பிரதமரின் போஷண் திட்டத்தில் காலை உணவைச் சேர்ப்பது, தேசிய கொள்கையை ஊட்டச்சத்து மற்றும் கல்வி இயல்நிலைகளுடன் ஒருங்கிணைக்க உதவும்.

 சாத்தியக்கூறுகள் மற்றும் நியாயத்தன்மை போன்றவைகளை முக்கியக் காரணிகளாக கருத்தில் கொண்டு, மாநிலங்களின் முன்மொழிவை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும்.


ராஜஸ்தான், கேரளா, சத்தீஸ்கர், சிக்கிம், லட்சத்தீவு, குஜராத் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஒன்றிய அரசின் மதிய உணவுத் திட்டமான பிரதம மந்திரி போஷன் நிர்மான் (Pradhan Mantri Poshan Shakti Nirman (PM-Poshan)) திட்டத்தை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் வகையில் விரிவுபடுத்துவதற்கான முன்மொழிவு சரியான நேரத்தில் வந்துள்ளது மற்றும் இது பாராட்டத்தக்க முன்மொழிவாகும். கல்வி அமைச்சகத்தின் இதே போன்ற முன்மொழிவு 2021-22-ஆம் ஆண்டுகளில் நிதி அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், கட்சி எல்லைகளைக் கடந்து மாநில அரசுகளால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்வது, தேசிய கொள்கையை ஊட்டச்சத்து மற்றும் கல்வி உண்மைகளுடன் வரவேற்கத்தக்க வகையில் இணைப்பதையும், கற்றல் என்பது முதல் பாடத்துடன் தொடங்குவதில்லை. ஆனால், அன்றைய நாள் முதலில் உணவில் இருந்து தொடங்குகிறது என்பதை அங்கீகரிப்பதைக் குறிக்கும்.


காலை உணவுத் திட்டத்தின் கல்வி மற்றும் சுகாதார நன்மைகள் நன்கு அறியப்பட்டவை. 2020ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை (National Education Policy), "ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவுக்குப் பிறகு காலை நேரங்கள் அறிவுத்திறன் சார்ந்த கடினமான பாடங்களைப் பயில்வதற்கு குறிப்பாக படைப்புத்திறன் நிறைந்தவையாக இருக்கும் என்று குறிப்பிடுகிறது. காலை உணவு ஊட்டச்சத்தின் தன்மையை அதிகரிப்பதோடு, வகுப்பறைகளில் வருகை, கவனம் மற்றும் சமத்துவத்தை உயர்த்துகிறது என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தமிழ்நாடு ஒரு நல்ல முன்மாதிரியாகத் திகழ்கிறது. காலை உணவு திட்டம் (breakfast programme) தமிழ்நாட்டில் 2022-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இப்போது, இந்த திட்டம் 24 லட்சம் மாணவர்களுக்கு சென்றடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. திட்டத்தின் முக்கியத்துவம் எளிமையாக புரிந்துகொள்ளப்பட்டது: ஊட்டச்சத்து பெற்ற குழந்தைகள் சிறப்பாகக் கல்வி கற்றுக்கொள்கிறார்கள். ஏழு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைத் தவிர, கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் மேகாலயா உள்ளிட்ட 11 மாநிலங்கள், இந்தத் திட்டத்தை 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. நாடு முழுவதும் காலை உணவை அறிமுகப்படுத்துவதற்கான கூடுதல் செலவு ஆண்டுதோறும் ரூ.6,000 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று ஒன்றிய அரசு மதிப்பிட்டாலும், செலவைவிட திட்டத்தில் அதிக நன்மைகள் உள்ளன. குறிப்பாக, மாற்றுக் கல்வி, சுகாதாரம் மற்றும் இழந்த உற்பத்தித்திறன் ஆகியவற்றின் கீழ்நிலை சுமைகளுடன் ஒப்பிடும்போது திட்டத்தின் நன்மைகள் தெளிவாக தெரிகின்றன.


காலை உணவு முயற்சியை ஒரு உணவைவிட அதிகமாகக் கருதுவது தேசிய அளவில் வெற்றி பெறுவதற்கு முக்கியமானது. இந்த முயற்சி கல்வி, சுகாதாரம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் முதலீடாக அங்கீகரிக்கப்பட வேண்டும். PM POSHAN திட்டத்தின்கீழ் காலை உணவுத் திட்டத்தை ஆதரிக்கும் மாநிலங்கள், இது ஒரு கூடுதல் அம்சம் மட்டுமல்ல, அனைவருக்கும் கல்வியை உறுதி செய்வதில் ஒரு முக்கியப் பகுதியாகும் என்று கூறுகின்றன. இது சிறப்பாக செயல்பட, சமையலறை வசதிகள், உணவு வழங்கல், தூய்மை, சரியான ஊட்டச்சத்து, அனைவர்க்கும் தேவையான உணவு, வலுவான கண்காணிப்பு மற்றும் செயலில் சமூக ஈடுபாடு போன்ற விவகாரங்களை அரசாங்கம் கவனமாகத் திட்டமிட வேண்டும். மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்துபவர்கள் ஏற்கனவே உணரும் அழுத்தத்தைக் குறைப்பதும் மிகவும் முக்கியமானது. குறைந்த ஊதியம் மற்றும் அதிக பணிச்சுமையை எதிர்த்து அங்கன்வாடி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயற்பாட்டாளர்கள் ((Accredited Social Health Activists (ASHA)) பலமுறை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகமான பணியாளர்கள், உள்கட்டமைப்பு மற்றும் கூடுதல் நிதி இல்லாமல் காலை அடுக்கைச் சேர்ப்பது, பணியாளர்களுக்கு வேலையை கடினமாக்கும். இந்தத் திட்டம் விரிவடையும்பட்சத்தில், முன்னணிப் பணியாளர்களுக்கு தேவையான ஆதரவு கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். எனவே, மாநிலங்களின் முன்மொழிவை வரவேற்பது, நியாயத்தன்மை மற்றும் சாத்தியக்கூறுகளுக்கான உறுதிப்பாட்டுடன் இணைந்து செல்ல வேண்டும்.



Original article:

Share:

நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)) என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய குறிப்புகள்:


— அரசு தங்குமிடங்கள் மற்றும் பணியமர்த்துவோர் வழங்கும் குடியிருப்புகள் வீட்டுவசதி குறியீட்டிலிருந்து விலக்கப்படுகிறது. ஏனெனில், இவை உண்மையான வாடகை சந்தையில் நிகழும் பரிவர்த்தனைகளை வெளிக்காட்டவில்லை  என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


— தற்போதுள்ள நுகர்வோர் விலைக் குறியீட்டில் (Consumer Price Index (CPI)) வீட்டுவசதிக்கு என்று  நகர்ப்புறங்களில் 21.67 சதவீத மதிப்பும், அகில இந்திய அளவில் 10.07 சதவீத மதிப்பும் வழங்கப்பட்டுள்ளது.


— இந்தத் திருத்தம் செயல்படுத்தப்படும்போது, ​​நகர்ப்புற குடியிருப்புகள் மற்றும் பணியமர்த்துவோர் வழங்கும் குடியிருப்புகளை மட்டும் சேர்ப்பதென்பது  முழுமையான நிலவரத்தைத் தெரிவிக்காமல் விட்டுவிடும் வாய்ப்புள்ளது.  குறிப்பாக பெருந்தொற்றுக்குப் பிறகு வீட்டுவாடகைகள் அதிகரித்துள்ள நிலையில், வாடகை மற்றும் வீட்டு விலைகள் பணவீக்கத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை மிகவும் துல்லியமாக அளவிட உதவுகிறது. 


— இந்தத் தொடரின் மூன்றாவது ஆய்வறிக்கையை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. - 'புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டுத் (Consumer Price Index (CPI)) தொடரில் வீட்டுவசதி குறியீட்டு தொகுப்பு முறையில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் குறித்த விவாதக் கட்டுரை' - நுகர்வோர் விலைக் குறியீட்டின் (Consumer Price Index (CPI)) அடிப்படை திருத்தப் பணிகளில் ஒரு பகுதியாக உள்ளது.


— புதிய வீட்டுவசதிக் குறியீடு, தற்போது மாதந்தோறும் வீடுகளில் ஆறில் ஒரு பங்கில் (one-sixth) இருந்து மட்டுமே தரவைச் சேகரிக்கும் வரம்பிற்குப் பதிலாக, ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வீடுகளிலிருந்தும் வாடகைத் தரவை உள்ளடக்கியதாக இருக்கும்.


— புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகமானது (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)), நுகர்வோர் விலைக் குறியீட்டின் (Consumer Price Index (CPI)) அடிப்படை திருத்தப்பணியை  மேற்கொண்டு வருகிறது. மேலும், நிபுணர்கள், பயனர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து வருகின்றனர். அதற்குப் பிறகு சில வழிமுறைகளையும் மறுபரிசீலனை செய்ய இருக்கிறது. புதிய தரவு மூலங்களை (data sources) ஆராய்ந்து பல மாற்றங்களையும்  புகுத்திவருகிறது.


— இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள குடும்பங்களின் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கான ஒரு முக்கியமான குறியீடாக வீட்டுவசதி என்பது பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர்களின் வருமானத்தில் கணிசமான அளவு வாடகைக்காகவோ அல்லது சொந்த வீட்டைப் பராமரிப்பதற்கோ செலவிடப்படுகிறது.Mospi

உங்களுக்குத் தெரியுமா?


— நுகர்வோர் விலைக் குறியீட்டிற்காக (Consumer Price Index (CPI)), 2024-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட அடிப்படை ஆண்டாக (revised base year) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், பொருட்களின் தொகுப்பும் அவற்றின் மதிப்பீடும் 2023-24-ஆம் ஆண்டில் தேசிய புள்ளியியல் (National Statistical Office (NSO)) அலுவலகத்தால் நடத்தப்பட்ட குடும்ப நுகர்வோர் செலவின ஆய்வின் (Household Consumption Expenditure Survey (HCES)) அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டுத்தொடர் வரும் 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலிருந்து வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


— அடிப்படை ஆண்டு (base year) என்பது ஒரு பொருளாதார அல்லது நிதிக் குறியீட்டில் தொடர்ச்சியான ஆண்டுகளின் முதல் ஆண்டாகும். இந்த சூழலில், இது பொதுவாக 100 என்ற தன்னிச்சையான நிலையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட குறியீட்டில் தரவுகளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க, புதிய, நடப்பு அடிப்படை ஆண்டுகள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை அளவிட அடிப்படை ஆண்டுகளும் பயன்படுத்தப்படுகின்றன. எந்த ஆண்டும் ஒரு அடிப்படை ஆண்டாக செயல்படலாம், ஆனால் ஆய்வாளர்கள் பொதுவாக சமீபத்திய ஆண்டுகளைத் தேர்வு செய்கிறார்கள்.


— வணிக செயல்பாடு அல்லது பொருளாதார அல்லது நிதி குறியீட்டின் அளவீட்டில் ஒப்பிடுவதற்கு ஒரு அடிப்படை ஆண்டு பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 2016 மற்றும் 2024-க்கு இடையிலான பணவீக்க விகிதத்தைக் கண்டறிய, 2016 என்பது அடிப்படை


 ஆண்டாக அல்லது நிர்ணயிக்கப்பட்ட காலத்தின் முதல் ஆண்டாகவும் கருதப்படுகிறது. அடிப்படை ஆண்டு (base year) என்பது வளர்ச்சியின் தொடக்கப் புள்ளியாகவோ அல்லது ஒரே அங்காடி விற்பனையை (same-store sales) கணக்கிடுவதற்கான அடிப்படை புள்ளியாகவோ இருக்கலாம்.



Original article:

Share:

அமைதி மற்றும் நிலையான பாதுகாப்பு வாரியத்திற்கான தேவையை முன்வைக்கும் வாதம் -நிருபமா ராவ்

 போர்களுக்குப் பிறகு அமைதியை நிலைநிறுத்தக்கூடிய வகையில் ஒரு புதிய அமைப்பை ஐக்கிய நாடுகள் சபை உருவாக்க வேண்டும். 


ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations) 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வேளையில், அதன் இலட்சியங்களுக்கும் அவற்றை நிலைநிறுத்த நோக்கம் கொண்ட அமைப்புகளுக்கும் இடையிலான இடைவெளி முன்பைவிடத் தெளிவாகத் தெரிகிறது. பேரழிவு தரும் போரைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கூட்டமைப்பு (United Nations Security Council (UNSC)) இன்னும் மோதலுக்கு எதிர்வினையாற்றி வருகிறது. ஆனால் இன்னும் அமைதியை நிலைநிறுத்த உறுதியான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. கண்டங்கள் முழுவதும் மோதல்கள் பல ஆண்டுகளாக இன்னும் தீர்வு இல்லாமல் நீடிக்கின்றன. சர்வதேச அமைப்பு அரசியல் ஈடுபாட்டை மிக விரைவில் கைவிடுவதாலும் தீர்வு இல்லாமல் மோதல்கள் பல ஆண்டுகளாகத் தொடர்கின்றன. அமைதி ஒப்பந்தங்களும் வெறும் பெயரளவில் இருக்கின்றன. நாடுகளுக்கிடையே உறவுகளை வளர்த்துக் கொள்ளும் ராஜதந்திர செயல்கள் ஒரு தொடர்ச்சியான செயல்முறையாக இருப்பதற்குப் பதிலாக, நெருக்கடி நிலைகளில் மட்டும் செயல்படுத்தப்படும் ஒரு வடிவமாக மாறியுள்ளது. 


இந்தப் பிரச்சினை வெறுமனே அரசியல் மோதல்கள் பற்றியது மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் அமைப்பின் கட்டமைப்பு குறித்த பிரச்சனைகளையும் உள்ளடக்கியது. வன்முறை குறைந்து சமரச முயற்சிகளுக்குப் பிறகு அரசியல் ஆதரவைப் பராமரிக்க ஐ.நா.விடம் எந்த உறுதியான அமைப்பும் இல்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபை மோதல் தடுப்பு நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்கிறது, ஆனால் கட்டமைப்புரீதியாக அவ்வப்போது மட்டுமே செயல்படுகிறது என்பது மிகப் பெரிய பின்னடைவாகும். நாடுகளுக்கிடையே அமைதியை ஏற்படுத்தும் பணிகள் சில நிலைகளை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், அரசியல் சார்ந்த உத்திகளைக் கையாள்வதில் அதிகாரங்களைக் குறைந்த அளவில் கொண்டுள்ளன. அமைதியை ஏற்படுத்த அமைக்கப்படும் ஆணையம், ஒரு மதிப்புமிக்க முன்முயற்சியாக இருந்தாலும், அரசியல் மாற்றங்களில் ஈடுபடுவதற்கான அதிகாரம் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் இருப்பதில்லை. ஐ.நா. இது போன்ற நடவடிக்கைகளில் சூழல் மீதான கட்டுபாட்டை இழக்கிறது. செயலில் உத்வேகத்தையும் இழந்து அமைப்பின் நோக்கத்தையும் மறந்துவிடுவதாகத் தெரிகிறது.


ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் (United Nations Security Council (UNSC)) கட்டமைப்பில்  சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற கோரிக்கை  நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. ஆனால் அனைத்து புதிய அமைப்புகளின் உருவாக்காதிற்கும் ஒரு முன்நிபந்தனையாக அத்தகைய சீர்திருத்தத்திற்காக காத்திருப்பது என்பது ராஜதந்திர ரீதியில் நோக்கும்போது மிகப்பெரிய தவறாகிறது. சீர்திருத்தம் என்பது சாசனத்தின்கீழ் ஏற்கனவே இருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி, இப்போது செயல்படும் ஐ.நா.வின் திறனை வலுப்படுத்தும் சீர்திருத்தமாக இருக்க வேண்டும். அதுவே தற்போதைய சூழலுக்கு சாத்தியமானது என்றும் நம்பப்படுகிறது. ஐ.நா. பொதுச் சபையானது பிரிவு 22-ன்கீழ் அதன் பணிகளைச் செய்ய புதிய துணை அமைப்புகளை நிறுவ அதிகாரம் கொண்டுள்ளது. இதற்கு முன்பும் இந்த அதிகாரத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு  பயன்படுத்தியுள்ளது. எனவே அந்த அதிகாரத்தை மீண்டும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.


தெளிவாக வரையறுக்கப்பட்ட இடம்


'அமைதி மற்றும் நிலையான பாதுகாப்பு வாரியம்' (Board of Peace and Sustainable Security) என்பது தற்போது மோதலுக்கான தீர்வைக் கொண்டுவர தேவையான அமைப்பின் வெற்றிடத்தை நிரப்பும் என்று கூறப்படுகிறது. இந்த அமைப்பு சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கூட்டமைப்பின்  முதன்மைநிலையை சவாலுக்கு உள்ளாக்குவதைப் போல அமைந்தது. இந்த வாரியம் மாநிலங்களின் இறையாண்மை விவகாரங்களில் ஊடுருவாமலும் முன்கூட்டியே எச்சரிக்கை அல்லது மோதலுக்கு முந்தைய தலையீட்டையும் தவிர்க்கும் என்று தெரிகிறது. அதற்குப் பதிலாக, மோதல்களின் போதும் அதற்குப் பின்னரும், ஐ.நா. அமைப்பின் பிடிகள் தற்போது விலகியுள்ள இடங்களில் கட்டமைக்கப்பட்ட அரசியல் ஆதரவை வழங்குதல் போன்ற சில தெளிவான பகுதிகளில் மட்டும் இந்த வாரியம் கவனம் செலுத்தும் என்று சொல்லப்படுகிறது. 


அதன் அணுகுமுறை அரசியல் ரீதியாக மட்டுமே இருக்கும் என்பது தெரிய வருகிறது. தேசிய அளவில் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளை வலுப்படுத்துதல், சமாதான ஒப்பந்தத்தை செயல்படுத்துவதோடு, நாடுகளின் இராஜதந்திர முயற்சிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் அமைதி காக்கும் பணியை நம்பகத்தன்மை வாய்ந்த அரசியல் இலக்குகளுடன் இணைத்தல் போன்ற தொலைநோக்குத் திட்டங்களை உறுதி செய்வதே இந்த புதிய வாரியத்தின் பணியாகக் கருதப்படுகிறது. இந்த அமைப்பு ஐ.நா. பொதுச்செயலாளர் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபையுடன் ஒருங்கிணைந்து செயல்படும் என்று கூறப்படுகிறது. இந்த வாரியாமானது ஐ.நா. பொதுச்செயலாளர் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு குழுவுடன் (UNSC) ஒருங்கிணைந்து செயல்படும், அமைதி கட்டமைப்பு குழுவை (Peacebuilding Commission (PBC)) உள்ளடக்கியிருக்கும். மேலும் ஐ.நா. அமைதி பாதுகாப்பு மற்றும் அமைதி கட்டமைப்பு உத்திகளை அரசியல் விளைவுகளுடன் ஒருங்கிணைக்க உதவும். இந்த அமைப்பு ஐ.நா. பாதுகாப்புச் சபையின் அதிகாரத்தையும், பிரிவு 99-ன்கீழ் பொதுச்செயலாளரின் அதிகாரங்களையும் மதிக்கும் என்று வரையறை செய்யபடுகிறது.


இந்த அமைப்பைப்  பிரதிநிதித்துவப்படுத்துங்கள்


இத்தகைய அமைப்பின் நம்பகத்தன்மை என்பது அதன் உறுப்பினர்களைப் பொறுத்தது. இந்த புதிய அமைப்பு பிரதிநிதித்துவமானதாக இருக்க வேண்டும், வெறுமனே அதிகாரமற்றதாக இருக்கக்கூடாது. ஐ.நா. பொதுச் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையான சுமார் இருபத்து நான்கு நாடுகளின் சுழற்சி உறுப்பினர்கள் மூலம் சமநிலை மற்றும் புதுப்பித்தலை உறுதிசெய்ய முடியும்.  ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் (Caribbean) மற்றும் மேற்கு ஆசியா ஒவ்வொன்றும் சமநிலை மற்றும் புதுப்பித்தலை உறுதி செய்வதற்காகச் சுழற்சி முறையில் செயல்படும் என்கின்றனர்.


முக்கியமாக, பிராந்திய அமைப்புகள் முழுமையாக பங்கேற்கும் நியூயார்க்கைப் போலவே அடிஸ் அபாபா (Addis Ababa), ஜகார்த்தா (Jakarta) மற்றும் பிரேசிலியாவிலும் (Brasília) அமைதி உருவாகிறது. நிரந்தர உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் கூடுதல் அதிகாரம் வழங்கப்படாது. வீட்டோக் அதிகாரங்களால் (vetoes) செயல்பாடுகளை முடக்கவும் முடியாது. ஐ.நா. உறுப்பினர் நாடுகள், பிராந்திய அமைப்புகள் அல்லது பொதுச்செயலாளர் மட்டுமே நிகழ்ச்சி நிரல்களை முன்மொழிய முடியும் என்று வரையறுக்கப்படுகிறது.  சிவில் சமூகம் ஆலோசனை வழங்க முடியும் ஆனால் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. 


நிலையான பாதுகாப்பு (sustainable security) என்ற கருத்து முக்கியமானது. பாதுகாப்பு ஏற்பாடுகளால் மட்டும் நீடித்த அமைதியைப் பராமரிக்க முடியாது என்பதை இந்த வாரியத்தின் நடவடிக்கைகள் அங்கீகரிக்கிறது. சீரான நிர்வாகம், உள்ளடக்கம் மற்றும் பொறுப்பான தலைமை மூலம் அரசியல் ஒப்பந்தங்கள் படிப்படியாக சட்டப்பூர்வமாக்கப்படும்போது அமைதிக்கான நிலைத்தன்மை உருவாக்கப்படும். நிலையான பாதுகாப்பு என்பது இறையாண்மையை மதிக்கிறது மற்றும் திணிக்கப்படுகிற தீர்வுகளைவிட காலப்போக்கில் செயல்படுத்தப்பட இருக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகளைப் பெறமுடியும் என்று நம்பப்படுகிறது. இது பாதுகாப்பை உண்மையான அரசியல் தேவைகளுடன் இணைக்கிறது. (நிலையான பாதுகாப்பு என்பது மோதல் சார்ந்த மேலாண்மையை நீண்டகால அரசியல் உறுதித்தன்னமையோடு ஒருங்கிணைக்கிறது. அமைதி முயற்சிகளை, நிர்வாகம், மேம்பாடு மற்றும் நாடுகளின்  ஒத்துழைப்புடன் சீரமைப்பதன் மூலம் இது "தடுப்பு பாதுகாப்பு"  உடன் தொடர்புடைய தேவையற்ற தலையீடுகளைத் தவிர்க்கிறது மற்றும் தேசிய அளவில் வழிநடத்தப்படும் அணுகுமுறைகளை மேலும் வலுப்படுத்துகிறது).


செயல்பாட்டு பாணி


பொதுவான அறிக்கைகளுக்கான மற்றொரு அமைப்பாக இல்லாமல் செயல்படும் அமைப்பாக இந்த வாரியம் இருக்கும். மற்ற அமைப்புகள் விலகிச் செல்லும் இடத்திலும் தொடர்ந்து செயல்படும் என்கிற உறுதியை அளிக்கிறது. காலப்போக்கில் உறுதிமொழிகளைக் கண்காணிக்கும் மற்றும் ஆணை புதுப்பிப்புகளுக்கு இடையில் அமைப்பின் வாக்குறுதிகளைத் தொடர்ந்து  பாதுகாக்கும் என்று அறியப்படுகிறது. நீண்டகாலமாகவே ஐ.நா.வின் செயல்பாடுகளில் வழக்கமாகிவிட்ட சறுக்கலை நிச்சயம் குறைக்குமென்றும்  அமைதிக்கான பலவீனமான சூழல் இருக்கும்போது சர்வதேச நாடுகளின் சமரசம் சார்ந்த முயற்சிகளுக்கு இந்த அமைப்பு வழிகாட்டும் என்றும் கூறப்படுகிறது


அதன் ஆணை தோற்றத்தில் மிதமானதாக இருக்கலாம் ஆனால் நடைமுறையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது ஐ.நா. அமைப்பின் மையத்தில் ஐ.நா.விற்குள் கட்டமைக்கப்பட்ட அரசியல் சார்ந்த ஆதரவைக் கொண்டுவரும் என்றும் நம்பப்படுகிறது. எல்லை மீறல்கள் இல்லாமல் தொடர்ச்சியையும், மோதல் போக்கற்ற ஒருங்கிணைப்பையும் உருவாக்கும் என்று கருதப்படுகிறது. இது நாடுகளுக்கு இறையாண்மை பாதுகாக்கப்படுகிறது என்று உறுதியளிக்கும் மற்றும் சமூகங்களுக்கு முதல் சிரமத்தில் அமைதி கைவிடப்படாது என்று உறுதியளிக்கும்.


ஐ.நா. அமைப்பின் சீர்திருத்தம் நீண்டகாலமாக முழுமையான சொற்களில் விவாதிக்கப்படுகிறது. அமைப்பை அப்படியே ஏற்றுக்கொள்வது அல்லது அதை முழுவதுமாக சீரமைக்க வலியுறுத்துவது என்பது  மிகவும் தவறான வழிமுறை. நிறுவனங்கள் மாறாமல் பொறுப்புடன் பரிணமிப்பதன் மூலம் மட்டுமே உயிர்வாழ்கின்றன. 'அமைதி மற்றும் நிலையான பாதுகாப்பு வாரியம்' (Board of Peace and Sustainable Security) பலதரப்பு அமைப்பைப் பாதிக்கும் அனைத்தையும் தீர்த்துவைக்க முயற்சி மேற்கொள்ளப்பவதில்லை. ஆனால், போரிலிருந்து அமைதிக்கான பயணத்தில் அரசியல் சார்ந்த தீர்வு காணப்படாமல் இருப்பது போன்ற  ஐ.நா.-வின்  மிகப்பெரிய பலவீனத்தை இந்த புதிய அமைப்பு நிவர்த்தி செய்யும் என்று தெரிய வருகிறது.


சீர்திருத்தம் எப்போதும் புதிய கோட்பாடுகளை மட்டுமே கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அமைதி நிலைத்திருக்க வேண்டும், அரசியல் உறுதிப்பாடுகள் உடன் இருக்க வேண்டும், ராஜதந்திரம் என்பதும்கூட  கண்ணியாமான நடவடிக்கையாக இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. அமைப்புகள் தக்க சமயங்களுக்காக இல்லாமல் தொடர்  செயல்முறைகளுக்காக கட்டமைக்கப்பட வேண்டும். ஐ.நா. அமைப்பு இப்போது இதை மீண்டும் புரிந்து கொண்டுள்ளது. ஐ.நா. அமைப்பு இது போன்ற புதுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அமைதி மற்றும் நிலைத்தமான பாதுகாப்பு வாரியம் (Board of Peace and Sustainable Security (BPSS)) உலகளாவிய அளவில் ஐ.நா.-வின் தாக்கத்தை அதிகரித்து மோதல்களை பொறுப்புடன் நிர்வகிக்கும் திறனை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகள் மூலம் மட்டும்தான்  உண்மையான சீர்திருத்தம் தொடங்க முடியும்.


நிருபமா ராவ் இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர்.



Original article:

Share:

சம்மதமே எல்லாம் : பாலியல் வன்முறை குற்றங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு குறித்து…

 பாலியல் வன்முறை குற்றங்கள் (sexual violence) முழுமையாகத் தடுக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும்.


சில நேரங்களில், மிகப் பெரிய வெற்றிகள் மிகக் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகே கிடைக்கின்றன. வன்முறை, காயம், பாலியல் வன்கொடுமை, அச்சம் அல்லது தொந்தரவு ஏற்படுத்துவது போன்றன குற்றச் செயல்கள் என்பதை “வலுக்கட்டாயப்படுத்தல் குற்றம்” (force is the crime) என்று நிறுவுவதற்கே பிரான்ஸ் நாட்டிற்குப் பல ஆண்டுகள் ஆனது. இதற்குப் பின்னால் ஒரு பெண்ணின் அசாத்திய துணிச்சலும், அவருக்குத் துணை நின்ற மற்ற பெண்களின் ஒற்றுமையும் இருந்தது. விருப்பமில்லாத எந்தவொரு பாலியல் செயலும் பாலியல் வன்முறையே என வரையறுக்கும் சட்டத்தை பிரான்ஸ் நாடானது சில நாட்களுக்கு முன்னர் நிறைவேற்றியுள்ளது. இது பிரான்ஸ் நாட்டுப் பெண்களுக்கு முக்கியமான வெற்றி என்பதையும் கடந்து பாலியல் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளில்  மிகப்பெரிய முன்னேற்றமாகும்.



பாலியல் வன்முறைக் குற்றங்களைத் தடுப்பதிலும் சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவும் சமூகத்தின் அவசர பிரச்சனைகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு, கிசெல் பெலிகாட் (Gisèle Pelicot) என்ற பெண்மணி  நீதிமன்றத்தில் கடுமையான போராட்டத்தை எதிர்கொண்டார். கணவரால் அந்தப் பெண்ணிற்குப் போதைப்பொருள் கொடுக்கப்பட்டு, பல ஆண்களின் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியதாகவும் குற்றம் சாட்டினார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்றம் 51 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்திய ஒரு வரலாற்றுத் தருணமாக அமைந்தது. பாலியல் வன்முறையில் இருந்து தப்பியவர்கள், குறிப்பாக சமூக மற்றும் பொருளாதாரரீதியாக பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த பெண்களுக்கு தேவையான நீதி கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது. பாலியல் வன்முறையில் பாதிக்கபட்டவர்களில் பலர் நீதிமன்றங்களில் நீதி கேட்கவும்கூட கடினமான பல சவால்களைக் கடந்து வருகின்றனர். இதுபோன்ற பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களே பெரும் களங்கத்தையும் பழியையும்  சுமக்கின்றனர்.

 

இந்தியாவில் பெண்களைக் குற்றம் சாட்டும் வகையில் வெளியிடப்பட்ட தலைவர்களின் பொது அறிக்கைகள் வலிமிகுந்த ஒன்றாக அமைகின்றன. ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டாலும் தண்டனை வழங்கப்படுவதற்கான  வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளன. மேலும் இது, பாரதிய நியாய சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita) பிரிவு 129 “குற்றவியல் பலாத்காரத்தை (criminal force)” அங்கீகரிக்கிறது என்றபோதிலும், தேசிய குற்றப் பதிவுத்துறை (National Crime Records Bureau (NCRB)) அளித்த தரவுகளின்படி, 2018 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை விகிதங்கள் 27%-28% என்கிற அளவில் இருந்தன. 


நீதித்துறை செயல்முறையின் முக்கிய அம்சமாக பாலியல் ரீதியிலான  சுயவிருப்பத்தை நிறுவுவது என்பது முதல்படியாக இருந்தாலும், அது போதுமான நடவடிக்கையாக இருக்காது. பாலியல் வன்முறையைத் தடுப்பது என்பது பாலினப் பிரிவின் சமூகப் பொறுப்புகளைக் குறித்த கருத்துக்களைத் தெளிவாக வடிவமைப்பது, கடுமையான சட்டத்தால் ஆணாதிக்கத்தை அகற்றுவது, விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் காவல்துறையை இந்தக் கொள்கைகளுக்கு ஏற்ப வழிநடத்துவது போன்ற நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை சீராக்க உதவுவதற்கும் பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டு அவர்களின் நலன்சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றையும் முக்கியமாகக் கொண்டுள்ளது. 


முன்னோக்கிச் செல்லும் பாதை மிகக் கடினமானது.  எனவே, அரசாங்கங்களின் பாலியல் வன்முறைக் குற்றங்களுக்கு எதிரான சகிப்புத்தன்மையற்றத் திறனுடனும், பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கும் உறுதிப்பாட்டுடனும் அவர்களின் வாழ்க்கைப் பயணம் எளிதாக்கப்பட வேண்டும். அதைவிடக் குறைவாக எதையும் செய்வது அநியாயமாக இருக்கும் மற்றும் பெலிகாட் தொடங்கிய வலிமையான பெண்கள் இயக்கத்தை நிறுத்திவிடும்.



Original article:

Share:

நமக்கு சிறிய, பரவலாக்கப்பட்ட நகரங்கள் தேவை. -சுபோத் மாத்தூர்

 விரைவான பொருளாதார வளர்ச்சி நகரங்களில் பல சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளது. சிறிய நகரங்களை விரிவுபடுத்துவதே முன்னேற்றத்திற்கான வழியாகும்.


1980-களில் இந்தியாவின் பொருளாதாரம் எழுச்சி பெறத் தொடங்கியபோது, ​​பொருளாதார ​​வளர்ச்சியின் நன்மைகளில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது. இந்த கவனம் இன்று வரை தொடர்கிறது. வளர்ந்து வரும் செழிப்பு சுற்றுச்சூழலுக்கும் பொது சுகாதாரத்திற்கும் எவ்வாறு தீங்கு விளைவிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டவர்கள் மிகச் சிலரே. இந்த விளைவுகளை சமநிலைப்படுத்தும் கொள்கைகளை உருவாக்கவோ அல்லது செயல்படுத்தவோ மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டும் தவறிவிட்டன. இப்போதுகூட, இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க உண்மையான அவசர உணர்வு இல்லை.


இதன் விளைவாக, இந்தியாவின் வளர்ந்துவரும் செழிப்பு எதிர்பார்த்ததை விட அதிக தீங்கு விளைவிப்பதாக மாறியுள்ளது. இது இழப்பின் அடையாளமாக மாறியுள்ளது, இது புது தில்லியின் மாசுபட்ட காற்றில் தெளிவாகக் காணப்படுகிறது, இது மக்களின் ஆயுட்காலத்தை பல ஆண்டுகளாகக் குறைத்துள்ளது.


இந்த விளைவை நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும். தொழில்துறை பொருட்கள் மற்றும் நவீன சேவைகளின் உற்பத்தி பெரும்பாலும் காற்று மற்றும் நீரின் தரத்தை மோசமாக்கும் உமிழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. உதாரணமாக, 1858-ம் ஆண்டில், தேம்ஸ் நதி "பெரிய துர்நாற்றத்தால்" பாதிக்கப்பட்டது. 1943-ம் ஆண்டில், லாஸ் ஏஞ்சல்ஸ் அதன் முதல் பெரிய புகைமூட்டம் போன்ற தாக்குதலை சந்தித்தது. இந்தியாவின் சொந்த அனுபவம் எச்சரிக்கையான அறிகுறிகளை வெளிப்படுத்தியது. 1970-களின் பிற்பகுதியில், அதிக மகசூல் தரும் வகை (HYV) பயிர்கள் நமது மண்ணை மாசுபடுத்தி, பல இடங்களில் நிலத்தடி நீரைக் குறைத்தன. 1980-களில், கங்கை மிகவும் மாசுபட்டதால், மத்திய அரசு "தூய கங்கை" திட்டத்தைத் தொடங்கியது.


1985-ம் ஆண்டு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் தங்கள் முதல் பொதுநல மனுவை (Public Interest Litigation (PIL)) தாக்கல் செய்தனர். எந்த அரசாங்கமும் எந்த எதிர் நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக இல்லை என்பதால் அவர்கள் நீதிமன்றத்தை நாடினர். பின்னர், அரசாங்கங்கள் இதுபோன்ற நெருக்கடிகளுக்கு எதிர்வினையாற்றின. ஆனால், எந்த அர்த்தமுள்ள தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இப்போது, ​​நமது பல நீர்நிலைகள், காற்றோட்டப்பகுதி மற்றும் மண் பல வழிகளில் மாசுபட்டுள்ளன. மக்கள்தொகை அதிகரித்துள்ளதால், நகரங்களில் குப்பைகள் பரவலாக்கப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு நபரும் முன்பைவிட அதிகக் கழிவுகளை உருவாக்குகிறார்கள்.


சுகாதார தாக்கம்


இந்த முன்னேற்றங்கள் மக்களின் ஆரோக்கியத்தை மறைமுகமாகப் பாதித்துள்ளன. இருப்பினும், அதிகரித்துவரும் செழிப்பு மக்களின் ஆரோக்கியத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் ஒன்று அதிகரித்துவரும் உடல் பருமன் ஆகும். போதுமான உடல் செயல்பாடுகளை ஈடுசெய்யாமல் மக்கள் உணவு மற்றும் பானங்களை உட்கொள்வதை அதிகரித்துள்ளனர். இந்த ஆடம்பரமான வாழ்க்கை முறைகள் நீரிழிவு நோயின் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுத்தன. இது கிராமப்புறங்களிலும்கூட ஊடுருவியுள்ளது. 1980-களில், கிராமப்புற மக்களில் சுமார் 1 சதவீதம் பேருக்கு மட்டுமே நீரிழிவு நோய் இருந்தது. இது, இப்போது அது 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.


இரண்டாவதாக, மலிவான டிஜிட்டல் தரவுகளுடன் திறன்பேசிகளின் அதிகரித்துவரும் ஊடுருவல், இந்தியர்களின் சமூக வாழ்க்கையை கணிசமாக மாற்றியுள்ளது. இந்தியர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள், தங்கள் திறன்பேசிகளில் எண்ணற்ற மணிநேரங்களை செலவிடுகிறார்கள். இதில் சிலநேரங்களில் தொலைபேசிகளால் நன்மைகள் இருந்தாலும், அவை பலரை தனிமையாக உணர வைத்துள்ளன.


அதிகரித்து வரும் உடல் பருமன் அல்லது தனிமையை எதிர்கொள்வதில் இந்தியா மட்டும் தனியாக இல்லை. ஆனால், அவற்றை எதிர்கொள்ள நாம் எந்த தீவிரமான, பயனுள்ள நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.


சந்தை சக்திகள் நிலைமையை மோசமாக்கியுள்ளன. அவை இந்தியாவை ஒரு பெரிய நகர வளர்ச்சி மாதிரியாக மாற்றியுள்ளன. இப்போது, ​​10 பெரிய நகரங்கள் சேர்ந்து நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளன. இந்தப் பங்கு முழு கிராமப்புற மக்களைவிட அதிகமாக உள்ளது. இந்தியாவின் வளர்ந்துவரும் பெரிய நகரங்களான பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகியவற்றின் மக்கள தொகை இந்தியாவின் மொத்த நகர்ப்புற மக்கள்தொகை வளர்ச்சியைவிட வேகமாக அதிகரித்துள்ளது. டெல்லி NCR, மும்பை மற்றும் சென்னை ஆகியவை ஏற்கனவே பெரியதாகவும் நெரிசலாகவும் இருந்தபோதிலும், அதிக மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்களைக் கொண்டுள்ளன.


இந்த விரைவான வளர்ச்சி நகரங்களில் கடுமையான பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. நகராட்சி சேவைகள் குறிப்பாக நீர் வழங்கல், மழைநீர் வடிகால், போக்குவரத்து மேலாண்மை மற்றும் குப்பை சேகரிப்பு போன்ற காரணங்களால் தவிர்க்க முடியாமல் பின்தங்கியுள்ளன. அரசாங்கங்கள் மெட்ரோ அமைப்புகள் மற்றும் பொலிவுறு நகரங்கள் திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்கின்றன, ஆனால் அடிப்படை சேவைகள் இன்னும் பின்தங்கியுள்ளன. இதன் விளைவாக, மக்கள் ஆரோக்கியமற்ற காற்று, மாசுபட்ட மற்றும் சுருங்கி வரும் நீர்நிலைகள், நீண்ட பயணங்கள் மற்றும் நிலையான விரக்தியை எதிர்கொள்கின்றனர்.


இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மாதிரியானது, நிர்வகிக்க முடியாத, ஆரோக்கியமற்ற நகர்ப்புற தீவிர செறிவிற்கு வழிவகுத்துள்ளது. இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கப் பாடுபடுகிறது. இது நன்மை பயக்கும். ஆனால் வளர்ச்சி மாதிரியில் சில மாற்றங்கள் இல்லாவிட்டால், இது இன்னும் அதிக பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.


இந்தியா நகரமயமாக்கலை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கும். பெரும்பாலான மக்கள் கிராமங்களில் வாழ்ந்த நாட்கள் போய்விட்டன. பெரிய நகரங்கள் ஆதரவான சூழல்களையும் சிறந்த வாய்ப்புகளையும் வழங்குவதால் திறமையான நிபுணர்களை ஈர்க்கும். அதே நேரத்தில், வீடு சுத்தம் செய்தல், கட்டிட பாதுகாப்பு மற்றும் விநியோகங்கள் போன்ற சேவைகளை வழங்கும் பல குறைந்த திறன்கொண்ட தொழிலாளர்களையும் ஈர்க்கும். நகர வாழ்க்கை பல தினசரி சவால்களைக் கொண்டிருந்தாலும், இந்தத் தொழிலாளர்கள் நகரங்களுக்கு தொடர்ந்து வருவார்கள்.


சிறு நகர வளர்ச்சி


ஒரு வழி, பரவலாக்கப்பட்ட நகர்ப்புற செறிவு மாதிரிக்கு மாறத் தொடங்குவது ஆகும். இந்தியாவின் சிறிய நகரங்களில் அதிக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு இது சாத்தியமாகும். இந்த சிறிய நகர வளர்ச்சி, பெரிய நகரங்களிலிருந்து நிறுவனங்களை இடமாற்றம் செய்ய முயற்சிப்பதன் அடிப்படையில் சார்ந்து இருக்கக்கூடாது, ஏனெனில் அந்த அணுகுமுறை வெற்றிபெறாது. அதற்குப் பதிலாக, இந்த வளர்ச்சி, புதிதாக உருவாகும் உள்ளூர் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதன் அடிப்படையிலும், சில முக்கிய தடைகளைத் தணிப்பதன் அடிப்படையிலும், தற்போதுள்ள மனித, டிஜிட்டல் மற்றும் நிலையான உள்கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்வதன் அடிப்படையிலும் இருக்க வேண்டும். இது கிராமப்புறங்களை விட மிகவும் சிறந்தது.


இந்தியா நடுத்தர, சிறு மற்றும் நுண் தொழில்களை ஒன்றிணைக்க குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் (MSME) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. இது ஒரு தவறான ஒருங்கிணைப்பு ஆகும். நடுத்தர நிறுவனங்கள் அனைத்து குறு சிறு நடுத்தர நிறுவனங்களிலும் (MSME) 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. ஆனால், மொத்த குறு சிறு நடுத்தர நிறுவனங்களில் (MSME) 95 சதவீதத்திற்கும் அதிகமான குறு நிறுவனங்களைப் போலவே மொத்த உற்பத்தியையும் உருவாக்குகின்றன.


சிறிய நகரங்கள் பொதுவாக சில சிறு மற்றும் பெரும்பாலும் குறு நிறுவனங்களைக் கொண்டுள்ளன. மேலும், எதிர்கால வளர்ச்சி அதிக உந்துதல் கொண்ட சிறு மற்றும் குறு நிறுவனங்களைப் பொறுத்து அமைய வேண்டும். அவர்களுக்கு ஓரளவு தனிப்பயனாக்கப்பட்ட ஆதரவு தேவைப்படும். இதை அரசாங்கத் திட்டங்கள் பெரும்பாலும் வழங்கத் தவறிவிடுகின்றன. எனவே, இந்த நிறுவனங்களின் திறனைத் திறக்க அரசு மற்றும் இலாப நோக்கற்ற ஆதரவின் சில சாத்தியமான கலவை தேவைப்படுகிறது.


இது பரவலான நகரமயமாக்கலுக்கு வழிவகுக்கும். பெரிய நகரங்கள் தொடர்ந்து வளர்ச்சியடையும் அதே வேளையில், சிறிய நகரங்களும் குறைந்த தளத்திலிருந்து தொடங்கி வேகமாக விரிவடையும். பொருளாதார மாதிரியில் ஏற்படும் இந்த மாற்றம் தற்போதைய மாதிரியின் சில சிக்கல்களைத் தணிக்கும். தனிமை மற்றும் உடல் பருமன் போன்ற பொது சுகாதாரப் பிரச்சினைகளைச் சமாளிக்க கூடுதல் கொள்கைகளும் தேவைப்படும். மேலும், சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மேலும் கொள்கைகள் தேவைப்படும்.


இந்த அணுகுமுறையின் மூலம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெரிய தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் தொடர முடியும்.


எழுத்தாளர், பரந்த அளவிலான நடைமுறை பொது கொள்கை அனுபவத்துடன் கூடிய ஒரு பொருளாதார நிபுணர் ஆவார்.



Original article:

Share:

எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியின் அதிகரிப்பு மற்றும் போதுமான காலநிலை நிதியின்மை : உலகளாவிய வடக்கு நாடுகள் எவ்வாறு காலநிலை இலக்குகளை தடம் புரளச் செய்கிறது? -அலிந்த் சௌஹான்

 ஆயில் சேஞ்ச் இன்டர்நேஷனல் என்ற கொள்கை அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய பகுப்பாய்வு, ஆஸ்திரேலியா, கனடா, நார்வே மற்றும் அமெரிக்கா ஆகியவை 2015 மற்றும் 2024-க்கு இடையில் ஒரு நாளைக்கு 14 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் சமமான (barrels of oil equivalent per day(BOE/d)) தங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை கூட்டாக அதிகரித்துள்ளதாகக் காட்டுகிறது.


கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டிற்கு முன்பு பாரிஸ் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டபோது, ​​இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை தொழில்துறைக்கு முந்தைய நிலைகளைவிட 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்த நாடுகள் உறுதியளித்திருந்தன. இருப்பினும், புவி வெப்பமடைதலுக்கு முதன்மையான காரணியான வளிமண்டல கார்பன்-டை-ஆக்சைடு (CO2) வளர்ச்சி விகிதம், 1990-களில் ஆண்டுக்கு 1.5 ppm ஆக இருந்த நிலையில், 2015 மற்றும் 2024-க்கு இடையில் ஆண்டுக்கு 2.6 ppm அதிகரித்துள்ளது.


இந்த உமிழ்வு அதிகரிப்பிற்கு முக்கியக் காரணம், உலகளாவிய வடக்கில் உள்ள நாடுகள் புதைபடிவ எரிபொருட்களை இடைவிடாமல் பிரித்தெடுத்து பயன்படுத்துவதே ஆகும். 2015-ம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா, கனடா, நார்வே மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் கூட்டாக தங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை கிட்டத்தட்ட 40% அதிகரித்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது.


அதே நேரத்தில், உலகளாவிய வடக்கில் 2015 முதல் உலகின் பிற பகுதிகளுக்கு காலநிலை நிதியாக வெறும் 280 பில்லியன் டாலர்களை மட்டுமே செலுத்தியுள்ளது. இந்தத் தொகை தேவையானதைவிட மிகக் குறைவு. இது, ஆண்டுதோறும் $1 டிரில்லியன் முதல் $5 டிரில்லியன் வரை, ‘பூமி அழிப்பவர்கள்: பாரிஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு தீயை மூட்டி வரும் உலகளாவிய வடக்கு நாடுகள் (Planet Wreckers: Global North Countries Fueling the Fire Since the Paris Agreement) என்ற அறிக்கை கூறியது.


'பூமியை அழிப்பவர்கள்’ யார்?


ஆயில் சேஞ்ச் இன்டர்நேஷனல் என்ற கொள்கை அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய பகுப்பாய்வு, ஆஸ்திரேலியா, கனடா, நார்வே மற்றும் அமெரிக்கா ஆகியவை 2015 மற்றும் 2024-க்கு இடையில் தங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை ஒரு நாளைக்கு 14 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய்க்கு சமமான (BOE/d) அதிகரித்துள்ளதாகக் காட்டுகிறது. அதே காலகட்டத்தில், உலகின் பிற உற்பத்தியில் பிரித்தெடுத்தல் ஒட்டுமொத்தமாக 2% குறைந்துள்ளது.


2024-ம் ஆண்டு வரை நிகர உலகளாவிய சுரங்க அதிகரிப்பில் அமெரிக்கா மட்டும் 90%-க்கும் அதிகமாக உள்ளது. இது அதன் உற்பத்தியை கிட்டத்தட்ட 11 மில்லியன் (BOE/d) அதிகரித்துள்ளது. இது வேறு எந்த நாட்டையும்விட ஐந்து மடங்கு அதிகமாகும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.


இதற்கிடையில், பாரிஸ் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து உற்பத்தி அதிகரிப்பு விகிதத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலியா அனைத்து முதல் 15 உற்பத்தியாளர்களிலும் முன்னணியில் உள்ளது. 2015 முதல் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி 77% அதிகரித்துள்ளது.


மூலம்: ‘‘பூமி அழிப்பவர்கள்: பாரிஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு தீயை மூட்டி வரும் உலகளாவிய வடக்கு நாடுகள்” அறிக்கை


துபாயில் நடந்த COP28 மாநாட்டில், உலக வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பிற்குள் வைத்திருக்க, 2030-ம் ஆண்டின் இறுதிக்குள் புதைபடிவ எரிபொருள் காலகட்டத்திலிருந்து விலகிச் செல்ல நாடுகள் ஒப்புக்கொண்டபோதிலும் இது நடந்துள்ளது.


சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வெனிசுலா போன்ற பெட்ரோஸ்டேட்கள் (petrostates) தங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியைக் குறைக்காததற்காக பலமுறை விமர்சித்து வரும் உலகளாவிய வடக்கின் "இரட்டைத் தரங்களையும்" (double standards) இந்த அறிக்கை எடுத்துக்காட்டியது. சமீபத்திய ஆண்டுகளில் இந்த பெட்ரோஸ்டேட்கள் தங்கள் உற்பத்தி அளவை சீராக வைத்திருந்தன அல்லது குறைத்துள்ளன என்று பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.


பெட்ரோஸ்டேட்கள் (petrostates) : பெட்ரோலியம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைப் பிரதான பொருளாதார அடிப்படையாகக் கொண்ட நாடுகள்.



ஆயில் சேஞ்ச் இன்டர்நேஷனலின் உலகளாவிய கொள்கைத் தலைவரான ரோமெய்ன் ஐயோலாலன், அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய வடக்கின் சில பணக்கார நாடுகள் தங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இதற்கிடையில், உலகம் முழுவதும் உள்ள மக்கள் இதன் விளைவுகளை அனுபவித்து வருகின்றனர். 


இது நீதி மற்றும் நியாயத்தின் தெளிவான கேலிக்கூத்து என்று அவர் கூறினார். புதைபடிவ எரிபொருட்களை படிப்படியாக அகற்றுவதில் முன்னிலை வகிக்க இந்த நாடுகள் தார்மீக மற்றும் சட்டப்பூர்வ கடமையைக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார். அவர்கள் உலகளாவிய தெற்கிற்கு நியாயமான அடிப்படையில் டிரில்லியன் கணக்கான டாலர்களை காலநிலை நிதியில் வழங்க வேண்டும். குறைவானது, அறிவியல் சான்றுகளுக்கு எதிரானது மற்றும் பொறுப்பின் முழுமையான தோல்வியைக் காட்டும் என்று அவர் கூறினார்.


காலநிலை நிதிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள்


பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ், உலகளாவிய வடக்கு, காலநிலை நிதியில் அதன் நியாயமான பங்கை உலகளாவிய தெற்குப் பிராந்தியத்திற்கு செலுத்தவேண்டிய சட்டப்பூர்வ கடமையைக் கொண்டுள்ளது. இந்தத் தொகை, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் சமூகங்களை ஆதரிக்கும் திட்டங்கள் உட்பட, புதைபடிவ எரிபொருட்களிலிருந்து நியாயமான மற்றும் சமமான மாற்றத்திற்கு உதவும் என்று கருதப்படுகிறது.


இருப்பினும், பாரிஸ் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், உலகளாவிய வடக்கு தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டது. அதற்கு பதிலாக, அது "பொது நிதிநிலை அறிக்கைகளை மேலும் சுருக்கி, புதைபடிவ எரிபொருள் நிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்களின் கைகளில் செல்வத்தைக் குவிக்கும் கொள்கை செயல்திட்டங்களைப் பின்பற்றியுள்ளது" என்று அறிக்கை கூறியுள்ளது.


உதாரணமாக, உலகாவிய வடக்கு நாடுகள் 2015 முதல் புதைபடிவ எரிபொருள் உற்பத்தி மற்றும் குழாய் இணைப்புகள் போன்ற விநியோக உள்கட்டமைப்புக்காக 465 பில்லியன் டாலர்களை ஒட்டுமொத்த மானியங்களாக வழங்கியுள்ளன. இந்தத் தொகையை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் காலநிலை நடவடிக்கைக்காக செலுத்தியிருக்கலாம்.


உலகளாவிய வடக்கை முக்கியத் தளமாகக் கொண்ட எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் லாபம், 2015 முதல் உலகின் பிற பகுதிகளுக்கு உலகளாவிய வடக்கு செலுத்திய காலநிலை நிதியின் அளவைவிட 5 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது.


மூலம்: ப்ளூம்பெர்க் டெர்மினல் தரவு (லாபங்கள்) மற்றும் ஆக்ஸ்பாம் பகுப்பாய்வு (காலநிலை நிதி) ஆகியவற்றின் OCI பகுப்பாய்வு.


அறிக்கையின்படி, ஆறு பெரிய எண்ணெய் நிறுவனங்களான எக்ஸான்மொபில் (ExxonMobil), செவ்ரான் (Chevron), ஷெல் (Shell), மொத்த ஆற்றல்கள் (TotalEnergies), பிபி (BP) மற்றும் எனி (Eni) இணைந்து $580 பில்லியனுக்கும் அதிகமான லாபத்தை ஈட்டின. இது உலகளாவிய வடக்கு நாடுகள் காலநிலை நிதியில் செலுத்திய மொத்தத் தொகையைவிட இரண்டு மடங்கு அதிகம்.


விளைவுகள்


உலகளாவிய வடக்கில் உள்ள நாடுகள், குறிப்பாக ஆஸ்திரேலியா, கனடா, நார்வே மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் செயல்களால், உலகின் மீதமுள்ள கார்பன் பட்ஜெட் வெகுவாகக் குறைத்துள்ளன. தற்போதைய உமிழ்வு விகிதத்தில் 1.5 டிகிரி செல்சியஸ் இலக்கை அடைவதற்கான பட்ஜெட்டிற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ளன என்று அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.


காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC)) இந்த வரம்பைத் தாண்டுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறது. பல பிராந்தியங்களில், கனமழை அடிக்கடி, தீவிரமாக அல்லது பெரிய அளவில் அதிகரிக்கும். வேறு சில பிராந்தியங்களில், வறட்சி அடிக்கடி ஏற்படும் அல்லது மிகவும் கடுமையானதாக மாறும்.


உலகளாவிய வெப்பநிலை அதிகரிக்கும் போது, ​​கடல்கள் வெப்பமடையும். இது கடற்கரைகளை நோக்கி நகரும்போது விரைவாக வலுப்பெறக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த புயல்களுக்கு வழிவகுக்கும். காட்டுத்தீ மிகவும் தீவிரமாக வளர்ந்து நீண்டகாலம் நீடிக்கும். கடல் பனி வேகமாக உருகும், இது கடல் மட்ட உயர்வுக்கு வழிவகுக்கும்.


இவற்றில் பெரும்பாலான விளைவுகள் சமீபத்திய ஆண்டுகளில் ஏற்கனவே வெளிப்படத் தொடங்கியுள்ளன. வரம்பு மீறப்பட்டால், அவை இன்னும் மோசமாகப் போகும்.


காலநிலை நிதியில் உலகளாவிய வடக்கு நாடுகள் செலுத்தும் குறைந்த தொகை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பை மீறும் அபாயத்தையும் கொண்டுள்ளது. குறைந்த கார்பன் பொருளாதாரத்திற்கு மாறுவதற்கு உலகளாவிய தெற்கு நாடுகளை நியாயமாகவும் சீரான முறையில் ஆதரிக்கும் என்பதால் இந்தப் பணம் மிக முக்கியமானது. மேலும், போதுமான நிதி இல்லாமல், காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய உலகளாவிய தெற்கு, தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதத்தின் செலவுகளை ஈடுகட்ட முடியாது.



Original article:

Share:

எல்லை கட்டுப்பாட்டுக் கோடு என்பது என்ன? -ரோஷ்னி யாதவ், குஷ்பு குமாரி

 முக்கிய  அம்சங்கள்:


– வெளியுறவு அமைச்சகம் (MEA) கூற்றுப்படி, அக்டோபர் 25 அன்று சுஷுல்-மோல்டோ எல்லை சந்திப்புப் புள்ளியில் 23-வது சுற்று படைப்பிரிவு தளபதிகள் மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன.


– ஆகஸ்ட் 19 அன்று சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த சந்திப்பு முதல் உயர்மட்ட விவாதமாகும். 22வது சுற்று இராணுவப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு அக்டோபரில் இரு தரப்பினரும் இந்தப் புள்ளிகளிலிருந்து விலகி ஒரு வருடம் கழித்து இது நடந்தது.


– கடந்த அக்டோபரில் ஒப்பந்தம் எட்டப்பட்டபிறகு, இரு நாடுகளும் தங்கள் படைகளுக்கு இடையே மோதல்களைத் தடுக்க ஒருங்கிணைந்த சுற்றுக்கு காவல் (ரோந்து) பணிகளை மேற்கொண்டு வருகின்றன.


– 2020ஆம் ஆண்டில் கிழக்கு லடாக்கில் இராணுவ மோதலின் போது தொடங்கிய அதிகரித்த பாதுகாப்பு படைகளின் வருகைக்குப் பிறகு இரு தரப்பினரும் அங்கு அமைதியைப் பேண முயற்சிக்கும்போது சமீபத்திய சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.


— படை விலகல் செயல்முறைக்குப் பிறகும், முழுமையான பதற்றம் தணிப்பு இன்னும் நடக்கவில்லை. சீனா சில பாதுகாப்பு படைகளை திரும்பப் பெற்றிருந்தாலும், பிராந்தியத்தில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் இருபுறமும் சுமார் 50,000 முதல் 60,000 வீரர்கள் இன்னும் உள்ளனர்.


— மீதமுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முதலில் எந்த எல்லைப் பகுதிகளை கவனிக்க வேண்டும் என்பதை அடையாளம் காண இராஜதந்திர மற்றும் இராணுவ பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.


— நான்கு ஆண்டுகளுக்கும் மேலான இராணுவ மோதலுக்குப் பிறகு, 2024 அக்டோபரில் இந்தியாவும் சீனாவும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில்  உள்ள இரண்டு முக்கிய பிரச்சனை புள்ளிகளான டெப்சாங் சமவெளி மற்றும் டெம்சோக்கில் ரோந்து ஏற்பாடுகளை ஒப்புக்கொண்டபோது முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் அக்டோபர் 23, 2024 அன்று ரஷ்யாவின் கசானில் நடந்த BRICS உச்சி மாநாட்டில் மோடிக்கும் ஷிக்கும் இடையிலான சந்திப்பிற்கு வழி வகுத்தது. அங்கு இரு தரப்பினரும் இந்த புள்ளிகளில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெற ஒப்புக்கொண்டனர்.


— உறவுகளை உறுதிப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இரு நாடுகளும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மற்றும் நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளன.


— களத்தில் ஆயிரக்கணக்கான வீரர்கள் இன்னும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் விழிப்புடன் உள்ளனர். ஆனால், இரு நாடுகளும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேலை செய்கின்றன.


— இந்தியாவைப் பொறுத்தவரை, இது கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட அதன் தொழில்நுட்பக் கண்காணிப்பு அமைப்புகளை சார்ந்திருப்பதை அதிகரிப்பதையும் குறிக்கிறது. நீண்டகாலத்திற்கு கூடுதல் சுற்றுக்காவல் தேவையைக் குறைக்க இந்த அமைப்புகள் மேலும் மேம்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்படுகின்றன.


உங்களுக்குத் தெரியுமா ?:


— இந்தியா மற்றும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைப் பிரிக்கும் எல்லையே எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control (LAC)) ஆகும். LAC சுமார் 3,488 கி.மீ நீளம் கொண்டது என்று இந்தியா கூறுகிறது. ஆனால் சீனா இது சுமார் 2,000 கி.மீ நீளம் மட்டுமே என்று கூறுகிறது. அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிமை உள்ளடக்கிய கிழக்குப் பகுதி, உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் நடுத்தரப் பகுதி மற்றும் லடாக்கில் மேற்குப் பகுதி போன்ற  மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.



Original article:

Share:

இந்திய கடல்சார் வாரம் (2025) -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி?


பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 29 அன்று மும்பைக்கு வருகை தந்து, நெஸ்கோ கண்காட்சி மையத்தில் நடைபெற்ற இந்திய கடல்சார் வாரம் (MW) 2025 நிகழ்வின்போது, ​​கடல்சார் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும், உலகளாவிய கடல்சார் தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தை வழிநடத்தவும் வருகை தந்தார். தனது உரையின்போது, ​​உலகிற்கு ஒரு நிலையான கலங்கரை விளக்கமாக செயல்பட இந்தியா தயாராக உள்ளது என்றும், உலகளாவிய நிறுவனங்கள் நாட்டின் கடல்சார் துறையில் விரிவடைந்து முதலீடு செய்ய பல வாய்ப்புகளை வழங்குகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.


முக்கிய  அம்சங்கள்:


1. இந்திய கடல்சார் வாரம் 2025 அக்டோபர் 27 முதல் 31 வரை மும்பையில் உள்ள NESCO மைதானத்தில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தால் (MoPSW) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடல்சார் துறையில் புதுமை, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி குறித்து விவாதிக்க உலகளாவிய பங்கேற்பாளர்கள் ஒரு தளத்தை உருவாக்குவதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும்.


2. இந்திய கடல்சார் வாரம் (2025) கருப்பொருள் "பெருங்கடல்களை ஒன்றிணைத்தல், ஒரு கடல்சார் பார்வை" (“Uniting Oceans, One Maritime Vision.”) என்பதாகும். இது இந்தியாவின் பாரம்பரிய யோசனையான "ஒரு உலகம் ஒரு குடும்பம்" (vasudhaiva Kutumbakam”) என்பதை பிரதிபலிக்கிறது. 11,000 கிலோமீட்டர் கடற்கரை மற்றும் 13 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன், இந்தியாவின் இருப்பிடம் அதற்கு ஒரு வலுவான இராஜதந்திர நன்மையை அளிக்கிறது. மேலும், கடல்சார் துறையில் வாய்ப்புகளை ஆராய உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.


3. உள்நாட்டு திறனை அதிகரிக்கவும் புதிய (பசுமை) மற்றும் ஏற்கனவே உள்ள (பழுப்பு) கப்பல் கட்டும் தளங்களை உருவாக்கவும் கடல்சார் துறையில் ரூ.70,000 கோடியை முதலீடு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், அதிக முதலீடுகளை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரதமர் கூறினார்.


4. இந்திய கடல்சார் துறையின் சாதனைகளை எடுத்துரைத்த மோடி, இந்தியாவின் முதல் ஆழ்கடல் சர்வதேச கப்பல் போக்குவரத்து மையமான விழிஞம் துறைமுகம் இந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வந்ததாகக் கூறினார். இந்தியாவின் உலகளாவிய திறன்களை வெளிப்படுத்தும் வகையில், இந்த துறைமுகம் உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான MSC IRINA-வை நடத்தியது. நாட்டின் முதல் மெகாவாட் அளவிலான உள்நாட்டு பசுமை ஹைட்ரஜன் வசதியை அறிமுகப்படுத்தியதன் மூலம் கண்ட்லா துறைமுகமும் வரலாறு படைத்தது.


கேரளாவில் உள்ள விழிஞ்சம் சர்வதேச கடல் துறைமுகம்


கேரளாவை உலக கடல்சார் வரைபடத்தில் இடம்பெறச் செய்வதற்கான ஒரு முக்கியப் படியாக, மே 2, 2025 அன்று, பிரதமர் மோடி கேரளாவில் உள்ள விழிஞம் சர்வதேச கடல் துறைமுகத்தைத் திறந்து வைத்தார்.


தற்போது, ​​இந்தியாவில் 13 பெரிய துறைமுகங்களும், 217 பெரிய அல்லாத துறைமுகங்களும் உள்ளன. அவற்றில் அதானியின் முந்த்ரா துறைமுகம் மற்றும் கிருஷ்ணபட்டணம் துறைமுகம் போன்ற தனியார் துறைமுகங்களும் அடங்கும். நவி மும்பையின் ஜவஹர்லால் நேரு துறைமுகம் மற்றும் முந்த்ரா துறைமுகம் ஆகியவை நாட்டின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகங்களாகும். ஒவ்வொன்றும் ஆண்டுக்கு 7 மில்லியன் கொள்கலன்களுக்கு மேல் கையாளுகின்றன.


5. பசுமை கடல்சார் தின அமர்வில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்த சோனோவால், இந்தியாவின் கடல்சார் துறை அதன் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அமைகிறது என்றும், நாட்டின் 95%க்கும் அதிகமான வர்த்தகம் கடல் வழியாகவே நடைபெறுகிறது என்றும் குறிப்பிட்டார்.


6. 2070ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உறுதிப்பாட்டின்கீழ், இந்தியா 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டன் சரக்குக்கு கார்பன் வெளியேற்றத்தை 30% ஆகவும், 2047ஆம் ஆண்டுக்குள் 70% ஆகவும் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்தத் துறையை காலநிலை நடவடிக்கையின் முக்கிய இயக்கியாக மாற்றுகிறது.


6. மும்பையில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின் இரண்டாவது நாளில், குஜராத்தின் லோதலில் முன்மொழியப்பட்ட தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் (National Maritime Heritage Complex (NMHC)) இலச்சினை (logo) சோனோவால் வெளியிட்டார்.

கடல்சார் துறையில் அரசாங்க முயற்சிகள்


85க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் பங்கேற்ற இந்திய கடல்சார் வாரம் 2025-ல் உரையாற்றிய மோடி, கடல்சார் துறையை மேம்படுத்துவதற்காக கடந்த 10 ஆண்டுகளில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்துப் பேசினார். இந்தத் துறையில் அரசாங்கத்தின் முக்கிய முயற்சிகள் பின்வருமாறு


(i) கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030: 


2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கடல்சார் இந்தியா தொலைநோக்கு (MIV) 2030, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகளை உள்ளடக்கிய இந்தியாவின் கடல்சார் துறையின் முழுமையான வளர்ச்சிக்கான ஒரு விரிவான கட்டமைப்பை வழங்குகிறது. இது இந்தியாவை உலகளாவிய கடல்சார் தலைமைத்துவத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட 150-க்கும் மேற்பட்ட முயற்சிகளை கோடிட்டுக் காட்டுகிறது.


(ii) கடல்சார் அம்ரித் கால் தொலைநோக்கு 2047: 


கிட்டத்தட்ட ₹80 லட்சம் கோடி முதலீட்டு செலவில், கடல்சார் அம்ரித் கால் தொலைநோக்கு 2047, துறைமுகங்கள், கடலோர கப்பல் போக்குவரத்து, உள்நாட்டு நீர்வழிகள், கப்பல் கட்டுதல் மற்றும் பசுமை கப்பல் போக்குவரத்து முயற்சிகளுக்கான இந்தியாவின் கடல்சார் மறுமலர்ச்சிக்கான நீண்டகால திட்டத்தை வழங்குகிறது. பசுமை கப்பல் போக்குவரத்து முயற்சிகளின் ஒரு பகுதியாக, அரசாங்கம் பசுமை வழித்தடங்களை அமைத்து, முக்கிய துறைமுகங்களில் பசுமை ஹைட்ரஜன் பங்கரிங்கை அறிமுகப்படுத்தி, மெத்தனால் எரிபொருளால் இயங்கும் கப்பல்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது.


(iii) சாகர்மாலா திட்டம்: 


2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சாகர்மாலா திட்டம், கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030 மற்றும் கடல்சார் அமிர்த கால் தொலைநோக்கு 2047 ஆகியவற்றின் முக்கியத் தூணாக அமைகிறது. இது பாரம்பரிய, உள்கட்டமைப்பு-கனரக போக்குவரத்திலிருந்து திறமையான கடலோர மற்றும் நீர்வழி வலையமைப்புகளுக்கு மாறுவதன் மூலம் தளவாடங்களை ஒழுங்குபடுத்துதல், செலவுகளைக் குறைத்தல் மற்றும் சர்வதேச வர்த்தக போட்டித்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் துறைமுக நவீனமயமாக்கல், தொழில்துறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் நிலையான கடலோர மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது, குறைந்தபட்ச உள்கட்டமைப்பு முதலீட்டை உறுதிசெய்து பொருளாதாரத் தாக்கத்தை அதிகரிக்கிறது.


(iv) ஜல்வாகக் திட்டம்: 


கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஜல்வாகக் திட்டம், தேசிய நீர்வழிகள் 1 (கங்கை நதி) மற்றும் தேசிய நீர்வழிகள் 2 (பிரம்மபுத்திரா நதி) மற்றும் தேசிய நீர்வழிகள் 16 (பராக் நதி) வழியாக நீண்டதூர சரக்கு இயக்கத்தை ஊக்குவிக்கும் சரக்கு ஊக்குவிப்புக்கான ஒரு முக்கியக் கொள்கையாகும். இது தளவாடச் செலவுகளைக் குறைத்தல், சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் நெரிசலைக் குறைத்தல் மற்றும் நிலையான போக்குவரத்து முறைக்கு ஏற்ப மாற்றியமைத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.


(v) தேசிய கடல்சார் தளவாட தளம்: 


இது மார்ச் 27, 2023 அன்று தொடங்கப்பட்டது. இது தளவாடங்களின் அனைத்து பங்குதாரர் அடையாள எண்ணை பயன்படுத்தி இணைக்க ஒரே இடத்தில் ஒரு தளத்தை வழங்குகிறது. செலவுகள் மற்றும் நேர தாமதங்களைக் குறைப்பதன் மூலமும், எளிதான, வேகமான மற்றும் அதிக போட்டித்தன்மை வாய்ந்த சேவைகளை அடைவதன் மூலமும் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதையும், ஏற்றுமதி இறக்குமதி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் அதன் மூலம் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


(vi) கப்பல் போக்குவரத்திற்கான இந்திய திட்டம்: 


மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு மூலம் கப்பல் துறையை மேம்படுத்துவதற்காக இது செப்டம்பர் 30, 2024 அன்று தொடங்கப்பட்டது. நதி கப்பல் சுற்றுலா வரைவு (2047), 2047-ஆம் ஆண்டுக்குள் கப்பல் சுற்றுலாவில் உலகளாவிய தரத்தை அடைவது, பசுமையான வழித்தடங்களை உருவாக்குவது மற்றும் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


உலக வங்கியின் தளவாட செயல்திறன் குறியீடு


1. இந்திய துறைமுகங்கள் இப்போது வளர்ந்த நாடுகளுக்குச் சமமாகவோ அல்லது அதை விடவோ சிறப்பாகவோ உள்ளன என்று பிரதமர் கூறினார். உலக வங்கியின் சரக்கு கையாளுதல் செயல்திறன் குறியீடு (Logistic Performance Index (LPI)) இந்தியாவின் கடல்சார் துறையில் முக்கிய முன்னேற்றங்களை அங்கீகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.


2. உலக வங்கியின் சமீபத்திய LPI (2023) அறிக்கையின்படி, இந்தியா ஆறு இடங்கள் முன்னேறி 139 நாடுகளில் 38-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2018ஆம் ஆண்டில், இந்தியா 44-வது இடத்தைப் பிடித்தது, 2014-ல் 54-வது இடத்தைப் பிடித்தது. இது பல ஆண்டுகளாக இந்தியாவின் சரக்கு கையாளுதல் செயல்திறனில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் காட்டுகிறது.


3. LPI 139 நாடுகளை தரவரிசைப்படுத்துகிறது மற்றும் நம்பகமான விநியோகச் சங்கிலி இணைப்புகளை எவ்வளவு எளிதாக உருவாக்க முடியும் என்பதை அளவிடுகிறது. இது சரக்கு கையாளுதல் சேவைகளின் தரம், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்புகள் போன்ற காரணிகளையும் பார்க்கிறது.



Original article:

Share: