புதிய டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு சட்டம் உச்சநீதிமன்றத்தில் அரசியலமைப்புச் சட்ட சவாலை எதிர்கொள்வது ஏன்? -வினீத் பல்லா

 மூன்று மனுக்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டங்களில் (Right to Information Acts (RTI)) திருத்தம் செய்வதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், புலனாய்வு பத்திரிகையின் (nvestigative journalism) மீது புதிய சட்டத்தின் தாக்கம் மற்றும் அதைச் செயல்படுத்தும் சட்டப்பூர்வ அமைப்பின் சுதந்திரம் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.


2023-ஆம் ஆண்டு டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் ( Digital Personal Data Protection Act (DPDP)) அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மூன்று தனித்தனி பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தனிநபர்களின் டிஜிட்டல் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டாலும், அதன் விதிகள் அடிப்படை தகவல் அறியும் உரிமையை (RTI) பலவினப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளன. தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம், புலனாய்வு பத்திரிகையை முடக்குகின்றன மற்றும் மாநில கண்காணிப்பு அதிகாரங்களை விரிவுபடுத்துகின்றன என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இயற்றுவதில் முக்கியப் பங்கு வகித்த  குடிமை சமூக வலையமைப்பான தேசிய மக்கள் தகவல் உரிமை பிரச்சாரம் (National Campaign for Peoples’ Right to Information (NCPRI)), வெளிப்படைத்தன்மையாக செய்யப்படும் வழக்கறிஞர் வெங்கடேஷ் நாயக் மற்றும் புலனாய்வு பத்திரிகையாளர்கள் குழுவான நிருபர்களின் கூட்டு அறக்கட்டளை ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


திங்கட்கிழமை இந்த மனுக்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்,  ஒன்றிய அரசுக்கு அறிவிப்பாணையை (notice) அனுப்பி, மார்ச் மாதம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வின் முன் விசாரணைக்கு பட்டியலிட்டது. இருப்பினும், உச்சநீதிமன்றம் இந்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.


தனியுரிமை (Privacy) vs வெளிப்படைத்தன்மை (transparency)


மூன்று மனுதாரர்களும் எழுப்பிய ஒரு முக்கிய வாதம், 2005-ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தமாகும். டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் (DPDP) சட்டத்தின் பிரிவு 44(3), பொது அதிகாரிகள் வைத்திருக்கும் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவது தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8(1)(j)-ஐ மாற்றுகிறது.


இந்தத் திருத்தத்திற்குமுன், எந்தவொரு பொதுப் பணி அல்லது பொது நலனுடன் தொடர்புடையதாக இல்லாவிட்டால் அல்லது அதைப் பகிர்வது நியாயமற்ற முறையில் ஒருவரின் தனியுரிமையை பாதிக்கும் என்றால் மட்டுமே, பொது அதிகாரிகள் சட்டத்தின்கீழ் தனிப்பட்ட தகவல்களைப் பகிர மறுப்பு தெரிவிக்க முடியும். திருத்தப்படாத பிரிவு 8(1)(j) பொதுநல விதிவிலக்கையும் கொண்டிருந்தது.  இது பொது தகவல் அதிகாரிக்கு (public information officer (PIO)) “பொதுநலனுக்கு அதிகமாக உதவும் தகவல்களைப் பகிரலாம்” என்று திருப்தி அடைந்தால் தனிப்பட்ட தகவல்களைக் வெளியிட அனுமதிக்கிறது.


மாற்றாகக் கொண்டுவரப்பட்ட பிரிவு 8(1)(j) இப்போது "தனிப்பட்ட தகவல்களுடன் தொடர்புடைய தகவல்களுக்கு" விலக்கு அளிக்கிறது. பொது நலனை தனியுரிமைக்கான உரிமையுடன் சமநிலைப்படுத்தும் பொது தகவல் அதிகாரிகளின் சட்டப்பூர்வ அதிகாரத்தை இந்தத் திருத்தம் அழிக்கிறது என்று NCPRI மனு கூறுகிறது.



மனுக்களில் பட்டியலிடப்பட்டுள்ள சட்டத்திற்கு என்ன ஆட்சேபனைகள் உள்ளன? நாங்கள் விளக்குகிறோம்.


ஊழல் விசாரணைகள் பெரும்பாலும் சொத்து குறித்த தகவல்கள், ஒப்பந்த ஆவணங்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகளைக் கொண்ட கோப்பு குறிப்புகள் போன்ற பதிவுகளைச் சார்ந்துள்ளது என்று Reporters’ Collective குறிப்பிடுகிறது. பொது நலன் சார்ந்த இந்த அம்சத்தை நீக்குவதன் மூலம், பொது நடவடிக்கைகளுடன் குறிப்பிடத்தக்க தொடர்பு இருந்தாலும், "தனிப்பட்ட" (personal) என்று கருதப்படும் தகவல்களை பொது அதிகாரிகள் மறைக்க புதிய சட்டம் இப்போது அனுமதிக்கிறது என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர். இது "கவனமாக அளவீடு செய்யப்பட்ட தனியுரிமை விலக்கை ஒரு முழுமையான தடையாக" மாற்றுகிறது. இதன் மூலம் சட்டம் ஊழல் செய்த அதிகாரிகளைப் பாதுகாக்கிறது என்று NCPRI மனு வாதிடுகிறது. இது பங்கேற்பு ஜனநாயகத்திற்கு (participatory democracy) ஒரு கடுமையான அடியாகவும், திறந்த மற்றும் வெளிப்படையான நிர்வாகக் கொள்கைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் நாயக்கின் மனு விவரிக்கிறது.


இந்த மூன்று மனுக்களும், அடிப்படை உரிமைகள் (fundamental rights) மீதான எந்தவொரு கட்டுப்பாடும் "விகிதாசார சோதனையை" (proportionality test) பூர்த்தி செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் உச்சநீதிமன்றத்தின் 2017-ஆம் ஆண்டு புட்டசாமி தீர்ப்பை சுட்டிக்காட்டுகின்றன. இதற்கு அரசு தனது சட்டம் ஒரு நல்ல நோக்கத்தைக் கொண்டுள்ளது என்பதையும், அந்த நோக்கத்தை அடைய மிகக் குறைந்த கட்டுப்பாடுகளைக் கொண்ட வழியைப் (least restrictive measure) பயன்படுத்துகிறது என்பதையும், தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க சரியான பாதுகாப்புகளைக் கொண்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்த   வேண்டும்.


அடிப்படை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கட்டுப்படுத்துவதில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் (Digital Personal Data Protection Act (DPDP)) சட்டம் தோல்வியடைகிறது என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் "பொது நலன் மீறல்" என்பதை தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதற்கான "முழுமையான தடையாக" மாற்றுவதன் மூலம், அரசு கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றத் தவறிவிட்டது என்று NCPRI வாதிடுகிறது.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் "வெளிப்படையாக தன்னிச்சையானது" (manifestly arbitrary) என்றும், அது பொது நலனைப் ஆரயாமல், முற்றிலும் தெளிவற்ற ஒரு தகவல்களை உருவாக்குகிறது என்று NCPRI மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பத்திரிகை மீதான தாக்கம்


டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் (Digital Personal Data Protection Act (DPDP)) பத்திரிகை சுதந்திரத்திற்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கிறது என்பதை நிருபர்களின் கூட்டு மனு எடுத்துக்காட்டுகிறது. மோசடித் திட்டங்களை விசாரிப்பது அல்லது அரசாங்க பயனாளிகள் குறித்து அறிக்கை அளிப்பது போன்ற தனிநபர்கள் பற்றிய தரவுகளைச் சேகரிக்கும் பத்திரிகையாளர்கள்மீது "தரவு நம்பகத்தன்மையாளர்கள்" (data fiduciaries) என்று முத்திரை குத்தப்படலாம். சட்டத்தின்கீழ் இந்த வகைப்பாடு, விசாரிக்கப்படும் நபர்களுக்கு அறிவிப்பு வழங்குதல் மற்றும் அவர்களிடமிருந்து ஒப்புதல் பெறுதல் போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறது.


இந்தத் தேவை புலனாய்வு பத்திரிகைக்கு சாத்தியமற்றது மற்றும் எதிர்மறையானது (counter-productive) என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தரவு தொடர்புடைய நபர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், சட்டத்தின் பிரிவு 12, தரவு நம்பிக்கைக்குரியவரால் அவர்களின் தரவு அழிக்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறது. மனுவில், ஒரு செய்தி அறிக்கை அல்லது கட்டுரை வெளியிடப்பட்ட பிறகு அதைச் சரிபார்க்க இயலாது என்ற வாதம் முன் வைக்கபட்டது.


இந்தச் சட்டத்தின் அதிக அபராதங்கள், ரூ.250 கோடி வரை, மிதமான விளைவை (chilling effect) ஏற்படுத்தும் என்று மனு எச்சரிக்கிறது. இதுபோன்ற கட்டுப்படியாகாத அபராதங்களின் அச்சுறுத்தல், தனிப்பட்ட தரவுகள் சம்பந்தப்பட்ட பொதுநலன் சார்ந்த விவகாரங்களைப் பற்றி செய்தி வெளியிடுவதிலிருந்து பத்திரிகையாளர்களைத் தடுக்கும் என்று வாதம் முன் வைக்கபட்டது.




மாநில அதிகாரம் மற்றும் கண்காணிப்பு


நாயக் மற்றும் நிருபர்களின் கூட்டு சவால் போன்ற மனுதாரர்களும் DPDP சட்டத்தின் பிரிவு 36-ஐ சவால் செய்கின்றனர். இது எந்தவொரு தரவு நம்பிக்கையாளரிடமிருந்தும் தகவல்களைக் கேட்பதற்கு ஒன்றிய  அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.


இந்த விதி நடைமுறை பாதுகாப்புகள் இல்லாமல் "நியாயமற்ற டிஜிட்டல் தேடல்களை" எளிதாக்குகிறது என்றும், இது "தெளிவற்ற, பரந்த மற்றும் தன்னிச்சையானது" என்றும், அரசாங்கம் தனிநபரின் ஒப்புதல் இல்லாமல் மற்றும் தன்னிச்சையாக அங்கீகாரம் இல்லாமல் தனிப்பட்ட தரவைப் பெற அனுமதிக்கிறது என்று நிருபர்கள் கூட்டு மனு தனது வாதத்தை முன் வைக்கிறது. பத்திரிகை நோக்கங்களுக்காக விலக்கு இல்லாமல், பிரிவு 36 ஊடக நிறுவனங்கள் பெயர் குறிப்பிடாத ஆதாரங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் தரவை ஒப்படைக்க கட்டாயப்படுத்தக்கூடும் என்றும், இதன் மூலம் தகவல் அளிப்பவர்களைத் தடுக்கும் என்று  நிருபர்கள் கூட்டு மனு கூறுகிறது.


DPDP சட்டத்தின் பிரிவு 36-ன் கீழ் ஒன்றிய அரசின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு அல்லது மறு ஆய்வு செய்ய வாய்ப்பு  எதுவும் இல்லை" என்று நாயக் வாதிடுகிறார். இது, "தனியார் தரவுகளின்மீது ஒன்றிய அரசின் தன்னிச்சையான மற்றும் அதிகப்படியான துஷ்பிரயோகத்திற்கு இந்த விதி வழிவகுக்கிறது. இது கொள்கை முடிவுகள் மற்றும் தேர்தல் தேர்வுகளை பாதிக்கலாம்" என்று நாயக் எச்சரிக்கிறார்.


தரவு பாதுகாப்பு வாரியத்தின் சுதந்திரம் (Independence of Data Protection Board)


சட்டத்தை அமல்படுத்துவதற்கும் அபராதம் விதிப்பதற்கும் பணிக்கப்பட்ட அமைப்பான இந்திய தரவு பாதுகாப்பு வாரியத்திற்கு சுதந்திரம் வழங்காது என்று  நாயக் மற்றும் நிருபர்கள் கூட்டு நிறுவனம் குற்றம் சாட்டுகிறது.


சட்டத்தை செயல்படுத்துவதற்கான புதிதாக அறிவிக்கப்பட்ட விதிகளின்கீழ், வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான தேடல் மற்றும் தேர்வுக் குழு முழுவதுமாக அரசாங்க செயலாளர்கள் மற்றும் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட நிபுணர்களைக் கொண்டுள்ளது.


நியமனச் செயல்பாட்டில் "முழுமையான நிர்வாக ஆதிக்கம்", வாரியம் அரை-நீதித்துறை (quasi-judicial) செயல்பாடுகளைச் செய்வதன் மூலம் அதிகாரங்களைப் பிரிப்பதற்கான கோட்பாட்டை மீறுவதாக நாயக்கின் மனு வாதிடுகிறது. அரசு மிகப்பெரிய தரவு சேகரிப்பாளராக இருப்பதால், நிர்வாகத்தால் மட்டுமே நியமிக்கப்பட்ட ஒரு குழு நிர்வாகக் கட்டுப்பாடு குறித்த கவலைகளை எழுப்புகிறது. அதன் சுதந்திரம் மற்றும் பாரபட்சமற்றத் தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது என்று கூறி, நிருபர்களின் கூட்டு மனு தனது வாதத்தை முன் வைக்கிறது.


Original article : Why the new Digital Personal Data Protection Act faces a constitutional challenge in the Supreme Court?. -Vineet Bhalla

Share:

2025-ஆம் ஆண்டு ஊழல் கண்ணோட்டக் குறியீடு (CPI) -ரோஷ்னி யாதவ்

 2025-ஆம் ஆண்டு ஊழல் கண்ணோட்டக் குறியீடு (Corruption Perceptions Index (CPI)), உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஊழல் ஒரு தீவிர அச்சுறுத்தலாகவே உள்ளது என்பதை வெளிக் காட்டுகிறது. குறியீட்டின் முக்கிய சிறப்பம்சங்கள் என்ன? இந்தியா எந்த இடத்தில் உள்ளது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே விளக்கப்பட்டுள்ளது.


தற்போதைய செய்தி :


Transparency International-ன் 2025 ஊழல் கண்ணோட்டக் குறியீடு சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. 80 புள்ளிகளுக்கு மேல் மதிப்பெண் பெற்ற நாடுகளின் எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்னர் 12-ஆக இருந்த 80-க்கு மேல் மதிப்பெண் பெற்ற நாடுகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு ஐந்து ஆகக் குறைந்துள்ளது. இந்த சூழலில், குறியீட்டின் முக்கிய சிறப்பம்சங்களையும், இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பதையும் அறிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. இந்தக் குறியீடு, குறைந்த அளவிலான நிர்வாக ஊழல் உட்பட, உள்நாட்டு பொதுத்துறை ஊழல் பற்றிய கருத்துக்களை ஆராய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. இது 0 முதல் 100 வரையிலான அளவைப் பயன்படுத்தி, உணரப்பட்ட பொதுத்துறை ஊழலின் அடிப்படையில் 182 நாடுகளை மதிப்பீடு செய்தது. அங்கு பூஜ்ஜிய மதிப்பெண் மிகவும் ஊழல் நிறைந்ததாகவும் (highly corrupt), 100 ஊழல் இல்லாத நிலையாகவும் உள்ளது. குறியீட்டில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நாட்டின் நிலையை தரவரிசை வெளிப்படையாக காட்டுகிறது.


2. 2025-ஆம் ஆண்டு ஊழல் உணர்வு குறியீட்டில் டென்மார்க் 89 புள்ளிகளுடன் தொடர்ந்து 8 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பின்லாந்து 88 புள்ளிகளுடனும், சிங்கப்பூர் 84 புள்ளிகளுடனும் உள்ளன.


3. தெற்கு சூடான் மற்றும் சோமாலியா ஆகிய இரண்டு நாடுகளும் 9 மதிப்பெண்களுடன் 181-வது இடத்தில் உள்ளன. வெனிசுலா 10 மதிப்பெண்களுடன் 180-வது இடத்தில் இருந்து, இந்த மூன்று நாடுகளையும் குறியீட்டில் கடைசி இடத்தில் வைத்திருக்கிறது.


4. குறியீட்டு ஒரு தொந்தரவான கீழ்நோக்கிய போக்கை வெளிப்படுத்தியது, உலகளாவிய சராசரி மதிப்பெண் 100 இல் 42 ஆகக் குறைந்தது - இது பத்து ஆண்டுகளில் மிகக் குறைவு. கூடுதலாக, மொத்தத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான 122 நாடுகள் 2025 CPI இல் 50க்குக் கீழ் மதிப்பெண் பெற்றுள்ளன என்பதை அது மேலும் சுட்டிக்காட்டியது.


5. இருப்பினும், முன்னேற்றத்திற்கான சில அறிகுறிகள் உள்ளன.  2012-ஆம் ஆண்டு முதல் 31 நாடுகள் தங்கள் ஊழல் அளவைக் கணிசமாகக் குறைத்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


6. குறிப்பிடத்தக்க வகையில், எஸ்டோனியா (76 மதிப்பெண்களுடன் 12-வது இடத்தில் உள்ளது. பூட்டான் (71 மதிப்பெண்களுடன் 18-வது இடத்தில் உள்ளது. தென் கொரியா 63 மதிப்பெண்களுடன் 31-வது இடத்தில் உள்ளது. மற்ற நாடுகள் நீடித்த ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் நீண்டகால ஆதாயங்களைக் காட்டியுள்ளனர்.


7. 2025-ஆம் ஆண்டில், ஊழல் உணர்வுகள் குறியீட்டில் இந்தியா உலகளவில் 91-வது இடத்தைப் பிடித்தது. 100-ல் 39 மதிப்பெண்களைப் பெற்றது. இது முந்தைய ஆண்டைவிட சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டதைக் காட்டுகிறது. 2024-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண் 38-ஆக இருந்தது.




லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா (Lokpal and Lokayuktas Act) சட்டம்


1. ஒன்றிய ஊழல் எதிர்ப்பு குறைதீர்ப்பு அமைப்பான லோக்பால் என்ற யோசனை முதன்முதலில் 1963-ஆம் ஆண்டு ஒன்றிய சட்ட அமைச்சகத்தின் வரவு செலவு அறிக்கை ஒதுக்கீடு குறித்த விவாதத்தின் போது முன்வைக்கப்பட்டது. 1968 மற்றும் 2001-ஆம் ஆண்டிற்கு இடையில்  8 முறை நாடாளுமன்றத்தில் குறைதீர்ப்பு மையத்தைக் உருவாக்கும் மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், அவை நிறைவேற்றப்படவில்லை என்று ஊழல் எதிர்ப்பு அமைப்பான இந்தியா Transparency International அமைப்பு 2020-ல் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியது.


2. இருப்பினும், பல ஆண்டுகளாக, பல்வேறு மாநிலங்கள் லோக்பாலுக்கு இணையான லோக் ஆயுக்தாக்களை அமைத்தன. மகாராஷ்டிரா லோக்ஆயுக்தா மற்றும் உபயுக்தா (Upayukta Act) சட்டத்தின் கீழ் 1971-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லோக் ஆயுக்தா அமைப்பில் முதலிடத்தில்  உள்ளது.


 3. 2013-ஆம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா (Lokpal and Lokayuktas Act) சட்டம் ஜனவரி 16, 2014 அன்று அமலுக்கு வந்தது. இந்தச் சட்டம், இந்திய தலைமை நீதிபதியாக இருக்கும் அல்லது முன்பு நீதிபதியாக பணியாற்றிய அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் அல்லது குறிப்பிட்ட தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யும் ஒரு சிறந்த நபரின் தலைமையில் ஒரு லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்கு வழிவகை செய்கிறது. அதன் மற்ற உறுப்பினர்களில், 8-நபர்களுக்கு மிகாமல், 50% பேர் நீதித்துறை உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ஆனால், உறுப்பினர்களில் 50%-க்கும் குறையாமல் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்களாக இருக்க வேண்டும்.


4. லோக்பால் சட்டம், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுபினர் முதல்  ஒன்றிய அரசின் குழு A, B, C மற்றும் D அதிகாரிகள் வரை பல்வேறு வகையான பொது ஊழியர்களை உள்ளடக்கியது. "பிரதமர் தொடர்பான புகாரில் கூறப்படும் எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டும் சம்பந்தப்பட்ட அல்லது தொடர்புடைய எந்தவொரு விவகாரத்தையும் லோக்பால் விசாரிக்க வேண்டும் அல்லது விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.


5. பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டு சர்வதேச உறவுகள், வெளி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு, பொது ஒழுங்கு, அணுசக்தி மற்றும் விண்வெளி தொடர்பானதாக இருந்தால், லோக்பால் சட்டம் விசாரணை நடத்த அனுமதிக்காது. மேலும், முழு லோக்பால் அமர்வு விசாரணையைத் தொடங்குவதை பரிசீலித்து, குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அதை அங்கீகரிக்காவிட்டால் பிரதமருக்கு எதிரான புகார்களை விசாரிக்கக்கூடாது என்று சட்டம் கூறுகிறது.


6. லோக்பால் தலைவரும் உறுப்பினர்கள் 5 வருட காலத்திற்கு நியமிக்கப்படுகிறார்கள் அல்லது அவர்கள் 70 வயது அடையும் வரை பதவியில் இருப்பார்கள். எது முன்னதாக வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பார்கள். முதல் லோக்பால் தலைவர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஸ்  (Pinaki Chandra Ghose) ஆவார்.


Original article : Corruption Perceptions Index (CPI) 2025 -Roshni Yadav

Share:

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் வரி செலுத்துவோர் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. -சந்திரசேகர் கே.

 வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதே வேளையில், வரி வசூலிக்கும் முறையும் அதிகத் திறனுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.


கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் நேரடி வரி முறை கணிசமாக விரிவடைந்துள்ளது. வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்துள்ளதுடன், நிர்வாகத்திலும் சீரான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வளர்ச்சியானது பரவலாகவும் நிலையானதாகவும் இருப்பதை வருமான வரித்துறையின் தரவுகள் காட்டுகின்றன. இது ஏதோ தற்காலிகமாக வரி  செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது மட்டும் அல்ல, மாறாக நாட்டின் முறையான பொருளாதார அமைப்பில் மக்கள் ஆழமாகப் பங்கேற்பதையே குறிப்பதாகத் தெரிவிக்கின்றனர். 


மதிப்பீட்டு ஆண்டு (Assessment Year (AY)) 2013-14-ஆம் ஆண்டு முதல் 2024-25-ஆம் ஆண்டு வரை, வருமான வரி தாக்கல் செய்தவர்கள் அல்லது வருமான வரி மூலத்தில் பிடிக்கப்பட்டவர்கள் (tax deducted at source (TDS)) உட்பட ஒட்டுமொத்த வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 5.26 கோடியிலிருந்து 12.13 கோடியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். 


வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்திருப்பது, கடந்த 11 ஆண்டுகளில் சுமார் 7.89 சதவீதம் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்திற்கு (compound annual growth rate (CAGR)) சமமாக உள்ளது.  இது ஒரு நிலையான வளர்ச்சியைக் குறிக்கிறது. நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number (PAN)) பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இந்தியாவின் நேரடி வரி முறையில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான கட்டமைப்பு மாற்றங்களில் இதுவும் ஒன்றாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. 


தரவுகளை விரிவாகப் பார்க்கும்போது, இந்த வளர்ச்சியில் தனிநபர் வரி செலுத்துவோரே முக்கியப் பங்கு வகித்துள்ளனர் என்பது தெரிகிறது. விளக்கப்படம் 1-ல் காட்டியுள்ளபடி, தனிநபர் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மதிப்பீட்டு ஆண்டு (AY) 2013-14-ஆம் ஆண்டில் 4.96 கோடியாக இருந்தது, இது 2024-25-ஆம் ஆண்டில் 11.61 கோடியாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது சுமார் 8 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைக் (CAGR) குறிக்கிறது.


விளக்கப்படம் 1 இடது அச்சில் உள்ள தனிப்பட்ட வரி செலுத்துவோரின் எண்ணிக்கையையும் (பார்களாகக் குறிப்பிடப்படுகிறது) வலது அச்சில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியையும் (ஒரு கோடாகக் குறிப்பிடப்படுகிறது) காட்டுகிறது.


கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பு, வளர்ச்சி சீராக இருந்தது; பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் 7 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை வளர்ச்சி காணப்பட்டது. ஆனால், 2020-21-ஆம் நிதியாண்டில் தனிநபர் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை சுமார் 9 சதவீதம் குறைந்தது. இது பெருந்தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பையே காட்டுகிறது.


இதனைத் தொடர்ந்து ஒரு வலுவான மீட்சி ஏற்பட்டது; சமீபத்திய மதிப்பீட்டு ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. இது தனிநபர் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதில் புதிய வேகத்தைக் காட்டுகிறது.


வரி செலுத்தும் முறையில் தனிநபர்களே (Individuals) பெரும் பங்கு வகித்தாலும், வளர்ச்சி என்பது அவர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. நிறுவனங்கள், இந்து கூட்டுக் குடும்பங்கள் (Hindu Undivided Families (HUF)), நபர்களின் கூட்டமைப்பு, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பிற வகை வரி செலுத்துவோரின் பொதுவான வளர்ச்சிப் போக்கை விளக்கப்படம்-2 (Chart 2) காட்டுகிறது.


விளக்கப்படம் 2-ல் (Chart 2), தனிநபர் அல்லாத வரிசெலுத்துவோரின் எண்ணிக்கை இடதுபுற அச்சிலும், ஆண்டுக்காண்டு வளர்ச்சி விகிதம் வலதுபுற அச்சிலும் காட்டப்பட்டுள்ளது.















தனிநபர் அல்லாத வரி செலுத்துவோரின் எண்ணிக்கை, மதிப்பீட்டு ஆண்டு 2013-14-ஆம் ஆண்டில் சுமார் 0.29 கோடியாக இருந்தது. இது ஆண்டுக்குச் சராசரியாக 5 சதவீத வளர்ச்சியைப் பெற்று, 2024-25-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 0.48 கோடியாக உயர்ந்துள்ளது.


தனிநபர் வரி செலுத்துபவர்களைவிட இந்த பிரிவினரின் வளர்ச்சி மெதுவாக இருந்தாலும், மிகவும் நிலையானதாக உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு, இவர்களின் ஆண்டு வளர்ச்சி பெரும்பாலும் 4 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை இருந்தது. ஆனால், பெருந்தொற்று காரணமாக 2020-21 மதிப்பீட்டு ஆண்டில் இந்த வளர்ச்சி 1 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது என்கின்றனர். அதன் பிறகு வந்த ஆண்டுகளில் இது படிப்படியாக மீண்டும் முன்னேற்றம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

தனிநபர்களைப் போலன்றி, தனிநபர் அல்லாத வரி செலுத்துவோரின் (நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள்) பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார வளர்ச்சி மிதமானதாகவே உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இவர்களின் வளர்ச்சி சுமார் 5 சதவீதம் என்ற அளவில் நிலைபெற்றுள்ளது. வணிகங்கள் மற்றும் அமைப்புகளிடையே முறைப்படுத்துதல் தொடர்வதையே இது காட்டுகிறது, ஆனால் இது தனிநபர்களிடம் காணப்படும் வேகத்தை விடக்குறைவான மற்றும் சீரான வேகத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 


வரி வசூலிப்புச் செலவு


வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், வரி நிர்வாகம் மிகவும் திறமையானதாக மாறியுள்ளது. விளக்கப்படம் 3-ல் காட்டியுள்ளபடி, நேரடி வரிகளை வசூலிப்பதற்கான செலவு, நிதி ஆண்டு 2000-01-ஆம் ஆண்டில் 1.36 சதவீதமாக இருந்தது, அது 2024-25-ஆம் நிதி ஆண்டில் 0.41 சதவீதமாக குறைந்துள்ளது.


2024-25-ஆம் நிதியாண்டிற்கான இந்த புள்ளிவிவரம் தற்காலிகமானது மற்றும் பின்னர் மாற்றியமைக்கப்படலாம். வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மற்றும் மொத்த வரி வசூல் கணிசமாக அதிகரித்த போதிலும், இந்த தொடர்ச்சியான சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 


விளக்கப்படம் 3, நேரடி வரிகளை வசூலிப்பதற்கான செலவை (சதவீதத்தில் %) காட்டுகிறது.


2020–21-நிதியாண்டில் செலவு விகிதம் (cost ratio) அதிகரித்தது ஒரு தற்காலிகமான நிகழ்வுதான் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். இது முக்கியமாகப் பெருந்தொற்று ஏற்படுத்திய இடையூறுகளால் ஏற்பட்டதே தவிர, நிறுவனத்தின் கட்டமைப்புக் குறைபாடு அல்ல என்றும் அதன் பிறகு, இந்த விகிதம் தரவுகளில் உள்ளதிலேயே மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது நிர்வாகத் திறனில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான முன்னேற்றத்தைக் காட்டுவதாகவும் தெளிவுபடுத்துகின்றனர். 


இந்த மாற்றங்களை சில நிறுவன ரீதியான மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் மூலம் விளக்க முடியும் என்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில், வரி நிர்வாகமானது டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்தல் (Digital filing), முன்-நிரப்பப்பட்ட படிவங்கள் (Pre-filled returns), முகமற்ற மதிப்பீடு (Faceless assessments) மற்றும் பரவலான மூன்றாம் தரப்பு தகவல் அறிக்கையிடல் (Third-party reporting) ஆகியவற்றையே அதிகம் சார்ந்துள்ளது.


இந்த நடவடிக்கைகள் விதிமுறைகளைப் பின்பற்றுவதில் உள்ள சிரமங்களைக் குறைத்துள்ளன. மேலும், கூடுதல் நிர்வாக ஆதாரங்கள் தேவைப்படாமலேயே அதிகப்படியான வரி செலுத்துவோரை கையாள இந்த அமைப்புக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளன.


இந்தியாவின் வரி செலுத்துவோர் எண்ணிக்கை எந்தளவிற்கு நிலையாக உயர்ந்துள்ளது என்பதைத் தீர்மானிக்க, வெறும் மேலோட்டமான புள்ளிவிவரங்களை மட்டும் நம்பியிருக்காமல், தனிப்பட்ட வரி செலுத்துவோரின் தரவுகள், ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி மற்றும் நீண்டகால கூட்டு வளர்ச்சி விகிதம் (CAGR) போன்றவற்றை இந்த ஆய்வு பயன்படுத்துகிறது.


ஒட்டுமொத்தமாக, வரி செலுத்துவோர் எண்ணிக்கை, வளர்ச்சி விகிதங்கள், கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகித (CAGR) போக்குகள் மற்றும் வரி வசூல் செலவுகள் ஆகியவை இந்தியாவின் நேரடி வரி முறை வலுவடைந்துள்ளதைக் காட்டுகின்றன. நிர்வாகத் திறன் மேம்படும் அதே வேளையில், பரவலான வரி செலுத்துவோரிடமிருந்து வருவாய் வசூலிக்கப்படுகிறது. இது நிலையான பொது நிதிக்கு ஆதரவளிப்பதோடு, வரி விதிப்பை முறையான பொருளாதாரத்திற்குள் கொண்டு வருகிறது. இந்த மாற்றம் நாட்டின் வருவாய் நிலைத்தன்மை, நேர்மை மற்றும் நீண்ட கால நிதித் திட்டமிடலில் முக்கிய தாக்கங்களை ஏற்படுத்துகிறது.


வரி செலுத்துவோரின் எண்ணிக்கை தரவுகளைப் பயன்படுத்தி, வளர்ச்சி விகிதங்கள் ஆண்டுக்கு ஆண்டு கணக்கிடப்படுகின்றன.


சுருக்கப்படாத மதிப்புகளைக் கொண்டு, மதிப்பீட்டு ஆண்டு (AY) 2013-14 முதல் 2024-25 வரையிலான காலத்திற்கு கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதமானது (CAGR) கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், மதிப்பீட்டு ஆண்டு (AY) 2024-25 மற்றும் நிதி ஆண்டு (FY) 2024-25 ஆகியவற்றிற்கான புள்ளிவிவரங்கள் தற்காலிகமானவை ஆகும். 


எழுத்தாளர், இந்திய புள்ளிவிவரப் பணியில் (Indian Statistical Service) பணிபுரிகிறார்.


Original article : India’s taxpayer base more than doubled in the last decade -Chandrasekar K.

Share:

1946 இந்தியக் கடற்படை கிளர்ச்சி: வளர்ந்து வரும் பிரிவினைகளுக்கு நடுவே ஒற்றுமை. -ராபர்ட் ரஹ்மான் ராமன்

 காலனித்துவ அதிகாரிகள் பெரும்பாலும் இந்த எழுச்சியை ஒரு 'கலகம்' (mutiny) என்று அழைத்தனர். கடற்படை வீரர்களின் ஒழுக்கமின்மையால் ஏற்பட்ட ஒரு சிறிய, உள்ளூர் அளவிலான பிரச்சனை என்று அவர்கள் இதை விவரித்தனர். ஆனால், அன்றைய நிகழ்வுகளை ஆராய்ந்து பார்க்கும்போது, அந்த கிளர்ச்சியின் அளவு மிக பிரம்மாண்டமானது என்பது தெளிவாகத் தெரிகிறது.


1946-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியக் கடற்படைப் புரட்சியின் (Royal Indian Navy’s revolt (RIN)) 80-வது ஆண்டு நினைவு தினம் பிப்ரவரி மாதம் 18-ஆம் நாளான இன்று கடைபிடிக்கப்படுகிறது. பம்பாயில் உள்ள கடற்படைத் தளத்தில் ஒரு சிறிய ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாகத் தொடங்கிய இது, பொதுமக்களின் பலத்த ஆதரவுடன் மிக விரைவாக வீதிகளில் பெரிய அளவிலான போராட்டமாக மாறியதாகக் கூறப்படுகிறது. 


எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு, குறிப்பாக தெற்காசியாவில் மீண்டும் மதங்களுக்கு இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வரும் இவ்வேளையில், இந்தச் சிறு கிளர்ச்சியின் முக்கியத்துவம் குறித்த மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும்.


கலகமா அல்லது கிளர்ச்சியா?


காலனித்துவ அதிகாரிகள் பெரும்பாலும் இந்த கிளர்ச்சியை ஒரு 'கலகம்' (mutiny) என்றே அழைத்தனர். மத்திய தலைமை அல்லது ஒருங்கிணைப்பு ஏதுமின்றி, கடற்படை வீரர்களிடையே ஏற்பட்ட ஒரு உள்ளூர் பிரச்சனை என்று அவர்கள் கூறினர். ஆனால், பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரையிலான நிகழ்வுகளை மேலோட்டமாகப் பார்த்தாலே, அந்த எழுச்சி உண்மையில் எவ்வளவு பெரியதாக இருந்தது என்பது தெரியும் என்கின்றனர். 


பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி, 1946-ஆம் ஆண்டு, மும்பையில் உள்ள 'HMIS தல்வார்' (HMIS Talwar) கப்பற்படைத் தளத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இந்தியக் கடற்படை வீரர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியபோது இந்தப் புரட்சி வெடித்ததாகக் கூறப்படுகிறது. மோசமான உணவு, குறைந்த ஊதியம் மற்றும் ஆங்கிலேய அதிகாரிகளின் இனவெறிப் பாகுபாடு ஆகியவற்றை எதிர்த்து அவர்கள் போராடினார்கள். இந்த செய்தி பரவியவுடன், மும்பை கோட்டைப் பகுதிகளில் இருந்த கடற்படைப் பிரிவுகளும், மும்பை துறைமுகத்தில் இருந்த 22 கப்பல்களும் வேலையை நிறுத்தின. கடற்படை வீரர்கள் நகரத்தில் ஊர்வலம் சென்றனர். சுபாஷ் சந்திர போஸின் உருவப்படத்தை ஏந்திச் சென்ற அவர்கள், தங்கள் கப்பல்களில் காங்கிரஸ், முஸ்லீம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகளை ஏற்றினர். விரைவில், அவர்கள் ஒரு மத்திய போராட்டக் குழுவை அமைத்தனர். இந்தக் குழு, தங்களுடைய கோரிக்கைகளை இந்திய தேசிய ராணுவ வீரர்களை விடுதலை செய்வது போன்ற பெரிய தேசியப் போராட்டங்களுடன் இணைத்ததாகத் தெரிவிக்கின்றனர். 


பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி, அந்த நகரத்தில் அமைதியான முறையில் தொடங்கப்பட்ட ஒரு உண்ணாவிரதப் போராட்டம், திடீரென ஒரு ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாக மாறியது. கடற்படை வீரர்கள் தங்கியிருந்த இடத்தின் மீது ஆங்கிலேயப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, அதற்குப் பதிலடியாக வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டமாக அமைந்தது. கப்பலில் இருந்த கிளர்ச்சியாளர்கள், கரையில் இருந்த வீரர்களைப் பாதுகாப்பதற்காகத் தங்களின் பீரங்கிகளை இயக்கியதால், ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் சூழல் உருவானது. அடுத்த ஐந்து நாட்களில், இந்தக் கிளர்ச்சி மற்ற கடற்படைத் தளங்களுக்கும் பரவியது. மேற்கு கடற்கரையில் உள்ள கராச்சி மற்றும் மும்பை முதல் கிழக்கு கடற்கரையில் உள்ள சென்னை, கொச்சி, அந்தமான் தீவுகள், விசாகப்பட்டினம் மற்றும் கொல்கத்தா வரை பரவியதாகவும் கூறப்படுகிறது.  இந்தக் கிளர்ச்சி அதன் உச்சத்தில் இருந்தபோது, 78 போர்க்கப்பல்கள், டெல்லியில் உள்ள கடற்படை முகாம்கள் உட்பட, மேலும் 20 கடற்படை முகாம்கள் மற்றும் சுமார் 20,000 கடற்படை வீரர்கள் இதில் பங்கேற்றனர்.


இந்திய சுதந்திரப் பயணத்தில் இது ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாக இருந்தபோதிலும், பொதுமக்களின் நினைவிலிருந்து இந்த நிகழ்வு காலப்போக்கில் மறைந்து போனது. விரைவில் ஏற்பட்ட மதக்கலவரங்களும், பிரிவினையின்போது நடந்த வன்முறைகளும் இதன் அடையாளத்தை நீர்த்துப்போகச் செய்துவிட்டன.



ஒற்றுமையின் தருணம்


இந்தக் கிளர்ச்சியின் முக்கியத்துவத்தைக் கணிக்கும்போது, ​​செப்டம்பர் மாதம் 1945-ஆம் ஆண்டில் சிம்லா மாநாடு தோல்வியடைந்த பிறகு நாட்டில் அதிகரித்த வகுப்புவாத பதற்றங்களை மக்கள் பெரும்பாலும் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். அந்தக் காலகட்டத்தில் மும்பையிலும் வகுப்புவாத கலவரங்கள் நடந்தன. இருப்பினும், பிப்ரவரி மாதம் 1946-ஆம் ஆண்டில் நடந்த இந்தியக் கடற்படை (Royal Indian Navy) கிளர்ச்சியின்போது, ​​அங்கு ஒரு குறுகிய காலத்திற்கு இந்து-முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமை நிலவியதாகக் கூறப்படுகிறது. ஆங்கிலேய ராணுவத்திற்கும் கடற்படை வீரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டபிறகு, இந்து மற்றும் முஸ்லிம் போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து வீதிகளில் இறங்கினர். கிளர்ச்சியாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 'ஹர்த்தால்' (வேலைநிறுத்தம்) செய்ய அழைப்பு விடுத்தனர். அன்று மதியம், மக்கள் கூட்டமாகத் தபால் நிலையங்களைத் தாக்கினர், டிராம் தண்டவாளங்களை உடைத்தனர், தடுப்புகளை அமைத்தனர் மற்றும் சாலைகளில் தீ மூட்டிப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அந்த மாநகரமே ஸ்தம்பித்ததாகக் கூறப்படுகிறது. 'பெண்டி பஜார்' மற்றும் ஆலைப்பகுதிகளில் தொழிலாளர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கல்வீச்சு மற்றும் பெரிய அளவிலான கலவரம் நடந்ததாகவும் கூறுகின்றனர். 


பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி, இந்த ஒற்றுமை காலனித்துவ ஆட்சிக்கு எதிரான ஒரு மக்கள் எழுச்சியாக மாறியது. கடற்படை வீரர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏழை மக்கள் வீதிக்கு வந்து ஆங்கிலேய அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தனர். அவர்கள் ஊர்வலங்களை நடத்தினர்; கற்கள் மற்றும் பேரெல்களைக் கொண்டு தெருக்களை மறித்தனர். மேலும் போக்குவரத்து சேவையை முடக்க பேருந்துகள் மற்றும் ராணுவ வாகனங்களை தீயிட்டு எரித்தனர். முந்தைய காங்கிரஸ் போராட்டங்களின் போது பெரும்பாலும் அமைதியாக இருந்த முஸ்லிம் பகுதிகள், இந்த எழுச்சியின் முக்கிய மையங்களாக மாறின. அந்தப் பகுதிகள் தடுப்புகளால் சூழப்பட்டு, பல்வேறு சமூகக் குழுக்களைச் சேர்ந்த மக்களால் பாதுகாக்கப்பட்டன. ஊர்வலங்கள் இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இரு பகுதிகளின் வழியாகவும் சென்றன. மக்கள் மூவர்ணக் கொடி, முஸ்லிம் லீக் கொடி மற்றும் கம்யூனிஸ்ட் கொடிகளை ஏந்திச் சென்றனர்.


மும்பையின் ஆலைப்பகுதி கிளர்ச்சியின் மையப்புள்ளியாக மாறியது. ஜவுளி ஆலைகள், இரயில்வே பணிமனைகள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன, அதைத் தொடர்ந்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டன. தொழிலாளர்கள் அந்தப் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மக்கள் காவல் நிலையங்களை எரித்தனர், மேலும் காவல்துறை மற்றும் ஆங்கிலேய வீரர்களுடன் நேரடிப் போரில் ஈடுபட்டனர். இது பல உயிரிழப்புகளுக்கும் காயங்களுக்கும் வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த எழுச்சியை ஒடுக்க, ஆங்கிலேய அரசாங்கம் இராணுவப் படைகளையும் கவச வாகனங்களையும் நிலைநிறுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 


காமதிபுரா மற்றும் மதன்புரா பகுதிகளில் கடும் போர் வெடித்தது. அங்கே இந்து மற்றும் முஸ்லிம் ஆலைத் தொழிலாளர்கள் தடுப்புகளை அமைத்து, முன்னேறி வந்த ஆங்கிலேயப் படைகள் மீது கற்களையும் பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். இதற்குப் பதிலடியாக, ஆங்கிலேயப் படைகள் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி முனை கத்திகள் கொண்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்தத் தீவிரமான மற்றும் சமமற்ற மோதலில், சுமார் 200 ஏழைத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இவ்வளவு பெரிய அளவிலான பலத்தைப் பயன்படுத்திய பிறகும், பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி கடற்படை வீரர்கள் சரணடைந்த பின்னரும் கூட, ஓரிரு நாட்களுக்கு ஆலைப்பகுதி மற்றும் நகரப் பகுதிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ராணுவப் படைகள் திணறியதாகக் கூறப்படுகிறது. 


அழியாத சுவடுகள்


இந்த வரலாற்று நிகழ்வினால் உருவான வலுவான ஒற்றுமை நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஆகஸ்ட் மாதம்  1946-ஆம் ஆண்டு முதல், அமைச்சரவைத் தூதுக்குழுவின் தோல்வியும், நேரடி நடவடிக்கைக்கான (Direct Action) அழைப்பும் பரவலான இனக்கலவரங்களுக்கு வழிவகுத்தன. இருப்பினும், பின்னோக்கிப் பார்க்கையில், இந்த எழுச்சியானது போருக்குப் பிந்தைய காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாகும். இது மக்கள் ஒன்றிணைவதற்கும் அணிதிரள்வதற்கும் வேறு பல வழிகள் இருப்பதைக் காட்டியது. இந்த புரட்சி கடற்படைக் கப்பல்களிலும் படைத்தளங்களிலும் நடந்த ஒரு முக்கிய கிளர்ச்சியாக இருந்தபோதிலும், இது பம்பாய் தெருக்களில் சாதாரண மக்கள் ஒன்றிணைந்த ஒரு தருணமாகவும் அமைந்ததைச் சுட்டிக்காட்டுகின்றனர். 


வளர்ந்து வந்த மதவாத பதற்றங்களுக்கு மத்தியிலும், 1946-ஆம் ஆண்டு நடைபெற்ற கடற்படை புரட்சியானது (RIN revolt) இந்து-முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. புரட்சிக் கவிஞர் சாஹிர் லூதியானவி, 'சுட்டெரிக்கப்பட்ட பாழ்நிலத்தில் பூத்த ஒரு நம்பிக்கை மலர்' என்று இந்த நிகழ்வினை வர்ணித்தார். ஆங்கிலேயர் ஆட்சியின் கடைசி ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் இந்தப் போராட்டம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில் வீரர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் என அனைவரும் மதப் பிரிவினைகளைக் கடந்து ஒன்றிணைந்து செயல்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.  


போருக்குப் பிந்தைய காலத்தில் மதவாத பதற்றங்கள் அதிகரித்த போதிலும், சாதாரண மக்களிடையே இருந்த ஒற்றுமை உணர்வு முற்றிலும் மறைந்துவிடவில்லை என்பதை 80 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் இந்த நிகழ்வு நமக்கு நினைவூட்டுவதாக பெருமிதம் கொள்கின்றனர். 


ராபர்ட் ரஹ்மான் ராமன், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள SRM பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையின் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.


Original article : The 1946 Royal Navy revolt: solidarity amid sharpening polarisation -Robert Rahman Raman

Share:

இந்திய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ்நாட்டின் சாமானிய மக்கள் எவ்வாறு பங்கேற்றார்கள்? -டி. ராமகிருஷ்ணன்

 சிவகங்கை மாவட்டம் காட்டுநெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழிபாட்டு சுதந்திரமும், தங்கள் விவகாரங்களை தாங்களே நிர்வகிக்கும் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி ஒரு கையெழுத்துப் பிரதியை அனுப்பியுள்ளார்.


அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு, புகழ்பெற்ற தலைவர்கள் மூலம் மட்டுமல்லாமல், சாதாரண மக்கள் மூலமாகவும் அமைந்திருந்தது.


இந்த பங்களிப்புகள் இரண்டு வகைகளில் அமைந்திருந்தன: ஒன்று, உரிமைகளை வடிவமைப்பதன் மூலம் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வருவது; மற்றொன்று, பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்குவதன் மூலம் பாதுகாப்பை உறுதி செய்வது. குறிப்பாக, பட்டியல் இனத்தவர் (Scheduled Caste (SCs)) மற்றும் மத சிறுபான்மையினர் போன்ற நலிவடைந்த பிரிவினரைப் பாதுகாப்பதில் அரசின் பங்களிப்பு முக்கியமாக இருந்தது.


மார்ச் மாதம்  9-ஆம் தேதி, 1947-ஆம் ஆண்டு தேதியிட்ட தி இந்து நாளிதழ் செய்தியின்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையினரைப் பாதுகாப்பது குறித்து தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்காக, மார்ச் மாதம் 1947-ஆம் ஆண்டில் அரசியல் நிர்ணய சபையின் ஆலோசனைக் குழுவின்கீழ் இயங்கிய சிறுபான்மையினர் துணைக் குழு, ஆறு அம்சங்கள் கொண்ட கேள்வித்தாள் ஒன்றை வெளியிட்டது. வங்காளத்தைச் சேர்ந்த கிறிஸ்தவத் தலைவரான எச்.சி. முகர்ஜி தலைமையிலான இந்தக் குழுவில் ஜக்ஜீவன் ராம், சி. ராஜகோபாலாச்சாரி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், பி.ஆர். அம்பேத்கர், எஸ்.பி. முகர்ஜி, ராஜ்குமாரி அம்ரித் கவுர், எம். ரத்னசாமி, கே.எம். முன்ஷி மற்றும் கோவிந்த் வல்லப் பந்த் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.


ஜூலை மாதம் 1937-ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதம் 1939-ஆம் ஆண்டு வரை சி. ராஜகோபாலாச்சாரி தலைமையிலான சென்னை மாகாண அரசில் விவசாய அமைச்சராகப் பணியாற்றிய வி.ஐ. முனுசாமி பிள்ளை, மற்ற பட்டியல் சாதித் தலைவர்களுடன் இணைந்து, பட்டியல் சாதியினருக்கான கல்வி மற்றும் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்குத் தொடர வேண்டும் (ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்படும் விதிமுறை) என்று கோரிக்கை விடுத்தார். இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும், ஆலோசனைக் குழுவின் தலைவருமான சர்தார் வல்லபாய் படேல், இந்தக் கோரிக்கையை ஏற்று, மே மாதம் 1949-ஆம் ஆண்டில் அரசியல் நிர்ணய சபையில் சமர்ப்பித்த அறிக்கையில் இதனைச் சேர்த்ததாகக் கூறப்படுகிறது. 


சிறுபான்மையினருக்குத் தனித்தொகுதி (separate electorates) வழங்கும் யோசனை, சிறுபான்மையினர் துணைக்குழு மற்றும் ஆலோசனைக் குழுவால் விவாதிக்கப்பட்டது. ஜூலை மாதம் 1947-ஆம் ஆண்டில்கூட, சிறுபான்மையினருக்குத் தனித் தொகுதி வழங்கக் கூடாது என்ற துணைக்குழுவின் முடிவை ஆலோசனைக் குழு ஏற்றுக்கொண்டது.


முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் மற்றும் பி. போக்கர் சாஹிப் பகதூர் ஆகியோர் தனித்தொகுதி முறைக்கு வலுவான ஆதரவை வழங்கினர். சிறுபான்மையினர் தங்கள் குறைகளை முன்வைக்க ஒரு வழி தேவை என்று போக்கர் சாஹிப் பகதூர் வாதிட்டார். இதற்காகவே தனி பிரதிநிதித்துவம் கோரப்பட்டதாகவும், இடஒதுக்கீடு முறைகள் கைவிடப்பட்ட நிலையில், தனித்தொகுதி கோரிக்கை இயற்கையாகவே எழுந்ததாகவும் அவர் கூறினார். தங்களுக்குத் தாங்களே கருத்துக்களை வெளிப்படுத்தவும், மற்றவர்கள் அதைக் கேட்கவும், தங்களுக்குள் ஒன்றிணையவும் உரிமை வேண்டும் என்று இஸ்மாயில் கூறினார். தனித்தொகுதி என்பது பிரிவினைவாதம் என்று அர்த்தமல்ல. அது குழுக்களுக்கிடையிலான வேறுபாடுகளை அங்கீகரிப்பதே தவிர, மக்களைப் பிரிப்பதற்காக அல்ல என்றும் அவர் வாதிட்டார்.


இருந்தபோதிலும், சிறுபான்மையினர் துணைக் குழு இந்த யோசனையை நிராகரித்தது. ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்த (தற்போதைய உத்தரப்பிரதேசம்) முஸ்லீம் லீக் உறுப்பினர் Z.H. லாரி கூறுகையில், எந்தவொரு பிரிவினரையும் பொது வாழ்விலிருந்து தனிமைப்படுத்தும் எந்தவொரு விதியும் இருக்கக்கூடாது என்றார். சிறுபான்மையினர் தேசத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக மாற முயற்சி செய்ய வேண்டும் என்றும், தங்களை ஒரு தனி அமைப்பாகக் கருதாமல், ஒட்டுமொத்த தேசத்தின் ஒரு பகுதியாகக் கருதி, ஆட்சியில் தங்களுக்கு ஒரு கௌரவமான இடத்தைப் பெற்றுத்தரும் பாதுகாப்பு வழிமுறைகளை மட்டுமே கோர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


அரசியலமைப்பு நிர்ணய சபை சாதாரண மக்களிடமிருந்தும் ஆலோசனைகளைப் பெற்றது. மதச் சமூகங்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரத்தில் அரசு தேவையற்ற முறையில் தலையிடுவதைத் தடுத்து, அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான கே.வி. சுந்தரேச ஐயர் கருதினார். சமபந்தி போஜனம் (ஒன்றாக அமர்ந்து உண்ணுதல்) அல்லது வரதட்சணை போன்றவற்றை தனிப்பட்ட மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளாகக் கருதிய அவர், இதில் அரசாங்கம் ஏன் தலையிட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இருப்பினும், குடியரசுக் கொள்கைகளை (Republican Principles) அடிப்படையாகக் கொண்டு, அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அவரது கருத்தை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. 


Assembling India’s Constitution என்ற புத்தகத்தின்படி, சிவகங்கை மாவட்டம் காட்டுநெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த எஸ். ஒப்பிலியப்பன் என்பவர், அரசியல் நிர்ணய சபையின் செயலகத்திற்குத் தமிழில் ஒரு கைப்பட எழுதிய கோரிக்கை மனுவை அனுப்பினார். அந்தச் சமயத்தில் அரசியல் நிர்ணய சபையின் செயலகமும், பத்திரிகை தகவல் பணியகமும் (Press Information Bureau (PIB)) எச்.வி.ஆர். ஐயங்கார் மற்றும் ஏ.எஸ். ஐயங்கார் ஆகிய இரு தமிழர்களின் தலைமையில் இருந்தபோதிலும், அந்த கடிதத்தின் முக்கிய கருத்துக்களைப் புரிந்துகொள்வது அவர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. அந்தக் கடிதத்தை எழுதியவர் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அதிகாரிகளால் துல்லியமாகத் தீர்மானிக்க முடியவில்லை. இருப்பினும் அவர் ஒரு இந்து பட்டியலின (தலித்) சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பதை அவர்கள் கண்டறிந்தனர். ஒப்பிலியப்பன் தனது கடிதத்தில் முக்கியமாக, தங்கள் சமூகத்தினர் சுதந்திரமாக வழிபாடு செய்வதற்கும், தங்கள் சமூக விவகாரங்களைத் தாங்களே நிர்வகிப்பதற்கும் உரிமை வேண்டும் என்று கோரியிருந்ததாக அந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது.


காட்டுநெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்த நபர் கோரிய இந்த விரிவான சுதந்திரம், அரசியலமைப்பின் பிரிவு 25-ல் (Article 25) பிரதிபலிக்கிறது. இது மத சுதந்திரத்திற்கான உரிமையை (Right to Freedom of Religion) உறுதி செய்கிறது. பொது ஒழுங்கு மற்றும் அறநெறி போன்ற சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, அனைத்து மக்களும் தங்கள் மனசாட்சிப்படி செயல்படவும், எந்தவொரு மதத்தையும் சுதந்திரமாகப் பின்பற்றவும், கடைப்பிடிக்கவும் மற்றும் பரப்புவதற்கும் உரிமை உண்டு என்பதை இந்த சட்டப்பிரிவு தெளிவுபடுத்துகிறது.


இந்த நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள், மனதில் கொள்ள வேண்டியது என்னவென்றால், அரசியலமைப்பு என்பது சிறந்த சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கூட்டு முயற்சிகளின் விளைவு மட்டுமல்ல, ஒப்பிலியப்பன் போன்றவர்களின் முயற்சிகளின் விளைவும் ஆகும்.


Original article : How ordinary people of Tamil Nadu participated in the making of the Constitution? -T. Ramakrishnan

Share:

கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை அரசு அறிமுகப்படுத்த உள்ளது: திட்டம் என்ன, அது எப்படி செயல்படும்? -அபிநய ஹரிகோவிந்த்

 கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த வாரம், அடுத்த கல்வி அமர்வில் இருந்து, முன் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் கற்பித்தலில் ஒன்றிய அரசு செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை ஒருங்கிணைக்கும் என்று கூறினார்.


கடந்த வாரம் கல்விக்கான செயற்கை நுண்ணறிவு (AI) சிறப்பு மையத்தில், இலாப நோக்கற்ற நிறுவனமான போதான் செயற்கை நுண்ணறிவு (AI) தொடக்கத்தால் இந்த முயற்சி வேகம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பாக அறிவிக்கப்பட்ட இந்த சிறப்பு மையத்தை ஐஐடி மெட்ராஸ் நடத்துகிறது. இதற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


கல்வியில் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைக் கொண்டுவர போதான் செயற்கை நுண்ணறிவைப் (Bodhan AI) பயன்படுத்த ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.


போதான் செயற்கை நுண்ணறிவு (Bodhan AI) என்ன செய்யப் போகிறது?


கல்விக்கான மின்னணு பொது உள்கட்டமைப்பாக (Digital Public Infrastructure (DPI)) பாரத் கல்வி செயற்கை நுண்ணறிவு இருப்பை (Bharat EduAI Stack) நிறுவனம் உருவாக்கும். மின்னணு பொது உள்கட்டமைப்பு (DPI) என்பது பணம் செலுத்துவதற்கான ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) போன்ற பெரிய அளவிலான சேவைகளை அணுகக்கூடிய ஒரு மின்னணு அமைப்பாகும்.


இந்திய மொழிகளுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களை உருவாக்குவதற்கும், தானியங்கி பேச்சு அங்கீகாரம் மற்றும் பேச்சு தொகுப்பு போன்ற சொத்துக்களை உருவாக்குவதற்கும் இந்த நிறுவனம் ஆராய்ச்சியில் ஈடுபடும். பின்னர், மாநில அரசாங்கங்களுடன் இணைந்து பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு அவற்றை எடுத்துச் செல்லும் நோக்கத்துடன், பயன்பாடுகள் உருவாக்கப்படும்.


இந்த முயற்சியின் மூலம், நிறுவனம் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவும் நம்புகிறது.


“இந்த சொத்துக்களை திறந்த வெளியில் வைப்பது மட்டுமே பிரச்சினையைத் தீர்க்கப் போவதில்லை. இந்த மாதிரிகள் ஒரு இறையாண்மை உள்கட்டமைப்பில் பயன்படுத்தப்பட வேண்டும். அத்தகைய உள்கட்டமைப்பில், அவற்றை ஏற்கனவே உள்ள கல்வி தொழில்நுட்ப தீர்வுகளில் எளிதாக இணைக்க முடியும். எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் வாசிப்பு சரளத்தை அளவிடும் ஒரு கல்வி தொழில்நுட்பத் தீர்வு ஏற்கனவே உள்ளது. போதான் செயற்கை நுண்ணறிவில் (Bodhan AI), இந்திக்கான பேச்சு கண்டறியும் மாதிரியை உருவாக்கினால், அதை தற்போதைய தீர்வில் இணைத்து, பின்னர் அதை இந்தி-நடுநிலைப் பள்ளிகளுக்கு விநியோகிக்க முடியும். இந்த மாதிரிகளை அதை ஒரு AI உள்கட்டமைப்பில் தலைமை ஏற்று, அதை செலவில் வழங்க முயற்சி செய்யலாம்” என்று ஐஐடி மெட்ராஸைச் சேர்ந்த பேராசிரியர் மிதேஷ் கப்ரா இந்த வாரம் கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டில் கூறினார்.


அவர் மேலும் கூறியதாவது, “இந்த மாதிரிகளின் மேல் பல பயன்பாடுகளை உருவாக்க முடியும். இங்குதான் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரு பங்கு வகிக்கின்றன. அவர்கள் தீர்வுகளை உருவாக்கி இந்த மாதிரிகள் மற்றும் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்க முடியும். அவர்கள் தீர்வுகளை மேம்படுத்தி பரவலாக விநியோகிக்க முடியும். பின்னர் பல பள்ளிகளில் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் நடத்தப்படலாம். கடைசி மைல் விநியோகம் என்பது ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசாங்கங்களுக்குள் உள்ள அரசு கூட்டமைப்புகள், பல்வேறு கல்வி அமைப்புகளை நாங்கள் நம்பியிருப்போம். இன்று இந்த தீர்வுகளை உருவாக்கும் பல தொழில்நுட்ப பங்குதாரர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் இந்தியர் அல்லாத மாதிரிகளை இணைத்து வருகின்றனர். அவர்கள் இந்திய அமைப்புகளுக்குப் பதிலாக ChatGPT அல்லது ஜெமினி போன்ற உலகளாவிய அமைப்புகளைச் சார்ந்துள்ளனர், என்று கப்ரா கூறினார்.


எந்த வகையான செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் சாத்தியமாகும்?


ஐஐடி மெட்ராஸின் இயக்குனர் பேராசிரியர் வி காமகோடி கூறுகையில், செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் கவனம் மாணவருக்கான தனிப்பயனாக்கப்பட்ட கற்றல், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தலையீடுகளைச் செய்ய அனுமதிக்கும் மற்றும் மாவட்டங்கள் அல்லது பள்ளிகள் எவ்வாறு செயல்படக்கூடும் என்பதை நிர்வாகம் தீர்மானிப்பதில் இருக்கும்.


ஒரு குழந்தை தனது தாய்மொழியில் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியும். குழந்தை எங்கு தவறு செய்கிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இது குழந்தை அந்தத் தவறுகளைச் சரிசெய்ய உதவும். இந்த செயல்முறையை AI ஆதரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.


மாணவருக்கு இது, மொபைல் போன், டேப்லெட் அல்லது லேப்டாப்பில் குரல் அடிப்படையிலான பயிற்சிகளாக இருக்கலாம்; இதற்கான கருத்து அல்லது அறிக்கைகள் ஆசிரியருக்கு வழங்கப்படும்.  பின்னர் செயற்கை நுண்ணறிவு கருவி, மாணவரின் முன்னேற்றத்திற்காக ஆசிரியர் பயன்படுத்தக்கூடிய பயிற்சிகளையோ அல்லது தனிப்பயனாக்கப்பட்ட பணித்தாள்களையோ (worksheets) பரிந்துரைக்கும்.


"குழந்தை ஒரு கேள்வியைக் கேட்டால், செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரி பதிலளிக்க வேண்டும். இது அனைத்தும் மொழி மாதிரிகளைப் பற்றியது. கல்வியில் செயற்கை நுண்ணறிவு (AI) உதவும் விதம் முக்கியமானதாக இருக்கும். இது மொழியை சரியாகப் புரிந்துகொண்டு விளக்க வேண்டும். இது பல மொழிகளிலும் வேலை செய்ய வேண்டும்" என்று பேராசிரியர் காமகோடி கூறினார்.


இதுபோன்ற பல செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் ஏற்கனவே உள்ளன. அடுத்து என்ன?


கடந்த வாரம் நடைபெற்ற மாநாட்டில், ஐஐடி மெட்ராஸ் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் தற்போதைய நிலைமை, அவற்றின் பணி மற்றும் அவை எவ்வளவு பரவலாக செயல்படுகின்றன என்பதை இது ஆய்வு செய்தது என்று பேராசிரியர் காமகோடி கூறினார்.


"போதான் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனம் இப்போது அடிப்படை கட்டுமானத் தொகுதிகளை உருவாக்குவதுதான். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பாக ஒரு இறையாண்மை மாதிரி உருவாக்கப்படும். இந்த கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று ஒரு கருவியைப் பயன்படுத்த விரும்பினால், அவர்களுக்கான அடிப்படை உள்கட்டமைப்பை நாங்கள் பெறுவோம். மேலும், அவர்கள் அதன் மேல் தங்கள் கருவிகளை உருவாக்க முடியும். நாங்கள் ஒரு அடிப்படை தொழில்நுட்ப வழங்குநராகவும், பயன்பாட்டு ஒருங்கிணைப்பாளராகவும் மாற வேண்டும். பின்னர் நாங்கள் ஒரு மாநில அரசு அல்லது மாவட்டத்திற்குச் செல்கிறோம். இந்த மாதிரிகள் பின்னர் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படலாம். அவற்றின் தாக்கத்தையும் அளவிட முடியும்" என்று அவர் கூறினார்.


நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதிக்கு கூடுதலாக, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் அமைப்பைப் பயன்படுத்தும் அரசாங்கங்கள் மூலம் நிதி வரும். "மாநில அரசுகள் சில பராமரிப்பு செலவுகளைச் செலுத்தும். புத்தொழில் நிறுவனங்கள் சேவைகளுக்கு ஈடாக சில பங்குகளையும் வழங்கும். ஒரு கட்டத்திற்குப் பிறகு, அது லினக்ஸ் இயக்க முறைமை (Linux operating system) போல மாறக்கூடும். இது இறுதியில் சமூகத்தால் நிர்வகிக்கப்படலாம்." என்று பேராசிரியர் காமகோடி கூறினார்.


கவலைகள் என்ன?


"தரவுகளைப் பற்றி நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் தட்டச்சு செய்யும் அல்லது எழுதும் எதுவும் அவர்களின் தனிப்பட்ட தரவாகும். இது பொது மன்றத்தில் தரவு சேமிப்பு முற்றிலும் இல்லை என்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். ஆனால், அதை மாணவர் பயன்படுத்தும் ஒரு சாதனத்திற்குள் சேமிக்க முடியும்," என்று பேராசிரியர் காமகோடி கூறினார்.


திரை பயன்பாட்டைப் பொறுத்தவரை, குரல் அடிப்படையிலான கருவிகளின் பயன்பாட்டை அவர் சுட்டிக்காட்டினார்.


தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ன் அரசாங்கக் கொள்கை கட்டமைப்பில் நாங்கள் அடித்தளமாக இருப்போம்" என்று கப்ரா கூறிய அதே வேளையில், போதான் செயற்கை நுண்ணறிவின் தலைமை இயக்க அதிகாரி (COO) கார்த்திக் மகாதேவன் மோகனகிருஷ்ணன், ஆராய்ச்சி மற்றும் கருவிகள் NCERT மற்றும் SCERT கட்டமைப்புகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று கூறினார்.


Original article : Govt to bring in AI tools in teaching: What is the plan, how it will work -Abhinaya Harigovind

Share:

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் திட்டமிடப்படாத குற்றங்கள் தொடர்பான சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் (ED) பறிமுதல் செய்ய முடியுமா? இந்திய உச்சநீதிமன்றம் ஆராய உள்ளது. -அமால் ஷேக்

 சர்வதேச இணையவழி கிரிக்கெட் பந்தய நடவடிக்கையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் 2015-ல் பறிமுதல் செய்ததை உறுதி செய்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் 2025 நவம்பரில் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இந்த மாதம் தடை விதித்தது.


பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்க இயக்குநரகத்தின் (ED) அதிகாரங்கள் குறித்த நவம்பர் 2025 டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிப்ரவரி 9 அன்று நிறுத்தி வைத்தது. இதனால், "குற்றச் செயல்களின் வருமானத்தை" கண்டுபிடிப்பதில் முகமையானது எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்ற ஒரு பழக்கமான விவாதத்தை இது மீண்டும் எழுப்பியுள்ளது.


கடந்த பத்தாண்டுகளில், சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான அமலாக்க இயக்குநரகத்தின் (ED) அதிகாரம் தொடர்ந்து நீதிமன்றங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பு ஒரு தனிநபரின் சொத்துரிமைக்கு எதிராக பணம் மறைக்கப்படுவதைத் தடுப்பதில் மாநிலத்தின் தேவையை சமநிலைப்படுத்த நீதிமன்றங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. சமீபத்திய உத்தரவு மீண்டும் இந்த மோதலை நேரடியாக உச்சநீதிமன்றத்தின் முன் கொண்டுவருகிறது.


சர்வதேச இணையவழி கிரிக்கெட் பந்தய நடவடிக்கையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் (ED) பறிமுதல் செய்ததை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் திட்டமிடப்பட்ட குற்றமாக இல்லாமல், பந்தய வருமானத்தை மோசடி என்ற தனி குற்றத்துடன் இணைப்பதன் மூலம், உயர்நீதிமன்றம் அந்த நிறுவனத்திற்கு கறைபடிந்த பணமாகக் கருத அனுமதித்ததாக மனுதாரர்கள் வாதிட்டனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ், திட்டமிடப்பட்ட குற்றத்திலிருந்து சொத்து பாயும் போது மட்டுமே அமலாக்க இயக்குநரகம் (ED) அதிகார வரம்பைப் பெறுகிறது.


மனுதாரர்களின் கூற்றுப்படி, பந்தய வருவாயை மற்றொரு குற்றத்துடன் இணைப்பது, "திட்டமிடப்பட்ட குற்றத்துடன் தொடர்புடைய குற்றச் செயல்களின் விளைவாக" சொத்து பெறப்பட்டால் மட்டுமே பணமோசடி நடவடிக்கைகள் தொடங்க முடியும் என்ற சட்டப்பூர்வ தேவையை நீர்த்துப்போகச் செய்கிறது.


மனுதாரர்கள் ஒரு நடைமுறை கவலையையும் எழுப்பினர். சட்டம் அதன் சொந்த மேல்முறையீட்டு வழியை வழங்குவதால் மனுக்களை பராமரிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறிய போதிலும், அது அதன் தகுதிகளின் அடிப்படையில் இந்த விஷயத்தை ஆராய்ந்து அமலாக்க இயக்குநரகத்தின் (ED) நடவடிக்கைகளை ஆதரித்தது. மனுதாரர்கள் கூறிய ஒரு நடவடிக்கை சட்டப்பூர்வ செயல்முறையைத் திறம்படத் தவிர்த்துவிட்டதாகக் கூறினார்கள்.


இந்தப் பின்னணியில்தான் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் என். கோடீஸ்வர் சிங் தலைமையிலான நீதிமன்ற அமர்வு அமலாக்க இயக்குநரகத்திற்கு அறிவிப்பாணை அனுப்பியது. பணமோசடி தடுப்புச் சட்ட (PMLA) அட்டவணையில் பட்டியலிடப்படாத ஒரு செயல்பாட்டின் வருமானம், சங்கிலியில் எங்காவது மற்றொரு குற்றம் தோன்றுவதால் மட்டுமே குற்ற வருமானமாகக் கருதப்பட வேண்டுமா என்பதை உச்சநீதிமன்றம் ஆராயும்.


வழக்கைத் தூண்டியது எது


இங்கிலாந்தை தளமாகக் கொண்ட வலைத்தளமான Betfair.com மூலம் நடத்தப்பட்ட "பெரிய அளவிலான ஹவாலா பரிவர்த்தனைகள் மற்றும் சட்டவிரோத சர்வதேச கிரிக்கெட் பந்தய நடவடிக்கைகள்" என்று விவரித்தது குறித்த அமலாக்க இயக்குநரகம் (ED) விசாரணையிலிருந்து இந்த சர்ச்சை தொடர்கிறது. இது இந்தியாவில் சட்டவிரோத பந்தயத்தை தெரு-நிலை சூதாட்டம் (street-level bookmaking) மின்னணு முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட வலையமைப்புகளாக மாற்றியமைத்ததாக அமலாக்க நிறுவனங்கள் கூறும் ஒரு பரந்த வடிவத்தின் ஒரு பகுதியாகும்.


விசாரணையின் போது நடத்தப்பட்ட தேடல்கள், ஹவாலா ஆதரவு பந்தய அமைப்புடன் இணைக்கப்பட்டதாகக் கூறப்படும் "குற்றச்சாட்டு ஆவணங்கள், மின்னணு பதிவுகள் மற்றும் பணம்" மீட்கப்பட்டன. மனுதாரர் ஒரு இடைத்தரகராகச் செயல்பட்டு, இந்தியாவிற்குள் உள்ள தளத்திற்கான பந்தய உள்நுழைவு ஐடிகளை விநியோகித்ததாக புலனாய்வாளர்கள் கூறினர். ஒவ்வொரு "சூப்பர் மாஸ்டர்" உள்நுழைவு ஐடியும் பல பந்தயக் கணக்குகளை உருவாக்க உதவியது. இது ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.30 முதல் ரூ.110 வரை கமிஷன்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஐடிகள் பரிந்துரைக்கப்பட்ட KYC காசோலைகள் இல்லாமல் வழங்கப்பட்டதாகவும், "குறிப்பிடாத, ஒழுங்குபடுத்தப்படாத மற்றும் சரிபார்க்க முடியாத" பந்தயம் என்று விவரித்ததை அனுமதித்ததாகவும் ED மேலும் கூறியது.


மும்பை குற்றவியல் பிரிவின் தனி விசாரணையில் இதேபோன்ற மோசடி முன்பு கண்டறியப்பட்டது. அமலாக்க இயக்குநரகத்தின் (ED) படி, சம்பந்தப்பட்ட நிறுவனம் சட்டவிரோத பந்தய நடவடிக்கைகள் மூலம் சுமார் ரூ.2,400 கோடியை ஈட்டியுள்ளது. இதில், சுமார் ரூ.60 கோடி மனுதாரருக்கு தீர்வுகளின் ஒரு பகுதியாக செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.


இந்த ஆவணங்கள், முதல் தகவல் அறிக்கைகள், வங்கிப் பதிவுகள், பேரேட்டுப் பதிவுகள் மற்றும் அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில், ED செப்டம்பர் 2015-ல் ஒரு தற்காலிக இணைப்பு உத்தரவை பிறப்பித்தது. இந்த குற்றத்தின் மூலம் கிடைத்ததாக சந்தேகிக்கப்படும் ரூ.20 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கியது.


சொத்து இணைப்பு என்பது முகமையின் வலுவான அதிகாரங்களில் ஒன்றாகும். தண்டனை விதிக்கப்பட்டதைப் போலன்றி, விசாரணைக்கு முன் சொத்துக்கள் மாற்றப்படவோ அல்லது மறைக்கப்படவோ கூடாது என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு, விசாரணை நிலையில் பயன்படுத்தப்படுகிறது.


சொத்து இணைப்பு பற்றி சட்டம் என்ன சொல்கிறது?


பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) பணம் திட்டமிடப்பட்ட குற்றத்துடன் இணைக்கப்பட்டால் மட்டுமே ED தலையிட அனுமதிக்கிறது. இது பணமோசடி வழக்கைத் தூண்டக்கூடிய சட்டத்தில் பட்டியலிடப்பட்ட ஒரு குற்றமாகும். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) பிரிவு 2(1)(u) "குற்றத்தின் வருமானம்" (proceeds of crime) என்பது அத்தகைய குற்றச் செயல்பாட்டிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெறப்பட்ட எந்தவொரு சொத்தையும் குறிக்கிறது.


குற்றச் செயல்களின் மூலம் கிடைக்கும் சொத்து என்றும், அது மறைக்கப்படவோ அல்லது மாற்றப்படவோ வாய்ப்புள்ளது என்றும் "நம்புவதற்கு காரணம்" இருந்தால், சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்யும் அதிகாரத்தை பிரிவு 5-ன் படி அமலாக்க இயக்குநரகத்திற்கு வழங்குகிறது. இந்த பறிமுதல் ஒரு தற்காலிக இணைப்பு உத்தரவு மூலம் செய்யப்படுகிறது. பொதுவாக, அத்தகைய இணைப்புக்கு திட்டமிடப்பட்ட குற்றம் தொடர்பான காவல்துறை அறிக்கை அல்லது புகாரை தாக்கல் செய்ய வேண்டும். இருப்பினும், நடவடிக்கைகளில் ஏற்படும் விரக்தியைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவைப்பட்டால், இரண்டாவது நிபந்தனை "எந்தவொரு நபரின் எந்தவொரு சொத்தையும்" பறிமுதல் செய்ய அனுமதிக்கிறது.


இந்தச் சட்டம் மேல்முறையீடுகளுக்கு அதன் சொந்த அமைப்பை வழங்குகிறது. முதலில் தீர்ப்பளிக்கும் அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யலாம். அதன் பிறகு, அது ஒரு தீர்ப்பாயத்திற்குச் செல்லலாம். இறுதியாக, அதை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லலாம். இந்த நிபந்தனை, ஒரு முன்கணிப்பு குற்றத்தின் பாதுகாப்பு இல்லாமல் பறிமுதல் செய்ய அனுமதிப்பதால், மிகையானது (ஒருவரின் வரம்புகள் அல்லது அதிகாரத்தை மீறுதல்) என்று மனுதாரர்கள் வாதிட்டனர். நீதிமன்றம் இந்த வாதத்தை நிராகரித்தது. இந்த நிபந்தனை சொத்துக்கள் வீணாவதைத் தடுக்கும் நோக்கம் கொண்டது என்றும், பிரிவு 5 மற்றும் 8-ன் கீழ் தீர்ப்பு மூலம் தனிப்பட்ட நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன என்றும் கூறியது.

டெல்லி உயர்நீதிமன்றம் கூறியது என்ன?


மனுக்களை தள்ளுபடி செய்து, டெல்லி உயர்நீதிமன்றம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு அடுக்கு மேல்முறையீட்டு அமைப்பைக் கொண்ட "சுய-கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் விரிவான சட்டம்" என்று விவரித்தது. மேலும் தீர்ப்பளிக்கும் அதிகாரத்திலிருந்து மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மற்றும் பின்னர் உயர்நீதிமன்றம் வரை நகர்கிறது.


வழக்கறிஞர்கள் இந்த மன்றங்களைத் தவிர்த்து, நேரடியாக நேரடியாக நீதிப்பேராணை மனுக்களை தாக்கல் செய்யக்கூடாது. அவ்வாறு செய்வது "நீதித்துறை அமைப்பை அடைத்து" சட்டமன்ற வடிவமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அபாயம் உள்ளது என்று நீதிமன்றம் கூறியது. பிரிவு 226, அடிப்படை உரிமைகள் அல்லது இயற்கை நீதி மீறல்கள் போன்ற விதிவிலக்கான வழக்குகளுக்கு ஒதுக்கப்பட்ட "கவனமாக பாதுகாக்கப்பட்ட அரசியலமைப்பு பாதுகாப்பு நுழைவாக" (carefully guarded constitutional safety valve) செயல்படுகிறது என்று அது கூறியது. இந்த வழக்கில், இந்த சிறப்பு நிபந்தனைகள் எதுவும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது.


"குற்றத்தின் வருமானம்" என்று கணக்கிடப்படுவது பற்றிய முக்கிய சர்ச்சையில், நீதிமன்ற அமர்வு ஒரு பரந்த விளக்கத்தை அளித்தது. கிரிக்கெட் பந்தயம் ஒரு திட்டமிடப்பட்ட குற்றம் அல்ல. இருப்பினும், திட்டமிடப்பட்ட குற்றத்திலிருந்து ”நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ” சொத்து வந்தால், அதை குற்றத்தின் வருமானமாகக் கருதலாம் என்று நீதிமன்றம் கூறியது. இந்த வழக்கில், பந்தய முறை சட்டவிரோத செயல்களைச் சார்ந்ததாகக் கூறப்படுவதாகக் கூறப்பட்டது. இவற்றில் மோசடி, ஏமாற்றுதல் மற்றும் குற்றவியல் சதி ஆகியவை அடங்கும். சிம் கார்டுகள் மற்றும் மின்ன்ணு அணுகலைப் பெற இந்தச் செயல்கள் பயன்படுத்தப்பட்டன. இந்தக் குற்றங்கள் அனைத்தும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.


சொத்து ஆரம்பத்தில் குற்றத்துடன் இணைக்கப்பட்டவுடன், "களங்கம்" அதனுடன் இருக்கும் என்று நீதிமன்றம் கூறியது. சொத்து பின்னர் வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டாலும் இது உண்மைதான். 'நச்சு மரத்தின் பழம்', (Fruit of a poisoned tree) என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இதன் பொருள் குற்றவியல் நிதிச் சங்கிலியில் நுழைந்தவுடன், ஆதாயங்கள் மாசுபட்டதாகவே இருக்கும்.


அமலாக்க இயக்குநரகம் (ED) "நம்புவதற்கான காரணம்" என்ற சட்டப்பூர்வ வரம்பைத் தாண்டிவிட்டதாகவும், பறிமுதல் "வெறும் சந்தேகத்தின்" அடிப்படையில் அல்லாமல், திடமான மற்றும் உறுதியான பொருளை அடிப்படையாகக் கொண்டது என்றும் அது கூறியது.


Original article : Can ED seize assets related to non-scheduled offences under PMLA? SC to weigh in. -Amaal Sheikh

Share: