தெற்காசியாவின் 97% இடப்பெயர்வுகள் மணிப்பூரில் நடந்தவை -PRESS TRUST OF INDIA மற்றும் AGENCE FRANCE-PRESSE

 2023ஆம் ஆண்டில், தெற்காசியாவில் மோதல் காரணமாக 69,000 பேர் இடம்பெயர்ந்ததாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. இந்த இடம்பெயர்வுகளில் பெரும்பாலானவை, சுமார் 67,000 மணிப்பூரில் நடந்த வன்முறையால் ஏற்பட்டவை ஆகும். 


2023ஆம் ஆண்டில், தெற்காசியாவில் மோதல்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக 69,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த இடப்பெயர்வுகளில் பெரும்பாலானவை, சுமார் 67,000 பேர், மணிப்பூரில் நடந்த வன்முறையால் ஏற்பட்டவை என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. ஜெனீவாவை தளமாகக் கொண்ட உள் இடப்பெயர்வு கண்காணிப்பு மையத்தின் (Internal Displacement Monitoring Centre (IDMC)) அறிக்கை, 2018 க்குப் பிறகு இந்தியாவில் மோதல்கள் மற்றும் வன்முறையால் ஏற்பட்ட அதிக இடப்பெயர்வுகள் என்று கூறியுள்ளது.


மே 3, 2023 அன்று, மணிப்பூரின் மலை மாவட்டங்களில் 'பழங்குடி ஒற்றுமை அணிவகுப்பு' (Tribal Solidarity March) நடந்தது. தங்களை ஒரு பட்டியல் பழங்குடியினராக (Scheduled Tribe (ST)) வகைப்படுத்த வேண்டும் என்ற மெய்தேய் சமூகத்தின் (Meitei community) கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு மெய்தேய் மற்றும் குகி சமூகங்களுக்கு (Meitei and the Kuki communitie) இடையே மோதல்களுக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக 200-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம், மணிப்பூர் உயர்நீதிமன்றம் பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டது. இந்த பரிந்துரைகள் மெய்தேய் சமூகத்திற்கு "பட்டியலிடப்பட்ட பழங்குடியினராக" (Scheduled Tribe) அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதாகும். இந்த தகுதிநிலை சிறுபான்மை குழுக்களை ஒதுக்கி வைக்கப்படுவதிலிருந்தோ அல்லது புறக்கணிக்கப்படுவதிலிருந்தோ பாதுகாப்பதற்காகும்.


          மெய்தேய் சமூகத்திற்கு, பட்டியல் பழங்குடியினருக்கான (Scheduled Tribe) தகுதிநிலை வழங்குவதற்கான இந்த அங்கீகாரத்தை, குகி சமூகம் உட்பட பிற உள்ளூர் பழங்குடியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், நிலத் தகராறுகளால் பதட்டங்கள் தூண்டப்பட்டன. மே 3 அன்று சுராசந்த்பூர் மாவட்டத்தில் போராட்டங்கள் வன்முறையாக மாறியது. வன்முறை பின்னர் இம்பால் கிழக்கு (Imphal East), இம்பால் மேற்கு (Imphal West), பிஷ்னுபூர் (Bishnupur), தெங்னௌபால் (Tengnoupal) மற்றும் காங்போக்பி (Kangpokpi) போன்ற பிற மாவட்டங்களுக்கும் பரவியது. இதனால் சுமார் 67,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாக அறிக்கை கூறுகிறது. விளக்கப்படம்-1 2009 முதல் 2023 வரை இந்தியாவில் உள்நாட்டு இடப்பெயர்வுகளைக் காட்டுகிறது. உள்நாட்டு இடப்பெயர்வு என்பது குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகள் காரணமாக ஒரு நாட்டின் எல்லைகளுக்குள் மக்களின் கட்டாய நகர்வைக் குறிக்கிறது. இதில், பொதுவாக இடம்பெயர்ந்த மொத்த நபர்களின் எண்ணிக்கையை அல்ல. கூடுதலாக, ஒரே நபர்கள் பல முறை இடம்பெயர்ந்திருக்கலாம்.


பெரும்பாலான இயக்கங்கள், பாதிக்கும் அதிகமானவை, மணிப்பூருக்குள் நிகழ்ந்தன. அதில், ஐந்தில் ஒரு பங்கு அண்டை மாநிலமான மிசோரமுக்கும், சிறிய எண்ணிக்கையிலான இயக்கங்கள் நாகாலாந்து மற்றும் அசாமுக்கும் சென்றன. வன்முறை அதிகரித்ததால், ஒன்றிய அரசு ஊரடங்கு உத்தரவை (curfews) அமல்படுத்தியது. இதன் விளைவாக, இணையம் முடக்கப்பட்டது. பாதுகாப்புப் படைகளை அனுப்பியது. நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. மேலும்,  மணிப்பூருக்கான ஒரு சமாதானக் குழு நிறுவப்பட்டது. ஆனால் அதன் அமைப்பு பற்றிய கருத்து வேறுபாடுகளால் முயற்சி தடைபட்டது.


          விளக்கப்படம்-2 தற்போது இந்தியாவில் வசிக்கும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களைக் காட்டுகிறது. இது, இடம்பெயர்ந்த தனிநபர்களை மையமாகக் கொண்டுள்ளது. 2023ஆம் ஆண்டின் இறுதியில், இந்தியாவில் இதுபோன்ற தனிநபர்களை மையமாகக் கொண்டு 0.61 மில்லியன் நபர்கள் இருந்தனர். 2023ஆம் ஆண்டில், மோதல் மற்றும் வன்முறை காரணமாக உலகம் முழுவதும் 68.3 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது என்று அறிக்கை கூறுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், மோதல்களின் காரணமாக 22.6 மில்லியன் மக்கள் வெளியேற வேண்டியிருந்தது. இதனால், 2022 மற்றும் 2023-ல் மிகப்பெரிய அதிகரிப்புகள் நிகழ்ந்தன.



வரைபடம் 3-ஆனது, 2023ஆம் ஆண்டு நிலவரப்படி உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர்களின் நாடு வாரியான எண்ணிக்கையைக் காட்டுகிறது.


சூடான் (Sudan), காங்கோ ஜனநாயக குடியரசு (Democratic Republic of Congo) மற்றும் பாலஸ்தீன பிரதேசங்களில் (Palestinian territories) நடந்த மோதல்களால் 2023ஆம் ஆண்டில் மோதல் காரணமாக கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இடம்பெயர்ந்தனர். 2023 முழுவதும், சூடானில் வன்முறையால் ஆறு மில்லியன் மக்கள் கட்டாய இடம்பெயர்வு அடைந்துள்ளனர். இந்த இடம்பெயர்வு முந்தைய 14 ஆண்டுகளைவிட அதிகமாக உள்ளது. 2022ஆம் ஆண்டில் உக்ரைனின் 16.9 மில்லியனுக்குப் பிறகு ஒரு வருடத்திற்குள் இது இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கட்டாய நகர்வுகளாகப் பார்க்கப்படுகிறது. உலகெங்கிலும், 2023ஆம் ஆண்டில், மோதலின் விளைவாக ஏற்பட்ட உள்நாட்டு இடப்பெயர்வு நிகழ்வுகளின் எண்ணிக்கை 20.5 மில்லியனாக இருந்தது.


இந்த இடப்பெயர்வுகள் இயற்கை பேரிடர்களாலும் நிகழலாம். அந்த எண்ணிக்கையை நாம் சேர்த்தால், 2023ஆம் ஆண்டின் இறுதியில், பேரழிவுகள் காரணமாக 7.7 மில்லியன் உட்பட உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 75.9 மில்லியனாக இருந்தது. இது 2022-ன் இறுதியில் கணக்கிடப்பட்ட 71.1 மில்லியனிலிருந்து அதிகரித்துள்ளது.




Original article:

Share:

தேர்தல் தினத்தை விடுமுறை நாளாக அறிவித்த விவகாரம் - அமெரிக்கை வி நாராயணன்

 இந்தப் பிரச்சினை ஜனநாயகம் என்றால் என்ன என்பதில் ஆழமாக செல்கிறது.

 

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு வாக்களிப்பது என்பது வெறும்  கடமை அல்ல. அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமை. ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் வாக்களிப்பது கட்டாயம். தென்னாப்பிரிக்கா, தென்கொரியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் தேர்தல் நாளில் விடுமுறை அளிக்கின்றன. இது அதிகமான மக்கள் வாக்களிப்பில் பங்கேற்க உதவும். 


முதலாளிகள், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (Small and Medium-sized Enterprises (SMEs)), தேர்தல் நாளில் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்ற  கோரிக்கை அதிகரித்து வருகிறது. சிலர் அரசியலமைப்பு கொள்கைகளைக் குறிப்பிட்டு இதை ஆதரிக்கிறார்கள். மற்றவர்கள் அதன் முக்கியத்துவத்தை சந்தேகிக்கிறார்கள் மற்றும் தனிநபர் சுதந்திரங்களை மீறுவதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (Organisation for Economic Co-operation and Development (OOCED)) உள்ள பல முன்னேறிய ஜனநாயக நாடுகள் தங்கள் தேசிய தேர்தல்களை வார இறுதிகளில் நடத்துகின்றன.


அமெரிக்காவில், தேர்தல் நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு  சில  மாகாணங்கள் இதை ஊதிய விடுமுறையாக ஆக்குகின்றன. எவ்வாறாயினும், 'வாக்காளர் வாக்குப்பதிவை அதிகரித்தல்' (‘Increasing Voter Turnout’) குறித்து பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்  (Princeton University) நடத்திய ஆய்வில், தேர்தல் தினத்தை அரசு ஊழியர்களுக்கு விடுமுறையாக மாற்றுவது வாக்குப்பதிவை அதிகரிக்கும் என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. வெறுமனே வாக்கு பதிவு நாளில் விடுமுறை அளிப்பது வாக்குப்பதிவை அதிகரிப்பதற்கான ஒரு பயனுள்ள உத்தி அல்ல என்று ஆய்வு முடிவு  கூறுகிறது. 


சமநிலை பிரச்சினை


முதலாளிகள், தேர்தல் நாளை விடுமுறை தினமாக மாற்ற வேண்டும் என்பது முக்கியப்  பிரச்னையாக எழுந்துள்ளது. குடிமைக் கடமைக்கும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் இடையிலான சமநிலையை இது கேள்விக்குள்ளாக்குகிறது. வாக்களிப்பது கட்டாயம் இல்லை என்றால் வணிகங்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்கக் கட்டாயப்படுத்தப்பட வேண்டுமா? இந்தச் சுமையை முதலாளிகள் மீது சுமத்துவது சரியா?


கட்டாய விடுமுறை அறிவிப்பின் ஆதரவாளர்கள் வாக்களிப்பதை ஜனநாயகத்திற்கு முக்கியமானது என்று இந்திய அரசியலமைப்பு அங்கீகரிக்கிறது என்று வாதிடுகின்றனர். எனவே, தேர்தல் நாளில் ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிப்பது, இந்த அரசியலமைப்பு ஆணையை நிறைவேற்றும் வகையில், அவர்கள் வாக்குச் சாவடிகளை அணுகுவதை உறுதி செய்கிறது. மேலும், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI)), இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கம் (Associated Chambers of Commerce and Industry of India (ASSOCHAM)) மற்றும் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம் (National Association of Software and Services Companies (NASSCOM)) போன்ற அமைப்புகள் மக்கள் வாக்களிக்க உதவுவது உட்பட பரந்த சமூக இலக்குகளை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கட்டாய விடுமுறைகளை எதிர்ப்பவர்கள் தனிநபர் சுதந்திரம் மற்றும் சுதந்திர சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளுக்காக வாதிடுகின்றனர். ஜனநாயகத்தில், வாக்களிக்கலாமா வேண்டாமா என்ற உரிமை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தேர்தல் தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கலாமா என்பது உட்பட தங்கள் செயல்பாட்டுக் கொள்கைகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை முதலாளிகளுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு செய்ய அவர்களைக் கட்டாயப்படுத்துவது அவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கருதப்படலாம். குறிப்பாக குறைந்த வளங்களைக் கொண்ட சிறுவணிகங்களுக்கு இந்த நடவடிக்கைகள் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும்.  அமெரிக்கா போன்ற பிற ஜனநாயக நாடுகளுடன் ஒப்பிடுவது சிக்கலை மேலும் அதிகரிக்கிறது. அமெரிக்காவில், தேர்தல்நாள் ஒரு தேசிய விடுமுறை அல்ல, மேலும் வாக்களிப்பதற்கான அட்டவணையை நிர்வகிப்பதற்கு தனிநபர்கள் பொறுப்பு. சில மாகாணங்கள் வாக்களிப்பதற்கு ஊதியத்துடன் கூடிய நேரத்தை வழங்கினாலும், இது கூட்டாட்சி மட்டத்தில் நாடு தழுவிய அளவில் கட்டாயப்படுத்தப்படவில்லை.


இந்தியா என்ன செய்ய வேண்டும்?


வெவ்வேறு வணிகத் தேவைகள் மற்றும் கலாச்சார சூழல்களின் அடிப்படையில் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும் இதேபோன்ற அணுகுமுறையை இந்தியா பின்பற்ற வேண்டுமா என்ற கேள்விகளுக்கு இது வழிவகுக்கிறது. தமிழக உள்துறை செயலாளர் பி.அமுதா சமீபத்தில் முன்வைத்த ஒரு முன்மொழிவு, ஊதியத்துடன் கூடிய விடுப்பை வாக்களிப்பதற்கான சான்றுடன் இணைக்க வேண்டும் என்று முன்மொழிந்தார். இது வாக்காளர்களின் எண்ணிக்கையை ஊக்குவிக்கிறது. குடிமை ஈடுபாடு மற்றும் வணிகக் கவலைகளை நிவர்த்தி செய்து முதலாளிகள் முடிவெடுக்க அனுமதிக்கிறது. பணியாளர்கள் வாக்களித்து தங்கள் வேலைகளைச் செய்கிறார்கள். இது தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் சமூகக் கடமைகளை சமநிலைப்படுத்தும்.


முன்னோக்கில்


இறுதியில், தேர்தல் நாள் விடுமுறையாக இருக்க வேண்டுமா என்ற கேள்வி சட்டத்திற்கு அப்பாற்பட்டது. ஜனநாயகத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதுதான். மக்கள் மற்றும் வணிகங்கள் ஆகிய இருவரின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, வாக்களிப்பில் பங்கேற்க அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும். சட்டமியற்றுபவர்கள் கடுமையான விதிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, முதலாளிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தாமல் அதிகமான மக்களை வாக்களிக்க வைக்க ஆக்கப்பூர்வமான வழிகளை சிந்திக்க வேண்டும். எதிர்காலத்தில் தொழில்நுட்பம் எந்த அழுத்தமும் இல்லாமல் வீட்டிலிருந்து வாக்களிக்க அனுமதிக்கும். முதலாளிகள் தேர்தலுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டுமா என்பது பற்றிய இந்த விவாதம் சிக்கலானது. இது ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் பொருளாதாரம் போன்ற முக்கியமான கருத்துக்களை உள்ளடக்கியது. வாக்களிப்பது முக்கியமானது என்றாலும், குடிமைக் கடமை மற்றும் வணிகத் தேவைகள் இரண்டையும் மதிக்கும் சமநிலையைக் கண்டறிய வேண்டும். அதைப் பற்றிப் பேசுவதன் மூலமும், நெகிழ்வான யோசனைகளைக் கொண்டு வருவதன் மூலமும், இந்தியா தனது ஜனநாயக விழுமியங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் அதே வேளையில், பலதரப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.


நாராயணன் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த அரசியல்வாதி, கட்டுரையாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர் ஆவார்.




Original article:

Share:

விளாடிமிர் புடினின் புதிய ஆட்சிக் காலமும் பழைய பிரச்சனையும் : உக்ரைன் போர் குறித்து . . .

 போரின் விளைவுகள் ரஷ்யாவை பாதிக்கத் தொடங்கும் போது விளாடிமிர் புடின் சவால்களை எதிர்கொள்கிறார். 


ரஷ்யாவின் அதிபராக ஐந்தாவது முறையாக பதவியேற்ற பிறகு விளாடிமிர் புடின் எடுத்த முக்கிய முடிவுகளில் ஒன்று, தனது நீண்டகால பாதுகாப்பு அமைச்சராக இருந்த செர்ஜி ஷோய்குவை நீக்கியது. ஆண்ட்ரே பெலோசோவ், ஒரு இராணுவமல்லாத பொருளாதார நிபுணர், இப்போது பாதுகாப்பு அமைச்சகத்தின் பொறுப்பாளராக உள்ளார். இந்த மாற்றம் உக்ரைனில் நடந்த போர் எப்படி ரஷ்யாவிற்கு ஒரு பெரிய பொருளாதார சவாலாக மாறியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. கடுமையான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் காரணமாக போர்க்காலங்களில் அதன் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவது மற்றும் அதன் ஆற்றல் மற்றும் பாதுகாப்புத் தொழில்களை பராமரிப்பதில் ரஷ்யா சிரமங்களை எதிர்கொள்கிறது. ஷோய்கு எவ்வாறு போரை நிர்வகித்தார் என்பது பற்றிய விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. மேற்கத்திய உளவுத்துறையின் கருத்துப்படி, ரஷ்யா போர் குறுகியதாக இருக்கும் என்று எதிர்பார்த்தது, ஆனால் அது தொடர்ந்து நீடித்துள்ளது. ஆனால் 2014-ல் கிரிமியாவை (annexation of Crimea) இணைத்ததையும், 2015ஆம் ஆண்டு தொடங்கி சிரியாவில் ரஷ்யாவின் இராணுவத் தலையீட்டையும் வெற்றிகரமாகச் செயல்படுத்திய ஷோய்கு, கிரெம்ளின் மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு தொழில்துறை வளாகம் இரண்டிலும் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளார். ஆரம்பத்தில், ரஷ்யாவிற்கு பிரச்சனைகள் இருந்தன. வாக்னர் குழுவின் மறைந்த தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜின் கிளர்ச்சி செய்தார். ஆனால், விளாடிமிர் புடின் ஷோய்குவை ஆதரித்தார். இருப்பினும், விளாடிமிர் புடின் உக்ரைனில் வெற்றியை உறுதியளிக்கும் புதிய பதவிக் காலத்தைத் தொடங்குகையில், அவர் பாதுகாப்பு அமைச்சகத்தில் மாற்றங்களைச் செய்கிறார். இராணுவ இலக்குகளை விரைவாக அடைவதே முக்கியப் பணியாக இருக்கும் என்பதற்காக, ஒரு தொழில்நுட்ப வல்லுநரை அவர் பணியமர்த்தினார்.


போர்க்களத்தில், ரஷ்யாவானது இப்போது மாற்றங்களைச் செய்து வருகிறது. கடந்த வாரம், உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வை (Kharkiv) குறிவைத்து வடகிழக்கில் புதிய தாக்குதலை நடத்தியது. உக்ரைன் அமெரிக்காவிடமிருந்து புதிய ஆயுதங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால், அது போரினால் சோர்வடைந்த உக்ரைன் இராணுவத்திற்கு ரஷ்ய தாக்குதலைத் தாங்க போதுமானதாக இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. விளாடிமிர் புடினின் உடனடி இலக்கு போரில் வெற்றி பெறுவதுதான். ஆனால், வெற்றிக்கான தெளிவான பாதையும் அவரிடம் இல்லை. பொருளாதாரம் மற்றும் ஆற்றல் இணைப்புகளை வலுப்படுத்த விளாடிமிர் புடின் இலக்காகக் கொண்ட மேற்கு நாடுகளுடன், குறிப்பாக ஐரோப்பாவுடனான ரஷ்யாவின் உறவுகளுக்கு இந்தப் போர் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழல் ரஷ்யாவை சீனாவுடன் நெருக்கமாக்கியுள்ளது. உள்நாட்டில், விளாடிமிர் புடின் அரசாங்கம் மற்றும் சமூகத்தின் மீது அதிக கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளார். இதனால், அவர் மக்களின் கருத்து வேறுபாடுகளை பொறுத்துக்கொள்ளவில்லை. இதுவரை, அரசாங்கம் வழக்கமான மக்களை பொருளாதாரத் தடைகளின் விளைவுகளை உணராமல் பாதுகாத்து வருகிறது. ஆனால் போர் நீடித்தால் அவர்கள் எவ்வளவு காலம் அதைச் செய்ய முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.


உக்ரைன் அதன் கருங்கடல் கடற்படை மற்றும் எல்லை நகரங்களை குறிவைத்து ரஷ்யாவிற்கு எதிராக போராடியது. ரஷ்யாவை பொறுத்தவரை இது போரை அதிக செலவுள்ளதாக மாற்றியுள்ளது. விளாடிமிர் புடினுக்கு சில சிரமங்கள் இருந்தபோதிலும் தான் வெற்றி பெறுவதாக நம்புகிறார். இருப்பினும், உக்ரைனில் அவரது படைகள் முன்னேறினாலும், அவர் ரஷ்யாவை ஆளுவார். அது உள்நாட்டில் மிகவும் அடக்குமுறை, பொருளாதார ரீதியாக பலவீனமானது, மேற்கு நாடுகளில் தனிமைப்படுத்தப்பட்டது மற்றும் விரோதமான அண்டை நாடுகளுடன் தொடர்ந்து மோதலில் உள்ளது.




Original article:

Share:

குற்றமும் காலமும்: தேர்தல் நேர சிறைப்படுத்துதல் குறித்து . . .

 தேர்தல் நேரத்தில் சிறையில் அடைப்பது ஜனநாயக உணர்வை மோசமாக பாதிக்கிறது.


நீதித்துறை முடிவுகளில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் அது விதிகளின் சமமற்ற பயன்பாடாகக் கருதப்படும். ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் முக்தி மோர்ச்சா கட்சிக்கு தலைமை தாங்குகிறார். அவர் சமீபத்தில் ஜனவரி 31-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர், அவருக்கு இடைக்கால ஜாமீன் பெறுவதாகவும், அதன்மூலம் மே 20-ஆம் தேதி தொடங்கவுள்ள முதல் பொதுத் தேர்தலின் அடுத்த கட்டங்களில் தனது சொந்த மாநிலத்தில் பிரச்சாரம் செய்ய தகுதியுடையவராவார். ஹேமந்த் சோரன் ஜனவரி 31 அன்று கைது செய்யப்பட்டார். கடந்த வாரம்தான், இந்திய உச்சநீதிமன்றம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல்கள் முடியும்வரை பிணை வழங்கியதன் மூலம் பொதுத் தேர்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. இந்த முடிவு அரவிந்த் கெஜ்ரிவாலின் நிலைமைதான் இதற்குக் காரணம் என்றாலும், ஜனநாயக தேர்தல்களுக்காக முக்கியத் தலைவர்கள் தேர்தலின்போது பிரச்சாரம் செய்யலாம் என்ற கொள்கையை அது வகுத்தது.


இருப்பினும், ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு அமலாக்க இயக்குநரகத்தின் (Enforcement Directorate) தரப்பைக் கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் முடிவு செய்தது. இந்த வழக்கை மே 20 முதல் விசாரிக்க நீதிமன்றம் விரும்பியது, ஆனால் அதற்குப் பதிலாக மே 17 அன்று விசாரணையைத் தொடங்க ஒப்புக்கொண்டனர். ஜாமீன் வழங்குவதற்கு முன்பு அரசுத் தரப்பின் ஆட்சேபனைகளைக் கேட்பது சட்டப்படி அவசியம். கெஜ்ரிவால் வழக்கில், தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக ஒரு அரசியல் தலைவரை விடுவிப்பது இதேபோன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட மற்றவர்களைவிட அவர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் என்ற வாதத்தை நீதிமன்றம் கேட்டு தள்ளுபடி செய்தது.


ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் இரண்டு மாதங்களாக தீர்ப்பு வழங்காததால், அவர் உச்சநீதிமன்றத்தை அணுகுவதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியில், அது பிப்ரவரி 28 அன்று தீர்ப்பை ஒத்திவைத்த நிலையில், மே 3 அன்று அவரது மனுவை தள்ளுபடி செய்யும் உத்தரவை நிறைவேற்றியது. இதில், ஒவ்வொரு வழக்கும் தனித்துவமானது. டெல்லி முதல்வர், கலால் வரிக் கொள்கையை உருவாக்க லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அதேசமயம், ஹேமந்த் சோரன் ராஞ்சியில் சொத்து வாங்குவதற்காக சட்டவிரோதமாக நிலம் விற்ற பணத்தை வெள்ளையாக்கியதற்காக குற்றம் சாட்டப்பட்டார் (accused of laundering). ஆதாரங்கள் வேறுபடுகின்றன, கெஜ்ரிவாலுக்கு எதிரான சாட்சிகள் மற்றும் ஹேமந்த் சோரனுக்கு எதிரான ஆவணங்கள், அவர்களின் வழக்குகளின் தகுதியை பாதிக்கக்கூடும். 

பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 பிணைக்கான கடுமையான விதிகள் மூலம், நீதிமன்றங்கள் ஒரு வழக்கின் ஒட்டுமொத்தக் காரணத்தையும் ஆரம்பத்தில் தீர்மானிக்கின்றன. நிபந்தனைகளுடன் கூடிய சாதாரண பிணை விடுவிப்புகள்கூட அரசியல் குற்றச்சாட்டுகளாக மாறியிருப்பது வருந்தத்தக்கது. தேர்தலின்போது மக்களைச் சிறையில் அடைப்பது சம்பந்தப்பட்ட கட்சிகளை நியாயமற்ற முறையில் பாதிக்கிறது மற்றும் இது ஜனநாயகத்திற்கு எதிரானது.




Original article:

Share:

இந்திய அரசியலில் சமூக ஊடகங்களின் தாக்கம் -நீலஞ்சன் சிர்கார், யாமினி ஐயர்

 செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி போன்ற பாரம்பரிய ஊடகங்கள், ஒருதலைப்பட்சமாக  செயல்பட்டுவருகின்றன. வியாபாரத்தில் நிலைத்திருக்க இதை செய்கிறார்கள். இந்த மாற்றங்கள்  ஊடகத்தின் மீதான நம்பிகையை குறைக்கும். 


உத்தரப்பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் இளைஞர், "இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அதற்கு துருவ் ரதி தான் காரணம்" என்கிறார். ஆக்ராவில், இளம் ஜாதவ் ஆண்கள் ரதி மற்றும் உள்ளூர் இணையத்தில் "செல்வாக்கு"
பெற்றவர்களைப் பின்தொடர்வதாகக் கூறுகிறார்கள். மோகன்லால்கஞ்சில் உள்ள ராவத் சமூகத்தைச் சேர்ந்த ஆளும் பாரதிய ஜனதா கட்சியின்  இளம் ஆதரவாளர்கூட Youtube-ல் ரவிஷை பின்தொடர்வதாக ஒப்புக்கொள்கிறார். குறிப்பிடத்தக்க வகையில், சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் அத்தியாயங்களின் விவரங்களை அனைவரும் நினைவில் கொள்ள முடியும்.

இந்தியாவின் முதல் சமூக ஊடக தேர்தல் (social media election) இதுவாகும். சமூக ஊடகங்கள் அரசாங்கக் கட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு  வெவ்வேறு கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள உதவிவருகிறது. சில நேரங்களில் இது அரங்கத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாகி விடுகிறது. 


மாறும் வரையறைகள்


சமீபகாலமாக, பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவும்  சமூக ஊடகங்களை தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தி வருகின்றனர். 


பத்தாண்டுகளுக்கு முன்பு சமூக ஊடகங்களில் "வலதுசாரிச் சூழல்" உருவானது. பாரம்பரிய ஊடகங்கள் என்ன செய்தி வெளியிட்டன என்பது குறித்து மக்களிடையே அறிவார்ந்த முரண்பாடு ஏற்படுத்த இந்த ஊடகங்கள் உருவாக்கப்பட்டன. ஆரம்ப ஆண்டுகளில், பாரம்பரிய ஊடகங்கள் அச்சத்தை தீவிரமாகப் பரப்பவில்லை. இருப்பினும், வலதுசாரி சமூக ஊடகங்கள் வெறுப்பு பிரச்சாரங்களைப் பரப்பவுதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. வெளிப்படையாக இது அரசியல் சார்புகளை வெளிப்படுத்தியது முஸ்லிம்கள், பெண்கள் மற்றும் வரலாற்றை மாற்றி எழுதுவது போன்ற நடவடிக்கைகள் மூலம் ஊடக நெறிமுறையை கடக்கத் தொடங்கினர். 


வெறுப்பூட்டும் பேச்சுப் பேரணிகள் அல்லது கலவரங்களை ஏற்பாடு செய்யாமல், சிறுபான்மைக் குழுக்கள் மற்றும் போட்டியாளர்கள் மீது வெறுப்பையும் கோபத்தையும் எவ்வாறு தூண்டுகிறது என்பதை குணால் புரோஹித், தனது “எச்-பாப்: இந்துத்துவா பாப் நட்சத்திரங்களின் ரகசிய உலகம்  (H-Pop: The Secretive World of Hindutva Pop Stars)” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, குறிப்பாக பிரதான ஊடகங்கள் பல வலதுசாரிக் கருத்துக்களுக்கு எதிர்க் கருத்து கூறத்தொடங்கிவிட்டன. அது மக்கள் பெறும் தகவல்களைப் பெருக்கியது. பாஜக ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், குறிப்பிட்ட ஒரு சில ஊடகங்கள் மட்டுமே பாஜகவை ஆதரிக்கின்றன. அதிகமான மக்கள் அலைபேசிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். அலைபேசி மூலம் வெவ்வேறு கருத்துக்களைப் பார்வையிடுகிறார்கள். இது விமர்சனக் குரல்களைக் கேட்கும் வாய்ப்பை அளித்தது. இந்தக் குரல்கள் எந்த அரசியல் கட்சியுடனும் பிணைக்கப்படவில்லை. எனவே பாரம்பரிய ஊடகங்கள் இழந்த நம்பகத்தன்மையைப் மீண்டும் பெற்றன. நாங்கள் பேசிய பலர், இந்தியாவில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை சமூக ஊடகங்கள் மூலம் கண்டுபிடித்ததாகச் சொன்னார்கள். செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி போன்ற பாரம்பரிய ஊடகங்கள், ஒருதலைபட்சமாக  செயல்பட்டுவருகின்றன. வியாபாரத்தில் நிலைத்திருக்க இதை செய்கிறார்கள். இந்த மாற்றங்கள்  ஊடகத்தின் மீதான நம்பிகையை குறைக்கும். 


YOUTUBE மற்றும் FACEBOOK-ல் பயன்படுத்தப்படும் நிரல் நெறிமுறைகளின் (algorithm) அம்சம் என்னவென்றால், பிரபலமடைந்து வரும் கருத்துக்கள் முழுப் பயனர் தளத்திற்கும் பரப்பப்படும். இந்த நிரல் நெறிமுறைகள் கருத்துகளை வேகமாக பகிரச் செய்கின்றன. உதாரணமாக, “இந்தியா சர்வாதிகாரமாக மாறுகிறதா?”  (“Is India becoming a DICTATORSHIP?”) என்று ரதியின் காணொளி கேட்கிறது. இது யூடியூப்பில் ஏற்கனவே 25 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது. காணொளியின் சில பகுதிகள் மற்ற சமூக ஊடகத் தளங்களில் பகிரப்படுவதால் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.

 

பயம் காரணமாக பேசத் தயங்கும் வாக்காளர்களுக்கு சமூக ஊடகங்கள் அரசியல் ஈடுபாட்டிற்கான இடமாக மாறியுள்ளன. மோகன்லால்கஞ்சில் (Mohanlalganj), ஜாதவ் சமூகத்தைச் சேர்ந்த, உள்ளூர் INSTAGRAM-ல் ஆதிக்கம் செலுத்துபவரை நாங்கள் சந்தித்தோம். அவர் அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால், பாஜகவால் மிகவும் விரக்தியடைந்து இருக்கிறார்.  அவர் என்னை நோக்கி "நான் எல்லாவற்றையும் கவனிக்கிறேன். ஆனால், வெளியே பேசப் பயப்படுகிறேன்" என்றார்.


இருப்பினும், நீண்டகால விளைவுகளை நாம் இன்னும் நெருக்கமாக ஆராய வேண்டும். முதலாவதாக, முறையான கட்சி அமைப்புக்கு வெளியே இப்போது அரசியல் கதைகள் உருவாக்கப்படுகின்றன. கடந்த காலங்களில், கட்சிப் பணியாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் வாக்காளர்களை அரசியல் சித்தாந்தங்களுடன் இணைத்து, அடிமட்டத்திலிருந்து கொள்ககளை உருவாக்கினர். ஆனால், சமூக ஊடகங்கள் இந்தத் தொழிலாளர்கள் மற்றும் இடைத்தரகர்களின் முக்கியத்துவத்தைக் குறைத்து வருகின்றன. 


சமூக ஊடகங்கள் தலைவர்களை நேரடியாக கதைகளை வடிவமைக்க அனுமதிக்கிறது. இது கட்சிகளுக்குள் அதிக மையப்படுத்தலுக்கு வழிவகுக்கிறது. நிரல்நெறிமுறைகளும் துருவமுனைப்படுத்தலை அதிகரிக்கின்றன. கட்சி கட்டமைப்புகள் மற்றும் மிக முக்கியமாக, பொதுவெளியில் தாக்கம் இன்னும் நிச்சயமற்றது.


எவ்வாறாயினும், இந்தத் தேர்தலில் சமூக ஊடகங்களின் முக்கிய பங்கேற்பு, அரசியல் பிரச்சினைகளை நம்பகத்தன்மையுடன் வடிவமைக்கும் அதன் தொழில்முறை நோக்கத்திலிருந்து பாரம்பரிய ஊடகங்களின் பெரும்பகுதியை முற்றிலுமாக கைவிடுவதோடு அனைத்தையும் கொண்டுள்ளது. நியாயமான விவாதத்திற்கும் இந்திய ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கும் இது எதைக் காட்டுகிறது? 2024 தேர்தல் எழுப்பும் கேள்வி இதுதான்.


யாமினி அய்யர் ஒரு பொதுக் கொள்கை அறிஞர்; நீலஞ்சன் சிர்க்கார், சீனியர் ஃபெலோ, சென்டர் ஃபார் பாலிசி ரிசர்ச்.




Original article:

Share:

வருமான வரிச் சட்டத்தில் பிரிவு 43B(h)-ன் எதிர்பாராத விளைவுகள் -Editorial

 பிரிவு 43B(h) சிறு வணிகங்களுக்கு அவர்களின் பணத் தேவைகளுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது. இருப்பினும், இது சிறு வணிகங்களை பாதிக்கலாம். ஏனெனில், விநியோகச் சங்கிலிகள் மற்றும் நிதிகள் உண்மையில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கருத்தில் கொள்ளவில்லை.


வருமான வரிச் சட்டத்தின் 43B (h) (Income Tax Act) பிரிவு குறித்த வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர் குழுக்களின் மனுவை ஒரு வாரத்திற்கு முன்பு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மாறாக அவர்களின் மனுக்களை அந்தந்த உயர்நீதிமன்றங்களுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டது. 2024 நிதியாண்டு வரவு செலவு திட்டத்தில் தொடங்கிய இந்தப் பிரிவு, ஒரு சிறு வணிகத்திற்கு 45 நாட்களுக்குள் பணம் செலுத்தப்படாவிட்டால் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு சட்டம், 2006-ன் (Micro, Small and Medium Enterprises Development Act), பிரிவு 15-ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் வரி செலுத்தவில்லை என்றால், அந்த ஆண்டு வரிவிலக்கு கோர முடியாது என்று கூறுகிறது. அவர்கள் நிலுவைத் தொகை செலுத்தப்படும் ஆண்டில் மட்டுமே வரிவிலக்கு கோர முடியும்.


இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை. இருப்பினும், மனுதாரர்கள் ஒரு அரசியலமைப்புப் பிரிவு 43-ல் உள்ள விதிகள் வணிக மற்றும் ஒப்பந்த உரிமைகளுக்கு எதிராக உள்ளதா என்று மனுதாரர்கள் கேட்க விரும்பினர். எப்படியிருப்பினும், பிரிவு 43B(h) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) தற்போதைய நடப்பு மூலதன சிக்கல்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனாலும், அது அவர்களின் வணிகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். இது உண்மையான விநியோகச் சங்கிலி மற்றும் நிதி நிலைமைகளைக் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது. 45 நாள் கடனுக்கான பாதையின் விதி தன்னிச்சையானது மற்றும் நம்பத்தகாததாக கருதப்படுகிறது. வணிகங்கள் திரட்டும் கணக்கியலின் அடிப்படையில் செலவுகளைக் கழிக்க முடியும் என்றாலும் இந்த விதி நடைமுறைக்கு மாறானதாகக் காணப்பட்டது. இதைச் சமாளிக்க, சந்தை பங்குதாரர்கள் தங்கள் சொந்த வழிகளைக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் காசோலைகளை எழுதி கணக்கேடுகளில் பதிவு செய்கின்றனர். எனினும் இக்காசோலைகளை வங்கியில் சமர்ப்பிப்பதில்லை என அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இந்த வழியில், அவர்கள் 45 நாள் வரம்பை மீறுகிறார்கள். இந்த நடைமுறை வணிகங்களுக்கு நீண்ட கடன் காலம் தேவை என்பதைக் காட்டுகிறது. அவர்கள் 180 நாட்களுக்கு நெருக்கமான ஒன்றை விரும்புகிறார்கள். இந்தக் காலம் ஒரு பரிவர்த்தனையை முடிக்க மற்றும் உள்ளீட்டு வரி கடன் கோர சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிகளின்கீழ் அனுமதிக்கப்பட்ட நேரத்துடன் பொருந்துகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) இந்த நடைமுறைகளை ஏற்றுக்கொள்கின்றன. ஏனெனில், சிறந்த கடன் விதிமுறைகளை வழங்கும் போட்டியாளர்களிடம் வணிகத்தை இழக்க நேரிடும் என்று அவர்கள் கவலை அடைகிறார்கள்.


கடன் சந்தையின் கடுமையான நிலைமைகளைக் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) வெறுமனே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறவில்லை. அவர்களுக்கு மலிவான நடப்பு மூலதனத்திற்கான அணுகல் தேவை. இதை அடைய பல சிறந்த தீர்வுகள் உதவும்.  முதலாவதாக, புகழ்பெற்ற நிறுவனங்களுடன் கையாளும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) தங்கள் உயர் மதிப்பிடப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கக்கூடிய நிதி விகிதங்களைப் பெற வேண்டும். இரண்டாவதாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) மூலப்பொருட்களை வழங்குபவர்களுக்கு வங்கிகள் நிதி அமைப்பை உருவாக்க வேண்டும். இந்த அமைப்பு விநியோகிப்பவர்களை முன்கூட்டியே பணம் செலுத்துவதைத் தவிர்க்க அனுமதிக்கும். மூன்றாவதாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) குறித்த 2019 இங்கிலாந்து சின்ஹா குழு அறிக்கையின்படி (Sinha committee report), வங்கிகள் இருப்புநிலைக் குறிப்புகளின் அடிப்படையில் கடன் வழங்குவதிலிருந்து பணப்புழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் விற்றுமுதல் மற்றும் ஜிஎஸ்டி தரவைப் பயன்படுத்தி வணிகத்தின் பணப்புழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியது. இந்த மாற்றம் வலுவான பணப்புழக்கங்களைக் கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) போதுமான பிணையம் இல்லாவிட்டாலும், கடன் பெற உதவும். நான்காவதாக, TReDS (Trade Receivables electronic Discounting System) எனப்படும் வர்த்தக வரவுகள் மின்னணுத் தள்ளுபடி முறையை வலுப்படுத்த வேண்டும்.


முதல் மூன்று படிகளை அமல்படுத்தாமல், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) தள்ளுபடிக்கான இரசீதுகளுக்கான செலவு கணிசமாக அதிகரிக்கும். விநியோகச் சங்கிலி நிதியளிப்பில் இறுக்கமான நிதிச் சுருக்கம் சங்கிலியின் நடுவில் நிகழ்கிறது என்பதை ஒப்புக்கொள்வது முக்கியம். மேலே உள்ள பெரிய நிறுவனங்கள் ஆணைகளைத் திட்டமிடுவதிலும் பணம் செலுத்துவதிலும் அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளன. சட்ட ஆணைகள் குறையும் இடங்களில் சந்தை அடிப்படையிலான தீர்வுகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதை இந்த நிலைமை எடுத்துக்காட்டுகிறது. இந்த உண்மை பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை.




Original article:

Share:

சபஹார் நீரில் நங்கூரமிடும் உறவுகள் -HT தலையங்கம்

 இந்தியாவும் ஈரானும் தங்கள் இராஜதந்திர முடிவுகளில் சுதந்திரமாக இருக்க விரும்புவதை துறைமுக ஒப்பந்தம் தெரிவிக்கிறது.


மேற்கு ஆசியாவில் நிலவும் நிலையற்றத் தன்மை காரணமாக உலக வர்த்தகத்தில் ஏற்படும் இடையூறுகளை கருத்தில் கொண்டு, இராஜதந்திர சபஹார் துறைமுகத்தில் (Chabahar port) இந்திய அரசு நடத்தும் நீண்டகால நடவடிக்கைகளுக்காக இந்தியாவும் ஈரானும் கையெழுத்திட்ட ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் ஈரானுடன் வர்த்தக மையத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு சபஹார் திட்டம் (Chabahar project) 2016-ல் தொடங்கியது. ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட போதிலும், ஆப்கானிஸ்தானில் ஆர்வமாக இருந்ததால், அமெரிக்கா இந்தத் திட்டத்தை அனுமதித்தது. இப்போது நிலைமை மாறிவிட்டது, ஈரானுடன் வணிக ஒப்பந்தங்களில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களுக்கும் எதிராக பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தும் அமெரிக்காவின் அச்சுறுத்தல் குறித்து இந்தியத் தரப்பு கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் சபஹாரைக் குறிப்பிட்டு, ஈரானுடனான ஒப்பந்தங்களைப் பற்றி சிந்திக்கும் எந்தவொரு நிறுவனமும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளக்கூடும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.


ஆப்கானிஸ்தான் மற்றும் நிலத்தால் சூழப்பட்ட மத்திய ஆசிய நாடுகளை அடைய ஒரு வர்த்தக வழியை உருவாக்க இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இந்தத் திட்டம் ஒரு முக்கிய வாய்ப்பாக அமைகிறது. இது தெஹ்ரானுடனான (Tehran) இந்தியாவின் நீண்டகால உறவின் ஒரு பகுதியாக, ஒரு நாகரீக மரபாகக் காணப்படுகிறது. மேலும் புவிசார் அரசியலின் நிர்ப்பந்தங்களில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. இருப்பினும், தெஹ்ரானுடனான மேற்கத்திய நாடுகளின் உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களால் இந்தியா-ஈரான் உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகால ஒப்பந்தத்தின் காரணமாக இந்த திட்டத்தில் இந்தியாவின் உறுதிப்பாட்டை ஈரான் நன்றாக உணர்கிறது. பல ஆண்டுகளாக சபஹாரில் ஒரு முனையத்தை உருவாக்க உதவுவதாக இந்தியா உறுதியளித்துள்ளது. ஆனால், அமெரிக்க பொருளாதாரத் தடைகள் காரணமாக நவீன உபகரணங்களைப் பெறுவதில் தடைகளை எதிர்கொண்டது. இருப்பினும், இந்திய அரசு நடத்தும் நிறுவனம் 2018ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து சபஹாரில் 8.4 மில்லியன் டன்களுக்கும் அதிகமான சரக்குகளைக் கையாண்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஆழமான நீர்த் துறைமுகத்தின் உண்மையான ஆற்றலையும், இந்தியாவின் திட்டங்களையும் மட்டுமே பிரதிபலிக்கிறது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். புதிய உபகரணங்களில் $120 மில்லியன் முதலீடு செய்வது சபஹாரின் திறனுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.


தற்போதைய சூழ்நிலையில், சபஹார் துறைமுகத்தால் இந்தியா பொருளாதார ரீதியாக பலனடையும். குறிப்பாக ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடலோர உள்கட்டமைப்புகளில் சீனாவும் ஆர்வமாக இருக்கும் போது, ஈரானுடனான தனது உறவுகளை வலுப்படுத்த இந்தியா உதவும். கூடுதலாக, இது ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவுடனான வர்த்தகத்தை இந்தியாவுக்கு எளிதாக்கும்.  துறைமுகம் பற்றிய ஒப்பந்தம் இந்தியாவின் நீண்ட கால பொருளாதார மற்றும் இராஜதந்திர இலக்குகளை அடிப்படையாகக் கொண்டது. புதுடெல்லி மற்றும் தெஹ்ரான் ஆகிய இரு நாடுகளும் மற்ற நாடுகளுடன் தற்போதைய இராஜதந்திர உறவுகள் இருந்தபோதிலும், தங்கள் சொந்த தேசிய நலன்களுக்கு நன்மை பயக்கும் வழிகளில் செயல்படுவதில் கவனமாக இருப்பதை இது காட்டுகிறது. இருப்பினும், இந்த சமநிலையை அடைவதற்கு சில கவனமான மேலாண்மை தேவைப்படும்.




Original article:

Share:

இந்தியா ஏன் வேலைவாய்ப்பில் எழுச்சியைக் காண்கிறது? - லவிஷ் பண்டாரி, அம்ரேஷ் துபே

 வேலைவாய்ப்பு வளர்ச்சி பற்றிய பல கதைகள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. எளிமையான விளக்கங்கள்  இதற்கு  உதவாது.


வேலைவாய்ப்பு பற்றிய எண்கள் எப்போதும் கருத்து வேறுபாடுகளை உடையது. சமீபகாலமாக இந்தக் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு அதிக ஆராய்ச்சி, மிகவும் சிக்கலான வேலை மற்றும் பொருளாதார நிலைமைகள் மற்றும் மோசமான தரவு காரணமாகும். இந்தக் காரணிகளை மக்கள் ஒப்புக்கொள்வது கடினம். பொதுவிவாதங்களில், திடமான ஆராய்ச்சியைப் பயன்படுத்தாமல் மக்கள் பெரும்பாலும் வேலைவாய்ப்புப் போக்குகளைப் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்தப் போக்குகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களை ஆராய்ச்சி விளக்க வேண்டும்.


1983 முதல் 2023 வரையிலான தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகத்தின் (National Sample Survey Office (NSSO)) தரவு பயன்படுத்தப்பட்டது. வேலைவாய்ப்பு எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்வதே இலக்காக இருந்தது. இந்த எண்களை இன்னும் விரிவான பகுதிகளாகப் பிரிக்க விரும்புகிறோம். 1983 முதல் இப்போது வரை, ஒவ்வொரு காலகட்டத்திலும் முக்கிய வகை வேலை வாய்ப்புகள் அதிகரித்திருப்பதைக் கண்டோம். வேலைவாய்ப்புகள் வளராத காலம் இருந்ததில்லை. முக்கிய வேலைவாய்ப்பில் ஆண்டு முழுவதும் நடைபெறும் வேலைகள் அடங்கும். இதற்கு நேர்மாறாக, துணை நிறுவன வேலைவாய்ப்பு பொதுவாக பகுதி நேரமானது மற்றும் குறுகிய காலத்திற்கு நீடிக்கும். வேலை வளர்ச்சியை அளவிடும் போது துணை வேலைவாய்ப்பை கருத்தில் கொள்ள மாட்டோம் மற்றும் வேறு யாரும் அதை செய்யக்கூடாது என்று வாதிடுகிறோம்.


2017-18 மற்றும் 2022-23-க்கு இடையில், வேலைவாய்ப்பில் விரைவான உயர்வைக் கண்டோம், சுமார் 80 மில்லியன் அதிக வேலைகள் உள்ளன. இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.3 சதவீத வளர்ச்சியாகும், இது மக்கள்தொகை எவ்வாறு வளர்ந்து வருகிறது என்பதைவிட மிக வேகமாக உள்ளது. நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில், விவசாயம், கட்டிடம், பொருட்கள் தயாரித்தல் மற்றும் சேவைகள் போன்ற தொழில்களிலும், வெவ்வேறு வயதினர் மற்றும் பெண்களிடையேயும் என இந்த வளர்ச்சி எல்லா இடங்களிலும் நடக்கிறது.


இந்த நேரத்தில் பெண்கள் மிகுந்த வளர்ச்சியைக் கண்டனர். ஒவ்வொரு ஆண்டும் 8 சதவீதத்திற்கும்அதிகமாக பெண்களின் வளர்ச்சி இருந்தது. மேலும், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதானவர்கள் வேலைகளைப் பெறுகிறார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4.5 சதவீதம் அதிகம். ஏன் அதிகமான பெண்கள் மற்றும் வயதானவர்கள் வேலை செய்கிறார்கள்? காலம் கடினமாக இருப்பதால் அவர்கள் வேலை செய்ய வேண்டும் என்று மக்கள் கூறலாம். ஆனால் வேறு காரணங்களும் உள்ளன. குறைவான குழந்தைகள் பிறக்கின்றன மற்றும் தண்ணீர் மற்றும் ஆற்றல் போன்ற விஷயங்களுக்கு சிறந்த அணுகல் இருப்பதால், மற்றவர்களைக் கவனித்துக்கொள்வதில் அல்லது வீட்டு வேலைகளைச் செய்வதில் தங்கள் நேரத்தை செலவிடும் நபர்களுக்கு, இப்போது வேலை செய்ய விரும்பினால் அதிக வாய்ப்புகள் உள்ளன. வயதானவர்களுக்கு வேலைகள் கிடைப்பது புதிதல்ல இது 1980களில் இருந்து நடந்து வருகிறது. 


பொருளாதாரத்தில், உற்பத்தி மற்றும் கட்டுமானம் ஒவ்வொரு ஆண்டும் 3.4 மற்றும் 5.9 சதவீதமாக அதிகரித்தது. இதற்கு முன்பு இன்னும் சிறந்த வளர்ச்சியைக் கண்டோம். விவசாயம் மற்றும் சேவைகள்துறை அதிக வெற்றியைப் பெற வேண்டும். குறிப்பாக, பயிர்கள் அல்ல, கால்நடைகள் மற்றும் மீன்வளம் விவசாயத்தில் மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டதாகத் தெரிகிறது.


வேலைவாய்ப்பில் இந்த வளர்ச்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது. மொத்த வேலைவாய்ப்பு அதிகரிப்பு 80 மில்லியனில், 44 மில்லியன் பேர் சொந்தக் கணக்குத் தொழிலாளர்கள் மற்றும் ஊதியம் பெறாத குடும்பப் பணியாளர்களாக உள்ளனர் . இவர்கள் பொதுவாக சுயதொழில் செய்கிறார்கள் மற்ற வேலை வாய்ப்புகள் இல்லாதவர்களுக்கு இந்த வகையான வேலைக் கடைசி வாய்ப்பாகும். இந்த தொழிலாளர்கள் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் (Pradhan Mantri MUDRA Yojana (PMMY)) முக்கிய பெறுநர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இந்தத் திட்டம் 2015-16 இல் தொடங்கப்பட்டு 2022ஆம் ஆண்டின் இறுதியில், கிட்டத்தட்ட 23 லட்சம் கோடியை 380 மில்லியன் கணக்குகளை உருவாக்கியுள்ளது. கூடுதலாக, இந்தக் காலகட்டத்தில் நேரடி பணப் பரிமாற்றங்களின் அதிகரிப்பு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்கலாம். இந்த வளர்ச்சிக்கான காரணங்களைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. இந்த வேலைத் துறையில் வளர்ச்சி நன்றாக இருக்கிறதா, அதைத் தொடர முடியுமா என்பதை அறிய இது உதவுகிறது.


சமீபத்திய ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக ஊதியங்கள் மற்றும் சம்பளங்கள் அதிகம் உயரவில்லை. 2017-18 முதல் 2022-23 வரை, சம்பளம் மற்றும் ஊதியங்களின் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் அடிப்படையில் 6.6% ஆக இருந்தது. இருப்பினும், பணவீக்கத்தை சரிசெய்யும்போது, ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சி 1.2% மட்டுமே. இதன் பொருள், ஒட்டுமொத்தமாக ஊதியத்தில் பெரிய பிரச்சனை உள்ளது என்பதே.  ஆனால், வாழ்க்கை நிலைமைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.


அதிக எண்ணிக்கையிலான மக்கள் பணியிடத்தில் நுழைவதும் ஒரு காரணமாக இருக்கலாம். இது ஊதியம் மற்றும் சம்பளத்தைக் குறைக்கலாம். மற்றொரு காரணம் தொழிலாளர் உற்பத்தித்திறன் தேக்கமாக இருக்கலாம்.


அரசின் நலத்திட்டங்கள், பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள், மக்கள்தொகை மாற்றங்கள் அல்லது பிற காரணிகள் வேலைவாய்ப்பின் அதிகரிப்புக்குக் காரணமான துயரங்கள் ஆகியவை மிகவும் கவனமாக ஆராயப்பட வேண்டும். இருப்பினும், வேலைவாய்ப்பு வளர்ச்சியைப் பற்றி பல முரண்பட்ட கதைகள் உள்ளன என்பது தெளிவாகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


கட்டுரை எழுத்தாளர்கள் CSEP உடன் வேலை செய்கிறார்கள்.




Original article:

Share:

ChatGPT-யை சிறந்ததாகவும் அனைவருக்கும் இலவசமாகவும் மாற்றும் OpenAI -ன் புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரி GPT-4o -பிஜின் ஜோஸ்

 இலவச பயனர்களுக்கு GPT-4o என்பது ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. ஏனெனில் அவர்கள் இப்போது GPT-4-நிலை நுண்ணறிவை மிக விரைவான மற்றும் திறமையான ChatGPT -ல் பெறுவார்கள்.


மே 13 திங்கட்கிழமை அன்று, OpenAI ஆனது GPT-4o என்ற புதிய பெரிய மொழி மாதிரியை (large language model (LLM)) அறிமுகப்படுத்தியது. இது அவர்களின் வேகமான மற்றும் சக்திவாய்ந்த AI மாதிரியை அறிமுகப்படுத்துகிறது. இது ChatGPT ஐ மேம்படுத்தி, அதை சிறந்ததாகவும், எளிமையாகவும் மாற்றும் என்று அவர்கள் கூறுகிறார்கள். 


இதற்கு முன், OpenAI-லிருந்து மிகவும் மேம்பட்ட பெரிய மொழி மாதிரி (large language model (LLM)) GPT-4 ஆகும். இது பணம் செலுத்தும் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்தது. ஆனால், இப்போது, GPT-4o அனைவரும் பயன்படுத்த இலவசமாகக் கிடைக்கும்.


GPT-4o என்றால் என்ன?


GPT-4o, இதில் "o" என்பது "ஆம்னி" (“o” stands for “Omni”) என்பதைக் குறிக்கிறது. இது ஒரு அற்புதமான செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியாகக் காணப்படுகிறது. மனிதர்கள் கணினிகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை மேம்படுத்த இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, பயனர்கள் உரை, காணொலி அல்லது படங்களை உள்ளிடலாம் மற்றும் அதே வடிவங்களில் பதில்களைப் பெறலாம். இது GPT-4o-ஐ பல்திறன் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியாக மாற்றுகிறது. இது பழைய மாதிரிகளிலிருந்து ஒரு பெரிய மாற்றமாகத் தெரிகிறது.


OpenAI இன் தலைமை தொழில்நுட்ப அதிகாரி, மீரா முராட்டி, புதிய மாதிரி  பயன்பாட்டிற்கு எளிதாக வரும்போது OpenAI ஒரு பெரிய படியை முன்னோக்கி வைப்பது இதுவே முதல் முறை என்று கூறினார்.


GPT-4o, நேரடி செய்முறைகளின் அடிப்படையில், ChatGPT பல பணிகளைச் செய்யக்கூடிய மின்னணு உதவியாளராக மாறியது போல் தெரிகிறது. இதில் நிகழ்நேரத்தில் மொழிபெயர்க்கலாம் (real-time translations), பயனரின் முகங்களைப் படிக்கலாம் (reading a user’s face) மற்றும் நிகழ்நேர பேச்சு உரையாடல்களின் மூலம் பேசலாம் (real-time spoken conversations). இது, இதைப்போன்ற மற்ற ஒத்த மாதிரிகளை விட மேம்பட்டது.


GPT-4o உரை மற்றும் படங்களைப் பயன்படுத்தி கலந்துரையாட முடியும், எனவே, பயனர்கள் பதிவேற்றும் ஸ்கிரீன் ஷாட்கள் (screenshots), புகைப்படங்கள்  (photos), ஆவணங்கள் (documents) அல்லது விளக்கப்படங்களைப் (charts) பார்க்கவும் விவாதிக்கவும் முடியும். புதிய ChatGPT ஆனது கடந்த கால உரையாடல்களை நினைவில் வைத்து அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளும் என்று OpenAI குறிப்பிட்டுள்ளது.


GPT-4o க்குப் பின்னால் உள்ள தொழில்நுட்பம் என்ன?


செயற்கை நுண்ணறிவு சாட்போட்களுக்கு (AI chatbots) பெரிய மொழி மாதிரி (large language model (LLM)) இன்றியமையாதவை. இந்த மாதிரிகளில் பெரிய அளவிலான தரவுகள் கொடுக்கப்பட்டு, தானாகவே விஷயங்களைக் கற்கும் திறனை உருவாக்குகிறார்கள்.


GPT-4o என்பது முந்தைய மாதிரிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. முன்பு, வெவ்வேறு பணிகளைக் கையாள பல மாதிரிகள் தேவைப்பட்டன. ஆனால் இப்போது, GPT-4o ஆனது, உரை, படங்கள் மற்றும் ஒலி போன்ற அனைத்தையும் ஒரே மாதிரியில் செய்கிறது. ஆனால் GPT-4o மூலம், இந்த பணிகள் அனைத்தையும் அது தானே செய்ய முடியும். பழைய மாதிரிகளுக்கு குரல் பயன்முறைக்கு மூன்று வெவ்வேறு மாதிரிகள் தேவை என்று முராட்டி விளக்கினார். ஆனால், GPT-4o-ல்  அனைத்தையும் ஒன்றாகச் செய்கிறது.


இதன் பொருள் GPT-4o பல்வேறு வகையான தகவல்களை ஒன்றாகப் புரிந்துகொள்வதில் சிறந்தது. உதாரணமாக, இது தொனி (tone), பின்னணி இரைச்சல் (background noises) மற்றும் ஒலிப்பதிவில் உள்ள உணர்ச்சிகளை (emotional context in audio) ஒரே நேரத்தில் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்த திறன்கள் முந்தைய மாதிரிகளுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.


அம்சங்கள் மற்றும் திறன்கள் என்று வரும்போது, GPT-4o வேகம் மற்றும் செயல்திறன் போன்ற துறைகளில் சிறந்து விளங்குகிறது. ஏனெனில், இது ஒரு நபர் உரையாடலில் 232 முதல் 320 மில்லி வினாடிகளில் கேள்விகளுக்கு விரைவாக பதிலளிக்கிறது. இந்த புதிய மாதிரி ஒரு பெரிய முன்னேற்றம் ஆகும். இதற்கு முன், பழமையான மாதிரிகள் பதிலளிக்க பல வினாடிகள் எடுத்தன.


GPT-4o பல மொழிகளை ஆதரிக்கிறது மற்றும் ஆங்கிலம் தவிர வேறு மொழிகளில் உள்ள உரையைப் புரிந்துகொள்வதில் சிறந்ததாக உள்ளது. இது உலகளாவிய பார்வையாளர்களுக்கு அணுகக்கூடியதாக அமைகிறது.


GPT-4o ஒலி மற்றும் காணொலிகளைப் புரிந்துகொள்வதிலும் இது மேம்பட்டுள்ளது. நேரடி செய்முறைகளில், ChatGPT ஒரு கணிதச் சிக்கலை பயனர் எழுதியது போல் தீர்த்தது. இது ஒளிப்பதிவுக் கருவியில் ஒருவரின் உணர்ச்சிகளைச் சொல்லவும் பொருள்களை அடையாளம் காணவும் முடியும்.


அது ஏன் முக்கியம்?


மெட்டா மற்றும் கூகிள் போன்ற பெரிய நிறுவனங்கள் இன்னும் சிறந்த பெரிய மொழி மாதிரிகளை (large language model (LLM)) உருவாக்கி அவற்றை வெவ்வேறுத் தயாரிப்புகளில் பயன்படுத்தும் நேரத்தில் இது நிகழ்கிறது. GPT-4o ஆனது, OpenAI-ல் பில்லியன்களை முதலீடு செய்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், அது தற்போதுள்ள சேவைகளில் இந்த மாதிரியை பயனுள்ளதாக மாற்ற முடியும்.


இந்த புதிய மாதிரி, கூகுளின் டெவலப்பர் மாநாட்டிற்கு (Google I/O developer conference) முன்னதாக வெளிவருகிறது. அங்கு, அவர்கள் தங்கள் புதிய ஜெமினி செயற்கை நுண்ணறிவு மாதிரியைப் (Gemini AI model) பற்றி பேசலாம். GPT-4o-ஐப் போலவே, ஜெமினியும் பல்வேறு வகையான தகவல்களைக் கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜூன் மாதம், ஆப்பிள் உலகளாவிய மென்பொருள் உருவாக்குவோர் மாநாட்டின்போது (Apple Worldwide Developers Conference), அவர்கள் ஐபோன்கள் அல்லது iOS புதுப்பிப்புகளில் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிவிப்பார்கள்.


GPT-4o எப்போது கிடைக்கும்?


GPT-4o படிப்படியாக பொதுமக்களுக்கு வெளியிடப்படும். இப்போது, நீங்கள் ஏற்கனவே ChatGPT-ல் உரை (Text) மற்றும் பட அம்சங்களை (image capabilities) இலவசமாகப் பயன்படுத்தலாம். மென்பொருள் உருவாக்குவோர் மற்றும் குறிப்பிட்ட பங்குதாரர்களுக்கு ஒலி (Audio) மற்றும் ஒளி (Video) அம்சங்கள் மெதுவாக சேர்க்கப்படும். ஒவ்வொரு முறையும் குரல், எழுத்தில் இருந்து பேச்சு, காட்சி (voice, text-to-speech, vision) முழு வெளியீட்டிற்கு முன் தேவையான பாதுகாப்புத் தரங்களைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது.


GPT-4o -ன் வரம்புகள் மற்றும் பாதுகாப்புக் கவலைகள் என்ன?


GPT-4o மிகவும் மேம்பட்டதாகக் கருதப்பட்டாலும், அதற்கு இன்னும் சில வரம்புகள் உள்ளன. OpenAI-ன் வலைப்பதிவு GPT-4o ஒருங்கிணைக்கப்பட்ட பலவகை தொடர்புகளை ஆராய்வதற்கான அதன் பயணத்தில் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இதன் பொருள் ஒலி வெளியீடுகள் போன்ற அம்சங்கள் இப்போதைக்கு முன்னமைக்கப்பட்ட குரல்களுடன் ஆரம்பத்தில் வரையறுக்கப்பட்ட வடிவத்தில் கிடைக்கின்றன.


பாதுகாப்பைப் பொறுத்தவரை, OpenAI GPT-4o-ல் கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. அதாவது கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சித் தரவு மற்றும் பயிற்சிக்குப் பிறகு அதன் செயல்பாட்டில் செய்யப்பட்ட மாற்றங்கள் போன்றவை ஆகும். சைபர் பாதுகாப்புகள் (cybersecurity), தவறான தகவல்களைப் பரப்புதல் (misinformation) மற்றும் சார்பு (bias) போன்ற அபாயங்களைப் பார்ப்பது உள்ளிட்ட பாதுகாப்பிற்காக, மாதிரியை முழுமையாக சோதித்ததாக அவர்கள் கூறினர்.


இப்போதைக்கு, GPT-4o பல்வேறு பகுதிகளில் நடுத்தர அளவிலான ஆபத்தைக் கொண்டுள்ளது. வரக்கூடிய புதிய அபாயங்களைக் கண்டறிந்து குறைக்க OpenAI தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.




Original article:

Share: