ஆலோசனை ஒழுங்குமுறை உருவாக்கம் மேலும் விரிவாக்கப்பட வேண்டும் -நடாஷா அகர்வால்

 இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியமும் (Securities and Exchange Board of India (SEBI)) இதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளன, ஆனால் விதிமுறைகளை உருவாக்குவதற்கான தெளிவான மற்றும் சீரான விதிகளைக் கொண்ட ஒரு சட்டத்தை உருவாக்குவது குறித்து நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும்.


இந்த ஆண்டு மே மாதத்தில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவிப்புகளை எவ்வாறு வெளியிடுவது என்பது குறித்த புதிய கொள்கையைப் பகிர்ந்து கொண்டது. பிப்ரவரி மாத தொடக்கத்தில், இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியமும் (SEBI) அதன் விதிகளை உருவாக்குவதற்கான இதேபோன்ற திட்டத்தை அறிவித்தது.


RBI மற்றும் SEBI ஆகியவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களால் உருவாக்கப்பட்ட அரசு அமைப்புகள். விதிகளை உருவாக்கும் அதிகாரம் அவற்றுக்கு உள்ளது. எனவே, நியாயத்தை உறுதி செய்வதற்கும் சட்டத்தைப் பின்பற்றுவதற்கும் அவை சரியான படிகள் மற்றும் சரிபார்ப்புகளைப் பின்பற்றுவது முக்கியம். புதிய கொள்கைகள் உருவாக்குவது ஒரு நல்ல படியாகும். இப்போது, ​​எந்தவொரு விதிகளையும் உருவாக்கும் அல்லது மாற்றுவதற்கு முன், RBI மாற்றங்கள் மக்களை எவ்வாறு பாதிக்கலாம் என “தாக்க பகுப்பாய்வு” (“impact analysis”) செய்யும். மேலும், புதிய விதி ஏன் தேவைப்படுகிறது மற்றும் அது எந்த இலக்கை அடைய விரும்புகிறது என்பதை SEBI விளக்கும். இரண்டும் குறைந்தது 21 நாட்களுக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கும். இதை பொறுத்து அவர்கள் அவ்வப்போது தங்கள் விதிகளை மதிப்பாய்வு செய்வார்கள்.


இந்த மாற்றங்கள் மிகவும் வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களை மையமாகக் கொண்ட விதி உருவாக்கத்தை நோக்கி நகர்வதைக் காட்டுகின்றன. ஆனால், இன்னும் பலவற்றைச் செய்ய முடியும். இன்னும் இரண்டு படிகள் செயல்முறையை இன்னும் சிறப்பாகச் செய்யும். முதலில், ஒரு விதியை உருவாக்குவதற்கான பொருளாதார காரணத்தை ஒழுங்குமுறை அதிகாரிகள் தெளிவாக விளக்க வேண்டும். இரண்டாவதாக, அவர்கள் தொடர்ந்து விதிகளை மதிப்பாய்வு செய்வதையும் பொதுமக்களின் கருத்துக்களுக்கு பதிலளிப்பதையும் உறுதிசெய்ய அமைப்புகளை அமைக்க வேண்டும்.


சந்தை தோல்வியின் பிரச்சினை


RBI மற்றும் SEBI தாங்கள் முன்மொழியும் எந்தவொரு புதிய விதிக்கும் பின்னால் உள்ள பொருளாதார காரணங்களை தெளிவாக விளக்க வேண்டும். 2013ஆம் ஆண்டில், நிதித் துறை சட்டமன்ற சீர்திருத்த ஆணையம் (Financial Sector Legislative Reforms Commission (FSLRC)) அனைத்து நிதிச் சட்டங்களும் அவற்றின் பொருளாதார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியது. மற்ற நாடுகளும் இதே போன்ற கருத்துக்களைப் பின்பற்றுகின்றன.


உதாரணமாக, அமெரிக்காவில், ஒரு புதிய விதியை உருவாக்கும் முன், ஒழுங்குமுறை அதிகாரிகள் செலவு-பயன் (cost-benefit analysis) பகுப்பாய்வைச் செய்ய வேண்டும். இந்த விதி சமூகத்தின்மீது குறைந்தபட்ச சுமையை ஏற்படுத்துகிறது. புதிய விதிகள் அதிக நன்மைகளை அளிக்கிறது என்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், நேரடி ஒழுங்குமுறை தவிர பிற விருப்பங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தில், ஒழுங்குமுறை அதிகாரிகள் முதலில் சிக்கலை அடையாளம் காண வேண்டும், சாத்தியமான தீர்வுகளைப் பற்றி சிந்திக்க வேண்டும் மற்றும் அவற்றின் தாக்கங்களைச் சரிபார்க்க வேண்டும். மேலும், விதியின் வெற்றியை எவ்வாறு கண்காணித்து மதிப்பிடுவது என்பதைத் திட்டமிட வேண்டும்.


தற்போது, ​​ரிசர்வ் வங்கி பொருளாதாரத்தின் அடிப்படையில் சில தாக்க பகுப்பாய்வுகளைச் செய்கிறது. மேலும் செபி அதன் இலக்குகளை விளக்குகிறது. ஆனால், ஒரு விதிக்கான பொருளாதார காரணத்தை தெளிவாகக் காட்டவோ அல்லது விதி சரிசெய்யும் சந்தை தோல்வியைச் சுட்டிக்காட்டவோ இரண்டுமே தேவையில்லை. இதற்கு நேர்மாறாக, சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையம் (IFSCA) அதன் விதி தீர்க்கும் நோக்கத்தைக் கொண்ட சிக்கலை விளக்க வேண்டும்.


ரிசர்வ் வங்கி மற்றும் செபி போன்ற ஒழுங்குமுறை நிறுவனங்கள் நடவடிக்கை தேவைப்படும் சந்தை தோல்வியை அடையாளம் காணவும், புதிய விதி சிக்கலை எவ்வாறு சரிசெய்யும் என்பதைக் காட்டவும், எதிர்பார்க்கப்படும் தாக்கத்தைக் காட்ட செலவு-பயன் பகுப்பாய்வைச் செய்யவும் விதி எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதைக் கண்காணித்து மதிப்பீடு செய்ய ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.


பொறுப்புணர்வை வலுப்படுத்துதல்


RBI மற்றும் SEBI போன்ற ஒழுங்குமுறை நிறுவனங்கள், விதிகளை உருவாக்கும்போதோ அல்லது மாற்றும்போதோ பொதுமக்களை ஈடுபடுத்துவதில் வலுவான வரலாற்றைக் கொண்டிருக்கவில்லை. ஜூன் 2014 முதல் ஜூலை 2015ஆம் ஆண்டு வரை, RBI அதன் சுற்றறிக்கைகளில் 2.4% மட்டுமே பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டதாகவும், SEBI அதன் விதிமுறைகளில் பாதிக்கும் குறைவானவற்றுக்கு மட்டுமே அவ்வாறு கேட்டதாகவும் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. மக்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள மிகக் குறைவான வாய்ப்புகள் மட்டுமே இருந்தன என்பதை இது காட்டுகிறது.


இருப்பினும், நடைமுறைகள் மேம்படும் என்ற நம்பிக்கை உள்ளது. உண்மையான மாற்றத்திற்கு, ஒழுங்குமுறை அதிகாரிகள் பொதுமக்களை எவ்வாறு ஈடுபடுத்துகிறார்கள் என்பதில் மிகவும் திறந்த மற்றும் வெளிப்படையானவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், அவர்கள் பின்வரும் விவரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.  அதில் முன்மொழியப்பட்ட மொத்த விதிகள் அல்லது மாற்றங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது எத்தனை பொது ஆலோசனைகள் நடத்தப்பட்டன, எத்தனை பதில்கள் பெறப்பட்டன, எந்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன அல்லது நிராகரிக்கப்பட்டன, அவை ஏன் ஏற்றுக்கொள்ளப்பட்டன அல்லது நிராகரிக்கப்பட்டன, இறுதி விதிகளை பொதுக்கருத்து எவ்வாறு பாதித்தது போன்றவற்றை விளக்க வேண்டும்.


இவை முழுமையானது அல்ல. ஆனால், இது ஒரு நல்ல தொடக்கமாகும். இந்தத் தகவல்களில் சில  SEBI-யின் வாரியக் கூட்ட நிகழ்ச்சி நிரல்களில் காணப்படுகின்றன. இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், SEBI-ன் சமீபத்திய கூட்டத்தைப் போலவே, பொதுமக்களின் கருத்துகள் நீக்கப்பட்டு இரகசியமாகக் குறிக்கப்படுகின்றன.


மேலும், RBI மற்றும் SEBI தங்கள் விதிகளை எவ்வளவு அடிக்கடி மதிப்பாய்வு செய்யும் என்பதை தெளிவாக வரையறுக்க வேண்டும். தேவையற்ற விதிகளைக் குறைப்பதாக அவர்கள் உறுதியளிக்கும்போது இது மிகவும் முக்கியமானது. ஒப்பிடுகையில், IFSCA அதன் அனைத்து விதிமுறைகளும் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்ற விதியைக் கொண்டுள்ளது.  இதேபோல், RBI மற்றும் SEBI ஆகியவை தங்கள் விதிகள் இன்னும் பயனுள்ளதாக உள்ளதா என்பதையும், அவை சரிசெய்ய வேண்டிய சிக்கல்களைத் தீர்ப்பதா என்பதையும் தொடர்ந்து சரிபார்க்க வேண்டும்.


ஒரு தடை


புதிய விதிகளை உருவாக்குவதற்கு முன் நல்ல ஒழுங்குமுறை நடைமுறைகளுக்கு வலுவான காரணங்கள் தேவை. RBI மற்றும் SEBI  இந்த திசையில் நகரத் தொடங்கியுள்ளன. இருப்பினும், புதிய விதிகளின் தாக்கத்தை சரியாக மதிப்பிடுவதற்கோ அல்லது பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்பதற்கோ அரசாங்கத்திடம் போதுமான வளங்கள் அல்லது ஊழியர்கள் இல்லை என்பது ஒரு பெரிய சவால்.


மேலும், ஒரு சில ஒழுங்குமுறை நிறுவனங்கள் மட்டுமே தாங்களாகவே சிறிய மாற்றங்களைச் செய்தால், அனைத்து விதிகளும் நல்ல தரங்களைப் பின்பற்றுகின்றன என்பதை உறுதி செய்வதற்கு அது போதுமானதாக இருக்காது. விதிகளை உருவாக்குவதற்கான தெளிவான வழிமுறைகளை அமைக்கும் அமெரிக்காவில் உள்ள நிர்வாக நடைமுறைச் சட்டம் போன்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றுவது குறித்து பாராளுமன்றம் பரிசீலிக்கலாம். இந்த நடவடிக்கைகளில் தாக்கத்தை ஆய்வு செய்தல், பொதுமக்களின் கருத்தைப் பெறுதல் மற்றும் விதிகளை தொடர்ந்து மதிப்பாய்வு செய்தல் ஆகியவை அடங்கும்.


இங்கிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளில் ஏற்கனவே இதுபோன்ற வழிகாட்டுதல்கள் உள்ளன. இந்தியாவில் இதேபோன்ற அணுகுமுறை விதி உருவாக்கத்தை மிகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் அனைத்து ஒழுங்குமுறை நிறுவனங்களுக்கும் பொறுப்பாகவும் மாற்றும்.


நடாஷா அகர்வால், TrustBridge Rule of Law Foundation அறக்கட்டளையின் மூத்த ஆராய்ச்சிக் குழு  உறுப்பினர்.


Original article:
Share:

நீதித்துறை பொது உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது பின்னடைவின் அறிகுறியாகும். -சஞ்சய் ஹெக்டே

 இந்தியாவில் நீதித்துறை பேச்சு சுதந்திரத்தை பலவீனப்படுத்துகிறது. அதாவது, மக்களின் உள்ளடக்கத்தைக் கண்காணிப்பதன் மூலம் பேச்சுரிமையை கட்டுப்படுத்துகிறது.


இன்றைய இந்திய நீதிமன்றங்கள் பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவை அதைக் கட்டுப்படுத்துகின்றன அல்லது நிர்வகிக்கின்றன. இது நமது அரசியலமைப்பு மதிப்புமிக்க தன்மைகளின் விசித்திரமான தலைகீழ் மாற்றம். இது, அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a)-க்குப் பின்னால் உள்ள முக்கிய யோசனையிலிருந்து அமைதியாக விலகிச் செல்வதை நாம் காண்கிறோம். அவை, பேச்சு, கோவம் கொள்ளுதல் (provocative), தாக்குதல் (offensive) அல்லது அமைதியை சீர்குலைத்தல் (unsettling) குடிமக்களை கொடுங்கோன்மையிலிருந்து பாதுகாக்கிறது என்று இந்த விதி கூறுகிறது. பேச்சு என்பது ஒரு கேடயமாக இருக்க வேண்டும், கொடுங்கோன்மைக்கான ஆயுதமாக இருக்கக்கூடாது.


நமது ஜனநாயகத்தில் பெரும்பான்மையினரின் அதிகாரத்திற்கு எதிராக ஒரு வலுவான பாதுகாவலராக நீதித்துறை ஒரு காலத்தில் பார்க்கப்பட்டது. இப்போது, ​​அது பெரும்பாலும் நடத்தையை மதிப்பிடும் நீதிபதியாகவே செயல்படுகிறது. நீதிமன்றங்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்கவும், நாகரிகம், உணர்திறன் அல்லது தேசிய பெருமை என்ற பெயரில் மரியாதை காட்டவும் கேட்கின்றன. ஆனால் நீதிமன்றங்கள் பேச்சு சுதந்திரம் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைவிட என்ன சொல்லப்பட்டது என்பதில் அதிக அக்கறை காட்டும்போது, ​​நாடு பாதிக்கப்படக்கூடியதாக மாறும். இது ஒரு புதிய வகையான கொடுங்கோன்மையை எதிர்கொள்கிறது. அவை, உணர்வுகள், சீற்றம் மற்றும் வேறுபாடுகளுக்கு மிகக் குறைந்த சகிப்புத்தன்மை ஆகியவற்றால் இயக்கப்படும் ஒன்று.


ஒரு சாதாரண உதாரணத்துடன் தொடங்குவோம். பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் 24 வயது இளைஞனின் சமூக ஊடகப் பதிவு. மே 2025-ல் ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்திற்குப் பிறகு இது நடந்தது. அவரது பதிவு சுவாரசியமற்றதாக இருந்ததா? ஒருவேளை. ஆனால் ரசனை என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் அளவிடப்படும் ஒன்றல்ல. அலகாபாத் உயர் நீதிமன்றம் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தது. அந்த நபருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை (FIR) ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அது நிராகரித்தது. "நாட்டின் அரசியலமைப்பு அதிகாரிகளுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் அளவுக்கு உணர்ச்சிகள் செல்ல அனுமதிக்க முடியாது" என்று நீதிமன்றம் கூறியது. இது ஒரு குறிப்பிடத்தக்க விதிமுறையாகும். இது அரசியலமைப்பு வடிவமைப்பை நுட்பமாக தலைகீழாக மாற்றுகிறது. இப்போது, ​​குடிமகன் அரசை பொறுப்பேற்க வைக்கும் அதிகாரத்தின் ஆதாரம் அல்ல. அதற்கு பதிலாக, குடிமகன் மிகவும் சுதந்திரமாகப் பேசுவதற்காக தண்டிக்கப்பட வேண்டிய ஒரு குழந்தையைப் போல நடத்தப்படுகிறார்.


சீற்றத்தின் சரிபார்ப்பு


நீதிமன்றங்கள் பேச்சு சுதந்திரத்தை அரசியலமைப்பு பிரிவு 19(1)(a)-ன் கீழ் ஒரு அடிப்படை உரிமையாகவும், அரசின் அதிகாரத்தை கட்டுப்படுத்துவதாகவும் கருதாமல், பொது உணர்வுகள் மற்றும் நிறுவன கண்ணியத்துடன் இணைக்கப்பட்ட ஒரு நிபந்தனை உரிமையாக விளக்கி வருகின்றன. உதாரணமாக:


கமல்ஹாசன் வழக்கு: கன்னடம் தமிழில் இருந்து வந்தது என்ற அவரது கருத்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தை பொது உணர்வுகளை சமாதானப்படுத்த மன்னிப்பு கேட்க பரிந்துரை செய்ய வைத்தது, இது சட்டவிரோதமானது (எ.கா., தூண்டுதல் அல்லது அவதூறு) என்று கருதப்படவில்லை. இது பேச்சு பொது ஒப்புதலுடன் ஒத்துப்போக வேண்டும் என்ற முன்மாதிரியை உருவாக்குகிறது.


ரன்வீர் கவுதம் அலகாபாத் வழக்கு: ஒரு பாட்காஸ்டரின் வெளிப்படையான மொழிப் பயன்பாட்டிற்காக நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டார், நீதிமன்றம் அதன் கலாச்சார நெறிமுறைகளுடன் ஒத்துப்போவதை கேள்விக்கு உட்படுத்தியது, உண்மையான தீங்கு ஏற்படுத்தியதை மதிப்பிடாமல்.


அலி கான் மகமுதாபாத் வழக்கு: இந்தியாவின் பாகிஸ்தானுடனான போர் சூழ்நிலையை விளக்க ஒரு பெண் வீரரை பயன்படுத்தியதற்கு ஒரு பேராசிரியரின் விமர்சனம், உணர்வுகளை புண்படுத்தியதாக நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டது, வெறும் குற்றச்சாட்டு நீதிமன்ற விசாரணையை தூண்டுவதற்கு போதுமானது என்பதை காட்டுகிறது.


இந்தப் போக்கு, சட்ட தரங்களை விட உணர்ச்சிகரமான உணர்வுகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் பேச்சு சுதந்திரத்தை பலவீனப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது, இது கோபத்தை ஊக்குவித்து மேலும் குற்றச்சாட்டுகளை அழைக்கிறது.


இந்த நிகழ்வுகளிலிருந்து இரண்டு குழப்பமான வடிவங்கள் வெளிப்படுகின்றன.


முதலாவதாக, நீதித்துறையானது உணர்ச்சிகரமான எதிர்விளைவுகளைத் தூண்டும் பேச்சை சட்டரீதியாக தீங்கு விளைவிக்கும் ஒன்றாகக் கருதுகிறது. இது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய தவறான புரிதல். விதி 19(2)-ன் கீழ் பேச்சு வன்முறை, வெறுப்பு அல்லது பொது ஒழுங்கை சீர்குலைத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அது மக்களை கோபப்படுத்துகிறது, எரிச்சலூட்டுகிறது அல்லது புண்படுத்துகிறது என்பதற்காக மட்டும் அதை கட்டுப்படுத்தக்கூடாது. இரண்டாவதாக, நீதிமன்றங்கள் மன்னிப்பு கேட்பதையும், மொழியின் மீதான நியாயமாக பாதுகாப்பு செய்வதையும் (moral policing of language) ஊக்குவிக்கின்றன. இது ஒரு மோசமான ஊக்கத்தை உருவாக்குகிறது. ஒரு கருத்து அதிக சீற்றத்தை ஏற்படுத்தும்போது, ​​அது வழக்குகளுக்கு வழிவகுக்கும். இது சமூகத்தைப் பாதுகாக்காது. மாறாக, அது கும்பல்களையும் அடிக்கடி வழக்குத் தொடுப்பவர்களையும் ஊக்குவிக்கிறது. மக்கள் புண்படுத்தப்படுவதற்கான காரணங்களைத் தேடும் ஒரு தளத்தையும் இது உருவாக்குகிறது.


ஆயுதப்படைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இந்த மாற்றம் மிகவும் தெளிவாக உள்ளது. சமீபத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஒரு அவதூறு வழக்கில் நிவாரணம் வழங்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்திய ராணுவத்தைப் பற்றி அவர் கூறியதாகக் கூறப்படும் அவதூறு கருத்துக்கள் பற்றிய வழக்கு இது. பேச்சு சுதந்திரத்தில் இராணுவத்தை "அவதூறு" செய்யும் உரிமை இல்லை என்று உயர்நீதிமன்றம் கூறியது. இருப்பினும், ஒரு சட்டக் கருத்தாக அவதூறு கவனமாக ஆராயப்பட வேண்டும். உயர் நீதிமன்றம், பேச்சு சுதந்திரத்தில் இராணுவத்தை "அவதூறாக" பேசுவது உள்ளடங்காது என்று கூறியது. ஆனால், அவதூறு என்பது ஒரு சட்டப்பூர்வ தரமாக, குறிப்பாக அரசு நிறுவனங்களின் பெயரால் அல்லது மூன்றாம் தரப்பினரால் தொடுக்கப்படும்போது, மிகவும் கவனமாக மதிப்பிடப்பட வேண்டும்.


முந்தைய வழக்கில், சமீபத்திய இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு பிரதமரை ஒருவர் "கோழை" (coward) என்று அழைத்தார். அவருக்கு எதிராக ஒரு FIR (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாரதீய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 152 மற்றும் 353(2) ஐப் பயன்படுத்தி நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்தச் சட்டங்கள் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் பொதுத் தவறுகள் போன்ற கடுமையான பிரச்சினைகளுக்கு மட்டுமே இது பொறுந்தும். ஆனால் இப்போது, ​​அவை கிண்டல் மற்றும் நையாண்டியைத் தண்டிக்க ஒரு திரிபுபடுத்தப்பட்ட வழியில் பயன்படுத்தப்படுகின்றன.


நீதிமன்றங்கள் இத்தகைய வழக்குகளில் எஃப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) ரத்து செய்யப்படுவதை வழக்கமாக மறுப்பது கவனிக்கத்தக்கது. இது தலையிடுவதற்கு மிக விரைவு என்றும், காவல் துறை விசாரணைகள் தங்கள் பாதையில் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த பொறுப்பு தவிர்ப்பு நடுநிலையானதோ அல்லது செயலற்றதோ அல்ல. குற்றவியல் வழக்கை எதிர்கொள்ளும் குடிமகனுக்கு, விசாரணை செயல்முறையே தண்டனையாக உள்ளது. பேச்சை முடக்குவதற்கு தீர்ப்பு அவசியமில்லை; ஒரு சம்மன் மற்றும் குற்றப்பத்திரிகை அதைச் செய்துவிடும். மெட்ராஸ் உயர் நீதிமன்றம் இந்த போக்கை எதிர்த்து சில சமயங்களில் நின்றுள்ளது. ஆனால், இது பேச்சின் கட்டமைப்பு பாதுகாப்பை விட, கதையை திருத்துவதற்கு மேலாக இருந்தது.


இந்திய நீதிமன்றங்கள் பேச்சு பாதுகாப்பிற்கு கொள்கை அடிப்படையிலான மாதிரிக்கு திரும்ப வேண்டும். என்ன பேசப்பட்டது என்பதில் மூழ்குவதற்கு பதிலாக, பேசியவரின் உரிமை மீறப்பட்டதா, மற்றவர்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டதா என்பதை கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்பது நீதிமன்றத்தின் பரிந்துரையாக இருக்கக்கூடாது; அது தனிநபரின் தேர்வாக இருக்க வேண்டும். இல்லையெனில், நீதிமன்றங்கள் ஒரு மன்னிப்பு அறை போல ஆகிவிடும், அங்கு பேச்சு சட்டரீதியான விளக்கத்தால் அல்ல, வருத்தத்தால் மன்னிக்கப்படுகிறது. கோரப்படும் வருத்தம் மதிப்பிழந்து, பகுத்தறிவு உள்ளவர்களை அல்ல, கோபமடைந்தவர்களை அதிகாரப்படுத்துகிறது.


மக்களுக்கான சமிக்ஞை 


மேலும், தேசத்துரோகம் போன்ற சட்டங்கள் அல்லது பொது ஒழுங்கு விதிகள் தெளிவற்றதாக இருக்கும் வரை, நீதிமன்றங்கள் சுதந்திரத்தின் பக்கம் சாய்ந்திருக்க வேண்டும். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நீதித்துறையில் வலுவான "சில்லிங் விளைவு" (chilling effect) கோட்பாடு, இந்தியாவின் நீதிமன்றங்களில் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் அரிதாகவே அதை உறுதியாகச் செயல்படுத்துகின்றன. இந்த பிரச்சினை பிரபலமான நபர்கள் அல்லது முக்கியமான பேச்சு பற்றியது மட்டுமல்ல. இது அரசியலமைப்பின் மீதான அனைவரின் நம்பிக்கையையும் பாதிக்கிறது. உதாரணமாக, ஒரு யூடியூபர் நகைச்சுவையாகப் பாட வேண்டியிருக்கும் போது, ​​அல்லது ஒரு பேராசிரியர் ஒரு ட்வீட் தொடர்பாக நீதிமன்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் போது, ​​அல்லது ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் மொழிப் பெருமைக்காக மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் போது, ​​செய்தி தெளிவாக உள்ளது. சாதாரண மக்கள் பாதுகாப்பான, மந்தமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிகளில் மட்டுமே பேசக் கற்றுக்கொள்கிறார்கள்.


ஜனநாயகம் என்பது எப்போதும் உடன்படும் மக்களால் உருவாக்கப்படுவதில்லை. கருத்து வேறுபாடு காரணமாக அவை வலுவடைகின்றன. சில நேரங்களில் இந்த கருத்து வேறுபாடு சத்தமாக, முரட்டுத்தனமாக அல்லது பொறுப்பற்றதாக இருக்கும். ஒரு சமூகத்தின் வலிமை, அது எவ்வளவு மரியாதையை ஏற்றுக்கொள்கிறது என்பதன் மூலம் அல்ல, மாறாக அது எவ்வாறு ஆத்திரமூட்டலைக் கையாளுகிறது என்பதன் மூலம் சோதிக்கப்படுகிறது. பேச்சு சுதந்திரம் என்பது மக்களைப் புண்படுத்த அனுமதிப்பது மட்டுமல்லாமல், குற்றத்தை பொறுத்துக்கொள்ளும் திறனையும் குறிக்கிறது. இந்தியா தனது ஜனநாயக உணர்வைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பினால், அது கருத்து வேறுபாடு கொள்ளும் உரிமையை மதிக்க வேண்டும். சுதந்திரத்தை தியாகம் செய்வதன் மூலம் அது நிறுவனங்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கக்கூடாது.


நீதிபதிகள் அரசியலமைப்பின் பாதுகாவலர்களே தவிர, கலாச்சாரத்தை காப்பவர்கள் அல்ல. அவர்கள் பேசும் உரிமையைப் பாதுகாக்க வேண்டுமே தவிர கேட்பவரின் வசதியை அல்ல. ஏனென்றால், நீதிமன்ற அறைகளில் பேச்சு நிறுத்தப்படும்போது அல்லது கட்டுப்படுத்தப்படும்போது, ​​சுதந்திரம் மெதுவாக சிதைந்துவிடுகிறது. அது திடீரென்று முடிவடையாது, ஆனால் மரியாதை காரணமாக அமைதியாக மங்கிவிடும். உணர்வுகளுக்கு உணர்திறன் கொண்டவர்களாக இருப்பதில் நீதிபதிகளின் இந்தப் புதிய கவனம் முன்னேற்றம் அல்ல. இது ஒரு பின்னடைவு. அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதோடு நல்லிணக்கத்தையும், மரியாதையையும், இதனுடன் பின்னடைவையும் கலக்கிறது. மன்னிப்பு கேட்பதை ஒருபோதும் சட்டரீதியிலாக பயன்படுத்தக்கூடாது. செல்லுபடியாகும் பேச்சுக்கு ஒப்புதல் தேவையில்லை. நமது நீதிமன்றங்கள் மறந்துவிடக் கூடாது, இந்த குடியரசு மரியாதையால் பிறக்கவில்லை, மாறாக எதிர்ப்பால் உருவானது. அரசியலமைப்பு டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பேனாவிலிருந்து வந்தது. அவர் இவ்வாறு எழுதினார்: "…உலகம் அதிகம் கடமைப்பட்டிருப்பது, அதிகாரத்தின் முன் துணிச்சலுடன் வாதிடவும், அவர் தவறற்றவர் இல்லை என வலியுறுத்தவும் தயங்காத கிளர்ச்சியாளர்களுக்குத் தான்."


சஞ்சய் ஹெக்டே இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஆவார்.


Original article:
Share:

பேச்சுவார்த்தையாளர்களைப் பாதிப்பது : ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இந்தியாவின் பிரதிநிதிகள் குழு குறித்து…

 பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் (pluralistic India) ஒன்றுபட்ட பிம்பத்தை பிரதிநிதிகள் குழுக்கள் வெளிப்படுத்தினர்.


இந்திய அரசாங்கம் ஏழு பிரதிநிதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியது. இந்த பிரதிநிதிகளில் பெரும்பாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில முன்னாள் தூதர்கள் அடங்குவர். ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இராஜதந்திர ரீதியில் செய்திகளை எடுத்துச் செல்வதே அவர்களின் பணியாக இருந்தது. மொத்தம், 59 உறுப்பினர்கள் இந்த பிரதிநிதிகளின் ஒரு பகுதியாக இருந்தனர். அவர்கள் 32 நாடுகளுக்குச் சென்றனர். பல முக்கிய விஷயங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள தாக்குதலைப் பற்றி அவர்கள் எடுத்துரைத்தனர். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல்கள் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டவை மற்றும் துல்லியமானவை என்பதையும் அவர்கள் விவரித்தனர். இறுதியாக, பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்ட "புதிய இயல்பு" (new normal) அணுகுமுறையை அவர்கள் விளக்கினர்.


இந்தச் செய்தி வெளிநாட்டு அரசாங்கங்களை மட்டுமல்ல, சட்டமியற்றுபவர்கள், வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்காகவும் குறிப்பாக, இந்தியா போதுமான ஆதரவைப் பெறவில்லை என்று நினைக்கும் நாடுகளில் இது மிகவும் முக்கியமானது.


பார்வையிட்ட பல நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) ஒரு பகுதியாகும். சில நிரந்தரமற்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன, மற்றவை அடுத்த ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சேரும். இந்தியா சமீபத்தில் ஒரு இராஜதந்திர பின்னடைவைச் சந்தித்ததால் இது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.  அதாவது, 2025–26க்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இது தொடரபான அறிக்கையை மாற்ற முடிந்தது. பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற குழுவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பற்றிய எந்தக் குறிப்பையும் அது நீக்கியது.


ஐ.நா. அமைப்புகளிலும் பாகிஸ்தான் முக்கியப் பங்கு வகித்துள்ளது. இது இப்போது தலிபான் தடைகள் குழுவின் (Taliban Sanctions committee) தலைவராகவும், ஐ.நா. பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் துணைத் தலைவராகவும் உள்ளது. இந்த நிலைப்பாடுகள் பயங்கரவாதிகளுக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை எடுக்க இந்தியாவை வலியுறுத்துவதை கடினமாக்கும். இதில் அவர்களை ஐ.நா. விதிகளின் கீழ் அல்லது நிதி நடவடிக்கை பணிக்குழுவில் (FATF) நியமிப்பதும் அடங்கும்.


பிரதிநிதிகளுக்கான மற்றொரு முக்கிய பிரச்சினை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (Organisation of Islamic Cooperation(OIC)) ஆகும். இந்தக் குழு பெரும்பாலும் இந்தியாவை விமர்சித்து வருகிறது.


பிரதிநிதிகள் அமெரிக்காவிலும் கடுமையாக கவனம் செலுத்தினர். அவர்கள் நியூயார்க் மற்றும் வாஷிங்டன் இரண்டையும் பார்வையிட்டனர். இந்தியா-அமெரிக்க உறவுகளில் பதற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் காரணமாக இந்த கவனம் இருக்கலாம். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்ய உதவியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறுவது ஒரு காரணம்தான். சாத்தியமான "அணுசக்தி மோதலை" (nuclear conflict) தவிர்க்க வர்த்தக உறவுகளையும் அவர் பயன்படுத்தினார்.


அரசியல் இராஜதந்திரத்தின் இந்த சுற்றுப்பயணங்கள், வெளிநாடுகளில் உள்ள உரையாடல்களுக்கு செல்வாக்கு செலுத்துவதை விட, புலம்பெயர்ந்த இந்தியர்களிடம் பேசுவதற்கும், இந்திய ஊடகங்களுக்கு பேட்டிகள் கொடுப்பதற்கும் அதிக நேரம் செலவழிக்கப்பட்டதாக இந்தியாவில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த அரசியல் இராஜதந்திர சுற்றுப்பயணங்கள் எவ்வளவு வெற்றி பெற்றன என்பதைப் பார்க்க வேண்டும்.


பாகிஸ்தானிடமிருந்தும் பிரதிநிதிகள் குழுவுக்கு ஒரு சவால் வந்தது. இந்தியாவின் கருத்தை எதிர்கொள்ள இந்தியாவின் அணுகுமுறையை பாகிஸ்தானும்  இதுபோன்று முயன்றது.


இருந்தபோதிலும், இந்திய பிரதிநிதிகளிடமிருந்து வந்த முக்கிய செய்தியானது வலுவானதாக உள்ளது. இந்த பிரதிநிதிகளில் பல்வேறு இந்திய மாநிலங்கள், மதங்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர். அவர்கள் இந்திய ஒற்றுமை மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த உடன்பாடு பற்றிய சக்திவாய்ந்த செய்தியை அனுப்பினர்.


தற்போது, ​​மோடி அரசாங்கம் சர்வதேச விமர்சனங்களை எதிர்கொள்கிறது. வெளிநாடுகளில் உள்ள மக்கள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதாகவும், பெரும்பான்மைவாதத்தை ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவை யார் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதை இந்தியா கவனமாகத் தேர்ந்தெடுத்தது. நாட்டின் நேர்மறையான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பிம்பத்தைக் காட்டுவதே இதன் முக்கிய குறிக்கோளாக இருந்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டில் இந்தியாவும் உறுதியாக வெளிப்படுத்த விரும்பியது.


Original article:
Share:

செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலம் பற்றி… -B. பாஸ்கர்

 காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு முக்கியமான ரயில் இணைப்பை வழங்கும் இந்த பாலம், வெள்ளிக்கிழமை பிரதம மந்திரியால் திறந்து வைக்கப்பட்டது.


இந்த பாலத்தில் பல தனித்துவமான அம்சங்கள் உள்ளன. முதலாவதாக, இது உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலம் [railway arch bridge] என்று அழைக்கப்படுகிறது. இது செனாப் நதிக்கு மேல் 359 மீட்டர் உயரத்தில் உள்ளது மற்றும் 1,315 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 467 மீட்டர் வளைவு கொண்டுள்ளது. இந்த பாலம் பாரிஸில் உள்ள ஈஃபல் டவரை (Eiffel Tower) விட 35 மீட்டர் உயரமானது.


செனாப் பாலம் 272 கிலோமீட்டர் கொண்ட லட்சியமான உதம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா ரயில் இணைப்பு [Udhampur-Srinagar-Baramulla Rail Link - USBRL] ரயில்வே திட்டத்தில் ஒரு முக்கியமான இணைப்பாகும்.


இந்த திட்டம் ஜம்மு காஷ்மீரை நாட்டின் மற்ற பகுதிகளுடன் ரயில் மூலம் இணைக்கும்.


பிரதம மந்திரி நரேந்த்ர மோடி ஜூன் 6 அன்று செனாப் பாலத்தை திறந்து வைத்தார்  மற்றும் கத்ரா மற்றும் ஸ்ரீநகருக்கு இடையே வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


செனாப் பாலம் இந்திய ரயில்வேயால் ₹1,400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் கட்டுமானத்தை கொங்கண் ரயில்வே கார்ப்பரேஷன் மேற்பார்வையிட்டது. கட்டுமானம் முழுக்க முழுக்க Afcons Infrastructure, South Korea’s Ultra Construction & Engineering Company மற்றும் VSL India ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் செய்யப்பட்டது.


உயர்கோபுரப் பாலத்தின் அடித்தளத்தை பின்லாந்தின் WSP குழுமம் வடிவமைத்தது. மேலும், வளைவை ஜெமானியைச் சேர்ந்த Leonhardt Andra and Partners வடிவமைத்தனர்.


அடித்தள பாதுகாப்பை பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் வடிவமைத்தது. டெல்லி இந்திய தொழில்நுட்ப கழகம் மற்றும் ரூர்க்கி இந்திய தொழில்நுட்ப கழகம் நில அதிர்வு (seismic analysi) பகுப்பாய்வை மேற்கொண்டன. அதே நேரத்தில் டெல்லி இந்திய தொழில்நுட்ப கழகம் சாய்வு பகுப்பாய்வை (slope analysis) மேற்கொண்டன.


பாலத்தை குண்டு வெடிப்புத் தடுப்பு பாலமாக மாற்றுவதில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation (DRDO)) உதவியது.


பாலத்தின் கட்டுமானத்திற்காக சுமார் 30,000 டன் எஃகு பயன்படுத்தப்பட்டது. இந்திய எஃகு ஆணையம் லிமிடெட் (Steel Authority of India Limited (SAIL)) எஃகு வழங்கியது மற்றும் சுவிஸ் நிறுவனமான மகேபா கோள ஸ்டாப்பர் தாங்கு உருளைகளை வழங்கியது.


இந்தப் பாலத்தின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் ஆகும். மேலும், மணிக்கு 100கி.மீ வேகத்தில் ஓடும் ரயில்களை கையாளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


செனாப் பாலத்தின் திறப்பு விழா, 1994-95 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட USBRL திட்டத்தின் உச்சக்கட்டத்தைக் குறிக்கிறது. ஆரம்ப திட்டச் செலவு ₹37,012 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு ₹43,780 கோடியில் நிறைவடைந்தது.


செனாப் பாலம் 2003ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. எனவே, கடினமான மற்றும் சவாலான நிலப்பரப்பு, நிலப்பரப்பு கட்டுப்பாடுகள் மற்றும் அரசியல் சூழல் காரணமாக அதை முடிக்க 22 ஆண்டுகள் ஆனது.


மோதல்களின் போது எல்லைப் பகுதிகளுக்கு பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்வதில் இது உதவும் என்பதால், தேசிய பாதுகாப்பிற்கு இந்தப் பாலம் முக்கியமானது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் எல்லை தாண்டிய தாக்குதல்கள் நடப்பதைத் தடுக்க பாதுகாப்புப் படைகளுக்கு உதவும் ஒரு முக்கிய இணைப்பாக இந்தப் பாலம் உள்ளது.


ஜம்மு-காஷ்மீர் வடக்குப் பகுதியில் சீனாவின் எல்லையையும் கொண்டுள்ளது. இந்தியாவுடன் நீண்டகால எல்லைப் பிரச்சினை உள்ளது.


காஷ்மீரின் பொருளாதாரத்திற்கு இது எவ்வாறு உதவும்?


செனாப் பாலம் ஜம்மு-காஷ்மீரின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிராந்தியத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் ரயில் மூலம் ஒருங்கிணைப்பதன் மூலம், இந்த பாலம் ரயில் மூலம் பொருட்களை நகர்த்த உதவும். இது உள்ளூர் வணிகங்களுக்கு, குறிப்பாக மத்திய மற்றும் தென்னிந்தியாவில் உள்ள சந்தைகளுக்கு எளிதான சந்தை அணுகலை வழங்கும். நாட்டின் பிற பகுதிகளுடன் சிறந்த பொருளாதார ஒருங்கிணைப்பு ஜம்மு-காஷ்மீர் வணிகங்களுக்கு அதிக வணிக வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும்.


இது குறிப்பாக ஜம்மு-காஷ்மீரின் தோட்டக்கலைத் தொழிலுக்கு, குறிப்பாக முன்னர் தங்கள் விளைபொருட்களை ஜம்மு-காஷ்மீரிலிருந்து வெளியே அனுப்ப சாலை போக்குவரத்தை நம்பியிருந்த ஆப்பிள் விவசாயிகளுக்கு பயனளிக்கும்.


காஷ்மீர் பொருளாதார கூட்டணியின் (Kashmir Economic Alliance (KEA)) செய்தித் தொடர்பாளர் காசி தௌசீஃப், "இந்தத் திட்டம் முடிவடைய  நாங்கள் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறோம். இது நிச்சயமாக எங்கள் வணிகங்களுக்கு ஊக்கத்தை அளிக்கும்" என்று businessline-னிடம் கூறினார்.


செனாப் பாலம் வழியாக அதிக ரயில் இணைப்பு, இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் சுற்றுலாத் துறைக்கும் ஊக்கத்தை அளிக்கும். சுற்றுலா உள்ளூர் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.


ரயில் மூலம் சரக்கு போக்குவரத்தும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பிராந்தியத்தில் தளவாடங்கள் மற்றும் வர்த்தகம் மேம்படும்.


Original article:
Share:

ஜல் ஜீவன் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு முறை என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• தகவல்களின் படி, ஜல் ஜீவன் திட்டத்தின்  தணிக்கைப் பயிற்சி மேம்பட்ட நிலையில் உள்ளது மற்றும் அறிக்கைகள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தியாவின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India (CAG)) தனது தணிக்கைத் திட்டத்தில் இந்த விவரகங்களைச் சேர்த்த பிறகு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த செயல்முறை தொடங்கியது. இது 2019-20 நிதியாண்டு முதல் 2023-24 வரையிலான மாநிலங்களில் ஜல் ஜீவன் திட்ட செயல்படுத்தலை உள்ளடக்கியது.


•  இந்தியாவின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் அனைத்து மாநிலங்களிலும் தலைமை கணக்காளர் (Principal Accountant General  (PAG)) அல்லது கணக்கு பொது அலுவலர் (Accountant General (AG)) தலைமையில் உள்ள அலுவலகங்கள் வழியாக திட்டத்தின் கிடைமட்ட தணிக்கை (horizontal audit)  ஆய்வை நடத்துகிறது.


• பெரும்பாலான மாநிலங்களில் களப்பணி முடிந்துவிட்டது. அதே நேரத்தில் சில மாநிலங்களில், பயிற்சி அறிக்கை எழுதும் நிலையில் உள்ளது என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது. இரண்டு மாநிலங்களின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் அறிக்கைகள் தலைமையகத்திற்கு ஏற்கனவே வந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.


• அறிக்கைகள் முடிவடைந்தவுடன் அவை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சட்டமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.


• தணிக்கை மாநில அளவில் நடைபெறும், தேசிய அளவில் அல்ல. ஏனெனில், மாநில அரசுகள் ஜல் ஜீவன் திட்ட நடைமுறையில் முன்னணி வகிக்கின்றன. திட்ட நடைமுறை, திட்டமிடல் மற்றும் நிதி செயல்திறன் போன்ற அனைத்து அம்சங்களும் ஆய்வில் அடங்கும். கூடுதல் செலவினங்கள் ஏன் ஏற்பட்டுள்ளன என்பதையும் மாநில அளவில் ஆய்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

• தகவல்களின் படி, தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் பொதுவாக ஒரு திட்டத்தின் 70-80% செலவு முடிந்த பிறகு அதனை தணிக்கை செய்கிறார். ஜல் ஜீவன் திட்டம் 2019-20 நிதியாண்டில் தொடங்கப்பட்டது. ஆரம்ப ஆண்டுகளில் செலவு குறைவாக இருந்தது. எனவே, 2023-24ஆம் ஆண்டில் முதல் கட்டம் நிறைவடைந்த பிறகு, இந்தியாவின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் அதைத் தணிக்கைக்குத் தேர்ந்தெடுத்ததாக அந்த வட்டாரம் தெரிவித்தது.

• ஜல் ஜீவன் திட்டத்துடன் சேர்த்து, தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் அனைத்து மாநிலங்களிலும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதம் திட்டத்திலும் (MGNREGS - Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme)  ஆய்வை நடத்தி வருகிறது. இந்த அறிக்கைகளும் விரைவில் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2013ஆம் ஆண்டில் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (National Rural Employment Guarantee Scheme (NREGS))ஆய்வை கடைசியாக செய்தது.



உங்களுக்குத் தெரியுமா?:


. பிரதம மந்திரி நரேந்த்ர மோடி அவர்களால் ஆகஸ்ட் 15, 2019 அன்று தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் திட்டம் (Jal Jeevan Mission),டிசம்பர் 2024 இறுதிக்குள் சுமார் 16 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால், ஐந்து ஆண்டுகளில் இலக்கில் 75 சதவீதத்தை மட்டுமே அடைய முடியும். மீதமுள்ள 4 கோடி குழாய் இணைப்புகளை நான்கு ஆண்டுகளுக்கு டிசம்பர் 31, 2028 வரை நீட்டிப்பதன் மூலம் நிறுவ இப்போது முன்மொழியப்பட்டுள்ளது.


. 2019ஆம் ஆண்டில்  ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுதான் முதல் முக்கிய தணிக்கையாகும். தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் தேசிய கிராமப்புற குடிநீர் திட்டம் (National Rural Drinking Water Programme (NRDWP)) செயல்திறன் தணிக்கையை நடத்தியிருந்தது. அதன் அறிக்கை 2018ஆம் ஆண்டில்சமர்ப்பிக்கப்பட்டது. இது 2012 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது. 2019ஆம் ஆண்டில், தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்துடன் இணைத்து ஜல் ஜீவன் திட்டத்தை தொடங்கியது. அதன் பிறகு, இது CAG நடத்தும் முதல் தணிக்கைப் பயிற்சியாகும்.


• நாடு முழுவதும் உள்ள ஜல் ஜீவன் திட்டங்களின் "நில ஆய்வுக்காக" ஒன்றிய அரசு 100க்கும் மேற்பட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பு அலுவலர்களை (Central Nodal Officers (CNOs)) நியமித்துள்ளது. ஜல் ஜீவன் திட்டங்களை மறுஆய்வு செய்வதற்காக மே 8 அன்று அமைச்சரவை செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


• 2019ஆம் ஆண்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, ரூ.8.29 லட்சம் கோடி மொத்த மதிப்பீட்டில் சுமார் 6.4 லட்சம் நீர் வழங்கல் திட்டங்கள்  திட்டத்தின் அசல் செலவினமான ரூ.3.6 லட்சம் கோடியை விட இரண்டு மடங்கு அதிகம் (ஒன்றிய அரசு ரூ.2.08 லட்சம் கோடி வழங்கியுள்ளது. மாநில அரசுகள் 1.52 லட்சம் கோடி வழங்கியுள்ளன.


• கூடுதல் நிதித் தேவையைப் பூர்த்தி செய்ய, ஜல் சக்தி அமைச்சகம் ரூ.2.08 லட்சம் கோடிக்கு மேல் ரூ.2.79 லட்சம் கோடி கூடுதல் ஒன்றிய நிதியை அங்கீகரிக்க செலவுச் செயலாளர் தலைமையிலான செலவு நிதிக் குழுவை அணுகியது. இருப்பினும், செலவு நிதி குழு (Expenditure Finance Committee (EFC)) ஒன்றிய அரசின் பங்காக ரூ.1.51 லட்சம் கோடியை மட்டுமே பரிந்துரைத்தது. இது ஜல் சக்தி அமைச்சகத்தால் கோரப்பட்ட ரூ.2.79 லட்சம் கோடியை விட 46% குறைவு என்று ஏப்ரல் 21, 2023 அன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது.


• தகவலின் படி, தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் தற்போது தேசிய உயர்தர கல்வி இயக்கம் (Rashtriya Uchchatar Shiksha Abhiyan), கட்டிடம் மற்றும் பிற கட்டுமான தொழிலாளர்களின் நலன், பசுமை இந்தியா திட்டம் (Green India Mission), திறன் நகரங்கள் திட்டம் (Smart City Mission) போன்ற பல ஒன்றிய அரசுத் திட்டங்களை மறுஆய்வு செய்யத் தொடங்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.  ஜல் ஜீவன் மிஷன் (Jal Jeevan Mission (JJM)) தணிக்கை இதேபோல் செய்யப்படும்.


Original article:
Share:

ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை கருவிகள் -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி:


ரிசர்வ் வங்கியின் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு (Monetary Policy Committee (MPC)), ரெப்போ விகிதத்தை எதிர்பார்த்ததை விட 50 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 5.50 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது பிப்ரவரி 2025 முதல் தொடர்ந்து 3-வது குறைப்பாகும். மத்திய வங்கி வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தையும் 100 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 3 சதவீதமாகக் குறைத்து, ரூ.2.5 லட்சம் கோடி கடன் வளங்களை வங்கி அமைப்புக்கு விடுவித்துள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிலிருந்து பணம் கடன் வாங்கும்போது ரிசர்வ் வங்கி வசூலிக்கும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம் (repo rate) என்று அழைக்கப்படுகிறது. வணிக வங்கிகள் தங்களின் கூடுதல் பணத்தை பெறும் போது மத்திய வங்கி கொடுக்கும் வட்டி விகிதம் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் (reverse repo rate) என்று அழைக்கப்படுகிறது.


2. ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைப்பதன் தாக்கம்: பொருளாதாரத்தில் பொருளாதார நடவடிக்கையை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி விரும்பும்போது, அது ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்கிறது. இது செய்வதால் வணிக வங்கிகள் தங்கள் கடன்களுக்கு வசூலிக்கும் வட்டி விகிதங்களையும், வைப்புத் தொகைகளுக்கு கொடுக்கும் வட்டி விகிதத்தையும் குறைக்க முடிகிறது. இதன் விளைவாக, மக்கள் பணத்தை செலவழிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். ஏனெனில், வங்கியில் தங்கள் சேமிப்பை வைப்பது இப்போது சற்று குறைவான வருமானம் தருகிறது. மேலும், புதிய கடன்கள் இப்போது சற்று குறைவான செலவாகும் என்பதால் வணிகங்கள் புதிய முதலீடுகளுக்காக புதிய கடன்களை எடுக்க ஊக்குவிக்கப்படுகின்றன.


3. ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரிப்பதன் தாக்கம்: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி விரும்பும்போது, அது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரிக்கிறது. இதனால் வங்கிகள் ரிசர்வ் வங்கியிலிருந்து கடன் வாங்க அதிக வட்டி கொடுக்க வேண்டியிருக்கும். அவை தங்கள் கடன் வாங்குபவர்களிடம் அதிக வட்டி வசூலிக்கும். அடிமட்ட அளவில், இது மக்கள் பணம் கடன் வாங்குவதையும் செலவழிப்பதையும் தடுக்கிறது. இது சந்தையில் பணத்தின் அளவைக் குறைக்கிறது. இதனால் பணவீக்கத்தை எதிர்த்து போராடுகிறது.


ரிசர்வ் வங்கியின் கொள்கை நிலைப்பாடு என்ன?


பணவியல் கொள்கைக் குழு (Monetary Policy Committee (MPC)), தனது கொள்கை நிலைப்பாட்டை 'ஆதரவளிக்கும்' (Accommodative) நிலையிலிருந்து 'நடுநிலை' (Neutral) நிலைக்கு மாற்றுவதன் மூலம் மறுசீரமைக்கப்பட்ட அணுகுமுறையை அடையாளம் காட்டியுள்ளது. நடுநிலை நிலைப்பாடு என்பது பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி தொடர்பான தரவுகளைப் பொறுத்து ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும் என்பதாகும். பணவீக்கக் கட்டுப்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி இரண்டையும் சமநிலைப்படுத்த ரிசர்வ் வங்கி விரும்பும்போது இந்த அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது. சமீபத்திய பொருளாதாரத் தரவுகள் காட்டும் அடிப்படையில் வட்டி விகிதங்களை உயர்த்தவோ அல்லது குறைக்கவோ ரிசர்வ் வங்கியை இது அனுமதிக்கிறது.


பணவியல் கொள்கையின் கருவிகள்


ரெப்போ விகிதம் (Repo rate) மற்றும் தலைகீழ் ரெப்போ விகிதம் (reverse repo rate) தவிர, வளர்ச்சியின் நோக்கத்தை வைத்துக்கொண்டு விலை நிலைத்தன்மையை பராமரிக்க ரிசர்வ் வங்கி பல நேரடி மற்றும் மறைமுக கருவிகளைப் பயன்படுத்துகிறது.


(i) நிலையான வைப்பு வசதி விகிதம் (Standing Deposit Facility (SDF Rate)): இது எந்தவொரு பாதுகாப்பையும் கேட்காமல், ஒரு இரவுக்கு வங்கிகளிடமிருந்து பணத்தை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொள்ளும் விகிதமாகும். இது வங்கி அமைப்பில் பணப்புழக்கத்தை நிர்வகிக்க ரிசர்வ் வங்கிக்கு உதவுகிறது மற்றும் நிதி நிலைத்தன்மையையும் ஆதரிக்கிறது. ரிசர்வ் வங்கியின் வட்டி விகித அமைப்பில் மிகக் குறைந்த விகிதமாக நிலையான தலைகீழ் ரெப்போ விகிதம் (fixed rate reverse repo (FRRR)) என்று அழைக்கப்படும் முந்தைய முறையை மாற்றுவதற்காக நிலையான வைப்பு வசதி விகிதம் 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.


(ii) குறைந்தபட்ச நிலையான வசதி விகிதம் (Marginal Standing Facility (MSF Rate)): மற்ற வங்கிகளிடம் கடன் கொடுக்க போதுமான பணம் இல்லாதபோது, ​​அவசர காலங்களில் ஒரு இரவுக்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்க வங்கி செலுத்தும் வட்டி விகிதம் இது. இந்த விகிதம் பொதுவாக பிரதான ரெப்போ விகிதத்தை விட 0.25% அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது.


(iii) பணப்புழக்க சரிசெய்தல் வசதி (Liquidity Adjustment Facility (LAF)): LAF என்பது திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள் (பிராந்திய கிராமப்புற வங்கிகள் தவிர) மற்றும் முதன்மை வணிகர்களுக்கு RBI வழங்கும் ஒரு சேவையாகும். இது அவர்களுக்குத் தேவைப்படும்போது விரைவாகப் பணத்தைப் பெற உதவுகிறது அல்லது தேவைக்கு அதிகமாக இருந்தால் RBI-யில் கூடுதல் பணத்தை வைத்திருக்க உதவுகிறது. இது அரசாங்கப் பத்திரங்கள் அல்லது மாநில மேம்பாட்டுக் கடன்களை பிணையமாகப் பயன்படுத்தி ஒரே இரவில் செய்யப்படுகிறது.


(iv) முக்கியப் பணப்புழக்கம் மேலாண்மை கருவி (Main Liquidity Management Tool:): குறுகிய கால பணத்  தேவைகளைக் கையாள, ரிசர்வ் வங்கி 14 நாள் ஏலத்தை நடத்துகிறது. அங்கு வங்கிகள் மாறிவரும் வட்டி விகிதங்களில் பணத்தைக் கடன் வாங்கலாம் அல்லது கடன் கொடுக்கலாம். வங்கிகள் தங்கள் தேவையான ரொக்க இருப்புக்களை (cash reserve ratio (CRR)) பராமரிக்க வேண்டிய நேரத்தில் இது நிகழ்கிறது.


(v) வங்கி விகிதம் (Bank Rate): வங்கிகள் இருப்பு தேவைகளை (பண இருப்பு விகிதம் மற்றும் சட்டப்பூர்வ திரவத்தன்மை விகிதம்) பூர்த்தி செய்வதில் குறைபாடுகள் ஏற்பட்டால், மாற்றுச் சீட்டுகள் அல்லது பிற வணிகத் தாள்களை வாங்க அல்லது மீண்டும் தள்ளுபடி செய்வதற்கு ரிசர்வ் வங்கி வழங்கும் விகிதம் வங்கி விகிதம் என்று அழைக்கப்படுகிறது.


(vi) பண இருப்பு விகிதம் (Cash Reserve Ratio (CRR)): இது ஒரு வங்கியின் நிகர தேவை மற்றும் கால பொறுப்புகளின் (Net Demand and Time Liabilities (NDTL)) சதவீதமாகும். ரிசர்வ் வங்கியில் இருப்பாக பணப்புழக்கம் மேலாண்மை கருவி பராமரிக்கப்பட வேண்டும். பண இருப்பு விகிதம் சதவீதம் காலத்திற்கு காலம் ரிசர்வ் வங்கியால்  தீர்மானிக்கப்படுகிறது.


(vii) சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதம் (Statutory Liquidity Ratio (SLR)): ஒவ்வொரு வங்கியும் இந்திய சொத்துகளில், இரண்டாவது முந்தைய பதினைந்து நாள்களின் கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்தியாவில் அதன் தேவை மற்றும் கால பொறுப்புகளின் மொத்தத்தின் அத்தகைய சதவீதத்திற்கு குறையாமல் இருக்கும் மதிப்பை திரவப் பணம், தங்கம், அரசு மற்றும் மாநில அரசு பத்திரங்கள் வடிவில் பராமரிக்க வேண்டும்.


(vii) திறந்த சந்தை நடவடிக்கைகள் (Open Market Operations (OMOs)): இதன் பொருள், வங்கி அமைப்பிலிருந்து நீண்டகாலப் பணத்தைச் சேர்க்க அல்லது நீக்க ரிசர்வ் வங்கி அரசாங்கப் பத்திரங்களை வாங்குகிறது அல்லது விற்கிறது.


நெகிழ்வான பணவீக்க இலக்கு (Flexible Inflation Target (FIT))


1. மே 2016ஆம் ஆண்டில், நாட்டின் பணநீதி கட்டமைப்பை இயக்க மத்திய வங்கிக்கு சட்டமன்ற அதிகாரம் வழங்க ரிசர்வ் வங்கி சட்டம் திருத்தப்பட்டது.


2. 2013ஆம் ஆண்டில் உர்ஜித் படேல் தலைமையில் ரிசர்வ் வங்கி 'பணநீதிக் கட்டமைப்பை திருத்த மற்றும் வலுப்படுத்த நிபுணர் குழுவை’ அமைத்தது. இது ரிசர்வ் வங்கிக்கு நெகிழ்வான பணவீக்க இலக்கை (flexible inflation target (FIT)) பரிந்துரைத்தது. மே 2016ஆம் ஆண்டில், நெகிழ்வான பணவீக்க இலக்கு கட்டமைப்பை செயல்படுத்துவதற்கு சட்டப்பூர்வ அடிப்படையை வழங்க 1934ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டம் திருத்தப்பட்டது.


2. பிரிவு 45ZA கீழ், ஒன்றிய அரசு, ரிசர்வ் வங்கி உடன் ஆலோசித்து, நுகர்வோர் விலை குறியீட்டின் (Consumer Price Index (CPI)) அடிப்படையில் பணவீக்க இலக்கை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தீர்மானித்து அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் அறிவித்துக் காட்டுகிறது. ஆகஸ்ட் 5, 2016 அன்று, ஒன்றிய அரசு நுகர்வோர் விலை குறியீட்டை (CPI) 4 சதவீதமாக +/-2 சதவீத வரம்புடன் அறிவித்தது. மார்ச் 31, 2021 அன்று, ஒன்றிய அரசு அடுத்த 5ஆண்டு காலத்திற்கு ஏப்ரல் 1, 2021 முதல் மார்ச் 31, 2026 வரை பணவீக்க இலக்கு மற்றும் சகிப்புத்தன்மை வரம்பை தக்கவைத்துக் கொண்டது.


பணவீக்கம் (Inflation) என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பொது விலை நிலை அதிகரிக்கும் விகிதத்தைக் குறிக்கிறது.  இது பணத்தின் வாங்கும் திறன் அல்லது உண்மையான வருமானத்தில் குறைவை ஏற்படுத்துகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், பணவீக்கம் அதிகரிக்கும்போது, ஒவ்வொரு பண அலகும் முன்பை விட குறைவான பொருட்கள் மற்றும் சேவைகளை பெற முடியும்.


Original article:
Share:

ஓய்வு பெற்ற பிறகு நீதிபதிகளை புதிய பணியில் நியமிப்பதற்கான காரணம் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி: ஓய்வு பெற்ற பிறகு எந்த அரசுப் பணியையும் ஏற்கப் போவதில்லை என்று இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறினார். ஓய்வு பெற்ற உடனேயே நீதிபதிகள் அரசுப் பணிகளில் சேரும்போது அல்லது அரசியலில் ஈடுபடுவதற்காக தங்கள் வேலையை விட்டு விலகும்போது, ​​அது கடுமையான நெறிமுறை கேள்விகளை எழுப்புகிறது மற்றும் மக்கள் அவர்களின் நியாயத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது என்று அவர் விளக்கினார்.


முக்கிய அம்சங்கள்:


• இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில், இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தின் தலைவரான அலர்முயர் பிரபு ரீட் தொகுத்து வழங்கினார்.


• அரசியலமைப்பு நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதற்கான கொலீஜியம் முறை (Collegium system) எப்படி உருவானது என்பதை விளக்கும்போது, தலைமை நீதிபதி கவாய் "கொலீஜியம் அமைப்பின் மீது விமர்சனங்கள் இருக்கலாம்" என்பதை ஒப்புக்கொண்டார். ஆனால், "எந்த தீர்வும் நீதித்துறை சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது" என்று கூறினார். "நீதிபதிகள் வெளிப்புற கட்டுப்பாட்டிலிருந்து விடுதலையாக இருக்க வேண்டும்" என்பதை வலியுறுத்தினார்.


• உச்ச நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் கொலீஜியம் அமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் விளக்கினார். சிலர் இந்த அமைப்பை விமர்சிப்பதை அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், எந்த மாற்றங்களும் நீதிபதிகளின் சுதந்திரத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்றார். நீதிபதிகள் வெளிப்புற செல்வாக்கிலிருந்து விடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


• ஓய்வு பெற்ற பிறகு நீதிபதிகள் பணியில் சேருவது குறித்துப் பேசிய இந்தியத் தலைமை நீதிபதி, ஓய்வு பெற்ற உடனேயே அரசுப் பணியை மேற்கொண்டாலோ அல்லது அரசியலில் ஈடுபடுவதற்காக ராஜினாமா செய்தாலோ, அது கடுமையான நெறிமுறைக் கவலைகளை உருவாக்கி, மக்களை அவர்களின் செயல்களை கேள்விக்குள்ளாக்குகிறது என்று கூறினார்.


• ஒரு நீதிபதி அரசியல் பதவிக்கு போட்டியிட்டால், அந்த நீதிபதி உண்மையிலேயே நியாயமானவராகவும் சுதந்திரமானவராகவும் இருந்தாரா என்று மக்கள் கேள்வி எழுப்பக்கூடும் என்று அவர் கூறினார். அந்த நீதிபதி அரசாங்கத்தை மகிழ்விக்க முயற்சிப்பது போலவோ அல்லது நலன்களில் மோதல் இருப்பது போலவோ தோன்றலாம் என்று அவர் கூறினார்.


• நீதித்துறையில் சில ஊழல் மற்றும் தவறான செயல்கள் நடந்துள்ளதாக தலைமை நீதிபதி ஒப்புக்கொண்டார். இந்த சம்பவங்கள் பொதுமக்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாகவும், முழு அமைப்பின் நியாயத்தன்மையின் மீதான மக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்துவதாகவும் தலைமை நீதிபதி கூறினார்.


உங்களுக்குத் தெரியுமா?:


• பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்திலிருந்தே ஓய்வுபெற்ற நீதிபதிகள் அரசியல் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும், நாம் ஒரு கடினமான கேள்வியைக் கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு அரசாங்கத்தால் வழங்கப்படும் பணி நியமனங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்த வேண்டுமா? ஏனெனில், அத்தகைய பதவிகளை ஏற்றுக்கொள்வது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துமா?


• அமெரிக்காவில் உள்ள ஃபெடரல் நீதிபதிகள் போல், இந்தியாவில் நீதிபதிகள் வாழ்நாள் முழுவதும் பதவியில் இருப்பதில்லை. அவர்கள் ஓய்வு பெறும் வயதை அடையும் வரை பதவியில் இருப்பார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு 65 மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 62 வயது ஓய்வு வயதாகும். நீதிபதிகள் குடியரசுத்தலைவரின் விருப்பப்படி பணியாற்றுவதில்லை. மேலும், அரசாங்கத்தால் அவர்களை எளிதில் நீக்க முடியாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை வாக்குகளால் மட்டுமே அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியும். மேலும், நிரூபிக்கப்பட்ட தவறு அல்லது தங்கள் வேலையைச் செய்ய இயலாமை ஆகியவற்றால் மட்டுமே அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியும். இந்த செயல்முறை மிகவும் கடினம். மேலும், சுதந்திர இந்தியாவில் எந்த நீதிபதியும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. இருப்பினும், சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிப் பாதுகாப்பு நீதிபதிகள் சுதந்திரமாக இருக்கவும், அழுத்தம் இல்லாமல் நியாயமான முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது.


• ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்தியாவில் எந்த நீதிமன்றத்திலும் அல்லது எந்த அதிகார அமைப்பிலும் வழக்கறிஞர்களாகப் பணியாற்ற அனுமதிக்கப்படுவதில்லை என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது, ​​ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் அரசு பதவிகளை தேர்ந்துஎடுக்க கூடாது என்று கே.டி. ஷா பரிந்துரைத்தார். இது அதிக ஊதியம் அல்லது அந்தஸ்து காரணமாக நீதிபதிகள் சோதிக்கப்படுவதைத் தடுக்கும் என்று அவர் நம்பினார். ஆனால், பி.ஆர். அம்பேத்கர் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. அரசாங்கத்திற்கு அதிக ஆர்வம் இல்லாத வழக்குகளை நீதிமன்றங்கள் வழக்கமாகக் கையாளும் என்றும், அதனால் நீதிபதிகளுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்றும் அவர் கூறினார்.


• அம்பேத்கரின் காலத்தில், நீதித்துறை தனிப்பட்ட பிரச்சனைகளை முடிவு செய்வதில் ஈடுபட்டிருந்தது மற்றும் குடிமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான வழக்குகள் அரிதாகவே எழுந்தன. இதன் விளைவாக, "அரசாங்கத்தால் நீதித்துறை உறுப்பினரின் நடத்தையை பாதிக்கும் வாய்ப்புகள் மிகவும் தொலைவில் உள்ளன". இந்த பகுத்தறிவு இன்று பொருந்தாது. ஏனெனில், அரசாங்கமே நீதிமன்றங்களில் மிகப்பெரிய வழக்குத் தொடுப்பவர்களில் ஒன்றாகும் என்று அம்பேத்கர் கூறினார்.


• 1958ஆம் ஆண்டு தனது 14வது அறிக்கையில், சட்ட ஆணையம் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுக்குப் பிறகு இரண்டு வகையான வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக குறிப்பிட்டது: முதலாவது, "அறை நடைமுறை" (chamber practice) (இந்த சொல் இன்று வாடிக்கையாளர்களுக்கு கருத்துகளை வழங்குவது மற்றும் தனிப்பட்ட தகராறுகளில் நடுவராக பணியாற்றுவது என்று பொருள்படும்) மற்றும் இரண்டாவது "அரசாங்கத்தின் கீழ் முக்கியமான பதவிகளில் ஈடுபடுவது ஆகும்”. சட்ட ஆணையம் அறை நடைமுறையை கண்டித்தது. ஆனால், அதை ரத்து செய்ய பரிந்துரைக்கவில்லை. இருப்பினும், அரசாங்கம் நீதிமன்றங்களில் ஒரு பெரிய வழக்குத் தொடுப்பவராக இருந்ததால், ஓய்வுக்குப் பிந்தைய அரசுப் பணிகளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதைத் தடை செய்ய அது கடுமையாகப் பரிந்துரைத்தது. எனினும், ஆணையத்தின் பரிந்துரைகள் ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை.


Original article:
Share: