புயல்களைப் புரிந்துகொள்ளுதல் : உருவாக்கம், பெயரிடுதல் மற்றும் காலநிலை மாற்ற தொடர்புகள் பற்றி.. -ரோஷ்னி யாதவ்

 மோந்தா புயல் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. புயல்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மிகவும் கடுமையான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக உள்ளதால், அவை எவ்வாறு உருவாகின்றன, அவை எவ்வாறு பெயரிடப்படுகின்றன மற்றும் காலநிலை மாற்றம் அவற்றை எவ்வாறு மோசமாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வோம்.


பிரச்சினை என்ன?


அக்டோபர் 28-ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை கடந்த மோந்தா புயலின் காரணமாக 3 பேர் உயிரிழந்தனர். 1.5 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் பயிர்டப்பட்டிருந்த பயிர்களை இந்த புயல் சேதப்படுத்தியது. மின்சாரம் மற்றும் போக்குவரத்தை புயல் பாதித்தது. முன்னதாக, சக்தி புயல் குஜராத் அருகே உருவானது. ஆனால், இந்தியாவை விட்டு நகர்ந்து சென்றது. ஒவ்வொரு ஆண்டும் புயல்கள் உருவாவது தொடர்பாக செய்திகள் வெளியாகின்றன. இந்த குறிப்பிடத்தக்க புவியியல் நிகழ்வை பரந்த கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வது அவசியம்.


புயல் என்றால் என்ன? அது எவ்வாறு உருவாகிறது. புயல் கரையைக் கடக்கும்போது என்ன நடக்கிறது?


புயல்  என்பது குறைந்த அழுத்தப் பகுதியின் மையத்தைச் சுற்றி சுழலும் ஒரு பெரிய அளவிலான காற்று அமைப்பாகும். இது கடும் புயல்கள் மற்றும் மோசமான வானிலையுடன் இருக்கும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (National Disaster Management Authority (NDMA)) கூற்றுப்படி, ஒரு புயல் என்பது வடக்கு அரைக்கோளத்தில் கடிகார சுழற்சிக்கு எதிர்திசையிலும் (anticlockwise), தெற்கு அரைக்கோளத்தில் கடிகார திசையிலும் சுழலும் உள்நோக்கிய சுழல் காற்றுகளால்  (inward spiralling winds) வகைப்படுத்தப்படுகிறது. கூடுதல் வெப்பமண்டல புயல்கள் மற்றும் வெப்பமண்டல புயல்கள் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் புயல்களை பரவலாக இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்துகிறது.


வெப்பமண்டல புயல்கள் (Tropical cyclones)


மகர மற்றும் கடக வெப்பமண்டலங்களுக்கு (Tropics of Capricorn and Cancer) இடையிலான பகுதிகளில் வெப்பமண்டல புயல்கள் உருவாகின்றன. அவை பூமியில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அழிவுகரமான புயல்கள் ஆகும். புயலின் மைய பகுதிக்கு அருகில் இடியுடன்கூடிய மழை பெய்யும்போது இந்த புயல்கள் உருவாகின்றன. மேலும், பலத்த காற்றும் மழையும் தொலைவில் இல்லாமல் மையத்திற்கு அருகில் இருக்கும் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration (NOAA)) என்று கூறுகிறது.


வெப்பமண்டல புயல்கள் உருவாகும் போது மையப்பகுதி வெப்பமடைகிறது. மேலும், அது சூடான கடலில் இருந்து நீராவி திரவ நீராக (liquid water) மாறும்போது வெளியாகும் வெப்பத்திலிருந்து பெரும்பாலான ஆற்றலைப் பெறுகிறது. மற்ற புயல்களைப் போல் இல்லாமல், வெப்பமண்டல புயல்கள் சூடான அல்லது குளிர் முகடுகள் வெப்பமண்டல புயல்களுடன் தொடர்புடையவை அல்ல.




வெப்பமண்டல புயல்கள் அவை எங்கு உருவாகின்றன, எவ்வளவு வலிமையானவை என்பதைப் பொறுத்து வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. உதாரணமாக, கரீபியன், மெக்சிகோ வளைகுடா, வடக்கு அட்லாண்டிக் மற்றும் கிழக்கு/மத்திய வடக்கு பசிபிக் பகுதிகளில் அவை Hurricanes என்று அழைக்கப்படுகின்றன. மேற்கு வடக்கு பசிபிக் பகுதியில், அவை typhoons என்று அழைக்கப்படுகின்றன.










கூடுதல் சக்தி கொண்ட வெப்பமண்டல புயல்கள் (Extratropical cyclones)


மத்திய அட்சரேகை புயல்கள் (mid-latitude cyclones) என்றும் அழைக்கப்படும், கூடுதல் சக்திகொண்ட வெப்பமண்டல புயல்கள் வெப்பமண்டலத்திற்கு வெளியே நிகழ்கின்றன. அவை, "அவற்றின் மையப் பகுதியில் குளிர்ந்த காற்றைக் கொண்டுள்ளன. மேலும், குளிர் மற்றும் சூடான காற்றுத் திரள்கள் தொடர்பு கொள்ளும்போது வெளிப்படும் ஆற்றலிலிருந்து அவற்றிற்குத் தேவையான ஆற்றலைப் பெறுகின்றன" என்று அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) தெரிவித்துள்ளது.



இந்த புயல்கள் எப்போதும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முனைகளைக் கொண்டிருக்கும். இரண்டு வெவ்வேறு வகையான காற்றுத் திரள்களுக்கு இடையிலான எல்லையாக இருக்கும் ஒரு வானிலை அமைப்பாக இந்த புயல்கள் உள்ளன. ஒன்று சூடான காற்றாலும் மற்றொன்று குளிர்ந்த காற்றாலும் குறிக்கப்படுகிறது மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், அவை நிலம் அல்லது கடல் மீது நிகழலாம்.




புயல் கரையை கடப்பது பற்றி


எளிமையாகச் சொன்னால், கடலில் இருந்த ஒரு வெப்பமண்டலப் புயல் நிலத்திற்கு வரும் நிகழ்வே புயல் கரையை கடக்கும் நிகழ்வாகும். இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி (India Meteorological Department (IMD)) புயலின் மையம் – அல்லது அதன் கண் – கரையோர பகுதிக்கு அருகில் நகரும்போது வெப்பமண்டலப் புயல் கரையை கடந்ததாக  கருதப்படும்.


முக்கியமாக, புயல் கரையை கடப்பது என்பது ‘நேரடி தாக்கம்’ என்று குழப்பிக் கொள்ளக் கூடாது. புயல் நிலபகுதிக்கு அருகில் வரும் போது கரையை கடக்கிறது. நேரடித் தாக்கம் என்பது புயலின் மையம் கடலோரப் பகுதியில் இருந்தாலும் கூட, வலுவான காற்று (கண் பகுதி) நிலத்தை கடப்பதைக் குறிக்கிறது. தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் கூற்றுப்படி, வெப்பமண்டல புயலில் வலுவான காற்று எப்போதும் மைய பகுதியில் இருக்காது. ஒரு புயல் கரையை கடக்காவிட்டாலும் அந்த புயல் கடற்கரைக்கு அருகில் நிலை கொள்ளும் போது கடலோர பகுதியில் பலத்த காற்று  வீச வாய்ப்புள்ளது.


புயல் கரையை கடக்கும் போது ஏற்படும் சேதம், புயலின் தீவிரத்தைப் பொறுத்தது, அதன் காற்றின் வேகத்தால் குறிக்கப்படுகிறது. அதிதீவிர புயல் "மிகக் கடுமையானதாக" இருந்தால், அதன் தாக்கத்தில் கட்டிடமில்லா வீடுகளுக்கு (Kutcha houses) பரவலான சேதம், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளில் ஓரளவு இடையூறு, ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தில் சிறிய இடையூறு, பறக்கும் குப்பைகள் மற்றும் தப்பிக்கும் பாதைகளில் வெள்ளப்பெருக்கு போன்ற அச்சுறுத்தல்கள் இருக்கலாம். இந்த வகையான சேதத்திற்குப் பின்னால் உள்ள காரணிகளில் மிகவும் பலத்த காற்று, கனமழை மற்றும் புயல் காரணமாக ஏற்படும் அலைகள் ஆகியவை அடங்கும், அவை கடற்கரையில் பேரழிவு தரும் வெள்ளத்தை ஏற்படுத்துகின்றன.


புயல் கரையைக் கடப்பது சில மணிநேரங்கள் நீடிக்கும், அவற்றின் சரியான கால அளவு காற்றின் வேகம் மற்றும் புயல் அமைப்பின் அளவைப் பொறுத்தது. குறிப்பிடத்தக்க வகையில், ஈரப்பதம் குறைதல் மற்றும் மேற்பரப்பு உராய்வின் அதிகரிப்பு காரணமாக புயல் நிலத்தின் மீது நகர்ந்தவுடன் அவற்றின் தீவிரத்தை இழக்கின்றன. இதன்பொருள் புயல் கரையைக் கடப்பது பெரும்பாலும் புயல்களின் மிகவும் பேரழிவுகரமான தருணங்களாக இருந்தாலும், அவை அவற்றின் முடிவின் தொடக்கத்தையும் குறிக்கின்றன.




கேள்வி 2: புயல்களுக்கு எவ்வாறு பெயரிடப்படுகிறது. இந்தப் பெயரிடும் முறையின் முக்கியத்துவம் என்ன?


UPSC Issue at a Glance | All About Cyclones: Formation, Naming and Climate Link

2000ஆம் ஆண்டில், வங்காளதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய உலக வானிலை ஆய்வு அமைப்பு/ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக குழு (World Meteorological Organization / Economic and Social Commission for Asia and the Pacific Panel on Tropical Cyclones (WMO/ESCAP (PTC))) என்ற நாடுகளின் குழு, சுழற்சி அடிப்படையில் இந்தப் பகுதியில் புயல்களுக்குப் பெயரிடத் தொடங்க முடிவு செய்தது. ஒவ்வொரு நாடும் பரிந்துரைகளை அனுப்பிய பிறகு, வெப்பமண்டல புயல்களுக்கான பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக குழு (PTC) பட்டியலை இறுதி செய்தது.


2018ஆம் ஆண்டில், WMO/ESCAP குழு ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன் போன்ற ஐந்து நாடுகளைச் சேர்த்தது. 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட 169 புயல் பெயர்கள் இந்த நாடுகளால் வழங்கப்பட்டன. 13 உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் 13 பெயர்களை பரிந்துரைத்தன.


உலகளவில், ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்கள் (Regional specialised meteorological centres (RSMCs)) மற்றும் ஐந்து பிராந்திய வெப்பமண்டல புயல் எச்சரிக்கை மையங்கள் (Tropical Cyclone Warning Centres (TCWCs)) வெப்பமண்டல புயல்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் பெயரிடுவதற்கும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. WMO/ESCAP குழுவின்கீழ் 13 உறுப்புநாடுகளுக்கு வெப்பமண்டல புயல் மற்றும் புயல் எழுச்சி ஆலோசனைகளை வழங்கும் ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆய்வு மையம் உள்ளது. வங்காள விரிகுடா மற்றும் அரேபிய கடல் உட்பட வட இந்தியப் பெருங்கடலில் (north Indian Ocean (NIO)) உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கு பெயரிடவும் புது டெல்லியின் RSMC கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வெவ்வேறு பெருங்கடல் படுகைகளில் (Ocean basins) உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கு சம்பந்தப்பட்ட சிறப்பு வானிலை மையங்கள் & வெப்பமண்டல புயல் எச்சரிக்கை மையங்கள் பெயரிடுகின்றன.


புயல்களுக்கு பெயரிடும்போது சில மரபுகளும் உள்ளன, சில விதிகளைப் பின்பற்ற வேண்டும், அந்த விதிகள் பின்வருமாறு:


  • முன்மொழியப்படும் பெயர் (அ) அரசியல் மற்றும் அரசியல் கட்சி சார்ந்த நபர்கள் (ஆ) மத நம்பிக்கைகள் (இ) கலாச்சாரங்கள் மற்றும் (ஈ) பாலினம் ஆகியவற்றுக்கு நடுநிலையாக இருக்க வேண்டும்.


  • பெயர் உலகம் முழுவதும் உள்ள எந்த மக்கள் குழுவின் உணர்வுகளையும் புண்படுத்தாத வகையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.


  • அது மிகவும் கடுமையானதாகவோ கொடூரமானதாகவோ இருக்கக் கூடாது.


  • அது குறுகியதாக, உச்சரிக்க எளிதாகவும் எந்த உறுப்பினரையும்  புண்படுத்தாத  வகையில் இருக்க வேண்டும்.


  • பெயரின் அதிகபட்ச நீளம் 8 எழுத்துகளாக இருக்கும்.


பொதுமக்களுக்கு உதவுவதைத் தவிர, புயல்களுக்கு பெயரிடுவது அறிவியல் சமூகம், ஊடகங்கள், பேரிடர் மேலாளர்கள் போன்றோருக்கும் உதவுகிறது. ஒரு பெயருடன், தனிப்பட்ட வகையில் புயல்களை அடையாளம் காண்பது எளிதாகிறது. அதன் உருவாக்கம் குறித்த விழிப்புணர்வை உருவாக்குகிறது, எச்சரிக்கைகளை விரைவாகப் பரப்பி சமூக தயார்நிலையை அதிகரிக்கிறது.


கேள்வி 3: வங்காள விரிகுடாவில் அடிக்கடி சூறாவளிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏன்?


UPSC Issue at a Glance | All About Cyclones: Formation, Naming and Climate Link

உலகின் மிகப்பெரிய விரிகுடாவான வங்காள விரிகுடா, 2,600,000 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இது பூமியில் புயல்களின் காரணமாக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் ஒன்றாகும். தீவிர வானிலையை வெளிக்காட்டும் புயல் விஞ்ஞானியும் வானிலை ஆய்வாளருமான டாக்டர் Dr Jeff Masters, யேல் காலநிலை இணைப்புகள் தளத்தில் வெளியிட்ட ஆய்வின்படி, உலக வரலாற்றில் 30 கொடிய வெப்பமண்டல புயல்களில் 22 வங்காள விரிகுடாவிலும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளிலும் பதிவாகி இருப்பதாக தெரிவித்தார்.


2009ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையின்படி, அரபிக் கடலைவிட வங்காள விரிகுடாவில் அதிக வெப்பமண்டல புயல்கள் உருவாகின்றன என்றும், புயல் அலைகளின் வேகம்  அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டது. வங்காள விரிகுடா பெரிய புயல் அலைகளுக்கு ஆளாகிறது. அதன் குழாய் போன்ற வடிவம் (funnel-like shape) மற்றும் நிலப்பரப்பு கடற்கரையிலிருந்து அதிக தூரம் ஆழமற்ற நிலப்பரப்பு காரணமாக, பெரிய புயல் அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த தனித்துவமான புவியியல் வடிவம் உலக வரலாற்றில் மிகவும் கொடிய பேரழிவுகளில் சிலவற்றை இந்தப் பகுதி காண காரணமாக அமைந்துள்ளது.


வங்காள விரிகுடாவின் வடக்குப் பகுதி மிகவும் ஆழமற்றது, அங்கு கடற்கரை மூன்று பக்கங்களிலும் நிலத்தால் சூழப்பட்டுள்ளது. மிகவும் கடுமையான புயல் கடற்கரையை நெருங்கும்போது, ​​காற்றழுத்தத்தால் உருவாகும் மிகப்பெரிய புயல் வேகம் புயல் ஏற்பட்டு அப்பகுதியைக் கடக்கும்போது கடலோரப் பகுதியை மூழ்கடிக்கும்.


மேற்கு வங்கம்-வங்கதேசப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கடற்கரையின் மற்றொரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், அங்கு பல ஆறுகள் மற்றும் சிறிய ஓடைகள் உள்ளன. மேலும், தீவுகளின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 4 முதல் 5 மீட்டர் வரை உள்ளன. கடல் சுவர்கள் மற்றும் கரைகள் வலுவான அலைகளைத் தடுக்க போதுமானதாக இல்லை மற்றும் ஒரு தாழ்வு நிலை அல்லது கடமையான புயல் உருவானால் இந்தப் பகுதி மூழ்கிவிடும். இந்தப் பகுதியைக் கடக்கும் புயல்களின் வேகம் அதிகமாக உள்ளது. இவை அனைத்தும் இந்தப் பகுதியைப் பாதிக்கும் புயல்களின் தாக்கத்தின் தீவிரத்திற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன.


2020-ல் வெளியிடப்பட்ட 'வடக்கு வங்காள விரிகுடாவில் கரையோரப் பகுதி மற்றும் கடலோர நிலப்பரப்பின் தாக்கம்' என்ற தலைப்பிலான ஒரு கல்விக் கட்டுரை, புயல் அலைகளால் ஏற்படும் அழிவு கடற்கரையின் வடிவத்தையும் சார்ந்துள்ளது என்று குறிப்பிடுகிறது. "புயல் அலை என்பது உள்ளூர் அம்சங்கள் மற்றும் நீர் ஓட்டத்தை பாதிக்கும் தடைகளைப் பொறுத்தது. வங்காள விரிகுடா, நதி டெல்டாக்கள், சிறிய விரிகுடா போன்ற பகுதிகள் மற்றும் நேரான நிலப்பரப்புகளைக் கொண்ட சிக்கலான கடற்கரையைக் கொண்டுள்ளது.


மற்றொரு முக்கியமான காரணி வெப்பநிலை ஆகும். நீர் வெப்பமாக இருந்தால், புயல் அதிகமாக இருக்கும். மேலும், வங்காள விரிகுடா பொதுவாக அரபிக் கடலைவிட அதிக வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், சமீபத்திய காலநிலை மாற்றம் தொடர்பான இடையூறுகள் காரணமாக, இந்தியாவின் மேற்கு கடற்கரையும் அடிக்கடி மற்றும் வலுவான புயல்களைக் காண்கிறது.


வரலாற்றுரீதியாக, வங்காள விரிகுடா வெப்பமண்டல புயல்களுக்கு பெயர் பெற்றது. ஆனால், பல ஆண்டுகளாக அரபிக் கடலில் உருவாகும் புயல்களும் அதிகரித்துள்ளன. 1891–2020 வரையிலான வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களின் முந்தைய தரவுகளின் பகுப்பாய்வு, 1990ஆம் ஆண்டு முதல் அரபிக் கடலில் சமீபத்திய ஆண்டுகளில் மிகக் கடுமையான புயல்களின் வேகம் அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கிறது.


கேள்வி 4: காலநிலை மாற்றம் புயல்களின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தை எவ்வாறு பாதிக்கிறது?


வறட்சி, நீர் பற்றாக்குறை, கடுமையான காட்டுத்தீ, கடல் மட்ட உயர்வு போன்ற காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எடுத்துக்காட்டும் அறிக்கைகளுக்கு பஞ்சமில்லை. புயல்களின் வேகம் மற்றும் தீவிரத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் தெளிவாகத் தெரிகிறது.


1850ஆம் ஆண்டு முதல் பூமியின் சராசரி உலகளாவிய வெப்பநிலை குறைந்தது 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. முதன்மையாக வளிமண்டலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு பசுமை இல்ல வாயுக்களை (greenhouse gases) வெளியிட்ட மனித நடவடிக்கைகள் காரணமாக இது போன்ற அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகரித்துவரும் வெப்பநிலை புயல்கள் அடிக்கடி ஏற்படுவதற்கும், அவை வலுவடைவதற்கும் காரணமாகின்றன.


அதிகரித்து வரும் வெப்பநிலை புயல்களை மேலும் வலுவாக்குகிறது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. 2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, உலக வெப்பநிலை குறைந்தது 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் கிழக்கு பசிபிக் பகுதியில் ஏற்படும் பெரிய புயல் நிலச்சரிவுகள் 30% வரை அடிக்கடி நிகழக்கூடும் என்று கூறியுள்ளது. பெருங்கடல்களின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதே இத்தகைய புயல்களுக்கு முக்கிய காரணியாக உள்ளது.


கடந்த சில ஆண்டுகளில், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தால் உருவாகும் கூடுதல் வெப்பத்தில் 90% பெருங்கடல்கள் உறிஞ்சியுள்ளன. இதன் காரணமாக, உலகளாவிய சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை 1850 முதல் 0.9 டிகிரி செல்சியஸுக்கு அருகில் அதிகரித்துள்ளது. மேலும். கடந்த, 40 ஆண்டுகளாக கடல் மேற்பரப்பு 0.6 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. வெப்பமான கடல் நீர் கடல் வெப்ப அலைகளை உருவாக்குகிறது, இவை தீவிர வானிலை நிகழ்வுகள் ஆகும், இது புயல்கள் மற்றும் வெப்பமண்டல புயல்கள் போன்ற புயல்களை மேலும் தீவிரமாக்குகிறது.



Original article:

Share:

இந்தியாவிற்கு அரையளவிலான-கூட்டாட்சி மாதிரி (quasi-federal model) நிர்வாக முறையே சிறந்த பொருத்தமாக உள்ளது -ரவீந்திர கரிமெல்லா மற்றும் சிருஷ்டி ஸ்ரீவஸ்தவா

 இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பு, ‘தன்னாட்சியுடன் பகிர்ந்து ஆட்சி செய்யும் முறை (self-rule with shared-rule) என்ற கொள்கையில் வேரூன்றியுள்ளது. இது அதன் பன்முகத்தன்மையை ஒரு ராஜதந்திர சொத்தாக மாற்ற உதவியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில், ஒற்றுமையும் பன்முகத்தன்மையும் ஒன்றாக இருந்து ஒன்றையொன்று வலிமையாக்க முடியும் என்பதை இது காட்டுகிறது.


இந்தியா தனது அரசியலமைப்பின் 76-வது ஆண்டு நிறைவைக் கொண்டாட உள்ளது. இது அதன் மதிப்புகள் மற்றும் தனித்துவமான அம்சங்களில் ஆர்வத்தைப் புதுப்பித்துள்ளது. கூட்டாட்சி அமைப்பு இந்த முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.


இந்தியக் கூட்டமைப்பு தனித்துவமானது - அது ஒரு வலுவான ஒன்றிய அரசாங்கத்தை நோக்கி சார்ந்துள்ளது. ஆனால், இன்னும் கூட்டாட்சியாகவே உள்ளது. இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.


மாநில மறுசீரமைப்பு நடைபெறுவதற்கு முன்பே அரசியலமைப்பு சபை (Constituent Assembly) அரசியலமைப்பை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. அரசியலமைப்புக் குழுவின் உறுப்பினர்களின் முக்கிய கவனம் நாட்டின் ஒற்றுமையை காப்பாற்றும் மற்றும் நிலைநிறுத்தும் விதிகளையும், அதே நேரத்தில் கூட்டாட்சி அமைப்பை பேணும் விதிகளையும் உருவாக்குவதில் இருந்தது.


ஜனவரி 26, 1950 அன்று அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோது, இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக மட்டுமல்லாமல், இந்தியாவின் வளமான மற்றும் பன்முக கலாச்சார, மொழி, மத மற்றும் பாரம்பரியத்தை உள்ளடக்கிய அரையளவிலான-கூட்டாட்சி (quasi-federal) நாடளுமன்ற அரசாங்க முறையையும் கொண்டிருந்தது. இந்தியா ஒற்றை அரசியலமைப்பு, குடியுரிமை, ஒருங்கிணைந்த நீதித்துறை மற்றும் அகில இந்திய சேவைகளுடன் குடியரசாக மாறியது. இது நமது முன்னோர்களின் தொலைநோக்குப் பார்வையை உயிர்ப்பித்தது. அசைக்க முடியாத நம்பிக்கையை நாட்டை ஒன்றாகப் பிடிக்கும் ஒரு நூலாக நாட்டை வளர்ச்சியடைய செய்தது. இது "வேற்றுமையில் ஒற்றுமை" (Unity in Diversity) என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.


இந்தியா ஏன் கூட்டாட்சி/அரையளவிலான-கூட்டாட்சி முறையை தேர்ந்தெடுத்தது


இந்த சூழலில், அரசியலமைப்பு சபை விவாதங்களிலிருந்து சில பகுதிகளை கவனிப்பது பயனுள்ளதாக இருக்கும்.


நவம்பர் 4, 1948 அன்று, பி.ஆர். அம்பேத்கர் Union vs Federation பற்றி அரசியலமைப்பு வரைவின் பிரிவு 1-ல் இந்தியாவை "மாநிலங்களின் ஒன்றியம்" என்று அழைப்பதில் சிலர் உடன்படவில்லை என்று கூறினார். இந்தியா ஒரு கூட்டமைப்பாக இருக்கும் என்பதை வரைவுக் குழு தெளிவுபடுத்த விரும்பியது. ஆனால், மாநிலங்கள் சேர ஒப்புக்கொண்டதால் அல்ல. எந்த மாநிலத்திற்கும் அதிலிருந்து வெளியேற உரிமை இல்லை. கூட்டமைப்பு (federation) ஒரு தொழிற்சங்கம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், அதை உடைக்க முடியாது. குழப்பம் அல்லது வாதங்களைத் தவிர்ப்பதற்காக ஆரம்பத்திலிருந்தே இதைத் தெளிவுப்படுத்துவது முக்கியம் என்று வரைவுக் குழு (Drafting Committee) உணர்ந்தது.


அரையளவிலான கூட்டாட்சி (quasi federalism) குறித்து அம்பேத்கர், “சில விமர்சகர்கள் ஒன்றிய அரசு மிகவும் வலுவானது என்று கூறியுள்ளனர். மற்றவர்கள் அதை இன்னும் வலுவாக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். வரைவு அரசியலமைப்பு ஒரு சமநிலையை ஏற்படுத்தியுள்ளது… ஒன்றிய அரசுக்கு எவ்வளவு அதிகாரங்களை மறுத்தாலும், ஒன்றிய அரசு வலுவடைவதைத் தடுப்பது கடினம்… அதை இன்னும் வலுவாக்கும் போக்கை நாம் எதிர்க்க வேண்டும்… அதை அவ்வளவு வலுவாக்குவது மடமையாகும், ஏனெனில் அது தனது சொந்த எடையால் வீழ்ச்சியடையலாம்.” என்று குறிப்பிட்டார்.


கூட்டாட்சி உள்ள பிற நாடுகளைப் போல் இல்லாமல், படையெடுப்பு அல்லது வெளிப்புறத் தாக்குதல்களுக்குப் பயந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கவில்லை என்றும், மாறாக, சுதந்திரத்திற்கான நமது கூட்டமைப்பு என்பது பல ஆண்டுகளாக சுதந்திரத்திற்கான எங்கள் தனித்துவமான போராட்டத்தின் இயல்பான விளைவாகும் நவம்பர் 18, 1949 அன்று, பி.ஜி. கெர் குறிப்பிட்டார்.


அரசியலமைப்பு தன்னை ஒரு கூட்டாட்சி என்றோ அல்லது ஒருங்கிணைந்த அரசு என்றோ விவரிக்கவில்லை. பிரிவு 1, "பாரதம் எனப்படும் இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என்று கூறுகிறது. நமது நாடு கூட்டாட்சி மற்றும் ஒற்றையாட்சி (unitary) ஆகிய இரண்டு அம்சங்கள் மற்றும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு அமைப்பையும் கொண்டுள்ளது. இந்திய அரசாங்கம் அரையளவிலான-கூட்டாட்சி கொண்டதாகும். அதிகாரம் ஒரு வலுவான ஒன்றிய  அரசிடம் உள்ளது. மாநில அரசாங்கங்களுக்கும் இடையில் அதிகாரம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்று விவரிக்கிறது.


பிரிவு 3 மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மாநிலங்களின் எல்லைகள், பகுதிகள் மற்றும் எல்லைகளை சட்டத்தின் மூலம் மாற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. இந்தியா எழுதப்பட்ட மற்றும் கடுமையான அரசியலமைப்பு, இரட்டை அரசியல் அமைப்பு, இருசபை முறை மற்றும் ஒன்றிய, மாநில மற்றும் பொதுப் பட்டியல்கள் (Union, State and Concurrent Lists) மூலம் ஒன்றிய-மாநில அதிகாரப் பிரிவினையை கொண்டுள்ளது. ஒன்றிய பட்டியலில் 97 பொருண்மைகளும், மாநில பட்டியலில் 61 பொருண்மைகளும் உள்ளன என்று விவரிக்கிறது.


நவம்பர் 25, 1949 அன்று, அரசியமைப்பு சட்டத்தின்ப்படி, ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் சட்டம் இயற்றுதல் மற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பிரிப்பதே கூட்டாட்சியின் முக்கிய அம்சம் என்று அம்பேத்கர் கூறினார்.


அவசரகால சூழ்நிலைகளில் (emergencies), மாநில பட்டியலில் உள்ள பாடங்களில் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. ஒரு சர்வதேச ஒப்பந்தத்தின் (international treaty) விளைவாக ஏற்படும் எந்தவொரு நடவடிக்கையை நிறைவேற்றுவதற்குத் தேவையான எந்தவொரு சட்டத்தையும் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது.


இத்தகைய சூழலில் மாநிலங்களவையின் (Council of States) பங்கு, அதிகாரம், செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகள் கட்டாயமானதாக மட்டுமல்லாமல் ஆழமானதாகவும் மாறுகிறது. மாநிலங்களவை (Council of States) எண்ணங்கள், நலன்கள் மற்றும் மாநில அரசின் தேவைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதே நேரத்தில் மக்களவையில் உள்ள பெரும்பான்மைவாதத்திற்கு கட்டுப்பாடுகளையும் சமநிலையையும் விதிக்கிறது.


இன்றைய சவால்கள்


இந்தியாவின் அரையளவிலான-கூட்டாட்சி கட்டமைப்பு, ஒன்றிய-மாநில உறவுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும் மற்றும் கூட்டாட்சி உடன்படிக்கையை சோதிக்கும் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்கிறது. நிதி மையமயமாக்கல் (Fiscal centralisation) மிகவும் முக்கிய கவலைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்தியா மாநிலங்கள் தங்கள் நிதி சுதந்திரத்தின் (financial autonomy) பெரும்பகுதியை இழந்து வருவதால், நிதி மையமயமாக்கல் ஒரு பெரிய கவலையாக மாறியுள்ளது.


சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) அமலாக்கம், ஒரு ஒருங்கிணைந்த தேசிய சந்தையை உருவாக்கும் நோக்கத்துடன் இருந்தாலும், மாநில மதிப்பு கூட்டப்பட்ட வரியை (State VAT) சரக்கு மற்றும் சேவை வரி கட்டமைப்பின் கீழ் உள்ளடக்குவதன் மூலம் மாநில வரி அதிகாரங்களை குறைத்துள்ளன. மாநிலங்கள் தங்கள் எதிர்பார்க்கப்படும் வருவாயில் 19% முதல் 33% வரை இழந்துள்ளதாக அறிவித்துள்ளன. இழப்பீட்டு தொகைகளில் (compensation payments) தாமதம் கடுமையான பணப்புழக்க சவால்களை உருவாக்கியுள்ளது.


நிதிக் கட்டுப்பாடுகளைத் தாண்டி, நிர்வாக மற்றும் அரசியல் மையமயமாக்கல் இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பிற்குள் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அவசரகால அதிகாரங்களை அடிக்கடி பயன்படுத்துவது, கோவிட் தொற்றுநோய் காலத்தில் பேரிடர் மேலாண்மை சட்டம் (Disaster Management Act) குறைந்தபட்ச மாநில ஆலோசனையுடன் நாடுதழுவிய ஊரடங்குகளை செயல்படுத்த உதவியது. கூட்டாட்சி ஒருங்கிணைப்பு செயல்முறைகளில் உள்ள பலவீனங்களை இது வெளிப்படுத்தியுள்ளது.


இந்தியாவின் நெகிழ்திறன் கொண்ட அரையளவிலான-கூட்டாட்சி: வேற்றுமையில் ஒற்றுமை


 கடுமையான சவால்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் அரையளவிலான-கூட்டாட்சி மாதிரி குறிப்பிடத்தக்க நெகிழ்திறன் மற்றும் தகவமைப்புத்திறனை வெளிப்படுத்தியுள்ளது. அசாதாரண பன்முகத்தன்மையை (extraordinary diversity) ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்கிறது. அரையளவிலான-கூட்டாட்சிக் கட்டமைப்பு முக்கியமான தேசிய சாதனைகளை எளிதாக்கியுள்ளது. இதில் ஒரே சந்தைப் பொருளாதாரத்தின் உருவாக்கம், Pulse Polio போன்ற ஒருங்கிணைந்த தேசிய திட்டங்கள், மற்றும் பிரிவுகள் 262 மற்றும் 263-ன் கீழ் அரசியலமைப்பு செயல்முறைகள் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான மோதல்களின் அமைதியான தீர்வு ஆகியவை அடங்கும்.


கூட்டுறவு கூட்டாட்சியை (cooperative federalism) பிரதிபலிக்கும் நிறுவனங்கள் - சரக்கு மற்றும் சேவை வரி குழு (GST Council), நிதி ஆயோக், மாநிலங்களுக்கு இடையேயான குழு (Inter-State Council) மற்றும் மண்டல குழுக்கள் (Zonal Councils) - ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒருமித்த கருத்து உருவாக்கத்திற்கான தளங்களை வழங்கியுள்ளன. 73-வது மற்றும் 74-வது அரசியலமைப்பு திருத்தங்கள் (constitutional amendments) பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் கீழ்மட்ட நிர்வாகத்தை வலுப்படுத்தின.


"தன்னாட்சியுடன் பகிர்ந்து ஆட்சி செய்யும் முறையை" (self-rule with shared-rule) அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு, அதன் பன்முகத்தன்மையை ஒரு ராஜதந்திர சொத்தாக மாற்ற உதவியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் ஒற்றுமையும் பன்முகத்தன்மையும் இணைந்து வாழவும் ஒன்றையொன்று வலுப்படுத்தவும் முடியும் என்பதை நிரூபிக்கிறது.


கரிமெல்லா ஒரு எழுத்தாளர், அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களில் ஆலோசகர்.



Original article:

Share:

பிரதமரின் போஷண் திட்டத்தில் காலை உணவைச் சேர்ப்பது, தேசிய கொள்கையை ஊட்டச்சத்து மற்றும் கல்வி இயல்நிலைகளுடன் ஒருங்கிணைக்க உதவும்.

 சாத்தியக்கூறுகள் மற்றும் நியாயத்தன்மை போன்றவைகளை முக்கியக் காரணிகளாக கருத்தில் கொண்டு, மாநிலங்களின் முன்மொழிவை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும்.


ராஜஸ்தான், கேரளா, சத்தீஸ்கர், சிக்கிம், லட்சத்தீவு, குஜராத் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஒன்றிய அரசின் மதிய உணவுத் திட்டமான பிரதம மந்திரி போஷன் நிர்மான் (Pradhan Mantri Poshan Shakti Nirman (PM-Poshan)) திட்டத்தை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் வகையில் விரிவுபடுத்துவதற்கான முன்மொழிவு சரியான நேரத்தில் வந்துள்ளது மற்றும் இது பாராட்டத்தக்க முன்மொழிவாகும். கல்வி அமைச்சகத்தின் இதே போன்ற முன்மொழிவு 2021-22-ஆம் ஆண்டுகளில் நிதி அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், கட்சி எல்லைகளைக் கடந்து மாநில அரசுகளால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்வது, தேசிய கொள்கையை ஊட்டச்சத்து மற்றும் கல்வி உண்மைகளுடன் வரவேற்கத்தக்க வகையில் இணைப்பதையும், கற்றல் என்பது முதல் பாடத்துடன் தொடங்குவதில்லை. ஆனால், அன்றைய நாள் முதலில் உணவில் இருந்து தொடங்குகிறது என்பதை அங்கீகரிப்பதைக் குறிக்கும்.


காலை உணவுத் திட்டத்தின் கல்வி மற்றும் சுகாதார நன்மைகள் நன்கு அறியப்பட்டவை. 2020ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை (National Education Policy), "ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவுக்குப் பிறகு காலை நேரங்கள் அறிவுத்திறன் சார்ந்த கடினமான பாடங்களைப் பயில்வதற்கு குறிப்பாக படைப்புத்திறன் நிறைந்தவையாக இருக்கும் என்று குறிப்பிடுகிறது. காலை உணவு ஊட்டச்சத்தின் தன்மையை அதிகரிப்பதோடு, வகுப்பறைகளில் வருகை, கவனம் மற்றும் சமத்துவத்தை உயர்த்துகிறது என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தமிழ்நாடு ஒரு நல்ல முன்மாதிரியாகத் திகழ்கிறது. காலை உணவு திட்டம் (breakfast programme) தமிழ்நாட்டில் 2022-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இப்போது, இந்த திட்டம் 24 லட்சம் மாணவர்களுக்கு சென்றடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. திட்டத்தின் முக்கியத்துவம் எளிமையாக புரிந்துகொள்ளப்பட்டது: ஊட்டச்சத்து பெற்ற குழந்தைகள் சிறப்பாகக் கல்வி கற்றுக்கொள்கிறார்கள். ஏழு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைத் தவிர, கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் மேகாலயா உள்ளிட்ட 11 மாநிலங்கள், இந்தத் திட்டத்தை 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. நாடு முழுவதும் காலை உணவை அறிமுகப்படுத்துவதற்கான கூடுதல் செலவு ஆண்டுதோறும் ரூ.6,000 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று ஒன்றிய அரசு மதிப்பிட்டாலும், செலவைவிட திட்டத்தில் அதிக நன்மைகள் உள்ளன. குறிப்பாக, மாற்றுக் கல்வி, சுகாதாரம் மற்றும் இழந்த உற்பத்தித்திறன் ஆகியவற்றின் கீழ்நிலை சுமைகளுடன் ஒப்பிடும்போது திட்டத்தின் நன்மைகள் தெளிவாக தெரிகின்றன.


காலை உணவு முயற்சியை ஒரு உணவைவிட அதிகமாகக் கருதுவது தேசிய அளவில் வெற்றி பெறுவதற்கு முக்கியமானது. இந்த முயற்சி கல்வி, சுகாதாரம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் முதலீடாக அங்கீகரிக்கப்பட வேண்டும். PM POSHAN திட்டத்தின்கீழ் காலை உணவுத் திட்டத்தை ஆதரிக்கும் மாநிலங்கள், இது ஒரு கூடுதல் அம்சம் மட்டுமல்ல, அனைவருக்கும் கல்வியை உறுதி செய்வதில் ஒரு முக்கியப் பகுதியாகும் என்று கூறுகின்றன. இது சிறப்பாக செயல்பட, சமையலறை வசதிகள், உணவு வழங்கல், தூய்மை, சரியான ஊட்டச்சத்து, அனைவர்க்கும் தேவையான உணவு, வலுவான கண்காணிப்பு மற்றும் செயலில் சமூக ஈடுபாடு போன்ற விவகாரங்களை அரசாங்கம் கவனமாகத் திட்டமிட வேண்டும். மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்துபவர்கள் ஏற்கனவே உணரும் அழுத்தத்தைக் குறைப்பதும் மிகவும் முக்கியமானது. குறைந்த ஊதியம் மற்றும் அதிக பணிச்சுமையை எதிர்த்து அங்கன்வாடி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயற்பாட்டாளர்கள் ((Accredited Social Health Activists (ASHA)) பலமுறை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகமான பணியாளர்கள், உள்கட்டமைப்பு மற்றும் கூடுதல் நிதி இல்லாமல் காலை அடுக்கைச் சேர்ப்பது, பணியாளர்களுக்கு வேலையை கடினமாக்கும். இந்தத் திட்டம் விரிவடையும்பட்சத்தில், முன்னணிப் பணியாளர்களுக்கு தேவையான ஆதரவு கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். எனவே, மாநிலங்களின் முன்மொழிவை வரவேற்பது, நியாயத்தன்மை மற்றும் சாத்தியக்கூறுகளுக்கான உறுதிப்பாட்டுடன் இணைந்து செல்ல வேண்டும்.



Original article:

Share:

நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)) என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய குறிப்புகள்:


— அரசு தங்குமிடங்கள் மற்றும் பணியமர்த்துவோர் வழங்கும் குடியிருப்புகள் வீட்டுவசதி குறியீட்டிலிருந்து விலக்கப்படுகிறது. ஏனெனில், இவை உண்மையான வாடகை சந்தையில் நிகழும் பரிவர்த்தனைகளை வெளிக்காட்டவில்லை  என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


— தற்போதுள்ள நுகர்வோர் விலைக் குறியீட்டில் (Consumer Price Index (CPI)) வீட்டுவசதிக்கு என்று  நகர்ப்புறங்களில் 21.67 சதவீத மதிப்பும், அகில இந்திய அளவில் 10.07 சதவீத மதிப்பும் வழங்கப்பட்டுள்ளது.


— இந்தத் திருத்தம் செயல்படுத்தப்படும்போது, ​​நகர்ப்புற குடியிருப்புகள் மற்றும் பணியமர்த்துவோர் வழங்கும் குடியிருப்புகளை மட்டும் சேர்ப்பதென்பது  முழுமையான நிலவரத்தைத் தெரிவிக்காமல் விட்டுவிடும் வாய்ப்புள்ளது.  குறிப்பாக பெருந்தொற்றுக்குப் பிறகு வீட்டுவாடகைகள் அதிகரித்துள்ள நிலையில், வாடகை மற்றும் வீட்டு விலைகள் பணவீக்கத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை மிகவும் துல்லியமாக அளவிட உதவுகிறது. 


— இந்தத் தொடரின் மூன்றாவது ஆய்வறிக்கையை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. - 'புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டுத் (Consumer Price Index (CPI)) தொடரில் வீட்டுவசதி குறியீட்டு தொகுப்பு முறையில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் குறித்த விவாதக் கட்டுரை' - நுகர்வோர் விலைக் குறியீட்டின் (Consumer Price Index (CPI)) அடிப்படை திருத்தப் பணிகளில் ஒரு பகுதியாக உள்ளது.


— புதிய வீட்டுவசதிக் குறியீடு, தற்போது மாதந்தோறும் வீடுகளில் ஆறில் ஒரு பங்கில் (one-sixth) இருந்து மட்டுமே தரவைச் சேகரிக்கும் வரம்பிற்குப் பதிலாக, ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வீடுகளிலிருந்தும் வாடகைத் தரவை உள்ளடக்கியதாக இருக்கும்.


— புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகமானது (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)), நுகர்வோர் விலைக் குறியீட்டின் (Consumer Price Index (CPI)) அடிப்படை திருத்தப்பணியை  மேற்கொண்டு வருகிறது. மேலும், நிபுணர்கள், பயனர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து வருகின்றனர். அதற்குப் பிறகு சில வழிமுறைகளையும் மறுபரிசீலனை செய்ய இருக்கிறது. புதிய தரவு மூலங்களை (data sources) ஆராய்ந்து பல மாற்றங்களையும்  புகுத்திவருகிறது.


— இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள குடும்பங்களின் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கான ஒரு முக்கியமான குறியீடாக வீட்டுவசதி என்பது பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர்களின் வருமானத்தில் கணிசமான அளவு வாடகைக்காகவோ அல்லது சொந்த வீட்டைப் பராமரிப்பதற்கோ செலவிடப்படுகிறது.Mospi

உங்களுக்குத் தெரியுமா?


— நுகர்வோர் விலைக் குறியீட்டிற்காக (Consumer Price Index (CPI)), 2024-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட அடிப்படை ஆண்டாக (revised base year) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், பொருட்களின் தொகுப்பும் அவற்றின் மதிப்பீடும் 2023-24-ஆம் ஆண்டில் தேசிய புள்ளியியல் (National Statistical Office (NSO)) அலுவலகத்தால் நடத்தப்பட்ட குடும்ப நுகர்வோர் செலவின ஆய்வின் (Household Consumption Expenditure Survey (HCES)) அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டுத்தொடர் வரும் 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலிருந்து வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


— அடிப்படை ஆண்டு (base year) என்பது ஒரு பொருளாதார அல்லது நிதிக் குறியீட்டில் தொடர்ச்சியான ஆண்டுகளின் முதல் ஆண்டாகும். இந்த சூழலில், இது பொதுவாக 100 என்ற தன்னிச்சையான நிலையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட குறியீட்டில் தரவுகளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க, புதிய, நடப்பு அடிப்படை ஆண்டுகள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை அளவிட அடிப்படை ஆண்டுகளும் பயன்படுத்தப்படுகின்றன. எந்த ஆண்டும் ஒரு அடிப்படை ஆண்டாக செயல்படலாம், ஆனால் ஆய்வாளர்கள் பொதுவாக சமீபத்திய ஆண்டுகளைத் தேர்வு செய்கிறார்கள்.


— வணிக செயல்பாடு அல்லது பொருளாதார அல்லது நிதி குறியீட்டின் அளவீட்டில் ஒப்பிடுவதற்கு ஒரு அடிப்படை ஆண்டு பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 2016 மற்றும் 2024-க்கு இடையிலான பணவீக்க விகிதத்தைக் கண்டறிய, 2016 என்பது அடிப்படை


 ஆண்டாக அல்லது நிர்ணயிக்கப்பட்ட காலத்தின் முதல் ஆண்டாகவும் கருதப்படுகிறது. அடிப்படை ஆண்டு (base year) என்பது வளர்ச்சியின் தொடக்கப் புள்ளியாகவோ அல்லது ஒரே அங்காடி விற்பனையை (same-store sales) கணக்கிடுவதற்கான அடிப்படை புள்ளியாகவோ இருக்கலாம்.



Original article:

Share:

அமைதி மற்றும் நிலையான பாதுகாப்பு வாரியத்திற்கான தேவையை முன்வைக்கும் வாதம் -நிருபமா ராவ்

 போர்களுக்குப் பிறகு அமைதியை நிலைநிறுத்தக்கூடிய வகையில் ஒரு புதிய அமைப்பை ஐக்கிய நாடுகள் சபை உருவாக்க வேண்டும். 


ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations) 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வேளையில், அதன் இலட்சியங்களுக்கும் அவற்றை நிலைநிறுத்த நோக்கம் கொண்ட அமைப்புகளுக்கும் இடையிலான இடைவெளி முன்பைவிடத் தெளிவாகத் தெரிகிறது. பேரழிவு தரும் போரைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கூட்டமைப்பு (United Nations Security Council (UNSC)) இன்னும் மோதலுக்கு எதிர்வினையாற்றி வருகிறது. ஆனால் இன்னும் அமைதியை நிலைநிறுத்த உறுதியான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. கண்டங்கள் முழுவதும் மோதல்கள் பல ஆண்டுகளாக இன்னும் தீர்வு இல்லாமல் நீடிக்கின்றன. சர்வதேச அமைப்பு அரசியல் ஈடுபாட்டை மிக விரைவில் கைவிடுவதாலும் தீர்வு இல்லாமல் மோதல்கள் பல ஆண்டுகளாகத் தொடர்கின்றன. அமைதி ஒப்பந்தங்களும் வெறும் பெயரளவில் இருக்கின்றன. நாடுகளுக்கிடையே உறவுகளை வளர்த்துக் கொள்ளும் ராஜதந்திர செயல்கள் ஒரு தொடர்ச்சியான செயல்முறையாக இருப்பதற்குப் பதிலாக, நெருக்கடி நிலைகளில் மட்டும் செயல்படுத்தப்படும் ஒரு வடிவமாக மாறியுள்ளது. 


இந்தப் பிரச்சினை வெறுமனே அரசியல் மோதல்கள் பற்றியது மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் அமைப்பின் கட்டமைப்பு குறித்த பிரச்சனைகளையும் உள்ளடக்கியது. வன்முறை குறைந்து சமரச முயற்சிகளுக்குப் பிறகு அரசியல் ஆதரவைப் பராமரிக்க ஐ.நா.விடம் எந்த உறுதியான அமைப்பும் இல்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபை மோதல் தடுப்பு நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்கிறது, ஆனால் கட்டமைப்புரீதியாக அவ்வப்போது மட்டுமே செயல்படுகிறது என்பது மிகப் பெரிய பின்னடைவாகும். நாடுகளுக்கிடையே அமைதியை ஏற்படுத்தும் பணிகள் சில நிலைகளை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், அரசியல் சார்ந்த உத்திகளைக் கையாள்வதில் அதிகாரங்களைக் குறைந்த அளவில் கொண்டுள்ளன. அமைதியை ஏற்படுத்த அமைக்கப்படும் ஆணையம், ஒரு மதிப்புமிக்க முன்முயற்சியாக இருந்தாலும், அரசியல் மாற்றங்களில் ஈடுபடுவதற்கான அதிகாரம் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் இருப்பதில்லை. ஐ.நா. இது போன்ற நடவடிக்கைகளில் சூழல் மீதான கட்டுபாட்டை இழக்கிறது. செயலில் உத்வேகத்தையும் இழந்து அமைப்பின் நோக்கத்தையும் மறந்துவிடுவதாகத் தெரிகிறது.


ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் (United Nations Security Council (UNSC)) கட்டமைப்பில்  சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற கோரிக்கை  நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. ஆனால் அனைத்து புதிய அமைப்புகளின் உருவாக்காதிற்கும் ஒரு முன்நிபந்தனையாக அத்தகைய சீர்திருத்தத்திற்காக காத்திருப்பது என்பது ராஜதந்திர ரீதியில் நோக்கும்போது மிகப்பெரிய தவறாகிறது. சீர்திருத்தம் என்பது சாசனத்தின்கீழ் ஏற்கனவே இருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி, இப்போது செயல்படும் ஐ.நா.வின் திறனை வலுப்படுத்தும் சீர்திருத்தமாக இருக்க வேண்டும். அதுவே தற்போதைய சூழலுக்கு சாத்தியமானது என்றும் நம்பப்படுகிறது. ஐ.நா. பொதுச் சபையானது பிரிவு 22-ன்கீழ் அதன் பணிகளைச் செய்ய புதிய துணை அமைப்புகளை நிறுவ அதிகாரம் கொண்டுள்ளது. இதற்கு முன்பும் இந்த அதிகாரத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு  பயன்படுத்தியுள்ளது. எனவே அந்த அதிகாரத்தை மீண்டும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.


தெளிவாக வரையறுக்கப்பட்ட இடம்


'அமைதி மற்றும் நிலையான பாதுகாப்பு வாரியம்' (Board of Peace and Sustainable Security) என்பது தற்போது மோதலுக்கான தீர்வைக் கொண்டுவர தேவையான அமைப்பின் வெற்றிடத்தை நிரப்பும் என்று கூறப்படுகிறது. இந்த அமைப்பு சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கூட்டமைப்பின்  முதன்மைநிலையை சவாலுக்கு உள்ளாக்குவதைப் போல அமைந்தது. இந்த வாரியம் மாநிலங்களின் இறையாண்மை விவகாரங்களில் ஊடுருவாமலும் முன்கூட்டியே எச்சரிக்கை அல்லது மோதலுக்கு முந்தைய தலையீட்டையும் தவிர்க்கும் என்று தெரிகிறது. அதற்குப் பதிலாக, மோதல்களின் போதும் அதற்குப் பின்னரும், ஐ.நா. அமைப்பின் பிடிகள் தற்போது விலகியுள்ள இடங்களில் கட்டமைக்கப்பட்ட அரசியல் ஆதரவை வழங்குதல் போன்ற சில தெளிவான பகுதிகளில் மட்டும் இந்த வாரியம் கவனம் செலுத்தும் என்று சொல்லப்படுகிறது. 


அதன் அணுகுமுறை அரசியல் ரீதியாக மட்டுமே இருக்கும் என்பது தெரிய வருகிறது. தேசிய அளவில் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளை வலுப்படுத்துதல், சமாதான ஒப்பந்தத்தை செயல்படுத்துவதோடு, நாடுகளின் இராஜதந்திர முயற்சிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் அமைதி காக்கும் பணியை நம்பகத்தன்மை வாய்ந்த அரசியல் இலக்குகளுடன் இணைத்தல் போன்ற தொலைநோக்குத் திட்டங்களை உறுதி செய்வதே இந்த புதிய வாரியத்தின் பணியாகக் கருதப்படுகிறது. இந்த அமைப்பு ஐ.நா. பொதுச்செயலாளர் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபையுடன் ஒருங்கிணைந்து செயல்படும் என்று கூறப்படுகிறது. இந்த வாரியாமானது ஐ.நா. பொதுச்செயலாளர் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு குழுவுடன் (UNSC) ஒருங்கிணைந்து செயல்படும், அமைதி கட்டமைப்பு குழுவை (Peacebuilding Commission (PBC)) உள்ளடக்கியிருக்கும். மேலும் ஐ.நா. அமைதி பாதுகாப்பு மற்றும் அமைதி கட்டமைப்பு உத்திகளை அரசியல் விளைவுகளுடன் ஒருங்கிணைக்க உதவும். இந்த அமைப்பு ஐ.நா. பாதுகாப்புச் சபையின் அதிகாரத்தையும், பிரிவு 99-ன்கீழ் பொதுச்செயலாளரின் அதிகாரங்களையும் மதிக்கும் என்று வரையறை செய்யபடுகிறது.


இந்த அமைப்பைப்  பிரதிநிதித்துவப்படுத்துங்கள்


இத்தகைய அமைப்பின் நம்பகத்தன்மை என்பது அதன் உறுப்பினர்களைப் பொறுத்தது. இந்த புதிய அமைப்பு பிரதிநிதித்துவமானதாக இருக்க வேண்டும், வெறுமனே அதிகாரமற்றதாக இருக்கக்கூடாது. ஐ.நா. பொதுச் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையான சுமார் இருபத்து நான்கு நாடுகளின் சுழற்சி உறுப்பினர்கள் மூலம் சமநிலை மற்றும் புதுப்பித்தலை உறுதிசெய்ய முடியும்.  ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் (Caribbean) மற்றும் மேற்கு ஆசியா ஒவ்வொன்றும் சமநிலை மற்றும் புதுப்பித்தலை உறுதி செய்வதற்காகச் சுழற்சி முறையில் செயல்படும் என்கின்றனர்.


முக்கியமாக, பிராந்திய அமைப்புகள் முழுமையாக பங்கேற்கும் நியூயார்க்கைப் போலவே அடிஸ் அபாபா (Addis Ababa), ஜகார்த்தா (Jakarta) மற்றும் பிரேசிலியாவிலும் (Brasília) அமைதி உருவாகிறது. நிரந்தர உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் கூடுதல் அதிகாரம் வழங்கப்படாது. வீட்டோக் அதிகாரங்களால் (vetoes) செயல்பாடுகளை முடக்கவும் முடியாது. ஐ.நா. உறுப்பினர் நாடுகள், பிராந்திய அமைப்புகள் அல்லது பொதுச்செயலாளர் மட்டுமே நிகழ்ச்சி நிரல்களை முன்மொழிய முடியும் என்று வரையறுக்கப்படுகிறது.  சிவில் சமூகம் ஆலோசனை வழங்க முடியும் ஆனால் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. 


நிலையான பாதுகாப்பு (sustainable security) என்ற கருத்து முக்கியமானது. பாதுகாப்பு ஏற்பாடுகளால் மட்டும் நீடித்த அமைதியைப் பராமரிக்க முடியாது என்பதை இந்த வாரியத்தின் நடவடிக்கைகள் அங்கீகரிக்கிறது. சீரான நிர்வாகம், உள்ளடக்கம் மற்றும் பொறுப்பான தலைமை மூலம் அரசியல் ஒப்பந்தங்கள் படிப்படியாக சட்டப்பூர்வமாக்கப்படும்போது அமைதிக்கான நிலைத்தன்மை உருவாக்கப்படும். நிலையான பாதுகாப்பு என்பது இறையாண்மையை மதிக்கிறது மற்றும் திணிக்கப்படுகிற தீர்வுகளைவிட காலப்போக்கில் செயல்படுத்தப்பட இருக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகளைப் பெறமுடியும் என்று நம்பப்படுகிறது. இது பாதுகாப்பை உண்மையான அரசியல் தேவைகளுடன் இணைக்கிறது. (நிலையான பாதுகாப்பு என்பது மோதல் சார்ந்த மேலாண்மையை நீண்டகால அரசியல் உறுதித்தன்னமையோடு ஒருங்கிணைக்கிறது. அமைதி முயற்சிகளை, நிர்வாகம், மேம்பாடு மற்றும் நாடுகளின்  ஒத்துழைப்புடன் சீரமைப்பதன் மூலம் இது "தடுப்பு பாதுகாப்பு"  உடன் தொடர்புடைய தேவையற்ற தலையீடுகளைத் தவிர்க்கிறது மற்றும் தேசிய அளவில் வழிநடத்தப்படும் அணுகுமுறைகளை மேலும் வலுப்படுத்துகிறது).


செயல்பாட்டு பாணி


பொதுவான அறிக்கைகளுக்கான மற்றொரு அமைப்பாக இல்லாமல் செயல்படும் அமைப்பாக இந்த வாரியம் இருக்கும். மற்ற அமைப்புகள் விலகிச் செல்லும் இடத்திலும் தொடர்ந்து செயல்படும் என்கிற உறுதியை அளிக்கிறது. காலப்போக்கில் உறுதிமொழிகளைக் கண்காணிக்கும் மற்றும் ஆணை புதுப்பிப்புகளுக்கு இடையில் அமைப்பின் வாக்குறுதிகளைத் தொடர்ந்து  பாதுகாக்கும் என்று அறியப்படுகிறது. நீண்டகாலமாகவே ஐ.நா.வின் செயல்பாடுகளில் வழக்கமாகிவிட்ட சறுக்கலை நிச்சயம் குறைக்குமென்றும்  அமைதிக்கான பலவீனமான சூழல் இருக்கும்போது சர்வதேச நாடுகளின் சமரசம் சார்ந்த முயற்சிகளுக்கு இந்த அமைப்பு வழிகாட்டும் என்றும் கூறப்படுகிறது


அதன் ஆணை தோற்றத்தில் மிதமானதாக இருக்கலாம் ஆனால் நடைமுறையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது ஐ.நா. அமைப்பின் மையத்தில் ஐ.நா.விற்குள் கட்டமைக்கப்பட்ட அரசியல் சார்ந்த ஆதரவைக் கொண்டுவரும் என்றும் நம்பப்படுகிறது. எல்லை மீறல்கள் இல்லாமல் தொடர்ச்சியையும், மோதல் போக்கற்ற ஒருங்கிணைப்பையும் உருவாக்கும் என்று கருதப்படுகிறது. இது நாடுகளுக்கு இறையாண்மை பாதுகாக்கப்படுகிறது என்று உறுதியளிக்கும் மற்றும் சமூகங்களுக்கு முதல் சிரமத்தில் அமைதி கைவிடப்படாது என்று உறுதியளிக்கும்.


ஐ.நா. அமைப்பின் சீர்திருத்தம் நீண்டகாலமாக முழுமையான சொற்களில் விவாதிக்கப்படுகிறது. அமைப்பை அப்படியே ஏற்றுக்கொள்வது அல்லது அதை முழுவதுமாக சீரமைக்க வலியுறுத்துவது என்பது  மிகவும் தவறான வழிமுறை. நிறுவனங்கள் மாறாமல் பொறுப்புடன் பரிணமிப்பதன் மூலம் மட்டுமே உயிர்வாழ்கின்றன. 'அமைதி மற்றும் நிலையான பாதுகாப்பு வாரியம்' (Board of Peace and Sustainable Security) பலதரப்பு அமைப்பைப் பாதிக்கும் அனைத்தையும் தீர்த்துவைக்க முயற்சி மேற்கொள்ளப்பவதில்லை. ஆனால், போரிலிருந்து அமைதிக்கான பயணத்தில் அரசியல் சார்ந்த தீர்வு காணப்படாமல் இருப்பது போன்ற  ஐ.நா.-வின்  மிகப்பெரிய பலவீனத்தை இந்த புதிய அமைப்பு நிவர்த்தி செய்யும் என்று தெரிய வருகிறது.


சீர்திருத்தம் எப்போதும் புதிய கோட்பாடுகளை மட்டுமே கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அமைதி நிலைத்திருக்க வேண்டும், அரசியல் உறுதிப்பாடுகள் உடன் இருக்க வேண்டும், ராஜதந்திரம் என்பதும்கூட  கண்ணியாமான நடவடிக்கையாக இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. அமைப்புகள் தக்க சமயங்களுக்காக இல்லாமல் தொடர்  செயல்முறைகளுக்காக கட்டமைக்கப்பட வேண்டும். ஐ.நா. அமைப்பு இப்போது இதை மீண்டும் புரிந்து கொண்டுள்ளது. ஐ.நா. அமைப்பு இது போன்ற புதுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அமைதி மற்றும் நிலைத்தமான பாதுகாப்பு வாரியம் (Board of Peace and Sustainable Security (BPSS)) உலகளாவிய அளவில் ஐ.நா.-வின் தாக்கத்தை அதிகரித்து மோதல்களை பொறுப்புடன் நிர்வகிக்கும் திறனை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகள் மூலம் மட்டும்தான்  உண்மையான சீர்திருத்தம் தொடங்க முடியும்.


நிருபமா ராவ் இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர்.



Original article:

Share:

சம்மதமே எல்லாம் : பாலியல் வன்முறை குற்றங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு குறித்து…

 பாலியல் வன்முறை குற்றங்கள் (sexual violence) முழுமையாகத் தடுக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும்.


சில நேரங்களில், மிகப் பெரிய வெற்றிகள் மிகக் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகே கிடைக்கின்றன. வன்முறை, காயம், பாலியல் வன்கொடுமை, அச்சம் அல்லது தொந்தரவு ஏற்படுத்துவது போன்றன குற்றச் செயல்கள் என்பதை “வலுக்கட்டாயப்படுத்தல் குற்றம்” (force is the crime) என்று நிறுவுவதற்கே பிரான்ஸ் நாட்டிற்குப் பல ஆண்டுகள் ஆனது. இதற்குப் பின்னால் ஒரு பெண்ணின் அசாத்திய துணிச்சலும், அவருக்குத் துணை நின்ற மற்ற பெண்களின் ஒற்றுமையும் இருந்தது. விருப்பமில்லாத எந்தவொரு பாலியல் செயலும் பாலியல் வன்முறையே என வரையறுக்கும் சட்டத்தை பிரான்ஸ் நாடானது சில நாட்களுக்கு முன்னர் நிறைவேற்றியுள்ளது. இது பிரான்ஸ் நாட்டுப் பெண்களுக்கு முக்கியமான வெற்றி என்பதையும் கடந்து பாலியல் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளில்  மிகப்பெரிய முன்னேற்றமாகும்.



பாலியல் வன்முறைக் குற்றங்களைத் தடுப்பதிலும் சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவும் சமூகத்தின் அவசர பிரச்சனைகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு, கிசெல் பெலிகாட் (Gisèle Pelicot) என்ற பெண்மணி  நீதிமன்றத்தில் கடுமையான போராட்டத்தை எதிர்கொண்டார். கணவரால் அந்தப் பெண்ணிற்குப் போதைப்பொருள் கொடுக்கப்பட்டு, பல ஆண்களின் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியதாகவும் குற்றம் சாட்டினார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்றம் 51 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்திய ஒரு வரலாற்றுத் தருணமாக அமைந்தது. பாலியல் வன்முறையில் இருந்து தப்பியவர்கள், குறிப்பாக சமூக மற்றும் பொருளாதாரரீதியாக பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த பெண்களுக்கு தேவையான நீதி கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது. பாலியல் வன்முறையில் பாதிக்கபட்டவர்களில் பலர் நீதிமன்றங்களில் நீதி கேட்கவும்கூட கடினமான பல சவால்களைக் கடந்து வருகின்றனர். இதுபோன்ற பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களே பெரும் களங்கத்தையும் பழியையும்  சுமக்கின்றனர்.

 

இந்தியாவில் பெண்களைக் குற்றம் சாட்டும் வகையில் வெளியிடப்பட்ட தலைவர்களின் பொது அறிக்கைகள் வலிமிகுந்த ஒன்றாக அமைகின்றன. ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டாலும் தண்டனை வழங்கப்படுவதற்கான  வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளன. மேலும் இது, பாரதிய நியாய சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita) பிரிவு 129 “குற்றவியல் பலாத்காரத்தை (criminal force)” அங்கீகரிக்கிறது என்றபோதிலும், தேசிய குற்றப் பதிவுத்துறை (National Crime Records Bureau (NCRB)) அளித்த தரவுகளின்படி, 2018 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை விகிதங்கள் 27%-28% என்கிற அளவில் இருந்தன. 


நீதித்துறை செயல்முறையின் முக்கிய அம்சமாக பாலியல் ரீதியிலான  சுயவிருப்பத்தை நிறுவுவது என்பது முதல்படியாக இருந்தாலும், அது போதுமான நடவடிக்கையாக இருக்காது. பாலியல் வன்முறையைத் தடுப்பது என்பது பாலினப் பிரிவின் சமூகப் பொறுப்புகளைக் குறித்த கருத்துக்களைத் தெளிவாக வடிவமைப்பது, கடுமையான சட்டத்தால் ஆணாதிக்கத்தை அகற்றுவது, விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் காவல்துறையை இந்தக் கொள்கைகளுக்கு ஏற்ப வழிநடத்துவது போன்ற நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை சீராக்க உதவுவதற்கும் பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டு அவர்களின் நலன்சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றையும் முக்கியமாகக் கொண்டுள்ளது. 


முன்னோக்கிச் செல்லும் பாதை மிகக் கடினமானது.  எனவே, அரசாங்கங்களின் பாலியல் வன்முறைக் குற்றங்களுக்கு எதிரான சகிப்புத்தன்மையற்றத் திறனுடனும், பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கும் உறுதிப்பாட்டுடனும் அவர்களின் வாழ்க்கைப் பயணம் எளிதாக்கப்பட வேண்டும். அதைவிடக் குறைவாக எதையும் செய்வது அநியாயமாக இருக்கும் மற்றும் பெலிகாட் தொடங்கிய வலிமையான பெண்கள் இயக்கத்தை நிறுத்திவிடும்.



Original article:

Share: