நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


— இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட “சொத்து மீட்பு வழிகாட்டுதல் மற்றும் சிறந்த நடைமுறைகள்” ஆவணம், இந்தியாவின் தண்டனை அடிப்படையிலான மற்றும் தண்டனை அல்லாத பறிமுதல் வழிமுறைகளின் “புதுமையான” பயன்பாடு, பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)) மற்றும் தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம் (Fugitive Economic Offenders Act) போன்ற சட்டங்களின்கீழ் சட்ட அதிகாரம் மற்றும் நாட்டில் உள்ள அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு முதலீட்டு மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அமலாக்க இயக்குநரகம் மற்றும் மாநிலக் குற்றவியல் விசாரணைத் துறை ஒன்றிணைந்து உதவி செய்துள்ளனர்.


— அமெரிக்காவுடன் இணைந்து தொடரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்குடன் தொடர்புடைய ரூ. 1.3 பில்லியன் (USD 29 மில்லியன்) மதிப்புள்ள 268.22 பிட்காயின்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் மூலம், அமலாக்க இயக்குநரகத்தின் விரைவான சர்வதேச ஒத்துழைப்பை அறிக்கை குறிப்பிட்டது.


— இந்தியாவின் முன்னேற்றத்தைப் பாராட்டுகையில், சட்டவிரோத சொத்துக்களை மீட்பதில் நாடு எதிர்கொள்ளும் சவால்களை நிதி நடவடிக்கை பணிக்குழு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அவை பின்வருமாறு:


— சட்ட மற்றும் நடைமுறை சிக்கல்தன்மை (Legal and procedural complexity): பல்வேறு சட்டங்கள், அதிகார வரம்புகள் மற்றும் தண்டனை நெறிமுறைகளுக்கு இடையே செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது இன்னும் சவாலாக உள்ளது. நீதித்துறை மேற்பார்வைத் தேவைகளை வழிநடத்துதல், விரைவான சொத்து முடக்கத்தை நியாயமான நடைமுறையுடன் சமநிலைப்படுத்துதல் மற்றும் நீண்டகால வழக்குகளை நிர்வகித்தல் ஆகியவை செயல்திறனைக் குறைக்கின்றன என்று அறிக்கை தெரிவிக்கிறது.


— நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு தடைகள்: இந்தியா வலுவான ஒத்துழைப்பை வெளிப்படுத்தினாலும், அறிக்கை அவ்வப்போது ஏற்படும் செயல்பாட்டு தனித்தன்மை, போட்டி மற்றும் முரண்பட்ட தகவல் பகிர்வு ஆகியவை தடையற்ற வழக்கு கையாளுதல் மற்றும் நுண்ணறிவு தகவல் பரிமாற்றமும் இடையூறாக உள்ளது.


— தரவு மற்றும் வெளிப்படைத்தன்மை இடைவெளிகள்: மற்ற நாடுகளைப் போலவே, முக்கிய சொத்து மீட்பு அளவீடுகள் பற்றிய விரிவான, ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் பொதுவில் கிடைக்கக்கூடிய புள்ளிவிவரங்கள் இந்தியாவில் இல்லை. இது கண்காணிப்பு, கொள்கை வடிவமைப்பு மற்றும் பொறுப்புணர்வுக்கு அத்தியாவசியமான கருவியாகும்.


— தொழில்நுட்ப மற்றும் விசாரணை வரம்புகள்: சிக்கலான நிறுவன உரிமை, பரிந்துரைக்கப்பட்ட கட்டமைப்புகள் மற்றும் மெய்நிகர் சொத்துகள் போன்ற வளர்ந்துவரும் சவால்களுக்கு மேம்பட்ட தொழில்நுட்ப, தடயவியல் மற்றும் ஒழுங்குமுறைத் திறன்களைத் தேவைப்படுத்துகின்றன.


— நிதி மற்றும் வட்டி மோதல்கள்: மீட்கப்பட்ட சொத்துக்களை விசாரணைகள் மற்றும் வழக்குகளுக்கு நிதியளிப்பதற்குப் பயன்படுத்துவது நன்மைகளைத் தரும். ஆனால், வட்டி மோதல்கள் மோதல்களைத் தவிர்க்க அல்லது நீதியை வழங்குவதைவிட சொத்துக்களைக் கைப்பற்றுவதில் கவனம் செலுத்துவதற்கு கடுமையான விதிகள் தேவைப்படுகிறது.


— நீதித்துறை மற்றும் சட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள தடைகள் (enforcement bottlenecks): தற்காலிக முடக்கம் மற்றும் சொத்து பறிமுதல் உத்தரவுகளில் தாமதங்கள், எல்லை தாண்டிய பறிமுதலை செயல்படுத்துவதில் சிக்கல்கள் மற்றும் நீதிமன்றத்தில் உள்ள நிலுவை வழக்குகள் ஆகியவை சரிசெய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்களாகக்  குறிப்பிடப்பட்டுள்ளன.


— 30 ஆண்டுகளுக்கும் மேலான முதல் சொத்து மீட்பு சீர்திருத்தம், இந்தியாவின் கட்டமைப்பை ஒரு குறிப்பாகக் கொண்டுள்ளது. அதேநேரம் தொடர்ச்சியான மேம்பாட்டின் தேவையை வலியுறுத்துகிறது. ஆரம்பகட்ட நிதி விசாரணைகள், blockchain பகுப்பாய்வு போன்ற தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் பல அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகியவை இந்தியாவின் கொள்கைகள் உயர்ந்த தரத்தை அமைத்துள்ளன. இருப்பினும், “விரிவான புள்ளிவிபரங்கள், மேம்பட்ட தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் நெறிப்படுத்தப்பட்ட நீதித்துறை செயல்முறைகள்” ஆகியவை முன்னுரிமைப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.


உங்களுக்குத் தெரியுமா?


— தற்போது, ரத்து செய்யப்பட்ட அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம், 1973-ஆம் ஆண்டு சட்டத்தின் (Foreign Exchange Regulation (FERA)) கீழ், பரிமாற்றக் கட்டுப்பாட்டுச் சட்ட மீறல்களைக் கையாள்வதற்காக, நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையின்கீழ் 'அமலாக்கப் பிரிவாக' அமலாக்க இயக்குநகரம் மே 1, 1956 அன்று உருவாக்கப்பட்டது. பின்னர், இது அமலாக்க இயக்குநகரம் (Enforcement Directorate) என மறுபெயரிடப்பட்டது மற்றும் வருவாய் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டது. பின்னர், பரந்த அளவிலான நிதிச் சட்டங்களை அமல்படுத்துவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.


— 1999-ஆம் ஆண்டில் அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தை மாற்றிய வெளிநாட்டு நாணய மேலாண்மைச் சட்டம் (Foreign Exchange Management Act (FEMA)) மற்றும் 2000-ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)) இயற்றப்பட்டது. அமலாக்க  இயக்குநகரத்தின் அதிகாரத்தை அதிகரித்தது. இந்த நடவடிக்கைகள் நிதி குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் செயல்பாடுகளை சர்வதேச தரங்களுக்கு ஏற்ப சீரமைத்தன. இந்த நடவடிக்கைகள் நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) பரிந்துரைத்தவை.


— 2006ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் பணமோசடி எதிர்ப்பு முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்காக 1989-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நிதி நடவடிக்கை பணிக்குழுவில் இந்தியா பார்வையாளர் அங்கீகாரத்தைப் பெற்றது மற்றும் 2010-ஆம் ஆண்டில் அந்தக் குழுவில் உறுப்பு நாடாக மாறியது.



Original article:

Share:

உலகளாவிய காலநிலை பேச்சுவார்த்தைகள் சூழலில் காலநிலை நிதியுதவி குறித்து இந்தியாவின் நிலைப்பாடு என்ன? -ரோஷ்னி யாதவ்

 அடுத்த வாரம் பிரேசிலின் பெலெமில் (Belem) தொடங்கும் கட்சிகள் மாநாடு – 30 (Conference of the Parties – 30 (COP30)) காலநிலை கூட்டத்திற்கு முன்னதாக, வளரும் நாடுகளுக்கு காலநிலை மாற்றத்தை சமாளிக்க உதவுவதற்காக 2035-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நிதிதிரட்டுவதாக உறுதியளித்த 300 பில்லியன் டாலர்களை வழங்குவதற்கான தெளிவான திட்டத்தை அடுத்த ஆண்டுக்குள் உருவாக்குவதற்காக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கோரியுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


— அறிக்கை மேலும் வளர்ந்த நாடுகளிடம் இரு தரப்பு அல்லது பல தரப்பு வழிகளின் மூலம் வழங்கப்படும் தற்போதைய மானியங்கள் மற்றும் சலுகை நிதி அளவுகளை கணிசமாக உயர்த்துமாறு கேட்டுள்ளது, இது வாக்குறுதியளிக்கப்பட்ட 300 பில்லியன் டாலர்களுக்கு மேலதிகமாக வளரும் நாடுகளுக்கு அதிக வளங்களைத் திரட்டுவதற்கான முயற்சிகளுக்கு உதவும்.


—கட்சிகள் மாநாடு- 29  (Conference of the Parties – 29 (COP29)) கூட்டத்தின் போது அஜர்பைஜானின் பாகுவில் (Baku) இறுதி செய்யப்பட்ட நிதிஒப்பந்தம் தொடர்பாக வளரும் நாடுகளிடையே ஏற்பட்ட ஏமாற்றத்தை நிவர்த்தி செய்வதற்காக 1.3 டிரில்லியன் (1.3Trillion) ரூபாய் நிதி திரட்டுவதற்கான செயல்திட்டம் குறித்த அறிக்கை கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது.


— வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகள் ஆண்டுக்கு குறைந்தது $1.3 டிரில்லியன் காலநிலை நிதியை வழங்க உறுதியளிக்க வேண்டும் என்று கோரின. பாகுவில், வளர்ந்த நாடுகள் ஆண்டுக்கு 300 பில்லியன் டாலர் தொகையை 2035-ஆம் ஆண்டு முதல் மட்டுமே திரட்டமுடியும் என்று தெரிவித்துள்ளன.


— ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பு மாநாடு மற்றும் 2015-ஆம் ஆண்டின் பாரிஸ் ஒப்பந்தத்தால் நிர்வகிக்கப்படும் சர்வதேச காலநிலை கட்டமைப்பின் கீழ், வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட நிதி உதவி வழங்க கடமைப்பட்டுள்ளன. ஏனெனில், கடந்த 150 ஆண்டுகளில் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுவதற்கு வளர்ந்த நாடுகள்தான் முதன்மையாகப் பொறுப்பேற்றுள்ளன. இதுவே புவி வெப்பமடைதலுக்கும் அதன் விளைவாக ஏற்படும் காலநிலை மாற்றத்திற்கும் முக்கிய காரணமாகும்.


— 2020 மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கு இடையில், வளர்ந்த நாடுகள் இந்த நோக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது $100 பில்லியனை திரட்டுவதாக உறுதியளித்திருந்தன. ஆனால், பாரிஸ் ஒப்பந்தம் இந்தத் தொகையை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை திருத்தப்பட்டு அதிகரிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

—பாகுவில், வளர்ந்த நாடுகள் ஒரு புதிய தொகையை வழங்குவதாக ஒப்புக்கொண்டன. ஆனால், அது 2035-ஆம் ஆண்டு முதல் மட்டுமே வழங்கப்படும். இந்தியா உட்பட வளரும் நாடுகள், 'சிறு' மற்றும் 'மோசமான' போதுமான அளவு இல்லாததால் கோபமாக எதிர்வினையாற்றின.


— கட்சிகள் மாநாடு-29 மற்றும் கட்சிகள் மாநாடு-30 (அஜர்பைஜான் மற்றும் பிரேசில்) ஆகியவற்றின் தலைவர்கள், 2035-ஆம் ஆண்டுக்குள் $1.3 டிரில்லியன் இலக்கை அடைவதற்கான கூடுதல் வழிகளை ஆராய இந்த அறிக்கையை கூட்டாக நியமித்தனர்.


— இருப்பினும், புதிய அறிக்கை, 2035-ஆம் ஆண்டில் வளரும் நாடுகளின் காலநிலை மற்றும் இயற்கை தொடர்பான முதலீட்டுத் தேவைகள் ஆண்டுக்கு சுமார் $3.2 டிரில்லியன் ஆக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறது. காலநிலை நடவடிக்கைக்காக கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்கான பல்வேறு விருப்பங்களை இது ஆராய்கிறது. மேலும், கார்பன் வரி (carbon tax), செல்வ வரி, பெருநிறுவன வரிகள், விமான வரிகள், ஆடம்பரப் பொருட்களின் மீதான வரிகள் மற்றும் வளர்ந்த நாடுகளிடமிருந்து நேரடி வரவுசெலவுத் திட்டப் பங்களிப்புகள் ஆகியவற்றின் சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொள்கிறது. இவை பல்வேறு நாடுகள் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து பெற்ற உள்ளீடுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைந்தவை.


உங்களுக்குத் தெரியுமா?


— காலநிலை நிதி என்பது காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக் குறைப்பதற்கோ அல்லது அதற்கேற்ப தகவமைத்துக் கொள்வதற்கோ தேவைப்படும் பெரிய அளவிலான முதலீடுகளைக் குறிக்கிறது.


— தகவமைப்பு என்பது காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளை முன்பே அறிந்து, அவை ஏற்படுத்தக்கூடிய சேதத்தைத் தடுக்க அல்லது குறைக்க பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதைக் குறிக்கிறது. கடல்மட்ட உயர்விலிருந்து கடலோரச் சமூகங்களைப் பாதுகாக்கக் கட்டமைப்புகளை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள் தகவமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.


— இதற்கிடையில், தணிப்பு என்பது வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களின் (GreenHouse Gases (GHG)) வெளியேற்றத்தைக் குறைப்பதை உள்ளடக்கியது. இதனால், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் தீவிரமடையாமல் செய்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் பங்கை அதிகரிப்பதன் மூலமும், வனப்பகுதியை விரிவுபடுத்துவதன் மூலமும் தணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.



Original article:

Share:

மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் (CBFC) திரைப்படக் காட்சி நீக்கத்தை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு: இந்தியாவில் திரைப்படத் தணிக்கை எவ்வாறு செயல்படுகிறது? -அமால் ஷேக்

 திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்கும் செயல்முறை பல நிலைகளாக நடைபெறுகிறது. ஒரு ஆய்வுக் குழு திரைப்படத்தைப் பார்த்து பரிந்துரை செய்கிறது. அதன் பிறகு திரைப்படம் மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பப்படலாம். சில நேரங்களில் கட்டாயத் திருத்தங்களுடன் சான்றிதழ் வழங்கப்படுகிறது.


கேரள உயர்நீதிமன்றம் தற்போது Haal திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தாக்கல் செய்த மனுவை விசாரித்து வருகிறது. மத்திய திரைப்படச் சான்றிதழ் வழங்கும் வாரியம் (Central Board of Film Certification (CBFC)) “A” சான்றிதழை கட்டாயமான தணிக்கைகளுடன் வழங்க முடிவு செய்ததால் இந்த சவால் எழுந்துள்ளது.


"திரைப்படத்தின் கதையானது சமூக-கலாச்சார இயக்கவியலைக் கையாளுகிறது மற்றும் மத உணர்வுகளையும் உள்ளடக்கியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மறுஆய்வுக் குழு ஒருமனதாக திரைப்படத்திற்கு மாற்றங்களுடன் “A” சான்றிதழை வழங்க பரிந்துரைத்ததாக வாரியம் தெரிவித்தது. வாரியத்தின் வழிகாட்டுதல்கள் திரைப்படத்தை முழுமையாக சிதைப்பதாக மனுதாரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.


திரைப்படம் காவல்துறை, மதங்களுக்கு இடையிலான உறவுகள் மற்றும் சமூகத் தொடர்புகள் போன்ற பிரச்சனைகளை பற்றி பேசுகிறது. கிறிஸ்தவக் கல்லூரியின் பெயரை மாற்றுவது மதம் அடையாளம் பற்றிய காட்சிகளை மாற்றுவது போன்ற வாரியத்தால், திரைப்படத்தின் முக்கியமான அர்த்தத்தை சிதைப்பதாக மனுதாரர் வாதிடுகிறார்.

மத்திய திரைப்படச் சான்றிதழ் வழங்கும் வாரியம் (Central Board of Film Certification (CBFC)) என்றால் என்ன?


ஒளிப்பதிவுச் சட்டம், 1952 (Cinematograph Act), மத்திய திரைப்படச் சான்றிதழ் வழங்கும் வாரியத்தை உருவாக்கி, திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன் திரைப்படங்களை ஆய்வு செய்ய அதற்கு அதிகாரம் அளித்தது. கொள்கையளவில், வாரியம் வெவ்வேறு பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு உள்ளடக்கத்தை வகைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தடையற்ற (U) பார்வைக்கு, பெற்றோரின் வழிகாட்டுதலுடன் தடையற்ற பார்வைக்கு (UA), பெரியவர்களுக்கு மட்டும் (A) அல்லது குறிப்பிட்ட தொழில்முறை குழுக்களுக்கு மட்டும் (S) என திரைப்படங்களுக்கு சான்றளிக்கிறது.


இந்த கட்டமைப்பு இந்த ஆண்டு விரிவடைந்தது. அப்போது வயது அடிப்படையிலான "UA" குறிகள் — UA 7+, UA 13+, மற்றும் UA 16+ — அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த குறிப்பான்கள் குழந்தைகள் பார்ப்பதைத் தடுக்காது; எது பொருத்தமானது என்பதை பெற்றோர்கள் தீர்மானிக்கச் சொல்கின்றன. இன்றைய காலத்தின் பழக்கங்களுக்கு ஏற்றவாறு (streaming-era realities) இந்த யோசனை உள்ளது.


திரைப்படச் சான்றிதழ் எவ்வாறு செயல்படுகிறது?

இந்தச் சட்டம், ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு மாற்றங்களைக் பரிந்துரைக்க வாரியத்திற்கு அனுமதி வழங்குகிறது. வழிகாட்டும் தரநிலை, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீதான அரசியலமைப்பு வரம்புகளின் பட்டியல் ஆகும். பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை ஒரு அடிப்படை உரிமை என்பதால், இந்த உரிமைகளில் எந்தவொரு தலையீடும் மிகக் குறுகிய அரசியலமைப்புச் சட்டக் காரணங்களுக்குள் மட்டுமே அனுமதிக்கப்படும்.


இந்த அடிப்படைகள், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்பு உறவுகள், பொது ஒழுங்கு, அல்லது குற்றம் செய்வதற்கு தூண்டுதலைத் தடுத்தல் ஆகியவை அரசியலமைப்பின் 19(2) பிரிவின்கீழ் “நியாயமான கட்டுப்பாடுகள்” (reasonable restrictions) என பட்டியலிடப்பட்டுள்ளன. சட்டத்தின் பிரிவு 5B(1) பொதுமக்களுக்கு திரைப்படங்களைக் காண்பிக்கும்போது அதே விதிகள் பொருந்தும் என்று கூறுகிறது. திரைப்படங்கள் பொதுக் காட்சிக்கு அனுமதிக்கப்படுவதற்கு, இது போன்ற நியாயமான கட்டுப்பாடுகளை அந்த திரைப்படங்கள் பின்பற்ற வேண்டும்.


கோட்பாட்டளவில், இது தணிக்கைகளுக்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ஆனால், மத்திய திரைப்படச் சான்றிதழ் வழங்கும் வாரியம் (Central Board of Film Certification (CBFC)) மத்திய அரசு வெளியிட்ட நிர்வாக வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு செயல்படுகிறது. இது மத உணர்வுகள், சட்டம் மற்றும் ஒழுங்கு அபாயங்கள் அல்லது காவல்துறை போன்ற அமைப்புகளின் சித்தரிப்பு தொடர்பான கவலைகள் மூலம் விளக்கப்படும் ஒரு பரந்த பொது நலன் சார்ந்த பார்வைக்கு இடமளிக்கிறது. Haal திரைப்படத் தயாரிப்பாளர்கள், சட்டம் அனுமதிக்கும் அதிகாரத்தைவிட அதிகமாக வாரியம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது என்று கூறுகிறார்கள்.


திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்கும் செயல்முறை நிலைகளாக நடைபெறுகிறது. ஒரு ஆய்வுக் குழு (examining committee) திரைப்படத்தைப் பார்த்து பரிந்துரை செய்கிறது. அதன்பிறகு திரைப்படம் மறுஆய்வுக் குழுவுக்கு (revising committee) அனுப்பப்படலாம். சில நேரங்களில் கட்டாயத் திருத்தங்களுடன் சான்றிதழ் வழங்கப்படுகிறது.


ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் உடன்படவில்லை என்றால், உயர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்யலாம். முன்பு, ஒரு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இருந்தது. ஆனால், அது 2021-ஆம் ஆண்டில் அந்த தீர்ப்பாயம் ஒழிக்கப்பட்டது. மேல்முறையீட்டு அமைப்பு நீக்கப்பட்டதிலிருந்து, Haal  போன்ற வழக்குகள் இப்போது நடைமுறை மற்றும் உள்ளடக்க சிக்கல்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேரடியாக உயர் நீதிமன்றங்களுக்குச் செல்கின்றன. மனுதாரர்கள் தங்களுக்கு சரியான நேரத்தில் எழுத்துப்பூர்வ காரணங்கள் வழங்கப்படவில்லை என்றும், திருத்தக் குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது விளக்கப்படவில்லை என்றும், இதனால் படத்தின் வெளியீட்டைத் திட்டமிடுவதில் நிச்சயமற்றத் தன்மை ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.


நீதிமன்றங்கள் எப்போது தலையிட முடியும்?


அக்டோபர் 2025-ல், டெல்லி உயர் நீதிமன்றம் "The Taj Story” வெளியீட்டில் தலையிட மறுத்துவிட்டது. திரைப்படம் சான்றிதழைப் பெறுவதில் சவாலை எதிர்கொண்டது. அதே, நேரத்தில் மனுதாரர்கள் மத்திய திரைப்படச் சான்றிதழ் வழங்கும் வாரியம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று விரும்பினர். இருப்பினும், நீதிமன்றம் அதை செய்ய மறுத்துவிட்டது. நீதிமன்றங்கள் "கூடுதல் தணிக்கை வாரியமாக" (super censor board) செயல்படுவதில்லை என்று குறிப்பிட்டது.


சட்டம் மத்திய அரசுக்கு சட்டத்தின் பிரிவு 6-ன் கீழ் மறுபரிசீலனை அதிகாரங்களை வழங்குவதால், அந்த தீர்வு முதலில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. மூன்றாம் தரப்பினரின் கோரிக்கையின் பேரில் தனது சொந்த சான்றிதழை மீண்டும் வெளியிட அல்லது மறு ஆய்வு செய்ய மத்திய திரைப்படச் சான்றிதழ் வழங்கும் வாரியத்திற்கு (Central Board of Film Certification (CBFC))  சட்டம் அதிகாரம் வழங்கவில்லை என்றும் நீதிமன்றம் பதிவு செய்தது.


நீதிமன்ற மறுஆய்வு மத்திய திரைப்படச் சான்றிதழ் வழங்கும் வாரிய சட்டத்தைப் பின்பற்றியதா என்பதில் கவனம் செலுத்துகிறது. நீதிமன்றங்கள் பொதுவாக திரைப்படத்தின் படைப்பாற்றல் தேர்வுகளை (creative choices) மதிப்பீடு செய்வதில்லை. அதற்குப் பதிலாக, வாரியம் சட்டப்பூர்வ அடிப்படைகளை நம்பியதா, காரணங்களை வழங்கியதா மற்றும் நியாயமான நடைமுறையைப் பின்பற்றியதா என்பதை நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்கின்றன. அந்த தேவைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், நீதிமன்றங்கள் தலையிடலாம். மத்திய திரைப்படச் சான்றிதழ் வழங்கும் வாரிய சட்டம் மற்றும் அதன் விதிகளைப் பின்பற்றும்போது, ​​நீதிமன்றங்கள் பொதுவாக வாரியத்தின் முடிவுகளுடன் உடன்படுகின்றன.


சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகும், ஒரு திரைப்படம் ஒப்புதலுக்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்டாலோ அல்லது கண்காட்சி பொது ஒழுங்கு கவலைகளை ஏற்படுத்தினாலே, மத்திய அரசு சான்றிதழை நிறுத்தி வைக்கலாம் அல்லது ரத்து செய்யலாம். சில சூழ்நிலைகளில், முன் விசாரணை இல்லாமல் திரையிடல்களை தற்காலிகமாக கட்டுப்படுத்தலாம். இந்தச் சட்டவிதிகளை மீறுவது குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும் என்றும், அதிகாரிகள் திரையரங்குகளுக்குள் நுழைந்து பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்றும் சட்டம் கூறுகிறது. இந்த விதிகள் சட்டத்தை அமல்படுத்துவதற்காகவே உள்ளன. ஆனால், சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகும் அரசாங்கம் திரைப்படங்களைக் கட்டுப்படுத்துகிறது என்பதை இந்த சட்ட விதிகள் காட்டுகின்றன.



Original article:

Share:

வேட்புமனுத் தாக்கல் செய்யும் செயல்முறையில் ஏன் சீர்திருத்தம் தேவை? -கண்ணன் கோபிநாதன்

 தகுதிவாய்ந்த வேட்பாளர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்று 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act) கட்டளையிடுகிறது. இருப்பினும், இந்த தகுதிகளைச் சரிபார்க்கும் செயல்முறை பல ஆண்டுகளாக சிக்கலானதாகி வருகிறது. நடைமுறைத் தொழில்நுட்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, உண்மையான ‘முக்கியமான குறைபாடுகள்’ புறக்கணிக்கப்படுகின்றன.


தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்தவாரம் நடந்து முடிந்த நகராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இது நான் ஒரு காலத்தில் மாவட்ட ஆட்சியராகவும் தேர்தல் அதிகாரியாகவும் பணியாற்றிய மாவட்டம். நகராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கான அந்த இளம்பெண்ணின் தந்தை தாக்கல் செய்த வேட்புமனு, எந்தவொரு விசாரணையோ அல்லது சரிபார்ப்புக்கான வாய்ப்போ இன்றி நிராகரிக்கப்பட்டிருந்தது. அவர் கேட்டார், "ஐயா, தேர்தல்கள் இப்படித்தான் நடக்கின்றனவா?" நேர்மையான பதில் ஆம். அதுதான் பிரச்சனை. அவரது வழக்கு தனிமைப்படுத்தப்படவில்லை. அதே தேர்தல்களில், காங்கிரஸ் வேட்பாளர்கள் தொழில்நுட்ப அடிப்படையில் முறையாக நிராகரிக்கப்பட்டனர், பல வார்டுகளில் போட்டியின்றி வெற்றிகளை உறுதி செய்தனர். இருப்பினும், அந்த விஷயத்தின் உண்மை என்னவென்றால், அத்தகைய நிராகரிப்புகள் சட்டபூர்வமானவை என்பதாகும்.


அதுதான் ஆழமான சோகம், சட்டத்தின்படி ஆட்சி செய்வதன்மூலம் ஜனநாயகம் கொல்லப்படுகிறது. இந்தியாவின் தேர்தல் செயல்முறையில் மிகவும் ஜனநாயக விரோதமான பகுதி, வேட்புமனு பரிசீலனை என்கிற நிலையில் ஒரு வாக்குகூட பதிவாகும் முன்பே நடக்கிறது.


நடைமுறை அரசியல்


இந்தியாவின் தேர்தல் வேட்புமனு செயல்முறை, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் (Returning Officer - RO)) அளவற்ற அதிகாரத்தை வழங்குகிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, குறிப்பாக பிரிவுகள் 33 முதல் 36 வரை, மற்றும் தேர்தல் நடத்தை விதிகள், 1961, வேட்புமனு செயல்முறையை நிர்வகிக்கிறது. பிரிவு 33, யார் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்பதை பரிந்துரைக்கிறது. பிரிவு 34 பாதுகாப்பு வைப்புத்தொகையை வழங்குகிறது. மற்றும் பிரிவு 36, வேட்புமனுக்களைப்  பரிசீலனை செய்யவும், செல்லாதவை எனக் கருதப்படும் வேட்புமனுக்களை நிராகரிக்கவும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அதிகாரம் அளிக்கிறது. பிரிவு 36(2)-ன் கீழ் "சுருக்கமான விசாரணையை" நடத்துவதற்கும், "கணிசமான தன்மையின் குறைபாடுகளுக்கான" வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கும் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அதிகாரம் அசாதாரணமாக பரந்த அளவில் உள்ளது. மேலும், தேர்தலுக்கு முன் இதை மறுஆய்வு செய்ய வாய்ப்பு மிகவும் குறைவாகும். ஏனெனில், அரசியலமைப்புச் சட்டம் 329(b) நீதிமன்றங்கள் தேர்தலின் நடுவில் தலையிடுவதைத் தடை செய்கிறது. கணிசமான தன்மை இல்லாத குறைபாடு காரணங்களுக்காக எந்த வேட்புமனுவும் நிராகரிக்கப்படக்கூடாது என்று சட்டம் கூறுகிறது. ஆனால் உண்மையான தன்மை என்பது குறித்து எந்த எழுத்துப்பூர்வ வழிகாட்டுதல்களும் இல்லை. இதை எதிர்த்து முறையிடுவதற்கு உள்ள ஒரே தீர்வு, வாக்குப்பதிவுக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் தேர்தல் மனு மட்டுமே. அப்போது ஏற்பட்ட பாதிப்பு மாற்ற முடியாததாகிவிடுகிறது. ஒரு ஜனநாயகத்தில், சட்ட மொழியில் அலங்கரிக்கப்பட்ட இந்த முழுமையான அதிகாரம் (absolutism), அரசியல் ரீதியாக விலக்கி வைப்பதற்கான கருவியாக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளது.


இந்த ஆண்டு பீகாரில், சில இடங்களை நிரப்பாத காரணத்தால் ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) வேட்பாளர் ஒருவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு சூரத்தில், முன்மொழிந்தவர்களின் கையொப்பங்களைக் காரணமாகக் கூறி, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் நீக்கப்பட்டனர். இதனால் ஒரு மக்களவைத் தொகுதிக்கு போட்டியின்றி வெற்றி கிடைத்தது. வாரணாசியில் 2019-ஆம் ஆண்டுத் தேர்தலில், அலங்கரிக்கப்பட்ட ஜவான் தேஜ் பகதூர் யாதவ், தேர்தல் ஆணையத்தின் சான்றிதழை ஒரே இரவில் பெற முடியாததால் நிராகரிக்கப்பட்டார். பீர்ஹூமில், முன்னாள் IPS அதிகாரி தேபாசிஸ் தர் அரசாங்கத்திடமிருந்து நிலுவைத் தொகை இல்லை என்ற சான்றிதழ் தாமதமானதால் வாக்குச்சீட்டில் இருந்து விலக்கப்பட்டார். 1977-ஆம் ஆண்டில் சிக்கிமின் முதல் மக்களவைத் தேர்தலில், ஒருவரைத் தவிர மற்ற ஒவ்வொரு வேட்பாளரும் பரிசீலனைக்கு முன் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுதிமொழியை எடுக்கத் தவறியதால், ஒரு நபர் போட்டி ஏற்பட்டது. இங்குதான் செயல்முறை அரசியலாகிறது. இருப்பினும், நிராகரிப்பு அடிப்படைகள், வடிவங்கள் அல்லது கட்சி வாரியான பிரிவுகள் குறித்த பொதுவாகக் கிடைக்கும் ஒருங்கிணைந்த தரவுத்தொகுப்பு எதுவும் இல்லை. இந்த ஒளிவுமறைவு செயல்முறையின் ஆயுதமாக்கலைப் பாதுகாக்கிறது.


நடைமுறை பொறிகள்


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 36, தகுதிவாய்ந்த வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்று கட்டளையிடுகிறது. இருப்பினும், தகுதியைச் சரிபார்க்கும் செயல்முறை பல ஆண்டுகளாகச் சிக்கலடைந்து வருகிறது. நல்ல நோக்கத்துடன் செய்யப்பட்ட நீதித்துறை தலையீடுகள் முரண்பாடாகச் சிக்கலை மோசமாக்கியுள்ளன. சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் குறித்த விரிவான பிரமாணப் பத்திரங்களைக் கட்டாயமாக்கும் உச்சநீதிமன்ற உத்தரவுகள் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காகவே உருவாக்கப்பட்டன.  ஆனால், ஒவ்வொரு புதிய வெளிப்படுத்தல் தேவையும் தொழில்நுட்ப ரீதியாக நிராகரிப்பதற்கான மற்றொரு வாய்ப்பைச் சேர்த்தது. எடுத்துக்காட்டாக, ரிசர்ஜென்ஸ் இந்தியா vs தேர்தல் ஆணையம் வழக்கில், தவறான அறிவிப்புகள் வழக்குத் தொடர வழிவகுக்கும் ஆனால் வேட்புமனுக்களை செல்லாததாக்காது. முழுமையற்றவை மட்டுமே செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் பொருள் தவறான தகவல்களை அளிக்கும் வேட்பாளர் என்றாலும் அனைத்து வரிசைகளையும் நிரப்பும் ஒரு வேட்பாளர் வாக்குச்சீட்டில் இருப்பார். இப்போது இந்த அமைப்பு நேர்மையற்ற அறிவிப்புகளைவிட முழுமையற்ற அறிவிப்புகளையே மிகவும் கடுமையாகத் தண்டிக்கிறது.


கையொப்பம் இல்லாதது, பொருந்தாத வாக்காளர் எண், பிற்பகல் 3:00 மணிக்குப் பதிலாக பிற்பகல் 3:05 மணிக்கு தாக்கல் செய்யப்பட்ட படிவம், பிரமாணப் பத்திரத்தில் காலியாக விடப்பட்ட பத்தி, தாமதமான உறுதிமொழி, நிலுவைத் தொகை இல்லாத சான்றிதழ் - இவற்றில் ஏதேனும் ஒன்று ஒரு வேட்பாளரின் போட்டியிடும் உரிமையை முடிவுக்குக் கொண்டு வரலாம். எனவே, ஆதாரத்தின் சுமை முற்றிலும் சட்டப்பூர்வ உரிமையைப் பயன்படுத்த முயலும் குடிமகனின் மீதுதான் உள்ளது. அதை மறுக்கும் அதிகாரியின் மீது அல்ல. இது அரசியலமைப்பு ரீதியாக பின்னோக்கிச் செல்கிறது. இது அரசியலமைப்பின்படி தலைகீழானது. வாக்களிக்கும் உரிமைக்குத் தேவையான இரட்டை உரிமைதான், தேர்ந்தெடுக்கப்படும் உரிமையும் ஆகும். தேர்ந்தெடுப்பதற்கு வேட்பாளர்கள் இல்லாவிட்டால், வாக்குச் சீட்டு என்பது ஒரு சடங்கு ஆகிறது. முதல் கொள்கை என்னவென்றால், ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடிமகனுக்கும் போட்டியிட ஒரு உரிமை உள்ளது. தேர்தல் அதிகாரி தெளிவான ஆதாரங்களுடன், அடிப்படைக் கூறு சார்ந்த அரசியலமைப்பு அல்லது தகுதியிழப்பை நிரூபித்தால் மட்டுமே விண்ணப்பத்தை மறுக்க முடியும். தொழில்நுட்ப ஆவணப் பிழைகள் தகுதியிழப்புக்கு ஒரு காரணமாக இருக்க முடியாது.


வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் பொதுவான நடைமுறை தொழில்நுட்பங்களில் சில பின்வருமாறு:


சத்தியப் பிரமாணச் சிக்கல்: வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, ஆனால் பரிசீலனைக்கு முன், ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு குறிப்பிட்ட அதிகாரியின் முன் சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும். அது மிகவும் சீக்கிரம் எடுக்கப்பட்டால், அது செல்லாது, தாமதமானால், வேட்புமனு நிராகரிக்கப்படும். மேலும், அது குறிப்பிடப்பட்ட அதிகாரி முன் எடுக்கப்படவில்லை என்றால், உங்கள் படிவம் மீண்டும் நிராகரிக்கப்படுவது உறுதி. இந்த டிஜிட்டல் அடையாள காலத்தில் இந்தச்  சடங்கு மூலம் பொது நலன் ஏதேனும் பூர்த்தி செய்யப்படுகிறதா? ஆதார் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணில் பெறப்படும் ஒருமுறை கடவுச்சொல் (OneTimePassword (OTP)) அல்லது டிஜிட்டல் கையொப்பத்தால் அங்கீகரிக்கப்பட்ட மின்னணு அறிவிப்பு போதுமானது.


வைப்புநிதிச் சிக்கல்: பாதுகாப்பு வைப்புத்தொகைகள் பணமாகவோ அல்லது பணப்பத்திரங்கள் மூலமாகவோ செய்யப்பட வேண்டும். பிற்பகல் 3 மணிக்குப் பிறகு சரியான தொகையுடன் வரும் ஆனால், தவறான கட்டண முறையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் ஒரு வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படலாம். ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI)) , நேரடி மொத்த பரிவர்த்தனை முறை (Real Time Gross Settlement (RTGS) அல்லது வங்கி பண அட்டை மூலம் செய்யப்படுகிற பரிவர்த்தனை போன்ற கட்டண முறைகளைச் சேர்ப்பதன் மூலம் வைப்புத்தொகை சமர்ப்பிப்பைக் குடிமக்களுக்கு மேலும் எளிதாக்கலாம்.


சான்றுறுதிச் (notarisation) சிக்கல்: ஒவ்வொரு படிவம் 26 பிரமாணப் பத்திரமும் (வேட்பாளர் வேட்புமனுக்களுடன் தாக்கல் செய்ய வேண்டிய பிரமாணப் பத்திரம்) ஒரு குறிப்பிட்ட சான்றுறுதி அதிகாரியால் சான்றளிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் வேட்புமனு நிராகரிக்கப்படலாம். 


சான்றிதழ் சிக்கல்: வேட்புமனுக்களுடன், வேட்பாளர் நகராட்சி அமைப்புகள், மின்சார வாரியங்கள் அல்லது பிற அரசுத் துறைகளிடமிருந்து நிலுவைத் தொகை இல்லாத சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அரசு ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையத்திடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு வகையான மற்ற அரசாங்க ஒப்புதல்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இவை ஒவ்வொன்றும் பரிசீலனை நேரத்தில் வீட்டோ அதிகாரமாக செயல்படுகிறது. இதனால், ஒவ்வொரு சான்றிதழ் வழங்கும் அலுவலகமும் வேண்டுமென்றே தாமதப்படுத்துவது வேட்புமனுவை நீக்கக்கூடிய ஒரு சாத்தியமான தடையாக மாறும் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. 


மேலும், வேட்புமனுத் தாக்கலுக்கான காலக்கெடுவை காலை 11:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை வரையறுக்கப்பட்ட நேர இடைவெளியை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்?


ஒரு காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளாக வடிவமைக்கப்பட்ட இந்த நடைமுறைகள், தாமதம் மற்றும் கையாளுதலுக்கான வாய்ப்புகளாக மாறிவிட்டன. இங்கு, ஜனநாயக அங்கீகாரத்தைவிட, அதிகார இணக்கத்திற்கே வெகுமதி அளிக்கப்படுகிறது.


வடிகட்டுதல் அல்ல, வசதி செய்தல்


மற்ற ஜனநாயக நாடுகள் வேறுபட்ட அணுகுமுறையைக் காட்டுகின்றன. இங்கிலாந்தில், வேட்பாளர்கள் காலக்கெடுவிற்கு முன் பிழைகளை சரிசெய்ய தேர்தல் அதிகாரிகள் உதவுகின்றனர். கனடா நாடானது 48 மணிநேர திருத்த காலத்தை கட்டாயப்படுத்துகிறது. ஜெர்மனி பிரச்சனைகள் குறித்து எழுத்துப்பூர்வ அறிவிப்பு, அவற்றைச் சரிசெய்வதற்கான நேரம் மற்றும் பல மேல்முறையீட்டுப் படிகளைக் கோருகிறது. திருத்தங்களை அனுமதிக்க ஆஸ்திரேலியா முன்கூட்டியே சமர்ப்பிப்பதை ஊக்குவிக்கிறது. இதன் பொதுவான கருத்து என்னவென்றால், தேர்தல் அதிகாரிகள் வசதி செய்பவர்கள், அவர்களின் வேலை பங்கேற்பை விரிவுபடுத்துவதுதானே தவிர, அதைக் குறைப்பது அல்ல.


இந்தியாவிலும் ஒரு சரிபார்ப்புப் பட்டியல் அமைப்பு உள்ளது. தாக்கல் செய்யும் போது குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைச் சரிபார்ப்புப் பட்டியலில் பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துகிறது. ஆனால், இந்தச் சரிபார்ப்புப் பட்டியல் சட்டரீதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. "சரிபார்ப்புப் பட்டியல், பின்னர் கண்டறியப்பட்ட பிற குறைபாடுகளை தேர்தல் நடத்தும் அதிகாரி சுட்டிக்காட்டுவதைத் தடுக்காது" என்று கையேடு தெளிவுபடுத்துகிறது. வேட்புமனு தாக்கல் செய்யும்போது குறைபாடு இல்லாததாகக் குறிக்கப்பட்டாலும், ஆனால் பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரி கண்டுபிடிக்கும் குறைபாடுகளுக்கான ஆய்வின் போது நிராகரிக்கப்படலாம். இந்த சரிபார்ப்புப் பட்டியலை நம்பியிருக்க வேட்பாளருக்கு உரிமை இல்லை. மேலும், தேர்தல் நடத்தும் அதிகாரி அதை மதிக்க எந்த சட்டப்பூர்வ கடமையையும் எதிர்கொள்ளவில்லை. இந்தச் சரிபார்ப்புப் பட்டியல், வேட்பாளருக்கு உண்மையான பாதுகாப்பை அளிக்காமல், வெளிப்படைத்தன்மையற்றதாகவே உள்ளது.


தேர்தல் அதிகாரியின் பங்கு விருப்புரிமையிலிருந்து கடமைக்கு மாற வேண்டும். ஒரு குறைபாடு இருக்கும்போது, சரியான பிழை, மீறப்பட்ட சட்ட விதி மற்றும் தேவையான திருத்தம் ஆகியவற்றைக் குறிப்பிடும் விரிவான எழுத்துப்பூர்வ அறிவிப்பை தேர்தல் அதிகாரி வெளியிட வேண்டும். இந்த அறிவிப்பைப் பெற்ற பிறகு அதை சரிசெய்ய வேட்பாளர்களுக்கு உத்தரவாதமான 48 மணிநேர கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.


தற்போதைய அமைப்பு விதி அடிப்படையிலானது அல்ல; அது ஆட்சியாளர் அடிப்படையிலானது. ஒரு தேர்தல் அதிகாரி முக்கியமாகக் கருதுவதை, மற்றொருவர் கவனிக்காமல் விடலாம். முடிவுகள் யார் தீர்ப்பளிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமைகின்றன. இது தன்னிச்சையின் வரையறை. எனவே சட்டம் குறைபாடுகளை மூன்று வகைகளாக வகைப்படுத்த வேண்டும் : 


(1) கையொப்பங்கள் விடுபடுதல், பிரமாணப் பத்திரத்தில் உள்ள காலிப் பத்திகள், எழுத்தர் பிழைகள், நிலுவைத்தொகை எதுவும் இல்லை என்பதற்கான சான்றிதழ்கள் போன்ற தொழில்நுட்ப அல்லது ஆவணக் குறைபாடுகள். இவை நிராகரிப்பை நியாயப்படுத்த முடியாது


(2) சர்ச்சைக்குரிய கையொப்பங்கள், கேள்விக்குள்ளாக்கப்பட்ட ஆவணங்கள் போன்ற நம்பகத்தன்மையைச் சரிபார்க்க வேண்டிய விஷயங்கள். இந்தக் காரணங்களுக்காக நிராகரிப்பதற்கு முன் விசாரணைகள் தேவைப்படுகிறது.


(3) அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ தடைகள். இவை உடனடி மற்றும் முழுமையான தகுதியிழப்புக்கு வழிவகுக்கும். மேலும், ஒவ்வொரு நிராகரிப்பு உத்தரவிற்கும் காரணம் கூறப்பட வேண்டும். எந்தத் தேவை பூர்த்தி செய்யப்படவில்லை, எந்தச் சட்ட விதி மீறப்பட்டது, எந்த ஆதாரம் கண்டுபிடிப்பை ஆதரிக்கிறது, மற்றும் குறைபாடு என்ன, ஏன் இந்தக் குறைபாடு நிராகரிப்பை நியாயப்படுத்த போதுமான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும்.


டிஜிட்டல் முறை  தீர்வு


இந்திய தேர்தல் ஆணையம்  டிஜிட்டல் முறையில் இயல்புநிலையாக இருக்கும் ஒரு வேட்புமனுத் தாக்கல் முறையை உருவாக்க முடியும். அதிகப்படியான காகிதப்பணிகளைச் சார்ந்து இல்லாத ஒன்று. இது முற்றிலும் டிஜிட்டல் கட்டமைப்பிற்கு வாதிடுவது அல்ல, மாறாக, காலியான கட்டங்கள் மற்றும் எழுத்துப் பிழைகள் அல்லது அச்சுப் பிழைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படும் தகுதியிழப்புகளை நீக்கக்கூடிய கட்டமைப்பிற்கான பரிந்துரையாகும். முழு வேட்புமனுத் தாக்கல் நடைமுறையும் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்ட ஒருங்கிணந்த இணையதள நுழைவாயில் முறைக்கு  மாற்றப்படலாம். இந்த அமைப்பு வாக்காளர் அடையாள அட்டை, வயது மற்றும் தொகுதி விவரங்களைத்  தானாகவே சரிபார்க்க உதவும் உறுதிமொழி, பிரமாணப் பத்திர சமர்ப்பிப்பு, முன்மொழிபவர் சரிபார்ப்பு மற்றும் வைப்புத்தொகை கட்டணம் அனைத்தும் டிஜிட்டல் முறையில் இருக்கலாம். மேலும், ஒவ்வொரு வேட்புமனுவின் முன்னேற்றமும், அது எப்போது தாக்கல் செய்யப்பட்டது, சரிபார்க்கப்பட்டது, குறைபாடு அறிவிக்கப்பட்டது, சரி செய்யப்பட்டது, ஏற்றுக்கொள்ளப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது போன்றவை, நேர முத்திரைகள் மற்றும் காரணங்களுடன் கண்காணிப்புப் பலகையில் தெரிவிப்பது வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் என்று நம்பப்படுகிறது.


ஜனநாயகத்தை நிலைநிறுத்துதல்


ஒரு வேட்புமனு தன்னிச்சையாக நிராகரிக்கப்படும்போது, ​​இரண்டு உரிமைகள் மீறப்படுகின்றன: வேட்பாளரின் போட்டியிடும் உரிமை மற்றும் வாக்காளர்களின் தேர்வு செய்யும் உரிமை. உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் நவீன, நியாயமான மற்றும் உள்ளடக்கிய ஒரு வேட்புமனு செயல்முறைக்கு தகுதியானது. அங்கு, பங்கேற்பதற்கான தங்கள் உரிமையை நிரூபிக்க வேண்டிய சுமை குடிமக்கள் மீது அல்லாமல், தகுதியிழப்பை நியாயப்படுத்த வேண்டிய சுமை அரசாங்கத்தின் மீது இருக்க வேண்டும். வாக்காளரின் தேர்ந்தெடுக்கும் உரிமை தீர்மானிக்கப்படும் வேட்புமனுத் தாக்கல் நிலையிலும் நியாயம் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

 

காலியான பத்திகள், தவறான கட்டண முறைகள், தவறான கையொப்பங்கள், எழுத்துப்பிழைகள் மற்றும் அச்சுப் பிழைகள், நிலுவைத் தொகை இல்லாத சான்றிதழ்கள் அல்லது தாமதமான உறுதிமொழி ஆகியவற்றுக்கான தகுதி நீக்கம் தொடர்பான அதிகாரத்துவச் சிக்கலை முடிவுக்குக் கொண்டுவரும் குடிமக்கள்-நட்புச் செயல்பாட்டை நோக்கி தேர்தல் ஆணையம்  செயல்பட வேண்டும். நடைமுறையை அரசியலாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நீக்கும் எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறையை நோக்கி  முன்னேற வேண்டும்.


கண்ணன் கோபிநாதன் ஒரு முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி, அவர் இப்போது காங்கிரஸில் ஒரு பகுதியாக உள்ளார்.



Original article:

Share:

சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) அடுத்த கட்டம் தொடங்குகையில், ​​அசாம் விவகாரம் குறித்து… -ஃபுசைல் அகமது அய்யூபி

 சிறப்பு தீவிர திருத்தத்திற்காக (Special Intensive Revision (SIR)) அசாமைத் தவிர்ப்பதன் மூலம், இந்திய தேர்தல் ஆணையமானது குடியுரிமை சரிபார்ப்பு ஆணையமாக அதன் அதிகார வரம்பு குறித்த கேள்விகளைத் தவிர்க்கிறது.


பீகார் முன்னோடித் திட்டத்திற்குப் (Bihar pilot project) பிறகு, இந்திய தேர்தல் ஆணையம் தற்போது பல மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) புதிய கட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியானது இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மீது சுமத்தியுள்ள முக்கிய குற்றச்சாட்டு, தேர்தல் ஆணையம் ஒரு "பின்கதவு NRC" (backdoor NRC) நடத்த முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளது. இது அசாமில் தயாரிக்கப்பட்டு மற்ற மாநிலங்களிலும் சில குழுக்களால் கோரப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை (National Register of Citizens (NRC)) குறிக்கிறது.


அக்டோபர் 27, 2025 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், நாடு தழுவிய சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) இரண்டாம் கட்டம் அசாம் மாநிலத்திற்கு நீட்டிக்கப்படாது என்றும் இதில் அடுத்த ஆண்டு தேர்தல்கள் நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியது. 1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் அசாம் மாநிலத்திற்கு தனித்தனி விதிகளை வழங்கினாலும், இந்திய உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் குடியுரிமை சரிபார்ப்பு செயல்முறை "முடிவடைய உள்ளது" என்று தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) கூறினார். இது கூற்றுக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டிய சரியான சூழ்நிலை தேவை மற்றும் இது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பு பற்றிய ஒரு முக்கியமான கேள்வியையும் எழுப்புகிறது.

அதிகார வரம்பு பிரச்சினை


பீகார் சிறப்பு தீவிர திருத்தத்தைப் (SIR) பற்றிய ஒரு முக்கிய விமர்சனம் என்னவென்றால், 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியலில் இல்லாத எந்தவொரு நபருக்கும் வரையறுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் குடியுரிமைக்கான ஆதாரத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் கேட்டது. ஏனெனில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சொந்த வழிகாட்டுதல்கள் குடியுரிமை தொடர்பாக சந்தேகத்திற்குரியது என்று கண்டறியப்பட்ட எவரையும், குடியுரிமைச் சட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரியிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று கோருகின்றன.


இருப்பினும், அசாம் விதிவிலக்கு மற்றும் அதன் நுட்பமான விளக்கத்தில், குடியுரிமையை நிர்ணயிப்பதற்கான அதன் அதிகார வரம்பு குறித்த அதன் மிகப்பெரிய சந்தேகங்களை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) நிவர்த்தி செய்வதைத் தவிர்த்தது. ஏனெனில், அசாமில் அத்தகைய எந்தவொரு நடைமுறையையும் மேற்கொள்வது ஒரு புதிய சட்ட சிக்கலை உருவாக்கியிருக்கும். நீதிமன்றத்தின் தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ் அசாமில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) மற்றும் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் அதிகாரம் பெற்ற அதிகாரியாக இல்லாவிட்டாலும், மாநில குடியிருப்பாளர்களை அவர்களின் குடியுரிமை தொடர்பாக மற்றொரு கடுமையான குடியுரிமை சரிபார்ப்புக்கு உட்படுத்துவது சட்டப்பூர்வமாக சிக்கலானதாக இருந்திருக்கும்.


அசாமில் குடியுரிமை உறுதிப்பாடு (citizenship ascertainment) முடிக்கப்பட உள்ளது என்ற இந்திய தேர்தல் அதிகாரியின் (CEC) விளக்கம் ஏன் ஒரு தெளிவற்றதாக இருக்கிறது. ஏனெனில், அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஏற்கனவே ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் தயாரிக்கப்பட்டது. ஆகஸ்ட் 31, 2019 அன்று, அஸ்ஸாமின் தேசிய குடிமக்கள் பதிவேடு மாநில ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் “ஆகஸ்ட் 31, 2019 அன்று இறுதி தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) வெளியீடு” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதன்மூலம், அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் (NRC) புதுப்பிக்கும் செயல்முறை முடிவடைந்ததாக அறிவித்தது. இது அசாம் மற்றும் இந்தியாவிற்கு ஒரு திருப்புமுனை தருணமாக அமைந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இவ்வளவு பெரிய அளவிலான பயிற்சியை முடித்த ஒரே மாநிலமாக அசாம் திகழ்கிறது.


மாநில ஒருங்கிணைப்பாளரின் அறிக்கையின்படி, 68.38 லட்சம் விண்ணப்பங்கள் மூலம் மொத்தம் 3.30 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். பல ஆண்டுகளாக பங்குதாரர்களுடன் கலந்துரையாடி ஆலோசனை நடத்திய பிறகு, குடியுரிமை ஆவணங்களை ஆய்வு செய்து சரிபார்க்க ஒரு விரிவான சட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 52,000 மாநில அதிகாரிகளின் ஈடுபாட்டுடனும், நீதிமன்றத்தின் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த மிகப்பெரிய பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த செயல்முறை முடிவடைந்து 3,11,21,004 பேர் இறுதி தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) சேர்க்க தகுதியுடையவர்களாகக் கண்டறியப்பட்டனர். இருப்பினும், 19,06,657 பேர் விலக்கப்பட்டனர். இந்த மிகப்பெரிய முழுப்பயிற்சி ₹1,600 கோடிக்கும் அதிகமான செலவில் மேற்கொள்ளப்பட்டது.


அரசியலமைப்பு ரீதியாகவும், சட்டரீதியாகவும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) நிலைத்திருக்க அனுமதிக்கப்பட்டால், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஒரு இணையான குடியுரிமை தீர்ப்பாயம் போல செயல்படாமல், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதில் அதன் முதன்மைப் பங்கில் கவனம் செலுத்த வேண்டும். உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் முழு அளவிலான குடியுரிமை சரிபார்ப்பு நடத்தப்பட்ட ஒரே மாநிலம் என்ற நிலைமையை அசாம் ஏற்கனவே சுமந்து வருகிறது. மேலும், இந்த மாநிலத்தின் குடியிருப்பாளர்கள் மற்றொரு சுற்றானது நிச்சயமற்றத் தன்மை மற்றும் அதிகாரத்துவ ஆய்வுகளிலிருந்து விடுபட தகுதியுடையவர்கள் ஆவர். இதைத் தடுக்கத் தவறினால், மாநிலத்தின் நுட்பமான சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து, இந்திய அமைப்புகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தலாம்.


பிரிவு 6A, அசாம் மாநிலத்திற்கு ஒரு தனித்துவமான விதி


அசாமில் குடியுரிமை பற்றிய விவாதத்திற்கு, தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஒரு முக்கியப் பிரச்சினையாக இருந்தது. குடியுரிமைச் சட்டம்-1955-ன் பிரிவு 6A ஆனது 1985-ல் அசாம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விதி, அசாமுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஒரு தனித்துவமான குடியுரிமை விதியை உருவாக்கியது. இந்தியாவின் பிற பகுதிகளில் பின்பற்றப்படும் விதிகளைப் போலல்லாமல், வெளிநாட்டினரை அடையாளம் கண்டு நாடு கடத்துவதற்கு வரம்பு தேதிகளையும் நிர்ணயித்தது.


அக்டோபர் 2024-ல், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, 1955 குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6A-ன் படி, பிரிவு 6A-ன் அரசியலமைப்பு செல்லுபடியை உறுதிசெய்தது. அசாமிற்கான ஒரு சிறப்பு நடவடிக்கையாக கட்டமைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது மற்றும் சகோதரத்துவத்தின் அரசியலமைப்பு மதிப்புடன் அதன் இணக்கத்தை வலியுறுத்தியது. இந்தத் தீர்ப்பு, அசாமின் குடியுரிமைப் பிரச்சினை மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபட்டது என்பதை இந்தத் தீர்ப்பு வலியுறுத்தியது. மேலும், அதன் வரலாற்று, அரசியல் மற்றும் சட்ட தனித்துவம் பாதுகாக்கப்பட்டு மதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலுப்படுத்தியது.


தொலைநோக்கு பார்வையில்


மற்ற மாநிலங்களைப் போலல்லாமல், கடந்த ஐம்பது ஆண்டுகளாக அஸ்ஸாம் குடியுரிமை மற்றும் இடம்பெயர்வு தொடர்பான தனித்துவமான சட்ட சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. அசாமில் குடியுரிமை குறித்த பல நீதிமன்ற தீர்ப்புகள் இந்த தனித்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. எனவே, குடியுரிமை விசாரணையைப் போலவே அசாமில் ஒரு சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நடத்த இந்திய தேர்தல் ஆணையம் (ECI) முயற்சித்தால், அது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். ஏனென்றால், அசாமில் சட்ட நிலைமை தனித்துவமானது மற்றும் சிக்கலானது.


தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) குறித்து அசாம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்தால், அந்தத் தரவைப் பயன்படுத்துவதிலிருந்தும், மற்ற மாநிலங்களைவிட அசாமில் நடைமுறையை நியாயமாக விரைவாக முடிப்பதிலிருந்தும் இந்திய தேர்தல் ஆணையத்தை (ECI) தடுப்பது எது என்றும் ஒருவர் வாதிடலாம்.


தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC), அசாம் தேர்தல் காலக்கெடுவை சந்திக்கத் தயாராக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் பரந்த மற்றும் உள்ளடக்கிய ஆலோசனைகளுக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டது. எனவே, ஆகஸ்ட் 31, 2019 அன்று தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (NRC) இறுதிப் பட்டியல், உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வால் ஒவ்வொரு கட்டத்திலும் கண்காணிக்கப்பட்ட ஒரு பரந்த ஆலோசனை செயல்முறை மூலம் நிறைவடைந்தது. அந்த நடைமுறையையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) சேர்க்கப்பட்ட மக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்கப்படுவதற்கான வாய்ப்பையும் இந்திய தேர்தல் ஆணையம் புறக்கணிப்பது நிச்சயமாக கடினமாக இருக்கும். இது இந்திய தேர்தல் ஆணையத்தை கடினமான சூழ்நிலையில் தள்ளக்கூடும்.


ஃபுசைல் அகமது அய்யூபி இந்திய உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர்-ஆன்-ரெக்கார்டு ஆவார்.



Original article:

Share:

உணவில் நீதி : புதிய EAT-Lancet ஆணைய அறிக்கை பற்றி . . .

 

EAT-Lancet :  EAT -Lancet குழு என்பது EAT-Lancet அறிக்கையை (2019) உருவாக்கிய 37 முன்னணி உலகளாவிய விஞ்ஞானிகள் குழுவைக் குறிக்கிறது. இது "புவி சுகாதார உணவுமுறை" மனிதர்களுக்கு ஊட்டமளிக்கும் மற்றும் புவியை ஆதரிக்கும் ஆரோக்கியமான, நிலையான உணவு முறைக்கான அறிவியல், சான்றுகள் அடிப்படையிலான கட்டமைப்பை வரையறுக்கிறது


உணவு முறைகளில் (food systems) நீதி என்பது ஆரோக்கியமான, மலிவு விலையில் உணவுகள் கிடைப்பதை உறுதி செய்வதாகும்.


புதிய 'ஆரோக்கியமான, நிலையான மற்றும் நியாயமான உணவு அமைப்புகள் குறித்த EAT-Lancet ஆணையம்' அறிக்கை, இன்றைய உலகளாவிய நெருக்கடிகளில் உணவு அமைப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதைக் காட்டுகிறது. மீறப்பட்ட ஆறு புவி எல்லைகளில் ஐந்துக்கு உணவு மட்டுமே காரணம் என்பதை இது வெளிப்படுத்துகிறது. இது உலகளவில் சுமார் 30% பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கும் பங்களிக்கிறது. உணவு அமைப்புகள் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று ஏற்படும் காலநிலை, பல்லுயிர், நீர் மற்றும் மாசுபாடு நெருக்கடிகளின் முக்கிய கட்டத்தில் உள்ளன என்பதைக் காட்டுகிறது. விலங்குகளின் உணவுகள் பெரும்பாலான விவசாய உமிழ்வுகளுக்குக் காரணமாகின்றன. அதே நேரத்தில் தானியங்கள் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் நீர் பயன்பாட்டில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதை சரிசெய்ய, பல நடவடிக்கைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உணவு இழப்பைக் குறைத்தல், உற்பத்தித்திறனை நிலையான முறையில் மேம்படுத்துதல் மற்றும் உணவுப் பழக்கங்களை மாற்றுதல் ஆகியவை இதில் அடங்கும். உயிர் புவி வேதியியல் ஓட்டங்கள் குறித்த நிலைமை தீவிரமானது. தற்போதைய விவசாய நடைமுறைகள் பாதுகாப்பான உலகளாவிய வரம்பைவிட இரண்டு மடங்கு அதிகமான நைட்ரஜன் உபரியை உருவாக்குகின்றன. வலுவான கொள்கையால் சரிசெய்யப்படாத செயல்திறன் ஆதாயங்கள் அதிக உற்பத்திக்கு வழிவகுக்கும். மேலும், இது சுற்றுச்சூழல் நன்மைகளை ரத்து செய்கிறது. குழுவானது ஒரு யதார்த்தமான அணுகுமுறையை எடுக்கிறது. உணவுமுறைகளை மாற்றுவது முதல் உமிழ்வைக் குறைப்பது வரை பெரிய முயற்சிகள் எடுத்தாலும், உலகின் உணவு முறைகள் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காலநிலை மற்றும் நன்னீர் ஆகியவற்றிற்கு பாதுகாப்பானதாக மாறும் என்பதை அது ஒப்புக்கொள்கிறது. இருப்பினும், ஊட்டச்சத்து பாதுகாப்பில் சிக்கல்கள் இன்னும் தொடரும். இந்தக் குழுவின் அறிக்கையானது ஒரு சந்தேகத்திற்குரிய அனுமானத்தை உருவாக்குகிறது. 30 ஆண்டுகளில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 127% வளரும் என்று அது எதிர்பார்க்கிறது. அதற்குப் பதிலாக, மெதுவான வளர்ச்சி மற்றும் கடுமையான காலநிலை தாக்கங்களுக்கு கொள்கை தயாராக வேண்டும்.


அறிக்கையின்படி, இந்தியா அதிக தானிய உணவு முறையைப் பின்பற்றுகிறது. அதேநேரத்தில், 2050-ம் ஆண்டுக்குள் அளவுகோல்களை பூர்த்தி செய்வதற்கு மக்களின் உணவுமுறைகளில் அதிக காய்கறிகள், பழங்கள், விதை வகைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை தேவை. இந்த மாற்றம் சராசரி நுகர்வோர் விலைகளை அதிகரிக்கக்கூடும். இந்த உணவுகளில் பலவற்றை இறக்குமதி செய்யும் பகுதிகளில் மலிவு விலை ஏற்கனவே குறைவாக உள்ளது. இதனால் நுகர்வோர் விலை அதிர்ச்சிகளுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே, நீதி என்பது விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அதே வேளையில் ஆரோக்கியமான, மிகவும் மாறுபட்ட உணவு முறைகளை நோக்கி நகர்வதைக் குறிக்கிறது. ஆனால், உணவு முறைகளை மாற்றுவது எப்போதும் விரும்பத்தக்கதாக இருக்காது. உணவு விருப்பத்தேர்வுகள் மதம், சாதி மற்றும் இடவசதி மற்றும் மதிய உணவு மற்றும் கொள்முதல் விதிகள் போன்ற தேவைகளால் வடிவமைக்கப்படுகின்றன. மாறும் உணவுமுறைகளில் மட்டும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அறிக்கை பிற உத்திகளை பரிந்துரைக்கிறது. புதிய தரநிலைகள் தீங்கு விளைவிக்கும் உள்ளீடுகளைக் குறைக்கலாம். நிதி கொள்கைகள் குறைந்தபட்ச பதப்படுத்தப்பட்ட உணவுகளை மலிவானதாக மாற்றலாம். மேலும், கொள்முதல் பிராந்திய ரீதியாக நன்கு அறியப்பட்ட, மிகவும் மலிவு விலையில் உணவுகளை ஊக்குவிக்க முடியும். அப்படியிருந்தும், நீர் பற்றாக்குறை, மண் சரிவு மற்றும் குளிர்ப்பதன சேமிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதலில் புதைபடிவ எரிபொருட்களின் அதிகப் பயன்பாடு ஆகியவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். நிலத்தடி நீர் உறிஞ்சுதலை மறைமுகமாக ஊக்குவிக்கும், திறந்த-முடிவு (open-ended) ஊக்கத்தொகைகளிலிருந்து இந்தியா விலகிச் செல்ல வேண்டும். இறுதியாக, சந்தையின் செறிவு, தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் தீங்குகளைத் தடுப்பதற்கான பலவீனமான ஊக்கத்தொகைகள் மற்றும் தேவையற்ற நிறுவன செல்வாக்கு மாற்றத்தைத் தடுக்கக்கூடிய காரணிகளாக இந்தக் குழு அடையாளம் காட்டுகிறது. மறுபுறம், உண்மையான நீதிக்கு, தொழிலாளர்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களுக்கு வலுவான கூட்டுப் பேரம் பேசுதல் தேவை (collective bargaining) என்று அது கூறுகிறது. ஒழுங்குமுறை செயல்முறைகளில் நுகர்வோர் குரல்களும் இதற்குத் தேவை. தற்போது, ​​இந்தப் பாதுகாப்புகள் குறைவாகவே உள்ளன. மேலும் அவை உண்மையானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றப்பட வேண்டும்.



Original article:

Share:

இரண்டாவது குழந்தைக்கு வாடகைத் தாய்மை பிரச்சனை குறித்து . . .

 வாடகைத் தாய்மை சட்டத்தை (surrogacy law) விரிவாகப் படிப்பது அதிக தம்பதிகளுக்கு உதவும்.


இரண்டாவது குழந்தைக்கு மாற்றுத்தாய்மை முறையைப் பயன்படுத்துவதன் சட்டப்பூர்வத்தன்மை குறித்த உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய கருத்துகள், ஒரு சட்டம் என்பது எதை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டது எனும் அடிப்படைப் பிரச்சினையை எழுப்பியுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில், இரண்டாம் நிலை மலட்டுத்தன்மையை எதிர்கொள்ளும் ஒரு தம்பதி, வாடகைத்தாய்மை முறையைப் பயன்படுத்த அனுமதி கோரினர், ஏனெனில் வாடகைத்தாய்மை சட்டத்தின்படி இரண்டாவது குழந்தைக்கு வாடகைத்தாய்மை முறையை நாட முடியாது. அவர்களது வழக்கறிஞர், அரசு குடிமக்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இனப்பெருக்கத் தேர்வுகளில் தலையிட முடியாது என்று வாதிட்டார். ஒரு தம்பதியினர் முன்பு இயற்கையாகவே குழந்தை பெற்றிருந்தாலும், கருத்தரிக்கவோ அல்லது கர்ப்பத்தை காலவரையின்றி சுமக்கவோ முடியாதபோது இரண்டாம் நிலை மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. இதற்கான காரணங்கள் முதன்மை மலட்டுத்தன்மையைப் போலவே இருக்கின்றன. இவற்றில் பல நீர்க்கட்டி கருப்பை நோய்க்குறி (Polycystic Ovary Syndrome (PCOS)), கருப்பை அகப்படல புறவளர்க் கட்டி (endometriosis) மற்றும் சில வாழ்க்கை முறை காரணிகள் அடங்கும். வாடகைத்தாய் மூலம் இரண்டாவது குழந்தையைப் பெறுவதற்கு விலக்கு அளிக்க மனுதாரர்கள் கோரினர். உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் (Assisted Reproductive Technology (ART)) மற்றும் வாடகைத்தாய்மை சட்டங்கள் (Surrogacy Acts) இரண்டிலும் 'மலட்டுத்தன்மை' (infertility) என்பதன் வரையறை முதன்மை மலட்டுத்தன்மைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை என்று அவர்கள் வாதிட்டனர். இந்தியாவின் வாடகைத்தாய்மை (ஒழுங்குமுறை) சட்டம் (India’s Surrogacy (Regulation) Act) 2021-ன் பிரிவு 4(iii)(C)(II)-ன் கீழ், ஒரு தம்பதியினர் வாடகைத் தாய்மைக்கு தகுதியுடையவர்களாக இருக்க வேண்டுமானால், அவர்களுக்கு எந்த உயிருள்ள குழந்தையும் (உயிரியல், தத்தெடுக்கப்பட்ட, அல்லது கருவுறு மாற்று மூலம்) இருக்கக் கூடாது. ஏற்கனவே உள்ள குழந்தை மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது உயிருக்கு ஆபத்தான முறையில் சிக்கல் இருந்தால் மட்டுமே விதிவிலக்குகள் அளிக்கப்படுகின்றன. வாடகைத்தாய் முறையை அடிப்படை உரிமையாகக் கருத முடியாது. மேலும், அது மற்றொரு பெண்ணின் உடலைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது என்பதையும் சுட்டிக்காட்டியது. இந்த விதியின் கீழ் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு "நியாயமானது" (reasonable) என்று நீதிபதி வாய்மொழியாகக் குறிப்பிட்டாலும், இரண்டாம் நிலை மலட்டுத்தன்மையை எதிர்கொள்ளும் திருமணமான தம்பதிகள் இரண்டாவது குழந்தையைப் பெற வாடகைத்தாய் முறையைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டம் குடிமக்களின் இனப்பெருக்கத் தேர்வுகளை கட்டுப்படுத்துவதற்குச் சமமா என்பதை ஆராய நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.


வாடகைத்தாய் முறைக்கான வயது வரம்பை நீதிமன்றம் சமீபத்தில் தளர்த்தியது. இந்த மாற்றம் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு உறைந்த கருக்களை (frozen embryos) வைத்திருந்த தம்பதிகள் அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. விவாதத்தின் போது விவாதிக்கப்பட்ட இந்தச் சட்டத்தின்படி, வணிக ரீதியான வாடகைத்தாய் முறை அல்லது பாதிக்கப்படக்கூடிய பெண்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதே சட்டத்தின் அறிவிக்கப்பட்ட நோக்கமாக இருந்தால், காளான்கள் போல பெருகிவரும் கருவுறுதல் மையங்களை (ART சட்டத்துடன் இணைந்து) ஒழுங்குபடுத்துவதோடு, முதன்மை அல்லது இரண்டாம் நிலை மலட்டுத்தன்மையின் அடிப்படையில் தம்பதிகளைக் கட்டுப்படுத்துவது தேவையற்றதாகவும், மிகைப்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. தற்போது, இந்தியாவில் ஒரு நபர் எத்தனை குழந்தைகளைப் பெறலாம் என்பதை கட்டுப்படுத்தும் எந்தச் சட்டமும் இல்லை, இருப்பினும் பல மாநிலங்கள் அரசு சலுகைகள், வேலைகள் அல்லது அரசியல் பதவிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இரு குழந்தைகள் கொள்கையை ஊக்குவித்துள்ளன. சட்டத்தின் மிகவும் விரிவான விளக்கம், தேவைப்படும் அனைவருக்கும் தொழில்நுட்பத்தின் நன்மைகளை அணுகுவதை எளிதாக்குவது, குழந்தை பெற விரும்பும் பெற்றோருக்கு உதவுவது மற்றும் வணிக ரீதியிலான வாடகைத் தாய்மை முறையைத் தடுப்பது ஆகிய இரண்டு தேவைகளைப் பூர்த்தி செய்யும்.



Original article:

Share: