டிரம்பின் வரி விதிப்பு தாக்குதல்களுக்கு மத்தியில் சுதேசி இயக்கத்தின் பாரம்பரியத்தை மீள்பார்வை செய்தல். -திலீப் பி சந்திரன்

 பிரதமர் நரேந்திர மோடியின் சுதேசி அழைப்பு 1905-1911-ஆம் ஆண்டு நடைபெற்ற சுதேசி இயக்கத்தை நினைவுப்படுத்துகிறது. இருப்பினும், சுதேசி இயக்கம் தோன்றியதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்கள் என்ன, அது எவ்வாறு சுயாட்சிக் கொள்கைக்கான (Swaraj) பரந்த அழைப்பாக உருவானது?


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் உள்ள அனைவரையும் - கட்சிகள், தலைவர்கள் மற்றும் குடிமக்கள் - இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஆதரிக்கவும் பயன்படுத்தவும் ஊக்குவித்தார். இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற விரும்பினால் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார்.


தேசிய இயக்கத்தின் மரபில் வேரூன்றிய பிரதமரின் சுதேசி அழைப்பு, 1905-1911 சுதேசி இயக்கத்தை நினைவுபடுத்துகிறது. பிரிட்டிஷ் இந்தியாவில் வங்காள பிரிவினைக்கு எதிரான போராட்டங்களில் தோன்றிய சுதேசி இயக்கம், பிரிட்டிஷ் பொருட்களைப் புறக்கணித்து, சுதேசி பொருட்களை ஊக்குவிப்பதன் மூலம் பிரிட்டிஷ்  மீது பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தியது.


பிரிவினை ஒரு தேசத்தை ஒருங்கிணைத்தபோது


ஜூலை 19, 1905 அன்று, அப்போதைய இந்திய வைஸ்ராய் Lord Curzon வங்காளத்தை இரண்டு மாகாணங்களாக பிரிக்க இருப்பதாக அறிவித்தார்- கிழக்கு வங்காளத்திலும் அசாமிலும் பெரும்பாலும் முஸ்லிம் மக்கள் வசித்து வந்தனர். அதே நேரத்தில் வங்காளம் என்று அழைக்கப்படும் மேற்குப் பகுதியில் பெரும்பாலும் இந்துக்கள் வசித்து வந்தனர்.


இந்தியத் தலைவர்களுடனான கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, டிசம்பர் 1903-ல் முதன்முதலில் பகிரப்பட்ட Lord Curzon-னின் முடிவு வந்தது. இவை 1899-ல் கல்கத்தா மாநகராட்சியில் அவர் கொண்டு வந்த பிரபலமற்ற மாற்றங்கள், பின்னர் 1904-ல் பல்கலைக்கழக விதிகளில் (University Act) மாற்றங்கள் மற்றும் 1904-ல் ஒரு அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் (Official Secrets Act) ஆகியவற்றுடன் தொடங்கின.


நிர்வாகத்தை எளிதாக்குவதற்காகவே வங்காளப் பிரிவினை என்று Lord Curzon-னின் ஆதரவாளர்கள் கூறினர். ஆனால், தேசியவாதத் தலைவர்கள் இதை பிரித்தாளும் கொள்கை (divide and rule policy) என்று கூறினர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை பலவீனப்படுத்த இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பதட்டங்களை உருவாக்கி கிழக்கு மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்து தலைவர்களைப் பிரிக்க ஆங்கிலேயர்கள் விரும்பினர்.  


‘காங்கிரஸ் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள மையமாக கொல்கத்தா (கல்கத்தா) உள்ளது. இது வங்காளம் மற்றும் இந்தியா முழுவதையும் பாதிக்கிறது’ என்று Lord Curzon-னின் வார்த்தைகளில் பிரித்தாளும் கொள்கை தெளிவாகத் தெரிந்தது.

தேசியவாதிகள், அவர்களின் அரசியல் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும், பிரிவினையை இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பெருமையின் மீதான தாக்குதலாகக் கருதினர். இந்த மக்கள் விரோத உத்திக்கு பதிலளிக்கும் விதமாக பரவலான எதிர்ப்பு இந்திய தேசிய இயக்கத்தில் ஒரு புதிய அத்தியாயத்திற்கு வழி வகுத்தது.


ஆக்கபூர்வமான சுதேசியிலிருந்து (constructive Swadeshi) புரட்சிகர அரசியல் வரை


மிதவாதத் தலைவர்கள் ஆங்கிலேயர்களுக்கு கோரிக்கைகள் மற்றும் மனுக்களை அனுப்பி Curzon-னின் நியாயமற்ற செயல்களைத் (mendicant policies) தடுக்க முயன்றனர். ஆனால், இது பலனளிக்கவில்லை. எனவே, வங்காளப் பிரிவினையை எதிர்த்துப் போராட மக்கள் ஒரு புதிய வழியைத் தேடினர். பிரிட்டிஷ் பொருட்களைப் புறக்கணிக்கும் யோசனையை முதன்முதலில் கிருஷ்ணகுமார் மித்ரா ஜூலை 13, 1905 அன்று தனது வாராந்திர பத்திரிகையான சஞ்சிவனியில்  (Sanjivani) பரிந்துரைத்தார். பின்னர், ஆகஸ்ட் 7, 1905 அன்று, கல்கத்தா டவுன் ஹாலில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் தேசியவாதத் தலைவர்கள் இந்த யோசனைக்கு ஒப்புக்கொண்டனர்.


இந்த இயக்கம் வங்காளப் பிரிவினை நாளான (partition day) அக்டோபர் 16 அன்று தொடங்கியது. ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்த மக்கள் வண்ணமயமான ராக்கி கயிறுகளை (rakhi bandhan) பரிமாறிக் கொண்டனர். பஞ்சம் மற்றும் நோய்களின் போது மற்றவர்களுக்கு உதவிய தன்னார்வக் குழுக்களான சமிதிகளின் எழுச்சியை மக்கள் ஆதரித்தனர். இந்தக் குழுக்கள் சமூகப் பணிகளில் மக்களுக்கு பயிற்சி அளித்தன. உள்ளூர் நீதிமன்றங்கள் மற்றும் பள்ளிகளை அமைத்தன. மேலும், பண்டிகைகளின் போது சுதேசி செய்தியை பரப்பினார்.


பிரிவினையை ரத்து செய்வது ஒரு தொலைதூரக் கனவாகத் தோன்றத் தொடங்கியபோது, உள்நாட்டுத் தொழில்கள், தேசியப் பள்ளிகள் மற்றும் கிராம அமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் ஆக்கபூர்வமான சுதேசி என்ற உத்தி போதுமானதாக இருக்காது என்று மக்கள் கருதினர்.


எனவே, அரவிந்தோ கோஷ் மற்றும் பிபின் சந்திர பால் போன்ற போர்க்குணமிக்க தலைவர்கள் சுதேசி கொள்கைகளை விரிவுபடுத்தி, பிரிட்டிஷ் பொருட்கள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், பட்டங்களைத் துறத்தல் மற்றும் அரசு சேவைகளைத் துறத்தல் ஆகியவற்றிற்கு அழைப்பு விடுத்தனர். இந்தக் காலகட்டத்தில், வங்காளம், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகியவை புரட்சிகர அரசியலின் மையங்களாக உருவெடுத்தன. இதற்கு லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆகிய மூன்று தலைவர்கள் தலைமை தாங்கினர். அவர்கள் அனைவரும் ஒன்றாக Lal-Bal-Pal என்று அழைக்கப்பட்டனர்.


உள்நாட்டு பொருளாதாரத்தின் (indigenous economy) மறுமலர்ச்சி


இந்தியாவின் பொருளாதாரத்தின் மீதான பிரிட்டிஷ் கட்டுப்பாட்டை பலவீனப்படுத்துவதையும், உள்நாட்டு பொருளாதாரத்தை மறுமலர்ச்சி செய்வதை சுதேசி இயக்கம் நோக்கமாகக் கொண்டிருந்தது. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அந்நிய ஆட்சியை நம்பியிருப்பதற்கு எதிரான கிளர்ச்சியாக கோபால கிருஷ்ண கோகலே இதைக் கருதினார். அதே, நேரத்தில் சுரேந்திரநாத் பானர்ஜி இதை ‘பாதுகாப்புவாத இயக்கம்’ (protectionist movement) என்று அழைத்தார்.


புறக்கணிப்பு ஆரம்பத்தில் சில வெற்றிகளைப் பெற்றது - பிரிட்டிஷ் பொருட்களின் இறக்குமதி குறைய ஆரம்பித்தது. அதே, நேரத்தில் இறக்குமதியைக் குறைத்தது மற்றும் காலனித்துவ பொருளாதாரத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய மோசமான (derogatory) வேலை நிலைமைகளுக்கு எதிராக தொழிலாளர் வேலைநிறுத்தங்களைத் தூண்டியது. அக்டோபர் 21, 1905-ல் உருவாக்கப்பட்ட அச்சுப்பொறி சங்கம் (Printers’ Union), தொழிலாளர் சுரண்டலை முன்னிலைப்படுத்திய முதல் தொழிலாளர் சங்கங்களில் ஒன்றாகும்.


இந்த இயக்கம் இந்திய தொழில்களை ஊக்குவித்தது மற்றும் கைத்தறி, பட்டு நெசவு மற்றும் பிற உள்நாட்டு கைவினை கலைகள் போன்ற துறைகளை மீட்டெடுத்தது. இந்திய மூலதனத்துடன் தேசிய வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் திறக்கப்பட்டன. இந்த இயக்கம் சென்னைக்கு பரவியபோது, கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் வர்த்தகத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்தை சவால் செய்ய வ.உ.சிதம்பரம் ஒரு சுதேசி கப்பல் போக்குவரத்து முயற்சியை முன்மொழிந்தார். வ.உ.சிதம்பரம் 1906-ஆம் ஆண்டு சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தை (Swadeshi (Steam Navigation Company (SSNC)) ஒரு கூட்டுப் பங்கு நிறுவனமாகப் பதிவு செய்தார்.


தேசியக் கல்வி இயக்கத்திலும் ஒரு எழுச்சி ஏற்பட்டது. உதாரணமாக, சதீஷ் சந்திர முகர்ஜியால் நிறுவப்பட்ட விடிவெள்ளி கழகம் (Dawn Society) நவம்பர் 5, 1905-ல் தேசிய கல்வி கவுன்சிலை தொடங்கியது. தேசிய கல்விக்கான அழைப்பு, வட்டார மொழியில் (vernacular language) தொழில்நுட்பப் பயிற்சியையும் ஊக்குவித்தது. இருப்பினும், குறைந்த வேலை வாய்ப்புகளுடன் கூடிய தேசிய கல்வி மற்றும் மூலதனப் பற்றாக்குறையை எதிர்கொண்ட உள்நாட்டுத் தொழில்கள், நீண்ட காலத்திற்கு தங்களை நிலைநிறுத்திக் கொள்ள போராடின.


சுதேசி எவ்வாறு சுயராஜ்யத்திற்கான தேவையாக வளர்ந்தது


வங்கப் பிரிவினைக்கு எதிரான போராட்டங்கள் விரைவில் நின்றுவிடும் என்று ஆங்கிலேயர்கள் நினைத்தனர். ஆனால் சுதேசி இயக்கம் பெரிதாகி சுயராஜ்ஜியத்திற்கான போராட்டமாக மாறியது. இது பல இளைஞர்கள், படித்தவர்களை ஈர்த்தது. முதல் முறையாக, பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களும் சுதந்திர இயக்கத்தில் இணைந்தனர். இந்தக் காலகட்டத்தில், தேசியவாத கருத்துக்களைக் கொண்ட வட்டார மொழி செய்தித்தாள்கள் விரைவான வளர்ச்சியும் காணப்பட்டது.


வங்காளத்தில் உள்ள இளம் தேசியவாதிகள் பிரிவினையை 'தேசிய அவமானம்' (national insult) என்று கருதினர். அவர்கள் ரவீந்திரநாத் தாகூரின் ஆத்மசக்தி (சுய-வலிமைப்படுத்துதல்) என்ற கருத்தாக்கத்தைப் போல, சுயசார்புக்கான வெறும் அழைப்பில் அவர்கள் திருப்தி அடையவில்லை. மேலும், புரட்சிகர அரசியலுக்கு (revolutionary politics) அழைப்பு விடுத்தனர். பிபின் சந்திர பாலின் நியூ இந்தியா, அரவிந்த கோஷின் வந்தே மாதரம், பிரம்மபந்தாப் உபாத்யாயின் சந்தியா மற்றும் யுகாந்தர் போன்ற வெளியீடுகள் சுயராஜ்யத்திற்கான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன, அமைதியான சுயசார்பு இயக்கத்தை  (self-reliance) போதுமானதாக இல்லை  என்று நிராகரித்தன.


அரசியல் புரட்சிவாதம் விரைவில் பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் மெட்ராஸ் போன்ற பிற மாகாணங்களுக்கும் பரவியது, இது காலனிய அரசாங்கத்தின் அடக்குமுறைகளைத் தூண்டியது. உதாரணமாக, 1907ஆம் ஆண்டு பஞ்சாபில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து லாலா லஜ்பத் ராய் மற்றும் அஜித் சிங் ஆகியோர் மாண்டலேவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இதேபோல், பால் கங்காதர் திலக் மற்றும் அவரது கூட்டாளிகளான கபர்டே மற்றும் முன்ஜே ஆகியோர் மகாராஷ்டிராவில் திலகின் கேசரி மற்றும் மராத்தா செய்தித்தாள்கள் மூலம் தீவிர பத்திரிகையியல் மற்றும் சிவாஜி திருவிழா போன்ற மத-அரசியல் பண்டிகைகள் மூலம் புறக்கணிப்பு மற்றும் செயலற்ற எதிர்ப்பை விரிவுபடுத்தினர், இது திலகின் நாடு கடத்தலில் முடிந்தது.


சுதேசி காலம் புரட்சிகர குழுக்கள் மற்றும் போர்க்குணம் கொண்ட நடவடிக்கைகளின் திடீர் வளர்ச்சியையும் கண்டது. தனிப்பட்ட புரட்சியாளர்கள் அடக்குமுறையான பிரிட்டிஷ் அதிகாரிகளை இலக்காகக் கொள்ள ஆரம்பித்தனர். இது ஏப்ரல் 1908-ல் குதிராம் போஸ் மற்றும் பிரஃபுல்ல சாகியின் முஜாஃபர்பூர் வெடிகுண்டு தாக்குதலில் பிரிங்கில் கென்னடியின் மனைவி மற்றும் மகளை கொன்றதிலும், ஜூன் 1908-ல் தாக்கா அனுசிலன் சமிதியின் புலின் தாஸின் பரா கொள்ளையிலும் காணப்பட்டது.



சுதேசி இயக்கத்திலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள்


குறிப்பிடத்தக்க வகையில், சுதேசி என்ற கருத்தை 1872ஆம் ஆண்டு M.G.. ரனாடேவின் விரிவுரைத் தொடரில் காணலாம். அதில் அவர் ஒருவரின் சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், அவை சிறந்தவையாக இல்லாவிட்டாலும் கூட அந்த பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். ரவீந்திரநாத் தாகூரைப் போன்ற ஆக்கபூர்வமான சுதேசி ஆதரவாளர்கள், சுய உதவியை (ஆத்ம-சக்தி) வலியுறுத்தினர். மேலும், கிராம மட்டத்தில் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட பாரம்பரிய இந்து சமூகத்தை மறுமலர்ச்சி செய்ய அழைப்பு விடுத்தனர்.


சுதேசி இயக்கம் (1905-1911) தேசிய இயக்கத்தின் காந்திய கட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல உத்திகளுக்கு அடித்தளம் அமைத்தது. பின்னர், மகாத்மா காந்தி சுதேசி கருத்தை ஆன்மீக துறையில் விரிவுபடுத்தி அதை ஒரு தார்மிக கடமையுடன் இணைத்தார். ‘எனது அருகில் உள்ள அண்டை வீட்டாரால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மட்டுமே நான் பயன்படுத்த வேண்டும் மற்றும் அவை எங்கு குறைபாடுடன் இருந்தாலும் அவற்றை திறமையாகவும் முழுமையாகவும் ஆக்குவதன் மூலம் அந்த தொழில்களுக்கு சேவை செய்ய வேண்டும்’ என்று அவர் எழுதினார்.


இருப்பினும், சுதேசி இயக்கத்தின் தலைவர்களிடையே முக்கியமாக இரண்டு நிலைகளில் கருத்து வேறுபாடுகள் தோன்றின. முதலாவதாக, அவர்கள் அரசியல் முறைகள் மற்றும் இலக்குகளில் உடன்பட முடியவில்லை, இதன் விளைவாக 1907-ல் சூரத் அமர்வில் இந்திய தேசிய காங்கிரஸில் மிதவாதிகள் மற்றும் தீவிர குணம் கொண்டவர்கள் இடையே பிளவு ஏற்பட்டது. இரண்டாவதாக, மத மறுமலர்ச்சியை அரசியல் முறைகளுடன் இணைப்பதில் சர்ச்சை இருந்தது. தேசியவாதத்தை இந்து அடையாளங்களுடன் இணைப்பது சிறுபான்மை சமுதாயங்களை தேசிய இயக்கத்திலிருந்து பிரித்தது.


காலனிய நிர்வாகம் இந்த பதற்றங்களை சுரண்டி வேண்டுமென்றே வகுப்புவாத பிளவுகளை வளர்த்தது. இது 1906-ல் முஸ்லிம் லீக்கின் உருவாக்கம் மற்றும் 1909-ல் மார்லே-மின்டோ சீர்திருத்தங்களில் (Morley-Minto Reforms) முஸ்லிம்களுக்கு தனித்தனி தேர்தல் தொகுதிகளை அறிமுகப்படுத்தியதில் காணப்பட்டது.


சுருக்கமாக, சுதேசி இயக்கம் மக்களை தேசியவாத அரசியலில் அணிதிரட்டுவதிலும், பல்வேறு அரசியல் சக்திகளை ஒன்றிணைப்பதிலும் வெற்றி பெற்றது. இருப்பினும், அறிவிக்கப்பட்ட இலக்கிலிருந்து விலகிச் சென்ற போர் குணம் கொண்ட போக்குகளை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. நீண்டகால வெற்றியை அடைய, சக்திவாய்ந்த சக்திகளுக்கு உணர்ச்சிபூர்வமான பதில்கள் போதுமான மூலதனம், உள்ளடக்கிய பங்கேற்பு மற்றும் நன்கு வரையறுக்கப்பட்ட உத்திகளுடன் இருக்க வேண்டும் என்று தேசிய இயக்கத்தின் வரலாறு நமக்கு அறிவுறுத்துகிறது.



Original article:

Share:

ஆந்திரப் பிரதேசத்தில் பள்ளி விதிகளை திருத்துதல் -பி. சுஜாதா வர்மா

 சிறந்த அணுகலை நோக்கமாகக் கொண்டு, தெலுங்கு தேசம் கட்சி அரசானது பள்ளி சீர்திருத்தங்களை மறுபரிசீலனை செய்கிறது.


ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான NDA அரசாங்கம்,  முந்தைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட கல்வித்துறை சீர்திருத்தங்களை மறுபரிசீலனை செய்கிறது மற்றும் தேவையான இடங்களில் மாற்றங்களைச் செய்து வருகிறது. நேர்மறையான முடிவுகளைத் தரும் கொள்கைகள் தக்கவைக்கப்படும் என்றும், உறுதியான முடிவுகளை வழங்கத் தவறிய கொள்கைகள் திரும்பப் பெறப்படும் என்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார். இந்தப் பணியானது முக்கியமான மற்றும் சவாலானதாக இருப்பதால், புதிய முயற்சிகளின் மையமாக மாணவர்களின் நல்வாழ்வும் எதிர்காலமும் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து, கல்வித்துறையில் ஒரு இலக்கு சார்ந்த மற்றும் சமநிலையான பார்வையை அமைச்சர் எடுத்து வருகிறார்.


கல்வித் துறை அதிகாரிகள் என்ன வேலை செய்தார்கள், எதில் முன்னேற்றம் தேவை, பங்குதாரர்களுக்கு இடையூறு ஏற்படாமல் எப்படி முன்னேறுவது என மதிப்பீடு செய்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள 58,535 பள்ளிகளில், 68,15,925 மாணவர்கள் மற்றும் 3,13,112 ஆசிரியர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே இந்தப் பணியின் முக்கிய நோக்கமாகும். இதில் 44,285 அரசுப் பள்ளிகளில் 33,37,762 மாணவர்களும், 1,84,898 ஆசிரியர்களும், 789 உதவி பெறும் பள்ளிகளில் 87,612 மாணவர்களும் 3,259 ஆசிரியர்களும், 13,461 தனியார் பள்ளிகளில் 33,90,551 மாணவர்கள் மற்றும் 1,24,955 ஆசிரியர்கள் உள்ளனர்.


மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் கருத்துப்படி, தெலுங்கு தேசம் கட்சி அரசாங்கம் முடங்கிய நிலையில், அத்தியாவசிய கட்டமைப்புகள் மற்றும் செயல்பாட்டுத் திறன் இல்லாத நிலையில் ஒரு நலன்சார்ந்த கல்வி முறையைப் பெற்றுள்ளது. YSR காங்கிரஸ் கட்சி இந்தக் கூற்றை மறுத்ததுடன், இது "மாநிலத்தில் கல்வித் துறையை முறையாக பலவீனப்படுத்துகிறது" என்று குற்றம் சாட்டியது.


மாநிலத்தில் ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்ட 12,512 பள்ளிகள், பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 5,312 அரசுப் பள்ளிகள் மற்றும் 14,052 அரசுப் பள்ளிகளில் 20 அல்லது அதற்கும் குறைவான மாணவர்களைக் கொண்டதாக தரவுகள் காட்டுகின்றன. 2022 மற்றும் 2024-க்கு இடையில், அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 10,49,596 குறைந்துள்ளது.


குறைந்துவரும் கற்றல் விளைவுகளால், குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக இந்த நிலைமையை மாற்றியமைக்கும் வலிமையான சவாலை அரசாங்கம் எதிர்கொள்கிறது. மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 84.3% பேர் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தைப் படிக்க முடியவில்லை என்றும், 62.5% ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அடிப்படை வாசிப்பில் சிரமப்படுகிறார்கள் என்றும், 8-ம் வகுப்பு மாணவர்களில் 47% பேர் இன்னும் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தைப் படிக்கத் தெரியவில்லை என்றும், மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 59.1% பேர் அடிப்படை கழித்தல் சமன்பாட்டை தீர்க்க முடியவில்லை என்றும், எட்டாம் வகுப்பு மாணவர்களில் 54.8% பேர் வகுத்தல் சமன்பாடு செய்யத் தெரியவில்லை என்றும், இதில் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 12.9% பேர் மட்டுமே அடிப்படை வகுத்தல் சமன்பாடுகளைத் தீர்க்க முடியும் என்றும் சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. 


சமீபத்திய கணக்கெடுப்பின் மோசமான முடிவுகளை மேற்கோள்காட்டி, அமைச்சர் நாரா லோகேஷ் முந்தைய முயற்சியான, 2022-23 ஆம் ஆண்டில் போதுமான தயாரிப்பு இல்லாமல் அரசுப் பள்ளிகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு (CBSE) மாற்றுதல், அரசு நடத்தும் பள்ளிகளில் ₹58.84 கோடி செலவில் TOEFL-ஐ செயல்படுத்துதல் மற்றும் அரசுப் பள்ளிகளில் சர்வதேச இளங்கலை (IB) பாடத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை போன்றவற்றை திரும்பப் பெற்றுள்ளார். 2016-ம் ஆண்டுக்கு IB திட்டத்திற்காக, இடைக்கால அறிக்கைக்காக ₹4.86 கோடி செலவிடப்பட்டது.


முந்தைய YSRCP அரசாங்கத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய முடிவுகளில் ஒன்று GO 117 ஆகும். இது பள்ளிகளை மறுசீரமைத்தது மற்றும் ஆசிரியர் பணியாளர்களை மறுபகிர்வு செய்தது. இது பள்ளிகளை ஆறு பிரிவுகளாகப் பிரித்து, வகுப்புகளை இணைத்தல் (merger) மற்றும் பிரித்தல் (de-merger) ஆகியவற்றை உள்ளடக்கியது. பள்ளிகள் துண்டாடப்படுவதால் (fragmentation), 10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 2021-22-ல் 1,215-ல் இருந்து 2024-25-ல் 5,312 ஆக உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் 20-க்கும் குறைவான அல்லது அதற்கு சமமான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் 5,520-ல் இருந்து 14,052 ஆக அதிகரித்து, மாணவர்களின் கடுமையான சரிவைக் காட்டுகிறது.


GO 117-ன் எதிர்மறை விளைவுகளைக் குறைக்க, NDA அரசாங்கம் GO 21-ஐ அறிமுகப்படுத்தியது. இது ஒன்பது வகை பள்ளிகளை உருவாக்குவதன் மூலம் மறுசீரமைப்பு மாதிரியை (restructuring model) திருத்துகிறது. இருப்பினும், GO 21 விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆசிரியர் சங்கங்கள் அதன் "பொதுக் கல்வி முறையில் எதிர்மறையான தாக்கம்" குறித்து கடுமையான கவலைகளை எழுப்பின. ”ஆந்திரப் பிரதேசத்தில் கற்றல் சிறப்பு” என்ற பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக GO 21 உள்ளது. இந்தத் திட்டம் கல்விக்கான அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சிறந்த கற்றல் விளைவுகள் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் திறன்களை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது.


ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் 16,347 ஆசிரியர்களைப் பணியமர்த்துவதற்காக சமீபத்தில் நடத்தப்பட்ட ‘மெகா’ மாவட்டத் தேர்வுக் குழு (District Selection Committee(DSC)) தேர்வு, அரசின் இமேஜை உயர்த்தியது. இது, கல்வி நட்சத்திர மதிப்பீடுகளை (academic star ratings) அறிமுகப்படுத்துவதும் பிற நேர்மறையான நடவடிக்கைகளில் அடங்கும். இந்த மதிப்பீடுகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரின் செயல்திறனையும் மதிப்பிட உதவுகின்றன. கிராமப்புற மற்றும் பழங்குடிப் பகுதிகளில் பள்ளி சேர்க்கையை அதிகரிக்க அரசாங்கத்தின் இலக்காக நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கூடுதலாக, இது பல ஆசிரியர் தொடர்பான செயலிகளை ஒரே தளத்தில் இணைத்துள்ளது.


இடைநிலைக் கல்வியில், இந்த கல்வியாண்டிலிருந்து முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகத் திருத்தங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த மாற்றங்கள் பாடத்திட்டத்தை தேசிய போட்டித் தரங்களுடன் இணைக்கின்றன. 2026-27-ஆம் கல்வியாண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்தத் திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும்.


இதில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களின் வரம்பு மிகவும் பெரியது. மேலும், பெரிய அமைப்புகளில் மாற்றத்திற்கான எதிர்ப்பு இயற்கையானது. முந்தைய சீர்திருத்தங்கள் இன்னும் சரிசெய்யப்படும்போது இது குறிப்பாக உண்மையாகப் பிரதிபலிக்கும். செயல்படுத்தலில் ஏற்படக்கூடிய ஏதேனும் இடைவெளிகளை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். கற்றல் தரத்தை மேம்படுத்த, அமைப்பின் நிலைத்தன்மையைப் பாதிக்காமல் கவனமாகத் திட்டமிடுவது அவசியம்.



Original article:

Share:

உறங்கும் பேரழிவுகள் : உத்தரகாண்ட் பேரிடர் மற்றும் இமயமலை குறித்து . . .

 பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வண்டல் மண் படிவதை அரசு கண்காணிக்க வேண்டும்.


உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் ஏற்பட்ட பேரிடர் இமயமலையில் நிரந்தர சீர்குலைவுக்கான அபாயத்தை நினைவூட்டுகிறது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் கீர் கங்கை (Kheer Ganga) ஆற்றில் பெய்த கனமழையால் ஏற்பட்ட அதிகளவு நீர், குப்பைகள் மற்றும் சகதியால் அடித்துச் செல்லப்பட்டு குறைந்தது நான்கு பேர் இறந்துள்ளனர் மற்றும் 60 பேர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று அஞ்சப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 8,600 அடி உயரத்தில் அமைந்துள்ள தரலி நகரில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை வெள்ளம் தாக்கியது, அங்கு குடியிருப்பாளர்களால் பதிவுசெய்யப்பட்ட வீடியோ காட்சிகள் அப்பகுதியில் பெரும் நீர் அலைகள் பாய்ந்து, மக்களையும் வீடுகளையும் மூழ்கடித்தன. முதற்கட்ட தகவல்களின்படி, பல இந்திய ராணுவ வீரர்களும் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.


ஆகஸ்ட் 3 முதல் 5 வரை பெய்த மிக அதிகளவிலான மழைப்பொழிவுதான் பேரிடருக்கு முக்கியக் காரணம். மேலும், பருவமழை காரணமாக மாவட்டத்தின் சில பகுதிகளில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 30 செ.மீ மழை பதிவாகியுள்ளது மற்றும் வட இந்தியாவிலும் கனமழை காரணமாக இதே நிலை நிலவியுள்ளது. பேரிடர் சீற்றமும், நகரத்தின் வழியாகப் பாய்ந்த நீரின் அளவும், இது ஒரு திடீர் நிகழ்வாகத் தோன்றியது. இது ஒரு 'மேக வெடிப்பு' (cloudburst) என வகைப்படுத்த மாநில அதிகாரிகளைத் தூண்டியது. இருப்பினும், அதிகாரப்பூர்வ முன்னறிவிப்பாளரான இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) இதை எவ்வாறு வரையறுக்கிறது என்பதில் ஒரு சில விளக்கத்தைக் கொண்டுள்ளது. மேக வெடிப்பு என்பது, 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு மணி நேரத்தில் குறைந்தபட்சம் 10 சென்டிமீட்டர் மழைப்பொழிவு என்று வரையறுக்கிறது. ஆனால் இதுபோன்ற உயரமான பகுதிகளில் வானிலை ரேடார்கள் இல்லை. இதன் பொருள் IMD அத்தகைய நிகழ்வுகளை துல்லியமாக அளவிடவும் உறுதிப்படுத்தவும் முடியாததற்கு காரணமாக அமைகிறது. எனவே, 48 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்த கனமழை மண்ணைத் தளர்த்தியிருக்க வாய்ப்புள்ளது. 


இது, கரடுமுரடான மற்றும் சீரற்ற நிலப்பரப்புடன் இணைந்து, அதிக அளவு வண்டல் மண் மற்றும் கனமான நீர் ஓட்டத்தை வெளியிட்டிருக்கலாம். இது திடீர் நிகழ்வாக இருந்தாலும் அல்லது படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்டதன் விளைவாக இருந்தாலும், உயிரிழப்பு, வாழ்வாதாரம் மற்றும் உடைமை இழப்புகளைக் கருத்தில் கொண்டு விவாதமாக தோன்றலாம். இதை 'மேக வெடிப்பு' என முன்கூட்டியே வகைப்படுத்துவது, மாநில அரசுகளை பொறுப்பற்றவர்களாகக் காட்ட அனுமதிக்கிறது. இது ஒரு அசாதாரண நிகழ்வாகக் கருதப்படும்போது, பொது அரசு அதிகாரிகளிடமிருந்து சமூக ஊடகங்களில் ‘பிரார்த்தனைகள்’ மற்றும் ‘ஆழ்ந்த வருத்தம்’ என்ற வடிவில் மட்டுமே உணர்வுகள் வெளிப்படுகின்றன.


மேலும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஒரு சிறிய தொகை மட்டுமே நிவாரணமாக வழங்கப்படுகிறது. சமீபத்திய காலங்களில் இவை அரிதான நிகழ்வுகள் அல்ல என்பது தெளிவாகிறது. பருவநிலை மாற்றம் தீவிர மழை நிகழ்வுகளின் நிகழ்தகவை அதிகரித்துள்ளது, எனவே மலைப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பல உள்கட்டமைப்பு திட்டங்களும், அதன் விளைவாக ஏற்படும் குப்பைகளும், இத்தகைய மழையால் தூண்டப்படும் உள்ளார்ந்த வெடிபொருட்களாக செயல்படுகின்றன. நிவாரண நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மாநில அரசு — நிலைமைகள் சாதகமாக இருக்கும்போது — பருவநிலை மாற்றத்தால் தவிர்க்க முடியாத பாதிப்புகளைத் தணிக்க, மாநிலத்தின் முக்கியமான இடங்களில் குப்பைகள் மற்றும் வண்டல் படிவுகளை மறுஆய்வு செய்ய வேண்டும்.



Original article:

Share:

14 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்கிறது. -டி. ராமகிருஷ்ணன்

 ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, மாநிலம் 2024-25 ஆம் ஆண்டில் 11.19% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில் முன்னறிவிக்கப்பட்ட மதிப்பீட்டை விட கிட்டத்தட்ட 2.2% அதிகமாகும்.


பல்வேறு மாநிலங்களுக்கான ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (Ministry of Statistics and Programme Implementation) திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, 14 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாடு 11.19% உடன் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.


2010-11ஆம் ஆண்டில், மாநிலம் 13.12%-ஐப் பதிவு செய்தது. இரண்டு சூழல்களிலும் திராவிட முன்னேற்ற கழகமே ஆட்சியில் இருந்துள்ளது. சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் ஆகஸ்ட் 1, 2025 அன்று தயாரிக்கப்பட்டன. 15 ஆண்டுகளுக்கு முன்பு, அடிப்படை ஆண்டு 2004-05ஆக இருந்தது. ஆனால், இப்போது அது 2011-12 ஆக உள்ளது. மெட்ராஸ் பொருளாதாரப் பள்ளியின் முன்னாள் இயக்குனர் கே.ஆர். சண்முகம், இரண்டாம்நிலை மற்றும் மூன்றாம்நிலை துறைகளின் வலுவான செயல்திறனே வளர்ச்சிக்குக் காரணம் என்று கூறுகிறார்.


ஐந்து மாதங்களுக்கு முன்பு, மாநில வாரியான முன்கூட்டிய மதிப்பீடுகள் வெளியிடப்பட்டபோது, தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி 9.69%-ஆக இருந்தது. சமீபத்திய, புள்ளிவிவரம் சுமார் 1.5 சதவீத புள்ளிகள் அதிகரிப்பைக் குறிக்கிறது. முதலிடத்தைப் பிடித்ததைத் தவிர, வேறு எந்த மாநிலமும் செய்யாததை தமிழ்நாடு செய்துள்ளது. மாநிலம் இரட்டை இலக்க வளர்ச்சியைப் (double-digit growth) பதிவு செய்துள்ளது. இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கான தரவுகளைத் தவிர, கோவா, குஜராத் மற்றும் நான்கு வடகிழக்கு மாநிலங்களுக்கான தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


உண்மையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு வரவு செலவு அறிக்கையில் கணிக்கப்பட்டதைவிட புள்ளிவிவரங்கள் அதிகமாக இருந்தன. 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (Gross State Domestic Product (GSDP)) 14.5%-ஆக வளரும் என்று மாநில அரசு கணித்துள்ளது. உண்மையான வளர்ச்சி 9% ஆகவும் சராசரி பணவீக்கம் 5% ஆகவும் இருக்கும். இருப்பினும், உண்மையான வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட 2.2% அதிகமாகும். நிலையான விலையில் (2011-12 அடிப்படை ஆண்டின் அடிப்படையில்), தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 2024-25ஆம் ஆண்டில் ரூ.17,32,189 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023-24ஆம் ஆண்டில் ரூ.15,57,821 கோடியாக இருந்தது.















திருத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் 2023-24ஆம் ஆண்டிற்கான வலுவான செயல்திறனைக் சுட்டிக்காட்டுகின்றன. உண்மையான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.23%-லிருந்து 9.26%ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், 2022-23ஆம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட வளர்ச்சி 8.13%-லிருந்து 6.17%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.


தற்போதைய விலைகளில் தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி (Net State Domestic Product (NSDP)) பற்றிய தரவுகளின்படி, 2024-25ஆம் ஆண்டில் முதன்மை மாநிலங்களான தெலுங்கானா (ரூ.3,87,623) மற்றும் கர்நாடகாவை (ரூ.3,80,906) தொடர்ந்து, தமிழ்நாடு 3-வது இடத்தைப் பிடித்தது. மேலும், மாநிலத்தின் தனிநபர் வருமானம் (per capita income) ரூ.3,61,619-ஆக  இருக்கும் என்று  மதிப்பிடப்பட்டுள்ளது.


தமிழகத்தின் பொருளாதாரப் பாதை குறித்து கருத்து தெரிவித்த நிதித்துறையில் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றும் டாக்டர் சண்முகம், வலுவான ஏற்றுமதி செயல்திறன் மூலம் மாநிலம் தொடர்ந்து வளர்ச்சியடைந்தால், 2031-32ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடையும் பாதையில் செல்லும் என்று நம்புகிறார். அதிக வளர்ச்சி விகிதம், குறைந்த நிதி, வருவாய் பற்றாக்குறை மற்றும் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்  (debt-to-GSDP ratio) போன்ற நிதி குறிகாட்டிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். அனைத்து முக்கியத் துறைகளும் 2024-25ஆம் ஆண்டில் அடைந்ததைவிட அரை சதவீதம் அதிகமாக வளர்ச்சியடைந்தால், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் (2025-26) 12%ஆக இருக்கலாம் என்று டாக்டர் சண்முகம் சுட்டிக்காட்டுகிறார்.


ஒன்றிய அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2024-25ஆம் ஆண்டிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் வளர்ச்சி விகித புள்ளிவிவரங்கள், உத்தரப் பிரதேசம் - 8.99% ஆந்திரப் பிரதேசம் - 8.21%  தெலுங்கானா - 8.08% கர்நாடகா - 7.37% மற்றும் மகாராஷ்டிரா - 7.27% ஆக உள்ளன. 



Original article:

Share:

டிரம்பின் கட்டணங்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை -கோவிந்த் பட்டாச்சார்ஜி

 இந்தியா தனது பிற சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் (FTAs) அதிக கவனம் செலுத்த வேண்டும் மற்றும் நம்பகத்தன்மையற்ற அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை படிப்படியாகக் குறைக்க வேண்டும்.


இந்திய ஏற்றுமதிகள் மீது 25% வரிகளை விதிக்க அதிபர் டிரம்ப் எடுத்த முடிவு கவலையளிக்கிறது. ஆனால், கவலை அடைய வேண்டிய அவசியமில்லை. அவரது நியாயமற்ற வர்த்தக கோரிக்கைகளுக்கு இந்தியா உடன்படாததே அவரது ஆக்ரோஷமான நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக உள்ளது. இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற பிற நாடுகள் அவரது அழுத்தத்திற்கு அடிபணிந்து நியாயமற்ற ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டன. பெரும்பாலும் நடைமுறைக்கு மாறான முதலீடுகளை உறுதியளித்தன.  இதற்கு நேர்மாறாக, இந்தியா உறுதியாக நின்று அதன் எல்லைகளை தெளிவாகக் கூறியது.


இந்தியாவின் பொருளாதாரம் முக்கியமாக  ஏற்றுமதியில் மட்டுமல்லாமல், நாட்டிற்குள் செலவிடுவதைப் பொறுத்து அமைந்துள்ளது. சமீபத்தில், IMF இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை 2025 மற்றும் 2026 நிதியாண்டு இரண்டிற்கும் 6.4% ஆக உயர்த்தியது. இதனால் மோசமான சூழ்நிலையிலும் கூட, வரிகளை 0.2–0.3 சதவீத புள்ளிகள் மட்டுமே குறைக்கக்கூடும். இந்தியாவின் பொருளாதாரம் $4.2 டிரில்லியன் மதிப்புடையதாக இருப்பதால், அமெரிக்காவிற்கான ஏற்றுமதியின் மதிப்பு சுமார் $90 பில்லியன் இழப்பை அது கையாள முடியும். இது உள்நாட்டு நுகர்வு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60% ஆகும். மேலும், இந்தியாவில் நிலையான பணவீக்கம் மற்றும் நல்ல பருவமழையுடன், உள்தேவை வலுவாக உள்ளது. இருப்பினும், ஏற்றுமதிகள் இன்னும் முக்கியமானவை. ஏனெனில், கிட்டத்தட்ட 90 மில்லியன் மக்கள் ஏற்றுமதி தொடர்பான வேலைகளான ஜவுளி, ஆடை, ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் போன்ற துறைகளில் பணிபுரிகின்றனர்.


2025 நிதியாண்டில், இந்தியாவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதி 438 பில்லியன் டாலர்களாக இருந்தது. அதே நேரத்தில் இறக்குமதி 721 பில்லியன் டாலர்களாக இருந்தது (சீனாவிலிருந்து 113 பில்லியன் டாலர்கள் உட்பட). இந்திய ஏற்றுமதிகளில் அமெரிக்கா 87 பில்லியன் டாலர்களுடன் (20%) மிகப்பெரிய வாங்குபவராக இருந்தது. அதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 37 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. 28 நாடுகள் மட்டுமே இந்திய ஏற்றுமதியில் 76% பெற்றன. மேலும், இந்தியா ஏற்கனவே அவற்றில் பலவற்றுடன்  ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் தென் கொரியா போன்றவற்றுடன் வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. இந்தியா EU மற்றும் GCC உடன் ஒப்பந்தங்களைப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும், சமீபத்தில் UK மற்றும் EFTA உடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் (FTA) கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தங்கள் அமெரிக்க வரிகளின் எதிர்மறை தாக்கத்தைக் குறைக்க உதவும்.

வேலைகள் எங்கு பாதிக்கப்படும்


டிரம்பின் புதிய வரிகள் இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சில தொழில்களை கடுமையாக பாதிக்கும். இந்த வரிகள் ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள், ஜவுளி மற்றும் ஆடைகள் போன்ற பொருட்களின் மீதான வரிகளை அதிகரிக்கும். இதற்கிடையில், வங்கதேசம் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் குறைந்த வரிகளை செலுத்தும். இது அவர்களுக்கு ஒரு நன்மையை அளிக்கும்.


இருப்பினும், உலகளாவிய வர்த்தகம் மிகவும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியிடும் நாடுகள் ஜவுளி இழைகள் போன்ற முக்கியமான மூலப்பொருட்களுக்கு இந்தியாவை நம்பியுள்ளன. இது இந்தியாவின் இழப்புகளைக் குறைக்க உதவும்.


இதனால், இந்தியாவில் இருந்து வரும் உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் அதிக வரிகளை எதிர்கொள்ள நேரிடும். இது வேலைகளை பாதிக்கலாம். எஃகு மற்றும் அலுமினியம் போன்ற பிற முக்கிய துறைகள் 50% வரிகளையும், ஆட்டோ பாகங்கள் 25% வரிகளையும் எதிர்கொள்ள நேரிடும். இந்த வரிகள் காரணமாக, குறுகிய காலத்தில் இந்தியா ஏற்றுமதி வருவாயில் $20–30 பில்லியன் இழக்க நேரிடும்.


மருந்துகள், ஸ்மார்ட்போன்கள், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் தாமிரம் போன்ற சில முக்கியமான ஏற்றுமதிகள் இப்போதைக்கு பாதிக்கப்படவில்லை. அமெரிக்காவிற்கு இந்தியாவின் சிறந்த ஏற்றுமதிகளில் மருந்து பொருள்களும் ஒன்றாகும்.


இந்தியாவின் சேவைத் துறை மிகவும் வலுவாக உள்ளது. 2025 நிதியாண்டில், இந்தியா $383 பில்லியன் மதிப்புள்ள சேவைகளை ஏற்றுமதி செய்தது. இதன் லாப உபரி $189 பில்லியன் ஆகும். இதில் சுமார் 70% செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பம் சேவைகளிலிருந்து வந்தது. அமெரிக்கா இந்த சேவைகளின் முக்கிய இறக்குமதியாளராக உள்ளது. இதுவரை, டிரம்ப் இந்தத் துறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனெனில், இந்திய தகவல் தொழில்நுட்ப ஆதரவை விரைவாக மாற்றுவது கடினமாக இருக்கும். இருப்பினும், எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.


உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை மாற்றுவதன் மூலம் அமெரிக்காவை தொழில்நுட்ப அடிப்படையிலான உற்பத்தித் தலைவராக மாற்ற டிரம்ப் விரும்புகிறார். டிரம்பின் முந்தைய ஆட்சிக் காலத்தில் இருந்து கற்றுக்கொண்டு, இந்த மாற்றத்திற்கு இந்தியா தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். எஃகு மற்றும் அலுமினியம் மீது அமெரிக்கா வரிகளை விதித்தபோது, தயாரிப்பு தரத்தை மேம்படுத்துவதன் மூலம் ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான பொறியியல் ஏற்றுமதியை இந்தியா அதிகரிக்க முடிந்தது. இருப்பினும், ஜவுளித் துறையில், அதிக செலவுகள் மற்றும் பலவீனமான உள்கட்டமைப்பு காரணமாக இந்தியா, வங்கதேசம் மற்றும் வியட்நாமிடம் தோற்றது.


இதில் முன்னேற்றம் அடைய இந்தியா பெரிய மாற்றங்களையும் புத்திசாலித்தனமான முதலீடுகளையும் செய்ய வேண்டும். இதில் ஜவுளி மையங்களை நவீனமயமாக்குதல், துறைமுகங்களை மேம்படுத்துதல், மலிவான எரிசக்தியை வழங்குதல் மற்றும் எளிய கட்டமைப்பு வேலைக்குப் பதிலாக துல்லிய பொறியியல், பசுமை தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட இயந்திரங்கள் போன்ற உயர்தர உற்பத்தியில் கவனம் செலுத்துதல் ஆகியவை அடங்கும்.


ஏற்றுமதியாளர்களுக்கு கடன் வழங்குவதை எளிதாக்குவதன் மூலமும், சிறு வணிகங்களுக்கு வரி மற்றும் ஜிஎஸ்டி நிவாரணம் வழங்குவதன் மூலமும், உலகளாவிய சந்தைகளுக்கு இந்தியாவில் உற்பத்தி செய்ய வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க PLI திட்டம் போன்ற வலுவான சலுகைகளை வழங்குவதன் மூலமும் அரசாங்கம் உதவ வேண்டும். கிழக்கு ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு போன்ற பிராந்தியங்களில் புதிய வர்த்தக வாய்ப்புகளையும் இந்தியா கண்டறிய வேண்டும். பொருளாதார ரீதியாக மிகவும் பாதுகாப்பாக மாற சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்த வேண்டும்.


அமெரிக்கா சமீபத்தில் மீண்டும் பாகிஸ்தான் மீது ஆர்வம் காட்டியது. இது பாகிஸ்தான் ஒரு நம்பகமான நீண்டகால நட்பு நாடு அல்ல என்பதை நிரூபித்தது. எனவே, இந்தியா அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக அதன் சொந்த பாதுகாப்புத் துறையை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.


கோவிந்த் பட்டாச்சார்ஜி மற்றும் எழுத்தாளர் மற்றும் இந்திய முன்னாள் இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) அமைப்பின் இயக்குநர் மற்றும் அருண் ஜெட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர்.



Original article:

Share:

சிறுதானிய விதைகளுக்கு நிலத்தை தயார் செய்தல் -டி. நந்தகுமார்

 காலநிலைக்கு ஏற்ற பயிர் வகைகளைப் பயன்படுத்துதல், குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) விட அதிக விலைகளை வழங்குதல் மற்றும் புதிய தயாரிப்புகளை உருவாக்குதல் ஆகியவை சிறுதானிய வகைகளை தினசரி உணவுமுறையின் ஒரு பகுதியாக மாற்ற உதவும்.


சர்வதேச சிறுதானிய ஆண்டு (International Year of Millets (IYOM)) 2023, உலகம் முழுவதும் சிறுதானியம் சார்ந்த உணவை ஊக்குவிப்பதில் ஒரு முக்கியமான படியாகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இந்த பிரச்சாரம் உலகளவில் சிறுதானியங்களை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. G20 இரவு உணவு உட்பட முக்கிய நிகழ்வுகள் மூலம் அரசாங்கம் இதை ஆதரித்தது. அங்கு சிறுதானிய உணவுகள் பரிமாறப்பட்டன.


சிறந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் பிரபல சமையல்காரர்கள், சிறுதானியங்களை ஆக்கப்பூர்வமாக நல்ல உணவுகளில் பயன்படுத்துவதன் மூலம் பெரும் பங்கு வகித்தனர். அவர்களின் தனித்துவமான விளக்கக்காட்சிகள், சிறுதானியம் எவ்வாறு ஆரோக்கியமானதாகவும், சுவையாகவும், உயர்தர உணவிற்கு ஏற்றதாகவும் இருக்கும் என்பதைக் காட்டியது. இது பாரம்பரிய தானியத்திலிருந்து நவீன சூப்பர்ஃபுட் வரை சிறுதானியம் பற்றிய பொதுமக்களின் பார்வையை மாற்ற உதவியது.


பிரபலங்கள் மற்றும் ஊடக கவனத்தால் ஊக்குவிக்கப்பட்ட இந்த பிரச்சாரம், சிறுதானியங்களை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. இனிப்புகள் (லட்டு போன்றவை), வேகவைத்த சிற்றுண்டிகள் மற்றும் சமைக்க எளிதான கஞ்சி கலவைகள் போன்ற சிறுதானிய பொருட்களை கடைகள் அதிக அளவில் விற்பனை செய்யத் தொடங்கின. ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களும் சிறுதானிய சார்ந்த உணவுகளை தங்கள் மெனுக்களில் சேர்த்தன, அவை மேலும் பிரபலமடைய உதவியது.


இருப்பினும், இந்த முறைகளைத் தாண்டி, ஒரு தீவிரமான கேள்வி உள்ளது: இந்த முயற்சிகள் அனைத்தும் சிறுதானிய  வேளாண்மையை வளர்ச்சிக்கு உதவியதா? நவீன வேளாண்மை மற்றும் வேளாண் கொள்கைகளில் கம்பு (பஜ்ரா), சோளம் (Sorghum), கேழ்வரகு (ராகி) மற்றும் சிறுதானியங்கள் என்று மொத்தமாக அழைக்கப்படும் பிற சிறிய தானிய வகைகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.


இந்தக் கட்டுரை சிறுதானிய சாகுபடியில் ஏற்பட்டுள்ள உண்மையான முன்னேற்றத்தையும் அவற்றின் அதிகரித்து வரும் மதிப்பையும் ஆராய்கிறது. சில நிபுணர்கள் தாக்கத்தை முழுமையாக அளவிடுவது மிக விரைவில் நடைபெறும் என்று கூறுகிறார்கள். இருப்பினும், சிறுதானிய பிரபலத்தின் தற்போதைய வளர்ச்சி நீண்டகால நடவடிக்கைகளை எடுக்க ஒரு நல்ல வாய்ப்பாகும். நிலையான வேளாண்மையை ஊக்குவிப்பதன் மூலமும், விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துவதன் மூலமும், சிறுதானியங்களிலிருந்து லாபத்தை அதிகரிப்பதன் மூலமும், வேளாண்மையிலும் அன்றாட உணவிலும் சிறுதானியம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதை உறுதிசெய்ய முடியும்.


உற்பத்தி, மதிப்பு உருவாக்கம்


கடந்த 10 ஆண்டுகளில், சிறுதானிய உற்பத்தியிலோ அல்லது உற்பத்தித்திறனிலோ பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. மறுபுறம், இந்த காலகட்டத்தில் பிற முக்கிய தானிய பயிர்கள் உற்பத்தியில் சிறந்த வளர்ச்சியைக் காட்டியுள்ளன.
















2011-12ஆம் ஆண்டு விலைகளை அடிப்படையாகக் கொண்ட மொத்த உற்பத்தி மதிப்பு (gross value of output (GVO)), உழவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதை அளவிட ஒரு நல்ல வழியாகும். துரதிர்ஷ்டவசமாக, சிறு தானியங்களின் GVO அதிக முன்னேற்றத்தைக் காட்டவில்லை. விளக்கப்படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, அதன் மதிப்பு கிட்டத்தட்ட அப்படியே உள்ளது. இது உழவர்களின் வருமானம் அதிகம் உயரவில்லை என்பதைக் காட்டுகிறது.


சர்வதேச சிறுதானிய ஆண்டு (International Year of Millets) இந்த பாரம்பரிய பயிருக்கு கவனத்தை ஈர்க்க உதவியது. இருப்பினும், அனைத்து கவனத்துடனும், சிறுதானிய உற்பத்தி மற்றும் மதிப்பில் உண்மையான அதிகரிப்பு சிறியதாகவே உள்ளது. விலைகள் உயர்ந்திருந்தாலும், GVO இன் அதிகரிப்பு குறைந்தபட்ச ஆதரவு விலைகளின் (MSPs) உயர்வுடன் பொருந்தவில்லை. சிறுதானியங்களை வேளாண்மையின் நீடித்த பகுதியாக மாற்ற  ஒரு தற்காலிக நிலையாக இல்லாமல், இந்தியா சிறுதானிய வேளாண்மையில் நீண்டகால முதலீடுகளை செய்ய வேண்டும்.


நிலையான வளர்ச்சியைத் தக்கவைக்க, நெல் வேளாண்மை சிறப்பாகச் செயல்படாத பகுதிகளுக்கு, குறிப்பாக ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களின்  வேளாண் முறைகள் சிறுதானிய வோளாண்மைக்கு மாற வேண்டும். இந்தப் பகுதிகளில் பயிர் முறைகளை மாற்றுவது வேளாண்மைக்கும் உழவர்களின் வருமானத்திற்கும் அர்த்தமுள்ளதாக இருக்கும். அதிகமான மக்கள் ஆரோக்கியமான உணவை விரும்புவதால், உழவர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) விட அதிக விலையைப் பெற வேண்டும். ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலையில் பயிர்களை வாங்குவதற்கான சரியான அமைப்பு கூட உழவர்களுக்கு பாதுகாப்பையும் நம்பிக்கையையும் தருகிறது. இது வேளாண் துறையை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.


இன்றைய நுகர்வோர்கள் வசதியை விரும்புகிறார்கள். அவர்கள் சமைக்கத் தயாராக இருக்கும் மாவு, நீண்ட காலம் நீடிக்கும் தானியங்கள் மற்றும் நேர்த்தியாக தொகுக்கப்பட்ட உணவுகளை விரும்புகிறார்கள். ஆனால், சிறுதானிய சந்தைப்படுத்தல் இந்தத் தேவைகளுக்கு ஏற்றதாக இல்லை. எனவே, சிறுதானிய பொருட்களை மேம்படுத்தவும், வலுவான நிறுவனங்களை உருவாக்கவும், சிறந்த சில்லறை விற்பனை அமைப்புகளை உருவாக்கவும் இது சரியான நேரம்.


சிறுதானிய பயன்பாட்டை அதிகரிப்பதற்கான ஒரு சிறந்த வழி பள்ளிகள் மூலம் வழங்கப்படும் உணவுகளில் சிறுதானிய வகைகளை சேர்ப்பது ஆகும். பள்ளி உணவுகளில் சிறுதானியங்களைச் சேர்ப்பது மற்றும் குழந்தைகள் அவற்றை சாப்பிடப் பழகுவதற்கு உதவும்.  உள்ளூர் மாவட்டங்களில் தாங்களாகவே உணவு வாங்க அனுமதிக்கப்பட்டால், அவர்கள் அருகிலுள்ள விவசாயிகளிடமிருந்து அதைப் பெறலாம். இந்த ஆதரவை வழங்குவதன் மூலம் அதிகமான மக்களை சிறுதானியங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கலாம்.


மழையை நம்பி விவசாயம் செய்யவும், ஊட்டச்சத்தை மேம்படுத்தவும் சிறுதானியங்கள் ஒரு சிறந்த தீர்வாகும். இந்தியா முழு உணவு முறையிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதால், அதிக பயிர்களை வளர்ப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைகளை மேம்படுத்துதல்  போன்றவை சிறுதானியங்கள் நமது உணவினை வழக்கமான மற்றும் முக்கியமான பகுதியாக மாறக்கூடும். இது குறுகிய காலத்திற்கு மட்டுமல்லாமல் நீண்ட காலத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.


எழுத்தாளர் இந்திய அரசின் உணவு மற்றும் வேளாண்மைத் துறையின் முன்னாள் செயலாளர் ஆவார்.



Original article:

Share:

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது -ரஜனி சின்ஹா

 கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மை ரிசர்வ் வங்கியின் முடிவுகளைப் பாதிக்கும்.


ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (Monetary Policy Committee (MPC)) கூட்டம், பணவீக்கம் கடுமையாக வீழ்ச்சியடைந்து வரும் நேரத்தில் நடைபெற உள்ளது. இருப்பினும், அமெரிக்க வர்த்தகக் கொள்கைகள் காரணமாக பொருளாதார வளர்ச்சி நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கிறது. எனவே, இந்தக் கூட்டத்தில் மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


ஜூன் மாதத்தில், ரிசர்வ் வங்கி ஏற்கனவே 50 அடிப்படைப் புள்ளிகள் (bps) விகிதங்களைக் குறைத்துள்ளது. எனினும் பணவீக்கம் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகக் குறைந்திருந்தாலும், மேலும் மாற்றங்களைச் செய்வதற்கு முன்பு RBI காத்திருந்து கவனிக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. RBI தனது நிலைப்பாட்டை "இணக்கமான" நிலையிலிருந்து "நடுநிலை" நிலைக்கு மாற்றியதால், மேலும் விகிதக் குறைப்புகளை நியாயப்படுத்துவது கடினமாகிவிட்டது.


நுகர்வோர் விலைக் குறியீட்டு (Consumer Price Index (CPI)) பணவீக்கம் ஜூன் மாதத்தில் சுமார் 2% ஆகக் குறைந்தது. அடுத்த இரண்டு காலாண்டுகளில் சராசரியாக 2.5% குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்ததே ஆகும்.  உதாரணமாக, 2024 ஆம் ஆண்டில் மிக அதிகமாக இருந்த காய்கறிகளின் விலைகள் (சராசரியாக 27% பணவீக்கம்), இப்போது கடந்த மூன்று மாதங்களில் சராசரியாக -15% என்ற அளவில்  கூர்மையான சரிவைக் கண்டுள்ளன.


கடந்த ஆண்டு பெய்த நல்ல பருவமழை மற்றும் அதிக விலைகள் காரணமாக, பிற உணவுப் பொருட்களும் குறைந்த பணவீக்கத்தையோ அல்லது விலை வீழ்ச்சியையோ காட்டுகின்றன. பணவீக்கத்தில் ஏற்பட்ட இந்த சரிவின் பெரும்பகுதி "அடிப்படை விளைவு" (“base effect.”) எனப்படும் புள்ளிவிவர விளைவு காரணமாகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நல்ல பருவமழை தொடர்ந்து உணவு விலைகளைக் குறைவாக வைத்திருக்கும். மேலும், ஒட்டுமொத்த பொருட்களின் விலைகள் நிலையானதாக இருக்க வேண்டும். இருப்பினும், அடுத்த ஆண்டு, அடிப்படை விளைவு குறையும் போது பணவீக்கம் மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 நிதியாண்டின்  கடைசி காலாண்டில் CPI பணவீக்கம் 4%ஐ விட அதிகமாக இருக்கும் என்றும், 2027 நிதியாண்டில் சராசரியாக 4.5% இருக்கும் என்றும், மேலும் உயரும் போக்கும் கணிசமான அளவில் இருக்கும் என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது.


கட்டணத்தின் நிச்சயமற்ற தன்மை


அமெரிக்காவின் சமீபத்திய வர்த்தகக் கொள்கைகள் காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சில நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்கிறது. இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 25% வரியை (ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதற்கான அபராதம்) விதித்துள்ளது. இது வியட்நாம் (20%) மற்றும் இந்தோனேசியா (19%) போன்ற பிற நாடுகளின் வரிகளை விட அதிகமாகும். இது இந்தியாவை சாதகமற்ற நிலையில் வைக்கிறது. இருப்பினும், இந்தியாவின் பொருளாதாரம் பெரும்பாலும் உள்நாட்டுத் தேவையால் இயக்கப்படுவதாலும், வர்த்தகத்தை பெரிதும் சார்ந்து இல்லாததாலும், ஒட்டுமொத்த தாக்கம் குறைவாக இருக்கலாம். அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% மட்டுமே அதிகரித்துள்ளது. வரிகளின் எதிர்மறையான தாக்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.3–0.4% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இன்னும் சில நிச்சயமற்ற தன்மை உள்ளது. மேலும், வரிகளைக் குறைக்கும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா பேச்சுவார்த்தை நடத்த முடியும். பொருளாதார வளர்ச்சி தொடர்பான அடுத்த நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கூடுதல் தெளிவுக்காக காத்திருக்கலாம். நல்ல மழைப்பொழிவு, பணவீக்கம் குறைதல், வட்டி விகிதங்கள் குறைதல் மற்றும் இந்த ஆண்டு குறைக்கப்பட்ட வருமான வரி போன்ற வளர்ச்சிக்கான நேர்மறையான அறிகுறிகளும் உள்ளன.


நிச்சயமற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி இப்போதைக்கு விஷயங்களை மாற்றாமல் வைத்திருக்கத் தேர்வுசெய்யலாம். முன்னர் செய்யப்பட்ட 100 அடிப்படை புள்ளி (1%) வட்டி விகிதக் குறைப்பின் விளைவுகள் இன்னும் உணரப்பட்டு வருகின்றன.  மேலும், பொருளாதாரம் முழுமையாகப் பயனடைய அதிக நேரம் ஆகலாம். இந்த வட்டி விகிதக் குறைப்புகளின் விளைவுகளைப் பகிர்ந்து கொள்ள போதுமான பணம் அமைப்பில் இருப்பதையும் ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது. கூடுதலாக, அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருவதாலும், அமெரிக்க டாலர் வலுவடைந்து வருவதாலும், ரூபாய் மேலும் பலவீனமடைவதைத் தடுக்க ரிசர்வ் வங்கி விகிதங்களைக் குறைப்பதைத் தவிர்க்கலாம்.


பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்த்து, ரிசர்வ் வங்கி ஏற்கனவே வட்டி விகிதங்களைக் குறைத்திருந்தது. எனவே, வளர்ச்சி ஒரு பெரிய பிரச்சனையாக மாறாவிட்டால், அதிக வட்டி விகிதக் குறைப்புக்கள் சாத்தியமில்லை. எதிர்காலத்தில், ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தும். நுகர்வோர் விலை பணவீக்கம் (CPI) 2026 நிதியாண்டின்  நான்காவது காலாண்டில் 4% ஐ விட அதிகமாகவும், 2027 நிதியாண்டில் சராசரியாக 4.5% ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, உண்மையான வட்டி விகிதம் சுமார் 1–1.5% ஆகவோ அல்லது 2026இல் இன்னும் குறைவாகவோ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருள் வட்டி விகிதங்களை மேலும் குறைக்க எந்த வலுவான காரணமும் இல்லை.


ரஜனி சின்ஹா, எழுத்தாளர்  மற்றும் CARE Edge Ratings நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் ஆவார்.



Original article:

Share:

ரைசோடோப் திட்டம் (Rhisotope Project) -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


IAEA-ன் படி, கதிரியக்க ஐசோடோப்புகள் (ரேடியோஐசோடோப்புகள் என்றும் அழைக்கப்படுகின்றன) என்பது கதிர்வீச்சை வெளியிடும் ஒரு தனிமத்தின் நிலையற்ற வடிவமாகும். இவை மிகவும் நிலையான வடிவமாகவும் மாறுகின்றன. இது, உமிழப்படும் கதிர்வீச்சைக் கண்டறிய முடியும். மேலும், இந்த கதிர்வீச்சு பொதுவாக அது தொடும் பொருளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.


ஆக்கிரமிப்பு இல்லாத நடைமுறைகள் (non-invasive procedure) மூலம், காண்டாமிருகக் கொம்புகள் (rhino horns) குறைந்த அளவிலான கதிரியக்க ஐசோடோப்புகளால் குறிக்கப்படுகின்றன. இது அங்கீகரிக்கப்படாத அணுசக்தி பொருட்களை அடையாளம் காண உலகளவில் எல்லைகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ள கதிர்வீச்சு போர்டல் கண்காணிப்பாளர்கள் (radiation portal monitors (RPM)) மூலம் அவற்றைத் தயாராகக் கண்டறிய அனுமதிக்கிறது.


இந்த அமைப்பைச் சோதிக்க, ஆராய்ச்சியாளர்கள் 3D-அச்சிடப்பட்ட காண்டாமிருகக் கொம்புகளைப் பயன்படுத்தினர். இந்த கொம்புகள் உண்மையான கெரட்டின் (real keratin) போன்ற அதே பாதுகாப்பு பண்புகளைக் கொண்டிருந்தன. கெரட்டின் என்பது உண்மையான காண்டாமிருகக் கொம்பை உருவாக்கும் பொருளாகும். பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, சோதனைகள் முக்கியமான ஒன்றை உறுதிப்படுத்தின. 40 அடி நீளமுள்ள கப்பல் கொள்கலன்களுக்குள் வைக்கப்பட்டாலும் கூட தனிப்பட்ட கொம்புகளைக் கண்டறிய முடியும்.


தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் வடக்கே லிம்போபோவின் வாட்டர்பெர்க்கில் உள்ள வாட்டர்பெர்க் பயோஸ்பியரில் 20 காண்டாமிருகங்களுக்கு ரேடியோஐசோடோப்புகளை செலுத்தியபோது, கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட சோதனை கட்டத்தின் முடிவுகளையும் பல்கலைக்கழகம் அறிவித்தது. இது, பெல்ஜியத்தின் கென்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு, சிகிச்சையளிக்கப்பட்ட 15 காண்டாமிருகங்களின் ஆரோக்கியத்தைக் கண்காணித்து, அவற்றில் சைட்டோலாஜிக்கல் பரிசோதனைகளை (cytological examinations) நடத்தியது. இந்த முடிவுகளை சிகிச்சை அளிக்கப்படாத ஐந்து காண்டாமிருகங்களுடன் முடிவுகளை ஒப்பிட்டனர்.

உங்களுக்குத் தெரியுமா? 


20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகளாவிய காண்டாமிருக எண்ணிக்கை சுமார் 500,000 ஆக இருந்ததாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (International Union for Conservation of Nature) மதிப்பிட்டுள்ளது. தற்போது, காண்டாமிருகக் கொம்புகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், அது 27,000 ஆகக் குறைந்துள்ளது. இந்தக் கொம்புகள் ஆசிய சந்தைகளுக்குக் கடத்தப்படுகின்றன. அங்கு, அவை பாரம்பரிய மருத்துவத்திலும், அந்தஸ்தின் அடையாளமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.


உலகின் மிகப்பெரிய காண்டாமிருக எண்ணிக்கையைக் கொண்ட தென்னாப்பிரிக்கா, கடந்த பத்தாண்டுகளில் வேட்டையாடுதலால் 10,000-க்கும் மேற்பட்ட காண்டாமிருகங்களை இழந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 103 காண்டாமிருகங்களை இழந்துள்ளதாக தென்னாப்பிரிக்க வனத்துறை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


வேட்டையாடுவதை நிறுத்துவதற்கான திட்டம் முழுமையான தீர்வாக இல்லாவிட்டாலும், அது ஒரு வலுவான தடுப்பாக செயல்படக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். வேட்டையாடுதலைத் தடுக்க காண்டாமிருகங்களின் கொம்புகள் அகற்றப்படுவது, கொம்புகளை வெட்டுவதைவிட இது காண்டாமிருக நடத்தைக்கு குறைவான இடையூறாக இருக்கும் என்பதை நிச்சயமாக நிரூபிக்கும். 2024-ம் ஆண்டு அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் காண்டாமிருகங்கள் இருக்கக்கூடிய எட்டு சரணாலயங்களில் கொம்புகளை வெட்டுவது என்பது வேட்டையாடுவதை 78 சதவீதம் குறைத்ததாகக் காட்டியது. இருப்பினும், முந்தைய ஆண்டில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், கொம்புகள் வெட்டப்படுவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் கண்டறியப்பட்டன. கொம்புகள் வெட்டப்பட்டதால் காண்டாமிருகங்கள் அவற்றின் மற்ற விலங்குகளுடன் பழகும் திறன் பாதிக்கப்பட்டதுடன், அவற்றின் இருப்பிட எல்லைகள் குறைந்துவிட்டன என்பதையும் குறிப்பிட்டுள்ளது.



Original article:

Share: