வரவிருக்கும் வருமான கணக்கெடுப்பு எதிர்கொள்ளும் சவால்கள் -விக்னேஷ் ராதாகிருஷ்ணன்

 வரவிருக்கும் குடும்ப வருமான கணக்கெடுப்பு (Household Income Survey), இந்திய குடும்பங்களின் வருமானம், செலவுகள் மற்றும் மாறிவரும் இயக்கவியல் ஆகியவற்றின் விரிவான கண்ணோட்டத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், துல்லியமான வருமானத் தரவுகளைச் சேகரிப்பது என்பது சவாலாகவே உள்ளது. ஏனெனில், கேள்விகளின் உணர்ச்சிகரமான தன்மை காரணமாக, பலர் அவற்றை பதிலளிக்க கடினமான ஒன்றாகக் கருதலாம்.


குடும்ப வருமான கணக்கெடுப்பு 2026-ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்படவுள்ளது. இது இந்தியாவில் உள்ள குடும்பங்கள் எவ்வாறு செலவுகளைச்  சமாளிக்கின்றன, எதிர்காலத்தை நோக்கி நகர்கின்றன என்பதைப் பற்றிய மிகத்தெளிவான கண்ணோட்டத்தை அளிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இத்தகைய கணக்கெடுப்பின் சவால் என்னவென்றால், தனிநபர் வருமானம் பற்றிய கேள்விகள் மிக உணர்ச்சிப்பூர்வமானவை ஆகும். பலர் தனிநபர் வருமானம் குறித்து பதிலளிக்க தயக்கம் காட்டுவர்.  ஒரு கொள்கை வகுப்பாளரின் பார்வையில் கணக்கெடுப்பு வடிவமைப்பு மதிப்புமிக்கதாக இருந்தாலும், வருமானம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிப்பவர்களுக்கு, தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதாகத் தோன்றலாம். மேலும், பல சமயங்களில் இது குறித்த கேள்விகளுக்குத்  துல்லியமாகப் பதிலளிப்பது  கடினமாகவும் இருக்கலாம் என்கின்றனர்


கடந்த கால ஆய்வுகள் குறித்து


இந்தியக் கொள்கை வகுப்பாளர்களிடம் குடும்ப வருமானம் பற்றிய சரியான தகவல்கள் இல்லை. காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey) போன்ற ஆய்வுகள் வருவாயைக் கணக்கிட முயற்சிக்கிறது. ஆனால், இது ஊதியங்களை தொழில்சந்தை இயக்கவியல் மூலம் பார்க்கிறது. மேலும் குடும்ப பண்புகள் பற்றிய விரிவான நுண்ணறிவுகளை வழங்குவதில் குறைபடுகிறது. குடும்ப நுகர்வு செலவினக் கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey (HCES)) குடும்ப வருமானத்தை ஊகிக்க, செலவு முறைகளை நம்பியுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு மிகவும் நம்பகமானதாகக் கருதப்பட்டாலும், நுகர்வுத் தரவை வருமானத்திற்கான பதிலியாகப் (proxy) பயன்படுத்துவது நடைமுறையில் எப்போதும் நிலையற்றத் தன்மையை உள்ளடக்கியது. பின்னர், ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India (RBI)) நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு (Consumer Confidence Survey) உள்ளது, இது நகர்ப்புற மற்றும் ஊர்ப்புற நுகர்வோரிடையே காலப்போக்கில் வருமான நிலைகள் எவ்வாறு உயர்கின்றன அல்லது குறைகின்றன என்பதைக் கண்காணிக்கிறது. இந்த கணக்கெடுப்புக் கருவிகள் வருமான மாற்றங்களில் பரந்த போக்குகளைப் பதிவு செய்துள்ளன. அவற்றை அளவிடுவதற்கு பதிலிகளை நம்பியுள்ளன, அல்லது குறிப்பிட்ட பகுப்பாய்வு கோணங்கள் மூலம் வருமானத்தை ஆய்வு செய்துள்ளன.


இருப்பினும், வரவிருக்கும் குடும்ப வருமானக் கணக்கெடுப்பு, வருமானத்தையும் அதன் பிற குடும்ப பண்புகளுடனான தொடர்பையும் புரிந்து கொள்ள வருமானத் தரவைச் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய கணக்கெடுப்பானது சமூகக் குழு, மதம் மற்றும் தொழில் பற்றிய விரிவான தகவல்களைச் சேகரிக்கிறது. குடும்பங்கள் வேளாண் தொழில்கள் அல்லது பிற பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனவா என்பதை உள்ளடக்கியது. இது நில உரிமை மற்றும் பயன்பாடு, வசிப்பிடத்தின் அளவு மற்றும் வகை போன்ற சொத்து விவரங்கள் மற்றும் பெறப்பட்ட கடன்களையும் பதிவு செய்கிறது.


இந்தக் கணக்கெடுப்பு, முதன்முறையாக, கூடுதல் நேர ஊதியம், செயல்திறன் அடிப்படையிலான போனஸ் (bonuses), பங்கு விருப்பங்கள், விடுப்பை பணமாக மாற்றுதல் மற்றும் பணிநீக்க கொடுப்பனவுகள் போன்ற கொடுப்பனவுகள் உட்பட வழக்கமான ஊதியங்கள் பற்றிய விரிவான தகவல்களை சேகரிக்கிறது. தற்காலிகத் தொழிலாளர்களுக்கு, இந்தக் கணக்கெடுப்பு வேலைசெய்த நாட்களின் எண்ணிக்கை, சராசரி தினசரி ஊதியம் மற்றும் பெறப்பட்ட உதவிக்குறிப்புகளைக்கூட பதிவு செய்யும் என்று கூறப்படுகிறது. சுயதொழில் செய்பவர்களைப் பொறுத்தவரை, விற்கப்பட்ட பயிர்களின் வகை, அளவு மற்றும் அந்த விற்பனையின் மதிப்பு பற்றிய விவரங்களையும் சேகரிக்கும் என்று தெரிவிக்கின்றனர். வேளாண் அல்லாத தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு, கணக்கெடுப்பு வணிகத் துறை மற்றும் சம்பாதித்த ரசீதுகளின் மொத்த மதிப்பை ஆய்வுக்கு உட்படுத்தும் என்கின்றனர்.


இத்தகைய தகவல்களை ஒருங்கிணைப்பதன் மூலம், பல்வேறு வகையான வேலைவாய்ப்புகளில் வகுப்பு இயக்கவியலைப் புரிந்துகொள்வதையும், சில வேலைகள் குறிப்பிட்ட சமூகக் குழுக்களுக்குள் குவிந்துள்ளதா என்பதை அறிய உதவும். ஒருகுடும்பத்தின் மொத்த வருமானத்தில் எவ்வளவு பங்கு கடன் திருப்பிச் செலுத்துதலுக்குச் செல்கிறது என்பதையும் வெளிக்காட்டக்கூடும். இது நகர்ப்புறக் குடும்பங்களிடையே, குறிப்பாக, சம அளவிலான மாதத்தவணை (Equated Monthly Instalment (EMI)) முறையை அடிப்படையாகக் கொண்ட செலவினங்களால் இயங்கும் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான அளவீடு ஆகும். வேளாண்மையைப் பொறுத்தவரை, விரிவான கேள்விகள் இந்தக் கணக்கெடுப்பை "உழவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்" போன்ற கூற்றுக்களை சோதிக்கவும், அதனுடன் தொடர்புடைய அரசாங்கத் திட்டங்களை மதிப்பிடுவதற்கும் ஒரு சிறந்த நேரடி கருவியாக இதனை ஆக்குகின்றன.


பதிவு செய்யப்பட்ட செலவுகள்


வருமானத்தை அளவிடுவது முக்கியம் என்றாலும், செலவு முறைகளைக் கருத்தில் கொள்வதும் முக்கியமாகும்.  எனவே, இந்தக் கணக்கெடுப்பு குடும்ப நுகர்வு செலவினக் கணக்கெடுப்பின் சில கேள்விகளை மீண்டும் கேட்கிறது. உதாரணமாக, விதைகள், உழைப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட ஒவ்வொரு பொருளுக்கும் உள்ளீட்டு செலவுகளைப் பதிவு செய்ய உழவர்களைக் கேட்கிறது. பிற துறைகளில் சுயதொழில் செய்பவர்களுக்கு, மூலப்பொருள் செலவுகள், வாடகைக் கட்டணங்கள், மற்றும் பழுது மற்றும் பராமரிப்புச் செலவுகள் பற்றிய விவரங்களையும் கேட்கிறது. ஒரே குடும்பங்களிடமிருந்து இருந்து செலவு மற்றும் வருமானத் தரவுகளை சேகரிப்பதன் மூலம், இந்தக் கணக்கெடுப்பு லாப வரம்புகளைத் துல்லியமாக அளவிட உதவுகிறது.


மேலும், இது ஓய்வூதிய பலன்கள், ஜீவனாம்சம் அல்லது குழந்தை ஆதரவு போன்ற குடும்ப ஆதரவு பரிமாற்றங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் ஆகியவற்றையும் அளவிடுகிறது. மிக முக்கியமாக, முதல் முறையாக, இந்தக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை  திட்டம் போன்ற மாநில அரசின் திட்டங்கள் மற்றும் பல மத்திய அரசு திட்டங்கள் மூலம் பெறப்பட்ட நிதிகள் பற்றிய தரவுகளையும்  சேகரிக்கிறது.

சோதனை சிக்கல்கள்


இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், முன்மொழியப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு, நாடு முழுவதும் உள்ள வீடுகளில் சிலவற்றைத் தோராயமாகத் தேர்ந்தெடுத்து, அதன் கேள்விகளுக்கு பதிலளிக்க, சோதனை முறையில் நடத்தப்பட்டது. இந்தச் செயல்பாடு கவலை அளிக்கும் சில கருத்துக்களை உருவாக்கியது. பதிலளித்தவர்களில் ஏறக்குறைய 95 சதவீதம் மக்கள் இந்தத் தகவலை உணர்வுப்பூர்வமானதாகக் கருதினர். பல்வேறு ஆதாரங்களில் இருந்து வருமானத்தை வெளியிடுவதில் சங்கடமாக உணர்ந்தனர் என்றும் சொல்லப்படுகிறது. அவர்களில் பெரும்பாலோர் வருமான வரி செலுத்தப்படுவது குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டனர். எனவே, பெரும்பாலானவர்கள் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வாய்ப்புள்ளது. கணக்கெடுப்புக் குழு இந்தச் சவாலை அறிந்திருக்கிறது. எனவே, பொது விழிப்புணர்வை அதிகரிப்பது, தவறான கருத்துக்களை நீக்குவது மற்றும் பல்வேறு ஊடகங்கள் மூலம் பரப்புரை செய்வது ஆகியவற்றின் மூலம் இந்தச் சவால்களை எதிர்கொள்கிறது. நம்பிக்கையை வளர்க்க உள்ளூர் மொழிகள் தெரிந்த களப்பணியாளர்களை நியமிப்பதையும் அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். ஊர்ப்புறங்களில் பதிலளித்தவர்கள் குறைவான விளக்கங்களையே கேட்கிறார்கள், அதே நேரத்தில், வசதியான வீடுகளில் உள்ளவர்கள் அதிகமான விளக்கங்களைக் கேட்கிறார்கள் என்பதை சோதனைக்குழு கவனித்தது. இந்தத் தயக்கம் காரணமாக, வழக்கத்திற்கு மாறாக, வசதியான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களுக்காக பிரத்தியேகமாக ஒரு சுய-தொகுப்பு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இந்த அமைப்பின்கீழ், கணக்கெடுப்பின் நோக்கங்கள் மற்றும் துல்லியமான வருமானத்தரவுகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை விளக்கும் எழுத்துப்பூர்வ கோரிக்கையை பதிலளிப்பவர்கள் பெறுவார்கள்.


மேலும், கள வருகைகளின்போது, ​​பல குடும்பங்கள் தங்கள் செலவுகளை மிகைப்படுத்திக் கூறினர் அல்லது தங்கள் வருமான அளவுகளைத் தவறாகத் தெரிவித்தனர். பதிலளித்தவர்கள் தங்கள் நிதி சொத்துக்கள் பற்றிய விவரங்களை நினைவு கூர்வது கடினமாக இருப்பதையும் கண்டனர். மேலும், சேமிப்பு அல்லது நிலையான வைப்புத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியைப் பற்றி பெரும்பாலும் அறிந்திருக்கவில்லை என்று நடத்தப்பட்ட சோதனைக் கணக்கெடுப்பின் மூலம் தெரியவருகிறது. 



Original article:

Share:

நெகிழ்வான நடத்தை விதி -ரங்கராஜன் ஆர்.

 மத்திய அரசும், மாநில அரசுகளும் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் மாதிரி நடத்தை விதியின் (Model Code of Conduct (MCC)) உண்மையான நோக்கத்தை மீறுகின்றன.


எவ்வளவு சிறந்த அரசியலமைப்பாக இருந்தாலும், அதை செயல்படுத்தும் நபர்கள் சரியானவர்களாக இல்லை என்றால் அந்த அரசியலமைப்பு தோல்வியடைய வாய்ப்பு உள்ளது என்றும் இது நாட்டின் செயல்பாட்டிற்காகவும் அதன் பல்வேறு பொது செயல்முறைகளுக்காகவும் உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டம் அல்லது நெறிமுறைக்கும் சமமாகப் பொருந்தும் என்றும் அரசியல் நிர்ணயசபையில் அம்பேத்கர் குறிப்பிட்டார்.


அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான வழிகாட்டுதலுக்கான மாதிரி நடத்தை விதிகள் (Model Code of Conduct (MCC)) என்பது அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் உருவான விதிமுறைகளின் தொகுப்பாகும். அவர்கள் கூறப்பட்ட நடத்தை விதிகளில் உள்ள கொள்கைகளைப் பின்பற்ற ஒப்புக்கொண்டுள்ளனர். இது அவர்களை அதன் எழுத்து மற்றும் ஆன்மாவில் மதிக்கவும் கடைப்பிடிக்கவும் கட்டாயப்படுத்துகிறது. இந்த விதிகள் 1990-களில் கண்டிப்பாக செயல்படுத்தத் தொடங்கி 2013-ஆம் ஆண்டில் இந்த விதிகள் இந்திய ஆணையத்தின் மூலம் (Election Commission of India (EC) திருத்தப்பட்டது.

தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் தேதி வரை மாதிரி நடத்தை விதி நடைமுறையில் இருக்கும்.


அரசியல் கட்சிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சாரத்தின்போது பொது நடத்தைக்கான நெறிமுறைகளை மாதிரி நடத்தை விதி வகுக்கிறது. அதிகாரத்தில் உள்ள கட்சி அல்லது கட்சிகளைப் பொறுத்தவரை, அமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகள் எந்தவொரு நிதி மானியங்களையும் அறிவிக்கவோ, சாலைகள் அமைக்கவோ அல்லது குடிநீர் வழங்கவோ அல்லது  உறுதியளிக்கவோ, புதிய திட்டங்களை அறிவிக்கவோ, கட்சி அல்லது அதிகாரத்தில் உள்ள கட்சிகளுக்கு ஆதரவாக வாக்காளர்களிடம் ஆதிக்கம் செலுத்தும் விளைவைக் கொண்ட எந்தவொரு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டவோ கூடாது என்று மாதிரி நடத்தை விதி விதிக்கிறது.


ஏரளமான விதிமீறல்கள் உள்ளன


மாதிரி நடத்தை விதி என்பது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களால் பின்பற்றப்பட வேண்டிய தன்னார்வ விதிமுறைகளின் தொகுப்பாகும். இது சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட முடியாததாக உள்ளது. பிரச்சார செயல்முறை தொடர்பாக மாதிரி நடத்தை விதியின் சில விதிகளை மீறுவது குற்றவியல் சட்டங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 (Representation of the People Act, (RP Act)) ஆகியவற்றில் தொடர்புடைய விதிகளைப் பயன்படுத்துவதன் மூலம் செயல்படுத்தப்படலாம். இருப்பினும், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு ஆளும் அரசாங்கத்தால் நிதி மானியங்கள் அல்லது புதிய திட்டங்களை அறிவிப்பது சமநிலையை சீர்குலைத்து, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களைப் பாதிக்கும். தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதியில் நடந்துவரும் திட்டங்களின்கீழ் மானியங்கள் அல்லது விநியோகங்களை இந்த விதி கட்டுப்படுத்தாது.


ஹாம்லெட் நாடகத்தில், “மீறுவதிலேயே அதிகக் கௌரவம், பின்பற்றுவதைவிட” (“more honoured in the breach than in the observance”) என்பது ஒரு பிரபலமான மேற்கோள் ஆகும். இது பின்பற்றுவதைவிட புறக்கணிப்பதே சிறந்ததாக இருக்கும் வழக்கங்கள் மற்றும் சட்டங்களுக்காகக் கூறப்பட்டது. ஆனால் இந்தியத் தேர்தல் சூழலில், குறியீடுகளையும் சட்டங்களையும் மீறுவது ஒரு வழமையாகிவிட்டது. திட்ட அறிவிப்புகள் அல்லது மானியங்கள் விநியோகம் செய்வதில் MCC-ஐத் தவிர்க்க அரசியல்வாதிகள் புத்திசாலித்தனமான வழிகளைக் கண்டறிகின்றனர்.


பண அரசியல் (Cash politics)


சமீபத்திய உதாரணம், ஆகஸ்ட் 2025-ல் பீகாரில் தொடங்கப்பட்ட முதலமைச்சரின் மகளிர் வேலை வாய்ப்பு திட்டம்  (Mukhyamantri Mahila Rojgar Yojana (MMRY)) ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் சுயதொழில் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளுக்காக ரூ.10,000 மானியமாகப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார். செப்டம்பர் 26, 2025 அன்று பிரதமர் மானியத்தை 75 லட்சம் பெண்களுக்கு மாற்றியதன் மூலம் இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அக்டோபர் முதல் வாராந்திர தவணைகள் பயனாளிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட தவணை அக்டோபர் 31 அன்றும், அடுத்த தவணைத் தொகை நவம்பர் 7 அன்றும் மாற்றப்பட்டது. மாநிலத்திற்கு நிதிச் சுமையை ஏற்படுத்தினாலும், ஆதரவற்ற மற்றும் ஏழைப் பெண்களுக்கு (underprivileged and needy women) ஒரு முறை பணப் பரிமாற்றம் செய்வது மிகவும் தேவையான உதவியை வழங்குகிறது.


இருப்பினும், தேர்தல்கள் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவிருக்கும் நிலையில், இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை (MCC) உண்மையில் மீறுவதாகவும், நேரடி பண மாற்றங்கள் மூலம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்காளர்களை பாதிக்கும் வகையில் செயல்படுவதாகவும் உள்ளது என்ற விமர்சனம் செல்லுபடியாகும். தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட ஒரு திட்டத்தின் பெயரில் தஞ்சம் அடைவது சரியாகத் தெரியவில்லை.


தேர்தல்களுக்கு முன்பு புதிய திட்டங்களை அறிவிப்பது மூலம் மாதிரி நடத்தை விதிளை மீறுவது இதற்கு முன்பே நடந்துள்ளது. மத்திய அரசும், மாநில அரசுகளும், அனைத்து அரசியல் கட்சிகளும் இதனை செய்துள்ளன. ஆனால், முதலமைச்சரின் மகளிர் வேலை வாய்ப்பு திட்டம் (Mukhyamantri Mahila Rojgar Yojana (MMRY)) இந்த விதி மீறுவதைவிட புதிய மோசமான நிலைக்கு கொண்டு செல்கிறது.


போலித்தனத்தை நிறுத்துக (Stop the sham)


2013-ஆம் ஆண்டில், பணியாளர், பொது குறைகள், சட்டம் மற்றும் நீதிக்கான நிலைக்குழு, மாதிரி நடத்தை விதியை சட்டப்பூர்வமாக இணைக்க பரிந்துரைத்தது. இருப்பினும், தேர்தல்கள் 45 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் நீதித்துறை நடவடிக்கைகள் (judicial proceedings) அதிக நேரம் எடுக்கும் என்பதால் தேர்தல் ஆணையம் இதற்கு ஆதரவாக இல்லை.


மாதிரி நடத்தை விதியின் இத்தகைய வெளிப்படையான மீறல்களை எழுத்துப்பூர்வமாக இல்லாவிட்டாலும், மனப்பூர்வமாகக் கண்டுகொள்ளாமல் இருந்ததற்காக தேர்தல் ஆணையத்தின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், தேர்தல் சட்டங்களைச் சுற்றி வேலை செய்வதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிக்கும் நமது அரசியல் தலைவர்களின் அரசியல் தந்திர மதிநுட்ப திறனைக் (Machiavellian ability) கருத்தில் கொண்டு, அத்தகைய நடைமுறைகளைத் தடுப்பதில் இருக்கும் நேர்மையான முயற்சிகளும் மிகவும் கடினமானதாக இருக்கும்.


நல்ல சட்டங்களை இயற்றுவதைவிட மோசமான சட்டங்களை ஒழிப்பது மிகவும் முக்கியம் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் Calvin Coolidge கூறினார். அரசாங்கத் திட்டங்கள் மற்றும் திட்டங்களைக் கையாளும் மாதிரி நடத்தை விதியின் பெரும்பாலான பகுதிகளுக்கு இதைப் பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கலாம். தேர்தல் பிரச்சார விதிகளை மீறினால், தேர்தல் ஆணையம் தனது தற்போதைய அதிகாரங்களைப் பயன்படுத்தி அதை சரியாக சமாளிக்க முடியும்.


இருப்பினும், தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு புதிய திட்டங்கள் அல்லது நிதி மானியங்கள் எதுவும் வழங்கக்கூடாது என்று விதிக்கும் மாதிரி நடத்தை விதியின் வழிகாட்டுதல்களை ரத்து செய்ய முடியும். ஏனெனில், அவை பின்பற்றப்படுவதைவிட உள்நோக்கத்தில் அதிகமாக மீறப்படுகின்றன.


மாதிரி நடத்தை விதிகள் என்றால் என்ன?


லோக்சபா மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான ஒரே நேரத் தேர்தல்களை நடத்துவதற்கான வாதங்களில் ஒன்று, ஒவ்வொரு ஆண்டும் பல தேர்தல்கள் நடைபெறுவதால் ஏற்படும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் (MCC) புதிய அரசு திட்டங்கள் மற்றும் திட்டங்களை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் தாக்கத்தை குறைப்பது என்பதாகும். மாதிரி நடத்தை விதிகளில் இந்த விதிகளை நீக்குவது, ஒரே நேரத் தேர்தல்களுக்கு ஆதரவான வாதங்களில் குறைந்தபட்சம் ஒரு அபத்தமான காரணத்தை குறைக்கும்.


ரங்கராஜன் ஆர் ஒரு முன்னாள் இந்திய ஆட்சி பணி அதிகாரி மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட அரசியல். பற்றிய கோர்ஸ்வேர் என்ற புத்தகத்தின் ஆசிரியர். 



Original article:

Share:

இந்தியாவில் நீதிமன்ற அவமதிப்பு என்றால் என்ன? -சி.பி.பி. ஸ்ரீவாஸ்தவா

 அரசியலமைப்புச் சட்டம் பதிவு நீதிமன்றங்களை (courts of record) எவ்வாறு வரையறுக்கிறது? நீதிமன்ற அவமதிப்பின் இரண்டு வகைகள் என்ன?


நமது நாட்டின் தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக அவமதிப்பு மற்றும் தவறான  கருத்துக்கள் சொல்லப்பட்டதாக சமீபத்தில் ஏற்பட்ட சர்ச்சை புருவங்களை உயர்த்தியது மட்டுமல்லாமல், இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் 'அதிகாரத்தை' குறைக்கும் செயலாகவும் கருதப்படலாம். மேலும், இத்தகைய கருத்துக்கள் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படுவது நீதி நிர்வாகத்தில் தலையிடும் மற்றும் தடைசெய்யும் செயலாகவும் பார்க்கப்படலாம். இதன்மூலம் அரசியலமைப்பு நெறிமுறையின் (constitutional morality) கட்டமைப்பை நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது போன்ற காரணிகள் அவமதிப்பு நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அடிப்படையாக இருந்தது.


அவமதிப்பை புரிந்துகொள்வது


'நீதிமன்ற அவமதிப்பு' (contempt of court) என்ற சொல் அரசியலமைப்பு சட்டம் 19(2)-ல் அடிப்படை சுதந்திரங்களுக்கு நியாயமான கட்டுப்பாடுகளை (grounds for imposing reasonable restriction) விதிப்பதற்கான காரணங்களில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இத்தகைய நடவடிக்கைகளை எவ்வாறு தொடங்குவது என்பது குறித்த வழிகாட்டுதல்களை அரசியலமைப்பு வழங்கவில்லை. இந்தியாவில், உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் முறையே அரசியலமைப்பு சட்டம் 129 மற்றும் 215-ன் கீழ் பதிவுச் சான்று கொண்ட நீதிமன்றங்களாக (courts of record) உள்ளன. பதிவு நீதிமன்றம் என்பது அதன் தீர்ப்புகள் எதிர்கால குறிப்புகளுக்காக பாதுகாக்கப்படும் ஒன்றாகும் மற்றும் இயல்பாகவே அதன் அவமதிப்புக்கு தண்டனை விதிக்கும் அதிகாரமும் கொண்டது. இந்த மறைமுகமான அரசியலமைப்பு விதி, 1971-ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தில் (Contempt of Court Act) விரிவாக விளக்கப்பட்டுள்ளது.


இந்த சட்டம் அவமதிப்பை குடிமை (civil) மற்றும் குற்றவியல் (criminal) என வகைப்படுத்துகிறது. சட்டத்தின் பிரிவு 2(b) குடிமை அவமதிப்பை (civil contempt) ஒரு நீதிமன்றத்தின் எந்தவொரு தீர்ப்பு, ஆணை, வழிகாட்டுதல், ஆணை, மனு அல்லது பிற நடைமுறைகளுக்கு வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் இருப்பது நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியை வேண்டுமென்றே மீறுவது என்று வரையறுக்கிறது. மறுபுறம், குற்றவியல் அவமதிப்பு சட்டத்தின் பிரிவு 2(c)-ல் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீதிமன்றத்தை மரியாதையின்றி நடத்துவது அல்லது அதன் வேலைக்கு பாதிப்பை ஏற்படுத்துவது. இதை பேசுவது, எழுதுவது, சின்னங்களைக் காட்டுவது அல்லது வேறு எந்த முறையிலும் செய்யலாம். அதாவது, 


  1. எந்த ஒரு நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைப்பது அல்லது அவமதிப்பது.


  1. எந்த ஒரு வழக்கின் முறையான நடைமுறையை பாதிக்க அல்லது அதில் தலையீடு செய்ய முயற்சிப்பது.


  1. நீதிமன்றத்தின் நிர்வாகத்தை வேறு எந்த விதத்திலும் தலையிடுகிறது அல்லது தலையிட முனைவது. 


இது போன்ற காரணிகள் அவமதிப்பு என்பது வெறும் அவமரியாதையிலிருந்து வேறுபட்டது என்பதை தெளிவுபடுத்துகிறது.


இது நீதி அமைப்பின் செயல்பாட்டில் கீழ்ப்படியாமை மற்றும் சீர்குலைவை உள்ளடக்குவதற்கு அப்பாற்பட்டது. சட்டப்படி, உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து (suo moto) நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடங்கலாம். என்றும், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் அல்லது மாநில தலைமை வழக்கறிஞர் ஒப்புதலை தாக்கல் செய்யப்பட்ட மனு பெற்றிருந்தால், மூன்றாம் தரப்பினராலும் இது நீதிமன்ற அவமதிப்பு போன்ற தொடங்கப்படலாம் என்றும் கூறுகிறது.





விமர்சன முறை


இப்போது இது ஒரு நிலைத்த கொள்கையாக உள்ளது. ஒரு தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கின் நியாயமான விமர்சனம் அவமதிப்பு அல்ல, ஆனால் நியாயமான கருத்துக்கள் எல்லை மீறும்போது அவை அவமதிப்பாகக் கருதப்படலாம் என்று  1952-ஆம் ஆண்டு அஸ்வினி குமார் கோஷ் vs அரபிந்தா போஸ் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், 2002-ஆம் ஆண்டு அனில் ரதன் சர்க்கார் vs ஹிரக் கோஷ் வழக்கில், அவமதிப்புக்கு தண்டனை விதிக்கும் அதிகாரம் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் ஒரு உத்தரவின் தெளிவான மீறல் இருக்கும்போது மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. முக்கியமான வழக்குகளில் ஒன்று 2015-ஆம் ஆண்டு எம். வி. ஜெயராஜன் vs கேரள உயர்நீதிமன்ற வழக்காகும். இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் ஒரு உயர்நீதிமன்ற உத்தரவை விமர்சிக்கும்போது பொது உரையில் தேவையற்ற மொழியைப் பயன்படுத்திய தனிநபருக்கு எதிரான அவமதிப்பை உறுதிப்படுத்தியது. அத்தகைய செயல்கள் நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைக்கும் நீதிமன்ற நிர்வாகத்தை சீர்குலைப்பதற்கும் குற்ற அவமதிப்பாகக் கருதப்படலாம் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. சில நாட்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம், 2025ஆம் ஆண்டு சண்முகம் என்ற லட்சுமிநாராயணன் vs. சென்னை உயர் நீதிமன்ற வழக்கில், நீதிமன்றத்தை அவமதிப்பவர்களுக்கு தண்டனை விதிப்பதன் முக்கிய நோக்கம் நியாயமான செயல்பாட்டை பாதுகாத்து நிலைநிறுத்துவதாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


நீதிமன்றங்களின் செயல்பாடுகளை ஜனநாயக ரீதியாக விமர்சிப்பது தவறான நடவடிக்கை அல்ல; இருப்பினும், நீதித்துறை மாநிலத்தின் முன்னுரிமைகளை நிர்ணயிப்பதில் முக்கிய பொறுப்பை கொண்டிருப்பதால், நீதிமன்றத்தின் தூய்மை பாதுக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மாநிலமும் குடிமக்களும் எந்தவொரு தவறான பிரதிநிதித்துவமும் அவமதிப்பாக மட்டுமல்லாமல், ஜனநாயகக் கொள்கைகள் பாதிக்கப்படும் மற்றும் நியாயமான தீர்ப்புகளை வழங்குவது கடினமாகி விடும்  என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


ஆசிரியர் தில்லியில் உள்ள மேம்பாட்டு ஆட்சியில் பயன்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் (Centre for Applied Research in Governance) தலைவர்.



Original article:

Share:

நிலநடுக்கம் என்பது என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


கரடுமுரடான மலைகளால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தான் பல்வேறு இயற்கை பேரிடர்களுக்கு உள்ளாகிறது. அங்கு, நிலநடுக்கங்கள் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன. சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 560 பேர் இந்த நிலநடுக்கங்களில் இறக்கின்றனர் மற்றும் இதனால் ஏற்படும் சேதங்கள் ஆண்டுதோறும் சுமார் $80 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1990 முதல் 5.0 ரிக்டர் அளவுக்கு மேல் குறைந்தது 355 நிலநடுக்கங்கள் ஆப்கானிஸ்தானைத் தாக்கியுள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.


ஆப்கானிஸ்தான் யூரேசிய கண்டத் தட்டின் (Eurasian tectonic plate) விளிம்பில் அமைந்துள்ளது. இது, இந்திய தட்டுடன் ஒரு எல்லை மீறல் மண்டலத்தைப் (transgression zone) பகிர்ந்து கொள்கிறது. அங்கு, இரண்டும் ஒன்றையொன்று சந்திக்கலாம் அல்லது கடந்து செல்லலாம். மேலும், அதன் தெற்கே உள்ள அரேபியத் தட்டும் இந்தப் பகுதியை பாதிக்கிறது. இவை அனைத்தும் சேர்ந்து, ஆப்கானிஸ்தானை உலகின் மிகவும் கண்டத்தட்டு நகர்வு தீவிரமாக உள்ள பகுதிகளில் (tectonically active areas) ஒன்றை உருவாக்குகிறது.


இந்திய தட்டானது, வடக்கு நோக்கிய நகர்வும் யூரேசிய தட்டுக்கு எதிரான அதன் உந்துதலும் பொதுவாக ஆப்கானிஸ்தானின் ஏராளமான நிலநடுக்கங்களுக்கு காரணமாகின்றன.


கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆப்கானிஸ்தான், குறிப்பாக உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடனான அதன் எல்லைகளில் உள்ள பகுதிகள், குறிப்பாக நிலநடுக்கங்களுக்கு உள்ளாகின்றன.


ஆப்கானிஸ்தானின் மலைகளில் நிலநடுக்கங்கள் ஆபத்தானவையாக இருக்கிறது. அங்கு அவை பெரும்பாலும் நிலச்சரிவுகளை ஏற்படுத்துகின்றன. இது சேதத்தையும் உயிர் இழப்பையும் அதிகரிக்கிறது.


பொதுவாக நாடு எவ்வாறு மீள்தன்மையை உருவாக்க முடியும்? நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் புதிய கட்டமைப்புகளைக் கட்டமைக்கவும், இடிந்து விழும் வாய்ப்புகளைக் குறைக்க பழைய கட்டிடங்களை மறுசீரமைக்கவும் ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.


சரியான நேரத்தில் எச்சரிக்கைகளுக்கு சிறந்த கண்காணிப்பு மற்றும் ஆரம்பகால எச்சரிக்கை அமைப்புகளும் உருவாக்கப்பட வேண்டும். அதேநேரத்தில், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களை இடமாற்றம் செய்ய புவிசார் மற்றும் தொலைநிலை உணர்திறன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பிளவுக்கோடுகளை (fault lines) வரைபடமாக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.


உங்களுக்குத் தெரியுமா? 


பூமியின் மேற்பரப்பின் கீழ், இயக்கம் காரணாமாக ஏற்படும் நிலத்தின் கடுமையான குலுக்கலே நிலநடுக்கம் ஆகும். பூமியின் இரண்டு தொகுதிகள் திடீரென ஒன்றையொன்று கடந்து செல்லும் போது நிலநடுக்கம் நிகழ்கிறது. இது நில அதிர்வு அலைகளின் வடிவத்தில் சேமிக்கப்பட்ட 'மீள் திரிபு' (elastic strain) ஆற்றலை வெளியிடுகிறது. இது பூமி முழுவதும் பரவி நில அதிர்வை ஏற்படுத்துகிறது.


பூமியின் வெளிப்புற அடுக்கு மேலோடு (crust) என்று அழைக்கப்படுகிறது. இது கண்டத்தட்டுகள் (tectonic plates) எனப்படும் பல பெரிய துண்டுகளாக உடைக்கப்பட்டுள்ளது. இந்த தட்டுகளின் விளிம்புகள் தட்டு எல்லைகள் (plate boundaries) என்று அழைக்கப்படுகின்றன. இந்த எல்லைகள் இரண்டு பாறைத் தொகுதிகளுக்கு இடையிலான விரிசல்களான பிளவுகளால் ஆனவை. கண்டத்தட்டுகள் எப்போதும் மெதுவாக நகரும். அவை ஒன்றையொன்று கடந்து சறுக்கி, சில சமயங்களில் மோதுகின்றன. தட்டுகளின் விளிம்புகள் கரடுமுரடாக இருப்பதால், அவை பெரும்பாலும் சிக்கிக் கொள்கின்றன. விளிம்புகள் சிக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில், தட்டின் மீதமுள்ள பகுதி தொடர்ந்து நகர்கிறது.


ஒரு நிலநடுக்கமானது, ஒரு கண்டத்தட்டின் விளிம்புகள் திடீரென ஒரு பிளவு கோட்டில் நழுவும் அளவுக்கு நகரும்போது ஏற்படுகிறது. பூமியின் உள்ளே நிலநடுக்கம் தொடங்கும் புள்ளி குவியப்புள்ளி (hypocenter) என்று அழைக்கப்படுகிறது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (United States Geological Survey (USGS)) விளக்குகிறது. மேற்பரப்பில் அதற்கு நேர் மேலே உள்ள புள்ளி மையப்புள்ளி (epicenter) என்று அழைக்கப்படுகிறது.


உலகில் ஏழாவது அதிக பூகம்ப அபாயம் கொண்ட நாடாக தரவரிசைப்படுத்தப்பட்ட இந்தியா, நிலநடுக்கத்திற்கு எளிதில் பாதிக்கப்படக்கூடியது. இந்தியாவின் பூகம்ப பாதிப்பானது, பல கண்டத் தட்டுகளின் சங்கமத்தில் அதன் புவியியல் நிலை, அதன் சிக்கலான புவியியல் அமைப்பு, மற்றும் வேகமாக வளரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பரவலான ஒழுங்கற்ற கட்டுமான நடைமுறைகளுடன் தொடர்புடையதால் ஏற்படுகிறது.


இந்தியாவின் நிலப்பரப்பில் சுமார் 59 சதவீதம் மிதமானது முதல் கடுமையான நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) கூறுகிறது. இந்த நிலநடுக்கங்கள் MSK அளவில் VII அல்லது அதற்கு மேல் தீவிரத்தை பதிவு செய்யும் திறன் கொண்டது.



Original article:

Share:

வாழ்நாள் சான்றிதழ் (Jeevan Pramaan) அல்லது டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் என்றால் என்ன? -மனஸ் ஸ்ரீவாஸ்தவா

 ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்நாள் சான்றிதழ் 2025: இந்தியா முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு ஒவ்வொரு நவம்பர் மாதமும் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் அல்லது ‘ஜீவன் பிரமாண்’ அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த செயல்முறை எவ்வாறு டிஜிட்டல் மயமாக்கப்பட்டது?


தற்போதைய செய்தி :


நவம்பர் மாதம் ஓய்வூதியதாரர்களுக்கு மிக முக்கியமான மாதமாகும். ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் மாதத்தில் வாழ்நாள் சான்றிதழைப் (life certificate) பெறுவதற்காக ஏராளமான ஓய்வூதியதாரர்கள் வங்கிகள் அல்லது தபால் அலுவலகங்களில் வரிசையில் நிற்கின்றனர். வாழ்நாள் சான்றிதழ் என்பது ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் நிதி பாதுகாப்பிற்கு பங்களிக்கும் மற்றும் சிக்கல்களை தடுக்கும் மிக முக்கியமான படியாகும். இங்குதான் டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் அல்லது வாழ்நாள் சான்றிதழ் முக்கியத்துவம் பெறுகிறது.


முக்கிய அம்சங்கள்:


1. வாழ்நாள் சான்றிதழ் (Jeevan Pramaan) என்பது ஓய்வூதியதாரர்களுக்கான உயிரிய அளவியல் (biometric) அடிப்படையிலான டிஜிட்டல் சேவையாகும். மத்திய அரசு, மாநில அரசு அல்லது வேறு எந்த அரசு நிறுவனத்தின் ஓய்வூதியதாரர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


2. ஓய்வூதியதாரர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு அவர்களுக்குத் தேவைப்படும் முக்கிய தேவைகளில் ஒன்று, வங்கிகள், தபால் அலுவலகங்கள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய வழங்கும் நிறுவனங்களுக்கு வாழ்நாள் சான்றிதழ்களை சமர்ப்பிப்பதாகும்.


3. இந்த வாழ்நாள் சான்றிதழைப் பெறுவதற்கு, ஓய்வூதியம் பெறும் நபர் ஓய்வூதிய வழங்கும் நிறுவனத்தின் முன் தனிப்பட்ட முறையில் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அல்லது அவர்கள் முன்னர் பணியாற்றிய இடத்தில் வாழ்நாள் சான்றிதழை வழங்கி, அதை வழங்கும் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.


4. இது குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு அதிக சிரமத்தையும் தேவையற்ற பிரச்சனையையும் ஏற்படுத்துகிறது.


5. கூடுதலாக, ஓய்வு பெற்ற பிறகு அதிகளவிலான அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் இருப்பதற்கோ அல்லது பிற காரணங்களுக்காகவோ வேறு இடத்திற்கு இடம்பெயர்கின்றனர். இது நிர்வாக அமைப்பில் பெரிய சிக்கலை (logistical issue) உருவாக்குகிறது.


6. இந்த சவால்களை சமாளிக்க, இந்திய அரசு நவம்பர் 10, 2014 அன்று பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின்கீழ் வாழ்நாள் சான்றிதழ் (Jeevan Pramaan) அல்லது டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. முக அங்கீகாரம் (Face Authentication) 2021-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.


7. இந்தத் திட்டம் முழு வாழ்நாள் சான்றிதழ் செயல்முறையையும் டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் சிக்கல்களைத் தீர்க்கிறது. இது இந்த சான்றிதழ் பெறுவதற்கான செயல்முறையை எளிமைப்படுத்துவதையும் ஓய்வூதியதாரர்களுக்கு சிரமமற்றதாகவும் மிகவும் எளிதானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


8. வாழ்நாள் சான்றிதழ் (டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் பெறுவதற்கு) ஓய்வூதியர் தனிப்பட்ட முறையில் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரியின் (Pension Disbursing Officer) முன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதில்லை. டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை (DLC) வங்கி அல்லது தபால் நிலையத்திற்கு நேரில் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இது டிஜிட்டல் முறையில் அனுப்பப்பட்டு தானாகவே செயலாக்கப்படும். ஒவ்வொரு டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழுக்கும் ஒரு தனித்துவமான வாழ்நாள் சான்றிதழ் அடையாள அட்டை (Pramaan-Id) உள்ளது.


9. வாழ்நாள் சான்றிதழ்/வாழ்நாள் சான்றிதழ் அடையாளம், வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகாது. சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் ஓய்வூதிய ஒப்புதல் ஆணையத்தால் (Pension Sanctioning Authority) குறிப்பிடப்பட்ட விதிகளின்படி உள்ளது. செல்லுபடியாகும் காலம் முடிந்தவுடன் புதிய வாழ்நாள் சான்றிதழ், வாழ்நாள் சான்றிதழ் அடையாள அட்டையை பெற வேண்டும்.


10. ஓய்வூதியம் பெற அனுமதிக்கும் அதிகாரி (Pension Sanctioning Authority (PSA)) வாழ்நாள் சான்றிதழுடன் இணைக்கப்பட்டிருந்தால் அந்த ஓய்வூதியர் வாழ்நாள் சான்றிதழ் பெறுவதற்கு தகுதியுடையவர் ஆவார்.


11. மறுவேலைவாய்ப்பு பெற்ற அல்லது மறுமணம் செய்துகொண்ட ஓய்வூதியதாரர் வாழ்நாள் சான்றிதழ் அதாவது டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைப் பெறத் தகுதியற்றவர் ஆவார். அவர் வழக்கமான முறையில் ஓய்வூதியம் பெற அனுமதிக்கும் அதிகாரியிடம் வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.


12. வாழ்நாள் சான்று அதாவது டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழை உருவாக்குவதற்கு/ பெறுவதற்கு ஆதார் எண் அல்லது ஒரு மெய்நிகர் அடையாள எண்  (Virtual ID) கட்டாயமாகும்.


13. வாழ்நாள் சான்றிதழ் அதாவது டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் கட்டாயமானது அல்ல. ஆனால், ஏற்கனவே இருக்கும் வாழ்க்கை சான்றிதழ் சமர்ப்பிப்பு முறைகளுக்கு கூடுதல் வசதியாகும்.


14. டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் செல்லுபடியாகும் சான்றிதழாகும். இது வருமான வரி சட்டத்தின் (IT Act) கீழ் உள்ளது.


15. மோசடி மற்றும் தவறான பயன்பாட்டைத் தடுக்க, ஓய்வூதிய வழங்கும் நிறுவனங்கள் (Pension Disbursing Agencies (PDAs)) ஓய்வூதியத் தொகையை வரவு வைப்பதற்கு முன் வாழ்க்கை சான்றிதழை சரிபார்க்க வேண்டும் என்று அரசு கட்டாயமாக்கியுள்ளது. நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை ஓய்வூதியதாரர்கள் வாழ்க்கை சான்றிதழ் செயல்முறையை இறுதி செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரை கூடுதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. சான்றிதழைப் பெறுவது கட்டாயமாகும். ஆனால், அவர்கள் நேரில் வரவேண்டிய அவசியமில்லை.


மத்திய ஓய்வூதிய குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு மற்றும் UMANG செயலி


1. மத்திய ஓய்வூதிய குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு (Centralized Pension Grievances Redress And Monitoring System (CPENGRAMS)) என்பது ஒரு இணைய வழியில் கணினிமயமாக்கப்பட்ட அமைப்பாகும். இது ஓய்வூதியதாரர்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதோடு, குறைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்கும் திறம்பட கண்காணிப்பதற்கும் உருவாக்கப்பட்டது. ஓய்வூதியதாரர்கள் தங்கள் குறை தீர்க்கப்படுவதில் திருப்தி அடையவில்லை என்றால், அவர்கள் மேல்முறையீடு செய்யலாம்.


2. தபால், கட்டணமில்லா எண் மற்றும் UMANG செயலி மூலம் குறைகளை பதிவு செய்யலாம்.


3. புதிய தலைமுறை ஆட்சிக்கான ஒருங்கிணைந்த மொபைல் பயன்பாடு (Unified Mobile Application for New-age Governance (UMANG)), எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியா முயற்சியாகும். இது UMANG செயலி, இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உதவி கூட்டாளர் மையங்கள் மூலம் பல அரசாங்க சேவைகளை அணுகக்கூடியதாக மாற்றுவதைக் குறிக்கிறது.


4. வாழ்நாள் சான்றிதழ் அல்லது டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழையும் UMANG செயலி  மூலம் உருவாக்கலாம்.



Original article:

Share:

இந்திய குடியரசின் செயல்பாட்டில் அரசுத் தலைமை வழக்கறிஞர் எங்கனம் முக்கியமானவராக இருக்கிறார்? –கண்ணன் கே

 அரசியலமைப்பு, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரை (Attorney General of India (AGI)) ஒரு தனித்துவமான நிலையில் வைக்கிறது. நமது அரசியலமைப்பு தலைமை வழக்கறிஞரை அரசின் மூன்று அங்கங்களுடனும் தொடர்புகொள்ள உதவுகிறது - அவை நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகும். ஆனால், முதல் சட்ட அலுவலர் (First Law Officer) அரசாங்கத்தின் வழக்கறிஞராக மட்டுமல்லாமல், அரசியலமைப்பின் மாண்பை காப்பவராகவும், சட்டத்தின் ஆட்சியின் (rule of law) முதன்மை பாதுகாவலராகவும் செயல்படுவதில் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறார்?


2021-ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO) பிரிவு 7-ன் கீழ் ஒரு குழந்தையுடனான உடல்ரீதியாக (“skin-to-skin”) தொடர்பு அல்ல, பாலியல் தாக்குதல் குற்றத்தை உருவாக்குவதற்கு மிக முக்கியமான அங்கம் “பாலியல் நோக்கம்” என்று தீர்ப்பளித்தது, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வின் இரு தீர்ப்புகளை அது ரத்து செய்தது.


மிக முக்கியமாக, முன்னாள் இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை அடுத்து இந்த தீர்ப்பு வந்தது. இது இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் தனது அரசியலமைப்பு உரிமைகளை எவ்வாறு பொது நலனை நிலைநிறுத்தவும், குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்யவும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இந்த தீர்ப்பு  எடுத்துக்காட்டுகிறது.


பிரிவு 76(3)-ன் கீழ், இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் போன்ற அனைத்து நீதிமன்றங்களிலும் கருத்து தெரிவிக்கும் உரிமையை (right of audience) பெற்றுள்ளார். இதன் பொருள், இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் அதிகாரப்பூர்வமாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும்போது எந்த நீதிமன்றமும் அவர்களது மனுவை நிராகரிக்க முடியாது. இது அரசின் சட்டநிலையை அனைத்து நீதிமன்றங்களிலும் எப்போதும் பிரதிநிதித்துவப்படுத்தவோ அல்லது தெளிவுபடுத்தவோ முடியும் என்பதை உறுதி செய்கிறது.


குறிப்பிடத்தக்க வகையில், இந்த விதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் அட்டர்னி ஜெனரலுக்கு அனைத்து நீதிமன்றங்களிலும் பேச்சுரிமை உள்ள பிரிட்டிஷ் மரபிலிருந்து பெறப்பட்டது. ஆனால் ‘தலைமை சட்ட ஆலோசகர்’ மற்றும் ‘முதல் சட்ட அதிகாரி’ என்று அடிக்கடி குறிப்பிடப்படும் அரசுத் தலைமை வழக்கறிஞரின் மற்ற உரிமைகள் மற்றும் கடமைகள் என்னவாகும்? அரசுத் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்படுவதற்கான தேவையான தகுதிகள் என்ன, மற்றும் அரசுத் தலைமை வழக்கறிஞருக்கு நிலையான கால அளவு உள்ளதா? அந்த கூற்றை ஆராய்வோம்.

அரசியலமைப்பு எவ்வாறு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரை (Attorney General of India (AGI)) ஒரு தனித்துவமான நிலையில் வைக்கிறது?


இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி அரசியலமைப்பால் உருவாக்கப்பட்டது. 1950ஆம் ஆண்டு  அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்தது. இது புதிதாக உருவான அரசாங்கத்திற்கு நிபுணத்துவ சட்ட ஆலோசனைக்கான அணுகலை உறுதி செய்தது. அவ்வாறு செய்வதன் மூலம், அரசியலமைப்பு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரை ஒரு தனித்துவமான நிலையில் வைக்கிறது. அரசியலமைப்பு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞகருக்கு ஒரு தனித்துவமான அதிகாரத்தை வழங்குகிறது. இது அரசாங்கத்தின் மூன்று கிளைகளான நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்ற அனுமதிக்கிறது.


பிரிவு 88-ன் கீழ், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் இரு சபைகளிலும், அவற்றின் கூட்டு கூட்டங்களிலும் மற்றும் அவர் உறுப்பினராக இருக்கும் எந்தவொரு நாடாளுமன்றக் குழுவிலும் (parliamentary committee), பேசும் மற்றும் நடவடிக்கைகளில் பங்கேற்கும் உரிமையைக் கொண்டுள்ளார். ஆனால், வாக்களிக்கும் உரிமை அவருக்கு வழங்கப்படவில்லை. அரசியலமைப்பு பிரிவு 105-ன் கீழ், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பாதுகாப்புகளையும் (privileges and immunities) வழங்குகிறது.


இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அனைத்து செயல்பாடுகளிலும் முதன்மை வழக்கறிஞர் (Solicitor General) மற்றும் கூடுதல் வழக்கறிஞர்களால் உதவி பெறுகிறார். இருப்பினும். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி மட்டுமே அரசியலமைப்பால் உருவாக்கப்பட்டது. பதவியில் இருக்கும் நீதிபதிகளுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்கும் நபர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு (contempt of court proceedings) அனுமதி வழங்குவதற்கான அல்லது மறுப்பதற்கான அதிகாரமும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் முதன்மை வழக்கறிஞருக்கு வழங்கப்பட்டுள்ளது.


நீதிமன்றங்கள் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அனுமதியின்றி தாமாக முன்வந்து (suo motu) நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கலாம் என்றாலும், ஒரு தனி நபர் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் எழுத்துப்பூர்வ அனுமதியுடன் மட்டுமே அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க முடியும். இவ்வாறு, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தேவையற்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான காவலராகச் செயல்படுகிறார். நீதித்துறை கண்ணியத்தைப் பேச்சுரிமை மற்றும் நியாயமான விமர்சன உரிமையுடன் சமநிலைப்படுத்துகிறார்.


செப்டம்பர் 30, 2022 அன்று கே.கே. வேணுகோபாலுக்குப் பிறகு வந்த இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராக R. வெங்கடரமணி, அக்டோபர் 1 முதல் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டார். நீதிமன்ற நடவடிக்கைகளின்போது இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணியை வீசியதாகக் கூறப்படும் ஒரு வழக்கறிஞர் மீது அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்க ஒப்புதல் அளித்தார். மாற்றாக, சில பொதுநல வழக்குகளில் நடவடிக்கைகளைத் தொடங்க இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் நேரடியாக நீதிமன்றத்தை நாடலாம்.




ஆலோசனை மற்றும் பிரதிநிதித்துவ செயல்பாடுகள்


சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவது அல்லது அனுமதி வழங்குவது தவிர, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மத்திய அரசுக்கு ஒரு முக்கியமான ஆலோசனை மற்றும் தேவையான பிரதிநித்துவதை வழங்குகிறார். ஆலோசனை திறனில், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் குடியரசுத் தலைவரால் தமக்கு குறிப்பிடப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட விவகாரங்களில் அரசுக்கு சட்ட ஆலோசனை வழங்குகிறார். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் உள்ள அனைத்து வழக்குகளிலும், தேவைப்படும்போது உயர் நீதிமன்றங்களிலும் மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.


பிரிவு 143இன் கீழ் குடியரசுத் தலைவரால் செய்யப்படும் எந்தவொரு குறிப்பிலும் (குடியரசுத் தலைவரின் உச்ச நீதிமன்றத்துடன் கலந்தாலோசிக்கும் அதிகாரம்) இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அரசாங்கத்தின் கருத்துகளையும் உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கிறார். அரசியலமைப்பின் பிரிவு 76 குடியரசுத் தலைவருக்கு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரை நியமிக்க அதிகாரம் அளிக்கிறது. அவர் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்க தகுதியானவராக இருக்க வேண்டும். அதன்படி, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் மற்றும் பின்வருவனவற்றைக் கொண்டிருக்க வேண்டும்:


1. குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது


2. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருந்திருக்க வேண்டும் அல்லது


3. குடியரசுத் தலைவரின் கருத்துப்படி ஒரு சிறந்த சட்ட அறிஞராக (eminent jurist) இருக்க வேண்டும்.


மிக உயர்ந்த நீதித்துறை தகுதிகளுக்கான இந்த தேவை பதவியின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் 65 வயதில் ஓய்வு பெறுகிறார்கள் என்றாலும், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஓய்வு பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட வயது எதுவும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


மேலும், மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர், குடியரசுத் தலைவர் விரும்பும் வரை பணியாற்றுவார். நிலையான பதவிக்காலம் இல்லை மேலும், குடியரசுத் தலைவர் அவரது ஊதியத்தையும் (remuneration) தீர்மானிக்கிறார்.


அரசியலமைப்பு எவ்வாறு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் பாரபட்சமற்ற தன்மையை உறுதிசெய்கிறது?


இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் குறிப்பிடத்தக்க மதிப்பையும் சலுகைகளையும் அனுபவித்தாலும், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் பாரபட்சமற்றத் தன்மையை உறுதிசெய்யவும், நலன்சார் முரண்பாடுகளைத் தவிர்க்கவும் சில வரம்புகளை வைத்துள்ளனர். இருப்பினும், கடந்த காலங்களில், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் எப்போதும் முற்றிலும் நடுநிலையாகத் தோன்றாமல் போகலாம் என்ற கவலைகளை உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது.


மேலும், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு பின்வருவன அனுமதிக்கப்படவில்லை:


1. இந்திய அரசுக்கு எதிராக சட்ட ஆலோசனையோ, வழக்காற்றலைக் கையாள்வதோ செய்ய முடியாது.


2. ஒரு வழக்கில் இந்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அல்லது ஆலோசனை வழங்கி வந்தால், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அந்த வழக்கில் வேறு ஒருவருக்கு ஆலோசனை வழங்கவோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது.


3. மேலும், இந்திய அரசாங்கத்தின் அனுமதியின்றி குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பாதுகாக்க முடியாது.


4. இந்திய அரசாங்கத்தின் முன் அனுமதியின்றி எந்த நிறுவனத்திலும் இயக்குநராக நியமனம் செய்யப்படுவதை இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஏற்றுக்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஒரு முழுநேர அரசு ஊழியர் அல்ல என்பதை நினைவில் கொள்வது முக்கியம். எனவே இந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அவரால் தனியார் சட்டப் பயிற்சியில் ஈடுபட முடியும். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மத்திய அமைச்சரவையின் உறுப்பினர் அல்ல. மேலும், சட்ட விவகாரங்களின் அரசியல் மற்றும் நிர்வாக அம்சங்கள் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரால் அல்ல, சட்டம் மற்றும் நீதி அமைச்சரால் கையாளப்படுகின்றன. இந்த அமைப்பு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் நடுநிலையைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது.


இந்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கான சவால்கள்


இருப்பினும், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு பல்வேறு சமாளிக்க வேண்டிய சவால்கள் உள்ளன. இந்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு மிகவும் குறிப்பிடத்தக்க சவால்களில் ஒன்று, நிர்வாகத்திற்கான விசுவாசத்திற்கும் அரசியலமைப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநிறுத்தும் கடமைக்கும் இடையே சரியான சமநிலையை ஏற்படுத்துவதாகும். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டாலும், அமைச்சரவை ராஜினாமா செய்யும்போது அல்லது புதிய அரசாங்கம் பதவியேற்கும்போது இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்  ராஜினாமா செய்கிறார் என்ற தொடர்ச்சியான மரபு உள்ளது.


மேலும், நிலையான பதவிக்காலம் இல்லாதது இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் சுதந்திரத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், இது சில சமயங்களில் அவரை அரசாங்க செல்வாக்கிற்கு ஆளாக்கும். இருப்பினும், நியமன நேரத்தில் நிலையான காலத்தைக் குறிப்பிடும் சமீபத்திய நடைமுறை - உதாரணமாக, R. வெங்கடரமணியின் ஆரம்ப மூன்று ஆண்டு காலம் (2022-2025), மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது - ஒரு முற்போக்கான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.


இந்த வரம்புகள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், இந்திய குடியரசின் செயல்பாட்டில் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம், அரசாங்கம் அரசியலமைப்பையும் சட்டத்தையும் பின்பற்றுவதை உறுதிசெய்து, அதன் அரசியலமைப்பு ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கிறது. அரசாங்கத்தின் உயர் சட்ட பிரதிநிதியாக  இருக்கும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் அரசாங்கத்தின் குரலாக செயல்படுகிறார்.


மேலும், நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்பதன் மூலம், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நிர்வாகத்திற்கும் சட்டமன்றத்திற்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறார் மற்றும் நிபுணத்துவ சட்ட நுண்ணறிவுகளை வழங்குகிறார். இறுதியில், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நிர்வாக கொள்கை மற்றும் நீதித்துறை மறுஆய்வின் (judicial review) மற்றொரு வழியில் நிற்கிறார். மத்திய அரசாங்கத்தின் வழக்கறிஞராக மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் அரசியலமைப்பு மாண்பை பாதுகாப்பவராகவும், உச்சநீதிமன்றத்தில் சட்டத்தின் ஆட்சியின் முதன்மை பாதுகாவலராகவும் பணியாற்றி வருகிறார்.


கண்ணன். K, ஹைதராபாத்தில் உள்ள பொருளாதார மற்றும் சமூக ஆய்வுகள் மையத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.



Original article:

Share: