இந்தியா, சீனா மற்றும் சீர்திருத்தப் பற்றாக்குறை -இஷான் பக்ஷி

 வெவ்வேறு காரணங்கள் அவர்களின் பொருளாதாரங்களில் ஏற்றத்தைத் தடுக்கின்றன. ஆனால், கட்டமைப்புக் குறைபாடுகளை சரிசெய்வதில் தயக்கம் இருவருக்கும் பொதுவானதாக உள்ளது.


இந்தியாவும் சீனாவும் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டவை. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியா தனது முதலீட்டு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே முக்கியக் குறிக்கோளாக உள்ளது. அதே நேரத்தில் சீனா அதிக முதலீட்டைக் குறைத்து உள்நாட்டு நுகர்வில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் அதிக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.


இரு நாடுகளும் கடந்த பத்தாண்டிற்கு மேலாக சக்திவாய்ந்த தலைவர்களால் வழிநடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், ஆச்சரியப்படும் விதமாக, இரு தலைவர்களும், அந்தந்த அரசியல் அமைப்புகளில் மிகவும் வலுவாக இருந்தாலும், தங்கள் பொருளாதாரங்களைத் தேவையான திசையில் வழிநடத்த முடியவில்லை. இந்தியாவில், சீன வணிகங்கள் இன்னும் முதலீடு செய்யத் தயங்குகின்றன. மேலும் சீனாவில், நுகர்வோர் நம்பிக்கை மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது.


இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்கவும் உற்பத்தியை அதிகரிக்கவும் முயற்சிக்காததற்காக அரசாங்கத்தைக் குறைகூற முடியாது. புதிய உற்பத்தி அலகுகளுக்கு குறைந்த வரிவிகிதங்கள் மற்றும் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க உற்பத்தி தொடர்பான ஊக்கத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. ஆனால், முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் மிகக் குறைவு. உண்மையில், நாட்டிற்குள் இருந்து தனியார் மூலதனம் வெளிநாடுகளுக்கு நகர்வதுபோல் தெரிகிறது. மற்றொரு கவலை என்னவென்றால், உற்பத்தி மற்றும் முதலீடு ஒரு சில மாநிலங்களில் மட்டுமே அதிக அளவில் குவிந்துள்ளது. 2022-23-ஆம் ஆண்டில், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகியவை நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் பாதியை உருவாக்கியுள்ளன.


உற்பத்தித் துறையின் பங்கை அதிகரிப்பதில் உள்ள சவால் புதியதல்ல. உற்பத்தியில் பெரிய உயர்வு இல்லாமல், முதலீட்டு ஏற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. முந்தைய அரசாங்கங்களும் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன. உதாரணமாக, UPA காலத்தில், தேசிய உற்பத்திக் கொள்கை 2022ஆம் ஆண்டுக்குள் உற்பத்தித் துறையின் பங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது. தற்போதைய அரசாங்கமும் இதேபோன்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. ஆனால் உண்மையில், உற்பத்தித் துறையின் பங்கு கிட்டத்தட்ட அப்படியே உள்ளது .


இப்போது, ​​அரசாங்கம் முதலீடுகளில் இருந்து நுகர்வை அதிகரிப்பதில் தனது கவனத்தை மாற்றியுள்ளதாகத் தெரிகிறது. முதலில் தனிநபர் வருமான வரியைக் குறைப்பதன் மூலமும், இப்போது GSTயைக் குறைக்கத் திட்டமிடுவதன் மூலமும் வரி குறைப்புக்கள் மூலம் இதைச் செய்கிறது. இருப்பினும், இந்த அணுகுமுறை வருவாயைக் குறைப்பதால் பொதுப் பொருட்களுக்கு செலவிடும் அரசாங்கத்தின் திறனைக் கட்டுப்படுத்துகிறது.


சீனாவில், அணுகுமுறை வேறுபட்டது. மறு சமநிலைப்படுத்துவதற்குப் பதிலாக, பெய்ஜிங் அதன் முதலீடு மற்றும் ஏற்றுமதி உத்தியை வலுப்படுத்தியுள்ளது. நுகர்வை ஆதரிப்பதற்கான அதன் முயற்சிகள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஜனாதிபதி ஜி ஜின்பிங் பாரம்பரிய தொழில்களுடன் உயர் தொழில்நுட்பத் தொழில்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார். இதன் விளைவாக, சீனாவின் முதலீடு-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் சுமார் 40 சதவீதமாக உள்ளது. அதன் ஏற்றுமதிகள் $3.58 டிரில்லியனாக வளர்ந்துள்ளன. மேலும், அதன் வர்த்தக உபரி 2024-ல் கிட்டத்தட்ட $1 டிரில்லியனை எட்டியுள்ளது.


இரு நாடுகளும் தங்கள் பொருளாதாரங்களையும் மாற்று விகிதங்களையும் நிர்வகிப்பதற்கு வெவ்வேறு உத்திகளைப் பின்பற்றுகின்றன.


இந்தியாவில், ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக ரூபாய்க்கு ஒரு நிலையான அளவை நிர்ணயிப்பதில்லை. இருப்பினும், ரூபாய் அதிகமாக வீழ்ச்சியடைவதைத் தடுக்க சந்தையில் தலையிடுகிறது. இது இந்தியாவின் மாற்று விகித முறையை ஒரு நிலைப்படுத்தப்பட்ட ஏற்பாடாக மாற்றுகிறது. அத்தகைய கொள்கை ஏற்றுமதி போட்டித்தன்மையைக் குறைக்கிறது. ஆனால், இறக்குமதிகளை மலிவானதாக்குகிறது, குடும்ப வாங்கும் சக்தியை அதிகரிக்கிறது.  இது இந்தியா அதன் டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்குகளை நெருங்கவும் உதவுகிறது.


சீனாவின் அணுகுமுறை இதற்கு நேர்மாறாக உள்ளது. தனது நாணயத்தை குறைவாக மதிப்பிட்டு வைத்திருப்பதன் மூலம், சீனா ஏற்றுமதிகளை அதிகரிக்கிறது. ஆனால், இது இறக்குமதிகளை விலை உயர்ந்ததாக ஆக்குகிறது. இது குடும்ப  வாங்கும் சக்தியைக் (household purchasing power) குறைக்கிறது.


சீனா தனது பொருளாதாரத்தை முதலீடு சார்ந்த வளர்ச்சியிலிருந்து நுகர்வு சார்ந்த வளர்ச்சிக்கு மாற்றினால், அது பொருளாதாரத்தை மெதுவாக்கும். ஆனால் அதன் அரசியல் அமைப்பு குடிமக்களுக்கு அதிருப்தியைக் காட்ட வழக்கமான வழிகளை வழங்காவிட்டாலும், தலைமை அத்தகைய செலவுகளைத் தவிர்க்கிறது.


இருப்பினும், இந்தியாவில், அடிக்கடி தேர்தல்கள் மூலம் பொது அதிருப்தி வெளிப்படுகிறது. மெதுவான முதலீடு, பலவீனமான வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் குறைந்த ஊதிய வளர்ச்சி ஆகியவை அதிருப்தியைக் குறைக்க அரசாங்கங்களை பிரபலமான கொள்கைகளை ஏற்றுக்கொள்ளத் தூண்டுகின்றன.


இந்தியா சமீபத்தில் அதிக பணப் பரிமாற்றங்களை வழங்குவதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. நிபந்தனையற்ற பணப் பரிமாற்றங்கள் இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 1% என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இதனுடன், இந்தியா மற்ற நலக் கொள்கைகளிலும் கவனம் செலுத்துகிறது. இது சீனாவிலிருந்து மிகவும் வேறுபட்டது. நலனை மிகைப்படுத்தக்கூடாது என்று ஜி ஜின்பிங் தெளிவாகக் கூறியுள்ளார். அதிகப்படியான நலனை நிலைநிறுத்த முடியாது என்றும் அது கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்புகிறார்.


இந்தியாவும் சீனாவும் கட்டமைப்பு பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்கின்றன. சீனாவின் பிரச்சினைகளில் அதிக முதலீடு மற்றும் உற்பத்தி, குறைந்த வீட்டுச் செலவு, அதிக சேமிப்பு, வயதான மக்கள் தொகை மற்றும் அதிக கடன் ஆகியவை அடங்கும். இந்தியாவின் பிரச்சினைகளில் பலவீனமான முதலீட்டு வளர்ச்சி, அதிக மூலதனத்தைப் பயன்படுத்தும். ஆனால், குறைவான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்கள், குறைந்த பண்ணை அல்லாத வேலைகளைக் கொண்ட வளர்ந்து வரும் பணியாளர்கள், குறைந்த வீட்டுச் சேமிப்பு, அதிக முறைசாரா தன்மை மற்றும் குறைந்த உற்பத்தித்திறன் ஆகியவை அடங்கும்.


இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்வது எளிதல்ல. சமீபத்திய ஆண்டுகளில், இரு நாடுகளும் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதைக் குறைத்துள்ளன. வலுவான சீர்திருத்தங்கள் இல்லாமல், சீனா இன்னும் கடனால் இயக்கப்படும் அதன் முதலீடு மற்றும் ஏற்றுமதி தலைமையிலான வளர்ச்சி மாதிரியைப் பின்பற்றுகிறது. ஆனால், உலகம் அதன் கூடுதல் உற்பத்தியை உள்வாங்க முடியாததால் இது போராடி வருகிறது. பலவீனமான உற்பத்தி மற்றும் முதலீட்டை எதிர்கொள்ளும் இந்தியா, கடன் மற்றும் வரி சலுகைகளால் ஆதரிக்கப்படும் உள்நாட்டு நுகர்வைத் தொடர்ந்து சார்ந்துள்ளது.


தேவையான கொள்கை மாற்றங்களை வடிவமைக்க முடியுமா அல்லது பாதை சார்பு விதிகள் முன்னேற்றத்தை கடினமாக்குமா என்பதுதான் தற்போது முக்கியமான கேள்வியாக உள்ளது.



Original article:

Share:

ஒரு வாக்குறுதி மீறல் நிலைமை -ப. சிதம்பரம்

 அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளின் ஏற்ற இறக்கங்கள் நீதிமன்ற சட்டத்தின்படி, நீதி வழங்குவதைத் தடுக்கக்கூடாது. சட்டப் பிரச்சினை உச்சநீதிமன்றத்தின் முன் தெளிவாக வைக்கப்பட்டது. நீதிமன்றத்திற்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், நீதிமன்றமானது இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதைத் தவிர்த்தது.


ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370-வது பிரிவை 'ரத்து' செய்ததில் அரசின் நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததாக பரவலாக நம்பப்படுகிறது. நீதிமன்றம் 'ரத்து' செய்வதை அங்கீகரித்ததாகவும் அரசாங்கம் கூறியது. மேலும், சில அறிஞர்கள் இந்தக் கூற்றை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. இது தவறு, நான் ஏற்கனவே ஒரு பத்தியில் ('ஒரு டிஸ்டோபியன் எதிர்காலத்தை நோக்கி', இந்தியன் எக்ஸ்பிரஸ், டிசம்பர் 17, 2023) சுட்டிக்காட்டியிருந்தேன். உண்மையில், 'ரத்து' என்ற பிரச்சினையில் உச்சநீதிமன்றம் எதிர்மாறாக இருந்தது.



ரத்து செய்வது சட்டவிரோதமானது, ஆனால்…


ஆகஸ்ட் 5, 2019 அன்று, அரசாங்கம் மூன்று நடவடிக்கைகளை எடுத்தது:


  • அரசியலமைப்பின் விளக்கப் பிரிவில் (பிரிவு 367) உட்பிரிவு (4)-ஐச் சேர்க்க பிரிவு 370(1)-ஐப் பயன்படுத்தியது,


  • விரிவாக்கப்பட்ட விளக்கப் பிரிவைப் பயன்படுத்தி, பிரிவு 370(3)-ன் விதிமுறையை 'திருத்த' கூறப்பட்டது,


  • 'திருத்தப்பட்ட' பிரிவு 370(3) மற்றும் அதற்கான விதிமுறையைப் பயன்படுத்தி, பிரிவு 370-யை 'ரத்து' செய்யக் கூறப்பட்டது.


இந்த மூன்று நடவடிக்கைகளும் உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்க முடியாதவை மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானவை என்று கருதப்பட்டன.


இருப்பினும், உச்சநீதிமன்றம், அரசியலமைப்பின் அனைத்து விதிகளையும் ஜம்மு & காஷ்மீருக்குப் பயன்படுத்துவதற்கான பிரிவு 370(1)-ன் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்துவது செல்லுபடியாகும் என்றும், அது பிரிவு 370-ஐ 'ரத்து செய்ததைப்' போன்ற விளைவைக் கொண்டிருந்தது என்றும் நியாயப்படுத்தியது.


முதலில், சட்ட நிலைப்பாட்டில் தெளிவு உள்ளது. பிரிவு 370 ரத்து செய்யப்படுவது மிகவும் புத்திசாலித்தனமாக பாதி வரைவு மூலம் (clever-by-half drafting) அடையப்பட்டது. அது அனுமதிக்க முடியாதது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. பிரிவு 370(1)-ன் கீழ் அரசியலமைப்பின் அனைத்து விதிகளையும் ஜம்மு & காஷ்மீருக்குப் பயன்படுத்துவது அல்லது நீட்டிப்பது உறுதி செய்யப்பட்டது.


விசயம் முடியவில்லை (Matter not closed)


எப்படியிருந்தாலும், ஜம்மு & காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்வோம். இருப்பினும், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஜம்மு & காஷ்மீரின் மக்களை இன்னும் கவலையடையச்செய்கிறது. மற்றும் இது மத்திய அரசின் மேலாதிக்கத்திற்கு எதிரான அவர்களின் கோபத்தையும் தூண்டுகிறது.


பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதோடு இந்த வழக்கு முடிக்கப்படவில்லை. ஆகஸ்ட் 5 அன்று, அதன் சேர்க்கைக்குப் பிறகு ஒரு மாநிலமான ஜம்மு & காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தனர். இது அனுமதிக்கப்பட்டதா மற்றும் சட்டப்பூர்வமானதா? இந்தக் கேள்வியையும் உச்சநீதிமன்றம் ஆராய வேண்டும் என்று மனுதாரர்கள் கேட்டுக் கொண்டனர். மத்திய அரசு ஜம்மு & காஷ்மீரின் (லடாக் யூனியன் பிரதேசத்தைத் தவிர்த்து) நிலையை மீட்டெடுக்கவும், தேர்தல்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறியதால் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சட்டப்பூர்வ கேள்வியை 'வெளிப்படையாக' வைத்திருந்தது. ஆனால், ஜம்மு & காஷ்மீரில் தேர்தல்களை நடத்த செப்டம்பர் 30, 2024 வரை கால அவகாசத்தையும் அது நிர்ணயித்துள்ளது. உண்மையில் ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் 2024-ல் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஆனால், இன்றுவரை மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படவில்லை. இது மத்திய அரசின் வாக்குறுதி மீறலாகும் என்பதை மறுக்க முடியாது.


ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீட்டெடுப்பதை தாமதப்படுத்தியதற்கு BJP மற்றும் NDA அரசாங்கமே பொறுப்பு. NDA-ல் உள்ள மற்ற கட்சிகளும் இந்தப் பழியைப் பகிர்ந்து கொள்கின்றன. ஏனெனில், அவற்றின் உறுப்பினர்கள் மத்திய அரசாங்கத்தில் அமைச்சரவையிலும் ஒரு பகுதியாக உள்ளனர்.


தேர்தல்களுக்குப் பிறகு, தேசிய மாநாடு (NC) அக்டோபர் 16, 2024 அன்று ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அரசாங்கத்தை அமைத்தது. NC நிர்வாகத்தை நடத்தவும் பிரதிநிதித்துவ அரசாங்கத்தை வழங்கவும் விரும்புவது இயல்பானது. அத்தகைய அரசாங்கம் ஜூன் 2017 முதல் மக்களுக்கு மறுக்கப்பட்டது.


மேல்நிலையின் காரணங்களுக்காக, NC மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது பற்றி குரல் கொடுக்கவில்லை. மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான கடுமையான கோரிக்கை இல்லாதது, ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கு மாநில அந்தஸ்து ஒரு முன்னுரிமை அல்ல என்று மத்திய அரசை நம்ப வைத்தது. மாறாக, மாநில அந்தஸ்தை இழப்பது மாநில மக்களின் ஒரு பெரிய குறையாகும். கடந்த 10 மாதங்களில் மாநில அரசு என்ன செய்திருந்தாலும், அது மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்றதாகத் தெரியவில்லை. பின்னோக்கிப் பார்க்கும்போது, ​​மாநில அந்தஸ்து குறித்து குரல் கொடுக்காமல் மேல்நிலை தவறு செய்ததை NC உணரக்கூடும்.


பஹல்காம் மற்றும் மாநில அந்தஸ்து


பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாகிஸ்தானால் ஊடுருவிய பயங்கரவாதிகளைத் தவிர, இந்தியாவை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள் உள்ளனர் என்பதை நான் எப்போதும் கூறி வருகிறோம். யார் எங்கு தாக்குகிறார்கள்?, இரு குழுக்களும் பயங்கரவாதத் தாக்குதலில் ஒத்துழைக்கிறார்களா என்பது சம்பவம் மற்றும் வாய்ப்பைப் பொறுத்தது. பஹல்காமில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட மூன்று பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் இரண்டு இந்தியர்களை NIA கைது செய்தது. ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, ஜூலை 28-29, 2025 அன்று நடந்த ஒரு என்கவுண்டரில் மூன்று வெளிநாட்டு பயங்கரவாதிகளை அழித்த பிறகு, பஹல்காம் சம்பவத்தை அரசாங்கம் மூடிவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் கைது செய்யப்பட்ட இரண்டு இந்தியர்கள் குறித்து முழு மௌனம் காத்து வருகிறது. அவர்கள் இன்னும் காவலில் இருக்கிறார்களா? அல்லது அவர்கள் விடுவிக்கப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டதா? அது ஒரு மர்மமாகவே உள்ளது.


ஆனால், மக்கள் வாக்குறுதியை நினைவில் கொள்கிறார்கள். மாநில அந்தஸ்து மீட்டெடுப்பது என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பதை அவர்கள் நினைவில் கொள்கிறார்கள். இந்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி சில மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகினர். பஹல்காமில் நடந்ததை புறக்கணிக்க முடியாது என்று நீதிமன்றம் வாய்மொழியாகக் கருத்து தெரிவித்தது. இந்தக் கருத்துக்கள் ஜம்மு காஷ்மீர் மக்களை மேலும் ஏமாற்றியிருக்கலாம். அடுத்த விசாரணை சுமார் 8 வாரங்களில் திட்டமிடப்பட்டுள்ளது.


எனது பார்வையில், உச்சநீதிமன்றம் சட்டப் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும். அரசியல் மற்றும் பாதுகாப்பு கவலைகள் சட்டத்தின்படி நீதி வழங்குவதிலிருந்து திசைதிருப்பக்கூடாது. சட்டப் பிரச்சினை நீதிமன்றத்தின் முன் தெளிவாக வைக்கப்பட்டது. இருப்பினும், நீதிமன்றம் அதைத் தீர்மானிக்கவில்லை, அதற்கு முன் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நம்பியிருந்தது. 20 மாதங்களுக்குப் பிறகும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இப்போது, ​​தேர்வு இரண்டு விருப்பங்களுக்கு இடையில் உள்ளது. ஒன்று வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிடுவது. மற்றொன்று நிலுவையில் உள்ள சட்டப் பிரச்சினையில் தீர்ப்பு வழங்குவது. அரசியலமைப்பு நீதிமன்றம் இறுதியாக நீதி வழங்கும் என்று நான் நம்புகிறேன்.



Original article:

Share:

ஆக்கிரமிப்பு இனங்களை (invasive species) கையாள்வதற்கான செலவை இந்தியா குறைத்து மதிப்பிடுகிறதா? -மோனிகா மொண்டல்

 ஒரு புதிய மதிப்பீட்டில், தாவரங்கள் உலகளவில் பொருளாதார ரீதியாக மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பு இனங்களாகவும், மேலாண்மை அடிப்படையில் அவை மிகவும் விலையுயர்ந்த குழுவாகவும் உருவெடுத்துள்ளன. 1960 முதல் 2022-ம் ஆண்டில் $926.38 பில்லியன் தேவைப்பட்டது. அடுத்த வரிசையில் ஆர்த்ரோபாட்கள் ($830.29 பில்லியன்) மற்றும் பாலூட்டிகள் ($263.35 பில்லியன்) தொடர்பான செலவாகும்.


பூர்வீகமற்ற தாவரங்கள் மற்றும் விலங்குகளால் (non-native plants and animals) ஏற்படும் சேதம் உலகளவில் சமூகத்திற்கு $2.2 டிரில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவின் புதிய ஆய்வு (international team of researchers) தெரிவித்துள்ளது.


Nature Ecology & Evolution இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வானது, நாடு வாரியாக உயிரியல் படையெடுப்புகளின் பொருளாதார செலவுகளை பதிவு செய்யும், பொது தரவுத்தளமான இன்வாகோஸ்ட்டின் (InvaCost) போன்ற தரவுகளையும், 1960-ம் ஆண்டு தரவை பகுப்பாய்வு செய்ய மாதிரி பயிற்சிகளையும் (modelling exercises) பயன்படுத்தியது. முந்தைய மதிப்பீடுகளைவிட செலவுகள் 16 மடங்கு குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் முடிவு செய்தனர்.


உலகளாவிய பொருளாதார இழப்புகளுக்கு அப்பால், முந்தைய தரவு எதுவும் கிடைக்காத 78 நாடுகளையும் இந்த ஆய்வானது மாதிரியாகக் கொண்டிருந்தது. ஏற்கனவே பல சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்ளும் இந்தியாவில், இந்த கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் நிதிச் சுமையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.




உலகளாவிய முரண்பாடு


ஐரோப்பா $1.5 டிரில்லியன் என்ற அதிகபட்ச சாத்தியமான தாக்கத்தைக் காட்டியது. இது உலகளாவிய செலவில் 71.45% ஆகும். மேலும், அதைத் தொடர்ந்து வட அமெரிக்கா ($226 பில்லியன்), ஆசியா ($182 பில்லியன்), ஆப்பிரிக்கா ($127 பில்லியன்) மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் ஓசியானியா ($27 பில்லியன்) போன்ற நாடுகளிலும் மிகக் குறைவாக இருந்தன.


முன்னணி ஆராய்ச்சியாளர்களில் ஒருவரும், நிலைத்தன்மை குறித்த உரையாடல்களுக்கான (Dialogues on Sustainability) யுனெஸ்கோ தலைவருமான பிரையன் லியுங், "ஐரோப்பாவில் உள்ள பொருட்களின் அதிகமான விலையின் காரணமாக, படையெடுப்புகளின் விலை அதிகமாக இருக்கலாம். இருப்பினும், சேதம் அதிகமாக உள்ளது. மேலும், விவசாயப் பொருட்களின் விலை அதிகமாகவும், மேலாண்மை செலவு அதிகமாக இருக்கலாம்" என்று கூறினார்.


இந்த ஆய்வு இந்தியாவிற்கான மொத்த பொருளாதார சேதத்தை முழுமையாக மதிப்பிடவில்லை. அதற்கு பதிலாக, மேலாண்மை செலவுகள் பெரும்பாலும் குறைவாகவே பதிவாகியுள்ளன என்பதை அது எடுத்துக்காட்டுகிறது. உண்மையில், மதிப்பிடப்பட்ட அனைத்து நாடுகளிலும், மேலாண்மை செலவினங்களில் இந்தியா மிக உயர்ந்த சதவீத வேறுபாட்டைக் கொண்டுள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, 1.16 பில்லியன் சதவீதம் ஆகும்.


ஆய்வின்படி, இதன் விதிவிலக்கான அதிக வேறுபாடு, இந்தியாவில் மேலாண்மை செலவினங்களில் கணிசமான அளவு பதிவு செய்யப்படவில்லை அல்லது தற்போதுள்ள தரவுகளில் குறைவாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது. இதன் விளைவாக, ஒரு பெரிய "மறைக்கப்பட்ட" செலவுக்கு  வழிவகுத்தது. இந்தியாவின் வரையறுக்கப்பட்ட வளங்கள் இந்த இடைவெளிக்கு இன்வாகோஸ்ட் தரவுத்தளத்தில் (InvaCost database) ஒரு பதிவு சார்புடையதாக இருக்கலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனமாகக் கவனித்தனர். இது ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தும் மொழிகளில் அறிக்கைகளை கவனிக்காமல் இருக்கலாம்.


ஐரோப்பா 15,044% முரண்பாட்டைப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து ஆசியா (3,090%) மற்றும் ஆப்பிரிக்கா (1,944%) எனவும் பதிவு செய்தது. இதில், மதிப்பிடப்பட்ட நாடுகளிடையே சராசரி செலவு முரண்பாடுகள் 3,241% ஆகும்.


இந்தியாவுக்கான குறிப்பிட்ட தரவுகள் குறித்து தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று லியுங் கூறினார். புள்ளிவிவரங்கள் எவ்வாறு உடைகின்றன என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார். ஆனால், பொது மேலாண்மை உத்திகளில் தடுப்பு, ஒழிப்பு, கட்டுப்பாடு அல்லது அடக்குதல் ஆகியவை அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார். படையெடுப்பு பரவலை மெதுவாக்கும் முயற்சிகளும் இதில் அடங்கும். "இவை அனைத்தும் படையெடுப்புகளை நிர்வகிக்கப் பயன்படுத்தப்படும் கருவிகள்" என்று அவர் கூறினார்.


சென்னையில் உள்ள பல்லுயிர் கொள்கை மற்றும் சட்ட மையத்தில் ஆக்கிரமிப்பு வேற்றுகிரக உயிரினங்கள் குறித்த முன்னாள் ஆய்வாளரான எஸ். சாண்டில்யன், ஆய்வின் கண்டுபிடிப்புகள் நம்பத்தகுந்தவை என்று கூறினார். "உயிரியல் படையெடுப்பு மேலாண்மையை ஆவணப்படுத்துதல், அறிக்கையிடுதல் மற்றும் இராஜதந்திர ரீதியாக நிதியளிப்பதில் இந்தியா பின்தங்கியுள்ளது. மையப்படுத்தப்பட்ட தரவு அமைப்புகள் (centralised data systems) இல்லாதது, நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் போட்டியிடும் பாதுகாப்பு முன்னுரிமைகள் இதை அதிகரிக்கின்றன," என்று அவர் மேலும் கூறினார்.


படையெடுப்பாளர்கள் (invaders) யார்?


உலகளவில் பொருளாதார ரீதியாக மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பு இனங்களாகவும், மேலாண்மை செலவைப் பொறுத்தவரை மிகவும் விலையுயர்ந்த குழுவாகவும் தாவரங்கள் உருவெடுத்தன. 1960 முதல் 2022-ஆம் ஆண்டில் $926.38 பில்லியன் தேவைப்பட்டன. அடுத்த வரிசையில் ஆர்த்ரோபாட்கள் ($830.29 பில்லியன்) மற்றும் பாலூட்டிகள் ($263.35 பில்லியன்) போன்றவைகளின் செலவுகள் இருந்தன. இந்த இனங்கள் புதிய சுற்றுச்சூழல் அமைப்புகளில் எவ்வாறு பரவுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர். அவை பூர்வீக இனங்களின் இழப்பில் செழித்து வளர்கின்றன. இந்த பரவலுக்கான முக்கிய காரணங்கள் வர்த்தகம் மற்றும் பயணம். உலகமயமாக்கல் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்கள் அவை பிராந்தியங்களுக்கு இடையில் செல்வதை எளிதாக்கின.


அவர்கள் ஜப்பானிய நாட்வீட் (Reynoutria japonica) மற்றும் பொதுவான லந்தானா (Lantana camara) ஆகியவற்றை ஒரு சதுர கிலோமீட்டருக்கு மிகவும் செலவு பிடிக்கும் புல்வகைகளாக குறிப்பிட்டனர்.


இருப்பினும், அனைத்து ஆக்கிரமிப்பு இனங்களையும் அகற்றுவது என்பது பிரச்சினையை மோசமாக்கும் என்று லியுங் எச்சரித்தார். "இப்போது நாம் பயன்படுத்தும் பல விவசாயப் பொருட்கள் பூர்வீகமானவை அல்ல என்று அவர் விளக்கினார்.


மேலும் அவர் கூறுகையில், ஆக்கிரமிப்பு இனங்களின் இயக்கம் உயிரினங்களின் வர்த்தகம் மற்றும் இறக்குமதியின் விளைவாகவே நிகழ்கிறது. மக்கள் இந்த தயாரிப்புகளை விரும்புகிறார்கள், மேலும் இந்த தேவை பெரும்பாலும் ஆக்கிரமிப்புகளை இயக்குகிறது. ஐரோப்பா நீண்டகாலமாக இதைச் செய்து வருகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


இது இரு அம்ச சவாலை முன்வைக்கிறது. ஒருபுறம், பொருளாதார இழப்புகளைக் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. மறுபுறம், உலகமயமாக்கலை ஊக்குவிக்கும் விருப்பமும் உள்ளது. எனவே, லியுங்கின் கூற்றுப்படி, ஆக்கிரமிப்பு இனங்களின் பரவலைக் குறைப்பதற்கும், தாவரங்களை அதிகரிப்பதன் மூலம் புவி வெப்பமடைதலை நிவர்த்தி செய்வதற்கும் ஒரே நேரத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த இலக்குகள் சிக்கலானவை மற்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதால், ஆக்கிரமிப்பு இனங்களைப் படிப்பதும் தீர்வுகளைக் கண்டறிவதும் மிகவும் கடினமாகிறது.


கட்டுப்பாட்டு நடவடிக்கை


ஆக்கிரமிப்பு இனங்களைக் கையாள்வதற்கான பல சர்வதேச கொள்கைகள் நடைமுறையில் உள்ளன என்பதையும், உயிரியல் படையெடுப்புகளின் வீதத்தைக் குறைப்பதில் நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதாக அராய்ச்சியாளர்கள் பெருமளவில் நம்புவதாகவும் இந்த ஆய்வு ஒப்புக்கொண்டது. ஒரு முக்கியமான ஒழுங்குமுறை கப்பல்களின் நிலைப்படுத்தல் நீர் மற்றும் வண்டல் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மைக்கான சர்வதேச மாநாடு ஆகும். இது நிலைப்படுத்தல் நீர் மேலாண்மை மாநாடு (Ballast Water Management Convention) என்றும் அழைக்கப்படுகிறது. கப்பல்களின் நிலைப்படுத்தும் நீர் மூலம் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு தீங்கு விளைவிக்கும் நீர்வாழ் உயிரினங்கள் பரவுவதைத் தடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


அதேபோல், உயிரினப் பன்முகத்தன்மை குறித்த பன்னாட்டு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள விதிமுறைகள், இந்தியா உட்பட ஒப்பந்தத்தில் பங்கேற்கும் நாடுகளை, “புலம்பெயர் உயிரினங்களின் அறிமுகத்தைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் அல்லது அவை புலம்பெயர் உயிரினங்களால் சுற்றுச்சூழல் அமைப்புகள், வாழிடங்கள் அல்லது உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை அழிக்கவும்” அழைப்பு விடுக்கின்றன.


இந்த சர்வதேச ஒப்பந்தங்கள் ஆக்கிரமிப்பு உயிரினங்களால் ஏற்படும் அச்சுறுத்தலை உலகளாவிய முறையில் அங்கீகரிப்பதையும், பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் அவற்றின் பரவலைக் குறைப்பதற்கான முயற்சிகளையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.


மேலாண்மை செலவுகளைப் பொறுத்தவரை, புதிய படையெடுப்புகளைத் தடுப்பது, ஏற்கனவே நிறுவப்பட்ட உயிரினங்களை முற்றிலுமாக அழிக்க முயற்சிப்பதும் அவற்றில் அடங்கும். மற்றொரு அணுகுமுறை, அவற்றின் பரவலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சேதத்தைக் குறைக்க வேண்டும்.


அறிக்கையிடப்பட்ட செலவுகளில் உள்ள பெரிய முரண்பாடுகள், மேம்பட்ட தரவு சேகரிப்பு, செலவினங்களின் விரிவான கண்காணிப்பு மற்றும் வலுவான அறிக்கையிடல் வழிமுறைகள் ஆகியவற்றின் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.


"எடுத்துக்காட்டாக, ஆப்பிரிக்காவில் செலவு மதிப்பீடுகள் மிகவும் குறைவாக இருந்தாலும், சேதங்கள் குறைவாகவே உள்ளன என்று அர்த்தமல்ல," என்று லியுங் விளக்கினார்.


இந்த ஆய்வு ஆக்கிரமிப்பு இனங்களின் நிலை குறித்து எதுவும் கூறவில்லை என்றாலும், இது ஒரு செயல் அழைப்பாக இருக்கலாம். இதன் குறிப்பிட்ட பகுப்பாய்வு மற்றும் தரவுத்தளம், லியுங்கின் கூற்றுப்படி, அளவிடப்பட்ட பொருளாதார செலவுகளை அடிப்படையாகக் கொண்டது, "ஏனெனில் இது பெரும்பாலும் அளவிட எளிதாக இருக்கிறது மற்றும் மக்கள் பணம் குறித்து புரிந்துகொள்வது எளிதாக இருக்கிறது."


மோனிகா மொண்டல் ஒரு தன்னிச்சையான, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் பத்திரிகையாளர்.



Original article:

Share:

வளர்ச்சிக்கு ஊட்டமளித்தல் : ஊட்டச்சத்து மற்றும் அறிவாற்றல் தொடர்பு -நினா பத்கையன், நம்யா மகாஜன்

 ஒரு குழந்தைக்கு, அதன் வாழ்க்கையின் முதல் 1,000 நாட்கள் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைப்பதற்கு முக்கியமான கால அவகாசமாகும்; இந்தியாவில் இன்னும் பல செய்யப்பட வேண்டும்.


மதியம் 2 மணிக்கு உங்களுக்கு விமானம் பிடிக்க வேண்டும் என்று கற்பனை செய்து பாருங்கள். பயணிக்க வேண்டிய தூரம், போக்குவரத்து நிலைமைகள், மற்றும் விமான நிலைய சோதனை நேரம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, நீங்கள் மதியம் 12 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பாவிட்டால் விமானத்தை தவற விட நேரிடும். மதியம் 12 மணி முதல் 1 மணி வரையிலான நேரம், விமானப் பயணத்தை உறுதி செய்வதற்கு உங்களுக்கு மிகவும் அவசியமான நேரமாகும். அதேபோல், ஒரு குழந்தைக்கு, அவரது வாழ்க்கையின் முதல் 1,000 நாட்கள் அந்த  முக்கியமான ‘முக்கியமான காலப்பகுதி - எதிர்கால வெற்றிக்கான அடித்தளத்தை அமைக்க வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பாகும்’  — (Critical window — a once-in-a-lifetime opportunity) மூளை வளர்ச்சி, முதிர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து மூலம் போதுமான வளர்ச்சி ஆகியவை இந்தக் காலகட்டத்தில் நிகழ வேண்டும். இல்லையெனில் குழந்தை ஒருபோதும் தனது முழு திறனை அடையாது.

அறிவியல் என்ன சொல்கிறது


அறிவியல் மறுக்க முடியாதது. இரண்டு வயதாகும்போது, மூளையின் எடை பெரியவர்களின் மூளை எடையில் கிட்டத்தட்ட 80% அடைகிறது. இந்த காலகட்டத்தில் நரம்பு இணைப்பு வளர்ச்சி உச்சத்தை அடைகிறது, மற்றும் நரம்பு இணைப்பு அடர்த்தி பாலர் பருவத்திற்குள் பெரியவர்களின் அளவை எட்டுகிறது. முன் மூளைப் பகுதிகளின் வளர்ச்சி, இது உயர்ந்த அறிவாற்றல் செயல்பாடுகளை (திட்டமிடல், வரிசைப்படுத்தல் மற்றும் சுய-கட்டுப்பாடு உட்பட) கட்டுப்படுத்துவதாக நம்பப்படுகிறது, வாழ்க்கையின் முதல் இரண்டு ஆண்டுகளில் வளர்ச்சி வேகத்தில் நிகழ்கிறது. மூளையின் அடிப்படை வளர்ச்சி மற்றும் திறன்களில் ஆரம்ப நாட்களில் குறைபாடு இருந்தால், முந்தைய சுற்றுகள் மற்றும் திறன்களின்மீது கட்டமைக்கப்படும் பிந்தைய வளர்ச்சிகள் இயல்பாகவே வரையறுக்கப்பட்டவையாக இருக்கும்.


முதல் 1,000 நாட்களில் வரையறுக்கப்படுவது அறிவாற்றல் வளர்ச்சி மட்டுமல்ல. 3 வயதுக்கு முந்தைய ஊட்டச்சத்து குறைபாடுகள், சில சூழல்களில், மீள முடியாதவை. 1993 மற்றும் 2021-க்கு இடையிலான ஆண்டுகளில் ஊட்டச்சத்து குறைபாடுகளை சமாளிப்பதில் இந்தியா முன்னேற்றம் கண்டிருந்தாலும், தற்போதைய சரிவு விகிதத்தில், வளர்ச்சிக் குறைபாடு (வயதுக்கு ஏற்ற உயரம் குறைவாக இருப்பது) 2075ஆம் ஆண்டளவில் மட்டுமே 10 சதவீதத்தை எட்டும். 2047ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை அடைய வேகத்தை இரட்டிப்பாக்க முடியுமா? வெற்றிபெற, ஊட்டச்சத்து மற்றும் அறிவாற்றல் முயற்சிகளை இணைப்பதன் மூலம், குழந்தைப் பருவத்தின் முக்கியமான காலகட்டத்தை நாம் கைப்பற்ற வேண்டும். இதனால், குழந்தைகளுக்கு பிரகாசமான எதிர்காலத்திற்கான சிறந்த வாய்ப்பு கிடைக்கும்.


ஊட்டச்சத்து மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இருப்பினும், அவை இரண்டும் அடிப்படையில் அவை அடிப்படையில் ஒன்றே. மூளையின் செயல்பாட்டிற்கு போதுமான ஊட்டச்சத்து அவசியம், ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யாமல், நிரந்தர அறிவாற்றல் பாதிப்பு அல்லது குறைபாடுகள் ஏற்படலாம். வேலூர், தமிழ்நாடு, பிறப்பு-குழு ஆய்வு (birth-cohort study) ஆரம்பகால குழந்தைப் பருவ இரும்புச் சத்து குறைபாடு ஐந்து வயதில் வாய்மொழி செயல்திறன், அறிவாற்றல் செயலாக்க வேகத்தை எதிர்மறையாக பாதிக்கிறது மற்றும் இரண்டு வயதுக்கு முன் வெளிப்படுத்தும் மொழி வளர்ச்சியை பாதிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து மற்றும் தூண்டுதல் (stimulation) திட்டங்களுடன் ஒப்பிடும்போது தனியாக நடத்தப்படும் ஊட்டச்சத்து திட்டங்களின் தாக்கம் குறைவாகவே இருந்தது என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டியுள்ளது. முதல் சில ஆண்டுகளில் கற்றல் வேகமானது மற்றும் நிரந்தரமானது. மூன்று வயது குழந்தை பிராந்திய மொழியில் பேச ஆரம்பித்து அதை ஒருபோதும் மறப்பதில்லை. நியூரோபிளாஸ்டிசிட்டி (neuroplasticity) காரணமாக நம்மில் பெரும்பாலோர் இன்னும் குழந்தைப் பாடல்களை நினைவில் வைத்திருக்கிறோம்.


Neuroplasticity என்றால் என்ன?


Neuroplasticity என்பது மூளை நரம்பு செல்கள் புதிய இணைப்புகளை உருவாக்கும். பழையவை மாற்றிக் கொள்வது போன்ற மாற்றங்களைச் செய்யும் திறனை குறிக்கிறது. இது கற்றல், நினைவு, மற்றும் பிழைகளைச் சரிசெய்வதில் மூளைக்கு உதவுகிறது.


இந்தியாவில் குழந்தை பராமரிப்பு திட்டங்கள்


உலகின் மிகப்பெரிய குழந்தை பராமரிப்பு திட்டங்களில் ஒன்றான ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகள் (Integrated Child Development Services (ICDS)) திட்டம், ஆரம்பகால குழந்தைப் பருவ வளர்ச்சியின் தூண்களாக ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆகிய இரண்டிற்கும் முன்னுரிமை வழங்கும் தனித்துவமான திறனைக் கொண்டுள்ளது. பெண் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் ‘சத்தான உணவும் நல்ல கல்வியும்’ (Poshan Bhi Padhai Bhi) போன்ற திட்டங்களை தொடங்கியுள்ளது. இவை ஊட்டச்சத்து மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி கை கோர்த்து செல்வதை உறுதிசெய்ய முயல்கின்றன.


கூடுதலாக, பிறப்பு முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கான ஆரம்பகால குழந்தைப் பருவ தூண்டுதலுக்கான தேசிய கட்டமைப்பு - நவசேதனா (Navchetana - National Framework for Early Childhood Stimulation for Children from Birth to Three Years) குழந்தையின் வயதின் அடிப்படையில் சமூக மற்றும் அறிவாற்றல் தூண்டுதலுக்கான எளிய செயல்பாடுகளின் வடிவத்தில் கட்டமைக்கப்பட்ட வழிகாட்டுதலை வழங்குகிறது. இந்த கட்டமைப்பு, குழந்தையின் வயதுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட 140 செயல்பாடுகளை, 36 மாதங்களுக்கான தூண்டுதல் செயல்பாட்டு நாட்காட்டியில் வழங்குகிறது. இது பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி அல்லது குழந்தை பராமரிப்பு மையப் பணியாளர்களால், குறிப்பாக வீட்டு வருகைகளின்போது பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை, பராமரிப்பாளர்களால் ஆதரிக்கப்படும் விளையாட்டு அடிப்படையிலான செயல்பாடுகள் மூலம் கற்கும் வாய்ப்பை வழங்குகின்றன, முறையான அர்த்தத்தில் ‘கற்பிக்கப்படுவதற்கு’ மாறாக. தூண்டுதல் நாட்காட்டியைப் பயன்படுத்தி நன்கு நடத்தப்படும் வீட்டு வருகைகள், மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் போதுமான, சரியான நேரத்தில், மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவைப் பெற உதவும், இது அவர்களின் முழுமையான வளர்ச்சியை ஆதரிக்கவும், ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் வளர்ச்சி தாமதங்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.


மேம்பாடு தேவைப்படும் பகுதிகள்


குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து மற்றும் தூண்டுதல் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, முதல் 1,000 நாட்களில், ஏறக்குறைய 14 லட்சம் அங்கன்வாடி மையங்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்ட ஒரு படை முன்னணியில் இருந்தாலும், இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டியுள்ளது. ICDS திட்டம் அதன் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் மற்றும் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் ஆரம்பகால கற்றல் ஆகியவற்றில் உயர்தர சேவைகளுடன் அதன் இலக்கு மக்கள்தொகையை நிறைவுசெய்ய வேண்டும். தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நகர்ப்புறங்களில் சேவைகளை விரிவுபடுத்த வேண்டும் மற்றும் மேம்படுத்த வேண்டும். மேலும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சுகாதாரம், கற்றல் மற்றும் உளவியல் சமூக நல்வாழ்வை மதிப்பீடு செய்தல் மற்றும் அளவிடுதல் உள்ளிட்ட முன் தொடக்கக் கல்வியின் அணுகல், திறன் மற்றும் விநியோகத்தை மேம்படுத்த வேண்டும்.


இறுதியாக, அதிகமான பெண்கள் வேலை செய்ய உதவும் வகையில், அரசு நடத்தும், சமூகம் நடத்தும் மற்றும் பொது-தனியார் கூட்டாண்மை போன்ற பல்வேறு மாதிரிகளை முயற்சிப்பதன் மூலம் குழந்தை காப்பக வசதிகளை அதிகரிக்க வேண்டும்.


நாம் உண்ணும் உணவும், நாம் சிந்திக்கும் எண்ணங்களுமே நாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் — மேலும், ஆரம்ப ஆண்டுகளில் இழந்தவை ஒருபோதும் மீண்டும் பெற முடியாது. ஆரம்ப குழந்தைப் பருவ ஊட்டச்சத்து மற்றும் தூண்டுதலில் முதலீடு செய்வது வெறுமனே ஆரோக்கியத்தைப் பற்றியது மட்டுமல்ல. இது குழந்தைகளையும் பெண்களையும் அவர்களின் முழு திறனை அடைய உதவுவதோடு, சமூகத்தின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் உள்ளது.


குழந்தையின் ஆரம்பப் பருவத்தில் முதலீடு செய்வது மற்றும் முதலீடு செய்வது குறிப்பாக அவசரமானது, ஏனெனில் நாம் அதிகரித்த தானியங்கு, இயந்திரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் வேகமான வேகத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம், இது திறன் குறைந்த மற்றும் திறனற்ற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவதற்கு வழிவகுக்கும்.


நீனா பட்கையான் ஆசிய வளர்ச்சி வங்கியில் மூத்த பொது சுகாதார நிபுணர் (ஆலோசகர்). நம்யா மகாஜன் ராக்கெட் லேர்னிங்கின் இணை நிறுவனர் ஆவார்.



Original article:

Share:

இந்திய தொல்லியல் துறை நம்பகத்தன்மை நெருக்கடியை எதிர்கொள்கிறது -ஸ்வரதி சபாபண்டிட், சி. பி. ராஜேந்திரன்

 அதன் நிறுவன சுதந்திரம் அரசியல் தலையீடுகள் மற்றும் அதிகாரத்துவ சிக்கல்களால் சிதைவடைவதைத் தாண்டி, இந்திய தொல்லியல் துறை அறிவியல் முயற்சி அதிகரித்து வரும் தேசியவாத உணர்வால் பாதிக்கப்படுகிறது.


இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் K. அமர்நாத் ராமகிருஷ்ணாவின் சர்ச்சைக்குரிய இடமாற்றத்தைத் தொடர்ந்து இந்திய தொல்லியல் துறை (Archaeological Survey of India (ASI)) மீண்டும் ஒருமுறை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டில் கீழடி அகழ்வாராய்ச்சிக்கு அவர் தலைமை தாங்கியது பண்டைய தமிழ் நாகரிக வரலாற்றில் கணிசமான பொது மற்றும் கல்வி ஆர்வத்தைத் தூண்டியது.


கீழடி அகழ்வாராய்ச்சிகள்


2014ஆம் ஆண்டில், தொடங்கப்பட்ட கீழடி அகழ்வாராய்ச்சி சுமார் 7,500 கலைப்பொருட்களைக் (artefacts) கண்டுபிடித்தது. இந்தக் கண்டுபிடிப்புகள் ஒரு அதிநவீன, கல்வியறிவு மற்றும் மதச்சார்பற்ற நகர்ப்புற சமுதாயத்தின் இருப்பைக் குறிக்கின்றன மற்றும் இரும்பு யுகத்திற்கும் (கிமு 12-6ஆம் நூற்றாண்டு) ஆரம்பகால வரலாற்று காலத்திற்கும் (கிமு 6-4ஆம் நூற்றாண்டு) இடையிலான வரலாற்று இடைவெளியைப் பூர்த்தி செய்வதில் முக்கியமான சான்றுகளை வழங்கின. அப்போதிருந்து அறிஞர்கள் இந்த இடத்தை வைகை பள்ளத்தாக்கு நாகரிகத்தின் (Vaigai Valley Civilisation) ஒரு பகுதியாகக் குறிப்பிட்டுள்ளனர். கிமு 6 மற்றும் 2 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இந்திய துணைக்கண்டத்தை புரட்டிப் போட்ட 2-வது நகரமயமாக்கலின் ஒரு பகுதியாக கீழடி குடியேற்றம் (Keeladi settlement) இருக்கலாம்.


2017ஆம் ஆண்டில் ராமகிருஷ்ணா திடீரென்று அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டபோது இந்த திட்டம் எதிர்பாராத திருப்பத்தை எடுத்தது. அவரது மாற்றம் கண்டுபிடிப்புகளைக் குறைத்து மதிப்பிடும் முயற்சியாக பரவலாகக் கருதப்பட்டது. குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் எதுவுமில்லை என இந்திய தொல்லியல்துறை கூறி மூன்றாம்கட்ட அகழ்வாராய்ச்சியை நிறுத்தியபோது பதற்றம் அதிகரித்தது. இது தமிழ்நாடு அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையில் அரசியல் பிளவை அதிகரிக்க செய்தது. சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு, இந்த இடத்தை தமிழ்நாடு மாநில தொல்லியல் துறைக்கு மாற்றியது. அதன் பின்னர் 18,000-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை கண்டுபிடித்துள்ளது.


2021ஆம் ஆண்டில், ராமகிருஷ்ணா சென்னை வட்டத்தின் மேற்பார்வை தொல்லியலாளராக தமிழ்நாடு திரும்பினார். 2023ஆம் ஆண்டில், அவர் முதல் இரண்டு கட்டங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார். ஆரம்பகால கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்தினார். இருப்பினும், இந்திய தொல்லியல் துறை அறிக்கையை திருத்தம் செய்ய கோரியது. தனது முடிவுகளை நியாயப்படுத்தும் விதமாக, ராமகிருஷ்ணா, அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களுக்குள் பல்வேறு நிகழ்வு எல்லைகளிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட கார்பனேசியப் பொருட்களின் முறைசார் கடுமை, அடுக்குவரிசை வரிசைமுறை (stratigraphic sequencing), பொருள் கலாச்சார பகுப்பாய்வு மற்றும் முடுக்கி நிறை நிறமாலை (Accelerator Mass Spectrometry) ஆகியவற்றை மேற்கோள் காட்டினார். இந்த அத்தியாயங்கள் தொல்பொருள் நடைமுறையில் உள்ள அரசியலை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன மற்றும் இந்திய தொல்லியல் துறை எதிர்கொள்ளும் நம்பகத்தன்மை நெருக்கடியை பிரதிபலிக்கின்றன.


ஒன்றிய அரசு Vs மாநில அரசு: கீழடி நாகரிக கண்டுபிடிப்புகள் மீதான போராட்டம்


மதுரைக்கு அருகிலுள்ள கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால நாகரிகம் குறித்து தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தனது அறிக்கையை சமர்ப்பித்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய தொல்லியல் துறை (ASI) ராமகிருஷ்ணா தனது அறிக்கையைத் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோருகிறது. அதற்கு ராமகிருஷ்ணா மறுத்துவிட்டார். இப்போது இந்தக் கருத்து வேறுபாடு ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையில் அரசியல் மோதலைத் தூண்டிவிட்டது. தமிழ்நாட்டின் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமர் மோடி அரசு தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த விரும்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அப்படியானால், இந்த பகுதியில் என்ன நடக்கிறது?


ஒரு சீரற்ற அணுகுமுறை


பரந்த அறிவியல் சரிபார்ப்பு இல்லாமல் ஒரே ஒரு கண்டுபிடிப்புகள் தொகுப்பால் மாற்று வரலாற்று கதைகளை உறுதிப்படுத்த முடியாது என்று ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தியது. இந்த பகுத்தறிவு உற்பத்தியில் முறையான கடுமை மற்றும் அறிவியல் விசாரணையை ஆதரிக்கும் அதே வேளையில், மற்ற அகழ்வாராய்ச்சி திட்டங்களில் இந்திய தொல்லியல் துறை நடத்தையில் உள்ள முரண்பாட்டையும் இது அம்பலப்படுத்துகிறது.


தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை (Adichanallur and Sivagalai) போன்ற இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் கீழடியைப் போன்ற ஒரு அமைப்பைக் காட்டின. ஆதிச்சநல்லூர் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் தொல்லியலாளர் அலெக்சாண்டர் ரீ அவர்களால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டபோதிலும், அந்த இடம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக புறக்கணிக்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டில், இந்திய தொல்லியல் துறையின் டி.சத்யமூர்த்தியின் தலைமையில் அகழ்வாராய்ச்சி மீண்டும் தொடங்கியபோது, 3,000 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க இரும்பு யுக கலைப்பொருட்கள் (Iron Age artefacts) கண்டுபிடிக்கப்பட்டன. இருப்பினும், இந்திய தொல்லியல் துறை கண்டுபிடிப்புகளை வெளியிட 15 ஆண்டுகளுக்கும் மேலாகவும் நீதிமன்ற தலையீடும் தேவைப்பட்டது.


இருப்பினும், ராஜஸ்தானில் இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சி வேறொரு பாதையை எடுத்தது. பஹாஜ் கிராமத்தில் 23 மீ ஆழமான பழங்கால நீர்வழியின் கண்டுபிடிப்பு சில வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்லியலாளர்கள் இந்த இடத்தை ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புராண சரஸ்வதி நதியுடன் இணைக்கத் தூண்டியது. அகழ்வாராய்ச்சி அறிக்கை, ‘மகாபாரத காலத்திலிருந்து’ மனித குடியிருப்புகளுடன் தொடர்புகளைக் கூறியது. இது அறிஞர்களால் விவாதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கால இடைவெளியாகும். புராண அடிப்படையிலான வரலாறுகளை கண்முடித்தனமாக ஏற்றுக்கொள்வது அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சான்றுகள் சார்ந்த கொள்கைகளுக்கு எதிரானது.


இந்திய தொல்லியல் துறையின் நடவடிக்கைகள், வழிமுறை தேசியவாதம் எனப்படும் இந்தியாவின் கடந்தகாலத்தின் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பதிப்பை நோக்கிய ஒரு சார்பைக் காட்டுகின்றன. இது பெரும்பாலும் கடுமையான முறைகள், முன்னரே தீர்மானிக்கப்பட்ட முடிவுகள் மற்றும் வரலாறு எவ்வாறு புரிந்து கொள்ளப்படுகிறது என்பதற்கான கட்டுப்பாடு ஆகியவற்றால் நியாயப்படுத்தப்படுகிறது.  இந்தியாவை ஒற்றை, ஒருங்கிணைந்த நாகரிகமாகக் காட்ட முயற்சிப்பதற்காக இந்திய தொல்லியல் துறை கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. ஆஷிஷ் அவிகுந்தக் (2021) தன்னிச்சையான இடமாற்றங்கள், தாமதமான பதவி உயர்வுகள், எரிச்சலூட்டும் பணி நிலைமைகள் மற்றும் இந்திய தொல்லியல் துறையால் தரமான பணிகளைத் தடுக்கும் போதுமான உள்கட்டமைப்பு இல்லாததை எடுத்துக்காட்டினார். அயோத்தி அகழ்வாராய்ச்சித் திட்டம் அறிவியல் ஒருமைப்பாடு இல்லாததற்காக சுப்ரியா வர்மா மற்றும் ஜெயா மேனன் (2003) விமர்சித்தனர். காலாவதியான வீலர் முறையை இந்திய தொல்லியல் துறை தொடர்ந்து நம்பியிருப்பதையும், விரிவான ஆராய்ச்சி வடிவமைப்புகள் இல்லாததையும் ஜூர்கன் நியூஸ்  (2012) மற்றும் திலீப் குமார் சக்ரவர்த்தி (1988, 2003) ஆகியோர் சுட்டிக்காட்டினர்.


இந்திய தொல்லியல் துறை பெரும்பாலும் மூடப்பட்ட உள் மதிப்பாய்வு அமைப்பை (closed internal review system) தக்கவைத்துக் கொண்டுள்ளது. பெரும்பாலான ஆராய்ச்சிகள் உள் அறிக்கைகள், நிறுவன ஒற்றைக்கோல் (institutional monographs) மற்றும் செய்திக்குறிப்புகள் மூலம் பரப்பப்படுகின்றன. இதற்கு மாறாக, ஜெர்மனியில் உள்ள Deutsches Archäologisches Institute, பிரான்சில் உள்ள (Institute National de Recherches Archéologiques Préventives) மற்றும் (Japan's Agency for Cultural Affairs) போன்ற உலகளாவிய நட்பு நாடுகள் தொடர்ந்து கல்வி தளங்களில் கண்டுபிடிப்புகளை வெளியிடுகின்றனர். இது வெளிப்படைத்தன்மை, வழிமுறை பொறுப்புக்கூறல், அறிவார்ந்த கடுமை ஆகியவற்றை வளர்க்கிறது மற்றும் தொல்பொருள் கண்டுபிடிப்புகளின் அணுகலை மேம்படுத்துகிறது. இது உலகளாவிய அறிவார்ந்த ஈடுபாட்டையும் அழைக்கிறது.


இந்தப் பிரச்சினைகளைத் தாண்டி, இந்திய தொல்லியல் துறையின் அறிவியல் முயற்சி அதிகரித்துவரும் தேசியவாத உணர்வால் பாதிக்கப்படுகிறது. தொல்லியல் முயற்சியின் சிதைந்துவரும் நியாயம் விரிவான கட்டமைப்பு மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள், அதிக முறையியல் மற்றும் அறிவியல் கடுமை, நிதி சுதந்திரம் மற்றும் இந்தியாவின் வரலாறு கடந்தகாலத்தின் பன்முகத்தன்மையை உள்ளடக்கிய ஒரு வலுவான அறிவாற்றல் கட்டமைப்பு ஆகியவை தேவைப்படுகின்றன.


ஸ்வரதி சபாபண்டிட், ஆராய்ச்சி அறிஞர்; சி.பி. ராஜேந்திரன், பெங்களூரு தேசிய மேம்பட்ட அறிவியல் நிறுவனத்தின் துணைப் பேராசிரியர்.



Original article:

Share:

புதிய அரசியலமைப்பு மசோதா, ஒரு சமநிலை சட்டத்தின் தேவை -சமயேதா பால்

 நாடாளுமன்ற கூட்டுக் குழு (Joint Parliamentary Committee) 2025ஆம் ஆண்டு  அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 130-வது சட்டத்திருத்த மசோதாவின், உருவாக்கத்தை கவனமாக மறுபரிசீலனை (recalibrate) செய்ய வேண்டும்.


அரசியல் வர்க்கத்தில் தார்மீக ஒருமைப்பாடு (moral integrity) என்பது இந்தியா தொடர்ந்து போராடி வரும் ஒரு முரண்பாடாகும். ஒரு புறம், இந்திய வாக்காளர்கள் நேர்மையான அரசியல்வாதிகளை விரும்புகிறார்கள். மறுபுறம், பல அரசியல்வாதிகள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர்.  2025ஆம் ஆண்டு  அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 130-வது சட்டத்திருத்தம் மசோதா, ஒரு நிபந்தனையை வழங்குவதன் மூலம் இந்த வெற்றிடத்தை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவின் கீழ், ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களில் தொடர்ச்சியாக 30 நாட்கள் காவலில் இருந்தால், பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சராகளாக இருந்தாலும் அவர்கள் ராஜினாமா செய்யவேண்டும் அல்லது தானாகவே பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும்.


முதல் பார்வையில், இந்த நடவடிக்கை தூய்மையான அரசியலை செயல்படுத்துவதற்கான ஒரு உறுதியான முயற்சியாக தோன்றுகிறது. காவலில் உள்ள ஊழல் செய்த தலைவர்கள் அதிகாரத்தில் இருந்தாலும் ஆட்சியில் நீடிப்பதால் மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழக்க நேரிடும் என்ற உண்மையை இது எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும், அதன் வாக்குறுதியின் பின்னணியில் அரசியல் ஆபத்துகளும் அரசியலமைப்புச் சிக்கல்களும் உள்ளன.


இந்த மசோதாவிற்கான அடித்தளம் அரசியலமைப்பின் 75, 164 மற்றும் 239AA போன்ற பிரிவுகளின் கீழ் இடம் பெற்றுள்ளது. அவை முறையே ஒன்றிய, மாநில மற்றும் டெல்லியில் அமைச்சர்களின் நியமனம் மற்றும் பதவிக்காலம் தொடர்புடையது. அரசியலமைப்பின் 75(1), 164(1) மற்றும் 239AA(5) பிரிவுகள் அமைச்சர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரின் (அல்லது ஆளுநரின்) விருப்பத்தின் பேரில் பதவி வகிக்க வேண்டும் என்று கூறுகின்றன. ‘விருப்பம்’ (pleasure) என்பது அரசியலமைப்பின் மதிப்புகளைப் பின்பற்றி நியாயமான மற்றும் சட்டபூர்வமான வழியில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றங்களால் விளக்கப்பட்டுள்ளது. ஷம்ஷேர் சிங் vs பஞ்சாப் மாநிலம் மற்றும் நபம் ரெபியா vs துணை சபாநாயகர் போன்ற வழக்குகளில் இது தெளிவுபடுத்தப்பட்டது.


நீதித்துறை தீர்ப்புகள் (Judicial pronouncements)


உச்சநீதிமன்றம், S.R. பொம்மை vs இந்திய ஒன்றியம் வழக்கில், அரசியலமைப்பு தார்மீகத்தை (constitutional morality) வழிகாட்டும் கொள்கையாகக் குறிப்பிட்டது. இதனால் ஜனநாயக நிறுவனங்கள் நேர்மை மற்றும் பொறுப்புணர்வின் மூலம் வளர்க்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. பின்னர், மனோஜ் நருலா vs இந்திய ஒன்றியம் வழக்கில், அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பதன் தார்மீக பக்கத்தைப் பற்றி நீதிமன்றம் பேசியது. கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நபர்களுக்கு அரசாங்க அதிகாரம் வழங்கப்படக்கூடாது என்று எச்சரித்தது. தானாகவே பதவி நீக்கம் செய்வதை நீதிமன்றம் நிறுத்திய போதிலும், அறநெறி அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் பகுதியாக இருப்பதை நீதிமன்றம் தெளிவாகக் குறிக்கிறது. இந்த மசோதா இந்த நீதிமன்ற தீர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் நீதிமன்றங்கள் ஏற்கனவே தார்மீகத் தேவை என்று கூறியதை சட்டமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


ஆனால், இந்த மசோதாவின் நோக்கமே தலையாயப் பிரச்சினையாக (Achilles’ heel) இருக்கலாம். மிகவும் வெளிப்படையான பிரச்சினை, குற்றமற்றவர் என்ற அனுமானக் கொள்கையைப் பற்றியது. இது பிரிவு 21-ன் கீழ் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையின் ஒரு பகுதியாகும். தண்டனை அல்லது குற்றச்சாட்டுகள் இல்லாமல், கைது மற்றும் தடுப்புக்காவலை நீக்குவதற்கான காரணங்களுடன் சமன் செய்வது, அடிப்படை அரசியலமைப்பின் மதிப்பை குறைப்பதற்கு சமமானதாகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(3) சில குற்றங்களில் தண்டனை பெற்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது பற்றி குறிப்பிடுகிறது. லில்லி தாமஸ் vs இந்திய ஒன்றியம் வழக்கில், உச்ச நீதிமன்றம், ஒரு சட்டமன்ற உறுப்பினர், தண்டனை (conviction) பெற்றால் மட்டுமே, உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று தீர்ப்பளித்தது. மேல்முறையீடு (appeal) செய்து சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வதற்கான மூன்றுமாத கால அவகாசமும் ரத்து செய்யப்பட்டது. இதனால், மசோதா வருவதற்கு முன்பே கடுமையான பொறுப்புக்கூறலுக்கான (accountability) ஆதரவை நீதித்துறை வழங்கியது. இங்கு, ஒருவர் கைது செய்யப்படும்போது அல்லது தடுப்பு காவலில் வைக்கப்படும்போது தகுதியிழப்பு (disqualification) செய்யப்படுவதில்லை. மாறாக, அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னரே தகுதி நீக்க நடவடிக்கை தொடங்குகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இந்த பிரச்சினை, அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது பிரிவில் 5க்குப் பிறகு 5A பிரிவு, 164வது பிரிவில் 4க்குப் பிறகு 4A பிரிவு, மற்றும் 239AA பிரிவில் 5க்குப் பிறகு 5A பிரிவு ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் மசோதாவின் நிர்வாக விருப்பத்திற்கு உட்பட்ட தன்மையால் மேலும் சிக்கலாகிறது. பிரதமர் அல்லது முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் அமைச்சர்கள் நீக்கப்படலாம், ஆனால் அத்தகைய ஆலோசனை தவிர்க்கப்பட்டால் தானியங்கி நீக்கம் நடைமுறைக்கு வரும். இந்த இரட்டை முறைமை செயல்முறையை அரசியலாக்குகிறது: ஒரு பிரதமர் தனது நண்பர்களை 30 நாட்களுக்கு பாதுகாக்கலாம், அதே சமயம் எதிர்மறையான முதலமைச்சர் தனது போட்டியாளர்களை தானியங்கி விதியின் மூலம் வீழ்த்த அனுமதிக்கலாம். ஆட்சியை கட்சி அரசியலில் இருந்து பாதுகாப்பதற்கு பதிலாக, இந்த மசோதா பொறுப்புக்கூறலை அரசியல் கணக்கீடுகளின் மாறும் மணலில் புதைக்கும் அபாயத்தை உருவாக்குகிறது.


அணுகுமுறையில் ஒழுங்கின்மை


சட்டமியற்றுபவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இடையிலான முரண்பாடு உள்ள சீரற்றத் தன்மை விவகாரங்களை மேலும் சிக்கலாக்குகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (Representation of the People Act) கீழ் தண்டனை பெற்றால் மட்டுமே தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். இதற்கு மாறாக, இந்த மசோதாவின் கீழ் அமைச்சர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டால்கூட ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்படுவார்கள். இது ஒரு முரண்பாடான நிலையை உருவாக்குகிறது. இதில் ஊழலுக்காக தண்டிக்கப்பட்ட ஒரு சட்டமியற்றுபவர் தொழில்நுட்பரீதியாக சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்யப்படும்வரை அமைச்சராகத் தொடரலாம். அதே, நேரத்தில் கைது செய்யப்பட்ட ஒரு அமைச்சர் கட்டாயமாக வெளியேற்றப்படுவார். இந்த சமச்சீரற்றத்தன்மை (asymmetry) நிர்வாகப் பதவிக்கான தரத்தை உயர்த்துவதாகத் தோன்றலாம். ஆனால் அரசியலமைப்பின்கீழ், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் நடத்தப்படும் விதத்தில் நியாயமற்ற தன்மையையும் உருவாக்குகிறது. நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மற்ற சட்டமன்ற உறுப்பினர்களைவிட கடுமையான தண்டனையை அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதால், திறமையான நபர்கள் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் அபாயம் உள்ளது.


"சுழலும் கதவு (revolving door)" என்ற பிரச்சினையும் உள்ளது. இந்த மசோதா, ஒரு அமைச்சர் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு மீண்டும் நியமனத்தை அனுமதிப்பதால், சட்ட நடவடிக்கைகளின் வேகத்தைப் பொறுத்து பதவி விலகல் மற்றும் மீண்டும் நியமனம் என்ற சுழற்சிகள் ஏற்படலாம். ஒரு முதலமைச்சர் கைது செய்யப்பட்டு 31 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு, பதவி விலக வேண்டிய கட்டாயத்தில் இருந்து, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உடனடியாக ஆளுநரால் மீண்டும் நியமிக்கப்படுவதை கற்பனை செய்யுங்கள். மாநிலம் பல வாரங்கள் அரசியல் நிச்சயமின்மையை சகித்திருக்கும், ஆனால் நெறிமுறை பொறுப்புணர்வில் எந்தப் பயனும் இல்லாமல் இருக்கும். இத்தகைய நிலையற்ற தன்மை ஆளுமையை பலவீனப்படுத்துவது மட்டுமல்லாமல், அரசியல் பங்கேற்பாளர்கள் சட்டத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி நிர்வாக பதவிகளை கையாளுவதற்கு தந்திரோபாய சட்ட நகர்வுகளை ஊக்குவிக்கலாம்.


மிகவும் நுணுக்கமான மாதிரியின் தேவை


இவற்றில் எதுவும் சீர்திருத்தத்தின் அவசரத்தை மறுப்பதல்ல. அரசியலில் குற்றமயமாக்கல் (criminalisation) என்பது தெளிவாக ஒரு கடுமையான பிரச்சினையாகும். ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் விரிவான பகுப்பாய்வின்படி, 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற 543 வேட்பாளர்களில் 251 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (46%) தங்களுக்கு எதிராக உள்ள குற்ற வழக்குகளை குறிப்பிட்டுள்ளனர். இது 2019-ஆம் ஆண்டில் 43%, 2014-ஆம் ஆண்டில் 34% மற்றும் 2009-ஆம் ஆண்டில் 30%-ஆக இருந்தது. இது 15 ஆண்டுகளில் 55% அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், அதன் கடுமையான அணுகுமுறை நியாயம் மற்றும் அரசாங்க நிலைத்தன்மைக்கும் (stability of governance) தீங்கு விளைவிக்கும். மிகவும் கவனமான முறை ஜனநாயகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் அதே வேளையில் தூய்மையான அரசியலைப் பாதுகாக்கும்.


ஒரு பாதை, நீக்கத்தை கைது செய்வதோடு அல்ல, மாறாக, தகுதிவாய்ந்த நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுகளை உருவாக்குவது போன்ற நீதித்துறை சாதனைகளுடன் இணைப்பதாகும். இது ஆரம்ப நீதிமன்ற சோதனையில் தேர்ச்சி பெறும் வழக்குகள் மட்டுமே ராஜினாமாவுக்கு வழிவகுக்கும். போலியான அல்லது அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட கைதுகளை வடிகட்டுவதை உறுதிசெய்யும். மற்றொரு பாதுகாப்பு நடவடிக்கையாக, நீக்கத்திற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆராய, ஒரு தீர்ப்பாயம் அல்லது நீதித்துறை குழு போன்ற ஒரு தன்னிச்சையான மறுஆய்வு பொறிமுறையை நிறுவுவது இருக்கலாம். இது நிர்வாகத்தின் அத்துமீறலைத் தடுக்கும் மற்றும் பாரபட்சமற்ற நடவடிக்கையை உறுதிசெய்யும். இதேபோல், முற்றிலுமாக பதவி நீக்கம் செய்வதற்குப் பதிலாக, விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது அமைச்சர்களின் செயல்பாடுகளை இடைக்காலமாக நிறுத்தி வைப்பதற்கு சட்டத்தால் வழிவகுக்க முடியும். இது பொறுப்புக்கூறலில் சமரசம் செய்யாமல் ஆட்சியைத் தொடர அனுமதிக்கிறது. முக்கியமாக, இந்த மசோதா, ஒப்பீட்டளவில் சிறிய குற்றச் செயல்களை உள்ளடக்கிய ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய எந்தவொரு குற்றத்திற்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ஒழுக்கக் கேடு (turpitude) மற்றும் ஊழல் (corruption) சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் அதன் நோக்கத்தைச் செம்மைப்படுத்த வேண்டும்.


சுருக்கமாக, 2025ஆம் ஆண்டு  அரசியலமைப்பின் 130-வது சட்டத்திருத்த மசோதா, ஊழல் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிரான ஒரு வலிமையான நிலைப்பாடாக குடிமக்கள் வரவேற்கக்கூடிய ஒரு குறிப்பிடத்தக்க நெறிமுறை நிலைப்பாட்டை முன்வைக்கிறது. ஆனால், அது எழுதப்பட்ட விதம் நியாயமான நீதியைப் பாதுகாப்பதற்கும் நெறிமுறை நிர்வாகத்திற்கான அவசரத் தேவைக்கும் இடையிலான மோதலைப் புறக்கணிக்கிறது. மசோதாவை முறையான நடைமுறைகள் மற்றும் சரிபார்ப்புகளைச் சேர்க்க நாடாளுமன்ற கூட்டுக் குழு (Joint Parliamentary Committee (JPC)) மசோதாவை மறுபரிசீலனை என்றால், அது அரசியலமைப்பு பாதுகாப்புகளை அரசியல் விலக்குக்கான கருவிகளாக மாற்றி, இந்தியாவின் ஜனநாயகத்தை அச்சுறுத்தும் அபாயத்தை ஏற்படுத்தும். ஏனெனில், நீண்டகாலத்திற்கு, நேர்மை இல்லாத அதிகாரம் ஜனநாயகத்தைப் பாதிக்கும். மேலும், நியாயம் இல்லாத நேர்மை அதற்கு ஆபத்தை விளைவிக்கும்.


சமயேதா பால் ஒரு வழக்கறிஞர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான முன்னாள் சட்டமன்ற உதவியாளர் (Legislative Assistants to Members of Parliament (LAMP)) (2024-25) மற்றும் தற்போது நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் கொள்கை ஆராய்ச்சியாளராக உள்ளார்.



Original article:

Share: