத்து நிகமம் மற்றும் டெல்லி மெட்ரோ ரயில் நிகமம் மற்றும் பிற போக்குவரத்து நிர்வாக அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்க ஒரு ஒருங்கிணைந்த அமைப்பு மற்றும் ஒரு பணிக்குழு அமைக்கப்படும்.


தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் அசாம் போன்ற பல மாநிலங்கள் தங்கள் பெருநகரங்களில் UMTA-களை நிறுவுவதற்கான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இருப்பினும், சில நகரங்களில் UMTA-கள் பல சிக்கல்களால் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றிற்கான முக்கிய காரணிகள்: 


— சட்ட தெளிவின்மைகள்.


— நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு வழிமுறைகள் இல்லாமை


— UMTAவின் அதிகார எல்லை, மற்றும்


— நிறுவன பிரதேச பாதுகாப்பு.


இந்த சூழலில், உலகம் முழுவதும் உள்ள பல நகரங்கள் ஒருங்கிணைந்த நகர போக்குவரத்து நிர்வாகத்தின் உதாரணங்களை வழங்குகின்றன. லண்டன், வான்கூவர், சிங்கப்பூர், பாரிஸ் போன்ற நகரங்கள் நகர போக்குவரத்தின் சிக்கல்களை கையாள நிபுணர்களுடன் கூடிய முன்னணி நிறுவனங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, லண்டன் போக்குவரத்து நிறுவனம் (Transport for London (TfL)) நகரத்தில் நகர்ப்புற போக்குவரத்தை நிர்வகிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் பொறுப்பாகும்.


பிரத்யேக பணியாளர் உதவ முடியுமா? 


பிரத்யேக பணியாளர் என்ற எண்ணம் முன்னெப்போதும் இல்லாதது அல்ல. உதாரணமாக, 2023ஆம் ஆண்டு நகர்ப்புற திட்டமிடலுக்கான உயர்மட்டக் குழு, தேசிய நகர திட்டமிடல் சட்டத்துடன் அகில இந்திய நகர்ப்புற மற்றும் பிராந்திய திட்டமிடல் சேவையை உருவாக்க பரிந்துரைத்தது. மேலும், நகர திட்டமிடலுக்கான தேசிய சட்டத்தையும் சேர்த்து. நகரங்களில் முழுநேரமாகப் பணியாற்றக்கூடிய மற்றும் நகர்ப்புறங்கள் எதிர்கொள்ளும் வளர்ந்துவரும் மற்றும் சிக்கலான பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் பயிற்சி பெற்ற நிபுணர்களின் குழுவை உருவாக்குவதே முக்கிய யோசனையாக இருந்தது, இது திறமை மற்றும் நீண்டகால நிலைத்தன்மையுடன் இருந்தது.


நகராட்சி ஆணையர்கள் தற்போது நகரங்களில் இந்தப் பொறுப்புகளில் பலவற்றை நிறைவேற்றினாலும், அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட பதவிக்காலம் மட்டுமே உள்ளது மற்றும் பொதுவாக நிபுணர்களைவிட பொதுவானவர்களாகவே இருக்கிறார்கள். நகர்ப்புற நிபுணர்களின் அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள் தொடர்ச்சி, மாநில திறன் மற்றும் தொழில்முறை திறன் ஆகியவற்றின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய முடியும்.


கூடுதலாக, நகர்ப்புற போக்குவரத்துக்கான உத்தேச அகில இந்திய சேவையானது உலகளாவிய உதாரணங்களில் இருந்து பெறலாம் மற்றும் இந்திய நகரங்களின் சிக்கல்களை பல்வேறு வழிகளில் நிவர்த்தி செய்வதற்கு ஏற்றவாறு அமைக்கலாம்:


— இந்த பணியாளர் படையைச் சேர்ந்த அதிகாரிகள் நகர அல்லது பெருநகர மட்டங்களில் நகர போக்குவரத்தின் கொள்கை, திட்டமிடல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் இயக்கத்தில் நிபுணத்துவத்தை வழங்க முடியும்.


— அவர்கள் நகர அரசாங்கங்களுக்கு ஆதரவளிக்கவும் UMTAs அமைக்கவும் நிர்வகிக்கவும் உதவவும் பல்வேறு நிறுவனங்கள் மத்தியில் ஒருங்கிணைப்பை வளர்க்கவும் முடியும்


— பணியாளர் மற்றும் பயிற்சி துறையிலிருந்து (Department of Personnel and Training (DoPT))  நிர்வாகப் பயிற்சி மற்றும் ஆதரவு பெற முடியும்.


— தொழில்நுட்பத் திறன்களுக்கு கூடுதலாக, உள்ளூர் தலைவர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் ஒத்துழைப்பை உருவாக்குவதில் கவனம் மிக முக்கியமாக இருக்கும், மற்றும்


— அத்தகைய பணியாளர் படையின் வெற்றி UMTAs போன்ற அமைப்புகளை அமைக்க நகர்ப்புற உள்ளூர் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் 74வது அரசியலமைப்பு திருத்தத்தை செயல்படுத்துவதில் மிகவும் சார்ந்துள்ளது.


அதேசமயம், ஒரு எச்சரிக்கை குறிப்பு. நிர்வாக அமைப்பு ஏற்கனவே சவால்களை எதிர்கொள்கிறது. இவை பெரும்பாலும் நல்ல நிர்வாகத்தை செயல்படுத்துவதற்கு பதிலாக தடுக்கின்றன. தற்போதுள்ள இந்த சிக்கல்களை சரிசெய்யாமல் ஒரு புதிய சேவையைச் சேர்த்தால், அது இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.


மேலும், நகர்ப்புற போக்குவரத்து என்பது ஒரு பொறியியல் பிரச்சனை மட்டுமல்ல. இது ஒரு ஆழமான சமூக, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனையாகும். எனவே, எந்தவொரு நிறுவன சீர்திருத்தமும் உள்ளூர் சூழல், தகவமைப்பு மற்றும் குடிமக்களின் பங்கேற்பு ஆகியவற்றிற்கு பதிலளிக்க வேண்டும்.


இறுதியில், அகில இந்திய நகர்ப்புற போக்குவரத்து சேவையின் யோசனை, இந்திய நகரங்களில் உள்ள அனைத்து போக்குவரத்து சிக்கல்களையும் தீர்க்காது. இருப்பினும், நகரம் அல்லது பெருநகர மட்டத்தில் நகர்ப்புற போக்குவரத்து திட்டமிடலில் திறன் மற்றும் தொழில்முறை நிபுணத்துவம் ஆகியவற்றின் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முதல் படியாக இது பார்க்கப்படலாம்.



Original article:

Share:

நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது. ஆனால், ஆணையம் மௌனம் காக்கிறது -சஞ்சய் ஹெக்டே

 பீகாரின் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) குடிமக்கள், பொது சமூகம் மற்றும் பாராளுமன்றத்திற்கு ஒரு முக்கிய தருணமாகும். இது வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாப்பது குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது. "விழிப்புணர்வு (vigilance") என்ற காரணத்தைப் பயன்படுத்தி, இந்த செயல்முறை உலகளாவிய வாக்களிக்கும் உரிமைகளை பலவீனப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.


SIR மீதான விசாரணைகளின்போது உச்சநீதிமன்றம் முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. புதிய ஆவணங்கள் திடீரென்று ஏன் தேவைப்பட்டன? இப்போது ஏன்? இந்த ஆவணங்களை வழங்க முடியாத மில்லியன் கணக்கானவர்களின் நிலை என்ன? இந்திய தேர்தல் ஆணையம் (ECI) இந்த செயல்முறை ஒரு வழக்கமான தொழில்நுட்ப புதுப்பிப்பு மட்டுமே என்று பதிலளித்தது. ஆனால், உண்மையான நிலைமை மற்றும் கொள்கையின் விளைவுகள் வேறுவிதமாகக் காட்டுகின்றன.


பீகாரில் உள்ள சிறப்பு தீவிர திருத்தம் (SIR) ஒவ்வொரு வாக்காளரும் ஒரு மாதத்திற்குள் குடியுரிமைக்கான புதிய ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது. அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம். பட்டியலை துல்லியமாக வைத்திருப்பதே இதற்குக் காரணம். ஆனால் உண்மையில், இது பலரை விடுபட வழிவகுக்கும். இது வெறும் வழக்கமான பணி அல்ல. குடிமக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதில் இது ஒரு பெரிய மாற்றத்தை பிரதிபலிக்கிறது. அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு என்று கருதுவதிலிருந்து, அவர்கள் அதை நிரூபிக்காவிட்டால் அவர்கள் குடிமக்கள் இல்லை என்று கருதுவது வரை இந்த நடைமுறை செயலில் இருக்கும். இது அரசியலமைப்பின் வயதுவந்தோர் வாக்குரிமை என்ற கருத்துக்கு  எதிரானது.



அரசியலமைப்பு வாக்குறுதிகளை புறக்கணித்தல்


இந்தியா ஒரு குடியரசாக மாறியபோது, அது ஒரு துணிச்சலான நடவடிக்கையை எடுத்தது. அது வயது வந்தோர் அனைவரின் கல்வியறிவு, வருமானம், சாதி அல்லது பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. அரசியலமைப்பு சபை இதைப் பற்றி விரிவாக விவாதித்தது. நாடு தயாராக இருக்கிறதா என்று சில உறுப்பினர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் போன்ற தலைவர்கள் சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்தைவிட அரசியல் சமத்துவம் முதலில் வர வேண்டும் என்று வாதிட்டனர்.


இந்த யோசனையை இந்தியாவின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் சுகுமார் சென் (1950–1958) செயல்படுத்தினார். 173 மில்லியன் பெரும்பாலும் படிப்பறிவில்லாத வாக்காளர்களுடன், மக்கள் வாக்களிக்க எளிய வழிகளை அவர் உருவாக்கினார். அவர் சின்னங்களையும் பின்பற்ற எளிதான செயல்முறைகளையும் அறிமுகப்படுத்தினார். 


இதற்கு நேர்மாறாக, 26வது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் கீழ் பீகாரின் வாக்காளர் பட்டியலின் தற்போதைய திருத்தம் மிகவும் வித்தியாசமானது. இது பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் போன்ற அரிய ஆவணங்களைக் கேட்கிறது. அவை பெரும்பாலான மக்களிடம் இல்லை. ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகள் போன்ற பொதுவான ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதன் விளைவாக, பீகாரில் 65 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வாக்குரிமையை இழக்க நேரிடும்.


இது ஒரு முறை மட்டுமே நடக்கும் நிகழ்வு அல்ல. இதேபோன்ற ஒரு செயல்முறை அசாமிலும் நடந்தது, அங்கு லுங்கி அணிந்த, வங்காள மொழி பேசும் முஸ்லிம் குடியிருப்பாளர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் "D-வாக்காளர்கள்" (சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள்) என்று முத்திரை குத்தப்பட்டனர். இது ஆயிரக்கணக்கான மக்களை திறம்பட நாடற்றவர்களாக மாற்றியது. பலர் வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயங்களில் தங்கள் குடியுரிமையைப் பாதுகாக்க வேண்டியிருந்தது, நட்பற்ற அதிகாரிகளைக் கையாண்டனர் மற்றும் அவர்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க மிகக் குறைந்த வாய்ப்பு கிடைத்தது. சிலர் வெளிநாட்டினர் என்று அறிவிக்கப்பட்டனர். மேலும், எந்த நாடும் அவர்களை ஏற்றுக்கொள்ளாததால், அவர்கள் இந்தியாவின் எல்லைகளைத் தாண்டி தேவையற்ற மக்களைப் போல வெளியேற்றப்பட்டனர்.


இப்போது, பீகார் அதே தவறை மீண்டும் செய்யும் அபாயத்தை எதிர்கொள்கிறது. இது ஒரு ஏழை மாநிலம், அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. மேலும், வலுவான உள்கட்டமைப்பு இல்லை. மழைக்காலத்தில் கடுமையான ஆவண காலக்கெடுவை நிர்ணயிப்பது மோசமான திட்டமிடல் ஏழை மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்கள் வாக்களிக்க முயற்சிப்பதற்கு இது ஒரு கடுமையான தடையாக மாறுகிறது. பொறுப்பு இப்போது மாறிவிட்டது: ஒருவர் சொந்தமில்லை என்பதை நிரூபிக்கும் அரசு, மக்கள் தாங்கள் சொந்தம் என்பதை நிரூபிக்க வேண்டும். இது ஒரு சிறிய தொழில்நுட்ப மாற்றமாகத் தோன்றலாம். ஆனால், ஜனநாயகம் மற்றும் நியாயத்தில் அதன் தாக்கம் மிகப்பெரியது.


வரலாற்று பாடங்கள் மற்றும் எச்சரிக்கைகள்


இந்த நிலைமை அமெரிக்க வரலாற்றில் ஒரு தொந்தரவான காலத்தை  ஜிம் குரோ சகாப்தத்தை (Jim Crow era) நினைவூட்டுகிறது. அப்போது ஆப்பிரிக்க-அமெரிக்க வாக்காளர்கள் எழுத்தறிவு சோதனைகள், வரிகள் மற்றும் சிக்கலான நடைமுறைகள் போன்ற நியாயமற்ற விதிகள் மூலம் வாக்களிப்பதைத் தடுத்தனர். இந்த விதிகள் சட்டப்பூர்வமாகத் தோன்றின. ஆனால், மக்கள் வாக்களிப்பதைத் தடுப்பதற்காகவே இருந்தன. இதைச் சரிசெய்து வாக்களிப்பதை உண்மையிலேயே சமமாக்க 1965-ஆம் ஆண்டு வாக்களிக்கும் உரிமைச் சட்டம் போன்ற முக்கிய நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் புதிய சட்டங்கள் தேவைப்பட்டன.


இந்தியாவிற்கும் சட்டப் பாதுகாப்புகள் உள்ளன. எம்.டி. ரஹீம் அலி vs அசாம் மாநிலம் (Md. Rahim Ali vs State of Assam) (2024) மற்றும் லால் பாபு ஹுசைன் vs தேர்தல் பதிவு அதிகாரி (Lal Babu Hussein vs Electoral Registration Officer) (1995) போன்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவுபடுத்தியுள்ளன. சரியான சட்ட நடவடிக்கைகள் இல்லாமல் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடியாது. நியாயமான செயல்முறை இல்லாமல் குடியுரிமையை பறிக்க முடியாது. ஆனால் இப்போது, பலவீனமான மக்களை மீண்டும் ஒரு கடினமான மற்றும் நியாயமற்ற அமைப்பின் வழியாகச் செல்ல வைக்கிறோம்.


விசாரணையின்போது, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளின் மனித தாக்கம் குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான கேள்விகளைக் கேட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிய புரிதலைக் காட்டாமல் முற்றிலும் தொழில்நுட்ப வழியில் பதிலளித்தது. அது நிஜ வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குப் பதிலாக விதிகள் மற்றும் காலக்கெடுவில் கவனம் செலுத்தியது.


தேர்தல் ஆணையம் துல்லியமான வாக்காளர் பட்டியலை வைத்திருப்பதைவிட அதிகமாகச் செய்ய வேண்டும். அதன் வேலை சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்வதாகும். அதாவது மக்கள் வாக்களிக்க எளிதான முறையை உருவாக்க வேண்டுமே தவிர அதை கடினமாக்குவது அல்ல. தற்போது, ஆணையம் இந்தக் கடமையில் தவறி வருகிறது. உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சினையைக் கவனித்துள்ளது, ஆனால் அது மென்மையான எச்சரிக்கைகளுக்கு அப்பால் செல்ல வேண்டும். மில்லியன் கணக்கான மக்களின் வாக்களிக்கும் உரிமைகள் ஆபத்தில் இருப்பதால், வலுவான நடவடிக்கை தேவைப்படலாம்.


இந்தப் பிரச்சினை தொடர்ந்தால், சரியான ஆவணங்களைக் கொண்டவர்கள்  பெரும்பாலும் நகரத்தைச் சேர்ந்தவர்கள், படித்தவர்கள் மற்றும் சம்பளம் வாங்குபவர்கள்- மட்டுமே வாக்களிக்க முடியும். ஏழைகள், வீடற்றவர்கள் மற்றும் ஆவணமற்றவர்கள் வெளியேறலாம். இது நாட்டை இரண்டு குழுக்களாகப் பிரிக்கக்கூடும்: வாக்களிக்கும் அதிகாரம் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள். அரசியல் தலைவர்கள் எண்ணும் வாக்காளர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துவார்கள். அதே நேரத்தில் எண்ணாதவர்களை புறக்கணிப்பார்கள். இந்தப் பிரச்சினை வாக்காளர் பட்டியல்களை விடப் பெரியது  இது அதிகாரத்தைப் பற்றியது. யார் அதைப் பெறுகிறார்கள், யார் அதை வைத்திருக்கிறார்கள், யார் அதிலிருந்து விலக்கப்படுகிறார்கள் என்பது பற்றியது.


அமைதியான அவசரநிலை


அவசரநிலையில் இருப்பது போல் உணர தெருக்களில் டாங்கிகள் தேவையில்லை அது ஏற்கனவே அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இல்லாதது, காலக்கெடு தவறவிடப்பட்டது மற்றும் பதிலளிக்கப்படாத கேள்விகளில் இது வெளிப்படுகிறது. அரசாங்கம் குடியுரிமையை ஒரு அடிப்படை உரிமையாகக் கருதுவதற்குப் பதிலாக ஒரு சிறப்பு சலுகையாகக் கருதும்போது இது நிகழ்கிறது. நீதிமன்றங்கள் மட்டுமல்ல, குடிமக்கள், பொது சமூகம் மற்றும் பாராளுமன்றமும் கூட பேச வேண்டிய நேரம் இது. வாக்களிக்கும் உரிமை காகித வேலைகளுக்கு அல்ல, மக்களுக்கு சொந்தமானது என்பதை நாம் நமக்கு நினைவூட்டிக் கொள்ள வேண்டும். தெருக்கள், சமூகம் மற்றும் உச்சநீதிமன்றம் அனைத்தும் இந்தியா அதன் அனைத்து மக்களுக்கும் சொந்தமானது என்று தெளிவாகக் கூற வேண்டும். மேலும், அவர்கள் பாதுகாப்பை நாடும்போது மதம் அல்லது செல்வத்தை வைத்து யாரையும் மதிப்பிடுவதில்லை.


வரலாற்றாசிரியர் ஆர்னிட் ஷானி, தனது "How India Became Democratic" என்ற புத்தகத்தில், உலகளாவிய வாக்களிக்கும் உரிமைகள் வெறும் தொழில்நுட்ப முடிவு அல்ல. அவை ஒரு துணிச்சலான, தொலைநோக்குப் பார்வை கொண்ட நடவடிக்கை என்று விளக்குகிறார். ஒரு காலனித்துவ அமைப்பை ஜனநாயகமாக மாற்ற அதிகாரிகளும் சாதாரண மக்களும் இணைந்து பணியாற்றினர். கடுமையான சோதனைகள் என்ற பெயரில் அந்த முன்னேற்றத்தை ரத்து செய்யக்கூடாது.


தேர்தல்கள் தேர்வுகள் போன்றவை அல்ல என்பதை தேர்தல் ஆணையம் நினைவில் கொள்ள வேண்டும். அவை உள்ளடக்கத்தைப் பற்றியது. ஒரு ஜனநாயகத்தில், நீங்கள் ஒரு குடிமகன் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் ஒரு குடிமகன் என்பதால் வாக்களிக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் உங்களிடம் இருப்பதால் அல்ல, அரசியலமைப்புச் சட்டம் அவ்வாறு கூறுவதால் நீங்கள் ஒரு குடிமகன்.


வாக்கு ஒரு வெறும் ஆவணம் அல்ல. அது ஒரு அறிவிப்பு. நாம் அனைவரும் சமமானவர்கள். ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு உள்ளது, ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு உள்ளது. 140 கோடி வாக்குகளில் எனக்கு ஒரு வாக்கு இருந்தாலும், அது குடியரசில் சமமான பங்கு, அதில் நானும் ஒவ்வொரு இந்தியரும் சமமான பங்கேற்பாளர்கள். அந்த உரிமையும் பங்கேற்பு உரிமையும் தான் இப்போது ஆபத்தில் உள்ளது.


சஞ்சய் ஹெக்டே இந்திய உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஆவார்.



Original article:

Share:

புதிய கட்டம் : NISAR திட்டம் குறித்து . . .

 நாசா மற்றும் இஸ்ரோவின் பத்தாண்டு கால இருதரப்பு முயற்சியை நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (NASA-ISRO Synthetic Aperture Radar (NISAR)) முடிவுக்குக் கொண்டு வந்தது.

GSLV-F16 பயணம் ஜூலை 30 அன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து புறப்பட்டு, நாசா-இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார் (NISAR) செயற்கைக் கோளை சூரிய ஒத்திசைவு புவி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இந்த ஏற்றம் ஒரு தசாப்த கால இருதரப்பு முயற்சியின் உச்சமாக அமைந்து, உலகளாவிய புவி கண்காணிப்பு ஒத்துழைப்பில் புதிய கட்டத்தைத் திறந்தது. NISAR என்பது 2.8 டன் எடையுள்ள கண்காணிப்பு செயற்கைக் கோளாகும், இது நாசாவால் உருவாக்கப்பட்ட L-பேண்ட் ரேடாரையும், இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட S-பேண்ட் ரேடாரையும் ஒருங்கிணைக்கிறது — இது முதல் முறையாகும். இவை NISAR-ஐ மேகங்கள் மற்றும் தாவரங்கள் வழியாகவும் சில சென்டிமீட்டர் மாற்றங்களை மட்டுமே கண்டறிய உதவுகின்றன. NISAR, நிலப்பரப்பு மாற்றங்கள், பனியாறு ஓட்டம், உயிரித்தொகுதி, நிலப்பயன்பாடு மாற்றங்கள் மற்றும் கடல் பனி இயக்கவியல் ஆகியவற்றின் மீது இலவசமாக அணுகக்கூடிய தரவை வழங்கும். அதன் விடியல்-மாலை சுற்றுப்பாதை ஒவ்வொரு 12 நாட்களுக்கும் மீண்டும் வரும்போது, அதன் ரேடார்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஒளி நிலைகளில் அதே புள்ளியை மீண்டும் பார்வையிட முடியும். இந்த வடிவமைப்பு, L-பேண்டில் 50%க்கும் மேற்பட்ட செயல்பாட்டு சுழற்சியுடன் இணைந்து, புவியியல் செயல்முறைகளை அளவிடக்கூடிய நெருக்கமான நேரத் தொடர் கண்காணிப்புகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. உண்மையில், அதன் பல்வேறு பொறியியல் முதல்முயற்சிகள், NISAR-ன் அசாதாரணமான பரந்த அறிவியல் நோக்கத்திற்கு வழிவகுக்கின்றன: ஒரே சுற்றுப்பாதை சுழற்சியில் மாங்குரோவ் பரப்பளவு, நகர்ப்புற நிலச்சரிவு, பயிர்-மண் தொடர்புகள் மற்றும் துருவ பனி அடுக்குகளில் பிளவு விகிதங்களை மேப்பிங் செய்யும். இதன் தரவு, செண்டாய் கட்டமைப்பின் கீழ் பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கு உதவலாம் மற்றும் IPCC மாதிரிகளை மேம்படுத்தலாம்.

இஸ்ரோவுக்கு, GSLV Mk II ராக்கெட்டில் ஒரு முக்கிய பயன்பாட்டு உபகரணத்தை பறக்கவிடுவது, ஒரு காலத்தில் அதன் ஆரம்பகால தோல்விகளால் “குறும்பு பையன் (naughty boy)” என்று அழைக்கப்பட்ட ஒரு வாகனத்திற்கு குறிப்பிடத்தக்கது. இஸ்ரோ-நாசா கூட்டாண்மை இரு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப பரிமாற்றத்தை எளிதாக்கியிருக்கும். எஸ்-பேண்ட் ரேடாரை உருவாக்குவது, முந்தைய இந்திய செயற்கைக்கோள்களைவிட ரேடியோ அலைவரிசை எலக்ட்ரானிக்ஸ், வெப்ப நிலைத்தன்மை மற்றும் தரவு பரிமாற்றத்தில் மிகவும் கடுமையான சகிப்புத்தன்மைகளை கோரியிருக்கும். இராஜதந்திர கண்ணோட்டத்தில், இந்த ஏவுதல், இந்தியாவால் உயர்மதிப்பு வன்பொருள் மற்றும் கடுமையான ஒருங்கிணைப்பு அட்டவணைகளை நம்பகத்தன்மையுடன் கையாள முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது, இருப்பினும் சமமான அடிப்படையில் கூட்டு பணிகளை வடிவமைக்க கற்றுக்கொள்வது இன்னும் தொடர்கிறது. 12 மீட்டர் பிரதிபலிப்பான், கா-பேண்ட் டவுன்லிங்க் மற்றும் பறக்கும் மென்பொருள் அடுக்கின் பெரும்பகுதி இறக்குமதி செய்யப்பட்டவை, மேலும் முக்கிய வடிவமைப்பு மதிப்பீடுகளை நாசா வழிநடத்தியது. சமநிலையை அடைய, மேம்பட்ட பொருட்கள், ஆழமான விண்வெளி தகவல் தொடர்பு மற்றும் அமைப்பு பொறியியல் ஆகியவற்றில் பெரிய உள்நாட்டு முதலீடுகள் மற்றும் எதிர்காலப் பன்னாட்டு பணிகளின் அறிவியல் நோக்கங்களை வகுப்பதில் இந்தியாவின் முந்தைய ஈடுபாடு தேவைப்படும். நிசாரின் தரவு டவுன்லிங்க் விகிதமும் ஒரு சவாலை முன்வைக்கிறது. இஸ்ரோ தனது கா-பேண்ட் தரை வலையமைப்பை விரிவாக்க வேண்டும், மேகக் கணினி அடிப்படையிலான செயலாக்கத்தை தானியங்குபடுத்த வேண்டும், மற்றும் மாநில அமைப்புகள் தரவை சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டுமானால், பகுப்பாய்வுக்கு தயாரான தயாரிப்புகளை மணிநேரங்களுக்குள் வெளியிட வேண்டும். நேரத்திற்கு ஏற்ப தரவை தொடர்ந்து வழங்குவது, 2030-க்கு முன் தொடர்ச்சியான SAR விண்கலங்களை அங்கீகரிப்பது மற்றும் தனியார் பகுப்பாய்வை ஊக்குவிக்கும் அதே வேளையில் முக்கியமான காட்சிகளை பாதுகாக்கும் தரவு பகிர்வு விதிகளை இறுதி செய்வது ஆகியவற்றைப் பொறுத்திருக்கும். இந்த இடைவெளிகளை நிவர்த்தி செய்வது, நிசாரின் முழுத் திறனை இந்தியாவில் எவ்வளவு முழுமையாக உணர முடியும் என்பதை தீர்மானிக்கும்.


Original article:

Share:

மாநில நிதி நிலைமைகள் கவலைக்கிடமான போக்கை காட்டுகின்றன.

 மாநிலங்கள் தங்கள் நிலுவையில் உள்ள கடனைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.


கோவிட்-க்குப் பிறகு ஒன்றிய அரசின் நிதி ஒருங்கிணைப்பு முயற்சிகளின் முன்னெடுப்பு, பெரும்பாலான மாநிலங்களால் ஈடுசெய்யப்படவில்லை. மருத்துவச் செலவுகள் மற்றும் பலவீனமான பொருளாதாரத்தை ஆதரிப்பு ஆகியவை நிதியாண்டு 2021 மற்றும் 2022 நிதியாண்டுகளில் அதிக பற்றாக்குறையை ஏற்படுத்தியது. ஆனால், 2030-ம் ஆண்டுக்குள் அதன் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை கோவிட்-க்கு முந்தைய நிலைகளுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது. மேலும், 2022 முதல் நிதிநிலைக்கு வெளியே கடன் வாங்குவதை நிறுத்தியுள்ளது. பல மாநிலங்கள் இதேபோன்ற விவேகத்தைக் காட்டவில்லை. மாநிலங்களில் கடன் அளவுகள் இன்னும் அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில், பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்து கவலைகள் உள்ளன. சுகாதாரம் மற்றும் கல்விக்கு செலவிடுவதற்குப் பதிலாக, மாநிலங்கள் அதிக இலவசங்களை வழங்குகின்றன.


நடந்துகொண்டிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட தரவு, மாநில அரசுகள் நிதியாண்டு 2025-ம் ஆண்டில் நிதிநிலைக்கு வெளியே கடன்களில் (அரசு நிறுவனங்களால் எடுக்கப்பட்ட கடன்கள்) 38 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன, இது ₹29,335 கோடியாக உள்ளது. மாநில பொதுத்துறை நிறுவனங்கள் எடுத்த கடன்களுக்கு மாநில அரசுகள் வழங்கும் உத்தரவாதங்களும் அதிகமாகவே உள்ளன. பெரும்பாலான மாநிலங்கள் முந்தைய ஆண்டைவிட FY26-ல் அதிக சந்தை கடன் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளன. FY22 முதல், ஒன்றிய அரசு மாநிலங்களின் இந்த நிதிநிலை அறிக்கை அல்லாத கடன்களை மொத்த மாநில கடன்களுடன் சேர்த்து வருகிறது. இந்த நிதிநிலை அல்லாத கடன்கள் கோவிட் தாக்கத்தின்போது, உச்சமான ₹67,181 கோடியிலிருந்து குறைந்திருந்தாலும், கடந்த நிதியாண்டில் அதிகரிப்பு காணப்பட்டது. இந்த உயர்வு, மாநிலங்கள் தங்கள் வருவாய் அனுமதிக்கும் அளவைவிட அதிகமாக செலவிடுகின்றன என்பதைக் குறிக்கிறது. தற்செயல் பொறுப்புகளான உத்தரவாதங்கள், மொத்த கடன் சுமையையும் அதிகரிக்கின்றன. தெலுங்கானா, ஆந்திரா மற்றும் இராஜஸ்தான் போன்ற சில மாநிலங்கள் தங்கள் மாநில GSDP-யில் 8-15 சதவீதத்திற்கு சமமான உத்தரவாதங்களை வழங்கியுள்ளன.


உத்தரவாதங்களைக் கணக்கிடாமல்கூட, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மொத்த கடன்-GSDP விகிதம் FY25-ல் 28.8 சதவீதமாக இருந்தது என்று RBI-ன் மாநில நிதி அறிக்கை தெரிவிக்கிறது. மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஒடிசா உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே விருப்பமான 25 சதவீத அளவைவிடக் குறைவான கடன்-GSDP விகிதத்தைக் கொண்டுள்ளன. பஞ்சாப், பீகார், மேற்கு வங்கம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் 39-52 சதவீத விகிதங்களில் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்த கடன்களைக் கொண்டுள்ளன. பெரிய மாநிலங்களில் நான்கில் மூன்று பங்கிற்கும் அதிகமானவை 2026 நிதியாண்டில் அதிக சந்தைக் கடன்களுக்கு பட்ஜெட் செய்வதால், கடனைக் கட்டுப்படுத்துவது பெரும்பாலான மாநிலங்களுக்கு முன்னுரிமையாக இல்லை என்று தெரிகிறது. அதிகரித்து வரும் வட்டி செலவுகள் வளர்ச்சி மற்றும் மூலதன செலவினங்களுக்கு கிடைக்கும் பணத்தைக் குறைக்கின்றன. எனவே, மாநிலங்களின் நிலுவையில் உள்ள கடனைக் குறைப்பது அவசரமானது. வரிவருவாயைத் திரட்டுவதில் மாநிலங்கள் குறைவான நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளன என்பது உண்மைதான் என்றாலும், அவை வரி அல்லாத வருவாயை உயர்த்துவதற்கான வழிகளை ஆராய வேண்டும். மாநில பயன்பாட்டு சேவைகளுக்கான மானியங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். 2025 நிதியாண்டில் பணப் பரிமாற்றத் திட்டங்களுக்கு செலவிடப்படும் ₹1 லட்சம் கோடிக்கும் இது பொருந்தும். அதேபோல், 'பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு' (old pension scheme) மீண்டும் மாறுவது, அதைத் தேர்ந்தெடுத்த மாநிலங்களுக்கு இறுதியில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.


வருவாய் பக்கத்தில், 2026-ம் நிதியாண்டுக்குப் பிறகு ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி முடிவடையக்கூடும் என்பது மாநில பட்ஜெட்டுகளை பாதிக்கும். இருப்பினும், மாநிலங்களுக்கு கனிம உரிமைகளுக்கு வரி விதிக்கும் அதிகாரத்தை உறுதி செய்து, இந்த வரியிலிருந்து பின்னோக்கிய கோரிக்கையை வசூலிக்க உச்ச நீதிமன்றத்தின் முடிவு சில மாநிலங்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. மொத்தத்தில், மாநிலங்கள் தங்கள் செலவினங்களின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் தூய்மையான பரப்பரப்பு நடவடிக்கைகளை மெதுவாக்க வேண்டும்.



Original article:

Share:

இந்தியா பயனுள்ள வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. -தீபன்ஷு மோகன்

 சமீபத்திய வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள், இந்தியாவின் போராடும் தொழிலாளர் தொகுப்பின் நிலையற்ற தன்மை, முறைசாரா தன்மை மற்றும் கண்ணுக்குத் தெரியாத யதார்த்தங்களை மறைக்கின்றன.


ஜூலை 24, 2025 அன்று, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ பதிலைச் அளித்தது. இதில், 2023-24-ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த வேலைவாய்ப்பு 64.33 கோடியாக அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டது. இது 2017-18 ஆம் ஆண்டில் 47.5 கோடியாக இருந்தது. இதன் பொருள் கடந்த பத்தாண்டுகளில் 17 கோடி இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.  முதல் பார்வையில், இந்த எண்ணிக்கையானது வியத்தகு ஒன்றாகத் தெரிகிகிறது. ஆனால் வேலைவாய்ப்பு தரவுகளில் ஏற்பட்ட இந்த அதிகரிப்பின் உண்மையான தன்மை, வடிவம் மற்றும் அமைப்பு பற்றிய பல விவரங்களை இது மறைக்கிறது.


இந்த பெயரளவிலான புள்ளிவிவர அதிகரிப்புக்கு வழங்கும் எந்தவொரு ஆறுதலும் ஒரு நிபந்தனையுடன் வருகிறது. இந்த எண்ணிக்கை வீட்டு கணக்கெடுப்புகளிலிருந்து (household surveys) பெறப்படவில்லை. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியின் KLEMS தரவுத்தளத்திலிருந்து பெறப்பட்டது. இந்த தரவுத்தளம் ஒரு பெரிய பொருளாதார மாதிரி. இது தனிப்பட்ட தொழிலாளர்களை நேரடியாகக் கணக்கிடுவதில்லை. அதற்குப் பதிலாக, வெவ்வேறு துறைகளில் உற்பத்தி செய்யத் தேவையான உழைப்பின் அளவை இது மதிப்பிடுகிறது.


ஊதியம் பெறாத வேலை


இந்த கட்டமைப்பில், வேலைவாய்ப்பு நேரடியாகக் கவனிக்கப்படாமல் ஊகிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சரக்குகளை நிர்வகிக்க உதவும் ஒரு கடைக்காரரின் ஊதியம் பெறாத மகளை வேலை செய்பவர்களாகக் கணக்கிடலாம். ஒரு ஏக்கர் நிலத்தை மட்டுமே பயிரிடுகின்ற ஒரு சிறு விவசாயியையும் வேலை செய்பவர்களாகக் கணக்கிடலாம். இதேபோல், உள்ளூர் சந்தைக்காக வீட்டில் துணிகளைத் தைக்கும் ஒரு பெண்ணையும் வேலை செய்பவராகக் கணக்கிடப்படலாம். இந்த மாதிரியின் கணக்கியல் தர்க்கத்திற்குள் அவர்களின் வேலையின் உற்பத்தித் திறன் கொண்டதாகக் கருதப்பட்டால் இது நிகழ்கிறது.


ஒருவர் ஊதியமில்லா வேலையை வேலைவாய்ப்பு உருவாக்கமாகக் கருதினால் (அல்லது ஊகித்தால்), தற்போதைய அரசாங்கத்தின் முறையான மதிப்பீட்டில் உள்ளபடி, நமது பெருமளவிலான ‘வேலைவாய்ப்பு’ உருவாக்கத்தின் புரிதலில் ஏதோ ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது.


இது KLEMS மாதிரியில் ஒரு குறைபாடு அல்ல. ஆனால், அனைத்து பேரியல்-தரவுகளும் அதை உருவாக்கப் பயன்படுத்தப்படும் ஆரம்பகாலத்தைப் பொறுத்தது என்பதைக் காட்டுகிறது. KLEMS மாதிரி (இது மூலதனம், உழைப்பு, ஆற்றல், பொருள் மற்றும் சேவைகள் உள்ளீடுகளைக் குறிக்கிறது) வளர்ச்சி எவ்வாறு நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ள பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், இது தொழிலாளர் சந்தை நிலைமைகளை நேரடியாக அளவிடுவதில்லை. இருப்பினும், தரவை மதிப்பிடுவதில் அல்ல, அவற்றை விளக்குவதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது மற்ற பெரிய பொருளாதார நிகழ்வுகளை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதைப் பாதிக்கிறது.


யார் எந்த நிலைமைகளின் கீழ், எவ்வளவு ஊதியத்திற்காக அல்லது எந்த நிலைத்தன்மையுடன் வேலை செய்கிறார்கள் என்பதை பொருட்படுத்தவில்லை. இது மொத்த தொழிலாளரின் உள்ளீட்டைக் கணக்கிடுகிறது. முறையான மற்றும் முறைசாரா, ஊதியம் மற்றும் ஊதியம் பெறாத, பாதுகாப்பான மற்றும் நிலையற்ற வேலைகளை ஒரே எண்ணிக்கையில் இணைக்கிறது.


இப்போது இதை இந்தியாவின் முதன்மை வீட்டு வேலைவாய்ப்பு கணக்கெடுப்பான, காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்புடன் (Periodic Labour Force Survey (PLFS)) ஒப்பிடும்போது, இது மக்களிடம் அவர்களின் வேலை நிலை குறித்து நேரடியாகக் கேட்கப்படுகிறது. PLFS 2023-24-ன் படி, தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 58.2% ஆகும். இந்த சதவீதத்தை சுமார் 1.1 பில்லியன் மக்களின் மதிப்பிடப்பட்ட உழைக்கும் வயது மக்கள்தொகைக்கு நாம் பயன்படுத்தினால், KLEMS-ஆல் அறிவிக்கப்பட்ட மொத்தத்திற்கு நெருக்கமான ஒரு எண்ணைப் பெறுகிறோம். ஆனால் இந்த ஒற்றுமை தவறாக வழிநடத்தும். இரண்டு எண்களும் வெவ்வேறு முறைகளிலிருந்து வருகின்றன. இதன் காரணமாக, அவற்றை ஒப்பிடும்போது முக்கியமான விவரங்கள் தொலைந்து போகின்றன.


உண்மையான கேள்வி என்னவென்றால், 64 கோடி மக்கள் சில மாதிரியின் வரையறையின் அடிப்படையில் "வேலை செய்கிறார்கள்" என்பது மட்டுமல்ல. வேலை அர்த்தமுள்ளதா, பாதுகாப்பானதா, ஊதியம் பெறுகிறதா மற்றும் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதா என்பதுதான். அல்லது, மக்கள் அழுத்தத்தின் கீழ் வேலை செய்யும், அவர்களின் முயற்சிகள் தரவுகளில் மறைக்கப்பட்டிருக்கும், மேலும் இது தவறாக முன்னேற்றமாகக் கருதப்படும் ஒரு பெரிய பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகுமா?


இது இரண்டு அவசர கேள்விகளுக்கு நம்மைக் கொண்டுவருகிறது. முதலாவதாக, இப்போது அதிகமான பெண்கள் பணியிடத்தில் உள்ளனர். ஆனால் அவர்கள் என்ன வகையான வேலையைச் செய்கிறார்கள்? இரண்டாவதாக, இந்தியாவின் இளைஞர்கள் ஒரு இக்கட்டான நிலையை எதிர்கொள்கின்றனர். அவர்கள் மக்கள்தொகை ஈவுத்தொகைக்கும் பொருளாதார சரிவுக்கும் இடையில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ வேலை செய்கிறார்களா?


பங்கேற்பு ஆதாயங்களுக்குப் பின்னால் உள்ள நிச்சயமற்ற தன்மை


இந்திய தொழிலாளர் சந்தை அதிகரித்து வரும் பங்கேற்பைக் காட்டுகிறது. ஆனால், இது வளர்ந்து வரும் நிச்சயமற்ற தன்மையையும் (நிச்சயமற்ற தன்மை மற்றும் உறுதியற்ற தன்மை) காட்டுகிறது. இது இரண்டு குழுக்களில் மிகவும் தெளிவாக உள்ளது. அவை, பணியிடத்தில் நுழையும் பெண்கள் மற்றும் நாட்டின் இளைஞர்கள் நிச்சயமற்ற சூழ்நிலையில் சிக்கித் தவிக்கின்றனர். காகிதத்தில், இரு குழுக்களும் முன்பைவிட மிகவும் சுறுசுறுப்பாகத் தெரிகின்றன. ஆனால் மேற்பரப்பில், ஒரு கவலைக்குரிய முறை தோன்றுகிறது. இந்தியா அர்த்தமுள்ள வேலைகளை உருவாக்கவில்லை. மாறாக, அது உயிர்வாழும் அளவிலான வேலையை மட்டுமே அதிகரித்து வருகிறது.


2017-18 மற்றும் 2023-24-க்கு இடையில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களிடையே பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) 23.3 சதவீதத்திலிருந்து 41.7 சதவீதமாக உயர்ந்தது. ஆறு ஆண்டுகளில் இந்த 18.4 சதவீத புள்ளி உயர்வு புள்ளிவிவர ரீதியாக அசாதாரணமானது. ஆனால் எண்களால் மட்டும் ஒரு மாற்றத்தின் அமைப்பைப் பிடிக்க முடியாது. அதிகாரமளிப்பதாகத் தோன்றுவது உண்மையில் வளர்ந்து வரும் பொருளாதார நெருக்கடியை பிரதிபலிக்கக்கூடும்.


PLFS 2023-24-ன் படி, தொழிலாளர் தொகுப்பில் 73.5 சதவீத கிராமப்புற பெண்கள் சுயதொழில் செய்பவர்கள் ஆவர். அதே நேரத்தில், 7.8 சதவீதம் பேர் மட்டுமே வழக்கமான ஊதியம் பெறும் வேலைகளை பெற்றிருக்கிறார்கள். நகர்ப்புறங்களில், பெண்களிடையே ஊதியம் பெறும் வேலையின் பங்கு 49.4 சதவீதமாக உயர்கிறது. ஆனால், ஒட்டுமொத்த நகர்ப்புற பெண் LFPR 25.8 சதவீதமாக மட்டுமே உள்ளது. இந்த எண்கள் தொழிலாளர் சந்தை அதிக பெண்களை வேலைக்கு அமர்த்தக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. ஆனால் இது பெரும்பாலும் மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் குறைந்த பாதுகாக்கப்பட்ட வேலைகளில் உள்ளது.


வளர்ச்சியின் பொருளாதார வல்லுநர்கள் நீண்ட காலமாக இதை முறைசாரா தொழிலாளர்களின் பெண்ணியமயமாக்கல் என்று விவரித்துள்ளனர். இதன் பொருள் பெண்களுக்கு அதிக கட்டுப்பாடு அல்லது ஆற்றல் உள்ளது என்று அர்த்தமல்ல. மாறாக, அவர்களின் பாதிப்பு அதிகரித்துள்ளது என்று அர்த்தம்.


பெண்கள் அதிக அளவில் ஊதியம் பெறாத, வீட்டு வேலை, பருவகால வேளாண் உதவி, துண்டு-விகித உற்பத்தி, முறைசாரா விற்பனை மற்றும் ஊதியம் பெறாத குடும்ப வணிகங்களில் குவிந்துள்ளனர். இவை 'வேலைகள்' என்று கணக்கிடப்படுகின்றன. மேலும் ஊதியம், ஒப்பந்தங்கள், சமூகப் பாதுகாப்பு அல்லது சலுகைகள் இல்லாமல், பெரும்பாலும் ஊதியம் இல்லாமல், இருப்பினும் அவை புள்ளிவிவர ரீதியாக வேலைவாய்ப்பாகவே பதிவு செய்யப்படுகிறது.


இன்னும் மோசமானது என்னவென்றால், இந்த வேலைகளில் பெரும்பாலானவை மாற்றிடை வேலைவாய்ப்பு (disguised employment) என்று அழைக்கப்படுகின்றன. "வேலைவாய்ப்பு" என்பதன் அர்த்தம் ஊதியம் இல்லாத மற்றும் உயிர்வாழ்வை அடிப்படையாகக் கொண்ட செயல்பாடுகளை உள்ளடக்கியதாக நீட்டிக்கப்பட்டுள்ளதால் இது நிகழ்கிறது.


பொருளாதாரத்தில் முன்னேற்றம் போல் தோன்றுவது பெரும்பாலும் பெண்கள் பொருளாதார பிரச்சினைகளின் சுமையைச் சுமக்கிறார்கள் என்பதாகும். அவர்கள் விலைவாசி உயர்வு, ஆண்களுக்கான ஊதிய வீழ்ச்சி மற்றும் அரசாங்கத்தின் குறைவான ஆதரவை எதிர்கொள்கின்றனர். பெண்கள் பணியிடத்தில் சேர்கிறார்கள், ஆனால் அவர்கள் விரும்புவதால் அல்ல, அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டியிருப்பதால் இது நிகழ்கிறது. தேசிய புள்ளிவிவரங்கள் அவர்களின் பங்களிப்பைக் காட்டினாலும், கொள்கைகள் அவர்களின் கடினமான நிலைமைகளை அரிதாகவே நிவர்த்தி செய்கின்றன.


அதே நேரத்தில், ஒரு தெளிவான மற்றும் சத்தமான பிரச்சனை உள்ளது: இந்தியாவில் பல இளைஞர்கள் நல்ல வேலைகளில் இருந்து விலக்கப்படுகிறார்கள்.


PLFS-ன் தரவுகள், 15 முதல் 29 வயதுடையவர்களில், நகர்ப்புற பெண்களின் வேலையின்மை விகிதம் 20.1% ஆகவும், ஆண்களுக்கு இது 12.8% ஆகவும் இருப்பதாகக் காட்டுகிறது. இந்த எண்கள் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில்துறை கொள்கைகள் முறையான அளவில் தோல்வியடைவதைக் காட்டுகின்றன.


இந்திய இளைஞர்களுக்கு பெரிய கனவுகள் உள்ளன. ஆனால், அவர்கள் சரியான வேலைகளைக் கண்டுபிடிக்கவில்லை. பொருளாதாரம் அவர்களின் திறன்கள், தகுதிகள் அல்லது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற போதுமான வேலைகளை உருவாக்குவதில்லை. இது திறன் சார்புடைய வளர்ச்சிக்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டாக அமைகிறது. அசெமோக்லு (Acemoglu) போன்ற பொருளாதார வல்லுநர்கள் இதை 'துருவமுனைப்பு விளைவு' (polarisation effect) என்று அழைக்கின்றனர். இதன் விளைவாக, வளர்ச்சியானது நடுத்தர திறமையான தொழிலாளர்களைவிட உயர் திறமையான மூலதனத்தை ஆதரிக்கிறது. இது நடுத்தர திறன் வேலைகள் மறைந்து போக காரணமாகிறது.


இந்தப் பிரச்சனை பல ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. திறன் இந்தியா திட்டம் (Skill India program) 2022-ம் ஆண்டுக்குள் 40 கோடி பேருக்கு பயிற்சி அளிப்பதாக உறுதியளித்தது. இருப்பினும், இது 3 கோடிக்கும் சற்று அதிகமானவர்களுக்கு பயிற்சி அளித்தது. பயிற்சி பெற்றவர்களில், 4 பேரில் ஒருவருக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கூலி வேலை கிடைத்தது.


இந்தியாவில் தயாரிப்போம் பிரச்சாரம் (Make in India campaign) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்கை 25 சதவீதமாக உயர்த்தவும் 100 மில்லியன் வேலைகளை உருவாக்கவும் உருவாக்கப்பட்டது. ஒரு பத்தாண்டுகாலத்திற்குப் பிறகும், உற்பத்தி இன்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 சதவீதமாக உள்ளது. மேலும், அதன் வேலைவாய்ப்புக்கான சாதகமானது கடுமையாகக் குறைந்துள்ளது. உற்பத்தி உயரக்கூடும், ஆனால் வேலைகள் தொடர்ந்து அதிகரிக்கவில்லை.


அதிகக் கவனத்தைப் பெற்ற புத்தொழில் இந்தியா இயக்கம் (Start-Up India movement), பரந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் போராடியுள்ளது. நாஸ்காமின் கூற்றுப்படி, பெரும்பாலான இந்திய புத்தொழில்கள் பத்துக்கும் குறைவானவர்களைப் பணியமர்த்துகின்றன. வேலை உருவாக்கம் பெரும்பாலும் பெரிய நகரங்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்தத் துறைகள் இனி பெரிய அளவிலான உள்ளடக்கத்தை வழங்குவதில்லை.


எனவே, இதன் காரணமாக வாய்ப்பின் கட்டமைப்பு ஒரு சரிவை கொண்டுள்ளது. இந்தியாவின் இளைஞர்களில் பெரும்பாலோர், நற்சான்றிதழ் பெற்றவர்கள், நகரும் திறன் கொண்டவர்கள் மற்றும் ஓய்வற்றவர்கள், கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த நிலைமை நாட்டிற்கு மக்கள்தொகை சவாலுக்கு வழிவகுக்கிறது.


எனவே, முரண்பாடு இப்போது தெளிவாகிறது. சுமார் 64 கோடி இந்தியர்களுக்கு வேலைகள் இருக்கலாம். ஆனால் இந்த வேலைகளில் பலவற்றில் நிலைத்தன்மை, பாதுகாப்பு அல்லது வளர வாய்ப்புகள் இல்லை. வேலை செய்பவர்களின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், பெரும்பாலான வேலைகள் கண்ணுக்குத் தெரியாதவை, முறைசாரா அல்லது கட்டாயப்படுத்தப்பட்டவை. கொள்கைகள் சிறந்த வேலைகளை உருவாக்குவதில் அல்ல, அதிக வேலைகளை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தினால், தொழிலாளர்களை உண்மையிலேயே வேலைக்கு அமர்த்தாமல், சோர்வடையச் செய்வதை நம்பியிருக்கும் ஒரு வகையான பொருளாதார முன்னேற்றத்தை ஆதரிக்கும் அபாயம் உள்ளது.


இது நாம் புறக்கணிக்க முடியாத ஒரு முக்கிய கேள்விக்கு வழிவகுக்கிறது. இந்தியாவின் வேலைவாய்ப்புச் சந்தையில் ஏன் இன்னும் வலுவான மையம் இல்லை? அதிக உற்பத்தி மற்றும் அதிக மக்கள் வேலை செய்தாலும், பாதுகாப்பான, முறையான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட வேலைகளைக் கண்டுபிடிப்பது ஏன் மிகவும் கடினமாக உள்ளது?


வெற்று வேலைவாய்ப்பு மையம்


இந்தியாவின் தொழிலாளர் பிரச்சினைகளின் மையத்தில் ஒரு கட்டமைப்பு முரண்பாடு உள்ளது. பொதுவாக, நாம் தொழிலாளர் சந்தையை ஒழுங்குபடுத்தியுள்ளோம், ஆனால் அதை முறைப்படுத்தவில்லை. தாராளமயமாக்கலுக்குப் பிறகு, சீர்திருத்தங்கள் பாதுகாப்பைவிட நெகிழ்வுத்தன்மையில் அதிகக் கவனம் செலுத்தின. இது முறையான துறைக்குள்கூட முறைசாரா வேலை இருக்கும் ஒரு தொழிலாளர் அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் இளம் பணியாளர்கள் இருந்தபோதிலும், அது ஒரு "உயர்-சாலை" (high-road) வேலைவாய்ப்பு முறையை உருவாக்கவில்லை. அத்தகைய அமைப்பில் தொழிலாளர்களுக்கு அமல்படுத்தக்கூடிய ஒப்பந்தங்கள், நியாயமான ஊதியங்கள் மற்றும் உலகளாவிய பாதுகாப்புகள் இருக்கும்.


சர்வதேச அளவில், இந்தியா அசாதாரணமானது. ILO தரவுகளின்படி, 24.4% இந்தியர்கள் மட்டுமே குறைந்தது ஒரு சமூகப் பாதுகாப்பு நன்மையைப் பெற்றுள்ளனர். இதை ஒப்பிடுகையில், இலங்கையில் 66% மக்களும், சைப்ரஸில் 61.2% மக்களும், கஜகஸ்தான் மற்றும் இஸ்ரேலில் 100% மக்களும் அத்தகைய பாதுகாப்பைக் கொண்டுள்ளனர்.


உழைக்கும் வயதுடைய மக்களுக்கு, அவர்களின் பங்களிப்பு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களால் 15.5% பேர் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளனர். வேலையில்லாதவர்களுக்கு, பாதுகாப்பு 0% ஆகும். இந்த எண்கள் தரவுகளில் உள்ள இடைவெளிகள் மட்டுமல்ல, ஆழமான வேலைவாய்ப்பு சார்ந்த கட்டமைப்பு சிக்கல்களைக் காட்டுகின்றன. 2024-25 மத்திய பட்ஜெட் இந்த புறக்கணிப்பை பிரதிபலிக்கிறது. இது நேரடி வேலைவாய்ப்பு தொடர்பான திட்டங்களுக்கு ₹1 லட்சம் கோடிக்கும் குறைவாகவே ஒதுக்குகிறது. அரசாங்கத்தின் நிதி முன்னுரிமைகள் இன்னும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் அல்லது பணியாளர்களை மேம்படுத்துவதைவிட மூலதன மானியங்கள் மற்றும் பெருநிறுவன வரி தள்ளுபடிகளில் அதிகக் கவனம் செலுத்துகின்றன.


இதன் விளைவாக இரட்டை தொழிலாளர் பொருளாதாரம் (dualistic labour economy) உருவாகிறது. அங்கு மூலதன-தீவிர தானியங்கி பகுதிகள் பரந்த முறைசாரா உள்நாட்டால் சூழப்பட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங்களுக்குள்கூட, முறைசாரா முறைப்படுத்தல் பரவலாக உள்ளது. நிலையான வேலைகள் தற்காலிக, கிக் அடிப்படையிலான அல்லது மூன்றாம் தரப்பு ஒப்பந்தங்களாக மறுசீரமைக்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தங்கள் முறையாகத் தோன்றினாலும் தொழிலாளர் பாதுகாப்பைக் குறைக்கின்றன. தொழிலாளர் தேவை ஒரு முக்கியப் பொருளாதார இலக்காக மாறாவிட்டால், இந்தியா தொடர்ந்து அதிக வளர்ச்சியைக் கொண்டிருக்கும், ஆனால் குறைந்த வேலைவாய்ப்புகளைக் கொண்டிருக்கும். வேலைகள் அதிகரிக்கக்கூடும், ஆனால் அமைப்பு நிலையற்றதாகவே இருக்கும்.


எழுத்தாளர் பொருளாதாரப் பேராசிரியராகவும், ஐடியாஸ் அலுவலகத்தின் இடைநிலை ஆய்வுகள் பிரிவில் டீனாகவும் உள்ளார். CNES-ல் ஆராய்ச்சி ஆய்வாளரான அங்கூர் சிங் இந்தப் பத்தியை எழுத உதவினார்.



Original article:

Share:

வேளாண் துறைக்கு மூலதனச் செலவு தேவை. -பி அல்லி

 வேளாண் துறையில் பொது முதலீடு என்பது ஒரு சவாலாகவே உள்ளது.


இந்தியா பல விவசாயத் திட்டங்களை, ஒருங்கிணைந்த குடை திட்டங்களாக (integrated umbrella programmes) இணைத்துள்ளதுடன், இது கொள்கை வகுப்பில் தெளிவான மாற்றத்தைக் காட்டுகிறது. அதாவது, ஒத்திசைவை (coherence) மேம்படுத்துவது, நிர்வாகத்தை மிகவும் திறமையாக்குவது மற்றும் இதற்கான பலன்களை சிறப்பாக வழங்குவதே இதன் குறிக்கோளாகும். 2024–25-ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு ₹1,22,529 கோடி ஒதுக்கீடு மற்றும் மொத்த மானியங்கள் ₹4.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்பதை நிதி அமைச்சகம், 2024 அறிக்கையின்படி குறிப்பிட்டுள்ளது. இது விவசாயத்திற்கான வலுவான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. அரசாங்கம் சமீபத்தில் பிரதம மந்திரி தன்யா யோஜனாவை அறிமுகப்படுத்தியது. இது ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா (Rashtriya Krishi Vikas Yojana) மற்றும் கிருஷோன்னதி யோஜனா (Krishonnati Yojana) போன்ற பழைய திட்டங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த முயற்சிகள் கிராமப்புற வளர்ச்சிக்கு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட அணுகுமுறையை உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன.


ஆனால் திட்டங்களை இணைப்பது விவசாயத் துறையின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமா? அல்லது பொது முதலீடு இப்போது உள்கட்டமைப்பு, புதுமை மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டுமா?


குடை திட்டங்கள் (umbrella schemes) அடிப்படை ஆதரவை வழங்கினாலும், பிரதம மந்திரி தன் தானியா யோஜனா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ₹4,000 கோடி போன்ற வருடாந்திர ஒதுக்கீடுகள், துறையின் பரந்த மற்றும் மாறுபட்ட தேவைகளுடன் ஒப்பிட வேண்டும். பல்வேறு வேளாண்-சுற்றுச்சூழல் மண்டலங்களில் 146 மில்லியனுக்கும் அதிகமான செயல்பாட்டு நிலங்கள் பரவியுள்ள நிலையில், தேவையான முதலீட்டின் அளவு தற்போதைய திட்டங்கள் மட்டும் வழங்கக்கூடியதைவிட அதிகமாக உள்ளது.


மூலதன உருவாக்கம் புறக்கணிக்கப்பட்டது


இன்று விவசாயத்தில் பொது முதலீடு பெரும்பாலும் உள்ளீட்டு மானியங்களில் (input subsidies) கவனம் செலுத்துகிறது. இது பெரும்பாலும் நீண்டகால மூலதன உருவாக்கத்தைப் புறக்கணிக்கிறது. இதன் காரணமாக, இந்தத் துறை வலுவான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான வரையறுக்கப்பட்ட திறனைக் கொண்டுள்ளது. உதாரணங்களில் நீர்ப்பாசன வலையமைப்புகள் (irrigation networks), குளிர்பதன சேமிப்புச் சங்கிலிகள் (cold storage chains), கிராமப்புற சாலைகள் (rural roads) மற்றும் தளவாட அமைப்புகள் (logistics systems) ஆகியவை அடங்கும். இந்த சொத்துக்கள் உற்பத்திக்கும் சந்தைகளுடன் இணைப்பதற்கும் மிகவும் முக்கியம். விவசாயத்தில் இந்தியாவின் மொத்த மூலதன உருவாக்கம் (Gross Capital Formation (GCF)) வேளாண் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 15-17 சதவீதம் ஆகும். இது மிகவும் வளர்ந்த வேளாண் பொருளாதாரங்களில் காணப்படும் 30 சதவீதத்தை விட மிகக் குறைவு. (ஆதாரம்: நிதி ஆயோக், 2021)


குறைவான முதலீட்டின் ஒரு முக்கிய விளைவு அறுவடைக்குப் பிந்தைய இழப்பாகும். ஒவ்வொரு ஆண்டும், சுமார் 15-20 சதவீதம் விளைபொருள்கள் இழக்கப்படுகின்றன. சேமிப்பு, போக்குவரத்து மற்றும் செயலாக்க வசதிகள் போதுமானதாக இல்லாததால் இது நிகழ்கிறது. இந்த இழப்புகள் கிட்டத்தட்ட ₹92,000 கோடி பொருளாதார மதிப்பைக் கொண்டுள்ளன (ICAR, 2022). இதை சரிசெய்ய, வேளாண் உள்கட்டமைப்பு நிதி (Agriculture Infrastructure Fund (AIF)) உருவாக்கப்பட்டது. இது பத்து ஆண்டுகளுக்கு ₹1 லட்சம் கோடி திட்டமிடப்பட்ட பட்ஜெட்டைக் கொண்டுள்ளது. ஆனால், இந்தப் பணம் 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்குப் பரவ வேண்டும். இதன் பொருள் ஒவ்வொரு மாவட்டமும் ஆண்டுக்கு ₹15 கோடிக்கும் குறைவாகவே பெறுகிறது. இந்தத் தொகை இந்தப் பிரச்சினையைத் தீர்க்கப் போதுமானதாக இருக்காது.


வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (research and development (R&D)) ஒரு முக்கியமான ஆனால் குறைவான ஆதரவுள்ள பகுதியாகவே உள்ளது. தற்போது, இந்தியா அதன் வேளாண் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.3 சதவீதத்தை மட்டுமே ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் விரிவாக்க சேவைகளுக்கு செலவிடுகிறது. இது FAO பரிந்துரைத்த 1 சதவீதத்தைவிட மிகக் குறைவு. இருப்பினும், வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் கிட்டத்தட்ட 14 ரூபாய் வருமானத்தை ஈட்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன (ICAR-NIAP, 2021). காலநிலை-எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர்கள், துல்லிய வேளாண் மற்றும் நீர்-திறனுள்ள தொழில்நுட்பங்களில் முதலீடுகள் உற்பத்தித்திறனை கணிசமாக மேம்படுத்தும். குறிப்பாக, காலநிலை மற்றும் சந்தையின் தாக்கங்களை எதிர்கொள்ளும் சிறு விவசாயிகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.


வேளாண் விரிவாக்க சேவைகளை மேம்படுத்துவதும் மிகவும் முக்கியமானது. கிருஷி விஞ்ஞான மையங்கள் (Krishi Vigyan Kendras (KVK)) மற்றும் டிஜிட்டல் தளங்கள் (digital platforms) நல்ல வளங்களைக் கொண்டுள்ளன. இருப்பினும், அவை பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட வளங்கள் மற்றும் திறனுடன் செயல்படுகின்றன.


புதுமையான மாதிரிகள்


பல மாநிலங்கள் புதிய மற்றும் உள்ளூர் ரீதியாக பொருத்தமான மாதிரிகளை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த மாதிரிகள் மதிப்புமிக்க பாடங்களை வழங்குகின்றன. அதாவது, அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பை மேம்படுத்த பஞ்சாப் AIF-ஐப் பயன்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் ரிது பந்து திட்டம் (Rythu Bandhu scheme) விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் வருமான ஆதரவை வழங்குகிறது. வேளாண்  பண்ணைகளில் வளங்களை உருவாக்க உத்தரபிரதேசம் MGNREGA நிதியைப் பயன்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில், பைலட் திட்டங்கள் (pilot projects) AI அடிப்படையிலான துல்லியமான விவசாய கருவிகளைப் பயன்படுத்துகின்றன. தொழில்நுட்பம் விவசாயத்திற்கு எவ்வாறு உதவும் என்பதை இந்தத் திட்டங்கள் காட்டுகின்றன (MoAFW, 2023; NITI ஆயோக், 2022). உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட உத்திகள், நிறுவனங்களால் முறையாக நிதியளிக்கப்பட்டு ஆதரிக்கப்படும்போது, உண்மையான முடிவுகளைத் தரும் என்பதை இந்த எடுத்துக்காட்டுகள் காட்டுகின்றன.


தனியார் துறை பங்களிப்பை ஊக்குவிப்பதில் பொது முதலீடு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. நபார்டு வங்கியின் (NABARD) கூற்றுப்படி, விவசாயக் கடன் நிதியாண்டு 2026-ம் ஆண்டுக்குள் ₹32 லட்சம் கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வலுவான பொது உள்கட்டமைப்பு மற்றும் அபாயங்களைக் குறைப்பதற்கான வழிகள் இருக்கும்போது இந்தக் கடன் சிறப்பாகச் செயல்படும்.


இந்தியாவின் வேளாண் கொள்கை காலப்போக்கில் நிறைய மாறிவிட்டது. இது சிதறிய திட்டங்களிலிருந்து ஒருங்கிணைந்த குடை திட்டங்களுக்கு மாறியுள்ளது. இப்போது, இந்த முன்னேற்றத்தை எதிர்காலத்தை மையமாகக் கொண்ட முதலீட்டு உத்தியை ஆதரிக்க வேண்டும்.


வாழ்வாதாரத்திலிருந்து நிலைத்தன்மைக்கு நகர, மானியங்கள் மூலதன முதலீடுகளுடன் சமநிலைப்படுத்தப்பட வேண்டும். இந்த முதலீடுகள் மீள்தன்மையை உருவாக்கி போட்டித்தன்மையை மேம்படுத்த வேண்டும். கூடுதலாக, உள்ளூர் நிறுவனங்களுக்கு நெகிழ்வான நிதியை வழங்குவதன் மூலம் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். இந்த நிதி அவர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இதைச் செய்வது அடிநிலை மட்டத்தில் புதுமைகளைத் திறக்கும். e-NAM போன்ற டிஜிட்டல் தளங்கள் விவசாயிகளை சந்தைகள் மற்றும் சேவைகளுடன் இணைக்க உதவும். இருப்பினும், விவசாயிகள் தங்கள் டிஜிட்டல் திறன்களையும் மேம்படுத்தினால் இது சிறப்பாகச் செயல்படும்.


இறுதியில், வேளாண் ஆதரவை விரிவுபடுத்துவது மட்டும் முக்கியக் குறிக்கோளாக இருக்கக்கூடாது. விவசாயத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதே முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும்.


எழுத்தாளர் சென்னை விஐடியின் இணைப் பேராசிரியர் ஆவர்.



Original article:

Share: