காஷ்மீரில் வரலாறு காணாத வெப்பத்தின் பின்னணி என்ன? -பஷாரத் மசூத்

 காஷ்மீரில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பமான ஜூன் மாதத்திற்குப் பிறகு, ஸ்ரீநகரும், சுற்றுலா நகரமான பஹல்காமும் சமீபத்தில் வரலாறு காணாத வெப்பநிலையைக் கண்டன. இதற்குக் காரணம் என்ன?


ஜூலை 5, சனிக்கிழமையன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு 70 ஆண்டுகளுக்கும் மேலான அதிகபட்ச பகல்நேர வெப்பநிலையைப் பதிவு செய்தது. பிரபலமான சுகாதார ரிசார்ட்டான (popular health resort) பஹல்காமும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச பகல்நேர வெப்பநிலையை எட்டியது. இந்தப் புதிய பதிவுகள் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளில் பள்ளத்தாக்கின் வெப்பமான ஜூன் மாதத்தைத் தொடர்ந்து இந்த சாதனை படைத்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.


காஷ்மீரின் காலநிலை


காஷ்மீர் பள்ளத்தாக்கு மிதமான காலநிலையைக் கொண்டுள்ளது. இது நான்கு தனித்துவமான பருவங்களை அனுபவிக்கிறது: வசந்த காலம் (spring), கோடை (summer), இலையுதிர் காலம் (autumn) மற்றும் குளிர்காலம் (winter) போன்றவை ஆகும். வசந்த காலம் மார்ச் முதல் மே வரை நீடிக்கும். இலையுதிர் காலம் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நீடிக்கும். இந்த இரண்டு பருவங்களும் பொதுவாக இனிமையானவை. குளிர்காலம் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும். குளிர்காலத்தில், வெப்பநிலை உறைபனிக்குக் கீழே குறைகிறது. உயரமான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு உள்ளது. சமவெளிகளில் மிதமான பனிப்பொழிவு ஏற்படுகிறது.


ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கோடை காலம் நீடிக்கும். தற்போது கோடை காலம் மிதமானது. நகரங்களில், பகல்நேர வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். குல்மார்க் மற்றும் பஹல்காம் போன்ற ரிசார்ட்டுகளில், வெப்பநிலை சுமார் 30 டிகிரி செல்சியஸ் ஆகும். மேற்குப் பகுதியிலிருந்து வரும் இடையூறுகள் அவ்வப்போது மழையைப் பெறுகின்றன. இந்த மழைப்பொழிவு வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் பொதுவாக ஆண்டின் வெப்பமான மாதங்கள் ஆகும்.


என்ன மாறிவிட்டது?


சமீபத்திய ஆண்டுகளில், காஷ்மீரின் வானிலை மிகவும் கணிக்க முடியாததாகிவிட்டது. பள்ளத்தாக்கு நீண்ட வறண்ட காலங்களை அனுபவித்து வருகிறது. அதே நேரத்தில், வெப்பநிலை சீராக அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு, காஷ்மீரில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பமான ஜூன் மாதம் இருந்தது. பகல்நேர வெப்பநிலை இயல்பைவிட மூன்று டிகிரி அதிகமாக இருந்தது.


ஜூலை 5, சனிக்கிழமை, ஸ்ரீநகரில் அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இது 70 ஆண்டுகளுக்கும் மேலான அதிகபட்ச வெப்பநிலையாகும். இது நகரத்தில் இதுவரை பதிவான மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலையாகும். 1953-ம் ஆண்டு இதே தேதியில், ஸ்ரீநகரில் 37.7 டிகிரி செல்சியஸ் என்ற சற்று அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஸ்ரீநகரில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை ஜூலை 10, 1946 அன்று 38.3 டிகிரி செல்சியஸ் ஆகும்.


அதே நேரத்தில், பஹல்காமில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.6 டிகிரி செல்சியஸ் ஆகும். இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதிவான முந்தைய 31.5 டிகிரி செல்சியஸ் என்ற சாதனையை முறியடித்துள்ளது.


இது கவலையளிக்கிறதா?


இந்த ஆண்டு பள்ளத்தாக்கின் நிலையான அதிக வெப்பநிலையை கவலையளிக்கும் பகுதியாகும் என்று சுதந்திரமான வானிலை முன்னறிவிப்பாளர் ஃபைசான் அரிஃப் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் அதிக வெப்பநிலை நிலவியது, ஆனால் அவை தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் என்று அவர் விளக்கினார். இருப்பினும், இந்த ஆண்டு வெப்பநிலை நீண்ட காலமாக இயல்பைவிட அதிகமாகவே உள்ளது. பகல்நேர (அதிகபட்ச) மற்றும் இரவுநேர (குறைந்தபட்ச) வெப்பநிலை இரண்டும் அதிகமாகவே உள்ளன.


காஷ்மீரின் வெப்பநிலை அதிகரிப்பதற்கான காரணங்கள்


ஸ்ரீநகரில் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறையின் இயக்குனர் முக்தர் அகமது வெப்பநிலை உயர்வுக்கு பல காரணங்களைக் கூறினார்.


"முதலாவதாக, உலகளவில் வெப்பநிலை அதிகரிப்பதற்கு புவி வெப்பமடைதல் காரணமாகிறது," என்று அகமது கூறினார். "காஷ்மீரில், கடந்த காலங்களில், வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸைத் தாண்டும் போதெல்லாம், மழைப்பொழிவால் சற்று ஆறுதல் அளித்தது. ஆனால் இப்போது நாம் நீடித்த வறட்சியைக் காண்கிறோம்."


இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நீர் நீராவி கிடைப்பது குறைவு (reduced water vapour) என்று அவர் விளக்கினார். "மலைகளில் மிகக் குறைவான பனிப்பொழிவு உள்ளது, மார்ச் மாதத்திற்குள் எந்தளவு பனிவிழுந்தாலும் அது உருகி மலைகளை வெறுமையாகவும் வறண்டதாகவும் ஆக்குகிறது."


நகர்ப்புற வெப்ப தீவுகள் (Urban Heat Islands (UHI)) மற்றும் அவை எவ்வாறு வெப்பத்தை மோசமாக்குகின்றன என்பதையும் அஹ்மத் பேசினார்.


நகர்ப்புற வெப்ப தீவுகள் என்றால் என்ன, அவை வெப்பநிலையை எவ்வாறு பாதிக்கின்றன?


ஒரு நகர்ப்புற வெப்ப தீவு (UHI) என்பது அருகிலுள்ள கிராமப்புறங்களைவிட மிகவும் வெப்பமான ஒரு நகரம் அல்லது நகர்ப்புறப் பகுதியாகும். வேகமான நகர்ப்புற வளர்ச்சி, அதிக கான்கிரீட் மற்றும் சாலைகள், குறைவான நீர்நிலைகள் மற்றும் குறைவான தாவரங்கள் காரணமாக UHIகள் ஏற்படுகின்றன.


பள்ளத்தாக்கில், குறிப்பாக ஸ்ரீநகரில், அருகிலுள்ள கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த பசுமையான இடத்துடன் நகரங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. கான்கிரீட் மற்றும் நடைபாதை மேற்பரப்புகள் அதிக வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்கின்றன. இது வெப்பநிலையை அதிகரிக்கச் செய்கிறது. போக்குவரத்து மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளும் சிக்கலை அதிகரிக்கின்றன.



Original article:

Share:

பொதுவான இலக்குகள்: இந்தியா மற்றும் ஐந்து-நாடுகள் பயணம் பற்றி…

 பிரதமர் நரேந்திர மோடியின் பயணங்கள் உலகளாவிய தெற்கு நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியாவின் முயற்சிகளை பிரதிபலிக்கிறது.


தற்போது நடந்து வரும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா (BRICS) உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசிலுக்குச் செல்லும் வழியில், பிரதமர் நரேந்திர மோடி கானா டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் அர்ஜென்டினாவுக்கு தொடர்ச்சியான இருதரப்பு பயணங்களை மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு நிறுத்தமும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு மற்றும் முக்கிய தனிமங்கள் (critical minerals) போன்ற சில பொதுவான தலைப்புகளை உள்ளடக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இருந்தது. அக்கராவில், இந்தியா-கானா உறவுகள் விரிவான கூட்டாண்மையாக (comprehensive partnership) மேம்படுத்தப்பட்டன. மேற்கு ஆப்பிரிக்காவிற்கு கானாவை "தடுப்பூசி மையமாக" (vaccine hub) மாற்ற உதவுவது குறித்து விவாதிக்கப்பட்டது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில், டிரினிடாட் மற்றும் டொபாகோவில், இந்தியாவிலிருந்து தரமான மற்றும் மலிவான பொது மருந்துகளுக்கான அணுகலை மேம்படுத்த "இந்திய மருந்தியல்" குறித்து ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பியூனஸ் அயர்ஸில், ஜேவியர் மிலே அதிபர் முக்கிய தனிமங்கள் மற்றும் அர்ஜென்டினாவின் பரந்த ஷேல் (shale) எரிவாயு மற்றும் எண்ணெய் இருப்புகள் மீது ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் இந்தியா தனது மருந்து தொழிலை அர்ஜென்டினாவிற்கு வழங்கியது. இந்த மூன்று நிறுத்தங்களும் "வளந்து வரும் உலகின்" [developing world] அல்லது உலகளாவிய தெற்கு [Global South] நாடுகளில் இருந்தன, மேலும் பிரேசில் மற்றும் பின்னர் நமீபியாவிற்கான முன்னோக்கிய பயணம், "வளர்ந்த உலகிற்கு" [developed world] அல்லது உலகளாவிய வடக்கிற்கு [Global North] மாற்று பொருளாதார வழிமுறைகளை கட்டமைப்பதில் இந்தியாவின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. உலகளாவிய சவால்களுக்கு குறைந்த செலவிலான தீர்வுகளுக்கான இந்தியாவின் ஒத்துழைப்பு வாய்ப்பு, இந்த நாடுகளுக்கு பேரிடர் எதிர்ப்பு உள்கட்டமைப்புக் கூட்டணி (Coalition for Disaster Resilient Infrastructure (CDRI)) போன்ற இந்தியா தலைமையிலான சர்வதேச அமைப்புகளின் ஊக்குவிப்பை உள்ளடக்கியது. பிரதமர் நரேந்திர மோடி இந்திய புலம்பெயர்ந்தோர் (Indian diaspora) சமூகத்திற்கு தனது சிறப்பு உரையையும் வழங்கினார் - 1845-ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் காலனித்துவ முயற்சிகளால் இந்திய தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்ட போர்ட் ஆஃப் ஸ்பெயினில் அவர் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கது. அதிபர் கிறிஸ்டின் கார்லா கங்கலூ மற்றும் பிரதமர் கம்லா பெர்சாட்-பிசாசரின் இந்திய வம்சாவளியை குறிப்பிட்டு, பிரதமர் நரேந்திர மோடி உலகளவில் 35 மில்லியன் இந்திய புலம்பெயர்ந்தோர் சமூகம் இந்தியாவின் "பெருமை" என்று கூறினார்.


அரசியல் வரலாற்றின் அடிப்படையில் இந்தியாவிற்கும் இந்த ஐந்து நாடுகளுக்கும் இடையிலான ஆழமான தொடர்புகளைத் தவிர்க்க இயலாது. ஒவ்வொரு நாடும் ஒரு பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறது - பிரிட்டிஷ், ஸ்பானிஷ், போர்த்துகீசிய மற்றும் ஜெர்மன் படைகளின் கீழ் பாதிக்கப்பட்ட காலனிகள் - மற்றும் அவற்றில் சில ஏன் அணிசேராத இயக்கத்தில் (Non-Aligned Movement) சேர்ந்தன. தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு என்று அழைக்கப்படும் வளரும் நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அவர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். மேலும் ரஷ்யா மற்றும் சீனாவுடன் சேர்ந்து (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா) வழிமுறையை நிறுவுவதில் இந்தியாவும் பிரேசிலும் ஆற்றிய பங்கு, மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா (India, Brazil, South Africa (IBSA)) உருவாக்கம், உலக தெற்கின் நலன்களை வலுவாக முன்வைக்கும் விளைவாக இருந்தது. இந்த பயணத்தில் உள்ள நாடுகள் எதுவுமே "மேற்கத்திய எதிர்ப்பு" (anti-West) என அழைக்க முடியாது. மேலும், குறிப்பிட்ட, மோதல்களில் குறிப்பாக உக்ரைன் மற்றும் காசா புது டெல்லிக்கு அவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும், இந்த உறவுகளுக்குப் பின்னால் உள்ள உந்து சக்தி, அதன் விளைவாக பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது நாள் பயணத்திட்டம், தற்போதைய உலக ஒழுங்கிற்கு அப்பாற்பட்டு, வளரும் மற்றும் வளர்ச்சி குறைந்த நாடுகளின் தேவைகளுக்கு மிகவும் சமமான, பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் உணர்திறன் கொண்ட ஒன்றைப் பார்ப்பதற்கான பொதுவான விருப்பத்தைப் பற்றியது.



Original article:

Share:

தொழில்துறைப் பாதுகாப்பில் சமரசம் செய்யாதீர்கள். -சிரிஷ் குமார் கவுடா

 சில சந்தர்ப்பங்களில், நிறுவனங்களின் பாதுகாப்பை சுயமாக சான்றளிக்கவும், திடீர் ஆய்வுகளைத் தடை செய்யவும் விதிமுறைகள் அனுமதிக்கின்றன. இதனால் கடுமையான மேற்பார்வை பாதிக்கப்படும்.


சமீபத்திய வாரங்களில், தெளிவான பாதுகாப்புத் தோல்விகளைக் காட்டும் கொடிய பேரிடர்களை (deadly disasters) நாம் கண்டிருக்கிறோம். ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விபத்து மற்றும் சென்னை மெட்ரோ இரயில் கர்டர் சரிவு ஒரு கடுமையான சிக்கலை வெளிப்படுத்துகின்றன. இந்தப் பிரச்சினை தொழில்துறை பாதுகாப்பு தரங்களில் நிலையான சரிவு மற்றும் குறைந்து வரும் "பாதுகாப்பு காரணி" (factor of safety) ஆகும். 2025-ம் ஆண்டின் முதல் பாதியில், இந்தியா பல ஆபத்தான தொழில்துறை விபத்துகளைச் சந்தித்தது. குஜராத்தில் பட்டாசு கிடங்கு வெடிப்பு, ஆந்திராவில் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து, நாக்பூரில் ஒரு ஆயுதத் தொழிற்சாலையில் வெடிப்பு மற்றும் மும்பையில் ஒரு இரசாயன தொழிற்சாலை வெடிப்பு ஆகியவை இதில் அடங்கும்.


பத்திரிகைகளில் பதிவாகும் பெரிய உற்பத்தி அமைப்புகளில் இவை சில முக்கியமானவை. தொலைதூரப் பகுதிகளில் இன்னும் பல விபத்துகள் நடக்கின்றன. ஆனால் அவை பதிவாகவில்லை. பல துறைகளில் உள்ள தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவான IndustriALL, 2024-ல் மட்டும் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியிட விபத்துகளில் இறந்ததாகக் கூறுகிறது. தொழிற்சாலை ஆலோசனை சேவை மற்றும் தொழிலாளர் நிறுவனங்களின் பொது இயக்குநரகத்தின் (Directorate General of Factory Advice Service and Labour Institutes (DGFASLI)) அறிக்கைகள், 2012 மற்றும் 2022-க்கு இடையில் சராசரியாக ஒவ்வொரு நாளும் மூன்று தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இறந்ததாகக் காட்டுகின்றன. இந்த தொடர்ச்சியான விபத்துக்கள், பொறியியல் பாதுகாப்பு விளிம்புகள் பலவீனமடைந்து மேற்பார்வையானது தோல்வியடையும்போது ஏற்படும் விளைவுகள் எவ்வளவு கடுமையானவை என்பதைக் காட்டுகின்றன. பாதுகாப்பு ஒரு முக்கிய வணிக முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பதையும் இது காட்டுகிறது. துயரங்கள் நடந்த பிறகுதான் நிறுவனங்கள் கற்றுக்கொள்வதை நிறுத்த வேண்டும். அதற்குப் பதிலாக, அவர்கள் வலுவான, அமைப்பு ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.


கடந்த சில ஆண்டுகளில், அரசாங்கம் பல முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் (Make in India programme), உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Production Linked Incentive (PLI)) திட்டங்கள் மற்றும் தொழில்துறை வழித்தடங்களை உயர்த்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் முயற்சிகள் இதில் அடங்கும். உற்பத்தித் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதே இதன் நோக்கமாகும். இந்த முயற்சிகள் தேசிய வளர்ச்சியின் பரந்த இலக்கை ஆதரிக்கின்றன. இருப்பினும், இந்த செயல்பாட்டில் பாதுகாப்பு ஒரு முக்கியமான கவலையாகும். அதே நேரத்தில், கடுமையான போட்டி வணிகங்களை செயல்திறனில் அதிக கவனம் செலுத்தத் தள்ளுகிறது. இதன் விளைவாக, அவை பெரும்பாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை புறக்கணித்து மிகக் குறைந்த பாதுகாப்பு விளிம்புகளுடன் செயல்படுகின்றன.


தொழிலாளர் பாதுகாப்பு விஷயத்தில் நீர்த்துப் போதல் 


நிறுவனங்கள் செலவுகளைக் குறைத்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகளில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய "பாதுகாப்பு காரணியை" (factor of safety) குறைத்துள்ளது. சில சந்தர்ப்பங்களில், விதிகள் நிறுவனங்கள் தங்கள் சொந்த பாதுகாப்பு தரங்களை சான்றளிக்க அனுமதிக்கின்றன. இந்த விதிகள் திடீர் ஆய்வுகளையும் தடை செய்கின்றன. கடுமையான பாதுகாப்பு சோதனைகளைவிட வணிகத்தை எளிதாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை இது காட்டுகிறது. இதன் விளைவாக, பாதுகாப்பு விதிகளை புறக்கணிப்பதால் ஏற்படும் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன.


தொழிலாளர் பாதுகாப்பைப் புறக்கணிப்பதன் மூலம் பணத்தைச் சேமிக்கும் நிறுவனங்கள் பின்னர் அதிக விலை கொடுக்கக்கூடும் என்பதை கல்வி ஆராய்ச்சி மற்றும் நிகழ்வு சான்றுகள் (Academic research and anecdotal evidence) தெளிவாகக் காட்டியுள்ளன. இந்த செலவுகள் மக்களுக்கும், நிதிக்கும் தீங்கு விளைவிக்கும் பேரிடர்களிலிருந்து வருகின்றன. தொழிலாளர் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் முதலீடு செய்வது ஒரு புத்திசாலித்தனமான வணிகத் தேர்வாகும். ஒரு வலுவான பாதுகாப்பு கலாச்சாரம் அபாயங்களைக் குறைக்கிறது. இது பணியாளரின் உற்பத்தித்திறன், மன உறுதி மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது. இது நிறுவனத்தின் நம்பகத்தன்மையைப் பராமரிக்க உதவுகிறது, வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உருவாக்குகிறது. சாதகமான சுற்றுச்சூழல், சமூகம், ஆளுகை (Environmental, Social, Governance(ESG)) மதிப்பீடுகள் பிராண்டின் மதிப்பை அதிகரிக்கின்றன.


தொழிலாளர்களின் காப்பு மற்றும் பாதுகாப்பு (Safety and security of workers) ஆகியவை பெருநிறுவன ESG மதிப்பீடுகளின் ஒரு பகுதியாகும். பெரும்பாலான ESG கட்டமைப்புகளில் 'சமூக' பிரிவின் கீழ் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அடங்கும். விளைவுசார் முதலீட்டு மாதிரிகள் மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் பாய்கின்றன. மோசமான பாதுகாப்பு செயல்திறன் ESG மதிப்பெண்களைக் குறைக்கலாம். இது ஒரு நிறுவனத்தின் நற்பெயருக்கு நீடித்த சேதத்தை ஏற்படுத்தும். இந்தியாவில், SEBI-ன் வணிக பொறுப்பு மற்றும் நிலைத்தன்மை அறிக்கையிடல் (Business Responsibility and Sustainability Reporting (BRSR)) தரநிலைகள், பணியிட சம்பவங்கள் பற்றிய தரவைப் பகிர்ந்து கொள்ள சிறந்த பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைக் கோருகின்றன. இது பாதுகாப்பை பங்குதாரர் மதிப்புடன் இணைக்கிறது.


எனவே, பாதுகாப்பை மேம்படுத்த ESG மதிப்பீடுகள் வலுவான, சந்தை சார்ந்த வழியை வழங்குகின்றன. ஒழுங்குமுறை கண்காணிப்பு மற்றும் அமலாக்கம் சீரற்றதாக இருக்கும்போது இது மிகவும் முக்கியமானது.


வளர்ந்துவரும் பொருளாதாரத்தில், அமைப்புகள் மற்றும் சந்தை நிலைமைகள் நிறுவனங்களை மிக வேகமாக வேலை செய்யவும், செலவுகளைக் குறைவாக வைத்திருக்கவும் தூண்டும். அவை விரைவாகவும் மலிவாகவும் சிறந்த செயல்திறனை அடைய முயற்சிக்கின்றன. ஆனால், இந்த வளர்ச்சி மக்களின் உயிர்களை பணயம் வைத்து வரக்கூடாது. பொறியியல் பாதுகாப்பு லாப வரம்புகளும் பெருநிறுவனங்களின் நல்லெண்ணமும் வரம்பற்றவை அல்ல என்பதை சமீபத்திய துயரங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. எதிர்கால பேரிடர்களைத் தடுக்கவும், தொழில்களை நிலையானதாக வைத்திருக்கவும், தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் தொடர்ச்சியான, அமைப்பு அளவிலான கவனம் இருக்க வேண்டும். இந்த கவனம் ESG (சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை) பொறுப்புத்தன்மையுடன் நன்கு இணைக்கப்பட வேண்டும்.


எழுத்தாளர், திருச்சிராப்பள்ளி ஐஐஎம் செயல்பாட்டு மேலாண்மை மற்றும் முடிவெடுக்கும் அறிவியல் துறையின் ஆசிரியர்.



Original article:

Share:

அரசியலமைப்பு ஏன் குடியரசை மதச்சார்பற்றது என்று கட்டாயம் அறிவிக்க வேண்டும்? -அபிஷேக் சிங்வி

 மதச்சார்பின்மை (secularism) என்ற சொல் இன்று முகவுரையில் இல்லையென்றால், கடந்த பத்து ஆண்டுகளின் நிகழ்வுகள் அதை உடனடியாகவும் தெளிவாகவும் சேர்க்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருக்கும்.


இந்திய அரசியலமைப்பு வெறும் சட்ட கையெழுத்துப் பிரதி மட்டுமல்ல, இது ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களின் கனவுகள், விருப்பங்கள் மற்றும் விதிக்கு ஒரு உயிருள்ள சான்றாக அமைகிறது. முகவுரை பெரும்பாலும் அரசியலமைப்பின் அடையாள அட்டை (identity card) என்று அழைக்கப்படுகிறது. இது நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் தீவிர கருப்பொருள்களை முன்வைக்கும் ஒரு கவிதை முன்னுரையாகும்.


அரசியலமைப்பின் சில பகுதிகள், குறிப்பாக 'சோசலிஸ்ட்' (socialist) மற்றும் 'மதச்சார்பற்ற' (secular) போன்ற சொற்களை மாற்ற முடியுமா அல்லது மாற்ற முடியாததா என்பது குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன. அரசியலமைப்பின் பின்னால் உள்ள உண்மைகள், சட்டங்கள் மற்றும் உணர்வை மீண்டும் பார்ப்பது முக்கியம். முகவுரையைத் திருத்தவோ மாற்றவோ முடியாது என்று சொல்வது தவறு மற்றும் சட்டப்படி சாத்தியமற்றது என்பதை இது காண்பிக்கும்.


1976-ம் ஆண்டு 42-வது திருத்தம் சோசலிச மற்றும் மதச்சார்பற்ற என்ற சொற்களைச் சேர்த்த பிறகு, அதைத் தொடர்ந்து வந்த காலங்களில் அந்தச் சேர்த்தல்களுக்கு ஏற்பட்ட பல சவால்களில் எதுவும், பிரிவு 368-ன் கீழ் முகவுரையை மாற்ற முடியாது என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டன. சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மையின் கொள்கைகள் தொடக்கத்திலிருந்தே உண்மையான அரசியலமைப்பின் பார்வையின் ஒரு பகுதியாக இருந்தன. இருப்பினும், அவை 42வது அரசியலமைப்புத் திருத்தம் அவற்றை அதிகாரப்பூர்வமாக எழுத்துப்பூர்வமாக அவசரநிலை பிரகடனத்தின் மூலம் மட்டுமே கூறியது.


பொதுவாக வழிகாட்டுதல் கோட்பாடுகள் மற்றும் குறிப்பாக பிரிவுகள் 38 மற்றும் 39, சமத்துவமின்மையைக் குறைத்து வளங்களின் நியாயமான மற்றும் சமமான ஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு கோருகின்றன. அவை சோசலிச உந்துதலை வெளிப்படுத்தும் வழித்தடங்களாகும். இதேபோல், அனைத்து மதங்களுக்கும் நியாயமான தீர்வு அளிக்கப்படும் என்ற வாக்குறுதியைப் பெறுவதன் மூலம் நமது குடியரசின் மையத்தில் ஒரு வலுவான, மதச்சார்பற்ற நெறிமுறையை 25 முதல் 28 வரையிலான பிரிவுகள் உறுதிப்படுத்துகின்றன.


இந்த வார்த்தைகள் அவசரகாலத்தின் அரசியலமைப்பு மீறல்களின் காலத்தில் தோன்றியிருக்கலாம், ஆனால் அவை அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் திட்டத்தை மறைப்பதற்கு பதிலாக தெளிவுபடுத்துகின்றன. இந்த வார்த்தைகள் குடியரசின் தார்மீக கடமைகளை நினைவூட்டுவதாக உள்ளன, யாருக்கும் தீங்கு விளைவிப்பதற்கு பதிலாக. மோசமான காலங்களிலிருந்து நல்லவை தோன்றலாம். இவற்றை இப்போது வேரோடு பிடுங்குவது, இந்தியாவின் அடிப்படைக் கருத்துகளுக்கு எதிராக நடத்தப்படும் பயனற்ற, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு போராக இருக்கும்.


எஸ்.ஆர். பொம்மை vs இந்திய ஒன்றியம்-1994 (SR Bommai vs Union of India) வழக்கில், உச்சநீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டதாவது, "மதச்சார்பின்மை நமது அரசியலமைப்பு தத்துவத்தின் அடித்தளம். அது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படை அம்சமாகும்." அரசியல், சட்டம் மற்றும் அரசியலமைப்பு பதவியில் இருப்பவர்கள் என பல்வேறு தரப்பிலிருந்து வரும் முக்கிய நிபுணர்கள், 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று ஏற்கனவே வைத்திருந்த ஒன்றை நீக்க விரும்புவது எப்படி என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?


அடிப்படைக் கட்டமைப்பை மீறும் எந்தவொரு அரசியலமைப்பு திருத்தமும் அரசியலமைப்பிற்கு முரணானது என்று அடிப்படை கட்டமைப்பு கோட்பாடு கூறவில்லையா? இங்கே ஒரு முரண்பாடு உள்ளது. இதன் பின்னர் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாகக் கருதப்பட்ட ஒன்று, அடிப்படைக் கொள்கைகளைப் புரிந்து கொண்டதாகக் கருதப்படும் சட்ட வல்லுநர்களாலும் அரசியல் தலைவர்களாலும், அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியை யாராகிலும் எவ்வாறு நீக்க முடியும் என்பதை நமக்குச் சொல்லாமல் நீக்க முயற்சிக்கப்படுகிறது.


இந்தியாவில் மதச்சார்பின்மை மதத்திற்கு எதிரானது என்று சொல்வது தவறு. உண்மையில், மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவதாகும். அனைத்து நம்பிக்கைகளும் இந்தியாவிற்கு சொந்தமானது என்ற கருத்தை அது கொண்டாடுகிறது. மதச்சார்பின்மை என்பது ஒரு பரந்த மற்றும் முழுமையான யோசனையாகப் பார்க்கப்படுகிறது. முதலாவதாக, அரசுக்கு அதன் சொந்த மதம் இருக்க முடியாது என்பதாகும். இரண்டாவதாக, அரசு அனைத்து மதங்களிலிருந்தும் சமமாக விலகி இருக்கிறது, ஆனால் அவற்றை சமமாக ஆதரிக்கிறது. மூன்றாவதாக, அரசு அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவின் மதச்சார்பின்மை மேற்கத்திய நாடுகளில் காணப்படும் தேவாலயத்தையும், அரசையும் கடுமையாகப் பிரிப்பதில் இருந்து வேறுபட்டது.


அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை என்று பொருள்படும் சர்வ தர்ம சம பாவ் (Sarva dharma sama bhaav), இந்திய மதச்சார்பின்மையின் பரந்த கட்டமைப்பிற்குள் இருக்க முடியும். இதன் தொடர்புடைய அனைத்து அம்சங்களுடனும் நம்பிக்கையைப் பின்பற்றவும் பரப்பவும் உள்ள உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம். அரசியலமைப்புப் பிரிவு 25-லிருந்து தொடங்கும் பரந்த அரசியலமைப்பு மொழியால் இது பாதுகாக்கப்படுகிறது. இந்திய மதச்சார்பின்மை என்றால் இதுதான், இரக்கம், சகவாழ்வு மற்றும் அரசியலமைப்பு ஒழுக்கத்தின் நெய்த துணி போன்றவை போல் உள்ளது.


சிலர், "நமது ஜனநாயக அமைப்பில் மதச்சார்பின்மை ஏற்கனவே தெளிவாக இல்லையா?" என்று கேலி செய்கிறார்கள். இருக்கலாம். ஆனால், பெருகிவரும் சகிப்பின்மையும் மறைமுக பெரும்பான்மைவாதமும் கொண்ட உலகில், தெளிவானவை அறிவிக்கப்பட வேண்டியவையாகவும், பாதுகாக்கப்பட வேண்டியவையாகவும், உறுதியாக நிலைநிறுத்தப்பட வேண்டியவையாகவும் ஆகின்றன.


முகவுரையில் உள்ள "மதச்சார்பற்ற" என்ற சொல் வெறும் காட்சிக்காக அல்ல. இது ஒரு தெளிவான நோக்க அறிக்கையாகும். இது ஒரு அரசியலமைப்பு வழிகாட்டியாக செயல்படுகிறது. இது எதிர்கால அரசாங்கங்களை எச்சரிக்கிறது. பொதுவாக நீங்கள் வாக்குகளைப் பெறலாம், ஆனால் நீங்கள் முக்கிய மதிப்புகளை பலவீனப்படுத்தக்கூடாது.


இங்கே ஒரு பெரிய முரண்பாடு உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பை மிகவும் சேதப்படுத்திய அரசாங்கம் இப்போது அதன் ஆதரவாளர்கள் இந்த முக்கியமான வார்த்தையை அகற்ற அழுத்தம் கொடுக்க அனுமதிக்கிறது.


உண்மையில், மதச்சார்பின்மை என்ற சொல் இன்று முகவுரையில் இல்லையென்றால், கடந்த காலத்தின் நிகழ்வுகள் அதை உடனடியாகவும் தெளிவாகவும் சேர்க்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும்.


நடைமுறையில் அரசியலமைப்பை அவமதிக்கும் மக்கள் இப்போது அதை சட்டத்திலும் நீக்க விரும்புகிறார்கள். அரசியலமைப்பு பதவிகளில் உள்ள அதிகாரிகளும் இந்த யோசனையை ஆதரிக்கும்போது, ​​அது அவர்களின் கடமையின் தோல்வி மட்டுமல்ல. அவர்கள் ஒரு அரசியல் கட்சியின் சித்தாந்தத்தை வெளிப்படையாக ஆதரிப்பதை இது காட்டுகிறது.


பாஜக நீண்ட காலமாக "மதச்சார்பின்மை" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் அசௌகரியத்தை வெளிப்படுத்தி வருகிறது, இதை மிகவும் அநியாயமாக சிறுபான்மையினர் திருப்திப்படுத்தல் எனக் கருதுகிறது. இது உண்மையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. மதச்சார்பின்மை என்பது மேற்கத்திய இறக்குமதி அல்ல, மாறாக வேதாந்த உந்துதல் ஆகும். இது அசோகரின் தம்மம், அக்பரின் சுல்ஹி-குல், கபீரின் இருபாடல்கள் மற்றும் குரு நானக்கின் போதனைகள் அனைத்தும் ஒன்றிணைந்தவை. இது ஸ்வாமி விவேகானந்தர், மதங்களின் பாராளுமன்றத்தில் "நாங்கள் பரந்த சகிப்புத்தன்மையில் மட்டுமல்ல, எல்லா மதங்களையும் உண்மையாக ஏற்றுக்கொள்கிறோம்." என்று பெருமையுடன் பிரகடனம் செய்தது’


மதச்சார்பின்மைக்கான எனக்குப் பிடித்த வரையறைகளில் ஒன்று ராஜீவ் பார்கவா குறிப்பிட்டது. அவர் ஆபிரகாம் லிங்கனின் பிரபலமான சொற்றொடரைத் தழுவினார். "மக்களுக்காக" மற்றும் "மக்களால்" ஆகியவை ஜனநாயகத்தின் முக்கிய மதிப்புகள் என்று லிங்கன் கூறினார். ஆனால், ஒவ்வொரு நபரும் ஒன்றாக குடியரசை சொந்தமாக்கிக் கொள்கிறார்கள் என்பதைக் குறிக்க "மக்களின்" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார். இதில் கடைசி வரிசையில் உள்ள கடைசி நபரும் அடங்கும். பகிரப்பட்ட உரிமை உணர்வு இல்லாமல், ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது. முன்னுரையில் உள்ள மற்றொரு முக்கியமான சொல் சகோதரத்துவம் (Fraternity) ஆகும். இது மதச்சார்பின்மையுடன் இணைந்து சிறப்பாக செயல்படுகிறது. ஒருவருக்கொருவரும் வளர உதவும் நல்ல கூட்டமைப்புகளைப் போல் உள்ளது.


நமது அரசியலமைப்பிலிருந்து இந்த சாரத்தை அழிக்க முயற்சிப்பது வெறும் திருத்தல்வாதம் (revisionism) மட்டுமல்ல. இது வரலாற்று நாசவேலை (historical vandalism). முகவுரையைச் சுற்றியுள்ள புதுப்பிக்கப்பட்ட விவாதம் வெறும் கல்வி சார்ந்தது அல்ல.


இது நமது தற்போதைய காலங்களை பிரதிபலிக்கிறது. இந்த காலங்கள் பிளவுபடுத்தும் அரசியல், தேர்ந்தெடுக்கப்பட்ட சீற்றம் மற்றும் வளர்ந்து வரும் வகுப்புவாதத்தால் குறிக்கப்படுகின்றன. அத்தகைய காலத்தில், மதச்சார்பின்மைக்கான அரசியலமைப்பு அறிவிப்பு வெறும் வார்த்தை அல்ல. அது ஒரு பாதுகாப்புச் சுவராக செயல்படுகிறது. இந்த சுவர் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் மற்றும் இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாக்கிறது.


“மாற்றத்தின் காற்று வீசும்போது, ​​சிலர் சுவர்களைக் கட்டுகிறார்கள், மற்றவர்கள் காற்றாலைகளைக் கட்டுகிறார்கள்” (When the winds of change blow, some build walls, others build windmills) என்பது பழமொழி. நமது அரசியலமைப்பு ஒரு காற்றாலையை உருவாக்கத் தேர்ந்தெடுத்தது. அது ஒரு மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயகக் குடியரசை உருவாக்கியது. எதிர்கால சந்ததியினர் முன்னேற்றம் மற்றும் அமைதியின் காற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இது செய்யப்பட்டது. இன்று, சிலர் அந்த காற்றாலையை அகற்ற விரும்புகிறார்கள்.


முகவுரை வெறும் அறிமுகம் அல்ல. இது ஒரு வாக்குறுதி. ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு வாக்குறுதியாகும். இது விதியுடனான நமது சந்திப்பு. அந்த வாக்குறுதியை சிறிதளவு கூட அழிப்பது அல்லது பலவீனப்படுத்துவது குடியரசின் ஆன்மாவை காட்டிக் கொடுப்பதாகும்.


அபிஷேக் சிங்வி ஒரு சட்ட நிபுணர், மூத்த நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் காரியக் குழு உறுப்பினர் மற்றும் காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஆவார்.



Original article:

Share:

பழைய வாகனங்கள் மீதான ஒன்றிய அரசின் கட்டுப்பாடுகள் : ஒரு தற்காலிகத் தீர்வுகூட இல்லை

 டெல்லி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையும் பின்னடைவும் ஒரு பெரிய சிக்கலை எடுத்துக்காட்டுகின்றன. மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் சரியாக வகுக்கப்பட்ட திட்டம் எதுவும் இல்லை.


பழைய வாகனங்களுக்கான எரிபொருள் தடையை இடைநிறுத்துமாறு டெல்லி அரசாங்கம் மத்திய அரசின் காற்று தர மேலாண்மை ஆணையத்திடம் (Commission for Air Quality Management (CAQM)) கேட்டுக் கொண்டுள்ளது. இந்தத் தடை ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. இது 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களுக்கும் 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துகிறது. மாசுபாட்டைக் குறைப்பதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டது.


டெல்லியின் சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, இந்தத் தடை "எதிர்மறை-விளைவாக" (counter-productive) இருக்கலாம் என்று கூறினார். மேலும், அவரின் கருத்து ஒரு அளவிற்கு நம்பகமானதாக உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் பழைய வாகனங்களின் உரிமையாளர்களை அருகிலுள்ள மாநிலங்களிலிருந்து டீசல் அல்லது பெட்ரோல் வாங்க வைக்கக்கூடும். இது மாநிலங்களுக்கு இடையே சட்டவிரோத எரிபொருள் வர்த்தகத்திற்கு வழிவகுக்கும். டெல்லி முதல்வர் ரேகா குப்தா கூறுகையில், இந்தத் தடை இரு சக்கர வாகனங்களை நம்பியிருக்கும் பலரின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடும். இதுவும் ஒரு நியாயமான கவலைதான்.


இருப்பினும், கட்டுப்பாடுகள் மற்றும் அவற்றுக்கு எதிரான பின்னடைவு இரண்டும் ஒன்றிய அரசு மற்றும் CAQM உட்பட அதன் நிறுவனங்கள் மற்றும் அடுத்தடுத்த டெல்லி அரசாங்கங்களின் நீண்டகால தோல்வியின் அறிகுறியாகும். 15 ஆண்டுகளுக்கும் மேலாக, டெல்லி அதன் காற்றைச் சுத்தம் செய்ய தெளிவான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட உத்தி தேவைப்பட்டது. ஆனால் அதற்குப் பதிலாக, அது கடுமையான நடவடிக்கைகளையும் முழுமையற்ற தீர்வுகளையும் மட்டுமே பெற்றுள்ளது.


இந்தத் தடையை அமல்படுத்துவதற்கு பெட்ரோல் பம்ப் டீலர்களை (petrol pump dealers) CAQM அமைப்பு பொறுப்பேற்க வைத்தது. அவர்கள் தவறினால், 1988-ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 192-ன் கீழ் அவர்கள் அபராதம் விதிக்க நேரிடும். பெட்ரோல் பம்ப் உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது இது பெரும் சுமையை ஏற்படுத்துவதாக பெட்ரோல் டீலர்கள் சங்கம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த நபர்கள் இந்தப் பொறுப்பை ஏற்க பயிற்சி பெறவில்லை அல்லது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர்.


இந்த அமைப்பு எரிபொருள் நிலையங்களில் தானியங்கி பதிவெண் தகடு அடையாளங் காணுதல் (Automatic Number Plate Recognition (ANPR)) ஒளிப்படக்கருவிகளைப் பயன்படுத்தி, ஆயுள் முடிந்த வாகனங்களை அடையாளம் காணும். இது அரசாங்கத்தின் வாகன இணைய தளத்துடன் வாகனத் தரவைச் சரிபார்க்கிறது. இந்த அமைப்புகளுக்கான சோதனை கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. கடந்த மாதம், ANPR ஸ்கேனர்கள் பழைய வாகனங்கள் மீதான தடையை அமல்படுத்தத் தயாராக இருப்பதாக CAQM கூறியது.


இருப்பினும், நகரின் பல பகுதிகளில், ANPR-களில் தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாக அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா ஒப்புக்கொண்டார். இவற்றில் தவறான சென்சார்கள் மற்றும் தவறான இடங்களில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் அடங்கும். மேலும், NCR பகுதி முழுவதும் இந்த அமைப்பு இணைக்கப்படவில்லை. கட்டுப்பாடுகள் சிறப்பாகச் செயல்படுவதற்கு மிகக் குறைந்த திட்டமிடல் மட்டுமே இருந்தது என்பதை இது காட்டுகிறது.


வாகன மாசுபாட்டைக் குறைப்பதற்கு சாலையில் அதிக வாகனங்கள் இருப்பதற்கான பல காரணங்களைப் புரிந்துகொள்ள தொடர்ச்சியான முயற்சி தேவை. வாழ்க்கை முறை தேர்வுகள், வாழ்க்கை சம்பாதிக்க வேண்டிய அவசியம் மற்றும் பயணத்தை நீண்ட மற்றும் தொலைதூரமாக்குகின்ற நகர்ப்புற விரிவாக்கம் ஆகியவை இந்தக் காரணங்களில் அடங்கும். டெல்லியில் கடந்த கால அரசாங்கங்கள் இந்தப் பிரச்சினையை நன்றாகக் கையாளவில்லை. மக்கள் தங்கள் வாகனங்களை முறையாகப் பராமரிக்க ஊக்குவிக்கும் எளிமையான பணிகூட போதுமான கொள்கைக்கான கவனம் செலுத்தப்படவில்லை. பதவியேற்றதிலிருந்து, டெல்லியின் பாஜக அரசாங்கம் முந்தைய தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதற்கான அறிகுறியைக் காட்டவில்லை. அது தனது அணுகுமுறையை மாற்ற வேண்டும்.



Original article:

Share:

பதினைந்து நகர மையங்கள் இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுக்க முடியும். இந்த திறனை நாம் வெளிக்கொணர வேண்டும். -அமிதாப் காந்த்

     நமது நகரங்கள் பல நூற்றாண்டுகளின் வரலாற்றைக் கொண்டுள்ளன. மேலும், அவை உலகத் தரம் வாய்ந்த பொருளாதார மற்றும் கலாச்சார தன்மைகளாக இருக்க வேண்டும். சில படிநிலைகள் நமது நகரங்களை தூய்மையானதாகவும், பாதுகாப்பானதாகவும், அதிக உற்பத்தித் திறன் கொண்டதாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றும்.


இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியில் புதுமை மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு நகரங்கள் முக்கிய மையமாக உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% 15 நகரங்கள் மட்டுமே ஆகும். இந்த நகரங்கள் மும்பை, புது தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத், புனே, சூரத், கோயம்புத்தூர், நொய்டா/கிரேட்டர் நொய்டா, கொச்சி, குருகிராம், விசாகப்பட்டினம் மற்றும் நாக்பூர் போன்றவை ஆகும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா $30 டிரில்லியன்+ பொருளாதாரமாக மாற இவை உதவும். இந்த வளர்ச்சி பொருளாதாரத்தில் கூடுதலாக 1.5% அதிகரிக்கக்கூடும்.


இருப்பினும், இந்த நகரங்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன. அவை கடுமையான காற்று மாசுபாடு, நகர்ப்புற வெள்ளம், தண்ணீர் பற்றாக்குறை, மோசமான இணைய இணைப்பு, குப்பை பிரச்சினைகள் மற்றும் சுகாதாரமற்ற புறநகர் பகுதிகள் போன்றவைகளை சமாளிக்கின்றன. இந்த சிக்கல்கள் நகரங்கள் நல்ல திட்டமிடல் அல்லது வலுவான மேலாண்மை இல்லாமல் வளர்ந்ததைக் காட்டுகின்றன. மேலும், அவை காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ளத் தயாராக இல்லை.


பாங்காக், லண்டன், துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற நகரங்கள் உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன. ஆனால், இந்திய நகரங்கள் அரிதாகவே உலகின் சிறந்த இடங்களாகத் தோன்றுகின்றன. இந்திய நகரங்கள் அவற்றின் முழு திறனை அடைய நாம் எவ்வாறு உதவ முடியும்? முதலில், நமது நகரங்களில் காற்றை சுத்தம் செய்ய வேண்டும். உலகில் மிகவும் மாசுபட்ட 50 நகரங்களில் சுமார் 42 இந்தியாவில் உள்ளன. இதற்கான முக்கிய காரணங்கள் வாகன உமிழ்வு, கட்டுமான தூசி மற்றும் பயிர்க் கூளம் எரிப்பு போன்றவை ஆகும்.


பொதுப் போக்குவரத்தை விரைவில் மின்சார வாகனங்களுக்கு மாற்ற வேண்டும். கட்டுமான தூசியைக் கட்டுப்படுத்தும் விதிகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். 2025-26 பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி நகர்ப்புற சவால் நிதி (Urban Challenge Fund) அறிவிக்கப்பட்டது. நகர்ப்புற வாழ்க்கையை மேம்படுத்த நகர அளவிலான சவால்களை இந்த நிதி ஆதரிக்க முடியும். நகரங்கள் அவற்றின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப்படுத்தப்பட வேண்டும். இந்த தரவரிசைகளின் அடிப்படையில் நிதி தொடர்பான வெகுமதிகள் வழங்கப்பட வேண்டும்.


திடக்கழிவு மேலாண்மைக்கு ஒரு பெரிய மாற்றம் தேவை. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (Ministry of Housing and Urban Affairs (MoHUA)) நமது நகரங்கள் ஒவ்வொரு நாளும் 1,50,000 டன்களுக்கும் அதிகமான திடக்கழிவுகளை உற்பத்தி செய்கின்றன என்று கூறுகிறது. ஆனால், இந்தக் கழிவுகளில் கால் பகுதி மட்டுமே அறிவியல் மற்றும் நிலையான முறையில் பதப்படுத்தப்படுகிறது. தேசிய அளவில், இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 62 மில்லியன் டன் நகராட்சி திடக்கழிவுகளை உற்பத்தி செய்கிறது. இந்தக் கழிவுகளில் சுமார் 70% சேகரிக்கப்படுகிறது. ஆனால் 30% மட்டுமே முறையாக பதப்படுத்தப்படுகிறது. இது நகராட்சி நிர்வாகத்தில் தோல்வியைக் காட்டுகிறது. இதைச் சரிசெய்ய, மாநில அரசுகள் வலுவான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதில் கழிவு சேகரிப்பு மற்றும் போக்குவரத்துக்கு வாகனங்கள் வாங்குவதும் அடங்கும். இந்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்ய ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். செயல்திறனை அடிப்படையாகக் கொண்ட பொறுப்புணர்வை (performance-based accountability) ஊக்குவிக்கும் தெளிவான கொள்கைகள் மற்றும் விதிகள் மிக முக்கியம். இறுதியில், சிறந்த ஒழுங்குமுறை, சமூகப் பங்கேற்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை கழிவு மேலாண்மையை நிலையானதாகவும், சுற்றறிக்கையாகவும் மாற்றுவதற்கான ஒரே வழிகள் ஆகும். இது 2030-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் 73.5 டிரில்லியன் டாலர்களை உருவாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


இந்தூர் மாதிரி (Indore’s model) பெரும் ஆற்றலைக் காட்டியுள்ளது. வீடு வீடாகப் பிரிக்கப்பட்ட கழிவுகள் சேகரிக்கப்பட்டு சிறப்பு வாகனங்களில் உயர்தர கழிவு பதப்படுத்தும் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஈரமான கழிவுகள் பயோ-சிஎன்ஜியாக (bio-CNG) மாற்றப்படுகின்றன.


நீர் அழுத்தம் என்பது ஒரு கடுமையான பிரச்சனை ஆகும். நமது ஆறுகளில் கிட்டத்தட்ட பாதி மாசுபட்டுள்ளன. 2018-ம் ஆண்டில், 2030-ம் ஆண்டுக்குள், இந்தியாவின் 40% மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை சந்திப்பார்கள் என்று நிதி ஆயோக் கணித்துள்ளது. நகரங்கள் குழாய் நீரில் 40-50% இழக்கின்றன. மோசமான நீரின் தரமும் அதிக சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இந்தூரில், GIS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீர்நிலைகளில் கழிவுநீர் கசிவு நிறுத்தப்பட்டது. மழைநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மீண்டும் பயன்படுத்துவது இந்தூரை இந்தியாவின் முதல் நீர்மிகை நகரமாக (India’s first water-plus city) மாற்றியுள்ளது.


இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (Confederation of Indian Industry (CII)) மற்றும் நைட் ஃபிராங்க் (Knight Frank) 10 மில்லியன் மலிவு விலை வீடுகளின் பற்றாக்குறையை மதிப்பிடுகின்றன. இந்தப் பற்றாக்குறை 2030-ம் ஆண்டுக்குள் 31 மில்லியனாக மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முறைசாரா குடியிருப்புகள் அதிகரித்துள்ளன, இது சட்டவிரோத காலனிகளுக்கு வழிவகுக்கிறது. இந்தக் காலனிகளில் தண்ணீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட சரியான உள்கட்டமைப்பு இல்லை. தரை இடக் குறியீடு (floor space index (FSI)) மற்றும் தரை பரப்பு விகிதம் (floor area ratio (FAR)) அதிகரிப்பது செங்குத்து வளர்ச்சியை ஊக்குவிக்கும். அடர்த்தி தொடர்பான சலுகைகளும் ஒரு சாத்தியமான தீர்வாகும். இது 'நாளைய நிதி நகரங்கள்' (Financing Cities of Tomorrow) குறித்த G20 இந்தியா மற்றும் OECD அறிக்கையில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் நகர்ப்புற ஆற்றல் (urban potential) குறைவாக உள்ளது. ஏனெனில், நகரங்கள் நெரிசல் மற்றும் அதிக சுமை கொண்டவையாக உள்ளது. பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் (Boston Consulting Group) கூற்றுப்படி, ஒரு இந்திய நகரத்தில் சராசரி நபர் ஒவ்வொரு நாளும் 1.5 முதல் 2 மணிநேரம் வரை போக்குவரத்தில் சிக்கிக் கொள்கிறார். போக்குவரத்து நெரிசல்கள் மாசுபாடு மற்றும் உமிழ்வை அதிகரிக்கின்றன. இதைச் சரிசெய்ய, பொதுப் போக்குவரத்தில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். நெரிசல் அடிப்படையிலான விலை நிர்ணயத்தையும் பயன்படுத்த வேண்டும். மேலும், சிறந்த போக்குவரத்து மேலாண்மைக்கு AI மற்றும் IoT தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். மக்கள் விதிகளைப் பின்பற்றி பொறுப்புடன் வாகனம் ஓட்டினால் மட்டுமே சாலைகள் போக்குவரத்திலிருந்து விடுபட முடியும்.


சியோல், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் போன்ற நகரங்கள் 1 Gbps-க்கும் அதிகமான இணைய வேகத்தைக் கொண்டுள்ளன. ஆனால், இந்தியாவின் சராசரி மொபைல் இணைய வேகம் சுமார் 100 Mbps மட்டுமே. சிறந்த உலகளாவிய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், புதுமை மையங்கள், உலகளாவிய திறன் மையங்கள் (global capability centres (GCC)) மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை ஈர்க்க, இந்தியா அதன் இணைய வேகத்தை கணிசமாக மேம்படுத்த வேண்டும்.


டிஜிட்டல் உள்கட்டமைப்பு


நகரங்கள் மற்றும் கிராமப்புறங்கள் இரண்டிலும் அதிவேக பிராட்பேண்ட், 4G மற்றும் 5G ஆகியவற்றை நாம் விரிவுபடுத்த வேண்டும். இதைச் செய்ய, அதிக முதலீட்டை ஈர்க்க அலைக்கற்றை (spectrum) விலைகளைக் குறைக்க வேண்டும். பெரிய ஃபைபர்-ஆப்டிக் நெட்வொர்க்குகளையும் (large fibre-optic networks) உருவாக்க வேண்டும் மற்றும் நாடு முழுவதும் 5G ஐ அறிமுகப்படுத்த வேண்டும்.


நகர்ப்புற சீர்திருத்தம் பரவலாக்கப்பட்ட திட்டமிடல், நிர்வாகம் மற்றும் நிதியுதவியைப் பொறுத்தது. NITI ஆயோக்கின் கூற்றுப்படி, இந்தியாவில் ஒவ்வொரு 1,00,000 மக்களுக்கும் ஒரு திட்டமிடுபவர் மட்டுமே உள்ளார். இதற்கு நேர்மாறாக, வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு 5,000 முதல் 10,000 மக்களுக்கும் ஒரு திட்டமிடுபவர் உள்ளனர். பல இந்திய நகரங்களில் சரியான முதன்மைத் திட்டங்கள் (proper master plans) இல்லை.


74-வது அரசியலமைப்பு திருத்தத்தை நாம் முழுமையாக செயல்படுத்த வேண்டும். அதாவது, இந்தியாவில் சொத்து வரி வசூல் மிகவும் குறைவாக உள்ளது. இதனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2% க்கும் குறைவாக உள்ளது. சொத்து வரி வசூலை அதிகரிப்பது அவசியம். நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவது உதவும். கண்காணிப்பு மற்றும் வரி வசூலுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் உதவும். நகரங்கள் அதிக வருவாயை ஈட்ட நில மதிப்பு கையகப்படுத்துதலை (land value capture (LVC)) ஆராயலாம்.


நகரங்கள் தங்கள் சொந்த வருவாயை உயர்த்தும்போது, ​​அவர்கள் நிதியுதவிக்காக நகராட்சி பத்திர சந்தைகளைப் (municipal bond markets) பயன்படுத்தலாம். ஆனால், இது திட்டமிடல் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை முடித்த பின்னரே நிகழும்.


நமது நகரங்கள் பல நூற்றாண்டுகளின் வரலாற்றைக் கொண்டுள்ளன. அவை பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்திற்கான உலகத் தரம் வாய்ந்த மையங்களாகவும் இருக்க வேண்டும். விவரிக்கப்பட்ட படிநிலைகள் நமது நகரங்களை தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற உதவும். அவை அதிக உற்பத்தித் திறன் கொண்டதாகவும் அணுக எளிதாகவும் மாறும். இது நடக்கக்கூடிய பாரம்பரியப் பகுதிகளில் முதலீடுகள் மற்றும் மென்மையான நகர்ப்புற அனுபவங்களுடன் செல்ல வேண்டும். அரசாங்கம் இவற்றை ஆதரிக்கிறது, மேலும் தனியார் துறை அவற்றை உருவாக்குகிறது.


அடுத்த பத்து ஆண்டுகள் நிச்சயமாக ஒரு "நகர்ப்புற காலமாக" (urban decade) இருக்கும். இந்த 15 நகரங்கள் இந்தியாவின் நகர்ப்புற மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும்.


எழுத்தாளர் இந்தியாவின் G20 ஷெர்பா மற்றும் நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.



Original article:

Share:

சிறப்பு தீவிர திருத்தம் என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


• பீகாரின் தலைமைத் தேர்தல் அதிகாரி வினோத் கஞ்சியால் கூறுகையில், 82% வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officer (BLO)) புதிய வாக்காளர் படிவங்களைப் பெற்றுள்ளனர். மேலும், சுமார் 72% படிவங்கள் வழங்கப்பட்டுவிட்டன - 7.8 கோடி வாக்காளர்களில் சுமார் 5.61 கோடி பேருக்கு இது சென்றடைந்துள்ளது. இதுவரை, 3% படிவங்கள் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. காலக்கெடுவுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் மிகப் பெரியவை என்றும், சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம் என்றும் பலர் கருதுகின்றனர்.


• ஜூன் 24 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவுறுத்தல்களின்படி, இந்த செயல்முறையை களத்தில் தொடங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, 20033 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இருந்தவர்கள் (கடைசியாக இதுபோன்ற சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டபோது) அதிலிருந்து தொடர்புடைய சாற்றை சான்றாகப் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் 2003 பட்டியலில் உள்ளவர்களின் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் வாக்காளர் பட்டியல் பதிவைப் பயன்படுத்தலாம். ஆனால், 40 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் (2003-இல் 18 வயது இல்லாதவர்கள்) சான்றாக மற்ற ஆவணங்களைக் காட்ட வேண்டும்.


• சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் நடைமுறைகளை பூர்த்தி செய்பவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள்.


• பீகார் வாக்காளர் பட்டியல்களில் தேர்தல் ஆணையத்தின் "சிறப்பு தீவிர திருத்தம்" (special intensive revision) செய்யும் 1 லட்சம் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர்கள் தலா ரூ.6,000 கௌரவ ஊதியமாகப் பெறுவார்கள் என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தேர்தல் ஆணைய அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தெரியுமா?


• தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் திருத்தத்தைத் தொடங்கியுள்ளது. இது இறுதியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நடைபெறும். பீகாரில், இந்த செயல்முறை ஜூன் 25ஆம் தேதி தொடங்கி, நவம்பர் மாதத்திற்கு முன்பு எதிர்பார்க்கப்படும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, செப்டம்பர் 30-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலுடன் முடிவடையும்.


• அரசியலமைப்பின் பிரிவு 324(1), நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை "கண்காணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்படுத்துதல்" ஆகியவற்றின் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்குகிறது.


• மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் (Representation of the People Act, 1950) பிரிவு 21(3)-ன் கீழ், தேர்தல் ஆணையம் எந்த வகையிலும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் திருத்தத்தை உத்தரவிடலாம் என்று கூறுகிறது.


• 1960ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகள், வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பது, தேர்தல் ஆணையத்தால் தீர்மானிக்கப்பட்டபடி, புதிய பட்டியலை உருவாக்குவதன் மூலம் தீவிரமாக, ஏற்கனவே உள்ள பட்டியலில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் சுருக்கமாக அல்லது இரண்டு முறைகளையும் ஒன்றாகப் பயன்படுத்துவதன் மூலம் செய்யப்படலாம் என்று கூறுகிறது.


• சிறப்பு சுருக்க திருத்தங்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்றன. மேலும், ஒவ்வொரு மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படுகிறது. 1952-56, 1957, 1961, 1965, 1966, 1983-84, 1987-89, 1992, 1993, 1995, 2002, 2003 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் தீவிர திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



Original article:

Share:

டெல்லியில் காற்று மாசுபாட்டிற்கான காரணங்கள் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


• தலைநகரில் டீசல் வாகனங்களில் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட, மற்றும் பெட்ரோல் வாகனங்களில் 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்த உத்தரவு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது.


• முதல் நாளில் 80 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 98 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஏழு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டாவது நாளில் 78 அறிவிப்புகள் வழங்கப்பட்டன. இருப்பினும், வியாழக்கிழமை - மூன்றாவது நாளில் எந்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை.


• நீண்டநாள் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் எரிபொருள் நிலையங்களில் நிறுவப்பட்ட தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (Automatic Number Plate Recognition (ANPR)) கேமராக்களால் குறிக்கப்படுகின்றன. அவை எண் தகடுகளை ஸ்கேன் செய்து, செல்லுபடியாகும் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் (Pollution Under Control Certificate (PUCC)) இல்லாதவை அல்லது 'நீண்டநாள் பயன்படுத்தப்பட்டவை' என்று பதிவு நீக்கப்பட்டவைகளைச் சரிபார்க்க அரசாங்கத்தின் வாகனத் தரவுத்தளத்துடன் தரவைப் பொருத்துகின்றன.


• 2018ஆம் ஆண்டில், டெல்லியில் 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களையும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களையும் உச்சநீதிமன்றம் தடை செய்தது.


உங்களுக்குத் தெரியுமா?


• வழக்கமாக ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்காகத் தயாரிக்கப்படும் உமிழ்வுப் பட்டியல், அந்த ஆண்டிற்கான ஒரு நகரம் அல்லது பிராந்தியத்திற்கான வெவ்வேறு மூலங்களிலிருந்து வரும் உமிழ்வை அளவிடுகிறது.


• 2021 வரைவு அறிக்கையை எரிசக்தி மற்றும் வள நிறுவனம் (The Energy and Resources Institute (TERI)) தயாரித்து நவம்பர் 2024-இல் வெளியிட்டது. டெல்லி அரசாங்கம் மாசு மூலங்களை நிகழ்நேரத்தில் அடையாளம் காண உதவும்படி TERI-யிடம் கேட்டது.


• வரைவு அறிக்கை பட்டியலிடும் ஆறு காற்று மாசுபடுத்திகளில், வாகனங்கள் மூன்றுக்கு அதிகமான பங்களிப்பை வழங்குகின்றன. டெல்லியில் வாகனங்கள்தான் அதிக அளவில் PM2.5 வாயுவை வெளியிடுகின்றன. இது மொத்த மதிப்பிடப்பட்ட PM2.5 வெளியேற்றமான 20.32 kt/ஆண்டில் சுமார் 47% அல்லது 9.6 kt/ஆண்டு (ஆண்டுக்கு கிலோ டன்கள்) ஆகும். இதைத் தொடர்ந்து சாலை தூசி (20%, 4.09 kt/ஆண்டு PM2.5) வெளியிடப்பட்டது.


• வாகனங்கள் 78% நைட்ரஜன் ஆக்சைடுகள் (nitrogen oxides (Nox)) மாசுபாட்டையும், 49% மீத்தேன் அல்லாத ஆவியாகும் கரிம சேர்மங்களையும் (non-methane volatile organic compounds (NMVOCs)) ஏற்படுத்துகின்றன.


• வாகனங்களில், இரு சக்கர வாகனங்கள் பெரும்பாலான PM2.5, PM10, சல்பர்-டை-ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. மூன்று சக்கர வண்டிகள் அதிக கரிம சேர்மங்களை ஏற்படுத்துகின்றன. மேலும் பேருந்துகள் நைட்ரஜன் ஆக்சைடின் மிகப்பெரிய ஆதாரமாகும்.


• 2021-ஆம் ஆண்டில், தேசிய தலைநகர் பகுதி மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கான காற்று தர ஆணையச் சட்டம் (Capital Region and Adjoining Areas Act (CAQM Act)) என்ற சட்டம் இயற்றப்பட்டது. இது டெல்லி மற்றும் அருகிலுள்ள பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசப் பகுதிகளில் மாசுபாட்டை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்தச் சட்டம் CAQM என்ற அமைப்பை உருவாக்கியது. இது பிராந்தியத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவுகளை வழங்கவும் அதிகாரம் கொண்டது.



Original article:

Share: