அடல் புத்தாக்கத் திட்டம் 2.0 (Atal Innovation Mission(AIM))

 முக்கிய அம்சங்கள் :


1. அடல் புத்தாக்கத் திட்டம் (AIM) 2.0 என்பது வளர்ந்த இந்தியா (Viksit Bharat) நோக்கிய ஒரு படியாகும். இது, இந்தியாவின் புதுமையான கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு சூழலை விரிவுபடுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் தீவிரப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. அடல் புத்தாக்கத் திட்டத்தின் (AIM) தொடர்ச்சியானது சிறந்த வேலைகள், புதுமையான தயாரிப்புகள் மற்றும் துறைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சேவைகளை உருவாக்குவதற்கு நேரடியாக பங்களிக்கும்.


2. அடல் பழுதுநீக்க ஆய்வகம் (Atal Tinkering Labs (ATL)) மற்றும் அடல் புத்தாக்க வளர் மையங்கள் (Atal Incubation Centres (AIC)) போன்ற அடல் புத்தாக்கத் திட்டம்-1.0-ன் சாதனைகளை அடல் புத்தாக்கத் திட்டம்-2.0 உருவாக்குகிறது. இந்த திட்டத்தின் உத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. அடல் புத்தாக்கத் திட்டம்-1.0 இந்தியாவின் வளர்ந்து வரும் கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிக்க புதிய கண்டுபிடிப்பு உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. மாறாக, அடல் புத்தாக்கத் திட்டம்-2.0 சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்ய முன்னோடியான முயற்சிகளை (pilot initiatives) அறிமுகப்படுத்துகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், தொழில்துறை, கல்வியாளர்கள் மற்றும் சமூகத்துடன் ஒத்துழைப்பதன் மூலம் வெற்றிகரமான திட்டங்களை அளவிடுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


3. அடல் புத்தாக்கத் திட்டம்-2.0 மூன்று வழிகளில் இந்தியாவின் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு சூழலை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது: அதில்,

(அ) ​​அதிக கண்டுபிடிப்பாளர்களையும், தொழில்முனைவோரையும் கொண்டு வருவதன் மூலம் உள்ளீட்டை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

(ஆ) அதிக புத்தொழில்கள் வெற்றிபெற உதவுவதன் மூலம் வெற்றி விகிதம் அல்லது 'செயல்திறனை' (throughput) மேம்படுத்த முயல்கிறது.

(இ) சிறந்த வேலைகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவதன் மூலம் 'வெளியீட்டின்' (output) தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.


அடல் புத்தாக்கத் திட்டம் (Atal Innovation Mission (AIM)) பற்றிய தகவல்கள்


அடல் புத்தாக்கத் திட்டம் என்பது இந்திய அரசின் முதன்மையான முயற்சியாகும். இது நாடு முழுவதும் புதுமை மற்றும் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை உருவாக்கி மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அடல் புத்தாக்கத் திட்டத்தின் (AIM) குறிக்கோள், பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் புதுமைகளை ஊக்குவிக்கும் புதிய திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதாகும். இது பல்வேறு பங்குதாரர்களுக்கு தளங்கள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகளை வழங்குகிறது. நாட்டில் புதுமை மற்றும் தொழில் முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பை மேற்பார்வையிடும் கட்டமைப்பை உருவாக்க அடல் புத்தாக்கத் திட்டம் (AIM) செயல்படுகிறது.




Original article:

Share:

சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலம் (Eco-sensitive Zone) என்றால் என்ன?

 • நிலையான வளர்ச்சி பற்றிய விவாதங்களில் மேற்குத் தொடர்ச்சி மலை ஒரு முக்கிய தலைப்பாகும். காட்கில் அறிக்கை மற்றும் கஸ்தூரிரங்கன் அறிக்கை ஆகியவை இப்பகுதியில் பாதுகாப்பு உத்திகளை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளன.


• பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கு சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்கள் (Eco-Sensitive Zones (ESZs)) முக்கியம். ஆனால், அவை பெரும்பாலும் உள்ளூர் சமூகங்களுடன் மோதல்களை சந்தித்து வருகின்றன. சமீபத்திய உதாரணமாக கேரளாவின் முன்மொழிவு, இந்தச் சிக்கல்களை முன்னிலைப்படுத்துகிறது.


முக்கிய அம்சங்கள்:


• வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30 அன்று ஏற்பட்ட நிலச்சரிவு 400க்கும் மேற்பட்ட மக்களின் உயிரைப் பறித்தது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள ஆபத்தான கிராமங்களைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சூரல்மலை, முண்டக்காய், வெள்ளரிமலை போன்ற கிராமங்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டன. மே மாதம், சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்கள் குறித்த மாநிலத்தின் வரைவு முன்மொழிவு, வயநாடு, வெள்ளரிமலை உட்பட 12 கிராமங்களை உள்ளடக்கியது.


• நவம்பர் 2, 2024 அன்று, கேரள அரசு திருத்தப்பட்ட முன்மொழிவை சமர்ப்பித்தது. 12 மாவட்டங்களில் 29 தாலுகாக்கள் முழுவதும் 98 கிராமங்களில் 8,590.69 சதுர கி.மீ நிலத்தை சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்களாக அறிவிக்கக் கோரியது. இந்த முன்மொழிவு உள்ளாட்சித் துறையின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டது. ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் இந்த தகவலை  மக்களவையில் எழுத்துப்பூர்வ அறிக்கையில் பகிர்ந்துள்ளார்.


• ஜூலை மாதம், மேற்கு தொடர்ச்சி மலை தொடர்பான ஆறாவது வரைவு அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பு 56,825 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்களாக அறிவித்தது. இந்தப் பகுதிகள் குஜராத், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ளன.


• சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்கள் என்று குறிப்பிடப்பட்ட பகுதிகளில் காணப்பட்ட கிராமங்கள் சுரங்கம், குவாரிகள், மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் புதிய அனல் மின் நிலையங்கள் கட்டுவதற்கு முழு தடை விதிக்கப்படும். விண்வெளி விஞ்ஞானி கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான உயர்மட்ட பணிக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த வரைவு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


• ஆறாவது வரைவு அறிவிப்பை வெளியிட்ட பிறகு, ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஆட்சேபனைகள் அல்லது பரிந்துரைகளை சமர்ப்பிக்க 60 நாட்கள் அவகாசம் அளித்தது. பல்வேறு மாநில அரசுகளின் பரிந்துரைகளை நிபுணர் குழு இப்போது ஆய்வு செய்து வருகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


• 2013ஆம் ஆண்டில், மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் 9,993.7 சதுர கிமீ பரப்பளவை சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்களாக குறிக்க கேரளா முன்மொழிந்தது. 2019ஆம் ஆண்டில், கேரளா 8,656 சதுர கிமீ பரப்பளவைக் குறைக்க பரிந்துரைத்தது. இருப்பினும், சமீபத்திய வரைவு அறிவிப்பில் 9,993.7 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் நுண்ணுணர்வுகொண்டதாக உள்ளது.


• தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள நிலம் சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்களாக அறிவிக்கப்பட வேண்டும்  என்று  ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் தேசிய வனவிலங்கு செயல் திட்டத்தில் (National Wildlife Action Plan)  2002-2016 குறிப்பிடப்பட்டுள்ளது.


• 10-கிமீ விதி என்பது பொதுவான வழிகாட்டுதல், அதன் பயன்பாடு மாறுபடலாம். 10 கி.மீ. தாண்டி உள்ள பகுதிகள், நுண்ணுணர்வு வழித்தடங்கள் (sensitive corridors) போன்ற சூழலியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால், அவை சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்களாக அறிவிக்கப்படலாம்.


• பிப்ரவரி 9, 2011ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்கள் "அதிர்ச்சித் தாங்கிகளாக" செயல்படுகின்றன என்று விளக்குகிறது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகிலுள்ள பலவீனமான சுற்றுச்சூழல் (fragile ecosystems) அமைப்புகளில் மனித நடவடிக்கைகளின் எதிர்மறையான தாக்கத்தை குறைப்பதே அவர்களின் நோக்கம்.


• இந்த பகுதிகள் ஒரு மாற்று மண்டலமாக (transition zone) செயல்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு அதிக பாதுகாப்பையும், தொலைவில் உள்ள பகுதிகளுக்கு குறைந்த பாதுகாப்பையும் வழங்குகிறது.


• சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்களுக்கு (Eco-Sensitive Zones (ESZs)) அருகில் வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் தலையிடக்கூடாது என்றும் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. மாறாக, பாதுகாக்கப்பட்ட பகுதிகளைப் பாதுகாப்பதும், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதுமே அவர்களின் நோக்கமாகும்.




Original article:

Share:

சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு. -ரங்கராஜன் ஆர்.

 அசல் முகவுரை என்றால் என்ன, அது எவ்வாறு உருவாகியுள்ளது? இதற்கு முன்பு நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்னவாக இருந்தது. தற்போது, அது எவ்வாறு மாறியுள்ளது? தற்போதைய வழக்கு எதைப் பற்றியது? அது சமூகத்தில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்? 


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பகுதி நேர அமர்வு, நமது அரசியலமைப்பின் முகவுரையில் “சமத்துவம்” மற்றும் 'மதச்சார்பற்ற' என்ற சொற்களைச் சேர்ப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது. 


முகவுரையின் வரலாறு என்ன? 


இந்தியாவின் அரசியலமைப்பு அசல் முகவுரை நவம்பர் 26, 1949-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது இந்தியாவை ஒரு இறையாண்மை, ஜனநாயக மற்றும் குடியரசு என்று விவரித்தது. அரசியல் நிர்ணய சபை "சமத்துவம்" (socialist) என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தது. அரசியலமைப்பின் முகப்புரையில் பொருளாதார இலட்சியத்தை சேர்ப்பது பொருத்தமானதாக இருக்காது என்று அவர்கள் நம்பினர். மாறாக, மக்கள் தங்கள் நேரம் மற்றும் சூழ்நிலையின் அடிப்படையில் தங்களுக்கு எது சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் கருதினர்.


இந்தியாவின் மதச்சார்பின்மை என்பது மேற்கத்திய மதச்சார்பின்மையிலிருந்து வேறுபட்டது. மேற்கத்திய மதச்சார்பின்மையில், அரசும் மதமும் முற்றிலும் தனித்தனியாக வைக்கப்படுகின்றன, மதம் சார்ந்த விஷயங்களில் அரசாங்கம் தலையிடுவதில்லை. இந்தியாவில், பொருளாதாரம், நிதி, அரசியல் மற்றும் மதச்சார்பற்ற நடவடிக்கைகள் போன்ற மதத்தின் சில அம்சங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. சமூக நலனுக்காகவும், மத நடைமுறைகளில் சீர்திருத்தத்திற்காகவும் அரசு செயல்பட முடியும். அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமையை வழங்குகிறது. மாநில விவகாரங்களில் மதத்தின் அடிப்படையில் எந்த பாகுபாடும் இல்லை என்பதையும் இது உறுதி செய்கிறது. இந்த விதிகள் அரசியலமைப்பின் மதச்சார்பற்ற மதிப்புகளை பிரதிபலிக்கின்றன. இந்த காரணத்திற்காக, "மதச்சார்பற்ற" (secular) என்ற வார்த்தையை முன்னுரையில் சேர்க்க அரசியலமைப்பு சபை ஒப்புக் கொள்ளவில்லை.


1960ஆம் ஆண்டு பெருபாரி வழக்கில், உச்சநீதிமன்றம் முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல என்றும் எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை என்றும் கூறியது. ஆனால், 1973ஆம் ஆண்டு கேசவானந்த பாரதி வழக்கில், நீதிமன்றம் தனது பார்வையை மாற்றியது. முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும் மற்றும் அது வெளிப்படுத்தும் பார்வையின் அடிப்படையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. அரசியலமைப்பின் மற்ற பகுதிகளைப் போலவே, முகவுரையை நாடாளுமன்றம் மாற்றலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1976இல், 42வது அரசியலமைப்புத் திருத்தம் முகவுரையில் "சமத்துவம்", "மதச்சார்பற்ற" மற்றும் "ஒருமைப்பாடு" ஆகிய வார்த்தைகளைச் சேர்த்தது. 1978ல் 44வது திருத்தம் உட்பட பிற்கால அரசியலமைப்புத் திருத்தங்கள், "சமத்துவம்" மற்றும் "மதச்சார்பற்ற" வார்த்தைகளை ஆதரித்து வைத்திருக்கின்றன என்று சுவாமி நம்பினார். அவசர நிலைக்குப் பிறகு ஜனதா கட்சி ஆட்சியின் போது இந்தத் திருத்தம் செய்யப்பட்டது. இருப்பினும், இந்த வார்த்தைகள் அசல் முன்னுரைக்கு கீழே ஒரு தனி பத்தியில் வைக்கப்பட வேண்டும் என்று அவர் கருதினார். 


தற்போதைய வழக்கு என்ன? 


இந்த வழக்கை மாநிலங்களவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சுப்பிரமணியன் சுவாமி, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உள்ளிட்டோர் தாக்கல் செய்தனர். முகவுரையில் சமத்துவம் மற்றும் மதச்சார்பற்ற என்ற சொற்களைச் சேர்ப்பதை உபாத்யாயாவும் மற்றவர்களும் எதிர்த்தனர். நெருக்கடி நிலையின் போது இவை சேர்க்கப்பட்டவை என்றும், குறிப்பிட்ட சித்தாந்தங்களைப் பின்பற்றுமாறு மக்களைக் கட்டாயப்படுத்தியதாகவும் அவர்கள் வாதிட்டனர். அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேதி முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதால், கூடுதல் சொற்களை நாடாளுமன்றம் பின்னர் சேர்க்க முடியாது என்று அவர்கள் உணர்ந்தனர். 1978ஆம் ஆண்டில் ஜனதா கட்சி ஆட்சியின்போது அவசரநிலைக்குப் பிறகு 44வது திருத்தம் உட்பட அரசியலமைப்பில் அடுத்தடுத்த திருத்தங்கள் இந்த இரண்டு வார்த்தைகளையும் ஆதரித்து தக்க வைத்துக் கொண்டன என்று சுப்பிரமணியன் சுவாமி கருதினார். இருப்பினும், இந்த வார்த்தைகள் அசல் முகவுரைக்கு கீழே ஒரு தனி பத்தியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று அவர் கருதினார். 




நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தது? 


தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவை அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் முக்கிய  பகுதிகள் என்று  நீதிமன்றம் கூறியது. அரசியலமைப்பு ஒரு "வாழும் ஆவணம்" மற்றும் பாராளுமன்றத்தால் மாற்றப்படலாம் என்றும் நீதிமன்றம் கூறியது. அரசியலமைப்பை திருத்துவதற்கான அதிகாரம் முகவுரைக்கும் பொருந்தும் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேதி இந்த அதிகாரத்தை கட்டுப்படுத்தாது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்தியாவில், "சமத்துவம்" என்பது அனைவருக்கும் சம வாய்ப்புகளை உறுதி செய்யும் மற்றும் தனியார் துறையை வளர அனுமதிக்கும் ஒரு பொதுநல அரசு என்று நீதிமன்றம் விளக்கியது. அதேபோன்று இந்தியாவும் "மதச்சார்பின்மை" பற்றிய தனது புரிதலை வளர்த்துக் கொண்டுள்ளது. அரசு எந்த மதத்தையும் ஆதரிப்பதில்லை அல்லது அவர்களின் நம்பிக்கையைப் பின்பற்றுவதற்காக மக்களை தண்டிக்கவில்லை. சமத்துவ உரிமையின் ஒரு பகுதியாக மதச்சார்பின்மை பார்க்கப்படுகிறது. 


அது ஏன் முக்கியமானது? 


சுதந்திரத்திற்குப் பிறகு, ஆரம்ப ஆண்டுகள் “ஜனநாயக சமத்துவத்தின்” மீது கவனம் செலுத்தியது. இது மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் மற்றும் மாநிலம் பல தொழில்களை அமைப்பதன் மூலம் குறிக்கப்பட்டது. 1960கள் மற்றும் 70களில், அரசாங்கம் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை தேசியமயமாக்கியது. வரி விகிதங்களை அதிகரித்தது மற்றும் பல்வேறு விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. பொருளாதாரம் ஒரு கலப்பு பொருளாதாரம் (mixed economy) என்று விவரிக்கப்பட்டது. இதில் பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இரண்டும் இணைந்து செயல்பட்டன. 


இருப்பினும், இது மரபு வழி சமத்துவத்தின் (classical socialism) அம்சங்களை கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டிருந்தது. 1991-ல் தொடங்கி, பொருளாதாரம் இந்த சமத்துவ மாதிரியிலிருந்து மேலும் சந்தை சார்ந்த  (market-oriented model) அணுகுமுறைக்கு மாறியது. கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியானது அதிக மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளது. நீதிமன்றம் சுட்டிக்காட்டியபடி, இந்தியாவில் சமத்துவம் இன்னும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)), மானிய உணவு தானியங்கள் மற்றும் பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கான நேரடி பயன் பரிமாற்றங்கள்  போன்ற திட்டங்கள் மூலம் ஏழைகளுக்கு உதவுகிறது. ஏழைகளின் நலனுக்கான அரசின் நடவடிக்கைகளை சமத்துவம் தொடர்ந்து வழிநடத்துவது முக்கியம். அதே நேரத்தில், தனியார் நிறுவனம் வளர்ச்சியடைய வேண்டும். இது அதிக வேலை வாய்ப்புகள் மற்றும் வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மதச்சார்பின்மையின் விழுமியங்களை நிலைநிறுத்துவதன் மூலம் “வேற்றுமையில் ஒற்றுமை” (unity in diversity) என்ற உணர்வு சமமாகப் பாதுகாக்க வேண்டும்.




Original article:

Share:

COP29 ஒப்பந்தம் ஒரு ஏமாற்று வேலை என்று இந்தியா சரியாகக் கூறுகிறது

 COP-ன் கவனம் 'புதிய கூட்டு அளவு இலக்குகளிலிருந்து தணிப்புக்கு மாற்றப்பட்டது' (‘shifted from New Collective Quantitative Goals to mitigation’) என்ற உண்மையின் மீது இந்தியா தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளது.


அஜர்பைஜானின் பாகுவில் சமீபத்தில் நடந்த காலநிலை சந்திப்பு, கடந்த கால பேச்சுக்களுடன் ஒப்பிடும்போதுகூட ஏமாற்றத்தை அளித்தது. இதில் உள்ள முக்கிய பிரச்சினை காலநிலை நிதி மீது உண்மையான நடவடிக்கை இல்லாதது. வளர்ந்த நாடுகள் உறுதியான நிதி உதவியை வழங்கவில்லை. இதில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், உண்மையான ஒருமித்த கருத்து இல்லாத ஒரு அறிவிப்புடன் கூட்டம் முடிந்தது. இந்தியா இந்த அறிவிப்பை விமர்சித்தது, இது ஒரு "தோற்ற மாயை" என்று கூறியது. வளரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு 300 பில்லியன் டாலர் என்ற வாக்குறுதி, தற்போதைய $100 பில்லியனுடன் ஒப்பிடும்போது (2009-ல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ஆனால் அரிதாகவே அடையப்பட்டது) நம்பத்தகாததாகத் தெரிகிறது.


2030-ஆம் ஆண்டு வரை நிதி பரிமாற்றங்களில் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் $1.3 டிரில்லியன் தேவை என்று UNEP மதிப்பிட்டுள்ளது.  இருப்பினும், தற்போதைய திட்டம் இந்தத் தொகையைவிட மிகக் குறைவு மற்றும் மோசமானது. இவை மானியங்களா, குறைந்த வட்டி கடன்களா அல்லது வணிக நிதியா என்பது தெளிவாக இல்லை. 2035-ஆம் ஆண்டளவில் வளரும் நாடுகளுக்கான நிதியுதவியை ஆண்டுதோறும் $100 பில்லியனில் இருந்து $300 பில்லியனாக அதிகரிப்பதை மட்டுமே இந்த பிரகடனம் குறிப்பிடுகிறது.


சில ஏழ்மையான நாடுகளின் ஆதரவை மீறி இந்த தெளிவற்ற வாக்குறுதிகளை இந்தியா சுட்டிக்காட்டியது. இந்த நிதி இலக்குகளை அடைய தெளிவான வழிமுறைகள் இல்லாதது மற்றொரு பிரச்சினை. புதிய நிதி இலக்குகளை நிர்ணயிப்பதில் இருந்து COP கவனம் செலுத்தி, அதற்குப் பதிலாக தணிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதை இந்தியா விமர்சித்தது.


இதன் பொருள் காலநிலை நிதியானது சமச்சீர் அணுகுமுறையிலிருந்து வணிக ரீதியான அணுகுமுறைக்கு மாறியுள்ளது. முன்னதாக, இயற்கைப் பேரழிவுகள் போன்ற காலநிலை மாற்ற தாக்கங்களுக்கு ஏற்ப நாடுகளுக்கு உதவுவதில் கவனம் செலுத்தியது. இப்போது, ​​காலப்போக்கில் உமிழ்வைக் குறைப்பதற்கான தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. தேவைப்படும் 1.3 பில்லியன் டாலர்களில் 600 பில்லியன் டாலர்கள் மானியமாக வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது. இந்த தெளிவான நிதித் திட்டங்களுக்கான இந்தியாவின் கோரிக்கைகளை கூட்டத்தில் நிவர்த்தி செய்யவில்லை.


இருதரப்பு கார்பன் வரவுகளை வர்த்தகம் செய்வதற்கான அமைப்புகளை அமைப்பதில் உள்ள வெற்றி (பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6.2 இன் கீழ்) தெளிவாக இல்லை. பலதரப்பு வர்த்தகத்திற்கான விதிகள் (கட்டுரை 6.4) மேம்பட்டதாகத் தோன்றினாலும், காலப்போக்கில் இந்தப் பகுதியில் அதிக வேலை தேவைப்படுகிறது.


தற்போது, ​​வளரும் நாடுகளில் உள்ள ஏழை சமூகங்களின் கார்பன் வரவுகள் குறைவாக மதிப்பிடப்படுகின்றன என்பது பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது பணக்கார நாடுகளில் உள்ள உற்பத்தியாளர்கள், சுற்றுச்சூழல் நட்பு என்ற போர்வையில் தங்கள் மாசுபாட்டை மறைக்க அனுமதிக்கிறது. இந்தியா, அதன் சொந்த கார்பன் வர்த்தக அமைப்பில் பணிபுரியும், நியாயமான கார்பன் கடன் அமைப்புகளுக்கான வலுவான கட்டமைப்பை உருவாக்குவதில் முன்னணியில் இருக்க வேண்டும்.


இருப்பினும், இந்த காலநிலை நீதியை அடைய முடியவில்லை. வளர்ந்த நாடுகள் இன்னும் வளிமண்டலத்தில் அதிக அளவு பசுமை இல்ல வாயுக்களுக்கான முக்கிய பொறுப்பை மறுக்கின்றன. இவை மாசுபாடு மற்றும் காலனித்துவத்தால் ஏற்படும் தீங்குகளுக்கு பணம் செலுத்துவதை எதிர்க்கின்றன. ஒரு நாட்டில் உமிழ்வுகள் மற்றொரு நாட்டின் செயல்பாடுகளுடன் இணைக்கப்பட வேண்டுமா என்பதும் விவாதத்திற்குரியது. இந்த பிரச்சினைகள் எதிர்கால விவாதங்களில் கவனம் செலுத்த வேண்டும்.




Original article:

Share:

இந்தியாவின் RCEP மற்றும் CPTPP சவால் -பிரபாஷ் ரஞ்சன்

 இந்த இரண்டு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களையும் (Free Trade Agreement (FTA)) இந்தியா ஏற்றுக்கொள்ள விரும்பினால், அதன் தற்போதைய வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்த நடைமுறையில் சில பெரிய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.


நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி, BVR சுப்பிரமணியம், கடந்த காலத்தில் வர்த்தகச் செயலாளராகவும் பணியாற்றியவர். பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை (Regional Comprehensive Economic Partnership (RCEP)) மற்றும் விரிவான மற்றும் முன்னேற்றத்திற்கான டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மை (Comprehensive and Progressive Trans-Pacific Partnership (CPTPP)) ஒப்பந்தங்களில் இந்தியா இணைய வேண்டும் என்று சமீபத்தில் குறிப்பிட்டார்.  குறிப்பாக, முக்கிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs),  RCEPக்கு, இந்தியாவில் உள்ள எதிர்ப்பால் உள்ள கருத்து ஆகும். RCEP என்பது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) மற்றும் சீனாவைச் சேர்ந்த 10 நாடுகளை உள்ளடக்கிய 15 நாடுகளின் FTA ஆகும். RCEPக்கு ஆதரவாக பேச்சுவார்த்தை நடத்திய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இருப்பினும், ஒப்பந்தம் முடிவடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு அது வெளியேறியது. 


CPTPP என்பது கனடா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட 11 நாடுகளின் FTA ஆகும். ஆனால், சீனா இல்லாமல் CPTPP ஆனது, டொனால்ட் ட்ரம்பின் முந்தைய ஆட்சியின் கீழ் அமெரிக்கா அதிலிருந்து வெளியேறிய பின்னர் சரிந்த டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் இருந்து உருவானது. சமீபத்தில், அமெரிக்கா CPTPP உடன் இணைந்தது. பொதுவாக, இந்தியாவில், FTAக்கள் பெரும்பாலும் பொருளாதாரம் அல்லது வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்படுகிறது. 


மேலும், அரிதாகவே சர்வதேச சட்டக் கருவிகளாக கருதப்படுகின்றன. இந்த இரண்டு மெகா FTAகளில், இந்தியாவை இணைத்துக் கொள்வதன் தகுதியைப் பற்றி  வெளியுறவுக் கொள்கை வல்லுநர்களும் பொருளாதார வல்லுநர்கள் விவாதிக்கும் அதே வேளையில், அவர்களின் புவி-பொருளாதார பயன்பாட்டை மதிப்பிடும்போது,  ​​இந்தியாவுக்கான சர்வதேச சட்ட தாக்கங்களைப் புரிந்துகொள்வதும் பொருத்தமானது.


CPTPP-ல் இணைய இந்தியா ஒரு அணுகல் செயல்முறையைப் பின்பற்ற வேண்டும். நிறுவன உறுப்பினர்களுக்கான நிபந்தனைகளைவிட இந்தியா கடுமையான நிபந்தனைகளை ஏற்க இந்த செயல்முறை தேவைப்படலாம்.  மறுபுறம், RCEP-ல் இணைவது இந்தியாவிற்கு எளிமையானது. RCEP ஒப்பந்தத்தின் பிரிவு 20.9, அடிக்குறிப்பு 2, இந்தியாவை உண்மையான பேச்சுவார்த்தையாளராக, அணுகல் செயல்முறை இல்லாமல் சேர அனுமதிக்கிறது. இதன் பொருள், தற்போதைய 15 உறுப்பினர்களின் அதே விதிமுறைகளின் கீழ் இந்தியா RCEP-ல் சேரலாம்.


இந்த இரண்டு FTAகளையும் இந்தியா ஏற்றுக்கொள்ளத் திட்டமிட்டால், அதில் இன்னும் பல சட்டப் பரிமாணங்கள் உள்ளன. அவை, முதலாவதாக, RCEP மற்றும் CPTPP ஆகிய இரண்டும் வெளிநாட்டு முதலீட்டைப் பாதுகாப்பதற்கான ஒரு அத்தியாயத்தைக் கொண்டுள்ளன. சர்வதேச வர்த்தகத்திற்கும் வெளிநாட்டு முதலீட்டிற்கும் இடையிலான நெருங்கிய பொருளாதார தொடர்பைக் கருத்தில் கொண்டுள்ளதால் இது எதிர்பார்க்கப்படுகிறது. 1980-ஆம் ஆண்டுகளில் இருந்து வர்த்தக தாராளமயமாக்கல் மற்றும் முதலீட்டு பாதுகாப்பு ஆகிய இரண்டையும் ஒரு ஒப்பந்தத்தில் உள்ளடக்கிய பல வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.


இருப்பினும், இந்தியாவின் தற்போதைய FTA நடைமுறை, இதிலிருந்து வேறுபட்டது. மொரிஷியஸ், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் EFTA மாநிலங்களுடன் கையெழுத்திட்ட இந்தியாவின் சமீபத்திய FTAக்கள் முதலீட்டு பாதுகாப்பு விதிகளைக் கொண்டிருக்கவில்லை. 2000-ஆம் ஆண்டுகளில் கையெழுத்திட்ட இந்தியாவின் பழைய FTAகள் வர்த்தக தாராளமயமாக்கல் மற்றும் முதலீட்டு பாதுகாப்பு குறித்த விதிகளைக் கொண்டிருந்தாலும், இந்தியா தனது FTAகளில் வர்த்தக தாராளமயமாக்கலில் இருந்து முதலீட்டு பாதுகாப்பை துண்டித்துள்ளது.  


மறைமுகமாக, அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க, அதன் FTA கூட்டாளருடன் வெளிநாட்டு முதலீட்டைப் பாதுகாப்பதில் ஒரு தனி ஒப்பந்தம் இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். RCEP மற்றும் CPTPPஐ ஏற்றுக்கொள்வது என்பது,  இந்தியா தனது தற்போதைய FTA நடைமுறையில் இருந்து விலகி, முதலீட்டு பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தை ஒரு ஒப்பந்தத்தில் ஒருங்கிணைப்பதை ஏற்க வேண்டும்.


இரண்டாவதாக, RCEP மற்றும் CPTPP-ல் உள்ள முதலீட்டுப் பாதுகாப்பு அத்தியாயங்கள், 2015-ல் குறியிடப்பட்ட இந்தியாவின் தற்போதைய முதலீட்டு ஒப்பந்த நடைமுறைக்கு அப்பாற்பட்ட பல விதிகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக, RCEP மற்றும் CPTPP ஆகிய இரண்டிலும் உள்ள முதலீட்டு அத்தியாயங்கள், இந்தியாவின் புதிய முதலீட்டு ஒப்பந்த நடைமுறையில் இல்லாத, மிகவும் விருப்பமான நாடு (most favoured nation (MFN)) மற்றும் நியாயமான மற்றும் சமமாக நடத்துதல் (fair and equitable treatment (FET)) போன்ற அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டிருக்கின்றன.


அதேபோல், RCEP மற்றும் CPTPP ஆகியவை இந்திய மாதிரி இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (Bilateral Investment Treaty (BIT)) மற்றும் இந்தியாவின் அடுத்தடுத்த BITகள் செய்யும் முதலீட்டு அத்தியாயங்களின் வரம்பிலிருந்து வரிவிதிப்பு நடவடிக்கைகளை விலக்கவில்லை. முதலீட்டாளர்-மாநில தகராறு தீர்வு (investor-State dispute settlement (ISDS)) அடிப்படையில் மற்றொரு முக்கிய வேறுபாடு உள்ளது. இது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேரடியாக சர்வதேச நடுவர் மன்றங்களுக்கு முன் மாநிலங்கள் மீது வழக்குத் தொடர அனுமதிக்கும் ஒரு முறையாகும். RCEP-ல் ISDS இல்லாவிட்டாலும், CPTPP ஆனது ISDS வசதியைக் கொண்டுள்ளது. CPTPP-ல் உள்ள ISDS ஏற்பாடு, இந்திய முதலீட்டு ஒப்பந்த நடைமுறையைப் போலல்லாமல், சர்வதேச சட்ட மீறல்களுக்காக மாநிலங்களுக்கு எதிராக உரிமைகோரல்களைத் தொடங்குவதற்கு முன் முதலீட்டாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு உள்ளூர் தீர்வுகளை வெளியேற்ற வேண்டிய அவசியமில்லை.


சுருக்கமான வார்த்தைகளில், CPTPP மற்றும் RCEP ஆகியவற்றுடன் இந்தியா இணைய விரும்பினால், அதன் மாதிரி BIT மற்றும் தற்போதுள்ள முதலீட்டு ஒப்பந்த நடைமுறையில் இருந்து விலக வேண்டும். ஐக்கிய அரபு நாட்டுடானான அதன் BITயின் மாதிரியிலிருந்து இந்தியா ஓரளவு விலகியுள்ளது. மேலும், CPTPP மற்றும் RCEP ஆகியவற்றில் இணைவதன் மூலம், இரண்டு பலதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் 20க்கும் மேற்பட்ட நாடுகளுடன் பிணைப்பு முதலீட்டுப் பாதுகாப்புக் கடமைகளை இந்தியா ஏற்கும்.


இந்த இரண்டு FTAகளையும் இந்தியா ஏற்றுக்கொள்ள விரும்பினால், அதன் தற்போதைய வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்த நடைமுறையில் சில பெரிய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். அவ்வாறு செய்ய டெல்லி தயாராக உள்ளதா?


பிரபாஷ் ரஞ்சன், ஜிண்டால் குளோபல் சட்டக் கல்லூரி (Jindal Global Law School), சர்வதேச முதலீடு மற்றும் வர்த்தக சட்டங்களுக்கான மையத்தின் (Centre for International Investment and Trade Laws) பேராசிரியர் மற்றும் இயக்குனர் ஆவார்.




Original article:

Share:

நீதி மற்றும் சமத்துவ சமுதாயம் அமைய பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துதல். -சௌமியா சக்சேனா

 பெண்களுக்கு எதிரான வன்முறையின் நிலைத்தன்மை அவர்களின் நல்வாழ்வில் ஆழமான மற்றும் நீடித்த தாக்கங்களை ஏற்படுத்துகிறது மற்றும் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபடும் திறனுடன் சமரசம் செய்கிறது. இந்தப் பிரச்சினையை அகற்றிவிட்டு, நீதியான, சமத்துவமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் அவசியம்?


உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகெங்கிலும் உள்ள மூன்று பெண்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் ஏதோவொரு வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இது ஒரு உலகளாவிய மற்றும் முக்கியமான மனித உரிமைகள் பிரச்சினை. மற்ற வகையான வன்முறைகளைப் போலல்லாமல், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை (Violence against Women and Girls (VAWG)) ஆணாதிக்க விதிமுறைகள், பாலின சமத்துவமின்மை மற்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமமற்ற அதிகார உறவுகளிலிருந்து உருவாகிறது.


உடல், பாலியல் மற்றும் உளவியல் ரீதியான அத்துமீறல் போன்ற பல்வேறு வடிவங்களில் பெண்கள் பொது வாழ்வு மற்றும் தனிப்பட்ட வாழ்வு இரண்டிலும் வன்முறையை எதிர்கொள்கிறார்கள். இத்தகைய வன்முறைச் செயல்கள் பெண்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிறது மற்றும் அவர்களின் வளர்ச்சி மற்றும் விருப்பங்களைத் தடுக்கிறது.


ஐக்கிய நாடுகள் சபை பெண்களுக்கு எதிரான வன்முறையை, "பாலின அடிப்படையிலான வன்முறையானது, பெண்களுக்கு உடல், பாலியல், அல்லது மனரீதியான தீங்கு அல்லது துன்பத்தை விளைவிக்கும் அல்லது விளைவிக்கக்கூடிய எந்தவொரு செயலையும், அத்தகைய செயல்களின் அச்சுறுத்தல்கள், வற்புறுத்தல் அல்லது தன்னிச்சையான இழப்பு உட்பட. சுதந்திரம், பொது அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்பவை என வரையறுக்கிறது.


VAWG-க்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை நவம்பர் 25-யை பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினமாக (International Day for the Elimination of Violence Against Women ) 1999-ஆம் ஆண்டில் அறிவித்தது. கொடுங்கோன்மைக்கு எதிரான எதிர்ப்பின் அடையாளமாக விளங்கிய டொமினிகன் குடியரசின் மிராபால் சகோதரிகளை கௌரவிப்பதற்காக இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது..


1950-ஆம் ஆண்டுகளில், மூன்று சகோதரிகள், பாட்ரியா, மினெர்வா மற்றும் மரியா தெரசா மிராபால் (லாஸ் மரிபோசாஸ் அல்லது பட்டாம்பூச்சிகள் என்றும் அழைக்கப்படுவார்கள்). டொமினிகன் குடியரசில் ரஃபேல் ட்ருஜிலோவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து நின்றார்கள். நவம்பர் 25, 1960-ஆம் ஆண்டு, ட்ருஜிலோவின் உத்தரவின் பேரில் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் படுகொலை, கண்டங்கள் முழுவதும் நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான இயக்கங்களை வலுப்படுத்தியது.


1980-ஆம் ஆண்டுகளின் போது, ​​பல பெண்ணிய இயக்கங்கள் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயல்பாட்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இந்த நாளைக் கடைப்பிடிக்கத் தொடங்கின. இது டிசம்பர் 10 அன்று மனித உரிமைகள் தினத்தில் (Human Rights Day) முடிவடைகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடமிருந்து பொறுப்புக்கூறல் மற்றும் நடவடிக்கையை  மேற்கொள்ளவும் இந்த பிரச்சாரம் முயல்கிறது.


மிராபால் சகோதரிகளின் தைரியம் வன்முறை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு கூட்டு நிலைப்பாட்டின் அவசியத்தை ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக உள்ளது மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகள் பயம் மற்றும் தீங்கு இல்லாமல் வாழக்கூடிய உலகத்தை உருவாக்குவதற்கான அவசரத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.


VAWG ஒரு அழுத்தமான பிரச்சினை மற்றும் இது பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது.  அவை ஆணாதிக்க சமூகங்களில், உடல் ரீதியான தீங்கு, பாலியல், உணர்ச்சி, உளவியல் மற்றும் நிதி துஷ்பிரயோகம் மற்றும் தொழில்நுட்பம் ரீதியில் நடைபெறும் வன்முறை ஆகியவை இதில் அடங்கும். பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது பொது மற்றும் தனியார் துறைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவமற்ற அதிகார உறவுகளின் வெளிப்பாடாகும்.


எனவே, பலவிதமான வன்முறை வடிவங்களையும் அவற்றின் பின்னணியில் உள்ள ஆழமான காரணங்களையும் புரிந்துகொள்வது  என்பது முக்கியமானது.


நெருங்கிய நபர்கள் மூலம் நடைபெறும் வன்முறை மற்றும் குடும்ப வன்முறை: 


இது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையின் மிகவும் பொதுவான வடிவங்களில் ஒன்றாகும். இதில் தற்போதைய அல்லது முன்னாள் நெருங்கிய நபர்கள் (பொதுவாக கணவர்) அல்லது குடும்ப உறுப்பினர்கள் மூலம் நடைபெறும் வன்முறை இதில் அடங்கும். மேலும், இது உடல், பாலியல் அல்லது உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துகிறது. உடல் ரீதியிலான தாக்குதல்கள், வற்புறுத்தல், உளவியல் ரீதியான அத்துமீறல் மற்றும் செயல்களை கட்டுப்படுத்துதல் போன்ற செயல்கள் இந்த வகையின் கீழ் வருகின்றன.


2023-ஆம் ஆண்டில், ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும், ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நெருங்கிய நபரால் வேண்டுமென்றே ஒரு பெண் கொல்லப்படுகிறாள் அல்லது காயப்படுத்தப்படுகிறாள் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த வகையான வன்முறை பெரும்பாலும் ஆணவக் கொலை (Honour killing) என்று குறிப்பிடப்படுகிறது.  இது நெருங்கிய நபர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களால் பெண்கள் மற்றும் சிறுமிகளை வேண்டுமென்றே கொலை செய்வதை உள்ளடக்கியது. ஆணவக் கொலை  (குடும்பக் கௌரவத்தை "மீட்டெடுக்க" உறவினர்களால் பெண்கள் கொல்லப்படும்போது) அதற்கு ஒரு உதாரணம். துன்புறுத்தல் மற்றும் குடும்ப வன்முறை உட்பட நீண்டகால துஷ்பிரயோகத்திற்குப் பிறகு இதுபோன்ற பல மரணங்கள் நிகழ்கின்றன.


பாலியல் வன்முறை: இது ஒருவரின் அனுமதியின்றி ஒருவர் மீது சுமத்தப்படும் தேவையற்ற பாலியல் செயலாகும். பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்முறையின் விகிதாசார இலக்குகளாக உள்ளனர். இதில் கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல், ஆன்லைன் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கடத்தல் மற்றும் கட்டாய  பாலியல் துன்புறுத்தல் ஆகியவை அடங்கும். பாலியல் வன்முறை பெரும்பாலும் தனியார் மற்றும் பொதுத் துறைகளில், குறிப்பாக மோதல்கள், கலவரங்கள் மற்றும் பொது அமைதியின்மை ஆகியவற்றின் போது பெண்களைக் கட்டுப்படுத்தும் மற்றும் அடிபணியச் செய்யும் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் ஒரு நாளைக்கு தினசரி சராசரியாக 87 வழக்குகள் என, 2022-ஆம் ஆண்டில் 31,000க்கும் மேற்பட்ட  பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன.


உளவியல் அத்துமீறல் : இது மன ரீதியான அத்துமீறல் மற்றும் உளவியல் வன்முறை என்றும் அழைக்கப்படுகிறது. இதில் தோற்றம், சைகைகள் அல்லது கூச்சலிடுதல், அவமானப்படுத்துதல், ஆபாசமான மற்றும் இழிவான கருத்துக்கள் மற்றும் பொது ஏளனம் ஆகியவை அடங்கும்.  மேலும், உணர்ச்சி ரீதியான வன்முறை பெரும்பாலும் செயல்களை கட்டுப்படுத்துதல் அல்லது ஆதிக்கம் செலுத்துதல் ஆகியவற்றுடன் இருக்கும். நிதிக் கட்டுப்பாடு, பொதுவாக பெண்களின் தேவை அல்லது விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் சம்பாதித்த பணம் உட்பட பணத்தை செலவழிக்கும் உரிமையை மறுப்பது போன்றவை இதன் எடுத்துக்காட்டுகள் ஆகும்.


பெண்களின் உரிமைகளை மீறும் மற்றும் அவர்களின் உடல்நலம் மற்றும் கண்ணியத்திற்கு தீங்கு விளைவிக்கும் சமூக மற்றும் கலாச்சார நடைமுறைகளும் உளவியல் வன்முறையில் அடங்கும்.  இதற்கான உதாரணங்களில் பெண் பிறப்புறுப்பு சிதைவு, சூனியக்காரி-முத்திரை, குழந்தை திருமணம், கட்டாய திருமணம், ஆணவக் கொலைகள் மற்றும் விதவை சடங்குகள் ஆகியவை அடங்கும். மாதவிடாய் காலங்களில் பெண்களை தனிமைப்படுத்துதல் மற்றும் பெண் சிசுக்கொலை போன்ற நடைமுறைகள் தெற்காசிய நாடுகளில் முதன்மையாக நடைபெறும் உளவியல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும்.


தொழில்நுட்பத்தால் எளிதாக்கப்பட்ட வன்முறை: தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் நம் வாழ்க்கையை மாற்றியிருந்தாலும், பெண்களுக்கு எதிரான தொழில்நுட்பத்தால் எளிதாக்கப்பட்ட வன்முறை என்று அழைக்கப்படும் தொழில்நுட்ப பயன்பாடு பெண்களுக்கு எதிரான தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் இணைய அவதூறு, துன்புறுத்தல், பின்தொடர்தல், சைபர் மிரட்டல், படங்களை உருமாற்றுதல் (மார்பிங்) மற்றும் காணொளிகள் மற்றும் டாக்ஸிங் (ஒரு பெண்ணின் தனிப்பட்ட தகவல்களைப் பகிரங்கமாக வெளியிடுதல்) ஆகியவை அடங்கும்.  குறிப்பாக பொது வாழ்வில் உள்ள பெண்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இத்தகைய தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள். இவை அவர்களின் பாதுகாப்பிற்கான வலுவான டிஜிட்டல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


தாக்கத்தின் பகுப்பாய்வு


பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையின் விளைவுகள் தனிநபர்களுக்கு மட்டும் அல்லாமல், சமூகத்தையும் பெருமளவில் பாதிக்கிறது.  உடல் காயங்கள் மற்றும் நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் போன்றைவை பெண்களுக்கு எதிரான வன்முறையின் சில வெளிப்படையான விளைவுகளாகும். அதே நேரத்தில் உளவியல் ரீதியிலான பாதிப்பு குறைவாக விவாதிக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் பெண்களின் வாழ்க்கையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிர் பிழைத்தவர்கள் அடிக்கடி மன அழுத்த சூழ்நிலைகளில் சிக்கி, படிப்படியாக கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் முக்கியமான சமூக ஆதரவு இணைப்புகளை இழக்கின்றனர்.


பெண்ணிய எழுத்தாளர் கெர்டா லெர்னரின் கூற்றுப்படி, பாலின சமத்துவமின்மை பெரும்பாலும் ஆண் சக்தி அல்லது ஆதிக்கத்தை கேள்விக்கு இடமின்றி ஏற்றுக்கொள்வதன் மூலம் செயல்படுகிறது. இது துஷ்பிரயோகத்தை இயல்பாக்குவதற்கு வழிவகுத்தது. இது பெரும்பாலும் நடைமுறையில் உள்ள கலாச்சார அல்லது சமூக விதிமுறைகளின் ஒரு பகுதியாக நியாயப்படுத்தப்படுகிறது. இது பெண்கள் மருத்துவ அல்லது சட்ட உதவியை நாடுவதை ஊக்கப்படுத்துகிறது.


பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெண்களின் நல்வாழ்வுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அது அவர்களின் நம்பிக்கையை சிதைத்து, அவர்களின் ஆரோக்கியம் மற்றும் சமூகத்தில் முழுமையாக பங்கேற்கும் திறன்களை சமரசம் செய்துவிடும். ஐ.நா குறிப்பிடப்பட்டுள்ளபடி, "பெண்கள் துஷ்பிரயோகத்தின் உடல் மற்றும் உளவியல் பாதிப்புகளின் சுமையாக இருந்தால், அவர்களின் உழைப்பு அல்லது ஆக்கபூர்வமான யோசனைகளை முழுமையாக வழங்க முடியாது" என குறிப்பிட்டுள்ளது.


VAWG-ன் பொருளாதார விளைவுகளும் அதிகமாக உள்ளன. பெண்கள் உலகளாவிய தொழிலாளர் தொகுப்பில் கணிசமான பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். ஆனால், VAWG பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கான அவர்களின் திறனைத் தடுக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை உலகப் பொருளாதாரத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிகிதம் மற்றும் ஆண்டுக்கு சுமார் $1.5 டிரில்லியன் என உலக வங்கி மதிப்பிடுகிறது. இந்தியாவில், பெண்கள் 25.1 சதவிகிதம் மட்டுமே பணிபுரிகின்றனர். 2022-ஆம் ஆண்டில் உலக வங்கியின் படி, வன்முறை அவர்களின் பொருளாதார அதிகாரத்திற்கு ஒரு பெரிய தடையாக உள்ளது என கண்டறிந்துள்ளது.


நடவடிக்கைக்கான அழைப்பு


இந்தியாவில், சில வன்முறைச் சம்பவங்கள் சீற்றத்தைத் தூண்டி, சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தாலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பரவலாக இருக்கின்றன. எனவே, VAWG-ஐ அகற்றுவதற்கான முயற்சிகள் அதன் மூல காரணங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். பாலின சமத்துவமின்மை, கல்வியின்மை மற்றும் போதுமான சட்ட கட்டமைப்புகள் போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும்.


 VAWG  அணுகுவதற்கு அதன் ஒன்றோடொன்று இணைந்த வடிவங்கள், மூல காரணங்கள் மற்றும் அவற்றை விரிவுபடுத்தும் தற்போதைய அமைப்பு பற்றிய விரிவான புரிதலில் இருந்து உருவாகும் முறையான மாற்றம் தேவைப்படுகிறது.  இந்த வன்முறைச் சுழற்சியை உடைக்க,  தீங்கு விளைவிக்கும் நடைமுறைகள் மற்றும் பாலின அடிப்படையிலான விதிமுறைகளை அகற்றுவதற்கான முயற்சிகளை உள்ளடக்கிய பயனுள்ள தலையீடுகள் தேவை.


பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமானது, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கங்கள், சமூகம் மற்றும் தனிநபர்களின் கூட்டு முயற்சியை நினைவூட்டுகிறது. கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம், பெண்கள் மற்றும் சிறுமிகள் வன்முறை இல்லாத எதிர்காலத்தை உருவாக்கலாம். இந்த இலக்கை அடைவது மட்டுமல்லாமல்,  ஒரு நியாயமான மற்றும் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கு அவசியமாக உள்ளது.




Original article:

Share:

சம்பாலில் உள்ள சட்டச் சிக்கல்கள் -அபூர்வா விஸ்வநாத்

 சம்பாலில் உள்ள மனு, வாரணாசியின் ஞானவாபி மசூதி (Varanasi’s Gyanvapi mosque) மற்றும் மதுராவின் ஷாஹி இத்கா (Mathura’s Shahi Idgah) வழக்குகளில் செய்யப்பட்ட மனுக்களைப் போன்றதாகும். இவைகளில், வழிபாட்டுத் தலச் சட்டம், 1991 (Places of Worship Act)-ன் விளக்கம் முக்கிய பிரச்சனையாக உள்ளது.


சம்பாலில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் ஷாஹி ஜமா மசூதியை (Shahi Jama Masjid) ஆய்வு செய்ய உத்தரவிட்டு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள நகரம் கலவர வன்முறையால் அதிர்ந்துள்ளது. இதில், குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.


சம்பாலின் ஜமா மஸ்ஜித் மசூதியானது, இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் நீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி (Gyanvapi mosque), மதுராவில் உள்ள ஷாஹி இத்கா (Shahi Idgah) மற்றும் மத்தியப் பிரதேசத்தின் தாரில் உள்ள கமல்-மௌலா மசூதி (Kamal-Maula mosque) ஆகிய வழக்குகளில் கூறப்பட்ட கூற்றுகளுக்கு ஒத்ததாகும்.


இந்த அனைத்து சர்ச்சைகளிலும் உள்ள உரிமைகோரல்கள் அடிப்படையில் வழிபாட்டுத் தலத்தின் மதத்தின் மீதான தன்மையை மாற்ற முயல்கின்றன. இது வழிபாட்டுத் தலச் சட்டம், 1991 ஆல் (Place of Worship Act) தடைசெய்யப்பட்டுள்ளது.


நவம்பர் 19 அன்று, சந்தௌசியில் உள்ள சம்பலின் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குடிமை நீதிபதி (மூத்த பிரிவு) ஆதித்யா சிங் ஒரு விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளித்தார். வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின் மற்றும் உள்ளூர் மஹந்த் உட்பட பலர் இந்த மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவில், மசூதிக்குள் நுழைவதற்கு உரிமை கோரினர்.


1526-ம் ஆண்டு முகலாய மன்னர் பாபரால் அங்கு இருந்த இந்து கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டது என மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மனுத் தாக்கல் செய்யப்பட்ட சில மணி நேரங்களில், மசூதியில் முதற்கட்ட கணக்கெடுப்பு நடத்த வழக்கறிஞர் ஆணையரை நியமித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதே நாளில் முதல் ஆய்வு நடத்தப்பட்டது. நவம்பர் 29-ம் தேதிக்குள் ஆய்வுக்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நவம்பர் 24 அன்று இரண்டாவது கட்ட ஆய்வு நடந்தது. இது சம்பாலில் போராட்டங்கள் வெடிக்க வழிவகுத்தது. பின்னர், இது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்த வழிவகுத்தது.


ஆய்வுக்காக மசூதி நிர்வாகக் குழுவிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், நவம்பர் 29-ம் தேதிக்குள் ஆய்வுக்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு தரப்பினரையும் கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


சம்பாலின் ஜமா மஸ்ஜித் (Jama Masjid) என்பது ஒரு "பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்" (protected monument) ஆகும். இது, டிசம்பர் 22, 1920 அன்று பண்டைய நினைவுச்சின்னங்கள் பாதுகாப்பு சட்டம், 1904-ன் (Ancient Monuments Preservation Act) கீழ் அறிவிக்கப்பட்டது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய தொல்லியல் துறையின் இணையதளத்தில் (Archaeological Survey of India's website) உள்ள புள்ளிவிவரங்கள் மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பட்டியலில் குறிப்பிட்டுள்ளன.


மனுதாரர்களால் தாக்கல் செய்யும் ஒரு குடிமை வழக்கு, கேள்விக்குரிய சொத்தின் விவரத்தைத் தீர்மானிப்பதற்கு நீதிமன்றத்திற்கான ஒரு வழக்கை குறிப்பிடுகிறது. இது, சிவில் வழக்கில், மனுதாரர்கள் அளிக்கும் குறைகள் முதன்மையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். மேலும், குடிமை நடைமுறைச் சட்டம் ஆரம்ப கட்டத்தில் குடிமை வழக்கில் செய்யப்பட்ட உரிமைகோரல்களை கடுமையான ஆய்வுக்கு தடை செய்கிறது. மனு ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் மட்டுமே ஆதாரங்களை நீதிமன்ற அமர்வுக்கு கொண்டுவர மனுதாரர்கள் அழைக்கப்படுகிறார்கள்.


இருப்பினும், வழிபாட்டுத் தலத்தைப் பொறுத்தவரை, வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991-ன் கீழ் அத்தகைய வழக்கு அனுமதிக்கப்படாது.


ஞானவாபி மற்றும் மதுரா ஆகிய இரண்டு வழக்குகளிலும், மாவட்ட நீதிமன்றங்கள் இந்து மனுதாரர்கள் தாக்கல் செய்த குடிமை வழக்குகளை "பராமரிக்கக்கூடியவை" என்று ஏற்றுக்கொண்டன. அதாவது, 1991ஆம் ஆண்டு சட்டம் இருந்தாலும், வழக்குகள் செல்லுபடியாகும் மற்றும் முடிவு செய்யப்படலாம். இந்த வழக்குகள் 1991 சட்டத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டவை என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. 1947 ஆகஸ்ட் 15 அன்று எந்த வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையும் அப்படியே இருக்க வேண்டும் என்று வழிபாட்டுத் தலங்கள் சட்டம் கூறுகிறது.


இந்தச் சட்டத்தின் நீண்ட தலைப்பு: "எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் மாற்றுவதைத் தடுக்கும் சட்டம். ஆகஸ்ட் 15, 1947-ம் ஆண்டில் இருந்த எந்த வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையைப் பேணுவதையும், அது தொடர்பான விஷயங்களைத் தீர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது."


சட்டத்தின் பிரிவு 3 எந்த ஒரு வழிபாட்டுத் தலத்தையும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒரு மதப் பிரிவிலிருந்து மற்றொரு மதத்திற்கு மாற்றுவதைத் தடை செய்கிறது. வழிபாட்டுத் தலத்தை ஒரே மதப் பிரிவினருக்குள் வேறு பிரிவாக மாற்றுவதையும் இது தடை செய்கிறது.


இந்த சட்டம் காங்கிரஸின் 1991 தேர்தல் அறிக்கையில் ஒரு பகுதியாக இருந்தது. இது ஒரு வழிபாட்டு தலத்தின் வரலாற்று "மாற்றம்" (conversion) பற்றிய சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது. நாடாளுமன்றத்தில் சட்டத்தை அறிமுகப்படுத்தும் போது, ​​அப்போதைய உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவான் இந்த மசோதாவை நிறைவேற்றுவது வகுப்புவாத அமைதியையும் நல்லெண்ணத்தையும் மீட்டெடுக்க உதவும் என்று கூறினார்.


பாபர் மசூதி - ராம ஜென்மபூமி பிரச்சனைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. எவ்வாறாயினும், சட்டம் இயற்றப்பட்டபோது அது ஏற்கனவே சட்டப்பூர்வ பரிசீலனையில் இருந்ததால், சட்டத்தின் வரம்பிலிருந்து சர்ச்சையானது விலக்கப்பட்டது.


வாரணாசி மற்றும் மதுராவில் வழிபாடு செய்வதற்கான அணுகல் அல்லது உரிமை தொடர்பான வழக்குகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 1991-ம் ஆண்டு சட்டத்திற்கு எதிரான அரசியலமைப்பு தொடர்பான சவால்கள் இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தற்போது நான்கு தனித்தனி மனுக்கள் உள்ளன. செப்டம்பர் 2022-ம் ஆண்டில், அப்போதைய இந்திய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு, இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும், ஒன்றிய அரசு இன்னும் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை.


ஆனால், ஞானவாபி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தனி கருத்துகணிப்பு, மாவட்ட நீதிமன்றங்களுக்கு இதுபோன்ற மனுக்களை அனுமதிக்க அதிக இடங்களை அளித்துள்ளது.


மே 2022-ம் ஆண்டில், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், 1991 சட்டத்தின் கீழ் ஒரு மதம் தொடர்பான இடத்தின் தன்மையை மாற்ற அனுமதிக்க முடியாது என்று கூறினார். எவ்வாறாயினும், ஒரு இடத்தின் மதத் தன்மையை தீர்மானிப்பது சட்டத்தின் 3 மற்றும் 4-வது பிரிவுகளை மீறாது என்று அவர் குறிப்பிட்டார்.


அதாவது ஆகஸ்ட் 15, 1947 அன்று ஒரு வழிபாட்டுத் தலத்தின் தன்மை பற்றிய விசாரணையை அனுமதிக்கலாம். பின்னர் அந்த இடத்தின் தன்மையை மாற்ற முடியாது.


மதுரா மற்றும் ஞானவாபி ஆகிய இரண்டு வழக்குகளிலும், மஸ்ஜித் தரப்பு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் இந்த விளக்கத்தை சவால் செய்துள்ளது. 1991-ம் ஆண்டு சட்டம் அத்தகைய மனுவைத் தாக்கல் செய்வதைத் தடுக்கிறதா அல்லது வழிபாட்டுத் தன்மையின் இறுதி மாற்றத்தைக் கூடத் தடுக்கிறதா என்ற இந்த ஆரம்பப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இறுதி வாதங்களை உச்சநீதிமன்றம் இன்னும் கேட்கவில்லை.


சம்பல் வழக்கில், இது தொடர்பான நிகழ்வுகள் விரைவாக முன்னேறியுள்ளன. குடிமை வழக்கு செல்லுபடியாகுமா என்பது குறித்து மாவட்ட நீதிமன்றம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இந்து தரப்புக்கு சரியான உரிமைகோரல் இருப்பதாக பூர்வாங்க கண்டுபிடிப்பு செய்யப்படுவதற்கு முன்பு, கணக்கெடுப்பு உத்தரவு முதலில் வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் முன்பே இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது.




Original article:

Share: