அரசியலமைப்பு கருவறைக்குள் நுழைகிறது -மனுராஜ் சண்முகசுந்தரம், ஸ்வேதா சேதுபாஸ்கரன்

 நீதிமன்றத்தில் அதிகமாக தொடுக்கப்படும் மதரீதியிலான வழக்குகள், மத நடைமுறைகள் அரசியலமைப்பு கொள்கைகளை பலவீனப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதில் நீதித்துறையின் நீடித்த பங்கை வெளிக்காட்டுகின்றன.


சில நாட்களுக்கு முன்னர், திருப்பரங்குன்றம் தீபத் தூண் மற்றும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் தென்கலை பிரிவினரின் பாடல்களைப் பாடும் உரிமைகள் குறித்த இரண்டு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகள், மதப் பிரச்சனைகளில் நீதித்துறையின் பங்கை எடுத்துக்காட்டுகின்றன. இந்த விவகாரங்கள் உயர்நீதிமன்றத்தை எட்டியுள்ளன தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் மூலம் தெரிய வந்துள்ளது. முதலாவதாக, மத பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று அரசியலமைப்புச் சட்டம் உள்ளது குறிப்பிடுகிறது. இரண்டாவதாக, கோயில்கள் என்பது நீதிமன்றமோ அல்லது அரசு தலையிட முடியாத தனியார் இடங்கள் என்ற வாதத்தை முற்றிலுமாக தவிர்க்கிறது. இது போன்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மதத்தைச் சுற்றியுள்ள சட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியமானதாக  மாறியுள்ளது.


குடிமை உரிமைகள் பிரச்சனைகளிலிருந்து மாற்றம்


நூறு ஆண்டுகளுக்கு முன்பு, கோயில் பிரச்சனைகளை குடிமை நீதிமன்றங்கள் கையாண்டன. ராமநாதபுரத்தில் உள்ள கமுதி கோயிலுக்குள் நுழைவது தொடர்பான வழக்கில், கோயில் வளாகத்திற்குள் நுழைவதற்கான குடிமை உரிமைகள் (civil rights) தொடர்பாக லண்டனில் இருந்த மேலவை (Privy Council) வரை போராட்டங்கள் நடந்தன. 1908-ஆம் ஆண்டு சங்கரலிங்க நாடன் மற்றும் ஆர்எஸ் vs ராஜா ராஜேஸ்வரா துரை மற்றும் ஆர்எஸ் (Sankaralinga Nadan and Ors v. Raja Rajeswara Dorai and Ors) வழக்கில், நாடார் சமூகத்தினர் கமுதி கோயிலுக்குள் நுழைய உரிமை உள்ளதா என்பதை முடிவு செய்ய மேலவை அழைக்கப்பட்டது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், கோயில் நுழைவு மற்றும் இணை வழிபாட்டு உரிமை (co-worship) தொடர்பான இது போன்ற வழக்குகள் குடிமை உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளாகக் கருதப்பட்டன.


1927-ஆம் ஆண்டு, கோயில்களையும் அவற்றின் அறக்கட்டளைகளையும் நிர்வகிக்க, சென்னை மாகாண அரசு, சென்னை இந்து சமய அறக்கட்டளைச் சட்டத்தை (Madras Hindu Religious Endowments Act) இயற்றியது. அடுத்த 20 ஆண்டுகளில் பல புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்த சட்டங்கள் உள்ளூர் கோயில் குழுக்களை அமைப்பதற்கும் கோயில் நிதிகளைத் தணிக்கை செய்வதற்கும் உதவியது. இது மாகாண அரசாங்கத்தின் மேற்பார்வைப் பங்கை உறுதிப்படுத்தியது.


1950-ஆம் ஆண்டு அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டபோது இவை அனைத்தும் மாறின. அரசியலமைப்பு சட்டம் மதத்தைப் பின்பற்றுவதற்கான அடிப்படை உரிமைகளை (rights to practice religion) அறிமுகப்படுத்தியது. பிரிவுகள் 25 மற்றும் 26-ல் உள்ள வழிபாட்டு சுதந்திர உரிமைகள் தனிநபர்களுக்கும் மதப் பிரிவுகளுக்கும் பொருந்தும் (religious denominations) வகையில் உருவாக்கப்பட்டன. இருப்பினும், மதத்தைப் பின்பற்றுவதற்கான அல்லது வெளிப்படுத்துவதற்கான உரிமைகள் பொது ஒழுங்கு, சுகாதாரம் மற்றும் ஒழுக்கத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த சுதந்திரம் குறைக்கப்பட்டது. இது மக்களின் உணர்வையோ அல்லது பொது ஒழுங்கையோ (public conscience) புண்படுத்தும்போது அரசு வழிபாட்டு முறையை ஒழுங்குபடுத்த அனுமதித்தது.


இந்தக் காலகட்டம் நீதித்துறை சிந்தனையில் ஒரு முக்கியமான மாற்றத்திற்கு வழிவகுத்தது. இந்த விவகாரங்கள் குடிமை உரிமை பிரச்சனைகள் என்ற முந்தைய பார்வையில் இருந்து, நீதிமன்றங்கள் அவற்றை அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் பார்க்கத் தொடங்கின. இதன் மூலம், நீதித்துறை, பொது நலன் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, தனிநபரின் சமத்துவம் (individual to equality) மற்றும் மத சுதந்திரத்திற்கான (religious freedom) உரிமைகளை உறுதிப்படுத்தியது. இது கோயில் நுழைவு, மத சுதந்திரங்கள் மற்றும் பூசாரிகள் நியமனத்தில் சமத்துவம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள நீதித்துறை உத்தரவுகளுக்கு வழிவகுத்தது. இந்த உரிமைகள் எவ்வாறு குறைக்கப்பட வேண்டும் என்பது இப்போது நீதிமன்றங்களில் விவாதப் பொருளாக உள்ளது.


இருப்பினும், முந்தைய மதராஸ் மாகாணத்தைச் சேர்ந்த தென் மாநிலங்கள், இந்த நீதித்துறையை கொண்டு வந்ததற்கு பெருமை சேர்க்க வேண்டும். இந்த மாநிலங்கள் சிறந்த கோயில் நிர்வாகத்தை உருவாக்குவதற்காக இந்து சமய அறநிலையத்துறை (Hindu Religious and Charitable Endowments Act) சட்டத்தை இயற்றுவதன் மூலம் நடவடிக்கைகளை தொடங்கியது. இதன் விளைவாக, இந்தச் சட்டங்களும் ஒழுங்குமுறைகளும் நீதித்துறை மேற்பார்வையைப் பெற்றன. ஏனெனில், அரசின் தலையீடு மதப் பிரிவுகளின் உரிமைகளை மதிக்கிறதா, அதே நேரத்தில் மற்றவர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்கிறதா என்பதைத் தீர்மானிக்க நீதிப்பேராணை மனுக்களை (writ) நீதிமன்றங்களில் தாக்கல் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இது கடந்த 70 ஆண்டுகளில் கோயில் தொடர்பான நீதித்துறை வளர்ச்சிக்கு வழிவகுத்தது.


நீதிமன்றங்கள் பயன்படுத்தும் சோதனை


இந்தச் சட்டக் குழுவை உருவாக்குவதில், மதப் பழக்கவழக்கங்கள் அரசியலமைப்புச் சட்டக் கொள்கைகளுக்கு எதிரானவையா என்பதை நீதிமன்றங்கள் ஆய்வு செய்துள்ளன. உதாரணமாக, குறிப்பிட்ட நபர்கள் ஒரு இடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாவிட்டால் அல்லது ஒரு பாரம்பரிய நடைமுறை (customary practice) அடிப்படை உரிமைகளுக்கு முரணாக இருந்தால், இந்தப் பிரச்சினைகள் அரசியலமைப்பு நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்லப்படலாம். பின்னர் அரசியலமைப்பு நீதிமன்றம் அத்தகைய வழக்கம் அல்லது நடைமுறை அத்தியாவசிய மத நடைமுறை சோதனையால் பாதுகாக்கப்படுகிறதா என்பதைக் கண்டறியும் பணியை மேற்கொள்கிறது. உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட இந்த சோதனை, ஒரு வழக்கம் அல்லது நடைமுறை உண்மையிலேயே ஒரு மதத்தின் இன்றியமையாத பகுதியாக உள்ளதா என்பதை தீர்மானிக்கப் பயன்படுகிறது. அது முக்கியமானதாகக் கருதப்படாவிட்டால், அது "மதச்சார்பற்றது" (secular) என்று கருதப்படுகிறது மற்றும் நீதிமன்றங்களால் மதிப்பாய்வு (judicial guidance) செய்யப்படலாம். எனவே, ஒரு நடைமுறை இந்த சோதனையில் தோல்வி அடைந்தால், நீதிமன்றம் அரசியலமைப்பு கொள்கைகளுக்கு (constitutional principles) ஏற்ப உத்தரவுகளை பிறப்பிக்கும்.


அடுத்தடுத்த தீர்ப்புகளில் அதன் முரண்பாடான விளக்கம் குறித்த விமர்சனங்கள் இருந்தபோதிலும், நீதிமன்றங்கள் மதத்தின் முக்கியக் கொள்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் முடிவுகளுக்கு ஒரு வெளிபடைத்தன்மையைக் கொண்டுவர இந்தச் சோதனையைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. இந்திய 2018-ஆம் ஆண்டு இளம் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் Ors vs. கேரள மாநிலம் (சபரிமலை கோயில் வழக்கு) ஆகியவற்றில், மதத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படும் நடைமுறைகள்கூட அரசியலமைப்பு கொள்கைகளுக்கு எதிராக இருந்தால், நீதித்துறை ஆய்விலிருந்து பாதுகாக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது இந்த அணுகுமுறை குறிப்பிடத்தக்க ஒருங்கிணைப்புக்கு ஏற்றதாக இருந்தது. எனவே, நாட்டின் சட்டம் மத சுதந்திரங்கள் அரசியலமைப்பு ஒழுக்கத்திற்கு ஏற்றதாக இருந்தது. இது நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் (justice, liberty, equality and fraternity) கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது.


அரசியலமைப்பு நீதிமன்றங்களில் மத சர்ச்சைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, மதங்களுக்குள் மற்றும் மதங்களிடையே ஏற்பட்டுள்ள சித்தாந்த ரீதியான பிளவை மட்டுமல்லாமல், மத நடைமுறைகள் அரசியலமைப்பு கொள்கைகளை பாதிக்காமல் பார்த்துக்கொள்வதில் நீதித்துறையின் நீடித்த பங்கையும் பிரதிபலிக்கிறது. எனவே, மத சர்ச்சைகள் மீதான நீதித்துறை மறுஆய்வு ஒரு வழக்கத்திற்கு மாறானது என்று கருத முடியாது; மாறாக, நம்பிக்கையை அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுடன் இணைத்து இணக்கமாக்க முயலும் நீண்டகால அரசியலமைப்பு ஈடுபாட்டின் தொடர்ச்சியாகவே காணப்பட வேண்டும்.


சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனுராஜ் சண்முகசுந்தரம், திமுக செய்தித் தொடர்பாளர்; சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்வேதா சேதுபாஸ்கரன்.


Original article : The Constitution enters the sanctum -Manuraj Shanmugasundaram, Swetha Sethubaskaran

Share:

நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) அடிப்படை திருத்தப் பணியானது, மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியை அளவிடுகிறது. -சௌரப் கார்க்

 விலைகள் எவ்வாறு அன்றாட வாழ்க்கையையும் கொள்கை முடிவுகளையும் வடிவமைக்கின்றன என்பதை இது இன்னும் சிறப்பாகக் கண்டறிய உதவும்.


பணவீக்கம் என்பது மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் பொருளாதாரக் குறியீடுகளில் ஒன்றாகும். இது மக்கள் தங்கள் அன்றாட வீட்டுச் செலவுகளில் நேரடியாக அனுபவிக்கும் ஒரு விஷயமாகும். நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)) என்பது, வீடுகளில் வழக்கமாக வாங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளைக் கண்காணிப்பதன் மூலம் இதை வெளிப்படுத்துகிறது; அதாவது அன்றாடச் செலவுகளை பணவீக்கத்தின் அதிகாரப்பூர்வ அளவீடாக இது மாற்றுகிறது. சாதாரண மக்களைப் பொறுத்தவரை, நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) என்பது அன்றாட வாழ்க்கை நடைமுறைகளின் கண்ணாடியைப் போல செயல்படுகிறது. உணவு, வீட்டு வாடகை மற்றும் பயணத்திற்கான எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றங்களை இது துல்லியமாக காட்டுகிறது.


வெறும் எண்கள்  மட்டுமல்ல


இது வெறும் ஒரு எண்ணாகத் தோன்றினாலும், நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) என்பது ஒவ்வொரு குடும்பத்தையும் பிரதிபலிக்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகள் கட்டுப்படியாகும் விலையில் இருப்பதை உறுதிசெய்ய, வருமானம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் மாற்றங்களைச் செய்ய இது வழிகாட்டுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்த முடிவுகளை எடுக்க, நுகர்வோர் விலைக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கத்தையே முக்கியக் குறியீடாகப் பயன்படுத்துகிறது. நுகர்வோர் விலைக் குறியீடு உண்மையான நிலவரத்தைப் பிரதிபலிக்கும் போது, அரசாங்கத்தின் கொள்கைகள் மக்களின் உண்மையான அனுபவங்களுக்கு ஏற்பச் சிறப்பாகச் செயல்படுகின்றன.


பணவீக்கம் என்பது வெறும் விலை உயர்வு சார்ந்தது மட்டுமல்ல. அந்த மாற்றங்கள் குடும்ப வரவு செலவுகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றியதும் ஆகும். எனவே, விலைகளைக் கண்காணிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு தற்போதைய மக்களின் செலவு முறைகளை நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) பிரதிபலிக்கிறதா என்பதை உறுதி செய்வதும் முக்கியமாகிறது. இதனால்தான், இந்தியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படை ஆண்டை 2012-ஆம் ஆண்டிலிருந்து 2024-ஆம் ஆண்டுக்கு மாற்றுவது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


கடந்த திருத்தத்திற்குப் பிறகு, பொருளாதாரம் பெருமளவில் மாறியுள்ளது: நகரமயமாக்கல் அதிகரித்துள்ளது, சேவைத் துறைகள் வளர்ந்துள்ளன, டிஜிட்டல் தளங்கள் மக்களின் நுகர்வு பழக்கத்தை மாற்றியுள்ளன. மேலும், வீட்டுச் செலவுகள் பலதரப்பட்டதாக மாறியுள்ளதாகக் கூறப்படுகின்றன. 


எனவே, 2024-ஆம் ஆண்டிற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) வரிசையானது, 2023–24-ஆம் ஆண்டின் சமீபத்திய 'குடும்ப நுகர்வுச் செலவின ஆய்வு' முடிவுகளின் அடிப்படையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் செலவு செய்யும் பழக்கவழக்கங்கள் மாறியுள்ளதால், நுகர்வோர் விலைக் குறியீட்டுக் கணக்கீட்டில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


வீட்டு உபயோகத்திற்காக மக்கள் தற்போது எவற்றிற்கு அதிக பணம் செலவிடுகிறார்களோ, அந்தப் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவமும், குறைவாகச் செலவிடும் பொருட்களுக்கு குறைந்த முக்கியத்துவமும் அளிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) மக்களின் வரவு செலவு முறைகளும் உண்மையாகவே பாதிப்புக்கு உள்ளாகும் விலை மாற்றங்களைத் துல்லியமாகக் கணக்கிட இது உதவுகிறது. மேலும், மக்களின் வருமான உயர்வு மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறையால், சேவைத் துறையில் மக்கள் அதிகம் செலவிடுவது போன்ற புதிய மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் நுகர்வுப் பொருட்களின் பட்டியலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


"நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) எதைக் கணக்கிடுகிறது என்பதைப் போலவே, அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை மேம்படுத்துவதும் முக்கியமானது. மாற்றியமைக்கப்பட்ட இந்தப் புதிய முறை, இந்தியாவின் தனித்துவமான அம்சங்களைத் தக்கவைத்துக்கொண்டே சர்வதேச தரத்திற்கு நெருக்கமாகவும் உள்ளது. இது இந்தியாவின் பணவீக்கத்தை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுவதை எளிதாக்குகிறது. மேலும், இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில் கவனம் செலுத்துவதுடன், உலகளாவிய பொருளாதாரச் சூழலில் விலை மாற்றங்கள் எவ்வாறு பொருந்துகின்றன என்பதைப் புரிந்துகொள்ள கொள்கை முடிவெடுப்பவர்களுக்கு இது உதவுகிறது.


நுகர்வோர் விலை குறியீட்டிற்கான தரவு சேகரிப்பு முறை, இன்றைய மக்களின் ஷாப்பிங் பழக்கத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கண்டறிய வழக்கமான சந்தை ஆய்வுகள் இன்றும் தொடர்கின்றன. அதேவேளையில், 2024-ஆம் ஆண்டின் புதிய வரைமுறைப்படி, தொலைத்தொடர்பு (Telecom), விமானப் பயணம் போன்ற சேவைகள் மற்றும் இதர சில சேவைகளுக்கான இணையப் பயன்பாடு விலைகளும் இப்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.


ஒரு விரிவான தரவுத்தளம்


புதிய தொடரில் கணினி உதவியுடன் விலைச் சேகரிப்பு முறையைப் பயன்படுத்துவது, மனிதர்களால் ஏற்படும் தவறுகளைக் குறைத்துள்ளது. மேலும், உடனுக்குடன் தரவுகளைச் சரிபார்க்க வழிவகை செய்துள்ளதால், விலைப் புள்ளிவிவரங்களின் தரம் மற்றும் வேகம் மேம்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) என்பது வங்கிக் கடன் வட்டி விகிதங்கள், சேமிப்பிற்கான ஆதாயங்கள் மற்றும் விலை உயர்வு குடும்ப வரவு செலவு முறைகளை எவ்வாறு பாதிக்கிறது போன்ற அன்றாட முடிவுகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


புதிய அடிப்படை ஆண்டின்படி, நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) ரயில் கட்டணங்கள், தபால் கட்டணங்கள், எரிபொருள் விலைகள் மற்றும் ரேஷன் கடைகள் (Public Distribution System (PDS)) மூலம் விற்கப்படும் பொருட்கள் உள்ளிட்ட அரசு தரவுகளை அதிகம் சார்ந்துள்ளது. இதன் விளைவாக, இந்த விவரங்கள் மிகவும் துல்லியமாக சேகரிக்கப்படுகின்றன. இது சந்தை ஆய்வுகளில் ஏற்படும் பிழைகளையும் ஒருதலைப்பட்சமான கருத்துக்களையும் குறைக்கிறது. கள ஆய்வுகள், அரசு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் விலை ஆதாரங்களை ஒன்றிணைப்பது முந்தைய முறைகளைவிட ஒரு சிறந்த முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இது விலை மாற்றங்கள் குறித்த மிகவும் நம்பகமான  தகவல்களை வழங்குகிறது.


இந்த அளவிலான ஒரு அடிப்படைத் திருத்தப் பணியின் பின்னணியில் உள்ள பிரம்மாண்டமான நிறுவன முயற்சியைக் குறிப்பிடுவது மிகவும் அவசியமாகிறது. இதில் கள அலுவலகங்கள், புள்ளிவிவரப் பிரிவுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர் குழுக்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.


இந்த செயல்முறையானது முறையான ஆய்வு, பல்வேறு விருப்பங்களைச் சோதித்தல், மற்றும் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)), இந்த மாற்றங்கள் வெளிப்படையாகவும், எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், மற்றும் முறையான அறிவியல் அடிப்படையில் அமைந்திருப்பதை உறுதிசெய்ய, நிபுணர் குழுக்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது.


சூழலைப் பொறுத்தது


ஒவ்வொரு புள்ளிவிவரத்திற்குப் பின்னாலும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதார அனுபவங்கள் மறைந்துள்ளன என்பதையும், எண்கள் என்பவை வெறும் குறியீடுகள் அல்ல, அவை மனிதர்களைப் பற்றியவை என்பதையும் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) நமக்கு நினைவூட்டுகிறது. விலைவாசி உயர்வு எவ்வாறு அன்றாட வாழ்க்கையை மாற்றியமைக்கிறது என்பதையும், அரசின் கொள்கை முடிவுகளில் அது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் இது அமைதியாகக் கண்காணிக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 'அடிப்படை ஆண்டு மாற்றத் திருத்த' நடவடிக்கையின் மூலம், இந்த நுகர்வோர் விலை குறியீட்டுத் தரவுகள் துல்லியமாகவும், தற்காலத்திற்கு ஏற்றதாகவும், காலப்போக்கில் மாறாத நிலைத்தன்மை கொண்டதாகவும் இருப்பதை புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) உறுதி செய்துள்ளது. இதன் மூலம், நுகர்வோர் விலைக் குறியீடு என்பது வெறும் எண்ணாக மட்டும் இல்லாமல், நாட்டின் நிலையை பிரதிபலிக்கும் ஒரு உண்மையான கண்ணாடியாகத் திகழ்கிறது.


சௌரப் கார்க், இந்திய அரசின் புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளராக உள்ளார்.


Original article : The CPI base revision exercise measures a slice of life -Saurabh Garg

Share:

SC, BC மற்றும் DNT பிரிவினருக்கான PM-DAKSH திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர்களில் பாதிக்கும் குறைவானவர்களுக்கே வேலை கிடைத்துள்ளது. -நித்திகா பிரான்சிஸ்

இந்தத் திட்டத்தின்கீழ் உள்ள பயிற்சி நிறுவனங்கள், பயிற்சி பெற்றவர்களில் 70% பேருக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.


பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி மக்களவையில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2021 மற்றும் 2024-ஆம் ஆண்டுக்கு இடையில் பிரதம மந்திரி - திறமையும் திறனும் கொண்ட பயனாளிகளுக்கானத் (Pradhan Mantri – Dakshta Aur Kushalta Sampann Hitgrahi (PM-DAKSH)) திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற மாணவர்களில் பாதிக்கும் குறைவானவர்களுக்கே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தக் குறுகியகாலப் பயிற்சி வகுப்புகளை முடிக்கும் மாணவர்களில் குறைந்தது 70 சதவீதம் பேருக்கு பயிற்சி நிறுவனங்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை நிறுவனங்கள் இந்த இலக்கை அடையத் தவறினால், ஒரு மாணவருக்கான பயிற்சிச் செலவில் 30 சதவீதத் தொகையை அரசு வழங்காது என்றும் அந்தத் தொகை ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 1.5 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என்றும் இதில் 44 சதவீத மாணவர்களுக்கு  மட்டுமே வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.


பிரதம மந்திரி தக்ஷதா அவுர் குஷலதா சம்பன்ன ஹித்கிராமி (PM-DAKSH) திட்டம் என்பது 2020-21-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒன்றிய அரசின் திட்டமாகும். தகுதியுள்ள நபர்களுக்குத் தரமான நிறுவனங்கள் மூலம் தொழில்முறைத் திறன்களை வழங்கி, அவர்கள் வேலைவாய்ப்பைப் பெற உதவுவதே  இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது. பட்டியலினத்தவர் (Scheduled Castes (SC)), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Castes (OBC)), பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (Economically Weaker Sections (EWS)), சீர்மரபினர் (Denotified Tribes (DNTs)), தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கான திறன்சார் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. 


இந்தத் துறையின்கீழ் இயங்கும் மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் — தேசிய பட்டியலினத்தவர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (National Scheduled Castes Finance and Development Corporation (NSFDC)), தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (National Backward Classes Finance and Development Corporation (NBCFDC)), மற்றும் தேசிய தூய்மைப் பணியாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (National Safai Karamcharis Finance and Development Corporation (NSKFDC))  ஆகியன தகுதியுள்ள இளைஞர்களுக்குத் தேவையான கடனுதவி, பயிற்சி மற்றும் நிதி உதவிகளை வழங்குகின்றன. இவை இளைஞர்கள் கல்விக்குப் பிறகு புதிய திட்டங்களைத் தொடங்கவும், வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தவும் மற்றும் தொழில்முனைவோராக உருவெடுக்கவும் உதவுகின்றன.


இந்த மூன்று நிறுவனங்களுமே நிர்ணயிக்கப்பட்ட வேலைவாய்ப்பு இலக்கை அடைவதில் தோல்வியடைந்துள்ளன என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. பட்டியலினத்தவர் நலனுக்காகச் செயல்படும் தேசிய பட்டியலினத்தவர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத் (NSFDC) திட்டத்தின்கீழ், பயிற்சி பெற்றவர்களில் 49.8 சதவீதம்  மாணவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. குறிப்பாக ராஜஸ்தான், திரிபுரா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் வேலைவாய்ப்பு விகிதம் 40 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


அதேபோல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (NBCFDC), 2021 மற்றும் 2024 ஆண்டுகளுக்கு இடையில் பயிற்சி பெற்றவர்களில் 48.9 சதவீதத்தினருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன. 


தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக (DNTs) செயல்படும் தேசிய தூய்மைப் பணியாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத் (NSKFDC) திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர்களில், 23 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மக்களவையில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2023–24-ஆம் ஆண்டில் 25 மாநிலங்களில் 16 மாநிலங்கள் இத்திட்டத்தின்கீழ் ஒருவருக்குக் கூட பயிற்சி அளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.


தற்போது 2024–25-ஆம் நிதியாண்டு முதல், பிரதம மந்திரி - திறமையும் திறனும் கொண்ட பயனாளிகளுக்கானத் (PM-DAKSH) திட்டமானது மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின்கீழ் உள்ள பிரதம மந்திரி திறன் வளர்ச்சித் (Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY)) திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

Original article : Less than half of those trained under PM-DAKSH scheme for SCs, BCs, DNTs got jobs -Nitika Francis

Share:

16-வது நிதி ஆணையத்தின் மூலம் மாநிலங்கள் பயனடைந்துள்ளனவா? -ரங்கராஜன் ஆர்.

16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் என்ன? மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே எந்தெந்த வரிகள் பகிரப்படுகின்றன? கடந்த நிதி ஆணையம் செங்குத்து வரிப் பகிர்வை (Vertical Devolution) ஏன் 41 சதவீதமாக மாற்றியது? மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலுங்கானா போன்ற தொழில்மயமான மாநிலங்கள் முன்வைத்த கோரிக்கைகள் என்ன?


டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதி ஆணையம், 2026-31-ஆம் ஆண்டுகளுக்கான தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. ஒன்றிய அரசு அந்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. குறிப்பாக, ஒன்றிய அரசின் வரி வருவாயை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பது தொடர்பான பரிந்துரைகளை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.


கடந்த காலப் பரிந்துரைகள் என்னென்ன?


இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 270, ஒன்றிய அரசு வசூலிக்கும் நிகர வரி வருவாயை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை வரையறுக்கிறது. நிறுவன வரி (Corporation tax), தனிநபர் வருமான வரி, மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (Central Goods and Service Tax (CGST)) மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியில் மத்திய அரசுக்குச் சேரும் பங்கு ஆகியவை இதில் அடங்கும் என்கின்றனர். சட்டப்பிரிவு 280-ன்கீழ் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை அமைக்கப்படும் நிதி ஆணையம், இந்த வருவாயை எவ்வாறு பிரித்தளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது. மத்திய அரசால் வசூலிக்கப்படும் செஸ் (Cess) மற்றும் கூடுதல் கட்டணம் (Surcharge) ஆகியவை இந்தப் பகிர்வுத் தொகுப்பில் சேர்க்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கின்றனர். 


13-வது நிதி ஆணையமானது, 2010-ஆம் ஆண்டு  முதல் 2015-ஆம் ஆண்டு வரை, மாநிலங்களுக்கு மத்திய அரசால் நிதியுதவி வழங்கப்படும் போது பல நிபந்தனைகளுடன் கூடிய 'மத்திய நிதியுதவி திட்டங்கள்' (Centrally Sponsored Schemes) மூலமாகவே நிதி கிடைத்தது. அப்போது மத்திய வரிகளில் மாநிலங்களின் பங்கு (Vertical Devolution) 32சதவீதமாக  மட்டுமே இருந்தது. 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி 2015–ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை, இந்த நிபந்தனைகளுடன் கூடிய திட்ட அடிப்படையிலான நிதி மாற்றங்கள் நீக்கப்பட்டு, மாநிலங்களின் நேரடி வரிப் பங்கு 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது நடைமுறையில் இருக்கும் 15-வது நிதி ஆணையம் (2020–26), ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலங்களின் வரிப் பங்கைக் குறைத்து 41 சதவீதமாக  நிர்ணயித்துள்ளது.


13-வது நிதி ஆணையத்திலிருந்து, மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வுக்கான அளவுகோல்கள், செயல்திறன் காரணிகளைவிட சமநிலை மற்றும் தேவைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதாவது, வனப்பரப்பு, மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் வரிவசூல் முயற்சி போன்ற செயல்திறன் அம்சங்களைவிட வருமான இடைவெளி, மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்பு ஆகியவற்றுக்கே நிதி ஒதுக்கீட்டில் அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்கின்றனர். 

மாநிலங்களின் கோரிக்கைகள் யாவை?


முதலாவதாக, செங்குத்துப் பகிர்வு (Vertical Devolution) குறித்துப் பார்த்தால், ஒன்றிய அரசு மாநிலங்களுக்குப் பிரித்துத் தரும் நிதியானது தற்போதுள்ள 41 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என்று 18 மாநிலங்கள் விரும்பின. ஒரு சில மாநிலங்கள் இதை 45 முதல் 48 சதவீதமாக உயர்த்தக் கோரின. மேலும், பல மாநிலங்கள் 'செஸ்' (Cess) மற்றும் கூடுதல் கட்டணங்களை (Surcharge) நிதிப் பகிர்வு தொகுப்பிற்குள் சேர்க்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசு இவற்றின் மூலம் வசூலிக்கும் தொகைக்கு ஒரு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன.


இரண்டாவதாக, மாநிலங்களுக்கு இடையேயான கிடைமட்ட நிதிப் பகிர்வில் (Horizontal Devolution), சமநிலை தொடர்பான காரணிகளுக்கே தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அதே நேரத்தில், மாநிலங்களுக்கு இடையேயான வருமான இடைவெளியைக் குறைப்பதற்கான முக்கியத்துவத்தைக் குறைக்க வேண்டும் என்று சில மாநிலங்கள் பரிந்துரைத்தன. குறிப்பாக, மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலுங்கானா போன்ற தொழில்மயமான மாநிலங்கள், அந்தந்த மாநிலங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வழங்கும் பங்களிப்பையும் நிதிப் பகிர்வுக்கான ஒரு அளவுகோலாகச் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளன.

16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் என்ன?


செங்குத்து வரிப் பகிர்வு (Vertical Devolution) தொடர்பான கோரிக்கைகள் குறித்து நிதி ஆணையம் பின்வருவனற்றைக் கூறியுள்ளது. தற்போதைய அரசியலமைப்பின்படி, செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களுக்கு உச்சவரம்பு விதிப்பதோ அல்லது அவற்றை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வரித்தொகுப்பில் சேர்ப்பதோ அனுமதிக்கப்படாது என்றும் அது பொருத்தமானதும் அல்ல என்றும் கூறியுள்ளது. அவசர காலங்களில் நிதி திரட்டுவதற்கு மத்திய அரசுக்கு இந்தக் கருவிகள் தேவைப்படலாம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.  மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு பங்கை 41 சதவீதம் என்ற அளவிலேயே வைத்திருக்க நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதற்கு நாட்டின் மொத்த வரி வருவாயில் மாநிலங்கள் ஏற்கனவே பெற்று வரும் ஒட்டுமொத்தப் பங்கு மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் பெரும் தொகை, இறுதியில் மாநிலங்களுக்கே சென்றடைவது, பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மத்திய அரசுக்கு அதிக நிதி தேவைப்படுவது போன்றவை மூன்று முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன


கிடைமட்டப் பகிர்வுக்காக (Horizontal Devolution), நிதி ஆணையம் இரண்டு முக்கியக் கொள்கைகளைப் பின்பற்றியது என்கின்றனர். முதலாவதாக, மாநிலங்களுக்குப் பிரித்தளிக்கப்படும் நிதியில் ஏற்படும் மாற்றங்கள் படிப்படியாக நிகழ வேண்டும். இரண்டாவதாக, மாநிலங்களின் செயல்திறன் மற்றும் வளர்ச்சியில் அவற்றின் பங்களிப்பு ஆகியவை சரியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். எனவே, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திப் பங்களிப்பு என்ற புதிய அளவுகோல் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் பங்கில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தாமல், நிதிப் பகிர்வு ஒரு புதிய திசையை நோக்கிச் செல்வதை உணர்த்தும் வகையில், இந்த அளவுகோலுக்கும் மற்றவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


ரங்கராஜன். R, அவர்கள் ஒரு முன்னாள் இந்திய ஆட்சிப்  பணி (IAS) அதிகாரி மற்றும் ‘Courseware on Polity Simplified’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். இவர் 'Officers IAS Academy'-யில் பயிற்சி அளித்து வருகிறார்.

Original article :  Have States gained from the 16th FC? -Rangarajan R.

Share:

பொருளாதாரத்தின் 'கோல்டிலாக்ஸ் காலம்' என்றால் என்ன? -ரோஷ்ணி யாதவ்

 முக்கிய குறிப்புகள்:


— “சந்தைகள் அடிப்படைகளை விட முன்னேறிவிட்டன, செயற்கை நுண்ணறிவு (AI) உற்சாகம் மற்றும் பலவீனமான டாலர் மதிப்பு ஆகியவற்றால் தூண்டப்பட்டு, மிகை மதிப்பீட்டு கவலைகளை எழுப்பின. செயற்கை நுண்ணறிவின் வேலைவாய்ப்பு தாக்கம் இப்போதைக்கு குறைவாக இருக்கலாம், ஆனால் அதன் மாற்றும் திறன் மறுக்க முடியாதது. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, புதுமை மட்டுமே வளர்ச்சியை விளக்க முடியாது என்பதை நமக்கு நினைவூட்டியது. மூன்று முன்நிபந்தனைகள் முக்கியம்: பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகள் மற்றும் அறிவியல் புரிதல், திறமையான நிபுணர்கள் மற்றும் மாற்றத்திற்கான சமூக வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை இணைக்கும் பயனுள்ள அறிவு.”


— “உலகளாவிய வளர்ச்சி மற்றும் வர்த்தக மறுசீரமைப்பு 2026 மற்றும் அதற்குப் பிறகும் தொடர வேண்டும், மந்தநிலையை விட மறுஒதுக்கீட்டால் வகைப்படுத்தப்படுகிறது, ஆனால் தொற்றுநோய்க்கு முந்தைய தரநிலைகளுடன் ஒப்பிடும்போது மோசமாகவே உள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் விவரித்தபடி, "கோல்டிலாக்ஸ்" கட்டத்தில் இந்தியா மிகவும் ஊக்கமளிக்கும் படத்தை அளிக்கிறது. டிசம்பர் 2025 வாக்கில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை ஒட்டுமொத்தமாக 125 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.25 சதவீதமாகக் குறைத்தது மற்றும் பணப்புழக்க ஆதரவு மற்றும் ஒழுங்குமுறை தளர்வு மூலம் இதை நிறைவு செய்தது. வங்கி இருப்புநிலைக் குறிப்புகள் மேலும் வலுப்பெற்றன, மொத்த செயல்படாத சொத்துக்கள் மார்ச் 2026 க்குள் 2.3-2.5 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”


— “மத்திய அரசு முதல் தேசிய பணமாக்கல் பைப்லைனை செயல்படுத்தும் அதே வேளையில், நிதி ஒருங்கிணைப்பைத் தொடர்ந்தது. S&P இன் மதிப்பீட்டு மேம்படுத்தல் இந்த முன்னேற்றத்தை உறுதிப்படுத்தியது, கொள்கை வகுப்பாளர்களின் பெரிய பொருளாதார மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கான உறுதிப்பாட்டை ஒப்புக்கொண்டது, சந்தைகள் கவனிக்கப்படுகின்றன என்பதைக் குறிக்கிறது.”


— “உலகளாவிய நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், இந்தியாவின் வெளிப்புற நிலைமை வசதியாகவே உள்ளது. சேவைத் துறை அதிர்ச்சி உறிஞ்சியாகச் செயல்பட்டு வருகிறது, அதே நேரத்தில் ரூபாய் மதிப்பு சந்தையால் தீர்மானிக்கப்படுகிறது. சில துறைகள் சவால்களை எதிர்கொண்டாலும், ஒட்டுமொத்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை சமாளிக்கக்கூடியதாகவே உள்ளது. இருப்பினும் அபாயங்கள் நீடிக்கின்றன. ஒட்டுமொத்த உற்பத்தி நிலை, தொற்றுநோய்க்கு முந்தைய போக்குகளை விட 3 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, இது குறைந்து வரும் அடிப்படை பணவீக்கத்தைக் குறிக்கிறது. ”


— “முக்கியமான சீர்திருத்தங்கள் நடந்து வருகின்றன. தொழிலாளர் குறியீடுகள் நெறிப்படுத்தப்பட்டுள்ளன. சரக்கு வெளியீட்டு நேரங்களைக் குறைப்பதிலும் தளவாடங்களை மேம்படுத்துவதிலும் முன்னேற்றங்களுடன், உள்கட்டமைப்பு முதலீடு ஒரு ஈர்க்கக்கூடிய வேகத்தில் தொடர்கிறது. தரவு வெளியீடுகளின் அதிகரித்த வேகம் மற்றும் அதிர்வெண், நிர்வாகத் தத்துவத்தில் அடிப்படை மாற்றத்துடன் இணைந்து, ஒரு அமைதியான தரவு புரட்சி நிகழ்கிறது.”


— “கொள்கை நம்பகத்தன்மை, ஒழுங்குமுறை முன்கணிப்பு மற்றும் எதிர்கால தேவை மீதான நம்பிக்கை ஆகியவை வட்டி விகிதங்கள் அல்லது ஊக்கத்தொகைகளைப் போலவே முக்கியம். இந்த மென்மையான கட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்யாவிட்டால், நன்கு வடிவமைக்கப்பட்ட ஊக்கத்தொகைகள் கூட நிலையான தனியார் முதலீடு மற்றும் வேலைகளை வழங்குவதில் தோல்வியடையும் அபாயம் உள்ளது. சுகாதாரம், கல்வி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டில் கட்டமைப்பு சவால்கள் நீடிக்கின்றன. உலகின் மூன்றாவது மிகவும் மாசுபட்ட நாடாக இந்தியா உள்ளது. பொருளாதார செலவுகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் சுத்தமான காற்று ஒரு பெரிய அரசியல் முன்னுரிமையாக மாறவில்லை. ”


— “பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் மற்றொரு சவாலை முன்வைக்கின்றன. பீகார் இதை அப்பட்டமாக எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் 9 சதவீதத்தைக் கொண்ட இந்த மாநிலம், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே பங்களிக்கிறது. ஆயினும்கூட, சேவைகள் மற்றும் அதிக மதிப்புள்ள விவசாயத்தால் இயக்கப்படும் பொருளாதார உற்பத்தி இரண்டு தசாப்தங்களாக மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, பீகார் முன்னேற்றம் அடைந்துள்ளது. 25 வயதிற்குட்பட்ட அதன் மக்கள்தொகையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர், குறைந்த விலை உழைப்பு, வளமான மண் மற்றும் வளமான பாரம்பரியம் போன்ற உகந்த முறையில் சுரண்டப்பட காத்திருக்கும் கட்டமைப்பு நன்மைகளைக் கொண்டுள்ளது.”


— “தொழில்நுட்பம்-மக்கள்தொகை தொடர்புகளில் ஆழமான சவால் உள்ளது. விரிவடைந்து வரும் உழைக்கும் வயது மக்கள்தொகையைக் கொண்ட தொழிலாளர்கள் நிறைந்த நாடாக, அடிப்படை பொருளாதாரம் உழைப்பு மிகுந்த உற்பத்தியை வலியுறுத்துவதை பரிந்துரைக்கிறது. இருப்பினும், முரண்பாடாக, உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டிற்கும் இந்தியா பெருகிய முறையில் மூலதன-தீவிர தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்கிறது. நமது சூழலுக்கு ஏற்ப தொழில்நுட்பங்களை நாம் மாற்றியமைக்க வேண்டும்.”


— "இந்திய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான அதிக சந்தை அணுகலையும் நாம் கண்டறிய வேண்டும். ஏராளமான FTAக்கள் ஒரு செயல்படுத்தும் கட்டமைப்பை உருவாக்குகின்றன, இது MSMEகள் மற்றும் பிற துறைகளுக்கு பிற செயல்படுத்தும் நடவடிக்கைகளால் கூடுதலாக வழங்கப்பட வேண்டும்."


— “நிலையான செழிப்புக்கு புதுமைகளை விட அதிகம் தேவைப்படுகிறது. அது இடமாற்றம் செய்பவர்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் படைப்பு அழிவைப் பயன்படுத்த நிறுவன கட்டமைப்புகளைக் கோருகிறது. இதன் பொருள் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தை மாற்றியமைத்தல், உழைப்பை உறிஞ்சும் துறைகளுக்கு முன்னுரிமை அளித்தல், நீண்டகால மூலதனத்தின் மூலம் விரிவாக்கத்திற்கு நிதியளித்தல் மற்றும் பொருளாதார மாற்றத்தை முடக்காமல் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் நிறுவனங்களை உருவாக்குதல். ”


உங்களுக்குத் தெரியுமா:


— சமீபத்தில், பணவியல் கொள்கையை அறிவிக்கும் போது, ​​ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, 2026 நிதியாண்டின் முதல் பாதியில் பணவீக்கம் 2.2 சதவீதமாகவும், வளர்ச்சி 8 சதவீதமாகவும் இருப்பது "அரிதான கோல்டிலாக்ஸ் காலகட்டத்தை" முன்வைக்கிறது என்று கூறினார்.


— பொருளாதாரத்தில் கோல்டிலாக்ஸ் காலம் என்பது பொருளாதாரம் "சரியாக" இருக்கும் ஒரு கட்டத்தைக் குறிக்கிறது - அதிக வெப்பமடைவதோ அல்லது வேகம் குறைவதோ அல்ல. இது நிலையான வளர்ச்சி, குறைந்த பணவீக்கம் மற்றும் நிர்வகிக்கக்கூடிய வட்டி விகிதங்களால் வகைப்படுத்தப்படுகிறது.


Original Article : What is meant by the ‘Goldilocks period’ of the economy? -Roshni Yadav

Share:

ஒரு தனித்துவமான செயற்கை நுண்ணறிவு (AI) சூழலமைப்பை கட்டமைப்பதற்கான வாக்குறுதி. -ஸ்ரீவாஸ் சஹஸ்ரநாமம்

 இந்தியா வன்பொருள் அணுகலை மேலும் ஜனநாயகமாக்குகிறது ஆனால் அது குறைமின்கடத்தி புவிசார் அரசியல் (chip geopolitics), மின் செலவுகள் (power costs) மற்றும் தரவு பாதுகாப்பு சிக்கல்களை (data security issues) சமாளிக்க வேண்டும்.


உலகளாவியத் தெற்கின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) உச்சிமாநாட்டை விரைவில் நடத்த இந்தியா தயாராகி வரும் நிலையில், அதன் செயற்கை நுண்ணறிவு (AI) கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான நாட்டின் அணுகுமுறையை உலகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இந்தியாவின் அணுகுமுறை குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டது. மேற்கத்திய நாடுகளில் காணப்படுவது போல், பன்னாட்டு நிறுவனங்களால் இயக்கப்படும் மாதிரியை நம்புவதற்குப் பதிலாக, AI வளர்ச்சிக்கு பொதுமக்கள் தலைமையிலான பாதை என்று சிறப்பாக விவரிக்கக்கூடியதைத் தொடர அதன் சொந்த எண்ணிலக்க பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) திட்டத்திலிருந்து எடுத்துள்ளது.


செயற்கை நுண்ணறிவு (AI) சுற்றுச்சூழல் அமைப்பிற்கான மூன்று பரந்த முக்கிய தொழில்நுட்ப கூறுகளான கணக்கீடு (compute), டேட்டா (data) மற்றும் அடித்தள மாதிரிகள் (foundational models) ஆகும். இந்தியா பொதுமக்கள் தலைமையிலான அணுகுமுறையை ஏற்றுக்கொண்டுள்ளது. கணக்கீட்டைப் பொறுத்தவரை, இந்தியாவில் 34,000 க்கும் மேற்பட்ட GPUகள் (கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள்) கொண்ட பொதுவான நீச்சல் குளம் அணுகல் மாதிரி (pool access model) உள்ளது. இது ஆராய்ச்சி நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் முழுவதும் வன்பொருள் அணுகலை ஜனநாயகப்படுத்துகிறது. AI Kosh மூலம், மாதிரி பயிற்சி மற்றும் பொது நலன் பயன்பாடுகளுக்கு ஏற்ற நூற்றுக்கணக்கான தரவுத்தொகுப்புகளுடன் ஒரு திறந்த தரவு களஞ்சியம் உள்ளது. இதேபோல், MeitY-ன் IndiaAI திட்டம் ஒருங்கிணைப்பாளராகவும், SarvamAI டெவலப்பராகவும், IIT மெட்ராஸ் இந்தியாவின் இறையாண்மை அடித்தள பெரிய மொழி மாதிரியை (LLM) உருவாக்க திறமை மற்றும் ஆராய்ச்சி மையமாகவும் ஒரு பொது-தனியார்-கல்வி கூட்டாண்மையை உருவாக்கியுள்ளது.


எண்ணிலக்க பொது உள்கட்டமைப்பை (DPI) உருவாக்கிய முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இப்போது, ​​இந்த அனுபவம் செயற்கை நுண்ணறிவு (AI) நாட்டின் எண்ணிலக்க அமைப்புகளுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதை வடிவமைக்கிறது. இந்தியாவின் தேசிய எண்ணிலக்க தளங்களில் AI ஒரு முறையான வழியில் சேர்க்கப்படுகிறது. மக்கள்தொகை அளவில் அங்கீகாரத்தை வலுப்படுத்த ஆதார் அடையாள அமைப்பு AI-இயக்கப்பட்ட முகப் பொருத்தத்தை அதிகளவில் பயன்படுத்துகிறது. எண்ணிலக்க கட்டணங்களில், ஹலோ! UPI போன்ற AI-இயக்கப்படும் குரல் அடிப்படையிலான இடைமுகங்கள் உரை அடிப்படையிலான இடைமுகங்களுடன் வசதியாக இல்லாத பயனர்களுக்கு நிதி அணுகலை விரிவுபடுத்துகின்றன. இதேபோல், சுகாதாரப் பாதுகாப்புத் துறையில், இந்தியாவிலிருந்து வந்த ஐநா எண்ணிலக்க பொது நன்மையான ஓபன் ஹெல்த்கேர் வலையமைப்பு (Open Healthcare Network is a United Nations) இப்போது மருத்துவர் உரையாடல்களை கட்டமைக்கப்பட்ட மின்னணு மருத்துவ பதிவுகளாக மாற்றும் GenAI-அடிப்படையிலான மருத்துவ எழுத்தாளர் கருவிகளை ஒருங்கிணைக்கிறது. இது ஆயுஷ்மான் பாரத் எண்ணிலக்க திட்டத்தின் தேசிய சுகாதாரத் தரவு கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.


வட்டாரமொழி அணுகல்தன்மை


இந்தியா தனது AI திட்டத்தின் முக்கியத்துவத்தில் வட்டார மொழி அணுகல்தன்மை மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையை வைத்துள்ளது. தேசிய மொழி பெயர்ப்புத் திட்டத்தின் கீழ், பாஷினி போன்ற முயற்சிகள் மூலம், 22 இந்திய மொழிகளில் திறந்த மூல பன்மொழி தரவுத்தொகுப்புகளை உருவாக்குவதை அரசாங்கம் ஆதரித்து வருகிறது. மேலும், இப்போது AI-இயக்கப்படும் நிகழ்நேர பேச்சு அங்கீகாரம், மொழிபெயர்ப்பு மற்றும் படியெடுத்தலுக்கான ஷ்ருத்லெக் (Shrutlekh) என்ற கருவியை வழங்குகிறது. இந்தியாவின் கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் கருவிகள் மற்றும் பன்மொழி பெரிய மொழி மாதிரிகளை (LLMs) உருவாக்க இந்திய மொழி இயற்கை மொழி செயலாக்கம் (NLP) மற்றும் பேச்சு அங்கீகாரத்திற்கான கல்வி மையமாக AI4Bharat மற்றும் BharatGen ஆகியவற்றின் பணிகளால் இது பூர்த்தி செய்யப்படுகிறது. ஒன்றாக, இத்தகைய முயற்சிகள் மொழி உள்ளடக்கிய AI பயன்பாடுகளின் தலைமுறையை செயல்படுத்துகின்றன. இது பாரத் நுண்ணறிவு (Bharat Intelligence) போன்ற புத்தொழில் நிறுவனங்களால் விளக்கப்பட்டுள்ளது. இது விவசாயத்தில் கிராமப்புற தொழிலாளர் சந்தைகளை ஒழுங்கமைக்க குரல் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துகிறது.


செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளின் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தில் உள்நாட்டு அறிவியலியல் மற்றும் கலாச்சார சூழலை இந்தியா இணைக்கத் தொடங்குகிறது. நிஷ்பக்ஷ (Nishpaksh) என்பது AI மாதிரிகளின் சான்றிதழுக்கான ஒரு புதிய கட்டமைப்பாகும். இது இந்தியாவின் சமூக-கலாச்சார சூழல்களுக்கு குறிப்பிட்ட மாதிரி நியாயமானவையா என்பதை இது தணிக்கை செய்வதற்கு ஒரு முக்கியமான உத்தரவாதத்தைச் சேர்க்கிறது. அதேநேரத்தில், மேற்கத்திய நாடுகளால், தர்க்கரீதியில் கட்டமைப்புகளுக்கு அப்பால் AI-ஐ வளப்படுத்த நியாயமான விதிமுறைகளிலிருந்து பகுத்தறிவு கட்டமைப்புகள் போன்ற உள்நாட்டு அறிவு அமைப்புகளின் ஒருங்கிணைப்பை அறிஞர்களும் பயிற்சியாளர்களும் ஆராய்ந்து வருகின்றனர்.


இந்தியாவின் AI கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பு ஒரு திருப்புமுனையை எட்டியுள்ளது. அங்கு ஒரு தனித்துவமான, பொதுமக்கள் தலைமையிலான AI பாதைக்கான அடிப்படை கட்டுமானத் தொகுதிகள் இப்போது நடைமுறையில் உள்ளன. இருப்பினும், அடுத்த கட்டம் நாடு பல முக்கிய சவால்களை எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பொறுத்தது. இவற்றில் குறைகடத்தி புவிசார் அரசியல், எரிசக்தி கட்டுப்பாடுகள் மற்றும் தரவு பாதுகாப்பு பாதுகாப்புகள் ஆகியவை அடங்கும். தற்போது, உலகளாவிய கணினி சக்தியின் உலகளாவிய விநியோகம் மிகவும் சமமற்றது. இதில், பெரும்பான்மையானவை அமெரிக்கா (75 சதவீதம்) மற்றும் சீனா (15 சதவீதம்) ஆகிய நாடுகளில் குவிந்துள்ளன. இது கணக்கீடு வடக்கு vs கணக்கீடு தெற்கு (Compute North vs Compute South) பிளவு என்று குறிப்பிடப்படுகிறது. இந்திய AI-புத்தொழில் நிறுவனங்களுக்கு இது பயிற்சி-தர கணினிக்கான அணுகலைக் குறைப்பதாகவும், மறு செய்கை சுழற்சிகளை மெதுவாக்குவதாகவும் மொழிபெயர்க்கிறது. இது இந்தியாவின் AI கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பின் ஒட்டுமொத்த வேகத்தைக் குறைக்கலாம்.


கணினி உள்கட்டமைப்பு அமைந்துள்ள இடத்தில் உருவாகும் ஆற்றல் தேவைகள் காரணமாக இந்த ஏற்றத்தாழ்வு வலுவடைகிறது. குறைந்த விலை மின்சாரம் உள்ள பகுதிகளில் AI தரவு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு மிகவும் நம்பகமான மின்சாரம் மற்றும் வலுவான குளிரூட்டும் உள்கட்டமைப்பும் தேவை. இந்த சூழ்நிலை இந்தியா போன்ற எரிசக்தி இறக்குமதி செய்யும் நாடுகளை பாதகமான நிலையில் வைக்கிறது. மக்கள்தொகை அளவில் அதன் எண்ணிலக்க பொது உள்கட்டமைப்பு (DPI) செயல்படுத்தலில் இருந்து, இந்தியா ஏற்கனவே உணர்திறன் வாய்ந்த அடையாளம் மற்றும் கட்டணத் தரவை நிர்வகிக்கிறது. மேலும், இவை AI-தலைமுறை தரவுத்தொகுப்புகளுடன், குறிப்பாக சுகாதாரப் பாதுகாப்பு போன்ற உணர்திறன் வாய்ந்த களங்களில் மாறும் வகையில் இருக்க வேண்டும்.


உண்மையில், பொதுவான கணினி, எண்ணிலக்க பொது உள்கட்டமைப்பு, வட்டார மொழி சேர்க்கை மற்றும் உள்நாட்டு அறிவு ஆகியவற்றைக் கொண்ட பொது தலைமையிலான செயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழல் அமைப்பு இந்தியாவின் AI சுற்றுச்சூழல்-கட்டமைப்பு அணுகுமுறையை வித்தியாசமாகக் காட்டுகிறது. ஆனால், குறைகடத்தி புவிசார் அரசியல், மின் செலவுகள் மற்றும் தரவு பாதுகாப்புகள் அது எவ்வளவு தூரம் அளவிடப்படுகிறது என்பதை இந்தக் காரணிகள் தீர்மானிக்கும்.


எழுத்தாளர் கிளாஸ்கோ பல்கலைக்கழக ஆடம் ஸ்மித் வணிகப் பள்ளியில் பேராசிரியர்.


Original article : The promise of building a distinct AI ecosystem. -Sreevas Sahasranamam

Share:

உற்பத்தி வளர்ச்சியானது ஏன் பரந்த அளவிலான வேலைவாய்ப்புகளாக மாறவில்லை?. -புஷ்பேந்திர சிங் மற்றும் அர்ச்சனா சிங்

 2026 நிதிநிலை அறிக்கையானது, உற்பத்தியை மீண்டும் வலுப்படுத்துவதில் புதுப்பிக்கப்பட்ட முக்கியத்துவத்தை அளித்துள்ளது. ஆனால், இந்த நிதிநிலை அறிக்கை பெரும்பாலும் உற்பத்தி சார்ந்த உத்தியில் ஒரு பெரியளவிலான மாற்றத்தைவிட கொள்கைரீதியில் தொடர்ச்சியைக் குறிக்கிறது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது ஏன் அப்படி? முக்கிய குறிப்புகளைத் தொடர்ந்து விளக்கப்படம் குறிப்பிடுகிறது.


வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான இடைவெளி


1991 பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இருப்பினும், இந்தியாவிற்கு உற்பத்தி இன்னும் முடிக்கப்படாத பணியாகவே உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அதன் பங்கு பல ஆண்டுகளாக 14 முதல் 17 சதவீதத்திற்கு இடையில் தேங்கி நிற்கிறது. இது ஒரு தற்காலிக மந்தநிலை அல்ல. இது பல்வேறு அரசாங்கங்கள், வணிக சுழற்சிகள் மற்றும் தொடர்ச்சியான தொழில்துறை உந்துதல்கள் மூலம் நீடித்து வருகிறது. வெற்றிகரமாக தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளில் உற்பத்தியானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25-30 சதவீதமாக உயர்ந்து வலுவாக உள்ளது. இந்தியா இந்த நிலையை ஒருபோதும் தாண்டவில்லை.


இது முக்கியமானது, ஏனெனில் உற்பத்தி குறைந்தது இரண்டு முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது உற்பத்தித்திறனை அதிகரித்தல் மற்றும் உபரி உழைப்பையும் ஈர்க்கும் என்று கருதப்பட்டது. இருப்பினும், இது பெரியளவில் இரண்டையும் செய்யவில்லை. வெளியீடு சில கட்டங்களில் வளர்ந்துள்ளது. ஆனால், வேலைவாய்ப்பு உருவாக்கம் இந்த வளர்ச்சிக்கு இணையாக இல்லை. ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தித் துறை இரண்டு கோடிக்கும் குறைவான தொழிலாளர்களைப் பயன்படுத்துகிறது. அதேநேரத்தில், பெரும்பாலான உற்பத்தி வேலைகள் பெரும்பாலும் சிறியதாகவும், முறைசாராதாகவும், பாதுகாப்பற்றதாகவும் உள்ளன.


முறை தெளிவாகவும் பழக்கமாகவும் உள்ளது. உற்பத்தி வளர்ந்துள்ளது. ஆனால் பொருளாதாரத்தின் கட்டமைப்பு பெரிதாக மாறவில்லை. வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், பண்ணைகள் மற்றும் முறைசாரா சேவைகளை விட்டு வெளியேறும் தொழிலாளர்களை ஈர்ப்பதற்கு போதுமானதாக இல்லை. சில துறைகளில் உற்பத்தித்திறன் மேம்பட்டுள்ளது. இருப்பினும், ஊதியம் மற்றும் வேலை தரம் இன்னும் பின்தங்கியுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான இடைவெளி இந்தியாவின் உற்பத்திப் பிரச்சினையின் மையமாக உள்ளது.


வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் வரம்புகள்


2023-24 ஆம் ஆண்டில், ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி சுமார் 1.96 கோடி தொழிலாளர்களைப் பணியமர்த்தியுள்ளதாக தொழில்துறைகளின் வருடாந்திர கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், இது நிலையான ஆனால் மிதமான வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் சுமார் 57 லட்சம் வேலைகளைச் சேர்த்தது.


இருப்பினும், ஒழுங்கமைக்கப்படாத உற்பத்தி அதிக பணியாளர்களைப் பயன்படுத்துகிறது. 2023-24-ஆம் ஆண்டில் 3.48 கோடி தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு இருப்பதாக ஒருங்கிணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பு மதிப்பிடுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைகள் இரண்டையும் இணைத்துப் பார்த்தால், மொத்த உற்பத்தி வேலைவாய்ப்பு சுமார் 5.44 கோடி தொழிலாளர்களைக் கொண்டுள்ளது.


இது வேலைவாய்ப்பின் அமைப்பு சிக்கலை விளக்குகிறது. உற்பத்தித் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் மட்டுமே ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர். மீதமுள்ளவர்கள் குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட, முறைசாரா பிரிவுகளில் உள்ளனர். இதன் காரணமாக, உற்பத்தி வளர்ச்சி பரந்த அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.


ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தியில்கூட, உற்பத்தி வேலைவாய்ப்பைவிட வேகமாக வளர்ந்துள்ளது. நிறுவனங்கள் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்வதன் மூலம் உற்பத்தியை அதிகரித்துள்ளன. அவர்கள் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்குப் பதிலாக தானியங்கு திறனைப் பயன்படுத்தியுள்ளனர். இதன் விளைவாக, உற்பத்தி அதன் எதிர்பார்க்கப்படும் பங்கை வகிக்கவில்லை. இதன் விளைவாக, விவசாயம் மற்றும் முறைசாரா சேவைகளில் இருந்து வெளியேறும் உபரி தொழிலாளர்களை ஈர்ப்பதில் உற்பத்தி எதிர்பார்க்கப்படும் பங்கை வகிக்கத் தவறிவிட்டது.

உற்பத்தி ஏன் பின்தங்கியுள்ளது?


வளர்ச்சி கட்டமைப்பு மாற்றத்தைக் கொண்டு வராததால் இந்தியாவில் உற்பத்தியும் பின்தங்கியுள்ளது. முப்பதாண்டுகளுக்கும் மேலாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கு பரவலாக மாறாமல் உள்ளது. இது தொழில்மயமாக்கலின் தோல்வியை பிரதிபலிக்கிறது. இது கொள்கை முயற்சியின் பற்றாக்குறையைக் காட்டவில்லை.


இதற்கு ஒரு முக்கியமான காரணம் பொருளாதாரத்தின் கட்டமைப்பு செலவு ஆகும். பொதுத்துறை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சேவைகளில் அதிகரித்து வரும் ஊதியங்கள் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனில் இணையான அதிகரிப்பு இல்லாமல் ஊதிய எதிர்பார்ப்புகளை உயர்த்தியுள்ளன. ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலான உற்பத்தித்திறனில் செயல்படும் உற்பத்தி நிறுவனங்கள், தொழிலாளர் சந்தையில் போட்டியிடவும் செலவு-போட்டித்தன்மையுடன் இருக்கவும் போராடி வருகின்றன. இது உற்பத்தித்திறனை விரிவுபடுத்துவதற்கும் உற்பத்தியில் வேலைகளை உருவாக்குவதற்கும் அவற்றின் திறனைக் கட்டுப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, கட்டமைப்பு தேக்கம் தொடர்கிறது.


இருப்பினும், அதிகரித்துவரும் செலவுகள் மட்டுமே இந்தத் துறையில் தேக்கத்தை முழுமையாக விளக்கவில்லை. பிற தொழில்மயமாக்கும் பொருளாதாரங்களில், அதிகரித்துவரும் ஊதியங்கள் நிறுவனங்கள் மத்தியில் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டில் முதலீடு செய்ய ஊக்குவித்தன. இந்தியாவில், இதற்கான தீர்வு குறைவாகவே உள்ளது. இருப்பினும், நிறுவனங்கள் போதுமான மேம்பாடு இல்லாமல் பழைய உற்பத்தி கட்டமைப்பையே தொடர்ந்து நம்பியுள்ளன. இதன்விளைவாக அதிக ஊதிய விகிதங்களை ஆதரிக்க போதுமானதாக இல்லாத உற்பத்தியிலிருந்து சீரற்ற ஆதாயங்கள் கிடைத்தன. இதன் விளைவாக குறைந்த திறன் மற்றும் குறைந்த ஊதிய சமநிலை ஏற்பட்டுள்ளது.


தனியார் துறை வளர்ச்சி இந்த முறையை முற்றிலும் வலுப்படுத்தியுள்ளது. விரிவாக்கம் சேவைகள் மற்றும் தளம் சார்ந்த வேலைகளை நோக்கி நகர்ந்துள்ளது. அவை உற்பத்தித்திறனை கணிசமாக அதிகரிக்காமல் உழைப்பைப் பயன்படுத்துகின்றன. தொழில்நுட்பத்தில் முதலீடு செய்துள்ள உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் உழைப்பை அதிகரிக்கும் மேம்பாடுகள் மூலம் அல்லாமல் உழைப்பை மாற்றும் தானியங்கி (automation) மூலம் செய்துள்ளன. குறிப்பாக போதுமான திறன்கள் இல்லாததால் இது நிகழ்ந்துள்ளது. இதன்விளைவாக, உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளது. இருப்பினும், வேலை நெகிழ்ச்சி குறைந்துள்ளது.


இது பிளவுபட்ட உற்பத்தித் துறைக்கு வழிவகுத்தது. ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சாலைகள் ஒப்பீட்டளவில் உற்பத்தித் திறன் கொண்டவை ஆனால் அவை குறைந்த எண்ணிக்கையிலான வேலைகளை மட்டுமே உருவாக்குகின்றன. அதேசமயம், ஒழுங்கமைக்கப்படாத துறைகள் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களைப் பயன்படுத்துகின்றன. இருப்பினும், அவை குறைந்த அளவிலான உற்பத்தித்திறனில் சிக்கித் தவிக்கின்றன. இந்தப் பிளவு உற்பத்தியின் பங்கை கட்டுப்படுத்தியுள்ளது. ஊதியத்தை உயர்த்தும் அதன் திறனைக் குறைத்துள்ளது. இது வேலைகளை உருவாக்கும் மற்றும் பரந்த அளவிலான பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் அதன் திறனையும் பலவீனப்படுத்தியுள்ளது.


கிழக்கு ஆசிய பொருளாதாரங்களுடனான ஒப்பீடு


கிழக்கு ஆசிய பொருளாதாரங்களுடனான ஒப்பீடு இதை தெளிவாக விளக்க உதவுகிறது. உதாரணமாக, தென் கொரியா வேறுபட்ட பாதையைப் பின்பற்றியது. உற்பத்தி விரிவடைந்தவுடன், நிறுவனங்கள் கடைத்தெருவில் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்தன. தொழிலாளர்கள் தொழிற்சாலைகளுக்குள் கற்றுக்கொண்டனர். அவர்களின் திறன்கள் உண்மையான உற்பத்தி செயல்முறைகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டன. தொழில்நுட்பம் மாறியதால், இந்த திறன்களும் மேம்படுத்தப்பட்டன. பயிற்சி செலவுகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும் தரநிலைகளை அமைப்பதன் மூலமும் அரசாங்கம் இந்த அமைப்பை ஆதரித்தது. ஆனால், பயிற்சி நிறுவனங்களின் தேவைக்கேற்ப அவர்களின் பொறுப்பாகவே இருந்தது.


ஊதிய உயர்வு உற்பத்தியைப் பாதிக்கவில்லை. மாறாக, அது நிறுவனங்களைத் திறன்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யத் தூண்டியது. மேலும், தானியங்கு (automation) அதற்கு எதிராக அல்ல, அது உழைப்புடன் இணைந்து செயல்பட்டது. இதன் விளைவாக, ஊதியத்துடன் உற்பத்தித்திறன் அதிகரித்தது. மேலும் உற்பத்தி விரிவடைந்தாலும் உற்பத்தி தொடர்ந்து வேலைகளை உருவாக்கியது.


இந்தியாவின் அனுபவம் வேறுபட்டது. இந்திய நிறுவனங்கள் ஏராளமான உழைப்பைச் சார்ந்திருந்தன. அவர்கள் தொழிலாளர் பயிற்சியில் மிகக் குறைவாகவே முதலீடு செய்தனர். திறன் மேம்பாடு பெரும்பாலும் பிரிவினையான பொதுத் திட்டங்கள் மூலம் கையாளப்பட்டது. இந்தத் திட்டங்கள் தொழில்துறை தேவைகளுடன் பலவீனமான தொடர்புகளைக் கொண்டிருந்தன. இதன் விளைவாக வளர்ச்சி ஏற்பட்டது. ஆனால், வலுவான தொழில்மயமாக்கலை அடையவில்லை.


திறன்கள் மற்றும் வேலைவாய்ப்புத் திறன் கட்டுப்பாடுகள்


இதன் விளைவாக, இந்தியாவின் வளர்ச்சி சீரற்றதாக உள்ளது. இது அதிகரித்துவரும் சமத்துவமின்மை மற்றும் கட்டமைப்பு கட்டுப்பாடுகளில் வேரூன்றிய பலவீனமான வேலைவாய்ப்பிற்கும் வழிவகுத்தது. மிகவும் கடுமையான பிரச்சினை திறன்களின் பொருந்தாத தன்மை. ஏராளமான உழைப்பு இருந்தபோதிலும், வேலைக்குத் தயாராக இருக்கும் தொழிலாளர்களைக் கண்டுபிடிக்க நிறுவனங்கள் போராடுகின்றன என்று பொருளாதார ஆய்வு 2025-26 குறிப்பிடுகிறது. பிரச்சனை என்னவென்றால், பல தொழிலாளர்கள் கிடைக்கக்கூடிய வேலைகளுக்கு சரியாகத் தயாராக இல்லை.


மேலும், முறையான திறன் பயிற்சி இன்னும் குறைவாகவே உள்ளது. நிறுவன அளவிலான பயிற்சி பலவீனமாக உள்ளன. குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் (MSMEs) இந்தப் பிரச்சினை மிகவும் தீவிரமானது. பெரும்பாலான தொழிலாளர்கள் நீண்டகால வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்கள் இல்லாமல் தொழிற்சாலைகளில் சேர்கிறார்கள். சிறந்த பதவிகளுக்குச் செல்லத் தேவையான திறன்களும் அவர்களிடம் இல்லை.


தொழிலாளர் சார்ந்த பிரிவுகளும் குறைந்த தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படுகின்றன. பல நிறுவனங்கள் தொழில்நுட்பம் மற்றும் திறன்களில் ஒன்றாக முதலீடு செய்வதற்குப் பதிலாக குறைவான உழைப்பை நம்பியுள்ளன. இது MSME துறையில் உற்பத்தித்திறன் மற்றும் ஊதியங்கள் குறைவாக உள்ளது. இந்த நிலைமை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் (MSMEs) தெளிவாகக் காணப்படுகிறது. MSME-கள் பணியாளர்களில் பெரும் பங்கைப் பயன்படுத்துகின்றன. இருப்பினும், அவை பயிற்சி அமைப்புகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளுடனான பலவீனமான இணைப்புகள் சிறிய நிறுவனங்கள் அளவை அதிகரிப்பதையும் நிலையான வேலைகளை உருவாக்குவதையும் தடுக்கின்றன.



2026 நிதிநிலை அறிக்கை மற்றும் உற்பத்தி ஆற்றல்


2026 மத்திய நிதிநிலை அறிக்கை பெரும்பாலும் தற்போதுள்ள உற்பத்தி ஆற்றலைத் தொடர்கிறது. உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Production Linked Incentive (PLI)) திட்டங்கள் முக்கியக் கருவியாகவே உள்ளன. இந்தத் திட்டங்கள் 14 துறைகளை உள்ளடக்கியது. அவை உண்மையான முதலீட்டில் சுமார் ₹2 லட்சம் கோடியை ஈர்த்துள்ளன. அவை ₹18 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள அதிகரிக்கும் உற்பத்தியையும் உருவாக்கியுள்ளன.


இந்த முடிவுகள் முக்கியமானவை. 2021 நிதியாண்டுக்கும் 2025 நிதியாண்டுக்கும் இடையில் மின்னணு உற்பத்தி இரட்டிப்பாகியுள்ளது. மேலும், இந்தியா ஒரு முக்கிய மொபைல்போன் உற்பத்தி தளமாக உருவெடுத்துள்ளது. மருந்துகள் மற்றும் தானியங்கி துறைகளில், உள்நாட்டு மதிப்பு கூட்டல் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், இறக்குமதிகளைச் சார்ந்திருத்தல் குறைந்துள்ளது.


இருப்பினும், வேலைவாய்ப்பில் ஏற்படும் தாக்கம் குறைவாகவே உள்ளது. உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டங்களின்கீழ் உருவாக்கப்பட்ட மொத்த நேரடி மற்றும் மறைமுக வேலைகளின் எண்ணிக்கை சுமார் 12.6 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. முதலீட்டின் அளவு மற்றும் இந்தியாவின் தொழிலாளர் சக்தியின் அளவைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை சிறியது. காரணம் திட்டத்தின் வடிவமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகள் (PLI) அளவு, செயல்திறன் மற்றும் மூலதன தீவிர உற்பத்தியில் கவனம் செலுத்துகின்றன. இதன் விளைவாக, வேலைவாய்ப்பைவிட வேகமாக அதிகரிக்கிறது.


நிதிநிலை அறிக்கை 2026 இந்த அணுகுமுறையை வலுப்படுத்துவதாகத் தெரிகிறது. ஒதுக்கீடுகள் இன்னும் பெரிய, தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் கவனம் செலுத்துகின்றன. போட்டித்தன்மை மற்றும் ஏற்றுமதிக்கு இந்தத் துறைகள் முக்கியமானவை. ஆனால் அவை அதிக வேலைகளை உருவாக்குவதில்லை, ஏனெனில் அவை உழைப்பு மிகுந்தவை அல்ல. உற்பத்தி அதிகரித்து வருகிறது. ஆனால் வேலைவாய்ப்பு உருவாக்கம் மிதமாகவே உள்ளது.


குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSMEs) ஆதரவு முக்கியமாக நிதி நடவடிக்கைகள் மூலம் வழங்கப்படுகிறது. MSME-கள் உற்பத்தியில் சுமார் 35 சதவீதத்தையும், பொருட்கள் ஏற்றுமதியில் தோராயமாக அதில் பாதியையும் கொண்டுள்ளன. நிதிநிலை அறிக்கை கடன் உத்தரவாதங்களை விரிவுபடுத்துகிறது. கடன் வரம்புகளை உயர்த்துகிறது மற்றும் பங்கு இடைவெளிகளை நிவர்த்தி செய்ய புதிய நிதிகளை முன்மொழிகிறது.


இந்த நடவடிக்கைகள் பணப்புழக்கத்தை மேம்படுத்துகின்றன. இருப்பினும், அவை உற்பத்தித் துறையின் முக்கிய கட்டுப்பாடுகளைத் தீர்க்கவில்லை. பெரும்பாலான MSME-கள் சிறியதாகவும் குறைந்த உற்பத்தித்திறனையும் கொண்டுள்ளன. தொழில்நுட்பத்தை ஏற்றுகொள்வதை, திறன் உருவாக்கம் மற்றும் ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலிகளுடன் வலுவான இணைப்புகள் இல்லாமல், எளிதான கடன் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட உதவுகிறது. இதன் விளைவாக, வேலைவாய்ப்பு விளைவுகள் பலவீனமாகவே உள்ளன.


உள்கட்டமைப்பு, நிதிநிலை மற்றும் நிதி நிலைப்பாடு


உற்பத்தி வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு ஒரு முக்கிய காரணியாக உள்ளது. பிரதமர் கதி சக்தி மற்றும் அது தொடர்புடைய திட்டங்கள் மூலம் பொது முதலீட்டு உந்துதலை 2026 நிதிநிலை அறிக்கை நிலைநிறுத்துகிறது. 2026-27-ஆம் ஆண்டிற்கான பயனுள்ள மூலதனச் செலவு 15.4 லட்சம் கோடியாக நிதிநிலை அறிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 13.2 லட்சம் கோடியாக இருந்தது.


இந்த அளவிலான முதலீடு தளவாடங்களை மேம்படுத்தியுள்ளது. இது செலவுகளைக் குறைத்துள்ளது. இது மூலதனப் பொருட்களின் உற்பத்தியையும் ஆதரித்தது. இருப்பினும், உள்கட்டமைப்பு ஆதரவு என்பது உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு ஒரு நிபந்தனை மட்டுமே. சிறந்த சாலைகள் மற்றும் துறைமுகங்கள் தானாகவே தொழிற்சாலைகள் அல்லது வேலைகளை உருவாக்குவதில்லை. உற்பத்தி முதலீடு ஒரு சில துறைகள் மற்றும் பிராந்தியங்களில் குவிந்துள்ளது. இது திறன்கள், தேவை மற்றும் நிறுவனங்களின் திறன் தொடர்பான வலுவான தடைகளை பிரதிபலிக்கிறது.


நிதிப் பக்கத்தில், 2026-27-ஆம் ஆண்டிற்கான பற்றாக்குறை இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4.3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மொத்த சந்தை கடன் 15.6 லட்சம் கோடிக்கு மேல் அதிகமாக உள்ளது. இது பேரியல் நிலைத்தன்மை மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையை ஆதரிக்கிறது. ஆனால் இது பெரிய, வேலைவாய்ப்பு சார்ந்த தலையீடுகளுக்கான இடத்தைக் கட்டுப்படுத்துகிறது.


நிதிநிலை அறிக்கை கவனிக்கப்படாமல் விட்டுவிடுவது


நிதிநிலை அறிக்கை 2026 உற்பத்தி உத்தியில் மாற்றத்தைவிட கொள்கை தொடர்ச்சியைக் குறிக்கிறது. இதன் முக்கிய கருவிகள் பெரும்பாலும் மாறாமல் உள்ளன. உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டங்கள் அளவு மற்றும் வெளியீட்டை தொடர்ந்து முன்னுரிமை அளிக்கின்றன. MSME-களுக்கான கடன் ஆதரவு திறன் மேம்பாட்டை விட பணப்புழக்கத்தில் கவனம் செலுத்துகிறது. உள்கட்டமைப்பு முதலீடு வேலைவாய்ப்புக்கான நேரடி கருவியாக இல்லாமல், வளர்ச்சியின் முக்கிய செயல்படுத்தியாக உள்ளது.


இந்த தேர்வுகள் நிலைத்தன்மை மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையை ஆதரிக்கின்றன, தளவாடங்களை மேம்படுத்துகின்றன, செலவுகளைக் குறைக்கின்றன மற்றும் உற்பத்தி வளர்ச்சியை நிலைநிறுத்துகின்றன. ஆனால் அவை பெரிய அளவிலான முதலாளியாக உற்பத்தியின் பங்கைக் கட்டுப்படுத்தும் முக்கிய கட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்யவில்லை. வேலைவாய்ப்பு ஈர்த்தல் பலவீனமாகவே உள்ளது மற்றும் திறன்கள் பொருந்தாத தன்மை தொடர்கிறது. நிறுவன அளவிலான பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பரவல் வரையறுக்கப்பட்ட கவனத்தைப் பெறுகிறது.


பட்ஜெட், வளர்ச்சி இறுதியில் வேலைகளை உருவாக்கும் என்று கருதுகிறது. ஆனால் இந்தியாவின் அனுபவம் வேறு ஒன்றையே காட்டுகிறது. ஊக்குவிப்புகள், திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பு இடையே வலுவான தொடர்பு இல்லாதபோது, உற்பத்தித் துறை அளவில் அதிகப்படியான தொழிலாளர்களை உள்வாங்காமலேயே தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும். அதனால்தான் 2026-ஆம் ஆண்டு பட்ஜெட், இந்தியாவின் உற்பத்தி உத்தியில் ஒரு புதிய திசைமாற்றத்தை அல்ல, மாறாக தொடர்ச்சியையே பிரதிபலிக்கிறது.


Original article : Why manufacturing growth has not translated into broad-based employment?. -Pushpendra Singh and Archana Singh

Share: