இந்திய குடியரசின் செயல்பாட்டில் அரசுத் தலைமை வழக்கறிஞர் எங்கனம் முக்கியமானவராக இருக்கிறார்? –கண்ணன் கே

 அரசியலமைப்பு, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரை (Attorney General of India (AGI)) ஒரு தனித்துவமான நிலையில் வைக்கிறது. நமது அரசியலமைப்பு தலைமை வழக்கறிஞரை அரசின் மூன்று அங்கங்களுடனும் தொடர்புகொள்ள உதவுகிறது - அவை நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகும். ஆனால், முதல் சட்ட அலுவலர் (First Law Officer) அரசாங்கத்தின் வழக்கறிஞராக மட்டுமல்லாமல், அரசியலமைப்பின் மாண்பை காப்பவராகவும், சட்டத்தின் ஆட்சியின் (rule of law) முதன்மை பாதுகாவலராகவும் செயல்படுவதில் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறார்?


2021-ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO) பிரிவு 7-ன் கீழ் ஒரு குழந்தையுடனான உடல்ரீதியாக (“skin-to-skin”) தொடர்பு அல்ல, பாலியல் தாக்குதல் குற்றத்தை உருவாக்குவதற்கு மிக முக்கியமான அங்கம் “பாலியல் நோக்கம்” என்று தீர்ப்பளித்தது, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வின் இரு தீர்ப்புகளை அது ரத்து செய்தது.


மிக முக்கியமாக, முன்னாள் இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை அடுத்து இந்த தீர்ப்பு வந்தது. இது இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் தனது அரசியலமைப்பு உரிமைகளை எவ்வாறு பொது நலனை நிலைநிறுத்தவும், குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்யவும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இந்த தீர்ப்பு  எடுத்துக்காட்டுகிறது.


பிரிவு 76(3)-ன் கீழ், இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் போன்ற அனைத்து நீதிமன்றங்களிலும் கருத்து தெரிவிக்கும் உரிமையை (right of audience) பெற்றுள்ளார். இதன் பொருள், இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் அதிகாரப்பூர்வமாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும்போது எந்த நீதிமன்றமும் அவர்களது மனுவை நிராகரிக்க முடியாது. இது அரசின் சட்டநிலையை அனைத்து நீதிமன்றங்களிலும் எப்போதும் பிரதிநிதித்துவப்படுத்தவோ அல்லது தெளிவுபடுத்தவோ முடியும் என்பதை உறுதி செய்கிறது.


குறிப்பிடத்தக்க வகையில், இந்த விதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் அட்டர்னி ஜெனரலுக்கு அனைத்து நீதிமன்றங்களிலும் பேச்சுரிமை உள்ள பிரிட்டிஷ் மரபிலிருந்து பெறப்பட்டது. ஆனால் ‘தலைமை சட்ட ஆலோசகர்’ மற்றும் ‘முதல் சட்ட அதிகாரி’ என்று அடிக்கடி குறிப்பிடப்படும் அரசுத் தலைமை வழக்கறிஞரின் மற்ற உரிமைகள் மற்றும் கடமைகள் என்னவாகும்? அரசுத் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்படுவதற்கான தேவையான தகுதிகள் என்ன, மற்றும் அரசுத் தலைமை வழக்கறிஞருக்கு நிலையான கால அளவு உள்ளதா? அந்த கூற்றை ஆராய்வோம்.

அரசியலமைப்பு எவ்வாறு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரை (Attorney General of India (AGI)) ஒரு தனித்துவமான நிலையில் வைக்கிறது?


இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி அரசியலமைப்பால் உருவாக்கப்பட்டது. 1950ஆம் ஆண்டு  அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்தது. இது புதிதாக உருவான அரசாங்கத்திற்கு நிபுணத்துவ சட்ட ஆலோசனைக்கான அணுகலை உறுதி செய்தது. அவ்வாறு செய்வதன் மூலம், அரசியலமைப்பு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரை ஒரு தனித்துவமான நிலையில் வைக்கிறது. அரசியலமைப்பு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞகருக்கு ஒரு தனித்துவமான அதிகாரத்தை வழங்குகிறது. இது அரசாங்கத்தின் மூன்று கிளைகளான நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்ற அனுமதிக்கிறது.


பிரிவு 88-ன் கீழ், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் இரு சபைகளிலும், அவற்றின் கூட்டு கூட்டங்களிலும் மற்றும் அவர் உறுப்பினராக இருக்கும் எந்தவொரு நாடாளுமன்றக் குழுவிலும் (parliamentary committee), பேசும் மற்றும் நடவடிக்கைகளில் பங்கேற்கும் உரிமையைக் கொண்டுள்ளார். ஆனால், வாக்களிக்கும் உரிமை அவருக்கு வழங்கப்படவில்லை. அரசியலமைப்பு பிரிவு 105-ன் கீழ், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பாதுகாப்புகளையும் (privileges and immunities) வழங்குகிறது.


இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அனைத்து செயல்பாடுகளிலும் முதன்மை வழக்கறிஞர் (Solicitor General) மற்றும் கூடுதல் வழக்கறிஞர்களால் உதவி பெறுகிறார். இருப்பினும். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி மட்டுமே அரசியலமைப்பால் உருவாக்கப்பட்டது. பதவியில் இருக்கும் நீதிபதிகளுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்கும் நபர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு (contempt of court proceedings) அனுமதி வழங்குவதற்கான அல்லது மறுப்பதற்கான அதிகாரமும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் முதன்மை வழக்கறிஞருக்கு வழங்கப்பட்டுள்ளது.


நீதிமன்றங்கள் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அனுமதியின்றி தாமாக முன்வந்து (suo motu) நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கலாம் என்றாலும், ஒரு தனி நபர் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் எழுத்துப்பூர்வ அனுமதியுடன் மட்டுமே அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க முடியும். இவ்வாறு, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தேவையற்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான காவலராகச் செயல்படுகிறார். நீதித்துறை கண்ணியத்தைப் பேச்சுரிமை மற்றும் நியாயமான விமர்சன உரிமையுடன் சமநிலைப்படுத்துகிறார்.


செப்டம்பர் 30, 2022 அன்று கே.கே. வேணுகோபாலுக்குப் பிறகு வந்த இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராக R. வெங்கடரமணி, அக்டோபர் 1 முதல் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டார். நீதிமன்ற நடவடிக்கைகளின்போது இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணியை வீசியதாகக் கூறப்படும் ஒரு வழக்கறிஞர் மீது அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்க ஒப்புதல் அளித்தார். மாற்றாக, சில பொதுநல வழக்குகளில் நடவடிக்கைகளைத் தொடங்க இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் நேரடியாக நீதிமன்றத்தை நாடலாம்.




ஆலோசனை மற்றும் பிரதிநிதித்துவ செயல்பாடுகள்


சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவது அல்லது அனுமதி வழங்குவது தவிர, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மத்திய அரசுக்கு ஒரு முக்கியமான ஆலோசனை மற்றும் தேவையான பிரதிநித்துவதை வழங்குகிறார். ஆலோசனை திறனில், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் குடியரசுத் தலைவரால் தமக்கு குறிப்பிடப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட விவகாரங்களில் அரசுக்கு சட்ட ஆலோசனை வழங்குகிறார். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் உள்ள அனைத்து வழக்குகளிலும், தேவைப்படும்போது உயர் நீதிமன்றங்களிலும் மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.


பிரிவு 143இன் கீழ் குடியரசுத் தலைவரால் செய்யப்படும் எந்தவொரு குறிப்பிலும் (குடியரசுத் தலைவரின் உச்ச நீதிமன்றத்துடன் கலந்தாலோசிக்கும் அதிகாரம்) இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அரசாங்கத்தின் கருத்துகளையும் உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கிறார். அரசியலமைப்பின் பிரிவு 76 குடியரசுத் தலைவருக்கு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரை நியமிக்க அதிகாரம் அளிக்கிறது. அவர் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்க தகுதியானவராக இருக்க வேண்டும். அதன்படி, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் மற்றும் பின்வருவனவற்றைக் கொண்டிருக்க வேண்டும்:


1. குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது


2. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருந்திருக்க வேண்டும் அல்லது


3. குடியரசுத் தலைவரின் கருத்துப்படி ஒரு சிறந்த சட்ட அறிஞராக (eminent jurist) இருக்க வேண்டும்.


மிக உயர்ந்த நீதித்துறை தகுதிகளுக்கான இந்த தேவை பதவியின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் 65 வயதில் ஓய்வு பெறுகிறார்கள் என்றாலும், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஓய்வு பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட வயது எதுவும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


மேலும், மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர், குடியரசுத் தலைவர் விரும்பும் வரை பணியாற்றுவார். நிலையான பதவிக்காலம் இல்லை மேலும், குடியரசுத் தலைவர் அவரது ஊதியத்தையும் (remuneration) தீர்மானிக்கிறார்.


அரசியலமைப்பு எவ்வாறு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் பாரபட்சமற்ற தன்மையை உறுதிசெய்கிறது?


இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் குறிப்பிடத்தக்க மதிப்பையும் சலுகைகளையும் அனுபவித்தாலும், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் பாரபட்சமற்றத் தன்மையை உறுதிசெய்யவும், நலன்சார் முரண்பாடுகளைத் தவிர்க்கவும் சில வரம்புகளை வைத்துள்ளனர். இருப்பினும், கடந்த காலங்களில், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் எப்போதும் முற்றிலும் நடுநிலையாகத் தோன்றாமல் போகலாம் என்ற கவலைகளை உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது.


மேலும், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு பின்வருவன அனுமதிக்கப்படவில்லை:


1. இந்திய அரசுக்கு எதிராக சட்ட ஆலோசனையோ, வழக்காற்றலைக் கையாள்வதோ செய்ய முடியாது.


2. ஒரு வழக்கில் இந்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அல்லது ஆலோசனை வழங்கி வந்தால், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அந்த வழக்கில் வேறு ஒருவருக்கு ஆலோசனை வழங்கவோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது.


3. மேலும், இந்திய அரசாங்கத்தின் அனுமதியின்றி குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பாதுகாக்க முடியாது.


4. இந்திய அரசாங்கத்தின் முன் அனுமதியின்றி எந்த நிறுவனத்திலும் இயக்குநராக நியமனம் செய்யப்படுவதை இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஏற்றுக்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஒரு முழுநேர அரசு ஊழியர் அல்ல என்பதை நினைவில் கொள்வது முக்கியம். எனவே இந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அவரால் தனியார் சட்டப் பயிற்சியில் ஈடுபட முடியும். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மத்திய அமைச்சரவையின் உறுப்பினர் அல்ல. மேலும், சட்ட விவகாரங்களின் அரசியல் மற்றும் நிர்வாக அம்சங்கள் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரால் அல்ல, சட்டம் மற்றும் நீதி அமைச்சரால் கையாளப்படுகின்றன. இந்த அமைப்பு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் நடுநிலையைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது.


இந்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கான சவால்கள்


இருப்பினும், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு பல்வேறு சமாளிக்க வேண்டிய சவால்கள் உள்ளன. இந்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு மிகவும் குறிப்பிடத்தக்க சவால்களில் ஒன்று, நிர்வாகத்திற்கான விசுவாசத்திற்கும் அரசியலமைப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநிறுத்தும் கடமைக்கும் இடையே சரியான சமநிலையை ஏற்படுத்துவதாகும். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டாலும், அமைச்சரவை ராஜினாமா செய்யும்போது அல்லது புதிய அரசாங்கம் பதவியேற்கும்போது இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்  ராஜினாமா செய்கிறார் என்ற தொடர்ச்சியான மரபு உள்ளது.


மேலும், நிலையான பதவிக்காலம் இல்லாதது இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் சுதந்திரத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், இது சில சமயங்களில் அவரை அரசாங்க செல்வாக்கிற்கு ஆளாக்கும். இருப்பினும், நியமன நேரத்தில் நிலையான காலத்தைக் குறிப்பிடும் சமீபத்திய நடைமுறை - உதாரணமாக, R. வெங்கடரமணியின் ஆரம்ப மூன்று ஆண்டு காலம் (2022-2025), மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது - ஒரு முற்போக்கான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.


இந்த வரம்புகள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், இந்திய குடியரசின் செயல்பாட்டில் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம், அரசாங்கம் அரசியலமைப்பையும் சட்டத்தையும் பின்பற்றுவதை உறுதிசெய்து, அதன் அரசியலமைப்பு ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கிறது. அரசாங்கத்தின் உயர் சட்ட பிரதிநிதியாக  இருக்கும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் அரசாங்கத்தின் குரலாக செயல்படுகிறார்.


மேலும், நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்பதன் மூலம், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நிர்வாகத்திற்கும் சட்டமன்றத்திற்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறார் மற்றும் நிபுணத்துவ சட்ட நுண்ணறிவுகளை வழங்குகிறார். இறுதியில், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நிர்வாக கொள்கை மற்றும் நீதித்துறை மறுஆய்வின் (judicial review) மற்றொரு வழியில் நிற்கிறார். மத்திய அரசாங்கத்தின் வழக்கறிஞராக மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் அரசியலமைப்பு மாண்பை பாதுகாப்பவராகவும், உச்சநீதிமன்றத்தில் சட்டத்தின் ஆட்சியின் முதன்மை பாதுகாவலராகவும் பணியாற்றி வருகிறார்.


கண்ணன். K, ஹைதராபாத்தில் உள்ள பொருளாதார மற்றும் சமூக ஆய்வுகள் மையத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.



Original article:

Share:

இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் கண்காணிப்பு மற்றும் தகவல்தொடர்பை GSAT-7R வலுப்படுத்தும். -சௌரப் திரிவேதி

 புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் (Geosynchronous Satellite (GSAT)) -7R என்பது இந்தியாவின் முதல் இராணுவ செயற்கைக்கோளான GSAT-7 "ருக்மிணி"யின் அடுத்த பதிப்பாகும். இது 2013-ஆம் ஆண்டில் ஏவப்பட்டது. ருக்மிணி அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் நிகழ்நேர தரவு இணைப்புகளை (real-time data links) வழங்குவதன்மூலம் கடற்படை தொடர்பை மேம்படுத்தியது. புதிய GSAT-7R செயற்கைக்கோள் தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துகிறது.


நவம்பர் 2, 2025 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து LVM3-M5 ராக்கெட்டில் இந்தியாவின் CMS-03 (GSAT-7R) செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை பெரிதும் வலுப்படுத்தும் மற்றும் தொழில்நுட்பத்தில் சுயசார்பு (self-reliance) பெறும் நாட்டின் இலக்கை ஆதரிக்கும்.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (Indian Space Research Organisation (ISRO)) உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கிய 4,400 கிலோ எடையுள்ள பன்முக அலைவரிசை தகவல்தொடர்பு செயற்கைக்கோள் (multi-band communication satellite,), இந்திய மண்ணிலிருந்து புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் (Geosynchronous Transfer Orbit (GTO)) ஏவப்பட்ட மிகப்பெரிய தகவல்தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைகோள் ஆனது இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், கடலில் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தவும், இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் அதன் கண்காணிப்பை வலுப்படுத்தவும் உதவும்.


பாதுகாப்பான தகவல் தொடர்பு பரவல்


2013ஆம் ஆண்டு ஏவப்பட்ட இந்தியாவின் முதல் இராணுவ செயற்கைக்கோளான GSAT-7 "ருக்மிணி"யின் அடுத்த பதிப்பாகும். அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் முழுவதும் நிகழ்நேர தரவு இணைப்புகளை வழங்குவதன் மூலம் ருக்மினி கடற்படை தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துகிறது. அதே வேளையில், GSAT-7R, கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் கடற்படை செயல்பாட்டு மையங்கள் (Maritime Operations Centres (MOCs)) இடையே தடையற்ற குரல், தரவு மற்றும் வீடியோ தொடர்புகளை செயல்படுத்துகிறது. செயற்கைக்கோளின் மேம்பட்ட பயன்திறன் அமைப்பு உயர் திறன் கொண்ட, பாதுகாப்பான மற்றும் குறுக்கீடு இல்லாத தகவல்தொடர்புகளை (Jam-resistant communication) உறுதி செய்கிறது — பிணைய-மையப்படுத்தப்பட்ட போர் மற்றும் இராணுவம் மற்றும் விமானப்படையுடனான கூட்டு நடவடிக்கைகளுக்கு இன்றியமையாதது.


15 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட GSAT-7R, இந்தியக் கடற்கரையிலிருந்து 2,000 கி.மீ வரை பாதுகாப்பான தகவல் தொடர்பை விரிவுபடுத்துகிறது. இது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பரந்த பகுதிகளை உள்ளடக்கியது. இந்த பரந்த பாதுகாப்புடன், இந்திய கடற்படை முக்கியமான கடல் வழிகள், குறுகிய பாதைகள் மற்றும் கடலில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை சிறப்பாகக் கண்காணிக்க அனுமதிக்கும். இது கடற்கொள்ளை எதிர்ப்பு, நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு மற்றும் மனிதாபிமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடற்படை சொத்துக்களுக்கு இடையே தொடர்ச்சியான ஒருங்கிணைப்பை ஆதரிக்கும். நிகழ்நேர சூழ்நிலை புதுப்பிப்புகள் மற்றும் விரைவான எதிர்வினை திறன்களை உறுதி செய்யும்.


மேலும், GSAT-7R, கடற்கரை கண்காணிப்பு ரேடார்கள், உளவு விமானங்கள் (reconnaissance aircraft) மற்றும் ஆளில்லா அமைப்புகள் போன்ற கண்காணிப்புத் தளங்களுடன் விண்வெளி அடிப்படையிலான தகவல்தொடர்புகளை ஒருங்கிணைப்பதன் மூலம் கடல்சார் கள விழிப்புணர்வை (maritime domain awareness (MDA)) மேம்படுத்தும். இந்த அமைப்புகள் இணைந்து செயல்படுவதால், கடற்படை பரபரப்பான கடல் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் விரைவாக பதிலளிக்கவும் உதவும். இது இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும்.


 GSAT-7R செயற்கைகோளை ஏவுவது, இந்தியா பாதுகாப்பு விண்வெளி தொழில்நுட்பத்தில் அதிக தன்னம்பிக்கை அடைந்து வருவதைக் காட்டுகிறது என்றும், தற்சார்பு இந்தியா (Aatmanirbhar Bharat) என்ற தொலைநோக்குப் பார்வையை ஆதரிக்கிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். வலுவான மற்றும் உள்நாட்டு செயற்கைக்கோள் தொடர்பு உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதன் மூலம், கடற்படை வெளிநாட்டு அமைப்புகளிலிருந்து தன்னிச்சையாக செயல்பட முடியும். இது ராஜதந்திர நடவடிக்கைகளில் ரகசியத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.


அளப்பரிய முன்னேற்றம்  (Quantum leap)


சுருக்கமாக, GSAT-7R இந்தியாவின் கடல்சார் தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது, இது இந்தியக் கடற்படை இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் அதிக எச்சரிக்கையுடன் இணைக்கப்பட்ட மற்றும் தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட இருப்பைப் பராமரிக்க அதிகாரம் அளிக்கிறது.


கடற்படையின் செயற்கைக்கோள்கள், உணரிகள் (Sensors), ரேடார்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்கள் ஆகியவை தகவல் மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு மையத்திற்கு (Information Management and Analysis Centre (IMAC) நிகழ்நேரத் தரவை அனுப்புகின்றன. இது இப்போது தேசிய கடல்சார் கள விழிப்புணர்வு (National Maritime Domain Awareness (NMDA)) தளமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதிகளுக்கான ஒருங்கிணைந்த தெளிவான ஒட்டுமொத்த பார்வையை உருவாக்க தேசிய கடல்சார் கள விழிப்புணர்வு பல ஆதாரங்களில் இருந்து தகவல்களை ஒருங்கிணைக்கும். செயற்கை நுண்ணறிவால்-இயக்கப்பட்ட பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி, இது சூழ்நிலை விழிப்புணர்வை மற்றும் கண்காணிப்பை மேம்படுத்தும், விரைவாக முடிவெடுப்பதை ஆதரிக்கும். சட்டவிரோத மீன்பிடித்தல், கடத்தல், கடற்கொள்ளை மற்றும் கடல்சார் பயங்கரவாதம் போன்ற அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அதை எதிர்கொள்ளவும், இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தவும், இந்தியக் கடல்சார் பகுதிகள் முழுவதும் அதன் ராஜதந்திர நலன்களைப் பாதுகாக்கவும் இந்த அமைப்பு உதவும்.



Original article:

Share:

கடந்த 50 ஆண்டுகளாக செயற்கை மழை உருவாக்கம் குறித்த தமிழ்நாட்டின் முயற்சிகள். -டி. ராமகிருஷ்ணன்

 1993-ஆம் ஆண்டில், சென்னை மீண்டும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருந்தபோது, மேக விதைப்புக்கான ​​சோதனைகள் செய்யப்பட்டன. ஆனால், எந்தவொரு பகுதியும் இயல்பைவிட 20 சதவீதத்துக்கும் அதிகமான மழையைப் பெறவில்லை என்ற ஒருமித்த கருத்து அதற்குள் அறிவியல் சமூகத்தினரிடையே  உருவாகியிருந்தது.


கடந்த அக்டோபர் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மேக விதைப்பு சோதனைகள் மூலம் மழையைத் தூண்ட டெல்லி அரசு முயற்சி மேற்கொண்டது. இந்த நடவடிக்கையானது கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இதேபோன்ற செயல்பாடுகளின் நினைவுகளை மீண்டும் எழுப்பியுள்ளது.


தற்போதைய நிகழ்வில் நடந்தது போலவே, அப்போதும் கூட இந்த முயற்சிக்கு ஒரு மிதமான வரவேற்பே கிடைத்தது. தற்போதைய மற்றும் கடந்தகால சோதனைகளுக்கு இடையிலான அடிப்படை வேறுபாடு என்னவென்றால், தென் மாநிலம் (தமிழ்நாடு) அதன் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தண்ணீர் மிகவும் தேவைப்பட்டது. மேலும், மாசுபாட்டைக் கையாளும் சிக்கலைத் தீர்க்க டெல்லி அரசு இந்தச் சோதனைகளில் தனது அதிர்ஷ்டத்தை முயற்சித்து பார்த்தது.


மேக விதைப்பு எனும் கட்டுக்கதை


1970-ஆம் ஆண்டு  ஜனவரி மாதத்தில், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (India Meteorological Department (IMD)) தலைமை இயக்குநராக (அந்த நேரத்தில் 'ஆய்வகங்களின் தலைமை இயக்குநர்' என்று அழைக்கப்பட்டது) இருந்த பி. கோடீஸ்வரம், செயற்கையாக மழையைப் பொழிவிப்பதற்கான சோதனைகளைப் பற்றி தன் முதல் குறிப்பை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் அப்போதைய  தமிழ்நாடு அரசுடன் கலந்தாலோசனை நடத்தவிருந்தார். 1975-ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது பெற்றவரும், 1971-1975 ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலக வானிலை அமைப்பின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியரும் என்கிற பெருமையையும் பெற்றார். கடந்த 10 ஆண்டுகளில் டெல்லி, ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூர் பகுதிகளில் தரையில் உள்ள மின்னியற்றிகளில் (generators) இருந்து உப்பைச் செலுத்தி மேகங்களை விதைத்ததன் மூலம் செயற்கை மழைக்கான சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.


முன்னதாக, 1968-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதியிட்ட 'தி இந்து' நாளிதழில் வெளியான ஒரு அறிக்கையில், ஒன்றிய உணவு மற்றும் வேளாண்மை அமைச்சகமானது (Union Ministry of Food and Agriculture) அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (Council of Scientific and Industrial Research (CSIR)) , மற்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department (IMD)) ஆகியவற்றுடன் கலந்தாலோசித்தது. பொருத்தமான ஒரு பகுதியில் விமானங்களைப் பயன்படுத்தி தீவிர அளவில் சோதனைகளை நடத்துவதற்காக ஒரு ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையின்படி, இந்தச் சோதனைகள் இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளான மூணாறு (கேரளா) மற்றும் திருச்சியில் (தமிழ்நாடு) மழைப்பொழிவின் அளவை சுமார் 20 சதவீதம் அளவிற்கு அதிகரித்துக் காட்டியுள்ளன.


1970ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் தமிழ்நாட்டிற்கு மழைப்பொழிவு சாதகமாக இல்லாததால், செயற்கை மழை என்ற கருத்தாக்கத்தில் அரசாங்கம் மிகுந்த ஆர்வம் காட்டியது. இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (Indian Institute of Tropical Meteorology (IITM)) ஜூலை 1973ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களுக்கு திருவள்ளூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சோதனைகளை நடத்தியது. ஆனால், "'போதுமான அளவிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததாலும் சில நடைமுறைச் சிக்கல்களினாலும்' மேகங்கள் விதைக்கப்பட்டதால்தான் மழை பெய்ததாக எந்த திட்டவட்டமான முடிவுக்கு வர முடியவில்லை என்று கோடீஸ்வரம் பதிவு செய்ததாக ‘தி இந்து' நாளிதழ் மே மாதம் 11 ஆம் தேதி  1974-ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டது.


இதற்கிடையில், சென்னை மற்றும் நீலகிரியில் பருவமழை மேகங்களிலிருந்து மழையைப் பொழிய வைக்கும் திட்டத்தை மேற்கொள்ள மும்பையில் உள்ள ஒரு கனடிய நிறுவனத்திடம் (Canadian firm) தமிழக அரசின் வேண்டுகோளின் பேரில் ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டது. ஏப்ரல் 30, 1975-ஆம் ஆண்டு ‘தி இந்து’ நாளிதழுக்கு இது குறித்த விவரங்களை அளித்த அப்போதைய தமிழக தலைமைச்செயலாளர் பி. சபாநாயகம் கூறுகையில், இத்திட்டத்தின் மொத்தச் செலவு ₹1 கோடி என்றும், அதில் ₹80 லட்சம் அந்நியச் செலாவணி என்றும் மதிப்பிட்டுக் கூறினார்.


மேக விதைப்பு மழையை அதிகரித்ததாக அறிக்கை கண்டறிந்துள்ளது


சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சென்னையின் நீர் ஆதாரங்களின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் நீர்நிலைப் பகுதிகளில் செயற்கை பரிசோதனைகள் விரைவில் தொடங்கும் என்ற செய்தி வெளியானது. இந்த நடவடிக்கை ஜூலை 12-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கி நவம்பர் நடுப்பகுதி வரை தொடரும். ஒரு களப்பொறியாளர் (ground engineer), ஒரு விமானி மற்றும் ஒரு வானிலை ஆய்வாளர் அடங்கிய மூன்று பேர் கொண்ட அமெரிக்கக் குழு, “தரையில் உள்ள ரேடார் கருவிகளின் உதவியுடன் மழை பெய்யும் மேகங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குள் இரசாயனங்களை விதைத்து, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யச் செய்யும்” என்று ஜூலை 8, 1975-ஆம் ஆண்டு தி இந்து நாளிதழில் அறிக்கை வெளியானது. அமெரிக்கர்கள் தங்கள் நாட்டிலும் ஆப்பிரிக்காவிலும் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தின் செலவு ₹12 லட்சமாகக் குறைக்கப்பட்டது, இதில் ₹ 10 லட்சம் அந்நிய செலாவணிக்கானது என்றும் இதற்கான அனுமதியை ஒன்றிய அரசு வழங்கியிருந்தது.


நடவடிக்கைகள் தொடங்கப்பட்டபிறகு, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்தது. உதாரணமாக, ஜூலை 21-ஆம் தேதி பூண்டியில் 3.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மாநில வேளாண்மைத் துறையின் அப்போதைய சிறப்புச் செயலாளரான கே. சொக்கலிங்கம், பூண்டிக்கும் செங்குன்றத்திற்கும் இடையிலான பகுதியிலும் மழை பெய்ததாகக் கூறினார். ஜூலை 29-ஆம் தேதி முதற்கட்ட நடவடிக்கைகளை முடித்த பிறகு, அமெரிக்கக் குழுவின் பொறியாளர் உறுப்பினரான பிரெட் கிளார்க், மேகவிதைப்பு காரணமாக சுமார் 20 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவு ஏற்பட்டதாகக் கூறினார். பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி சாகருக்குப் (நீர்த்தேக்கம்) பிறகு நீர்வரத்து அதிகம் இருந்ததாக சிறப்புச் செயலாளர் சொக்கலிங்கம் தெரிவித்தார்.


ஒரு வாரம் கழித்து புனேவில் செய்தியாளர்களுடனான சந்திப்பில், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் பொது இயக்குநர் ஒய்.பி. ராவ், 'மேகங்களுக்குள் ஒரே ஒரு முறை பறந்த உடனேயே செயற்கை மழை உருவாக்கும் முயற்சி வெற்றி பெற்றது' என்ற கூற்றுகளை மறுத்தார். 1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று தி இந்துவில் ஒரு தலையங்கத்தில், "ராவின் பார்வையில், அத்தகைய உடனடி மதிப்பீடு சாத்தியமில்லை, மேலும் சோதனை குறித்த எந்தவொரு தீர்ப்பையும் அறிவிப்பதற்கு முன்பு அறிவியல் சோதனைகள் மிக நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டும். எனினும், சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உள்ள முக்கியப் பிரச்சினை, எப்படியாவது தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு இடத்திற்கு நிவாரணம் வழங்குவதைப் பற்றியதுதான்," என்று கூறியது.


1976-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களின் அரசாங்கம் கலைக்கப்படுவதற்குச்  சரியாகப் பதினைந்து நாட்களுக்கு முன், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மதுரை, இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனது குறித்து விளக்கினார். இந்த மாவட்டங்களில் மேக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.


மீண்டும், 1980-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், மாநிலத்தை, குறிப்பாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை கடும் வறட்சி தாக்கியது. அந்த நேரத்தில், எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் முதலமைச்சராகவும், சொக்கலிங்கம் என்பவர் தலைமைச் செயலாளராகவும் இருந்தனர். ஜூலை 1983-ஆம் ஆண்டு தாமஸ் ஹென்டர்சன் தலைமையிலான நான்குபேர் கொண்ட அமெரிக்கக் குழுவால் மேகவிதைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பூண்டியில் "மிதமான மழை" பதிவானது. இந்தச் சோதனைகள் அக்டோபர் மாதம் வரை தொடர்ந்தன. சோதனை முடிந்த பிறகு, இந்த நடவடிக்கைக்காக மாநில அரசுக்கு ₹26 லட்சம் செலவானதாக, நவம்பர் 18, 1983 அன்று வெளியான இந்து நாளிதழுக்கு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. எட்டு மாதங்களுக்குப் பிறகு, நகரின் நீர்த்தேக்கங்களில் மேக விதைப்பு நடவடிக்கைகளுக்கென்று அரசாங்கம், தொகை ₹62 லட்சத்தை ஒதுக்கியது. நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், மழை தெய்வங்களின் அருளை வேண்டி, அதிகாரிகள் ஒரு விசேஷ முயற்சியாக வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதனின் உதவியை நாடினர். அவர் செம்மரக் குளம் கரையில், மழையை வரவழைக்கும் சக்தி கொண்டதாகக் கருதப்படும் [முத்துஸ்வாமி தீட்சிதர் இயற்றியதாகக் கூறப்படும்] 'அம்ருதவர்ஷினி' ராகத்தை இசைத்ததாகக் கூறப்படுகிறது. 


1983-ஆம் ஆண்டில் மாநில அரசு ஒரு விமானத்தை வாங்கியது, இந்த நடவடிக்கை தலைமைத் தணிக்கையாளரின் (Comptroller and Auditor General (CAG)) விமர்சனத்திற்கு உள்ளானது. அவரது அறிக்கை 1987 நவம்பரில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மாநில அரசு வழக்கமான டெண்டர் நடைமுறையை பின்பற்றவில்லை என்பது மட்டுமின்றி, அந்தப் பயன்படுத்தப்பட்ட விமானத்தை ஆய்வு செய்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) பரிந்துரைத்த விலையைவிட மிக அதிக விலையையும் கொடுத்தது என்றும் தி ஹிந்து நாளிதழ் 1987-ஆம் ஆண்டு நவம்பர் 10 அன்று செய்தி வெளியிட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, வெளியான மற்றொரு அறிக்கையில் அந்த விமானம் உதிரிபாகங்கள் இல்லாததால் சில காலம் பயன்படுத்தப்படாமல் இருந்தது என்றும் அதை பழுதுபார்க்க சுமார் ₹13 லட்சம் செலவானது, இறுதியாக அதை விற்றுவிட வேண்டியிருந்தது என்றும் விமர்சிக்கப்பட்டிருந்தது. 


1993-ஆம் ஆண்டில், சென்னை மீண்டும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருந்தபோது, மேக விதைப்புக்கான ​​சோதனைகள் செய்யப்பட்டன. ஆனால், எந்தவொரு பகுதியும் இயல்பைவிட 20 சதவீதத்துக்கும் அதிகமான மழையைப் பெறவில்லை என்ற ஒருமித்த கருத்து, அதற்குள் அறிவியல் சமூகத்தினரிடையே உருவாகியிருந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் "சாதகமான சூழ்நிலைகள்" இல்லாததால் அதிகாரிகள் அவரது முடிவைச் செயல்படுத்தவில்லை.


மேக விதைப்பு: விலை உயர்ந்தது, ஆனால் எந்த உத்தரவாதமும் இல்லை


கிருஷ்ணா நீர் மற்றும் வீராணம் ஏரியை சென்னை நீர் விநியோகத்திற்கான ஆதாரங்களாகச் சேர்த்தது, கடல்நீரை நன்னீராக்கும் பல ஆலைகளுடன் இணைத்தது போன்ற நடவடிக்கைகள், நகரின் நீர் விநியோக நிலையை கடந்தகாலத்தைவிட மிகவும் சிறப்பாக ஆக்கியுள்ளது. குடிநீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இந்தத் திட்டங்கள் போதுமானதாக உள்ளதால் மேகவிதைப்பு சார்ந்த நடவடிக்கைகளைத் தற்போதைக்கு மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.



Original article:

Share:

நாடு தழுவிய சிறப்பு தீவிர திருத்தம்: வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவுகளைச் சரிபார்க்க வேண்டியதன் அவசியம் -ராஜீவ் குமார்

 இந்தியாவின் தேர்தல் செயல்முறைகளின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், நாடு தழுவிய சிறப்பு தீவிரத் திருத்தத்தின் வெற்றியானது, இரட்டைப் பதிவுகளை நீக்கி, ஒவ்வொரு வாக்கும் எண்ணப்படுவதை உறுதி செய்வதையும், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதையும் சார்ந்துள்ளது.


அரசியல் கட்சிகளிடமிருந்தும் இறுதியில் உச்சநீதிமன்றத்திலிருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் (Special Intensive Revision (SIR)) பயிற்சி நடந்து முடிந்தபிறகு, இந்தியத் தேர்தல் ஆணையம் இப்போது நாடு தழுவிய சிறப்பு தீவிரத் திருத்தத்தை அறிவித்துள்ளது. இது சிறப்பு தீவிர திருத்தம் 2.0 என குறிப்பிடப்படுகிறது. இந்த முறையானது மக்களுக்கு ஏற்ற மற்றும் நடைமுறை ரீதியாக வலுவான முயற்சியாகக் கருதப்படுகிறது.


ஏறக்குறைய, நூறு கோடி வாக்காளர் பதிவுகளுடன், டிஜிட்டல் அணுகுமுறை என்பது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, மிகவும் முக்கியமானதுமாகும். வாக்காளர் பட்டியல் இனி ஒரு நிலையான, மாநில வாரியான பதிவாக இல்லாமல் இது இந்தியாவின் தேர்தல்களின் நேர்மையை துல்லியமாக வரையறுக்கும் தேசிய தரவுத்தளமாகும். இருப்பினும், நீதிமன்றங்கள் கவனமாக இருந்தாலும், ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்யப்படுவது தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.


வீடுகளை மாற்றும் எண்ணற்ற குடிமக்களைப் பாதிக்கும் இந்தப் பிரச்சினை, மோசடி பற்றியது அல்ல, மாறாக அமைப்பின் நடைமுறைத் தவறுகளைப் பற்றியது. பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரண்டு மாநில வாக்காளர் பட்டியலிலும் பெயர் உள்ள ஒரு வாக்காளரான பிரசாந்த் கிஷோர் சம்பந்தப்பட்ட சமீபத்திய வழக்கு, இந்தக் குறைபாட்டை விளக்குகிறது. மேற்கு வங்கத்தில் சிறப்பு தீவீர திருத்தம் இன்னும் தொடங்கப்படாத நிலையில், இத்தகைய இரட்டைப் பதிவு விவகாரம் பீகாரில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த வாக்காளரும் வேறு எங்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிசெய்யும் திட்டத்தின் முக்கிய நோக்கத்தை தோற்கடிக்கிறது. இது செயல்முறையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது மற்றும் வாக்காளர் தரவுத்தளத்தின் மீதான நம்பிக்கையைக் குறைக்கிறது.


போலியான பதிவுகளை நிர்வகித்தல்


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act (RP)), 1950-ன் கீழ், போலியான பதிவுகள் (duplicate entries) தொழில்நுட்பரீதியாக ஒரு மீறலாக அமைகின்றன. இருப்பினும், அத்தகைய குறைபாடுகள் அரிதாகவே நிகழ்கின்றன. சட்டத்தை மதிக்கும் பல குடிமக்கள், வெறுமனே வசிப்பிடத்தை மாற்றுவதன் மூலம், தற்செயலாக தங்கள் தவறு எதுவும் இல்லாமல் இந்தச் சட்டத்தை மீறியவர்களாக ஆகிவிடுகிறார்கள். சிறப்பு தீவிர திருத்தம் 2.0 என்பது வலுவானதாகவும், நம்பகமானதாகவும், பிழையற்றதாகவும் மாற்ற தேர்தல் ஆணையத்தின் டிஜிட்டல் கட்டமைப்பிற்குள் ஒரு முறையான, தொழில்நுட்பம் சார்ந்த திருத்த வழிமுறையின் அவசரத் தேவையை இது வலியுறுத்துகிறது.


வாக்காளர் பட்டியல்களின் உண்மைத்தன்மையைப் பராமரிப்பதற்கும், போலிகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் 1950-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் சட்டம், விதிமுறையை வகுத்துள்ளது. சட்டப்பிரிவு 22(b)-ன் கீழ், ஒரு வாக்காளர் அதே தொகுதிக்குள் வசிக்கும் இடத்தை மாற்றினால், தேர்தல் பதிவு அதிகாரி (Electoral Registration Officer (ERO)) அந்தப் பதிவை பட்டியலின் பொருத்தமான பகுதிக்கு மாற்ற வேண்டும். ஒரு வாக்காளர் வேறு தொகுதிக்குச் செல்லும்போது, ​​பிரிவு 23(2)-ன்  புதிய பட்டியலில் சேர்ப்பதை நிர்வகிக்கிறது. விண்ணப்பதாரர் பதிவு செய்ய உரிமை உள்ளவர் என்று தேர்தல் பதிவு அதிகாரி திருப்தி அடைந்தால், புதிய பட்டியலில் விண்ணப்பதாரரின் பெயரைச் சேர்க்க உத்தரவிடவேண்டும் என்று அது கட்டளையிடுகிறது. விண்ணப்பதாரர் ஏற்கனவே மற்றொரு தொகுதியின் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட தேர்தல் பதிவு அதிகாரி அந்தத் தொகுதியின் அதிகாரிக்குத் தெரிவிக்க வேண்டும். பின்னர், அவர் அந்த பட்டியலிலிருந்து விண்ணப்பதாரரின் பெயரை நீக்க வேண்டும் என்றும் இந்தப் பிரிவு வழிமுறைகளைக்  கூறுகிறது.


ஒவ்வொரு வாக்காளரின் பதிவின் தனித்தன்மையை உறுதிப்படுத்த, பிரிவுகள் 17 மற்றும் 18-ம் பல பதிவுகளை வெளிப்படையாகத் தடை செய்கின்றன. எந்த நபரும் ஒன்றுக்கும் மேற்பட்டத் தொகுதியில் பட்டியலிடப்படக்கூடாது. அதே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பதிவு செய்யப்படக்கூடாது. இந்த விதிமீறல்கள் தேர்தல் சட்டத்தின்கீழ் குற்றமாகக் கருதப்படும். பெரும்பாலும், வாக்காளர் புதிய வசிப்பிடத்தில் பெயரைச் சேர்க்கும்போது, முந்தைய இடத்தில் உள்ள பெயரை ஒரே நேரத்தில் நீக்காமல் விடுவதால், இம்மாதிரியான போலிப் பதிவுகள் ஏற்படுகின்றன.


சுருக்கமாகச் சொன்னால், இந்தச் சட்டம் தேர்தல் பதிவு அதிகாரிகள்மீது முதன்மைப் பொறுப்பை வைக்கிறது. பெயர் மாற்றம், சேர்த்தல், நீக்குதல் ஆகியவை துல்லியமாகவும், உடனடியாகவும், ஒரே நேரத்தில் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும். இந்தச் செயல்முறை போலிப்  பதிவுகளைத் தடுப்பதற்கும், தேசிய தேர்தல் தரவுத்தளத்தின் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது


படிவம் 8-ல் வசிப்பிட மாற்றம் மற்றும் வாக்காளர் விவரங்களைத் திருத்துவது தொடர்பான மேற்கண்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஒருங்கிணைத்துள்ளது. இந்தப் படிவம் பதிவுகளை மாற்றுதல் அல்லது திருத்துதல் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது. முகவரி மாற்றக் கோரிக்கை நான்கு வகைகளின் கீழ் வரலாம்: 


(I) தொகுதி அல்லது வாக்குச் சாவடியில் மாற்றம் இல்லை.

(II) தொகுதியில் மாற்றம் இல்லை, ஆனால் வாக்குச் சாவடியில் மாற்றம்.

(III) ஒரே மாநிலத்திற்குள் தொகுதியில் மாற்றம்.

(IV) தொகுதி மற்றும் மாநிலம் இரண்டிலும் மாற்றம். 


இரட்டைப் பதிவுகளுக்கான மிகவும் பொதுவான காரணம், ஒரு வாக்காளர் வேறொரு மாநிலத்திற்கு இடம்பெயர்ந்த வகை IV  நிகழ்வுகளில்தான் எழுகிறது. புதிய பதிவு அதே வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (Electors Photo Identity Card (EPIC)) எண்ணைத் தக்க வைத்துக் கொள்ளலாம் அல்லது புதிய ஒன்றை உருவாக்கலாம். உதாரணமாக, பீகார் வாக்காளரின் (பிரசாந்த் கிஷோர்) இரட்டைப் பதிவு வெவ்வேறு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்களைக் கொண்டிருந்தன. அதேசமயம், இரண்டு பதிவுகளும் ஒரே வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்களைப் பகிர்ந்து கொண்ட பல நிகழ்வுகளையும் ஆசிரியர் பகிர்ந்து கொண்டுள்ளார்.  


இதுபோன்ற சூழ்நிலைகளில், பழைய பதிவை நீக்கத் தவறியதற்கு  தேர்தல் பதிவு அதிகாரியே முழுப்பொறுப்பு என்று கூறப்படுகிறது. தேசிய வாக்காளர் பட்டியலில் போலிப் பதிவுகள் இருப்பதைத் தடுக்க அவர்களின் உடனடி ஒருங்கிணைப்பு அவசியம். மற்றொரு போலிப் பதிவு ஏற்படுவதற்கான காரணம், வாக்காளர் வேறு இடத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருப்பதைத் தெரிவிக்காமல், புதிய சேர்க்கைக்கான படிவத்தைப் பயன்படுத்தும்போது ஏற்படுகிறது. ஒரு தவறான அறிவிப்பு சட்ட மீறலாகும், மேலும் சரிபார்ப்புக்கு பொறுப்பான வாக்காளர் மற்றும் அதிகாரிகள் இருவரும் இங்குப் பொறுப்புணர்வைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.


செயல்முறையை விளக்குதல் 


இந்தியாவின் வாக்காளர் பட்டியலின் முதுகெலும்பு என்று தேர்தல் ஆணைய இணைய வலையமைப்பு (Election Commission Internet Network (ECINet)) அறியப்படுகிறது. இது புனேவில் உள்ள மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (Centre for Development of Advanced Computing (C-DAC)) நிர்வகிக்கும் நாடு தழுவிய முழுமையான டிஜிட்டல் அமைப்பாகும். ஏறக்குறைய, நூறு கோடி வாக்காளர்களின் பதிவுகளுடன், ECINet என்பது உலகின் மிகப்பெரிய நிலையற்ற தரவுத்தளங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு வாக்காளரும் ஒரு தனித்துவமான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணால் அடையாளம் காணப்படுகின்றனர். இது ஒரு நபருக்கு ஒரே ஒரு உறுதிப்படுத்தப்பட்ட பதிவு மட்டுமே இருக்கும். தேர்தல் ஆணைய இணைய வலையமைப்பானது (Election Commission Internet Network (ECINet)) போலிப் பதிவுகளைக் கண்டறிந்து அங்கீகரிக்கப்பட்ட சரிபார்ப்பு மூலம் திருத்தங்களை எளிதாக்குகிறது. மேலும், முழுக் கண்காணிப்புக்காக வாக்காளரின் புதுப்பிப்பு வரலாற்றையும் சேர்க்கும் வகையில் இதை விரிவுபடுத்த வேண்டும்.


போலிப் பதிவுகளைத் திறம்படக் கண்டறிய உதவும் வலுவான தேடல் மற்றும் சரிபார்ப்பு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தை (Application Programming Interface (API)) உருவாக்கியதற்காக தேர்தல் ஆணையத்தையும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தையும் பாராட்ட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர். எந்தவொரு இரட்டைப் பதிவும் சரிபார்ப்பின்போது மதிப்பாய்வு மற்றும் நீக்குதலுக்கான எச்சரிக்கையைத் தரவேண்டும். அத்தகைய கருவிகள் கிடைப்பதன் மூலம் போலிப் பதிவுகள் உள்ளீடிற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி காகித அடிப்படையிலோ அல்லது காகிதமில்லாததாகவோ இருந்தாலும், உண்மையான சவால் என்பது தரவுத்தளத்தின் துல்லியத்திலும் நிர்வாகத்தின் விரைவான பதிலிலும் உள்ளது. டிஜிட்டல் அமைப்பில், போலிப் பதிவுகளைக் கண்டறிதலும் நீக்குதலும் உடனடியாக நடக்க வேண்டும். 


இறுதியில், நகல் உள்ளீடுகளின் பெரும்பாலான வழக்குகள், ஒரே அல்லது வேறுபட்ட வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், பழைய பதிவுகளை நீக்கத் தவறியதால் ஏற்படுகின்றன. இந்த தொடர்ச்சியான சிக்கல், தொழில்நுட்பக் குறைபாட்டை பிரதிபலிக்கவில்லை, மாறாக நிர்வாகக் குறைபாடு — தேர்தல் இயந்திரத்திற்குள் சரியான நேரத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாததால் ஏற்படும் தோல்வி.


முன்னோக்கி செல்லும் வழி


வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி 2.0 என்பது மற்றொரு அதிகாரத்துவ சடங்காக மாறிவிடக்கூடாது. இந்தியாவால், நடைமுறை செயலற்ற தன்மையில் மூழ்கிய மற்றொரு பயிற்சியை ஏற்றுக்கொள்ள முடியாது. இடைவெளிகள் நிர்வாக ரீதியானவையே தவிர தொழில்நுட்ப ரீதியானவை அல்ல. தேர்தல் ஆணைய இணைய வலையமைப்பானது (Election Commission Internet Network (ECINet)) ஏற்கனவே அதீத திறனைக் கொண்டுள்ளது. மேலும், சரிபார்ப்புக்கென்று  நம்பகமான, அகில இந்திய தரவுத்தளமாகிய ஆதார் தகவல்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் இது  மேம்படுத்தப்பட வேண்டும்.


வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி 2.0 தொடங்குவதற்கு முன், தேர்தல் தரவுகள் சுத்தம் செய்யப்பட வேண்டும், தேவைப்படும் மற்றும் போலிப் பதிவுகள்  குறிக்கப்பட்டு முற்றிலும் நீக்கப்படவேண்டும். தொழில்நுட்பத்தின் சரியான பயன்பாட்டால், இது ஒரு நம்பிக்கைப் புரட்சியாக மாற முடியும். வெளிப்படைத்தன்மை, சரிபார்ப்பு மற்றும் ஒருமைப்பாடு ஆகியவை அமைப்பு ரீதியாக கட்டமைக்கப்படும் ஒரு புரட்சி என்று அறியப்படுகிறது. மென்பொருள் தலைமையிலான சரிபார்ப்பு, டிஜிட்டல் தணிக்கை பாதைகள் மற்றும் நிகழ்நேர திருத்தங்கள் ஆகியவற்றில் கவனம் தீர்க்கமாக மாற வேண்டும். தேர்தல் ஆணைய இணைய வலையமைப்பானது  (Election Commission Internet Network (ECINet)) ஒரு நம்பகமான பொதுப் பயன்பாடாகச் செயல்படவேண்டும். உள்ளுணர்வு கொண்டதாக, குறைபாடுகள் இல்லாத மற்றும் பதிலளிக்கக்கூடியதாக அமைய வேண்டும். நீண்ட வரிசைகள் மற்றும் பதிலளிக்கப்படாத புகார்களுக்குப் பதிலாக  நிகழ்நேர பிரச்சனைகளுக்கான தீர்வு வழிமுறைகள் தேவை என்பன போன்ற கோரிக்கைகள்  வலியுறுத்தப்படுகின்றன.


ஒரு வெளிப்படையான, சுய-திருத்தப் பின்னூட்ட அமைப்பு செயல்பாட்டில் இருக்கும்போது, எதிர்கால வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தங்கள் தேவையற்றவையாகிவிடும். வாக்காளர் பட்டியல்கள் எப்போதும் துல்லியமான, புதுப்பிக்கப்பட்ட மற்றும் சரிபார்க்கக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா ‘வெறும் சடங்காக சரிபார்த்தல்’ என்பதிலிருந்து ‘வடிவமைப்பு மூலம் சரிபார்த்தல்’  என்ற நிலை நோக்கி நகர முடியும்.


ராஜீவ் குமார், IIT Kharagpur, IIT Kanpur, BITS Pilani, and JNU-வின் முன்னாள் கணினி அறிவியல் பேராசிரியரும், DRDO மற்றும் DSTயின் முன்னாள் விஞ்ஞானியுமாவார்.



Original article:

Share:

உயிர்கள் காப்பாற்றப்பட்டன, வாழ்வாதாரங்கள் பறிபோயின -சுஷாந்த மஹாபத்ரா

 ஒடிசாவின் உண்மையான சவால் புயலுக்குப் பிறகு தொடங்குகிறது.


அக்டோபர் 28, 2025 அன்று மோந்தா புயல் கிழக்கு கடற்கரையை தாக்கியபோது, ​​ஒடிசா மற்றும் அதன் அண்டை மாநிலங்களின் வயல்வெளிகளைச்  சேதமாக்கியது, கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது, ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்தப் புயல், பழக்கமான ஒரு கொடூர வடிவத்தை மீண்டும் காட்டியது. ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே மணிக்கு 100-110 கிமீ வேகத்தில் புயல் கரையைக் கடந்தது. தெற்கு ஒடிசாவின் கஞ்சம், ராயகடா மற்றும் கோராபுட் மாவட்டங்கள் மற்றும் தெலுங்கானாவின் சில பகுதிகள் வழியாக நுழைந்து, பின்னர் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகப் பலவீனமடைந்தது.


ஆரம்பகட்ட அறிக்கைகள் மூலம் இப்பகுதி முழுவதும் பயிர் மற்றும் தோட்டக்கலைகளில் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது. ஆயிரக்கணக்கானோரை உடனடியாக வெளியேற்றிய ஒடிசாவின் துரித நடவடிக்கை அம்மாநிலத்தின் தயார்நிலையை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது. ஆனால், இப்போது புயலுக்குப் பிறகு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்கிற பெரிய சவால் ​​ஒடிசா அரசின் முன்னால் உள்ளது.

 

வெப்பமண்டல புயல்களால் ஒடிசா மாநிலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் கட்டமைப்பு ரீதியானது. அதன் 575 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை, உலகின் அதிக புயல் தாக்கும் ஆறு பகுதிகளில் ஒன்றாகும். கடந்த நூற்றாண்டில், கிட்டத்தட்ட 260 புயல்கள் மாநிலத்தைத் தாக்கியுள்ளன. 1999-ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய சூப்பர் புயலிலிருந்து 2013-ல் பைலின் (Phailin), 2018-ல் டிட்லி (Titli), 2019-ஆம் ஆண்டில் ஃபானி (Fani) மற்றும் 2021-ஆம் ஆண்டில் யாஸ் (Yaas) புயல் வரை ஒடிசாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன


ஃபைலின் புயலால் மட்டும் கிட்டத்தட்ட ₹9,000 கோடி மதிப்பிலான  இழப்புகளை ஏற்பட்டது. இதில் கால்நடைகள் மற்றும் விவசாயம் மூலம் கால் பங்கிற்கும் (நான்கில் ஒரு பங்கிற்கும்) அதிகமான இழப்பு ஏற்பட்டது. இறப்புகளைக் கணக்கிடுவது மட்டும் இந்தப் பேரழிவுகளின் பெரிய மற்றும் நீடித்த செலவுகளைத் தவறவிடுகிறது.


உடனடிப் பொருளாதார அதிர்ச்சி விரைவானது மற்றும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியது. மொந்தா புயலினால் ஏற்பட்ட அழிவு என்பது விளிம்புநிலை விவசாயிகளுக்கு கடுமையான வருமான இழப்புகள், வர்த்தகர்களுக்கு பணப்புழக்க நெருக்கடிகள் மற்றும் அருகிலுள்ள நகரங்களில் விநியோகத்தில் தடங்கல்களை ஏற்படுத்தியுள்ளது. ஃபானி புயலுக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் (United Nations Development Programme (UNDP)) தலைமையிலான மதிப்பீட்டின்படி விவசாயம், கால்நடைகள் மற்றும் மீன்வளத்திற்கு சுமார் ₹3,000 கோடி அளவிற்குச் சேதம் ஏற்பட்டதாகவும், கிட்டத்தட்ட ஏழுகோடி கிராமப்புற வேலை நாட்கள் இழப்பால் சுமார் ₹2,700 கோடி மதிப்பிலான ஊதிய இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புயல் ஓய்ந்த பிறகும் பொருளாதார வலி நீண்டகாலம் நீடிக்கிறது. விவசாயிகள் இன்னும் கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டும், விதைகள் மற்றும் உரங்களை வாங்க வேண்டும், அடுத்த பருவம் தொடங்குவதற்கு முன்பு நீர்ப்பாசனத்தை மீட்டெடுக்க வேண்டும். மீனவர்கள் காப்பீட்டு உரிமைகோரல் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே வலைகள், படகுகள் மற்றும் குளிர்ப்பதன பெட்டிகளை (iceboxes) மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. 


இந்த வெளிப்படையான விளைவுகளுக்கு அப்பால், இரண்டாம் நிலை மந்தநிலை பெரும்பாலும் அதிக அழிவை உண்டாக்குகிறது. புயல் பாதித்த மாவட்டங்களில், முறைசாரா வணிகங்கள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன. வங்கிகளில் கடன் பெறுவதும் கடினமாகிறது. பொதுச் செலவுகள் வளர்ச்சித் திட்டங்களிலிருந்து மறுகட்டமைப்புக்குத் திருப்பிவிடப்படுகின்றன. இதனால்,  சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பில் முன்னேற்றம் தாமதமாகிறது. பெரிய புயல்களால் ஒடிசா மாநிலம் பாதிக்கப்பட்ட ஆண்டுகளில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் பல சதவீத புள்ளிகள் சரிவைச் சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.


கடந்த இருபது ஆண்டுகளாக, ஒடிசா பேரிடர் மேலாண்மையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (Odisha State Disaster Management Authority (OSDMA)) புயல் முகாம்களை விரிவுபடுத்தியுள்ளது. முன்கூட்டிய எச்சரிக்கை வழங்கும் அமைப்புகளை வலுப்படுத்தியுள்ளது மற்றும் பெருமளவிலான மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை நிறுவனமயமாக்கியுள்ளது. இதன் விளைவுகள் குறிப்பிடத்தக்கவை : 1999-ஆம் ஆண்டு ஏற்பட்ட சூப்பர்-புயலால் கிட்டத்தட்ட 10,000 பேர் பலியானார்கள்; ஃபைலின் புயலின்போது பலி எண்ணிக்கை 50-க்கும் குறைவாகவே இருந்தது; மற்றும் 2021-ஆம் ஆண்டு யாஸ் புயலின்போது இரண்டு பேர் மட்டுமே இறந்தனர். இருப்பினும், உயிர்களைக் காப்பதில் அடைந்துள்ள இந்த முன்னேற்றம் மக்கள் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதில் பிரதிபலிக்கவில்லை. மறுசீரமைப்பு இன்னும் சாலைகள், வீட்டுவசதி மற்றும் மின்சாரம் போன்ற புலப்படும் உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.


சுற்றுச்சூழல் அழுத்தங்கள் நெருக்கடியை ஆழப்படுத்துகின்றன. உவர்நீர் ஊடுருவலும் அலைகளும் வளமான மண்ணையும் ஈரநிலங்களையும் தரமிறக்கி, சிறு விவசாயிகள் மற்றும் மீனவர்களின் இயற்கை வளங்களை அரிக்கின்றன. கடல் மட்டம் உயருதல் உப்புத்தன்மை கொண்ட வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது. விளைச்சலைக் குறைக்கிறது மற்றும் விவசாயிகளை குறைந்த லாபகரமான பயிர்கள் அல்லது இடம்பெயர்வை நோக்கித் தள்ளுகிறது. பள்ளிப்படிப்பு சீர்குலைவு, குடும்பப் பிரிவினை மற்றும் கிராமப்புற சமூகங்களை பலவீனப்படுத்துதல் போன்ற சமூகச் செலவுகளை  இந்த மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன. 


ஒடிசாவின் அடுத்தகட்ட மீட்சியானது, உயிர்களுடன் சேர்ந்து வாழ்வாதாரத்திற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். பயிர் மற்றும் மீன்வளக் காப்பீட்டிற்கு விரைவான, எளிமையான கோரிக்கைகள் தேவைப்படுகிறது. இதன்மூலம் வேளாண்மக்கள் விரைவாக மீண்டும் பயிரிடவோ அல்லது மறுகட்டமைக்கவோ முடியும். அவசரகால கடன் மற்றும் குறுகிய கால கடன் தவணை ஒத்திவைப்புகள் (loan moratoria) அவர்கள் மீதான அழுத்தத்தைத் தவிர்க்க உதவும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)) நீட்டித்து, கரைகள் மற்றும் குளங்களை மறுகட்டமைப்பதன் மூலம் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் இழந்த சொத்துக்களை மீட்டெடுக்கவும் முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


இயற்கை சார்ந்த பாதுகாப்பும் முக்கியமானது. சதுப்புநிலங்கள், ஈரநிலங்கள் மற்றும் அலைத்தடுப்பு அமைப்புகள் அலை ஆற்றலை 90% வரை குறைத்து, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பை வழங்குகின்றன. ஒடிசாவில் ஐ.நா ஆதரவுடன் செயல்படுத்தப்படும் சதுப்புநில மறுசீரமைப்பு பருவநிலை-சார்ந்த மீன்வளர்ப்பு, சேற்று-நண்டு வளர்ப்பு முதல் அரிசி உற்பத்தியை அதிகரிப்பது போன்ற திட்டங்கள், தகவமைப்பு எவ்வாறு வருமானத்தை நிலைநிறுத்த முடியும் என்பதைக் காட்டுகின்றன. 


நிதி அமைப்புகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும். அவசரகால நிதி, பிராந்திய காப்பீட்டுத் தொகுப்புகள், நெகிழ்வான மத்திய இடமாற்றங்கள் மற்றும் கூட்டாண்மைகள் ஆகியவற்றின் கலவையானது, வளங்களை நேரடியாகச் சிறு விவசாயிகள் மற்றும் கடலோர சமூகங்களுக்குச் செலுத்த வேண்டும் என்பது போன்ற பொருளாதார ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

 

ஆசிரியர், (Institute of Chartered Financial Analysts of India (ICFAI)) சமூக அறிவியல் பள்ளி, உயர் கல்விக்கான அறக்கட்டளை அமைப்பில் பொருளாதாரம் கற்பித்து வருகிறார்.



Original article:

Share:

இந்தியாவின் காடுகள் எதிர்காலத்தை தாங்கிப் பிடிக்கின்றன -சி.கே. மிஸ்ரா, சூர்யபிரபா சதாசிவன்

 இந்தியாவின் காடு வளர்ப்பு வரலாறு நீண்டகாலமாக மூன்று முக்கிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அவை சமூக பங்கேற்பு (community involvement), சுற்றுச்சூழல் வடிவமைப்பு (ecological design) மற்றும் நிதி (financing) ஆகும்.


பொருளாதார வளர்ச்சியை நிலையான வளர்ச்சியுடன் சமநிலைப்படுத்த இந்தியா முயற்சிக்கும்போது, ​​காலநிலை விவாதங்களில் காடுகள் (forests) மீண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன. பசுமை இந்தியா திட்டத்திற்கான (Green India Mission (GIM)) புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் மறுசீரமைப்பை ஒரு முக்கிய இலக்காக எடுத்துக்காட்டுகிறது. 2030-ம் ஆண்டுக்குள் 25 மில்லியன் ஹெக்டேர் சிதைவடைந்த காடுகள் மற்றும் காடுகள் அல்லாத நிலங்களை மீட்டெடுப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.


இந்த முயற்சி மரங்களை நடுவது அல்லது நிலத்தை பசுமையாக்குவது மட்டுமல்ல. 2030 ஆம் ஆண்டுக்குள் 3.39 பில்லியன் டன் CO₂ க்கு சமமான கூடுதல் கார்பன் மூழ்கியை உருவாக்கும் இந்தியாவின் காலநிலை இலக்குடன் இது நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்தியா எவ்வளவு நிலத்தை மீட்டெடுக்கிறது என்பது மட்டுமல்ல, அதை எவ்வாறு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது.


தரமான கேள்வி


IIT பம்பாய் மற்றும் BITS பிலானியுடன் இணைந்து IIT காரக்பூர் நடத்திய 2025-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியா முழுவதும் உள்ள அடர்ந்த காடுகளின் ஒளிச்சேர்க்கை திறன் 12% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம்? அதிகரித்துவரும் வெப்பநிலை மற்றும் வறண்ட மண் ஆகும். எளிமையாகச் சொன்னால், இந்தியா தனது காடுகளின் பரப்பை அதிகரித்து வந்தாலும், இந்த காடுகள் கார்பனை உறிஞ்சுவதில் குறைவான செயல்திறன் கொண்டதாக மாறி வருகின்றன. இந்த ஆய்வு "இந்தக் கண்டுபிடிப்பு, அதிக மரங்களை நடுவதால் தானாகவே கார்பன் சேமிப்பு அதிகரிக்கும்" (more trees equal more carbon sinks) என்ற பழைய நம்பிக்கையை சிதைக்கிறது. மேலும், காடுகள் மறுசீரமைப்பு, அதிக விதானப் பரப்பைச் சேர்ப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், சுற்றுச்சூழல் மீள்தன்மையை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதைக் காட்டுகிறது.


புதுப்பிக்கப்பட்ட பசுமை இந்தியா திட்டம் (GIM) முந்தைய முயற்சிகளைத் தொடர்கிறது. 2015 மற்றும் 2021-க்கு இடையில், இந்த திட்டம் 11.22 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் காடு வளர்ப்பை ஆதரித்தது. இந்த நேரத்தில் 18 மாநிலங்களுக்கு ₹575 கோடி வழங்கப்பட்டது. இதன் விளைவாக, காடு மற்றும் மரங்களின் பரப்பளவு 2015-ல் 24.16% -லிருந்து 2023-ல் 25.17% ஆக அதிகரித்தது.


புதிய திட்டம் ஒரு பரந்த அணுகுமுறையை எடுக்கிறது. இது ஆரவல்லி மலைகள், மேற்குத் தொடர்ச்சி மலைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் இமயமலை நீர்ப்பிடிப்புப் பகுதிகள் போன்ற பல்லுயிர் நிறைந்த பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. தேசிய வேளாண் வனவியல் கொள்கை (National Agroforestry Policy), நீர்நிலை முன்முயற்சிகள் (watershed initiatives) மற்றும் இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் (Compensatory Afforestation Fund Management and Planning Authority (CAMPA)) போன்ற பிற அரசு திட்டங்களுடன் முயற்சிகளை இணைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், பல பெரிய அளவிலான பணிகளைப் போலவே, உண்மையான சவாலானது கொள்கையை செயல்படுத்துவதாகும்.


இந்தியாவின் காடு வளர்ப்பு வரலாறு நீண்ட காலமாக மூன்று தொடர்ச்சியான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. அவை, சமூகப் பங்கேற்பு, சுற்றுச்சூழல் வடிவமைப்பு மற்றும் நிதி ஆகும்.


கிட்டத்தட்ட 200 மில்லியன் இந்தியர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக  காடுகளை நம்பியுள்ளனர். வன உரிமைகள் சட்டம்-2006 (Forest Rights Act) அவர்களின் நிலப்பரப்புகளை நிர்வகிக்கவும், பாதுகாக்கவும் சட்டப்பூர்வமாக அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. ஆனால் உண்மையில், பல தோட்டக்கலை திட்டங்கள் இந்த சமூகங்களை புறக்கணிக்கின்றன. அவர்களின் சம்மதமும் கூற்றுக்களும் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. இது நம்பிக்கையை பலவீனப்படுத்துகிறது மற்றும் சட்ட மற்றும் சமூக ஏற்றுக்கொள்ளலைக் குறைக்கிறது. இருப்பினும், சில நேர்மறையான உதாரணங்கள் உள்ளன. ஒடிசாவில், கூட்டு வன மேலாண்மைக் குழுக்கள் (Joint Forest Management Committees) வன வருவாயைத் திட்டமிடுவதிலும் பகிர்ந்து கொள்வதிலும் ஈடுபட்டுள்ளன. சத்தீஸ்கரில், வனத்துறைகள் பல்லுயிர் உணர்திறன் கொண்ட தோட்டங்களை பரிசோதித்து வருகின்றன. மேலும், மஹுவா மரங்களை நட்டு, பழங்குடியினரின் வாழ்வாதாரத்துடன் சுற்றுச்சூழலை சீரமைத்து, தரிசாக கால்நடை தங்குமிடங்களை மீண்டும் உருவாக்குகின்றன.


பூர்வீகமாக மாறுதல்


பல ஆண்டுகளாக, காடு வளர்ப்பு முயற்சிகள் யூகலிப்டஸ் அல்லது அகாசியா போன்ற ஒற்றை வகை மரங்களை நடுவதில் கவனம் செலுத்தின. இந்த மரங்கள் விரைவாக வளரும் ஆனால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும். அவை நிலத்தடி நீரைக் குறைக்கின்றன, பூர்வீக பல்லுயிரியலைக் குறைக்கின்றன மற்றும் காலநிலை மாற்றத்தால் காடுகளை மேலும் பாதிக்கக்கூடியதாக ஆக்குகின்றன. பசுமை இந்தியா திட்டத்தின் (GIM) புதிய பதிப்பு பூர்வீக மற்றும் இருப்பிடம் சார்ந்த உயிரினங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றம் ஒரு நேர்மறையான முன்னேற்றமாகும்.


இருப்பினும்,உள்ளூர் வனத்துறைகள் சிறப்பாக செயல்பட போதுமான திறன்களையும் திறனையும் கொண்டுள்ளனவா என்பதுதான் உண்மையான சவால். இந்தியாவில் ஏற்கனவே உத்தரகண்ட் (Uttarakhand), கோயம்புத்தூர் (Coimbatore) மற்றும் பைர்னிஹாட்டில் (Byrnihat) பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இந்த மையங்கள் மூலம் முன்னணி ஊழியர்களுக்கு சுற்றுச்சூழல் அறிவில் பயிற்சி அளிக்க முடியும். சில மாநிலங்கள் ஏற்கனவே முன்னேற்றம் அடைந்துள்ளன. உதாரணமாக, தமிழ்நாடு, மூன்று ஆண்டுகளில் அதன் சதுப்புநிலப் பரப்பை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியுள்ளது. இந்த முயற்சி கார்பனைச் சேமித்து கடற்கரைகளைப் பாதுகாப்பதில் உதவுகிறது.

ஒருவேளை மிகப்பெரிய தடையாக இருப்பது நிதியாகும். இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் (CAMPA) நிதியில் தற்போது சுமார் ₹95,000 கோடியைக் கொண்டுள்ளது, ஆனால் அதன் பயன்பாடு சீரற்றதாகவே உள்ளது. உதாரணமாக, டெல்லி, 2019 மற்றும் 2024-க்கு இடையில் அதன் அங்கீகரிக்கப்பட்ட நிதியில் 23% மட்டுமே செலவிட்டது. பசுமை இந்தியா திட்டம் (GIM) வரையறுக்கப்பட்ட நிதியையும் எதிர்கொண்டுள்ளது மற்றும் பெரும்பாலும் இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்தைச் (CAMPA) சார்ந்துள்ளது.


முன்னோக்கிச் செல்வதற்கான வழி அதிக பணத்தைப் பற்றியது மட்டுமல்ல, அதைச் சிறந்த முறையில் பயன்படுத்துவது பற்றியது. சில மாநிலங்கள் புதிய நிதி முறைகளை முயற்சித்து வருகின்றன. தீ அபாயங்களைக் குறைக்கும் அதே வேளையில் கார்பன் வரவுகளை உருவாக்க இமாச்சலப் பிரதேசம் ஒரு உயிரிகரிம திட்டத்தைத் (biochar programme) தொடங்கியுள்ளது. உத்தரப் பிரதேசம் இந்த ஆண்டு 39 கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளது. மேலும், கிராம சபைகளை கார்பன் சந்தைகளுடன் எவ்வாறு இணைப்பது என்பதை ஆராய்ந்து வருகிறது.


கட்டுமானத் தொகுதிகள்


பல சவால்கள் இருந்தபோதிலும், இந்தியா முக்கியமான அடிப்படைக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. இது வலுவான சட்டக் கட்டமைப்புகள், கணிசமான நிதி திரட்டல்கள், நிறுவனத் திறன் மற்றும் நம்பிக்கைக்குரிய உள்ளூர் மாதிரிகளைக் கொண்டுள்ளது. இதில் இல்லாதது சரியான ஒருங்கிணைப்பு.


உள்ளூர் சமூகங்களுக்கு தலைமை தாங்க அதிகாரம் வழங்கப்பட வேண்டும். வனத்துறைகள் தோட்ட இலக்குகளை மட்டும் அடைவதற்குப் பதிலாக சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த பயிற்சி அளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும். பொது தரவுத்தளங்களை (public dashboards) உருவாக்குவதன் மூலம் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க முடியும். இந்தத் தரவுத்தளங்கள், தோட்டங்களின் உயிர்வாழ்வு விகிதங்கள், நடப்பட்ட உயிரினங்களின் வகைகள், நிதிப் பயன்பாடு மற்றும் சமூக ஈடுபாடு பற்றிய தரவைக் காட்ட வேண்டும். மரங்களை நடுவதற்கு அப்பால் இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் (CAMPA) அதன் பங்கை விரிவுபடுத்த வேண்டும். இதில் பங்கேற்பு திட்டமிடல் மற்றும் நெகிழ்வான மேலாண்மை முறைகள் இருக்க வேண்டும். சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களும் ஒரு முக்கியப் பங்கைக் கொண்டுள்ளன. அவர்கள் தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் சமூகங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிக்க உதவும் கருவிகளை உருவாக்க முடியும். இந்தக் குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் மட்டுமே பசுமை இந்தியா திட்டத்தை (GIM) ஒரு அரசாங்கத் திட்டத்திலிருந்து உண்மையான தேசிய இயக்கமாக மாற்ற முடியும்.


வளர்ந்த இந்தியா 2047-ஐ நோக்கிப் பார்க்கும்போது, ​​காடுகள் வெறும் சுற்றுச்சூழல் கவலை மட்டுமல்ல; அவை எதிர்காலத் மூலதனத்தின் ஒரு வடிவம். 25 மில்லியன் ஹெக்டேர் வன நிலத்தை மீட்டெடுப்பது எளிதானதாக இருக்காது. இருப்பினும், உறுதிப்பாடு, உள்ளடக்கம் மற்றும் தெளிவானத் திட்டமிடல் மூலம், இந்த முயற்சி உலகம் வன மறுசீரமைப்பைப் பார்க்கும் விதத்தை மாற்றும்.


சி.கே. மிஸ்ரா, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் முன்னாள் செயலர்; சூர்யபிரபா சதாசிவன், சேஸ் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர்.



Original article:

Share:

கூட்டு விளைவு : டிஜிட்டல் கைது மோசடிகள் குறித்து . . .

 தென்கிழக்கு ஆசிய மோசடி தொழிற்சாலைகளுக்கு ஒருங்கிணைந்த பதிலடி தேவை


டிஜிட்டல் மோசடிகளின் (digital scams) பெருகிவரும் அச்சுறுத்தல் குறித்து விரிவான விசாரணை நடத்தவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் அழைப்பு, இந்திய குடிமக்கள் எந்த அளவிற்கு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை பிரதிபலிக்கிறது. மோசடி செய்பவர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து பணம் பறிக்கும் 'டிஜிட்டல் கைது' (digital arrest) மோசடி வழக்குகளுக்கு நீதிமன்றம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. இது நடவடிக்கைகளின் நுட்பத்தையும், துணிச்சலையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தற்போதைய டிஜிட்டல் மோசடியின் தீவிரமானது வழக்கமான இணையவழி குற்றத்திலிருந்து (cybercrime) வேறுபடுத்துவது, அதன் தொழில்துறை அளவு மற்றும் எல்லை தாண்டிய கட்டமைப்பு ஆகும். தென்கிழக்கு ஆசியா முழுவதும் மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில், குறிப்பாக மியான்மரில், மாநிலக் கட்டுப்பாடு குறைவாக உள்ளது மற்றும் கவலையளிக்கும் வகையில், ஆட்சியானது சிக்கல் நிறைந்ததாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த நவீன அடிமைத்தன வலையமைப்பின் செயல்பாட்டு முறை பயங்கரமானது. அதிக சம்பளம் மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கும் போலி வேலை விளம்பரங்கள் மூலம் மக்கள் சிக்கிக் கொள்கிறார்கள். இந்த சலுகைகளில் பல விசா இல்லாத பயணக் கொள்கைகளைப் (visa-free travel policies) பயன்படுத்தி பாங்காக் (Bangkok) வழியாக அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து, அவர்கள் எல்லைகளைத் தாண்டி, முதன்மையாக இராணுவ ஆட்சிக்குழுவுடன் இணைந்த எல்லைக் காவல் படைகளால் கட்டுப்படுத்தப்படும் மியான்மரின் பகுதிகளுக்கு கடத்தப்படுகிறார்கள். இந்தப் பகுதிகள் டிஜிட்டல் அடிமைத்தன மையங்களாகச் செயல்படுகின்றன. அங்கு கடத்தப்பட்ட மக்கள், பெரும்பாலும் வன்முறை, சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை மூலம், சிக்கலான இணையவழி மோசடிகளைச் செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதன், முக்கிய மோசடிகளில் ஒன்று "பன்றி இறைச்சி கசாப்பு" (pig butchering) என்று அழைக்கப்படுகிறது. இது காதல் மோசடிகளை போலி கிரிப்டோகரன்சி முதலீட்டுத் திட்டங்களுடன் இணைக்கிறது. மியான்மரின் உள்நாட்டுப் போர் இந்த நடவடிக்கைகள் வளர ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது. 2021-ல் நடந்த இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் இனப் போராளிகளுக்கு (ethnic militias) அதிக அதிகாரத்தை அளித்தது. இப்போது எல்லைக் காவல் படைகள் என மறுபெயரிடப்பட்ட இந்த போராளிகள், மோசடி மையங்களை நடத்துவது தங்களுக்கு பெரும் லாபத்தைத் தரும் என்பதைக் கண்டறிந்தனர். அவர்கள் தங்கள் இராணுவ நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க இந்த மையங்களிலிருந்து "வரிகளை" வசூலிக்கிறார்கள்.

இந்த மோசடிகளில் இருந்து சம்பாதிக்கப்படும் பணம் "ஆள்மாறாட்ட பண மோசடி" (mules) மற்றும் கம்போடியாவின் ஹுயோன் பே போன்ற சந்தேகத்திற்கிடமான நிதி நிறுவனங்கள் மூலம் மோசடி செய்யப்படுகிறது. பின்னர் அது கிரிப்டோகரன்சியாக மாற்றப்படுகிறது. இதனால் அதைக் கண்டுபிடிப்பது அல்லது மீட்டெடுப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. சீன ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் இந்த சர்வதேச வலையமைப்புகளை வழிநடத்துகின்றன என்பதை உலகளாவிய கண்காணிப்பு அமைப்புகள் கண்டறிந்துள்ளன. இந்தியா இரண்டு பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. ஆயிரக்கணக்கான இந்திய குடிமக்கள் கடத்தப்பட்டு கொடூரமான சூழ்நிலையில் மோசடி தொழிற்சாலைகளில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அதேநேரத்தில், இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இந்த கைதிகளால் நடத்தப்படும் மோசடிகளால் ஏமாற்றப்படுகிறார்கள். இந்த நெருக்கடியைச் சமாளிக்க, பலநிலை உத்தி தேவை. இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுடன் சேர்ந்து, இந்த மோசடிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பெரிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்த வேண்டும். அவர்கள் இணையக்குற்றம் (cybercrime) உள்கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டும் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். இந்தியா ஒரு ஒருங்கிணைந்த பிராந்திய திட்டத்தை உருவாக்க இராஜதந்திர முயற்சிகளைப் பயன்படுத்த வேண்டும். சீனா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் பிற பாதிக்கப்பட்ட நாடுகளுடன் நெருக்கமாக இணைந்து மியான்மரின் இராணுவ ஆட்சிக்குழு மற்றும் கம்போடியா அரசாங்கத்தின் மீது இந்த மோசடி நடவடிக்கைகளை நிறுத்த வலுவான அழுத்தம் கொடுக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையும் இதில் ஈடுபட வேண்டும். இந்தப் பிரச்சினையை அவசர உலகளாவிய நடவடிக்கை தேவைப்படும் ஒரு நவீன அடிமைத்தன வடிவமாக அது அங்கீகரிக்க வேண்டும்.



Original article:

Share: