மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு நியாயமான வசதிகள் ஏன் இன்னும் ‘இருந்தால் நல்லது’ என்றும் ‘கட்டாயம் வேண்டியவை என்றில்லாத நிலை’யிலும் உள்ளன? -விபா பி. மாதவா

 2016ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் (Rights of Persons with Disabilities (RPwD Act)) சட்டத்தின் கீழ், நியாயமான தங்குமிடம் என்பது "தேவையான மற்றும் பொருத்தமான மாற்றம் மற்றும்/அல்லது சரிசெய்தல்" என்று பொருள்படும். இது மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களுடன் சமமாக தங்கள் உரிமைகளை அனுபவிக்க உதவுகிறது.

பதில் நேரடியானதாகத் தோன்றினாலும், இந்தியாவின் வேலைவாய்ப்புத் துறை முழுவதும், இத்தகைய நியாயமான இடவசதிகள், மாற்றுத்திறனாளி உரிமைகளை அடைவதற்கான மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக உச்சநீதிமன்றத்தின் 2024ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் தொடர்பான கையேடு (PwDs) அடையாளம் காட்டுகிறது. வணிகங்களும் அரசாங்க நிறுவனங்களும் பெரும்பாலும் அவற்றை அத்தியாவசியமான ஒன்றாகக் கருதாமல், கூடுதலாக வைத்திருக்க வேண்டிய ஒன்றாகக் கருதுகின்றன.


செப்டம்பர் 22, 2025 அன்று, மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை (Department of Empowerment of Persons with Disabilities (DEPwD)), மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு நல்ல தரமான உதவி சாதனங்களை வழங்குமாறு அரசுத் துறைகளைக் கேட்டுக் கொண்டது. "சார்புநிலை குறித்த கவலைகளை" (concerns over bias) நிவர்த்திசெய்ய இது அவசியம் என்று அது கூறியது. சில துறைகள் உற்பத்தித்திறன் வரம்புகள் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்க தயங்குகின்றன.


இது புதியதல்ல - பிப்ரவரி 2024-ல் இதேபோன்ற சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. புது டெல்லியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையர் (Chief Commissioner for Persons with Disabilities (CCPD)) அலுவலகத்தின் ஆணையர் S.கோவிந்தராஜ், இரண்டு சுற்றறிக்கைகளும் 2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் 'நியாயமான தங்குமிடம்' விதியைப் பின்பற்றுகின்றன என்றார். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% வேலை இடஒதுக்கீட்டை அதே சட்டம் கட்டாயமாக்குகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், இதுபோன்ற உத்தரவுகளுக்கான தொடர்ச்சியான தேவை கொள்கைக்கும் நடைமுறைக்கும் இடையிலான நீண்டகால இடைவெளியை சுட்டிக்காட்டுகிறது


சட்டத்தின்படி நியாயமான தங்குமிடங்கள் என்றால் என்ன?


2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் (Rights of Persons with Disabilities (RPwD Act)) சட்டத்தின் பிரிவு 2(y)-இன் கீழ், ஒரு நியாயமான தங்குமிடம் என்பது "ஏதேனும் தேவையான மற்றும் பொருத்தமான மாற்றம் அல்லது சரிசெய்தல்" என்பதாகும். இது மாற்றுத்திறனாளிகள் தங்கள் உரிமைகளை மற்றவர்களுடன் சமமாக அனுபவிக்க உதவுகிறது, விகிதாசாரமற்ற அல்லது தேவையற்ற சுமையை" சுமத்தாமல் இதை செய்ய வேண்டும்.


இந்த ஏற்பாடு சிறப்பு சலுகை பற்றியது அல்ல. மாறாக, அனைவரையும் உள்ளடக்கியதாகக் கட்டப்படாத பணியிடங்களில் உள்ள உள்கட்டமைப்பு இடைவெளிகளால் ஏற்படும் தேவைகளை இடமளிக்கும் விவகாரம் என்று தேசிய மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மையத்தின் (National Centre for Promotion of Employment for Disabled People (NCPEDP)) நிர்வாக இயக்குநர் அர்மான் அலி கூறினார். இது மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான “மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றி” என்று அவர் அழைத்தார். இது சமீபத்திய அரசு சுற்றறிக்கையில் சரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


நியாயமான இடமளிப்பு என்பது ஒரு கொள்கையாக, ‘உண்மையான சமத்துவத்தை’ உள்ளடக்கியது. மாற்றுத்திறனாளிகள் தங்கள் பங்களிப்புகளின் செலவில் ஏற்கனவே உள்ள விதிமுறைகளுக்கு உட்படவேண்டியதில்லை என்பதை உறுதி செய்கிறது என்று டெல்லியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் உரிமை ஆர்வலரும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரருமான பிரதீப் ராஜ், உச்சநீதிமன்றத்தின் கையேட்டிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கத்தின்படி கூறினார்.


நியாயமானதாக இருக்கும்போது தங்குமிடம்(கள்) எவை என்று கருதப்படுகின்றன?


RPwD, சட்டத்தின்படி, இந்த நோக்கம் பரந்த மற்றும் தனிப்பட்டதுமாகும். அணுகக்கூடிய பணியிடங்கள், நெகிழ்வான வேலை நேரம், உதவி தொழில்நுட்பங்கள், மாற்றியமைக்கப்பட்ட வேலை கடமைகள் அல்லது தேவைகளைப் பூர்த்தி செய்ய சிறப்பு பயிற்சி ஆகியவற்றை வழங்குவது இதில் அடங்கும்.


பொதுவான அணுகல் மற்றும் நியாயமான தங்குமிடத்திற்கு இடையிலான வேறுபாட்டை அறிந்து கொள்வது முக்கியம் என்று அலி கூறினார். எடுத்துக்காட்டாக, பார்வையற்ற மாணவருக்கு (visually impaired) அணுகக்கூடிய வடிவங்களில் தேர்வுத் தாள்களை வழங்குவது பொதுவான நடவடிக்கையாகும். ஆனால், கோரப்படும்போது பிரெய்லியில் வினாத்தாளை வழங்குவது நியாயமான தங்குமிடமாகும். இது பொதுவான நடவடிக்கைகள் உள்ளடக்காத ஒரு குறிப்பிட்ட தேவையைப் பூர்த்தி செய்கிறது.


உச்சநீதிமன்றத்தின் கையேடு, இத்தகைய கூடுதல் ஆதரவின் பின்னணியில் உள்ள குறிக்கோள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு விரும்பத்தகாத நன்மையை வழங்குவது அல்ல. மாறாக விளையாட்டுத் தளத்தை சமன் செய்வது என்று உறுதிப்படுத்துகிறது.


செயல்படுத்தல் இடைவெளிகள் ஏற்படும் போது ஏற்படும் செலவுகள்


மேலும், செப்டம்பர் சுற்றறிக்கை பட்ஜெட் ஒதுக்கீடு குறித்த தெளிவை வழங்குகிறது. துறைகள் செயலர் நிலை அங்கீகாரத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10 லட்சம் வரை சாதனங்களை அங்கீகரிக்கலாம். அதிக தொகைகள் அல்லது அவசர மாற்றீடுகளுக்கு மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை (Department of Empowerment of Persons with Disabilities (DEPwD)) மட்டுமே செய்ய முடியும். இவை உயர்தரமான, தேவை அடிப்படையிலான ஏற்பாடுகளாக இருக்க வேண்டும். அவை ஒரே மாதிரியான தீர்வுகளுக்குப் பதிலாக ஒவ்வொரு வழக்குக்கும் மதிப்பீடுகள் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன.


ஆணையர் கோவிந்தராஜ் கூறுகையில், உரிய ஆய்வு மற்றும் அங்கீகாரங்கள் வழங்கப்பட்ட பிறகும் கோரிக்கைகளின் செயல்பாட்டில் தாமதங்கள் உள்ளன. இருப்பினும், அத்தகைய காலகட்டங்களில் வளங்கள் மற்றும் பணியாளர்களை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டிய வேலை மாற்றங்கள் செய்யப்படுகின்றன.


இது முன்னேற்றமாகக் கருதப்பட்டாலும், இது ஒரு அடிப்படை சமூகக் கண்ணோட்டப் பிரச்சினையை வெளிப்படுத்துகிறது. சுற்றறிக்கை “பாரபட்சம் குறித்த கவலைகளை” குறிப்பிடுகிறது. துறைகள் உற்பத்தித்திறன் வரம்புகள் என்று கருதப்படுவதால் மாற்றுத்திறனாளிக்கு கணிசமான பொறுப்புகளை ஒதுக்க தயங்குகின்றன. சென்னையைச் சேர்ந்த சமூக உரிமை ஆர்வலர் தீபக் நாதன் கூறுகையில், "திறமை மற்றும் பங்களிப்புடன் தேவைகளை சீரமைப்பதற்குப் பதிலாக, செலவுச் சுமை உரிய அனுமதி மூலம் துறைகள் இன்னும் தங்குமிடங்களை எவ்வாறு பார்க்கின்றன என்பதை திறன் மொழி வெளிப்படுகிறது என்றார்.


ஏற்கனவே உள்ள நடைமுறைத் தடைகளையும் தங்கள் தேவைகளைத் தொடர்ந்து நியாயப்படுத்துவதன் உணர்ச்சி செலவையும் எதிர்கொள்ளும் பணியாளர்கள், அணுகுமுறை சரிசெய்வுகள் இல்லாதபோது அதன் பாரத்தை ஏற்க நேரிடுகிறது. நிதி ரீதியாக எந்த செலவும் ஏற்படாதபோது, ​​சுமைகளைத் தாங்கிக் கொள்கிறார்கள் என்று ராஜ் விளக்கினார்.


தீர்ப்பில் தவறுகள்: நியாயமான இடமளிப்பு vs அதிகப்படியான சுமை


விகாஷ் குமார் vs யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் & மற்றவர்கள் (2021) வழக்கில் உச்சநீதிமன்றம், தங்குமிடங்களால் ஏற்படும் சிக்கல்கள் தவிர்க்க முடியாதவை என்று தெளிவுபடுத்தியது. அதிகப்படியான அல்லதுதேவையற்ற சுமை (disproportionate or undue burden) மட்டுமே மறுப்பை நியாயப்படுத்துகிறது. அதே, நேரத்தில் கூடுதல் முயற்சி அல்லது சிக்கலான தன்மையை (complexity) மன்னிக்க முடியாது.


மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டை (United Nations Convention on the Rights of Persons with Disabilities (UNCRPD)) குறிப்பிடுகையில், அதிகப்படியான சுமை சோதனை “நிதி செலவுகள், கிடைக்கும் வளங்கள், இடமளிக்கும் தரப்பின் அளவு, மாற்றத்தின் விளைவு, மூன்றாம் தரப்பு நன்மைகள், மற்றவர்கள் மீதான எதிர்மறை தாக்கங்கள் மற்றும் நியாயமான சுகாதார மற்றும் பாதுகாப்பு தேவைகள்” போன்ற பரந்த காரணிகளை கருத்தில் கொண்டு செய்யப்பட வேண்டும்.


இருப்பினும், இது இன்னும் பணியிடங்களில், குறிப்பாக பொதுத் துறையில் உள்ள கலாச்சாரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது. அங்கு அவை விருப்பத்தேர்வாகக் கருதப்படலாம். இணைப்பு அதிகாரிகளுக்கு உதவி சாதனங்கள் மற்றும் நியாயமான தங்குமிட நெறிமுறைகள் குறித்த சரியான பயிற்சி இல்லை என்று நாதன் கூறினார். இது தெளிவான துறை நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedures (SOPs)) மற்றும் கட்டாய உணர்தல் திட்டங்களுடன் சிறப்பாக நிர்வகிக்கப்படலாம். “ரூ.1 லட்சம் வரை அபராதங்கள் இருந்தாலும், இணக்கமின்மைக்கான கடுமையான மற்றும் செயல்படுத்தக்கூடிய அமலாக்க வழிமுறைகளும் தேவை” என்று அவர் மேலும் கூறினார்.


இந்தக் கொள்கையின் குறிக்கோள் தெளிவானது மற்றும் சட்டப்பூர்வமாக ஆதரிக்கப்படுகிறது. கடினமான பகுதி என்னவென்றால், எளிய வழிமுறைகள் மற்றும் தெளிவான பொறுப்புடைமையுடன் அதைச் செயல்படுத்துவதாகும். இது விருப்பத்தேர்வு கூடுதல் அம்சங்களுக்கு மட்டுமல்லாமல், தேவையான மாற்றங்களை அனைவருக்கும் உரிமையாக மாற்ற உதவும்.



Original article:

Share:

காலநிலை அச்சுறுத்தலின் ஆபத்துகள் -வாசுதேவன் முகுந்த்

 காலநிலை மாற்றம் குறித்து அதிக அச்சத்தை எழுப்புவதும் பின் அந்த நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்குவதுமான பில்கேட்ஸின் நடவடிக்கைகள் இரண்டுமே சமஅளவில் தீங்கானவை என்பதையே காட்டுகிறது.



பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, பில் கேட்ஸ் அவர்களின் கருத்துக்கள் அமெரிக்க உயரடுக்கு வர்க்கத்தினரிடையே காலநிலை விவாதத்தின் மையக்கருத்தாக அமைந்தன. அவரது வார்த்தைகள் அதிகாரத்தின் குரலாக கருதப்பட்டன. அறிவியல், மூலதனம், மற்றும் பொதுநலச் செயல்பாடுகளை தொழில்நுட்ப நோக்கில் இணைக்கும் ஒரு தனித்துவமான நடைமுறையையும் அவர் உருவாக்கினார்.


2019 முதல் 2021-ஆம் ஆண்டு வரை, பில் கேட்ஸ் அவர்கள் காலநிலை குறித்த கருத்துக்களில் உலக அழிவு போன்ற பேரழிவு அவசரநிலையை வெளிப்படுத்தினார். சுற்றுச்சூழல் சரிவு, மக்கள் இடம்பெயர்வு, மற்றும் நிகர-பூஜ்ஜிய (net-zero) இலக்கை அடைய குறைந்த காலவாய்ப்பு போன்ற எதிர்வரும்  ஆபத்துகளைக் குறித்து அவர் எச்சரித்தார். இந்தக் கருத்துக்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினாலும் "காலநிலை அச்சுறுத்தல்" எனப்படும் குறைபாடுகளையும் உருவாக்கின. அதாவது, மனிதனின் தகவமைக்கும் திறன் (adaptive capacity) மனித ஆற்றல் (human agency) சார்ந்த செயல்திறனையும் வலியுறுத்தாமல், முழுமையான பேரழிவை தவிர்க்க முடியாத ஒன்றாக நிலைநிறுத்த முயல்கிறது. குறுகியகாலத்தில் கிளப்புவது குறுகிய காலத்தில் சமூகங்களைச் செயல்படத் தூண்டினாலும், நீண்டகாலப் போக்கில் அது அவநம்பிக்கைக்கும் அரசியல் ரீதியிலான எதிர்ப்புகளுக்கும் வழிவகுக்கும் என்கின்றனர்.


பில்கேட்ஸ் அவர்கள் இப்போது அந்தக் கருத்திற்கு எதிராகத் திரும்பியுள்ளார். காலநிலை மாற்றம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தினாலும், மனிதகுலத்தின் இருப்பை அச்சுறுத்தாது என்று தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், வறுமையையும் நோய்களையும் குறைப்பது, புவி வெப்பமயமாதலை எதிர்கொள்ள ஏதுவாக இருக்குமென்றும் பரிந்துரைத்துள்ளார். 'உலகப் பேரழிவு இல்லை' (not apocalyptic) என்பதற்கும் 'விளைவுகள் கடுமையானது இல்லை' (not severe) என்பதற்கும் இடையிலான வேறுபாடுகள் மிக முக்கியமானவை. ஆனால், பொதுமக்கள் இதை வேறுபடுத்திப் பார்ப்பது கடினம். அவர் தனது வாசகர்கள் அறிவியல் சாத்தியங்களை நுணுக்கமாகப் புரிந்துகொள்வார்கள் என்று நினைத்தார். ஆனால், பெரும்பாலானோர் சொல்லும் தொனியையே (tone) உணர்ந்தனர் என்பது இந்த விவாதத்தின் மூலம் தெரியவருகிறது.


ஆபத்தான திருப்பம்


பில்கேட்ஸ் அவர்களின் காலநிலை ஏற்பு பற்றிய பார்வை எப்போதும் தொழில்நுட்ப புதுமைகள், முதலீடுகள் மற்றும் அமைப்புக் கையாளுதல் மூலம் வளர்ச்சியையும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும் முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தது. இந்த நம்பிக்கையின் மூலம் குறைந்த கார்பன் எரிசக்தி ஆராய்ச்சிக்கென்று பெரும் நிதியுதவி கிடைத்தது. ஆனால், அதேநேரத்தில் சில அரசியல் ரீதியானப் பிரச்சனைகளையும் உருவாக்கியது.


முக்கியமான சிக்கல் என்னவெனில், இந்த நம்பிக்கை நடைமுறையில் அடக்குமுறையாக மாறக்கூடும். கேட்ஸ் அவர்களின் தொண்டு மாதிரி (philanthropic model) தனியார் செல்வத்தை (private wealth) அரசாங்கங்களின் முன்னுரிமைகளை நிர்ணயிக்கப் பயன்படுத்துகிறது. அவரது முந்தைய நிலைப்பாட்டில், கார்பனை குறைக்கும் தொழில்நுட்ப வழிமுறைகள் மட்டுமே கவனிக்கப்பட்டன. ஆனால், அந்த கார்பன் ஏன் உருவாகிறது என்ற அடிப்படை இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் காரணங்களை அவர் பார்க்கவில்லை. இந்த அணுகுமுறை மக்களின் கருத்துகளை கேட்காமல் முடிவெடுப்பதால், அமைப்புரீதியான பெரிய மாற்றங்களை வலியுறுத்தும் பிற கருத்துக்கள் ஒதுக்கப்படுகின்றன.


இப்போதும்கூட, உமிழ்வுகளை குறைப்பதில் உலகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்று அவர் கூறுகிறார். ஆனால், எந்தத் தரவுகளும்  அதை உறுதிப்படுத்தவில்லை. 2022-2024-ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலகளாவிய புதைபடிவ எரிபொருள் உமிழ்வுகள் (global fossil fuel emissions) வரலாற்றிலேயே அதிக அளவில் இருந்தன என்று உலகளாவிய கார்பன் திட்டம் (Global Carbon Project) மற்றும் கார்பன் ப்ரீப் (Carbon Brief) அமைப்புகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், அவற்றின் வளர்ச்சி வீதம் 2000-ஆம் ஆண்டுகளில் வருடத்திற்கு 3 சதவீதமாக இருந்ததைவிட கடந்த பத்தாண்டுகளில் 0.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. நிலப் பயன்பாடு மாற்றத்தால் உமிழ்வுகள் 1990-களின் இறுதியில் இருந்து 28 சதவீதமாகக் குறைந்தது. ஆனால், சீனா மற்றும் இந்தியாவில் உமிழ்வுகளின் தொடர் வளர்ச்சி (continued growth in emissions) இதனை சமநிலைப்படுத்துகிறது.


மேலும், உமிழ்வு கணக்கீட்டில் நிச்சயமற்றத் தன்மைகள் உள்ளன. காடுகளின் சேதம் மற்றும் பிராந்திய தரவுக் குறைபாடுகள், குறிப்பாக வெப்பமண்டலப் பகுதிகளில் (tropical regions), நிலப் பயன்பாட்டு மாற்ற உமிழ்வு மதிப்பீடுகள் (land-use change emissions estimates) நிச்சயமற்றதாக இருக்கின்றன. ஆண்டுதோறும் ஏற்படும் மாற்றங்களுக்கும் இடையிலும்கூட அதிகப் பிழைகளுக்கான வாய்ப்புகள் (error ranges) உள்ளன. இத்தகைய நிச்சயமற்றத் தன்மைகள் (uncertainties) அனைத்தையும் கருத்தில்கொண்டு பார்க்கும்போது வெளியேற்றங்களின் வளர்ச்சி விகிதம் (rate of emissions growth) குறைந்திருக்கலாம் என்றும் நிலப் பயன்பாட்டு வெளியேற்றங்கள் (land-use emissions) குறைந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், வெளியேற்றங்களைக் குறைப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று இப்போதே கூறுவது அவசரமான முடிவாகும்.


அதேபோல், கேட்ஸ் அவர்களின் வறுமை மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் மாற்றமானது மேற்கத்திய அல்லது பெருநிறுவனம் சார்ந்த வட்டாரங்களில் “"“நாம் இப்போது எரிக்கலாம் (புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதைத் தொடரலாம்), பின்னர் ஏழைகளுக்கு தடுப்பூசி போட்டால் போதும் (பாதுகாத்தால் போதும்)” (we can keep burning now if we vaccinate the poor later) என்று படிக்கப்படும் அபாயத்தையும் கொண்டுள்ளது. இந்த மாற்றீட்டு தர்க்கம், பருவநிலை தழுவல் நடவடிக்கை கோரும் அமைப்பு ரீதியான ஒரே நேரத்தில் நிகழ்வை பலவீனப்படுத்துகிறது.


“காலநிலை மாற்றத்திற்கு எதிரான போரில், தான் வெற்றி பெற்றதாக" வெளியான பில்கேட்ஸின் குறிப்பாணைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அளித்த எதிர்வினையானது ஆச்சரியப்படத்தக்க வகையில் மறுமதிப்பீட்டை ஒரு வெற்று அரசியல் வெற்றியாகக் குறைத்தது. பில்கேட்ஸின் சொந்த அலை விளைவு மாற்றங்களில்தான் எதிர்வரும் மிக முக்கியமான விளைவுகள் உள்ளன.

மாற்றத்தின் சலன விளைவுகள்


இது பாராட்டத்தக்கதாக இருந்தாலும், அதன் உணர்வை இரண்டு உண்மைகள் சிக்கலாக்குகின்றன. முதலாவதாக, கேட்ஸ் உலகளாவிய காலநிலை விவாதத்தில் அளவுக்கு அதிகமான இடத்தைத் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளார், ஏனெனில் அவர் அறிவியலை உயரடுக்கினருக்கான ஒருவித காலநிலை பொது அறிவாக மொழிபெயர்க்கிறார். அவரது மிதவாதம் குறியீட்டு மதிப்பீடு மற்றும் நடைமுறை மதிப்பீடு இரண்டையும் கொண்டுள்ளது. இரண்டாவதாக, அவரது முதல் எச்சரிக்கும் நிலைப்பாடு பங்குகளை தாங்க முடியாத அளவுக்கு உயர்த்தியது, பின்னர் முரண்பட்ட சான்றுகளை எதிர்கொண்டு அவற்றைத் தாழ்த்தியது, இது விளிம்பு நெருக்கடி உத்தி (brinkmanship) ஏன் கெட்டது என்பதற்கான படிப்பினை உதாரணமாக அமைந்தது. விளிம்பு நெருக்கடி உத்தியிலிருந்து பின்வாங்குவது பாராட்டத்தக்கதாக இருந்தாலும், அது டிரம்ப் போன்ற அதீத மறுப்பாளர்களுக்கு எரிபொருளாக அமையும், அவர்கள் மிதவாதத்தை பின்வாங்கலுடன் வேறுபடுத்துவதில் சிரமப்படுகிறார்கள்.


கேட்ஸ் அவர்களின் காலநிலை அதிகார நிலைமை, அவரது தொழில்நுட்ப வாழ்க்கையின் அதே “மாற்றுத்திறன்” சிந்தனையிலிருந்து வந்தது என்கின்றனர். அவர் விலையுயர்ந்த (high-end) தயாரிப்புகளால் மட்டும் கணினித் துறையில் வெற்றி பெறவில்லை. மாறாக கணினியை மிகவும் அணுகக்கூடியதாக (accessible) மென்பொருள் மற்றும் வன்பொருளை மாற்றி வடிவமைத்து, தேர்ந்த உத்திரமுறைகளின் மூலம் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். ஆனால், அவர் தனது வணிக ஆதிக்கத்தைப் பாதுகாக்க திறந்த மூல மென்பொருள் (open-source) இயக்கத்திற்கு எதிராக இருந்தார். ஏனெனில் அது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வியாபாரத்திற்கான நேரடி அச்சுறுத்தல் என்று அவர் கருதினார். பின்னர், இணையம் மற்றும் மேகக் கணினி (cloud computing) வளர்ச்சியுடன் மைக்ரோசாஃப்ட் அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது.  புதிய முன்மாதிரி தனது வணிக மாதிரியைப் பாதிக்காது என்று தெளிவாகத் தெரிந்த பின் கேட்ஸ் இதனை ஏற்றுக்கொண்டார்.


இன்றைய உலகில் பெரும் வெற்றியும் செல்வமுமே அனைத்து முக்கியமான சமூகப் பிரச்சினைகள் குறித்தும் தீர்ப்பளிக்க உரிமையாகக் கருதப்படுகின்றன. ஆகையால், கேட்ஸ் அவர்கள் காலநிலை தீர்க்கதரிசியாக மாறுவது தவிர்க்க முடியாத ஒன்றே. அதே சமயம், காலநிலை மாற்றம் குறித்த அவரது கருத்துகளை முற்றிலும் நிராகரித்துவிட முடியாது.



Original article:

Share:

மாதிரி இளைஞர் கிராம சபைகளின் நோக்கம் -சுஷீல் குமார் லோஹானி மற்றும் மன்மோகன் சிங்

 மாதிரி ஐக்கிய நாடுகள் (Model United Nations) அமைப்பு உலகளாவிய குடிமைப்பண்பை வளர்க்கும் எனில், மாதிரி இளைஞர் கிராம சபை (Model Youth Gram Sabha) குடிமை பெருமையையும் உள்ளூர் தலைமைத்துவத்தையும் வளர்க்கும். 


மக்களவை அல்லது சட்டமன்றம் அளவுக்கு கிராம சபைக்கும் இந்தியாவின் ஜனநாயக அமைப்பில் முக்கியத்துவம் உண்டு. ஆனால், மக்களாட்சியின் அரசியலமைப்பிற்கு அடித்தளமாக இருக்கும் கிராம சபை, பொதுவாகப் பேசப்படும் உரையாடல்களிலும் குடிமக்கள் விழிப்புணர்விலும் பெரிதாக இடம்பெறுவதில்லை. குழந்தைகள் பாராளுமன்றம் (Children’s Parliament), இளைஞர் பாராளுமன்றம் (Youth Parliament) அல்லது மாதிரி ஐக்கிய நாடுகள் அமைப்பு  (Model United Nations) போன்ற அமைப்புகளைப் போல, மாதிரி இளைஞர் கிராம சபையும் (Model Youth Gram Sabha) பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத கருத்தாகவே இருக்கிறது. ஆனால், பாராளுமன்றத்தைக் காட்டிலும் கிராம சபைகளில்தான் ஜனநாயகத்தின் உண்மையான வடிவம் வெளிப்படுகிறது. நேரடி, பங்கேற்பு நிறைந்த, பொறுப்புமிக்க முறையில் கிராமசபை நடத்தப்படுகிறது. 


1992ஆம் ஆண்டின் 73வது திருத்தச் சட்டத்தின் மூலம் அறிமுகமான அரசியலமைப்பின் 243A-ஆம் பிரிவு, கிராம சபையை பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் (Panchayati Raj system) அடிப்படையாக வரையறுக்கிறது. இது ஒரு கிராமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு வாக்காளரையும் கூட்டங்களில் பங்கேற்கச் செய்கிறது. அவர்கள் கிராமத்தின் நிதிநிலை, வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் ஆட்சி முன்னுரிமைகள் குறித்து விவாதிக்க முடிகிறது. இது கிராம மக்கள் தங்களது சமூகத்தைச் சார்ந்த முடிவுகளில் பங்கேற்க வழிவகைச் செய்வதோடு  அரசியல் சார்ந்த வெளிப்படைத்தன்மையையும் மக்களின் பொறுப்பையும் ஊக்குவிக்கிறது. ஆனால், அதன் புரட்சிகரமான திறனைப் பொருட்படுத்தாமல், கிராம சபைக் கூட்டங்களில் மக்களின் பங்கேற்பு மிகக் குறைவாகவே உள்ளது.




கிராம சபைகள் ஏன் எழுச்சி அளிப்பதாக இல்லை?


நீங்கள் ஒரு கிராமத்தை வழிநடத்த விரும்புகிறீர்களா? என்று ஒரு இளைஞரிடம் கேட்டால் பெரும்பாலும் பதில் மௌனமாக இருக்கிறது. கல்வி பாடத்திட்டங்களும் மக்களவை, மாநிலங்களவைத் தேர்தல்கள், பாராளுமன்ற நிர்வாகம் அல்லது ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலக மாதிரிகளில்தான் கவனம் செலுத்துகின்றன. ஆனால், இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமான பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் இதுகுறித்து மௌனமாகவே உள்ளன. இதன் விளைவாக கிராம சபை என்பது உயிர்ப்புள்ள  ஜனநாயக அனுபவமாக இல்லாமல் ஒரு நிர்வாகக் கருத்தாகவே பார்க்கப்படுகிறது. ஒரு வளர்ந்த பாரதத்தை (விக்சித் பாரத்) உருவாக்க, கிராமசபை என்பது உத்வேகம் அளிக்கும் தளமாக நிலைநிறுத்தப்பட வேண்டும். வளர்ச்சி மற்றும் ஜனநாயகத்தை வடிவமைக்க கிராமப்புற இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் உள்ளூர்களில் தலைமை தாங்கி வழிநடத்த அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். மேலும், கிராமசபை மாதிரிகள் (Simulations) பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களில் இணைக்கப்பட வேண்டும் போன்ற முக்கிய அம்சங்கள்  வலியுறுத்தப்படுகின்றன. 


இந்த இடைவெளியைக் குறைக்கும் வகையில், 2025-ஆம் ஆண்டில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், கல்வி அமைச்சகம், பழங்குடியினர் நல அமைச்சகம் மற்றும் லட்சிய பாரத கூட்டுறவு (Aspirational Bharat Collaborative) அமைப்புடன் இணைந்து மாதிரி இளைஞர் கிராம சபை திட்டத்தைத் தொடங்கின. இங்கு மாணவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொறியாளர்கள் ஆகியோர்போல் பங்கு வகித்து கிராம நிதிநிலை மற்றும் வளர்ச்சி சார்ந்தத் திட்டங்களை விவாதிக்கிறார்கள். இந்தத் திட்டம் ஆசிரியர்களின் மேற்பார்வையில் இயங்குகிறது. போதிய பயிற்சி, பரிசுகள், உட்பட சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. இதனால் குடிமைக் கல்வி என்பது அனுபவமாக மாறி, கிராம உள்ளாட்சியைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே உருவாகிறது. மேலும், எதிர்கால சந்ததியினருக்கு ஜனநாயக ஈடுபாட்டை  அவர்களிடையே உறுதியானதாக்குகிறது.


முதல்கட்டமாக, இந்தத் திட்டம் 28 மாநிலங்களிலும் 8 யூனியன் பிரதேசங்களிலும் (Union Territories) உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 600-க்கும் மேற்பட்ட ஜவஹர் நவோதய வித்யாலயங்கள் (jawahar Navodaya Vidyalayas), 200 ஏகலைவ மாதிரி குடியிருப்பு பள்ளிகள் (Eklavya Model Residential Schools) மற்றும் மகாராஷ்டிராவின் சில மாவட்ட ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் (Zilla Parishad schools) ஆகியனவாகும். 126 முதன்மை பயிற்சியாளர்கள் நாடு முழுவதும் இதற்காக ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கின்றனர். இதுவரை 24 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் 1,238 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். மேலும், இது குறித்த பல அமர்வுகள் (sessions) நடைபெற்று வருகின்றன.


இந்தத் திட்டமானது தேசிய அளவில் தொடங்கப்படுவதற்கு முன்பு, உத்தரப்பிரதேசத்தில் உள்ள பக்பட் ஜவஹர் நவோதய வித்யாலயத்திலும் (Jawahar Navodaya Vidyalaya Baghpat) ராஜஸ்தானின் அல்வார் ஏகலைவ பள்ளியிலும் (Eklavya Model Residential School) வெற்றிகரமான முன்னோடித் திட்டங்கள் நடத்தப்பட்டன. ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் உள்ள சிதாபூர் ஜவஹர் நவோதய வித்யாலயம் (Jawahar Navodaya Vidyalaya) பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாதிரி கிராம சபையில் பங்கேற்றனர். இரண்டாம் கட்டமாக, இந்த முயற்சி மத்திய நிறுவனங்கள், மாவட்ட ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளைத் தாண்டி அனைத்து மாநில அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.


மாதிரியிலிருந்து உண்மையான மாற்றம் 


இந்தியாவைப் போன்ற ஒரு ஜனநாயக நாட்டில், குடிமக்களின் தீவிரப் பங்களிப்பு என்பது வெறும் உரிமை மட்டுமல்ல முக்கியப் பொறுப்பும் ஆகும். மாதிரி ஐக்கிய நாடுகள் சபையானது உலகளாவிய குடிமைப்பண்பை வளர்த்தால், மாதிரி இளைஞர் கிராம சபையும் குடிமைப் பெருமையையும் உள்ளூர் தலைமைத்துவத்தையும் வளர்க்க உதவும். பஞ்சாயத்து ராஜ் (Panchayati Raj) அமைப்புகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதன்மூலம் ஜனநாயக அமைப்புகளில் குடிமக்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை மாணவர்களால் நன்கு புரிந்துகொள்ள முடியும். விவாதங்களை நடத்துவது, தீர்மானங்களை நிறைவேற்றுவது, மற்றும் ஒருமித்த கருத்தை அவர்களிடையே உருவாக்குவது போன்ற அனுபவம் முக்கியமான வாழ்க்கைத் திறன்களை (critical life skills) மாணவர்களிடம் வளர்க்க உதவுகிறது.


இந்த மாதிரியானது குடிமைக் கல்வியை (civic education) மறுவரையறை செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இதனை அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்துவதன் மூலம் கிராம சபைக் கூட்டங்களில் மக்களின் பங்கேற்பு மீண்டும் விருப்பமான ஒன்றாக மாறும் வாய்ப்புள்ளது. பள்ளியில் “இளைஞர் கிராம சபைத் தலைவர்” ஆக இருந்த ஒருவரே, எதிர்கால இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகவோ  (Indian Administrative Service (IAS)) அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ பதவி வகிக்கும்பட்சத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தின் சக்தியை அதிகம் மதிக்கும் வாய்ப்பு உள்ளது.


வளர்ச்சியடைந்த இந்தியா (விக்சித் பாரத்) என்கிற தொலைநோக்குப் பார்வை வெறுமனே கொள்கைகளை மட்டும் சார்ந்து இருக்க முடியாது. நிர்வாகத்தை அரசின் பொறுப்பாக மட்டும் பார்க்காமல், பகிர்ந்து கொள்ளப்பட்ட குடிமைக்கடமையாகப் பார்க்கும் நாட்டின் குடிமக்களைச் சார்ந்துள்ளது. மாதிரி இளைஞர் கிராம சபை (Model Youth Gram Sabha) என்பது வெறும் வகுப்பறைப் பயிற்சி என்பதையும் கடந்து மக்களாட்சி மீளுருவாக்கத்திற்காக மாணவர்களிடையே எழுச்சியை ஏற்படுத்துவதற்கான ஒரு நாற்றங்கால் (seedbed) ஆகும்.


இளைஞர்கள் தங்கள் கிராம சபைக் கூட்டம் நாடாளுமன்றம் போலவே முக்கியமானது என்பதை அறியும் போது, ஜனநாயகம் ஒரு அருவமான அமைப்பாக இருப்பதை நிறுத்திவிடும் — அது வாழும் கலாச்சாரமாக மாறும். மேலும், இந்தியாவில் ஒவ்வொரு குழந்தையும் தங்கள் குரல் கிராம சபையில் முக்கியமானது என்று நம்பி வளரும்போது, உண்மையான பங்கேற்பு, தற்சார்பு, மற்றும் இரக்கமுள்ள தேசத்தின் கனவு இனி தொலைதூர ஆசையாக இருக்காது. அது இந்திய மக்களாட்சியின் அன்றாடத்  துடிப்பாக மாறும்.



Original article:

Share:

முன்னேறும் பயணம்: இந்திய கடல்சார் வார நிகழ்வைப் பற்றி..

 இந்தியாவின் கப்பல் போக்குவரத்துத்துறை மேலும் வளர்வதற்கு அரசின்  ஆதரவு தேவைப்படுகிறது.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய கடல்சார் வார நிகழ்வு (The India Maritime Week event), கப்பல் போக்குவரத்து என்பது வெறும் வணிகம் மட்டுமல்ல, அது முக்கியமான ராஜதந்திர ரீதியிலானக் கூறுகளைக் (strategic component) கொண்ட வணிகம் என்பதை அங்கீகரிக்கிறது. இருபது ஆண்டுகளாக, தனியார்மயமாக்கல், சுதந்திரமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என்ற கொள்கைச் சூழலின் காரணமாக இந்தியக் கப்பல் துறை பெரியளவில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதனால், அரசின் ஆதரவு குறைந்து, கடல்சார் துறையின் முக்கிய உத்திமுறையின் நோக்கமும் பலவீனமடைந்தது. துறைமுக உள்கட்டமைப்பு வசதிகளைத் தவிர அரசு பெரும்பாலும் கடல் பயணிகளுக்குப் பயிற்சி அளிப்பதிலும் கல்வி அளிப்பதிலும் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தது. இதன் மூலம் அவர்கள் வெளிநாட்டு கப்பல்களில் பணியாற்றி அந்நியச் செலாவணியைக் கொண்டுவர முடியும். ஒருகாலத்தில் உலகின் முன்னணி கப்பல் உரிமையாளர் கழகமாக இருந்த இந்தியக் கப்பல் கழகமும் (Shipping Corporation of India (SCI)) காலப்போக்கில் நிராகரிக்கப்பட்டது. அரசின் சாதகமான கொள்கைகள், உதாரணமாக இந்தியாவின் எண்ணெய் போக்குவரத்திற்கான முன்னுரிமை வழங்கும் நடைமுறையும் நீக்கப்பட்டன. இதனால் இந்தியக் கப்பல் கழகம் (Shipping Corporation of India (SCI)) பெரியளவில் வீழ்ச்சி அடைந்தது. மேலும் தனியார்மயமாக்கப்படுதல் என்ற நிலையில்  இருந்தும் தப்பியது. கொரோனா (COVID-19) பெருந்தொற்றுப் பேரிடர் என்பது இந்திய நாட்டிற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்தியா வணிகத்திற்காக வெளிநாட்டு கப்பல்களைப் பெரிதும் நம்பியிருந்ததால், தன் சொந்த வர்த்தகத்தில் தலையிடுவதற்கான செல்வாக்கும் பெரியளவில் குறைந்திருந்தது. தனியார் கப்பல்துறை மிகவும் சிறியதாக இருந்ததால், முழுமையாகச் செயல்படவும் முடியவில்லை. கப்பல் போக்குவரத்து ஒரு வணிகமாக இருந்தாலும், ராஜதந்திர ரீதியில் மிகவும் முக்கியமானது என்பதையும் பெருந்தொற்றுக்குப் பிறகு அரசு புரிந்துகொண்டுள்ளது.  குறிப்பாக குழப்பம், போர், மற்றும் தேசிய நலன், பாதுகாப்பு சார்ந்து மீண்டும் பிரச்சனைகள் எழும் காலங்களில் கப்பல் போக்குவரத்து எந்தளவிற்கு முக்கியம் என்பதை அரசு  உணர்ந்துகொண்டது. இதனால், சமீபத்தில் அரசின் இந்தியக் கப்பல் கழகமானது (Shipping Corporation of India (SCI)) கப்பல் படையின் வலிமையை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.


கடல்சார் வார விழாவில் அறிவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டின் பெரும்பகுதி துறைமுகத் துறையுடன் தொடர்புடையது. அரசு தனது துறைமுகங்களை குத்தகையாளர் முறையில் (Landlord Model) இயக்கிவருகிறது. இதில், தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இயக்க உரிமையைப் பெற்று, அரசுடன் வருவாய்த் தொகையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதன் மூலம் துறைமுகங்களுக்கு புதிய திட்டங்களை மேற்கொள்வதற்கான நிதி உதவியை அளித்துள்ளது. உதாரணமாக, சென்னை மற்றும் கொல்கத்தா துறைமுகங்கள் அந்தமான் தீவுகளில் இடைமாற்றுத் துறைமுக மையம் (transshipment hub project) அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளன. துறைமுக இணைப்பு, சாகர்மாலா திட்டங்கள் (Sagarmala projects), மற்றும் இந்திய கடற்படை பயிற்சி ஆகிய துறைகளிலும் முதலீடுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும், வெளிநாட்டு கப்பல் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள உள்நாட்டின் கிளை நிறுவனங்கள் மூலம் கப்பல்களை பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கையின் மூலம் இந்திய தேவைகளுக்காகக் கப்பல்களைப் பயன்படுத்துவதற்கும், காப்பீடு போன்ற வணிகங்களுக்கு ஆதரவளிக்கவும் அரசுக்குச் சாதகமாக இருக்குமென்றும் கூறப்படுகிறது. ஆனால், இந்திய வணிகக் கப்பல் கட்டுமானத் துறையில் இன்னும் பெரிய முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை. இதில் பெரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தால், இந்தியாவின் தொழில்துறை, தொழில்நுட்ப மற்றும் திட்ட மேலாண்மை போன்ற துறைகளின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். இந்தியக் கப்பல் கட்டுமானத் தளங்கள், அதிநவீன திரவ எரிவாயுவில் (Liquefied Natural Gas (LNG)) இயங்கும் கப்பல்களையோ அல்லது எதிர்காலத்துக்கான பசுமை எரிபொருளில் (futuristic green fuel burning vessels) இயங்கும் கப்பல்களையோ உருவாக்கத் தொடங்கினால் மட்டுமே இந்தியக் கப்பல் போக்குவரத்துத்  உண்மையிலேயே முழு வேகத்தில் முன்னேறிச் செல்ல முடியும்.



Original article:

Share:

அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் -அஜய் ஸ்ரீவஸ்தவா

 அனுமதிக்கப்பட்ட ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துதல், எண்ணெய் மீதான வரிவிதிப்புகளை நீக்க அமெரிக்காவை வலியுறுத்துதல், மற்றும் வரிவிதிப்புகளின் முந்தைய நிலைகளான 25 சதவீதமாகக் குறைக்கப்பட்ட பின்னரே பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும்.


அக்டோபர் 22 அன்று, ரஷ்யாவின் முன்னணி எண்ணெய் உற்பத்தியாளர்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil) மீதான வாஷிங்டனின் தடைகள் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதித் தேர்வுகளைக் குறைத்து, அமெரிக்காவுடனான சிக்கலான வர்த்தக பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவுடனான அதன் உறவுகளில் இந்தியா இப்போது இரண்டு முக்கிய சவால்களை எதிர்கொள்கிறது. அவை, தடைகளின் தாக்கத்தை நிர்வகித்தல் மற்றும் நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தை உறுதி செய்தல் போன்றவை ஆகும். இதைக் கையாள, இந்தியாவுக்கு தெளிவான மூன்று-படிநிலை திட்டம் தேவைப்படும்.


ஜூலை 31 அன்று, அதிபர் டிரம்ப் இந்திய ஏற்றுமதிகள் மீது 25 சதவீத "ரஷ்ய எண்ணெய்" வரியை விதித்தார். மலிவான ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதன் மூலம் இந்தியா "போரைத் தூண்டுகிறது" என்று அவர் குற்றம் சாட்டினார். ஆகஸ்ட் 28 அன்று இந்த நடவடிக்கை அமலுக்கு வந்தபோது, ​​இந்தியப் பொருட்களின் மீதான மொத்த அமெரிக்க வரிகள் 50 சதவீதமாக இரட்டிப்பாகின. இதனால், மே மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் வணிகப் பொருட்கள் ஏற்றுமதி 37 சதவீதமாகக் குறைந்தது.


ஏற்றுமதி வீழ்ச்சியடைந்த போதிலும், இந்தியா தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை வாங்கியது. வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு வாஷிங்டன் வரிவிதிப்புகளைத் தளர்த்தும் என்று நம்பியது. அக்டோபர் 22 அன்று அமெரிக்க கருவூலம் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் 57 சதவீதத்தை உற்பத்தி செய்யும் ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil) நிறுவனங்களைத் தடை செய்தபோது அந்த நம்பிக்கை குறைந்துவிட்டது. இந்த உத்தரவுடன், அவர்களுடன் கையாளும் எந்தவொரு வெளிநாட்டு நிறுவனமும் இரண்டாம் நிலை தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்தது.


இந்த "இரண்டாம் நிலை தடைகள்" (secondary sanctions) அமெரிக்காவின் அதிகாரத்தை அதன் எல்லைகளுக்கு அப்பால் நீட்டிக்கின்றன. அவை வர்த்தகத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், உலகளாவிய வரிவிதிப்பு முறைகளுக்கான அணுகலையும் தடுக்கலாம். உலகளாவிய வணிகத்தை ஆதரிக்கும் டிஜிட்டல் சேவைகளைக்கூட அவை முடக்கலாம். ​​இந்தியா ஏற்கனவே, ஐரோப்பிய ஒன்றியத் தடைகளை காரணம் காட்டி, ரஷ்ய இணைப்புகளைக் கொண்ட சுத்திகரிப்பு நிலையமான நயாரா எனர்ஜியில் (Nayara Energy) ஜூலை 22 அன்று மைக்ரோசாப்ட் திடீரென சேவைகளை துண்டித்தபோது, தடை நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளது. நீதிமன்றம் தலையிடும் வரை சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.


வர்த்தக ஒப்பந்தம்


ட்ரம்ப்-2.0 காலத்தில் வாஷிங்டனுடன் தடையில்லா வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் (Free Trade Agreement(FTA)) தொடங்கிய முதல் நாடு இந்தியா. இருப்பினும், அமெரிக்காவின் பரந்த கோரிக்கைகள் காரணமாக முன்னேற்றம் நின்றுவிட்டது. பெரும்பாலான தொழில்துறை பொருட்களுக்கான வரிகளை இந்தியா நீக்கவும், இந்தியா அதன் வேளாண் மற்றும் பால் சந்தைகளைத் திறக்கவும், மரபணு மாற்றப்பட்ட சோளம் மற்றும் சோயாபீன்ஸ் இறக்குமதியை அனுமதிக்கவும் அமெரிக்கா விரும்புவதாகக் கூறப்படுகிறது. மேலும், இது சுதந்திரமான தரவு ஓட்டங்கள், பலவீனமான மின்வணிகம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை விதிகள் மற்றும் அமெரிக்க எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (Liquefied natural gas (LNG)) வாங்குவதற்கான பெரிய உறுதிப்பாடுகளையும் நாடுகிறது. இந்தக் கோரிக்கைகள் சாதாரண வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. இந்தியாவின் விவசாயிகள், சிறு வணிகங்கள் மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கு இன்றியமையாத உணவுப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் இறையாண்மை போன்ற முக்கியமான பிரச்சினைகளை அவை உணர்கின்றன.


இதற்கு ஈடாக, வாஷிங்டன் வரையறுக்கப்பட்ட சலுகைகளை மட்டுமே வழங்குகிறது. இந்திய ஏற்றுமதிகள் மீதான வரிகளை 25 சதவீதத்திலிருந்து சுமார் 15-17 சதவீதமாகக் குறைக்க திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில், அமெரிக்காவிலிருந்து இந்தியா அதிக எண்ணெய், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (Liquefied natural gas (LNG)) மற்றும் பாதுகாப்புக் கருவிகளை வாங்க வேண்டும் என்று வாஷிங்டன் விரும்புகிறது. அமெரிக்காவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி ஏற்கனவே 79 சதவீதம் உயர்ந்துள்ளது. 2024 ஏப்ரல்-ஆகஸ்ட் மாதங்களில் 2.8 பில்லியன் டாலரிலிருந்து 2025-ம் ஆண்டின் அதே காலகட்டத்தில் 5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.


மலேசியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தகக் கொள்கையைவிட வாஷிங்டனுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கை வழங்கிய அமெரிக்காவுடனான மலேசியாவின் சமீபத்திய வர்த்தக ஒப்பந்தத்தால் அமைக்கப்பட்ட கவலைக்குரிய முன்னுதாரணத்தையும் இந்தியா கவனிக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் மலேசியா மற்ற நாடுகள் மீதான அமெரிக்க வர்த்தகக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றவும், அமெரிக்க ஏற்றுமதி நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிராகச் செயல்படவும் கட்டாயப்படுத்துகிறது. மேலும், மூன்றாம் தரப்பு நாடுகளுடன் டிஜிட்டல் அல்லது தொழில்நுட்ப ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பு அமெரிக்காவின் ஆலோசனையைப் பெற வேண்டும். இத்தகைய விதிகள் மலேசியாவின் வெளியுறவு, வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் கொள்கைகள்மீது அமெரிக்காவிற்கு வீட்டோ அதிகாரத்தை திறம்பட வழங்குகின்றன. இந்த சூழ்நிலையை இந்தியா எப்படியாவது தவிர்க்க வேண்டும்.

                     

மூன்று-படிநிலைத் திட்டம்


இந்தியா முன்னேற சிறந்த வழி, தெளிவான மூன்று-படிநிலைத் திட்டமாகும். முதலாவதாக, இரண்டாம் நிலைத் தடைகளைத் தவிர்க்க அனுமதிக்கப்பட்ட ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது. இரண்டாவதாக, அத்தகைய இறக்குமதிகள் முடிந்ததும், இந்திய பொருட்களின் மொத்த வரிகளை 50 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகக் குறைக்கும் வகையில் 25 சதவீத “ரஷ்ய எண்ணெய்” வரியை நீக்குமாறு வாஷிங்டனை வலியுறுத்துதல். மூன்றாவதாக, அமெரிக்கா வரிகளைத் திரும்பப் பெற்ற பின்னரே, வரிகளை 25 சதவீதத்திலிருந்து உதாரணமாக 15 சதவீதமாகக் குறைப்பதற்கான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குதல்.


படிநிலை-1 அனுமதிக்கப்பட்ட ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்ததல் :  முன்னதாக விதிக்கப்பட்ட, 25 சதவீத வரி அமெரிக்காவிற்கான ஏற்றுமதியைப் பாதித்தது. ஆனால் இது ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், புதிய தடைகள் இந்தியாவின் நிதி மற்றும் டிஜிட்டல் அமைப்புகளை அச்சுறுத்துகின்றன. இவை இரண்டும் அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ள வலையமைப்புகளை பெரிதும் சார்ந்துள்ளன.


SWIFT :  Society for Worldwide Interbank Financial Telecommunication (SWIFT) -  உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்பு சங்கம்


இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரோஸ்நெஃப்ட் (Rosneft) அல்லது லுகோயிலிடமிருந்து (Lukoil) தொடர்ந்து வாங்கினால், விளைவு கடுமையாக இருக்கலாம். வங்கிகள் உலகளாவிய SWIFT வரிவிதிப்பு வலையமைப்பிற்கான அணுகலை இழக்க நேரிடும். மேலும், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களால் மென்பொருள் சேவைகளை நிறுத்தி வைப்பதால் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுத்தப்படலாம். வரிவிதிப்புகள் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் தடைகள் அமைப்புகளை முற்றிலுமாக முடக்கிவிடும். இது தொடர்பான விளைவுகள் ஏற்கனவே தெரியும். ரிலையன்ஸ் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து வருகிறது. மேலும், அதானி துறைமுகம் (Adani Ports) தடைசெய்யப்பட்ட நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட கப்பல்களைத் தடை செய்துள்ளது. இது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation(IOC)) மற்றும் HPCL-மிட்டல் எனர்ஜி லிமிடெட்-க்கு (HPCL) விநியோகிப்பதைப் பாதிக்கிறது.


நவம்பர் மாத இறுதியில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை கிட்டத்தட்ட முழுமையாக நிறுத்துவது தவிர்க்க முடியாததாகத் தெரிகிறது. இது விருப்பப்படி அல்ல, தேவையின் காரணமாகவே நடக்கிறது. இந்தியா அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிவதுபோல் தோன்றலாம். ஆனால் அமெரிக்க மென்பொருள் மீது இந்தியாவின் கனத்த சார்பு, சூழ்ச்சிக்கு கொஞ்சமே இடமளிக்கிறது.


படிநிலை-2 எண்ணெய் வரிவிதிப்பை நீக்க வாஷிங்டனை வலியுறுத்துதல் : இந்தியா அனுமதிக்கப்பட்ட ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியவுடன், 25 சதவீத "ரஷ்ய எண்ணெய்" வரியை திரும்பப் பெற வாஷிங்டனை வலியுறுத்த வேண்டும். அவ்வாறு செய்வதற்கு முன், இந்தியாவுக்கு தெளிவு தேவை. அது ரோஸ் நேஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயிலிடமிருந்து (Lukoil) மட்டுமே கொள்முதல்களை நிறுத்த வேண்டுமா அல்லது அனைத்து ரஷ்ய விநொயோகர்களிடமிருந்தும் வாங்குவதை நிறுத்த வேண்டுமா?


அக்டோபர் 22 அன்று அறிவிக்கப்பட்ட தடைகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் சுமார் 57 சதவீதத்தை உற்பத்தி செய்யும் நிறுவனமான ரோஸ் நேஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயிலுக்கு (Lukoil) மட்டுமே பொருந்தும். மீதமுள்ள 43 சதவீதம் அனுமதி பெறாத நிறுவனங்களிடமிருந்தும் வருகிறது. மேலும், அவர்களுடனான வர்த்தகம் இன்னும் சட்டப்பூர்வமானது. இருப்பினும், இந்தியா மீதான வாஷிங்டனின் வரி உத்தரவு இந்த வேறுபாட்டைப் புறக்கணித்து, ஒவ்வொரு பீப்பாய் ரஷ்ய எண்ணெயையும் மூலத்தைப் (source) பொருட்படுத்தாமல் தண்டித்தது.


இந்தியா அனுமதிக்கப்பட்ட இரண்டு நிறுவனங்களிலிருந்து இறக்குமதியை நிறுத்தியவுடன், கூடுதல் வரியை உயர்த்த அமெரிக்கா ஒப்புக்கொண்டால், இந்தியப் பொருட்களின் மீதான மொத்த வரிகள் 50 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகக் குறையும். இது வர்த்தக ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் இது அடையப்படும் ஒரு பெரிய நன்மையாக இருக்கும்.


படிநிலை-3 நியாயமான விதிமுறைகளின் கீழ் மட்டுமே வர்த்தக ஒப்பந்தம் செய்தல் : வாஷிங்டன் "ரஷ்ய எண்ணெய்" வரியை நீக்கிய பின்னரே இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டும். எண்ணெய் தடைகள் மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஆகிய இரண்டு பிரச்சினைகளும் தனித்தனியாக இருக்கவேண்டும். ஏனெனில், அவற்றை இணைப்பது இந்தியாவின் விருப்பங்களைக் கட்டுப்படுத்துகிறது.


பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும்போது, ​​அவை வர்த்தகத்தில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கப்பட்ட அதே வரிவிதிப்பு சலுகைகளுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கலாம். இவற்றில் சுமார் 15 சதவீத சராசரி தொழில்துறை வரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு வரி இல்லாத அணுகல் ஆகியவை அடங்கும்.


எத்தனால் உற்பத்திக்காக மரபணு மாற்றப்பட்ட (genetically modified (GM)) சோளம் இறக்குமதியை அனுமதிப்பதன் அபாயங்களை இந்தியா கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். அத்தகைய எந்தவொரு நடவடிக்கையும் நிலையான விலைகள் மற்றும் மரபணு மாற்றப்படாத விதை அமைப்புகளை நம்பியிருக்கும் உள்ளூர் சோள விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மரபணு மாற்றப்பட்ட (GM) இறக்குமதிகள் மற்றும் உள்ளூர் சோள வகைகளை தனித்தனியாக வைத்திருக்காவிட்டால் அவற்றை மாசுபடுத்தக்கூடும். எனவே, தனித்தனி சேமிப்பு, போக்குவரத்து மற்றும் விநியோக அமைப்புகளைக் கொண்ட பிரத்யேக ஆலைகளில் செயலாக்கம் நடக்க வேண்டும். தொடங்குவதற்கு முன், மரபணு மாற்றப்படாத சந்தைகளில் விவசாயிகளின் வருமானம், விதை பன்முகத்தன்மை மற்றும் ஏற்றுமதி நம்பகத்தன்மை ஆகியவற்றில் நீண்டகால தாக்கங்களை இந்தியா மதிப்பிட வேண்டும்.


மலேசியாவுடன் இலவச அனுமதியைப் பெற்ற பிறகு, பரந்த டிஜிட்டல் சலுகைகளை வழங்க அமெரிக்கா இந்தியாவை அழுத்தம் கொடுக்கும். இதில், இந்தியா மூன்று விஷயங்களைக் கேட்டுகொண்டுள்ளது. இதில், (i) டிஜிட்டல் சேவைகளுக்கு வரி விதிக்க வேண்டாம், (ii) தேசியளவில் சாதனையாளர்களை உருவாக்க அதன் சொந்த தரவைப் பகிரவோ பயன்படுத்தவோ கூடாது, அல்லது (iii) வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டாம் என்று குறிப்பிட்டது. இந்தக் கோரிக்கைகளில் பெரும்பாலானவை தடையில்லா வர்த்தக ஒப்பந்த (FTA) உரையில் உள்ள ஒரு பிரிவு மூலம் பூர்த்தி செய்யப்படலாம். "டிஜிட்டல் சேவைகள் மற்றும் அவற்றின் விநியோகர்களுக்கு பிரிவினையற்ற பயிற்சியை வழங்க இரு நாடுகளும் ஒப்புக்கொள்கின்றன." ஆனால், இத்தகைய நிலையை ஒப்புக்கொள்வது இந்தியா தனது சொந்த டிஜிட்டல் கொள்கைகளை வடிவமைப்பதைத் தடுக்கும் மற்றும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நீண்டகால நன்மையையும் அளிக்கும். 1997-ல் தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் (ITA-1) இணைந்த பிறகு, கணினி வன்பொருள் துறையில் ஏற்கனவே பெரும்பகுதியை இழந்த நிலையில், டிஜிட்டல் இடத்தில் அதே தவறை மீண்டும் செய்வதை இந்தியா தவிர்க்க வேண்டும். ஒரு பிணைப்பு "நடுநிலையான" (neutral) பிரிவு உண்மையில் இந்தியாவின் உள்ளூர் கண்டுபிடிப்புகளுக்கு வரி விதிக்க, ஒழுங்குபடுத்த அல்லது ஊக்குவிக்கும் அதிகாரத்தை முடக்கிவிடும். இது நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்தை பாதிக்கும்.


விவசாயம், மின் வணிகம், டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் எரிசக்தி ஆகியவற்றில் இத்தகைய உறுதிமொழிகள் ஒப்பந்தத்தை நியாயமற்றதாகவோ அல்லது ஒருதலைப்பட்சமாகவோ ஆக்குகிறதா என்பதை இந்தியா கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். ஒப்பந்தம் சமநிலையற்றதாகத் தோன்றினால், இந்தியா காத்திருக்கத் தேர்வுசெய்யலாம். 15-17 சதவீதத்திற்குப் பதிலாக 25 சதவீத வரியை செலுத்துவது கடினம். ஆனால் இன்னும் சமாளிக்கக்கூடியது. உதாரணமாக, சீனா ஏற்கனவே அதிக விகிதங்களைக் கையாள்கிறது. நீண்டகால பொருளாதார மற்றும் இராஜதந்திர ரீதியில் சுதந்திரத்தை சமரசம் செய்வதைவிட குறுகியகால செலவுகளை எதிர்கொள்வது நல்லது.


முன்மொழியப்பட்ட மூன்று-படிநிலை திட்டம் இரண்டு பிரச்சினைகளையும் நிர்வகிக்க ஒரு நடைமுறையான அணுகுமுறையை வழங்குகிறது. இந்தியா அவசரமாக அல்ல, படிப்படியாக தொடர வேண்டும். முதலில், எரிசக்தி விநியோகங்களைப் பாதுகாக்கவும், அடுத்து, நியாயமான வரிவிதிப்பு நிலைகளை மீட்டெடுக்கவும், இறுதியாக, விதிமுறைகள் சமமாக இருக்கும்போது மட்டுமே வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் வேண்டும்.       

          

இதற்கிடையில், தடைகளால் ஏற்படும் மற்றொரு சவாலை எதிர்கொள்ள இந்தியா திட்டமிட வேண்டும். ஒரு வாரத்தில், கச்சா எண்ணெய் விலைகள் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான ரஷ்ய எண்ணெய் இப்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், எரிசக்தி செலவுகள் இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா அதன் புதிய விநியோகர்களை பல்வகைப்படுத்தி, அதிக இறக்குமதி மசோதாவுக்கு தயாராக வேண்டும்.


சட்டவிரோத வரிவிதிப்புகள், ஆயுதமயமாக்கப்பட்ட எண்ணெய் மற்றும் டிஜிட்டல் தடைகள் நிறைந்த இந்த யுகத்தில், இந்தியாவின் நலன்களை அமைதியான மற்றும் இராஜதந்திர நடவடிக்கை மூலம் மட்டுமே பாதுகாக்க முடியும், விட்டுக்கொடுப்பதன் மூலம் அல்ல.


எழுத்தாளர் உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி அமைப்பின் (GLOBAL TRADE RESEARCH INITIATIVE (GTRI)) நிறுவனர் ஆவர்.

 


Original article:

Share:

சாட்சியச் சலுகையை நடைமுறைத் தேவைகளுடன் சமன்படுத்துதல்: வழக்கறிஞர்களுக்கு அழைப்பாணை அனுப்புவது குறித்து உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தது? -அமால் ஷேக்

 அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate) உச்சநீதிமன்றத்தின் இரண்டு மூத்த வழக்கறிஞர்களான அரவிந்த் ததர் மற்றும் பிரதாப் வேணுகோபால் ஆகியோருக்கு அழைப்பாணை (Summon) அனுப்பிய பின்னர் வழக்கு தொடர்ந்தது. இந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர் சங்கங்களால் பரவலாக விமர்சிக்கப்பட்டது.


உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) வழங்கிய உத்தரவுகளின்படி, காவல்துறை அல்லது வழக்குத் தொடரும் அமைப்புகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்கும்போது வழங்கப்பட்ட தகவல்தொடர்புகளை வெளியிட வழக்கறிஞர்களை அழைப்பதைத் தடை செய்துள்ளது.


இந்திய தலைமை நீதிபதி (Chief Justice of India (CJI)) பி.ஆர். கவாய், நீதிபதிகள் கே. வினோத் சந்திரன் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த ஆண்டு ஜூன் மாதம் நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்துக் கொண்ட ஒரு வழக்கில் தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பை வாசித்த நீதிபதி சந்திரன், புதிய நடத்தை விதிகளை உருவாக்குவதைவிட அல்லது ஒவ்வொரு அழைப்பாணைக்கும் நீதித்துறை மேற்பார்வையை ஏற்படுத்துவதைவிட, நடைமுறைத் தேவைகளுடன் சாட்சியச் சலுகையை சமநிலைப்படுத்த நீதிமன்றம் முயன்றதாகக் கூறினார்.


வழக்கறிஞர்-வாடிக்கையாளர் (attorney-client) தொடர்பு சலுகை பெற்றதா?


1872-ம் ஆண்டு இந்திய சாட்சியச் சட்டத்தை (Indian Evidence Act) மாற்றியமைத்த பாரதிய சாக்ஷய ஆதினியம் (Bharatiya Sakshya Adhiniyam (BSA)), 2023-ன் கீழ், சட்ட ஆலோசகர்களுக்கும் அவர்களது வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான தொடர்புகள் சலுகை பெற்றதாகக் கருதப்படுகிறது. இதன் பொருள், அவற்றை மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்த முடியாது.


பாரதிய சாக்ஷய ஆதினியத்தின் (BSA) பிரிவு 132, ஒரு வழக்கறிஞர் பணி முடிந்த பிறகும், ஒரு வழக்கறிஞர் ஒரு வாடிக்கையாளருடனான எந்தவொரு தொடர்பையும் வெளியிட முடியாது. இந்த விதிக்கு மூன்று விதிவிலக்குகள் மட்டுமே உள்ளன. முதலாவதாக, வாடிக்கையாளர் ஒப்புதல் அளித்தால், இரண்டாவதாக, தகவல் தொடர்பு ஒரு சட்டவிரோத நோக்கங்களுடன் தொடர்புடையதாக இருந்தால், மூன்றாவதாக, வழக்கறிஞர் தங்கள் பணியின்போது ஒரு குற்றம் செய்யப்படுவதைக் கவனித்தால், இது தொடர்பாக இந்த விதியின் கீழ் வெளிப்படுகிறது


ஒரு வழக்கறிஞர் வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ அல்லது மின்னணு வடிவிலோ செய்யப்பட்டாலும், தனது வாடிக்கையாளருடன் சாட்சியமளிப்பதிலிருந்து அல்லது உரையாடல்களை வெளிப்படுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்.


நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள்


ஒவ்வொரு அழைப்பாணைக்கும் நீதித்துறை மறுஆய்வின் புதிய நிலையை அறிமுகப்படுத்தாமல், சாட்சிய சலுகைக்கும் விசாரணையின் தேவைகளுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கும்போது, பாரதிய சாக்ஷய ஆதினியத்தின் (BSA) பிரிவு 132-ன் கீழ் உள்ள சலுகை மதிக்கப்பட வேண்டும் என்றும், சட்டவிரோத செயலைச் செய்ய அல்லது ஒரு குற்றத்தை மறைக்க ஆலோசனை பயன்படுத்தப்பட்டபோது, இதுபோன்ற வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளைத் தவிர, ஒரு வாடிக்கையாளர் என்ன பகிர்ந்து கொண்டார் என்பதை வெளிப்படுத்த ஒரு வழக்கறிஞரை அழைக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.


இத்தகைய விதிவிலக்கு பொருந்தும் என்று ஒரு அதிகாரி நம்பினால், அழைப்பாணையில் அதை நியாயப்படுத்தும் குறிப்பிட்ட உண்மைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்றும், காவல்துறை கண்காணிப்பாளர் பதவிக்கு அடுத்த நிலையில் உள்ள ஒரு உயர் அதிகாரியிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.


வழக்கு, ஆலோசனை அல்லது வழக்குக்கு முந்தைய பணிகளில் ஈடுபடும் வழக்கறிஞர்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என்று நீதிமன்றம் கூறியது. இருப்பினும், இது உள்-சட்ட ஆலோசகர்களுக்குப் (in-house legal advisers) பொருந்தாது. ஏனெனில், அவர்கள் ஊழியர்களாக வேலை செய்கிறார்கள். இருப்பினும், உள்-சட்ட ஆலோசகர்களுக்கு செய்யப்படும் எந்தவொரு தொடர்பும் பாரதிய சாக்ஷய ஆதினியத்தின் (BSA) பிரிவு 134-ன் கீழ் பாதுகாக்கப்படுகிறது.


ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை தயாரிப்பது குறித்தும் நீதிமன்றம் கவனம் செலுத்தியது. குற்றவியல் வழக்குகளில், வழக்கறிஞர்களால் முன்வைக்கப்படும் கருத்துகணிப்புகள், சலுகைகள் உட்பட, பரிசீலிக்கப்படுவதை உறுதிசெய்து, விசாரணையை இயக்க அதிகார வரம்பு நீதிமன்றம் (jurisdictional court) அனுமதிக்கப்படுகிறது. சிவில் வழக்குகளில், ஆவணங்கள் நேரடியாக புலனாய்வாளர்களுக்கு வழங்கப்படாமல், நீதிமன்றத்திலேயே சமர்ப்பிக்கப்பட வேண்டும். வழக்கறிஞர் மற்றும் இருவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும், பிற வாடிக்கையாளர்களுடன் தொடர்புடைய எந்தவொரு தகவலும் இரகசியமாக இருக்க வேண்டும்.


வழக்கின் பின்னணி


அமலாக்க இயக்குநரகம் உச்சநீதிமன்றத்தின் இரண்டு மூத்த வழக்கறிஞர்களான அரவிந்த் ததர் மற்றும் பிரதாப் வேணுகோபால் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பியதை அடுத்து நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணையை (suo motu cognisance) மேற்கொண்டது. இதை வழக்கறிஞர்கள் சங்கங்கள் கடுமையாக கண்டித்தன. கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் லிமிடெட் (Care Health Insurance Ltd) மூலம் ஊழியர் பங்கு விருப்பத் திட்டங்கள் (Employee Stock Option Plans (ESOP)) ரெலிகேர் எண்டர்பிரைசஸ்  (Religare Enterprises) நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரஷ்மி சலுஜாவுக்கு ஒதுக்கப்பட்டது தொடர்பான அமலாக்க இயக்குநரகத்தின் (ED) விசாரணை தொடர்பாக வழக்கறிஞர்கள் அழைக்கப்பட்டனர்.


இந்த நிறுவனம் பின்னர் அழைப்பாணையை திரும்பப் பெற்றிருந்தாலும், இந்த நடவடிக்கை உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (Supreme Court Bar Association (SCBA)), உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பதிவு சங்கம் (Supreme Court Advocates on Record Association (SCORA)) மற்றும் பிற சங்கங்களிலிருந்து கண்டனத்தைப் பெற்றது. இது சட்ட பிரதிநிதித்துவத்திற்கான உரிமையை பலவீனப்படுத்தியதாக அவர்கள் கூறினர். 


இந்த வழக்கை விசாரிக்கும்போது, ​​சட்டப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் "அவர்கள் சட்ட வல்லுநர்கள் என்பதால் அவர்களுக்கு உரிமைகள் மற்றும் சலுகைகள் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன" என்றும், அத்தகைய அழைப்பாணை "சட்டத் தொழிலின் சுதந்திரத்தை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் நீதி நிர்வாகத்தின் சுதந்திரத்திற்கு நேரடி அச்சுறுத்தலாகவும் இருக்கும்" என்றும் ஜூன் மாதம் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.



Original article:

Share:

8-வது ஊதியக் குழுவின் பணி வரையறைகள் அங்கீகரிக்கப்பட்டன: இதன் பொருள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியங்கள், ஓய்வூதியங்களில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து… -ஆஞ்சல் மேகசைன்

 ‘8-வது ஊதியக் குழு 2025 விதிமுறைகள், தாக்கம் | பழைய ஓய்வூதியத் திட்டம் எதிர். புதிய ஓய்வூதியத் திட்டம்’ : 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஏப்ரல் 2027-ல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அவை ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும். தற்போது இந்த ஊதியக்குழு பற்று கீழே குறிப்பிட்டுள்ளன. அவை,


8-வது ஊதியக் குழு 2025 : இந்த ஆண்டு ஜனவரியில் 8-வது ஒன்றிய ஊதியக் குழு (8th Central Pay Commission) அமைக்கப்பட்டதாக அறிவித்தபிறகு, செவ்வாய்க்கிழமை அக்டோபர் 28 அன்று அரசாங்கம் 8-வது ஒன்றிய ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகளை (terms of reference (ToR)) அங்கீகரித்தது. இது கிட்டத்தட்ட 50 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் (pension), ஊதியம் (pay) மற்றும் சலுகைகளை (allowances) திருத்துவதற்கான வழியை தெளிவுபடுத்துகிறது. திருத்தப்பட்ட சலுகைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும்.


8-வது ஒன்றிய ஊதியக் குழுவிற்கு, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் இந்திய பத்திரிகை கவுன்சிலின் தலைவருமான நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் இந்த குழுவிற்கு தலைமை தாங்குவார். மேலும் நீதிபதி தேசாய் தவிர, இந்தக் குழுவில் IIM பெங்களூரு பேராசிரியர் புலக் கோஷ் (பகுதி நேர) உறுப்பினராகவும் , பெட்ரோலிய செயலாளர் பங்கஜ் ஜெயின் உறுப்பினர்-செயலாளராகவும் இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.


இந்தியாவில் ஊதியக் குழுவின் (Pay Commission) பங்கு


ஒன்றிய அரசால் அதன் ஊழியர்களின் ஊதிய முறையை திருத்தம் மேற்கொண்டு ஓய்வூதிய தொடர்பான சலுகைகளை தீர்மானிக்க தோராயமாக ஒவ்வொரு பத்தாண்டுகாலத்திற்கும் ஒரு ஊதியக்குழு அமைக்கப்படுகிறது. 1947 முதல், ஏழு ஊதியக்குழு நிறுவப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பிற சலுகைகளில் மாற்றங்களை ஆராய்ந்து பரிந்துரைக்க இந்த ஆண்டு ஜனவரியில் 8-வது ஒன்றிய ஊதியக்குழுவை அமைப்பதாக அரசாங்கம் அறிவித்தது.


பல்வேறு அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் கூட்டு ஆலோசனை இயக்க ஊழியர்கள் தரப்புடன் கலந்தாலோசித்த பிறகு, பணிக்கால விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தக் குழு 18 மாதங்களுக்குள் அதன் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.


பணி நியமனத்தின் படி


பணி வரையறைகளின்படி (terms of reference (ToR)), 8-வது ஊதியக் குழு நாட்டின் பொருளாதார நிலைமைகள் மற்றும் நிதிக் கட்டுப்பாட்டின் தேவை, மேம்பாட்டு செலவுகள் மற்றும் நலத்திட்டங்களுக்கு போதுமான நிதி கிடைப்பதை உறுதி செய்வதற்கான தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.


மாநிலங்கள் பெரும்பாலும் இந்த பரிந்துரைகளை சில மாற்றங்களுடன் பின்பற்றுவதால், அதன் பரிந்துரைகள் மாநில அரசுகளின் நிதியை எவ்வாறு பாதிக்கலாம் என்பதை குழு ஆய்வு செய்யும். ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையில் உள்ள ஊழியர்களின் தற்போதைய ஊதிய முறை, சலுகைகள் மற்றும் பணி நிலைமைகளையும் இந்தக் குழு மதிப்பாய்வு செய்யும்.


இந்த பரிந்துரை விதிமுறைகள், 7-வது ஊதியக் குழுவின் விதிமுறைகளைப் போலவே இருந்தாலும், பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டங்களின் நிதியில்லாத செலவைக் கருத்தில் கொண்டு இந்த முறை ஒரு கூடுதல் கால அவகாசம் சேர்க்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme (OPS)) மீட்டெடுப்பதற்கான தொடர்ச்சியான கோரிக்கைகளின் பின்னணியில் இது குறிப்பிடத்தக்க நிலையைக் கொண்டுள்ளது. இதில் நிதியில்லாத, பங்களிப்பு இல்லாத திட்டத்தின்கீழ் ஜனவரி 1, 2004-க்கு முன்பு பணியமர்த்தப்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வுக்குப் பிறகு வரையறுக்கப்பட்ட சலுகைகளைப் பெறுவார்கள். அவர்கள் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50 சதவீதத்தை மாதாந்திர ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.


ஜனவரி 2004-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களை உள்ளடக்கிய தேசிய ஓய்வூதிய முறையின் (National Pension System (NPS)) கீழ், பங்களிப்புகள் வரையறுக்கப்படுகின்றன. ஆனால், சலுகைகள் சந்தை நிலையைப் பொறுத்து அமைகிறது. கடந்த ஆண்டு, அரசாங்கம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme (UPS)) எனப்படும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை (new pension plan) அறிமுகப்படுத்தியது. இது வரையறுக்கப்பட்ட உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் முழு ஓய்வூதியத்திற்குத் தேவையான சேவையை முடிக்காத ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை வழங்குகிறது. தகுதிவாய்ந்த 10 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கீழ், நிறுவனம் ரூ.10,000 உறுதி செய்யப்பட்ட ஊதியத்தையும், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவைக்குப் பிறகு "முழு உறுதி செய்யப்பட்ட ஊதியத்தையும்" (full assured payout) வழங்குகிறது.


காலக்கெடு


8-வது ஒன்றிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஏப்ரல் 2027-ல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அவை ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும், அதாவது அந்த தேதியிலிருந்து ஊதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வுகள் அந்த தேதியிலிருந்து பழையமுறை செயல்படுத்தப்படும். இதில் உள்ள பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும்போது நிலுவைத் தொகைகள் வழங்கப்படும். இருப்பினும், சலுகைகள் எதிர்காலத்தில் திருத்தப்படும்.


குழுவின் பரிந்துரைகள் உரிய தேதிக்குப் பிறகு நடைமுறைக்கு வர சிறிது காலம் எடுக்கும். உதாரணமாக, 5-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த ஊழியர்கள் 19 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. மேலும், 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தும்போது 32 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 2016-ல், உரிய தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் செயல்படுத்தப்பட்டன.


நிதியின் தாக்கங்கள்


ஊழியர்களுக்கான சம்பளம் அரசாங்கத்தின் வருவாய் செலவினத்தில் பெரும் பங்கு வகிப்பதால், ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அரசாங்கத்தின் நிதிக் கணக்கில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2025-26-ஆம் ஆண்டில் ஒன்றிய அரசின் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் சலுகைகளுக்கான செலவு ரூ.7 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது வருவாய் செலவினத்தில் சுமார் 18 சதவீதமாகும்.


முந்தைய 7-வது ஒன்றிய ஊதியக் குழுவின் ஊதியம், சலுகைகள் மற்றும் ஓய்வூதியத்தில் 23.55 சதவீத அதிகரிப்பை பரிந்துரைத்தது. இது ஒன்றிய அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் வருடாந்திர செலவு ஏற்பட்டது.


ஊதிய பட்டைகள் மற்றும் தர ஊதிய முறை, பொதுமக்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் இராணுவ செவிலியர் சேவைக்கு தனித்தனி ஊதிய தொகுப்பாக ஊதிய அட்டவணையால் மாற்றப்பட்டது. கீழ்மட்டத்தில் புதிதாக சேரும் ஊழியரின் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.7,000-லிருந்து 18,000-ஆக உயர்த்தப்பட்டது, அதேநேரம் புதிதாக சேரும் வகுப்பு I அதிகாரிக்கு ரூ.56,100 ஆக நிர்ணயிக்கப்பட்டது.  கடைசி ஊதிய உயர்வு அளவின்படி, 8-வது ஒன்றிய ஊதியக் குழுவின் கீழ் குறைந்தபட்ச ஊதியம் ரூ.46,000-க்கும் அதிகமாக உயரக்கூடும்.



Original article:

Share: