கேரளாவில் PM-SHRI திட்டம் தொடர்பான சர்ச்சை : அந்த பள்ளிக் கல்வித் திட்டம் என்ன?, சில மாநிலங்கள் அதை ஏன் எதிர்க்கின்றன? -அபிநய ஹரிகோவிந்த்

 சமக்ர சிக்ஷா திட்டத்தின் (Samagra Shiksha scheme) கீழ் நிதி வெளியிடுவதை PM-SHRI திட்டத்தை செயல்படுத்தலுடன் ஒன்றிய அரசு இணைத்துள்ளது. இந்தத் திட்டம் எதைப் பற்றியது, அது ஏன் எதிர்ப்பை எதிர்கொள்கிறது என்பது இங்கே குறிப்பிட்டுள்ளது.


கேரளாவில் அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக PM-SHRI பள்ளிகள் திட்டம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கேரளாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPI(M)) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசாங்கம் இப்போது இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளது. அரசுப் பள்ளிகளை 'PM-SHRI' பள்ளிகள் என்று முத்திரை குத்த அனுமதிக்க மறுத்ததற்கு இது ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.


இந்த முடிவு எதிர்க்கட்சியான காங்கிரஸிடமிருந்து மட்டுமல்ல, இடது ஜனநாயக முன்னணி (LDF) கட்சிகளுக்கும் விமர்சனங்களைத் தூண்டியுள்ளது. இந்த முடிவை ஆலோசிக்கப்படவில்லை என்ற காரணத்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. மேலும், இடதுசாரிகளின் இதுவரையிலான நிலைப்பாடு தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ஐ எதிர்ப்பதாகவே இருந்து வருகிறது என்றும் அது வாதிட்டது.


இதற்கிடையில், கேரள அரசு PM-SHRI திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (Memorandum of Understanding (MoU)) கையெழுத்திட்டுள்ளது.


PM-SHRI திட்டம் என்றால் என்ன?


2022-ல் PM SHRI பள்ளிகளின் திட்டத்தை (PM-SHRI) ஒன்றிய அரசு அங்கீகரித்தது. தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ன் முக்கிய அம்சங்களை "வெளிப்படுத்தும்" 14,500 பள்ளிகளை உருவாக்குவதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். இந்தப் பள்ளிகள் தங்கள் பிராந்தியங்களில் உள்ள மற்றவர்களுக்கு "மாதிரி" (model) பள்ளிகளாகச் செயல்படும். இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் ஒன்றிய, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களால் நிர்வகிக்கப்படும் தற்போதைய தொடக்க, இடைநிலை மற்றும் உயர் இடைநிலைப் பள்ளிகளை உள்ளடக்கியது.


இதுவரை, 13,070 பள்ளிகள் PM-SHRI பள்ளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில், 1,533 பள்ளிகள் கேந்திரிய வித்யாலயாக்கள் (Kendriya Vidyalayas) மற்றும் நவோதயா வித்யாலயாக்கள் (Navodaya Vidyalayas) ஆகும். இவை ஒன்றிய அரசால் நிர்வகிக்கப்படுகின்றன.


ஒரு 'PM-SHRI' பள்ளி தேசிய கல்விக் கொள்கையின் (NEP) பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும். கல்வி அமைச்சகம் இதற்கான தெளிவான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. கற்பித்தல் மற்றும் கற்றல் புதுமையான முறைகளைப் பயன்படுத்த வேண்டும். இவற்றில் கலை சார்ந்த மற்றும் விளையாட்டு அடிப்படையிலான கற்றல் அடங்கும். பள்ளிகள் தொழிற்கல்வியை வழங்க வேண்டும் மற்றும் திறன் ஆய்வகங்களை அமைக்க வேண்டும். பள்ளிகள் இளைய வகுப்புகளில் உள்ள குழந்தைகள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் திறன்களை அடைவதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், அவை ஆய்வகங்கள் மற்றும் கணினிகள் உள்ளிட்ட போதுமான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை வழங்க வேண்டும். சோதனை மற்றும் மதிப்பீடுகள் மாணவர்களின் திறன்களை அளவிடுவதில் கவனம் செலுத்தும், மேலும் மனப்பாடம் செய்வதை சார்ந்து இருக்கக்கூடாது. இந்த பள்ளிகள் இடைநிற்றல் இல்லாநிலையை இலக்காகக் கொண்டு கற்றல் விளைவுகளை மேம்படுத்த வேண்டும்.


பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை, PM-SHRI பள்ளிகள் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பையோ அல்லது தேசிய கல்விக் கொள்கையின் (NEP) அடிப்படையில் மாநிலத்தால் உருவாக்கப்பட்ட மாநில பாடத்திட்டக் கட்டமைப்பையோ பின்பற்ற வேண்டும்.


அமைச்சகம் ஒரு பள்ளித் தர மதிப்பீட்டு கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இது திட்டத்தின்கீழ் பள்ளிகள் அவற்றின் முன்னேற்றம் மற்றும் மாற்றத்தைக் கண்காணிக்க உதவும் ஒரு சரிபார்ப்புப் பட்டியலாக இது செயல்படுகிறது. ஒரு பள்ளி பெறும் நிதியின் அளவு இந்த மதிப்பீட்டுக் கட்டமைப்பில் அதன் மதிப்பெண்ணைப் பொறுத்து அமைகிறது.


இந்தத் திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன.


எந்த மாநிலங்கள் PM-SHRI திட்டத்தை செயல்படுத்துகின்றன?


கேரளா அதை செயல்படுத்த ஒப்புக்கொண்ட நிலையில், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் மட்டுமே தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


சமக்ர சிக்ஷா திட்டத்தின் (Samagra Shiksha scheme) கீழ் டெல்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளத்திற்கு நிதி விடுவிப்பதை கல்வி அமைச்சகம் நிறுத்திய பிறகு, ஆம் ஆத்மி கட்சி ஆளும் பஞ்சாப் மற்றும் டெல்லி கடந்த ஆண்டு PM-SHRI திட்டத்தை செயல்படுத்த ஒப்புக்கொண்டன.


இந்தத் திட்டத்தில் பள்ளி பெயர்களில் 'PM-SHRI' என்ற முன்னொட்டு சேர்க்கப்பட வேண்டும் என்பதால் மேற்கு வங்காளம் இந்த திட்டத்தை எதிர்த்தது. ஆனால், அதற்கான செலவில் ஒரு பகுதியை மாநில அரசு ஏற்க வேண்டும்.


கடந்த ஆண்டு மார்ச் மாதம், கேரளா PM-SHRI திட்டத்தை செயல்படுத்த விருப்பம் தெரிவித்தது. ஆனால், பின்னர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய கல்விக் கொள்கையின் (NEP) அனைத்து விதிகளையும் மாநிலம் "முழுமையாக" செயல்படுத்தும் என்ற அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. திமுக ஆளும் தமிழ்நாடு இதே போன்ற காரணங்களுக்காக PM-SHRI திட்டத்தை எதிர்த்தது. தேசிய கல்விக் கொள்கையை (NEP) முழுமையாக செயல்படுத்த விரும்பவில்லை என்று கூறியது.


கேரளாவில், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசாங்கத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPI(M)) மற்றும் பாஜக இடையே "தொடர்பு" இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், "இந்த மாற்றத்தை கட்டாயப்படுத்திய அழுத்தம் என்ன" என்பதை முதலமைச்சர் வெளிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


இதற்கிடையில், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளன.


இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் நிபந்தனைகள் என்ன?


சமக்ர சிக்ஷா திட்டத்தின் (Samagra Shiksha scheme) கீழ் நிதி வெளியிடுவதை PM-SHRI செயல்படுத்தலுடன் ஒன்றிய அரசு இணைத்துள்ளது. சமக்ர சிக்ஷாவுக்கு ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் 60:40 என்ற விகிதத்தில் நிதியளிக்கின்றன. சமக்ர சிக்ஷா நிதி, கல்வி உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவதை ஆதரிக்கிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்களை வழங்குவதுடன், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஆதரவளிக்கிறது. மேலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவின்கீழ் மாணவர்களைச் சேர்ப்பதற்கான தனியார் பள்ளிகளின் கட்டணத்தை இது திருப்பிச் செலுத்துகிறது. PM-SHRI-ஐ செயல்படுத்த மறுத்த மாநிலங்கள் சமக்ர சிக்ஷாவின் கீழ் நிதியைப் பெறவில்லை.


2024-25 மற்றும் 2025-26-ஆம் ஆண்டுகளில் சமக்ர சிக்ஷா திட்டத்திற்காக கேரளா மாநிலமானது ஒன்றிய அரசிடமிருந்து இதுவரை எந்த நிதியையும் பெறவில்லை. மேலும், 2023-24-ஆம் ஆண்டிற்கான அதன் ஒதுக்கீட்டில் ஒரு பகுதியை மட்டுமே பெற்றுள்ளது. இது சமக்ர சிக்ஷாவிற்கு சுமார் ரூ.1,150 கோடி ஆகும்.


கேரள பொதுக் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி இந்த ஆண்டு மே மாதம் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், சமக்ர சிக்க்ஷா நிதியின் மாநிலப் பங்கானது, கல்வி உரிமைச் சட்டம் (RTE) உரிமைகள், பாடப்புத்தகங்கள் மற்றும் சம்பளம் போன்ற அத்தியாவசிய செலவினங்களுக்கு கேரளா பயன்படுத்தியுள்ளது என்று கூறினார். "ஆனால் சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான உதவித்தொகை, சீருடைகள் மற்றும் பள்ளி மானியங்களுக்கான நிதி போன்ற சில உறுதிமொழிகள் நிலுவையில் உள்ளன," என்று அவர் கூறினார்.


சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் நிதி தேவையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முடிவு இணைக்கப்பட்டுள்ளது என்று சிவன்குட்டி இந்த வாரம் கூறினார்.


PM-SHRI-ஐ செயல்படுத்த ஒன்றிய அரசுடன் மாநிலம் கையெழுத்திட வேண்டிய புரிந்துணர்வு ஒப்பந்தம், தேசிய கல்விக் கொள்கையை (National Education Policy (NEP)) முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோருகிறது.


"மாநில அரசு செயல்படுத்தக்கூடிய புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை மட்டுமே மாநில அரசு செயல்படுத்தும்," என்று சிவன்குட்டி இந்த வாரம் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். இதில், பள்ளிகளில் பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை மாநில அரசு தொடர்ந்து தீர்மானிக்கும் என்று கூறினார்.



Original article:

Share:

துராந்து எல்லைக்கோடு (Durand Line) பற்றி . . . -ரோஷ்ணி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


சிந்து சமவெளி நாகரிக காலத்திலிருந்தே இந்திய துணைக்கண்டத்தையும் ஆப்கானிஸ்தானையும் வர்த்தகம் மற்றும் கலாச்சார அம்சங்கள் இணைத்தன. பேரரசர் அசோகரின் ஆட்சிக் காலத்தில், மௌரியப் பேரரசு காந்தஹார் வரை விரிவடைந்தது. ஆப்கானிய பாறைகளில் கிரேக்க மொழியில் பொறிக்கப்பட்ட அவரது ஆணைகளில், இந்தப் பகுதிகள் ஒரு காலத்தில் பகிரப்பட்ட கலாச்சார உலகின் ஒரு பகுதியாக எவ்வாறு அமைந்தன என்பதைக் காட்டுகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய பண்டைய காந்தாராப் பகுதி, ஒரு காலத்தில் புத்த கலை மற்றும் கற்றலின் சிறந்த மையமாக இருந்தது. 2001-ல் தாலிபான்களால் அழிக்கப்பட்ட பாமியன் புத்தர்கள், அந்தப் பகிரப்பட்ட பாரம்பரியத்தின் அடையாளங்களாக 1,500 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நின்றனர்.


இஸ்லாம் 7-ம் நூற்றாண்டில் இப்பகுதியை அடைந்தது. ஆனால், இந்த தொடர்புகளை முடிவுக்குக் கொண்டுவரவில்லை. ஆப்கானிய ஆட்சியாளர்கள் இந்திய வரலாற்றில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தினர். கஸ்னாவிடுகள், குரிட்கள், லோடிகள் மற்றும் முகலாயர்கள் அனைவரும் டெல்லியில் இஸ்லாம் வம்சங்களை நிறுவ கணவாய்களைக் கடந்து சென்றனர். காபூலை ஆண்ட பாபர், பின்னர் 1526-ல் முகலாயப் பேரரசை நிறுவினார்.


ஆப்கானிஸ்தானும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துடன் வலுவான பிணைப்பைப் பகிர்ந்து கொண்டது. ‘எல்லை காந்தி’ (Frontier Gandhi) என்று அழைக்கப்படும் கான் அப்துல் கஃபார் கான், குதாய் கித்மத்கர் இயக்கத்திற்கு தலைமை தாங்கினார். இந்த இயக்கம், பஷ்டூன்களை அகிம்சை வழியில் எதிர்ப்பிற்காக அணிதிரட்டினார் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸுடன் நெருக்கமாகப் பணியாற்றினார்.”


“பிரிவினைக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் நுழைவதற்கு எதிராக வாக்களித்த ஒரே நாடு ஆப்கானிஸ்தான் ஆகும். பஷ்டூன் சுயாட்சியை ஆதரித்ததால் காபூல் துராந்து எல்லைக்கோட்டை (Durand Line) அங்கீகரிக்க மறுத்துவிட்டது. வடமேற்கு எல்லை மாகாணம் ஆப்கானிஸ்தானில் சேராதது குறித்த அதன் ஏமாற்றத்தையும் பிரதிபலித்தது.”


1949-ம் ஆண்டில், சுதந்திர இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது பாகிஸ்தானின் மேற்கத்திய நாடுகளின்  கூட்டமைப்புகள் மீதான அவநம்பிக்கையில் அவர்களை ஒன்றிணைத்தது. பனிப்போரின்போது, ​​இரு நாடுகளும் மாஸ்கோவை நோக்கி சாய்ந்தன. பாகிஸ்தான் ஆதரவுபெற்ற போர்க்குணத்திற்கு எதிரான ஒரு தடையாகவும், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆப்கானிஸ்தான் மண் பயன்படுத்தப்படாது என்பதற்கான உத்தரவாதமாகவும் சோவியத் ஒன்றியத்தின் இருப்பை இந்தியா கருதியது. இதற்கிடையில், அமெரிக்கா-சவூதி ஆதரவு பெற்ற ஜிஹாத்துக்கு பாகிஸ்தான் "முன்னணி நாடாக" மாறியது.


“1989-ல் சோவியத் ஒன்றிய வீரர்கள் பின்வாங்கியபோது, ​​ஆப்கானிஸ்தான் குழப்பத்தில் மூழ்கியது. இந்தியா முந்தைய ஆட்சியில் முதலீடு செய்த இந்தியா, செல்வாக்கு இல்லாமல் இருந்தது. ஆனால், 1996-ல், தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றியபோது, ​​இந்தியா மீண்டும் ஆப்கானிய விவகாரங்களில் நுழைந்தது. ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் சேர்ந்து, அஹ்மத் ஷா மசூத் தலைமையிலான வடக்கு கூட்டணியை இந்தியா ஆதரித்தது.


இந்தியாவின் ஆதரவு ஒரு இராஜதந்திர கணக்கீட்டை அடிப்படையாகக் கொண்டது. தாலிபான்களால் ஆளப்படும் ஆப்கானிஸ்தான் வடமேற்கில் பாகிஸ்தானின் செல்வாக்கை விரிவுபடுத்தும் என்று அது நம்பியது. தாலிபான்கள் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்வார்கள் என்றும் இந்தியா அஞ்சியது. 1999-ல், ஒரு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டு காந்தஹாருக்கு கொண்டு செல்லப்பட்டபோது இந்த அச்சங்கள் உண்மையாகின.


2001-ல் தாலிபான்கள் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்ட பிறகு, இந்தியா ஆப்கானிஸ்தானின் முக்கிய பிராந்திய ஆதரவாளர்களில் ஒன்றாக மாறியது. முன்னர், சல்மா அணை என்று அழைக்கப்பட்ட $275 மில்லியன் மதிப்புள்ள ஆப்கான்-இந்தியா நட்பு அணை (Afghan-India Friendship Dam) மற்றும் ஆப்கானிஸ்தானை ஈரானின் சபாஹர் துறைமுகத்துடன் இணைக்கும் ஜரஞ்ச்-டெலாராம் நெடுஞ்சாலை (Zaranj-Delaram highway) ஆகியவை இந்தக் கூட்டமைப்பின் அடையாளங்களாக இருந்தன.”


“ஆகஸ்ட் 2021-ல் அமெரிக்கா வெளியேறியது தலிபான்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்தது. இந்தியா தனது தூதரகத்தை மூடிவிட்டு அதன் தூதர்களை வெளியேற்றியது. இருபதாண்டுகால முதலீடு ஒரே இரவில் இழந்ததாகத் தோன்றியது. தாலிபான்கள் மீதான தங்கள் கட்டுப்பாடு வலுவாக இருக்கும் என்று நம்பி பாகிஸ்தானின் தலைவர்கள் கொண்டாடினர். இருப்பினும், தலிபான்கள் விரைவில் அவர்களை ஏமாற்றினர். இந்தியாவிற்கு, இது ஒரு சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க இராஜதந்திர வாய்ப்பை உருவாக்கியது.”


“2025 காலகட்டத்தில், இரு தரப்பினரும் ஒரு புதிய உறவை ஆராயத் தொடங்கின. ஆப்கானிஸ்தானுக்கு அதன் பொருளாதார சிக்கல்களைத் தணிக்க கூட்டமைப்புகள் தேவைப்பட்டனர். வளர்ச்சி உதவி, வர்த்தகம் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் மூலம் இந்தியா தனது இடத்தை மீண்டும் பெற விரும்பியது.”


“2021-ம் ஆண்டுக்குப் பிறகு அமீர்கான் முத்தாகியின் இந்தியா வருகை மிக உயர்மட்ட தொடர்பைக் குறித்தது. தாலிபான்களை இந்தியா அணுகுவது ஒப்புதல் அழைப்பாக அல்ல, ஆனால் இது ஒரு நடைமுறைத் தேவையாகப் பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை களத்தில் மாறிவரும் யதார்த்தங்களை பிரதிபலிக்கிறது. ஆப்கானிஸ்தானும் இந்தியாவும் பல நூற்றாண்டுகளாக புவியியல், வணிகம், மதம் மற்றும் கலாச்சாரத்தால் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த உறவுகள் பேரரசு, சித்தாந்தங்கள் மற்றும் படையெடுப்புகளைத் தாங்கி வந்துள்ளன. இருப்பினும், அவை அரசியலாலும் வடிவமைக்கப்பட்டு சில சமயங்களில் சிதைக்கப்பட்டுள்ளன.


“எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. பெண்கள் உரிமைகள் மற்றும் சிறுபான்மையினரை நடத்துவது குறித்த தாலிபான்களின் கடந்தகாலப் பதிவு மோசமாக உள்ளது. பாதுகாப்பு தொடர்பான சவால்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. இருப்பினும், இந்தியா-ஆப்கானிஸ்தான் கதை இன்னும் முடிவடையவில்லை என்பது உறுதி. இது ஒரு புதிய அத்தியாயத்திற்கு நகர்ந்துள்ளதில் பழைய பிணைப்புகளும் புதிய சூழ்நிலைகளும் சமநிலையைக் காணவேண்டிய ஒரு புதிய கட்டத்தில் இது நுழைந்துள்ளது.”


உங்களுக்குத் தெரியுமா?


ஆப்கானிஸ்தானின் புவிசார் அரசியல் முக்கியத்துவம் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அப்பாற்பட்டது. இது மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவின் சந்திப்புப் புள்ளியில் அமைந்துள்ள பல இன, நிலத்தால் சூழப்பட்ட நாடாக உள்ளது. இந்த இராஜதந்திர இருப்பிடம் வரலாற்றுரீதியாக முக்கிய உலகளாவிய மற்றும் பிராந்திய சக்திகளின் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. இது ஆப்கானிஸ்தானை உலக அரசியலில் ஒரு முக்கியப் புள்ளியாக மாற்றியுள்ளது. ஆப்கானிஸ்தானின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்டு, இந்தியா அந்த நாட்டை நோக்கி தனது கொள்கையை கவனமாக வடிவமைத்துள்ளது.


ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் முதலீடுகள் : ஆப்கானிஸ்தானில் சாலைகள், அணைகள், மின்சார பரிமாற்ற நிலையங்கள், துணை மின்நிலையங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்பை இந்தியா கட்டியுள்ளது. இந்தியாவின் மேம்பாட்டு உதவியின் மதிப்பு இப்போது 3 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஈர்க்கப்படுவதில் சிரமப்பட்ட அல்லது உள்ளூர் அரசியலால் தடைபட்ட வேறு சில நாடுகளைப் போலல்லாமல், இந்த முயற்சிகள் ஆப்கானிஸ்தானில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன.



Original article:

Share:

கேரள உயர்நீதிமன்றம் ஏன் அர்ச்சகர்களை நியமிப்பதற்கு சாதியை அடிப்படையாகக் கொள்ளாமல் தகுதியை அடிப்படையாகக் கருதியது? -வினீத் பல்லா

 கோவில் அர்ச்சகர்கள் (temple priests) எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய சர்ச்சையின் மையமாக இந்த தீர்ப்பு இருந்தது. பாரம்பரியக் கல்வியைவிட முறையான பயிற்சியை மதிக்கும் விதிகளை ஆதரிப்பதன் மூலம், நீதிமன்றம் அர்ச்சகர் நியமனத்தை சாதி அல்லது குடும்பப் பரம்பரை முறைகளிலிருந்து பிரித்தது.


கேரள உயர்நீதிமன்றம் புதன்கிழமை (அக்டோபர் 22) கோயில் பூசாரி நியமனம் என்பது ஒரு மதச்சார்பற்ற செயல்பாடு என்றும், அது சமத்துவம் (equality) மற்றும் பாகுபாடு காட்டாத (non-discrimination) அரசியலமைப்பு கொள்கைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.


திராவிட தேவசம் வாரியத்தால் (Travancore Devaswom Board (TDB)) நிர்வகிக்கப்படும் கோயில்களில் பூசாரிகளை ('சாந்தி') நியமிப்பதற்காக கேரள அரசு 2022-ல் அறிமுகப்படுத்திய விதிகளை எதிர்த்து, பாரம்பரிய பிராமண கோயில் பூசாரிகளின் பதிவு செய்யப்பட்ட சங்கமான அகில கேரள தந்திரி சமாஜம் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


பாரம்பரிய பயிற்சிக்குப் பதிலாக நிறுவன சான்றிதழை ஆதரிக்கும் விதிகளை உறுதிப்படுத்துவதன் மூலம், நீதிமன்றம் திறம்பட அர்ச்சகர் பணியை சாதி அல்லது பரம்பரை முறைகளிலிருந்து பிரித்தது.


வழக்கு எதைப் பற்றியது?


இந்த தகராறு (dispute) திராவிட தேவசம் வாரியத்தின்கீழ் உள்ள கோயில்களுக்கு அர்ச்சகர்கள் நியமிக்கப்படும் முறையில் ஏற்பட்ட மாற்றத்தை மையமாகக் கொண்டது. பாரம்பரியமாக, பூசாரியாக விரும்பும் ஒருவர் மூத்த தந்திரி அல்லது தலைமை பூசாரியின்கீழ் சடங்குகளைக் கற்றுக் கொள்வார் - இந்த குருவிடமிருந்து பெறும் சான்றிதழ் முதன்மையான தகுதியாக இருந்தது. இந்த முறையின்படி குறிப்பிட்ட குடும்பங்கள் அல்லது சமூகங்கள் மட்டுமே பூசாரிகளாக முடியும். 


பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கும் தந்திரி சமாஜம் இந்த விதிகளை எதிர்த்தது. அவர்களின் மனு பரம்பரை மற்றும் சமூக அர்ச்சகர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் ஒரு பாரம்பரிய முறையைப் பாதுகாக்க முயன்றது. அரசு அமைப்பான கே.டி.ஆர்.பி., புனித அறிவை கற்பிக்கும் பள்ளிகளை அங்கீகரிக்க மத அதிகாரம் இல்லை என்று அவர்கள் வாதிட்டனர். புதிய அமைப்பு தந்திரிகளின் ஆன்மீக அதிகாரத்தை பலவீனப்படுத்துகிறது மற்றும் அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்ட ஒரு முக்கியமான மத நடைமுறையில் தலையிடுகிறது (essential religious practice) என்று அவர்கள் வாதிட்டனர்.


கேரள அரசு என்ன வாதிட்டது?


மாநில அரசு இந்தப் பிரச்சினையை சமூக சீர்திருத்தம் (social reform) மற்றும் அரசியலமைப்பு நெறிமுறை (constitutional morality) சார்ந்த ஒன்றாக வடிவமைத்தது. ஒரு பூசாரியின் கடமைகள் மதரீதியானவையாக இருந்தாலும், அவர்களின் நியமன செயல்முறை மாநிலம் ஒழுங்குபடுத்த முடியும் மற்றும் வேண்டும் என்ற ஒரு சமூக, நிர்வாக செயல்பாடு என்று கேரள அரசு வாதிட்டது. புதிய விதிகள் வெளிப்படையான, சீரான முறையை உருவாக்குகின்றன. இது அனைத்து விண்ணப்பதாரர்களும் அவர்களின் பின்னணியைக் காட்டிலும் திறமையின் அடிப்படையில் மதிப்பிடப்படுவதை உறுதிசெய்கிறது என்று கேரள அரசு வாதிட்டது.


"பரம்பரை பூசாரிப் பணி" (hereditary priesthood) மற்றும் "சாதி அடிப்படையிலான பாகுபாட்டை" (caste-based discrimination) நீக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த விதிகள் வடிவமைக்கப்பட்டதாகவும் கேரள அரசு கூறியது. மனுதாரர்கள் "சாதி தன்னலக்குழுவை" (caste oligarchy) நிலைநிறுத்தவும், "மேல்சாதி சமூகங்களுக்கு" நியமனங்களை கட்டுப்படுத்தவும் முயன்றனர். இது அரசியலமைப்பிற்கு நேரடியாக முரண்படுவதாக கேரள அரசு கூறியது.


அனைத்து தகுதியான நபர்களுக்கும் அர்ச்சகர் பணிக்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், 2022ஆம் ஆண்டு விதிகள் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து சமூகங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கும் அர்ச்சகர்களாக பணியாற்ற சமமான வாய்ப்பை உறுதி செய்தன.


உயர்நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தது?


நீதிபதிகள் ராஜா விஜயராகவன் V மற்றும்  ஜெயக்குமார் KV ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்து, புதிய விதிகளை உறுதிப்படுத்தியது. ஒருவரின் சாதி அல்லது குடும்பப் பின்னணி முக்கியம் அல்ல அவரது திறமைகள் மற்றும் பயிற்சி மட்டுமே யார் அர்ச்சகர் என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.


தகுதிகளை நிர்ணயிப்பது உட்பட ஆட்சேர்ப்பு செயல்முறை, பகிரப்பட்ட சட்டவாக்கத்தின் (delegated legislation) மூலம் செல்லுபடியாக இயற்றப்பட்டது என்றும், விதிகள் மூல சட்டங்களுக்கு முரணாக இல்லை என்றும் அமர்வு கண்டறிந்தது. கோவில் அர்ச்சகரை (Shanthi) நியமிப்பது அடிப்படையில் ஒரு சமூக நடவடிக்கை என்று சட்ட நிலைப்பாட்டை நிறுவிய முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது. மாநில அரசு அல்லது தேவசம் வாரியம் அதை ஒழுங்குபடுத்த முடியும்.


சாந்தி என்றால் என்ன?


கேரளாவில் “சாந்தி” (Shanthi) என்பது கோவிலில் பூசாரியாக / அர்ச்சகராக நியமிக்கப்படும் ஒரு நபரை குறிக்கும்.


சமீபத்திய உச்சநீதிமன்ற முன்னுதாரணத்தைக் குறிப்பிட்டு, மனுதாரர் தங்கள் மத விவகாரங்களின் மீதான கட்டுப்பாட்டை ஒரு மத அமைப்பு உரிமையாக (denominational right) கோர மனுதாரர் ஒரு தனி மத அமைப்பை (religious denomination) உருவாக்கவில்லை என்று அமர்வு தீர்ப்பளித்தது. ஏனெனில், "மதப் பிரிவு குழுவிற்கு" (religious denomination) பொதுவான நம்பிக்கை, அமைப்பு மற்றும் ஒரு தனித்துவமான பெயர் தேவைப்படுகிறது. இந்த வழக்கில், மனுதாரர் குழுவின் உறுப்பினர்கள் இந்து மதத்திலிருந்து வேறுபட்ட தனித்துவமான மத நம்பிக்கைகளால் அல்ல, சாதியால் இணைக்கப்பட்டனர்.


பூசாரிகளால் மட்டுமே சான்றிதழ் பெறும் நடைமுறை இந்து மதத்திற்கு 'அத்தியாவசியமானது' என்ற வாதத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட இதற்கான சோதனை, ஒரு நடைமுறை மிகவும் அடிப்படையானதா, அது இல்லாமல் மதம் மாற்றப்படுமா என்பதை தீர்மானிப்பதாகும்.


மேலும், சடங்குகள், மந்திரங்கள் மற்றும் வேதங்களில் திறமை (proficiency) என்பது அத்தியாவசிய தேவை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒருவருக்கு சரியான பயிற்சி இருந்தால், மதக் கடமைகளைச் செய்வதற்கு அவரது சாதி ஒரு பொருட்டல்ல. ஒரு நபர் நியமிக்கப்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று கூறுவது மதத்தின் அவசியமான பகுதியாகாது என்று நீதிமன்ற அமர்வு கூறியது.


உயர்நீதிமன்றம் ஒரு முக்கியமான சட்டக் கொள்கையை வலுப்படுத்தியது - எந்த வழக்கமும் அல்லது பாரம்பரியமும், எவ்வளவு பழமையானதாக இருந்தாலும், அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை (fundamental rights) மீற முடியாது என்று தெளிவுபடுத்தியது. சமத்துவத்திற்கான உரிமை, பாகுபாட்டின் தடை (prohibition of discrimination) மற்றும் தீண்டாமை ஒழிப்பு (abolition of untouchability) போன்ற அடிப்படை உரிமைகளை மீறும் எந்தவொரு வழக்கமும் சட்டப்படி செல்லாது என்றும் நீதிமன்றங்களால் அதை உறுதிப்படுத்த முடியாது என்றும் நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது.


மத நிர்வாகத்தின் சமூக அம்சங்களுக்கு சீர்திருத்தம் மற்றும் தரப்படுத்தலை கொண்டுவருவதில் மாநில அரசின் பங்கை வலுப்படுத்துவதால் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு பாரம்பரிய அல்லது பரம்பரை கோரிக்கைகளைக் காட்டிலும் சமத்துவம், தகுதி மற்றும் பாகுபாடு காட்டாத அரசியலமைப்பு கொள்கைகளுக்கு (constitutional principles of equality) முன்னுரிமை அளிக்கிறது.



Original article:

Share:

Su-30MKI பற்றி அறிக -ரோஷ்ணி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


சூப்பர் சுகோய் திட்டம் (Super Sukhoi programme) என்றும் அழைக்கப்படும் Su-30MKI மேம்படுத்தல் திட்டம், ஒரு பெரிய நடுத்தரநிலை மேம்படுத்தல் திட்டமாகும். இது போர் விமானத்தின் சேவை நிலையை மேலும் 20 ஆண்டுகள் நீட்டிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


அதிகாரிகளின் கூற்றுப்படி, மேம்படுத்தல் திட்டம் தற்போது பாதுகாப்பு அமைச்சகத்தால் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், அதன் ஒப்புதலுக்காக அமைச்சரவை பாதுகாப்புக் குழுவிற்கு (Cabinet Committee of Security (CCS)) விரைவாக அனுப்ப முயற்சிகள் நடந்து வருகின்றன.


மேம்படுத்தலில், புதிய விமானி அறை (new cockpit), மேம்பட்ட விமான மின்னணுவியல் (advanced avionics), நவீன ரேடார்கள் (modern radars) மற்றும் ஐஆர் உணரிகள் (IR sensors), ஜாமர் சாதனங்கள் (jammer pods) உள்ளிட்ட புதிய மின்னணு போர் தொகுப்பு ஆகியவை அடங்கும் என்று அதிகாரி கூறினார்.


மேம்படுத்தல் திட்டம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், அமைச்சரவை பாதுகாப்புக் குழுவிற்கு (CCS) அனுமதி கிடைத்ததும், அரசுக்குச் சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (Hindustan Aeronautics Limited (HAL)), விமானத்தின் ஆரம்ப செயல்பாட்டு அனுமதி (initial operational clearance (IOC)) பதிப்பை ஐந்து ஆண்டுகளுக்குள் வழங்கவும், அமைச்சரவை பாதுகாப்புக் குழு (CCS) ஒப்புதல் வழங்கப்பட்ட ஏழு ஆண்டுகளுக்குள் இறுதி செயல்பாட்டு அனுமதி (final operational clearance (FOC)) பதிப்பை வழங்கவும் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


செப்டம்பர் மாதத்தில் கடைசி MiG-21 ரக விமானம் ஓய்வு பெற்ற பிறகு, இந்திய விமானப்படையின் போர் விமானப் படையின் எண்ணிக்கை 29-ஆகக் குறைந்துவரும் நிலையில், இந்த வளர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய விமானப்படை தற்போது 42 அங்கீகரிக்கப்பட்ட போர் விமானப் படையைக் கொண்டுள்ளது.


இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்திடமிருந்து 83 இலகுரக போர் விமானமான தேஜாஸ் Mk1A-வில் எதையும் இந்திய விமானப்படை (IAF) இன்னும் பெறவில்லை. நவம்பர் 2023-ல், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (Defence Acquisition Council (DAC)), இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்திடமிருந்து உள்நாட்டிலேயே Su-30MKI விமானங்களை மேம்படுத்துவதற்கான அவசியத்தை ஏற்றுக்கொண்டது.


உங்களுக்குத் தெரியுமா?


பிரதமர் தலைமையில், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவில் (CCS) நிதி, பாதுகாப்பு, உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தேசிய பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பான விவாதங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் நியமனங்களுக்கு இந்தக் குழு பொறுப்பாகும்.


இந்தியாவின் முக்கியமான நியமனங்கள், தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள், பாதுகாப்புச் செலவுகள் தொடர்பான முக்கிய முடிவுகள் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவால் (CCS) எடுக்கப்படுகின்றன.


பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதோடு மட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் வெளிப்புற பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்த வெளியுறவு விவகாரங்கள் தொடர்பான கொள்கை விஷயங்கள் குறித்தும் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) விவாதிக்கிறது. அணுசக்தி தொடர்பான பிரச்சினைகளையும் இந்தக் குழு கையாள்கிறது.



Original article:

Share:

வடக்கு-தெற்கு கார்பன் சந்தை ஒத்துழைப்புக்கான ஒரு தொடக்கம் -சஷாங்க் பாண்டே

 கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறையை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) இந்திய கார்பன் சந்தையுடன் இணைப்பது ஒரு முக்கியமான படியாகும். இருப்பினும், இன்னும் பல சவால்களை சமாளிக்க வேண்டியுள்ளது.


செப்டம்பர் 17, 2025 அன்று, ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் தங்கள் கூட்டமைப்பில் ஒரு புதிய விரிவான இராஜதந்திர செயல்திட்டத்தை வகுத்தன. இதில், புதிய இராஜதந்திர ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா செயல்திட்டம் (New Strategic EU-India Agenda) என்று அழைக்கப்படும் இது, அவர்களின் கூட்டமைப்பை மேம்படுத்தப்படும் ஐந்து முக்கிய துறைகளில் கவனம் செலுத்துகிறது. அவை, செழிப்பு மற்றும் நிலைத்தன்மை (prosperity and sustainability), தொழில்நுட்பம் மற்றும் புதுமை (technology and innovation), காவல் மற்றும் பாதுகாப்பு (security and defence) இணைப்பு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் (connectivity and global issues), மற்றும் இவை யாவற்றிலும் செயல்முறைப் படுத்துதல் (enablers across these pillars) போன்றவை ஆகும். சுத்தமான மாற்றம் குறித்த பிரிவில், ஒரு முக்கியமான அறிக்கை உள்ளது. இதில் ஐரோப்பிய ஒன்றியம் இந்திய கார்பன் சந்தையை (Indian Carbon Market (ICM)) கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறையுடன் (Carbon Border Adjustment Mechanism (CBAM)) இணைக்கும் என்று அது கூறுகிறது.


குறிப்பிடும்படியாக, இந்தியாவில் செலுத்தப்படும் கார்பன் விலைகள் ஐரோப்பிய ஒன்றிய எல்லையில் உள்ள கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) வரிவிதிப்புகளிலிருந்து கழிக்கப்படும். இது ஒரு பெரிய திருப்புமுனையாகும். இது இந்திய ஏற்றுமதியாளர்கள் கார்பன் வெளியேற்றத்திற்காக இரண்டு முறை வரி வசூலிக்கப்படுவதைத் தவிர்க்க உதவும் மற்றும் ஆரம்பகால கார்பன் நீக்கத்தை (decarbonisation) ஊக்குவிக்கும். இருப்பினும், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் இன்னும் கடுமையான தடைகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், இந்த ஒருங்கிணைப்பு எதிர்பார்த்த பலன்களைத் தராமல் போகலாம்.


வளர்ச்சியடையாத இந்திய கார்பன் சந்தை


இந்தியாவின் கார்பன் வரவு வர்த்தகத் திட்டம் (Carbon Credit Trading Scheme (CCTS)), பொதுவாக இந்திய கார்பன் சந்தை (Indian Carbon Market (ICM)) என்று குறிப்பிடப்படுகிறது. இது இன்னும் ஒரு வளர்ச்சியடைந்து வரும் கட்டமைப்பாகும். இது இருபதாண்டு கால வலுவான ஏல அமைப்பு, தெளிவான வரம்பு அமைக்கும் செயல்முறைகள் மற்றும் சுதந்திரமான சரிபார்ப்பு ஆகியவற்றைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் (EU) கார்பன உமிழ்வு வர்த்தக அமைப்பு (Emissions Trading System (ETS)) போலல்லாமல், இந்தியாவின் திட்டம் பகுதியளவாக அடித்தளங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது.


 தற்போதைய வரவுகள் பெரும்பாலும் தீவிர மேம்பாடுகள் அல்லது திட்ட அடிப்படையிலான சமநிலைப்படுத்துதலை அடிப்படையாகக் கொண்டவை. அவை முழுமையான உமிழ்வு வரம்புகளுடன் இணைக்கப்படவில்லை, இந்திய கார்பன் சந்தை (ICM) எதிர்காலத்தில் இதை  அடைய நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM), பொருட்களில் உட்பொதிக்கப்பட்ட கார்பனை டன்னுக்கு ஒரு டன் கணக்கில் கணக்கிட வேண்டும். சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட வரம்புகள் மற்றும் விதிமீறல்களுக்கு கடுமையான தண்டனைகள் இல்லாமல், ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஒழுங்குமுறையாளர்கள் இந்திய வரவுகளை நம்பகத்தன்மை குறைந்ததாகவோ அல்லது "இரண்டாம் தரமாக" கருதுவார்கள்.


சந்தை ஒருமைப்பாட்டை உறுதிசெய்யும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுதந்திரமான ஒருங்கிணைப்பாளர்கள் அல்லது கார்பன் உமிழ்வு பதிவேடுகளுக்கு இணையான தற்போதைய நிறுவன அமைப்பு இந்தியாவில் இல்லை. உண்மையில், அடிப்படையான அமைப்பு சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டை வழங்குகிறது என்று ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கையுடன் இல்லாவிட்டால், அது இந்திய கார்பன் விலைகளை "குறைக்க" முடியாது. இந்த நிறுவன இடைவெளியைக் குறைப்பது ஒரு தொழில்நுட்ப தீர்வாகாது. ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உமிழ்வு வர்த்தக அமைப்பின் (ETS) உடன்பாட்டு-தர அம்சங்களை (compliance-grade features) பிரதிபலிக்கும் வகையில் இந்திய கார்பன் சந்தையின் (ICM) கட்டமைப்பு மறுவடிவமைப்பு இதற்கு தேவைப்படுகிறது. இந்தியாவின் தற்போதைய அதிகாரத்துவ அமைப்பு மற்றும் புரிதலைக் கருத்தில் கொண்டு, விரைவில் இவ்வளவு பெரிய மாற்றத்தை எதிர்பார்ப்பது கடினம்.


கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) தெளிவான மற்றும் கடுமையான கார்பன் விலையையும் நம்பியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உமிழ்வு வர்த்தக அமைப்பில் (ETS), விலையானது டன்னுக்கு €60 முதல் €80-க்கு இடையில் நிர்ணயிக்கிறது. இந்தியாவில், ஆரம்பகால கார்பன் வரவு விலைகள் €5 மற்றும் €10 வரம்பில் உள்ளன. கார்பன் விலைகள் ஒரே மாதிரியாக இல்லாவிட்டால் மற்றும் துறைகளில் சமமாகப் பயன்படுத்தப்பட்டால், ஐரோப்பிய ஒருங்கிணைப்பாளர்கள் எல்லையில் சிறிதளவு அல்லது விலக்கு அளிக்க மாட்டார்கள்.


இந்த நிலைமை இன்னும் மோசமாகலாம். இந்திய ஏற்றுமதியாளர்கள் இந்திய இணக்கச் செலவு மற்றும் முழு ஐரோப்பிய ஒன்றியம் (EU) கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) வரி இரண்டையும் செலுத்த வேண்டியிருக்கும். இது இந்தியாவிற்குள் அரசியல் அழுத்தத்தை உருவாக்குகிறது. இதில் தொழில்கள் "இரட்டைச் சுமையாக" பார்க்கக்கூடும். மேலும் இந்திய கார்பன் சந்தையின் (ICM) கீழ் இந்தியாவின் கார்பன் சந்தை விதிகளை பலவீனப்படுத்த வற்புறுத்தலாம். விலை இடைவெளியைக் குறைக்க, இந்தியாவிற்கு குறிப்பிட்ட துறைகளுக்கான இலக்கு கார்பன் ஒப்பந்தங்கள் அல்லது கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) அளவுகளுடன் பொருந்தக்கூடிய குறைந்தபட்ச கார்பன் விலை தேவைப்படும். இந்த இரண்டு தீர்வுகளும் அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை நடத்துவது கடினம்.


கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறையின் (Carbon Border Adjustment Mechanism (CBAM)) அடிப்படை இயல்பு


தொழில்நுட்ப மற்றும் விலை சிக்கல்கள் தீர்க்கப்பட்டாலும், கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. இந்தியாவும் பிற வளரும் நாடுகளும் உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் சர்வதேச உரையாடல்களில் இதை ஒருதலைபட்சமான மற்றும் பாதுகாப்புவாத நடவடிக்கை என்று தொடர்ந்து எதிர்த்துள்ளன. எனவே, இந்தியாவின் கார்பன் சந்தைக்கும் கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறைக்கும் (CBAM) இடையிலான இணைப்பை ஒப்புக்கொள்வது, இந்தியா முறையாக எதிர்த்த ஒரு செயல்முறையை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஒரு அரசியல் முரண்பாட்டை உருவாக்குகிறது.


இந்தப் பதற்றம் மீண்டும் சர்ச்சைகளில் வெளிப்படும். உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியம் (EU) இந்தியாவின் கார்பன் விலை "போதுமானதாக இல்லை" என்று கருதி முழு விலக்குகளையும் மறுத்தால், இந்திய ஏற்றுமதியாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். மேலும், இந்தியா அரசியல்ரீதியாகவோ அல்லது சட்டப்பூர்வமாகவோ பிரச்சினையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். கார்பன் விலை நிர்ணயம் என்பது ஒரு உள்நாட்டு கொள்கை கருவியாக இருப்பதால் இறையாண்மைரீதியில் பிரச்சினையும் உள்ளது. 


ஆனால், கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) இந்தியாவின் நடவடிக்கைகள் "போதுமானவை" என்பதில் பிரஸ்ஸல்ஸுக்கு ஒரு கருத்தைத் தெரிவிக்கிறது. அதன் கொள்கை சுதந்திரத்தை மதிக்கும் ஒரு நாட்டிற்கு, இது ஒரு தீவிர கவலையாக மாறக்கூடும். வர்த்தகச் சட்டத்திற்கு அப்பால், இந்தியா ஒரு நிலையான, வெளிப்படையான கார்பன் சந்தையைப் பராமரித்தால் மட்டுமே கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) விலக்குகள் செயல்படும் ஒரு இராஜதந்திர ரீதியில் ஆபத்து உள்ளது. எந்தவொரு உள்நாட்டு அரசியல் பின்னடைவும், எடுத்துக்காட்டாக, தொழில்துறை அழுத்தத்தின்கீழ் இணக்கத்தைத் திரும்பப் பெறுவது, ஏற்றுமதியாளர்களை உடனடியாக முழு கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) செலவுகளுக்கு ஆளாக்கும், வர்த்தக ஓட்டங்களை சீர்குலைக்கும். குறிப்பாக, இந்த இணைப்பு உலக வர்த்தக அமைப்பு (WTO) சட்டங்களுக்கு மட்டுமல்ல, உள்நாட்டு அரசியல் பொருளாதாரம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) -இந்தியா இடையேயான நம்பிக்கையின் அளவையும் சார்ந்துள்ளது.


நம்பிக்கையான தீர்மானங்களைப் பார்ப்பது


இந்திய கார்பன் சந்தை மற்றும் கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) இணைப்பு, இரண்டு பெரிய உலகப் பொருளாதாரங்களின் இராஜதந்திர செயல்திட்டத்தின்கீழ் மிக முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இது செயல்பட்டால், இந்திய ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்கிறது, தொழில்துறை கார்பன் நீக்கத்தைத் தீவிரப்படுத்துகிறது. மேலும், வடக்கு-தெற்கு கார்பன் சந்தை ஒத்துழைப்புக்கான ஒரு மாதிரியை உருவாக்குகிறது. 



ஆனால், பலவீனமான உள்நாட்டுக் கட்டமைப்பு, தவறாக சீரமைக்கப்பட்ட கார்பன் விலைகள் மற்றும் அரசியல் வேறுபாடுகள் இந்த திட்டத்தை தோல்வியடையச் செய்யலாம். இன்னும் விரிவான ஒத்துழைப்புக்கு ஒரு அடிப்படை காரணம் உள்ளது. இந்தியா தனது சந்தை வடிவமைப்பை வலுப்படுத்த முடியும். மேலும், ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஒரு சுமுகமான மாற்றத்திற்கான தெளிவு மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்க முடியும். இல்லையெனில், இந்த "முன்னேற்றம்" காகிதத்தில் மட்டுமே இருக்கும். அதே நேரத்தில், இந்திய ஏற்றுமதியாளர்கள் தொடர்ந்து எல்லைச் செலவுகளைச் சந்திக்க நேரிடும்.


ஷஷாங்க் பாண்டே ஒரு வழக்கறிஞர் மற்றும் ஆராய்ச்சியாளர், சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் காலநிலை நிதி குறித்து பணியாற்றி வருகிறார்.



Original article:

Share:

புயல்கள் ஏன் நிலப் பகுதியை நோக்கி நகர்கின்றன? -வாசுதேவன் முகுந்த்

 உலகளாவிய புவியியல் தலைகீழாக மாறினாலோ அல்லது வர்த்தகக் காற்று எதிர் திசையில் வீசினாலோ, புயல்கள் அரிதாகவே கரையைக் கடக்கும்.


வெப்பமண்டல புயல்கள் (Tropical cyclones) வளிமண்டலத்தில் உள்ள பெரிய காற்று வடிவங்களால் இயக்கப்படுகின்றன. இந்தப் புயல்கள் சூடான கடல் நீரில் உருவாகின்றன. அங்கு கடல் மேற்பரப்பு வெப்பநிலை 26º C அல்லது அதற்குமேல் இருக்கும். அவை வெப்பநிலை அதிகரிக்க தேவையான வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் வழங்குகின்றன. ஆனால், அவை உருவானவுடன், புயல்கள் ஆற்றின் குறுக்கே மிதக்கும் இலையைப் போல, சுற்றியுள்ள காற்றுகளுக்கு ஏற்ப முழுமையாக நகரும்.


புயல்கள் உருவாகும் வெப்பமண்டலப் பகுதிகள் தோராயமாக 5º முதல் 20º வரை வடக்கு மற்றும் தெற்கு (பூமத்திய ரேகை) வரை இருக்கும். இங்கு ஆதிக்கம் செலுத்தும் காற்றுகள் வர்த்தகக் காற்றுகளாகும் (trade winds). இவை உலகளாவிய ஹாட்லி சுற்றுச்சுழற்சியின் (Hadley circulation) ஒரு பகுதியாக ஆண்டு முழுவதும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசுகின்றன. இது பூமியின் சீரற்ற வெப்பத்தால் இயக்கப்படும் உலகளாவிய வெப்பச்சலன (global convection) வடிவமாகும். பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள சூடான காற்று அதிகரித்து, துருவங்களை நோக்கி நகர்ந்து, குளிர்ந்து 30º அட்சரேகையில் மூழ்கி, பின்னர் மேற்பரப்பு வழியாக பூமத்திய ரேகைக்குத் திரும்புகிறது. பூமி சுழல்வதால், இந்தத் திரும்பும் காற்று கோரியோலிஸ் விளைவால் (Coriolis effect) மேற்கு நோக்கித் திசைதிருப்பப்பட்டு, கிழக்கத்திய வர்த்தகக் காற்றுகளை உருவாக்குகிறது.


கோரியோலிஸ் விளைவு (Coriolis effect) என்றால் என்ன?


கோரியோலிஸ் விளைவு (Coriolis Effect) என்பது பூமியின் சுழற்சியால் ஏற்படும் ஒரு மாயையான (apparent) விசை ஆகும். பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுழல்வதால், அதன் மேற்பரப்பில் நகரும் பொருட்கள் (காற்று, நீர், ஏவுகணைகள் போன்றவை) நேராகச் செல்லாமல் வளைந்து செல்வதுபோல் தோன்றும். இதுவே கோரியோலிஸ் விளைவு.



இதனால் இந்தக் காற்றுகள் புயல்களை மேற்கு நோக்கி கடல்களுக்கு மேல் தள்ளுகின்றன. இது போன்ற காரணிகளால்தான் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்கள் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி நகர்கின்றன. அட்லாண்டிக்கில் உருவாகும் புயல்கள் ஆப்பிரிக்காவிலிருந்து கரீபியன் மற்றும் அமெரிக்காவிற்கு நகர்கின்றன. பசிபிக் பகுதியில் உருவாகும் புயல்கள் பெரும்பாலும் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவை நோக்கி நகர்கின்றன.


வெப்பமண்டல சூறாவளிகள் தங்கள் ஆற்றலை வெதுவெதுப்பான கடல் நீரிலிருந்து பெறுகின்றன மற்றும் அவை கடலில் இருக்கும் வரை மிகத் தீவிரமாக மாறலாம், ஆனால் காற்றுகள் அவற்றுக்கு தேர்வு அளிக்காது. புயல் நகரும்போது, அது வடக்கே உள்ள மத்திய-அட்சரேகை மேற்கத்திய காற்றுகள் போன்ற பிற வளிமண்டல அமைப்புகளையும் சந்திக்கலாம், இவை அதன் பாதையை மாற்றலாம். சில சமயங்களில் இந்த மாற்றங்கள் ஒரு புயலை பாதிப்பின்றி திறந்த கடலுக்கு திருப்பிவிடும் — ஆனால் பெரும்பாலும் நிலவும் ஓட்டம் புயலை நிலப்பகுதிக்கு கொண்டு செல்கிறது.



டிசம்பர் 2023-ல், வங்காள விரிகுடாவில் காற்று பலவீனமாக இருந்ததால், மிச்சாங் புயல் மிகவும் மெதுவாக நகர்ந்து பல மணிநேரம் கடற்கரையில் இருந்து கரையைக் கடந்தது.


உலகளாவிய புவியியல் தலைகீழாக மாறினால் அல்லது வர்த்தக காற்று எதிர் திசையில் வீசினால், புயல்கள் கடலில் இருந்து கொண்டிருக்கும். மேலும், இது போன்ற புயல்கள் அரிதாகவே கரையை கடக்கும்.


இங்கே ஒரு கேள்வி எழுகிறது: அப்படியானால் அரேபிய கடலில் ஒரு புயல்  ஏன் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் கரையைக் கடக்க வேண்டும்? அதற்குப் பதிலாக அது அரேபிய தீபகற்பம் அல்லது ஆப்பிரிக்காவை நோக்கி நகர வேண்டாமா?


வர்த்தகக் காற்று மட்டுமே ஆதிக்கம் செலுத்தினால், ஆம், அரேபிய கடலில் ஏற்படும் புயல்கள் உண்மையில் அரேபிய தீபகற்பம் அல்லது ஆப்பிரிக்காவை நோக்கி நகர வேண்டும். ஆனால், நடைமுறையில், பருவமழை காரணமாக இந்தப் புயல்கள்  இந்தியாவை நோக்கி நகர்கின்றன.


அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களில், வர்த்தகக் காற்று தொடர்ந்து மேற்கு நோக்கி வீசுகிறது. ஆனால், இந்தியப் பெருங்கடலில், மேற்பரப்பு காற்று பருவமழையுடன் திசை மாறுகிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரை, தென்மேற்குப் பருவமழை ஆதிக்கம் செலுத்துகிறது: தென்மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கி காற்று வீசுகிறது. இதன் பொருள், பருவமழை மற்றும் அதன் தொடக்க மற்றும் பின்வாங்கும் காலகட்டங்களின்போது, ​​அரபிக் கடலில் ஏற்படும் குறைந்த-அளவிலான திசைமாற்றி ஓட்டம் (low-level steering flow) பெரும்பாலும் அதிலிருந்து விலகிச் செல்வதற்குப் பதிலாக இந்தியாவை நோக்கி வருகிறது. இந்தக் காலகட்டத்தில் உருவாகும் புயல்கள் வடகிழக்கு நோக்கிச் சென்று இந்தியாவின் மேற்குக் கடற்கரையில், குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரா மற்றும் சில சமயங்களில் கேரளாவில் கரையைக் கடக்கின்றன.


பருவமழை காலத்திற்கு வெளியே, குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தின் துவக்கத்தில், காற்று தலைகீழாக மாறும். வடகிழக்கு பருவமழை இந்திய துணைக்கண்டத்திலிருந்து வறண்ட காற்றை பூமத்திய ரேகை மற்றும் ஆப்பிரிக்கா நோக்கி கொண்டு வருகிறது. பின்னர், புயல்கள்  மேற்கு நோக்கி அரேபிய தீபகற்பம் அல்லது சோமாலியாவை நோக்கி நகரும். இருப்பினும், இந்த நேரத்தில் ஒரு புயல்  உருவாக வாய்ப்பில்லை. ஏனெனில், நீர் குளிர்ச்சியாகவும், காற்றின் வேகத்தில் மாற்றம் (wind shear) வலுவாகவும்  இருக்கும்.



Original article:

Share:

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்தின் அடுத்த கட்டம் குறித்து…

 இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) பீகாரில் நடந்த தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது.


பீகாருக்குப் பிறகு, இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India (ECI)) இப்போது 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை தொடங்கியுள்ளது. அதன் கூறப்பட்ட இலக்கு தெளிவானது — அடிக்கடி இடம்பெயர்வு, இறந்த வாக்காளர்கள் மற்றும் பிற தவறுகள் காரணமாக பாதிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிப்பது - இவை அரசியல் கட்சிகளால், குறிப்பாக காங்கிரஸால் சுட்டிக்காட்டப்பட்டவை. இருப்பினும், பீகாரில் கிடைத்த அனுபவம், திட்டமிடப்பட்டபடி இந்த செயல்முறை கணிசமான எண்ணிக்கையிலான மக்களின் வாக்குரிமையை பறிக்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் காட்டுகிறது. 


இது மிகக் குறுகிய காலக்கெடுவில் நடத்தப்பட்டது — கணக்கெடுப்புக்கு ஏறக்குறைய ஒரு மாதம் மற்றும் உரிமைகோரல்கள் (claims) மற்றும் ஆட்சேபனைகளைக் கையாள (objections) மற்றொரு மாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றம், விசாரணை மற்றும் சரிபார்ப்புக்காக 54 நாட்களுக்கு "அறிவிப்பு காலம்" முறையாக வழங்கப்பட்டுள்ளது. பீகாரில் அவசரமாக மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறை இறுதி வாக்காளர்ப் பட்டியலில் வெளிப்படையான புள்ளிவிவர முரண்பாடுகளை உருவாக்கியது. பாலின விகிதம் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முந்தைய பட்டியலில் பீகாரில் 1,000 ஆண்களுக்கு பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 907-ல் இருந்து 892-ஆகக் குறைந்துள்ளது. 


இது சமீபத்திய கணக்கெடுப்புத் தரவுகளைவிட மிகக் குறைவான எண்ணிக்கையாகும். 2024-ஆம் ஆண்டு தேர்தலில் ஆண்களைவிட அதிகமான பெண்கள் வாக்களித்த இடங்களில், பல பெண்கள் - 18 முதல் 29 வயதுடையவர்கள் - "நிரந்தரமாக மாற்றப்பட்டதாக" கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நியாயமற்ற முறையில்  (disproportionately) நீக்கப்பட்டனர். பொதுவாக, அதிகமான பெண்கள் வாக்களித்து, புதிய வாக்காளர்கள் குறைவாகப் பதிவானால், பல ஆண்கள் வேலைக்காக இடம்பெயர்ந்துள்ளனர் என்று அர்த்தமாகிவிடும். குறைந்த பதிவுடன் ஒப்பிடும்போது அதிக பெண் வாக்குப்பதிவு பொதுவாக ஆண் இடம்பெயர்வைக் குறிக்கிறது. இருப்பினும் "சாதாரணமாக வசிக்காத" (ordinarily resident) புலம்பெயர்ந்தோரை அகற்றுவதற்கான SIR-இன் நோக்கம் இருந்தபோதிலும் அதிகமான பெண்கள் நீக்கப்பட்டனர்.


இந்த முரண்பாடுகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடைமுறை கட்டமைப்பில் அடிப்படையாகவே உள்ளதாகத் தெரிகிறது. சரிபார்ப்பின் முதன்மைப் பொறுப்பு தேவையற்ற வகையில் வாக்குசாவடி அதிகாரிகளைத் (Booth Level Officers) தாண்டி, குடிமக்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் — வாக்குசாவடி முகவர்கள் (Booth Level Agents) — பொறுப்பு அதிகமாக சுமத்தப்படுகிறது. அரசியல் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தகுதியுள்ள வாக்காளர்கள் சேர்க்கப்படுவதை உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது ஒரு பிரச்சனையாக உள்ளது. 


ஏனெனில் அவர்கள் தேர்தல்களில் வெற்றி பெறுவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். விட்டுப் போன யாரும் வாக்குசாவடி அதிகாரிகளின் உதவியுடன் மீண்டும் பதிவு செய்யலாம் போன்ற  அசாதாரணங்களுக்கு தேர்தல் ஆணையத்தின் பதிலின்மை போதுமானதல்ல. இருப்பினும், இந்த செயல்முறை  போதுமானதாக இருக்காது. உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகு, இந்தியத் தேர்தல் ஆணையம் அனைத்து விலக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலையும் காரணங்களுடன் வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது சில திருத்தங்களுக்கு வழிவகுத்தது. ஒரு திருத்தப்பட்ட மாதிரி இப்போது பெரிய அளவில் பின்பற்றப்படுகிறது. வாக்குசாவடி அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் மூன்று முறை சென்று பார்வையிடுவதற்கான இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும், சட்டப்படி "சாதாரணமாக வசிப்பவர்களாக" இருந்தபோதிலும், கணக்கெடுப்பு சாளரத்தின் போது (enumeration window) இல்லாத தற்காலிக குடியேறிகள் (temporary migrants) தங்கள் வாக்கை இழக்கலாம். 


இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்வு, வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் படிவத்தை (Enumeration Form) இணைய வழியில் நிரப்ப அனுமதிப்பது போதுமான நடவடிக்கையாக இல்லை. இந்த விதி டிஜிட்டல் பிளவு (digital divide)  மற்றும் சான்றிதழ் சவால்களை புறக்கணிக்கிறது. வாக்குசாவடி அலுவலரின் உதவியைப் பெற உடல் ரீதியாக பாதிப்படைந்துள்ள  வாக்காளர்கள் மீது தேவையற்ற சுமையை இந்த செயல்முறை ஏற்படுத்துகிறது. இந்தப் பயிற்சி நடைபெறும்போது, ​​இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தின் ஒருமைப்பாட்டை பாதிக்காதவாறு, குடிமை சமூகம், ஊடகங்கள் மற்றும் கட்சிகள் தீவிர விழிப்புடன் இருக்க வேண்டிய கடமை உள்ளது.



Original article:

Share: