சில்லறை உணவுப் பணவீக்கம் (retail food inflation) என்பது என்ன? -குஷ்பு குமாரி, ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


எல் நினோவால் (El Niño) தூண்டப்பட்ட நீண்ட கால வறண்ட வானிலையைத் தொடர்ந்து தொடர்ச்சியாக நல்ல பருவமழை பெய்ததாலும், 2023-24 ஆம் ஆண்டில் இயல்பை விட அதிக வெப்பநிலை நிலவியதாலும், விவசாயப் பொருட்களின் பொதுவாக பலவீனமான விலைப் போக்குகள் ஆகியவை இந்த சாதகமான தன்மையுடன் (softening) தொடர்புடையதாக உள்ளன. 


குறிப்பாக, தானியங்களின் விநியோகத்தில் முன்னேற்றம் தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், உண்மையான பற்றாக்குறை அரிசியில் உள்ளது. அரசு நிறுவனங்கள் அதிக அளவிலான அரிசியின் இருப்புகளை வைத்திருப்பது மட்டுமல்லாமல், இவை பொது விநியோக முறையின் (public distribution system) தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையானதை விட 4.4 மடங்கு அதிகமாக வைத்திருக்கிறது. மேலும், அவசரநிலை தேவைகளுக்காக இவை உள்ளன.


அக்டோபர் மாதம் தொடங்கிய புதிய பயிரின் அறுவடை மற்றும் சந்தைப்படுத்தல் தீபாவளிக்குப் பிறகு அதிகரிக்கும் போது அதிகப்படியான விநியோகம் தீவிரமடையும். இந்த காரீப் பருவத்தில் இந்திய விவசாயிகள் சாதனை அளவாக 44.2 மில்லியன் ஹெக்டேர் நெல் பயிரிட்டுள்ளனர். இது கடந்த ஆண்டு, பரப்பளவு 43.6 மில்லியன் ஹெக்டேராக இருந்தது.


மக்காச்சோளம் சாகுபடியில் இந்த உயர்வு இன்னும் அதிகமாக உள்ளது. இது 8.4 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 9.5 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. மாவுச்சத்து நிறைந்த தீவன தானியமான (starchy feed grain) மக்காச்சோளம் இப்போது கர்நாடகா மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களின் மொத்த சந்தைகளில் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,000–2,100க்கு விற்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு, விலை குவிண்டாலுக்கு ரூ.2,200–2,300 ஆக இருந்தது. மக்காச்சோளத்திற்கான அரசாங்கத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை (minimum support price (MSP)) குவிண்டாலுக்கு ரூ.2,400 ஆகும்.


2023-ம் ஆண்டின் இரண்டாம் பாதியிலும் 2024-ம் ஆண்டு முழுவதும், வீடுகளின் வாங்கும் சக்தியை குறைத்துக்கொண்டிருந்த உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் போராடியது. இந்தப் போராட்டத்தின் பலனாக, இப்போது பணவீக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இந்த முறை விவசாயிகள் மட்டும்தான் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள், நுகர்வோர் அல்ல.


மக்காச்சோளம், சோயாபீன்ஸ் மற்றும் பருத்தி அல்லது முத்து தினை (பஜ்ரா), புறா பட்டாணி (அர்ஹார்) மற்றும் பாசிப்பயறு (பச்சை பயறு) என கிட்டத்தட்ட அனைத்து பயிர்களும் அவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட மிகக் குறைவாக விற்கப்படுகின்றன. அதிகப்படியான பருவமழையால் நிரப்பப்பட்ட நிலத்தடி நீர்நிலைகள் மற்றும் நிரப்பப்பட்ட நீர்த்தேக்கங்களின் நன்மைகள் அடுத்த ராபி (குளிர்கால-வசந்த) பயிர் பருவத்திற்கும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்றாலும், இந்த உணர்வு எதிர்மறையான மனநிலையாக உள்ளது.


வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில், அரசாங்கம் தனது கவனத்தை மாற்றிக்கொள்ளலாம். நுகர்வோருக்கு ஏற்ற அணுகுமுறையிலிருந்து விவசாயிகளுக்கு அதிகளவில் ஆதரவளிக்கும் அணுகுமுறைக்கு மாறலாம். பருத்தி மற்றும் மஞ்சள்/வெள்ளை பட்டாணி மீதான இறக்குமதி வரிகளை மீட்டெடுப்பது சாத்தியமான நடவடிக்கைகளில் அடங்கும்.  விலை ஆதரவு திட்டத்தின் (price support scheme) கீழ் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் குறைந்தபட்ச ஆதரவு அடிப்படையிலான கொள்முதலை அரசாங்கம் அதிகரிக்கலாம்.


உங்களுக்குத் தெரியுமா? :


குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) என்பது சந்தை விலைகள் இந்த அளவை விடக் குறையும் போது, அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து அந்தப் பயிரை கொள்முதல் செய்ய/வாங்க வேண்டிய விலையாகும். குறைந்தபட்ச ஆதரவு விலைகள் (MSP) சந்தை விலைகளுக்கு ஒரு அடிப்படையை வழங்குகின்றன மற்றும் விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட "குறைந்தபட்ச" ஊதியத்தைப் பெறுவதை உறுதி செய்கின்றன. இதனால், விவசாயிகள் தங்கள் சாகுபடி செலவை மீட்டெடுக்கவும், சிறிய லாபத்தையும் ஈட்டவும் உதவுகிறது.


1960ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், இந்தியா உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்ட காலத்தில், குறைந்தபட்ச ஆதரவு விலை அறிமுகப்படுத்தப்பட்டது. பசுமைப் புரட்சி தொழில்நுட்பங்கள் (Green Revolution technologies) மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் ஆர்வமாக இருந்தது. ஆனால், குறைந்தபட்ச விலைக்கு உத்தரவாதம் அளிக்கப்படாவிட்டால் விவசாயிகள் அதிக மகசூல் தரும் கோதுமை அல்லது நெல் வகைகளை பயிரிட மாட்டார்கள் என்பதை உணர்ந்தது. கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை முதன்முதலில் 1966-67 ஆம் ஆண்டில் குவிண்டாலுக்கு ரூ. 54 என நிர்ணயிக்கப்பட்டது.


வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் (Commission for Agricultural Costs and Prices (CACP)) பரிந்துரைகளின் பேரில் மத்திய அரசால் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அறிவிக்கப்படுகின்றன.


வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் 22 முக்கியப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையையும், கரும்புக்கு நியாயமான மற்றும் லாபகரமான விலையையும் (Fair and Remunerative Price (FRP)) பரிந்துரைக்கிறது. மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Economic Affairs (CCEA)) குறைந்தபட்ச ஆதரவு விலைகளின் அளவு குறித்து இறுதி முடிவை எடுக்கிறது.


குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் வரும் பயிர்கள் பின்வருமாறு. அவை,


  • 7 வகையான தானியங்கள் (நெல், கோதுமை, மக்காச்சோளம், பஜ்ரா, ஜோவர், ராகி மற்றும் பார்லி),


  • 5 வகையான பருப்பு வகைகள் (சனா, அர்ஹார்/துர், உளுந்து, மூங் மற்றும் மசூர்),


  • 7 எண்ணெய் வித்துக்கள் (கடுகு, நிலக்கடலை, சோயாபீன்ஸ், சூரியகாந்தி, எள், குங்குமப்பூ, நைஜர் விதைகள்),


  • 4 வணிகப் பயிர்கள் (பருத்தி, கரும்பு, கொப்பரை, மூல சணல்)



Original aritcle:

Share:

மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைகள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு அரசாங்கத்தின் தோல்விகளை எடுத்துக்காட்டுகிறது.

 குடிமக்களில் பாதிக்கப்படக்கூடிய ஒரு பிரிவின் உரிமைகள் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நீதிமன்றங்கள் பலமுறை தலையிட வேண்டியிருப்பது, நிர்வாகத்தின் மீது மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.


"மாற்றுப் பாலினத்தை" அங்கீகரித்து திருநங்கைகளின் உரிமைகளை ஆதரித்த முக்கியமான தேசிய சட்ட சேவைகள் ஆணைய (National Legal Services Authority (NALSA)) தீர்ப்பு வெளிவந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகியும், அவர்களைப் பாதுகாப்பதற்கான 2020 விதிகள் (Transgender Persons (Protection of Rights) Rules) தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் மாற்றுப் பாலினத்தவர்கள் இன்னும் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். அக்டோபர் 17 அன்று, மாற்றுப்பாலினத்தவர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் (Transgender Persons (Protection of Rights) Act), 2019 மற்றும் அதன் விதிகளைப் புறக்கணித்ததற்காக உச்ச நீதிமன்றம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை விமர்சித்தது, இது "மாற்றுப் பாலினத்தவர் சமூகத்தின் மீது மிகவும் அக்கறையற்ற அணுகுமுறையைக்" காட்டுகிறது என்று குறிப்பிட்டது.


 ஜேன் கௌஷிக், ஒரு மாற்றுப்பாலினத்தவர்.  ஒரு வருடத்திற்குள் தான் பாகுபாட்டை எதிர்கொண்டதாகவும், உத்தரபிரதேசம் மற்றும் குஜராத்தில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளில் தனது வேலையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டதை அடுத்து, நீதிமன்றத்தை அணுகினார். மாற்றுப் பாலினத்தவர் சட்டம் (Trans Act) எவ்வளவு சிறப்பாகப் பின்பற்றப்படுகிறது என்பதை சரிபார்க்க உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை உருவாக்கியது. இந்தக் குழு சம வாய்ப்புகளுக்கான நியாயமான கொள்கையை பரிந்துரைக்கும். இந்தக் குழு தங்கள் வரைவைச் சமர்ப்பித்த மூன்று மாதங்களுக்குள் மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். சொந்தக் கொள்கைகள் இல்லாத அமைப்புகளுக்கு, ஒன்றிய அரசின் கொள்கை கட்டாயமாக அமல்படுத்தப்படும்.


சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பாதுகாப்புகளை செயல்படுத்த ஒரு குழுவை உருவாக்குவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். ஆனால், இது ஒரு பெரிய தோல்வியை எடுத்துக்காட்டுகிறது. அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட கண்ணியமான மற்றும் சமத்துவமான வாழ்க்கையை மாற்றுப்பாலினத்தவர்கள் கண்ணியத்துடனும் சமத்துவத்துடனும் வாழ உதவுவதில் அரசாங்கம் உறுதியாக இல்லை. தேசிய சட்ட சேவைகள் ஆணைய (National Legal Services Authority (NALSA)) தீர்ப்பு மற்றும் மாற்றுப்பாலினத்தவர் விதிகள் (Trans Rules) மாற்றுப்பாலினத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு, மருத்துவ பராமரிப்பு மற்றும் கல்வியில் பாகுபாட்டிற்கு எதிரான பாதுகாப்புகளை கட்டாயப்படுத்துகின்றன. 


இருப்பினும், நடைமுறைப்படுத்தல் மிகவும் மோசமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, விதிகள் அரசுகள் மருத்துவமனைகளில் தனி கழிவறைகள் மற்றும் வார்டுகளை (wards) கட்ட வேண்டும் என்று கோருகின்றன. இருப்பினும், காலக்கெடுவை கடந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாகியும், இது ஒரு கனவாகவே உள்ளது. மேலும், மாற்றுப்பாலினத்தவர் நலவாழ்வு வாரியங்களை (transgender welfare boards) அமைப்பதையும் கட்டாயப்படுத்தின. 2024ஆம் ஆண்டு வரை 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே இதை நடைமுறைப்படுத்திருந்தன. எனினும், இவை இன்னும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதிகாரத்துவ அக்கறையின்மை மற்றும்/அல்லது உணர்வின்மை காரணமாக மருத்துவ பராமரிப்பு, வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் கடவுச்சீட்டு (Passport) மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் போன்ற ஆவணங்கள் மறுக்கப்பட்டதால், நாடு முழுவதும் மாற்றுப்பாலினத்தவர்கள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது.


குடிமக்களில் பாதிக்கப்படக்கூடிய ஒரு பிரிவின் உரிமைகள் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நீதிமன்றங்கள் பலமுறை தலையிட வேண்டியிருப்பது, நிர்வாகத்தின் மீது மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. விதிகள் மற்றும் குழுவின் கொள்கைகளை  நடைமுறைப்படுத்துவது அரசின் முக்கியப் பொறுப்பாகும்.



Original article:

Share:

BMW நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்குப் பிறகு லோக்பால் அமைப்பு கவனம் பெறுகிறது. -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்திகளில் ஏன்?


முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ எம் கான்விலார் தலைமையிலான 7 உறுப்பினர்களைக் கொண்ட ஊழல் எதிர்ப்பு குறைதீர்ப்பாளர் லோக்பால் (Lokpal) அமைப்பு, 7 BMW கார்களை வாங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் லோக்பால் அமைப்பு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.


‘இந்தியாவின் லோக்பால் அமைப்பிற்கு 7 BMW 3 series 330Li-கார்களை வழங்குவதற்காக புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து வெளிப்படையான ஒப்பந்தங்களை வரவேற்கிறது என்று அக்டோபர் 16 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ‘long wheelbase’ மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ள ‘M Sport’ வகை கார்களுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.


முக்கிய அம்சங்கள்:


1. லோக்பால் என்பது இந்தியாவில் ஒரு சுதந்திரமான ஊழல் எதிர்ப்பு அமைப்பாகும். இது மக்கள் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் ஒன்றிய அரசுடன் தொடர்புடைய அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரிக்கவும் உருவாக்கப்பட்டது. இது 2010ஆம் ஆண்டில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையிலான ஜன் லோக்பால் இயக்கத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013-ன் கீழ் நிறுவப்பட்டது. இந்தியா தனது முதல் லோக்பால் அமைப்பை 2019-ல் பெற்றது.


2. 2013ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ், லோக்பால் ஒரு தலைவர் மற்றும் 8 உறுப்பினர்களுக்கு குறையாமல் உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும். இவர்களில் 50% நீதித்துறை உறுப்பினர்களாக (judicial members) இருக்க வேண்டும். லோக்பாலின் உறுப்பினர்களில் 50%-க்கும் குறையாமல் பட்டியல் சாதியினர்  (Scheduled Castes), பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Classes), சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் இருக்க வேண்டும் என்று சட்டம் குறிப்பிடுகிறது.


3. இந்தச் சட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் ஒவ்வொரு மாநிலமும் லோக்ஆயுக்தா என்ற அமைப்பை அமைக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த அமைப்பு மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட வேண்டும். சில பொது அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் தொடர்பான புகார்களை லோக்ஆயுக்தா கையாளும் என்று சட்டம் கூறுகிறது.


4. சட்டத்தின் பிரிவு 11, லோக்பால் விசாரணை இயக்குநர் தலைமையில் ஒரு விசாரணைப் பிரிவை அமைக்க வேண்டும் என்று கூறுகிறது. ஊழல் தடுப்புச் சட்டம், 1988 (public servants under the Prevention of Corruption Act) இன் கீழ் பொது ஊழியர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றங்கள் குறித்து முதற்கட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்கு இந்தப் பிரிவு பொறுப்பாகும். விசாரணை இயக்குநர் இந்திய அரசின் இணைச் செயலாளருக்குக் குறையாத பதவியில் இருக்க வேண்டும். மேலும், லோக்பால் பரிந்துரைக்கும் விசாரணைகளைக் கையாள இவர் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுவார்.


5. இந்தச் சட்டத்தின் கீழ் லோக்பாலுக்கு அளிக்கப்படும் புகார்களின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு எதிரான வழக்குகளைக் கையாள, வழக்குத் தொடுப்பு இயக்குநர் (Director of Prosecution) தலைமையிலான ஒரு வழக்குத் தொடுப்புப் பிரிவையும் இது கொண்டுள்ளது.


லோக்பால் தினம்


இந்த ஆண்டு, இந்திய லோக்பால் நிறுவப்பட்ட தினத்தைக் குறிக்கும் வகையில் ஜனவரி 16 முதல் முறையாக லோக்பால் தினமாகக் (Lokpal Day) கொண்டாடப்பட்டது. 2014ஆம் ஆண்டு இந்த நாளில்தான் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாக்கள் சட்டம், 2013-ன் பிரிவு 3 அமலுக்கு வந்ததன் மூலம் இந்திய லோக்பால் நிறுவப்பட்டது.


6. லோக்பாலின் அதிகார வரம்பு (jurisdiction) பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல், மத்திய அரசின் A, B, C மற்றும் D குழு ஊழியர்கள் வரை பரந்த அளவிலான அரசு பணியாளர்களை உள்ளடக்கியது. லோக்பாலின் சொந்த உறுப்பினர்கள் கூட ‘பொது ஊழியர்’ (public servant) என்ற வரையறையின் கீழ் உள்ளனர்.


7. பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எழுந்தால் அதை விசாரிப்பதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டு சர்வதேச உறவுகள், வெளிப்புற மற்றும் உள் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, அணுசக்தி மற்றும் விண்வெளி தொடர்பானதாக இருந்தால் லோக்பால் விசாரிக்க முடியாது. மேலும், முழு லோக்பால் அமர்வும் விசாரணையைத் தொடங்குவதைக் கருத்தில் கொண்டு குறைந்தது 2/3  பங்கு உறுப்பினர்கள் அதற்கு அனுமதி அளிக்காவிட்டால், பிரதமருக்கு எதிரான புகார்கள் விசாரிக்கப்படாது.


8. பிரதமருக்கு எதிரான அத்தகைய விசாரணை (நடத்தப்பட்டால்) இரகசியமாக நடத்தப்பட வேண்டும். புகார் நிராகரிக்கப்பட வேண்டும் என்று லோக்பால் முடிவுக்கு வந்தால், விசாரணையின் பதிவுகளை பகிரப்படவோ  அல்லது எந்த ஒரு நபருக்கும் கிடைக்கச் செய்யவோ கூடாது.


9. தற்போதைய லோக்பாலில் அனுமதிக்கப்பட்ட எட்டு உறுப்பினர்களில் ஏழு பேர் உள்ளனர். தலைவர் நீதிபதி கான்வில்கரைத் தவிர, அமைப்பில்  உள்ள ஆறு உறுப்பினர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சய் யாதவ்; கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி; கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எல் நாராயண சுவாமி; முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா; குஜராத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் பங்கஜ் குமார் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் அஜய் திக்ரே ஆகியோர் உள்ளனர்.


10. லோக்பால் சட்டத்தின் பிரிவு 7, லோக்பால் தலைவரின் சம்பளங்கள், படிகள் மற்றும் சேவை நிபந்தனைகள் இந்திய தலைமை நீதிபதிக்கு உள்ளதைப் போலவே இருக்கும் என்று கூறுகிறது மற்ற உறுப்பினர்களுக்கான அது உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு உள்ளதைப் போலவே இருக்கும். தலைமை நீதிபதிக்கு ஒரு Mercedes  கார் வழங்கப்படுகிறது. அதே சமயம் மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு BMW 3 series கார்கள் வழங்கப்படுகின்றன. இது லோக்பால் அமைப்பு அறிவிப்பு விடுத்த அதே வகை கார் ஆகும்.


குறைதீர்ப்பாளர் அமைப்பின்  தோற்றம்


1. குறைதீர்ப்பாளர் (ombudsman) அமைப்பு 1809-ல் ஸ்வீடனில் (Sweden) தோன்றியது. மேலும், அதிகாரத்துவத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராக ஜனநாயக அரசாங்கத்தின் அரணாக பல நாடுகளால் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. குறைதீர்ப்பாளர் என்பது ஒரு Swedish வார்த்தை, இது நிர்வாக மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளுக்கு எதிரான புகார்களைக் கையாள சட்டமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரியைக் குறிக்கிறது.


2. இந்தியாவில், 1966ஆம் ஆண்டு நிர்வாக சீர்திருத்த ஆணையம் (Administrative Reforms Commission (ARC)), குடிமக்களின் குறைகளைத் தீர்க்கவும் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க சேவைகளுக்குள் ஊழலை எதிர்த்துப் போராடவும் குறைதீர்ப்பாளர் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு அமைப்பின் யோசனையை முதன்முதலில் முன்மொழிந்தது. மத்திய அளவில் லோக்பால் மற்றும் மாநில அளவில் லோகாயுக்தா என்ற இரண்டு சிறப்பு அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.


3. 1968 முதல் 2001ஆம் ஆண்டு வரை, குறைதீர்ப்பாளர் அமைப்பை உருவாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் எட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும், பல ஆண்டுகளாக, பல்வேறு மாநிலங்கள் தங்கள் சொந்த லோக்ஆயுக்தாக்களை அமைத்தன. இது லோக்பாலுக்கு சமமானதாகும். மகாராஷ்டிரா லோக் ஆயுக்தா மற்றும் உபயுக்தா சட்டம் என்ற சிறப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி 1971ஆம் ஆண்டில் லோக் ஆயுக்தாவை உருவாக்கிய முதல் மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.


Original article:

Share:

ஒளியைப் பதிவுசெய்தல்: இந்தியாவின் சூரிய மின்சக்தித்துறை குறித்து…

 இந்தியா தனது தொழிற்துறையைத் தக்கவைக்க சூரிய மின்சக்தியை வழங்கும் நாடாக மாற வேண்டும்.


இந்தியா பெருமை கொள்ளக்கூடிய வெற்றிகளில் ஒன்று உள்நாட்டு சூரிய மின்சக்தி தொழிற்துறையை உருவாக்குவதாகும். 2017ஆம் ஆண்டில், மின்சக்தியின் ஒரு யூனிட் விலை நிலக்கரி சக்தியை விட குறைவாக இருந்தது. இது தரையில் பொருத்தப்பட்ட சூரிய மின்சக்தி திட்டங்களில் முதலீடு செய்யும் வணிகங்களிடையே புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியது. 2024-25ஆம் ஆண்டில், சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை (International Renewable Energy Agency) இந்தியா 1,08,494 ஜிகாவாட்-மணி நேரம் (gigawatt-hour (Gwh)) சூரிய ஆற்றலை உற்பத்தி செய்ததாக அறிவித்தது. 


இது ஜப்பானின் 96,459 ஜிகாவாட்-மணி நேரத்தை விட அதிகமாக இருந்ததாகவும் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக 3-வது பெரிய சூரிய சக்தி உற்பத்தியாளராக இந்தியாவை மாற்றியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (Ministry of Renewable Energy) கூற்றுப்படி, இந்தியாவின் சூரிய மின்கல கட்டமைப்புகள் (solar module panels) தயாரிக்கும் திறன் 2014ஆம் ஆண்டில் 2 ஜிகாவாட் ஆக இருந்து. இது 2025ஆம் ஆண்டில் 100 ஜிகாவாட் ஆக உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாத நிலவரப்படி இந்தியாவின் உள்நாட்டில் நிறுவப்பட்ட சூரிய சக்தி திறன் 117 ஜிகாவாட் ஆக இருந்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இருப்பினும், உண்மையான உற்பத்தி திறன் நம்பிக்கையான மதிப்பீடாகும். தற்போதைய உண்மையான உற்பத்தி திறன் சுமார் 85 GW ஆகும்.


இந்தியா தனது காலநிலை உறுதிமொழிகளின் (climate commitments) ஒரு பகுதியாக, 2030ஆம் ஆண்டில் தனது மின்சார தேவைகளில் பாதி அளவை புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து பெறுவதாக அறிவித்துள்ளது. இதன் அளவு  500 ஜிகாவாட் ஆகும். இதில் 250 ஜிகாவாட் 280 ஜிகாவாட் சூரிய சக்தியிலிருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருள் இந்தியா 2030ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் 30 ஜிகாவாட்டை சேர்க்க வேண்டும். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வருடத்திற்கு 17 ஜிகாவாட் முதல் 23 ஜிகாவாட் வரை மட்டுமே சேர்க்க முடிந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி போதுமானதாக இருக்க வேண்டும் என்றாலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் சூரிய மின்கல கட்டமைப்புகள் சீனாவை விட 1.5 முதல் 2 மடங்கு வரை அதிக விலை கொண்டவை. 


ஏனெனில், சீனாவின் மிகப்பெரிய திறன், தேவையான மூலப்பொருட்களின் கட்டுப்பாடு மற்றும் மிக உயர்ந்த உற்பத்திகள் இதற்கு முக்கிய காரணியாகும். 2024ஆம் ஆண்டில், இந்தியா தனது சிறந்த சாதனையாக அமெரிக்காவுக்கு சுமார் 4 ஜிகாவாட் அளவிலான சூரிய மின்கல கட்டமைப்புகளை ஏற்றுமதி செய்தது. அதுவும் அமெரிக்காவின் தற்காலிக வர்த்தக கட்டுப்பாடுகள் காரணமாகவே சாத்தியமானது. இதனை சீனாவின் 2024 ஆம் ஆண்டில் சுமார் 236 ஜிகாவாட் அளவிலான ஆண்டு ஏற்றுமதியுடன் ஒப்பிடலாம். 


அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் உருவாகவிருக்கும் பெரிய உற்பத்தி திறன், புதிய சந்தைகள் இல்லாமல் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளக்கூடும். இந்த நிலையில், இந்தியா ஆப்பிரிக்காவிற்கு ‘சூரிய ஆற்றல் வழங்குநராக’ (solar supplier) முன்னிலை வகிக்க முயற்சிப்பது சர்வதேச சூரிய கூட்டமைப்பு (International Solar Alliance) மூலம்  ஒரு நல்ல நடவடிக்கையாகும். இந்தியாவின் பிரதம மந்திரி குஸும் திட்டம் (PM Kusum scheme) கிராமப்புறங்களுக்கு சூரிய ஆற்றல் மற்றும் பிரதம மந்திரி சூர்யா கர் திட்டம் (PM Surya Ghar scheme) நகர்ப்புறங்களில் கூரையிலான சூரிய ஆற்றல் ஆகியவை இன்னும் நாட்டுக்குள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும், அவை ஆப்பிரிக்காவில் முன்மாதிரியாக பயன்படுத்தப்படலாம். அங்கு போதுமான கிராமப்புற மின்சாரம் இல்லாததால், அதன் விளைநிலங்களில் 4% மட்டுமே பாசனம் மூலம் பயன்படுத்த முடிகிறது. இது சூரிய ஆற்றல் இயங்கும் இந்திய மின்பம்புககளுக்கான பெரிய வாய்ப்பாக இருக்கிறது. சீனா இன்னும் ஆப்பிரிக்காவில் முக்கியமான சூரிய ஆற்றல் வழங்குநராக இருந்தாலும், இந்தியா 2-வது நம்பகமான நாடாக தன்னை நிலைநிறுத்தி, தன் தொழில்துறையில்  நீடித்த வளர்ச்சிக்கான வாய்ப்பை பெற வேண்டும்.


Original article:

Share:

இந்தியா-ஐரோப்பா வர்த்தகத்திற்கான புதிய எல்லைகளைத் திறத்தல். -கணேஷ் வலியாச்சி

 வர்த்தகம் மற்றும் பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் விவசாயம், தொழில் மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளில் நன்மைகளைக் கொண்டுவருகிறது.


மாறிவரும் விநியோகச் சங்கிலிகள் மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்கள் காரணமாக உலகளாவிய வர்த்தக கூட்டணிகள் மாறிவரும் நேரத்தில், இந்தியா-ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் (India–European Free Trade Association (EFTA)) வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (Trade and Economic Partnership Agreement (TEPA)) கையெழுத்திட்டது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். இது வெறும் வர்த்தக ஒப்பந்தத்தைவிட அதிகம்; இது முன்னேறிய பொருளாதாரங்களை சமமாக கையாள்வதில் இந்தியாவின் நம்பிக்கையைக் காட்டுகிறது. சுவிட்சர்லாந்து, நோர்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டீன் ஆகியவற்றுடன் கூட்டு சேர்வதன் மூலம், இந்தியா தனது பொருளாதார வரம்பை விரிவுபடுத்தியுள்ளது மற்றும் அதன் வர்த்தக இராஜதந்திரத்தை வலுப்படுத்தியுள்ளது. இது  $100 பில்லியன் முதலீட்டு உறுதிப்பாடு மற்றும் ஒரு மில்லியன் புதிய வேலைகளை உருவாக்கும் திறன் கொண்டது.


பொருட்களுக்கு, இந்த ஒப்பந்தம் பரந்த கட்டணக் குறைப்புகளை வழங்குகிறது. EFTA அதன் கட்டணக் கோடுகளில் 92.2% சதவீதத்தை உள்ளடக்கும். இது இந்தியாவின் ஏற்றுமதியில் 99.6%-ஐக் குறிக்கிறது. இந்தியா அதன் கட்டணக் கோடுகளில் 82.7%-ல் சலுகைகளை வழங்கும்.  இது EFTA-ன் ஏற்றுமதியில் 95.3% சதவீதத்தை உள்ளடக்கும். இந்த ஏற்பாடு பால், நிலக்கரி மற்றும் சில விவசாயப் பொருட்கள் போன்ற முக்கியமான துறைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் வர்த்தகத்தை ஊக்குவிக்கிறது.


TEPA, பொருட்கள், சேவைகள், முதலீடு, அறிவுசார் சொத்து மற்றும் நிலையான மேம்பாட்டை உள்ளடக்கிய 14 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இது உள்நாட்டு வலிமையுடன் வெளிப்படைத்தன்மையை சமநிலைப்படுத்தும் ஒரு இராஜதந்திர வர்த்தகக் கொள்கையை நோக்கிய இந்தியாவின் நகர்வைக் காட்டுகிறது. இந்த ஒப்பந்தத்தில் தொழில்முறை தகுதிகளை இருதரப்பும் அங்கீகரிப்பது, இந்தியாவின் சேவைகள் வர்த்தகத்தை அதிகரிப்பது மற்றும் ஐரோப்பாவில் நாட்டை மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றுவது ஆகியவை அடங்கும்.


ஆழமான ஆதாயங்கள்


வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (Trade and Economic Partnership Agreement (TEPA)) விவசாயம், தொழில் மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளில் பல நன்மைகளை வழங்குகிறது. விவசாயத்தில், இந்தியா 2024-25 நிதியாண்டில் இந்தியா-ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்திற்கு (India–European Free Trade Association (EFTA)) $72.37 மில்லியன் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது. இதில் பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், பாஸ்மதி அரிசி, பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் திராட்சை ஆகியவை அடங்கும். குறிப்பாக, EFTA உடனான இந்தியாவின் விவசாய வர்த்தகத்தில் 99 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் சுவிட்சர்லாந்து மற்றும் நார்வே, போட்டித்தன்மையை மேம்படுத்த உள்ளன. உணவு தயாரிப்புகள், இனிப்புகள் மற்றும் புதிய திராட்சைகள் மீதான சுவிஸ் வரிகள், 100 கிலோவிற்கு 272 CHF வரை அதிகமாக இருந்தன. நார்வே இப்போது அரிசி, பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு வரி இல்லாத அணுகலை அனுமதிக்கிறது. இது புதிய கட்டணச் சந்தைகளைத் திறக்கிறது. இதேபோல், ஐஸ்லாந்து பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சாக்லேட்டுகள் மீதான 97 ISK/கிலோ வரை வரிகளை நீக்கியுள்ளது. இது இந்தியாவின் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதியை அதிகரிக்கிறது.


காபி மற்றும் தேயிலைத் துறைகளும் முக்கியப் பயனாளிகளாகும். EFTA நாடுகள் $175 மில்லியன் மதிப்புள்ள காபியை இறக்குமதி செய்கின்றன. இது உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 3 சதவீதமாகும். இந்தியாவின் வரி இல்லாத அணுகல், நிழலில் வளர்க்கப்பட்ட, கையால் தேர்ந்தெடுக்கப்பட்ட காபியை சிறந்த ஐரோப்பிய சந்தைகளை அடைய அனுமதிக்கிறது. தேயிலைக்கு, சராசரி ஏற்றுமதி விலை 2024-25ஆம் ஆண்டில் ஒரு கிலோவிற்கு $6.77 ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு $5.93-ஆக இருந்தது, இது உயர் தரம் மற்றும் சிறந்த லாபத்தைக் காட்டுகிறது.


இதில் கடல்சார் பொருட்களும் பயனடைகின்றன. மீன் மற்றும் இறால் தீவனத்திற்கு நோர்வே 13.16% வரை வரி விலக்குகளை வழங்குகிறது. ஐஸ்லாந்து உறைந்த மற்றும் பாதுகாக்கப்பட்ட கடல் உணவுகளுக்கு 10% வரை வரிகளை நீக்குகிறது மற்றும் சுவிட்சர்லாந்து மீன் எண்ணெய்களுக்கு பூஜ்ஜிய வரியை அனுமதிக்கிறது. இந்த நடவடிக்கைகள் இந்திய கடல் உணவை மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக ஆக்குகின்றன மற்றும் நிலையான மீன்வளர்ப்பு விநியோகச் சங்கிலிகளை ஆதரிக்கின்றன.

தொழில்துறையில், பொறியியல் துறை, இந்தியா-ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்தின் (India–European Free Trade Association (EFTA)) ஏற்றுமதி 2024-25 ஆண்டில் $315 மில்லியனை எட்டியதால் (18% வளர்ச்சி), கணிசமாக ஆதாயமடைகிறது. இந்த ஒப்பந்தம் மின்சார இயந்திரங்கள், செப்பு பொருட்கள், ஆற்றல்-திறனுள்ள அமைப்புகள் மற்றும் துல்லிய பொறியியல் பொருட்களுக்கான சந்தைகளைத் திறக்கிறது. ஜவுளி, ஆடைகள், தோல் மற்றும் காலணிகள் நிலையான வரிகள் மற்றும் எளிமையான தரநிலைகளால் பயனடைகின்றன. விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் தரநிலைத் தரத்தின் இருதரப்பு அங்கீகாரத்துடன் வரி இல்லாத அணுகலை அனுபவிக்கின்றன.


இந்தியாவின் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிக்கும் இரத்தினக் கற்கள் மற்றும் நகைத் துறை, முழு வரியில்லா அணுகலைப் பெறும், குறிப்பாக வைரங்கள், தங்கம் மற்றும் வண்ண இரத்தினக் கற்களை ஏற்றுமதி செய்பவர்களுக்கு உதவும். இரசாயனங்கள், பிளாஸ்டிக் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளில், EFTA இந்தியாவின் 95% ஏற்றுமதிகளுக்கு பூஜ்ஜிய அல்லது குறைந்த வரிகளை வழங்கியுள்ளது. இது $49 மில்லியனில் இருந்து $70 மில்லியனாக வளரக்கூடும். இது செல்லப்பிராணி உணவு, மட்பாண்டங்கள் மற்றும் கண்ணாடிப் பொருட்களிலும் வாய்ப்புகளை உருவாக்குகிறது. இதனால் இந்திய நிறுவனங்கள் அதிக மதிப்புள்ள ஐரோப்பிய சந்தைகளில் விரிவடைய அனுமதிக்கிறது.


வர்த்தகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கூட்டாண்மை


இந்தியா-EFTA வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (TEPA) என்பது வெறும் கட்டணக் குறைப்புகளை மட்டுமல்லாமல், முதலீடு மற்றும் நிலையான வளர்ச்சியை மையமாகக் கொண்ட ஒரு இராஜதந்திர கூட்டாண்மை ஆகும். இதில் 100 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டம் அடங்கும் மற்றும் 15 ஆண்டுகளில் ஒரு மில்லியன் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் திறமையான பணியாளர்களை ஐரோப்பாவின் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் இணைத்து நீண்டகால தொழில்துறை திறனை அதிகரிக்கிறது.


வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (Trade and Economic Partnership Agreement (TEPA)), டிஜிட்டல் சேவைகள், தொழில்முறை இயக்கம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை விதிகள் மூலம் தகவல் தொழில்நுட்பம், வணிக சேவைகள் மற்றும் கல்வி போன்ற முக்கியமான துறைகளை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் பொதுவான மற்றும் பொது சுகாதாரம் போன்ற துறைகளில் இந்தியாவின் சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது. இந்த ஒப்பந்தம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக உள்ளடக்கம் மற்றும் எளிமையான வர்த்தக விதிகளை உள்ளடக்குவதன் மூலம் வர்த்தகத்தில் நிலைத்தன்மையை ஊக்குவிக்கிறது. இது ஏற்றுமதியாளர்களுக்கான செலவுகளைக் குறைக்க உதவுகிறது மற்றும் பொறுப்பான மற்றும் வெளிப்படையான உலகளாவிய வர்த்தகத்தை ஊக்குவிக்கிறது.


முடிவில், TEPA இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டுகிறது. இது பாதுகாப்பு மற்றும் லட்சியத்துடன் வெளிப்படைத் தன்மையை எச்சரிக்கையுடன் சமநிலைப்படுத்துகிறது. இது நம்பகமான, புதுமையான வர்த்தக நாடான இந்தியாவின் நற்பெயரை வலுப்படுத்துகிறது மற்றும் EFTA நாடுகளுக்கு நிலையான மற்றும் வளர்ந்து வரும் சந்தையை அணுக உதவுகிறது. ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை விட, TEPA என்பது இராஜதந்திர நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட செழிப்புக்கான ஒரு வரைபடமாகும். இது இந்தியாவின் உலகளாவிய பொருளாதார ஈடுபாட்டில் சமநிலையான, உள்ளடக்கிய மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது.


எழுத்தாளர் புனேவில் உள்ள Symbiosis Institute of International Business (SIIB) உதவிப் பேராசிரியராக உள்ளார்.



Original article:

Share:

புதிய அமைதி காக்கும் தலைவர்களின் எழுச்சி. -சி. ராஜா மோகன்

 துருக்கி, கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இப்போது சீனா ஆகியவை உலகளாவிய மோதல்களைத் தீர்ப்பதில் தீவிரமான பங்களிப்பை வழங்கி வருகின்றன. மேற்கத்திய செல்வாக்கு குறைந்து ஐ.நா. பலவீனமடைந்து வருவதால் இது நடக்கிறது. இன்று, நடுநிலை என்பது அதிகாரத்தைக் காட்ட ஒரு புதிய வழியாக மாறிவிட்டது.


கடந்த வாரம் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான வன்முறை அதிகரித்ததால், அதைத் தடுப்பதற்கான முயற்சி வாஷிங்டனிடமிருந்து வெளிப்படாமல் மத்திய கிழக்கிலிருந்து வந்தது. பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோஹாவில் நடைபெற்றன. அப்போது துருக்கிய உளவுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகள் துருக்கியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இது கடந்தகாலத்திலிருந்து ஒரு பெரிய மாற்றத்தைக் காட்டுகிறது. 20-ஆம் நூற்றாண்டில், அமைதிப் பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் ஐரோப்பாவில் நடந்தன. 1980ஆம் ஆண்டுகளில், சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானிலிருந்து விலகுவது ஜெனீவாவில் விவாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் முதல் வளைகுடாப் போருக்குப் பிறகு, நார்வேயில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கும் ( Palestine Liberation Organization (PLO)) இடையிலான ரகசியப் பேச்சுவார்த்தைகள் 1993ஆம் ஆண்டு ஒஸ்லோ (Oslo) ஒப்பந்தங்களுக்கு வழிவகுத்தன. அவை வாஷிங்டனில் கையெழுத்திடப்பட்டன. சமீபத்தில், எகிப்து, கத்தார் மற்றும் துருக்கியின் உதவியுடன் அமெரிக்காவின் தலைமையிலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.


இப்போது, ​​டொனால்ட் டிரம்ப் நேரடியாக உக்ரைனில் அமைதி முயற்சிகளுக்கு தலைமை தாங்குகிறார். துருக்கி, கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மத்திய கிழக்கு நாடுகளும் மாஸ்கோவிற்கும் கியேவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்வதிலும் மனிதாபிமான முயற்சிகளை ஆதரிப்பதிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளன. மற்றொரு பெரிய மாற்றம் ஐ.நா.வின் குறைக்கப்பட்ட பங்கு. 1980ஆம் ஆண்டுகளில், இது ஆப்கானிஸ்தான் அமைதி செயல்முறைக்கு மையமாக இருந்தது. மேலும், ஒஸ்லோ ஒப்பந்தங்களையும் ஆதரித்தது. ஆனால் இன்று, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு அமைதி முயற்சிகளில் ஐ.நா. இல்லை. அதற்குப் பதிலாக, காசா ஒப்பந்தத்தை நிர்வகிக்க, தன் தலைமையிலான "அமைதி வாரியத்தை" டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.


இராஜதந்திரத்திற்கான புதிய அணுகுமுறை வழக்கத்திற்கு மாறான வீரர்களின் எழுச்சியைக் காட்டுகிறது. மேற்கத்திய செல்வாக்கு குறைந்து ஐ.நா பலவீனமடைந்து வருவதால், துருக்கி, கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகள் மோதல்களைத் தீர்ப்பதில் அதிகளவில் பங்கேற்கின்றன. நாடுகள் உலகளாவிய முக்கியத்துவத்தைக் காட்டவும், அதிகாரத்தை வெளிப்படுத்தவும் பஞ்சாயத்து ஒரு வழியாக மாறி வருகிறது.


ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் குறுக்கு வழியில் அமைந்துள்ள வளர்ந்துவரும் பிராந்திய சக்தியான துருக்கி, இந்த புதிய அமைதி இராஜதந்திரத்தை வழிநடத்தியுள்ளது. ஐ.நா. மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட சர்வதேச மன்றங்களில் நடுவுநிலையை இது தீவிரமாக ஆதரிக்கிறது. மேலும், நடுநிலைமை குறித்த மாநாடுகள் மற்றும் பயிற்சித் திட்டங்களை நடத்துகிறது. துருக்கி அதன் வெளியுறவு அமைச்சகத்திற்குள் சர்வதேச அமைதி மற்றும் மத்தியஸ்தம் குறித்த ஒரு பிரிவையும் உருவாக்கியுள்ளது. இதனுடன், துருக்கிய உளவுத்துறை பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.


2022-ல் ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு, துருக்கி நடுநிலை பேச்சுவார்த்தையை ஒரு இராஜதந்திரக் கருவியாக மாற்றியது. மாஸ்கோ மற்றும் கியேவ் ஆகிய இரு நாடுகளாலும் நம்பப்பட்ட இது, கருங்கடல் தானிய முன்முயற்சி மற்றும் பல கைதிகள் பரிமாற்றங்களுக்கு உதவியது. கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றும் காசாவில் துருக்கி ஒரு பின்னணி பாத்திரமாகச் செயல்பட்டது.


அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன், முஸ்லிம் சகோதரத்துவம் மற்றும் ஹமாஸ் போன்ற இஸ்லாமிய குழுக்களுடன் இணைந்து மத்திய கிழக்கில் மீண்டும் தலைமைத்துவத்தை அடைய முயற்சித்துள்ளார். துருக்கி நடுநிலை வகிக்கவில்லை  எனினும் அது ஒரு நேட்டோ உறுப்பினர் நாடு. 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததைக் கண்டித்தது, கருங்கடலில் ரஷ்ய கடற்படையைத் தடுத்தது, மேலும் இரு தரப்பினருக்கும் ஆயுதங்களை வழங்கியது. இருப்பினும், மத்திய கிழக்கில் மாஸ்கோவுடனான அதன் ஒத்துழைப்பு அதற்கு செல்வாக்கைக் கொடுத்தது. 2022ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்தன.


மறுபுறம், கத்தார், நிபுணர்கள் "சிறிய-நாடு பெரிய-அரசியல்" (“small-state mega-politics.”) என்று அழைப்பதில் தேர்ச்சி பெற்றுள்ளது. ஹமாஸ் மற்றும் தலிபான் போன்ற குழுக்களை இது நீண்ட காலமாக ஆதரித்து வருகிறது.  மேலும், கடினமான காலங்களில் அவர்களுக்கு உதவ அதன் செல்வத்தைப் பயன்படுத்தியது. கத்தார் உக்ரைனில் மனிதாபிமான பரிமாற்றங்களையும் ஏற்பாடு செய்தது. இதில் குழந்தைகளை அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைப்பது அடங்கும். அதன் வெளியுறவு அமைச்சகம் மற்றும் கத்தார் மேம்பாட்டு நிதியத்தின் ஆதரவுடன், கத்தார் அதன் அளவைவிட அதிக செல்வாக்கைப் பெற்றுள்ளது.


துருக்கியும் கத்தாரும் நோர்டிக் நாடுகளில் உள்ளவர்களைப் போல நடுநிலையாளர்கள் அல்ல. அவர்கள் மோதல்களில் தீவிரமாக பங்கேற்கிறார்கள். ஆனால், இந்த ஈடுபாடு அவர்களுக்கு பாரம்பரிய அமைதி பேச்சுவார்த்தையாளர்களிடம் இல்லாத முக்கிய வீரர்களை அணுக அனுமதிக்கிறது.


இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான சவுதி அரேபியா, தனது கௌரவத்தை அதிகரிக்க அமைதி இராஜதந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளது. 2023-ஆம் ஆண்டு உக்ரைன் தொடர்பான ஜெட்டா உச்சிமாநாடும், 2025-ஆம் ஆண்டு ரியாத்தில் நடந்த அமெரிக்க-ரஷ்யா சந்திப்பும் நாடுகளை ஒன்றிணைக்கும் அதன் திறனைக் காட்டின. ஏமன் மற்றும் சூடானில் சவுதி முயற்சிகள் கலவையான முடிவுகளைக் கொண்டுள்ளன. ஆனால், அவை தன் பிராந்தியத்தில் போர் மற்றும் அமைதியை வடிவமைப்பதில் உள்ள ரியாத்தின் ஆர்வத்தைக் காட்டுகின்றன.


மறுபுறம், அபுதாபி அமைதியான நடுநிலை பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்துகிறது. 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கு இடையில், 2,500 பேரை விடுவித்த ஒரு டஜன் ரஷ்யா-உக்ரைன் கைதிகள் பரிமாற்றங்களை ஏற்பாடு செய்ய இது உதவியது. இது ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் நடுநிலை பேச்சுவார்த்தை செய்து, ஐரோப்பிய ஒன்றியம், சைப்ரஸ் மற்றும் அமெரிக்காவுடன் காசாவில் மனிதாபிமான வழித்தடங்களை அமைத்தது. 2021-ல் இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் உதவியது என்று கூறப்படுகிறது. ரியாத் மற்றும் தோஹாவைப் போலவே, அபுதாபியும் அதன் செல்வத்தை இராஜதந்திர செல்வாக்காக மாற்றுகிறது.


கவனிக்க வேண்டிய ஒரு புதிய நடுநிலையாளராக சீனா மாறி வருகிறது. முன்னர் இதில் ஈடுபடுவதில் எச்சரிக்கையாக இருந்த பெய்ஜிங் இப்போது தன்னை ஒரு பெரிய சக்தியாகவும் சமாதானத்தை உருவாக்குபவராகவும் காட்டிக் கொள்கிறது. இதற்க 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட சவுதி-ஈரான் ஒப்பந்தம் ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும். அதைத் தொடர்ந்து ஏமன், ஆப்கானிஸ்தானில் முயற்சிகள் மற்றும் உக்ரைன் மற்றும் காசா பற்றிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. சீனா பர்மாவிலும் டாக்கா மற்றும் ரங்கூனுக்கும் இடையிலான மோதல்களிலும் ஈடுபட்டுள்ளது. ஹாங்காங்கில் சர்வதேச மத்தியஸ்த அமைப்பைத் தொடங்குவதன் மூலம் இந்த புதிய பங்கை அதிகாரப்பூர்வமாக்கியுள்ளது. இது மேற்கத்திய நாடுகள் தலைமையிலான தளங்களுக்கு மாற்றாக உலகளாவிய தெற்கிற்கு ஒரு மாற்றாக அமைகிறது.


இவை நடுநிலையாளர் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு முக்கிய வழியாக மாறிவிட்டது என்பதைக் காட்டுகின்றன. துருக்கியைப் பொறுத்தவரை, அது நேட்டோ மற்றும் ரஷ்யாவுடனும், மத்திய கிழக்கு மற்றும் யூரேசியா முழுவதும் அதன் செல்வாக்கை விரிவுபடுத்துகிறது. கத்தாரைப் பொறுத்தவரை, அது வாஷிங்டனுக்கு அதை முக்கியமானதாக வைத்திருக்கிறது மற்றும் பிராந்தியத்தில் அதன் பங்கை அதிகரிக்கிறது. ரியாத் மற்றும் அபுதாபியைப் பொறுத்தவரை, இது உலகளாவிய தெற்கில் தங்கள் தலைமையை அதிகரிக்கிறது. பெய்ஜிங்கைப் பொறுத்தவரை, இது உலகளாவிய நிர்வாகத்தை மறுவடிவமைக்கும் அதன் இலக்கை ஆதரிக்கிறது. நடுநிலையாளர் ஓர் அடையாளமாகவும், இராஜதந்திர கருவியாகவும் மற்றும் அதிகாரத்தைக் காட்ட ஒரு வழியாகவும் பயன்படுத்தப்படுகிறது.


இந்தியாவில், டெல்லிக்கும் ராவல்பிண்டிக்கும் இடையில் சமாதானம் செய்வதாக டிரம்ப் சமீபத்தில் கூறியது "நடுநிலைமையை" பிரபலமற்றதாக்கியுள்ளது. பெரிய நாடுகள், குறிப்பாக இந்தியா, தங்கள் தகராறுகளில் மூன்றாம் தரப்பு ஈடுபாட்டை ஏற்றுக்கொள்வதில்லை. காஷ்மீரின் வரலாறு தோல்வியுற்ற வெளிப்புற சமரச முயற்சிகளால் நிறைந்துள்ளது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் நேரடியாகப் பேசியபோது காஷ்மீர் தொடர்பான மிகவும் வெற்றிகரமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன.


டிரம்பின் கூற்றுகளுக்கு எதிரான விமர்சனத்தில், கொரியப் போரில் அதன் ஈடுபாடு முதல் மாலத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கையில் அமைதியைப் பேண உதவுவது வரை இந்தியாவின் நீண்ட அமைதிப் பாரம்பரியத்தை மக்கள் பெரும்பாலும் கவனிக்கவில்லை. கிளர்ச்சிகளை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியாவின் உள்நாட்டு அனுபவம் இன்னும் முக்கியமானது, அங்கு அது போராளிகளை பிரதான நீரோட்டத்திற்கு கொண்டுவந்து கிளர்ச்சியாளர்களை அரசியல் தலைவர்களாக மாற்றியுள்ளது. இந்த அனுபவம் உலகளவில் மோதல்களை சமரசம் செய்வதற்கு இந்தியாவுக்கு மதிப்புமிக்க பாடங்களைக் கொடுக்கிறது.


வெற்றிகரமான நடுநிலைமைக்கான திறவுகோல் அந்நியச் செலாவணி ஆகும். இதில் இந்தியாவுக்கு அனைத்து தரப்பினருடனும் நம்பகமான செல்வாக்கு தேவை. இதற்கு பிராந்தியத்திற்குள்ளும் அதற்கு அப்பாலும் உள்ள மோதல்களில் தீவிரமாக ஈடுபடுவதும், அண்டை நாடுகளில் உள்ள பல்வேறு அரசியல் குழுக்களுடன் தொடர்புகளை வலுப்படுத்துவதும் தேவை.


நடுநிலைமை என்பது மேற்கத்திய நாடுகளுக்கோ அல்லது ஐ.நா.வுக்கோ மட்டும் அல்ல. இன்றைய உலகில், இது லட்சிய நடுத்தர சக்திகள் மற்றும் எழுச்சி பெறும் நாடுகளுக்கான ஒரு கருவியாகும். அமைதியை உருவாக்குபவர்களின் இந்த புதிய நிலப்பரப்பில் இந்தியா தனது பங்கை மீண்டும் பெற வேண்டும்.


எழுத்தாளர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் சர்வதேச விவகாரங்களுக்கான பங்களிப்பு ஆசிரியராக உள்ளார்.



Original article:

Share:

தேசிய சிறுபான்மையினர் ஆணையம், அதற்காக உருவாக்கப்பட்டவர்களுக்கு அரிதாகவே பயன்பட்டுள்ளது. -தாஹிர் மஹ்மூத்

 47 ஆண்டுகால வரலாறு, சிறுபான்மையினர் சமமான குடிமக்களாக தங்கள் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தை ((NCM)) நம்பியிருக்க முடியாது என்பதைக் காட்டுகிறது.


தற்போது, ​​தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திற்கு (NCM) தலைவர் அல்லது உறுப்பினர்கள் இல்லை. அதன் எதிர்காலம் குறித்தும் தெளிவற்ற வதந்திகள் உள்ளன. ஆணையத்தை மறுசீரமைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிய பொது நல வழக்கை (Public Interest Litigation (PIL)) விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சமீபத்தில் ஒன்றிய அரசிடம் பதில் கோரியுள்ளது. ஆனால், கேள்வி என்னவென்றால் இந்த அமைப்பு நீண்டகாலமாக செயல்படாமல் இருப்பது சிறுபான்மையினரின் வாழ்க்கையையும் உரிமைகளையும் உண்மையில் பாதிக்கிறதா?


இந்தியாவில் பல தேசிய ஆணையங்கள் உள்ளன. அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சிவில் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த ஆணையங்கள் கண்காணிப்புக் குழுக்களாகச் செயல்படுகின்றன. சிறுபான்மையினர் ஆணையம் முதன்முதலில் 1978-ல் உள்துறை அமைச்சகத்தின் தீர்மானத்தின் மூலம் நிறுவப்பட்டது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு, பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆணையம் என்ற மற்றொரு அமைப்பும் உருவாக்கப்பட்டது. இவை இரண்டும் மொரார்ஜி தேசாய் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டன. மேலும்,  இந்த ஆணையங்களுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்க திட்டமிடப்பட்டன.


இருப்பினும், சில கூட்டணிக் கட்சிகள் இந்த யோசனையை ஆதரிக்கவில்லை. காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் சிறுபான்மையினர் ஆணையத்தை உருவாக்குவதில் அதிருப்தி அடைந்தன. 1981-ல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, ​​அது ஆணையத்தை ஏற்றுக்கொண்டது. ஆனால், அதை அரசியலமைப்பு அங்கீகாரம் அளிக்க விரும்பவில்லை. இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி மிர்சா ஹமீதுல்லா பேக் சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு 1988ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியில் இருந்தார்.


1990ஆம் ஆண்டில், வி.பி. சிங் தலைமையிலான மற்றொரு கூட்டணி அரசாங்கம், இரண்டு ஆணையங்களையும் அரசியலமைப்பில் சேர்க்க மீண்டும் முயற்சித்தது. ஒரு அரசியலமைப்பு (திருத்த) மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், போதுமான அரசியல் ஆதரவு இல்லாததால் அது நிறைவேறவில்லை.


காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, ​​மசோதாவை மாற்றியது. சிறுபான்மையினர் ஆணையத்தை அதிலிருந்து நீக்கிவிட்டு, பட்டியல் பழங்குடியினர்/பட்டியல் சாதிகள் ஆணையத்தை மட்டும் தக்க வைத்துக் கொண்டது. இந்த திருத்தப்பட்ட மசோதா எளிதாக நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக, சிறுபான்மையினர் ஆணையம் முதலில் அமைக்கப்பட்ட பிறகும் 14 ஆண்டுகள் சட்டப்பூர்வமற்ற அமைப்பாகவே தொடர்ந்தது. இறுதியாக, 1992ஆம் ஆண்டில், பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் ஆணையத்திற்கு சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்கியது. இது தேசிய சிறுபான்மையினர் ஆணையம் (NCM) என மறுபெயரிடப்பட்டது மற்றும் சட்டத்தின் கீழ் ஒரு சிவில் நீதிமன்றத்தின் சில அதிகாரங்களை வழங்கியது.


1992ஆம் ஆண்டு தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, ​​புதிய காங்கிரஸ் அரசாங்கம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை (National Human Rights Commission (NHRC)) உருவாக்க மற்றொரு சட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் அதிகரித்துவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து "வெளிநாட்டு மற்றும் இந்திய சிவில் உரிமைகள் குழுக்களின் தவறான மற்றும் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட பிரச்சாரத்தை எதிர்ப்பதே" இதன் நோக்கமாகும். தேசிய மனித உரிமைகள் ஆணையம் முதலில் ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது, பின்னர் அது மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, சிறுபான்மையினர், பட்டியல் சாதியினர்/பட்டியல் பழங்குடியினர் (SC/ST) மற்றும் பெண்கள் ஆகிய மூன்று தேசிய ஆணையங்களின் தலைவர்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அதிகாரபூர்வ உறுப்பினர்களாக ஆனார்கள்.


முதல் சட்டப்பூர்வ சிறுபான்மையினர் ஆணையம் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான நீதிபதி முகமது சர்தார் அலி கான் தலைமையில் செயல்பட்டது. இரண்டாவது தலைவர் இந்தக் கட்டுரையின் ஆசிரியர் ஆவார். இந்தியா முழுவதும் பரவலாக மீறப்பட்டு வந்த அரசியலமைப்பின் 29 மற்றும் 30 வது பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சிறுபான்மையினரின் கல்வி மற்றும் கலாச்சார உரிமைகளைப் பாதுகாப்பதில் இருவரும் கவனம் செலுத்தினர். சிவில் நீதிமன்றத்திற்கு இணையான வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை மட்டுமே கொண்டிருந்த அவர்கள், நிவாரணம் வழங்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தனர். பின்னர், முன்னாள் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியான நீதிபதி முகமது ஷமிம், NCM தலைவராக ஆனார். 2003-ல் அவரது பதவிக்காலம் முடிவடைந்ததிலிருந்து, சட்டத் துறையைச் சாராத நபர்களால் ஆணையம் வழிநடத்தப்படுகிறது.


2004-ஆம் ஆண்டில், காங்கிரஸ் அரசாங்கம் தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான ஆணையம் (National Commission for Minority Educational Institutions (NCMEI)) என்ற தனி அமைப்பை உருவாக்கியது. தேசிய சிறுபான்மை ஆணையத்தின் (NCM) தலைவர் பதவி காலியாக இருந்தது, பிரதமர் மன்மோகன் சிங் அதை மீண்டும் நான் (கட்டுரையாளர்) ஏற்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் சிறுபான்மையினருக்காக ஆணையம் செய்ய வேண்டியவை இப்போது அதிகம் இல்லாததால், நான் எந்த ஆர்வமும் காட்டவில்லை.


அதே நேரத்தில், "மத மற்றும் மொழி சிறுபான்மையினரிடையே சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய குழுக்களை அடையாளம் காண்பதற்கான அளவுகோல்களை பரிந்துரைக்கவும், அதன் பரிந்துரைகளை செயல்படுத்த அரசியலமைப்பு, சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும்" ஒரு தற்காலிக ஆணையத்தை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டது. இந்த அமைப்பின் தலைவராக முன்னாள் இந்திய தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா இருந்தார். பிரதமரின் கோரிக்கையின்படி, நான் அதன் சட்ட உறுப்பினராக இணைந்து, அதன் பணியை முடிப்பதில் முக்கிய பங்கு வகித்தேன். இந்த ஆணையம் 2005-ல் செயல்படத் தொடங்கியது மற்றும் விரைவில் அதன் அறிக்கையை சமர்ப்பித்தது, ஆனால் அரசு 2014இல் ஆட்சியை இழக்கும் வரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


தேசிய ஆணையங்கள் என்று அழைக்கப்படுபவை எதுவும் அதன் சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்ற உண்மையான சுதந்திரத்தைப் பெற்றதில்லை. பல வருடங்களுக்குப் பிறகும், அவர்களில் யாரும் தாங்கள் உதவ வேண்டிய மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திற்கு பெரிய அளவில் நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது அது வரி செலுத்துவோருக்கு ஒரு சுமையாக மாறியுள்ளது. அரசியலமைப்பின்கீழ் சிறுபான்மையினர் எதிர்பார்க்கும் சிறிய விஷயங்களைக் கூட, பெரும்பாலும் "பல் இல்லாத புலி" என்று அழைக்கப்படும் இந்த பலவீனமான அமைப்பின் மூலம் அடைய முடியாது என்பதை அதன் 47 ஆண்டுகால வரலாறு காட்டுகிறது. எனவே, தேசிய சிறுபான்மையினர் ஆணையம் கலைக்கப்பட்டால், அதன் குறித்து வருத்தப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை.


எழுத்தாளர் முன்னாள் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் மற்றும் இந்திய சட்ட ஆணைய உறுப்பினர் ஆவார்.



Original article:

Share:

அரசாங்கம் ஓய்வூதியத் திட்டங்கள் வழங்குவதன் நோக்கம் என்ன? -ரோஷ்னி யாதவ், குஷ்பு குமாரி

 தற்போதைய நிகழ்வு : இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme (UPS)) இதுவரை ஒரு சிலரால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பல பணியாளர் சங்கங்கள் இப்போது நவம்பர் 9-ம் தேதி ஜந்தர் மந்தரில் ஒரு போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளன. பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme (OPS)) 2004-ம் ஆண்டு தேசிய ஓய்வூதிய முறையால் (National Pension System (NPS)) மாற்றப்பட்டது.


முக்கிய அம்சங்கள் :


அகில இந்திய NPS ஊழியர்கள் கூட்டமைப்பு, மற்ற சங்கங்களுடன் இணைந்து, OPS மறுசீரமைப்பு கோரிக்கையை வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த உள்ளதாக அதன் தலைவர் மஞ்ஜீத் சிங் படேல் கூறினார். இதே கோரிக்கையை தில்லி காவல்துறைக்கு தெரிவிக்க கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளதாக அவர் தெரிவித்தார்.


அரசாங்க வட்டாரங்களின்படி, செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உள்ள 23.93 லட்சம் பணியாளர்களில் சுமார் 4.5% (1.11 லட்சம்) பேர் மட்டுமே ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாற முடிவு செய்திருந்தனர்.


ஆகஸ்ட் 2024-ல் அமைச்சரவை ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) ஒப்புதல் அளித்தது. மேலும், நிதி அமைச்சகம் இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அதை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில், தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (NPS) கீழ் உள்ள பணியாளர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் (UPS) தேர்வுசெய்ய காலக்கெடு ஜூன் 30 வரை இருந்தது. ஆனால், மெதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதால் காலக்கெடு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. இது, முதலில், இது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது, பின்னர் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது.


பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ், பணியாளர்கள் கடைசியாகப் பெற்ற அடிப்படைச் சம்பளத்தில் 50% ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள். ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு பணிபுரிந்த அனைவரும் தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உள்ளனர். தேசிய ஓய்வூதிய முறையில் (NPS), ஓய்வூதியம் சந்தையின் செயல்திறன் மற்றும் பணியாளர் முதலீடு செய்த தொகையைப் பொறுத்து அமைகிறது.


பணியாளர்கள் தொடர்ந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS) திரும்பக் கோரி வருவதால், அரசாங்கம் கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் (UPS) கொண்டு வந்தது. இதில் 25 வருட சேவையை முடித்தவர்களுக்கு ஓய்வூதியமாக ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடைசி 12 மாதங்களில் பெறப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% பணியாளர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.


தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (NPS) கீழ் உள்ள பணியாளர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாறுவதற்கான விருப்பம் உள்ளது. இருப்பினும், பெயர் வெளியிட விரும்பாத பல மத்திய அரசு பணியாளர்கள், சந்தைகளுடன் இணைக்கப்பட்ட தேசிய ஓய்வூதிய முறை (NPS), ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) விட இன்னும் சிறந்த தேர்வாக இருப்பதாகக் கூறினர்.


அக்டோபர் 7-ம் தேதி ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஒரு பிரதிநிதித்துவத்தில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கீழ் ஓய்வுக்கால நிதியானது (superannuation) ஓய்வு பெறும் தேதிக்குப் பதிலாக, தன்னார்வ ஓய்வு (voluntary retirement) பெற்ற தேதியிலிருந்து தொடங்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.


உங்களுக்குத் தெரியுமா? 


ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) முக்கிய அம்சங்கள் :


1. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் : இந்தத் திட்டம் 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்தை' (Assured Pension) வழங்குகிறது. இது பணி ஓய்வு அல்லது ஓய்வு பெறுவதற்கு முன், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவைக்காக, கடந்த 12 மாதங்களில் பணியாளர் பெற்ற சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதமாகக் கணக்கிடப்படும். ஓய்வூதியம் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை வரை குறைவான சேவை காலத்திற்கு ஓய்வூதியம் விகிதாசாரமாக இருக்கும்.


2. உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் : இந்தத் திட்டம் குறைந்தபட்சம் 10 வருட சேவைக்குப் பிறகு, ஓய்வூதியத்திற்காக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியத்தை உத்தரவாதம் அளிக்கிறது.


3. உறுதி செய்யப்பட்ட குடும்ப ஓய்வூதியம் : ஓய்வு பெற்றவர் காலமானால், அவரது நெருங்கிய குடும்பத்தினர் ஓய்வு பெற்றவர் கடைசியாக எடுத்த ஓய்வூதியத்தில் 60% பெற உரிமை உண்டு.


4. பணவீக்கக் குறியீடு (Inflation indexation) : தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டைப் (Consumer Price Index) பயன்படுத்தி மூன்று வகையான ஓய்வூதியங்களுக்கான அகவிலைப்படி நிவாரணம் கணக்கிடப்படும். இந்தக் குறியீடு, சேவை செய்யும் தொழிலாளர்களுக்குப் பயன்படுத்தப்படும் குறியீட்டைப் போன்றது.


5. ஓய்வூதிய நேரத்தில் ஒரு மொத்த தொகை செலுத்துதல்: கிராச்சுட்டிக்கு மேலதிகமாக, ஓய்வூதிய நேரத்தில் ஒரு மொத்த தொகை வழங்கப்படும். இது ஒவ்வொரு ஆறு மாத சேவை முடிந்த பிறகு, ஓய்வூதிய தேதியில் உள்ள மாதாந்திர ஊதியத்தின் (ஊதியம் + DA) பத்தில் ஒரு பங்காக இருக்கும். இந்த செலுத்துதல் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்தின் அளவை குறைக்காது.


6. கட்டாய ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான ஓய்வூதிய உத்தரவாதம் : கட்டாய ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதிய உறுதி: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) மத்திய சிவில் சேவைகள் விதிகளின் கீழ் தண்டனையாக இல்லாத அடிப்படை விதி 56 (j)-ன் கீழ் கட்டாயமாக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் கிடைக்கும் என்று அறிவிப்பு தெரிவித்தது. இருப்பினும், சேவையிலிருந்து நீக்கப்படுதல், பணிநீக்கம் அல்லது ஊழியரின் பதவி விலகலின்போது உறுதியளிக்கப்பட்ட பணம் கிடைக்காது. "இத்தகைய சந்தர்ப்பங்களில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட விருப்பம் பொருந்தாது," என்று அது தெரிவித்தது.


Original article:

Share: