இந்திய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை (Indian Defence University) செயல்படுத்துவதற்கான நேரம் இது - கரம்பீர் சிங்

 போரின் தன்மை மாறாததாக இருந்தாலும், அதன் மாறிவரும் தன்மையானது இராணுவக் கல்வி (military education) மற்றும் பாதுகாப்பு சவால்களை சமாளிக்க தேவையான கல்விசார் முன்னேற்பாடு (academic preparation) ஆகியவற்றின் மீது அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறது.


பண்டைய கிரேக்க சிந்தனையாளரான துசிடிடிஸ் (Thucydides), “எந்த நாடு அதன் அறிஞர்களுக்கும் அதன் வீரர்களுக்கும் இடையே ஒரு வேறுபாட்டை ஏற்படுத்துகிறதோ, அதன் சிந்தனை கோழைகளாலும் போர் முட்டாள்களாலும் செய்யப்படும்” என்று குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. பல நாடுகள் தங்கள் ஆயுதப் படைகளை புத்திசாலித்தனமாக மாற்ற பாதுகாப்பு பல்கலைக்கழகங்களைக் (defence universities) கொண்டுள்ளன. உதாரணமாக, இந்த பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள், பாகிஸ்தானில் இரண்டும், சீனாவில் மூன்றும் உள்ளன. ஆனால், ஒர் அறிக்கையானது சீனாவில் 60 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இராணுவத்துடன் இணைக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறது. ஆனால், இந்தியாவுக்கு இன்னும் அதன் சொந்தமாக பாதுகாப்பு பல்கலைக்கழகம் இல்லை, இது மேலும் கவலையளிக்கிறது.


தொழில் வல்லுநர்களுக்கான இராணுவக் கல்வி


போரின் தன்மையானது, எப்போதும் ஒரே மாதிரியானது. ஆனால், அது தற்போது மிகவும் சிக்கலானதாகி வருகிறது. இராணுவக் கல்வியும், அதனுடன் தொடர்புடைய பயிற்சியும் முக்கியமானதாக்க வேண்டும். இது இன்றைய, போர்கள் குறிப்பாக ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில், கணிக்க முடியாத மற்றும் குழப்பமான தன்மையை கொண்டுள்ளது. நிச்சயமற்ற தகவல்கள் மற்றும் வேகமாக மாறிவரும் சூழ்நிலைகளில் கூட இராணுவ அதிகாரிகள் முடிவுகளை வழங்க வேண்டும். அவர்கள் ஒரு கட்டமைக்கப்பட்ட தொழில் வல்லுநர்களுக்கான இராணுவக் கல்வி (Professional Military Education (PME)) அமைப்பு மூலம் அதிகாரமளிக்கப்படுகிறார்கள். இந்த கல்வியானது அவர்களின் தொழில்வல்லுநர்களின் வாழ்க்கை முழுவதும் வெவ்வேறு தலைமைகளையும் அதிக பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்வதால் அவர்களின் திறன்களை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் கட்டமைக்கப்பட்ட தொழில் வல்லுநர்களுக்கான இராணுவக் கல்வி (Professional Military Education (PME)) எவ்வாறு மாறிவிட்டது என்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். ஏனெனில், இது போர்கள் காட்சிபடுத்துதலில் இந்தியா என்ன செய்ய விரும்புகிறதோ அதைப் போன்றது. கோல்ட்வாட்டர்-நிக்கோல்ஸ் பாதுகாப்பு மறுசீரமைப்புச் சட்டம் (Goldwater-Nichols Defense Reorganization Act), 1986 பரந்த அளவிலான கட்டமைப்புச் சீர்திருத்தங்களைக் (wide-ranging structural reforms) கொண்டுவரும்போது, அமெரிக்க இராணுவத்தின் தொழில்வல்லுநரான 'ஐக்' ஸ்கெல்டன் என்பவர் தொழில்முறை இராணுவக் கல்விக்கு பெரும் அளவில் பங்களித்தார். மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் அளித்த அறிக்கையானது அமெரிக்க ஆயுதப் படைகளில் இராணுவக் கல்வியை கணிசமாக சீர்திருத்த உதவியது. கல்வி நிறுவனங்களில் குறிப்பிட்ட கற்றல் சார்ந்த இலக்குகளில் பாதுகாப்புத் துறை கவனம் செலுத்த வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைத்தது. இதில், கல்விக்கான தெளிவான இலக்குகள், சிறந்த ஆசிரியர்கள், கூட்டு அதிகாரிகளுக்கு இரண்டுகட்ட அமைப்பு பயிற்சி மற்றும் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இராஜதந்திரத்திற்கான ஆய்வுகளுக்கு ஒரு புதிய நிறுவனம் ஆகியவற்றை அது பரிந்துரைத்தது. இது முக்கியமானது, ஏனென்றால் இந்தியா தனது இராணுவ பயிற்சியுடன் என்ன செய்ய விரும்புகிறதோ அதைப் போன்றது.


மெதுவான முன்னேற்றம்


இந்திய ஆயுதப்படைகளுக்கு கல்வியில் சிறந்து விளங்குவதில் தொடங்கி வலுவான கல்வி முறை தேவைப்படுகிறது. குறிப்பாக, இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 1967 ஆம் ஆண்டு தலைமைப் பணியாளர் குழுவினால் பாதுகாப்புச் சேவைகள் பல்கலைக்கழகத்திற்கான (Defence Services University) யோசனை பரிந்துரைக்கப்பட்டது. பின்னர், 1982 இல், பணியாளர் குழுவின் தலைவர்களால் (Chiefs of Staff Committee(COSC)) உருவாக்கப்பட்ட ஒரு ஆய்வுக் குழு, இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (Indian Defence University (IDU)) போன்ற ஆயுதப் படைகளுக்கு ஒரு சிறந்த கல்வி நிறுவனத்தை நிறுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.


சுமார், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, கார்கில் மோதலை அடுத்து, இதைப் பற்றி ஆராய டாக்டர் கே.சுப்பிரமணியம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, மே 2010 இல், குர்கானில், இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (Indian Defence University in Gurgaon) அமைக்க தற்காலிக ஒப்புதல் கிடைத்தது. 2017-18-ஆம் ஆண்டில் சில சாதகமான அறிக்கைகள் இருந்தபோதிலும், இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை (Indian Defence University(IDU)) நிறுவுவதற்கான முன்னேற்றம் மெதுவாக உள்ளது.


இந்தியாவின் ஆயுதப் படைகளால் நடத்தப்படும் பல உலகத் தரம் வாய்ந்த பயிற்சி மற்றும் கல்வி நிறுவனங்கள், தொழில்வல்லுநர்கள் பயிற்சியின் வளமான மற்றும் பரந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகின்றன. இருப்பினும், அவர்களுக்கு ஒருங்கிணைந்த தொழில் வல்லுநர்களுக்கான இராணுவக் கல்வி (Professional Military Education (PME)) கட்டமைப்பு மற்றும் இராஜதந்திர சிந்தனைக்கான பல ஒழுங்குமுறை அணுகுமுறைகள் இல்லை. பட்டப் படிப்புகளுக்கான பல்கலைக்கழகங்களுடன் ஆயுதப் படைகள் இணைந்திருந்தாலும், இது உகந்த தீர்வாகாது. இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகமானது (IDU) இந்தியாவின் தொழில் வல்லுநர்களுக்கான இராணுவக் கல்வி (PME) அமைப்பில் உள்ள இத்தகைய குறைபாடுகளை இராணுவம் மற்றும் சிவில் சேவைகளில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளுடன் நன்கு தகுதியான ஆசிரியர்களின் மூலம் உயர் இராணுவக் கல்வியின் மைய நிறுவனத்தை வழங்குவதன் மூலம் நிவர்த்தி செய்யும். உண்மையில், இந்தக் கோட்பாட்டை நடைமுறையுடன் இணைக்கும்.


பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் அதன் கல்லூரிகள் மற்றும் அதன் மூலம் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களிடையே வேறுபடும். ஆனால், அறிவியல் மற்றும் மனிதநேயம் ஆகிய இரண்டிலும் தேசிய பாதுகாப்பு (national security) மற்றும் இராணுவம் (defence) தொடர்பான பல்வேறு பாடங்களை உள்ளடக்க வேண்டும்.


இது சரியான யோசனை 


இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (IDU) நீண்ட காலத்திற்கு முன்பே அமைக்கப்பட்டிருக்க வேண்டும். குஜராத்தில், ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகம் (Rashtriya Raksha University (RRU)) நிறுவப்பட்டதால், எங்களுக்கு இனி இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (IDU) தேவையில்லை என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்த ஒப்பீடு நியாயமானதல்ல, ஏனெனில் இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (IDU) மற்றும் ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகம் (RRU) ஆகியவை வேறுபட்டவை. ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகமானது (RRU), இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (IDU) செய்வதைப் போல பாதுகாப்புக் கல்வியில் கவனம் செலுத்தவில்லை. மேலும், அதன் பாடத்திட்டம் போர் மற்றும் திட்டங்களை நிர்வகிப்பதற்கான இராணுவத் தேவைகளைப் பற்றியது மட்டுமல்ல.


இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை (IDU) தாமதப்படுத்துவது என்பது பாதுகாப்பு, இராஜதந்திர கலாச்சாரம் மற்றும் இராணுவ சேவைகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கு நாம் தயாராக இல்லை என்பதாகும். நாம் விரைவில் இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை (IDU) ஆரம்பிக்க வேண்டும். அதையொட்டி கூட்டு இராணுவக் கல்வியை ஆரம்பிக்க முடியும் மற்றும் எதிர்காலத்திற்கு தயாராக இருக்க உதவும்.


அட்மிரல் கரம்பீர் சிங், PVSM, AVSM, இன் (ஓய்வு), கடற்படையின் 24 வது தலைவராகவும், புதுடெல்லியின் தேசிய கடல்சார் அறக்கட்டளையின் முன்னாள் தலைவராகவும் இருந்தார்.




Original article:

Share:

செல்வந்தர்களை ஏழைகளாக்காமல் ஏழைகளை செல்வந்தர்களாக்குங்கள் -பிரவீன் சக்ரவர்த்தி

 கடந்த இருபது ஆண்டுகளில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு இந்தியாவில் மட்டுமல்ல,  உலகம் முழுவதும் காணப்படுகிறது.


காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை ஏப்ரல் 5ஆம் தேதி வெளியிட்டது. அன்றிலிருந்து இன்று வரை, தேர்தல் விவாதங்களில் 'மறுபகிர்வு' (‘redistribute’) என்ற வார்த்தை அதிகமாக பேசப்பட்டு வருகிறது. செல்வத்தை மறுபங்கீடு செய்ய வேண்டும் என்று தேர்தல் அறிக்கை கூறுவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார். மக்களிடமிருந்து தங்கம் மற்றும் தாலியை எடுத்துக்கொள்வது, புதிய வரிகளைச் சேர்ப்பது மற்றும் ஏழை சிறுபான்மையினருக்கு இவற்றை வழங்குவது ஆகியவை அடங்கும் என்று அவர் கூறுகிறார். இருப்பினும், தேர்தல் அறிக்கையில் உண்மையில் 'மறுபகிர்வு' (‘redistribute’), 'தாலி’ (mangalsutras’) அல்லது 'செல்வ வரி' (‘wealth tax’) குறிப்பிடப்படவில்லை. இது 48 பக்கதேர்தல் அறிக்கையில் இந்த வார்த்தைகளில் ஒன்று கூட இடம் பெறவில்லை.  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தலில், இல்லாத வார்த்தைகள் அதிகம் பேசப்படுகிறது.

 

இது இந்தியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளியைப் பற்றி விவாதத்தைத் தூண்டியுள்ளது. இந்த இடைவெளி கடந்த இருபது வருடங்களாக இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் அதிகமாகிவிட்டது. இதற்கு எந்த அரசியல் கட்சி காரணம் என்று விவாதிப்பது பலனளிக்காது. சமூகத்தை அனைவருக்கும் சமமானதாகவும், நியாயமானதாகவும் மாற்றுவது எப்படி என்பதைக் கண்டறிவதே முக்கியம்.


பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை இரண்டு வழிகளில் தீர்க்கலாம்:


பணக்காரனை ஏழையாக்குதல்: இதன் பொருள் பணக்காரனின் செல்வத்தைக் குறைப்பது.


ஏழைகளை பணக்காரர் ஆக்குதல்: இது ஏழைகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதாகும். மாற்றாக, இரண்டு அணுகுமுறைகளின் கலவையும் பயன்படுத்தப்படலாம்.


 பணம் நிலையானது என்று நினைக்கிறீர்களா அல்லது எல்லோரும் பயனடையும் அளவுக்கு வேகமாக வளராது என்று நினைக்கிறீர்களா? ஆம் என்றால், சமூக செயல்பாட்டாளர்கள் பரேட்டோ கொள்கை ("Pareto Optimum") என்ற கருத்தை குறிப்பிடுகின்றனர். இந்த கருத்தின் படி, மற்றவரை மோசமாக்காமல் ஒருவரை மேம்படுத்துவது சாத்தியமில்லை. வளர்ந்த நாடுகள் (மெதுவான வளர்ச்சியுடன்) பெரும்பாலும் சமத்துவமின்மையைக் குறைக்க இந்தப் பாதையைப் பின்பற்றுகின்றன. வேகமாக வளரக்கூடிய வளரும் நாடுகள், மாற்று அணுகுமுறையைக் கொண்டுள்ளன. அவர்கள் Pareto Optimum-ஐ கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த சிந்தனை வேறுபாடு சமூகங்கள் சமத்துவமின்மையை எவ்வாறு நிவர்த்தி செய்கின்றன என்பதை எடுத்து காட்டுகிறது.

 

சுருக்கமாக, செல்வத்தை சமமாக்குவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமா அல்லது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டுமா என்பதைச் சுற்றியே விவாதம் நடைபெறுகிறது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் அவற்றின் வளர்ச்சி விகிதங்கள் மற்றும் தத்துவக் கண்ணோட்டங்களின் அடிப்படையில் தங்களுக்கான பாதைகளை தேர்வு செய்கின்றனர். 


'அமைப்பை சரி செய்யுங்கள்'


செல்வ வரி (wealth tax) என்ற கருத்து செல்வத்தை மிகவும் பணக்காரர்களிடமிருந்து ஏழைகளுக்கு மறுபகிர்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த யோசனை பொருளாதார சமத்துவமின்மையைக் குறைக்கும் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா போன்ற நாடுகளில் உள்ள செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தை நியாயமாக சம்பாதித்தார்களா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அவர்களின் செல்வம் தவறாக சம்பாதித்திருக்கலாம் என்பதற்காக வரி விதிப்பது சமத்துவத்தை உறுதிப்படுத்தாது. "தவறாக சம்பாதித்தது" (ill-gotten) என்ற சொல் நியாயமற்ற அல்லது சட்டவிரோதமாக பெறப்பட்ட செல்வத்தைக் குறிக்கிறது. இந்தச் செல்வத்தின் மீது வரி விதிப்பதற்குப் பதிலாக, அப்படிக் குவிக்க அனுமதிக்கும் மூல காரணத்தை (ஊழல் அமைப்புகள்) நாம் கவனிக்க வேண்டும்.


பரம்பரை வரி நியாயமானதாகத் தோன்றலாம், ஏனெனில் அது பணக்காரக் குழந்தைகளை ஏழைக் குழந்தைகளை விட பெரிய நன்மையுடன் வாழ்க்கையைத் தொடங்குவதைத் தடுக்கிறது. அதன் முக்கிய நோக்கம் பொருளாதார சமத்துவமின்மையை குறைப்பதாக இருக்க வேண்டும்.  செல்வந்தர்களுக்கு வரி விதிப்பதால், பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. மேலும்  முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தலாம் இல்லை என்றால் முதலீட்டாளர்கள் வேறு நாட்டிற்கு சென்று விடுவார்கள். பொருளாதார வளர்ச்சி தேவைப்படும் இந்தியாவில், பணக்காரர்களை செல்வம் குறைந்தவர்களாக்குவதற்குப் பதிலாக முதலீட்டை ஊக்குவிக்கும் கொள்கைகளில் கவனம் செலுத்துவது முக்கியம்.


இந்தியாவில், "வேலையில்லா வளர்ச்சி" (jobless growth) என்ற பிரச்சனை உருவாகியுள்ளது. இதன் பொருள் பொருளாதாரம் வளர்ந்து வந்தாலும், அது போதுமான வேலைகளை உருவாக்கவில்லை அல்லது மக்களின் வருமானம் மற்றும் மக்களின் வாழ்க்கையையும்  பெரிதாக மேம்படுத்தவில்லை  என்பதாகும்.


ஜூலை 2022-ல் தி இந்து நாளிதழில் 'ஜிடிபி யாருடையது' (‘Whose GDP is it anyway’) என்ற தலைப்பிலான கட்டுரையில், 1980களுடன் ஒப்பிடும் போது, ​​பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் வளரும் போது, ​​அது மிகக் குறைவான வேலைகளை உருவாக்குகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில், நவீன பொருளாதார மாதிரிகள் செயல்திறனுக்காக ஆட்களை வேலைக்கு அமர்த்துவதற்குப் பதிலாக பணத்தைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கிறது.  பொருளாதார சமத்துவமின்மையை குறைக்க, வேலை உருவாக்கத்தை ஊக்குவிக்கும் கொள்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த போக்கை சமநிலைப்படுத்த முடியும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள சில வாக்குறுதிகள், இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி பெறுவதற்கான உரிமையை வழங்குதல், நிறுவனங்களுக்கு பணியமர்த்துவதற்கான ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் திறமையற்ற தொழிலாளர்களை நம்பியிருக்கும் செயல்பாடுகளை ஊக்குவிப்பது போன்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. 


சமத்துவமின்மைக்கு பங்களிக்கும் மற்றொரு காரணி நியாயமற்ற வரி முறையாகும். வரியாக வசூலிக்கப்படும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும், 64 ரூபாய் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்திடமிருந்து வருகிறது. முக்கியமாக சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் வருமான வரி போன்ற மறைமுக வரிகள் மூலம் வருகிறது. அதே நேரத்தில் 36 ரூபாய் மட்டுமே பணக்கார நிறுவனங்களிடமிருந்து வருகிறது. இதன் பொருள் ஏழைகள் பொருளாதார ஆதாயங்களை இழப்பது மட்டுமல்லாமல், நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது அதிக வரிகளையும் செலுத்துகிறார்கள். அதனால்தான் சரக்கு மற்றும் சேவை வரியை எளிமையாக்கி, வரியை குறைத்து, புதிய நேரடி வரிக் குறியீட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் இதை  சரி செய்ய முடியும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உறுதியளிக்கிறது.


ஏழைகள் பொருளாதார வளர்ச்சியால் பயனடையும் வரை நலத்திட்டங்களுடன் அவர்களுக்கு உதவுவது முக்கியம். பொருளாதாரத்தை வேகமாக வளர்ப்பதன் மூலமும், அதிக வரிகளை வசூலிப்பதன் மூலமும், நலன்புரி விநியோகத்தை மேம்படுத்துவதன் மூலமும் இந்த திட்டங்களுக்கு நிதியளிக்க முடியும்.


பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க, பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது, புதிய வேலை வாய்ப்புகளை, சாதாரண மக்களுக்கு வரிகளைக் குறைப்பது மற்றும் ஏழைகளுக்கு ஆதரவளிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். சலுகைகள், பாதுகாப்பு வலைகள் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பது போன்ற  புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும். பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. எனவே சமத்துவமின்மையைக் குறைக்க பணக்காரர்களை ஏழைகளாக்காமல், ஏழைகளை பணக்காரர்களாக மாற்ற புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.


(பிரவீன் சக்கரவர்த்தி, அகில இந்திய தொழில்முறை காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழுவின் முக்கிய உறுப்பினர்)



Original article:

Share:

பெங்களூருவில் தண்ணீருக்கான போராட்டம் -அலங்க்ரிதா கேரா, சாலி ரானே

 சமீபகாலமாக பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது உள்நாட்டில் செய்திகளிலும், மக்கள் மத்தியிலும் நிறைய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் விநியோகம் தடைபடுவதாலும், தண்ணீர் லாரிகள் தண்ணீரின் விலையை 80 சதவீதம் உயர்த்தியுள்ளது. குடியிருப்புவாசிகள் தண்ணீருக்காக சிரமப்படுகின்றனர். அவர்கள் எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கடுமையான விதிகள் உள்ளன.


பெங்களூருவில் தண்ணீர் பிரச்சினை மோசமான நிர்வாகத்தால் மட்டும் ஏற்படவில்லை. புவியியல் சிக்கல்கள் மற்றும் விரைவான நகரமயமாக்கலும் இதற்குக் காரணம்.


இயற்கை நன்னீர் ஆதாரங்கள் இல்லாமல் கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பெங்களூரு வரலாற்று ரீதியாக அதன் நீர்த் தேவைகளை பூர்த்தி செய்ய ஏரிகள் மற்றும் குளங்களை நம்பியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, நீர்நிலைகளில் ஒரு பகுதி மட்டுமே இன்று எஞ்சியுள்ளது. மிக முக்கியமாக நிலத்தடி நீர் மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது, ஏனெனில் அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது, நிலத்தடி நீர் எடுக்கும் அளவிற்கு மழை நீரானது நிலத்திற்குள் செல்வதில்லை. காவிரியில் இருந்து வரும் தண்ணீர் பெங்களூருவின் தண்ணீர் தேவையை 50% மட்டுமே பூர்த்தி செய்கிறது. மீதமுள்ளவை 50% நீரானது நிலத்தடி நீரையே நம்பியுள்ளன, ஆனால் நிலத்தடி நீரானது வேகமாக குறைந்து வருகிறது. நகரத்தில் உள்ள 11,000 ஆழ்துளை கிணறுகளில் 800 ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லை, மேலும் தொடர்ந்து செயல்படும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக சீரற்ற மழைப்பொழிவு நகரின் நீர் ஆதாரங்களை மேலும் மோசமாக்கியுள்ளது.


பெங்களூருவில் நடப்பது விரைவில் மற்ற இந்திய நகரங்களிலும் நடக்கலாம். எனவே, 2030-ஆம் ஆண்டுக்குள் இது ஒரு பெரிய பிரச்சினையாக மாறுவதைத் தடுக்க, நாம் இப்போது நிறைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மக்கள் தண்ணீரைக் குறைவாக பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. உள்ளாட்சி அமைப்பானது தண்ணீரைச் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரங்களை ஏற்பாடுசெய்யலாம், ஸ்மார்ட் மீட்டர் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் பொதுமக்கள் எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி அறிந்து கொள்ளலாம். நீர் மேலான்மையை சிறப்பாக நிர்வகிக்க பொறியியல் தீர்வுகளும், வீட்டில் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்த மக்களுக்கு உதவும் நீர் காற்றூட்டக் கருவிகள் (water aerators) பயன்படுத்துவதையும் ஊக்குவிக்கலாம்.


மழைநீர் சேகரிப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற தற்கால தீர்வுகள் பரவலாக செயல்படுத்தப்பட வேண்டும். மழைநீரை சேகரித்து கசிவுநீர் குழிகள் மற்றும் புதுமையான தொழில்நுட்பம் போன்ற சிறப்பு நுட்பங்களைப் பயன்படுத்தி முறையாக நிர்வகிக்கும்போது, நீர் தட்டுப்பாட்டை குறைக்க உதவும்.


கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீரின் மறுபயன்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவை நன்னீர் ஆதாரங்களுக்கான தேவையைக் குறைக்கும். தற்போது, பெங்களூருவின் கழிவுநீரில் சுமார் 77% சுத்திகரிக்கப்படுகிறது, ஆனால் அதில் பெரும்பாலானவை மீண்டும் பயன்படுத்தப்படவில்லை. முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட நீரின் பயன்பாட்டை ஊக்குவிப்பது ஒரு நல்ல செயலாகும். கழிவுநீரை மூலத்திலேயே சுத்திகரிக்கும் இந்திரா வாட்டர் போன்ற புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம், சுத்திகரிக்கப்பட்ட நீரின் பயன்பாட்டை அதிகப்படுத்தலாம். முறையான கழிவு நீர் குழாய் மேலாண்மை மற்றும் பராமரிப்பும் அவசியம். சோலினாஸ் இன்டகிரிட்டி (Solinas Integrity) ரோபோ போன்ற தொழில்நுட்பம், நீர் மற்றும் கழிவுநீர் குழாய் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கிறது.


நகரங்கள் தொலைதூர நீர் ஆதாரங்களை குறைவாக நம்பியிருக்க வேண்டும். உதாரணத்திற்கு பெங்களூருவை எடுத்துக் கொள்ளுங்கள். இது 90 கி.மீ தூரத்திலும், 300 மீட்டர் உயரத்திலும் உள்ள காவிரி நீர்த்தேக்கத்திலிருந்து நீரைப் பெறுகிறது. இந்த தண்ணீரை வெளியேற்றவே தினமும் மின்சாரத்திற்காக மட்டும் ரூ.3 கோடி செலவிடப்படுகிறது. நிலையான நகர்ப்புற திட்டமிடல், ஏரி பாதுகாப்பு, ஆழ்துளை கிணறு மேலாண்மைக்கான நடவடிக்கைகள், நிலத்தடி நீரை நிரப்புதல் மற்றும் ஏரிகளைப் பாதுகாப்பதற்கான முன்முயற்சிகள் ஆகியவை மீண்டுவர இன்றியமையாதவை.


பெங்களூருவின் நிலைமையை அனைத்து இந்திய நகரங்களும் கவனிக்க வேண்டும். பல நகரங்கள் இதேபோன்ற தண்ணீர் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். இதைச் சமாளிக்க, நகர நிர்வாகங்கள், தொடக்கநிலை நிறுவனங்கள் (startups), ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் சமூக குழுக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


சைலி ரானே ஃபெலோ, ஏ.சி.டி ஃபார் என்விரான்மென்ட். அலங்க்ரிதா கேரா, ACT ஃபார் என்விரான்மென்ட், இயக்குநர்.




Original article:

Share:

தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட உதாரணங்களைப் பின்பற்ற வேண்டும்

 புதுப்பிக்கப்பட்டது : - வாக்கெடுப்பு தரவு விடுபட்டுள்ள சிக்கலைச் சரி செய்வது எளிது. தேர்தல் ஆணையம் (Election Commission (EC))  முந்தைய நடைமுறைக்கு திரும்ப வேண்டும். தேர்தல் முடிந்தவுடன் செய்தியாளர் சந்திப்பு நடத்துவது வழக்கம். தேர்தல் நாளில் இல்லையென்றாலும், குறைந்தபட்சம் அடுத்த நாளாவது செய்தியாளர் சந்திப்பு நடத்துவது வழக்கம். இந்த சந்திப்புகள் அனைத்து சந்தேகத்தையும் தீர்த்துவிடும்.


வாக்குப்பதிவு சதவீத புள்ளி விவரங்களை வெளியிடுவதில் தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறையில் இருந்து மாறுபட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய தேர்தல்களில், தேர்தல் ஆணையம் வழக்கமாக ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகும் இரவு 7 மணிக்குள் தற்காலிக வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடும். இறுதி எண்ணிக்கை சில நாட்களுக்குள் உறுதிப்படுத்தப்படும். ஆனால், அண்மையில் நடந்த மக்களவை தேர்தலின் போது, தேர்தல் ஆணையம் இந்த நடைமுறையை மாற்றியது.


நடந்து முடிந்த மக்களவை  தேர்தலின் முதல் இரண்டு கட்டங்களுக்குப் பிறகு இரவு 9 மணியளவில் தேர்தல் ஆணையம்  செய்திக்குறிப்பை வெளியிட்டது. ஏப்ரல் 19 அன்று, முதல் கட்ட வாக்குப்பதிவின் முடிவில், மாலை 7 மணி அளவில் 60% வாக்குகள் பதிவாகியுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் தோராயமான வாக்குப்பதிவு சதவீதத்தை காட்டுகிறது. ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் இரவு 8.49 மணிக்கு மற்றொரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. மாலை 7 மணி நிலவரப்படி 60.96% வாக்குகள் பதிவாகியிருந்தன, ஆனால் மாநில வாரியாக வெளியிடவில்லை. 


இறுதி வாக்காளர் எண்ணிக்கை விவரம் மிகவும் தாமதமாக வெளியிடப்பட்டது. முதல் கட்டம் முடிந்து 10 நாட்கள் மற்றும் இரண்டாம் கட்டம் முடிந்து மூன்று நாட்கள் வரை அவை கிடைக்கவில்லை. ஏப்ரல் 30 அன்று, இந்த செய்தித்தாள், தேர்தல் ஆணையம் இன்னும் இறுதி வாக்காளர் வாக்கு எண்ணிக்கையை வெளியிடவில்லை என்று தெரிவித்தது. அறிக்கையைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் இறுதிப் புள்ளி விவரங்களை வெளியிட்டது. முதல் கட்ட தேர்தலில் 66.14% மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலில் 66.71% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் 60% மற்றும் 60.96% ஆரம்ப அறிக்கைகளை விட ஆறு சதவீத புள்ளிகள் அதிகம்.


இந்த தாமதங்கள் தேவையற்ற விமர்சனங்களுக்கு வழிவகுக்குகிறது. இவை வாக்குப்பதிவு செயல்பாட்டில் வாக்காளர்களின் நம்பிக்கையை குறைக்கிறது.  இந்திய தேர்தல் ஆணையம் ஒரு மரியாதைக்குரிய அரசியலமைப்பு அதிகாரமாகும். தேர்தல் ஆணையம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்தி வருகிறது. இருப்பினும், தரவு வெளியீட்டின் நேரத்தை மதிப்பிடும்போது விமர்சகர்கள் இந்த நற்பெயரை நினைவில் கொள்ள வேண்டும். இருந்தபோதிலும், தேர்தல் ஆணையம் அதன் நடவடிக்கைகள் தீவிர ஆய்வுக்கு உட்பட்டுள்ளது என்பதை அறிந்திருக்க வேண்டும். அது நிறுவப்பட்ட நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.


வாக்கெடுப்பு தரவு காணாமல் போன சிக்கலை சரி செய்வது எளிது. தேர்தல் ஆணையம் அதன் பழைய முறைக்குத் திரும்பி, தேர்தல் நாளிலோ அல்லது அதற்கு அடுத்த நாளோ, எந்தவொரு சந்தேகத்தையும் தெளிவுபடுத்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தலாம். தேர்தல் ஆணையம் வாக்காளர் அளவு மற்றும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை பற்றிய தெளிவான தரவுகளையும் வழங்க வேண்டும். இந்தத் தரவை எவ்வாறு சேகரித்து சரிபார்க்கிறது என்பதை தேர்தல் ஆணையம் பகிர்ந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்கும். மின்னணு வாக்குப்பதிவு முறை (electronic voting system (EVM)) பாதுகாப்பானது என்பதை எப்படி உறுதி செய்வது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் ஏற்கனவே விளக்கியுள்ளது.




Original article:

Share:

இம்பாலில் குழப்பம், மாநில அரசு பின்வாங்குகிறது -HT தலையங்கம்

 மணிப்பூரில் இனக்கலவரம் நடைபெற்று ஒரு வருடம் ஆகிறது. மாநிலத்தில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை, மேலும் மாநிலம் முழுவதும் இராணுவ கட்டுபட்டில்தான் உள்ளது.


இனக்கலவரம் வெடித்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த மார்ச் மாதம் மாநிலத்தின் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் மெய்ட்டி இனக் குழுக்களை சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் இரு சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது, இது பல்வேறு குழுக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த மோதல்கள் முக்கியமாக இம்பால் பள்ளத்தாக்கில் வசிக்கும் மெய்தேயி இன மக்களுக்கும் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி இன மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 225 பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர், அரசின் ஆயுதக் கிடங்குகளை கலவரக்காரர்கள் சூறையாடினர் குடியிருப்புகளும் அழிக்கப்பட்டது இதனால் மக்கள் பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.


ஆண்டு முழுவதும், போரட்டக்காரர்கள், அரசு மற்றும் பொதுமக்களின் சொத்துக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர், கொலை மற்றும் கற்பழிப்பு போன்ற குற்றச் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. காவல்துறை மற்றும் இராணுவத்தின் முயற்சிகள் இருந்தபோதிலும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மீட்டெடுக்கப்படவில்லை. சமீபத்தில், பாதுகாப்புப் படையினர் கூட தாக்குதல்களை எதிர்கொண்டனர், கையெறி குண்டு தாக்குதலில் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.


மக்களை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக, பிளவுபடுத்தும் கருத்துக்களால் பதற்றத்தை அதிகப்படுத்துவதாக முதல்வர் என் பிரேன் சிங் விமர்சிக்கப்பட்டார். மெய்தேய் சமூகத்தினரின் குறைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் அவர் அந்த மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தாலும், நிர்வாகத்தை மறுசீரமைப்பதில் அவர் தோல்வியடைந்துள்ளார்.

மாநிலத்திற்கு அடுத்து என்ன நடக்கும்? இயல்பு நிலைக்கு திரும்ப நீண்ட காலம் ஆகலாம். மெய்தேயி தீவிரவாதிகளால் வழிநடத்தப்படும் அரம்பாய் தெங்கோல் என்ற குழு கிட்டத்தட்ட ஒரு குட்டி அரசாங்கம் போல சக்திவாய்ந்ததாக மாறியுள்ளது. ஜனவரி மாதம், இம்பாலில் உள்ள காங்லா கோட்டையில் மெய்தேய் எம்.எல்.ஏக்கள் அங்கு வரவழைக்கப்பட்டு குழுவால் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டனர். மாநில அரசியலில் இந்தக் குழு எந்தளவுக்கு கட்டுப்பாட்டை வைத்திருக்கிறது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. இது சிவில் ஜனநாயகத்தின் வீழ்ச்சியையும், மணிப்பூரில் அதிகரித்து வரும் இராணுவ கட்டுப்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது. கடந்த காலங்களில் போராளிக் குழுக்கள் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்து அவர்களை கொலை செய்த காலத்தை இது நமக்கு நினைவூட்டுகிறது, மேலும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின்  (Armed Forces (Special) Powers Act) கீழ் மாநில அரசு செயல்படுகிறது.


அரசானது வலுவாக செயல்படாததால், இராணுவமயமாக்கல் அதிகரிக்கும். மியான்மரில் உள்ள பிரச்சினைகளும் குழப்பத்தை அதிகரிக்கின்றன. மேலும் அகதிகள் ஆயுதங்களுடன் உள்ளே வருகிறார்கள். இந்த நிகழ்வை பார்க்கும் போது தேசிய அடையாளத்தை விட இனக் குழுக்களின் மீது அதிக அக்கறை உள்ளது.


இனம் மற்றும் அச்சத்திற்கு அப்பாற்பட்ட அரசியலைப் பற்றி சிந்திக்க மணிப்பூர் மாநிலத்திற்க்கு ஒரு புதிய வழி தேவைப்படுகிறது. இதில் ஒன்றிய அரசு விரைவாக செயல்பட வேண்டும். இல்லையெனில், கலவரம் மற்றும் வன்முறை அதிகரிக்கும், இவற்றை கட்டுபடுத்துவது கடினமாக இருக்கும்.




Original article:

Share:

லத்தீன் அமெரிக்காவில் வரலாறு காணாத டெங்கு அதிகரிப்புக்கு என்ன காரணம்? -அலிந்த் சௌஹான்

 சில நாடுகளில் உச்சபட்ச காலத்திற்கு முன்பே டெங்குவின் அதிகரிப்பு காணப்பட்டாலும், மற்ற நாடுகளில் முதல் முறையாக கடுமையான தாக்கங்களைப் பதிவு செய்யப்படுகின்றன. 


லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் டெங்குகளின் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. 2024-ம் ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இடையில், இந்த நாடுகளில் 5.9 மில்லியனுக்கும் அதிகமான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 2023 இல் 4.4 மில்லியனுடன் ஒப்பிடப்பட்டுள்ளன. சில நாடுகளில் உச்சபட்ச காலத்திற்கு முன்பே டெங்குவின் எழுச்சியைக் கண்டாலும், மற்ற நாடுகள் முதல் முறையாக கடுமையான தாக்கங்களைப் பதிவு செய்கின்றன.


இந்த நோயின் தாக்கத்திற்குப் பின்னால் இருக்கும் வெளிப்படையான காரணம் உயர்ந்து வரும் உலக வெப்பநிலை. இது கொசுக்களுக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. அவை கடித்தால் மக்களிடையே டெங்கு நோய் பரவுகின்றது. டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கக்கூடிய வலுவான தடுப்பூசியை உலகம் இதுவரை அறிமுகப்படுத்தவில்லை. இது பெரியளவில் நிலைமையை மோசமாக்குகிறது.


டெங்கு காய்ச்சல் பெரும்பாலும் மரணத்திற்கு வழிவகுக்காது, ஆனால் சில சமயங்களில், இது கடுமையான மூட்டு வலி, இரத்தப்போக்கு மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தலாம். இது "முடக்கும் காய்ச்சல்" (breakdown fever) என்று அழைக்கப்படுகிறது.


லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது, காலநிலை மாற்றத்தின் பங்கு என்ன மற்றும் டெங்கு தடுப்பூசியை உருவாக்குவதற்கான முயற்சிகள் எவ்வளவு தூரம் வந்துள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்.


என்ன நடக்கிறது?


டெங்கு காய்ச்சலால் பிரேசில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் ஜனவரி முதல் ஏப்ரல் 23 வரை 4.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மக்கள் தொகையில் சுமார் 1.8% ஆகும். மேலும், இந்த நோயால் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒரே ஆண்டில் டெங்கு காய்ச்சலால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு சாதனை படைத்துள்ளது.


இதன் எதிரொலியாக, பிரேசிலில் உள்ள 26 மாநிலங்களும் அவசர நிலையை அறிவித்தன. வழக்கமான மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாத நோயாளிகளுக்கு உதவ இராணுவம் பிரேசிலியாவில் கள மருத்துவமனைகளை (field hospitals) அமைத்தது. தி எகனாமிஸ்ட் கருத்துப்படி, கொசு விரட்டிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன, மேலும் எப்போது வரும் என்று எங்களுக்குத் தெரியாது.


பெரு (Peru) மற்றும் புவேர்ட்டோ ரிக்கோவிலும் (Puerto Rico) டெங்கு காய்ச்சல் வழக்குகள் அதிகரித்து வருவதால் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. புவேர்ட்டோ ரிக்கோவில் (Puerto Rico) 2023 ஆம் ஆண்டில் 1,293 உடன் ஒப்பிடும்போது, மார்ச் இறுதிக்குள் 549 டெங்கு பாதிப்புகள் இருந்தன. பெருவில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 33 இறப்புகளுடன் ஒப்பிடும்போது, ஜனவரி மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் 135,000 சந்தேகத்திற்குரிய வழக்குகள் மற்றும் 117 இறப்புகள் காணப்பட்டன. அர்ஜென்டினாவிலும் டெங்கு பாதிப்புகள் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது.


மத்திய அமெரிக்க நாடுகளும் மெக்சிகோவும் பொதுவாக ஆண்டின் இறுதிக்குள் டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பதை அனுபவிக்கின்றன. இப்போது, அவர்கள் ஏற்கனவே பரவுவதைப் பார்க்கிறார்கள். கூடுதலாக, உருகுவே மற்றும் சிலி போன்ற நாடுகள் இதற்கு முன் தீவிரமாக பாதிக்கப்படவில்லை. இப்போது இந்த நோயால் கடுமையான தாக்கத்தை எதிர்கொள்கின்றன.


மார்ச் மாதம் செய்தியாளர் சந்திப்பில், ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பகுதியான பான் அமெரிக்கன் சுகாதார நிறுவன (Pan American Health Organization) இயக்குநர் ஜர்பாஸ் பார்போசா, இந்த ஆண்டு பிரேசிலில் மட்டுமல்ல, பராகுவே, அர்ஜென்டினா மற்றும் பல டெங்கு பாதிப்புகள் இருப்பதாகக் கூறினார். உருகுவே போன்ற பிற நாடுகளை அவர் குறிப்பிட்டுள்ளார். அங்கு நூறு ஆண்டுகளாக டெங்கு பாதிப்பு காணப்படவில்லை.


இது ஏன் நடக்கிறது?


அதிகரித்து வரும் வெப்பநிலையால் டெங்குவால் பாதிப்படையும் நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளில், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் காலநிலை நிலை 2022 அறிக்கையின்படி (Latin America and the Caribbean 2022 report), இப்பகுதி ஒரு பத்தாண்டிற்கு 0.2 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பமடைந்துள்ளது. இந்த வெப்பநிலையின் அதிகரிப்பு மிகவும் தீவிரமான வானிலை மற்றும் அதிக கொசுக்களுக்கு வழிவகுத்தது.


பெரும்பாலான கொசு இனங்கள் கடுமையான வெப்பநிலையில் செழித்து வளர்கின்றன மற்றும் புவி வெப்பமடைதலுடன் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் உட்பட அவை இனப்பெருக்கம் செய்து உயிர்வாழக்கூடிய பகுதிகள் அதிகரித்துள்ளன. அதிக வெப்பநிலை கொசுக்கள் செயலில் இருக்கும் காலத்தின் நீளத்தை நீட்டித்து, வெக்டார் மூலம் பரவும் நோய்கள் (vector-borne diseases) பரவுவதற்கு நீண்ட காலத்தை அனுமதிக்கிறது.


தி எகனாமிஸ்ட் அறிக்கையின்படி, குளிர்காலத்தில் வெப்பநிலை முன்பு போல் 15 டிகிரி செல்சியஸுக்குக் குறையாததால், இத்தகைய வெப்பநிலையில் இறக்கும் நிலையில் உள்ள கொசுக்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இதன் பொருள் வைரஸ்களைச் சுமந்து செல்லும் கொசுக்கள் அதிகமாக உள்ளன. மேலும் வசந்த காலத்தில் வெப்பநிலை உயரும் போது அவை வேகமாகப் பெருகும்.


2023 எல் நினோ (El Niño) தொடங்கிய போது பிரச்சனை மோசமாகியது. இந்த வானிலை அமைப்பு பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் உள்ள மேற்பரப்பு நீரை வழக்கத்தை விட வெப்பமாக்கியது. இதனால், அப்பகுதியில் வெப்பம் மேலும் அதிகரித்துள்ளது.


பலத்த மழை மற்றும் புயல் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய அதிக இடங்களை உருவாக்குகின்றன. இதனால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. வெள்ளம் மற்றும் உயரும் கடல் மட்டங்களும் அவை செழிக்க உதவுகின்றன. மாறாக, வறட்சியால், கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக, தண்ணீர் தொட்டிகள் திகழ்கின்றன.


விரைவான நகரமயமாக்கலும் ஒரு பிரச்சினையாக உள்ளது. லத்தீன் அமெரிக்காவின் குடிசைப்பகுதிகளில், கொசுக்கள் முட்டையிடும் இடத்தில் நிறைய தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல வீடுகளில் தண்ணீரை சேகரிக்கும் தட்டையான கூரைகள் உள்ளன. மேலும், சரியான குழாய்கள் இல்லாத மக்கள் திறந்த கொள்கலன்களில் தண்ணீரை சேமித்து வைக்கின்றனர். சீரற்ற குப்பை சேகரிப்பால், குப்பைகள் குவிந்து, கொசுக்களை ஈர்க்கிறது என்று எகனாமிஸ்ட் அறிக்கை கூறுகிறது.


டெங்கு தடுப்பூசிகள் பற்றி …


லத்தீன் அமெரிக்காவும், கரீபியனும் இந்த டெங்கு நோயால் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. டெங்கு தடுப்பூசியின் தேவையை அவசரமாக்குகின்றன. ஆனால், டெங்குக்கான தடுப்பூசி இன்னும் உருவாக்கப்படவில்லை. பெண் ஏடிஸ் கொசுக்களின் கடி மூலம் டெங்கு பரவுகிறது. மேலும், நான்கு வெவ்வேறு வகையான வைரஸ்கள் உள்ளன. இது விஞ்ஞானிகளுக்கு கடினமாக்குகிறது.


புதுடெல்லியில் உள்ள சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி மைய (International Centre for Genetic Engineering and Biotechnology (ICGEB)) வளாகத்தில் உள்ள பல தடுப்பூசி மேம்பாட்டு திட்டத்தைச் (Multi Vaccines Development Programme) சேர்ந்த விராந்தர் எஸ் சவுகான், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். இது, அனைத்து மாற்று நோய்களுக்கு எதிராக செயல்படும் தடுப்பூசியை தயாரிப்பதே முக்கிய சவாலாக இருக்கும்.


சில தடுப்பூசிகள் அனைத்து மாற்று விதமான நோய்களிலிருந்து பாதுகாக்கும் அதே வேளையில், அவை விலை உயர்ந்தவை அல்லது சில வரம்புகளைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஜப்பானிய தடுப்பூசியான Qdenga, ஐரோப்பாவில் ஒரு தடுப்பூசிக்கு 115 டாலராகவும், இந்தோனேசியாவில் 40 டாலராகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரேசில் ஒரு பெரிய கொள்முதலுக்கு ஒரு தடுப்பூசிக்கு $19 என்ற குறைந்த விலையில் பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும், 2024 ஆம் ஆண்டில் பிரேசிலின் 220 மில்லியன் மக்களில் 3.3 மில்லியன் மக்களுக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போட போதுமான தடுப்பூசிகள் இருக்கும் என்று தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது.


பிப்ரவரியில், Qdengaவை உருவாக்கும் Takeda Pharmaceuticals மற்றும் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தடுப்பூசி தயாரிப்பாளரான Biological E ஆகியவை தடுப்பூசிக்கான அணுகலை விரைவுபடுத்துவதற்கான ஒரு இராஜதந்திர கூட்டாண்மையை உருவாக்கியுள்ளதாக அறிவித்தன. ஆண்டுக்கு 50 மில்லியன் தடுப்பூசிகள் வரை உற்பத்தி செய்யும் என்று Biological E கூறியது. இந்த ஒப்பந்தம் தடுப்பூசியின் விலையைக் குறைக்கும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆனால் 2030 க்கு முன் Qdenga சந்தைப்படுத்துவதற்கு Biological E ஒழுங்குமுறைக்கான ஒப்புதல் பெற வாய்ப்பில்லை என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.


டெங்வாக்ஸியா (Dengvaxia) என்ற மற்றொரு தடுப்பூசி சனோஃபி பாஸ்டியரால் (Sanofi Pasteur-பிரெஞ்சு பன்னாட்டு மருந்து நிறுவனமான சனோஃபியின் தடுப்பூசிப் பிரிவாகும்) தயாரிக்கப்படுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த தடுப்பூசி போட முடியும்.


மிக சமீபத்தில், பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய டெங்குக்கான தடுப்பூசி சோதனையில் வலுவான தற்காப்பு உறுதியானதைக் கண்டறிந்தனர். இது அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களால் (National Institutes of Health(NIH)) தயாரிக்கப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் தடுப்பூசி (single shot vaccine) ஆகும். இது நான்கு டெங்கு வைரஸ் மாற்றுகளின் பலவீனமான வடிவங்களைப் பயன்படுத்துகிறது. பிரேசிலில் உள்ள இன்ஸ்டிடியூட்டோ புட்டான்டன் (Instituto Butantan) இதை உருவாக்கும். ஆனால், இது சில ஆண்டுகளுக்கு பிரேசிலில் பரவலாகக் கிடைக்காது.


மார்ச் ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான Serum Institute of India, National Institutes of Health(NIH) ஆராய்ச்சியின் அடிப்படையில் ஒருமுறை பயன்படுத்தும் டெங்கு தடுப்பூசி தயாரிப்பிலும் செயல்பட்டு வருகிறது.




Original article:

Share:

அவசரநிலை, முதல் காங்கிரஸ் அல்லாத அரசு மற்றும் பொய்யாக்கப்பட்ட வாக்குறுதி - ஷியாம்லால் யாதவ்

 இந்தியாவின் 969 மில்லியன் வாக்காளர்களில், 18.4 மில்லியனுக்கும் அதிகமானோர் 18 முதல் 19 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இந்தக் கட்டுரை குறிப்பாக இளம் வாசகர்களுக்காக மக்களவைத் தேர்தலைப் பற்றியது.


1977 மக்களவைத் தேர்தல் இந்தியாவுக்கு அதன் முதல் காங்கிரஸ் அல்லாத அரசாங்கத்தைக் கொண்டுவந்தது. குஜராத்தில் மாணவர் இயக்கம் (students’ movement in Gujarat) மற்றும் 1971 போருக்குப் பிறகு ஜெயப்பிரகாஷ் நாராயணனின் முழு புரட்சிக்கான அழைப்பு விடுத்ததால் இந்திரா காந்தியின் புகழ் குறைந்தது. 1975 ஆம் ஆண்டில் தேர்தல் மோசடி காரணமாக அலகாபாத் உயர் நீதிமன்றம் அவரது 1971 தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவித்தபோது, அவர் அவசரநிலையை (Emergency) அறிவித்தார். பின்னர், அவசர நிலை முடிவுக்கு வந்த பிறகு, தேர்தலில் இந்திரா காந்தி கடுமையான தோல்வியைச் சந்தித்தார். இதில், மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.


வளாகங்களில் அமைதியின்மை


டிசம்பர் 1973 இல், அகமதாபாத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் விடுதி உணவகக் கட்டணத்தை உயர்த்துவதை எதிர்த்தனர். இந்த போராட்டம் குஜராத்திலும் அதற்கு அடுத்துள்ள மற்ற வளாகங்களுக்கும் விரைவாக பரவியது. இது தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு குழுக்களின் ஆதரவைப் பெற்று, பொருளாதார சிக்கல்கள் மற்றும் ஊழலுக்கு எதிராக 'நவநிர்மான் அந்தோலன்'  என்ற பரந்த இயக்கத்தை உருவாக்கியது.

மார்ச் 1974 இல், பீகார் மாணவர்கள் 72 வயதான சோசலிசத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் உதவியை நாடினர். தங்கள் இயக்கத்தை அவரே வழிநடத்த வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். முதல் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அரசியலில் இருந்து விலகி இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் 1974 பிப்ரவரியில் குஜராத் முதல்வர் சிமன்பாய் படேலை பதவி விலகுமாறு குஜராத் இளைஞர்கள் எவ்வாறு கட்டாயப்படுத்தினர் என்பதைக் கவனித்தார். இது ஒரு புதிய வகையான அரசியலுக்கான தனது பார்வையுடன் இணைந்து, மாணவர்களால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை அவர் கண்டார்.


ஜூன் 5, 1974 அன்று, பாட்னாவில் நடந்த ஒரு பேரணியில், ஜெயப்பிரகாஷ் நாராயணன் தனது புகழ்பெற்ற "சம்பூர்ண கிராந்தி" (Sampoorna Kranti) அல்லது முழுப் புரட்சிக்கான (Total Revolution) அறைகூவலை விடுத்தார். இது அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, அறிவுசார், கல்வி மற்றும் ஆன்மீக அம்சங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான மாற்றத்தை குறிப்பிட்டது.


இந்திராவின் தகுதி நீக்கம்


1971-ல் ரேபரேலி தொகுதி தேர்தலில் ராஜ் நாராயணனை எதிர்த்து போட்டியிட்ட இந்திரா காந்தி 1,11,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் மனமுடைந்த ராஜ் நாராயண் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தார். ஜூன் 12, 1975 அன்று, உயர்நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா (Jagmohan Lal Sinha), ராஜ் நாராயண் வெற்றி பெற்றதாக அறிவித்து, இந்திராவை மக்களவையிலிருந்து நீக்கினார்.


அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை இந்திரா ஏற்கவில்லை. எனவே, இந்திரா காந்தி அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது ஜூன் 24, 1975 அன்று, நீதிபதி வி ஆர் கிருஷ்ண ஐயர் அவரை தகுதி நீக்கத்தை உறுதி செய்தார். ஆனால், அவரது மேல்முறையீடு தீர்ப்புவரும்வரை அவர் பதவியில் இருக்க முடியும் என்று கூறினார்.


அவசர கால மாதங்கள்


ஜூன் 25, 1975 அன்று, ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது (Fakhruddin Ali Ahmed) பிரதமரின் ஆலோசனையின் பேரில் அவசரநிலையை அறிவித்தார். போர், வெளிப்புற ஆக்கிரமிப்பு (war or external aggression) அல்லது உள்நாட்டு குழப்பங்களால் (internal disturbance) தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களாக அரசியலமைப்பின் பிரிவு 352(1)-யை மேற்கோள் காட்டினார். பின்னர், 44-வது திருத்தச்சட்டம் 1978 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு திருத்தப்பட்டது, இது "உள்நாட்டு குழப்பம்" (internal disturbance) என்பதற்கு பதிலாக "ஆயுதக் கிளர்ச்சி" (armed rebellion) என்று மாற்றப்பட்டது.


அவசரநிலைப் பிரகடனத்தைத் தொடர்ந்து, ஒரு லட்சத்துக்கும் அதிகமான எதிர்ப்பாளர்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சித்தவர்கள், கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் உட்பட, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (Maintenance of Internal Security Act (MISA)) மற்றும் இந்திய பாதுகாப்பு விதிகளின் கீழ் (Defence of India Rules) கைது செய்யப்பட்டனர். இதனால், பத்திரிகைகளால் சுதந்திரமாக பேச முடியவில்லை. ஊடகவியலாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.


இந்திராவின் இளைய மகன் சஞ்சய் காந்தி, 21 மாத அவசர நிலையின் போது முக்கிய பங்கு வகித்தார். இதில், 20 அம்ச திட்டங்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட்டது. இந்த திட்டத்தில் சஞ்சய் காந்தி ஐந்து அம்ச அறிக்கைகளுடன் தனது சொந்த திட்டத்தை வைத்திருந்தார். இது கருத்தடையை கட்டாயப்படுத்தியது. இதனால், நாடு முழுவதும் பரவலான அமைதியின்மையை ஏற்படுத்தியது.


டெல்லியில் ஜனதா பிரச்சாரம். ஜனதா கட்சியின் தொடக்கம்


1976 தொடக்கத்தில் மக்களவைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. புதிய சட்டம் மற்றும் அரசியலமைப்பு மாற்றங்களுடன் தற்போதுள்ள மக்களவையின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18, 1977 அன்று திடீரென மக்களவையை கலைக்குமாறு இந்திரா காந்தி திடீரென குடியர்சுத் தலைவரிடம் கூறினார். பின்னர், ஆறாவது மக்களவைத் தேர்தலானது மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.


அந்த நேரத்தில், இந்தியாவில் ஏழு தேசிய கட்சிகள் மற்றும் 18 மாநிலக் கட்சிகள் இருந்தன. தேர்தல் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, மொரார்ஜி தேசாயின் காங்கிரஸ் (O), சவுத்ரி சரண் சிங்கின் பாரதிய லோக் தளம் (Bharatiya Lok Dal (BLD)), அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் எல் கே அத்வானியின் பாரதிய ஜன சங்கம் (Bharatiya Jana Sangh (BJS), precursor of the BJP)) மற்றும் சோசலிஸ்ட் கட்சி (Socialist Party) ஆகிய நான்கு தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா கட்சியை (Janata Party) உருவாக்கின.


இந்திய தேர்தல் ஆணையம், ஜனதா கட்சியை அங்கீகரிக்காததால், அதன் கூட்டணி கட்சிகள் பாரதிய லோக் தளத்தின் (Bharatiya Lok Dal (BLD)) சின்னமான 'சக்கரத்திற்குள் ஏர்க்கலப்பை' (Haldhar within Wheel) சின்னத்தின் கீழ் போட்டியிட முடிவு செய்தன. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் காங்கிரஸ்(ஓ) வின் 'ஒரு பெண்ணால் அரசு இயக்கப்படுகிறது' (Charkha being plied by a Woman) என்ற தலைப்பில் ஜனதா கட்சி போட்டியிட்டது.


அவசர நிலையை ஆதரித்ததால் ஜனதா கட்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேரவில்லை. ஆனால், ஜனதாவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது தொகுதி மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டது.


வரலாற்று சிறப்புமிக்க தேர்தலும் முடிவுகளும்


1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகளைப் பிரித்த பிறகு, புதிய மக்களவையானது 543 உறுப்பினர்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டது. மார்ச் 16 முதல் 20, 1977 வரை வாக்குப்பதிவு நடைபெற்றதுடன், உடனே வாக்குகளை எண்ணும் பணியும் தொடங்கியது. இதில், 32.11 கோடி வாக்காளர்களில் 60.53% பேர் வாக்களிப்பில் கலந்து கொண்டனர். அதிகபட்சமாக கேரளாவில் 79.21 சதவீதமும், ஒரிசாவில் 44.32 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி வாக்குப் பெட்டிகள் மற்றும் ஆவணங்களை சேதப்படுத்திய சில சம்பவங்களும் இதில் பதிவாகியுள்ளன.


பாரதிய லோக் தளம் (BLD) என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் ஜனதா கட்சி 298 இடங்களுடன் அதிக இடங்களை வென்றது. மே 11, 1977 அன்று, தேர்தல் ஆணையம் ஜனதாவை ஒரு தேசிய கட்சியாக அங்கீகரித்தது. பாரதிய லோக் தளத்தின் சின்னத்தை ஏற்றுக்கொண்டது. ஜூலை 16, 1969 அன்று துணைப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மொரார்ஜி தேசாய் தனது 81 வயதில், மார்ச் 24, 1977 அன்று பிரதமராக பதவியேற்றார்.


காங்கிரஸ் 154 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 22 இடங்களிலும், இந்தியப் பொதுவுடமைக் கட்சி 7 இடங்களிலும் வெற்றி பெற்றன. ரேபரேலி தொகுதியில் ராஜ் நாராயணிடம் இந்திரா காந்தி தோல்வி அடைந்தார். வட இந்தியாவில் காங்கிரஸானது இழப்புகளைச் சந்தித்தது. ஆனால், தெற்கில் அதற்கான இடங்களை தக்கவைத்துக்கொண்டது. இதில், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும், அத்துடன் மகாராஷ்டிரா மற்றும் அசாமிலும் வென்றது.


சூரத்தில் மொராஜி தேசாய் வெற்றி பெற்றார். அவரது உள்துறை அமைச்சர் சரண் சிங் பாக்பத்தில் வெற்றி பெற்றார். உத்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் எச் என் பகுகுணா லக்னோவில் வெற்றி பெற்றார். புதுதில்லியில் வாஜ்பாய் வெற்றி பெற்றார். பல்ராம்பூரில் நானாஜி தேஷ்முக் வெற்றி பெற்றார். ஜக்ஜீவன் ராம் பிப்ரவரி 3, 1977 இல் காங்கிரஸில் இருந்து விலகி, நந்தினி சத்பதியுடன் ஜனநாயக காங்கிரஸில் சேர்ந்தார். பின்னர், அவர் சசரத்தில் இருந்து பாரதிய லோக் தளத்தின் (BLD) தொகுதியில் வெற்றி பெற்றார்.


நிறைவேற்றப்படாத வாக்குறுதி


ஜனதா ஒரு புதிய யோசனையையும், நம்பிக்கையையும் அளித்தது. ஆனால் அது பல முரண்பாடுகளை எதிர்கொண்டது. ஜூலை 1978 இல், மொரார்ஜி தேசாயின் தலைமைக்கு சுமார் ஒரு வருடம் கழித்து, சரண் சிங் விலகினார். பின்னர், ஜனவரி 1979 இல் நிதியமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் மீண்டும் வந்தார். ஆனால் இது நீடிக்கவில்லை. அரசியலானது விரைவாக மாறியது. 1978 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், அசாம்கரில் மோஷினா கித்வாயின் வெற்றி காங்கிரஸ் கட்சி திரும்புவதைக் குறிக்கிறது. 1978 நவம்பரில் சிக்மகளூரில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். காங்கிரஸ் சரண்சிங்கை மீண்டும் ராஜினாமா செய்யத் தூண்டி, மதச்சார்பற்ற ஜனதா கட்சியை உருவாக்கியது.


காங்கிரசின் ஆதரவுடன், மொரஜி தேசாய்க்குப் பதிலாக சரண் சிங் ஜூலை 28, 1979 அன்று பிரதமரானார். ஆனால், ஒரு மாதத்திற்குள் காங்கிரஸ் அவரது அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெற்றதால் அவருக்கு நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.


இந்திய ஜனநாயகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சோதனை தொடங்கி இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, தேசம் மீண்டும் தேர்தலுக்குச் சென்றது.




Original article:

Share: