ஆள்கடத்தல் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை எதிர்கொள்வதற்கு தரவு சார்ந்த கொள்கை உருவாக்கம் நமக்குத் தேவை. -டினா குரியகோஸ் ஜேக்கப்

 குற்றவாளிகள் மற்றும் அவர்களது குழுக்களின் அச்சுறுத்தல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் நீதி அமைப்பு இல்லாமல், பாராட்டத்தக்க கொள்கை முயற்சிகள் கூட சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தும். அவை வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும்.


ஒரு பிரச்சினையை ஒப்புக்கொள்வது தீர்வுகளுக்கு வழிவகுக்கும். சுரேந்திர மஞ்சி & பிற vs இந்திய ஒன்றியம் & இதர-2024 (Surendra Manji & Anr vs Union of India & Ors) வழக்கில் உச்ச நீதிமன்றம் எடுத்த அணுகுமுறை இதுதான், மாநிலங்களுக்கு இடையேயான கடத்தலில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் உட்பட கொத்தடிமைத் தொழிலாளர்களால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வில் ஏற்படும் குறிப்பிடத்தக்க தாமதங்களை எடுத்துக்காட்டுகிறது. மாநிலங்களுக்கு இடையேயான கடத்தல் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு விடுதலைச் சான்றிதழ்களை வழங்குவதை நிவர்த்தி செய்யும் ஒரு திட்டத்தை முன்வைக்க அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுடன் ஒரு கூட்டத்தை கூட்டுமாறு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (Ministry of Labour and Employment (MoLE)) அறிவுறுத்தப்பட்டது.


தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் (MoLE) தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் "அதிக முன்னேற்றம் ஏற்படவில்லை." செப்டம்பர் 2025-ல் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு அமைச்சகம் சமீபத்தில் அனுப்பிய வழிகாட்டுதல்களில், வழக்குகளை அடையாளம் காணும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் ஆய்வுகள், மதிப்பீட்டு ஆய்வுகள் மற்றும் விழிப்புணர்வு உருவாக்கும் திட்டங்களை மேற்கொள்ளவும், வழக்குகளை மறுபரிசீலனை செய்தல் மற்றும் கண்காணித்தல் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான வழிமுறைகளை உருவாக்கவும் அமைச்சகம் அவர்களை ஊக்குவித்தது. மாநிலங்களுக்கு இடையேயான கடத்தல் குற்றத்திற்கு எதிரான தரவு தலைமையிலான தலையீடுகள் மூலம் தெரிவிக்கப்பட வேண்டிய வரவேற்கத்தக்க பரிந்துரைகள் இவை குறிப்பிடுகின்றன.


தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau’s (NCRB)) அறிக்கைகள், சான்றுகள் சார்ந்த கொள்கை வகுப்பிற்கான தரவுகளின் முக்கியமான ஆதாரங்களாகும். அவற்றின் இயல்பிலேயே இந்தத் தரவுகள் குற்றத்தின் அளவைப் பற்றிய விரிவான பிரதிநிதித்துவமாக இல்லாவிட்டாலும், அனைவரும் சட்டப்பூர்வ வழியைத் தேர்ந்தெடுப்பதில்லை. இருப்பினும், இந்தத் தரவுகள் ஒரு விவேகமான கொள்கை கட்டமைப்பை உருவாக்க உதவும்.


கட்டாய உழைப்பு, வீட்டு வேலை, கட்டாய திருமணம், பிச்சை எடுப்பது, ஆபாசப் படங்கள் மற்றும் மனித உறுப்புகளை சட்டவிரோதமாக அகற்றுதல் உள்ளிட்ட ஆள்கடத்துதலின் பல்வேறு வடிவங்கள் மற்றும் நோக்கங்களைப் புகாரளிப்பதில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளது. ஆள்கடத்தல் குறித்த அவ்வப்போது அறிக்கையிடுவது, இப்போது பாதிக்கப்பட்டவர்களின் தன்மையையும் குற்றம் எவ்வளவு பரவலாக நிகழ்கிறது என்பதையும் காட்டுகிறது. மாநில வாரியான தரவைப் பிரிப்பதும், குற்றவியல் நீதி அமைப்பின் எதிர்வினையை ஆராய்வதும், குற்றவாளிகளைக் கையாள்வதில் காவல்துறை மற்றும் நீதிமன்றங்களின் பங்கு உட்பட இதில் முக்கியமானது. இந்தத் தகவல் கொள்கை மற்றும் நடவடிக்கையின் பல்வேறு அம்சங்களைத் தெரிவிக்க உதவுகிறது.


இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 370 மற்றும் 370A இன் கீழ், 2023 அறிக்கை உட்பட, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) அறிக்கையின் கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்ட ஆள்கடத்தல் குற்றங்கள் குறித்த ஒட்டுமொத்த தரவு, கட்டாய உழைப்புக்கு ஆளானவர்கள் (23,520) ஆள்கடத்தல் குற்றங்களில் மிகப்பெரிய சதவீதத்தை உருவாக்குகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அவர்களைத் தொடர்ந்து பாலியல் சுரண்டல் அல்லது விபச்சாரத்திற்காக கடத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் (17,944) உள்ளனர்.


தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) இந்தியாவில் குற்றம் 2023 அறிக்கையின்படி, 2,183 ஆள்கடத்தல் வழக்குகள் (human trafficking (HT)) பதிவாகியுள்ளன. இது 2022ஆம் ஆண்டு பதிவான ஆள்கடத்தல்  வழக்குகளை விட மூன்று சதவீதம் குறைவு. 2023-ம் ஆண்டில், அதிக எண்ணிக்கையிலான ஆள்கடத்தல் வழக்குகள் மகாராஷ்டிராவில் (388) பதிவு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து தெலுங்கானா (336), ஒடிசா (162), உத்தரபிரதேசம் (155) மற்றும் பீகார் (132) உள்ளன. ஒடிசாவில் அதிக எண்ணிக்கையிலான கடத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் (1,305) பதிவாகியுள்ளனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (935), டெல்லி (842), தெலுங்கானா (626) மற்றும் பீகார் (510) உள்ளன.


இந்தியாவில், 2023ஆம் ஆண்டில் மொத்தம் 6,288 பேர் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆள்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் இருவரும் அடங்குவர். 18 வயதுக்குட்பட்டவர்கள் கிட்டத்தட்ட 43 சதவீதம் பேர் ஆவர். 2023-ம் ஆண்டில் ஆண்களை விட (2,501) பெண்கள் (3,787) அதிகமாகக் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியா முழுவதும் மைனர் பெண்களை விட (1,013) அதிகமான மைனர் சிறுவர்கள் (1,674) கடத்தப்பட்டனர். டெல்லி (605), இராஜஸ்தான் (343), பீகார் (261) மற்றும் ஒடிசா (167) ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான மைனர் சிறுவர்கள் கடத்தப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


நாட்டில் நடக்கும் குற்றங்களின் வகைகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும் வகையில், கடத்தப்பட்டதற்கான நோக்கத்தையும் தேசிய குற்ற ஆவணக் காப்பக (NCRB) அறிக்கை வழங்கிறது. கடத்தலில் இருந்து மீட்கப்பட்ட 6,043 பேரில், 36 சதவீதம் பேர் பாலியல் சுரண்டலுக்காக கடத்தப்பட்டவர்கள் மற்றும் 28 சதவீதம் பேர் கட்டாய உழைப்புக்கு கடத்தப்பட்டவர்கள் ஆவர். மீட்கப்பட்ட கட்டாய உழைப்புக்கு ஆளானவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் டெல்லி (758), அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் (321), ஒடிசா (315), பீகார் (93) மற்றும் ஜார்கண்ட் (62) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கு இடையில், மூன்று மாநிலங்கள் கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வுத் திட்டம்-2021 (Rehabilitation of Bonded Labourers) இன் கீழ் 654 நபர்களுக்கு உடனடி பண உதவியுடன் மறுவாழ்வு அளித்ததாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (MoLE) தெரிவித்துள்ளது. இருப்பினும், மாநிலங்களில் செய்யப்படும் மறுவாழ்வின் நிலை மற்றும் கொத்தடிமை தொழிலாளர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான நோக்கம் இரண்டும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளுடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளன. இந்த முரண்பாடு தீர்க்கப்பட வேண்டும். மேலும் கட்டாய தொழிலாளர் கடத்தல் குறித்த தரவை முழுமையான, நிலையான மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பது இப்போது முக்கியமாக உள்ளது. 


கடத்தப்பட்டவர்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தி இதை மேற்கொள்ள வேண்டும். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் (MoLE) கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வுத் திட்டம் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இத்தகைய தரவு மிக முக்கியமானது. ஏனெனில் கணிசமான மறுவாழ்வு உதவியும் தண்டனையும் இணைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கடத்தப்படுவதாகக் கண்டறியப்பட்ட மாநிலங்களின் செயல்பாடு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு வழிமுறைகள் குறித்தும் சில கொள்கைரீதியில் கவனம் தேவை. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்படுவது மட்டுமல்லாமல், உள்ளூர் வாழ்வாதார விருப்பங்கள் மற்றும் அரசாங்கத்தின் சமூக நல சலுகைகளை அணுகுவதன் மூலம் அதிகாரம் அளிக்கப்படுகிறது.


2023-ம் ஆண்டில், கடத்தல் குற்றத்திற்காக 6,024 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணைகள் நிறைவடைந்த 683 வழக்குகளில், 10.5 சதவீதம் மட்டுமே தண்டனை பெற்றன. எனவே, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டவுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு பண மறுவாழ்வு வழங்களையும் இணைப்பது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மீது கவனம் செலுத்தும் நீதி அமைப்பு அவசியம். இதில் குற்றவாளிகள் மற்றும் அவர்களது குழுக்களின் மிரட்டலிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதும் அடங்கும். அத்தகைய பாதுகாப்பு இல்லாமல், நல்ல கொள்கை முயற்சிகள் கூட பயனற்றதாகவே இருக்கும்.  கொள்கைகள் யாருக்கு உதவ வேண்டுமோ அவர்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன என்பதை உறுதி செய்வதற்கு, உயிர் பிழைத்தவர்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகளின் உள்ளீடுகளும் முக்கியம்.


எழுத்தாளர் திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச இடம்பெயர்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (IIMAD) ஆலோசகர் மற்றும் மூத்த ஆராய்ச்சி உறுப்பினராக உள்ளார்.



Original article:

Share:

மேக விதைப்பு என்பது என்ன? -குஷ்பு குமாரி, ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


— பஞ்சாபில் விவசாய தீ விபத்துகள் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளன. செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 20 வரையிலான காலத்தில் சாகுபடி நெறிப்பு எரிப்பு நிகழ்வுகள் 353 மட்டுமே பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 1,445-ஆக இருந்தது. மேலும், 2020-ல் வரலாறு காணாத உச்சமாக 9,399-ஐ எட்டியது. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Agricultural Research Institute (IARI)) விவசாய தீ விபத்து தரவுகளை பராமரிக்க ஆரம்பித்த ஆண்டு இதுவாகும்.


— ஒட்டுமொத்தமாக, உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் டெல்லியில் இதுவரை 1,461 தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. உத்தரபிரதேசம் 557 நிகழ்வுகளுடன் (38%) அதிகமாக உள்ளது. மத்தியபிரதேசம் 285 நிகழ்வுகளை (20%) பதிவு செய்துள்ளது. மேலும், ராஜஸ்தான் 212 (15%) நிகழ்வுகளை பதிவு செய்துள்ளது. இந்த மாநிலங்களில் அனைத்திலும் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது.


— வடமேற்கு இந்தியாவில் வெள்ளம் மற்றும் கனமழை இந்த ஆண்டு பஞ்சாபில் நெல் அறுவடையை தாமதப்படுத்தியதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் பொருள், பல இடங்களில் பயிர்கள் இன்னும் அறுவடை செய்யப்படாததால், பண்ணை தீ விபத்துகளும் தாமதமாகிவிட்டன.


— ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை குழுவான Climate Trends மேற்கொண்ட பல ஆண்டுகளின் துகள் பொருள் (Particulate Matter (PM)) 2.5 போக்குகளின் பகுப்பாய்வு, தீபாவளிக்கு பிந்தைய மாசுபடுத்தி அளவுகள் இந்த ஆண்டு ஐந்து ஆண்டுகளில் மிக அதிகமாக இருந்ததை காட்டுகிறது.


— உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு 'பசுமை' பட்டாசுகளை அனுமதித்தது. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு வழிகாட்டுதலுடன், வானவேடிக்கைகள் இரண்டு நேர இடைவெளிகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று உறுதி செய்ய  ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியது. ஆனால், இந்த வழிகாட்டுதல் மீறப்பட்டது. தலைநகர் முழுவதிலும் இருந்து மீறல்கள் பதிவாகின.


— டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவின் (Delhi Pollution Control Committee (DPCC)) நேரடி தரவு, பல இடங்களில் PM2.5 மற்றும் PM10 செறிவுகள் பாதுகாப்பான வரம்புகளை 15 முதல் 18 மடங்கு மீறியதை காட்டியது.


— கடந்த சில ஆண்டுகளில், தாமதமான பருவமழைகள் கவலைக்குரிய புதிய இயல்பாக மாறியுள்ளன. இது ஆராய்ச்சியாளர்களால் பரவலாக காலநிலை மாற்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வானிலை மற்றும் காற்றின் தரத்தை முன்னறிவிப்பு மற்றும் ஆய்வு அமைப்பின் (System of Air Quality and Weather Forecasting And Research (SAFAR)) முந்தைய ஆய்வுகள், அத்தகைய தாமதமான பின்வாங்கல், அதைத் தொடர்ந்து வரும் எதிர்-சூறாவளி சுழற்சி (anti-cyclonic circulation) கீழே உள்ள காற்றை மெதுவாக்கும். குளிர்ந்த வெப்பநிலையின் கீழ் மேலும் ஆதரவைப் பெறுகிறது. இது காற்று குறைவதற்கும் சுருக்கப்பட்ட எல்லை அடுக்குக்கும் வழிவகுக்கிறது.


— இந்த இயக்கவியல் நகரத்தின் மீது ஒரு குடை போல செயல்படுகிறது. இது மாசுபடுத்திகள் இடைவிடாமல் குவிவதை அனுமதிக்கிறது. இருப்பினும், இந்த ஆண்டு வேறுபட்டது. 2025ஆம் ஆண்டு பருவமழை அதிகாரப்பூர்வமாக செப்டம்பரின் கடைசி வாரத்தின் தொடக்கத்தில் டெல்லியிலிருந்து விலகியது. 2002ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக விரைவான மழை  விலகல் இதுவாகும்.


— இதனால் இரண்டு வகையான நன்மைகள் ஏற்பட்டன. முதலாவதாக, ஒப்பீட்டளவில் வெப்பமான சூழ்நிலையில் ஆரம்பகால பின்வாங்கல் காற்றை நிலையாக வைத்திருந்தது. மேற்பரப்புக்கு அருகில் மாசுபடுத்திகள் குவிவதைத் தடுத்தது. இரண்டாவதாக, மேற்கத்திய-இடையூறு-தூண்டப்பட்ட (western-disturbance) மழைப்பொழிவு திரும்பப் பெற்ற பிறகு காற்றை தூய்மையாக்கி, மாசுபாடு குவிவதை மேலும் தடுத்தது.


— இந்தியா தற்போது எல் நினோ-தெற்கு ஊசலாட்டம் (El Niño-Southern Oscillation (ENSO )) நடுநிலை நிலைமைகளில் உள்ளது. இருப்பினும், பூமத்திய ரேகை பசிபிக் கடல் மேற்பரப்பு வெப்பநிலைகள் சாதாரண நிலைக்கு கீழே இருக்கின்றன. இது லா நினா கட்டத்தை நோக்கி மாறுவதற்கான வாய்ப்பைக் குறிக்கிறது. இது 2025ஆம் ஆண்டு அக்டோபர் நடுப்பகுதியில் 71 சதவீத நிகழ்தகவுடன் இருக்கும்.


— தேசிய மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தின் (National Institute of Advanced Studies (NIAS)) சமீபத்திய ஆய்வுகள், வலுவான லா நினா நிகழ்வுகள் வட இந்தியாவில் காற்றின் வேகத்தை அதிகரிப்பதாகக் காட்டுகின்றன. இது மாசுபாட்டைப் பரப்ப உதவுகிறது. இது குளிர்கால புகைமூட்டத்தை ஏற்படுத்தும் சிறிய துகள்களின் குவிப்பைக் குறைக்கிறது.


— பலவீனமான லா நினா எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். காலநிலை மாற்றத்துடனான அதன் தொடர்பு உண்மையாக இருந்தால், குளிர்காலம் நீடித்து கடுமையாக இருக்கலாம், மாசு குவிதல் மற்றும் தீவிர புகை மூட்ட நிகழ்வுகளுக்கு சாதகமான நிலைமைகளை உருவாக்குகிறது.


— டெல்லியின் காற்று மாசுபாடு பிரச்சனை கடினமானது மற்றும் எளிதில் நீங்காது. இது தண்ணீர் தெளித்தல், விலையுயர்ந்த புகை கோபுரங்கள் அல்லது மேக விதைப்பு பரிசோதனைகள் போன்ற தற்காலிக தீர்வுகளை விட நீண்டகால, முறையான தீர்வுகளின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.


— உண்மையான தீர்வு மாசுபாட்டை அதை அடிப்படையிலே நிறுத்துவதுதான். இதைச் செய்வது கடினம் என்றாலும், டெல்லி தனது காற்றின் தரத்தை விரைவில் சரியாக நிர்வகிக்கத் தொடங்கினால், அந்த மாநிலத்தில் உள்ள மக்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள்.

உங்களுக்குத் தெரியுமா?


— மேக விதைப்பு (Cloud seeding) என்பது செயற்கை மழை உருவாக்க ஒரு வகையான வானிலை மாற்ற தொழில்நுட்பமாகும். வளிமண்டலத்தில் ஏற்கனவே போதுமான மேகங்கள் இருந்தால் மட்டுமே மேக விதைப்பு வேலை செய்யும். மழை பெய்ய, வெள்ளி அயோடைடு, பொட்டாசியம் அயோடைடு, உலர் பனி அல்லது திரவ புரொப்பேன் போன்ற 'விதைகள்' எனப்படும் சிறிய துகள்கள் பயன்படுத்தப்படுகின்றன. மழையை உருவாக்கவும் மாசுபாட்டைக் குறைக்கவும் மேக விதைப்பைப் பயன்படுத்த டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.



— வண்ண-குறியீடு கொண்ட காற்றுத் தரக் குறியீடு  (Air Quality Index (AQI)) இந்தியாவில் 2014-ல் தொடங்கப்பட்டது. மேலும், இது பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்திற்கு காற்றின் நிலையை புரிந்துகொள்ளவும், அதன் தீவிரத்தன்மையின் அடிப்படையில் சூழ்நிலையை எதிர்த்துப் போராட என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை புரிந்துகொள்ளவும் உதவுகிறது. அளவிடப்படும் மாசுபடுத்திகளில் PM 10, PM 2.5, நைட்ரஜன் டை ஆக்சைடு, ஓசோன், கார்பன் போன்றவை அடங்கும். காற்றுத் தரக் குறியீட்டில் ஆறு வகைகள் உள்ளன.



Original article:

Share:

கடன் திருப்பிச் செலுத்தாததால் வீடுகளை இழப்பதில் இருந்து குடும்பங்களைப் பாதுகாத்தல்: கேரள ஒற்றை குடியிருப்பு பாதுகாப்பு மசோதா என்பது என்ன? -ஷாஜு பிலிப்

 கேரள அரசாங்கம் குடியிருப்பு பாதுகாப்பு நிதியை (Dwelling Place Protection Fund) உருவாக்கும். தற்போதுள்ள திட்டங்களின்படி, வருடத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.


கேரளா சட்டமன்றம் கேரளா ஒற்றை குடியிருப்பிட பாதுகாப்பு மசோதாவை (Kerala Single Dwelling Place Protection Bill) நிறைவேற்றியுள்ளது. இது நிதிச் சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு வட்டி அமலாக்கச் சட்டம், 2002 (Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002) இன் கீழ் வங்கி நிறுவனங்களால் கைப்பற்றப்படுவதிலிருந்து தவணை தவறிய கடனாளியின் அடமானம் வைக்கப்பட்ட சொத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக ஒரு மாநிலம் கடனாளிகளைப் பாதுகாக்க ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.


மசோதா


நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கடன்களை அடமானம் வைத்து அந்த தொகையை திருப்பிச் செலுத்தாததால், குடும்பங்கள் தங்கள் வீடு/வசிக்கும் இடத்தை வெளியேற்றுவதன் மூலம் தங்கள் ஒற்றை வசிப்பிடத்தை இழக்கும் சூழ்நிலையைத் தடுப்பதற்காக இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இது வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கேரள மாநில நிதி நிறுவனங்கள் (Kerala State Financial Enterprises (KSFE)) உள்ளிட்ட அனைத்து நிதி நிறுவனங்களையும் கொண்டிருக்கும்.


நிபந்தனைகள்


கடன் தொகை ரூ 5 லட்சத்தை தாண்டக்கூடாது மற்றும் கடனாளிக்கு நகராட்சி பகுதிகளில் 5 சென்ட்டுக்கும் அதிகமான நிலமும் கிராமப்புற பகுதிகளில் பத்து சென்ட்டுக்கும் அதிகமான நிலமும் இருக்கக்கூடாது. கடன், அதன் வட்டி, அபராத வட்டி மற்றும் பிற தற்செயலான செலவுகள் உள்ளிட்ட நிலுவைத் தொகை, ரூ.10 லட்சத்தை தாண்டக்கூடாது. விண்ணப்பதாரருக்கு வேறு சொத்துகள் இருக்கக்கூடாது மற்றும் அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


கல்வி, சிகிச்சை, திருமணம், வீடு கட்டுதல்/வீடு புதுப்பித்தல், விவசாயம் மற்றும் சுயவேலைவாய்ப்புக்கான வாழ்வாதாரத்தை உருவாக்குதல் தவிர வேறு எந்த காரணத்திற்காக எடுக்கப்பட்ட கடன்களுக்கும் இந்த பாதுகாப்பு வழங்கப்படாது.





கடனாளி (debtor) எவ்வாறு நிவாரணம் பெறுவார்


ஒரு குடும்பம்/தனிநபர், தனது வசிப்பிடத்தை அடமானம் வைத்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால், நிதி நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் பறிமுதல் அல்லது மீட்பு நடவடிக்கைகளின் காரணமாக தங்கள் வசிப்பிடத்தை இழக்கும் பட்சத்தில், அவர்கள் பாதுகாப்பிற்கு தகுதி உடைய நபர்களாக மாறுவார்கள்.


மாவட்ட மற்றும் மாநில அளவில் குடியிருப்பிட பாதுகாப்பு குழுக்கள் இருக்கும். பாதிக்கப்பட்ட ஒருவர் மாவட்ட அளவிலான குழுவிடம் விண்ணப்பம் அளிக்கலாம். இதில் மாவட்ட வளர்ச்சி ஆணையர் (district development commissioner) தலைவராகவும் விவசாயம், பஞ்சாயத்து, மாவட்ட பேரிடர் மேலாண்மை (district disaster management) மற்றும் முன்னணி வங்கியின் மூத்த அதிகாரிகள் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். இரு தரப்பினரையும் கேட்டு, சமரசம் (conciliation) ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கடனை திருப்பிச் செலுத்த முடியாது எனக் குழு நம்பினால், அந்த விண்ணப்பத்தை மாநிலக் குழுவிற்கு அனுப்பி, அரசு கடனை ஏற்றுக்கொள்ள பரிந்துரை செய்யப்படும்.



பரிந்துரையைப் பெற்றதும், மாநில அளவிலான குழு மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினரை கேட்டு வேண்டுகோளை நிராகரிப்பது அல்லது அரசாங்கம் கடனை ஏற்றுக்கொள்ள உத்தரவிடுவது என்ற முடிவை எடுக்கும். அரசாங்கத்தின் எந்தவொரு வீட்டுவசதி திட்டத்திலும் நிலுவையில் உள்ள கடனை உள்வாங்குவதற்கான ஏற்பாடும் இதில் உள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினர் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள தலைமை செயலாளர் (Chief Secretary) அல்லது கூடுதல் தலைமை செயலாளரிடம் (Additional Chief Secretary) மேல்முறையீடு செய்யலாம்.


கேரளா அரசாங்கம் குடியிருப்பிட பாதுகாப்பு நிதியை (Kerala Dwelling Place Protection Fund) உருவாக்கும் மற்றும் தற்போதுள்ள திட்டங்களின்படி, இதற்காக ஒரு வருடத்தில் ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.




ஏன் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது


2017ஆம் ஆண்டில், கேரளா சட்டமன்றம் மத்திய அரசை சர்பாசி சட்டம், 2002ஆம் ஆண்டு சட்டத்தில் (Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act (SARFAESI Act)) திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைத்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. ரூ.10 லட்சத்திற்கு குறைவான நிலுவைக் கடன்கள் மற்றும் ஐந்து சென்ட் வரையிலான குடியிருப்பு நிலங்களை சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்க மாநிலம் விரும்பியது.


இருப்பினும், மத்திய அரசு சிறிய அளவிலான கடனாளிகளுக்கு பயனளிக்க எந்த நிவாரணமும் அளிக்கவில்லை. இதன் காரணமாக, மாநிலம் தனது தனிப்பட்ட சட்டத் தீர்வை உருவாக்கியது. இந்த மசோதா மாநிலத்தின் லைப் திட்டத்தின் (Life Mission scheme) கீழ் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு கட்டப்பட்ட  4 லட்சம் வீடுகளுக்கும் பாதுகாப்பை வழங்க உள்ளது.



Original article:

Share:

பன்முகத்தன்மை செயலிழக்கவில்லை. -சஷி தரூர்

 80-வது ஐ.நா. பொதுச்சபை நடைபெறவிருக்கும் நிலையில், சவால்கள் தெளிவாக உள்ளன. உலகளாவிய ஒத்துழைப்பின் எதிர்காலம் நிறுவனங்களை சீர்திருத்துவதில் மட்டுமல்ல, அவற்றின் சட்டபூர்வமான தன்மையை மீட்டெடுப்பதிலும் தங்கியுள்ளது. இது தூதர்கள் மட்டுமல்ல, சாதாரண குடிமக்களின் கவலைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும்.


ஐக்கிய நாடுகள் சபை நாளை (அக்டோபர் 24) தனது 80-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், நியூயார்க்கில் நடைபெறும் பொதுச் சபையில் கொண்டாட்டமான மனநிலை எதுவும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்பு, காலனித்துவ நீக்கம் மற்றும் அமைதி காத்தல் ஆகியவற்றின் நம்பிக்கையுடன் ஒரு காலத்தில் எதிரொலித்த மண்டபம், இப்போது நிச்சயமற்ற தன்மை, விரக்தி மற்றும் அமைதியான எச்சரிக்கையுடன் பிரதிபலிக்கிறது. ஒரு காலத்தில் அழிவுக்கு எதிரான வெளிநாட்டு தூதவர்களின் வெற்றியின் அடையாளமாக நின்ற அமைப்பு இப்போது அதன் பொருத்தம் குறித்து சந்தேகங்களை எதிர்கொள்கிறது. அதன் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான அமெரிக்கா கூட அதன் உறுதிமொழிகளில் இருந்து பின்வாங்குவது போல் தெரிகிறது.


இதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன. மனித உரிமைகள் கவுன்சில் (Human Rights Council) மற்றும் யுனெஸ்கோ உள்ளிட்ட முக்கிய உலகளாவிய அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகியிருக்கிறது. மேலும், ஐ.நா. திட்டங்களுக்கான அதன் பங்களிப்புகளில் 80 சதவீதம் குறைப்பு உட்பட பிறவற்றிற்கான நிதியை முடக்கியுள்ளது அல்லது குறைத்திருக்கிறது. காசா தொடர்பான பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை அமெரிக்கா வீட்டோ அதிகாரம் மேற்கொண்டுள்ளது மற்றும் பாலஸ்தீன அதிகாரிகளின் விசாக்களை ரத்து செய்துள்ளது. மேலும், அமர்வின் தொடக்க நாளில் அதிபர் டொனால்ட் டிரம்பின் பேச்சு பலதரப்பு ஒத்துழைப்பின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் சூசன் ரைஸ் சமீபத்தில், "நாங்கள் பாரம்பரியமாக ஒரு உலகளாவிய வல்லரசாக விளையாடிய களங்களில் விளையாடவில்லை" என்று கூறினார்.


உலகம் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் அவசியத்தில் இருக்கும் நேரத்தில், பன்முகத்தன்மையில் சரிவு ஏற்படுகிறது. உக்ரைன், சூடான் மற்றும் பிற இடங்களில் மோதல்கள் சீர்குலைந்து, தீர்வுக்கான நம்பிக்கை குறைவாகவே உள்ளன. ஐ.நா. கட்டமைப்பிற்கு வெளியே, காசாவில் அமைதியை ஏற்படுத்த டிரம்ப் திட்டமிட்டார். இதற்கிடையில், காலநிலை மாற்றம் மோசமடைந்து வருகிறது, சமத்துவமின்மை வளர்ந்து வருகிறது. மேலும், தொழில்நுட்பம் அரசாங்கங்களால் நிர்வகிக்க முடியாத அளவுக்கு வேகமாக முன்னேறி வருகிறது. ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இதை "உலகளாவிய நெருக்கடி" என்று அழைத்தார். "புவிசார் அரசியல் பிளவுகள் அவற்றை திறம்பட நிவர்த்தி செய்ய அனுமதிக்காது" என்றும் அவர் எச்சரித்தார்.


இது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. பன்முகத்தன்மை சீர்குலையும் தருவாயில் உள்ளதா? மேலும் அது இனி ஒரு பொருட்டல்ல என்ற வளர்ந்து வரும் நம்பிக்கையை ஐ.நா. தக்க வைத்துக் கொள்ள முடியுமா?


இதற்கு பதிலளிக்க, பன்முகத்தன்மை என்றால் என்ன?, அது என்னவாகிவிட்டது? என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பன்முகத்தன்மை என்பது உலகளாவிய பிரச்சினைகள் ஆகும். இது மறைந்த ஐ.நா. பொதுச்செயலாளர் கோஃபி அன்னன் "problems without passports" என்று அழைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்வுகள் அனைத்து நாடுகளுக்கும் அவற்றின் அளவு அல்லது அதிகாரத்தைப் பொருட்படுத்தாமல் குரல் கொடுக்கும் நிறுவனங்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். இது இறையாண்மை சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் சட்டத்தின் ஆட்சியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். 193 உறுப்பு நாடுகளில் ஒவ்வொன்றும் ஒரு வாக்குரிமையைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபை, இந்த இலட்சியத்தின் மிகவும் புலப்படும் எடுத்துக்காட்டு ஆகும்.


இருப்பினும், இலட்சியமானது எப்போதும் நடைமுறை வரம்புகளை எதிர்கொண்டுள்ளது. ஐ.நா.வின் அமைப்பு, குறிப்பாக பாதுகாப்பு கவுன்சிலின் வீட்டோ அதிகாரம் சமத்துவமின்மையை உருவாக்குகிறது. அதன் தீர்மானங்கள் பெரும்பாலும் பிணைக்கப்படாதவை. மேலும், அதன் அமலாக்க வழிமுறைகள் பலவீனமானவை. பொதுச் சபை, அதன் அனைத்து அடையாளங்களுடனும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, நிலைநிறுத்துவதற்கான ஒரு மன்றமாக நிராகரிக்கப்படுகிறது. மேலும், பாதுகாப்பு கவுன்சில் 2025 உலக அரசியலை பிரதிபலிக்காமல், 1945-ன் புவிசார் அரசியல் யதார்த்தங்களை பிரதிபலிக்கிறது.


இருப்பினும், ஐ.நா. இதுவரை நிறைய சாதித்துள்ளது. மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம், நிலையான வளர்ச்சி இலக்குகள், பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் அனைத்தும் பலதரப்பு செயல்முறைகளிலிருந்து வந்தவை. ஐ.நா. மனிதாபிமான நிவாரணத்தை ஒருங்கிணைத்துள்ளது. இது வெற்றிகரமான அமைதி காக்கும் பணிகளை (peacekeeping missions) வழிநடத்தியுள்ளது. டஜன் கணக்கான சர்வதேச ஒப்பந்தங்களை முடிக்க உதவியுள்ளது மற்றும் உலகளாவிய சுகாதார பதில்களை ஊக்குவித்தது. ஐ.நா. சிறிய நாடுகள் பேசுவதற்கு ஒரு தளத்தை வழங்கியுள்ளது. மேலோட்டமாக இருந்தாலும் கூட, பெரிய நாடுகளுக்குக் கேட்கும் வாய்ப்பையும் இது வழங்கியுள்ளது.


ஆனால் இன்று, இந்த அமைப்பு பலவீனமடைந்து வருகிறது. அமெரிக்காவின் உறுதிப்பாட்டின் சரிவு, பிராந்திய கூட்டணிகளின் எழுச்சி மற்றும் இராஜதந்திர விதிமுறைகளின் பிரிவினையான தன்மை ஆகியவை பலதரப்பு கட்டமைப்பை பலவீனப்படுத்தியுள்ளன. அமெரிக்க-சீன போட்டி ஒரு நீண்ட மாதிரியை ஏற்படுத்துகிறது. இரு நாடுகளின் சக்திகளும் ஒத்த எண்ணம் கொண்ட கூட்டணிகளுடன் இருதரப்பு ஒத்துழைப்புகளை அதிகளவில் பின்பற்றுகின்றன. உக்ரைனில் சர்வதேச விதிமுறைகளை ரஷ்யா மீறுவதும், காசாவில் இஸ்ரேலின் பிடிவாதமும் உலகளாவிய நிறுவனங்களின் நம்பகத்தன்மையை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. ஒரு காலத்தில் பலதரப்புவாதத்தின் கோட்டையாக இருந்த ஐரோப்பாவிற்குள் கூட, தேசியவாத இயக்கங்கள் ஒருமித்த கருத்தை சவால் செய்கின்றன.


இந்தச் சூழலில், ஐ.நா. ஒரு நினைவுச்சின்னமாக மாறும் அபாயம் உள்ளது. இது உன்னத நோக்கங்களைக் கொண்ட ஆனால் குறைந்த செல்வாக்கு கொண்ட ஒரு நிறுவனமாகக் கருதப்படலாம். இருப்பினும் சரிவு தவிர்க்க முடியாதது அல்ல. பன்முகத்தன்மை பாதிப்படையக்கூடும், ஆனால் அது செயலிழக்கவில்லை. உலகத் தலைவர்கள் நியூயார்க்கில் தொடர்ந்து பேசவும், பேச்சுவார்த்தை நடத்தவும், திட்டமிட்டுச் செயல்படுவதற்கும், உலகளாவிய உரையாடலுக்கான தேவை இன்னும் உள்ளது என்பதைக் குறிக்கிறது. இந்த ஆண்டு தொடங்கப்பட்ட UN-80 முன்முயற்சி, ஆணைகளை ஒழுங்குபடுத்துதல், செலவுகளைக் குறைத்தல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிறுவன சீர்திருத்தம் செயல்திட்டத்தில் உள்ளது. இது ஒரு ஆடம்பரம் அல்ல, ஆனால் ஒரு தேவையானதாக உள்ளது.


மேலும், பன்முகத்தன்மையின் நெருக்கடி வெறும் நிறுவன ரீதியானது மட்டுமல்ல, அது தத்துவார்த்தமானது. இது உலகளாவிய ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதற்கும் தேசிய இறையாண்மைக்கும் இடையிலான ஆழமான பதற்றத்தை பிரதிபலிக்கிறது. டேவிட் குட்ஹார்ட் விவரிக்கிறபடி, எல்லையற்ற உலகில் செழித்து வளரும் "எங்கும்" மற்றும் பின்தங்கியதாக உணரும் "எங்காவது" இடையே ஒரு பிளவையும் இது பிரதிபலிக்கிறது. இடம், மதம் மற்றும் பாரம்பரியத்தில் வேரூன்றிய "எங்கேயோ", உலகளாவிய உயரடுக்குகள் மற்றும் தொலைதூர நிறுவனங்கள் மீது அதிகளவில் சந்தேகம் கொண்டுள்ளது. பிரெக்ஸிட் முதல் டிரம்பிசம் வரையிலான, அவர்களின் அரசியல் எழுச்சி, பன்முகத்தன்மை செயல்பட வேண்டிய நிலப்பரப்பை மறுவடிவமைத்துள்ளது.


பன்முகத்தன்மையின் எதிர்காலம் நிறுவனங்களை சீர்திருத்துவதில் மட்டுமல்ல, சட்டபூர்வமான தன்மையை மீண்டும் கட்டியெழுப்புவதிலும் சார்ந்துள்ளது. இது வெளிநாட்டு தூதகர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண குடிமக்களின் கவலைகளுக்கும் பதிலளிக்க வேண்டும். உலகளாவிய ஒத்துழைப்பு வெறும் சுருக்க விதிமுறைகளுக்கு மட்டுமல்லாமல், வேலைகள், பாதுகாப்பு, கண்ணியம் போன்ற உண்மையான நன்மைகளை வழங்க முடியும் என்பதை இது நிரூபிக்க வேண்டும். இது தொழில்நுட்பங்களில் குறைவாகவும், புரிந்துணர்வு கொண்டதாகவும் மாற வேண்டும்.


சுவாரஸ்யமாக, ஜப்பான் மற்றும் ஹங்கேரி போன்ற குடியேற்றம் மற்றும் உலகளாவிய ஈடுபாட்டிற்கு வரலாற்று ரீதியாக எதிர்ப்புத் தெரிவிக்கும் சில நாடுகள் பின்னடைவிலிருந்து சிறப்பாகப் பாதுகாக்கப்படலாம். ஜப்பானின் எச்சரிக்கையான ராஜதந்திரம் மற்றும் கலாச்சார ஒருமைப்பாடு மேற்கத்திய ஜனநாயக நாடுகள் எதிர்கொள்ளும் சில அழுத்தங்களிலிருந்து அதைப் பாதுகாத்துள்ளன. விக்டர் ஓர்பனின் கீழ் ஹங்கேரி, பலதரப்பு கட்டுப்பாடுகளை நிராகரிக்கும் ஒரு தேசியவாத நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது. இந்த மாதிரிகள் குறுகிய கால நிலைத்தன்மையை எதிர்கொள்ளக்கூடும். ஆனால், அவை நீண்டகால தனிமைப்படுத்தலுக்கும் ஆபத்தை விளைவிக்கின்றன.


அப்படியானால், ஒரு நடுத்தர பாதையைக் கண்டுபிடிப்பதே சவாலான நிலையாகும். கொள்கை ரீதியான ஆனால் நடைமுறைக்குரிய, உள்ளடக்கிய, ஆனால் பயனுள்ள ஒரு பன்முகத்தன்மை நமக்குத் தேவை. இதற்கு அமெரிக்கா மற்றும் சீனாவிலிருந்து மட்டுமல்ல, வளர்ந்து வரும் சக்திகள், பிராந்திய கூட்டணிகள் மற்றும் சிவில் சமூகத்திலிருந்தும் தலைமை தேவை. உதாரணமாக, இந்தியா, இறையாண்மை, ஒற்றுமை மற்றும் நிலையான வளர்ச்சியின் மதிப்புகளில் வேரூன்றிய மிகவும் சமமான உலகளாவிய ஒழுங்கை ஆதரிக்க ஒரு வாய்ப்பைக் கொண்டுள்ளது. இணையவெளி (cyberspace) முதல் விண்வெளி வரையிலான பிரச்சினைகள் குறித்த உலகளாவிய விவாதங்களுக்கு நமது நிபுணத்துவத்தையும் தலைமையையும் பங்களிக்க முடியும்.


80-வது ஐ.நா. பொதுச் சபை தொடங்கும்போது, ​​சவால்கள் தெளிவாகத் தெரிகின்றன. உலகம் பல நெருக்கடிகளை எதிர்கொள்கிறது, ஆனால் அதற்கு ஒத்துழைப்பு இல்லை. ஐ.நா. குறையுள்ளவைகளாக இருக்கலாம். இருப்பினும், டாக் ஹாமர்ஸ்க்ஜோல்ட் கூறியது போல், ஐ.நா. "மனிதகுலத்தை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வதற்காக அல்ல, மாறாக மனிதகுலத்தை நரகத்திலிருந்து காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது." ஐ.நா. சில நேரங்களில் தோல்வியடைந்தாலும், உலகின் பிரச்சினைகளைத் தீர்க்க அனைத்து நாடுகளும் ஒன்றிணையக்கூடிய ஒரே மன்றமாக அதுவே உள்ளது. அதைக் கைவிடுவது நமது பொதுவான மனிதகுலத்தின் கருத்தையே கைவிடுவதாகும்.


பன்முகத்தன்மை பலவீனமடைந்து கொண்டிருக்கலாம். ஆனால், அதுவும் மாறிக்கொண்டே இருக்கிறது. அதன்  தன்மை கடந்த காலத்திற்கான ஏக்கத்தைப் பொறுத்தது அல்ல, மாறாக தகவமைத்துக் கொள்வதைப் பொறுத்தது. இது புதுப்பித்தலைச் சார்ந்தது. மேலும், அந்த புதுப்பித்தல், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில், அனைத்து நாடுகளும் சுதந்திரமாக இல்லாவிட்டால் எந்த நாடும் முழுமையாக சுதந்திரமாக இருக்காது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் இந்த தகவமைப்பு தொடங்குகிறது.


எழுத்தாளர் ஐ.நா.வின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஆவார். அவர் தற்போது வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக உள்ளார்.



Original article:

Share:

சில்லறை உணவுப் பணவீக்கம் (retail food inflation) என்பது என்ன? -குஷ்பு குமாரி, ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


எல் நினோவால் (El Niño) தூண்டப்பட்ட நீண்ட கால வறண்ட வானிலையைத் தொடர்ந்து தொடர்ச்சியாக நல்ல பருவமழை பெய்ததாலும், 2023-24 ஆம் ஆண்டில் இயல்பை விட அதிக வெப்பநிலை நிலவியதாலும், விவசாயப் பொருட்களின் பொதுவாக பலவீனமான விலைப் போக்குகள் ஆகியவை இந்த சாதகமான தன்மையுடன் (softening) தொடர்புடையதாக உள்ளன. 


குறிப்பாக, தானியங்களின் விநியோகத்தில் முன்னேற்றம் தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், உண்மையான பற்றாக்குறை அரிசியில் உள்ளது. அரசு நிறுவனங்கள் அதிக அளவிலான அரிசியின் இருப்புகளை வைத்திருப்பது மட்டுமல்லாமல், இவை பொது விநியோக முறையின் (public distribution system) தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையானதை விட 4.4 மடங்கு அதிகமாக வைத்திருக்கிறது. மேலும், அவசரநிலை தேவைகளுக்காக இவை உள்ளன.


அக்டோபர் மாதம் தொடங்கிய புதிய பயிரின் அறுவடை மற்றும் சந்தைப்படுத்தல் தீபாவளிக்குப் பிறகு அதிகரிக்கும் போது அதிகப்படியான விநியோகம் தீவிரமடையும். இந்த காரீப் பருவத்தில் இந்திய விவசாயிகள் சாதனை அளவாக 44.2 மில்லியன் ஹெக்டேர் நெல் பயிரிட்டுள்ளனர். இது கடந்த ஆண்டு, பரப்பளவு 43.6 மில்லியன் ஹெக்டேராக இருந்தது.


மக்காச்சோளம் சாகுபடியில் இந்த உயர்வு இன்னும் அதிகமாக உள்ளது. இது 8.4 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 9.5 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. மாவுச்சத்து நிறைந்த தீவன தானியமான (starchy feed grain) மக்காச்சோளம் இப்போது கர்நாடகா மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களின் மொத்த சந்தைகளில் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,000–2,100க்கு விற்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு, விலை குவிண்டாலுக்கு ரூ.2,200–2,300 ஆக இருந்தது. மக்காச்சோளத்திற்கான அரசாங்கத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை (minimum support price (MSP)) குவிண்டாலுக்கு ரூ.2,400 ஆகும்.


2023-ம் ஆண்டின் இரண்டாம் பாதியிலும் 2024-ம் ஆண்டு முழுவதும், வீடுகளின் வாங்கும் சக்தியை குறைத்துக்கொண்டிருந்த உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் போராடியது. இந்தப் போராட்டத்தின் பலனாக, இப்போது பணவீக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இந்த முறை விவசாயிகள் மட்டும்தான் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள், நுகர்வோர் அல்ல.


மக்காச்சோளம், சோயாபீன்ஸ் மற்றும் பருத்தி அல்லது முத்து தினை (பஜ்ரா), புறா பட்டாணி (அர்ஹார்) மற்றும் பாசிப்பயறு (பச்சை பயறு) என கிட்டத்தட்ட அனைத்து பயிர்களும் அவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட மிகக் குறைவாக விற்கப்படுகின்றன. அதிகப்படியான பருவமழையால் நிரப்பப்பட்ட நிலத்தடி நீர்நிலைகள் மற்றும் நிரப்பப்பட்ட நீர்த்தேக்கங்களின் நன்மைகள் அடுத்த ராபி (குளிர்கால-வசந்த) பயிர் பருவத்திற்கும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்றாலும், இந்த உணர்வு எதிர்மறையான மனநிலையாக உள்ளது.


வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில், அரசாங்கம் தனது கவனத்தை மாற்றிக்கொள்ளலாம். நுகர்வோருக்கு ஏற்ற அணுகுமுறையிலிருந்து விவசாயிகளுக்கு அதிகளவில் ஆதரவளிக்கும் அணுகுமுறைக்கு மாறலாம். பருத்தி மற்றும் மஞ்சள்/வெள்ளை பட்டாணி மீதான இறக்குமதி வரிகளை மீட்டெடுப்பது சாத்தியமான நடவடிக்கைகளில் அடங்கும்.  விலை ஆதரவு திட்டத்தின் (price support scheme) கீழ் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் குறைந்தபட்ச ஆதரவு அடிப்படையிலான கொள்முதலை அரசாங்கம் அதிகரிக்கலாம்.


உங்களுக்குத் தெரியுமா? :


குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) என்பது சந்தை விலைகள் இந்த அளவை விடக் குறையும் போது, அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து அந்தப் பயிரை கொள்முதல் செய்ய/வாங்க வேண்டிய விலையாகும். குறைந்தபட்ச ஆதரவு விலைகள் (MSP) சந்தை விலைகளுக்கு ஒரு அடிப்படையை வழங்குகின்றன மற்றும் விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட "குறைந்தபட்ச" ஊதியத்தைப் பெறுவதை உறுதி செய்கின்றன. இதனால், விவசாயிகள் தங்கள் சாகுபடி செலவை மீட்டெடுக்கவும், சிறிய லாபத்தையும் ஈட்டவும் உதவுகிறது.


1960ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், இந்தியா உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்ட காலத்தில், குறைந்தபட்ச ஆதரவு விலை அறிமுகப்படுத்தப்பட்டது. பசுமைப் புரட்சி தொழில்நுட்பங்கள் (Green Revolution technologies) மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் ஆர்வமாக இருந்தது. ஆனால், குறைந்தபட்ச விலைக்கு உத்தரவாதம் அளிக்கப்படாவிட்டால் விவசாயிகள் அதிக மகசூல் தரும் கோதுமை அல்லது நெல் வகைகளை பயிரிட மாட்டார்கள் என்பதை உணர்ந்தது. கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை முதன்முதலில் 1966-67 ஆம் ஆண்டில் குவிண்டாலுக்கு ரூ. 54 என நிர்ணயிக்கப்பட்டது.


வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் (Commission for Agricultural Costs and Prices (CACP)) பரிந்துரைகளின் பேரில் மத்திய அரசால் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அறிவிக்கப்படுகின்றன.


வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் 22 முக்கியப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையையும், கரும்புக்கு நியாயமான மற்றும் லாபகரமான விலையையும் (Fair and Remunerative Price (FRP)) பரிந்துரைக்கிறது. மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Economic Affairs (CCEA)) குறைந்தபட்ச ஆதரவு விலைகளின் அளவு குறித்து இறுதி முடிவை எடுக்கிறது.


குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் வரும் பயிர்கள் பின்வருமாறு. அவை,


  • 7 வகையான தானியங்கள் (நெல், கோதுமை, மக்காச்சோளம், பஜ்ரா, ஜோவர், ராகி மற்றும் பார்லி),


  • 5 வகையான பருப்பு வகைகள் (சனா, அர்ஹார்/துர், உளுந்து, மூங் மற்றும் மசூர்),


  • 7 எண்ணெய் வித்துக்கள் (கடுகு, நிலக்கடலை, சோயாபீன்ஸ், சூரியகாந்தி, எள், குங்குமப்பூ, நைஜர் விதைகள்),


  • 4 வணிகப் பயிர்கள் (பருத்தி, கரும்பு, கொப்பரை, மூல சணல்)



Original aritcle:

Share:

மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைகள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு அரசாங்கத்தின் தோல்விகளை எடுத்துக்காட்டுகிறது.

 குடிமக்களில் பாதிக்கப்படக்கூடிய ஒரு பிரிவின் உரிமைகள் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நீதிமன்றங்கள் பலமுறை தலையிட வேண்டியிருப்பது, நிர்வாகத்தின் மீது மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.


"மாற்றுப் பாலினத்தை" அங்கீகரித்து திருநங்கைகளின் உரிமைகளை ஆதரித்த முக்கியமான தேசிய சட்ட சேவைகள் ஆணைய (National Legal Services Authority (NALSA)) தீர்ப்பு வெளிவந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகியும், அவர்களைப் பாதுகாப்பதற்கான 2020 விதிகள் (Transgender Persons (Protection of Rights) Rules) தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் மாற்றுப் பாலினத்தவர்கள் இன்னும் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். அக்டோபர் 17 அன்று, மாற்றுப்பாலினத்தவர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் (Transgender Persons (Protection of Rights) Act), 2019 மற்றும் அதன் விதிகளைப் புறக்கணித்ததற்காக உச்ச நீதிமன்றம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை விமர்சித்தது, இது "மாற்றுப் பாலினத்தவர் சமூகத்தின் மீது மிகவும் அக்கறையற்ற அணுகுமுறையைக்" காட்டுகிறது என்று குறிப்பிட்டது.


 ஜேன் கௌஷிக், ஒரு மாற்றுப்பாலினத்தவர்.  ஒரு வருடத்திற்குள் தான் பாகுபாட்டை எதிர்கொண்டதாகவும், உத்தரபிரதேசம் மற்றும் குஜராத்தில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளில் தனது வேலையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டதை அடுத்து, நீதிமன்றத்தை அணுகினார். மாற்றுப் பாலினத்தவர் சட்டம் (Trans Act) எவ்வளவு சிறப்பாகப் பின்பற்றப்படுகிறது என்பதை சரிபார்க்க உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை உருவாக்கியது. இந்தக் குழு சம வாய்ப்புகளுக்கான நியாயமான கொள்கையை பரிந்துரைக்கும். இந்தக் குழு தங்கள் வரைவைச் சமர்ப்பித்த மூன்று மாதங்களுக்குள் மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். சொந்தக் கொள்கைகள் இல்லாத அமைப்புகளுக்கு, ஒன்றிய அரசின் கொள்கை கட்டாயமாக அமல்படுத்தப்படும்.


சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பாதுகாப்புகளை செயல்படுத்த ஒரு குழுவை உருவாக்குவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். ஆனால், இது ஒரு பெரிய தோல்வியை எடுத்துக்காட்டுகிறது. அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட கண்ணியமான மற்றும் சமத்துவமான வாழ்க்கையை மாற்றுப்பாலினத்தவர்கள் கண்ணியத்துடனும் சமத்துவத்துடனும் வாழ உதவுவதில் அரசாங்கம் உறுதியாக இல்லை. தேசிய சட்ட சேவைகள் ஆணைய (National Legal Services Authority (NALSA)) தீர்ப்பு மற்றும் மாற்றுப்பாலினத்தவர் விதிகள் (Trans Rules) மாற்றுப்பாலினத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு, மருத்துவ பராமரிப்பு மற்றும் கல்வியில் பாகுபாட்டிற்கு எதிரான பாதுகாப்புகளை கட்டாயப்படுத்துகின்றன. 


இருப்பினும், நடைமுறைப்படுத்தல் மிகவும் மோசமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, விதிகள் அரசுகள் மருத்துவமனைகளில் தனி கழிவறைகள் மற்றும் வார்டுகளை (wards) கட்ட வேண்டும் என்று கோருகின்றன. இருப்பினும், காலக்கெடுவை கடந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாகியும், இது ஒரு கனவாகவே உள்ளது. மேலும், மாற்றுப்பாலினத்தவர் நலவாழ்வு வாரியங்களை (transgender welfare boards) அமைப்பதையும் கட்டாயப்படுத்தின. 2024ஆம் ஆண்டு வரை 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே இதை நடைமுறைப்படுத்திருந்தன. எனினும், இவை இன்னும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதிகாரத்துவ அக்கறையின்மை மற்றும்/அல்லது உணர்வின்மை காரணமாக மருத்துவ பராமரிப்பு, வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் கடவுச்சீட்டு (Passport) மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் போன்ற ஆவணங்கள் மறுக்கப்பட்டதால், நாடு முழுவதும் மாற்றுப்பாலினத்தவர்கள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது.


குடிமக்களில் பாதிக்கப்படக்கூடிய ஒரு பிரிவின் உரிமைகள் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நீதிமன்றங்கள் பலமுறை தலையிட வேண்டியிருப்பது, நிர்வாகத்தின் மீது மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. விதிகள் மற்றும் குழுவின் கொள்கைகளை  நடைமுறைப்படுத்துவது அரசின் முக்கியப் பொறுப்பாகும்.



Original article:

Share:

BMW நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்குப் பிறகு லோக்பால் அமைப்பு கவனம் பெறுகிறது. -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்திகளில் ஏன்?


முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ எம் கான்விலார் தலைமையிலான 7 உறுப்பினர்களைக் கொண்ட ஊழல் எதிர்ப்பு குறைதீர்ப்பாளர் லோக்பால் (Lokpal) அமைப்பு, 7 BMW கார்களை வாங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் லோக்பால் அமைப்பு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.


‘இந்தியாவின் லோக்பால் அமைப்பிற்கு 7 BMW 3 series 330Li-கார்களை வழங்குவதற்காக புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து வெளிப்படையான ஒப்பந்தங்களை வரவேற்கிறது என்று அக்டோபர் 16 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ‘long wheelbase’ மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ள ‘M Sport’ வகை கார்களுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.


முக்கிய அம்சங்கள்:


1. லோக்பால் என்பது இந்தியாவில் ஒரு சுதந்திரமான ஊழல் எதிர்ப்பு அமைப்பாகும். இது மக்கள் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் ஒன்றிய அரசுடன் தொடர்புடைய அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரிக்கவும் உருவாக்கப்பட்டது. இது 2010ஆம் ஆண்டில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையிலான ஜன் லோக்பால் இயக்கத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013-ன் கீழ் நிறுவப்பட்டது. இந்தியா தனது முதல் லோக்பால் அமைப்பை 2019-ல் பெற்றது.


2. 2013ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ், லோக்பால் ஒரு தலைவர் மற்றும் 8 உறுப்பினர்களுக்கு குறையாமல் உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும். இவர்களில் 50% நீதித்துறை உறுப்பினர்களாக (judicial members) இருக்க வேண்டும். லோக்பாலின் உறுப்பினர்களில் 50%-க்கும் குறையாமல் பட்டியல் சாதியினர்  (Scheduled Castes), பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Classes), சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் இருக்க வேண்டும் என்று சட்டம் குறிப்பிடுகிறது.


3. இந்தச் சட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் ஒவ்வொரு மாநிலமும் லோக்ஆயுக்தா என்ற அமைப்பை அமைக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த அமைப்பு மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட வேண்டும். சில பொது அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் தொடர்பான புகார்களை லோக்ஆயுக்தா கையாளும் என்று சட்டம் கூறுகிறது.


4. சட்டத்தின் பிரிவு 11, லோக்பால் விசாரணை இயக்குநர் தலைமையில் ஒரு விசாரணைப் பிரிவை அமைக்க வேண்டும் என்று கூறுகிறது. ஊழல் தடுப்புச் சட்டம், 1988 (public servants under the Prevention of Corruption Act) இன் கீழ் பொது ஊழியர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றங்கள் குறித்து முதற்கட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்கு இந்தப் பிரிவு பொறுப்பாகும். விசாரணை இயக்குநர் இந்திய அரசின் இணைச் செயலாளருக்குக் குறையாத பதவியில் இருக்க வேண்டும். மேலும், லோக்பால் பரிந்துரைக்கும் விசாரணைகளைக் கையாள இவர் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுவார்.


5. இந்தச் சட்டத்தின் கீழ் லோக்பாலுக்கு அளிக்கப்படும் புகார்களின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு எதிரான வழக்குகளைக் கையாள, வழக்குத் தொடுப்பு இயக்குநர் (Director of Prosecution) தலைமையிலான ஒரு வழக்குத் தொடுப்புப் பிரிவையும் இது கொண்டுள்ளது.


லோக்பால் தினம்


இந்த ஆண்டு, இந்திய லோக்பால் நிறுவப்பட்ட தினத்தைக் குறிக்கும் வகையில் ஜனவரி 16 முதல் முறையாக லோக்பால் தினமாகக் (Lokpal Day) கொண்டாடப்பட்டது. 2014ஆம் ஆண்டு இந்த நாளில்தான் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாக்கள் சட்டம், 2013-ன் பிரிவு 3 அமலுக்கு வந்ததன் மூலம் இந்திய லோக்பால் நிறுவப்பட்டது.


6. லோக்பாலின் அதிகார வரம்பு (jurisdiction) பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல், மத்திய அரசின் A, B, C மற்றும் D குழு ஊழியர்கள் வரை பரந்த அளவிலான அரசு பணியாளர்களை உள்ளடக்கியது. லோக்பாலின் சொந்த உறுப்பினர்கள் கூட ‘பொது ஊழியர்’ (public servant) என்ற வரையறையின் கீழ் உள்ளனர்.


7. பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எழுந்தால் அதை விசாரிப்பதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டு சர்வதேச உறவுகள், வெளிப்புற மற்றும் உள் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, அணுசக்தி மற்றும் விண்வெளி தொடர்பானதாக இருந்தால் லோக்பால் விசாரிக்க முடியாது. மேலும், முழு லோக்பால் அமர்வும் விசாரணையைத் தொடங்குவதைக் கருத்தில் கொண்டு குறைந்தது 2/3  பங்கு உறுப்பினர்கள் அதற்கு அனுமதி அளிக்காவிட்டால், பிரதமருக்கு எதிரான புகார்கள் விசாரிக்கப்படாது.


8. பிரதமருக்கு எதிரான அத்தகைய விசாரணை (நடத்தப்பட்டால்) இரகசியமாக நடத்தப்பட வேண்டும். புகார் நிராகரிக்கப்பட வேண்டும் என்று லோக்பால் முடிவுக்கு வந்தால், விசாரணையின் பதிவுகளை பகிரப்படவோ  அல்லது எந்த ஒரு நபருக்கும் கிடைக்கச் செய்யவோ கூடாது.


9. தற்போதைய லோக்பாலில் அனுமதிக்கப்பட்ட எட்டு உறுப்பினர்களில் ஏழு பேர் உள்ளனர். தலைவர் நீதிபதி கான்வில்கரைத் தவிர, அமைப்பில்  உள்ள ஆறு உறுப்பினர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சய் யாதவ்; கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி; கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எல் நாராயண சுவாமி; முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா; குஜராத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் பங்கஜ் குமார் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் அஜய் திக்ரே ஆகியோர் உள்ளனர்.


10. லோக்பால் சட்டத்தின் பிரிவு 7, லோக்பால் தலைவரின் சம்பளங்கள், படிகள் மற்றும் சேவை நிபந்தனைகள் இந்திய தலைமை நீதிபதிக்கு உள்ளதைப் போலவே இருக்கும் என்று கூறுகிறது மற்ற உறுப்பினர்களுக்கான அது உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு உள்ளதைப் போலவே இருக்கும். தலைமை நீதிபதிக்கு ஒரு Mercedes  கார் வழங்கப்படுகிறது. அதே சமயம் மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு BMW 3 series கார்கள் வழங்கப்படுகின்றன. இது லோக்பால் அமைப்பு அறிவிப்பு விடுத்த அதே வகை கார் ஆகும்.


குறைதீர்ப்பாளர் அமைப்பின்  தோற்றம்


1. குறைதீர்ப்பாளர் (ombudsman) அமைப்பு 1809-ல் ஸ்வீடனில் (Sweden) தோன்றியது. மேலும், அதிகாரத்துவத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராக ஜனநாயக அரசாங்கத்தின் அரணாக பல நாடுகளால் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. குறைதீர்ப்பாளர் என்பது ஒரு Swedish வார்த்தை, இது நிர்வாக மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளுக்கு எதிரான புகார்களைக் கையாள சட்டமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரியைக் குறிக்கிறது.


2. இந்தியாவில், 1966ஆம் ஆண்டு நிர்வாக சீர்திருத்த ஆணையம் (Administrative Reforms Commission (ARC)), குடிமக்களின் குறைகளைத் தீர்க்கவும் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க சேவைகளுக்குள் ஊழலை எதிர்த்துப் போராடவும் குறைதீர்ப்பாளர் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு அமைப்பின் யோசனையை முதன்முதலில் முன்மொழிந்தது. மத்திய அளவில் லோக்பால் மற்றும் மாநில அளவில் லோகாயுக்தா என்ற இரண்டு சிறப்பு அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.


3. 1968 முதல் 2001ஆம் ஆண்டு வரை, குறைதீர்ப்பாளர் அமைப்பை உருவாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் எட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும், பல ஆண்டுகளாக, பல்வேறு மாநிலங்கள் தங்கள் சொந்த லோக்ஆயுக்தாக்களை அமைத்தன. இது லோக்பாலுக்கு சமமானதாகும். மகாராஷ்டிரா லோக் ஆயுக்தா மற்றும் உபயுக்தா சட்டம் என்ற சிறப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி 1971ஆம் ஆண்டில் லோக் ஆயுக்தாவை உருவாக்கிய முதல் மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.


Original article:

Share:

ஒளியைப் பதிவுசெய்தல்: இந்தியாவின் சூரிய மின்சக்தித்துறை குறித்து…

 இந்தியா தனது தொழிற்துறையைத் தக்கவைக்க சூரிய மின்சக்தியை வழங்கும் நாடாக மாற வேண்டும்.


இந்தியா பெருமை கொள்ளக்கூடிய வெற்றிகளில் ஒன்று உள்நாட்டு சூரிய மின்சக்தி தொழிற்துறையை உருவாக்குவதாகும். 2017ஆம் ஆண்டில், மின்சக்தியின் ஒரு யூனிட் விலை நிலக்கரி சக்தியை விட குறைவாக இருந்தது. இது தரையில் பொருத்தப்பட்ட சூரிய மின்சக்தி திட்டங்களில் முதலீடு செய்யும் வணிகங்களிடையே புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியது. 2024-25ஆம் ஆண்டில், சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை (International Renewable Energy Agency) இந்தியா 1,08,494 ஜிகாவாட்-மணி நேரம் (gigawatt-hour (Gwh)) சூரிய ஆற்றலை உற்பத்தி செய்ததாக அறிவித்தது. 


இது ஜப்பானின் 96,459 ஜிகாவாட்-மணி நேரத்தை விட அதிகமாக இருந்ததாகவும் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக 3-வது பெரிய சூரிய சக்தி உற்பத்தியாளராக இந்தியாவை மாற்றியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (Ministry of Renewable Energy) கூற்றுப்படி, இந்தியாவின் சூரிய மின்கல கட்டமைப்புகள் (solar module panels) தயாரிக்கும் திறன் 2014ஆம் ஆண்டில் 2 ஜிகாவாட் ஆக இருந்து. இது 2025ஆம் ஆண்டில் 100 ஜிகாவாட் ஆக உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாத நிலவரப்படி இந்தியாவின் உள்நாட்டில் நிறுவப்பட்ட சூரிய சக்தி திறன் 117 ஜிகாவாட் ஆக இருந்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இருப்பினும், உண்மையான உற்பத்தி திறன் நம்பிக்கையான மதிப்பீடாகும். தற்போதைய உண்மையான உற்பத்தி திறன் சுமார் 85 GW ஆகும்.


இந்தியா தனது காலநிலை உறுதிமொழிகளின் (climate commitments) ஒரு பகுதியாக, 2030ஆம் ஆண்டில் தனது மின்சார தேவைகளில் பாதி அளவை புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து பெறுவதாக அறிவித்துள்ளது. இதன் அளவு  500 ஜிகாவாட் ஆகும். இதில் 250 ஜிகாவாட் 280 ஜிகாவாட் சூரிய சக்தியிலிருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருள் இந்தியா 2030ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் 30 ஜிகாவாட்டை சேர்க்க வேண்டும். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வருடத்திற்கு 17 ஜிகாவாட் முதல் 23 ஜிகாவாட் வரை மட்டுமே சேர்க்க முடிந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி போதுமானதாக இருக்க வேண்டும் என்றாலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் சூரிய மின்கல கட்டமைப்புகள் சீனாவை விட 1.5 முதல் 2 மடங்கு வரை அதிக விலை கொண்டவை. 


ஏனெனில், சீனாவின் மிகப்பெரிய திறன், தேவையான மூலப்பொருட்களின் கட்டுப்பாடு மற்றும் மிக உயர்ந்த உற்பத்திகள் இதற்கு முக்கிய காரணியாகும். 2024ஆம் ஆண்டில், இந்தியா தனது சிறந்த சாதனையாக அமெரிக்காவுக்கு சுமார் 4 ஜிகாவாட் அளவிலான சூரிய மின்கல கட்டமைப்புகளை ஏற்றுமதி செய்தது. அதுவும் அமெரிக்காவின் தற்காலிக வர்த்தக கட்டுப்பாடுகள் காரணமாகவே சாத்தியமானது. இதனை சீனாவின் 2024 ஆம் ஆண்டில் சுமார் 236 ஜிகாவாட் அளவிலான ஆண்டு ஏற்றுமதியுடன் ஒப்பிடலாம். 


அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் உருவாகவிருக்கும் பெரிய உற்பத்தி திறன், புதிய சந்தைகள் இல்லாமல் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளக்கூடும். இந்த நிலையில், இந்தியா ஆப்பிரிக்காவிற்கு ‘சூரிய ஆற்றல் வழங்குநராக’ (solar supplier) முன்னிலை வகிக்க முயற்சிப்பது சர்வதேச சூரிய கூட்டமைப்பு (International Solar Alliance) மூலம்  ஒரு நல்ல நடவடிக்கையாகும். இந்தியாவின் பிரதம மந்திரி குஸும் திட்டம் (PM Kusum scheme) கிராமப்புறங்களுக்கு சூரிய ஆற்றல் மற்றும் பிரதம மந்திரி சூர்யா கர் திட்டம் (PM Surya Ghar scheme) நகர்ப்புறங்களில் கூரையிலான சூரிய ஆற்றல் ஆகியவை இன்னும் நாட்டுக்குள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும், அவை ஆப்பிரிக்காவில் முன்மாதிரியாக பயன்படுத்தப்படலாம். அங்கு போதுமான கிராமப்புற மின்சாரம் இல்லாததால், அதன் விளைநிலங்களில் 4% மட்டுமே பாசனம் மூலம் பயன்படுத்த முடிகிறது. இது சூரிய ஆற்றல் இயங்கும் இந்திய மின்பம்புககளுக்கான பெரிய வாய்ப்பாக இருக்கிறது. சீனா இன்னும் ஆப்பிரிக்காவில் முக்கியமான சூரிய ஆற்றல் வழங்குநராக இருந்தாலும், இந்தியா 2-வது நம்பகமான நாடாக தன்னை நிலைநிறுத்தி, தன் தொழில்துறையில்  நீடித்த வளர்ச்சிக்கான வாய்ப்பை பெற வேண்டும்.


Original article:

Share: