ஒரு ஆபத்தான நடைமுறை நிலைமை (dangerous status quo)

 மணிப்பூரில் ஆயுதக் குழுக்களை நிராயுதபாணியாக்காவிட்டால், மோதல்கள் தொடரும்.

 

மணிப்பூரில் எட்டு மாதங்களுக்கு முன்பு மைதேயி (Meitei) மற்றும் குக்கி-சோ (Kuki-Zo) சமூகங்கள் சம்பந்தப்பட்ட இன வன்முறை வெடித்தது. மோதல் தொடர்கிறது, இடப்பெயர்வு, கல்வி மற்றும் சுகாதாரம் சீர்குலைந்துள்ளது மற்றும் குக்கி-சோ மலைப்பகுதிகளில் அரசாங்க அதிகாரம் இல்லாமை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. அமைதியைக் கொண்டுவர அரசாங்கத்தின் இயலாமை மற்றும் பிரச்சினையை மாநில சட்டமன்றம் தீர்க்கத் தவறியது ஆகியவை நிலைமையை மோசமாக்கியுள்ளன. முதலமைச்சர் என்.பிரேன் சிங்  பெரும்பாலான ஒரு இனத்தின் தலைவராகவே கருதப்படுகிறார். இது நடந்து கொண்டிருக்கும் விரோதத்திற்கு எந்தவொரு சாத்தியமான தீர்வையும் தடுக்கிறது.


ஊடகங்களும் சிவில் சமூக அமைப்புகளும் இன அடிப்படையில் பிளவுபட்டுள்ளன. முதலமைச்சர் மற்றும் இனக்குழுக்களின் அறிக்கைகளில் பிரதிபலிப்பது போல இராணுவம் மற்றும் மத்திய துணை இராணுவப் படைகள் குறித்து கவலை உள்ளது. சட்டப்பிரிவு 355-ஐ முறையாக அறிவிக்காமலேயே சட்டம் ஒழுங்கு அமலாக்க அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொண்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அவரது அமைச்சக உறுப்பினர்களின் வருகைகளுக்குப் பிறகு இனக் குழு பிரதிநிதிகளிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தைக் கண்டன. மோரே நகரில் (Moreh town) புதிய வன்முறையைத் தொடர்ந்து சில எம்.எல்.ஏ.க்களின் தீர்மானத்திற்கு பதிலளிக்கும் விதமாக உள்துறை அமைச்சக குழு சமீபத்தில் வருகை தந்தது.


தீவிரவாத குழுக்களின் எழுச்சி கவலை அளிக்கிறது. மெய்டேய் ரேடிக்கல்  அரம்பாய் தெங்கோல் (Meitei radical Arambai Tenggol) போன்ற குழுக்கள் பாதுகாப்பு படைகளாக செயல்படுகின்றன, பள்ளத்தாக்கில் பதட்டங்களை அதிகரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றன. இதேபோல், மலைப்பகுதிகளில் குக்கி கிளர்ச்சியாளர்கள் இதைச் செய்கிறார்கள். காவல் நிலையங்கள் மற்றும் முகாம்களில் இருந்து திருடப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்படாமல் உள்ளன, இது அரசு அல்லாத குழுக்களின் ஆபத்தான இராணுவமயமாக்கலைக் குறிக்கிறது. இரு தரப்பிலும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.


திரு. சிங், நடந்துகொண்டிருக்கும் மோதல்கள் மற்றும் இனப் பிளவுகளை மணிப்பூரில் உள்ள அகதிகள் நிலைமையுடன் தவறாக இணைக்கிறார். மியான்மரில் உள்நாட்டுப் போர் காரணமாக சின் சமூகத்தைச் சேர்ந்த பலர் தஞ்சம் புகுந்துள்ளனர். இது எல்லை வர்த்தகம் மற்றும் மக்களுடன் மக்களுக்கான தொடர்பை எளிதாக்கும் சுதந்திர நகர்வு ஆட்சியை (Free Movement Regime (FMR)) நிறுத்துவதற்கான அழைப்புகளைத் தூண்டியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் கிளர்ச்சி பற்றிய கவலைகள் இருந்தபோதிலும், சுதந்திர நகர்வு ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது ஒரு கடுமையான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.




Original article:

Share:

இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசல் பற்றி . . .

 இந்தியாவும் மாலத்தீவும் உறவுகளை மீட்டெடுக்க அமைதியான இராஜதந்திரத்துடன் தொடர வேண்டும் 


கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியா-மாலத்தீவு இடையே பதற்றம் நிலவியது. மாலத்தீவு அமைச்சர்களின் மரியாதைக் குறைவான கருத்துகளே இதற்குக் காரணம். மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவை புறக்கணிக்க வேண்டும் என்று இந்திய மக்கள் சமூக வலைதளங்களில்  அறைகூவல் விடுத்தனர். மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தினர் குறித்தும் தகராறு ஏற்பட்டது. இப்போது, டெல்லி மற்றும் மாலே ஒரு புதிய பிரச்சினையை எதிர்கொள்கின்றன. இதில் சீன "ஆராய்ச்சி" கப்பல் சியாங் யாங் ஹாங் 03 (Xiang Yang Hong 03) அடங்கும். இந்த கப்பல் பிப்ரவரி மாதம் மாலேவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடலில் சீனக் கப்பல்கள் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. சீன "ஆராய்ச்சி" கப்பல்கள் இலங்கைக்கு வருவதை இந்தியா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து, 2024 முதல் அனைத்து வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களையும் நிறுத்த இலங்கை முடிவு செய்தது. இந்த கப்பல்கள் இராணுவ மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான தரவுகளை சேகரிக்கும் என்று கருதப்படுகிறது. 


இந்தியாவில் பதற்றம் மற்றும் வலுவான தேசியவாத கருத்துக்கள் இருந்தபோதிலும், புது டெல்லி மாலேவில் உள்ள முய்ஸு அரசாங்கத்துடன் தொடர்ந்து நட்புறவில் ஈடுபடுகிறது. டிசம்பரில், பிரதமர் நரேந்திர மோடி, திரு.முய்ஸுவை சந்தித்தார். கடினமான இருதரப்பு விவகாரங்களைப் பற்றி விவாதிக்க அவர்கள் உயர்மட்டக் குழுவை உருவாக்கினர். இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் அண்மையில் மாலத்தீவு வெளியுறவு அமைச்சரை சந்தித்தார்.


இரு நாடுகளும் தங்களின் பிரச்சினைகள் வளரக்கூடும் என்பதை உணர்ந்துள்ளன. இந்தியா உலக வல்லரசாக இருக்க விரும்புகிறது. மாலத்தீவு அதன் பொருளாதாரம் மற்றும் பிராந்திய பாதுகாப்பிற்காக மற்றவர்களை நம்பியுள்ளது. ஒவ்வொரு தேசத்திற்கும் இறையாண்மை முக்கியமானது. இருப்பினும், ஒருவரையொருவர் எதிர்கொள்வதை விட இருவரும் இணைந்து செயல்படுவது நல்லது. இந்தியா தனது அண்டை நாடுகளின் தேவைகளின் அடிப்படையில் உதவ விரும்புகிறது. மனிதாபிமான காரணங்களுக்காக கூட மாலத்தீவு மீது இந்தியா தனது இராணுவத்தை திணிப்பது நல்லதல்ல. மாலத்தீவில் உள்ள முய்ஸு அரசாங்கமும் கவலைப்பட வேண்டும்.  இந்தியாவுடனான பதற்றம் அதன் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலைப் பாதிக்கலாம்.


மாலத்தீவுகள் சியாங் யாங் ஹாங் 03 (Xiang Yang Hong 03) கப்பலின் வருகைக்கு அனுமதித்தது. ஆனால் அதை ரகசியமாக வைத்திருந்தது. இது அமைதியான இராஜதந்திரத்திற்க்கு உதவுகிறது என்பதை காட்டலாம். அமைதியான மற்றும் விவேகமான அணுகுமுறை இரு நாடுகளுக்கும் இடையே உள்ள இறுக்கமான உறவுகளை மேம்படுத்த உதவும்.    




Original article:

Share:

இனப்படுகொலை விவகாரமும் உலக நீதிமன்றமும் -கௌதம் பாட்டியா

 காசா போர் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா வழக்கு தொடுத்திருப்பது "விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கின்" (rules-based international order) ஒரு முக்கிய அழுத்த சோதனையாகும்


டிசம்பர் 29, 2023 அன்று, தென்னாப்பிரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice (ICJ)) வழக்கு தொடர்ந்தது. காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் சர்வதேச இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறியதாக தென்னாப்பிரிக்கா கூறியது. சர்வதேச நீதிமன்றம், ஜனவரி 2024, 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் "தற்காலிக நடவடிக்கைகள்" (provisional measures) குறித்த விசாரணையை நடத்தியது. அங்கு தென்னாப்பிரிக்கா மற்றும் இஸ்ரேல் இரண்டும் தங்கள் வாதங்களை முன்வைக்க மூன்று மணி நேரம் இருந்தன. இந்த தற்காலிக நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்.


இந்த வழக்கு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பங்களாதேஷ் மற்றும் ஜோர்டான் தென்னாப்பிரிக்காவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன. அதே நேரத்தில் ஜேர்மனி இஸ்ரேலை ஆதரிக்கும். எனினும், இடைப்பட்ட நாடுகள் இனப்படுகொலை உடன்படிக்கையின் விளக்கத்தை மட்டுமே பேச முடியும்.


பல நாடுகள், முக்கியமாக லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து, தென்னாப்பிரிக்காவின் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வமாக ஆதரித்துள்ளன. மறுபுறம், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. இஸ்ரேல் இனப்படுகொலையில் குற்றவாளி என்று சர்வதேச நீதிமன்றம் தீர்மானித்தால் அதற்கு இணங்க மாட்டோம் என்று கூட பிரான்ஸ் அச்சுறுத்தியுள்ளது.


சட்டத்தின் பார்வையில்


இந்த விவாதத்தைப் புரிந்துகொள்வதற்கு சர்வதேச சட்டத்தைப் பற்றிய அறிவு தேவை. இனப்படுகொலை (genocide) குற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை உள்ளடக்கியது. இது மிகவும் கடுமையான சர்வதேச குற்றமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு அரசும் இனப்படுகொலையைத் தடுக்க உழைக்க வேண்டும். இது "எர்கா ஓம்னெஸ் கடமை" (erga omnes obligation) என்று அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், காசா மோதலில் நேரடியாக சம்பந்தப்படாத தென்னாப்பிரிக்காவுக்கு இந்த வழக்கை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வர உரிமை உள்ளது. இந்த அணுகுமுறை புதிதல்ல. உதாரணமாக, ரோஹிங்கியா (Rohingya) இனப்படுகொலை தொடர்பாக மியான்மருக்கு எதிராக காம்பியா ஒரு வழக்கைக் கொண்டு வந்து தற்காலிக நடவடிக்கைகளைப் பெற்றது.


எவ்வாறாயினும், இனப்படுகொலையை நிரூபிப்பதற்கு குறிப்பிட்ட நோக்கத்திற்கான சான்றுகள் தேவை, இது சவாலானது. எனவே, ஜனவரி 11 மற்றும் 12-ம் தேதிகளில் தற்காலிக நடவடிக்கைகளுக்கான தென்னாப்பிரிக்காவின் கோரிக்கை முக்கியமானது. தற்காலிக நடவடிக்கைகள் இறுதி வழக்கு முடிவு வரை கட்சிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தற்காலிக உத்தரவுகள். காம்பியா vs மியான்மர் வழக்கில் காணப்பட்டதைப் போல, இறுதி விசாரணையை விட அவர்களுக்கு குறைவான ஆதாரம் தேவைப்படுகிறது. இங்கே, இனப்படுகொலை என்ற ஒரு நம்பத்தகுந்த வழக்கை நிரூபிப்பதே போதுமானது.


1948 நக்பாவிலிருந்து பல ஆண்டுகளாக பாலஸ்தீனியர்கள் அனுபவித்த துன்பங்கள், தற்போதைய போரில் காசாவில் 24,000 க்கும் மேற்பட்ட இறப்புகள், பொதுமக்கள் உள்கட்டமைப்பின் பரவலான அழிவு மற்றும் பஞ்சம் மற்றும் நோய் அபாயங்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி தென்னாபிரிக்கா தனது வழக்கை கட்டமைத்தது. இஸ்ரேலின் உயர்மட்ட அரசியல்வாதிகள் இனப்படுகொலை அறிக்கைகளை வெளியிட்டனர். இது காசாவில் உள்ள வீரர்களால் எதிரொலிக்கப்பட்டது, அவர்கள் டிக்டாக் ரீல்களை (TikTok reels) உருவாக்கினர்.


இரு தரப்பினருக்கும் இடையே எந்த தகராறும் இல்லை என்றும், இந்த அறிக்கைகள் ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கங்களுக்கு திறந்திருக்கும் என்றும், எந்த வகையிலும், இராணுவத்தின் செயல்பாட்டு நெறிமுறைகளை பிரதிபலிக்கவில்லை என்றும் வாதிட்டது.  ஹமாஸை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட தனது இராணுவ நடவடிக்கை சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு இணங்கியதாக இஸ்ரேல் அறிவித்தது. இந்த நடவடிக்கை ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதல்களுக்கு பதிலடியாக இருந்தது. இதன் விளைவாக சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 240 பணயக்கைதிகள் பிடிக்கப்பட்டனர். 


அடுத்த கட்டம்


தென்னாப்பிரிக்காவின் நம்பகத்தன்மை வாதத்தை சர்வதேச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா என்பதே இப்போது முக்கிய கேள்வி. அவ்வாறு செய்தால், அது என்ன தற்காலிக நடவடிக்கைகளுக்கு உத்தரவிடும்? தென்னாப்பிரிக்கா இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த விரும்புகிறது. நீதிமன்றம் இதற்கு உத்தரவிடாது என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால், உக்ரைன் - ரஷ்யா வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. எனவே, தற்காலிக நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் என்ன முடிவு செய்யும் என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. பல்வேறு பரிந்துரைகள் உள்ளன. காசாவிற்குள் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை அனுமதிக்குமாறு இஸ்ரேலை நிர்பந்திப்பதும் இதில் அடங்கும். இது பஞ்சத்தைத் தடுக்க உதவும். மற்றொரு பரிந்துரை மனிதாபிமான போர் நிறுத்தம். மூன்றாவது, இனப்படுகொலை அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்துமாறு இஸ்ரேலிய தலைவர்களுக்கு உத்தரவிடுவது. நீதிமன்றம் அதன் சொந்த தற்காலிக நடவடிக்கைகளை உருவாக்க முடியும்.


காஸாவில் உள்ள பிரச்சினைகளைக் கையாளும் ஒரே இடம் சர்வதேச நீதிமன்றம் அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம். இஸ்ரேல் மட்டும் ஏன் சர்வதேச நீதிமன்றத்தை எதிர்கொள்கிறது, ஹமாஸ் விதிவிலக்கா என்று சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். காரணம், ஹமாஸ் போன்ற அரசு சாராத செயற்பாட்டாளர்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க முடியாது. இருப்பினும், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலின் அதிகாரிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court (ICC)) குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள முடியும். இது சர்வதேச நீதிமன்றத்திலிருந்து வேறுபட்ட ஒரு நிறுவனமாகும். இது நடக்க வேண்டுமானால், பாலஸ்தீனம்/இஸ்ரேல் நிலைமை விசாரணைக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்க்கு அனுப்பப்பட வேண்டும். இந்த பரிந்துரை ஏற்கனவே நடந்துள்ளது. ஆனால் இதுவரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


சட்ட அம்சங்களைத் தவிர, நாடுகளிடையே குறிப்பிடத்தக்க பிரிவு உள்ளது. உதாரணமாக, காம்பியா vs மியான்மர் வழக்கில், ஜெர்மனியும் பிற நாடுகளும் இனப்படுகொலை உடன்படிக்கையின் பரந்த விளக்கத்தை ஆதரித்தன. இப்போது, தென்னாப்பிரிக்கா vs இஸ்ரேல் வழக்கில் இதே நாடுகள் எவ்வாறு செயல்படும் என்பதை அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர். அவர்கள் வேறு நிலைப்பாட்டை எடுப்பதாகத் தெரிகிறது.


கூடுதலாக, சர்வதேச சட்ட நிபுணர் அலோன்சோ குர்மெண்டி (Alonso Gurmendi) குறிப்பிட்டுள்ளபடி, ஒரு தெளிவான பிரிவு உள்ளது. இந்தப் பிளவு பொதுவாக வரலாற்று காலனிய மற்றும் ஏகாதிபத்திய சக்திகள் ஒருபுறமும், மற்ற நாடுகள் மறுபுறமும் அணிவகுத்து நிற்கின்றன. பெல்ஜியம் போன்ற நாடுகள் இந்த போக்கிற்கு சில விதிவிலக்குகள்.


ஒரு வரையறுக்கும் தருணம்


இந்த நிலைமை வெறுமனே தற்செயலானது அல்ல. ஏகாதிபத்திய "மேற்கு" (imperial “West”), தனது சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்காகவே நவீன சர்வதேச சட்டத்தை உருவாக்கியது என்று பலர் நம்புகிறார்கள்.  எனவே, இந்த சட்ட நடவடிக்கைகள் இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் காசா பற்றிய ஒரு வழக்கை விட அதிகமாக பார்க்கப்படுகிறது. அவை சர்வதேசச் சட்டத்தின் நம்பகத்தன்மை பற்றியவை. பிரான்ஸ் போன்ற நாடுகளின் ஆக்கிரோஷமான அறிக்கைகள் இந்த பார்வைக்கு உதவவில்லை. சர்வதேச நீதிமன்றத்தின் வரவிருக்கும் முடிவுகள் முக்கியமானவை. காசாவில் துன்பங்களைக் குறைப்பதற்கும், அதற்குப் பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைப்பதற்கும் அவை முக்கியமானவை. ஆனால் அவை "விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு" (rules-based international order) என்று மக்கள் அழைப்பதன் வலிமையையும் சோதிக்கின்றன. வரும் மாதங்களில், அது தெளிவாகிவிடும். இந்த ஒழுங்கு உண்மையில் எவ்வளவு வலுவானது என்பதை நாம் பார்ப்போம். இது சர்வதேச நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் மற்றும் பிற நாடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பொறுத்தது.


கௌதம் பாட்டியா புதுடெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்.




Original article:

Share:

இந்தியாவின் பிரச்சினை - வெவ்வேறு மருந்துகள், ஒரே மாதிரியான வர்த்தகப் பெயர்கள் -தினேஷ் எஸ்.தாக்கூர், பிரசாந்த் ரெட்டி டி.

 மருத்துவ சமூகம் பல ஆண்டுகளாக ஒரு கொடிய ஒற்றுமை (deadly similarity) பற்றி புகார் செய்து வருகிறது, ஆனால் எதுவும் மாறவில்லை.  


புற்றுநோயியல் நிபுணர் (oncologist) டாக்டர் வின்சென்ட் ராஜ்குமார் சமூக ஊடகங்களில் ஒரு கேள்வியை எழுப்பினார். வெவ்வேறு நிலைமைகளுக்கு சிகிச்சையளித்தாலும், 'லினாமாக்' (Linamac) என்ற ஒரே பிராண்ட் பெயரைக் கொண்ட இரண்டு மருந்துகளைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். 'லினாமாக் 5' (Linamac 5) மல்டிபிள் மைலோமா (multiple myeloma) புற்றுநோய்க்கானது, மற்றொன்று 'லினாமாக்' (Linamac) நீரிழிவு நோய்க்கானது. மருந்தகத்தில் குழப்பம் ஏற்பட்டால் நோயாளிகளுக்கு கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.


ஒரு பழைய பிரச்சினை


இந்தியாவில், ஒரே வர்த்தகப் பெயர்களைக் (identical trade names) கொண்ட பல்வேறு மருந்துகள் தொடர்ந்து பிரச்சனையாக உள்ளது. இது குறித்து மருத்துவத்துறை பல ஆண்டுகளாக அதிருப்தியில் உள்ளது. மெட்ஸோல் (Medzol) என்ற பிராண்ட் பெயர் நன்கு அறியப்பட்ட உதாரணம். நான்கு வெவ்வேறு நிறுவனங்கள், வெவ்வேறு மருந்துகளுக்கு இந்தப் பெயரைப் பயன்படுத்துகின்றன.  மிடாசோலம் (Midazolam) மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது, மற்றொன்றில் டோம்பரிடோன் மற்றும் பான்டோபிரஸோல் (domperidone and pantoprazole) வயிற்று அமிலத்தன்மைக்காக ஆகியவற்றின் கலவையைக் கொண்டுள்ளது,  மூன்றாவதில் அல்பெண்டசோல் (albendazole) குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப் பயன்படுகிறது மற்றும் நான்காவது இட்ராகோனசோல் (Itraconazole) "கருப்பு பூஞ்சை" (black fungus) போன்ற நோய்களுக்கான பூஞ்சை காளான் மருந்து ஆகியவற்றைக் கொண்டுள்ளது.


மருந்துகளுக்கு ஒரே வர்த்தகப் பெயர்கள் இருப்பது பிரச்சினையின் ஒரு பகுதி மட்டுமே. ஒரே மாதிரியான தோற்றமும் ஒலியும் கொண்ட வணிகப் பெயர்களைப் பயன்படுத்துவது ஒரு பெரிய பிரச்சனை. உதாரணமாக, ஒரு நிறுவனம் அதன் பாராசிட்டமாலை 'மெட்போல்' (Medpol) என்று அழைக்கிறது. மற்றொரு நிறுவனத்தில் 'மெட்ரோல்' (Medrol) என்ற கார்டிகோஸ்டீராய்டு (corticosteroid) உள்ளது. மூன்றாவது நிறுவனம் 'மெட்ரோசோல்' (Metrozole) என்ற ஆன்டிபயாடிக் மருந்தை விற்பனை செய்கிறது. இந்தப் பெயர்கள் ஒலிப்பு ரீதியாக 'மெட்ஸோல்' (Medzole) போன்றது. அவையும் ஒன்றையொன்று ஒத்திருக்கும். இந்த ஒற்றுமை பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்களின் வித்தியாசமாக இருக்கும்.


சில நேரங்களில், அதே நிறுவனம் கூட ஒரு தயாரிப்புக்கு மற்றொரு தயாரிப்புக்கு வெற்றிகரமான பிராண்ட் பெயரைப் பயன்படுத்துகிறது. உதாரணமாக, 'ஐ-பில்' (I-Pill) என்பது அவசர கருத்தடைக்கு (emergency contraceptive) லெவோனோர்ஜெஸ்ட்ரல் (Levonorgestrel) பயன்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் 'ஐ-பில் டெய்லி' (i-Pill Daily) என்பது லெவோனோர்ஜெஸ்ட்ரல் மற்றும் எத்தினைலெஸ்ட்ராடியோலுடன் எத்தினிலெஸ்ட்ராடியோல் (Levonorgestrel and Ethinylestradiol) கலந்த தினசரி கருத்தடை மாத்திரை ஆகும். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று மாற்றக்கூடியவை அல்ல. மேலும் மருந்தகத்தில் குழப்பம் ஏற்ப்பட்டால்  திட்டமிடப்படாத கர்ப்பங்களுக்கு வழிவகுக்கும்.


இரண்டு காரணங்களுக்காக இந்தியா போன்ற ஒரு நாட்டில் இதுபோன்ற ஒரே மாதிரியான அல்லது ஒத்த பெயர்களைப் பயன்படுத்துவது குறிப்பாக கவலை அளிக்கிறது. முதலாவதாக, இந்தியாவில் உள்ள அனைத்து மருந்து பேக்கேஜிங்கிலும் பெயர்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் ஆங்கிலத்தில் உள்ளன. இது மக்கள் தொகையில் 10% க்கும் குறைவானவர்களால் புரிந்துகொள்ளப்படக்கூடிய மொழியாகும். இரண்டாவதாக, இந்தியாவில் உள்ள பல மருந்தகங்கள் வழக்கமாக மருந்துச் சீட்டுகள் இல்லாமல் மருந்துகளை வழங்குவது மட்டுமல்லாமல், இந்திய பார்மசி கவுன்சிலில் பதிவுசெய்யப்பட்ட பயிற்சி பெற்ற மருந்தாளுனர்களிடம் மட்டுமே செயல்பட வேண்டும் என்ற சட்டப்பூர்வ தேவைக்கும் பல இணங்கவில்லை.  இந்த காரணிகள் ஏற்கனவே மருந்துகளை வழங்கும்போது தவறுகளுக்கான வாய்ப்புகளை உயர்த்துகின்றன. மருந்துகளின் ஒத்த அல்லது ஒத்த பிராண்ட் பெயர்களை நீங்கள் கலவையில் சேர்க்கும்போது, மருந்து பிழைகளின் ஆபத்து இன்னும் அதிகமாகிறது.


நீதித்துறையின் பரிந்துரை


ஒத்த  மருந்து பெயர்களின் பிரச்சினை பல ஆண்டுகளாக அறியப்படுகிறது. இந்திய உச்ச நீதிமன்றம் காடிலா ஹெல்த் கேர் லிமிடெட் vs காடிலா பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட், 2001 (Cadila Health Care Ltd. vs Cadila Pharmaceuticals Ltd., 2001) வழக்கில் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அதன் 59 வது அறிக்கையில் (Parliamentary Standing Committee on Health and Family Welfare in its 59th report (2012)) குழப்பமான ஒத்த மருந்துகளின் (confusingly similar drugs) பெயர்களைத் தடுப்பதற்கான செயல்முறைகளை உருவாக்குமாறு சுகாதார அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியது. நிறுவனங்களின் பதிவாளர் (Registrar of Companies) மற்றும் இந்தியாவிற்கான செய்தித்தாள்களின் பதிவாளர் (Registrar of Newspapers)  அலுவலகம் போன்றவை,  நிறுவனங்கள் அல்லது வெளியீடுகளுக்கு ஒரே மாதிரியான அல்லது ஒத்த பெயர்கள் இல்லை என்பதை உறுதி செய்கின்றன.

துரதிர்ஷ்டவசமாக, நீதிமன்றம் மற்றும் பாராளுமன்றத்தின் பரிந்துரைகளை சுகாதார அமைச்சகம் செயல்படுத்தவில்லை. இது 2019ல் மாறியது.  அந்த ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம்.சிங் நடவடிக்கை எடுத்தார். நீதிபதி ஆவதற்கு முன்பு, அவர் ஒரு அறிவுசார் சொத்து வழக்கறிஞராக இருந்தார். அவர் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலை (Drugs Controller General of India (DCG) எதிர்கொண்டார். இது மருந்துத் துறையில் வர்த்தக முத்திரை மீறல் தொடர்பான புதிய வழக்கு காரணமாகும். இதுபோன்ற வழக்குகள் பொதுவானவை. மருந்து நிறுவனங்கள் அடிக்கடி நீதிமன்றத்தை நாடுகின்றன. அவர்கள் ஒரே மாதிரியான அல்லது மிகவும் ஒத்த வர்த்தக முத்திரைகளைப் பற்றி வாதிடுகின்றனர். இந்தியா முழுவதும் பல நீதிமன்றங்களில் இந்தச் சட்டப் போராட்டங்கள் நடக்கின்றன.


நீதிபதி சிங்கின் மேற்பார்வையில், சுகாதார அமைச்சகம் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் பதின்மூன்றாவது திருத்தம் விதிகள், 2019 (Drugs and Cosmetics (Thirteenth Amendment) Rules, 2019) ஐ அறிமுகப்படுத்தியது. இந்த விதிகள் ஒரு பலவீனமான அமைப்பை நிறுவின. இது மருந்து நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி உரிம விண்ணப்பங்களுடன் மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு ‘அவர்களின் மருந்துகளின் பிராண்ட் பெயர் சந்தையை குழப்பவோ அல்லது ஏமாற்றவோ செய்யாது’  என்ற ஒரு "உறுதிமொழியை" வழங்க வேண்டும் என்று கூறியது. இதைச் செய்ய நிறுவனங்கள் வர்த்தக முத்திரைகள் பதிவேடு, மருந்து பிராண்ட் பெயர்களுக்கான மத்திய தரவுத்தளம், இலக்கியம் மற்றும் இந்தியாவில் மருந்து சூத்திரங்கள் குறித்த குறிப்பு புத்தகங்கள் மற்றும் இணையம் போன்ற பல்வேறு ஆதாரங்களில் ஒத்த பெயர்களைத் தேட வேண்டியிருந்தது. 

 

இந்த அமைப்பில் இரண்டு சிக்கல்கள் இருந்தன. முதலாவதாக, சுய சான்றிதழ் இந்தியாவில் சரியாக வேலை செய்யவில்லை, ஏனெனில் பல மருந்துகள் இன்னும் குழப்பமான ஒத்த பெயர்களைக் கொண்டுள்ளன. இரண்டாவதாக, ஒரு நிறுவனம் இணங்க விரும்பினாலும், இந்தியாவில் உள்ள அனைத்து மருந்து பிராண்ட் பெயர்களின் விரிவான தரவுத்தளம் இல்லை. ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 36 வெவ்வேறு மருந்துக் கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து தரவுகளை சேகரிப்பதன் மூலம் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control Organisation (CDSCO)) முதலில் அத்தகைய தரவுத்தளத்தை உருவாக்க வேண்டும்


இந்தியாவில் தரவு இல்லை

மருந்துச் சீட்டுகளில் செய்யப்பட்ட தவறுகள் பற்றிய தரவுகள் எதுவும் இந்தியாவிடம் இல்லை. தரவு இல்லாததால் சுகாதார அமைச்சகம் அதை ஒரு பிரச்சனையாக பார்க்கவில்லை. ஆனால் அமைச்சகம் சிக்கலை அங்கீகரித்தால், அது மாற்றங்களைச் செய்யத் தொடங்கும். அமெரிக்காவும் ஐரோப்பாவும் இதை எப்படி கையாள்கின்றன என்பதை பார்க்கலாம். இந்த இடங்களில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நிறுவனங்களில் சிறப்புக் குழுக்கள் உள்ளன. இந்தக் குழுக்கள் மருந்துப் பெயர்களை கவனமாகச் சரிபார்க்கின்றன. குழப்பத்தைத் தடுக்கவும், மருந்துச்சீட்டுகளில் தவறுகளைக் குறைக்கவும் இதைச் செய்கிறார்கள். இருப்பினும், இந்தியாவில் சுகாதார அமைச்சகத்தின் மருந்து ஒழுங்குமுறைப் பிரிவில், அத்தகைய மாற்றங்களைச் செய்ய வலுவான விருப்பம் இல்லை.வ்  


தினேஷ் தாக்கூர் மற்றும் பிரசாந்த் ரெட்டி டி. ஆகியோர் 2022 இல் "The Truth Pill: The Myth of Drug Regulation in India" என்ற புத்தகத்தை இணைந்து எழுதியுள்ளனர்.




Original article:

Share:

தொலைத்தொடர்பு சட்டம் 'பல ஆண்டுகளுக்கு' செல்லுபடியாகும் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் வைஷ்ணவ் -அரூன் தீப்

 உலகளவில், சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் சில பதிவுகளுக்கு பொறுப்புடைமை இருக்க வேண்டும் என்ற கருத்து வளர்ந்து வருவதாக ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் வைஷ்ணவ் கூறுகிறார். மேலும், இணைய தளத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்தை அனுமதிப்பது இப்போதெல்லாம் முக்கியமானதாக கருதப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார். குறிப்பாக 6ஜி போன்ற புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், டிஜிட்டல் இணைப்பை (digital connectivity) இந்தியா கணிசமாக அதிகரிக்க வேண்டும்.


நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 2023 ஆம் ஆண்டின் தொலைத்தொடர்பு சட்டம் (The Telecommunications Act, 2023), முக்கியமான கட்டமைப்பு சீர்திருத்தங்களின் தொகுப்பாக பார்க்கப்படுகிறது. உரிமங்கள் மற்றும் அனுமதிகளின் விதிமுறையிலிருந்து மிகவும் மதிப்பிடப்பட்ட அங்கீகார முறைக்கு நகர்கிறார்கள். இது நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார். இந்த சட்டம் தகராறுகளைத் தீர்ப்பதற்கும், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீறல்களை தாமாக முன்வந்து புகாரளிப்பதற்கான நான்கு அடுக்கு கட்டமைப்பையும் கொண்டுள்ளோம் என்று அவர் கூறினார்.


இந்த சட்டத்தின் கீழ், தொலைத்தொடர்பு அலைக்கற்றையின் (Telecom spectrum) வழக்கானது உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து ஏலம் விடப்படும் எனவும், இவற்றில் சில பாதுகாப்பு போன்ற சில நிபந்தனைகளைத் தவிர, அலைக்கற்றையானது நிர்வாக ரீதியாக ஒதுக்கப்படும். மேலும், பயன்படுத்தப்படாத அலைக்கற்றையைப் பகிர்வதற்கும், கைவிடுவதற்கும் வெவ்வேறு அலைவரிசைகளை ஒத்திசைப்பதற்கும் பல விதிகள் உள்ளன.


புதிய தொழில்நுட்பங்களை பரிசோதிக்க கல்வித்துறையில் புதுமைகளுக்கான 'சாண்ட்பாக்ஸ்' (sandbox) நம்மிடம் உள்ளது. மற்றொரு முக்கியமான சீர்திருத்தம்  வழித்தட உரிமை (Right of way): இதில், மாநிலங்கள் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புக்கான நிலையை நிர்வகிக்கின்றன. மேலும் தகராறு ஏற்பட்டால் இந்த வழக்குகளில் இழப்பீடு தீர்மானிக்க மாவட்ட நீதிபதிகளுக்கு அதிகாரம் உள்ளது. 

 

இந்தியாவில் மின்னணு இணைப்பின் அளவை நாம் மூன்று மடங்காக உயர்த்த வேண்டும். இதனை, 2014 ஆம் ஆண்டிலிருந்து ஏற்கனவே நான்கு மடங்கு அதிகரித்துள்ளோம். ஆனால் 6G போன்ற புதிய தொழில்நுட்பங்களைச் சமாளிக்க இன்னும் அதிகமாக்க வேண்டும். நம்மிடம், நான்கு அடுக்கு தகராறு தீர்ப்பு அமைப்பு (structure for dispute resolution) மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் (telecom companies) மீறல்களை சுயமாக புகாரளிக்கவும் மற்றும் நுகர்வோர் குறைகளைத் தீர்க்க ஆன்லைன் வழிமுறையும் உள்ளது.  


உலகளாவிய சேவைகள் பொறுப்பு கொள்கைக்கான நிதி (The Universal Services Obligation Fund) இப்போது டிஜிட்டல் பாரத் நிதியாக (Digital Bharat Nidhi) மாற்றப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஆதரிக்கும் வகையில் பின்தங்கிய பகுதிகளில் இதற்கான மின்னணு இணைப்பை மேம்படுத்துகிறது. உலகளாவிய தொலைத்தொடர்பு சந்தையில் (global marketplace for telecommunications) இந்தியாவை வலிமையானதாக மாற்றுவதை நோக்கமாக உள்ளது. 

 

தொலைத்தொடர்பு வலைப்பின்னல்கள் (telecommunications networks) மீது அரசாங்க கட்டுப்பாட்டை அனுமதிக்கும் தேசிய பாதுகாப்பு விதிகளைப் பொறுத்தவரை, இது உலகளவில் ஒரு பொதுவான நடைமுறையாகும். மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்புத் துறைகள் முதன்மை இலக்குகளாக இருப்பதையும், அவை தேசிய பாதுகாப்புக்கு முக்கியமானவை என்பதையும் சமீபத்திய மோதல்கள் சுட்டிகாட்டியுள்ளன. 


தொலைபேசி இணைப்புகளை குறுக்கீடுவது (interception [of phone connections])  பற்றி 1996 முதல் உச்ச நீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்ட ஒரு அமைப்பு காலப்போக்கில் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 1996ல் தொலைபேசிகள் இல்லாத போதிலும், மூத்த அரசாங்க அதிகாரிகள் நீதிமன்ற ஆய்வு இல்லாமல் தொலைபேசி ஒட்டுக்கேட்பை அங்கீகரிக்க முடியும். இது சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் vs இந்திய ஒன்றியம் (People’s Union for Civil Liberties v. Union of India) வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் கோடிட்டுக் காட்டப்பட்ட தொழில்நுட்ப-யதார்த்தமான கட்டமைப்பைப் பின்பற்றுகிறது. 


தொலைத் தொடர்புச் சட்டத்தின் (Telecom Act) பல விதிகள் தொலைத் தொடர்புத் துறையால் அறிவிக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்டால் மட்டுமே இது தொடங்கும். இதற்கு என்ன காலக்கெடுவை நாம் எதிர்பார்க்க முடியும்?


எந்த இடையூறுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்த இந்த சட்டத்தை வடிவமைத்துள்ளோம். பழைய தந்தி சட்டத்தின் (Telegraph Act) கீழ் உரிமம் பெற்றவர்கள் புதிய முறைக்கு மாற தேர்வு செய்யாவிட்டால் பழைய உரிமங்களால் நிர்வகிக்கப்படுவார்கள். அலைக்கற்றை ஒதுக்கீடுகள் (Spectrum allocations) தற்போதுள்ள விதிமுறைகளின்படியே தொடரும் எனவும், தொலைத் தொடர்புத் துறையின் அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிக்கும் தற்போதைய விதிகளை, புதிய விதிகள் மாற்றாவிட்டால் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.


புதிய விதிகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருகின்றன. எந்தவொரு இடையூறும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, முறையான அணுகுமுறையைப் பின்பற்றி, படிப்படியாக அவற்றை வெளியேற்றப்படும்.


வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் ஓடிடி செயலிகளை (OTT apps) ஒழுங்குபடுத்த எந்த ஏற்பாடும் இல்லை என்று நீங்கள் கூறியுள்ளீர்கள், ஆனால்  சட்டத்திலுள்ள வழிமுறைகள் எதிர்காலத்தில் அதை அனுமதிக்கக்கூடும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் பார்வையில் இந்த சட்டம் அரசுக்கு இந்த அதிகாரத்தை வழங்குகிறதா?


அரசு எவ்வாறு செயல்படுகிறது? ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட பணியை ஒதுக்குவதன் மூலம் அரசாங்கம் செயல்படுகிறது. மின்னணு உலகில் நிதி தொழில்நுட்பம் (Fintech) இரண்டு அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறது: அவை, நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவையாகும். இது, மருத்துவ மின்னணுவியல் (Medical electronics),  சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் வருகிறது.  அதே நேரத்தில் ஒளிப்பாய்வு சேவைகளின் (streaming services) உள்ளடக்கம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் (Ministry of Information and Broadcasting) கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த மின்னணு மற்றும் டிஜிட்டல் விஷயங்கள் இந்த அமைச்சகங்களால் வணிக விதிகளின் ஒதுக்கீடு (Allocation of Business Rules (ABR)) படி நிர்வகிக்கப்படுகின்றன.  தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப வணிக விதிகளின் ஒதுக்கீடு தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.


கேள்வி என்னவென்றால், வேலையை எப்படி வரையறுப்பீர்கள்? எதிர்காலத்தில் மின்னணு தொடர்பான அனைத்து பணிகளையும் ஒரே அமைச்சகத்தின் கீழ் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். இது மாற்றங்களைக் கொண்டுவரும், ஆனால் இப்போதெல்லாம் கிட்டத்தட்ட எல்லாமே மின்னணு என்பதால் இது சவாலாக பார்க்கப்படுகிறது. 


சிம் கார்டு பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க சட்டம் திறம்பட உள்ளதா?

இந்த சட்டத்தில், தொலைத்தொடர்பு சேவையைப் பெறும் எந்தவொரு நபரும் பயோமெட்ரிக் அங்கீகாரம் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. தொலைத்தொடர்பு சேவைகளுக்கு இந்த பயோமெட்ரிக் அங்கீகாரம் என்பது மிக அவசியம். ஏனெனில், ’உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்’ (Know Your Client (KYC)) என்பது தொலைத்தொடர்பு சேவைக்கு மிகவும் முக்கியமானது. இப்போதெல்லாம், வங்கி, காப்பீடு, நிதி மற்றும் பொழுதுபோக்குக்கு தொலைபேசி முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும், ஒரு நபர் ஒன்பது இணைப்புகளைக் கொண்டிருக்கலாம்.


மேற்கத்திய நாடுகள் மற்றும் வளர்ந்த பொருளாதாரங்களில், தொலைபேசி இணைப்புகளைப் பெறுவதற்கு கடுமையான விதிகள் மேற்கொண்டுள்ளன. அடையாளச் சான்றாக உங்கள் பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ் அல்லது ஒத்த ஆவணங்களை பொதுவாக வழங்க வேண்டும்.


டாவோஸில் (Davos) நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில், செய்தித்தாள்களிலிருந்து மின்னணு உலகத்திற்கு பரிணாம வளர்ச்சி என்ன மாறிவிட்டது என்பது குறித்து நீங்கள் பேசினீர்கள். அதைப் பற்றி விரிவாகக் கூற முடியுமா?


இன்று, இணையம் வளர்ச்சியடைந்தபோது 1990 களில் நிறுவப்பட்ட பாதுகாப்பான துறைமுகம் (Safe harbour) என்ற கருத்து குறித்த கவலை அதிகரித்து வருகிறது (பாதுகாப்பான துறைமுகம் (Safe harbour) என்பது மூன்றாம் தரப்பு பயனர்களால் வெளியிடப்பட்ட உள்ளடக்கத்திற்கு இணையதளங்கள் முழுப் பொறுப்பாகாது என்பதாகும்).  இப்போது, பரவலான இணைய அணுகல் மற்றும் சமூக ஊடகங்களுடன், உலகெங்கிலும் உள்ள மக்கள் சமூக ஊடக தளங்களை குறிக்கீடுவதற்கு பொறுப்பேற்க வைப்பது பற்றி யோசிக்கிறார்கள்.


ஒரு சமூக ஊடக தளத்தில் ஏதாவது குறிக்கிடப்படும்போது, யார் பொறுப்பு என்பதை தீர்மானிப்பது முக்கியம். இணைய தளம் அல்லது அதை குறுக்கிடும் நபரின் மீறலை, பொறுப்பேற்க ஜனநாயக செயல்முறைகள் சரியான முறையில் பாதுகாக்க உதவுகிறது. 


இந்தியாவில் இந்துக்களுக்கான மனித உரிமைகளுக்கான (Hindus for Human Rights) ’எக்ஸ்’ (முன்னர் ட்விட்டர்) வலைதளத்தை நிறுத்தி வைப்பது மற்றும் இந்தியாவில் இந்துத்துவா கண்காணிப்பு (Hindutva Watch) ஆகியவற்றின் கணக்குகள்  நிறுத்தப்பட்டுள்ள நிகழ்வுகள் நடந்துள்ளன. 


அமெரிக்க-சீன பதட்டங்கள் மற்றும் இரண்டு தனித்தனி மின்னணு உலகங்களின் யோசனை குறித்து, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union) உலகளாவிய தகவல்தொடர்பு தரங்களை நிர்வகிக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்திய தொலைத்தொடர்புகளில் சீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை மட்டுப்படுத்தியிருந்தாலும், சீனா, கொரியா, பின்லாந்து மற்றும் ஸ்வீடன் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து தொலைத்தொடர்பு உபகரணங்கள் வரலாம். நிஜ உலக நிலைமைகளில் 2,000 க்கும் மேற்பட்ட கோபுரங்களை தீவிரமாக சோதித்து வருகிறோம்.


பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited (BSNL)) தனது 4 ஜி வலையமைப்பை விரிவுபடுத்துகிறது. மேலும் இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியம் உள்ளது. தற்போது, மொபைல் போன்கள் தவிர்த்து, தொலைத்தொடர்பு பொருட்களுக்கான ஏற்றுமதி ரூ.9,000 கோடியை நெருங்குகிறது.


ஆதார் போன்ற இந்தியா ஸ்டாக் தொழில்நுட்பங்களை உலகம் முழுவதும் பரப்புவதற்காக பல நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம். இந்த ஏற்பாடுகள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன?


இதற்கு குறிப்பிடத்தக்க ஆதரவு கிடைத்துள்ளது, மேலும் நமது பிரதமரின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவை தெளிவான நீதித்துறை செயல்முறைகள் மற்றும் வெளிப்படையான தரநிலைகளை கொண்ட நம்பகமான ஜனநாயகமாக மாற்றியுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு அடுக்கு (telecom stack) உட்பட இந்தியாவில் இருந்து தயாரிப்புகளை வாங்க பிற நாடுகள் விரும்புகிறார்கள்.


எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் உங்களின் முதன்மையான இராஜதந்திர இலக்குகள் என்ன? தைவானின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி அவர்களுக்கு ஒரு ‘சிலிக்கான் கவசம்’ கொடுக்கிறது, இது சீனாவைத் தாக்குவதைத் தடுக்கிறது. நம்மிடம் இதே போன்ற இராஜதந்திர இலக்குகள் உள்ளதா அல்லது பொருளாதார அல்லது நுகர்வோர் காரணங்களுக்காக உற்பத்தியில் கவனம் செலுத்துகிறதா?


முதலாவதாக, இது ஒரு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. இந்தத் துறையில் 4.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பணிபுரிகின்றனர். இரண்டாவதாக, இது வலுவான கட்டமைப்பு திறன்களை பூர்த்தி செய்கிறது. பல சிக்கலான தயாரிப்புகளுக்கான உலகளாவிய திறன் மையங்களுடன், தயாரிப்பு வடிவமைப்புக்கான முக்கிய மையமாக இந்தியா திகழ்கிறது. இந்தியா ஒரு பின் அலுவலகம் (back office) என்பதை தாண்டி நகர்ந்துள்ளது. அதேசமயம், முதிர்ச்சியடைந்த தயாரிப்பு வடிவமைப்பு சுற்றுச்சூழல் அமைப்பு உள்ளதுடன், உற்பத்தி அதை மேலும் ஆதரிக்கிறது.


தைவான் மற்றும் தென் கொரியாவைப் போலல்லாமல், உற்பத்தியுடன் வலுவான வடிவமைப்பு திறன்களையும் ஏற்கனவே கொண்டுள்ளோம். இந்த மாற்றம் நமக்கு இயற்கையான ஒரு படியாகும்.


உலகின் அதிவேக 5ஜி வெளியீடு இந்தியாவில்தான் உள்ளது. தனியார் தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் (Private telecom operators), ஆன்லைன் சேவை வழங்குநர்கள் தங்கள் பயன்பாட்டிற்கு பணம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த கோரிக்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?


இந்த பிரச்சினைகள் உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகின்றன. உலகம் எந்த திசையில் பயணிக்கும் என்பது இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது. இது விவாதத்தில் உள்ள ஒரு தலைப்பு, இந்த கட்டத்தில் நான் எந்த சார்புநிலையையும் எடுக்க விரும்பவில்லை. 


செயற்கை நுண்ணறிவு டீப்ஃபேக்குகள் (Artificial Intelligence deepfakes) குறித்து, சமூக ஊடக தளங்களுடன் விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. அதற்கான திட்டம் என்ன? 

தற்போது, தேர்தல் நெருங்கி வருவதால், தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுகிறோம். டீப்ஃபேக்குகளைக் (deepfakes) கண்டறிந்து அகற்றுவதாக சமூக ஊடக தளங்கள் உறுதியளித்துள்ளன. டீப்ஃபேக்குகளைக் (deepfakes) கண்டறிவதற்கான தொழில்நுட்பம் ஏற்கனவே இருப்பதால், சமூக ஊடக தளங்கள் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது என்பதால் அவர்களை மிகவும் செயலூக்கத்துடன் செயல்படத் தூண்டுகிறோம்.




Original article:

Share:

சில்லறை கடன் ஒரு கவலை இல்லை, ஆனால் கண்காணிப்பு தேவை

 கடன் வழங்குநர்கள் சில்லறை கடன்களுக்கு (retail loans) மாறுபட்ட வட்டி விகிதங்களை நிர்ணயிக்க வேண்டும். நல்ல சேமிப்பு பழக்கம் மற்றும் நேர்மறையான நிகர மதிப்பு கொண்ட தனிநபர்கள் கடன் பெறாதவர்களை விட மிகவும் சாதகமான விதிமுறைகளில் கடன்களைப் பெற வேண்டும். 

 

இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகள், இந்திய குடும்பங்கள் நிதி சொத்துக்களை வாங்குவதை விட வேகமாக நிதி கடன்களை எடுத்துக்கொள்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. கடன் உந்துதல் செலவினங்களின் (credit-driven spending) எழுச்சி தனியார் நுகர்வு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சிக்கு ஆதரவளித்து வருகிறது. இது இந்திய வங்கிகளுக்கு மேம்பட்ட லாபத்திற்கு வழிவகுக்கிறது. முக்கியமாக சில்லறை கடன் மூலம் இயக்கப்படுகிறது. சில்லறை கடன் அதிகமாக சூடுபிடிக்கிறதா அல்லது தவறான கடன் வாங்குபவர்களை அடைகிறதா என்பதை மதிப்பிடுவதற்கு, ரிசர்வ் வங்கி ஆராய்ச்சியாளர்கள் சமீபத்திய செய்திமடலில் (Bulletin)  ஆழமான பகுப்பாய்வை நடத்தினர்.


சில்லறை கடன்களின் (retail loans) சமீபத்திய விரிவாக்கம் அசாதாரணமானது அல்ல என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. கடந்த 12 ஆண்டுகளில் வங்கிகளின் சில்லறை கணக்குகளில் (Banks’ retail books) 16.1% வளர்ச்சி விகிதம் உள்ளது. இது முந்தைய 12 ஆண்டு வளர்ச்சியான 26.4% ஐ விட குறைவாக உள்ளது. வங்கிகளின் சில்லறை கணக்குகள் (retail books) நன்கு பன்முகப்படுத்தப்பட்டுள்ளன. வீட்டுக் கடன்கள், சில்லறை கடனில் பாதிக்கும் குறைவாகவே உள்ளன. அதே நேரத்தில் பாதுகாப்பற்ற கிரெடிட் கார்டு (unsecured credit card), நீடித்த மற்றும் பிற கடன்கள் கிட்டத்தட்ட 35% ஆகும். கொரோனாவுக்கு முன்னும் பின்னும் உள்ள போக்குகளைப் பார்க்கும் பகுப்பாய்வு, தொற்றுநோய்க்குப் பிந்தைய தனிநபர் கடன்கள், நீடித்த மற்றும் வாகனக் கடன்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது. அதே நேரத்தில் வீட்டுக் கடன் வளர்ச்சி குறைந்துள்ளது. பாதுகாப்பற்ற கடன் கொடுப்பதில் ஏற்றம் இருந்தபோதிலும்கூட, கடுமையான கடன் மதிப்பெண் மற்றும் குறைந்த குற்றங்களை எடுத்துக் கொண்டால், வங்கிகள் சில்லறை கடன் வாங்குபவர்களை பின்தொடர்வதில் குறிப்பிடத்தக்க ஆபத்துக்களை எதிர்கொள்ளவில்லை என்று ஆய்வு முடிவு செய்கிறது.


சில்லறை கடன் நிலையானதாகத் தோன்றுகிறது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் கவலைகள் உள்ளன. வீட்டுக் கடன்களில் இருந்து தனிப்பட்ட, நீடித்த மற்றும் வாகனக் கடன்களுக்கு மாறுவது, மக்கள் சொத்து உருவாக்கத்தை விட வாழ்க்கை முறைக்காக அதிகம் கடன் வாங்குவதைக் குறிக்கிறது. இந்த நுகர்வோர் கடன் போக்கு வீட்டு வரவு செலவுத் திட்டங்களைக் கடினப்படுத்தக்கூடும். கண்காணிப்பு தேவை, ஆனால் இந்தியாவின் வீட்டு சேமிப்பு தரவு ஒரு வருட பின்னடைவைக் கொண்டுள்ளது. சில்லறை கடன் வழங்குவதில் வங்கிகளை விட வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் (Non-Banking Financial Company (NBFC)) ரிசர்வ் வங்கி அதிக கவனம் செலுத்துகிறது. ஆனால் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் விரிவான ஆய்வு இல்லை. சில்லறை கடன் வாங்குபவர்களை மதிப்பிடுவதற்கு கடன்-சேவை விகிதம் (debt-service ratio) மற்றும் கடனுக்கு-வருமான விகிதம் (debt-to-income ratio) போன்ற விரிவான அளவீடுகளுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.


இது ஒரு சிறந்த யோசனையாகும், ஏனெனில் தற்போதைய கடன் முடிவுகள் கடன்-மதிப்பு (loan to-value), வருடாந்திர வருமான மடங்குகள் மற்றும் கிரெடிட் ஸ்கோர் (credit scores) போன்ற அடிப்படை காரணிகளை நம்பியுள்ளன. நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number(PAN)) மட்டத்தில் ஒரு தனிநபரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை ஒருங்கிணைக்கும் கணக்கு திரட்டி சேவைகளை (account aggregator services) அறிமுகப்படுத்துவதன் மூலம், கடன் வழங்குநர்கள் மற்றும் கடன் வாங்குபவர்கள் இருவரும் தனிப்பட்ட இருப்புநிலைகளை தவறாமல் மதிப்பாய்வு செய்ய ஊக்குவிக்கப்படலாம். கடன் வழங்குநர்கள் சில்லறை கடன்களின் விலையை சரிசெய்ய வேண்டும், இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது சிறந்த சேமிப்பு பழக்கம் மற்றும் நேர்மறையான நிகர மதிப்பு கொண்ட நபர்களுக்கு சிறந்த விதிமுறைகளை வழங்க வேண்டும்.




Original article:

Share:

சரக்கு மற்றும் சேவை வரி (GST) மேல் வரி (cess) ஒரு நல்ல வாய்ப்பு -ஏ.கே.பட்டாச்சார்யா

 இழப்பீட்டு மேலவரியை (compensation cess) முன்கூட்டியே நிறுத்துவதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் பயனடைய வேண்டும்.


2017 ஜூலையில் சரக்கு மற்றும் சேவை வரி (goods and services tax (GST)) அமல்படுத்தப்பட்டது.  இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரியின்  செயல்திறன் கடந்த சில ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில், 2018-19 ஆம் ஆண்டில், சரக்கு மற்றும் சேவை வரி  வசூல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (gross domestic product (GDP) சுமார் 6.22 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக, சரக்கு மற்றும் சேவை வரியானது  சவால்களை எதிர்கொண்டது. இது, இரண்டு சுற்று வரிவிகிதக் குறைப்புகளும் இதில் அடங்கும். இதற்கான கட்டணங்கள் எளிமையாக்கப்படவில்லை அல்லது எண்ணிக்கையில் சரியாக குறைக்கப்படவில்லை. இதில், கோவிட் தொற்றுநோயும் பாதிப்பின் முக்கிய காரணமாக அமைந்தது. இதில், சவால்கள் இருந்தபோதிலும், சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் அதிகரித்துள்ளது. 2021-22 ஆம் ஆண்டில், அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.3 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு, இதற்கான வரிவசூல் 6.6 சதவீதமாக உயர்ந்ததுள்ளது. 2023-24 ஆம் ஆண்டின் முதல் பாதியில், வரிவசூல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 7 சதவீதத்தை எட்டியது.


இந்தியாவின் மொத்த வரி வருவாயை விட சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் வேகமாக மீண்டுள்ளது. 2018-19 ஆம் ஆண்டில், மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வரி வசூல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 17.35 சதவீதமாக இருந்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2022-23 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை சற்று குறைவாக 17.13 சதவீதமாக இருந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளை விட சரக்கு மற்றும் சேவை வரிக்கான  வசூல் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு பொருளாதார வளர்ச்சியால் மட்டும் ஏற்பட்டதல்ல, வரி செலுத்துவோரின் மிண்ணனு கண்காணிப்பு மற்றும் வரி தளத்தை விரிவுபடுத்துவதன் மூலம் வரிவசூலிப்பதில் மேம்பட்ட செயல்திறன் முக்கிய காரணமாகும். இந்த செயல்திறன் வரி செலுத்துவோரை மிண்ணனு முறையில் கண்காணிப்பதன் மூலமும், வரி செலுத்தும் நபர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதன் மூலமும் இது பயனுள்ளதாக உள்ளது.


இருப்பினும், அரவிந்த் சுப்பிரமணியன் மற்றும் பலர் சுட்டிக்காட்டியபடி, உண்மையான வரிவசூல் மொத்த சாத்தியமான வருவாயை விட சற்று குறைவாக உள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 முதல் 0.7 சதவீதம் வரை குறைவாக உள்ளது. இந்த வேறுபாடு முக்கியமாக பணத்தைத் திரும்பப் பெறுவதால் ஏற்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி (GST) அமைப்பில், ஏற்றுமதிக்கான வரி விதிக்கப்படுவதில்லை. எனவே, ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அல்லது சேவைகளுக்கு செலுத்தப்படும் எந்தவொரு சரக்கு மற்றும் சேவை வரி (GST) பணத்தைத் திரும்பப் பெறுகிறது. 


இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (GST) கட்டமைப்பில் பணத்தைத் திரும்பப்பெறும் பிரச்சினை முக்கியமானது மற்றும் விரைவான தீர்வு தேவை. இருப்பினும், இந்த பிரச்சினை சரக்கு மற்றும் சேவை வரியின் (GST) ஒட்டுமொத்த நல்ல செயல்திறனை பெரிதும் பாதிக்காது. வரி விகிதங்களை மிகவும் தீவிரமானதாக மாற்றுவது போன்ற பிற முக்கியமான சீர்திருத்தங்களும் விரைவாக செய்யப்பட வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளில் மறைமுக வரியின் வெவ்வேறு பகுதிகள் எவ்வாறு செயல்பட்டன என்பதை மதிப்பாய்வு செய்வது மிக முக்கியம். சரிசெய்யப்பட வேண்டிய கணினியில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்பதை நாம் சரிபார்க்க வேண்டும்.


இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) நான்கு பிரிவுகளின் கீழ் சேகரிக்கப்படுகிறது. இவை மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (central goods and services tax(CGST)), மாநில பொருட்கள் மற்றும் சேவை வரி (state goods and services tax(SGST)), இழப்பீட்டு மேல்வரி (compensation cess) மற்றும் ஒருங்கிணைந்த  சரக்கு மற்றும் சேவை வரி (integrated goods and services tax(IGST)). ஒருங்கிணைந்த  சரக்கு மற்றும் சேவை வரி (IGST) இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒரு பகுதி இறக்குமதிக்காகவும், மற்றொன்று மாநிலங்களுக்கு இடையிலான விற்பனைக்காகவும் உள்ளது. 2022-23 முழு ஆண்டிற்கான தரவுகளின்படி, மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (GST) வருவாயில் பாதிக்கும் சற்று அதிகமாக 52 சதவீதமாக ஒருங்கிணைந்த  சரக்கு மற்றும் சேவை வரி (IGST) உள்ளது. 


மாநில அளவில் 23 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூலிக்கப்படுகிறது. மற்றொரு 18 சதவீதம் மத்திய அளவில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரியில் (CGST) இருந்து வருகிறது. மீதமுள்ள, சுமார் 7 சதவீதம், இழப்பீட்டு செஸில் (compensation cess) இருந்து வருகிறது. இந்த சரக்கு மற்றும் சேவை வரிக்கான (GST) கூறுகளின் பங்குகள் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் நிலையானதாக உள்ளன.


இந்த சரக்கு மற்றும் சேவை வரி (GST) பாகங்கள் எவ்வாறு செயல்பட்டன என்பதில் இருந்து மூன்று முக்கியமான கருத்துகணிப்புகள் உள்ளன. முதலாவதாக, மாநில பொருட்கள் மற்றும் சேவை வரி (SGST) வசூல்கள் பொதுவாக மத்திய அளவில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரியில் (CGST) வசூலை விட அதிகமாக இருக்கும். இது, ஏனென்றால் ஒரு பொதுவான ஆண்டில், அவற்றின் சேமிப்புகள் இணையாக இருக்க வேண்டும். ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST) வசூலுக்கான வரிப் பலன்களைக் கையாள்வதில் தாமதம் இருப்பதாகத் தெரிகிறது. இந்த தாமதங்கள் ஏற்றுமதி வரி திரும்பப்பெறுதல் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான விற்பனைக்கான வரி வரவுகள் இரண்டையும் பாதிக்கின்றன. இதை சரிசெய்ய, சரக்கு மற்றும் சேவை வரி (GST) இணைய ஏற்றுமதி பணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான விற்பனை வரி வரவுகள் குறித்த தரவை வழங்க வேண்டும். இது சிக்கலைப் புரிந்து கொள்ளவும் சரிசெய்யவும் உதவும்.


இரண்டாவது கருத்து இறக்குமதி மீதான ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST) பற்றியது. இரண்டு ஆண்டுகளாக குறைந்து வந்த இந்த வசூல் 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளில் நிறைய அதிகரித்துள்ளது. ஆனால் 2023-24 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இந்த வளர்ச்சி குறைந்தது. அதே நேரத்தில், மாநிலங்களுக்கு இடையேயான விற்பனையில் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST) வசூல் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில், சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் முக்கியமாக இறக்குமதி மீதான ஒருங்கிணைந்த  சரக்கு மற்றும் சேவை வரி (IGST) காரணமாக அதிகரித்தது. இப்போது, ​​சரக்கு மற்றும் சேவை வரி (GST) உள்ளார்ந்த மதிப்புக்கு வரவேற்கத்தக்க அறிகுறியாகும்.


மூன்றாவது கருத்து இழப்பீட்டு வரி பற்றியது. இது தொடர்ந்து மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூலில் 7 சதவீதமாக உள்ளது. ஏப்ரல் 2026 இல் இந்த வரியை எப்படிக் கையாள்வது என்பதை சரக்கு மற்றும் சேவை வரி (GST) கவுன்சில் விரைவில் முடிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை இது சுட்டிக்காட்டுகிறது.


2022-23 ஆம் ஆண்டில், இழப்பீடு செஸ் மூலம் மோட்டார் வாகனங்கள், காற்றோட்டமான நீர், நிலக்கரி மற்றும் பான் மசாலா போன்ற குறைபாடுள்ள பொருட்களின் விற்பனையிலிருந்து சுமார் 1.26 டிரில்லியன் வசூலிக்கப்பட்டது. இது கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அவர்கள் அதை நிறுத்தலாம் அல்லது தற்போதைய வரி அமைப்பில் சேர்க்கலாம். மேல்வரியை (cess)   நிறுத்தினால் இந்த பொருட்களுக்கான வரி குறைக்கப்படும். இது அவர்களுக்கு தேவை அதிகரிக்கலாம். தற்போதைய அமைப்பில் சேர்க்கப்பட்டால், மேல்வரி (cess) மூலம் கிடைக்கும் பணம் காலநிலை மாற்ற திட்டங்களுக்கு நிதியளிக்கும். எந்தவொரு முடிவும் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பயனளிக்கக்கூடிய விரைவான முடிவு தேவை.


முதலில் ஜூன் 2022 வரை ஐந்து ஆண்டுகளுக்கு மேல்வரி (cess) நிர்ணயிக்கப்பட்டது. அதன் நோக்கம் 2015-16 உடன் ஒப்பிடும்போது மாநிலங்களின் வருவாய் வளர்ச்சி 14 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் மநிலங்களுக்கு உதவுவதாகும். ஆனால் கோவிட் தொற்றுநோய் காரணமாக, 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில் மேல்வரி (cess) போதுமான அளவு வசூலிக்கப்படவில்லை. எனவே, இரண்டு பகுதிகளாக சுமார் 2.7 டிரில்லியன் கடன் வாங்க மத்திய அரசு சிறப்பு ஒப்பந்தம் செய்துகொண்டது.


இந்த கடன் வாங்கிய பணம் ஜூன் 2022 வரை இந்த மாநிலங்களுக்கு உதவியது. பின்னர் இழப்பீட்டு வழிமுறை முடிவுக்கு வந்தது. ஆனால் மேல்வரி (cess) 2026 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டது. ஜூலை 2022 முதல் வசூலிக்கப்படும் பணம் மத்திய அரசு கடனை அடைக்க உதவும். மேலும், இது ஜூலை 2022 முதல் டிசம்பர் 2023 வரையிலான வசூலானது சுமார் 2 டிரில்லியன் ஆகும். ஜனவரி 2024 முதல் மார்ச் 2026 வரை எதிர்பார்க்கப்படும் வசூல் சுமார் 3.24 டிரில்லியன் ஆகும். அதாவது மார்ச் 2026க்கு முன் மத்திய அரசு கடனைத் திருப்பிச் செலுத்த முடியும். சரக்கு மற்றும் சேவை வரி (GST) கவுன்சிலுக்கு இப்போது மேல் வரியை (cess) முன்னதாகவே நீக்க வாய்ப்பு உள்ளது. மேல் வரியின் (cess) எதிர்காலம் குறித்து கவுன்சில் விரைவாக முடிவெடுக்க இது மற்றொரு காரணமாக பார்க்கப்படுகிறது.




Original article:

Share:

வெளிநாட்டு மாணவர்களுக்கு கனடா ஏன் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, இந்தியர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் ? - ராகி ஜக்கா

 குறைவான விசாக்கள் (Fewer visas) என்பது குறைவான இந்திய மாணவர்கள் கல்லூரி பட்டப்படிப்புக்காக கனடாவுக்குச் செல்ல முடியும் என்பதாகும். 


வரும் கல்வி அமர்வில் தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சர்வதேச மாணவர் விசாக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதாக கனடாவின் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடு காரணமாக குறைவான இந்திய மாணவர்கள் தங்கள் கல்லூரி படிப்புக்காக கனடா செல்ல முடியும்.


சர்வதேச மாணவர் விசாக்களின் எண்ணிக்கையை கனடா எவ்வளவு குறைக்கிறது?


கனடாவின் குடியுரிமைத் துறை அமைச்சர் மார்க் மில்லர் சமீபத்தில் அகதிகள் மற்றும் குடியுரிமை  பற்றி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்:

1. செப்டம்பர் 1, 2024 இல் தொடங்கும் கல்வி ஆண்டில், புதிய சர்வதேச மாணவர் அனுமதிகளின் எண்ணிக்கை 2023 எண்ணிலிருந்து 35% குறைக்கப்படும்.


2. இதன் பொருள் இந்த ஆண்டு சுமார் 3,60,000 படிப்புகள் அனுமதிகள் அங்கீகரிக்கப்படும், மேலும் அவை மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு அவற்றின் நியமிக்கப்பட்ட கற்றல் நிறுவனங்களுக்கு ((Designated Learning Institutions(DLIs)) விநியோகிக்கப்படும்.


3. ஏற்றுக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு மாகாணங்கள் சான்றளிப்புக் கடிதங்களை வழங்கும், மேலும் இது மார்ச் 31 வரை புதிய படிப்பு அனுமதி விண்ணப்பங்களை இடைநிறுத்தும், ஏனெனில் மாகாணங்கள் தங்கள் அமைப்புகளை வைக்கின்றன.


4. 2025 ஆம் ஆண்டிற்கான படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை தீர்மானிக்க அவர்கள் ஆண்டின் இறுதியில் நிலைமையை மதிப்பாய்வு செய்வார்கள், மேலும் அனுமதிகள் மீதான இந்த வரம்பு நிரந்தரமானது அல்ல.


5. முதுகலை பணி அனுமதி திட்டத்தில் (Post-Graduation Work Permit Program (PGWP)) மாற்றங்களையும் மில்லர் அறிவித்தார். இது சர்வதேச மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு கனடாவில் வேலை செய்ய அனுமதிக்கிறது.


6. செப்டம்பர் 2024 முதல், பாடத்திட்ட உரிம ஏற்பாடுகளின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு முதுகலை பணி அனுமதிகள் வழங்கப்படாது.


7. வரவிருக்கும் வாரங்களில், முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளைத் தவிர, சர்வதேச மாணவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு பணி அனுமதி வழங்கப்படாது. மருத்துவம் மற்றும் சட்டம் போன்ற தொழில்முறை படிப்புகளைத் தொடர்பவர்களுக்கு விலக்கு அளிப்பதிலும் அவர்கள் செயல்படுவார்கள்.


சர்வதேச மாணவர்களின் வருகையைக் கட்டுப்படுத்த கனடா ஏன் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது?


கனடாவில் நிலையான அளவிலான தற்காலிக குடியிருப்பை உறுதி செய்வதற்காக சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டும் என்று கனடிய அமைச்சர் மார்க் மில்லர் கூறினார். சர்வதேச மாணவர்கள் கனடாவில் வெற்றிபெற தேவையான வளங்கள் இருப்பதை உறுதிப்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள்.


கடந்த மாதம், கனேடிய அரசாங்கம் 2024 ஆம் ஆண்டு தொடங்கி, சர்வதேச மாணவர்கள் படிப்பு அனுமதிக்குத் தகுதி பெற கல்விக் கட்டணத்துடன் கூடுதலாக $20,000 முந்தைய தேவையை விட இரு மடங்காக இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்று அறிவித்தது.


முன்னாள் குடிமைத்துறை மந்திரியான சீன் ஃப்ரேசர், சில சமூகங்கள் கையாளக்கூடியதை விட மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது, அதனால்தான் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன என்று விளக்கினார்.


நேர்மையற்ற தனிநபர்கள் சர்வதேச மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்வதாகவும், இதனால் அவர்கள் தவறாக பயன்படுத்துதல் மற்றும் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த புதிய நடவடிக்கைகள் அமைப்பின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதையும் நிலையான வளர்ச்சியை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.


முதுகலை பணி அனுமதி திட்டத்திலிருந்து பொது-தனியார் நிறுவனங்களை விலக்குவது குறித்து, இந்த திட்டங்கள் பெரும்பாலும் மேற்பார்வை இல்லாதவை மற்றும் கனடா அறியப்பட்ட உயர்தர கல்வி அனுபவத்தை வழங்காது என்று அமைச்சர் விளக்கினார்.


மொன்றியல் இளைஞர் மாணவர் அமைப்பின் (Montreal Youth Students Organisation) அழைப்பாளரான மன்தீப், கனடாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புகளுடன் வீட்டு நெருக்கடி உள்ளது என்று சுட்டிக்காட்டினார். தரமற்ற கல்வியை வழங்கும்போது தனியார் கல்வி நிறுவனங்கள் அதிக கல்விக் கட்டணம் வசூலிப்பதாகவும் சில மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


இந்த முடிவுகளால் குறிப்பாக யார் பாதிக்கப்படுவார்கள்? இதனால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?


மாணவர் அனுமதிகளில் இரண்டு ஆண்டு வரம்பு இளங்கலை படிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும், அதே நேரத்தில் முதுகலை, பிஎச்டி மற்றும் தொடக்க / இடைநிலைப் பள்ளி அளவிலான திட்டங்கள் பாதிக்கப்படாது. 


இந்த கட்டுப்பாடுகள் புதிய விண்ணப்பதாரர்களை பாதிக்கின்றன; ஏற்கனவே கனடாவில் படிக்கும் மாணவர்கள், இளங்கலை அல்லது பிற படிப்புகளில் இருந்தாலும், பாதிக்கப்படுவதில்லை.


விசா உச்சவரம்பு முதன்மையாக இந்திய மாணவர்களை பாதிக்கும். குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை கனடாவின் (Immigration, Refugees and Citizenship Canada (IRCC)) தரவு, பெரும்பாலான மாணவர் விசாக்கள் ஆசியாவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்குச் செல்கின்றன, பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், சீனாவைத் தொடர்ந்து வருகின்றன.


பஞ்சாபைச் சேர்ந்த மாணவர்களுக்கு கனடா ஒரு பிரபலமான தேர்வாகும். அவர்கள் பெரும்பாலும் தங்கள் படிப்பைத் தொடங்கிய உடனேயே அல்லது தற்காலிக வேலைகளைப் பெற்றவுடன் தங்கள் வாழ்க்கைத் துணையை மனைவி விசாவில் அழைத்து வருகிறார்கள். புதிய விதிகளின் கீழ், முதுகலை அல்லது முனைவர் திட்டத்தில் சேர்ந்தால் மட்டுமே வாழ்க்கைத் துணைவர்களுக்கு திறந்த வேலை அனுமதி வழங்கப்படும்.


குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை கனடாவின் தரவுகளின்படி, சர்வதேச மாணவர் எண்ணிக்கை 3,26,000 இல் தோராயமாக 2014 இலிருந்து 8,00,000 இல் 2022 ஆக அதிகரித்துள்ளது. டிசம்பர் 2023 இறுதிக்குள், ஒரு மில்லியனுக்கும் அதிகமான படிப்பு அனுமதி வைத்திருப்பவர்கள் இருந்ததாகவும், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒன்ராறியோவில் (Ontario) வசிப்பதாகவும் சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, 1.4 மில்லியன் பணி அனுமதி வைத்திருப்பவர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 




Original article:

Share: