வெப்பமண்டலப் புயல்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடாக இந்தியா இருப்பதற்கான காரணம் என்ன? -அபினவ் ராய்

 இந்திய துணைக்கண்டம் ஏன் அடிக்கடி வெப்பமண்டல புயல்களை  எதிர்கொள்கிறது? காலநிலை மாற்றம் மற்றும் கடல் மட்ட உயர்வு இந்தியாவின் புயல் பாதிப்பை எவ்வாறு அதிகரிக்கிறது? சமீபத்திய ஆண்டுகளில், மேம்படுத்தப்பட்ட முன்னறிவிப்பு மற்றும் முன்னேற்பாடுகள், புயல் தொடர்பான உயிரிழப்புகளைக் குறைத்துள்ளதா?


கடந்த மாதம் ஆந்திரப் பிரதேசக் கடற்கரையில் மோந்தா புயல் மணிக்கு சுமார் 100 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்ததது. புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக பயிர்கள், மின்சாரம், சாலைகள் மற்றும் போக்குவரத்து கடுமையாகச் சேதமடைந்தன.


ஆந்திரப் பிரதேசத்தில் மட்டும் 87,000 ஹெக்டேருக்கு மேல் பயிர்கள் சேதமடைந்தன.  மேலும், ஒடிசா, தமிழ்நாடு, தெலங்கானா, பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்த சேதம் 6,384 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரப் பிரதேச மாநிலம் ஒன்றிய அரசிடம் இருந்து உடனடி நிவாரணமாக 901.4 கோடி ரூபாயைக் கோரியுள்ளது.


தீவிர வானிலை நிகழ்வுகள் (வெப்ப அலைகள், குளிர் அலைகள், வெப்பமண்டல புயல்கள், வெள்ளம், மின்னல், கனமழை போன்றவை) குறித்த ஆய்வின்படி, 1970–2019 ஆண்டுகளுக்கு இடையில் நிகழ்ந்த உயிரிழப்புகளில் வெப்பமண்டல புயல்கள் மட்டுமே 28.6 சதவிகிதத்திற்குக் காரணமாக இருந்துள்ளன. 'இந்தியாவில் தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் நீண்டகால மாற்றங்கள் குறித்த ஒரு மதிப்பீடு: 1970-2019 என்ற தலைப்பிலான 50 ஆண்டுகால தரவுகளின் ஆய்வு, இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (India Meteorological Department (IMD)) தரவுகளை அடிப்படையாகக் கொண்டது.


புயல் என்றால் என்ன, அதன் பல்வேறு வகைகள், உருவாக்கம் மற்றும் வெப்பமண்டல புயல்களுக்கு இந்தியா ஏன் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது என்பதைப் பற்றிப் புரிந்துகொள்வோம்.


புயல்களும் அவற்றின் வகைகளும்


புயல்கள் என்பவை ஒருவித வளிமண்டல இடையூறுகள் ஆகும். இது குறைந்த காற்று அழுத்த மையத்தைச் சுற்றிச் சுழல்கிறது. வெப்பமண்டலப் புயல்கள் உருவாவதற்கும், அவற்றின் தீவிரம் அதிகரிப்பதற்கும் தேவையான ஆற்றலின் ஆதாரம், வெப்பமான கடல் நீரால் உருவாகும் வெப்பமும் ஈரப்பதமும் ஆகும்.


வட கோளத்தில் (Northern Hemisphere), காற்றின் சுழற்சி திசை எதிர் கடிகார திசையில் இருக்கும், அதேசமயம் தென் கோளத்தில் (Southern Hemisphere), அது கடிகார திசையில் சுழல்கிறது. அவற்றின் இருப்பிடத்தின் அடிப்படையில், புயல்கள் வெப்பமண்டலப் புயல்கள் என்றும் (வெப்பமான வெப்பமண்டலக் கடலில் உருவாகுபவை), வெப்பமண்டலத்திற்கு அப்பாற்பட்ட புயல்கள் என்றும் (மிதவெப்ப மண்டலம் மற்றும் உயர்-அட்சரேகைப் பகுதிகளில் ஏற்படுபவை) வகைப்படுத்தப்படுகின்றன.


வெப்பமண்டலப் புயல்கள் உலகெங்கிலும் வெவ்வேறு பெயர்களில் அறியப்படுகின்றன. அட்லாண்டிக்கில் சூறாவளிகள் (Hurricanes), சீனாவில் டைஃபூன்கள் (Typhoons), மற்றும் ஆஸ்திரேலியாவில் வில்லி-வில்லிஸ் (Willy-willies) என்று அழைக்கப்படுகின்றன. இந்திய நிலப்பரப்பின் பெரும்பகுதி மற்றும் சுற்றியுள்ள வட இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கோடுக்கும் (equator) கடக ரேகைக்கும் (tropic of cancer) இடையில் அமைந்துள்ளதால் மிகவும் பேரழிவு தரும் வெப்பமண்டலப் புயல்களுக்கு ஆளாகிறது.


வெப்பமண்டல புயல் எவ்வாறு உருவாகிறது?


வெப்பமண்டலப் புயல்களானது பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள (5°-20° வடக்கு மற்றும் தெற்கு அட்சரேகைகள்) வெப்பமான கடல்களில் உருவாகின்றன. இவை உருவாகப்  பின்வரும் நிபந்தனைகள் தேவைப்படுகின்றன:


1. கடல் மேற்பரப்பு வெப்பநிலை (Sea Surface Temperature (SST)) சுமார் 27℃ அல்லது அதற்கு மேல் (60–70 மீட்டர் ஆழம் வரை) இருத்தல்.


2. வெப்பமான மற்றும் ஈரப்பதமான காற்றின் போதுமான விநியோகம்.


3. கோரியோலிஸ் விசை (Coriolis force) (வடக்கு அரைக்கோளத்தில் குறைந்த அழுத்த அமைப்புகளில் காற்றின் எதிரெதிர் கடிகார திசைக்கு இதுவே காரணமாகும்).


4. ஏற்கனவே இருக்கும் பலவீனமான குறைந்த அழுத்தப் பகுதி.


மேற்பரப்பு தொந்தரவுக்கு மேலே 9-15 கி.மீ உயரத்தில் எதிர்ச் சுழல் ஓட்டம் (anticyclonic circulation) இருக்கும்போது இந்தப் புயல்கள் மேலும் தீவிரமடைகின்றன. இது காற்றின் மேல்நோக்கிய இயக்கத்தை விரைவுபடுத்துகிறது. மேலும், குறைந்த அழுத்த அமைப்பை ஆழப்படுத்துகிறது.


புயலின் ‘கண்’ என்றால் என்ன?


புயலின் மையம் மிகக் குறைந்த அழுத்தம், அமைதியான மற்றும் கீழ்நோக்கி இறங்கும் காற்று ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இந்த பகுதி புயலின் ‘கண்’  என்றும் அழைக்கப்படுகிறது. இதைச் சுற்றி 'கண் சுவர்' (eye wall) உள்ளது. அங்கு வெப்பமான சுழல் காற்று மேல்நோக்கி நகர்ந்து, வளிமண்டல அடுக்கின் உச்சத்தை (tropopause) அடைகிறது.


புயல்கள் கடல்களின் மீது தோன்றி, பொதுவாக கடற்கரையை அடையும்போது, அது ‘கரையிறங்குதல்’ (landfall) என்று குறிப்பிடப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கரையிறங்குதல் என்பது, நீர்நிலைக்கு மேலே இருந்த வெப்பமண்டல புயல் நிலப்பரப்புக்கு வருவது ஆகும்.


கடல்களின் மீது, இந்தப் புயல்கள் தொடர்ச்சியான ஈரப்பதம் கிடைப்பதால், அதிக வீரியம் பெற்று, மிக அதிவேகத்துடன் மணிக்கு 180-400 கிமீ வேகத்தில்  நகர்கின்றன. இருப்பினும், நிலப்பகுதிக்கு வந்த பிறகு, ஈரப்பதம் விநியோகம் துண்டிக்கப்படுவதால், அவை உள்நாட்டுப் பகுதிகளுக்குள் நகரும்போது படிப்படியாகச் சிதறி மறைகின்றன. இதனால்தான் பெரும்பாலான பேரழிவு தரும் விளைவுகள் பெரும்பாலும் கடலோரப் பகுதிகளில் ஏற்படுகின்றன.


இந்தப் புயல்களின் சராசரி விட்டம் 600 முதல் 1200 கி.மீ. வரை இருக்கும். இந்தப் புயல்கள் தங்கள் வலிமைக்கு ஏற்ப மாறுபட்ட வேகங்களில் முன்னேறுகின்றன. பலவீனமான புயல்கள் சுமார் 32 கி.மீ/மணி வேகத்தில் நகர்கின்றன, அதேசமயம் புயல்கள் 180 கி.மீ/மணி அல்லது அதற்கு மேல் வேகத்தை அடையலாம். தொடர்ச்சியான காற்றின் வேகம் 34 நாட்ஸ் (62 கி.மீ/மணி) அல்லது அதற்கு மேல் இருக்கும்போது, அந்தச் புயலுக்கு ஒரு தனித்துவமான பெயர் வழங்கப்படும்.


வெப்பமண்டல புயல்களின் தாக்கம்


இந்த வளிமண்டலக் குழப்பங்கள் வெவ்வேறு அட்சரேகை மண்டலங்களுக்கு இடையில் வெப்பம், ஈரப்பதம் மற்றும் மழையின் பரிமாற்றத்தில் முக்கியப் பங்கை வகிக்கின்றன. இந்தியாவில், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் இருந்து உருவாகும் சூறாவளிகள் பெரும்பாலும் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் வானிலை நிலைகளை பாதிக்கின்றன.


அவை அதிவேகமான காற்று, மிக அதிக கனமழை மற்றும் கடலில் ஏற்படும் புயல் அலைகள் (கடல் அலைகள்) மூலம் கடுமையான மற்றும் பெரிய அளவிலான அழிவை ஏற்படுத்தலாம். இந்தச் புயல்கள் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தலாம், மேலும் கட்டிடங்கள், போக்குவரத்து அமைப்புகள், நீர் மற்றும் மின்சாரம் வழங்கல் உட்பட அடிப்படை வசதிகளுக்கு கடுமையான சேதத்தை விளைவிக்கிறது.


இந்தக் கடல்-வளிமண்டல இடைவினைகள் இருவழிச் செயல்முறைகளாகும். வெப்பமான கடல்கள் புயல்கள் தோன்றுவதற்கும், தீவிரமாவதற்கும் சாதகமான சூழ்நிலையை வழங்குகின்றன. இந்தச் புயல்கள் பின்னர் ஆழமான அடுக்குகளிலிருந்து குளிர்ச்சியான மற்றும் அதிக உவர்ப்புள்ள நீரை கடலின் மேற்பரப்புக்கு இழுத்து வருகின்றன. புயல்களால் தூண்டப்படும் இந்த குளிர்ச்சியடைதல் புயலின் வேகம், காற்றின் சக்தி, கடல் அடுக்குகளின் அமைப்பு மற்றும் அடித்தள நிலைமைகளைப் பொறுத்து அமைகின்றது.


பெருங்கடல்களுக்கும் வளிமண்டலத்துக்கும் இடையிலான இந்தத் தொடர்பு, சூறாவளிகள் கடல்வாழ் உற்பத்தித்திறனையும் கார்பன் சுழற்சியையும் பாதிப்பதால், கடலில் இருந்து உயிரியல் ரீதியான பதிலாக பெரிய குளோரோபில் பூக்கும் (chlorophyll blooms)  நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது.


குளோரோபில் பூக்கும் நிகழ்வு (chlorophyll blooms) என்பது கடல் நீரில் பைட்டோபிளாங்டன் எனப்படும் நுண்ணிய தாவர உயிரிகள் திடீரென மிக அதிக அளவில் பெருகுவதாகும். இதனால் கடல் நீரின் நிறம் பச்சையாகவோ அல்லது வேறு நிறங்களிலோ (சிவப்பு, பழுப்பு) தெரியும். இதை விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் படங்களிலும் காணலாம்.


இந்தியாவின் அதிகரித்து வரும் பாதிப்புகள்


இந்தியா ஒரு நீண்ட கடற்கரை, ஆழமற்ற கண்டத் திட்டு (continental shelf), அதிக மக்கள் தொகை அடர்த்தி மற்றும் சமதள கடலோரப் பகுதி ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், இது வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவாகும் வெப்பமண்டலப் புயல்களுக்கு ஆளாகிறது. வடக்கு இந்தியப் பெருங்கடல், வெப்பமண்டலச் புயல்களால் பெரும்பாலும் உருவாகும் உலகின் ஆறு முக்கியப் பகுதிகளில் ஒன்றாகும்.


இந்தியாவின் புவியியல் பரப்பளவில் கிட்டத்தட்ட 8 சதவீதமும், அதில் உள்ள 13 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் ஆண்டுதோறும் கடுமையான வெப்பமண்டலப் புயல்களால் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல்மட்ட உயர்வு காரணமாக, கடலோர மக்களுக்குப் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. 


வரலாற்று ரீதியாக, இந்தப் புயல்கள், உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதிப்பதுடன், சொத்துக்களுக்குக் கடுமையான சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சமீபத்திய வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க பேரழிவுகளில் ஒன்று, 1999-ஆம் ஆண்டில்  அக்டோபர் 28-29-ஆம் தேதிகளில் ஒடிசா மாநிலத்தை தாக்கிய  ‘சூப்பர்’ புயலால் ஏற்பட்ட பாதிப்பு ஆகும். இந்தப் புயல் 10,000 உயிர்களைப் பலிகொண்டது. 2,75,000 வீடுகளைச் சேதப்படுத்தியது, 1.67 மில்லியனுக்கும் அதிகமான மக்களை வீடற்றவர்களாக ஆக்கியதுடன், அவர்களின் வாழ்வாதாரங்களாக இருந்த கால்நடைகளையும் பலிகொண்டது.


உலகளாவிய வெப்பமண்டலப் புயல்களில், சுமார் 6-7 சதவீதம் வடக்கு இந்தியப் பெருங்கடலில் ஆண்டுதோறும் ஏற்படுகின்றன. அவற்றில் சில புயல்கள்  மிகவும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியவை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை ஒப்பிடும்போது, அரபிக் கடலின் கடல் மேற்பரப்பு வெப்பநிலையில் 1.2–1.4°C அதிகரிப்பை ஆய்வுகள் குறிக்கின்றன. இந்த வெப்பநிலை உயர்வு சூறாவளிகள் விரைவாகத் தீவிரமடைவதற்குச் சாதகமாக உள்ளது. இந்தத் தீவிரத்தினால், பெரும்பாலும் கரையில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கும் பேரிடர் மேலாண்மைக் குழுவுக்குப்  போதுமான காலஅவாகசம் கிடைப்பதில்லை.


தயார்நிலை மற்றும் தணிப்பு உத்திகள்


2005-ஆம் ஆண்டில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) நிறுவப்படுவதற்கு முன்பே 1999-ஆம் ஆண்டு ஏற்பட்ட ‘சூப்பர்’ புயலின் பாதிப்புக்குப் பிறகு, ஒடிசா மாநிலம், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தை நிறுவியது குறிப்பிடத்தக்கது. கடலோர மக்களின் பாதிப்பைக் குறைக்கும் வகையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (NDMA) 2011-ஆம் ஆண்டு தேசிய புயல் அபாயக் குறைப்புத் திட்டம் (National Cyclone Risk Mitigation Project (NCRMP)) தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேம்பட்ட காலநிலை முன்னறிவிப்பு மற்றும் சிறந்த தயார்நிலை நடவடிக்கைகள் ஆகியவை அண்மைக் காலங்களில் நிகழந்ததைப் போல, உயிரிழப்புகளை திறம்பட குறைக்க உதவியுள்ளன. புயல் பாதை மற்றும் கரையைக் கடக்கும் இடங்களுக்கான முன்னறிவிப்பு திறன்களும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளன. இருப்பினும், புயல்கள் தீவிரமடைவதைத் துல்லியமாக முன்னறிவிப்பது, குறிப்பாக அது தீவிரமாக இருக்கும்போது, போதுமான கால அவகாசத்துடன் முன்னறிவிப்பது இன்னமும் சவாலாக இருந்து வருகிறது. இதற்குக் காரணம் முதன்மையாகக் கடலில் நேரடியாக மேற்கொள்ளப்படும் (in-situ) கண்காணிப்புகளில் உள்ள இடைவெளிகளே ஆகும் என்கின்றனர். 


தயார்நிலை மற்றும் தணிப்பு உத்திகளை மேலும் மேம்படுத்த, வெளியேற்றத்தை மையமாகக் கொண்ட பதிலளிப்புகளில் இருந்து, தாங்கும் திறனை  நோக்கிய அமைப்புகளுக்கு விரைவான மாற்றம் தேவைப்படுகிறது. பேரிடர் காலங்களில் சமூகங்களே முதல் பதிலளிப்பாளர்களாக இருப்பதால், அவர்களுக்கான திறன் மேம்பாடும் மிக முக்கியமாகிறது. முன்கூட்டிய எச்சரிக்கை பரவல் அமைப்பு (Early Warning Dissemination System (EWDS)) மற்றும் சமூக அடிப்படையிலான பேரிடர் ஆபத்து மேலாண்மை (Community Based Disaster Risk Management (CBDRM)) நடைமுறைகளை ஊக்குவிக்கும் கொள்கைகள் புயல் கரையை கடப்பதற்கு முன்பு சரியான நேரத்தில் வெளியேற்றத்திற்கு மேலும் உதவும் என்று கூறப்படுகிறது.


புயல் அபாய குறைப்பு உள்கட்டமைப்பானது (Cyclone Risk Mitigation Infrastructure (CRMI)), பல்நோக்கு புயல் தங்குமிடங்கள் (multi-purpose cyclone shelters (MPCS)), சாலைகள், பாலங்கள், நிலத்தடி மின்சார கேபிள் பதித்தல் மற்றும் உப்புக் காற்றைத் தடுக்கும் தடுப்பணைகள் (saline embankments) ஆகியவற்றைக் கட்டுவதற்கான முதலீடுகள் மூலம் கடலோர சமூகங்களின் தயார் நிலையையும் பாதிப்பைக் குறைக்கும் தன்மையையும் மேம்படுத்துகிறது. ஒரு முழுமையான புயல் பேரிடர் மேலாண்மை அணுகுமுறை, பேரிடர் தயார்நிலை மற்றும் அபாயக் குறைப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் முன்முயற்சியுடன் செயல்படுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. 



Original article:

Share:

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என் முக்கியமானதாகிறது? -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி : 


2025ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை மாலை (நவம்பர் 11) முடிவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகள், 243 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்களை பாஜக மற்றும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும் என்று கணித்துள்ளன. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி 100 இடங்கள் அல்லது அதற்கும் குறைவாகவே பெறும் என்றும் அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.


முக்கிய அம்சங்கள்:


1. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே முக்கிய ஊடக நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் கருத்துக்கணிப்புகள் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆகும். இந்த கருத்துக்கணிப்புகள் வாக்காளர்களின் உணர்வு மற்றும் வளர்ந்துவரும் போக்குகளின் ஆரம்ப அறிகுறியைக் காட்டுகின்றன. இருப்பினும், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் துல்லியமானவை அல்ல. மேலும், அவற்றை இறுதி முடிவுகளாகக் கருதக்கூடாது. கடந்த சில ஆண்டுகளாக, பல வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறாக இருந்துள்ளன.


2. ஆக்சிஸ் மை இந்தியா, சிவோட்டர், ஐபிஎஸ்ஓஎஸ், ஜன் கி பாத் மற்றும் டுடேஸ் சாணக்யா போன்ற பல தனியார் நிறுவனங்கள், தொலைக்காட்சி சேனல்கள், அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் மூலம் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்தி, தங்கள் கணிப்புகளை வெளியிடுகின்றன.


3. இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) வழிகாட்டுதல்களின்படி, வாக்களிப்பு செயல்முறை முழுமையாக முடியும்வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட முடியாது. இதுவரை வாக்களிக்காத மக்களை அவை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இது செய்யப்படுகிறது.


4.வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், கருத்துக்கணிப்புகளிலிருந்து வேறுபட்டவை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். தேர்தலுக்கு முன்பே கருத்துக்கணிப்புகள் நடத்தப்படுகின்றன. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் கருத்துக்கணிப்புகள் வாக்காளர்கள்மீது "தவறான செல்வாக்கை" ஏற்படுத்துவதால் அவற்றைத் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த காலங்களில் எழுந்துள்ளன.


5. 1997 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் தேர்தல் ஆணையத்தால் கூட்டப்பட்ட இரண்டு அனைத்துக் கட்சிக் கூட்டங்களில், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒருமனதாக எழுந்தது. தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதிலிருந்து அல்லது அறிவிப்பு தேதியிலிருந்து தடை பொருந்துமா என்பதில் மட்டுமே கருத்து வேறுபாடு இருந்தது. 1998-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையம் இது குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது. பின்னர், அவை உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டன.


6. ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, முறையான சட்டம் இல்லாமல் இந்த விதிகளை எவ்வாறு அமல்படுத்த முடியும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியது. பலவீனங்களை புரிந்து கொண்ட தேர்தல் ஆணையம் சட்டம் இயற்றப்படும் வரை வழிகாட்டுதல்களை திரும்பப் பெறுவதாக கூறியது. இதனால் விதிகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவையா என்ற கேள்வி இன்னும் தீர்க்கப்படாமல் போனது.


7. 2008ஆம் ஆண்டு பல அரசியல் கட்சிகள் கருத்துக் கணிப்புகள் மற்றும் வாக்கெடுப்புக்கு தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தபோது இந்த விவகாரம் மீண்டும் பேசப்பட்டது. இதற்கு சட்டத் திருத்தம் தேவைப்படுவதால், நாடாளுமன்றத்தில் அதை எழுப்ப வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அவர்களுக்கு அறிவுறுத்தியது. 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் நாடாளுமன்றம் பிரிவு 126A-ஐச் சேர்த்தது. இது வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பற்றிய தெளிவான விதிகளை வழங்குகிறது.


8. 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 126A, முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரம் முதல், அனைத்து தொகுதிகளுக்கான இறுதிக் கட்ட வாக்குப்பதிவு முடிவதற்கு அரை மணி நேரம் வரை, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நடத்துவதையும், அவற்றின் முடிவுகளை அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் மூலம் வெளியிடுவதையும் முழுமையாகத் தடை செய்கிறது.


9. கருத்துக் கணிப்புகளைப் பொறுத்தவரை, 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 126(1)(b)-ன் படி, ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடையும் 48 மணிநேர காலத்திற்குள், எந்தவொரு கருத்துக் கணிப்பு அல்லது வேறு எந்த வாக்கெடுப்பு கணக்கெடுப்பின் முடிவுகள் உட்பட எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும் எந்தவொரு மின்னணு ஊடகத்திலும் வெளியிடுவதைத் தடை செய்கிறது.


10. இந்த விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த விதியை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று பிரிவு 126A(3) கூறுகிறது.


ஏன் வாக்களிக்க வேண்டும்?


2025-ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தல் இரண்டு முக்கிய சாதனைகளைக் கண்டது:


  •  ஒட்டுமொத்தமாக 66.91% வாக்குப்பதிவு; இது 1951ஆம் ஆண்டு முதல் பீகார் தேர்தலுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவாகும்.


  • பீகார் மாநில வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பெண்கள் வாக்களித்தனர்.


ஜனநாயக நாடுகளில், வாக்களிப்பு என்பது மக்களின் அரசியல் ஈடுபாட்டின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் அடிப்படைச் செயல்பாடு ஆகக் கருதப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக, வாக்களிக்கும் உரிமை, நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு பல்வேறு பின்தங்கிய குழுக்களால் பெறப்பட்டது- காலனித்துவ மக்கள், பெண்கள், இன மற்றும் இன சிறுபான்மையினர் - பாதுகாக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பு, ஒவ்வொரு நபருக்கும் தங்கள் சமூகத்தில் ஆட்சி அதிகாரத்தை யார் வகிப்பார்கள் என்பதில் குரல் கொடுக்கிறது. இது குடியுரிமையை நிறைவேற்றுவதில் முக்கியமான பகுதி ஆகும்.


வாக்களிக்கும் உரிமை இருப்பது, ஒருவரை தங்கள் குரல் முக்கியமானது என்று உணரும் பெரிய சமூகத்தின் ஒரு பகுதியாகும். பிரிட்டிஷ் பெண் வாக்குரிமை போராளி Emmeline Pankhurst, பெண்களுக்கு வாக்குரிமை இல்லாத காலத்தில் வாதிட்டார்: அதன் படி, “ஆண்கள் நெறிமுறை விதிகளை உருவாக்குகிறார்கள். பெண்கள் அதை ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தங்கள் சுதந்திரத்துக்கும் உரிமைகளுக்கும் போராடுவது ஆண்களுக்கு முற்றிலும் சரி, நியாயம் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால், பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவது சரியல்ல, நியாயமல்ல என்றும் முடிவு ஆண்கள் செய்துள்ளார்கள். 


அந்த வகையில், பிரதிநிதித்துவ வாக்களிப்பு (representation voting) மக்கள் ஒரு அமைப்பில் பங்குதாரர்களாக உணருவதில் பங்கு வகிக்கிறது.


வாக்களிக்கும் உரிமை இருப்பது ஒருவரைப் பெரிய சமூகத்தின் ஒரு பகுதியாக உணரச் செய்கிறது, அங்கு அவர்களின் குரல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பிரிட்டனை சேர்ந்த ‘பெண் வாக்குரிமை போராளி’ எமிலின் பாங்க்ஹர்ஸ்ட், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைப்பதற்கு முன்பு “ஆண்கள் தார்மீகக் குறியீட்டை உருவாக்குகிறார்கள், பெண்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆண்கள் தங்கள் சுதந்திரங்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுவது முற்றிலும் சரியானது மற்றும் பொருத்தமானது என்றும், ஆனால் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவது சரியானது அல்ல, பொருத்தமானது அல்ல என்றும் முடிவு செய்துள்ளனர்” என வாதிட்டார்.


அந்த அர்த்தத்தில், பிரதிநிதித்துவ வாக்களிப்பு மக்கள் ஒரு அமைப்பில் பங்குதாரர்களைப் போல உணர்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.



Original article:

Share:

வழக்கறிஞர்கள் கட்சிக்காரரின் ரகசியத்தை வெளிப்படுத்த முடியுமா? -கார்த்திகேய் சிங், முகுலா ஷர்மா

 ஒரு வழக்கறிஞருக்கும் கட்சிக்காரருக்கும்  இடையிலான ஆலோசனை ஒரு சிறப்புரிமை பெற்ற தகவல்தொடர்பா? ஒரு வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் கூறியதை வெளியிடக்கூடிய மூன்று சூழ்நிலைகள் எவை? இந்த சாட்சியச் சிறப்புரிமையாகப் பாதுகாப்பது ஏன் முக்கியம்? ஒரு வழக்கறிஞர் அரசியலமைப்புச் செயல்பாட்டாளரா?


தற்போதைய செய்தி: அக்டோபர் 31 அன்று, உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு ஜனநாயகத்தில் வழக்கறிஞர்களின் முக்கிய பங்களிப்பை உறுதிப்படுத்தியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. ஆர். கவாய், மற்றும் நீதிபதிகள் கே. வினோத் சந்திரன் மற்றும் என். வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு வழக்கறிஞர், ஒரு குற்றத்தைச் செய்ய அல்லது மறைக்க சட்ட ஆலோசனை பயன்படுத்தப்படும் சூழல்களைத் தவிர, ஒரு கட்சிக்காரர் என்ன சொன்னார் என்பதை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே அழைக்கப்பட முடியாது என்று கூறியது. அகமதாபாத் உதவி காவல் ஆணையர், ஒரு வழக்கறிஞருக்கு அறிவிப்பாணைஅனுப்பியதை தொடர்ந்து, நீதிமன்றம் தானாக முன்வந்து (suo motu) வழக்குப் பதிவு செய்தது. அவர் வாதிடும் ஒரு குற்றவியல் வழக்கு பற்றிய தகவலை வழங்குமாறு காவல்துறை வழக்கறிஞரைக் கேட்டுக் கொண்டது. இந்த நடவடிக்கை 2023-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பாரதிய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)) சட்டத்தின் பிரிவு 179-ன் கீழ் மேற்கொள்ளப்பட்டது.


சிறப்புரிமை பெற்ற தகவல் தகவல்தொடர்புகள் (privileged communications) என்றால் என்ன?


சிறப்புரிமை பெற்ற தகவல்தொடர்புகள் (Privileged Communications) என்பது, வழக்கறிஞர்-கட்சிக்காரர், கணவன்-மனைவி போன்ற சில பாதுகாக்கப்பட்ட உறவுகளுக்கு இடையிலான ரகசிய பரிமாற்றங்களைக் குறிக்கும். இவை சட்டத்தால் நீதிமன்றத்தில் சாட்சியமாக வெளிப்படுத்தப்படுவதிலிருந்து அல்லது கட்டாயப்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. இதன் அடிப்படைக் கொள்கை, நேர்மையையும் நம்பிக்கையையும் ஊக்குவிப்பதாகும், இதன்மூலம் நீதியையும் நெறிமுறைப் பொறுப்பையும் வலுப்படுத்துகிறது. 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் (Bharatiya Sakshya Adhiniyam (BSA)), இந்த பாதுகாப்புகளை பிரிவு 128 முதல் 134 வரை கோடிட்டுக் காட்டுகிறது.


குறிப்பாக, பிரிவு 128 'திருமண தொடர்புகளை' பாதுகாக்கிறது. திருமண உறவை முறித்துக் கொண்டபிறகும், அதைச் செய்த நபரின் அனுமதியின்றி, 'திருமணத்தின் போது' செய்யப்பட்ட எந்தவொரு தகவல்தொடர்பையும் வெளிப்படுத்தும்படி வாழ்க்கைத் துணைவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதையோ அல்லது அனுமதிக்கப்படுவதையோ தடுக்கிறது. ஒருவர் மீது மற்றொருவருக்கு எதிரான குற்றத்திற்காக வழக்குத் தொடரப்பட்டாலோ அல்லது அவர்களுக்கு இடையேயான வழக்குகளிலோ தவிர, அதைச் செய்த நபரின் அனுமதியின்றி கருத்து கூறுவதை தடுக்கிறது. அதேபோல், தேசிய நலனைப் பாதுகாப்பதற்காக, துறை ஒப்புதல் இல்லாமல் மாநில விவகாரங்கள் தொடர்பான வெளியிடப்படாத அதிகாரப்பூர்வ பதிவுகளை வெளியிடுவதை பிரிவு 129 தடை செய்கிறது. மேலும், பிரிவு 132-ன் கீழ் உள்ள வழக்கறிஞர்-கட்சிக்காரர் சிறப்புரிமை (advocate-client privilege) வழக்கறிஞர்கள் தொழில்முறைத் தகவல்தொடர்புகளை வெளிப்படுத்துவதைத் தடை செய்கிறது.


உச்சநீதிமன்றம் என்ன கூறியது?


மாநிலம் வழக்கறிஞர்-கட்சிக்காரர் உறவில் தலையிடும்போது, அது குடிமகனின் சமமான பிரதிநிதித்துவ உரிமையை (right to equitable representation) ஆபத்தில் ஆழ்த்துகிறது மற்றும் நீதி முறையின் நியாயமான விசாரணை மற்றும் சட்டத்தின் ஆட்சி (rule of law) ஆகியவற்றின் அமைப்பு நேர்மையை பாதிக்கிறது என்று உச்சநீதிமன்றம் கூறியது. பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் சட்டத்தின் பிரிவு 132, ஒரு வழக்கறிஞர் தொழில்முறை பணியின்போது அவருக்கு அளிக்கப்பட்ட எந்தவொரு தகவல்தொடர்பையும், பணி முடிந்த பிறகும், வெளியிடக் கூடாது என்று கூறுகிறது. ஆனால், அதில் மூன்று விதிவிலக்குகள் உள்ளன: (1) வாடிக்கையாளர் அதற்கு ஒப்புதல் அளித்தால்; (2) தகவல்தொடர்பு சட்டவிரோத நோக்கங்களுடன் தொடர்புடையதாக இருந்தால்; (3) வேலைவாய்ப்பின்போது நடத்தப்படும் குற்றச் செயல்பாட்டை வழக்கறிஞர் கவனித்தால் தகவலை வெளிப்படுத்தலாம். இருப்பினும், தகவல்தொடர்புகளை தனிப்பட்டதாக வைத்திருக்கும் உரிமை கட்சிக்காரருக்கு சொந்தமானது என்றாலும், வழக்கறிஞர் அமைதியாக இருந்தால் மட்டுமே அதைப் பாதுகாக்க முடியும். இந்த அமைதி பணக்காரர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்களை மட்டுமல்ல, - பாலியல் வன்முறைக்கு  எதிராக புகாரளிக்கும் பெண்கள், கடுமையான காப்பீட்டு நிறுவனங்களுடன் விபத்துக்குள்ளானவர்கள் மற்றும் காவலில் உள்ள மக்களின் குடும்பங்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய மக்களையும் பாதுகாத்துள்ளது 3.9 லட்சம் குடிமக்கள் விசாரணைக்காகக் காத்திருக்கும் ஒரு நீதி அமைப்பில், தகவல்களைத் தனிப்பட்டதாக வைத்திருக்கும் இந்த உரிமை, அனைவரும் தங்களைத் தற்காத்துக் கொள்ள நியாயமான வாய்ப்பைப் (fair defence alive) பெறுவதை உறுதி செய்ய உதவுகிறது.


ஒரு வழக்கில் பணியாற்றியதற்காகவோ அல்லது ஆலோசனை வழங்கியதற்காகவோ காவல்துறையினரோ அல்லது புலனாய்வாளர்களோ ஒரு வழக்கறிஞரை விசாரணைக்கு அழைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிரிவு 132-ல் உள்ள சிறப்பு விதிகளுக்கு வழக்கு பொருந்துகிறது என்பதற்கான தெளிவான சான்றுகள் இருந்தால் மட்டுமே அவர்கள் இதைச் செய்ய முடியும். இது சில தகவல்களை தனிப்பட்டதாக வைத்திருக்கும் வழக்கறிஞரின் உரிமையைப் பாதுகாக்கிறது.


மேலும், பிரிவு 132-ன் பாதுகாப்பை, பிரிவு 20(3)-ன் சுய குற்றச்சாட்டிற்கு எதிரான உத்தரவாதத்துடன் இணைப்பதன் மூலம், தீர்ப்பு ஒரு வழக்கறிஞரின் செயல்பாட்டின் முக்கிய அங்கமான அரசியலமைப்பின் சிறப்புரிமையை உறுதிப்படுத்துகிறது. ஒரு குடிமகனை வாக்குமூலம் அளிக்க கட்டாயப்படுத்த முடியாவிட்டால், அதே தகவலைப் பெறுவதற்காக அரசாங்கமும் அவரது வழக்கறிஞரை தனிப்பட்ட தகவல்களை வெளியிட கட்டாயப்படுத்த முடியாது.


வழக்கறிஞரின் பங்கு பற்றி?


தீர்ப்பின் மூலம், ஒரு வழக்கறிஞர் ஒரு தனியார் முகவர் மட்டுமல்ல, சட்ட பிரதிநிதித்துவ உரிமையைப் பாதுகாக்க உதவும் ஒரு 'அரசியலமைப்பு பாதுகாவலர்' என்று உச்சநீதிமன்றம் கூறியது. வழக்கறிஞர்-கட்சிக்காரர் சிறப்புரிமை என்பது வழக்கறிஞர்களுக்கு ஒரு நன்மையோ அல்லது சட்டத்திற்கு மேலே அவர்களை வைப்பதற்கான ஒரு வழியோ அல்ல -இது குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ஒரு பாதுகாப்பாகும். நீதிமன்றம் இதை தெளிவுபடுத்தியது: இந்த சிறப்புரிமை "குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது." அரசாங்கம் ஒரு வழக்கறிஞரை கட்சிக்காரர் தகவல்களை வெளியிட கட்டாயப்படுத்தினால், அது அந்த வழக்கறிஞரை விருப்பமில்லாத சாட்சியாக மாற்றுகிறது, தற்காப்பு மற்றும் வழக்குத் தொடர்தலுக்கான இடையிலான பிரிவை நீக்குகிறது. நீதிமன்றம் இதை ரகசிய தகவல்தொடர்புகளைப் பாதுகாக்கும் விதியின் தெளிவான மீறல் என்று கூறியது. இது பிரிவு 21-ன் கீழ் நியாயமான தற்காப்புக்கான உரிமை (fair defence) மற்றும் பிரிவு 14-ன் கீழ் சட்டத்தின் முன் அனைவரும் சமம் (equality before law) என்ற வாக்குறுதி இரண்டையும் பாதிக்கிறது.


தீர்ப்பு ஏன் முக்கியம்?


இந்தத் தீர்ப்பு மறைமுகமாக பயனுள்ள சட்டப் பிரதிநிதித்துவ உரிமையை வலுப்படுத்துகிறது. இது உச்சநீதிமன்றம் நீண்ட காலமாக பிரிவு 21 மற்றும் பிரிவு 22(1)-ல் வாசித்து வரும் உரிமையாகும். எம்.ஹெச். ஹோஸ்கோட் vs மகாராஷ்டிரா மாநிலம் (1978) மற்றும் ஹுசைனாரா கட்டூன் vs பீகார் மாநிலம் (1980) போன்ற வழக்குகளை மேற்கோள் காட்டி, ஆலோசனை இல்லாத சுதந்திரம் பெயர்  அளவிலான சுதந்திரம் என்பதை நினைவூட்டுகிறது. விசாரணை அமைப்புகள் பத்திரிகையாளர்கள், வரி ஆலோசகர்கள், வழக்கறிஞர்களையும் “விசாரணைக்கு உதவ” வழக்கமாக அழைக்கும் காலத்தில், நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசாங்கத்திற்கு அதன் புலனாய்வு அதிகாரத்திற்கு வரம்புகள் உள்ளன என்பதை நினைவுப்படுத்துகிறது. பாரதிய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)) சட்டத்தின் பிரிவு 179, சாட்சிகளை அழைக்க காவல்துறைக்கு அனுமதி அளித்தாலும், கட்சிக்காரரின் ரகசிய தகவல்களை வெளியிட ஒரு வழக்கறிஞரை கட்டாயப்படுத்த முடியாது என்று கூறுகிறது.


கார்த்திகே சிங் மற்றும் முகுலா சர்மா ஆகியோர் புது டெல்லியை தளமாகக் கொண்ட வழக்கறிஞர்கள்.



Original article:

Share:

இந்திய நாடாளுமன்றத்தில் பெண்கள்: அரசியலில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத ஒரு சிறுபான்மையினம்

 அரசியல் கட்சிகள் பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த நீதிபதி நாகரத்னாவின் கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.


2027ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள நீதிபதி நாகரத்னா சொல்வது சரிதான். மக்கள்தொகையில் ஏறக்குறைய 48 சதவீதம் பெண்கள் உள்ளனர். மேலும், ஒட்டுமொத்தமாக, பல சமூக சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பாகுபாட்டை அவர்களும் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, நீதித்துறை உட்பட பொது அமைப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாதது போன்ற சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். உதாரணமாக, இதுவரை உச்ச நீதிமன்றத்தின் 284 நீதிபதிகளில் 11 பேர் மட்டுமே பெண்களாக இருந்துள்ளனர். அரசியலமைப்புச் சட்டம் அரசியல் சமத்துவத்தை உறுதியளிக்கிறது. இது வாக்களிக்கும் உரிமையைத் தாண்டி, வாய்ப்பு மற்றும் பிரதிநிதித்துவத்தையும் உள்ளடக்கியதாக விரிவடைய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். இந்த இரண்டு அம்சங்களிலும் இந்தியா பின்தங்கியுள்ளது என்பதை நீதிபதி சுட்டிக்காட்டுகிறார். பாலின சமத்துவம் குறித்து பெண்கள் சமத்துவம் மற்றும் அதிகாரமளிப்புக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் தரவுகளின்படி, உலக அளவில் நாடாளுமன்றங்களில் பெண்களின் பங்கில் சராசரி விகிதம் 27 சதவீதமாக  இருக்கும்போது, இந்தியாவில் அது 14 சதவீதம் மட்டுமே உள்ளது.


நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா (Nari Shakti Vandan Adhiniyam) நிறைவேற்றப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் உள்ள மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், இந்தச் சட்டம் தொகுதிகளின் மறுவரையறைக்குப் பின்னரே நடைமுறைக்கு வரும் என்ற நிபந்தனையுடன் முன்மொழியப்பட்டுள்ளது.  ஆனால், மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பின்னரே மறுவரையறை நடைபெறும். மேலும், அந்தக் கணக்கெடுப்பு 2027ஆம் ஆண்டில் மட்டுமே நிறைவடையும் என்பதால், நடைமுறைப்படுத்துவதற்கு இன்னும் சிறிது காலம் ஆகும். சட்டத்தின் இந்த நடைமுறை அம்சத்தை பிடித்துக் கொண்டிருப்பது, சட்டமன்றங்களில் உள்ள பாலின ஏற்றத்தாழ்வைச் சரிசெய்வதில் தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவித்துள்ளார். மாறாக, அரசியல் கட்சிகள் தாங்களாகவே அதிகப் பெண் வேட்பாளர்களை நிறுத்த முற்படலாம் என்று வலியுறுத்துகிறார். உண்மையில், பிஜு ஜனதா தளம் (BJD) மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள் இந்தப் பாதையைப் பின்பற்றி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளன: 18-வது மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 38 சதவீதம் பேர் (30-ல் 11 பேர்) பெண்கள் ஆவர். 17-வது மக்களவையில் பிஜு ஜனதா தளத்தின் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 42 சதவீதம் பேர் (11-ல் 5 பேர்) பெண்கள் ஆவர். (2024 பொதுத் தேர்தலில் பிஜு ஜனதா தள வேட்பாளர்கள் யாரும் வெற்றிபெறவில்லை). அதேபோல, நிதிஷ் குமார் அவர்கள் 2006ஆம் ஆண்டில் பீகாரில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். ஆனால், அவரும் அந்தக் கொள்கையை சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களிலும் செயல்படுத்துவதில் தயக்கம்காட்டி வருகிறார்.  


சிறப்பு சலுகைகளுக்கு பெண் வாக்காளர்கள் நன்றாக வாக்களிப்பதை அரசியல் கட்சிகள் உணர்ந்துள்ளன. எனவே, அவர்கள் இப்போது பெண்களை ஒரு வாக்கு வங்கியாகப் பார்க்கிறார்கள். ஆனால், இது மட்டும் போதுமான நடவடிக்கையாக இருக்காது. அரசியலில் பெண்களுக்கு உண்மையான அதிகாரத்தையும் சமமான பிரதிநிதித்துவத்தையும் வழங்குவதில் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும். இது பெண்களின் அரசியல் சமத்துவம் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதற்கான அவர்களின் உரிமை பற்றியது என்றும் ஆண் அரசியல் தலைவர்கள் அதிக வேகத்துடன் செயல்பட வேண்டும் என்று நீதிபதி நாகரத்னா வலியுறுத்துகிறார்.



Original article:

Share:

செயற்கை நுண்ணறிவை முறைப்படுத்தும் நடவடிக்கையில் உள்ள சவால்கள் யாவை? -ரோஷ்னி யாதவ்

 — இந்தியாவின் புதுமை மற்றும் வளர்ச்சிக்கு உதவும் தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு இருந்து வருவதால், தற்போது செயற்கை நுண்ணறிவை கண்டிப்பாக கட்டுப்படுத்தப் போவதில்லை என்று அரசாங்கம் கூறியது. செயற்கை நுண்ணறிவு அபாயங்களை மதிப்பிடுவதற்கு இந்தியாவிற்கு ஒர் தனி அமைப்பை உருவாக்குதல், செயற்கை நுண்ணறிவு தொடர்பான சம்பவங்களுக்கான தேசிய தரவுத்தளம், தனியுரிமை மற்றும் நியாயத்தன்மை விதிகளை நேரடியாக கணினி வடிவமைப்பில் கொண்டு வருவது போன்ற தொழில்நுட்ப சட்ட நடவடிக்கைகளைப்  (techno-legal measures) பயன்படுத்துவதை பரிந்துரைக்கின்றன.


— இருப்பினும், செயற்கையாக உருவாக்கப்பட்ட படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோ இணையத்தில் அதிகமாக உள்ளதால், பயனுள்ள "உள்ளடக்கச் சான்றிதழ்" (“content authentication”) வழங்க வேண்டியதன் அவசியத்தை வழிகாட்டுதல்கள் சுட்டிக்காட்டுகின்றன. இங்கே, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை தெளிவாக பெயரிடும் வகையில் சட்டத்தை மாற்ற அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.


— வழிகாட்டுதல்களின் அறிமுகம் 2026ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் இந்தியா–செயற்கை நுண்ணறிவு மாநாட்டிற்கு (India–AI Impact Summit) சில நாட்களுக்கு முன்பு வருகிறது. இது உலகளாவிய தெற்கில் நடத்தப்படும் முதல் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடாகும்.


— அறிக்கையின் முக்கிய பரிந்துரைகள் ஆறு தூண்களைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன: அவை உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு, கொள்கை & ஒழுங்குமுறை, இடர் குறைப்பு, பொறுப்புடைமை மற்றும் நிறுவனங்கள் ஆகும்.


— உள்கட்டமைப்பு: AIKosh போன்ற தளங்கள் மூலம் மானிய விலையில் காட்சி வடிவ செயலாக்க அலகுகள் (graphics processing units (GPUs)) மற்றும் இந்தியா சார்ந்த தரவுத்தொகுப்புகள் உள்ளிட்ட தரவு மற்றும் கணினி வளங்களுக்கான அணுகலை விரிவுபடுத்த இந்த அறிக்கை அழைப்பு விடுக்கிறது. ஆதார் மற்றும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI)) போன்ற டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) உடன் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்க இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. வரிச் சலுகைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் மூலம் இணைக்கப்பட்ட கடன்களுடன், தனியார் முதலீடு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.


— ஒழுங்குமுறை: இந்தியாவின் அணுகுமுறை திறமையானதாகவும் குறிப்பிட்ட-துறை சார்ந்ததாக இருக்கும். ஏற்கனவே உள்ள சட்டங்களை (தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம் போன்றவற்றை) பயன்படுத்தி, இடைவெளிகளை இலக்கு வைத்த திருத்தங்கள் மூலம் குறைக்கலாம்.


— ஆபத்து குறைப்பு: முன்னர் கூறியது போல, அறிக்கை உள்ளூர் உண்மைகளை பிரதிபலிக்கும் இந்தியாவுக்கான குறிப்பிட்ட ஆபத்து மதிப்பீட்டு கட்டமைப்பை முன்மொழிகிறது. தன்னார்வ கட்டமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப-சட்ட நடவடிக்கைகளுடன் இதை செய்யலாம்.


— பொறுப்புடைமை: செயல்பாடு மற்றும் ஆபத்து நிலையுடன் பொறுப்பு இணைக்கப்பட்டுள்ள ஒரு தரப்படுத்தப்பட்ட பொறுப்பு முறை முன்மொழியப்பட்டுள்ளது. நிறுவனங்கள் குறை தீர்க்கும் அமைப்புகள், வெளிப்படைத்தன்மை அறிக்கையிடல் மற்றும் சுய-சான்றிதழ் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.


— நிறுவனங்கள்: இந்த கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் கொள்கை நிபுணர் குழுவால் (Technology & Policy Expert Committee (TPEC)) ஆதரிக்கப்படும் மற்றும் செயற்கை நுண்ணறிவு  பாதுகாப்பு நிறுவனத்தால் (AI Safety Institute (AISI)) தொழில்நுட்ப ரீதியாக ஆதரிக்கப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு ஆளுகை குழு (AI Governance Group (AIGG)) தலைமையிலான முழு அரசாங்க அணுகுமுறையை கற்பனை செய்கிறது.


— திறன் மேம்பாடு: வழிகாட்டுதல்கள் குடிமக்கள், பொது ஊழியர்கள் மற்றும் சட்ட அமலாக்கத்திற்கான செயற்கை நுண்ணறிவு அறிவுத்திறன் மற்றும் பயிற்சியை வலியுறுத்துகின்றன. சிறிய நகரங்களில் உள்ள இடைவெளிகளை குறைக்கவும், அரசு நிறுவனங்களில் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தவும் ஏற்கனவே உள்ள திறன் மேம்பாட்டு திட்டங்களை விரிவுபடுத்த பரிந்துரைக்கின்றன.


— அரசாங்கம் குறைந்தபட்ச விதிகளுடன் செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்க விரும்பினாலும், தரவு தனியுரிமை மற்றும் தவறாகப் பயன்படுத்துவது குறித்த கவலைகள் உள்ளன. குறிப்பாக, முக்கியமான அரசு அதிகாரிகள் இந்த அமைப்புகளைப் பயன்படுத்தும்போது அவை தெளிவாக தெரிகின்றன.


— கடந்த மாதம் வெளியிடப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கான வரைவுத் திருத்தங்களின்படி, சமூக ஊடக தளங்கள் பயனர்களிடம் பதிவேற்றப்பட்ட உள்ளடக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்பதை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அத்தகைய அறிவிப்பின் துல்லியத்தை சரிபார்க்க தானியங்கு கருவிகள் (automated tools) அல்லது பிற பொருத்தமான வழிமுறைகள் உள்ளிட்ட “நியாயமான மற்றும் பொருத்தமான தொழில்நுட்ப நடவடிக்கைகளை” பயன்படுத்த வேண்டும்; மேலும், அத்தகைய அறிவிப்பு அல்லது தொழில்நுட்ப சரிபார்ப்பு உள்ளடக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்டது என உறுதிப்படுத்தினால், இந்தத் தகவல் பொருத்தமான அடையாளம் அல்லது அறிவிப்புடன் தெளிவாகவும் முக்கியத்துவமாகவும் காட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.


— அவர்கள் அதை செய்ய தவறினால், தளங்கள் மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்திலிருந்து அனுபவிக்கும் சட்டப் பாதுகாப்பை இழக்க நேரிடும். பயனர் அறிவிப்புகளின் சரியான தன்மையைச் சரிபார்க்கவும், அத்தகைய அறிவிப்பு அல்லது குறிப்பிட்ட பெயர் இல்லாமல் செயற்கையாக உருவாக்கப்பட்ட எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவும் நியாயமான மற்றும் விகிதாசார தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுப்பது அத்தகைய தளங்களின் பொறுப்பாகும்.


உங்களுக்குத் தெரியுமா:


— செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence (AI)) என்பது கணினி அறிவியல் துறையாகும். இது கணினி அமைப்புகளை மனிதர்களைப் போல சிக்கலான அமைப்புகளை போல சிந்திக்கவும், பகுத்தறிவு செய்யவும், கற்றுக்கொள்ளவும், செயல்படவும் வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


— செயற்கை நுண்ணறிவை இரண்டு வகைகளாக வகைப்படுத்தலாம். அவை: செயற்கை குறுகிய நுண்ணறிவு (Artificial Narrow Intelligence (ANI)). இது பலவீனமான செயற்கை நுண்ணறிவு என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் செயற்கை பொது நுண்ணறிவு (Artificial General Intelligence (AGI)) இது வலுவான செயற்கை நுண்ணறிவு என்றும் அழைக்கப்படுகிறது.



Original article:

Share:

அரசியலமைப்பு அறநெறி குறித்த கேள்வியில், சட்டமும் நீதிநெறியும் எவ்வாறு தொடர்புடையவை? -அமீர் அலி

 மிகவும் சவாலான சட்ட கேள்விகள் பெரும்பாலும் சட்டத்திற்கும் அறநெறிக்கும் இடையிலான ஆழமான இணைப்பிலிருந்து எழுகின்றன. இது கருக்கலைப்பு (abortion) மற்றும் கருணைக்கொலை (euthanasia) போன்ற பிரச்சினைகள் பற்றிய விவாதங்களில் காணப்படுகிறது. இந்த கடினமான கேள்விகளின் தீர்வில், அரசியலமைப்பு அறநெறி பாரம்பரியம் எவ்வாறு முக்கியமானதாக மாறுகிறது?


அரசியலமைப்பு அறநெறி என்ற கருத்து, அரசியலமைப்பு சமூக ஒப்பந்தத்தைப் பதிவு செய்யும் ஒரு ஆவணமாக மட்டும் இருப்பதிலிருந்து, அரசியலை அறநெறிபடுத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் தார்மீக அடிப்படையாக மாறுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.


அரசியலமைப்பு அறநெறி என்பது வெளிப்படையாகக் கூறப்பட்ட சட்டத்தின் சரியான வார்த்தைகளைப் பின்பற்றுவதிலிருந்து மட்டுமல்ல, அரசியலமைப்பின் பின்னணியில் உள்ள உணர்வு மற்றும் மதிப்புகளைப் புரிந்துகொள்வதிலிருந்தும் மதிப்பதிலிருந்தும் வருகிறது.


அது காலப்போக்கில் உருவான மரபுகளில் அடங்கியுள்ளது. அவை அரசியலமைப்பை செயல்படக்கூடியதாகவும் உயிருள்ள ஆவணமாகவும் மாற்றியுள்ளன. எழுதப்பட்ட வார்த்தைகளை விட அல்லது எழுதப்படாத அரசியலமைப்பைப் பொறுத்தவரை, சட்டங்கள் மற்றும் ஆவணங்களின் எளிய தொகுப்பை விட அதிகம்.





சட்டம் ஏன் அறநெறியை வழிநடத்துகிறது அல்லது அறநெறி சட்டத்தை வழிநடத்துகிறது என்பது ஒரு தந்திரமான கேள்வி.


இந்த கட்டுரை விளக்கும் அரசியலமைப்பு அறநெறியில்  இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலாவது சட்டத்திற்கும் அறநெறிக்கும் இடையிலான உறவைப் பற்றியது. இரண்டாவது அறநெறி தொடர்பான கேள்விகளை உள்ளடக்கிய சிக்கலான வழக்குகளின் நீதித்துறை விளக்கம் மற்றும் தீர்வு மூலம் அரசியலமைப்பு அறநெறியின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியுடன் தொடர்புடையது.


இவ்வாறு, அரசியலமைப்பு அறநெறி, வளர்க்கப்படுகிறது என்று பி.ஆர். அம்பேத்கர் ஒருமுறை சுட்டிக்காட்டினார். இதன் விளைவாக, அரசியலமைப்பின் மீது ஒரு குறிப்பிட்ட பற்று உருவாகிறது. அது அரசியலமைப்பு தேசபக்தி (Constitutional patriotism) எனப்படும் வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளலாம்.


அரசியலமைப்பு அறநெறியில் ஒரு முக்கியமான மற்றும் தனித்துவமான சட்டக் கூறும் உள்ளது.  குறிப்பாக, இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற முன்னாள் காலனி நாடுகளில் பிரிட்டிஷ் பொது சட்டத்தைப் பின்பற்றும் நாடுகளில் இந்த நடைமுறை உள்ளது. இத்தகைய பொதுவான சட்டத்தைப் பின்பற்றும் நாடுகள் (கடந்த கால நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில்) தங்கள் சட்டங்களை படிப்படியாக உருவாக்குகின்றன. ஒவ்வொரு புதிய வழக்கும் முந்தைய நீதிமன்ற தீர்ப்புகளைப் பின்பற்றுகின்றன (stare decisis). இந்த செயல்முறை சட்ட விதிகளின் மெதுவான மற்றும் நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.


வழக்குச் சட்டத்தின் படிப்படியான முன்னேற்றம் பெரும்பாலும் சிறந்த சட்ட வல்லுநர்கள் தங்கள் சட்டப்பூர்வ பகுத்தறிவைப் பயன்படுத்தி மிகவும் கடினமான மற்றும் சிக்கலான சட்டப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடும் முக்கியமான தீர்ப்புகளால் வகைப்படுத்தப்படுகிறது. இவை உடனடி மற்றும் தயாரான தீர்வு இல்லாத பிரச்சினைகளாகும் அவை சமூகங்களைப் பிளவுபடுத்தும் தன்மை கொண்டவை.


பெரும்பாலும், இந்த சிக்கலான சட்டப் பிரச்சினைகள் அறநெறி தொடர்பான கடினமான கேள்விகளுடன் உள்ளன. சட்டம் அறநெறியை வழிநடத்துகிறதா அல்லது அறநெறி சட்டத்தை வழிநடத்துகிறதா என்பது கையாள்வதற்கு கடினமான கேள்வி, மேலும் சட்டம் மற்றும் அறநெறி இடையிலான உறவைப் புரிந்துகொள்வதற்கு சிறந்த வழியாக இருக்காது. அவை மிகவும் ஒன்றிணைந்துள்ளதால், முன்னுரிமை வரிசையை தீர்மானிப்பது நம்மை எங்கும் அழைத்துச் செல்லாது.


சட்டத்தின் பல்வேறு தத்துவங்கள் இந்த சிக்கலான கேள்வியை ஆராய்ந்துள்ளன. ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான பார்வையை வழங்குகின்றன.


பண்புச் சட்டம் (Natural Law)


பண்புச் சட்டத்தின் தத்துவம், அறநெறிக்கும் சட்டத்திற்கும் இடையே மிகத் தீவிரமான தொடர்பை உருவாக்குகிறது. இது சரி மற்றும் தவறு பற்றிய உள்ளுணர்வு உணர்வை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சட்ட பாரம்பரியம் ஒரு பழமையானது.  இதில் Stoics, 13ஆம் நூற்றாண்டின் இறையியலாளர் Thomas Aquinas மற்றும் மிகவும் சமகாலத்தவரான John Finnis (1940இல் பிறந்தவர்) ஆகியோரை உள்ளடக்கியது.


சட்டத்திற்கும் அறநெறிக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு மேலும் அமெரிக்க சட்ட அறிஞர் Lon L Fuller 1902-78ஆம் ஆண்டின் படைப்பில் காணப்படுகிறது. அங்கு அவர் சட்டத்தில் ஒரு 'உள் அறநெறி' (inner morality) இருக்கிறது என்று வாதிடுகிறார். Fuller-ன் நிலைப்பாடு ஒரு வகையான மதச்சார்பற்ற பண்புச் சட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் St. Augustine மற்றும் தாமஸ் அக்வினாஸ் போன்ற கிறிஸ்தவ திருச்சபை மூதாதையர்களுடன் தொடர்புடையது.


19ஆம் நூற்றாண்டில் சட்ட நேர்மறைவாதத்தின் எழுச்சியுடன் பண்புச் சட்ட சிந்தனை வீழ்ச்சியடைந்தது. ஆனால், 20ஆம் நூற்றாண்டில், குறிப்பாக 1948இல் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் (Universal Declaration of Human Rights (UDHR)) ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, பண்புச் சட்டக் கோட்பாடு (natural law theory) மீண்டும் உயிர்ப்பெற்றது.


சட்ட நேர்மறைவாதம் (Legal positivism )


சட்டம் மற்றும் அறநெறி பற்றிய கேள்வியில், இது அரசியலமைப்பு அறநெறியின் மையத்தில் உள்ளதாகக் கருதப்படுகிறது. பண்புச் சட்டம் மற்றும் சட்ட நேர்மறைவாதத்தின் மரபுகள் வேறுபடுகின்றன. சட்ட நேர்மறைவாதிகள் சட்டத்திற்குள் அறநெறி அம்சத்தை வலியுறுத்துவதில்லை. மாறாக சட்டம் இறையாண்மையின் கட்டளை அல்லது ‘கட்டளை’ (Imperation) என்ற சமூக உண்மையில் கவனம் செலுத்துகின்றனர்.


வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சட்ட நேர்மறைவாதப் பள்ளி சட்டத்தின் தார்மீக உள்ளடக்கத்தை அதிகம் பார்க்க விரும்பவில்லை, மாறாக சட்டம் ஒரு சமூக உண்மையாக இறையாண்மையின் கட்டளையிலிருந்து வெளிப்பட்டால் மட்டுமே பார்க்க விரும்புகிறது. சட்ட நேர்மறைவாத பள்ளி Jeremy Bentham (1748-1832) அவர்களின்தத்துவத்தில் இருந்து தோன்றியது. இது மற்றொரு ஆங்கில தத்துவஞானி John Austin-னால் (1790-1859) மேலும் விரிவுபடுத்தப்பட்டது.


20ஆம் நூற்றாண்டில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களான எச்.எல்.ஏ. ஹார்ட் (1907-1992) மற்றும் ஜோசப் ராஸ் (1939-2022) போன்ற பல புகழ்பெற்ற சட்ட நேர்மறைவாதிகள் இந்த மரபைத் தொடர்ந்தனர். சட்ட நேர்மறைவாதிகளை மென்மையான மற்றும் கடினமான குழுக்களாகப் பிரிக்கலாம். மென்மையானவர்கள் சட்டத்தில் சில அறநெறி பரிசீலனைகளை இணைக்கத் தயாராக உள்ளனர். அதேசமயம், கடினமானவர்கள் அத்தகைய தார்மீகக் கருத்துக்களை விலக்க முனைகிறார்கள்.


சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அரசியலமைப்பு அறநெறி மற்றும் அறநெறி சட்டம் எவ்வாறு தொடர்புடையது என்ற கேள்விக்கு பண்புச்  சட்டத்தின் பாரம்பரியம் சட்ட நேர்மறைவாதத்திற்கு மாறாக உள்ளது.


சட்ட விளக்கங்கள் கடினமான கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிக்கின்றன


இங்குதான் அமெரிக்க நீதித்துறை நிபுணர் மற்றும் பொது தத்துவஞானியான Ronald Dworkin (1931 முதல் 2013 ஆம் ஆண்டு வரை) வாழ்ந்த அவர்களின் செல்வாக்குமிக்க சட்ட சிந்தனை முக்கியத்துவம் பெறுகிறது. Dworkin சட்ட நேர்மறைவாதி H.L.A. Hart-ன் வாரிசாக ஆக்ஸ்போர்டில் சட்டக் கோட்பாட்டு பேராசிரியராகப் பொறுப்பேற்றார். மேலும், சட்டம் என்பது தனித்துவமான அறநெறி மற்றும் மதிப்பீட்டு அம்சத்தைக் கொண்ட தொடர்ச்சியான விளக்க செயல்முறை என்று வாதிட்டார்.


Dworkin நீதித்துறை விளக்கத்தின் செயல்முறையை இலக்கிய விமர்சனத்துடன் (literary criticism) ஒப்பிட்டார். அங்கு நீதிபதி, விளக்கத்தின் செயலில், சட்டத்தின் விரிவாக்கத்தின் தடையில்லாத வலையில் அத்தியாயங்களைச் சேர்க்கிறார்.


கருணைக்கொலை, கருக்கலைப்பு, ஆபாசப் படங்களைப் பயன்படுத்துதல் (consumption of pornography)  மற்றும் உடனடி மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய சட்ட தீர்வுகள் இல்லாத சித்திரவதை போன்ற கடினமான மற்றும் கடினமான சட்டக் கேள்விகளைத் தீர்ப்பதில் Dworkin-னின் நிலைப்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது.


தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் சட்டக் கொள்கைகளைப் பயன்படுத்தி கடினமான சட்டப் பிரச்சினைகளைக் கூட தீர்க்க முடியும் என்று ட்வொர்கின் கூறுகிறார். இது சீரற்ற முடிவுகள் அல்லது சட்டத்தில் உள்ள இடைவெளிகளைத் தடுக்க உதவுகிறது என்று Dworkin பரிந்துரைக்கிறார்.


அரசியலமைப்பு அறநெறியை முன்னேற்றும் கடினமான வழக்குகள்


சமூகத்தைப் பாதிக்கும் கடுமையான சட்டச் சிக்கல்களைக் கையாளும் போது அரசியலமைப்பு ஒழுக்கம் மிக முக்கியமானது. இந்த சிக்கலான பிரச்சினைகளைத் தீர்க்க சிறந்த சட்ட வல்லுநர்கள் தங்கள் அறிவையும் சிந்தனையையும் பயன்படுத்துகின்றனர்.


சட்டப் பிரச்சினைகளின் சிக்கல் சட்டம் மற்றும் அறநெறியின் ஒன்றிணைப்பிலிருந்து உருவாகிறது. குறிப்பாக கருக்கலைப்பு, கருணைக்கொலை மற்றும் சித்திரவதைக்கான அனுமதி தொடர்பான பிரச்சினைகளில் இதைக் காணலாம்.


அமெரிக்காவில், 1973ஆம் ஆண்டு ரோ vs வேட் (Roe vs Wade) வழக்கின் தீர்ப்பு பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யும் உரிமையை வழங்கியது. ஆனால், உச்ச நீதிமன்றம் 2022-ல் அதை ரத்து செய்தது. அதில்,


அ) ஒரு கருவுக்கு அதன் சொந்த சுதந்திரமான வாழ்க்கை இருப்பதாகக் கருதப்படுமா? ஆ) கர்ப்பம் தேவையற்றதாக இருந்தால் அதை முடிவுக்குக் கொண்டுவர ஒரு பெண்ணுக்கு உரிமை உள்ளதா? என்ற இரண்டு முக்கிய கேள்விகள் ஆழமான பிளவுகளை உருவாக்கியுள்ளது.


இந்தியாவில், 1973ஆம் ஆண்டு கேசவானந்த பாரதி வழக்கு முக்கியமானது. இது அரசியலமைப்பு அறநெறியை (constitutional morality) நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால், அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டை (basic structure doctrine) உருவாக்கியது. நாடாளுமன்றம் அரசியலமைப்பின் முக்கிய பகுதிகளை மாற்ற முடியாது என்று கூறுகிறது.


தனியுரிமையை ஒரு அடிப்படை உரிமையாக மாற்றிய 2017ஆம் ஆண்டு புட்டுசாமி (Puttuswamy) வழக்கு, அரசியலமைப்பு அறநெறி அரசாங்கத்தின் தலையீட்டிலிருந்து தனிப்பட்ட தனியுரிமை மற்றும் கண்ணியத்தை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதைக் காட்டுகிறது.


ஒட்டுமொத்தமாக, சமூகத்தில் பெரும்பான்மையான தார்மீகக் கோரிக்கைகளால் தனிநபரின் கண்ணியம் தலைகீழாக மாறாமல் பாதுகாப்பதே அரசியலமைப்பு அறநெறியின்  பாதை என்பதைக் கவனத்தில் கொள்ளலாம்.



Original article:

Share: