முக்கிய உலகளாவிய வர்த்தக நாணயமாக இருக்கும் டாலரை மாற்ற BRICS மற்றும் இந்தியா முயற்சி செய்கின்றனவா? - ரவி தத்தா மிஸ்ரா

 BRICS மீது 100% வரி விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். டாலர் மதிப்பிழப்பு மற்றும் ரூபாயின் சர்வதேசமயமாக்கலில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? இதில் உள்ள சிக்கல்கள் மற்றும் கவலைகள் என்ன?


உலகளாவிய வர்த்தகத்தில் டாலரின் பயன்பாட்டைக் குறைப்பதற்கு பிரிக்ஸ் நாடுகள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், ஜனவரி 20 திங்கட்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிக்ஸ் நாடுகள் மீது 100% இறக்குமதி வரிகளை விதிக்கும் தனது திட்டத்தை மீண்டும் வலியுறுத்தினார். 


உலகளாவிய வர்த்தகத்தில் டாலரின் பங்கைக் குறைப்பது குறித்து பிரிக்ஸ் நாடுகள் பரிசீலித்தாலும் கூட 100% வரியை எதிர்கொள்ள நேரிடும் என்று டிரம்ப் கூறினார். ஓவல் அலுவலகத்தில் (Oval Office) நடந்த கையெழுத்து விழாவின் போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்ததாக ANI செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.


முன்னதாக, கேபிடால் ரோட்டுண்டாவில் (capitol rotunda) சத்தியப்பிரமாணம் எடுத்த பிறகு அவர் தனது தொடக்க உரையை நிகழ்த்தினார். தனது உரையில், தனது நிர்வாகம் "வெளிப்புற வருவாய் சேவை"யை (External Revenue Service) அமைக்கும் என்று அவர் கூறினார். இந்த சேவை அனைத்து கட்டணங்கள், வரிகள் மற்றும் வருவாய்களையும் சேகரிக்கும். "நமது குடிமக்களை மேம்படுத்த வெளிநாடுகளுக்கு வரி விதிப்பதே" இலக்காக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது.


கேபிடால் ரோட்டுண்டா (capitol rotunda) என்பது, அமெரிக்கக் நாடாளுமன்றக் கட்டிடத்தின் குவிமாடத்தால் மூடப்பட்ட சுற்று கட்டிடத்தைக் குறிக்கும்.


டிசம்பர் 2024-ம் ஆண்டில், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் சமூக ஊடகங்களில் பதிவிட்டு அவர் குறிப்பிட்டதாவது, "பிரிக்ஸ் நாடுகளிடமிருந்து எங்களுக்கு ஒரு உறுதிப்பாடு தேவை. அவர்கள் ஒரு புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கக்கூடாது அல்லது சக்திவாய்ந்த அமெரிக்க டாலரை மாற்ற வேறு எந்த நாணயத்தையும் ஆதரிக்கக்கூடாது. அவர்கள் அவ்வாறு செய்தால், அவர்கள் 100 சதவீத வரிகளை எதிர்கொள்ள நேரிடும். அவர்கள் சிறந்த அமெரிக்க பொருளாதாரத்திற்கான அணுகலை இழக்க நேரிடும் என்றும் எதிர்பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.


BRICS நாடுகள் டாலருக்கு பதிலாக புதிய நாணயத்தை திட்டமிட்டுள்ளதா?


உலகெங்கிலும் உள்ள நாடுகள் அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முயற்சித்து வருகின்றன. அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய நிதி அமைப்பைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் அவர்கள் விரும்புகிறார்கள். அமெரிக்கா ரஷ்யாவை உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்பு சங்கத்திலிருந்து (Society for Worldwide Interbank Financial Telecommunication (SWIFT)) நீக்கிய பிறகு இந்த உந்துதல் தீவிரமாகிவிட்டது. சர்வதேச நிதி பரிவர்த்தனைகளில் SWIFT முக்கிய பங்கு வகிக்கிறது.


ஈரான் 2012-ம் ஆண்டில் SWIFT-லிருந்து நீக்கப்பட்டது. இந்த நடவடிக்கை 2015-ம் ஆண்டு தெஹ்ரானை பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவருவதற்கான ஒரு காரணியாகக் கருதப்பட்டது. 2018-ம் ஆண்டில், முதல் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா ஈரான் மீது எண்ணெய் மற்றும் நிதித் தடைகளை மீண்டும் விதித்தபோது, ​​SWIFT மீண்டும் அந்நாட்டில் உள்ள வங்கிகளுக்கான அணுகலை நிறுத்தியது.


ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2023 பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், பிரேசிலின் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்குவது கட்டண விருப்பங்களை அதிகரிக்கும் என்றும் இதனால், தங்களின் பாதிப்புகளைக் குறைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


2024 அக்டோபரில் கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், "டாலர் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் தெளிவாகக் காணலாம். இதை நடைமுறைப்படுத்துபவர்களால் இது ஒரு பெரிய தவறு என்று நான் நம்புகிறேன்" என்று கூறினார்.


ஆம். 2022-ம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India (RBI)) சர்வதேச வர்த்தகத்திற்கான விலைப்பட்டியல் மற்றும் பணம் செலுத்துதல்களை இந்திய ரூபாயில் அனுமதித்தது. அமெரிக்க டாலரை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கும் இந்திய ரூபாயை சர்வதேசமயமாக்குவதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. உக்ரைனில் நடந்த போர் காரணமாக ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


கசானில் நடந்த ஒரு நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, பிரிக்ஸ் நாடுகளிடையே நிதி ஒருங்கிணைப்பை அதிகரிப்பதற்கு இந்தியாவின் ஆதரவு குறித்து பேசினார். உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் மற்றும் சுமூகமான எல்லை தாண்டிய பணம் செலுத்துதல் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.


நவம்பர் 2024-ம் ஆண்டில், மும்பையில் நடந்த இந்தியா-ரஷ்யா அரசுகளுக்கிடையேயான ஆணையக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசியதாவது, "தேசிய நாணயங்களில் வர்த்தகத்தை சரிசெய்வது மிகவும் முக்கியமானது, குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில்" என்று அவர் கூறினார்.


இல்லை, தீவிரமாகவோ அல்லது தீங்கிழைக்கும் நோக்கத்திலோ அல்ல. இருப்பினும், இந்தியா இந்த பிரச்சினை குறித்து இயல்பான கவலையைக் வெளிப்படுத்தியுள்ளது.


அக்டோபர் 2024-ம் ஆண்டில், அமெரிக்க கொள்கைகள் பெரும்பாலும் சில நாடுகளுடனான வர்த்தகத்தை சிக்கலாக்குகின்றன என்று ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார். இந்தியா தனது வர்த்தக நலன்களைப் பாதுகாக்க "தீர்வுகளை" நாடுகிறது. இருப்பினும், டாலரை குறிவைப்பதையோ அல்லது அதிலிருந்து விலகிச் செல்வதையோ அது நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.


"நாங்கள் ஒருபோதும் டாலரை தீவிரமாக குறிவைத்ததில்லை. அது எங்கள் பொருளாதார, அரசியல் அல்லது இராஜதாந்திரக் கொள்கையின் ஒரு பகுதியாக இல்லை. வேறு சில நாடுகள் அவ்வாறு செய்திருக்கலாம். ஆனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. இருப்பினும், எங்களுக்கு ஒரு இயல்பான கவலை உள்ளது. எங்கள் வர்த்தக கூட்டணி நாடுகளுடன் பலருக்கு பரிவர்த்தனைகளுக்கு டாலர்கள் இல்லை. இது அவர்களுடன் வர்த்தகத்தை நிறுத்துவதா அல்லது தீர்வு காண மாற்று வழிகளைக் கண்டுபிடிப்பதா என்பதை முடிவு செய்ய எங்களை கட்டாயப்படுத்துகிறது. டாலருக்கு எதிராக எந்த தீங்கிழைக்கும் நோக்கமும் இல்லை," என்று வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க சிந்தனைக் குழுவான கார்னகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸில் ஒரு கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர் கூறினார்.


"டாலர் மதிப்பிழப்பு" (de-dollarisation) என்று அழைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்ன?


டிசம்பர் 2024-ம் ஆண்டில், அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், இந்தியா "டாலர் மதிப்பிழப்பு" (de-dollarisation) செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்று கூறினார். வோஸ்ட்ரோ கணக்குகளை (Vostro accounts) அனுமதிப்பது மற்றும் உள்ளூர் நாணய வர்த்தக ஒப்பந்தங்களை (local currency trade agreements) உருவாக்குவது போன்ற சமீபத்திய நடவடிக்கைகள் இந்திய வர்த்தகத்தை "ஆபத்தை குறைப்பதற்கு" (de-risk) நோக்கமாகக் கொண்டவை என்று அவர் விளக்கினார்.


பிரிக்ஸ் நாடுகள் பகிரப்பட்ட நாணயத்தை உருவாக்குவது பற்றிப் பேசியிருந்தாலும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தாஸ் குறிப்பிட்டார்.


"இது டாலர் மதிப்பிழப்பு (de-dollarisation) பற்றியது அல்ல. இது நமது வர்த்தகத்தில் அபாயங்களைக் குறைப்பது பற்றியது" என்று தாஸ் கூறினார். "வெவ்வேறு பிராந்தியங்களில் BRICS நாடுகளின் பரவல் முக்கியமானது. ஒன்றுக்கொன்று நெருக்கமான நாடுகளைக் கொண்ட யூரோ மண்டலத்தைப் (Eurozone) போலல்லாமல், BRICS நாடுகள் பரவியுள்ளன. இது தனித்துவமான சவால்களை உருவாக்குகிறது," என்று அவர் மேலும் கூறினார். இந்த அணுகுமுறையில் இந்தியா கவனமாக உள்ளது.


அமெரிக்க டாலருக்கு நிகரான போட்டியாளராக சீன யுவானின் (Chinese yuan) உயர்வு காரணமாக, இந்தியா டாலர் மதிப்பிழப்புக்கு ஆதரவளிக்கவில்லை. ரஷ்யா அதிகளவில் யுவானை ஏற்றுக்கொண்டாலும், ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதிக்கு யுவானைப் பயன்படுத்துவதை இந்தியா எதிர்த்தது.


ரஷ்யாவின் மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து, 300 பில்லியன் டாலர் ரஷ்ய வெளிநாட்டுப் பங்குகளை முடக்கம் உட்பட, யுவான் ரஷ்யாவின் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் நாணயமாக மாறியுள்ளது. ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகத்தில் 90%-க்கும் அதிகமானவை இப்போது ரூபிள்களில் (rubles) தீர்க்கப்படுவதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது.


அதே நேரத்தில், இதற்கிடையில், டாலரை அதிகமாக நம்பியிருப்பது குறித்து இந்தியா எச்சரிக்கையாக உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India (RBI)) அதன் தங்கத்தின் கொள்முதலை (gold purchases) அதிகரித்துள்ளது. இதனால், வெளிநாட்டிலிருந்து நம்நாட்டிற்கு தங்கத்தை மீண்டும் கொண்டு வரவும் தொடங்கியுள்ளது.


உக்ரைனில் நடந்த போருக்குப் பிறகு அதிகரித்த நிச்சயமற்ற தன்மைகள் இந்த நிலைமைக்கு பங்களித்துள்ளன. இரண்டாம் நிலைத் தடைகள் குறித்து கவலை கொண்ட உலக மத்திய வங்கிகள் (global central banks) தங்கத்தை வாங்குவது இதற்கு ஒரு காரணமாகும்.


இந்தியாவின் முன்னணி வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பான இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் (Federation of Indian Export Organisations (FIEO)) இயக்குநர் ஜெனரலும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அஜய் சஹாய் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உடன் குறிப்பிட்டதாவது, உள்ளூர் நாணய முயற்சிகளை இந்தியா ஆதரிக்கும் அதே வேளையில், இதற்கான கட்டமைப்பு சீனாவை அதிகமாக ஆதரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். பிரிக்ஸ் நாடுகளிடையே பொருளாதார சக்தியில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வு இருப்பதால் இது நிகழ்கிறது.


சீனா ஒரு மேலாதிக்க நாடுகளின் பங்கை எடுத்து அமெரிக்காவிற்கு எதிராக கூட்டணியைப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளது என்று சஹாய் மேலும் கூறினார். இதற்கு நேர்மாறாக, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றவும் பேச்சுவார்த்தைகள் மூலம் வேறுபாடுகளைத் தீர்க்கவும் விரும்புகின்றன.


இந்தியா தனது நிலைப்பாட்டை விளக்க அமெரிக்காவுடன் ராஜதந்திர ரீதியாக ஈடுபட வேண்டும். வர்த்தக வழிமுறைகளை பன்முகப்படுத்துவது அமெரிக்காவிற்கு எதிரானது அல்ல என்பதை வலியுறுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். மாறாக, இது பன்முகத்தன்மை மற்றும் நிதி நிலைத்தன்மையை நோக்கிய ஒரு படியாகும் என்று அவர் கூறினார்.


அஜய் ஸ்ரீவஸ்தவா, குளோபல் டிரேட் ரிசர்ச் முன்முயற்சி என்ற சிந்தனைக் குழுவின் தலைவரும், முன்னாள் இந்திய அரசாங்க வர்த்தக அதிகாரியுமானவர். அவர் முன்பு தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் குறிப்பிடுவதாவது, "அமெரிக்காவின் நடவடிக்கைகள்தான் பல நாடுகளை அமெரிக்க டாலருக்கு மாற்று வழிகளைத் தேடத் தூண்டியுள்ளன. SWIF வலையமைப்பு போன்ற உலகளாவிய நிதி அமைப்புகளின் மீது தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஒருதலைப்பட்சத் தடைகளை விதித்த வரலாற்றை அமெரிக்கா கொண்டுள்ளது. ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் SWIF அமைப்பை அணுகுவதைத் தடுப்பதன் மூலம், அமெரிக்கா உலகளாவிய நிதி உள்கட்டமைப்பை திறம்பட ஆயுதமாக்கியுள்ளது. இது மற்ற நாடுகளை முறையான வர்த்தகத்தைத் தொடர மாற்று கட்டண முறைகளைக் கண்டறிய கட்டாயப்படுத்தியுள்ளது.




Original article:

Share:

முதல் நாளில் 80-க்கும் மேற்பட்ட ஆணைகளில் கையெழுத்திட்ட டிரம்ப்: செயலாக்க ஆணை (Executive Order) என்றால் என்ன? -அனகா ஜெயக்குமார்

 திங்களன்று தனது செயலாக்க ஆணைகளின் மூலம், டிரம்ப் மெக்சிகோவுடனான அமெரிக்க எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவித்தார் மற்றும் பிறப்புரிமை குடியுரிமையை (birthright citizenship) நிறுத்தினார். அத்தகைய ஆணைகள் எவ்வாறு சரியாக வேலை செய்கின்றன?


ஜனவரி 20 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றார். அவர் தொடர்ச்சியான செயலாக்க உத்தரவுகளை (executive orders) வெளியிட்டார் மற்றும் முந்தைய நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளை ரத்து செய்தார்.


உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்குள், அவர் 80 செயலாக்க ஆணைகளில் கையெழுத்திட்டார். அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவித்தல், பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் உலக சுகாதார அமைப்பிலிருந்து (World Health Organization (WHO)) விலகுதல் மற்றும் பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகியவை இதில் அடங்கும்.


அத்தகைய ஆணைகள் கொள்கைகளை எவ்வாறு செயல்படுத்த உதவுகின்றன? அவற்றை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியுமா? என்பதைக் கீழே  குறிப்பிட்டுள்ளன.


செயலாக்க ஆணைகள் (executive order) என்றால் என்ன?


அமெரிக்க வழக்கறிஞர் சங்கம் (American Bar Association) ஒரு செயலாக்க உத்தரவை "கூட்டாட்சி அரசாங்கத்தின் செயல்பாடுகளை நிர்வகிக்கும் அமெரிக்க அதிபரின் கையொப்பமிடப்பட்ட, எழுதப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட ஆணைகள்" என்று வரையறுக்கிறது.


அமெரிக்க அரசியலமைப்பின் பிரிவு II -ன் கீழ் அத்தகைய ஆணைகளை பிறப்பிக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது. மேலும், பிரிவு II குறிப்பிடுவதாவது, "செயலாக்க அதிகாரம் அமெரிக்காவின் அதிபரிடம் இருக்கும்." இந்தப் பிரிவு அதிபர்  பதவியையும் மற்றும் அவரது அதிகாரங்களை கோடிட்டுக் காட்டுகிறது. இந்த அதிகாரங்களில் இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருப்பது, மன்னிப்பு வழங்குதல் மற்றும் தண்டனைகளை குறைத்தல் ஆகியவை அடங்கும்.


செயலாக்க ஆணைகள் (Executive orders) எளிதான குறிப்புக்காக வரிசையில் எண்ணிடப்பட்டுள்ளன. அவை கூட்டாட்சி அரசாங்கத்தின் தினசரி இதழான ஃபெடரல் பதிவேட்டில் வெளியிடப்படுகின்றன. கூட்டாட்சி பதிவேட்டில் கூட்டாட்சி விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் உள்ளன. இந்த பதிவேட்டில் அதிபரால் வெளியிடப்பட்ட பிரகடனங்கள் மற்றும் செயலாக்க ஆணைககளும் உள்ளன. அறிவிப்புகள் விடுமுறை நாட்கள், நினைவுச் சின்னங்கள், கூட்டாட்சி அனுசரிப்புகள் மற்றும் வர்த்தகம் பற்றிய தகவல்களை வழங்குகின்றன. செயலாக்க உத்தரவுகள் கூட்டாட்சி அரசாங்கத்தின் குறிப்பிட்ட செயலாக்க விஷயங்களைக் குறிப்பிடுகின்றன.


செயலாக்க ஆணைகள் மற்றும் பிரகடனங்கள் இரண்டும் சட்டத்தின் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. அவை, கூட்டாட்சி நிறுவனங்களால் வழங்கப்பட்ட விதிமுறைகளைப் போன்றவை ஆகும்.


செயலாக்க ஆணையின் (executive order) தாக்கம் என்ன?


ஒரு செயலாக்க உத்தரவு உடனடியாக அல்லது சில மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரலாம். இது செயல்படுத்துவதற்கு ஒரு கூட்டாட்சி நிறுவனத்தின் உதவி தேவையா என்பதைப் பொறுத்தது. உதாரணமாக, 2022-ம் ஆண்டில், கருக்கலைப்பை அணுகுவதற்கான பாதுகாப்புகளை அமைக்குமாறு ஜோபைடன் சுகாதார நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். கருக்கலைப்பு உரிமையைப் பாதுகாத்த ரோ vs வேட் (Roe vs Wade) என்ற வழக்கை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்த பிறகு இது நடைமுறைக்கு வந்தது. அடுத்த சில மாதங்களில், இதை ஆதரிக்க முகமைகள் மூலம் விதிமுறைகளை உருவாக்கின. இந்த விதிமுறைகளில் ஒன்று கருக்கலைப்பு செய்யும் நபர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான விதியை உள்ளடக்கியது.


நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையேயான அதிகாரப் பிரிவினைக்கு ஏற்ப, நிறைவேற்று ஆணையின் மூலம் அதிபர் புதிய சட்டங்களை உருவாக்க முடியாது.


செயலாக்க ஆணைகளை சட்டரீதியாக சவால் செய்ய முடியுமா?


செயலாக்க ஆணைகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை. ஏனெனில், இந்த ஆணைகள் சட்டங்களால் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. நாடாளுமன்றத்தால் அவற்றை நேரடியாக ரத்து செய்ய முடியாது. தற்போதைய அமெரிக்க அதிபர் மட்டுமே புதிய ஆணையை வெளியிடுவதன் மூலம் செயலாக்க ஆணையை ரத்து செய்ய முடியும்.


எவ்வாறாயினும், ஒரு ஆணையானது அரசியலமைப்புக் கோட்பாடுகளை மீறுவதாக தோன்றினால் அல்லது அமெரிக்க அதிபரின் அதிகாரத்தை மீறுவதாக தோன்றினால் அவை நீதிமன்றங்களால் மறுபரிசீலனை செய்யப்படலாம். டிரம்ப் தனது முதல் அதிபர் பதவிக்கு 2017-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபோது, ​​அவர் தற்காலிகமாக பயணத் தடைக்கான உத்தரவில் கையெழுத்திட்டார். இந்தத் தடை ஏழு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுத்தது. இருப்பினும், கூட்டாட் சி நீதிமன்றம் இந்த உத்தரவின் சில பகுதிகளை நிறுத்தி வைத்தது. பின்னர், இது 2018-ம் ஆண்டில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டது.


அரசாங்க செயல்திறன் துறை (Department of Government Efficiency (DOGE)) என்ற ஆலோசனை அமைப்பை உருவாக்க டிரம்ப் திங்களன்று ஒரு செயலாக்க உத்தரவை பிறப்பித்தார். இந்த அமைப்பு கோடீஸ்வரர் எலோன் மஸ்க் தலைமையில் இருக்கும். இந்த ஆணை ஏற்கனவே சட்ட சவால்களை எதிர்கொண்டுள்ளது. அரசு நிறுவனங்களுக்கான நிதியைக் குறைத்து ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க எலான் மஸ்க் முன்பு பரிந்துரைத்துள்ளார். ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, அரசு ஊழியர் சங்கங்கள், கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பொது நலன் அமைப்புகள் அறிவிப்புக்குப் பிறகு சிறிது நேரத்திலேயே இது தொடர்பான வழக்குகளைத் தாக்கல் செய்தன.


சில சந்தர்ப்பங்களில், செயலாக்க ஆணையை (executive order) மீறுவதற்கான சட்டத்தை நிறைவேற்றுவதற்கும், கொள்கை நடவடிக்கைகளை செயல்படுத்த தேவையான நிதியை வழங்க மறுப்பதற்கும் நாடாளுமன்றம் சட்டத்தை இயற்றலாம். இருப்பினும், அமெரிக்க அதிபர் அத்தகைய சட்டத்தை தடை (veto) செய்வதற்கு தற்போதும் நடைமுறையில் உள்ளது.


கடந்த காலத்தில் செயலாக்க ஆணைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன?


செயலாக்க ஆணைகள் (executive order) அதிகாரப்பூர்வமாக ஆபிரகாம் லிங்கனின் அதிபர் பதவிக் காலத்தில் இருந்து வருகின்றன. அவர் 1861 முதல் 1865 வரை அதிபராக பணியாற்றினார். அக்டோபர் 1862-ம் ஆண்டில், அவர் "லூசியானாவில் ஒரு தற்காலிக நீதிமன்றத்தை நிறுவுவதற்கான செயலாக்க ஆணையை" வெளியிட்டார்.


அவருக்குமுன் இருந்த அதிபர்கள் இன்று செயலாக்க ஆணைகளாக அங்கீகரிக்கக்கூடிய அதிகாரப்பூர்வ உத்தரவுகளை வெளியிட்டனர். வில்லியம் ஹென்றி ஹாரிசனைத் தவிர, ஒவ்வொரு அதிபரும் ஏதோ ஒரு வகையில் செயலாக்க உத்தரவுகளை இயற்றியுள்ளனர். மிக நீண்ட காலம் அதிபராக இருந்த பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் (1933-45) 3,721 ஆணைகளை வெளியிட்டார். உட்ரோ வில்சன் மற்றும் கால்வின் கூலிட்ஜ் முறையே 1,803 மற்றும் 1,203 போன்ற குறிப்பிட்ட ஆணைகளுக்கு  கையொப்பமிட்டனர்.


டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் 220 செயலாக்க ஆணைகளில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




Original article:

Share:

பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (Prevention of Money Laundering Act (PMLA), 2002)

 1. பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 ((Prevention of Money Laundering Act (PMLA))) ஆனது ஜாமீன் வழங்குவதற்கான தரத்திற்கு விதிவிலக்கு அளித்தாலும், பணமோசடி வழக்குகளில் கடுமையான ஜாமீன் பெறுவதற்கான தேவைகள் பெண்களுக்குப் பொருந்தும் என்று அமலாக்க இயக்குநரகத்தை (Enforcement Directorate) உச்ச நீதிமன்றம் விமர்சித்தது.


2. பணமோசடி வழக்குகளில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) பிரிவு 45 ஜாமீன் பெற அனுமதிக்கிறது. இருப்பினும், 1967-ம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act(UAPA)) கடுமையான ஜாமீன் வழங்கும் தரத்தைப் போலவே, குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரும்போது தங்களுக்கு எதிராக வலுவான வழக்கு எதுவும் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.


3. பிரிவு 45(1) குறிப்பிடுவதாவது, இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஜாமீனில் அல்லது அவரது சொந்த பிணையில் விடுவிக்க முடியாது:


(i) அரசு வழக்கறிஞருக்கு ஜாமீன் விண்ணப்பத்தை எதிர்க்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


(ii) அரசு வழக்கறிஞர் ஜாமீனை எதிர்த்தால், அந்த நபர் அந்தக் குற்றத்தில் குற்றவாளி அல்ல என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன என்பதை நீதிமன்றம் நம்ப வேண்டும். கூடுதலாக, ஜாமீனில் இருக்கும் போது அந்த நபர் மற்றொரு குற்றத்தைச் செய்ய வாய்ப்பில்லை என்பதையும் நீதிமன்றத்திற்கு தெளிவுப்படுத்த வேண்டும்.


4. இருப்பினும், ஜாமீன் வழங்கும் தரத்திற்கு ஒரு முக்கியமான விதிவிலக்கு உள்ளது. "பதினாறு வயதிற்குட்பட்ட அல்லது ஒரு பெண் அல்லது நோய்வாய்ப்பட்ட அல்லது பலவீனமான ஒரு நபர், சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தினால், ஜாமீனில் விடுவிக்கப்படலாம்" என்று இந்தச் சட்டம் கூறுகிறது. இந்த விதிவிலக்கு பெண்கள் மற்றும் சிறார்களுக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code) கீழ் உள்ள விலக்குகளைப் போன்றது.




Original article:

Share:

இந்திய சட்டத்தில் 'அரிதினும் அரிது' என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 1. மேற்குவங்கத்தை உலுக்கிய இந்த வழக்கில் மரண தண்டனைக்கு சிபிஐ வலுவாக வாதிட்டது மற்றும் பல வாரங்கள் போராட்டங்கள் மற்றும் மருத்துவர்களின் வேலைநிறுத்தங்களுக்கு வழிவகுத்தது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொலையாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


2. "அரிதினும் அரிதான" வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்தகைய தண்டனையை வழங்குவதற்கு முன் நீதிமன்றம் "மோசமாக்கும்" (aggravating) மற்றும் "தணிக்கும்" (mitigating) சூழ்நிலைகள் இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த தீர்ப்பு 1980-ம் ஆண்டில் பச்சன் சிங் vs பஞ்சாப் மாநிலம் (Bachan Singh vs State of Punjab) வழக்கில் வழங்கப்பட்டது.


3. சூழ்நிலைகளைத் தணிப்பது மற்றும் மோசமாக்குவது பற்றிய புரிதல் காலப்போக்கில் மாறிவிட்டது. பல்வேறு முடிவுகள் மூலம் பட்டியலில் புதிய காரணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் பின்வருவன அடங்கும்:


குற்றம் சாட்டப்பட்டவர்களின் வயது (AGE OF ACCUSED) : ராம்நரேஷ் மற்றும் பிறர் vs சத்தீஸ்கர் மாநிலம் 2012 (Ramnaresh and Ors vs State of Chhattisgarh) மற்றும் ரமேஷ் vs ராஜஸ்தான் மாநிலம் 2011 (Ramesh vs State of Rajasthan) உள்ளிட்ட பல வழக்குகளில், உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் இளம் வயதைக் கருத்தில் கொண்டது. இந்த வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். அவர்கள் சீர்திருத்தம் செய்யப்படலாம் என்பதற்கான அறிகுறியாக உச்சநீதிமன்றம் கருதியது.


குற்றத்தின் தன்மை (NATURE OF OFFENCE) : சங்கர் காடேவில், தண்டனையை நிர்ணயிப்பதற்கு முன்பு நீதிமன்றங்கள் தற்போது இருக்கும் வழக்கை இதே போன்ற குற்றங்கள் சம்பந்தப்பட்ட பிற வழக்குகளின் தொகுப்போடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.

சீர்திருத்தத்தின் சாத்தியம் (POSSIBILITY OF REFORM) : பச்சன் சிங் வழக்கில், சீர்திருத்தத்திற்கான சாத்தியக்கூறு இல்லை என்பதை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் என்றும், அத்தகைய தண்டனையை விதிப்பதற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது சந்தோஷ் பாரியார் vs மகாராஷ்டிரா மாநிலம் 2009 (Santosh Bariyar vs State of Maharashtra) வழக்கில், குற்றவாளி எந்த சீர்திருத்த அல்லது மறுவாழ்வுத் திட்டத்திற்கும் ஏன் பொருத்தமானவர் அல்ல என்பதைக் காட்ட நீதிமன்றம் தெளிவான ஆதாரங்களை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


உங்களுக்குத் தெரியுமா?


1. பச்சன் சிங்கில், மரண தண்டனை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா என்பதை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்தது. பின், அது மரண தண்டனையை உறுதி செய்தது. ஆனால், சீர்திருத்தம் சாத்தியம் இல்லாத "அரிதினும் அரிதான" (rarest of rare) வழக்குகளில் மட்டுமே அது விதிக்கப்பட வேண்டும் என்று கூறியது.


2. ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு மரண தண்டனை எப்போது விதிக்கப்பட வேண்டும் என்பதற்கான குறிப்பிட்ட தரநிலைகளை அமைக்கவில்லை. இருப்பினும், நீதிமன்றங்கள் தங்கள் முடிவை எடுக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய "மோசமாக்கும்" (aggravating) மற்றும் "தணிக்கும்" (mitigating) சூழ்நிலைகளின் பட்டியலை அது வழங்கியது.


3. மோசமான சூழ்நிலைகள் நீதிமன்றத்தின் முடிவைப் பாதிக்கக்கூடிய காரணிகளாகும். இந்தக் காரணிகள் நீதிமன்றத்தை மரண தண்டனையைத் தேர்வு செய்ய வழிவகுக்கும். அவை,


- கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டு கணக்கிடப்பட்டு, மிகக் கொடூரமானதாகக் காட்டப்பட்டால்.


- கொலையில் "விதிவிலக்கான ஒழுக்கக்கேடு" இருந்தால்.


- குற்றம் சாட்டப்பட்டவர், ஒரு அரசு ஊழியர், காவல்துறை அதிகாரி அல்லது ஆயுதப்படையைச் சேர்ந்த ஒருவரை அவர்கள் பணியில் இருந்தபோது கொலை செய்ததாகவோ அல்லது தங்கள் கடமையைச் செய்யும்போது அவர்கள் செய்த சட்டப்பூர்வமான செயல்கள் காரணமாகவோ குற்றம் நிகழ்த்தினால் மரணதண்டனையாக தேர்வு செய்ய வழிவகுக்கும்.


4. சூழ்நிலைகளைத் தணிப்பது (Mitigating circumstances) ஒரு வழக்கைப் பாதிக்கும் மற்றும் மரண தண்டனைக்கான வாய்ப்பைக் குறைக்கும். இந்த காரணிகள் மரண தண்டனையிலிருந்து முடிவை மாற்ற உதவும்.


- குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் சாட்டப்பட்ட நேரத்தில் "தீவிர மன அல்லது உணர்ச்சி ரீதியான தொந்தரவின் கீழ்" இருந்தாரா?


- குற்றம் சாட்டப்பட்டவரின் வயது. அவர்கள் மிகவும் இளமையாகவோ அல்லது மிகவும் வயதானவராகவோ இருந்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது.


- குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதற்கான வாய்ப்பு இருந்தால்.


- குற்றம் சாட்டப்பட்டவரை சீர்திருத்துவதற்கான வாய்ப்பு.


- குற்றம் சாட்டப்பட்டவர் வேறொரு நபரின் அறிவுறுத்தல்களின்படி செயல்பட்டாரா?


- குற்றம் சாட்டப்பட்டவர் தங்கள் செயல்கள் தார்மீக ரீதியாக நியாயமானவை என்று நம்பியாரா?


- குற்றம் சாட்டப்பட்டவர் தங்கள் செயல்களின் குற்றத்தன்மையைப் புரிந்துகொள்வதைத் தடுக்கும் மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பதன் அடிப்படையில் மரண தண்டனையிலிருந்து முடிவை மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.




Original article:

Share:

உயர்நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளைக் கையாள தற்காலிக நீதிபதிகளை (ad-hoc judges) நியமிக்கலாம் : உச்சநீதிமன்றம்

 2021-ம் ஆண்டு தீர்ப்பை ஓரளவு மாற்றியமைக்க முடியும் என்று உச்சநீதிமன்ற அமர்வு கூறியது. இதில், குற்றவியல் தொடர்பான மேல்முறையீடுகளைத் தீர்ப்பதற்கு தற்காலிக நீதிபதிகள் நியமிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதிமன்ற சிறப்பு அமர்வு முடிவு செய்யும்.


2025 ஜனவரி 21 செவ்வாய்க்கிழமை, உச்சநீதிமன்றமானது உயர் நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளை நியமிக்க பரிந்துரையை வழங்கியது. இந்தப் பரிந்துரை, குற்றவியல் தொடர்பான மேல்முறையீடுகளின் பெரும் தேக்கத்தை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் குறித்த தரவுகளை மதிப்பாய்வு செய்தது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மட்டும் 63,000 குற்றவியல் மேல்முறையீடுகள் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றன என்று அவர்கள் குறிப்பிட்டனர்.


ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்குகளின் எண்ணிக்கை 13,000 ஆக இருப்பதாக இந்திய தலைமை நீதிபதி (CJI) குறிப்பிட்டார். இதேபோல், கர்நாடகாவில் 20,000 வழக்குகளும், பாட்னாவில் 21,000 வழக்குகளும், ராஜஸ்தானில் 8,000 வழக்குகளும், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் 21,000 குற்ற வழக்குகளும் நிலுவையில் இருப்பதாகவும் தலைமை நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.


2021-ம் ஆண்டு தீர்ப்பை ஓரளவு மாற்றியமைக்கலாம் என்று நீதிமன்ற அமர்வு கூறியது. இது தற்காலிக நீதிபதிகள் (ad-hoc judges) குற்றவியல் மேல்முறையீடுகளைக் கையாள அனுமதிக்கும். இந்த மேல்முறையீடுகள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலான நீதிமன்ற சிறப்பு அமர்வு தீர்மானிக்கப்படும்.


அங்கீகரிக்கப்பட்ட நீதிபதிகளில் 80% உடன் உயர்நீதிமன்றம் இயங்கினால், அதில் தற்காலிக நீதிபதியை நியமிக்கக் கூடாது என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.


"குற்றவியல் வழக்குகளைக் கையாளும் அமர்வுகளில் ஒரு வழக்கமான நீதிபதி தலைமை நீதிபதியாக இருப்பதோடு, தற்காலிக நீதிபதிகள் அமரும் சூழ்நிலையை மட்டுமே நாம் கவனிக்க வேண்டும். இந்த மாற்றம் எங்களுக்குத் தேவை" என்று நீதிமன்ற அமர்வு மேலும் கூறியது. ஜனவரி 28 அன்று அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியை உதவுமாறு நீதிமன்ற அமர்வு கேட்டுக் கொண்டது.


ஏப்ரல் 20, 2021 அன்று, உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை தற்காலிக நீதிபதிகளாக நியமிக்கலாம் என்று அது உத்தரவிட்டது. அவர்கள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை பணியாற்றலாம். இந்த நடவடிக்கை வழக்குகளின் தேக்கத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


விசாரணையின் போது, ​​இந்திய தலைமை நீதிபதி வழக்கு பட்டியலிடப்பட்டதற்கான காரணத்தை விளக்கினார். சில உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குற்றவியல் மேல்முறையீடுகளின் எண்ணிக்கையே இதற்குக் காரணம் என்று அவர் மேலும் கூறினார்.


2019-ம் ஆண்டு லோக் பிரஹாரி vs இந்திய ஒன்றியம் (Lok Prahari vs Union of India) என்ற வழக்கை இந்த நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கிற்கான தீர்ப்பு 2021-ம் ஆண்டு வழங்கப்பட்டது.


2021-ம் ஆண்டு தீர்ப்பை சுமூகமாக செயல்படுத்துவதை உறுதி செய்வதில் நீதிமன்ற அமர்வு இப்போது கவனம் செலுத்தி வருகிறது.


உயர் நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக ஒன்றிய அரசு பரிந்துரைத்த செயல்முறை "மிகவும் சிக்கலானது" என்று உச்சநீதிமன்றம் கூறியது. மேலும், எளிமையான நடைமுறையின் அவசியத்தை அது வலியுறுத்தியது. தற்காலிக நீதிபதிகளை நியமிப்பதன் உண்மையான நோக்கம் தோற்கடிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.


அரசியலமைப்பின் பிரிவு 224A அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. இது உயர் நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளை நியமிப்பது குறித்து கையாள்கிறது. ஒரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒருவரை நீதிபதியாகச் செயல்படுமாறு கோரலாம் என்று அரசியலமைப்பு விதி கூறுகிறது. இது எந்த நேரத்திலும் நடக்கலாம். இருப்பினும், தலைமை நீதிபதி முதலில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். மேலும், இதில் பரிந்துரைக்கப்பட்ட நபர், அந்த உயர் நீதிமன்றத்திலோ அல்லது வேறு ஏதேனும் உயர் நீதிமன்றத்திலோ முன்பு நீதிபதியாகப் பதவி வகித்திருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.


நியமனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது.


இந்த வழிகாட்டுதல்கள் பல சிக்கல்களைக் கையாண்டன. நியமன செயல்முறை எப்போது தொடங்கலாம் என்பதை அவை கோடிட்டுக் காட்டின. அவை பதவிக்காலம், நியமன நடைமுறை, சம்பளம் மற்றும் சலுகைகளையும் உள்ளடக்கியது. வழிகாட்டுதல்கள் அதிகபட்ச தற்காலிக நீதிபதிகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டன. இறுதியாக, வழக்குகளைக் கையாள்வதில் அவர்களின் பங்கை அவர்கள் வரையறுத்தனர்.




Original article:

Share:

வெற்றிக்கான விலை : கேரளாவின் மக்கள் தொகை மாற்றம் குறித்து…

 கேரளாவில் அதிகரித்து வரும் மகப்பேறு இறப்பு விகிதம் (maternal mortality ratio) இன்னும் கவலைக்குரியதாக இல்லை.


சில நேரங்களில், அதிகப்படியான நல்ல விஷயம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். நாட்டை வழிநடத்திய கேரளாவின் மக்கள்தொகை மாற்றம், இப்போது மாநிலத்திற்கு சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. மாநிலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதம் உயரத் தொடங்கியுள்ளது. குறைந்த கருவுறுதல் மற்றும் குறைந்த இறப்பு என்ற கட்டத்திற்கு நகர்ந்த முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது. கருவுறுதல் அளவு (fertility level) குறைந்ததால், பிறப்பு எண்ணிக்கையும் குறைந்தது. இது நாட்டிலேயே சிறந்ததாக இருந்த கேரளாவின் தாய்மார்களின் இறப்பு விகிதத்தை அதிகரிக்க வழிவகுத்தது. 1987-88ஆம் ஆண்டில் மொத்த மாற்று நிலை கருவுறுதல் விகிதத்தை எட்டுவதன் மூலம் கேரளா மக்கள்தொகை மாற்றத்திற்கு வழிவகுத்தது.  2000-களின் நடுப்பகுதியில் பிற தென் மாநிலங்கள் கேரளாவைத் தொடர்ந்து அடுத்த இடத்தில் இருந்தன. 2.1 என்ற மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate (TFR)) மாற்று நிலையாகக் கருதப்படுகிறது. அதன்படி, ஒரு பெண் தனது மக்கள்தொகை அளவைப் பராமரிக்க 2.1 குழந்தைகளைப் பெற்றிருக்க வேண்டும். கருவுறுதல் விகிதம் இதற்குக் கீழே இருந்தால், மக்கள்தொகை அளவு குறையும். இது தென் மாநிலங்களுக்கு அரசியல் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த கருவுறுதல் விகிதங்களுடன், மக்களவை இடங்கள் மக்கள்தொகை அடிப்படையில் மறுபகிர்வு (delimitation) செய்யப்படும்போது அது அவர்களுக்கு பாதகமாக இருக்கும் என்று கவலைப்படுகிறார்கள். மக்கள்தொகை மாற்றம் என்பது அதிக பிறப்பு விகிதங்கள் மற்றும் அதிக இறப்பு விகிதங்களிலிருந்து குறைந்த பிறப்பு விகிதங்கள் மற்றும் குறைந்த இறப்பு விகிதங்களுக்கு மாறுவதாகும். இந்த மாற்றம் கல்வி, பொருளாதார மேம்பாடு மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்களுடன் நிகழ்கிறது. இந்த மாற்றம் ஏற்கனவே உலகின் பெரும்பாலான பகுதிகளில் நிகழ்ந்துள்ளது. இது உலக மக்கள்தொகையை நிலைப்படுத்த உதவியது. இது மால்தஸின் கூற்றுப்படி வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வளர்த்த பிறகு, மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் பிறப்பு விகிதங்கள் குறையத் தொடங்கின.


மக்கள்தொகை மாற்றக் கோட்பாடு நான்கு நிலைகளைக் கொண்டுள்ளது:


1. நிலையான மக்கள்தொகை


2. விரைவான மக்கள்தொகை வளர்ச்சி


3. மக்கள்தொகை வளர்ச்சி சமநிலையில் உள்ளது


4. மக்கள்தொகை வளர்ச்சியில் சரிவு


தென்கொரியா போன்ற நாடுகள் இந்த நிலையை எட்டியுள்ள நிலையில், மக்கள்தொகை வளர்ச்சியை அதிகரிக்க போராடி வருகின்றன. குழந்தை பெறுவதை ஊக்குவிக்கும் முயற்சிகள்கூட பலனளிக்கவில்லை. ஏனெனில் கருவுறுதல் விகிதங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. மக்கள்தொகை மாற்றம் தொடங்கியவுடன் அதை நிறுத்துவது சாத்தியமில்லை. இருப்பினும், அரசாங்கங்கள் விளைவுகளுக்கு தயாராக இருக்க வேண்டும். இவை பொருளாதாரம் மற்றும் சமூகம் இரண்டையும் பாதிக்கும். வேலை செய்யும் வயது மக்கள் தொகை குறைந்து, முதியோர் மக்கள் தொகை அதிகரிக்கும் போது, ​​தேசிய வளங்கள் மீது அதிக அழுத்தம் இருக்கும். அரசாங்கங்கள் பொது நிதி மற்றும் சமூக ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். மேலும், அரசாங்கங்கள் சுகாதார நிதியையும் (Health-care financing) மேம்படுத்த வேண்டும். வீட்டு வேலைகளில் சமமான பங்களிப்பை ஊக்குவிக்கும் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.




Original article:

Share:

மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது… -டி. சுரேஷ் குமார்

 பிரதமர் பி.வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிதியமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அவர் அசாமில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1993ஆம் ஆண்டு, அவரை நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஒருவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இருப்பினும், மன்மோகன் சிங் அசாமின் "சாதாரண குடியிருப்பாளர்" (an ordinary resident) அல்ல என்று மனுதாரர் கூறினார். மனுதாரரின் கூற்றை நீதிமன்றம் நிராகரித்தது.


கடந்த மாதம் காலமான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் ஒரு சர்ச்சையை எதிர்கொண்டார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தார். 1991-ல், அவர் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு, பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அவரை நிதியமைச்சராக நியமித்தார். அதன் பிறகு, மன்மோகன் சிங் அசாமில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அந்த நேரத்தில், மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு வேட்பாளர்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று சட்டம் கூறியது. முன்னாள் அசாம் முதல்வர் ஹிதேஷ்வர் சைகியாவுக்குச் சொந்தமான கவுகாத்தியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்ததாக மன்மோகன் சிங் கூறினார். இருப்பினும், தேர்தலுக்கு முன்பு, அவர் அசாமில் வசிக்கும் ஒரு சாதாரண குடியிருப்பாளராக இல்லை.


நான்கு பிரதிநிதித்துவங்கள்

1993 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், மெட்ராஸ் குடிமக்கள் முன்னேற்றக் குழுவின் தலைவரான கஸ்தூரி ராதாகிருஷ்ணன், குடியரசுத்தலைவருக்கு நான்கு மேல்முறையீடு மனுக்களை அனுப்பினார். மன்மோகன் சிங்கை மாநிலங்களவையிலிருந்து  தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவருக்கு எந்த பதிலும் கிடைக்காததால், அவர் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை அணுகினார். அரசியலமைப்பின் பிரிவு 103(2)-ன் படி, தனது மேல்முறையீடு மனுக்களை தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கருத்துக்காக அனுப்புமாறு குடியரசுத்தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். 


மன்மோகன் சிங் அசாமின் "சாதாரண குடியிருப்பாளர்" அல்ல என்பது அவரது வாதமாக இருந்தது. எனவே, அவர் சட்டப்பூர்வமாக மாநிலத்தில் வாக்காளராகப் பதிவு செய்ய முடியாது. இதன் அடிப்படையில், அரசியலமைப்பின் பிரிவு 102(1)(e)-ன் கீழ் மன்மோகன் சிங் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகக் கருத வேண்டும் அவர் கூறினார்.


இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்குமுன், நீதிமன்றம் மூன்று விஷயங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. முதலாவதாக, அரசியலமைப்பின் 361வது பிரிவால் வழங்கப்பட்ட விலக்குரிமையைக் கருத்தில் கொண்டு, குடியரசுத்தலைவருக்கு எதிராக ஒரு நீதிப் பேராணை (writ) மனுவை  தாக்கல் செய்ய முடியுமா என்பதை நீதிமன்றம் பரிசீலித்தது. இரண்டாவதாக, மனுதாரர், கஸ்தூரி ராதாகிருஷ்ணனுக்கு பொது நல வழக்காக நீதிப் பேராணை மனுவை தாக்கல் செய்ய உரிமை உள்ளதா என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்தது. மூன்றாவதாக, மனுதாரர் தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கான தெளிவான கோரிக்கையை முன்வைத்தாரா என்பதை நீதிமன்றம் பரிசீலித்தது. இது அரசியலமைப்பின் பிரிவு 102(1)(e)-ஐ அடிப்படையாகக் கொண்டது. அத்தகைய கோரிக்கை முன்வைக்கப்பட்டால், மனுதாரரின் கோரிக்கையின்மீது குடியரசுத்தலைவர்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கடந்தகால வழக்குகளை முன்னுதாரணமாக மேற்கோள் காட்டி வாதிட்டார். தகுதி நீக்க குற்றச்சாட்டு இருக்கும்போது, ​​அது சம்பந்தமாக முடிவெடுப்பதற்கு முன்பு குடியரசுத்தலைவர் தேர்தல் ஆணையத்தின் கருத்தைப் பெற வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜு ஒரு குறிப்பிட்ட கேள்வியைக் கேட்டபோது, ​​மனுதாரரின் வழக்கறிஞர் கடந்த கால வழக்கை மேற்கோள் காட்டினார். அந்த வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி நியமித்தது ரத்து செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், நீதிமன்றம் மனுவை விசாரிப்பதற்கு எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்று வழக்கறிஞர் வாதிட்டார்.


விலக்கு நீட்டிக்கப்பட்டது


சமர்ப்பிப்புகளை மதிப்பாய்வு செய்த பிறகு, நீதிபதி ராஜு, "இந்த நீதிப் பேராணை மனுவில் கோரப்படும் நிவாரணத்தை  நிதிமன்றத்தால் இந்தக் கட்டத்தில் வழங்க முடியாது என்று கூறினார். பிரிவு 361 குடியரசுத்தலைவருக்கு விலக்குரிமை அளிக்கிறது (immunity conferred) என்று நீதிபதி விளக்கினார். இந்த விலக்குரிமை குடியரசுத்தலைவருக்கு தனது அதிகாரப்பூர்வ கடமைகளில் செய்யும் செயல்களுக்கு மட்டுமல்ல, தனது அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் செய்வதாகக் கூறப்படும் செயல்களுக்கும் பொருந்தும். 


“மனுதாரர் தனது கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்து குடியரசுத் தலைவருக்கு ஒரு குறிப்பிட்ட வழிகாட்டுதலைக் கேட்கிறார். பிரிவு 361-ன் படி, மனுதாரரின் வேண்டுகோளுக்கு ஏற்ப இதைச் செய்ய முடியாது. மேலும், வழக்கின் உண்மைகளின் அடிப்படையில், மனுதாரர் எதிர்பார்த்த அளவுக்கு அல்லது விரைவாக பதில் அளிக்காததால், குடியரசுத்தலைவர் தனது கடமைகளை செய்ய தவறினர் என்று கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை என்றும் இது நீதிமன்றத்தின் தலையீட்டை நியாயப்படுத்தாது" என்று நீதிபதி குறிப்பிட்டார்.


மனுதாரருக்கு நீதிப் பேராணை  மனுவை பராமரிக்க உரிமை இல்லை என்றும் நீதிமன்றம் நம்பியது. சென்னையில் உள்ள ஒரு சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிய மனுதாரர், அசாம் மக்களுக்காகப் பேச முடியாது என்று கூறினார். அசாம் மக்களால் நீதிமன்றத்தை தாங்களாகவே அணுக முடியவில்லை என்பது போல்  இந்த மனு  சித்தரிப்பதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். இந்த மனு விளம்பரம் பெறுவதை நோக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது என்றும் நீதிபதி நினைத்தார்.


குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை


"இறுதியாக, மனுதாரர் பிரிவு 102(1)(e)-ன் கீழ் எந்தவொரு தகுதியிழப்பும் இருப்பதாகக் காட்டவோ அல்லது நிரூபிக்கவோ இல்லை". இந்தத் தகுதியிழப்புக்கு பிரிவு 103(2)-ன் கீழ் குடியரசுத்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதி நீக்கம் நிரூபிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை முதலில் முடிவெடுப்பது நீதிமன்றமோ அல்லது குடியரசுத்தலைவரோ அல்ல என்பது உண்மைதான். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கருத்தைப் பெற்ற பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும். இருப்பினும், ஒவ்வொரு மனுவும், பிரிவு 102(1)(e)-ன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை அல்லது குற்றம் சாட்டப்படவில்லை என்றாலும், பிரிவு 103(2)-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை" என்று நீதிபதி கூறினார்.


நான்காவது பிரதிவாதியான மன்மோகன் சிங், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட எந்தவொரு சட்டத்தின் கீழும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்ற எந்தவொரு குறிப்பிட்ட கூற்றையும் பிரதிநிதித்துவங்களிலும் பிரமாணப் பத்திரத்திலும் சேர்க்கப்படவில்லை என்று நீதிபதி கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தகுதி நீக்கம் குறித்த சட்டம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (Representation of the People Act) பிரிவுகள் 8, 8A, 9, 9A, 10, 10A மற்றும் 11A-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. 


நான்காவது பிரதிவாதியான மன்மோகன் சிங்கை எந்தச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும், பிரிவு 103(2)-ன் கீழ் குடியரசுத்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். எனவே, இந்த நீதிப் பேராணை (writ) மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது என்றும் இந்த மனுவை நிராகரிப்பதாக நீதிபதி தனது உரையை முடித்தார். 2003ஆம் ஆண்டு, மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒரு மாநிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்ற தேவையை நீக்கி நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றியது. 2004ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர், பாஜக வேட்பாளராக சொந்த மாநிலம் அல்லாத வேறு மாநிலத்திலிருந்து (மத்தியப் பிரதேசம்)  மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதன்மையான நபர்களில் ஒருவராக இருந்தார்.




Original article:

Share: